787. حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، قَالَ حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ عِكْرِمَةَ، قَالَ رَأَيْتُ رَجُلاً عِنْدَ الْمَقَامِ يُكَبِّرُ فِي كُلِّ خَفْضٍ وَرَفْعٍ وَإِذَا قَامَ وَإِذَا وَضَعَ، فَأَخْبَرْتُ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنه ـ قَالَ أَوَلَيْسَ تِلْكَ صَلاَةَ النَّبِيِّ صلى الله عليه وسلم لاَ أُمَّ لَكَ.
பாடம் : 116 சஜ்தாவின்போது தக்பீரை முழுமையாகக் கூறுவது
787. (இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் முன்னாள் அடிமையான) இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(இறையில்லம் கஅபாவை ஒட்டியுள்ள) ‘மகாமு இப்ராஹீம்’ அருகில் (தொழுது கொண்டிருந்த) ஒரு மனிதரை நான் கண்டேன். அவர் ஒவ்வொரு முறை குனியும் போதும் நிமிரும்போதும் எழும்போதும் தாழும் போதும் தக்பீர் கூறினார்.

(விளக்கம் கேட்கும் விதமாக இது குறித்து) நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் தெரிவித்தபோது அவர்கள், “தாயற்றுப்போவாய்! அது நபி (ஸல்) அவர்கள் தொழுத தொழுகை (போன்று) இல்லையா?” என்று கேட்டார்கள்.60

அத்தியாயம் : 10
788. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ أَخْبَرَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ عِكْرِمَةَ، قَالَ صَلَّيْتُ خَلْفَ شَيْخٍ بِمَكَّةَ فَكَبَّرَ ثِنْتَيْنِ وَعِشْرِينَ تَكْبِيرَةً، فَقُلْتُ لاِبْنِ عَبَّاسٍ إِنَّهُ أَحْمَقُ. فَقَالَ ثَكِلَتْكَ أُمُّكَ، سُنَّةُ أَبِي الْقَاسِمِ صلى الله عليه وسلم. وَقَالَ مُوسَى حَدَّثَنَا أَبَانُ حَدَّثَنَا قَتَادَةُ حَدَّثَنَا عِكْرِمَةُ.
பாடம் : 117 சஜ்தாவி-ருந்து எழும்போது தக்பீர் கூறுவது
788. இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் மக்காவில் ஒரு பெரியவருக்குப் பின்னால் (லுஹ்ர் தொழுகை) தொழுதேன். (அத்தொழுகையில்) அவர், இருபத்து இரண்டு தக்பீர்கள் கூறினார். இது குறித்து நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கூறுகையில், “அவர் ஓர் அறிவி-” என்றேன்.

அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “உன் தாய் உன்னை இழக்கட் டும்; (அது) அபுல்காசிம் (முஹம்மத்-ஸல்) அவர்களின் வழிமுறைதான்” என்று கூறினார்கள்.61

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 10
789. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي أَبُو بَكْرِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا قَامَ إِلَى الصَّلاَةِ يُكَبِّرُ حِينَ يَقُومُ، ثُمَّ يُكَبِّرُ حِينَ يَرْكَعُ، ثُمَّ يَقُولُ سَمِعَ اللَّهُ لَمِنْ حَمِدَهُ. حِينَ يَرْفَعُ صُلْبَهُ مِنَ الرَّكْعَةِ، ثُمَّ يَقُولُ وَهُوَ قَائِمٌ رَبَّنَا لَكَ الْحَمْدُ ـ قَالَ عَبْدُ اللَّهِ {بْنُ صَالِحٍ عَنِ اللَّيْثِ} وَلَكَ الْحَمْدُ ـ ثُمَّ يُكَبِّرُ حِينَ يَهْوِي، ثُمَّ يُكَبِّرُ حِينَ يَرْفَعُ رَأْسَهُ، ثُمَّ يُكَبِّرُ حِينَ يَسْجُدُ، ثُمَّ يُكَبِّرُ حِينَ يَرْفَعُ رَأْسَهُ، ثُمَّ يَفْعَلُ ذَلِكَ فِي الصَّلاَةِ كُلِّهَا حَتَّى يَقْضِيَهَا، وَيُكَبِّرُ حِينَ يَقُومُ مِنَ الثِّنْتَيْنِ بَعْدَ الْجُلُوسِ.
பாடம் : 117 சஜ்தாவி-ருந்து எழும்போது தக்பீர் கூறுவது
789. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் நின்றால், நின்ற நிலையில் தக்பீர் கூறுவார்கள். பின்னர் ருகூஉ செய்யும்போது தக்பீர் கூறுவார்கள். பிறகு ருகூஉவி-ருந்து தமது முதுகை உயர்த் தும்போது சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ் (தன்னைப் புகழ்வோரின் புகழுரையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கி றான்) என்று கூறுவார்கள். பிறகு நின்ற நிலையில் ‘ரப்பனா ல(க்)கல் ஹம்த்’ (எங்கள் இறைவா! புகழ் அனைத்தும் உனக்கே உரியன) என்பார்கள்.

-(இதன் அறிவிப்பாளர்தொடரில் இடம்பெற்றுள்ள) லைஸ் பின் சஅத் (ரஹ்) அவர்களின் மற்றோர் அறிவிப்பில், ‘ரப்பனா வல(க்)கல் ஹம்த்’ என்று இடம்பெற்றுள்ளது.-

பின்னர் (சஜ்தாவுக்காகக்) தாழும்போது தக்பீர் கூறுவார்கள். பிறகு (சஜ்தாவி-ருந்து) தலையை உயர்த்தும்போதும் தக்பீர் கூறுவார்கள். பிறகு (இரண்டாவது) சஜ்தா செய்யும்போது தக்பீர் கூறுவார்கள். பிறகு (அந்த சஜ்தாவி-ருந்து) தலையை உயர்த்தும்போது தக்பீர் கூறுவார்கள்.

பிறகு தொழுகையை முடிக்கும்வரை தொழுகையின் எல்லா ரக்அத்களிலும் இவ்வாறே செய்வார்கள். இரண்டாவது ரக்அத்தில் (அத்தஹிய்யாத் முதல்) அமர்வை முடித்து எழும்போதும் தக்பீர் கூறுவார்கள்.

அத்தியாயம் : 10
790. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي يَعْفُورٍ، قَالَ سَمِعْتُ مُصْعَبَ بْنَ سَعْدٍ، يَقُولُ صَلَّيْتُ إِلَى جَنْبِ أَبِي فَطَبَّقْتُ بَيْنَ كَفَّىَّ ثُمَّ وَضَعْتُهُمَا بَيْنَ فَخِذَىَّ، فَنَهَانِي أَبِي وَقَالَ كُنَّا نَفْعَلُهُ فَنُهِينَا عَنْهُ، وَأُمِرْنَا أَنْ نَضَعَ أَيْدِيَنَا عَلَى الرُّكَبِ.
பாடம் : 118 ருகூஉவின்போது உள்ளங்கைகளை முழங்கால்கள்மீது வைப்பது அபூஹுமைத் (அப்துர் ரஹ்மான் அஸ்ஸாஇதீ-ர-) அவர்கள் தம் தோழர் களிடையே (பேசும்போது), “நபி (ஸல்) அவர்கள் (ருகூஉவில்) தம்மிரு (உள்ளங்) கைகளை முழங்கால்கள்மீது ஊன்றிக்கொள்வார்கள்” எனக் குறிப்பிட்டார்கள்.
790. முஸ்அப் பின் சஅத் பின் அபீவக்காஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் என் தந்தை (சஅத் பின் அபீவக்காஸ்-ரலி) அருகில் நின்று தொழுதேன். அப்போது (ருகூஉவில்) என் இரு கைகளையும் கோத்து என் இரு தொடைகளின் நடுவில் வைத்துக் கொண்டேன்.

அவ்வாறு செய்ய வேண்டாமென என்னை அவர்கள் தடுத்துவிட்டு, “நாங்கள் இவ்வாறு (முதலில்) செய்துகொண்டிருந் தோம். பின்னர் அவ்வாறு செய்யக் கூடாதென நாங்கள் தடுக்கப்பட்டு, எங்கள் கைகளை முழங்கால்கள்மீது வைக்குமாறு உத்தரவிடப்பட்டோம்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 10
791. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ، قَالَ سَمِعْتُ زَيْدَ بْنَ وَهْبٍ، قَالَ رَأَى حُذَيْفَةُ رَجُلاً لاَ يُتِمُّ الرُّكُوعَ وَالسُّجُودَ قَالَ مَا صَلَّيْتَ، وَلَوْ مُتَّ مُتَّ عَلَى غَيْرِ الْفِطْرَةِ الَّتِي فَطَرَ اللَّهُ مُحَمَّدًا صلى الله عليه وسلم.
பாடம் : 119 ருகூஉவை நிறைவாகச் செய்யா விட்டால் (ஏற்படும் குற்றம்)
791. ஸைத் பின் வஹ்ப் அல்ஜுஹனீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(தொழுகையில்) தமது ருகூஉவையும் சஜ்தாவையும் முழுமையாக நிறைவேற்றாத ஒரு மனிதரை ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கண்டார்கள்.

அப்போது அவர்கள் (அந்த மனிதரிடம்), “நீர் தொழவே இல்லை. (இதே நிலையில்) நீர் இறந்துவிட்டால், முஹம்மத் (ஸல்) அவர்களை அல்லாஹ் எந்த நெறியில் அமைத்தானோ அந்த நெறிக்கு மாற்றமான ஒன்றிலேயே இறக்கிறீர்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 10
792. حَدَّثَنَا بَدَلُ بْنُ الْمُحَبَّرِ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي الْحَكَمُ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، عَنِ الْبَرَاءِ، قَالَ كَانَ رُكُوعُ النَّبِيِّ صلى الله عليه وسلم وَسُجُودُهُ وَبَيْنَ السَّجْدَتَيْنِ وَإِذَا رَفَعَ مِنَ الرُّكُوعِ، مَا خَلاَ الْقِيَامَ وَالْقُعُودَ، قَرِيبًا مِنَ السَّوَاءِ.
பாடம் : 120 ருகூஉவில் முதுகைச் சமமாக வைப்பது அபூஹுமைத் (அப்துர் ரஹ்மான் அஸ்ஸாஇதீ-ர-) அவர்கள் தம் தோழர்களிடையே (பேசுகையில்), “நபி (ஸல்) அவர்கள் ருகூஉ செய்தார்கள். பின்னர் தமது முதுகை (சமமாக்குவதற்காகச்) சாய்த்தார்கள்” என்று கூறியுள்ளார்கள்.62 பாடம் : 121 ருகூஉவை நிறைவாக்குதல், அதில் நிலை கொள்ளல், (அசை வற்று) நிதானித்தல் ஆகியவற் றுக்கான வரம்பு
792. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(தொழுகையில் நபி (ஸல்) அவர்களது) நிற்றல், (அத்தஹிய்யாத்) அமர்வு ஆகி யவை நீங்கலாக அவர்களின் ருகூஉ, அவர்களது சஜ்தா, இரு சஜ்தாக்களுக் கிடையிலான இடைவெளி, ருகூஉவி-ருந்து அவர்கள் நிமிர்தல் ஆகிய அனைத்தும் ஏறத்தாழ சம அளவில் அமைந்திருந்தன.

அத்தியாயம் : 10
793. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ أَخْبَرَنِي يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا سَعِيدٌ الْمَقْبُرِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ الْمَسْجِدَ فَدَخَلَ رَجُلٌ فَصَلَّى ثُمَّ جَاءَ فَسَلَّمَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَرَدَّ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَيْهِ السَّلاَمَ فَقَالَ "" ارْجِعْ فَصَلِّ فَإِنَّكَ لَمْ تُصَلِّ "" فَصَلَّى، ثُمَّ جَاءَ فَسَلَّمَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ "" ارْجِعْ فَصَلِّ فَإِنَّكَ لَمْ تُصَلِّ "". ثَلاَثًا. فَقَالَ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ فَمَا أُحْسِنُ غَيْرَهُ فَعَلِّمْنِي. قَالَ "" إِذَا قُمْتَ إِلَى الصَّلاَةِ فَكَبِّرْ، ثُمَّ اقْرَأْ مَا تَيَسَّرَ مَعَكَ مِنَ الْقُرْآنِ، ثُمَّ ارْكَعْ حَتَّى تَطْمَئِنَّ رَاكِعًا، ثُمَّ ارْفَعْ حَتَّى تَعْتَدِلَ قَائِمًا، ثُمَّ اسْجُدْ حَتَّى تَطْمَئِنَّ سَاجِدًا، ثُمَّ ارْفَعْ حَتَّى تَطْمَئِنَّ جَالِسًا، ثُمَّ اسْجُدْ حَتَّى تَطْمَئِنَّ سَاجِدًا، ثُمَّ افْعَلْ ذَلِكَ فِي صَلاَتِكَ كُلِّهَا "".
பாடம் 122 ருகூஉவை நிறைவாகச் செய் யாத ஒருவரை திரும்பத் தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் பணித்தது
793. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்கு வந்தார்கள். அப்போது மற்றொரு மனிதரும் வந்து, (ருகூஉ, சஜ்தா ஆகியவற்றை முழுமையாக்காமல்) தொழுதார். பிறகு அவர் வந்து நபி (ஸல்) அவர்களுக்கு முகமன் (சலாம்) சொன்னார். நபி (ஸல்) அவர்கள் அவருக்குப் பதில் (சலாம்) சொல்-விட்டு, “திரும்பிச் சென்று தொழுவீராக! ஏனெனில், நீர் (முறையாகத்) தொழவில்லை” என்று கூறினார்கள்.

அந்த மனிதர் (திரும்பிச் சென்று முன்பு போலவே அவசர அவசரமாகத்) தொழுது விட்டு வந்து (மீண்டும்) நபி (ஸல்) அவர்களுக்கு ‘சலாம்’ சொன்னார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், “திரும்பிச் சென்று தொழுவீராக! ஏனெனில், நீர் (முறையாகத்) தொழவில்லை” என்று கூறினார்கள்.

இவ்வாறு மூன்று தடவை நடந்தது. பிறகு அந்த மனிதர், “சத்திய (மார்க்க)த் துடன் உங்களை அனுப்பியவன் மீதாணை யாக! இதைவிட அழகாக எனக்கு (தொழ)த் தெரியாது. எனவே, நீங்களே எனக்குக் கற்றுத்தாருங்கள்” என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்:

நீர் தொழுகைக்காக நின்றதும் (அல்லாஹு அக்பர் என) தக்பீர் கூறு வீராக! பின்னர் குர்ஆனில் உமக்குத் தெரிந்தவற்றை ஓதுவீராக! பின்னர் ருகூஉ வில் (நன்கு) நிலை கொள்ளும் அளவுக்கு (ஆற அமர நிதானத்துடன்) ருகூஉ செய்வீராக! பிறகு (நின்றதும் குனிந்துவிடாமல்) நிமிர்ந்து நேராக நிற்கும் அளவுக்கு உயர்வீராக! பின்னர் சஜ்தாவில் (நன்கு) நிலை கொள்ளும் அளவுக்கு நீர் சிரவணக்கம் செய்வீராக!

பின்னர் (தலையை) உயர்த்தி, (நன்கு) நிலை கொள்ளும் அளவுக்கு அமர்வில் உட்காருவீராக! பின்னர் சஜ்தாவில் (நன்கு) நிலை கொள்ளும் அளவுக்கு நீர் (மீண்டும்) சிரவணக்கம் செய்வீராக! பிறகு இதையே (இதே வழிமுறையையே) உமது தொழுகை முழுவதிலும் கடைப்பிடிப்பீராக!

அத்தியாயம் : 10
794. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقُولُ فِي رُكُوعِهِ وَسُجُودِهِ "" سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ، اللَّهُمَّ اغْفِرْ لِي "".
பாடம் : 123 ருகூஉவில் பிரார்த்திப்பது
794. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தமது (தொழுகை யின்) ருகூஉவிலும் சஜ்தாவிலும் “சுப்ஹானக்கல்லாஹும்ம ரப்பனா வ பிஹம்திக்க, அல்லாஹும்மஃக்ஃபிர்லீ” (இறைவா! எம் அதிபதியே! நீ தூயவன்; உன்னைப் போற்றிப் புகழ்கின்றோம்; இறைவா! என்னை மன்னிப்பாயாக!) என்று கூறிவந்தார்கள்.63

அத்தியாயம் : 10
795. حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا قَالَ "" سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ "". قَالَ "" اللَّهُمَّ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ "". وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا رَكَعَ وَإِذَا رَفَعَ رَأْسَهُ يُكَبِّرُ، وَإِذَا قَامَ مِنَ السَّجْدَتَيْنِ قَالَ "" اللَّهُ أَكْبَرُ "".
பாடம் : 124 ருகூஉவி-ருந்து தலையை உயர்த்தியதும் இமாமும் அவ ரைப் பின்பற்றித் தொழு வோரும் கூற வேண்டியவை
795. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (தொழுகையில்) ‘சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ்’ எனக் கூறியபின் ‘அல்லாஹும்ம ரப்பனா வ ல(க்)கல் ஹம்த்’ என்று கூறுவார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ருகூஉ செய்யும்போதும் (ருகூஉவி-ருந்து) தமது தலையை உயர்த்தும்போதும் (அல்லாஹு அக்பர் என) ‘தக்பீர்’ கூறுவார்கள். இரண்டு சஜ்தாக்களை முடித்து (மேலே) எழும் போதும் அல்லாஹு அக்பர் என்று (தக்பீர்) கூறுவார்கள்.

அத்தியாயம் : 10
796. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ سُمَىٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا قَالَ الإِمَامُ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ. فَقُولُوا اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ. فَإِنَّهُ مَنْ وَافَقَ قَوْلُهُ قَوْلَ الْمَلاَئِكَةِ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ "".
பாடம் : 125 ‘அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்த்’ என்று கூறுவதன் சிறப்பு
796. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இமாம் (தொழுகையில்) ‘சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ்’ (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக் கொள்கிறான்) எனக் கூறினால், நீங்கள் ‘அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்த்’ (இறைவா! எம் அதிபதியே! உனக்கே புகழ் அனைத்தும் உரியன) என்று கூறுங்கள்.

ஏனெனில் (இறைவனைத் துதிக்கும்) வானவர்களின் (துதிச்) சொல்லுடன் எவரது (துதிச்)சொல் (ஒரே நேரத்தில்) ஒத்து அமைகின்றதோ அவர், அதற்குமுன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 10
797. حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ لأُقَرِّبَنَّ صَلاَةَ النَّبِيِّ صلى الله عليه وسلم. فَكَانَ أَبُو هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقْنُتُ فِي الرَّكْعَةِ الآخِرَةِ مِنْ صَلاَةِ الظُّهْرِ وَصَلاَةِ الْعِشَاءِ، وَصَلاَةِ الصُّبْحِ، بَعْدَ مَا يَقُولُ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ. فَيَدْعُو لِلْمُؤْمِنِينَ وَيَلْعَنُ الْكُفَّارَ.
பாடம் : 126
797. அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூஹுரைரா (ரலி) அவர்கள், “கிட்டத்தட்ட நபி (ஸல்) அவர்கள் தொழு வித்ததைப் போன்றே உங்களுக்கு நான் தொழுவிக்கிறேன்” என்று கூறினார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள் லுஹ்ர், இஷா, சுப்ஹு ஆகிய தொழுகைகளின் இறுதி ரக்அத்தில் (ருகூஉவி-ருந்து எழுந்து) ‘சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ்’ (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்) என்று கூறியபிறகு, ‘குனூத்’ (சோதனை காலப் பிரார்த்தனை) ஓதுவார்கள்.

அதில் இறைநம்பிக்கையாளர்களுக்கு ஆதரவாகவும் (கொடுஞ்செயல் புரிந்த குறைஷி) இறைமறுப்பாளர்களைச் சபித்தும் பிரார்த்திப்பார்கள்.


அத்தியாயம் : 10
798. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي الأَسْوَدِ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ الْقُنُوتُ فِي الْمَغْرِبِ وَالْفَجْرِ.
பாடம் : 126
798. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஆரம்பக் காலத்தில்) குனூத் (எனும் சிறப்புப் பிரார்த்தனை) மஃக்ரிப் தொழுகை யிலும் ஃபஜ்ர் தொழுகையிலும் (நடைமுறையில்) இருந்தது.


அத்தியாயம் : 10
799. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُجْمِرِ، عَنْ عَلِيِّ بْنِ يَحْيَى بْنِ خَلاَّدٍ الزُّرَقِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ الزُّرَقِيِّ، قَالَ كُنَّا يَوْمًا نُصَلِّي وَرَاءَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ قَالَ "" سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ "". قَالَ رَجُلٌ وَرَاءَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، فَلَمَّا انْصَرَفَ قَالَ "" مَنِ الْمُتَكَلِّمُ "". قَالَ أَنَا. قَالَ "" رَأَيْتُ بِضْعَةً وَثَلاَثِينَ مَلَكًا يَبْتَدِرُونَهَا، أَيُّهُمْ يَكْتُبُهَا أَوَّلُ "".
பாடம் : 126
799. ரிஃபாஆ பின் ராஃபிஉ அஸ்ஸுரக்கீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ஒரு நாள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றித்) தொழுதுகொண்டிருந்தோம். அவர்கள் ருகூஉவி-ருந்து தலையை உயர்த்தியபோது, ‘சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ்’ (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக் கொள்கிறான்) எனக் கூறினார்கள்.

அவர்களுக்குப் பின்னா-ருந்த ஒரு மனிதர் “ரப்பனா வ ல(க்)கல் ஹம்து. ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹீ” (எங்கள் இறைவா! புகழ் அனைத் தும் உனக்கே உரியன. தூய்மையும் சுபிட்சமும் மிக்க உனது திருப்புகழை நிறைவாகப் போற்றுகிறேன்) என்று கூறினார்.

தொழுது முடித்ததும் நபி (ஸல்) அவர்கள், “(தொழுகையில் இந்த வார்த்தை களைச்) சொன்னவர் யார்?” என்று கேட்டார்கள். அந்த மனிதர், “நான்தான்” என்றார். “முப்பதுக்கும் மேற்பட்ட வானவர்கள், இதைத் தம்மில் முத-ல் பதிவு செய்வது யார் என(த் தமக்கிடையே) போட்டியிட்டுக் கொள்வதை நான் கண்டேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அத்தியாயம் : 10
800. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ ثَابِتٍ، قَالَ كَانَ أَنَسٌ يَنْعَتُ لَنَا صَلاَةَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَكَانَ يُصَلِّي وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ قَامَ حَتَّى نَقُولَ قَدْ نَسِيَ.
பாடம் : 127 ருகூஉவி-ருந்து தலையை உயர்த்தி நிதானத்துடன் நிற்பது நபி (ஸல்) அவர்கள் (ருகூஉவி-ருந்து தலையை) உயர்த்தி (தம்) முதுகெலும்பு களில் ஒவ்வொன்றும் அதனதன் இடத்திற்கு வரும் அளவுக்கு நேராக நிமர்ந்து நிற்பார்கள் என அபூஹுமைத் (அப்துர் ரஹ்மான் அஸ்ஸாஇதீ-ர-) அவர்கள் கூறியுள்ளார்கள்.64
800. ஸாபித் (அல்புனானீ-ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அனஸ் (ரலி) அவர்கள் எங்களுக்கு நபி (ஸல்) அவர்களின் தொழுகை முறையை விவரிக்கும் முகமாக தொழுது காட்டுவார்கள். அவர்கள் ருகூஉவி-ருந்து தலையை உயர்த்தியதும் ‘(தாம் தொழுகை யில் இருக்கிறோம் என்பதையே) அவர்கள் மறந்துவிட்டார்கள்’ என்று நாங்கள் சொல்லும் அளவுக்கு (நீண்ட நேரம் அசையாமல்) நிற்பார்கள்.


அத்தியாயம் : 10
801. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، عَنِ الْبَرَاءِ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ رُكُوعُ النَّبِيِّ صلى الله عليه وسلم وَسُجُودُهُ وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ وَبَيْنَ السَّجْدَتَيْنِ قَرِيبًا مِنَ السَّوَاءِ.
பாடம் : 127 ருகூஉவி-ருந்து தலையை உயர்த்தி நிதானத்துடன் நிற்பது நபி (ஸல்) அவர்கள் (ருகூஉவி-ருந்து தலையை) உயர்த்தி (தம்) முதுகெலும்பு களில் ஒவ்வொன்றும் அதனதன் இடத்திற்கு வரும் அளவுக்கு நேராக நிமர்ந்து நிற்பார்கள் என அபூஹுமைத் (அப்துர் ரஹ்மான் அஸ்ஸாஇதீ-ர-) அவர்கள் கூறியுள்ளார்கள்.64
801. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களது ருகூஉவும், சஜ்தாவும், ருகூஉவி-ருந்து அவர்கள் எழுந்தா(ல் நிலை கொள்ளுத)லும், இரு சஜ்தாக்களுக்கிடையிலான இடைவெளியும் ஏறத்தாழ சமஅளவில் அமைந்திருந்தன.


அத்தியாயம் : 10
802. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، قَالَ كَانَ مَالِكُ بْنُ الْحُوَيْرِثِ يُرِينَا كَيْفَ كَانَ صَلاَةُ النَّبِيِّ صلى الله عليه وسلم وَذَاكَ فِي غَيْرِ وَقْتِ صَلاَةٍ، فَقَامَ فَأَمْكَنَ الْقِيَامَ، ثُمَّ رَكَعَ فَأَمْكَنَ الرُّكُوعَ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَأَنْصَتَ هُنَيَّةً، قَالَ فَصَلَّى بِنَا صَلاَةَ شَيْخِنَا هَذَا أَبِي بُرَيْدٍ. وَكَانَ أَبُو بُرَيْدٍ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ السَّجْدَةِ الآخِرَةِ اسْتَوَى قَاعِدًا ثُمَّ نَهَضَ.
பாடம் : 127 ருகூஉவி-ருந்து தலையை உயர்த்தி நிதானத்துடன் நிற்பது நபி (ஸல்) அவர்கள் (ருகூஉவி-ருந்து தலையை) உயர்த்தி (தம்) முதுகெலும்பு களில் ஒவ்வொன்றும் அதனதன் இடத்திற்கு வரும் அளவுக்கு நேராக நிமர்ந்து நிற்பார்கள் என அபூஹுமைத் (அப்துர் ரஹ்மான் அஸ்ஸாஇதீ-ர-) அவர்கள் கூறியுள்ளார்கள்.64
802. அபூகிலாபா (அப்துல்லாஹ் பின் ஸைத் -ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் எப்படித் தொழு வார்கள் என எங்களுக்கு மா-க் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் (தொழுது)காட்டினார்கள். இ(வ்வாறு அவர்கள் செய்து காட்டிய)து எந்தத் தொழுகையின் நேரத்திலும அல்ல.

அப்போது அவர்கள் (நன்கு) நிலை கொண்டு நின்றார்கள். பின்னர் ருகூஉ செய்தார்கள். ருகூஉவையும் நிறுத்தி நிதானமாகச் செய்தார்கள். பின்னர் தமது தலையை உயர்த்தி சிறிது நேரம் அசையாமல் நின்றார்கள். அவர்கள் இதோ நம்முடைய இந்தப் பெரியவர் அபூபுரைத் (ரஹ்) அவர்கள் தொழுவதைப் போன்று எங்களுக்குத் தொழுதுகாட்டினார்கள்.

தொடர்ந்து அறிவிப்பாளர் அபூகிலாபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

அபூபுரைத் (அம்ர் பின் சலிமா-ரஹ்) அவர்கள் (தொழுகையின் இரண்டாவது) சஜ்தாவி-ருந்து தலையை உயர்த்தியதும் (சற்று நேரம்) நேராக அமர்ந்திருப்பார். பிறகுதான் எழுவார்.

அத்தியாயம் : 10
803. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ حَدَّثَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي أَبُو بَكْرِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ، وَأَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ أَبَا هُرَيْرَةَ، كَانَ يُكَبِّرُ فِي كُلِّ صَلاَةٍ مِنَ الْمَكْتُوبَةِ وَغَيْرِهَا فِي رَمَضَانَ وَغَيْرِهِ، فَيُكَبِّرُ حِينَ يَقُومُ، ثُمَّ يُكَبِّرُ حِينَ يَرْكَعُ، ثُمَّ يَقُولُ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ. ثُمَّ يَقُولُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ. قَبْلَ أَنْ يَسْجُدَ، ثُمَّ يَقُولُ اللَّهُ أَكْبَرُ. حِينَ يَهْوِي سَاجِدًا، ثُمَّ يُكَبِّرُ حِينَ يَرْفَعُ رَأْسَهُ مِنَ السُّجُودِ، ثُمَّ يُكَبِّرُ حِينَ يَسْجُدُ، ثُمَّ يُكَبِّرُ حِينَ يَرْفَعُ رَأْسَهُ مِنَ السُّجُودِ، ثُمَّ يُكَبِّرُ حِينَ يَقُومُ مِنَ الْجُلُوسِ فِي الاِثْنَتَيْنِ، وَيَفْعَلُ ذَلِكَ فِي كُلِّ رَكْعَةٍ حَتَّى يَفْرُغَ مِنَ الصَّلاَةِ، ثُمَّ يَقُولُ حِينَ يَنْصَرِفُ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنِّي لأَقْرَبُكُمْ شَبَهًا بِصَلاَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِنْ كَانَتْ هَذِهِ لَصَلاَتَهُ حَتَّى فَارَقَ الدُّنْيَا.
பாடம் : 128 சஜ்தா செய்யும்போது தக்பீர் கூறியவாறே தாழ வேண்டும். இப்னு உமர் (ரலி) அவர்கள் (சஜ்தா விற்குச் செல்லும்போது) முழங்கால்களை(த் தரையில்) வைப்பதற்குமுன் தம் (உள்ளங்) கைகளை வைப்பார்கள் என நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
803. அபூபக்ர் பின் அப்திர் ரஹ்மான் பின் ஹாரிஸ் (ரஹ்), அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) ஆகியோர் கூறியதாவது:

(மதீனாவின் ஆளுநராயிருந்தபோது) அபூஹுரைரா (ரலி) அவர்கள் கடமை யான தொழுகைகளிலும் அஃதல்லாத (கூடுதல்) தொழுகைகளிலும் ரமளான் மாதத்திலும் ரமளான் அல்லாத மாதத்திலும் ஒவ்வொரு தொழுகையிலும் ‘தக்பீர்’ கூறுவார்கள்.

அதாவது (தொழுகைக்காக) நின்றதும் தக்பீர் கூறுவார்கள். பின்னர் ருகூஉ செய்யும்போது தக்பீர் கூறுவார்கள். பிறகு (ருகூஉவி-ருந்து நிமிரும்போது) ‘சமி அல்லாஹு -மன் ஹமிதஹ்’ (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்) என்று கூறுவார்கள். பிறகு சஜ்தா செய்வதற்குமுன் (நின்று கொண்டு) ‘ரப்பனா வ ல(க்)கல் ஹம்த்’ (எங்கள் இறைவா! உனக்கே புகழனைத்தும் உரியன) என்று கூறுவார்கள். பின்னர் சஜ்தாவுக்காகத் தாழும்போது ‘அல்லாஹு அக்பர்’ என்று (தக்பீர்) கூறுவார்கள். பிறகு சஜ்தாவி-ருந்து (சிறு அமர்வுக்காக) தலையை உயர்த்தும்போதும் தக்பீர் கூறுவார்கள். பின்னர் (இரண்டாவது) சஜ்தா செய்யும்போதும் தக்பீர் கூறுவார்கள். பிறகு சஜ்தாவி-ருந்து தலையை உயர்த்தும்போதும் தக்பீர் கூறுவார்கள்.

பின்னர் இரண்டாவது ரக்அத்தில் (அத்தஹிய்யாத்) அமர்வில் உட்கார்ந்து விட்டு (மூன்றாவது ரக்அத்திற்காக) எழும்போதும் தக்பீர் கூறுவார்கள். தொழுகை முடியும்வரை ஒவ்வொரு ரக்அத்திலும் இவ்வாறே செய்வார்கள்.

தொழுகை முடிந்ததும், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுததைப் போன்று தொழு வதில் உங்களிலேயே நான்தான் மிகவும் சரியாகத் தொழுபவன் ஆவேன். இவ்வுலகைப் பிரியும்வரை இதுவே நபி (ஸல்) அவர்களின் தொழுகையாக இருந்தது” என்று குறிப்பிட்டார்கள்.


அத்தியாயம் : 10
804. قَالاَ وَقَالَ أَبُو هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ يَرْفَعُ رَأْسَهُ يَقُولُ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، رَبَّنَا وَلَكَ الْحَمْدُ. يَدْعُو لِرِجَالٍ فَيُسَمِّيهِمْ بِأَسْمَائِهِمْ فَيَقُولُ "" اللَّهُمَّ أَنْجِ الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ وَسَلَمَةَ بْنَ هِشَامٍ وَعَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ، وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الْمُؤْمِنِينَ، اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرَ، وَاجْعَلْهَا عَلَيْهِمْ سِنِينَ كَسِنِي يُوسُفَ "". وَأَهْلُ الْمَشْرِقِ يَوْمَئِذٍ مِنْ مُضَرَ مُخَالِفُونَ لَهُ.
பாடம் : 128 சஜ்தா செய்யும்போது தக்பீர் கூறியவாறே தாழ வேண்டும். இப்னு உமர் (ரலி) அவர்கள் (சஜ்தா விற்குச் செல்லும்போது) முழங்கால்களை(த் தரையில்) வைப்பதற்குமுன் தம் (உள்ளங்) கைகளை வைப்பார்கள் என நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
804. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருகூஉவி-ருந்து தலையை உயர்த்தும் போது ‘சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ் (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்; ‘ரப்பனா வ ல(க்)கல் ஹம்த் (எங்கள் இறைவா! உனக்கே புகழ் அனைத்தும்) என்று கூறியபின் சில மனிதர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களு(டைய நலனு)க்காகப் பிரார்த்திப்பார்கள்.

அப்போது “இறைவா! வலீத் பின் அல்வலீத், சலமா பின் ஹிஷாம், அய்யாஷ் பின் அபீரபிஆ ஆகியோரையும் இறைநம்பிக்கையாளர்களில் பலவீனர்களையும் காப்பாற்றுவாயாக! இறைவா! ‘முளர்’ குலத்தாரின் மீது உன் பிடியை இறுக்குவாயாக! (இறைத் தூதர்) யூசுஃப் அவர்களின் சமுதாயத்தாருக்கு அளித்த பஞ்சம் நிறைந்த ஆண்டுகளைப் போன்று (இவர்களுக்கும்) அளிப்பாயாக!” என்று பிரார்த்திப்பார்கள்.

(மதீனாவுக்கு) கிழக்கில் வாழ்ந்த ‘முளர்’ குலத்தார் அன்று நபி (ஸல்) அவர்களுக்கு எதிரிகளாய் இருந்தனர்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 10
805. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، غَيْرَ مَرَّةٍ عَنِ الزُّهْرِيِّ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ سَقَطَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ فَرَسٍ ـ وَرُبَّمَا قَالَ سُفْيَانُ مِنْ فَرَسٍ ـ فَجُحِشَ شِقُّهُ الأَيْمَنُ، فَدَخَلْنَا عَلَيْهِ نَعُودُهُ، فَحَضَرَتِ الصَّلاَةُ، فَصَلَّى بِنَا قَاعِدًا وَقَعَدْنَا ـ وَقَالَ سُفْيَانُ مَرَّةً صَلَّيْنَا قُعُودًا ـ فَلَمَّا قَضَى الصَّلاَةَ قَالَ "" إِنَّمَا جُعِلَ الإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ، فَإِذَا كَبَّرَ فَكَبِّرُوا وَإِذَا رَكَعَ فَارْكَعُوا، وَإِذَا رَفَعَ فَارْفَعُوا، وَإِذَا قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ. فَقُولُوا رَبَّنَا وَلَكَ الْحَمْدُ. وَإِذَا سَجَدَ فَاسْجُدُوا "". قَالَ سُفْيَانُ كَذَا جَاءَ بِهِ مَعْمَرٌ قُلْتُ نَعَمْ. قَالَ لَقَدْ حَفِظَ، كَذَا قَالَ الزُّهْرِيُّ وَلَكَ الْحَمْدُ. حَفِظْتُ مِنْ شِقِّهِ الأَيْمَنِ. فَلَمَّا خَرَجْنَا مِنْ عِنْدِ الزُّهْرِيِّ قَالَ ابْنُ جُرَيْجٍ ـ وَأَنَا عِنْدَهُ ـ فَجُحِشَ سَاقُهُ الأَيْمَنُ.
பாடம் : 128 சஜ்தா செய்யும்போது தக்பீர் கூறியவாறே தாழ வேண்டும். இப்னு உமர் (ரலி) அவர்கள் (சஜ்தா விற்குச் செல்லும்போது) முழங்கால்களை(த் தரையில்) வைப்பதற்குமுன் தம் (உள்ளங்) கைகளை வைப்பார்கள் என நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
805. அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தாம் பயணம் செய்த) குதிரையி-ருந்து கீழே விழுந்து விட்டார்கள். இதனால் அவர்களது வலப் பக்கத்தில் சிராய்ப்பு ஏற்பட்டுவிட்டது. இதையொட்டி நாங்கள் அவர்களை உடல் நலம் விசாரிக்கச் சென்றோம். அப்போது தொழுகையின் நேரம் வந்துவிடவே, அவர்கள் அமர்ந்தவாறே எங்களுக்குத் தொழுவித்தார்கள். நாங்களும் அமர்ந்து கொண்டோம் -சுஃப்யான் (ரஹ்) அவர் களின் மற்றோர் அறிவிப்பில் ‘நாங்கள் அமர்ந்தவாறே தொழுதோம்’ என்று இடம்பெற்றுள்ளது.-

அவர்கள் தொழுகையை முடித்ததும், “பின்பற்றப்படுவதற்காகவே இமாம் ஏற்படுத்தப்பட்டுள்ளார். எனவே, அவர் தக்பீர் கூறினால் நீங்களும் தக்பீர் கூறுங்கள்; அவர் குனிந்தால் நீங்களும் குனி(ந்து ருகூஉ செய்)யுங்கள். அவர் (தலையை) உயர்த்தினால் நீங்களும் (தலையை) உயர்த்துங்கள். அவர் ‘சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ்’ (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக் கொள்கிறான்) என்று கூறினால், நீங்கள் ‘ரப்பனா வ ல(க்)கல் ஹம்த்’ (எங்கள் இறைவா! உனக்கே புகழ் அனைத்தும் உரியன) என்று கூறுங்கள்; அவர் சிரவணக்கம் (சஜ்தா) செய்தால், நீங்களும் சிரவணக்கம் (சஜ்தா) செய்யுங்கள்” என்று கூறினார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் அலீ பின் அல்மதீனீ (ரஹ்) அவர்களிடம், “இவ்வாறுதான் மஅமர் பின் ராஷித் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்களா?” எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம் (இவ்வாறே அறிவித்தார்கள்)” என்று பதிலளித்தார்கள்.

உறுதியாக மஅமர் (ரஹ்) அவர்கள், (ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்து இதை (நன்கு) மனனமிட்டார்கள். ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களும் (ருகூஉவிலிருந்து எழும்போது கூற வேண்டிய துதிச் சொல்லை) ‘வ ல(க்)கல் ஹம்த்’ என்றே அறிவித்தார்கள்.

மேலும், (நபி (ஸல்) அவர்களுக்குச் சிராய்ப்பு ஏற்பட்டது தொடர்பாக ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்து), “நபி (ஸல்) அவர்களின் வலப் பக்கத்தில் (சிராய்ப்பு ஏற்பட்டது)” என்றே நான் மனனமிட்டேன். நாங்கள் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்து புறப்பட்டுச் சென்றபோது இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள், “நான் ஸுஹ்ரீ அவர்களுக்கு அருகில் இருந்தேன்; ‘நபி (ஸல்) அவர்களது வலப் பக்க கணைக்கா-ல் சிராய்ப்பு ஏற்பட்டுவிட்டது’ என்றே அறிவித்தார்கள்” எனக் குறிப்பிட்டார்கள்

அத்தியாயம் : 10
806. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، وَعَطَاءُ بْنُ يَزِيدَ اللَّيْثِيُّ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، أَخْبَرَهُمَا أَنَّ النَّاسَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ، هَلْ نَرَى رَبَّنَا يَوْمَ الْقِيَامَةِ قَالَ "" هَلْ تُمَارُونَ فِي الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ لَيْسَ دُونَهُ سَحَابٌ "". قَالُوا لاَ يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" فَهَلْ تُمَارُونَ فِي الشَّمْسِ لَيْسَ دُونَهَا سَحَابٌ "". قَالُوا لاَ. قَالَ "" فَإِنَّكُمْ تَرَوْنَهُ كَذَلِكَ، يُحْشَرُ النَّاسُ يَوْمَ الْقِيَامَةِ، فَيَقُولُ مَنْ كَانَ يَعْبُدُ شَيْئًا فَلْيَتَّبِعْ. فَمِنْهُمْ مَنْ يَتَّبِعُ الشَّمْسَ، وَمِنْهُمْ مَنْ يَتَّبِعُ الْقَمَرَ وَمِنْهُمْ مَنْ يَتَّبِعُ الطَّوَاغِيتَ، وَتَبْقَى هَذِهِ الأُمَّةُ فِيهَا مُنَافِقُوهَا، فَيَأْتِيهِمُ اللَّهُ فَيَقُولُ أَنَا رَبُّكُمْ فَيَقُولُونَ هَذَا مَكَانُنَا حَتَّى يَأْتِيَنَا رَبُّنَا، فَإِذَا جَاءَ رَبُّنَا عَرَفْنَاهُ. فَيَأْتِيهِمُ اللَّهُ فَيَقُولُ أَنَا رَبُّكُمْ. فَيَقُولُونَ أَنْتَ رَبُّنَا. فَيَدْعُوهُمْ فَيُضْرَبُ الصِّرَاطُ بَيْنَ ظَهْرَانَىْ جَهَنَّمَ، فَأَكُونُ أَوَّلَ مَنْ يَجُوزُ مِنَ الرُّسُلِ بِأُمَّتِهِ، وَلاَ يَتَكَلَّمُ يَوْمَئِذٍ أَحَدٌ إِلاَّ الرُّسُلُ، وَكَلاَمُ الرُّسُلِ يَوْمَئِذٍ اللَّهُمَّ سَلِّمْ سَلِّمْ. وَفِي جَهَنَّمَ كَلاَلِيبُ مِثْلُ شَوْكِ السَّعْدَانِ، هَلْ رَأَيْتُمْ شَوْكَ السَّعْدَانِ "". قَالُوا نَعَمْ. قَالَ "" فَإِنَّهَا مِثْلُ شَوْكِ السَّعْدَانِ، غَيْرَ أَنَّهُ لاَ يَعْلَمُ قَدْرَ عِظَمِهَا إِلاَّ اللَّهُ، تَخْطَفُ النَّاسَ بِأَعْمَالِهِمْ، فَمِنْهُمْ مَنْ يُوبَقُ بِعَمَلِهِ، وَمِنْهُمْ مَنْ يُخَرْدَلُ ثُمَّ يَنْجُو، حَتَّى إِذَا أَرَادَ اللَّهُ رَحْمَةَ مَنْ أَرَادَ مِنْ أَهْلِ النَّارِ، أَمَرَ اللَّهُ الْمَلاَئِكَةَ أَنْ يُخْرِجُوا مَنْ كَانَ يَعْبُدُ اللَّهَ، فَيُخْرِجُونَهُمْ وَيَعْرِفُونَهُمْ بِآثَارِ السُّجُودِ، وَحَرَّمَ اللَّهُ عَلَى النَّارِ أَنْ تَأْكُلَ أَثَرَ السُّجُودِ فَيَخْرُجُونَ مِنَ النَّارِ، فَكُلُّ ابْنِ آدَمَ تَأْكُلُهُ النَّارُ إِلاَّ أَثَرَ السُّجُودِ، فَيَخْرُجُونَ مِنَ النَّارِ قَدِ امْتَحَشُوا، فَيُصَبُّ عَلَيْهِمْ مَاءُ الْحَيَاةِ، فَيَنْبُتُونَ كَمَا تَنْبُتُ الْحِبَّةُ فِي حَمِيلِ السَّيْلِ، ثُمَّ يَفْرُغُ اللَّهُ مِنَ الْقَضَاءِ بَيْنَ الْعِبَادِ، وَيَبْقَى رَجُلٌ بَيْنَ الْجَنَّةِ وَالنَّارِ، وَهْوَ آخِرُ أَهْلِ النَّارِ دُخُولاً الْجَنَّةَ، مُقْبِلٌ بِوَجْهِهِ قِبَلَ النَّارِ فَيَقُولُ يَا رَبِّ اصْرِفْ وَجْهِي عَنِ النَّارِ، قَدْ قَشَبَنِي رِيحُهَا، وَأَحْرَقَنِي ذَكَاؤُهَا. فَيَقُولُ هَلْ عَسَيْتَ إِنْ فُعِلَ ذَلِكَ بِكَ أَنْ تَسْأَلَ غَيْرَ ذَلِكَ فَيَقُولُ لاَ وَعِزَّتِكَ. فَيُعْطِي اللَّهَ مَا يَشَاءُ مِنْ عَهْدٍ وَمِيثَاقٍ، فَيَصْرِفُ اللَّهُ وَجْهَهُ عَنِ النَّارِ، فَإِذَا أَقْبَلَ بِهِ عَلَى الْجَنَّةِ رَأَى بَهْجَتَهَا سَكَتَ مَا شَاءَ اللَّهُ أَنْ يَسْكُتَ، ثُمَّ قَالَ يَا رَبِّ قَدِّمْنِي عِنْدَ باب الْجَنَّةِ. فَيَقُولُ اللَّهُ لَهُ أَلَيْسَ قَدْ أَعْطَيْتَ الْعُهُودَ وَالْمَوَاثِيقَ أَنْ لاَ تَسْأَلَ غَيْرَ الَّذِي كُنْتَ سَأَلْتَ فَيَقُولُ يَا رَبِّ لاَ أَكُونُ أَشْقَى خَلْقِكَ. فَيَقُولُ فَمَا عَسَيْتَ إِنْ أُعْطِيتَ ذَلِكَ أَنْ لاَ تَسْأَلَ غَيْرَهُ فَيَقُولُ لاَ وَعِزَّتِكَ لاَ أَسْأَلُ غَيْرَ ذَلِكَ. فَيُعْطِي رَبَّهُ مَا شَاءَ مِنْ عَهْدٍ وَمِيثَاقٍ، فَيُقَدِّمُهُ إِلَى باب الْجَنَّةِ، فَإِذَا بَلَغَ بَابَهَا، فَرَأَى زَهْرَتَهَا وَمَا فِيهَا مِنَ النَّضْرَةِ وَالسُّرُورِ، فَيَسْكُتُ مَا شَاءَ اللَّهُ أَنْ يَسْكُتَ، فَيَقُولُ يَا رَبِّ أَدْخِلْنِي الْجَنَّةَ. فَيَقُولُ اللَّهُ وَيْحَكَ يَا ابْنَ آدَمَ مَا أَغْدَرَكَ، أَلَيْسَ قَدْ أَعْطَيْتَ الْعَهْدَ وَالْمِيثَاقَ أَنْ لاَ تَسْأَلَ غَيْرَ الَّذِي أُعْطِيتَ فَيَقُولُ يَا رَبِّ لاَ تَجْعَلْنِي أَشْقَى خَلْقِكَ. فَيَضْحَكُ اللَّهُ ـ عَزَّ وَجَلَّ ـ مِنْهُ، ثُمَّ يَأْذَنُ لَهُ فِي دُخُولِ الْجَنَّةِ فَيَقُولُ تَمَنَّ. فَيَتَمَنَّى حَتَّى إِذَا انْقَطَعَتْ أُمْنِيَّتُهُ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ تَمَنَّ كَذَا وَكَذَا. أَقْبَلَ يُذَكِّرُهُ رَبُّهُ، حَتَّى إِذَا انْتَهَتْ بِهِ الأَمَانِيُّ قَالَ اللَّهُ تَعَالَى لَكَ ذَلِكَ وَمِثْلُهُ مَعَهُ "". قَالَ أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ لأَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنهما ـ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" قَالَ اللَّهُ لَكَ ذَلِكَ وَعَشَرَةُ أَمْثَالِهِ "". قَالَ أَبُو هُرَيْرَةَ لَمْ أَحْفَظْ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِلاَّ قَوْلَهُ "" لَكَ ذَلِكَ وَمِثْلُهُ مَعَهُ "". قَالَ أَبُو سَعِيدٍ إِنِّي سَمِعْتُهُ يَقُولُ "" ذَلِكَ لَكَ وَعَشَرَةُ أَمْثَالِهِ "".
பாடம் : 129 சஜ்தாவின் சிறப்பு
806. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கள் (நபி (ஸல்) அவர்களிடம்) “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா?” என்று வினவினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “பௌர்ணமி இரவில் மேகம் மறைக்காத சந்திரனைக் காண முடியும் என்பதில் நீங்கள் ஐயம் கொள்வீர்களா?” என்று கேட்டார்கள். மக்கள், “இல்லை (ஐயம் கொள்ளமாட்டோம்), அல்லாஹ்வின் தூதரே!” என்றார்கள்.

மீண்டும் நபி (ஸல்) அவர்கள், “மேகம் மறைக்காத சூரியனைக் காணலாம் என்பதில் நீங்கள் ஐயம் கொள்வீர்களா?” எனக் கேட்டார்கள். அதற்கும் மக்கள், “இல்லை” என்று பதிலளித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இவ்வாறுதான் உறுதியாக நீங்கள் இறைவனைக் காண்பீர்கள்” என்று கூறிவிட்டு (பின்வருமாறும்) கூறினார்கள்:

மறுமை நாளில் மக்கள் அனைவரும் ஒன்று திரட்டப்படுவார்கள். அப்போது “(உலகத்தில்) யார் எதை வழிபட்டுக்கொண்டிருந்தார்களோ அதைப் பின்பற்றிச் செல்லட்டும்!” என்பான் (இறைவன்). ஆகவே, சிலர் சூரியனைப் பின்பற்றிச் செல்வர். இன்னும் சிலர் சந்திரனைப் பின்பற்றிச் செல்வர். வேறுசிலர் (சாத்தான்கள், சிலைகள் போன்ற) தீய சக்திகளைப் பின்பற்றிச் செல்வர்.

இறுதியில் (என்னுடைய) இந்தச் சமுதாயத்தார் மட்டும் எஞ்கியிருப்பார்கள். அவர்களிடையே நயவஞ்சகர்களும் (கலந்து) இருப்பார்கள். அப்போது வ-மையும் மாண்பும் மிக்க இறைவன் (அவர்கள் அறியாத தோற்றத்தில்) அவர்களிடம் வந்து, “நான் உங்கள் இறைவன்” என்பான். உடனே அவர்கள் “எங்கள் இறைவன் எங்களிடம் வரும் வரை நாங்கள் இங்கேயே இருப்போம்; எங்கள் இறைவன் எங்களிடம் வந்தால் அவனை நாங்கள் அறிந்துகொள்வோம்” என்று கூறுவார்கள்.

அப்போது அல்லாஹ் (அவர்கள் அறிந்த தோற்றத்தில்) அவர்களிடம் வந்து, “நானே உங்கள் இறைவன்” என்பான். அப்போது அவர்கள், “நீ எங்கள் இறைவன்தான்” என்பார்கள். பிறகு அவர்களை இறைவன் அழைப்பான். நரகத்தின் மேலே பாலம் அமைக்கப்படும். தம் சமுதாயத்தாருடன் அதைக் கடந்து செல்லும் இறைத்தூதர்களில் நானே முதல் ஆளாக இருப்பேன். அன்றைய தினத்தில் இறைத் தூதர்களைத் தவிர வேறுயாரும் பேசமாட்டார்கள். அன்றைய தினம் ‘இறைவா! காப்பாற்று! காப்பாற்று!’ என்பதே இறைத்தூதர்களின் பேச்சாக இருக்கும்.

தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள், “அந்நரகத்தி(ன் பாலத்தி)ல் கருவேல மரத்தின் முற்களைப் போன்ற கொக்கிகள் மாட்டப்பட்டிருக்கும்.” என்று கூறிவிட்டு, “கருவேல மரத்தின் முள்ளை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்டார்கள். மக்கள், “ஆம் (பார்த்திருக்கிறோம்)” என்று பதிலளித்தார்கள்.

தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அந்தக் கொக்கிகள் கருவேல மரத்தின் முள்ளைப் போன்றிருந்தாலும், அதன் பருமனை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். அந்தக் கொக்கிகள் மக்களை, அவர்களின் (தீய) செயல்களுக்கேற்ப கவ்விப் பிடிக்கும். அவர்களில் தம் (தீய) செயல்களால் பேரழிவுக்கு ஆளாகுவோரும் இருப்பார் கள். (கொக்கிகளால்) கிழிக்கப்பட்டு, பின்னர் தப்பிப்போரும் இருப்பார்கள்.

இறுதியாக இறைவன் நரகத்திற்குரிய வர்களில் தான் நாடிய சிலர்மீது கருணை காட்ட நினைக்கும்போது வானவர்களிடம், அல்லாஹ்வை வழிபட்டு வந்தவர்களை நரகத்தி-ருந்து வெளியேற்றுமாறு கட்டளையிடுவான். அவ்வாறே அவர் களை வானவர்கள் வெளியேற்றுவார்கள். சஜ்தா செய்த அடையாளங்களை வைத்து அவர்களை வானவர்கள் அடையாளம் காண்பார்கள். சஜ்தா அடையாளங்களைத் தீண்டக் கூடாதென நரகத்திற்கு இறைவன் தடை விதித்துள்ளான்.

ஆகவே, (அல்லாஹ்வை வழிபட்டவர் கள்) நரகத்தி-ருந்து வெளியேற்றப்படு வார்கள். சஜ்தா அடையாளத்தைத் தவிர மற்ற உறுப்புகளை எல்லாம் நரகம் தீண்டிவிட்ட நிலையில் உள்ள ஒவ்வொரு மனிதரும் அங்கமெல்லாம் கருகியவாறு நரகத்தி-ருந்து வெளியேறுவார்கள். அப்போது அவர்கள்மீது (மாஉல் ஹயாத் எனும்) ஜீவநீர் ஊற்றப்படும். உடனே அவர்கள் சேற்று வெள்ளத்தில் விதைப் பயிர் முளைப்பதைப் போன்று (புதுப்பொலிவு டன்) நிறம் மாறிவிடுவார்கள்.

பின்னர் அல்லாஹ் அடியார்களிடையே தீர்ப்பளித்து முடிப்பான். இறுதியாக ஒரே ஒரு மனிதர் சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையே எஞ்சியிருப்பார். அவர்தான் நரகவாசிகளில் கடைசியாகச் சொர்க்கத்திற்கு செல்பவர். அவர் நரகத்தை முன்னோக்கியபடி, “இறைவா! நரகத்தைவிட்டு என் முகத்தை (வேறு பக்கம்) திருப்பு வாயாக! அதன் நச்சுக் காற்று என்னை அழித்துவிட்டது. அதன் சுவாலை என்னைக் கரித்துவிட்டது.” என்று கூறுவார்.

அப்போது அல்லாஹ், “இ(ப்போது நீ கோரிய)து உனக்குச் செய்து கொடுக்கப் பட்டால் வேறொன்றையும் நீ கோரலாம் அல்லவா?” என்று கேட்பான். அதற்கு அம்மனிதர், “இல்லை, உன் கண்ணியத் தின் மீதாணையாக! (வேறு எதையும் கேட்கமாட்டேன்)” என்பார்.

அந்த மனிதர் அல்லாஹ்விடம், அவன் நாடிய உறுதிமொழியையும் வாக் குறுதிகளையும் வழங்குவார். நரகத்தை விட்டு அம்மனிதரின் முகத்தை (வேறு பக்கம்) அல்லாஹ் திருப்பிவிடுவான். சொர்க்கத்தை நோக்கி அவரது முகத்தைத் திருப்பியதும் அம்மனிதர் சொர்க்கத்தின் செழிப்பைப் பார்த்தவாறு அல்லாஹ் நாடிய நேரம்வரை அமைதியாக இருப்பார்.

பிறகு “இறைவா! என்னைச் சொர்க்கத் தின் வாசல்வரை கொண்டுசெல்வாயாக!” என்று கேட்பார். அதற்கு இறைவன், “முன்பு கேட்டதைத் தவிர வேறெதையும் நீ என்னிடம் கேட்கமாட்டாய் என்று கூறி உறுதிமொழியும் வாக்குறுதியும் அளித் தாயே?” என்று கேட்பான்.

அதற்கு அம்மனிதர், “இறைவா! நான் உன் படைப்புக்களிலேயே நற்கதியற்ற வனாய் ஆகிவிடக் கூடாது” என்று கூறுவார். அதற்கு இறைவன், “(நீ கேட்டது) உனக்கு வழங்கப்பட்டால் வேறு எதையும் நீ கேட்கலாம் அல்லவா?” என்பான். அம்மனிதர், “இல்லை, உன் கண்ணியத்தின் மீதாணையாக! இஃதல்லாத வேறெதையும் நான் கேட்கமாட்டேன்” என்பார். இது குறித்து இறைவனிடம், அவன் நாடிய உறுதிமொழியும் வாக்குறுதியும் அந்த மனிதர் அளிப்பார். உடனே இறைவன் அந்த மனிதரை சொர்க்கத்தின் வாசல்வரை கொண்டுசெல்வான். அதன் வாசலை அவர் அடைந்ததும் அதன் வசந்தத்தையும் அதிலுள்ள செழுமை, சந்தோஷம் ஆகியவற்றையும் காண்பார்.

பிறகு அல்லாஹ் நாடிய அளவுக்கு அவர் அமைதியாக இருப்பார். அதன்பின் அந்த மனிதர், “இறைவா! என்னைச் சொர்க்கத்திற்குள் அனுமதிப்பாயாக!” என்று கூறுவார். அதற்கு உயர்ந்தோன் அல்லாஹ், “ஆதமின் மகனே! உனக்குக் கேடுதான்! ஏன் வாக்கைக் காப்பாற்றத் தவறிவிட்டாய்? முன்பு வழங்கப்பட்டதைத் தவிர வேறெதையும் நான் கேட்கமாட் டேன் என உறுதிமொழியும் வாக்குறுதியும் நீ அளிக்கவில்லையா?” என்று கேட்பான்.

அதற்கு அம்மனிதர், “இறைவா! உன் படைப்புகளிலேயே என்னை நற்கதியற்ற வனாய் ஆக்கிவிடாதே” என்பார். இம்மனிதனின் நிலை கண்டு வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் சிரிப்பான். பிறகு அவருக்குச் சொர்க்கத்திற்குள் செல்ல அனுமதியளித்துவிடுவான். அதன் பின் இறைவன் அம்மனிதரிடம், “நீ ஆசைப்படுவதைக் கேள்!” என்று கூறுவான். அம்மனிதரும் தாம் ஆசைப் படுவதைக் கூறுவார்.

இறுதியில் அவர் தம் ஆசைகள் யாவும் முற்றுப்பெறும்போது (அவரிடம்) இறைவன், “இதைவிட அதிகமானதை நீ ஆசைப்படு!” என்று சொல்-க்கொடுப்பான். இறுதியில் ஆசைகள் முற்றுப்பெற்றுவிடும்போது உயர்ந்தோன் அல்லாஹ், “உனக்கு இதுவும் உண்டு. இதைப் போன்று இன்னொரு மடங்கும் உண்டு” என்பான்.

இதன் அறிவிப்பாளரான அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் தமக்கு இதை அறிவித்த அபூஹுரைரா (ரலி) அவர்களிடம், “உனக்கு இதுவும் உண்டு. இதைப் போன்று பத்து மடங்கும் உண்டு’ என்று அல்லாஹ் கூறியதாகத்தானே நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்?” என்று கேட்டார்கள்.

அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள், “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ‘உனக்கு இதுவும் உண்டு. இதுபோன்று இன்னொரு மடங்கும் உண்டு’ என்று அல்லாஹ் கூறியதாகவே மனனமிட்டேன்” என்றார்கள். அதற்கு அபூசயீத் (ரலி) அவர்கள், “இதுவும் உண்டு. இதுபோன்று பத்து மடங்கும் உண்டு” என்றே நான் நபி (ஸல்) அவர்களிட மிருந்து செவியுற்றுள்ளேன்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 10