767. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَدِيٍّ، قَالَ سَمِعْتُ الْبَرَاءَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ فِي سَفَرٍ فَقَرَأَ فِي الْعِشَاءِ فِي إِحْدَى الرَّكْعَتَيْنِ بِالتِّينِ وَالزَّيْتُونِ.
பாடம் : 100 இஷா தொழுகையில் சப்த மிட்டு ஓதுதல்
767. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தார்கள். அப்போது இஷா தொழுகையின் இரண்டு ரக்அத்களில் ஒன்றில் (95ஆவது அத்தியாயமான) ‘வத்தீனி வஸ்ஸைத்தூனி’யை ஓதினார்கள்.

அத்தியாயம் : 10
768. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ حَدَّثَنِي التَّيْمِيُّ، عَنْ بَكْرٍ، عَنْ أَبِي رَافِعٍ، قَالَ صَلَّيْتُ مَعَ أَبِي هُرَيْرَةَ الْعَتَمَةَ فَقَرَأَ {إِذَا السَّمَاءُ انْشَقَّتْ} فَسَجَدَ فَقُلْتُ مَا هَذِهِ قَالَ سَجَدْتُ بِهَا خَلْفَ أَبِي الْقَاسِمِ صلى الله عليه وسلم فَلاَ أَزَالُ أَسْجُدُ بِهَا حَتَّى أَلْقَاهُ.
பாடம் : 101 இஷா தொழுகையில் சஜ்தா (வசனமுள்ள) அத்தியாயத்தை ஓதுவது
768. அபூராஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அபூஹுரைரா (ரலி) அவர்களு டன் இஷா தொழுகையைத் தொழுதேன். அதில் அவர்கள், ‘இதஸ் ஸமாஉன் ஷக்கத்’ (எனும் 84ஆவது) அத்தியா யத்தை ஓதி, (ஓதலுக்குரிய) சஜ்தா செய்தார் கள். ஆகவே, நான் (அவர்களிடம்), “என்ன இது? (ஏன் இந்த அத்தியாயத் திற்காக சஜ்தா செய்தீர்கள்?)” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், “அபுல்காசிம் (முஹம்மத்-ஸல்) அவர்களுக்குப் பின் னால் (தொழுதபோது) இ(ந்த அத்தி யாயத்தை ஓதிய)தற்காக சஜ்தா செய்திருக்கி றேன். அவர்களை நான் சந்திக்கும் (அதாவது இறக்கும்)வரை அ(தை ஓதிய)தற்காக சஜ்தா செய்துகொண்டுதானிருப்பேன்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 10
769. حَدَّثَنَا خَلاَّدُ بْنُ يَحْيَى، قَالَ حَدَّثَنَا مِسْعَرٌ، قَالَ حَدَّثَنَا عَدِيُّ بْنُ ثَابِتٍ، سَمِعَ الْبَرَاءَ، رضى الله عنه قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقْرَأُ {وَالتِّينِ وَالزَّيْتُونِ} فِي الْعِشَاءِ، وَمَا سَمِعْتُ أَحَدًا أَحْسَنَ صَوْتًا مِنْهُ أَوْ قِرَاءَةً.
பாடம் : 102 இஷா தொழுகையில் (குர்ஆன் வசனங்கள்) ஓதுதல்
769. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் இஷா தொழுகையில் (95ஆவது அத்தியாயமான) ‘வத்தீனி வஸ்ஸைத்தூனி’யை ஓதக் கேட்டுள்ளேன். நபி (ஸல்) அவர்களைவிட ‘அழகிய

குர-ல்’ அல்லது ‘அழகிய ஓதல் முறையில்’ வேறெவரும் ஓத நான் கேட்டதில்லை.

அத்தியாயம் : 10
770. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي عَوْنٍ، قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ سَمُرَةَ، قَالَ قَالَ عُمَرُ لِسَعْدٍ لَقَدْ شَكَوْكَ فِي كُلِّ شَىْءٍ حَتَّى الصَّلاَةِ. قَالَ أَمَّا أَنَا فَأَمُدُّ فِي الأُولَيَيْنِ، وَأَحْذِفُ فِي الأُخْرَيَيْنِ، وَلاَ آلُو مَا اقْتَدَيْتُ بِهِ مِنْ صَلاَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. قَالَ صَدَقْتَ، ذَاكَ الظَّنُّ بِكَ، أَوْ ظَنِّي بِكَ.
பாடம் : 103 (இஷா தொழுகையின்) முத-ரண்டு ரக்அத்களில் நீண்ட நேரம் ஓத வேண்டும்; இறுதி இரண்டு ரக்அத்களில் சுருக்க மாக ஓத வேண்டும்.
770. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்கள் சஅத் (பின் அபீவக்காஸ்-ர-) அவர்களிடம், “(கூஃபா நகர) மக்கள் தொழுகை நடத்துவது உட்பட எல்லா விஷயங்களிலும் உங்களைப் பற்றி (என்னிடம்) முறையிட்டனர். (இது குறித்து நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?)” என்று கேட்டார்கள்.

அதற்கு சஅத் (ரலி) அவர்கள், “நானோ முதல் இரண்டு ரக்அத்களில் நீண்ட நேரம் ஓதுகிறேன். பிந்திய இரண்டு ரக்அத்களில் சுருக்கமாக ஓதுகிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுவித்துக்காட்டிய முறையைப் பின் பற்றுவதில் நான் (எந்தக்) குறையும் செய்யமாட்டேன்” என்று கூறினார்கள்.

அதற்கு உமர் (ரலி) அவர்கள், “நீங்கள் உன்மையே கூறினீர்கள். ‘உங்களைப் பற்றி (நமது) எண்ணமும்’ அல்லது ‘உங்களைப் பற்றி எனது எண்ணமும்’ அதுதான்” என்று சொன்னார்கள்.

அத்தியாயம் : 10
771. حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ حَدَّثَنَا سَيَّارُ بْنُ سَلاَمَةَ، قَالَ دَخَلْتُ أَنَا وَأَبِي، عَلَى أَبِي بَرْزَةَ الأَسْلَمِيِّ فَسَأَلْنَاهُ عَنْ وَقْتِ الصَّلَوَاتِ، فَقَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي الظُّهْرَ حِينَ تَزُولُ الشَّمْسُ، وَالْعَصْرَ وَيَرْجِعُ الرَّجُلُ إِلَى أَقْصَى الْمَدِينَةِ وَالشَّمْسُ حَيَّةٌ، وَنَسِيتُ مَا قَالَ فِي الْمَغْرِبِ، وَلاَ يُبَالِي بِتَأْخِيرِ الْعِشَاءِ إِلَى ثُلُثِ اللَّيْلِ وَلاَ يُحِبُّ النَّوْمَ قَبْلَهَا، وَلاَ الْحَدِيثَ بَعْدَهَا، وَيُصَلِّي الصُّبْحَ فَيَنْصَرِفُ الرَّجُلُ فَيَعْرِفُ جَلِيسَهُ، وَكَانَ يَقْرَأُ فِي الرَّكْعَتَيْنِ أَوْ إِحْدَاهُمَا مَا بَيْنَ السِّتِّينَ إِلَى الْمِائَةِ.
பாடம் : 104 ஃபஜ்ர் தொழுகையில் (குர்ஆன் வசனங்கள்) ஓதுதல் (ஃபஜ்ர் தொழுகையில்) நபி (ஸல்) அவர்கள் ‘அத்தூர்’ (எனும் 52ஆவது) அத்தியாயத்தை ஓதினார்கள் என உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
771. சய்யார் பின் சலாமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நானும் என் தந்தையும் அபூபர்ஸா அல்அஸ்லமீ (ரலி) அவர்களிடம் சென்று, (கடமையான) தொழுகைகளின் நேரம் குறித்துக் கேட்டோம். அதற்கு அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழு கையை சூரியன் (நடுவானி-ருந்து மேற்கு நோக்கி) சாயும்போது தொழுவார்கள். (பின்னர்) அஸ்ர் தொழுகையைத் தொழுவார்கள். (எங்களில்) ஒருவர் (அஸ்ர் தொழுகையைத் தொழுதுவிட்டு) மதீனா வின் கடைக் கோடி(யிலுள்ள தமது வீட்டு)க்குத் திரும்பிச் சென்றுவிடுவார். அப்போதும் சூரியன் (வெளிச்சமோ வெப்பமோ குன்றாமல்) தெளிவாக இருந்துகொண்டிருக்கும்.

-மஃக்ரிப் தொழுகை(யின் நேரம்) குறித்து அபூபர்ஸா (ரலி) அவர்கள் (கூறி னார்கள்; ஆனால், அவர்கள்) கூறியதை நான் மறந்துவிட்டேன்.-

இஷா தொழுகையை இரவின் மூன்றில் ஒரு பகுதிவரைத் தாமதப்படுத்து வதை நபி (ஸல்) அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள்; (அதை விரும்புவார்கள்.) இஷா தொழுகைக்குமுன் உறங்குவதையும் இஷா தொழுகைக்குப்பின் பேசிக்கொண்டிருப்பதையும் அவர்கள் விரும்ப மாட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் சுப்ஹு தொழுகையைத் தொழுவித்து முடிப்பார்கள். அப்போது தொழுகையை முடிக்கும் ஒருவர் தமது அருகில் இருப்பவரை அறிந்துகொள்வார். (அந்த அளவுக்கு வெளிச்சம் வந்துவிட்டிருக்கும்.)

நபி (ஸல்) அவர்கள் (சுப்ஹு தொழுகையின்) ‘இரு ரக்அத்களில்’ அல்லது ‘அவற்றில் ஒன்றில்’ அறுபது முதல் நூறு வசனங்கள்வரை ஓதுவார்கள்.51


அத்தியாயம் : 10
772. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ فِي كُلِّ صَلاَةٍ يُقْرَأُ، فَمَا أَسْمَعَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَسْمَعْنَاكُمْ، وَمَا أَخْفَى عَنَّا أَخْفَيْنَا عَنْكُمْ، وَإِنْ لَمْ تَزِدْ عَلَى أُمِّ الْقُرْآنِ أَجْزَأَتْ، وَإِنْ زِدْتَ فَهُوَ خَيْرٌ.
பாடம் : 104 ஃபஜ்ர் தொழுகையில் (குர்ஆன் வசனங்கள்) ஓதுதல் (ஃபஜ்ர் தொழுகையில்) நபி (ஸல்) அவர்கள் ‘அத்தூர்’ (எனும் 52ஆவது) அத்தியாயத்தை ஓதினார்கள் என உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
772. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

எல்லாத் தொழுகைகளிலும் (குர்ஆன் வசனங்கள்) ஓதப்பட வேண்டும். நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கேட்கும் விதமாக ஓதியவற்றை நாங்களும் உங்களுக்குக் கேட்கும் விதமாக (சப்தமாக) ஓதுகிறோம். நபி (ஸல்) அவர்கள் எங்கள் காதில் விழாதபடி மெதுவாக ஓதியதை நாங்களும் (சப்தமின்றி) மெதுவாக ஓதுகிறோம்.

(தொழுகையில்) குர்ஆனின் அன்னை (யான அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) விடக் கூடுதலாக வேறு எதையும் நீ ஓதாவிட்டாலும் (உமது தொழுகை) நிறைவேறிவிடும். ஆயினும், அதைவிட அதிகமாக நீ ஓதினால், அதுவே சிறந்ததாகும்.

அத்தியாயம் : 10
773. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ انْطَلَقَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي طَائِفَةٍ مِنْ أَصْحَابِهِ عَامِدِينَ إِلَى سُوقِ عُكَاظٍ، وَقَدْ حِيلَ بَيْنَ الشَّيَاطِينِ وَبَيْنَ خَبَرِ السَّمَاءِ، وَأُرْسِلَتْ عَلَيْهِمُ الشُّهُبُ، فَرَجَعَتِ الشَّيَاطِينُ إِلَى قَوْمِهِمْ. فَقَالُوا مَا لَكُمْ فَقَالُوا حِيلَ بَيْنَنَا وَبَيْنَ خَبَرِ السَّمَاءِ، وَأُرْسِلَتْ عَلَيْنَا الشُّهُبُ. قَالُوا مَا حَالَ بَيْنَكُمْ وَبَيْنَ خَبَرِ السَّمَاءِ إِلاَّ شَىْءٌ حَدَثَ، فَاضْرِبُوا مَشَارِقَ الأَرْضِ وَمَغَارِبَهَا، فَانْظُرُوا مَا هَذَا الَّذِي حَالَ بَيْنَكُمْ وَبَيْنَ خَبَرِ السَّمَاءِ فَانْصَرَفَ أُولَئِكَ الَّذِينَ تَوَجَّهُوا نَحْوَ تِهَامَةَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَهْوَ بِنَخْلَةَ، عَامِدِينَ إِلَى سُوقِ عُكَاظٍ وَهْوَ يُصَلِّي بِأَصْحَابِهِ صَلاَةَ الْفَجْرِ، فَلَمَّا سَمِعُوا الْقُرْآنَ اسْتَمَعُوا لَهُ فَقَالُوا هَذَا وَاللَّهِ الَّذِي حَالَ بَيْنَكُمْ وَبَيْنَ خَبَرِ السَّمَاءِ. فَهُنَالِكَ حِينَ رَجَعُوا إِلَى قَوْمِهِمْ وَقَالُوا يَا قَوْمَنَا {إِنَّا سَمِعْنَا قُرْآنًا عَجَبًا * يَهْدِي إِلَى الرُّشْدِ فَآمَنَّا بِهِ وَلَنْ نُشْرِكَ بِرَبِّنَا أَحَدًا} فَأَنْزَلَ اللَّهُ عَلَى نَبِيِّهِ صلى الله عليه وسلم {قُلْ أُوحِيَ إِلَىَّ} وَإِنَّمَا أُوحِيَ إِلَيْهِ قَوْلُ الْجِنِّ.
பாடம் : 105 ஃபஜ்ர் தொழுகையில் சப்தமிட்டு ஓதுவது நபி (ஸல்) அவர்கள் ‘அத்தூர்’ (எனும் 52ஆவது) அத்தியாயத்தை ஓதித் தொழு வித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது மக்களுக்குப் பின்னால் நான் (இறை யில்லத்தை தவாஃப்) சுற்றிக்கொண்டி ருந்தேன் என உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
773. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் ‘உ(க்)காழ்’ எனும் சந்தையை நோக்கிச் சென்றார்கள். (இந்த நேரத்தில்) ஷைத்தான்களுக்கும் வானுலகச் செய்தி களுக்கும் இடையே திரையிடப்பட்டு (அவற்றை அவர்கள் கேட்க முடியாமல் தடுக்கப்பட்டு)விட்டது. (வானுலகச் செய்திகளை ஒட்டுக் கேட்கச் சென்ற) ஷைத்தான்கள்மீது விண்கொள்ளிகள் ஏவிவிடப்பட்டன. (ஒட்டுக் கேட்கச் சென்ற) அந்த ஷைத்தான்கள் (ஒரு செய்தியும் கிடைக்காமல்) தம் கூட்டத்தாரிடம் திரும்பி வந்தனர்.

அப்போது அக்கூட்டத்தார், “உங்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டனர். ஷைத்தான்கள், “வானத்துச் செய்திகளுக் கும் எங்களுக்கும் இடையே திரையிடப் பட்டுவிட்டது; எங்கள்மீது விண்கொள்ளி கள் ஏவிவிடப்பட்டன” என்று பதிலளித் தனர்.

“புதியதொரு நிகழ்ச்சி ஏதேனும் சம்பவித்திருக்கும். அதுவே உங்களுக்கும் வானுலகச் செய்திகளுக்கும் இடையே தடையாக அமைந்திருக்க வேண்டும். எனவே, நீங்கள், பூமியின் கீழ்த்திசை, மேல்திசை (என நாலா பாகங்களிலும் பரவிச்) சென்று நமக்கும் வானுலகச் செய்திகளுக்கும் இடையே தடையாக உள்ள இ(ந்தச் சம்பவத்)தை என்னவென்று ஆராயுங்கள்” என்றனர்.

அவ்வாறே திஹாமா நோக்கிச் சென்ற அந்த ஷைத்தான்கள் (எல்லாத் திசைகளை யும் ஆராய்ந்தபடி) நபி (ஸல்) அவர்களி டம் திரும்பிச் சென்றனர். அப்போது ‘உகாழ்’ சந்தையை நோக்கிச் சென்று கொண்டிருந்த நபி (ஸல்) அவர்கள் ‘நக்லா’ எனும் இடத்தில் தம் தோழர்களுக்கு ஃபஜ்ர் தொழுகையைத் தொழுவித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ஓதப்பட்ட குர்ஆன் வசனங்களை அந்த ஷைத் தான்கள் கவனமாகச் செவி கொடுத்துக் கேட்டனர்.

அப்போது ஷைத்தான்கள் (தங்களுக்கிடையில்), “அல்லாஹ்வின் மீதாணையாக! வான் செய்திகளை (கேட்க முடியாமல்) உங்களைத் தடுத்தது இதுதான்” என்று கூறிவிட்டு, தம் கூட்டத்தாரிடம் திரும்பிச் சென்று, “எங்கள் கூட்டத்தாரே! நிச்சயமாக நாங்கள் ஆச்சரியமானதொரு குர்ஆனை செவிமடுத்தோம். அது நேர்வழியைக் காட்டுகின்றது. எனவே, அதை நாங்கள் நம்புகிறோம் (இனி) ஒருபோதும் நம் இறைவனுக்கு நாங்கள் யாரையும் இணையாகக் கருதமாட்டோம்” என்று கூறினர்.

(இதையொட்டி) அல்லாஹ் தன் தூதருக்கு, “நபியே! நீர் கூறுக: வஹீ மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது...” என்று தொடங்கும் இந்த (72ஆவது) அத்தியாயத்தை அருளினான்.

ஜின்கள் (தம் கூட்டத்தாரிடம்) கூறியதைப் பற்றி ‘வஹீ’ மூலம்தான் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.


அத்தியாயம் : 10
774. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَرَأَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِيمَا أُمِرَ، وَسَكَتَ فِيمَا أُمِرَ {وَمَا كَانَ رَبُّكَ نَسِيًّا} {لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ}.
பாடம் : 105 ஃபஜ்ர் தொழுகையில் சப்தமிட்டு ஓதுவது நபி (ஸல்) அவர்கள் ‘அத்தூர்’ (எனும் 52ஆவது) அத்தியாயத்தை ஓதித் தொழு வித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது மக்களுக்குப் பின்னால் நான் (இறை யில்லத்தை தவாஃப்) சுற்றிக்கொண்டி ருந்தேன் என உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
774. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், தமக்கு (அல்லாஹ்வால்) பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கேற்பவே (சில தொழுகைகளில்) சப்தமிட்டு ஓதினார்கள்; தமக்குப் பிறப்பிக் கப்பட்ட உத்தரவுக்கேற்பவே (சில தொழுகைகளில்) மெதுவாக ஓதினார்கள். (ஏனெனில்,) “உம் இறைவன் மறப்பவன் அல்லன்” (19:64) என்று அல்லாஹ் கூறு கின்றான்.

“அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி உண்டு” (33:21) என்றும் அல்லாஹ் கூறுகின்றான்.52

அத்தியாயம் : 10
775. حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، قَالَ سَمِعْتُ أَبَا وَائِلٍ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى ابْنِ مَسْعُودٍ فَقَالَ قَرَأْتُ الْمُفَصَّلَ اللَّيْلَةَ فِي رَكْعَةٍ. فَقَالَ هَذًّا كَهَذِّ الشِّعْرِ لَقَدْ عَرَفْتُ النَّظَائِرَ الَّتِي كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقْرِنُ بَيْنَهُنَّ فَذَكَرَ عِشْرِينَ سُورَةً مِنَ الْمُفَصَّلِ سُورَتَيْنِ فِي كُلِّ رَكْعَةٍ.
பாடம் : 106 ஒரே ரக்அத்தில் இரண்டு அத்தியாயங்களை ஓதுவதும், அத்தியாயத்தின் இறுதி வசனங்களை (மட்டும்) ஓதுவதும், அத்தியாயங்களை முன் பின்னாக ஓதுவதும், ஓர் அத்தியாயத் தின் ஆரம்ப வசனங்களை (மட்டும்) ஓதுவதும் (செல்லுமா?)53 நபி (ஸல்) அவர்கள், சுப்ஹு தொழுகையில் ‘அல்முஃமினூன்’ (எனும் 23ஆவது) அத்தியாயத்தை ஓதித் தொழு வித்தார்கள். ‘மூசா (அலை), ஹாரூன் (அலை) ஆகியோரைப் பற்றிக் குறிப்பிடும் வசனம்’ (23:45), அல்லது ‘ஈசா (அலை) அவர்கள் பற்றிக் கூறப்படும் வசனம்’ (23:50) வந்ததும் நபி (ஸல்) அவர்களுக்கு இருமல் ஏற்பட்டது. உடனே ருகூஉ செய்துவிட்டார்கள் என அப்துல்லாஹ் பின் அஸ்ஸாயிப் (ரலி) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படுகிறது.54 உமர் (ரலி) அவர்கள், (தொழுகையின்) முதல் ரக்அத்தில் அல்பகரா (2ஆவது) அத்தியாயத்தி-ருந்து நூற்று இருபது வசனங்களை ஓதினார்கள்; இரண்டாம் ரக்அத்தில் (நூறுக்கும் குறைவான வசனங்களுடைய) ‘அல்மஸானீ’ அத்தி யாயங்களில் ஒன்றை ஓதினார்கள். அஹ்னஃப் பின் கைஸ் (ரலி) அவர்கள், (சுப்ஹு தொழுகையின்) முதல் ரக்அத்தில் ‘அல்கஹ்ஃப்’ (எனும் 18ஆவது) அத்தியாயத்தையும், இரண்டாவது ரக்அத்தில் ‘யூசுஃப்’ (12ஆவது) அத்தியாயத்தை’ அல்லது ‘யூனுஸ்’ (10ஆவது) அத்தியாயத்தை ஓதினார்கள். உமர் (ரலி) அவர்கள் இவ்விரண்டு அத்தியாயங் களையும் ஓதி சுப்ஹு தொழுகை தொழுவித்தபோது, அவர்களுக்குப் பின்னால் தாம் தொழுததாகவும் அஹ்னஃப் (ரலி) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் (தொழுகையின் முதல் ரக்அத்தில்) ‘அல் அன்ஃபால்’ (8 ஆவது) அத்தியாயத்தில் நாற்பது வசனங்களையும் இரண்டாவது ரக்அத்தில் நடுத்தர (அல்முஃபஸ்ஸல்) அத்தியாயங்களில் ஒன்றையும் ஓதினார்கள். ஓர் அத்தியாயத்தை (இரண்டாகப் பிரித்து) இரு ரக்அத்களில் ஓதுவது, அல்லது ஒரே அத்தியாயத்தை இரு ரக்அத்களில் (திரும்ப) ஓதுவது பற்றி கத்தாதா (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகையில், “எல்லாம் இறைவேதம்தான்” என்று தெரிவித்தார்கள். 774-ஆ அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அன்சாரிகளில் (குல்ஸூம் பின் ஹித்ம் எனும்) ஒருவர் ‘குபா’ பள்ளிவாச-ல் மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழு விப்பவராக (இமாமாக) இருந்தார். (அல்ஃபாத்திஹா அத்தியாயத்திற்குப்பின்) ஓதப்படும் அத்தியாயத்தை ஓதி மக்க ளுக்கு அவர் தொழுவிக்க ஆரம்பிக்கும் போதெல்லாம், அந்த அத்தியாயத்தை ஆரம்பிப்பதற்குமுன் ‘குல் ஹுவல்லாஹு அஹத்’ (என்று தொடங்கும் 112ஆவது) அத்தியாயத்தை ஓதியே ஆரம்பிப்பார்; (அதாவது ‘குல் ஹுவல்லாஹு அஹத்’ அத்தியாயத்தை ஓதிய) பிறகுதான் மற்றோர் அத்தியாயத்தை ஓதுவார். ஒவ்வொரு ரக்அத்திலும் அவர் இவ்வாறு செய்வது வழக்கம். இது குறித்து அவரிடம் அவருடைய நண்பர்கள், “நீங்கள் இந்த (குல் ஹுவல்லாஹு அஹத்) அத்தியாயத்தை ஓத ஆரம்பிக்கிறீர்கள். பிறகு அது போதாதென்று மற்றோர் அத்தியாயத்தையும் ஓதுகிறீர்களே! ஒன்று இந்த அத்தியாயத்தை மட்டும் ஓதுங்கள்! அல்லது இதை விட்டுவிட்டு மற்றோர் அத்தியாயத்தை மட்டும் ஓதுங்கள் (இரண்டையும் ஓதாதீர்கள்)” என்று கூறினார்கள். அதற்கு அவர், “நான் இ(ந்த அத்தியாயத்)தை ஓதுவதைக் கைவிடமாட்டேன். நீங்கள் விரும்பினால் இவ்வாறு (ஓதித் தலைமை தாங்கித் தொழுவிக்கும் பணியைச்) செய்கிறேன். (இதை) நீங்கள் வெறுத்தால் நான் உங்களுக்கு(த் தொழுவிப்பதை) விட்டுவிடுவேன் (உங்களுக்குத் தொழுவிக்கமாட்டேன்)” என்றார். அம்மக்கள் அவரைத் தங்களில் சிறந்தவராகத் கருதிக்கொண்டிருந்தனர். அவரல்லாத மற்றொருவர் தங்களுக்குத் தொழுவிப்பதை அவர்கள் விரும்பவில்லை. ஆகவே, நபி (ஸல்) அவர்கள் தங்களிடம் வந்த நேரத்தில் இந்தச் செய்தியை அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் (அந்த மனிதரிடம்), “இன்னாரே! உங்கள் தோழர்கள் உங்களைப் பணிப்பது போன்று நீங்கள் ஏன் செய்யக் கூடாது? என்ன காரணத்தால் ஒவ்வொரு ரக்அத்திலும் இந்த அத்தியாயத்தைக் கட்டாயப்படுத்திக் கொண்டீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “நான் இந்த அத்தி யாயத்தை நேசிக்கிறேன்” என்று சொன்னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அ(ந்த அத்தியாயத்)தை நீர் நேசிப்பது உம்மைச் சொர்க்கத்தில் சேர்க்கும்” என்று கூறினார்கள்.
775. அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “நான் நேற்றிரவு ‘அல்முஃபஸ்ஸல்’ அத்தியாயங்களை ஒரு ரக்அத்தில் ஓதி முடித்தேன்” என்று கூறினார்.

அதற்கு இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள், “பாட்டுப் பாடுவதைப் போன்று அவசர அவசரமாக ஓதினீரா? நபி (ஸல்) அவர்கள் தமது தொழுகையில் ஒவ்வொரு ரக்அத்திலும் இரண்டிரண்டாக ஓதிவந்த சரிநிகர் (பொருள் கொண்ட) அத்தியாயங்களை நான் அறிந்துள்ளேன்” என்று கூறிவிட்டு, அல்முஃபஸ்ஸல் அத்தியாயங்களில் இருபது அத்தியாயங்களைக் குறிப்பிட்டார்கள்.55

அத்தியாயம் : 10
776. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ يَحْيَى، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَقْرَأُ فِي الظُّهْرِ فِي الأُولَيَيْنِ بِأُمِّ الْكِتَابِ وَسُورَتَيْنِ، وَفِي الرَّكْعَتَيْنِ الأُخْرَيَيْنِ بِأُمِّ الْكِتَابِ، وَيُسْمِعُنَا الآيَةَ، وَيُطَوِّلُ فِي الرَّكْعَةِ الأُولَى مَا لاَ يُطَوِّلُ فِي الرَّكْعَةِ الثَّانِيَةِ، وَهَكَذَا فِي الْعَصْرِ وَهَكَذَا فِي الصُّبْحِ.
பாடம் : 107 (நான்கு ரக்அத் தொழுகையின்) பிந்திய இரண்டு ரக்அத்களிலும் ‘அல்ஃபாத்திஹா’ அத்தியாயம் (மட்டும்) ஓத வேண்டும்.
776. அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகை யின் முத-ரண்டு ரக்அத்களிலும் ‘உம்முல் கிதாப்’ (குர்ஆனின் அன்னை எனப்படும் அல்ஃபாத்திஹா) அத்தியாயத்தையும், இன்னும் இரு அத்தியாயங்களையும் ஓதுவார்கள். பிந்திய இரண்டு ரக்அத்களில் ‘உம்முல் கிதாப்’ (அல்ஃபாத்திஹா) அத்தியாயத்தை (மட்டும்) ஓதுவார்கள். (ஒரு சில) வசனங்களை எங்களுக்குக் கேட்குமளவுக்கு (குரலுயர்த்தி) ஓதுவார்கள்.

இரண்டாவது ரக்அத்தைவிட முதல் ரக்அத்தில் நீளமாக ஓதுவார்கள். இவ்வாறே அஸ்ர் தொழுகையில் செய்வார் கள்; இவ்வாறே சுப்ஹு தொழுகையிலும் (முதல் ரக்அத்தில்) நீளமாக ஓதுவார்கள்.

அத்தியாயம் : 10
777. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ عُمَارَةَ بْنِ عُمَيْرٍ، عَنْ أَبِي مَعْمَرٍ، قُلْتُ لِخَبَّابٍ أَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقْرَأُ فِي الظُّهْرِ وَالْعَصْرِ قَالَ نَعَمْ. قُلْنَا مِنْ أَيْنَ عَلِمْتَ قَالَ بِاضْطِرَابِ لِحْيَتِهِ.
பாடம் : 108 லுஹ்ர் தொழுகையிலும் அஸ்ர் தொழுகையிலும் (சப்தமின்றி) மெதுவாக ஓதுவது
777. அபூமஅமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் கப்பாப் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையிலும் அஸ்ர் தொழுகை யிலும் (குர்ஆன் வசனங்களை) ஓதுவார் களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆம்’ என்று பதிலளித்தார்கள்.

நாங்கள், “(அதை) நீங்கள் எவ்வாறு அறிந்துகொண்டீர்கள்?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “அவர்களது தாடி அசைவதை வைத்துத்தான்” என்று பதிலளித்தார்கள்.

அத்தியாயம் : 10
778. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَقْرَأُ بِأُمِّ الْكِتَابِ وَسُورَةٍ مَعَهَا فِي الرَّكْعَتَيْنِ الأُولَيَيْنِ مِنْ صَلاَةِ الظُّهْرِ وَصَلاَةِ الْعَصْرِ، وَيُسْمِعُنَا الآيَةَ أَحْيَانًا، وَكَانَ يُطِيلُ فِي الرَّكْعَةِ الأُولَى.
பாடம் : 109 (சப்தமின்றி ஓதப்படும் தொழு கையில்) இமாம் சில வசனங் களை மற்றவர்களுக்குக் கேட்கும் வகையில் ஓதினால் (செல்லுமா?)
778. அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் மற்றும் அஸ்ர் தொழுகையின் முத-ரண்டு ரக்அத்களிலும் ‘உம்முல் கிதாப்’ (‘குர்ஆனின் அன்னை’ எனப்படும் அல்ஃபாத்திஹா) அத்தியாயத்தையும் அதனுடன் மற்றோர் அத்தியாயத்தையும் ஓதுவார்கள்.

சில நேரங்களில் சில வசனங்களை எங்களுக்குக் கேட்குமளவுக்கு (குரலுயர்த்தி) ஓதுவார்கள். (இரண்டாவது ரக்அத்தைவிட) முதல் ரக்அத்தில் நீண்ட நேரம் ஓதுவார்கள்.

அத்தியாயம் : 10
779. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يُطَوِّلُ فِي الرَّكْعَةِ الأُولَى مِنْ صَلاَةِ الظُّهْرِ، وَيُقَصِّرُ فِي الثَّانِيَةِ، وَيَفْعَلُ ذَلِكَ فِي صَلاَةِ الصُّبْحِ.
பாடம் : 110 (பொதுவாக எல்லாத் தொழுகைகளிலும்) முதல் ரக்அத்தில் நீண்ட நேரம் ஓதுதல்
779. அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகை யின் முதலாவது ரக்அத்தில் நீண்ட நேரம் ஓதுவார்கள்; இரண்டாவது ரக்அத்தில் சுருக்கமாக ஓதுவார்கள். சுப்ஹு தொழுகையிலும் இவ்வாறே செய்வார்கள்.

அத்தியாயம் : 10
780. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، وَأَبِي، سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّهُمَا أَخْبَرَاهُ عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا أَمَّنَ الإِمَامُ فَأَمِّنُوا فَإِنَّهُ مَنْ وَافَقَ تَأْمِينُهُ تَأْمِينَ الْمَلاَئِكَةِ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ "". وَقَالَ ابْنُ شِهَابٍ وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" آمِينَ "".
பாடம் : 111 (சப்தமிட்டு ஓதப்படும் தொழு கையில் அல்ஃபாத்திஹா அத்தி யாயம் ஓதியபின்) உரத்த குர -ல் இமாம் ‘ஆமீன்’ கூறுவது ‘ஆமீன்’ என்பது பிரார்த்தனையாகும் என அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.56 அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களும் அவர்களைப் பின் பற்றித் தொழுவோரும் பள்ளிவாசலே அதிரும் அளவுக்கு (உரத்த குர-ல்) ‘ஆமீன்’ கூறினர். அபூஹுரைரா (ரலி) அவர்கள் மக்களுக்குத் தொழுவிப்பவரை அழைத்து, “ஆமீன் கூறும் வாய்ப்பு எனக்குத் தவறும்படி செய்துவிடாதீர்” என்று கூறுவார்கள்.57 நாபிஃஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இப்னு உமர் (ரலி) அவர்கள் ‘ஆமீன்’ கூறாமல் இருக்கமாட்டார்கள்; (ஆமீன் கூறும்படி) மக்களுக்கு ஆர்வமூட்டுவார்கள். ‘ஆமீன்’ கூறுவதில் நிறைய நன்மை இருப்பதாக அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்.
780. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுவிப்பவர் (இமாம்), ‘ஆமீன்’ கூறும்போது நீங்களும் ‘ஆமீன்’ (அவ்வாறே ஆகட்டும்) என்று கூறுங்கள். ஏனெனில், யார் ஆமீன் கூறு(ம் நேரமா) வது வானவர்கள் ஆமீன் கூறுகின்ற (நேரத்)துடன் ஒத்தமைந்துவிடுகின்றதோ அவர் அதற்குமுன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆமீன் கூறுபவர்களாக இருந்தார்கள்” என்று இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம் : 10
781. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا قَالَ أَحَدُكُمْ آمِينَ. وَقَالَتِ الْمَلاَئِكَةُ فِي السَّمَاءِ آمِينَ. فَوَافَقَتْ إِحْدَاهُمَا الأُخْرَى، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ "".
பாடம் : 112 ஆமீன் கூறுவதன் சிறப்பு
781. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் ‘ஆமீன்’ என்று கூற, விண்ணுலகில் வானவர்களும் ‘ஆமீன்’ கூற, இரு சாராரின் ஆமீன் கூறலும் ஒரே நேரத்தில் அமைந்துவிட்டால், அவர் அதற்குமுன் செய்த பாவங்கள் மன்னிக்கப் பட்டுவிடும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 10
782. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ سُمَىٍّ، مَوْلَى أَبِي بَكْرٍ عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا قَالَ الإِمَامُ {غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلاَ الضَّالِّينَ} فَقُولُوا آمِينَ. فَإِنَّهُ مَنْ وَافَقَ قَوْلُهُ قَوْلَ الْمَلاَئِكَةِ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ "". تَابَعَهُ مُحَمَّدُ بْنُ عَمْرٍو عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَنُعَيْمٌ الْمُجْمِرُ عَنْ أَبِي هُرَيْرَةَ رضى الله عنه.
பாடம் : 113 பின்பற்றித் தொழுபவர் (மஃமூம்) சப்தமிட்டு ஆமீன் கூறுவது
782. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(தொழுகையில்) இமாம், “ஃகைரில் மஃக்ளூபி அலைஹிம் வலள் ளால்லீன்” என்று ஓதியவுடன் நீங்கள், “ஆமீன் (அவ்வாறே ஆகட்டும்)” என்று சொல்லுங்கள். ஏனெனில், யார் ‘ஆமீன்’ கூறு(ம் நேரமா) வது வானவர்கள் ‘ஆமீன்’ கூறுகின்ற (நேரத்)துடன் ஒத்தமைந்து விடுகின்றதோ அவர் அதற்குமுன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 10
783. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا هَمَّامٌ، عَنِ الأَعْلَمِ ـ وَهْوَ زِيَادٌ ـ عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي بَكْرَةَ، أَنَّهُ انْتَهَى إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَهْوَ رَاكِعٌ، فَرَكَعَ قَبْلَ أَنْ يَصِلَ إِلَى الصَّفِّ، فَذَكَرَ ذَلِكَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ "" زَادَكَ اللَّهُ حِرْصًا وَلاَ تَعُدْ "".
பாடம் : 114 தொழுகை வரிசையில் சேர்வ தற்கு முன்பே ருகூஉ செய்து விட்டால்... (தொழுகை நிறை வேறுமா?)
783. அபூபக்ரா (நுஃபைஉ பின் அல்ஹாரிஸ்-ர-) அவர்கள் கூறியதாவது:

(தொழுகையில்) நபி (ஸல்) அவர்கள் ருகூஉ செய்துகொண்டிருந்தபோது, நான் சென்று வரிசையில் சேர்வதற்கு முன்பே ருகூஉ செய்துவிட்டேன். (பின்னர்) இது குறித்து நான் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் உனது ஆர்வத்தை அதிகப்படுத்து வானாக! இனிமேல் அப்படிச் செய்யாதீர்” என்று கூறினார்கள்.58

அத்தியாயம் : 10
784. حَدَّثَنَا إِسْحَاقُ الْوَاسِطِيُّ، قَالَ حَدَّثَنَا خَالِدٌ، عَنِ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي الْعَلاَءِ، عَنْ مُطَرِّفٍ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، قَالَ صَلَّى مَعَ عَلِيٍّ ـ رضى الله عنه ـ بِالْبَصْرَةِ فَقَالَ ذَكَّرَنَا هَذَا الرَّجُلُ صَلاَةً كُنَّا نُصَلِّيهَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. فَذَكَرَ أَنَّهُ كَانَ يُكَبِّرُ كُلَّمَا رَفَعَ وَكُلَّمَا وَضَعَ.
பாடம் : 115 ருகூஉவின்போது தக்பீரை முழுமையாகக் கூறுவது59 இது குறித்து நபி (ஸல்) அவர்களிட மிருந்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். மா-க் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ள ஹதீஸும் இ(ந்தப் பாடத்)தில் அடங்கும்.
784. முதர்ரிஃப் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

பஸ்ரா நகரில் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களைப் பின்பற்றித் தொழுதார்கள். (தொழுது முடித்தபின் அலீ (ரலி) அவர் களைச் சுட்டிக்காட்டி) “இந்த மனிதர் நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் தொழுத தொழுகையை நினைவூட்டு(ம் வகையில் தொழுவிக்)கிறார்” என்று இம்ரான் (ரலி) அவர்கள் கூறிவிட்டு, “நபி (ஸல்) அவர்கள் நிமிரும்போதும் தாழும்போதும் தக்பீர் கூறுவார்கள்” என்றும் குறிப்பிட்டார்கள்.


அத்தியாயம் : 10
785. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ كَانَ يُصَلِّي بِهِمْ، فَيُكَبِّرُ كُلَّمَا خَفَضَ وَرَفَعَ، فَإِذَا انْصَرَفَ قَالَ إِنِّي لأَشْبَهُكُمْ صَلاَةً بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம் : 115 ருகூஉவின்போது தக்பீரை முழுமையாகக் கூறுவது59 இது குறித்து நபி (ஸல்) அவர்களிட மிருந்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். மா-க் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ள ஹதீஸும் இ(ந்தப் பாடத்)தில் அடங்கும்.
785. அபூசலமா (பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப்-ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூஹுரைரா (ரலி) அவர்கள் மக்களுக்குத் தொழுவித்துவந்தார்கள். அவர்கள் (ஒவ்வொரு முறை) குனியும்போதும் நிமிரும்போதும் தக்பீர் கூறுவார்கள். தொழுகையை முடித்தபின், “நிச்சயமாக நான் உங்களிலேயே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுகாட்டியதைப் போன்றே (மிகச் சரியாக) தொழுவிப்பவன் ஆவேன்” என்று குறிப்பிடுவார்கள்.

அத்தியாயம் : 10
786. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ غَيْلاَنَ بْنِ جَرِيرٍ، عَنْ مُطَرِّفِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ صَلَّيْتُ خَلْفَ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ ـ رضى الله عنه ـ أَنَا وَعِمْرَانُ بْنُ حُصَيْنٍ،، فَكَانَ إِذَا سَجَدَ كَبَّرَ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ كَبَّرَ، وَإِذَا نَهَضَ مِنَ الرَّكْعَتَيْنِ كَبَّرَ، فَلَمَّا قَضَى الصَّلاَةَ أَخَذَ بِيَدِي عِمْرَانُ بْنُ حُصَيْنٍ فَقَالَ قَدْ ذَكَّرَنِي هَذَا صَلاَةَ مُحَمَّدٍ صلى الله عليه وسلم. أَوْ قَالَ لَقَدْ صَلَّى بِنَا صَلاَةَ مُحَمَّدٍ صلى الله عليه وسلم.
பாடம் : 116 சஜ்தாவின்போது தக்பீரை முழுமையாகக் கூறுவது
786. முதர்ரிஃப் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நானும் இம்ரான் பின் ஹுஸைன்

(ரலி) அவர்களும் அலீ பின் அபீதா-ப் அவர்களைப் பின்பற்றித் தொழுதோம். அலீ (ரலி) அவர்கள் சஜ்தா செய்யும்போது தக்பீர் கூறினார்கள்; (சஜ்தாவி-ருந்து) தலையை உயர்த்தும்போதும் தக்பீர் கூறினார்கள். இரண்டாவது ரக்அத்தி-ருந்து எழும்போதும் தக்பீர் கூறினார்கள்.

தொழுகை முடிந்ததும் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் என் கையைப் பிடித்துக்கொண்டு, ‘இவர் எனக்கு முஹம்மத் (ஸல்) அவர்களின் தொழு கையை நினைவூட்டிவிட்டார்’ அல்லது ‘முஹம்மத் (ஸல்) அவர்கள் தொழுத முறைப்படி நமக்குத் தொழுவித்தார்’ என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 10