807. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ حَدَّثَنِي بَكْرُ بْنُ مُضَرَ، عَنْ جَعْفَرٍ، عَنِ ابْنِ هُرْمُزَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَالِكٍ ابْنِ بُحَيْنَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا صَلَّى فَرَّجَ بَيْنَ يَدَيْهِ حَتَّى يَبْدُوَ بَيَاضُ إِبْطَيْهِ. وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي جَعْفَرُ بْنُ رَبِيعَةَ نَحْوَهُ.
பாடம் : 130
சஜ்தா செய்யும்போது புஜங் களை (விலாவுடன் சேர்க்கா மல்) இடைவெளி விட்டு வைக்க வேண்டும்; (தொடை களைவிட்டு வயிற்றைப்) பிரித்து வைக்க வேண்டும்.
807. அப்துல்லாஹ் பின் மா-க் இப்னு புஹைனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தொழும்போது (சஜ்தாவில்) தம்மிரு அக்குள்களின் வெண்மை தென்படும் அளவுக்கு இரு கை (புஜங்)களையும் விரி(த்துவை)ப்பார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 10
807. அப்துல்லாஹ் பின் மா-க் இப்னு புஹைனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தொழும்போது (சஜ்தாவில்) தம்மிரு அக்குள்களின் வெண்மை தென்படும் அளவுக்கு இரு கை (புஜங்)களையும் விரி(த்துவை)ப்பார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 10
808. حَدَّثَنَا الصَّلْتُ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنَا مَهْدِيٌّ، عَنْ وَاصِلٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ، رَأَى رَجُلاً لاَ يُتِمُّ رُكُوعَهُ وَلاَ سُجُودَهُ، فَلَمَّا قَضَى صَلاَتَهُ قَالَ لَهُ حُذَيْفَةُ مَا صَلَّيْتَ ـ قَالَ وَأَحْسِبُهُ قَالَ ـ وَلَوْ مُتَّ مُتَّ عَلَى غَيْرِ سُنَّةِ مُحَمَّدٍ صلى الله عليه وسلم.
பாடம் : 131
சஜ்தாவின்போது கால் விரல்களை ‘கிப்லா’வை நோக்கி வைப்பது
நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததாக அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.65
பாடம் : 132
சஜ்தாவை (நிதானத்துடன்) முழுமையாக நிறைவேற்றா விட்டால் (ஏற்படும் கேடுகள்)
808. அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(தொழுகையில்) ருகூஉவையும் சஜ்தாவையும் (நிதானத்தோடு) முழுமை யாக நிறைவேற்றாத ஒரு மனிதரை ஹுதைஃபா (ரலி) அவர்கள் கண்டார்கள். அவர் தொழுது முடித்ததும் அவரிடம் ஹுதைஃபா (ரலி) அவர்கள், “நீர் தொழவே இல்லை” என்று கூறினார்கள். மேலும், “(இதே நிலையில்) நீர் இறந்து விட்டால், முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிமுறைக்கு மாற்றமான வழியிலேயே இறந்தவராவீர்” என்று அவர்கள் கூறிய தாகவே நான் கருதுகிறேன்.
அத்தியாயம் : 10
808. அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(தொழுகையில்) ருகூஉவையும் சஜ்தாவையும் (நிதானத்தோடு) முழுமை யாக நிறைவேற்றாத ஒரு மனிதரை ஹுதைஃபா (ரலி) அவர்கள் கண்டார்கள். அவர் தொழுது முடித்ததும் அவரிடம் ஹுதைஃபா (ரலி) அவர்கள், “நீர் தொழவே இல்லை” என்று கூறினார்கள். மேலும், “(இதே நிலையில்) நீர் இறந்து விட்டால், முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிமுறைக்கு மாற்றமான வழியிலேயே இறந்தவராவீர்” என்று அவர்கள் கூறிய தாகவே நான் கருதுகிறேன்.
அத்தியாயம் : 10
809. حَدَّثَنَا قَبِيصَةُ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أُمِرَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْضَاءٍ، وَلاَ يَكُفَّ شَعَرًا وَلاَ ثَوْبًا الْجَبْهَةِ وَالْيَدَيْنِ وَالرُّكْبَتَيْنِ وَالرِّجْلَيْنِ.
பாடம் : 133
ஏழு உறுப்புகள் தரையில் படுமாறு சிர வணக்கம் (சஜ்தா) செய்தல்
809. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நெற்றி, இரு (உள்ளங்)கைகள், இரு முழங்கால்கள், இரண்டு கால் (நுனி)கள் ஆகிய ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு சஜ்தா செய்யும்படி நபி (ஸல்) அவர்கள் (இறைவனால்) கட்டளையிடப்பட்டார்கள். (சஜ்தாவில்) தலைமுடியையோ ஆடையையோ (தரையில் படாதவாறு) பிடிக்கக் கூடாது என்றும் அவர்கள் கட்டளையிடப்பட்டார்கள்.66
அத்தியாயம் : 10
809. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நெற்றி, இரு (உள்ளங்)கைகள், இரு முழங்கால்கள், இரண்டு கால் (நுனி)கள் ஆகிய ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு சஜ்தா செய்யும்படி நபி (ஸல்) அவர்கள் (இறைவனால்) கட்டளையிடப்பட்டார்கள். (சஜ்தாவில்) தலைமுடியையோ ஆடையையோ (தரையில் படாதவாறு) பிடிக்கக் கூடாது என்றும் அவர்கள் கட்டளையிடப்பட்டார்கள்.66
அத்தியாயம் : 10
810. حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرٍو، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" أُمِرْنَا أَنْ نَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْظُمٍ وَلاَ نَكُفَّ ثَوْبًا وَلاَ شَعَرًا "".
பாடம் : 133
ஏழு உறுப்புகள் தரையில் படுமாறு சிர வணக்கம் (சஜ்தா) செய்தல்
810. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஏழு உறுப்புக்கள் (தரையில்) படுமாறு சஜ்தா செய்யும்படி நாம் கட்டளையிடப் பட்டுள்ளோம்; ஆடையையோ முடி யையோ (தரையில் படாதவாறு) பிடிக்கக் கூடாதெனவும் நாம் கட்டளையிடப் பட்டுள்ளோம்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 10
810. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஏழு உறுப்புக்கள் (தரையில்) படுமாறு சஜ்தா செய்யும்படி நாம் கட்டளையிடப் பட்டுள்ளோம்; ஆடையையோ முடி யையோ (தரையில் படாதவாறு) பிடிக்கக் கூடாதெனவும் நாம் கட்டளையிடப் பட்டுள்ளோம்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 10
811. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ الْخَطْمِيِّ، حَدَّثَنَا الْبَرَاءُ بْنُ عَازِبٍ ـ وَهْوَ غَيْرُ كَذُوبٍ ـ قَالَ كُنَّا نُصَلِّي خَلْفَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَإِذَا قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ. لَمْ يَحْنِ أَحَدٌ مِنَّا ظَهْرَهُ حَتَّى يَضَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم جَبْهَتَهُ عَلَى الأَرْضِ.
பாடம் : 133
ஏழு உறுப்புகள் தரையில் படுமாறு சிர வணக்கம் (சஜ்தா) செய்தல்
811. அப்துல்லாஹ் பின் யஸீத் அல்கத்மீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உண்மைக்குப் புறம்பாகப் பேசாதவ ரான பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் எமக்கு (பின்வருமாறு) அறிவித்தார்கள்:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றித்) தொழுதுகொண்டிருந்தோம். அவர்கள் ‘சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ்’ (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்) என்று கூறியதும், அவர்கள் (சஜ்தாவிற்குச் சென்று) நெற்றியைத் தரையில் வைக்காத வரை எங்களில் யாரும் (சஜ்தாவிற்காக) தமது முதுகை வளைக்கமாட்டார்கள்.
அத்தியாயம் : 10
811. அப்துல்லாஹ் பின் யஸீத் அல்கத்மீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உண்மைக்குப் புறம்பாகப் பேசாதவ ரான பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் எமக்கு (பின்வருமாறு) அறிவித்தார்கள்:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றித்) தொழுதுகொண்டிருந்தோம். அவர்கள் ‘சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ்’ (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்) என்று கூறியதும், அவர்கள் (சஜ்தாவிற்குச் சென்று) நெற்றியைத் தரையில் வைக்காத வரை எங்களில் யாரும் (சஜ்தாவிற்காக) தமது முதுகை வளைக்கமாட்டார்கள்.
அத்தியாயம் : 10
812. حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، قَالَ حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، رضى الله عنهما قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أُمِرْتُ أَنْ أَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْظُمٍ عَلَى الْجَبْهَةِ ـ وَأَشَارَ بِيَدِهِ عَلَى أَنْفِهِ ـ وَالْيَدَيْنِ، وَالرُّكْبَتَيْنِ وَأَطْرَافِ الْقَدَمَيْنِ، وَلاَ نَكْفِتَ الثِّيَابَ وَالشَّعَرَ "".
பாடம் : 134
மூக்கு (தரையில்) படுமாறு சஜ்தா செய்தல்
812. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நெற்றி, இரு (உள்ளங்)கைகள், இரு முழங்கால்கள், இரு பாதங்களின் நுனிகள் ஆகிய ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு சஜ்தா செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்.- (நெற்றியைக் குறிப்பிடும்போது) தமது மூக்கை நோக்கி தமது கையால் (மூக்கு உட்பட என்பது போல்) சைகை செய்தார்கள்- தொடர்ந்து “நாம் ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) பிடிக்கக் கூடாதெனவும் கட்டளையிடப்பட்டுள்ளோம்” என்றும் கூறினார்கள்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 10
812. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நெற்றி, இரு (உள்ளங்)கைகள், இரு முழங்கால்கள், இரு பாதங்களின் நுனிகள் ஆகிய ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு சஜ்தா செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்.- (நெற்றியைக் குறிப்பிடும்போது) தமது மூக்கை நோக்கி தமது கையால் (மூக்கு உட்பட என்பது போல்) சைகை செய்தார்கள்- தொடர்ந்து “நாம் ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) பிடிக்கக் கூடாதெனவும் கட்டளையிடப்பட்டுள்ளோம்” என்றும் கூறினார்கள்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 10
813. حَدَّثَنَا مُوسَى، قَالَ حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ انْطَلَقْتُ إِلَى أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ فَقُلْتُ أَلاَ تَخْرُجُ بِنَا إِلَى النَّخْلِ نَتَحَدَّثْ فَخَرَجَ. فَقَالَ قُلْتُ حَدِّثْنِي مَا، سَمِعْتَ مِنَ النَّبِيِّ، صلى الله عليه وسلم فِي لَيْلَةِ الْقَدْرِ. قَالَ اعْتَكَفَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَشْرَ الأُوَلِ مِنْ رَمَضَانَ، وَاعْتَكَفْنَا مَعَهُ، فَأَتَاهُ جِبْرِيلُ فَقَالَ إِنَّ الَّذِي تَطْلُبُ أَمَامَكَ. فَاعْتَكَفَ الْعَشْرَ الأَوْسَطَ، فَاعْتَكَفْنَا مَعَهُ، فَأَتَاهُ جِبْرِيلُ فَقَالَ إِنَّ الَّذِي تَطْلُبُ أَمَامَكَ. فَقَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم خَطِيبًا صَبِيحَةَ عِشْرِينَ مِنْ رَمَضَانَ فَقَالَ "" مَنْ كَانَ اعْتَكَفَ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلْيَرْجِعْ، فَإِنِّي أُرِيتُ لَيْلَةَ الْقَدْرِ، وَإِنِّي نُسِّيتُهَا، وَإِنَّهَا فِي الْعَشْرِ الأَوَاخِرِ فِي وِتْرٍ، وَإِنِّي رَأَيْتُ كَأَنِّي أَسْجُدُ فِي طِينٍ وَمَاءٍ "". وَكَانَ سَقْفُ الْمَسْجِدِ جَرِيدَ النَّخْلِ وَمَا نَرَى فِي السَّمَاءِ شَيْئًا، فَجَاءَتْ قَزْعَةٌ فَأُمْطِرْنَا، فَصَلَّى بِنَا النَّبِيُّ صلى الله عليه وسلم حَتَّى رَأَيْتُ أَثَرَ الطِّينِ وَالْمَاءِ عَلَى جَبْهَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَأَرْنَبَتِهِ تَصْدِيقَ رُؤْيَاهُ.
பாடம் : 135
களிமண்ணில் சஜ்தா செய்யும் போதும் மூக்குத் தரையில் படுமாறு சஜ்தா செய்வது
813. அபூசலமா (பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப்-ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் சென்று, “எங்களுடன் தாங்கள் பேரீச்சந்தோட்டத்திற்கு வரக் கூடாதா? நாம் (அங்கு சென்று) பேசிக்கொண்டி ருக்கலாமே!” என்று கூறினேன். அவ்வாறே அவர்கள் புறப்பட்டுவந்தார்கள். (அவர்களிடம்) நான், “லைலத்துல் கத்ர் (எனும் மகத்தான இரவு) குறித்து நீங்கள் நபி (ஸல்) அவர்களிடம் செவியுற்றதை எனக்குக் கூறுங்கள்” என்றேன். அப்போது அபூசயீத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தின் முதல் பத்து நாட்கள் ‘இஃதிகாஃப்’ இருந்தார்கள். அவர்களுடன் நாங்களும் இஃதிகாஃப் இருந்தோம். அப்போது அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து, “நீங்கள் தேடக்கூடிய (லைலத்துல் கத்ர் ஆன)து உங்களுக்கு எதிர்வரும் நாட்களில் உள்ளது” என்றார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் நடுப் பத்து நாட்கள் ‘இஃதிகாஃப்’ இருந்தார்கள். நாங்களும் அவர்களுடன் இஃதிகாஃப் இருந்தோம்.
அவர்களிடம் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து “நீங்கள் தேடக்கூடியது உங்களுக்கு எதிர்வரும் நாட்களில் உள்ளது” என்று கூறினார்கள்.
ரமளான் இருபதாம் நாள் காலையில் நபி (ஸல்) அவர்கள் (எங்களிடையே) சொற்பொழிவாற்றினார்கள். அதில் (பின்வருமாறு) குறிப்பிட்டார்கள்:
யார் நபியுடன் இஃதிகாஃப் இருந்தார் களோ அவர்கள் (பள்ளிவாசலுக்கே) திரும்பவும் வரட்டும். ஏனெனில், லைலத் துல் கத்ர் இரவு பற்றி எனக்கு(க் கனவில்) காட்டப்பட்டது; அதை நான் மறக்கும்படி செய்யப்பட்டேன். நிச்சயமாக அது இறுதிப் பத்து நாட்களில் ஒற்றைப்படையான நாளில் உள்ளது. நான் ஈரமான களி மண்ணில் சஜ்தா செய்வதைப் போன்று (கனவு) கண்டேன்.
(அன்று மஸ்ஜிதுந் நபவீ) பள்ளி
வாச-ன் கூரை, பேரீச்ச மட்டையால் வேயப்பட்டிருந்தது. வானத்தில் (மழைக் கான அறிகுறி) எதையும் நாங்கள் காணவில்லை. (இவ்வாறிருக்க) திடீரென ஒரு மேகம் வந்து மழை பொழிந்தது. அன்று எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய நெற்றியின் மீதும் மூக்கு ஓரத்திலும் ஈரமான களிமண் படிந்திருந்ததைக் கண்டேன். இது அவர்களது கனவை மெய்ப்படுத்துவதாக அமைந்தது.
அத்தியாயம் : 10
813. அபூசலமா (பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப்-ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் சென்று, “எங்களுடன் தாங்கள் பேரீச்சந்தோட்டத்திற்கு வரக் கூடாதா? நாம் (அங்கு சென்று) பேசிக்கொண்டி ருக்கலாமே!” என்று கூறினேன். அவ்வாறே அவர்கள் புறப்பட்டுவந்தார்கள். (அவர்களிடம்) நான், “லைலத்துல் கத்ர் (எனும் மகத்தான இரவு) குறித்து நீங்கள் நபி (ஸல்) அவர்களிடம் செவியுற்றதை எனக்குக் கூறுங்கள்” என்றேன். அப்போது அபூசயீத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தின் முதல் பத்து நாட்கள் ‘இஃதிகாஃப்’ இருந்தார்கள். அவர்களுடன் நாங்களும் இஃதிகாஃப் இருந்தோம். அப்போது அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து, “நீங்கள் தேடக்கூடிய (லைலத்துல் கத்ர் ஆன)து உங்களுக்கு எதிர்வரும் நாட்களில் உள்ளது” என்றார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் நடுப் பத்து நாட்கள் ‘இஃதிகாஃப்’ இருந்தார்கள். நாங்களும் அவர்களுடன் இஃதிகாஃப் இருந்தோம்.
அவர்களிடம் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து “நீங்கள் தேடக்கூடியது உங்களுக்கு எதிர்வரும் நாட்களில் உள்ளது” என்று கூறினார்கள்.
ரமளான் இருபதாம் நாள் காலையில் நபி (ஸல்) அவர்கள் (எங்களிடையே) சொற்பொழிவாற்றினார்கள். அதில் (பின்வருமாறு) குறிப்பிட்டார்கள்:
யார் நபியுடன் இஃதிகாஃப் இருந்தார் களோ அவர்கள் (பள்ளிவாசலுக்கே) திரும்பவும் வரட்டும். ஏனெனில், லைலத் துல் கத்ர் இரவு பற்றி எனக்கு(க் கனவில்) காட்டப்பட்டது; அதை நான் மறக்கும்படி செய்யப்பட்டேன். நிச்சயமாக அது இறுதிப் பத்து நாட்களில் ஒற்றைப்படையான நாளில் உள்ளது. நான் ஈரமான களி மண்ணில் சஜ்தா செய்வதைப் போன்று (கனவு) கண்டேன்.
(அன்று மஸ்ஜிதுந் நபவீ) பள்ளி
வாச-ன் கூரை, பேரீச்ச மட்டையால் வேயப்பட்டிருந்தது. வானத்தில் (மழைக் கான அறிகுறி) எதையும் நாங்கள் காணவில்லை. (இவ்வாறிருக்க) திடீரென ஒரு மேகம் வந்து மழை பொழிந்தது. அன்று எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய நெற்றியின் மீதும் மூக்கு ஓரத்திலும் ஈரமான களிமண் படிந்திருந்ததைக் கண்டேன். இது அவர்களது கனவை மெய்ப்படுத்துவதாக அமைந்தது.
அத்தியாயம் : 10
814. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، قَالَ أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ كَانَ النَّاسُ يُصَلُّونَ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَهُمْ عَاقِدُو أُزْرِهِمْ مِنَ الصِّغَرِ عَلَى رِقَابِهِمْ فَقِيلَ لِلنِّسَاءِ لاَ تَرْفَعْنَ رُءُوسَكُنَّ حَتَّى يَسْتَوِيَ الرِّجَالُ جُلُوسًا.
பாடம் : 136
(தொழுவதற்குமுன்) ஆடையை முடிச்சிட்டு இறுக்கமாகக் கட்டிக் கொள்வதும், மறைக்க வேண்டிய உறுப்புகள் (தொழும்போது) வெளியே தெரிந்துவிடும் என அஞ்சும்போது ஆடையை அணைத்துப் பிடித்துக்கொள்வதும்
814. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபி (ஸல்) அவர்கள் காலத்து) மக்கள் தமது கீழாடை சிறியதாக இருந்ததால் அதைத் தம் பிடரிகள்மீது முடிந்துகொண்டு நபி (ஸல்) அவர்களுடன் தொழுவார்கள். எனவேதான், “ஆண்கள் அமர்வில் நேராக உட்காராத வரை நீங்கள் உங்கள் தலையை (சஜ்தாவி-ருந்து) உயர்த்த வேண்டாம்” எனப் பெண்களுக்குக் கூறப் பட்டிருந்தது.67
அத்தியாயம் : 10
814. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபி (ஸல்) அவர்கள் காலத்து) மக்கள் தமது கீழாடை சிறியதாக இருந்ததால் அதைத் தம் பிடரிகள்மீது முடிந்துகொண்டு நபி (ஸல்) அவர்களுடன் தொழுவார்கள். எனவேதான், “ஆண்கள் அமர்வில் நேராக உட்காராத வரை நீங்கள் உங்கள் தலையை (சஜ்தாவி-ருந்து) உயர்த்த வேண்டாம்” எனப் பெண்களுக்குக் கூறப் பட்டிருந்தது.67
அத்தியாயம் : 10
815. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ ـ وَهْوَ ابْنُ زَيْدٍ ـ عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ أُمِرَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْظُمٍ، وَلاَ يَكُفَّ ثَوْبَهُ وَلاَ شَعَرَهُ.
பாடம் : 137
(சஜ்தாவின்போது தரையில் படாதவாறு) தலைமுடியைத் தடுக்கக் கூடாது.
815. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு சஜ்தா செய்யும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடப்பட்டார்கள்; தமது ஆடையோ முடியோ (தரையில் படாத வாறு) பிடிக்கக் கூடாதெனவும் கட்டளை யிடப்பட்டார்கள்.
அத்தியாயம் : 10
815. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு சஜ்தா செய்யும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடப்பட்டார்கள்; தமது ஆடையோ முடியோ (தரையில் படாத வாறு) பிடிக்கக் கூடாதெனவும் கட்டளை யிடப்பட்டார்கள்.
அத்தியாயம் : 10
816. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عَمْرٍو، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" أُمِرْتُ أَنْ أَسْجُدَ عَلَى سَبْعَةٍ، لاَ أَكُفُّ شَعَرًا وَلاَ ثَوْبًا "".
பாடம் : 138
தொழும்போது (தரையில் படாத வாறு) ஆடையைப் பிடிக்கக் கூடாது.
816. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு சஜ்தா செய்யும்படி நான் கட்டளையிடப் பட்டுள்ளேன். ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) பிடிக்கக் கூடாதென வும் கட்டளையிடப்பட்டுள்ளேன்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 10
816. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு சஜ்தா செய்யும்படி நான் கட்டளையிடப் பட்டுள்ளேன். ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) பிடிக்கக் கூடாதென வும் கட்டளையிடப்பட்டுள்ளேன்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 10
817. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، قَالَ حَدَّثَنِي مَنْصُورٌ، عَنْ مُسْلِمٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّهَا قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُكْثِرُ أَنْ يَقُولَ فِي رُكُوعِهِ وَسُجُودِهِ "" سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ، اللَّهُمَّ اغْفِرْ لِي "" يَتَأَوَّلُ الْقُرْآنَ.
பாடம் : 139
சஜ்தாவில் (இறையைத்) துதிப்ப தும் பிரார்த்திப்பதும்
817. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் குர்ஆனின் (110:3ஆவது வசனத்தின்) கட்டளையைச் செயல்படுத்தும் வகையில், தமது (தொழு கையின்) ருகூஉவிலும் சஜ்தாவிலும் அதிகமாக ‘சுப்ஹானக்கல்லாஹும்ம ரப்பனா வ பிஹம்திக்க, அல்லாஹும் மஃக்ஃபிர்லீ’ (இறைவா! எங்கள் அதி பதியே! நீ தூயவன்; உன்னைப் போற்றிப் புகழ்கின்றோம். இறைவா! என்னை மன்னிப்பாயாக!) என்று கூறிவந்தார்கள்.68
அத்தியாயம் : 10
817. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் குர்ஆனின் (110:3ஆவது வசனத்தின்) கட்டளையைச் செயல்படுத்தும் வகையில், தமது (தொழு கையின்) ருகூஉவிலும் சஜ்தாவிலும் அதிகமாக ‘சுப்ஹானக்கல்லாஹும்ம ரப்பனா வ பிஹம்திக்க, அல்லாஹும் மஃக்ஃபிர்லீ’ (இறைவா! எங்கள் அதி பதியே! நீ தூயவன்; உன்னைப் போற்றிப் புகழ்கின்றோம். இறைவா! என்னை மன்னிப்பாயாக!) என்று கூறிவந்தார்கள்.68
அத்தியாயம் : 10
818. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، أَنَّ مَالِكَ بْنَ الْحُوَيْرِثِ، قَالَ لأَصْحَابِهِ أَلاَ أُنَبِّئُكُمْ صَلاَةَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ وَذَاكَ فِي غَيْرِ حِينِ صَلاَةٍ، فَقَامَ، ثُمَّ رَكَعَ فَكَبَّرَ ثُمَّ رَفَعَ رَأْسَهُ، فَقَامَ هُنَيَّةً، ثُمَّ سَجَدَ ثُمَّ رَفَعَ رَأْسَهُ هُنَيَّةً، فَصَلَّى صَلاَةَ عَمْرِو بْنِ سَلِمَةَ شَيْخِنَا هَذَا. قَالَ أَيُّوبُ كَانَ يَفْعَلُ شَيْئًا لَمْ أَرَهُمْ يَفْعَلُونَهُ، كَانَ يَقْعُدُ فِي الثَّالِثَةِ وَالرَّابِعَةِ.
பாடம் : 140
இரு சஜ்தாக்களுக்கு இடையே (சிறிது நேரம்) அமர்வது
818. அபூகிலாபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மா-க் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் தம் தோழர்களிடம், “அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் எவ்வாறு தொழுதார்கள் என்பதை உங்களுக்கு நான் (செய்து) காட்டட்டுமா?” என்று கேட்டார் கள். -அது எந்தத் தொழுகையின் நேரமாகவும் இருக்கவில்லை.-
அவர்கள் (முதலில்) நின்றார்கள். பின்னர் தக்பீர் கூறியவாறு ருகூஉ செய்தார்கள். பிறகு தமது தலையை உயர்த்தி சிறிது நேரம் (அசையாமல்) நின்றார்கள். பின்னர் (முதல்) சஜ்தா செய்தார்கள். பிறகு தமது தலையை உயர்த்தி சிறிது நேரம் (அமர்ந்து) இருந்தார்கள். (சுருங்கச் சொன்னால்) இதோ நம்முடைய இந்தப் பெரியவர் அம்ர் பின் சலிமா (ரஹ்) அவர்கள் தொழுவதைப் போன்றே மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் தொழுதுகாட்டினார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான) அய்யூப் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்:
அ(ந்தப் பெரிய)வர் (தொழும்போது) ஒரு முறையைக் கையாள்வார். ஆனால், மக்கள் அவ்வாறு செய்வதை நான் கண்ட தில்லை. அவர் மூன்றாவது ரக்அத்தில், அல்லது நான்காவது ரக்அத்தில் உட்கார்ந்துவிட்டே எழுபவராக இருந்தார்.
அத்தியாயம் : 10
818. அபூகிலாபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மா-க் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் தம் தோழர்களிடம், “அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் எவ்வாறு தொழுதார்கள் என்பதை உங்களுக்கு நான் (செய்து) காட்டட்டுமா?” என்று கேட்டார் கள். -அது எந்தத் தொழுகையின் நேரமாகவும் இருக்கவில்லை.-
அவர்கள் (முதலில்) நின்றார்கள். பின்னர் தக்பீர் கூறியவாறு ருகூஉ செய்தார்கள். பிறகு தமது தலையை உயர்த்தி சிறிது நேரம் (அசையாமல்) நின்றார்கள். பின்னர் (முதல்) சஜ்தா செய்தார்கள். பிறகு தமது தலையை உயர்த்தி சிறிது நேரம் (அமர்ந்து) இருந்தார்கள். (சுருங்கச் சொன்னால்) இதோ நம்முடைய இந்தப் பெரியவர் அம்ர் பின் சலிமா (ரஹ்) அவர்கள் தொழுவதைப் போன்றே மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் தொழுதுகாட்டினார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான) அய்யூப் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்:
அ(ந்தப் பெரிய)வர் (தொழும்போது) ஒரு முறையைக் கையாள்வார். ஆனால், மக்கள் அவ்வாறு செய்வதை நான் கண்ட தில்லை. அவர் மூன்றாவது ரக்அத்தில், அல்லது நான்காவது ரக்அத்தில் உட்கார்ந்துவிட்டே எழுபவராக இருந்தார்.
அத்தியாயம் : 10
819. قَالَ فَأَتَيْنَا النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَقَمْنَا عِنْدَهُ فَقَالَ " لَوْ رَجَعْتُمْ إِلَى أَهْلِيكُمْ صَلُّوا صَلاَةَ كَذَا فِي حِينِ كَذَا، صَلُّوا صَلاَةَ كَذَا فِي حِينِ كَذَا، فَإِذَا حَضَرَتِ الصَّلاَةُ فَلْيُؤَذِّنْ أَحَدُكُمْ وَلْيَؤُمَّكُمْ أَكْبَرُكُمْ "
பாடம் : 140
இரு சஜ்தாக்களுக்கு இடையே (சிறிது நேரம்) அமர்வது
819. மா-க் பின் அல்ஹுவைரிஸ்
(ரலி) அவர்கள் கூறியதாவது:
(பனூ லைஸ் இளைஞர்களான) நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று (இருபது நாட்கள்) அவர்களிடம் தங்கி னோம். (நாங்கள் ஊர் திரும்பும்போது) நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் உங்கள் குடும்பத்தாரிடம் சென்றதும் இன்ன தொழு கையை இன்ன நேரத்தில் தொழுங்கள்; இன்ன தொழுகையை இன்ன நேரத்தில் தொழுங்கள். தொழுகை (நேரம்) வந்துவிட்டால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும்! உங்களில் (வயதில்) பெரியவர் உங்களுக்குத் தொழுகை நடத்தட்டும்!” என்று கூறினார்கள்.69
அத்தியாயம் : 10
819. மா-க் பின் அல்ஹுவைரிஸ்
(ரலி) அவர்கள் கூறியதாவது:
(பனூ லைஸ் இளைஞர்களான) நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று (இருபது நாட்கள்) அவர்களிடம் தங்கி னோம். (நாங்கள் ஊர் திரும்பும்போது) நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் உங்கள் குடும்பத்தாரிடம் சென்றதும் இன்ன தொழு கையை இன்ன நேரத்தில் தொழுங்கள்; இன்ன தொழுகையை இன்ன நேரத்தில் தொழுங்கள். தொழுகை (நேரம்) வந்துவிட்டால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும்! உங்களில் (வயதில்) பெரியவர் உங்களுக்குத் தொழுகை நடத்தட்டும்!” என்று கூறினார்கள்.69
அத்தியாயம் : 10
820. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، قَالَ حَدَّثَنَا أَبُو أَحْمَدَ، مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الزُّبَيْرِيُّ قَالَ حَدَّثَنَا مِسْعَرٌ، عَنِ الْحَكَمِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنِ الْبَرَاءِ، قَالَ كَانَ سُجُودُ النَّبِيِّ صلى الله عليه وسلم وَرُكُوعُهُ، وَقُعُودُهُ بَيْنَ السَّجْدَتَيْنِ قَرِيبًا مِنَ السَّوَاءِ.
பாடம் : 140
இரு சஜ்தாக்களுக்கு இடையே (சிறிது நேரம்) அமர்வது
820. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களது ருகூஉ, சஜ்தா, இரு சஜ்தாக்களுக்கு இடையில் அவர்கள் அமர்வது ஆகியன ஏறக்குறைய ஒரே (கால) அளவில் அமைந்திருந்தன.
அத்தியாயம் : 10
820. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களது ருகூஉ, சஜ்தா, இரு சஜ்தாக்களுக்கு இடையில் அவர்கள் அமர்வது ஆகியன ஏறக்குறைய ஒரே (கால) அளவில் அமைந்திருந்தன.
அத்தியாயம் : 10
821. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ إِنِّي لاَ آلُو أَنْ أُصَلِّيَ بِكُمْ كَمَا رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يُصَلِّي بِنَا. قَالَ ثَابِتٌ كَانَ أَنَسٌ يَصْنَعُ شَيْئًا لَمْ أَرَكُمْ تَصْنَعُونَهُ، كَانَ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ قَامَ حَتَّى يَقُولَ الْقَائِلُ قَدْ نَسِيَ. وَبَيْنَ السَّجْدَتَيْنِ حَتَّى يَقُولَ الْقَائِلُ قَدْ نَسِيَ.
பாடம் : 140
இரு சஜ்தாக்களுக்கு இடையே (சிறிது நேரம்) அமர்வது
821. ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள், “எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள்
தொழுவித்ததைப் பார்த்ததைப் போன்று நான் உங்களுக்குத் தொழுவிப்பதில் எந்தக் குறையும் வைக்கமாட்டேன்” என்று கூறினார்கள். அனஸ் (ரலி) அவர்கள் (தொழுவித்தபோது) ஒன்னறச் செய்தார்கள். ஆனால், அதை நீங்கள் செய்வதை நான் பார்த்ததில்லை.
அனஸ் (ரலி) அவர்கள் ருகூஉவி-ருந்து தலையை உயர்த்தி (நீண்ட நேரம்) நிற்பார்கள். எந்த அளவுக்கென்றால் ‘அனஸ் (ரலி) அவர்கள் மறந்துவிட்டார் கள்’ என்று ஒருவர் கூறிவிடலாம். இரு சஜ்தாக்களுக்கு இடையிலும் அவர்கள் (நீண்ட நேரம் அமர்ந்திருப்பார்கள்). எந்த அளவுக்கென்றால் ‘அனஸ் (ரலி) அவர்கள் மறந்துவிட்டார்கள்’ என்று ஒருவர் கூறிவிடலாம்.
அத்தியாயம் : 10
821. ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள், “எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள்
தொழுவித்ததைப் பார்த்ததைப் போன்று நான் உங்களுக்குத் தொழுவிப்பதில் எந்தக் குறையும் வைக்கமாட்டேன்” என்று கூறினார்கள். அனஸ் (ரலி) அவர்கள் (தொழுவித்தபோது) ஒன்னறச் செய்தார்கள். ஆனால், அதை நீங்கள் செய்வதை நான் பார்த்ததில்லை.
அனஸ் (ரலி) அவர்கள் ருகூஉவி-ருந்து தலையை உயர்த்தி (நீண்ட நேரம்) நிற்பார்கள். எந்த அளவுக்கென்றால் ‘அனஸ் (ரலி) அவர்கள் மறந்துவிட்டார் கள்’ என்று ஒருவர் கூறிவிடலாம். இரு சஜ்தாக்களுக்கு இடையிலும் அவர்கள் (நீண்ட நேரம் அமர்ந்திருப்பார்கள்). எந்த அளவுக்கென்றால் ‘அனஸ் (ரலி) அவர்கள் மறந்துவிட்டார்கள்’ என்று ஒருவர் கூறிவிடலாம்.
அத்தியாயம் : 10
822. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" اعْتَدِلُوا فِي السُّجُودِ، وَلاَ يَبْسُطْ أَحَدُكُمْ ذِرَاعَيْهِ انْبِسَاطَ الْكَلْبِ "".
பாடம் : 141
சஜ்தாவில் கைகளைப் பரப்பி வைக்கலாகாது.
நபி (ஸல்) அவர்கள் (தொழுகையில்) தம் கைகளைப் பரப்பி வைக்காமலும் அவற்றை (விலாவுடன்) ஒடுக்கி வைக்காம லும் சஜ்தா செய்தார்கள் என அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
822. நபி (ஸல்) அவர்கள் கூறினாôர்கள்:
சஜ்தாவில் நடுநிலையைக் கையாளுங்கள். உங்களில் யாரும், நாய் பரப்பிவைப்பதைப் போன்று தம் கைகளைப் பரப்பி வைக்க வேண்டாம்.
இதை அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 10
822. நபி (ஸல்) அவர்கள் கூறினாôர்கள்:
சஜ்தாவில் நடுநிலையைக் கையாளுங்கள். உங்களில் யாரும், நாய் பரப்பிவைப்பதைப் போன்று தம் கைகளைப் பரப்பி வைக்க வேண்டாம்.
இதை அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 10
823. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، قَالَ أَخْبَرَنَا هُشَيْمٌ، قَالَ أَخْبَرَنَا خَالِدٌ الْحَذَّاءُ، عَنْ أَبِي قِلاَبَةَ، قَالَ أَخْبَرَنَا مَالِكُ بْنُ الْحُوَيْرِثِ اللَّيْثِيُّ، أَنَّهُ رَأَى النَّبِيَّ صلى الله عليه وسلم يُصَلِّي، فَإِذَا كَانَ فِي وِتْرٍ مِنْ صَلاَتِهِ لَمْ يَنْهَضْ حَتَّى يَسْتَوِيَ قَاعِدًا.
பாடம் : 142
தொழுகையில் ஒற்றைப்படையான ரக்அத்களை முடித்ததும் நிமிர்ந்து உட்கார்ந்துவிட்டுப் பிறகு எழுவது70
823. மா-க் பின் அல்ஹுவைரிஸ் அல்லைஸீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தொழுவதை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் தமது தொழு கையின் ஒற்றைப்படையான ரக்அத்களின் போது நிமிர்ந்து உட்காராமல் (அடுத்த ரக்அத்திற்காக) எழமாட்டார்கள்.
அத்தியாயம் : 10
823. மா-க் பின் அல்ஹுவைரிஸ் அல்லைஸீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தொழுவதை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் தமது தொழு கையின் ஒற்றைப்படையான ரக்அத்களின் போது நிமிர்ந்து உட்காராமல் (அடுத்த ரக்அத்திற்காக) எழமாட்டார்கள்.
அத்தியாயம் : 10
824. حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، قَالَ حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، قَالَ جَاءَنَا مَالِكُ بْنُ الْحُوَيْرِثِ فَصَلَّى بِنَا فِي مَسْجِدِنَا هَذَا فَقَالَ إِنِّي لأُصَلِّي بِكُمْ، وَمَا أُرِيدُ الصَّلاَةَ، وَلَكِنْ أُرِيدُ أَنْ أُرِيَكُمْ كَيْفَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يُصَلِّي. قَالَ أَيُّوبُ فَقُلْتُ لأَبِي قِلاَبَةَ وَكَيْفَ كَانَتْ صَلاَتُهُ قَالَ مِثْلَ صَلاَةِ شَيْخِنَا هَذَا ـ يَعْنِي عَمْرَو بْنَ سَلِمَةَ ـ قَالَ أَيُّوبُ وَكَانَ ذَلِكَ الشَّيْخُ يُتِمُّ التَّكْبِيرَ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ عَنِ السَّجْدَةِ الثَّانِيَةِ جَلَسَ وَاعْتَمَدَ عَلَى الأَرْضِ، ثُمَّ قَامَ.
பாடம் : 143
ஒரு ரக்அத்தை முடித்து (அடுத்த ரக்அத்திற்காக) எழும் போது பூமியில் கைகளை ஊன்றி எழ வேண்டுமா?
824. அபூகிலாபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(பஸ்ராவி-ருந்த) எங்களிடம் மா-க் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் வந்து, “உங்களுக்கு நான் தொழுகை நடத்தப்போகிறேன். (கடமையான) தொழுகையை (இப்போது தொழுவது) என் நோக்கமன்று. நபி (ஸல்) அவர்களை எவ்வாறு நான் தொழக் கண்டேனோ அவ்வாறு உங்களுக்கு நான் தொழுது காட்டுவதே என் நோக்கம்” என்று கூறிவிட்டு, எங்களது இப்பள்ளிவாச-ல் எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள்.
இதன் அறிவிப்பாளரான அய்யூப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
அப்போது நான் அபூகிலாபா (ரஹ்) அவர்களிடம், “மா-க் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது?” என்று கேட்டேன். அதற்கு அபூகிலாபா (ரஹ்) அவர்கள், “இதோ இந்தப் பெரியவர்-அம்ர் பின் சலிமா அவர்கள் -தொழுவதைப் போன்றிருந்தது” என்று பதிலளித்தார்கள்.
அய்யூப் (ரஹ்) அவர்கள் தொடர்ந்து கூறினார்கள்:
அந்தப் பெரியவர் தக்பீரை முழுமை யாகக் கூறுவார். இரண்டாவது சஜ்தாவிலி ருந்து எழும்போது அமர்ந்துவிட்டு, பூமியில் (கைகளை) ஊன்றி பின்பு எழுவார்.
அத்தியாயம் : 10
824. அபூகிலாபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(பஸ்ராவி-ருந்த) எங்களிடம் மா-க் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் வந்து, “உங்களுக்கு நான் தொழுகை நடத்தப்போகிறேன். (கடமையான) தொழுகையை (இப்போது தொழுவது) என் நோக்கமன்று. நபி (ஸல்) அவர்களை எவ்வாறு நான் தொழக் கண்டேனோ அவ்வாறு உங்களுக்கு நான் தொழுது காட்டுவதே என் நோக்கம்” என்று கூறிவிட்டு, எங்களது இப்பள்ளிவாச-ல் எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள்.
இதன் அறிவிப்பாளரான அய்யூப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
அப்போது நான் அபூகிலாபா (ரஹ்) அவர்களிடம், “மா-க் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது?” என்று கேட்டேன். அதற்கு அபூகிலாபா (ரஹ்) அவர்கள், “இதோ இந்தப் பெரியவர்-அம்ர் பின் சலிமா அவர்கள் -தொழுவதைப் போன்றிருந்தது” என்று பதிலளித்தார்கள்.
அய்யூப் (ரஹ்) அவர்கள் தொடர்ந்து கூறினார்கள்:
அந்தப் பெரியவர் தக்பீரை முழுமை யாகக் கூறுவார். இரண்டாவது சஜ்தாவிலி ருந்து எழும்போது அமர்ந்துவிட்டு, பூமியில் (கைகளை) ஊன்றி பின்பு எழுவார்.
அத்தியாயம் : 10
825. حَدَّثَنَا يَحْيَى بْنُ صَالِحٍ، قَالَ حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، عَنْ سَعِيدِ بْنِ الْحَارِثِ، قَالَ صَلَّى لَنَا أَبُو سَعِيدٍ فَجَهَرَ بِالتَّكْبِيرِ حِينَ رَفَعَ رَأْسَهُ مِنَ السُّجُودِ، وَحِينَ سَجَدَ، وَحِينَ رَفَعَ، وَحِينَ قَامَ مِنَ الرَّكْعَتَيْنِ وَقَالَ هَكَذَا رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم.
பாடம் : 144
இரண்டாவது சஜ்தாவி-ருந்து (அடுத்த ரக்அத்திற்காக) எழும் போதே ‘தக்பீர்’ கூற வேண் டும்.71
இரண்டாவது சஜ்தாவி-ருந்து எழும் போதே அப்துல்லாஹ் பின் அஸஸுபைர் (ரலி) அவர்கள் ‘தக்பீர்’ கூறுவார்கள்.
825. சயீத் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) எங்களுக்கு அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் தொழுவித்தார்கள். அப்போது அவர்கள் சஜ்தாவி-ருந்து தமது தலையை உயர்த்தியபோதும் சஜ்தா செய்யும்போதும் (சஜ்தாவி-ருந்து தமது தலையை) உயர்த்தியபோதும் இரண்டாவது ரக்அத்தி-ருந்து எழுந்தபோதும் சப்தமாக ‘தக்பீர்’ கூறினார்கள்.
(அது குறித்து அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டபோது) “இவ்வாறே நபி (ஸல்) அவர்களை நான் (தொழக்)கண்டேன்” என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 10
825. சயீத் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) எங்களுக்கு அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் தொழுவித்தார்கள். அப்போது அவர்கள் சஜ்தாவி-ருந்து தமது தலையை உயர்த்தியபோதும் சஜ்தா செய்யும்போதும் (சஜ்தாவி-ருந்து தமது தலையை) உயர்த்தியபோதும் இரண்டாவது ரக்அத்தி-ருந்து எழுந்தபோதும் சப்தமாக ‘தக்பீர்’ கூறினார்கள்.
(அது குறித்து அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டபோது) “இவ்வாறே நபி (ஸல்) அவர்களை நான் (தொழக்)கண்டேன்” என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 10
826. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، قَالَ حَدَّثَنَا غَيْلاَنُ بْنُ جَرِيرٍ، عَنْ مُطَرِّفٍ، قَالَ صَلَّيْتُ أَنَا وَعِمْرَانُ، صَلاَةً خَلْفَ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ ـ رضى الله عنه ـ فَكَانَ إِذَا سَجَدَ كَبَّرَ، وَإِذَا رَفَعَ كَبَّرَ، وَإِذَا نَهَضَ مِنَ الرَّكْعَتَيْنِ كَبَّرَ، فَلَمَّا سَلَّمَ أَخَذَ عِمْرَانُ بِيَدِي فَقَالَ لَقَدْ صَلَّى بِنَا هَذَا صَلاَةَ مُحَمَّدٍ صلى الله عليه وسلم. أَوْ قَالَ لَقَدْ ذَكَّرَنِي هَذَا صَلاَةَ مُحَمَّدٍ صلى الله عليه وسلم.
பாடம் : 144
இரண்டாவது சஜ்தாவி-ருந்து (அடுத்த ரக்அத்திற்காக) எழும் போதே ‘தக்பீர்’ கூற வேண் டும்.71
இரண்டாவது சஜ்தாவி-ருந்து எழும் போதே அப்துல்லாஹ் பின் அஸஸுபைர் (ரலி) அவர்கள் ‘தக்பீர்’ கூறுவார்கள்.
826. முதர்ரிஃப் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(பஸ்ராவில்) நானும் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களும் அலீ பின் அபீதா-ப் (ரலி) அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றி) ஒரு தொழுகை யைத் தொழுதோம். அலீ (ரலி) அவர்கள் சஜ்தா செய்தபோது ‘தக்பீர்’ கூறினார்கள்; (சஜ்தாவி-ருந்து தலையை) உயர்த்திய போதும் ‘தக்பீர்’ கூறினார்கள்; இரண்டாவது ரக்அத்தி-ருந்து எழுந்தபோதும் ‘தக்பீர்’ கூறினார்கள்.
அலீ (ரலி) அவர்கள் சலாம் கொடுத்து முடிந்ததும் இம்ரான் பின் ஹுஸைன்
(ரலி) அவர்கள் என் கையைப் பிடித்துக் கொண்டு, ‘இவர் நமக்கு முஹம்மத் (ஸல்) அவர்கள் தொழுவித்ததைப் போன்று தொழுவித்தார்’ அல்லது ‘இவர் முஹம்மத் (ஸல்) அவர்களின் தொழுகையை எனக்கு நினைவூட்டிவிட்டார்’ என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 10
826. முதர்ரிஃப் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(பஸ்ராவில்) நானும் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களும் அலீ பின் அபீதா-ப் (ரலி) அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றி) ஒரு தொழுகை யைத் தொழுதோம். அலீ (ரலி) அவர்கள் சஜ்தா செய்தபோது ‘தக்பீர்’ கூறினார்கள்; (சஜ்தாவி-ருந்து தலையை) உயர்த்திய போதும் ‘தக்பீர்’ கூறினார்கள்; இரண்டாவது ரக்அத்தி-ருந்து எழுந்தபோதும் ‘தக்பீர்’ கூறினார்கள்.
அலீ (ரலி) அவர்கள் சலாம் கொடுத்து முடிந்ததும் இம்ரான் பின் ஹுஸைன்
(ரலி) அவர்கள் என் கையைப் பிடித்துக் கொண்டு, ‘இவர் நமக்கு முஹம்மத் (ஸல்) அவர்கள் தொழுவித்ததைப் போன்று தொழுவித்தார்’ அல்லது ‘இவர் முஹம்மத் (ஸல்) அவர்களின் தொழுகையை எனக்கு நினைவூட்டிவிட்டார்’ என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 10