603. حَدَّثَنَا عِمْرَانُ بْنُ مَيْسَرَةَ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ، قَالَ ذَكَرُوا النَّارَ وَالنَّاقُوسَ، فَذَكَرُوا الْيَهُودَ وَالنَّصَارَى، فَأُمِرَ بِلاَلٌ أَنْ يَشْفَعَ الأَذَانَ وَأَنْ يُوتِرَ الإِقَامَةَ.
பாடம் : 1 தொழுகை அறிவிப்பின் துவக்கம் மகத்துவமும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: நீங்கள் தொழுகைக்கு அழைத்தால், அதை அவர்கள் ஏளனமாகவும் விளை யாட்டாகவும் எடுத்துக்கொள்கின்றனர். அவர்கள் விளங்கிக்கொள்ளாத சமுதாயத் தார் என்பதே இதற்குக் காரணமாகும். (5:58) இறைநம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக்கிழமை தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டு விட்டு, அல்லாஹ்வை நினைவுகூர(ப் பள்ளிவாசலுக்கு) விரைந்து செல்லுங்கள். (62:9)
603. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(தொழுகை நேரம் வந்துவிட்டதை அறிவிக்கும் முறை ஒன்று தேவை என முஸ்-ம்கள் கருதியபோது) மக்கள் (அக்னி ஆராதனையாளர்களைப் போன்று) நெருப்பு மூட்டலாம் என்றும், (கிறித்தவர்களைப் போன்று) மணியடித்துக் கூப்பிடலாம் என்றும் (ஆலோசனை) கூறினர். (இவையெல்லாம்) யூதர்கள், கிறித்தவர்கள் (ஆகியோரின் போக்காகும்) எனச் சிலர் (மறுப்புக்) கூறினார்கள்.

அப்போது பிலால் (ரலி) அவர்களுக்கு ‘பாங்கு’ (அதான்) எனும் தொழுகை அறிவிப்பிற்குரிய வாசகங்களை (கற்றுத்தந்து அவற்றை) இரு முறை கூறும்படியும் ‘இகாமத்’ (எனும் தொழுகைக்காக நிற்கும்போது சொல்லும்) வாசகங்களை ஒரு முறை மட்டும் சொல்லும்படியும் உத்தரவிடப்பட்டது.


அத்தியாயம் : 10
604. حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي نَافِعٌ، أَنَّ ابْنَ عُمَرَ، كَانَ يَقُولُ كَانَ الْمُسْلِمُونَ حِينَ قَدِمُوا الْمَدِينَةَ يَجْتَمِعُونَ فَيَتَحَيَّنُونَ الصَّلاَةَ، لَيْسَ يُنَادَى لَهَا، فَتَكَلَّمُوا يَوْمًا فِي ذَلِكَ، فَقَالَ بَعْضُهُمْ اتَّخِذُوا نَاقُوسًا مِثْلَ نَاقُوسِ النَّصَارَى. وَقَالَ بَعْضُهُمْ بَلْ بُوقًا مِثْلَ قَرْنِ الْيَهُودِ. فَقَالَ عُمَرُ أَوَلاَ تَبْعَثُونَ رَجُلاً يُنَادِي بِالصَّلاَةِ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" يَا بِلاَلُ قُمْ فَنَادِ بِالصَّلاَةِ "".
பாடம் : 1 தொழுகை அறிவிப்பின் துவக்கம் மகத்துவமும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: நீங்கள் தொழுகைக்கு அழைத்தால், அதை அவர்கள் ஏளனமாகவும் விளை யாட்டாகவும் எடுத்துக்கொள்கின்றனர். அவர்கள் விளங்கிக்கொள்ளாத சமுதாயத் தார் என்பதே இதற்குக் காரணமாகும். (5:58) இறைநம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக்கிழமை தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டு விட்டு, அல்லாஹ்வை நினைவுகூர(ப் பள்ளிவாசலுக்கு) விரைந்து செல்லுங்கள். (62:9)
604. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஸ்-ம்கள் (மக்காவி-ருந்து) மதீனாவுக்கு வந்தபோது ஓரிடத்தில் ஒன்றுகூடி, தொழுகைக்காக ஒரு நேரத்தை முடிவு செய்வதே வழக்கமாக இருந்தது; அப்போது தொழுகைக்காக பாங்கு சொல்லப்(படும் முறை அறிமுகப்படுத்தப்)படவில்லை. எனவே, இது குறித்து ஒரு நாள் அவர்கள் (கலந்து) பேசினர்.



அப்போது அவர்களில் சிலர், கிறித்த வர்களின் (ஆலயங்களில் அடிக்கப்படும்) மணியைப் போன்று ஒரு மணியை நிறுவுங்கள்” என்று கூறினர். வேறுசிலர், யூதர்களிடமுள்ள கொம்பைப் போன்று ஒரு கொம்பை ஏற்படுத்(தி அதில் ஊதி மக்களைத் தொழுகைக்காக அழைத்)திடுங் கள்” என்றனர்.

அப்போது உமர் (ரலி) அவர்கள், “தொழுகைக்காக அழைக்கின்ற ஒரு மனிதரை நீங்கள் அனுப்பக் கூடாதா?” என்று கேட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பிலால்! நீங்கள் எழுந்து தொழுகைக்காக அழையுங்கள்” என்று கூறினார்கள்.2

அத்தியாயம் : 10
605. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ سِمَاكِ بْنِ عَطِيَّةَ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ، قَالَ أُمِرَ بِلاَلٌ أَنْ يَشْفَعَ، الأَذَانَ وَأَنْ يُوتِرَ الإِقَامَةَ إِلاَّ الإِقَامَةَ.
பாடம் : 2 தொழுகை அறிவிப்பின் வாசகங்கள் இரண்டிரண்டாக இருக்கும்.
605. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

தொழுகை அறிவிப்பின் வாசகங்களை இரட்டையாகவும் ‘இகாமத்’தின் வாசகங்களை -‘கத் காமத்திஸ் ஸலாத்’ (தொழுகை தொடங்கிவிட்டது) எனும் வாசகத்தைத் தவிர- ஒற்றைப்படையாகவும் கூறும்படி பிலால் (ரலி) அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டது.3


அத்தியாயம் : 10
606. حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ، قَالَ أَخْبَرَنَا خَالِدٌ الْحَذَّاءُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ لَمَّا كَثُرَ النَّاسُ قَالَ ـ ذَكَرُوا ـ أَنْ يَعْلَمُوا وَقْتَ الصَّلاَةِ بِشَىْءٍ يَعْرِفُونَهُ، فَذَكَرُوا أَنْ يُورُوا نَارًا أَوْ يَضْرِبُوا نَاقُوسًا، فَأُمِرَ بِلاَلٌ أَنْ يَشْفَعَ الأَذَانَ وَأَنْ يُوتِرَ الإِقَامَةَ.
பாடம் : 2 தொழுகை அறிவிப்பின் வாசகங்கள் இரண்டிரண்டாக இருக்கும்.
606. அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மதீனாவில்) மக்களின் எண்ணிக்கை அதிகமானபோது அவர்கள் அறிந்திருக் கின்ற ஏதேனும் ஓர் (அறிவிப்பு) முறையில் தொழுகையின் நேரத்தை அறிந்துகொள்ள (அல்லது அறிவிப்புச் செய்திட) ஆலோசித்தனர். அப்போது, “நெருப்பு மூட்டலாம்; அல்லது மணி அடிக்கலாம்” என்று (பல்வேறு யோசனைகளைத்) தெரிவித்தனர்.

ஆனால், பாங்கின் வாசகங்களை இரட்டையாகவும், (‘கத் காமத்திஸ் ஸலாத்’ எனும் வாசகத்தை தவிர) இகாமத்தின் (இதர) வாசகங்களை ஒற்றையாகவும் சொல்லும்படி பிலால் (ரலி) அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

அத்தியாயம் : 10
607. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ، قَالَ أُمِرَ بِلاَلٌ أَنْ يَشْفَعَ، الأَذَانَ، وَأَنْ يُوتِرَ الإِقَامَةَ. قَالَ إِسْمَاعِيلُ فَذَكَرْتُ لأَيُّوبَ فَقَالَ إِلاَّ الإِقَامَةَ.
பாடம் : 3 ‘இகாமத்’தின் வாசகங்களில் ‘கத் காமத்திஸ் ஸலாத்’ தவிர மற்றவை ஒற்றைப்படையாக இருக்கும்.
607. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

தொழுகை அறிவிப்பின் வாசகங்களை இரட்டையாகவும், ‘இகாமத்’தின் வாசகங் களை ஒற்றையாகவும் கூறும்படி பிலால் (ரலி) அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், இஸ்மாயீல் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(கா-த் அல்ஹிதாஉ (ரஹ்) அவர்கள் எமக்கு அறிவித்த) இந்த ஹதீஸை நான் அய்யூப் அஸ்ஸக்தியானீ (ரஹ்) அவர்களிடம் சொன்னேன். அப்போது அவர்கள், “கத் காமத்திஸ் ஸலாத்’ எனும் வாசகத்தை தவிர” என்று (கூடுதலாக) அறிவித்தார்கள்.

அத்தியாயம் : 10
608. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا نُودِيَ لِلصَّلاَةِ أَدْبَرَ الشَّيْطَانُ وَلَهُ ضُرَاطٌ حَتَّى لاَ يَسْمَعَ التَّأْذِينَ، فَإِذَا قَضَى النِّدَاءَ أَقْبَلَ، حَتَّى إِذَا ثُوِّبَ بِالصَّلاَةِ أَدْبَرَ، حَتَّى إِذَا قَضَى التَّثْوِيبَ أَقْبَلَ حَتَّى يَخْطُرَ بَيْنَ الْمَرْءِ وَنَفْسِهِ، يَقُولُ اذْكُرْ كَذَا، اذْكُرْ كَذَا. لِمَا لَمْ يَكُنْ يَذْكُرُ، حَتَّى يَظَلَّ الرَّجُلُ لاَ يَدْرِي كَمْ صَلَّى "".
பாடம் : 4 தொழுகை அறிவிப்புச் செய்வ தன் சிறப்பு
608. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகைக்காக அறிவிப்புச் செய்யப் பட்டால், தொழுகை அறிவிப்பைக் கேட்காமலிருப்பதற்காக நாற்றவாயு வெளியேறிய வண்ணம் ஷைத்தான் (வெகு தூரத்திற்குப்) பின்வாங்கி ஓடுகிறான். தொழுகை அறிவிப்பு முடிந்ததும் மீண்டும் (!பள்ளிவாசலுக்கு) வருகிறான். பின்னர் ‘இகாமத்’ சொல்லப்பட்டால், பின்வாங்கி ஓடுகிறான்.

இகாமத் சொல்- முடித்ததும் (திரும்பவும் பள்ளிவாசலுக்கு) வந்து, (தொழுது கொண்டிருக்கும்) மனிதரின் உள்ளத்தில் ஊசலாட்டத்தை ஏற்படுத்துகிறான். “இதை நினைத்துப்பார்; அதை நினைத்துப்பார்” என்று அவர் (அதற்குமுன்) நினைத்திராத விஷயங்களை (தொழுகையில் நினைத்துப்பார்க்கும்படி) கூறுகிறான். இறுதியில், அந்த மனிதருக்குத் தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்பதுகூடத் தெரியாமல் போய்விடும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 10
609. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي صَعْصَعَةَ الأَنْصَارِيِّ، ثُمَّ الْمَازِنِيِّ عَنْ أَبِيهِ، أَنَّهُ أَخْبَرَهُ أَنَّ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ قَالَ لَهُ "" إِنِّي أَرَاكَ تُحِبُّ الْغَنَمَ وَالْبَادِيَةَ، فَإِذَا كُنْتَ فِي غَنَمِكَ أَوْ بَادِيَتِكَ فَأَذَّنْتَ بِالصَّلاَةِ فَارْفَعْ صَوْتَكَ بِالنِّدَاءِ، فَإِنَّهُ لاَ يَسْمَعُ مَدَى صَوْتِ الْمُؤَذِّنِ جِنٌّ وَلاَ إِنْسٌ وَلاَ شَىْءٌ إِلاَّ شَهِدَ لَهُ يَوْمَ الْقِيَامَةِ "". قَالَ أَبُو سَعِيدٍ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம் : 5 உரத்த குரலில் தொழுகை அறிவிப்புச் செய்தல் (மதீனாவின் ஆளுநராயிருந்த) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள், (பாங்கு சொல்லும் பொறுப்பி-ருந்த வரிடம்), “இராகமிடாமல் (குரலுயர்த்தி) பாங்கு சொல்லுங்கள்: அல்லது இப் பொறுப்பி-ருந்து விலகிக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.
609. அப்துல்லாஹ் பின் அப்திர் ரஹ்மான் பின் அபீஸஅஸஆ அல் அன்சாரி (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள், “ஆட்டையும் பாலைவனத்தை யும் விரும்புகின்றவராக உங்களை நான் காண்கிறேன். எனவே, நீங்கள் ‘ஆட்டை மேய்த்துக்கொண்டோ’ அல்லது ‘பாலை வனத்திலோ’ இருக்க, (தொழுகை நேரம் வந்து) நீங்கள் தொழுகை அறிவிப்புச் செய்தால், உங்கள் குரலை உயர்த்தி அறிவியுங்கள். ஏனெனில், தொழுகை அறிவிப்புச் செய்பவரின் குரல் ஒ-க்கும் தொலைவுவரை ஜின்களும் மனிதர்களும் பிற பொருள்களும் அதைக் கேட்டு (தொழுகை) அ(றிவிப்புச் செய்த)வருக்காக மறுமை நாளில் சாட்சியம் சொல்கின்றன” என்று கூறிவிட்டு, “இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன்” என்று சொன்னார்கள்.

அத்தியாயம் : 10
610. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا غَزَا بِنَا قَوْمًا لَمْ يَكُنْ يَغْزُو بِنَا حَتَّى يُصْبِحَ وَيَنْظُرَ، فَإِنْ سَمِعَ أَذَانًا كَفَّ عَنْهُمْ، وَإِنْ لَمْ يَسْمَعْ أَذَانًا أَغَارَ عَلَيْهِمْ، قَالَ فَخَرَجْنَا إِلَى خَيْبَرَ فَانْتَهَيْنَا إِلَيْهِمْ لَيْلاً، فَلَمَّا أَصْبَحَ وَلَمْ يَسْمَعْ أَذَانًا رَكِبَ وَرَكِبْتُ خَلْفَ أَبِي طَلْحَةَ، وَإِنَّ قَدَمِي لَتَمَسُّ قَدَمَ النَّبِيِّ صلى الله عليه وسلم. قَالَ فَخَرَجُوا إِلَيْنَا بِمَكَاتِلِهِمْ وَمَسَاحِيهِمْ فَلَمَّا رَأَوُا النَّبِيَّ صلى الله عليه وسلم قَالُوا مُحَمَّدٌ وَاللَّهِ، مُحَمَّدٌ وَالْخَمِيسُ. قَالَ فَلَمَّا رَآهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، خَرِبَتْ خَيْبَرُ، إِنَّا إِذَا نَزَلْنَا بِسَاحَةِ قَوْمٍ فَسَاءَ صَبَاحُ الْمُنْذَرِينَ "".
பாடம் : 6 தொழுகை அறிவிப்புச் செய்யப்படும் பகுதிமீது போர் தொடுக்க லாகாது.4
610. அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் எங்களுடன் சேர்ந்து ஒரு கூட்டத்தாரை நோக்கி போரிடப் புறப்பட்டால் வைகறை (சுப்ஹு) நேரம் வரும்வரை எங்களைப் போரில் ஈடுபடுத்தமாட்டார்கள். (சுப்ஹு நேரம் வரை) காத்திருப்பார்கள். (அப்பகுதியில்) தொழுகை அறிவிப்பைச் செவியுற்றால், அவர்களை விட்டுவிடுவார்கள். தொழுகை அறிவிப்பைச் செவியுறாவிட்டால் அவர்கள்மீது தாக்குதல் தொடுப்பார்கள்.

இந்நிலையில், நாங்கள் கைபரை நோக்கி (போருக்காகப்) புறப்பட்டோம். இரவு நேரத்தில் அவர்களிடம் போய்ச் சேர்ந்தோம். அதிகாலையின்போது தொழுகை அறிவிப்பைச் செவியுறாததால் (அவர்களை நோக்கி தமது வாகனத்தில்) பயணமானார்கள். நான் அபூதல்ஹா (ரலி) அவர்களுக்குப் பின்னால் (அவர்களது வாகனத்தில் அமர்ந்து) பயணம் செய்தேன்.

அப்போது எனது கால், (அருகில் சென்ற) நபி (ஸல்) அவர்களது கா-ல் உராயும். அப்போது கைபர்வாசி(களான யூதர்)கள் தம் மண் வெட்டிகளையும் தம் (பேரீச்ச ஓலைகளாலான) கூடைகளையும் எடுத்துக்கொண்டு எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பார்த்ததும், “முஹம்மதும், அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மதும் (அவரது ஐந்து அணிகள் கொண்ட) படையும் (இதோ வருகின்றனர்)” என்று கூறினர்.

அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்ததும், “அல்லாஹ் மிகப் பெரியவன். அல்லாஹ் மிகப் பெரியவன். கைபர் பாழா(வது உறுதியா)கிவிட்டது. நாம் ஒரு சமுதாயத்தின் களத்தில் (அவர்களுடன் போரிட) இறங்குவோமாயின், எச்சரிக்கப்பட்ட அவர்களுக்கு அது மிகக் கெட்ட காலையாக அமையும்” என்று கூறினார்கள்

அத்தியாயம் : 10
611. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا سَمِعْتُمُ النِّدَاءَ فَقُولُوا مِثْلَ ما يَقُولُ الْمُؤَذِّنُ "".
பாடம் : 7 தொழுகை அறிவிப்பைக் கேட்டால் கூற வேண்டியவை5
611. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் தொழுகை அறிவிப்பைச் செவியுற்றால், அறிவிப்பாளர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள்.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 10
612. حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ الْحَارِثِ، قَالَ حَدَّثَنِي عِيسَى بْنُ طَلْحَةَ، أَنَّهُ سَمِعَ مُعَاوِيَةَ، يَوْمًا فَقَالَ مِثْلَهُ إِلَى قَوْلِهِ "" وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ "".
பாடம் : 7 தொழுகை அறிவிப்பைக் கேட்டால் கூற வேண்டியவை5
612. ஈசா பின் தல்ஹா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

முஆவியா (ரலி) அவர்கள் ஒரு நாள் (தொழுகை அறிவிப்பைச் செவியுற்ற போது) ‘அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்’ என்பதுவரை அறிவிப்பாளர் கூறியதைப் போன்றே சொன்னதை நான் கேட்டேன்.

மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இதே கருத்தில் அமைந்த ஹதீஸ் வந்துள்ளது.


அத்தியாயம் : 10
613. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ رَاهَوَيْهِ، قَالَ حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، نَحْوَهُ. قَالَ يَحْيَى وَحَدَّثَنِي بَعْضُ، إِخْوَانِنَا أَنَّهُ قَالَ لَمَّا قَالَ حَىَّ عَلَى الصَّلاَةِ. قَالَ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ. وَقَالَ هَكَذَا سَمِعْنَا نَبِيَّكُمْ صلى الله عليه وسلم يَقُولُ.
பாடம் : 7 தொழுகை அறிவிப்பைக் கேட்டால் கூற வேண்டியவை5
613. யஹ்யா பின் அபீகஸீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

எங்கள் சகோதரர்களில் ஒருவர் கூறினார்:

தொழுகை அறிவிப்பாளர் ‘ஹய்ய அலஸ் ஸலா’ என்று கூறியபோது, முஆவியா (ரலி) அவர்கள் ‘லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்’ (அல்லாஹ்வின் உதவியில்லாமல் பாவங்களிலிருந்து விலகவோ, நல்லறங்கள் புரிய ஆற்றல் பெறவோ மனிதனால் இயலாது) என்று கூறினார்கள். மேலும், “இவ்வாறுதான் உங்கள் நபி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்” என்றும் முஆவியா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அத்தியாயம் : 10
614. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَيَّاشٍ، قَالَ حَدَّثَنَا شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ قَالَ حِينَ يَسْمَعُ النِّدَاءَ اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلاَةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ، حَلَّتْ لَهُ شَفَاعَتِي يَوْمَ الْقِيَامَةِ "".
பாடம் : 8 தொழுகை அறிவிப்பு முடிந்த பின் ஓத வேண்டிய பிரார்த் தனை
614. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் தொழுகை அறிவிப்பைக் கேட்(டு முடிக்)கும்போது, “அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஅவதித் தாம்மத்தி, வஸ்ஸ லாத்தில் காயிமத்தி, ஆத்தி முஹம்மதனில் வசீலத்த, வல்ஃபளீலா. வப்அஸ்ஹு மகாமம் மஹ்மூதனில்லதீ வஅத்தா (இறைவா! இந்த முழுமையான அழைப்பிற்கும் நிலையான தொழுகைக்கும் உரியவனே! முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு (சொர்க்கத்தில்) உயர் பதவியையும் தனிச் சிறப்பையும் வழங்குவாயாக! அவர்களுக்கு நீ வாக்களித்துள்ள உன்னத இடத்திற்கு அவர்களை நீ அனுப்புவாயாக)” என்று பிரார்த்திக்கிறாரோ, அவருக்கு மறுமை நாளில் என் பரிந்துரை கிடைக்கும்.6

இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 10
615. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ سُمَىٍّ، مَوْلَى أَبِي بَكْرٍ عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" لَوْ يَعْلَمُ النَّاسُ مَا فِي النِّدَاءِ وَالصَّفِّ الأَوَّلِ، ثُمَّ لَمْ يَجِدُوا إِلاَّ أَنْ يَسْتَهِمُوا عَلَيْهِ لاَسْتَهَمُوا، وَلَوْ يَعْلَمُونَ مَا فِي التَّهْجِيرِ لاَسْتَبَقُوا إِلَيْهِ، وَلَوْ يَعْلَمُونَ مَا فِي الْعَتَمَةِ وَالصُّبْحِ لأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا "".
பாடம் : 9 தொழுகை அறிவிப்புச் செய்வதற்காக (போட்டி நிலவும்போது) சீட்டுக் குலுக்கிப் போடுவது தொழுகை அறிவிப்புச் செய்வதில் ஒரு கூட்டத்தார் (தங்களுக்கிடையில்) சர்ச்சை செய்துகொண்டனர். அப்போது அவர்களுக்கிடையே சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் சீட்டுக் குலுக்கி (அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க லா)னார்கள் என்று கூறப்படுகிறது.
615. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகை அறிவிப்புச் செய்வதிலும், (கூட்டுத் தொழுகையில்) முதல் வரிசை யி(ல் நிற்பதி)லும் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின், (அதை அடைந்துகொள்ள) சீட்டுக் குலுக்கிப் போடுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போனால், நிச்சயம் சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள்.

தொழுகைக்கு அதன் ஆரம்ப வேளையில் விரைந்து செல்வதில் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின் அதற்கு முந்திக்கொள்வார்கள். இஷா தொழுகையிலும் ஃபஜ்ர் தொழுகையிலும் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின், அதற்கு (தரையில்) தவழ்ந்தாவது வந்து (சேர்ந்து)விடுவார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 10
616. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، وَعَبْدِ الْحَمِيدِ، صَاحِبِ الزِّيَادِيِّ وَعَاصِمٍ الأَحْوَلِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ قَالَ خَطَبَنَا ابْنُ عَبَّاسٍ فِي يَوْمٍ رَدْغٍ، فَلَمَّا بَلَغَ الْمُؤَذِّنُ حَىَّ عَلَى الصَّلاَةِ. فَأَمَرَهُ أَنْ يُنَادِيَ الصَّلاَةُ فِي الرِّحَالِ. فَنَظَرَ الْقَوْمُ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ فَقَالَ فَعَلَ هَذَا مَنْ هُوَ خَيْرٌ مِنْهُ وَإِنَّهَا عَزْمَةٌ.
பாடம் : 10 (தொழுகை அறிவிப்புச் செய்பவர்) தொழுகை அறிவிப்புக்கு இடையில் பேசுவது சுலைமான் பின் ஸுரத் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்யும்போதே (வேறு பேச்சுகள்) பேசியுள்ளார்கள். ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள், “பாங்கு சொல்-க்கொண்டிருக்கும்போதோ ‘இகாமத்’ சொல்-க்கொண்டிருக்கும்போதோ ஒருவர் சிரிப்பது குற்றமாகாது” என்று கூறினார்கள்.
616. அப்துல்லாஹ் பின் ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(மழை பெய்து) சேறும் சகதியும் நிறைந்திருந்த ஒரு (ஜுமுஆ) நாளில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் எங்களுக்கு உரையாற்றினார்கள். தொழுகை அறிவிப்பாளர், ‘ஹய்ய அலஸ் ஸலாஹ்’ (தொழுகைக்கு வாருங்கள்) என்று சொல்ல முனைந்தபோது, “உங்கள் இருப் பிடங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள்” (அஸ்ஸலாத் ஃபிர்ரிஹால்) என்று அறிவிக்குமாறு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன்னார்கள்.

அப்போது அங்கிருந்தவர்கள் சிலர் சிலரை (வியப்புடன்) பார்த்தனர். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “இவரைவிடச் சிறந்தவர் இவ்வாறு செய்துள்ளார்; ஜுமுஆ (தொழுகை) கட்டாயமானதாகும்” என்று கூறினார்கள்.7

அத்தியாயம் : 10
617. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ بِلاَلاً يُؤَذِّنُ بِلَيْلٍ، فَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يُنَادِيَ ابْنُ أُمِّ مَكْتُومٍ "". ثُمَّ قَالَ وَكَانَ رَجُلاً أَعْمَى لاَ يُنَادِي حَتَّى يُقَالَ لَهُ أَصْبَحْتَ أَصْبَحْتَ.
பாடம் : 11 தொழுகையின் நேரத்தைத் தெரிவிக்கின்ற ஒருவர் (உதவிக்கு) இருந்தால், பார்வையற்றவரும் தொழுகை அறிவிப்புச் செய்யலாம்.
617. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(ரமளானில்) பிலால், (பின்)இரவில் தொழுகை அறிவிப்புச் செய்வார். எனவே, இப்னு உம்மி மக்(த்)தூம் (ஃபஜ்ருக்கு) பாங்கு சொல்லும்வரை (சஹர் உணவு) உண்ணுங்கள்; பருகுங்கள்” என்று கூறினார்கள்.

இப்னு உம்மி மக்(த்)தூம் (ரலி) அவர்கள் கண் பார்வையற்றவராக இருந்தார்கள். அவரிடம் “சுப்ஹு நேரமாகிவிட்டது; சுப்ஹு நேரமாகிவிட்டது” என்று சொல்லப் படும்வரை அவர் (ஃபஜ்ருக்காக) பாங்கு சொல்லமாட்டார்.

அத்தியாயம் : 10
618. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ أَخْبَرَتْنِي حَفْصَةُ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا اعْتَكَفَ الْمُؤَذِّنُ لِلصُّبْحِ وَبَدَا الصُّبْحُ صَلَّى رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ قَبْلَ أَنْ تُقَامَ الصَّلاَةُ.
பாடம் : 12 ஃபஜ்ர் நேரம் வந்தபின் பாங்கு சொல்வது8
618. (நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:

தொழுகை அறிவிப்பாளர் சுப்ஹு(த் தொழுகை)க்கான அறிவிப்புச் செய்து முடித்து, வைகறை நேரம் வந்துவிட்டால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘இகாமத்’ சொல்லப்படுவதற்கு முன்பாகச் சுருக்கமான முறையில் இரண்டு ரக்அத் கள் (சுன்னத்) தொழுவார்கள்.


அத்தியாயம் : 10
619. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ، كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ بَيْنَ النِّدَاءِ وَالإِقَامَةِ مِنْ صَلاَةِ الصُّبْحِ.
பாடம் : 12 ஃபஜ்ர் நேரம் வந்தபின் பாங்கு சொல்வது8
619. (நபி (ஸல்) அவர்களின் துணைவி யார்) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் சுப்ஹு தொழு கையின் பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடை யில் சுருக்கமான முறையில் இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள்.


அத்தியாயம் : 10
620. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ بِلاَلاً يُنَادِي بِلَيْلٍ، فَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يُنَادِيَ ابْنُ أُمِّ مَكْتُومٍ "".
பாடம் : 12 ஃபஜ்ர் நேரம் வந்தபின் பாங்கு சொல்வது8
620. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“(ரமளானில்) பிலால் (பின்)இரவில் தொழுகை அறிவிப்புச் செய்வார். எனவே, இப்னு உம்மி மக்(த்)தூம் (ஃபஜ் ருக்கு) பாங்கு சொல்லும்வரை (சஹர் உணவு) உண்ணுங்கள்; பருகுங்கள்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அத்தியாயம் : 10
621. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، قَالَ حَدَّثَنَا زُهَيْرٌ، قَالَ حَدَّثَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ يَمْنَعَنَّ أَحَدَكُمْ ـ أَوْ أَحَدًا مِنْكُمْ ـ أَذَانُ بِلاَلٍ مِنْ سَحُورِهِ، فَإِنَّهُ يُؤَذِّنُ ـ أَوْ يُنَادِي ـ بِلَيْلٍ، لِيَرْجِعَ قَائِمَكُمْ وَلِيُنَبِّهَ نَائِمَكُمْ، وَلَيْسَ أَنْ يَقُولَ الْفَجْرُ أَوِ الصُّبْحُ "". وَقَالَ بِأَصَابِعِهِ وَرَفَعَهَا إِلَى فَوْقُ وَطَأْطَأَ إِلَى أَسْفَلُ حَتَّى يَقُولَ هَكَذَا. وَقَالَ زُهَيْرٌ بِسَبَّابَتَيْهِ إِحْدَاهُمَا فَوْقَ الأُخْرَى ثُمَّ مَدَّهَا عَنْ يَمِينِهِ وَشِمَالِهِ.
பாடம் : 13 ஃபஜ்ர் நேரம் வருவதற்குமுன் ‘பாங்கு’ சொல்வது
621. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(ரமளானில்) உங்களில் ஒருவர் சஹர் உணவு உண்பதி-ருந்து பிலா-ன் பாங்கு அவரைத் தடுத்துவிட வேண்டாம். ஏனெனில், உங்களில் (இரவுத் தொழுகை) தொழுதுகொண்டிருப்பவர் திரும்புவதற் காகவும் உங்களில் உறங்கிக்கொண்டிருப்பவரை எழுப்புவதற்காகவுமே பிலால் (பின்) இரவில் ‘அறிவிப்புச் செய்கிறார்’ அல்லது ‘அழைக்கிறார்’.

(இதன் அறிவிப்பாளரான) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

இதைக் கூறியபோது நபி (ஸல்) அவர்கள், தம் விரல்களை மேல்நோக்கி

உயர்த்திக்காட்டி, பிறகு கீழ் நோக்கித் தாழ்த்திவிட்டு, “இவ்வாறு (மேல் கீழாகச் செங்குத்தாய் தெரியும் வெளிச்சம்) ‘ஃபஜ்ர்’ அல்லது ‘சுப்ஹ்’ அல்ல” என்று கூறி னார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான) ஸுஹைர் (ரஹ்) அவர்கள், ‘இவ்வாறு’ என்பதற்கு விளக்கமளிக்கை யில், தம் சுட்டு விரல்களில் ஒன்றை மற்றொன்றின்மீது வைத்துப் பிறகு அவற்றை(ப் பிரித்து) வலப் பக்கத்திலும் இடப் பக்கத்திலும் நீட்டி (‘பரவலாகத் தோன்றும் அதிகாலை வெளிச்சமே ஃபஜ்ர் ஆகும்; செங்குத்தாய் தோன்றுவதன்று’ என்பது போன்று) சைகை செய்தார்கள்.


அத்தியாயம் : 10
622. حَدَّثَنَا إِسْحَاقُ، قَالَ أَخْبَرَنَا أَبُو أُسَامَةَ، قَالَ عُبَيْدُ اللَّهِ حَدَّثَنَا عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ،. وَعَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ. ح وَحَدَّثَنِي يُوسُفُ بْنُ عِيسَى الْمَرْوَزِيُّ، قَالَ حَدَّثَنَا الْفَضْلُ، قَالَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ "" إِنَّ بِلاَلاً يُؤَذِّنُ بِلَيْلٍ، فَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يُؤَذِّنَ ابْنُ أُمِّ مَكْتُومٍ "".
பாடம் : 13 ஃபஜ்ர் நேரம் வருவதற்குமுன் ‘பாங்கு’ சொல்வது
622. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(ரமளானில்) பிலால் (பின்)இரவிலேயே பாங்கு சொல்வார். எனவே, இப்னு உம்மி மக்(த்)தூம் (ஃபஜ்ருக்காக) தொழுகை அறிவிப்பு செய்யும்வரை நீங்கள் (சஹர் உணவு) உண்ணுங்கள்; பருகுங்கள்.

இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இது இரு அறிவிப் பாளர்தொடர்களில் வந்துள்ளது.

இப்னு உமர் (ரலி) அவர்கள் வழியாக வும் இது அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாயம் : 10