583. وَقَالَ حَدَّثَنِي ابْنُ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا طَلَعَ حَاجِبُ الشَّمْسِ فَأَخِّرُوا الصَّلاَةَ حَتَّى تَرْتَفِعَ، وَإِذَا غَابَ حَاجِبُ الشَّمْسِ فَأَخِّرُوا الصَّلاَةَ حَتَّى تَغِيبَ ". تَابَعَهُ عَبْدَةُ.
பாடம் : 30 ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் சூரியன் உயரும்வரை தொழு வது25
583. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சூரிய வட்டத்தின் ஒரு பகுதி தோன்றும்போது (தொழாமல்), அது (முழுமையாக) உயரும்வரை தொழுவதைத் தாமதப்படுத்துங்கள். சூரிய வட்டம் மறையும்போது அது (முழுமையாக) மறையும்வரை தொழுகையைத் தாமதப்படுத்துங்கள்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 9
584. حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ أَبِي أُسَامَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ خُبَيْبِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ بَيْعَتَيْنِ وَعَنْ لِبْسَتَيْنِ وَعَنْ صَلاَتَيْنِ نَهَى عَنِ الصَّلاَةِ بَعْدَ الْفَجْرِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، وَبَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ، وَعَنِ اشْتِمَالِ الصَّمَّاءِ وَعَنْ الاِحْتِبَاءِ فِي ثَوْبٍ وَاحِدٍ يُفْضِي بِفَرْجِهِ إِلَى السَّمَاءِ، وَعَنِ الْمُنَابَذَةِ وَالْمُلاَمَسَةِ.
பாடம் : 30 ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் சூரியன் உயரும்வரை தொழு வது25
584. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இரண்டு வியாபார முறைகளையும், ஆடை அணியும் இரண்டு முறைகளை யும், இரண்டு நேரங்களில் தொழுவதையும் தடை செய்தார்கள்; ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்னா-ருந்து சூரியன் (முழுமையாக) உதயமாகும்வரையிலும், அஸ்ர் தொழு கைக்குப் பின்னா-ருந்து சூரியன் (முழுமையாக) மறையும்வரையிலும் தொழ வேண்டாமெனத் தடை செய்தார்கள்.

ஒரே துணியை உடலில் சுற்றிக் கொண்டு அதன் ஒரு மூலையை ஒரு தோளில் போட்டுக்கொண்டு, மற்றொரு தோளைத் திறந்த நிலையில் விட்டுவிடு வதற்கும் (இஷ்திமாலுஸ் ஸம்மாஉ), மர்ம உறுப்பு வானுக்குத் தெரியும்படி ஒருவர் ஒரே ஆடையை (முழங்காலில்) சுற்றிக் கொண்டு இரு முழங்கால்களையும் நட்டு வைத்துக்கொண்டு (அவற்றைக் கைகளால் கட்டியபடி) உட்கார்ந்திருப்பதற்கும் (இஹ்திபா) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

முனாபதா, முலாமஸா எனும் இரண்டு வியாபார முறைகளையும் தடை செய்தார்கள்.26

அத்தியாயம் : 9
585. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" لاَ يَتَحَرَّى أَحَدُكُمْ فَيُصَلِّي عِنْدَ طُلُوعِ الشَّمْسِ وَلاَ عِنْدَ غُرُوبِهَا "".
பாடம் : 31 (அஸ்ர் தொழுகைக்குப்பின்) சூரியன் மறைவதற்கு முன்னுள்ள நேரத்தைத் தொழுவதற்காகத் தேர்வு செய்யலாகாது.
585. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் (சரியாகச்) சூரியன் உதிக்கும் நேரத்தையும் சூரியன் மறையும் நேரத்தையும் தேர்ந்தெடுத்து தொழ வேண்டாம்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 9
586. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عَطَاءُ بْنُ يَزِيدَ الْجُنْدَعِيُّ، أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" لاَ صَلاَةَ بَعْدَ الصُّبْحِ حَتَّى تَرْتَفِعَ الشَّمْسُ، وَلاَ صَلاَةَ بَعْدَ الْعَصْرِ حَتَّى تَغِيبَ الشَّمْسُ "".
பாடம் : 31 (அஸ்ர் தொழுகைக்குப்பின்) சூரியன் மறைவதற்கு முன்னுள்ள நேரத்தைத் தொழுவதற்காகத் தேர்வு செய்யலாகாது.
586. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சுப்ஹு தொழுகைக்குப் பின்னா-ருந்து சூரியன் (முழுமையாக) உதிக்கும் வரை எந்தத் தொழுகையும் இல்லை. அஸ்ர் தொழுகைக்குப் பின்னா-ருந்து சூரியன் (முழுமையாக) மறையும்வரை எந்தத் தொழுகையும் இல்லை.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 9
587. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبَانَ، قَالَ حَدَّثَنَا غُنْدَرٌ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي التَّيَّاحِ، قَالَ سَمِعْتُ حُمْرَانَ بْنَ أَبَانَ، يُحَدِّثُ عَنْ مُعَاوِيَةَ، قَالَ إِنَّكُمْ لَتُصَلُّونَ صَلاَةً، لَقَدْ صَحِبْنَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَمَا رَأَيْنَاهُ يُصَلِّيهَا، وَلَقَدْ نَهَى عَنْهُمَا، يَعْنِي الرَّكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ.
பாடம் : 31 (அஸ்ர் தொழுகைக்குப்பின்) சூரியன் மறைவதற்கு முன்னுள்ள நேரத்தைத் தொழுவதற்காகத் தேர்வு செய்யலாகாது.
587. ஹும்ரான் பின் அபான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“நீங்கள் ஒரு தொழுகையைத் தொழுது கொண்டிருக்கிறீர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டிருந்த நாங்கள், நபி (ஸல்) அவர்கள் அத்தொழுகையைத் தொழக் கண்டதில்லை. (ஏன், நீங்கள் தொழுது வரும்) அந்த இரு ரக்அத்களைத் தொழ வேண்டாமென நபி (ஸல்) அவர்கள் தடை விதித்துள்ளார்கள்” என முஆவியா

(ரலி) அவர்கள் கூறினார்கள். அதாவது அஸ்ருக்குப் பின்னால் இரண்டு ரக்அத்கள் தொழுவதைத் தடை செய்தார்கள்.


அத்தியாயம் : 9
588. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، قَالَ حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ خُبَيْبٍ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ صَلاَتَيْنِ بَعْدَ الْفَجْرِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، وَبَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ.
பாடம் : 31 (அஸ்ர் தொழுகைக்குப்பின்) சூரியன் மறைவதற்கு முன்னுள்ள நேரத்தைத் தொழுவதற்காகத் தேர்வு செய்யலாகாது.
588. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

இரண்டு நேரங்களில் தொழ வேண்டாமென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்:

1) ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்னா-ருந்து சூரியன் (முழுமையாக) உதயமாகும் வரையிலும்.

2) அஸ்ர் தொழுகைக்குப் பின்னா-ருந்து (முழுமையாகச்) சூரியன் மறையும் வரையிலும்.

அத்தியாயம் : 9
589. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ أُصَلِّي كَمَا رَأَيْتُ أَصْحَابِي يُصَلُّونَ، لاَ أَنْهَى أَحَدًا يُصَلِّي بِلَيْلٍ وَلاَ نَهَارٍ مَا شَاءَ، غَيْرَ أَنْ لاَ تَحَرَّوْا طُلُوعَ الشَّمْسِ وَلاَ غُرُوبَهَا.
பாடம் : 32 ஃபஜ்ர், அஸ்ர் ஆகிய தொழு கைகளுக்குப் பின்பு தவிர மற்ற எந்த நேரத்திலும் தொழலாம். இது குறித்து உமர் (ரலி), இப்னு உமர் (ரலி), அபூசயீத் அல்குத்ரீ (ரலி), அபூஹுரைரா (ரலி) ஆகியோர் அறிவித் துள்ளனர்.
589. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் தோழர்கள் எவ்வாறு (எந்நேரத் தில்) தொழக் கண்டேனோ அவ்வாறே நான் தொழு(து வரு)கின்றேன். இரவிலும் பக-லும் தாம் விரும்பியதைத் தொழும் எவரையும் நான் தடுக்கமாட்டேன். ஆயினும், (சரியாகச்) சூரியன் உதிக்கும் நேரத்தையோ சூரியன் மறையும் நேரத்தையோ (தொழுவதற்காக) நீங்கள் தேர்ந்தெடுக்கக் கூடாது.

அத்தியாயம் : 9
590. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ أَيْمَنَ، قَالَ حَدَّثَنِي أَبِي أَنَّهُ، سَمِعَ عَائِشَةَ، قَالَتْ وَالَّذِي ذَهَبَ بِهِ مَا تَرَكَهُمَا حَتَّى لَقِيَ اللَّهَ، وَمَا لَقِيَ اللَّهَ تَعَالَى حَتَّى ثَقُلَ عَنِ الصَّلاَةِ، وَكَانَ يُصَلِّي كَثِيرًا مِنْ صَلاَتِهِ قَاعِدًا ـ تَعْنِي الرَّكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ ـ وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّيهِمَا، وَلاَ يُصَلِّيهِمَا فِي الْمَسْجِدِ مَخَافَةَ أَنْ يُثَقِّلَ عَلَى أُمَّتِهِ، وَكَانَ يُحِبُّ مَا يُخَفَّفُ عَنْهُمْ.
பாடம் : 33 விடுபட்ட தொழுகைகள் போன்றவற்றை அஸ்ர் தொழுகைக்குப் பின்பு தொழுவது27 உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகைக்குப்பின் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். “லுஹ்ருக்குப் பின்னுள்ள (சுன்னத்தான) தொழுகை இரண்டு ரக்அத்களைத் தொழ இடங்கொடுக்காமல் அப்துல் கைஸ் (தூதுக்) குழுவினர் என் கவனத்தை ஈர்த்துவிட்டனர். (அதையே இப்போது நான் தொழுதேன்)” என்றும் நபியவர்கள் கூறினார்கள்.
590. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களை இறக்கச் செய்த (இறை)வன் மீதாணையாக! (அஸ்ர் தொழு கைக்குப் பின்னுள்ள அந்த) இரண்டு ரக்அத் தொழுகையை அல்லாஹ்வைச் சந்திக்கும்வரை நபி (ஸல்) அவர்கள் விட்டுவிடவில்லை. தொழுவதற்குச் சிரமப்படும் நிலையை அடைந்த பிறகே நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைச் சந்தித்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் பெரும்பாலும் -தாம் அஸ்ருக்குப் பின்னர் தொழும் அந்த இரண்டு ரக்அத்களை- அமர்ந்து கொண்டே தொழுவார்கள். நபி (ஸல்) அவர்கள் அந்த இரண்டு ரக்அத்களையும் தொழுவார்கள்; ஆனால், பள்ளிவாச-ல் அதைத் தொழமாட்டார்கள். தம் சமுதாயத் தாருக்குச் சிரமம் ஏற்படுத்துவதை அஞ்சி யதே இதற்குக் காரணம். தம் சமுதாயத் தாருக்கு எளிதானதையே அவர்கள் விரும்புவார்கள்.


அத்தியாயம் : 9
591. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، قَالَ أَخْبَرَنِي أَبِي قَالَتْ، عَائِشَةُ ابْنَ أُخْتِي مَا تَرَكَ النَّبِيُّ صلى الله عليه وسلم السَّجْدَتَيْنِ بَعْدَ الْعَصْرِ عِنْدِي قَطُّ.
பாடம் : 33 விடுபட்ட தொழுகைகள் போன்றவற்றை அஸ்ர் தொழுகைக்குப் பின்பு தொழுவது27 உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகைக்குப்பின் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். “லுஹ்ருக்குப் பின்னுள்ள (சுன்னத்தான) தொழுகை இரண்டு ரக்அத்களைத் தொழ இடங்கொடுக்காமல் அப்துல் கைஸ் (தூதுக்) குழுவினர் என் கவனத்தை ஈர்த்துவிட்டனர். (அதையே இப்போது நான் தொழுதேன்)” என்றும் நபியவர்கள் கூறினார்கள்.
591. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்கள் (என்னிடம்), “என் சகோதரி (அஸ்மாவின்) மகனே! அஸ்ர் தொழுகைக்குப்பின் இரண்டு சஜ்தாக்கள் (ரக்அத்கள்) தொழுவதை என்னிடம் இருக்கும்போது நபி (ஸல்) அவர்கள் ஒருபோதும் கைவிட்டதில்லை” என்று சொன்னார்கள்.


அத்தியாயம் : 9
592. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، قَالَ حَدَّثَنَا الشَّيْبَانِيُّ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الأَسْوَدِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ رَكْعَتَانِ لَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدَعُهُمَا سِرًّا وَلاَ عَلاَنِيَةً رَكْعَتَانِ قَبْلَ صَلاَةِ الصُّبْحِ، وَرَكْعَتَانِ بَعْدَ الْعَصْرِ.
பாடம் : 33 விடுபட்ட தொழுகைகள் போன்றவற்றை அஸ்ர் தொழுகைக்குப் பின்பு தொழுவது27 உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகைக்குப்பின் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். “லுஹ்ருக்குப் பின்னுள்ள (சுன்னத்தான) தொழுகை இரண்டு ரக்அத்களைத் தொழ இடங்கொடுக்காமல் அப்துல் கைஸ் (தூதுக்) குழுவினர் என் கவனத்தை ஈர்த்துவிட்டனர். (அதையே இப்போது நான் தொழுதேன்)” என்றும் நபியவர்கள் கூறினார்கள்.
592. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், இரண்டு தொழுகைகளை இரகசியமாகவும் விட்டதில்லை; பகிரங்கமாகவும் விட்டதில்லை. (அவை:) சுப்ஹு தொழுகைக்குமுன் இரண்டு ரக்அத்கள், அஸ்ர் தொழுகைக்குப்பின் இரண்டு ரக்அத்கள்.


அத்தியாயம் : 9
593. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَرْعَرَةَ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ رَأَيْتُ الأَسْوَدَ وَمَسْرُوقًا شَهِدَا عَلَى عَائِشَةَ قَالَتْ مَا كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَأْتِينِي فِي يَوْمٍ بَعْدَ الْعَصْرِ إِلاَّ صَلَّى رَكْعَتَيْنِ.
பாடம் : 33 விடுபட்ட தொழுகைகள் போன்றவற்றை அஸ்ர் தொழுகைக்குப் பின்பு தொழுவது27 உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகைக்குப்பின் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். “லுஹ்ருக்குப் பின்னுள்ள (சுன்னத்தான) தொழுகை இரண்டு ரக்அத்களைத் தொழ இடங்கொடுக்காமல் அப்துல் கைஸ் (தூதுக்) குழுவினர் என் கவனத்தை ஈர்த்துவிட்டனர். (அதையே இப்போது நான் தொழுதேன்)” என்றும் நபியவர்கள் கூறினார்கள்.
593. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழு கைக்குப்பின் எந்த நாளில் என்னிடம் (என் வீட்டிற்கு) வந்தாலும் அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழாமல் இருந்த தில்லை.28

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 9
594. حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى ـ هُوَ ابْنُ أَبِي كَثِيرٍ ـ عَنْ أَبِي قِلاَبَةَ، أَنَّ أَبَا الْمَلِيحِ، حَدَّثَهُ قَالَ كُنَّا مَعَ بُرَيْدَةَ فِي يَوْمٍ ذِي غَيْمٍ فَقَالَ بَكِّرُوا بِالصَّلاَةِ فَإِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ تَرَكَ صَلاَةَ الْعَصْرِ حَبِطَ عَمَلُهُ "".
பாடம் : 34 மேகமூட்டம் உள்ள நாளில் தொழுகையை விரைவாக (ஆரம்ப நேரத்திலேயே) நிறை வேற்றுவது
594. அபுல்மலீஹ் (ஆமிர் பின் உசாமா- ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மேகமூட்டம் இருந்த ஒரு நாளில் புரைதா பின் அல்ஹஸீப் (ரலி) அவர்களுடன் (ஒரு போரில்) நாங்கள் இருந்தோம்.

அப்போது அவர்கள், “அஸ்ர் தொழுகையை விரைவாக (அதன் ஆரம்ப நேரத்திலேயே) நிறைவேற்றுங்கள். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் ‘யார் அஸ்ர் தொழுகையை விட்டுவிடுகிறாரோ அவருடைய நற்செயல்கள் அழிந்துவிட்டன’ என்று கூறியுள்ளார்கள்” என்றார்கள்.

அத்தியாயம் : 9
595. حَدَّثَنَا عِمْرَانُ بْنُ مَيْسَرَةَ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، قَالَ حَدَّثَنَا حُصَيْنٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، قَالَ سِرْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم لَيْلَةً فَقَالَ بَعْضُ الْقَوْمِ لَوْ عَرَّسْتَ بِنَا يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" أَخَافُ أَنْ تَنَامُوا عَنِ الصَّلاَةِ "". قَالَ بِلاَلٌ أَنَا أُوقِظُكُمْ. فَاضْطَجَعُوا وَأَسْنَدَ بِلاَلٌ ظَهْرَهُ إِلَى رَاحِلَتِهِ، فَغَلَبَتْهُ عَيْنَاهُ فَنَامَ، فَاسْتَيْقَظَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَقَدْ طَلَعَ حَاجِبُ الشَّمْسِ فَقَالَ "" يَا بِلاَلُ أَيْنَ مَا قُلْتَ "". قَالَ مَا أُلْقِيَتْ عَلَىَّ نَوْمَةٌ مِثْلُهَا قَطُّ. قَالَ "" إِنَّ اللَّهَ قَبَضَ أَرْوَاحَكُمْ حِينَ شَاءَ، وَرَدَّهَا عَلَيْكُمْ حِينَ شَاءَ، يَا بِلاَلُ قُمْ فَأَذِّنْ بِالنَّاسِ بِالصَّلاَةِ "". فَتَوَضَّأَ فَلَمَّا ارْتَفَعَتِ الشَّمْسُ وَابْيَاضَّتْ قَامَ فَصَلَّى.
பாடம் : 35 நேரம் கடந்த பிறகும் பாங்கு சொல்வது29
595. அபூகத்தாதா (ஹாரிஸ் பின் ரிப்ஈ-ர-) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஓர் இரவில் (பயணம்) சென்றுகொண்டிருந் தோம். அப்போது மக்களில் சிலர், “அல்லாஹ்வின் தூதரே! (பயணத்தை சற்று நிறுத்தி) எங்களை இளைப்பாறச் செய்ய லாமே!” என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் (ஃபஜ்ர்) தொழாமல் உறங்கிவிடுவீர்களோ என நான் அஞ்சுகிறேன்” என்றார்கள். அப்போது பிலால் (ரலி) அவர்கள், “உங்களை நான் விழிக்கச்செய்கிறேன்” என்று கூறினார்கள். எனவே, அனைவரும் (பயனத்தை நிறுத்தி) படுத்துக்கொண்டனர்.

பிலால் (ரலி) அவர்கள் தமது முதுகைத் தமது வாகனத்தின் மீது சாய்த்துக்கொண்டி ருந்தபோது தம்மையும் மீறி கண்ணயர்ந்து உறங்கிவிட்டார்கள். சூரிய வட்டத்தின் ஒரு பகுதி உதித்துவிட்ட நிலையில், நபி (ஸல்) அவர்கள் (முதன் முத-ல்) உறக்கத்தி-ருந்து விழித்தார்கள். உடனே, “பிலால்! நீங்கள் சொன்னது என்ன ஆயிற்று?” என்று கேட்டார்கள். “இதுபோன்று உறக்கம் எனக்கு எப்போதும் ஏற்பட்டதில்லை” என்று பிலால் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ், தான் நாடும்போது உங்கள் உயிர்களைக் கைப்பற்றிக்கொள்கிறான்; தான் நாடும்போது உங்களிடம் திருப்பித் தருகின்றான்” என்று கூறிவிட்டு, “பிலால்! எழுந்து, பாங்கு சொல்- தொழுகைக்கு மக்களை அழைப்பீராக!” என்று கூறினார்கள். பின்னர் அங்கத் தூய்மை (உளூ) செய்து, சூரியன் உயர்ந்து தெளிவாகத் தென்பட்ட போது (ஃபஜ்ர்) தொழு(கையை முன்னின்று நடத்)திடலானார்கள்.

அத்தியாயம் : 9
596. حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، جَاءَ يَوْمَ الْخَنْدَقِ بَعْدَ مَا غَرَبَتِ الشَّمْسُ، فَجَعَلَ يَسُبُّ كُفَّارَ قُرَيْشٍ قَالَ يَا رَسُولَ اللَّهِ مَا كِدْتُ أُصَلِّي الْعَصْرَ حَتَّى كَادَتِ الشَّمْسُ تَغْرُبُ. قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" وَاللَّهِ مَا صَلَّيْتُهَا "". فَقُمْنَا إِلَى بُطْحَانَ، فَتَوَضَّأَ لِلصَّلاَةِ، وَتَوَضَّأْنَا لَهَا فَصَلَّى الْعَصْرَ بَعْدَ مَا غَرَبَتِ الشَّمْسُ، ثُمَّ صَلَّى بَعْدَهَا الْمَغْرِبَ.
பாடம் : 36 (தொழுகையின்) நேரம் கடந்த பிறகு மக்களுக்கு ஒருவர் கூட்டுத் தொழுகை (ஜமாஅத்) நடத்துவது
596. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அகழ்ப் போரின்போது சூரியன் மறைந்தபின் உமர் பின் அல்கத்தாப்

(ரலி) அவர்கள் குறைஷி குல இறைமறுப் பாளர்களை ஏசிக்கொண்டே வந்து, “அல்லாஹ்வின் தூதரே! சூரியன் மறையத் தொடங்கும்வரை என்னால் அஸ்ர் தொழுகையைத் தொழ முடியாமல் போய் விட்டது” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! நானும் (இதுவரை) அஸ்ர் தொழவில்லை” என்று கூறினார்கள்.

பின்னர் ‘புத்ஹான்’ எனும் பள்ளத் தாக்கை நோக்கி நாங்கள் சென்றோம். அங்கு தொழுகைக்காக நபி (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். நாங்களும் தொழுகைக்காக அங்கத் தூய்மை (உளூ) செய்தோம். சூரியன் மறைந்தபிறகு அஸ்ர் தொழுதார்கள். அதன் பின்னர் மஃக்ரிப் தொழுதார்கள். (அவர்களுக்குப்பின் நின்று நாங்களும் தொழுதோம்).

அத்தியாயம் : 9
597. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، وَمُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالاَ حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ نَسِيَ صَلاَةً فَلْيُصَلِّ إِذَا ذَكَرَهَا، لاَ كَفَّارَةَ لَهَا إِلاَّ ذَلِكَ "". {وَأَقِمِ الصَّلاَةَ لِذِكْرِي} قَالَ مُوسَى قَالَ هَمَّامٌ سَمِعْتُهُ يَقُولُ بَعْدُ {وَأَقِمِ الصَّلاَةَ لِذِكْرِي}.وَقَالَ حَبَّانُ حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، حَدَّثَنَا أَنَسٌ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ.
பாடம் : 37 ஒரு தொழுகையை ஒருவர் தொழ மறந்துவிட்டால் நினைவு வந்ததும் அதை அவர் தொழ வேண்டும். அந்தத் தொழுகை யைத் தவிர (கூடுதலாக) வேறு எதையும் தொழ வேண்டிய தில்லை. ஒருவர் ஒரு தொழுகையைத் தொழாமல் இருபது ஆண்டு இருந்து விட்டாலும் (விடுபட்ட) அந்த ஒரே தொழுகையைத் தவிர வேறு எதையும் அவர் திரும்பத் தொழ வேண்டியதில்லை என இப்ராஹீம் (பின் யஸீத் அந்நகஈ -ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
597. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாரேனும் ஒரு தொழுகையை(த் தொழ) மறந்துவிட்டால் அதன் நினைவு வந்ததும் அவர் அதைத் தொழட்டும்! இதைத் தவிர அதற்கு வேறு பரிகாரம் ஏதுமில்லை. (அல்லாஹ் கூறுகின்றான்:) என்னை நினைவுகூரும் பொருட்டு தொழு கையை நிலைநிறுத்துவீராக. (20:14)30

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹம்மாம் பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(மேற்கண்ட வசனத்தின் மூலத்திலுள்ள ‘வஅகிமிஸ் ஸலாத்த -திக்ரீ’ எனும் வாக்கியத்தை) கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்கள் மற்றொரு சந்தர்ப்பத்தில் ‘வ அகிமிஸ் ஸலாத்த -த்திக்ரா’ என்று ஓதக் கேட்டேன். (பொருள் ஒன்றே.)

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 9
598. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامٍ، قَالَ حَدَّثَنَا يَحْيَى ـ هُوَ ابْنُ أَبِي كَثِيرٍ ـ عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ جَابِرٍ، قَالَ جَعَلَ عُمَرُ يَوْمَ الْخَنْدَقِ يَسُبُّ كُفَّارَهُمْ وَقَالَ مَا كِدْتُ أُصَلِّي الْعَصْرَ حَتَّى غَرَبَتْ. قَالَ فَنَزَلْنَا بُطْحَانَ، فَصَلَّى بَعْدَ مَا غَرَبَتِ الشَّمْسُ، ثُمَّ صَلَّى الْمَغْرِبَ.
பாடம் : 38 விடுபட்ட தொழுகைகளை முந்தையது அதற்கடுத்தது என (ஒன்றன்பின் ஒன்றாகத்) தொழுவது
598. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அகழ்ப் போரின்போது உமர் (ரலி) அவர்கள் (தங்களுடன் போரிட்ட குறைஷி) இறைமறுப்பாளர்களை ஏசிக் கொண்டே (வந்து), “சூரியன் மறையத் தொடங்கும்வரை என்னால் அஸ்ர் தொழுகையைத் தொழ முடியாமல் போய் விட்டது” என்று கூறினார்கள். எனவே, நாங்கள் ‘புத்ஹான்’ எனும் பள்ளத்தாக்கில் இறங்கினோம். சூரியன் மறைந்த பின்னர் (எங்களுக்கு இமாமாக நின்று) நபி (ஸல்) அவர்கள் (முத-ல் அஸ்ர் தொழுகை யைத்) தொழுதார்கள். பின்னர் மஃக்ரிப் தொழுகையைத் தொழு(வித்)தார்கள்.

அத்தியாயம் : 9
599. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، قَالَ حَدَّثَنَا عَوْفٌ، قَالَ حَدَّثَنَا أَبُو الْمِنْهَالِ، قَالَ انْطَلَقْتُ مَعَ أَبِي إِلَى أَبِي بَرْزَةَ الأَسْلَمِيِّ فَقَالَ لَهُ أَبِي حَدِّثْنَا كَيْفَ، كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي الْمَكْتُوبَةَ قَالَ كَانَ يُصَلِّي الْهَجِيرَ وَهْىَ الَّتِي تَدْعُونَهَا الأُولَى حِينَ تَدْحَضُ الشَّمْسُ، وَيُصَلِّي الْعَصْرَ، ثُمَّ يَرْجِعُ أَحَدُنَا إِلَى أَهْلِهِ فِي أَقْصَى الْمَدِينَةِ وَالشَّمْسُ حَيَّةٌ، وَنَسِيتُ مَا قَالَ فِي الْمَغْرِبِ. قَالَ وَكَانَ يَسْتَحِبُّ أَنْ يُؤَخِّرَ الْعِشَاءَ. قَالَ وَكَانَ يَكْرَهُ النَّوْمَ قَبْلَهَا وَالْحَدِيثَ بَعْدَهَا، وَكَانَ يَنْفَتِلُ مِنْ صَلاَةِ الْغَدَاةِ حِينَ يَعْرِفُ أَحَدُنَا جَلِيسَهُ، وَيَقْرَأُ مِنَ السِّتِّينَ إِلَى الْمِائَةِ.
பாடம் : 39 இஷா தொழுகைக்குப் பிறகு (உறங்காமல்) பேசிக்கொண்டி ருப்பது விரும்பத் தகாத செயலாகும்.
599. அபுல் மின்ஹால் (சய்யார் பின் சலாமா-ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நானும் என் தந்தையும் அபூபர்ஸா அல்அஸ்லமீ (நள்லா பின் உபைத்-ர-) அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்களிடம் என் தந்தை, “கடமையான தொழுகைகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எவ்வாறு (எந்நேரத்தில்) தொழுவார்கள் என்று எங்களுக்கு அறிவியுங்கள்” எனக் கேட்டார்கள். அதற்கு அபூபர்ஸா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் ‘முதல் தொழுகை’ என்று அழைக்கும் நண்பகல் (லுஹ்ர்) தொழுகையைச் சூரியன் (நடுவானி-ருந்து மேற்கு நோக்கி) சாயும்போது நபி (ஸல்) அவர்கள் தொழுவார்கள்.

(பின்னர்) அஸ்ர் தொழுகையைத் தொழுவார்கள். எங்களில் ஒருவர் (அஸ்ர் தொழுகையைத் தொழுதுவிட்டு) மதீனா வின் கடைக் கோடியிலுள்ள தமது இல்லத்திற்குத் திரும்பிச் சென்றுவிடுவார். அப்போதும் சூரியன் (வெளிச்சமோ வெப்பமோ குறையாமல்) தெளிவாக இருந்துகொண்டிருக்கும்.

-மஃக்ரிப் தொழுகை(யின் நேரம்) பற்றி அபூபர்ஸா (ரலி) அவர்கள் (கூறினார்கள்; ஆனால், அவர்கள்) கூறியதை நான் மறந்துவிட்டேன்.-

இஷா தொழுகையைப் பிற்படுத்து வதையே நபி (ஸல்) அவர்கள் விரும்பு வார்கள். இஷா தொழுகைக்குமுன் உறங்குவதையும் இஷா தொழுகைக்குப் பின் பேசிக்கொண்டிருப்பதையும் நபி (ஸல்) அவர்கள் வெறுப்பார்கள்.

எங்களில் ஒருவர் தம் அருகில் அமர்ந்திருப்பவரை அறிந்துகொள்ளும் (அளவுக்கு வெளிச்சம் வந்துவிடும்) நேரத்தில் வைகறைத் தொழுகை (சுப்ஹு தொழுகை)யை முடித்துத் திரும்புவார்கள். (வைகறைத் தொழுகையில்) அறுபது (வசனங்கள்) முதல் நூறு (வசனங்கள்)வரை ஓதுவார்கள்.31

அத்தியாயம் : 9
600. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الصَّبَّاحِ، قَالَ حَدَّثَنَا أَبُو عَلِيٍّ الْحَنَفِيُّ، حَدَّثَنَا قُرَّةُ بْنُ خَالِدٍ، قَالَ انْتَظَرْنَا الْحَسَنَ وَرَاثَ عَلَيْنَا حَتَّى قَرُبْنَا مِنْ وَقْتِ قِيَامِهِ، فَجَاءَ فَقَالَ دَعَانَا جِيرَانُنَا هَؤُلاَءِ. ثُمَّ قَالَ قَالَ أَنَسٌ نَظَرْنَا النَّبِيَّ صلى الله عليه وسلم ذَاتَ لَيْلَةٍ حَتَّى كَانَ شَطْرُ اللَّيْلِ يَبْلُغُهُ، فَجَاءَ فَصَلَّى لَنَا، ثُمَّ خَطَبَنَا فَقَالَ "" أَلاَ إِنَّ النَّاسَ قَدْ صَلَّوْا ثُمَّ رَقَدُوا، وَإِنَّكُمْ لَمْ تَزَالُوا فِي صَلاَةٍ مَا انْتَظَرْتُمُ الصَّلاَةَ "". قَالَ الْحَسَنُ وَإِنَّ الْقَوْمَ لاَ يَزَالُونَ بِخَيْرٍ مَا انْتَظَرُوا الْخَيْرَ. قَالَ قُرَّةُ هُوَ مِنْ حَدِيثِ أَنَسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 40 இஷா தொழுகைக்குப் பிறகு மார்க்கச் சட்டங்கள், நல்ல விஷயங்கள் பற்றிப் பேசிக்கொண்டிருப்பது
600. குர்ரா பின் கா-த் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (ஒரு நாள் இரவு) ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) (அவர்களிடம் மார்க்கக் கல்வி பயில) அவர்களை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தோம். அவர்கள் (வழக்கத்திற்கு மாறாக அன்று) எங்களிடம் தாமதமாக வந்தார்கள். எந்த அளவுக்கென்றால், (வழக்கமாக அவர்கள் எங்களுடன் அமர்ந்துவிட்டு) எழுந்து செல்லும் நேரமும் நெருங்கியது.

அப்போது அவர்கள் வந்து, “எம்முடைய இந்த அண்டை வீட்டார் எம்மை அழைத்தனர் (அதனால் தாமதம் ஏற்பட்டுவிட்டது)” என்று கூறிவிட்டு (பின்வருமாறு) சொன்னார்கள்:

அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நாங்கள் ஒரு (நாள்) இரவில் (இஷா தொழுகைக்காக) நபி (ஸல்) அவர்களை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தோம். நள்ளிரவு நேரம் ஆகும்போது நபி (ஸல்) அவர்கள் வந்து எங்களுக்கு இஷா தொழுகை நடத்தினார்கள். பின்னர் எங்களுக்கு உரையாற்றினார்கள்.

அப்போது அவர்கள், “அறிந்து கொள்ளுங்கள்: (உங்களைத் தவிர மற்ற) மக்கள் அனைவரும் தொழுதுவிட்டு உறங்கிவிட்டனர். நீங்கள் தொழுகையை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும்வரை அத்தொழுகையில் நீங்கள் உள்ளீர்கள் (என்றே கருதப்படும்)” என்று கூறினார்கள்.

தொடர்ந்து ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு நன்மையை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும்வரை மக்கள் அந்த நன்மையிலேயே இருக்கிறார்கள்.

அறிவிப்பாளர் குர்ரா பின் கா-த் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இ(ந்த இறுதி கூற்றான)து, நபி (ஸல்) அவர்களிடமிருந்து அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்த ஹதீஸில் உள்ளதாகும்.


அத்தியாயம் : 9
601. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي حَثْمَةَ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، قَالَ صَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم صَلاَةَ الْعِشَاءِ فِي آخِرِ حَيَاتِهِ، فَلَمَّا سَلَّمَ قَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ "" أَرَأَيْتَكُمْ لَيْلَتَكُمْ هَذِهِ فَإِنَّ رَأْسَ مِائَةٍ لاَ يَبْقَى مِمَّنْ هُوَ الْيَوْمَ عَلَى ظَهْرِ الأَرْضِ أَحَدٌ "". فَوَهِلَ النَّاسُ فِي مَقَالَةِ رَسُولِ اللَّهِ ـ عَلَيْهِ السَّلاَمُ ـ إِلَى مَا يَتَحَدَّثُونَ مِنْ هَذِهِ الأَحَادِيثِ عَنْ مِائَةِ سَنَةٍ، وَإِنَّمَا قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لاَ يَبْقَى مِمَّنْ هُوَ الْيَوْمَ عَلَى ظَهْرِ الأَرْضِ "" يُرِيدُ بِذَلِكَ أَنَّهَا تَخْرِمُ ذَلِكَ الْقَرْنَ.
பாடம் : 40 இஷா தொழுகைக்குப் பிறகு மார்க்கச் சட்டங்கள், நல்ல விஷயங்கள் பற்றிப் பேசிக்கொண்டிருப்பது
601. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளின் இறுதி நாட்களில் (ஒரு நாள்) இஷா தொழுகை நடத்தினார்கள். சலாம் கொடுத்(து தொழுகையை முடித்)ததும் எழுந்து நின்று, “இந்த இரவைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? (இன்றிலிருந்து) நூறாம் ஆண்டின் துவக்கத்தில், இன்று பூமியில் இருக்கும் யாரும் எஞ்சியிருக்கமாட்டார் கள்” என்று கூறினார்கள்.

மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஹதீஸ் களில் நூறாண்டைப் பற்றிய இந்த ஹதீஸைத் தவறாகப் புரிந்து(கொண்டு, நூறு ஆண்டுகளுக்குப்பின் உலகம் அழிந்து விடும்போலும் என்று புரிந்து)கொண்டனர். நபி (ஸல்) அவர்கள் கூறியது, இன்று பூமியில் இருப்பவர்களில் யாரும் நூறு ஆண்டுகளுக்குப்பின் இருக்கமாட்டார்கள் என்ற பொருளில்தான்.32

அத்தியாயம் : 9
602. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، قَالَ حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا أَبُو عُثْمَانَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ، أَنَّ أَصْحَابَ الصُّفَّةِ، كَانُوا أُنَاسًا فُقَرَاءَ، وَأَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ كَانَ عِنْدَهُ طَعَامُ اثْنَيْنِ فَلْيَذْهَبْ بِثَالِثٍ، وَإِنْ أَرْبَعٌ فَخَامِسٌ أَوْ سَادِسٌ "". وَأَنَّ أَبَا بَكْرٍ جَاءَ بِثَلاَثَةٍ فَانْطَلَقَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِعَشَرَةٍ، قَالَ فَهْوَ أَنَا وَأَبِي وَأُمِّي، فَلاَ أَدْرِي قَالَ وَامْرَأَتِي وَخَادِمٌ بَيْنَنَا وَبَيْنَ بَيْتِ أَبِي بَكْرٍ. وَإِنَّ أَبَا بَكْرٍ تَعَشَّى عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم ثُمَّ لَبِثَ حَيْثُ صُلِّيَتِ الْعِشَاءُ، ثُمَّ رَجَعَ فَلَبِثَ حَتَّى تَعَشَّى النَّبِيُّ صلى الله عليه وسلم فَجَاءَ بَعْدَ مَا مَضَى مِنَ اللَّيْلِ مَا شَاءَ اللَّهُ، قَالَتْ لَهُ امْرَأَتُهُ وَمَا حَبَسَكَ عَنْ أَضْيَافِكَ ـ أَوْ قَالَتْ ضَيْفِكَ ـ قَالَ أَوَمَا عَشَّيْتِيهِمْ قَالَتْ أَبَوْا حَتَّى تَجِيءَ، قَدْ عُرِضُوا فَأَبَوْا. قَالَ فَذَهَبْتُ أَنَا فَاخْتَبَأْتُ فَقَالَ يَا غُنْثَرُ، فَجَدَّعَ وَسَبَّ، وَقَالَ كُلُوا لاَ هَنِيئًا. فَقَالَ وَاللَّهِ لاَ أَطْعَمُهُ أَبَدًا، وَايْمُ اللَّهِ مَا كُنَّا نَأْخُذُ مِنْ لُقْمَةٍ إِلاَّ رَبَا مِنْ أَسْفَلِهَا أَكْثَرُ مِنْهَا. قَالَ يَعْنِي حَتَّى شَبِعُوا وَصَارَتْ أَكْثَرَ مِمَّا كَانَتْ قَبْلَ ذَلِكَ، فَنَظَرَ إِلَيْهَا أَبُو بَكْرٍ فَإِذَا هِيَ كَمَا هِيَ أَوْ أَكْثَرُ مِنْهَا. فَقَالَ لاِمْرَأَتِهِ يَا أُخْتَ بَنِي فِرَاسٍ مَا هَذَا قَالَتْ لاَ وَقُرَّةِ عَيْنِي لَهِيَ الآنَ أَكْثَرُ مِنْهَا قَبْلَ ذَلِكَ بِثَلاَثِ مَرَّاتٍ. فَأَكَلَ مِنْهَا أَبُو بَكْرٍ وَقَالَ إِنَّمَا كَانَ ذَلِكَ مِنَ الشَّيْطَانِ ـ يَعْنِي يَمِينَهُ ـ ثُمَّ أَكَلَ مِنْهَا لُقْمَةً، ثُمَّ حَمَلَهَا إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَصْبَحَتْ عِنْدَهُ، وَكَانَ بَيْنَنَا وَبَيْنَ قَوْمٍ عَقْدٌ، فَمَضَى الأَجَلُ، فَفَرَّقَنَا اثْنَا عَشَرَ رَجُلاً، مَعَ كُلِّ رَجُلٍ مِنْهُمْ أُنَاسٌ، اللَّهُ أَعْلَمُ كَمْ مَعَ كُلِّ رَجُلٍ فَأَكَلُوا مِنْهَا أَجْمَعُونَ، أَوْ كَمَا قَالَ.
பாடம் : 41 விருந்தினருடனும் குடும்பத் தாருடனும் இரவில் பேசிக் கொண்டிருப்பது
602. அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

திண்ணைத் தோழர்கள் (அஸ்ஹாபுஸ் ஸுஃப்பா) ஏழை மக்களாக இருந்தார்கள். (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள், “யாரிடம் இரண்டு பேருக்கான உணவு உள்ளதோ, அவர் மூன்றாமவ(ராக திண்ணைத் தோழர் ஒருவ)ரை(த் தம்முடன்) அழைத்துச் செல்லட்டும். நான்கு பேருக்குரிய உணவு (யாராவது ஒருவரிடம்) இருந்தால், (அவர் தம்முடன்) ஐந்தாமவரையும் (ஐந்து பேருக்குரிய உணவு இருந்தால்) ஆறாமவரையும் அழைத்துச் செல்லட்டும்” என்று கூறினார்கள்.

(என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் (திண்ணைத் தோழர்கள்) மூவருடன் (இல்லத்திற்கு) வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் பத்துப் பேருடன் (தம் இல்லம் நோக்கி) நடந்தார்கள்.

(என் தந்தை வீட்டுக்கு வந்தபோது வீட்டில்) நானும் (அப்துர் ரஹ்மான்), என் தந்தையும் (அபூபக்ர்), என் தாயும் (உம்மு ரூமான்), எங்கள் வீட்டுக்கும் (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்களின் வீட்டுக்கும் கூட்டாகப் பணிபுரிந்துவந்த பணியாளரும் தான் இருந்தோம்.

-இதன் அறிவிப்பாளரான அபூ உஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

‘என் மனைவியும்... (இருந்தார்)’ என அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்களா என்பது எனக்கு (உறுதியாக)த் தெரியவில்லை (சந்தேகமாகவே இருக்கிறது).

அபூபக்ர் (ரலி) அவர்கள் (விருந்தினருக்கு உணவளிக்குமாறு தம் வீட்டாரிடம் கூறிவிட்டு), நபி (ஸல்) அவர்களிடம் (சென்று) இரவு உணவு அருந்தினார்கள். பிறகு இஷா தொழுகை நடைபெறும்வரை அங்கேயே இருந்துவிட்டுப் பிறகு நபி (ஸல்) அவர்கள் இரவு உணவு அருந்தும்வரை காத்திருந்துவிட்டு, இரவில் அல்லாஹ் நாடிய ஒரு பகுதி கழிந்தபிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் (தம் வீட்டுக்கு) வந்தார்கள்.

அவர்களுடைய துணைவியார் (என் தாயார்) அபூபக்ர் (ரலி) அவர்களிடம், “உங்கள் விருந்தாளிகளை’ அல்லது ‘உங்கள் விருந்தாளியை’ (உபசரிக்க வராமல்) தாமதமானதற்கு என்ன காரணம்?” என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள், “விருந்தினருக்கு நீ உணவளிக்கவில்லையா?” என்று கேட்டார்கள்.



அதற்கு என் தாயார், “நீங்கள் வரும் வரை உண்ணமாட்டோம் என்று அவர்கள் மறுத்துவிட்டார்கள். அவர்களிடம் எடுத்துச்சொல்-யும் அவர்கள் (உண்ண) மறுத்துவிட்டார்கள்” என்று பதிலளித்தார்கள்.

(என் தந்தை அபூபக்ர் (ரலி) அவர்கள், நான் விருந்தாளிகளைச் சரியாகக் கவ னிக்கவில்லை என்று என்னைக் கண்டிப்பார்கள் என்று அஞ்சி) நான் சென்று ஒளிந்துகொண்டேன்.

அப்போது (என் தந்தை) அபூபக்ர்

(ரலி) அவர்கள், ‘தடியா!’ (என்றழைத்து என்னை) ‘உன் மூக்கறுந்து போக!’ என்று கூறி ஏசினார்கள்.

(அவர்கள் உணவருந்த தாமதமான தற்கு அவர்களே காரணம் என்று அறிந்து கொண்டபோது) “மகிழ்ச்சியாக இல்லை; நீங்கள் உண்ணுங்கள்” என்று (தம் விருந்தி னரிடம்) கூறிவிட்டு, (தம் வீட்டாரை நோக்கி, “என்னை எதிர்பார்த்துத்தானே இவ்வளவு நேரம் தாமதம் செய்தீர்கள்!) அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒருபோதும் இதை உண்ணப் போவ தில்லை” என்று சொன்னார்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் (பாத்திரத்தி-ருந்து) ஒரு கவள உணவை எடுக்கும்போதெல்லாம் அதன் கீழ்ப் பகுதியி-ருந்து அதைவிட அதிகமாக உணவு பெருகியது. இறுதியில் அவர்கள் அனைவரும் வயிறார உண்டனர். அப்போது அந்த உணவு முன்பிருந்ததைவிடக் கூடுதலாகிவிட்டிருந்தது. அபூபக்ர் (ரலி) அவர்கள் அ(ந்த பாத்திரத்)தைப் பார்த்தார்கள். அப்போது அது முன்பிருந்த அளவு, அல்லது அதைவிட அதிகமாகக் காணப்பட்டது.

உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் தம் துணைவியாரிடம் (என் தாயாரிடம்), “பனூ ஃபிராஸ் குலமகளே! என்ன இது?” என்று வினவ, அதற்கு என் தாயார், “எனது கண்குளிர்ச்சியின் மீதாணையாக! இது முன்பிருந்ததைவிட இப்போது மூன்று மடங்கு அதிகமாகிவிட்டிருக்கிறது” என்று சொன்னார்கள்.

அதி-ருந்து அபூபக்ர் (ரலி) அவர்களும் உண்டார்கள். மேலும், தமது சத்தியம் குறித்து, “(நான் ஒருபோதும் இதை உண்ணமாட்டேன் என்று என்னை சத்தியம் செய்ய வைத்தது) ஷைத்தான் தான்” என்று கூறிவிட்டு, அதி-ருந்து இன்னும் ஒரு கவளம் உண்டார்கள். பிறகு அ(ந்தப் பாத்திரத்)தை எடுத்துக்கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். பிறகு அது நபி (ஸல்) அவர்களிடம் இருக்கலாயிற்று.

(அப்போது) எங்களுக்கும் ஒரு சமுதாயத்திற்கும் இடையே சமாதான ஒப்பந்தம் இருந்துவந்தது. அந்த ஒப்பந்த தவணை முடிவுற்றது. (இனி அவர்கள் போருக்கு வந்தால், அவர்களை எதிர் கொள்வதற்காக) நபி (ஸல்) அவர்கள் எங்களைப் பன்னிரண்டு பேராகப் பிரித்து ஒவ்வொருவரிடமும் சில படை வீரர்களை ஒப்படைத்தார்கள்.

ஒவ்வொருவருடனும் எத்தனை பேர் இருந்தனர் என்பதை அல்லாஹ்வே அறிவான். (அவ்வளவு பெரிய படையினருடன் அந்த உணவுப் பாத்திரத்தையும் கொடுத்தனுப்பினார்கள்.) அவர்கள் அனைவரும் அதிலிருந்து உண்டனர். (இவ்வாறோ அல்லது) வேறொரு முறையிலோ இதை அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் என அறிவிப்பாளர் அபூஉஸ்மான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.33

அத்தியாயம் : 9