4635. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا عُمَارَةُ، حَدَّثَنَا أَبُو زُرْعَةَ، حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ، رضى الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا، فَإِذَا رَآهَا النَّاسُ آمَنَ مَنْ عَلَيْهَا، فَذَاكَ حِينَ لاَ يَنْفَعُ نَفْسًا إِيمَانُهَا، لَمْ تَكُنْ آمَنَتْ مِنْ قَبْلُ ".
பாடம் : 8
(6:102ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “வ(க்)கீல்' எனும் சொல்லுக்கு “கண்காணித்துப் பாதுகாப்பவன்' என்பது பொருள்.
(6:111ஆவது வசனத்தின் மூலத்திலுள்) “குபுல்' எனும் சொல் கபீல் எனும் சொல்லின் பன்மையாகும். “பல வகை வேதனைகள்' என்பது அதன் பொருளாகும். ஒவ்வொரு வகையும் “கபீல்' எனப்படும்.
(6:112ஆவது வசனத்தின் மூலத் திலுள்ள) “ஸுக்ருஃபுல் கவ்ல்' எனும் சொற்றொடரானது, எழிலூட்டி அலங் கரித்துக்காட்டும் எல்லா போலிகளையும் குறிக்கும்.
(6:138ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) “ஹிஜ்ர்' எனும் சொல்லுக்கு “தடுக்கப்பட்டது' என்பது பொருள். தடை விதிக்கப்பட்ட எல்லாப் பொருட்களுக்கும் “ஹிஜ்ருன் மஹ்ஜூர்' எனப்படும். நீ கட்டி முடித்த கட்டடங்களுக்கும் “அல்ஹிஜ்ர்' எனலாம். பெட்டைக் குதிரையும் “ஹிஜ்ர்' எனப்படுகிறது. (அதைப் போன்று) அறிவுக்கும் “ஹிஜ்ர்' என்றும், “ஹிஜா' என்றும் சொல்லப்படுவதுண்டு.
“ஸமூத்' குலத்தார் வாழ்ந்த பகுதியும் “ஹிஜ்ர்' எனப்படுவதுண்டு.
தரையில் நீ பிரித்துவிட்ட பகுதியும் “ஹிஜ்ர்' எனப்படும். இதனால்தான், இறையில்லம் கஅபாவை ஒட்டியுள்ள “ஹத்தீம்' (எனும் வில் வடிவ அமைப்பிலுள்ள கால் வட்டச் சுவரும்) “ஹிஜ்ர்' (பிரிக்கப்பட்டது) எனப்படுகிறது.
(“ஃபஈல்' எனும் வாய்பாட்டில் அமைந்த இந்த) “ஹத்தீம்' எனும் சொல் (செயப்பாட்டுவினை எச்சமான) “மஹ்த்தூம்' (பிரிக்கப்பட்டது) என்ற பொருள் கொண்டதாகும். “கத்தீல்' என்பதற்கு “மக்த்தூல்' (கொல்லப்பட்டவன்) உடைய பொருள் இருப்பதைப் போல.
யமாமாவின் “ஹஜ்ர்' என்பது, (யமனுக்கும் ஹிஜாஸுக்கும் இடையிலுள்ள) ஒரு பகுதியாகும்.
பாடம் : 9
“உங்கள் சாட்சிகளைக் கொண்டுவாருங்கள்” எனும் (6:150ஆவது) வசனத்தொடர்
(இவ்வசனத்தின் மூலத்திலுள்ள) “ஹலும்ம' (கொண்டுவாருங்கள்) எனும் சொல் ஹிஜாஸ்வாசிகளின் மொழி வழக்குப்படி ஒருமைக்கும் இருமைக்கும் பன்மைக்கும் ஆக, அனைத்துக்குமே பயன்படுத்தப்படுவதாகும்.
பாடம் : 10
உம்முடைய இறைவனின் சான்றுகள் சில வெளிப்படும் (யுகமுடிவு) நாளன்று, முன்னரே இறைநம்பிக்கை கொள்ளா திருந்த மனிதருக்கோ, அல்லது இறைநம்பிக்கை கொண்டிருந் தாலும் அதற்கேற்ப நன்மை புரியாதிருந்த மனிதருக்கோ அவர் (அப்போது) இறைநம்பிக்கை கொள்வது எவ்விதப் பயனையும் அளிக்காது (எனும் 6:158ஆவது வசனத்தொடர்)
4635. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சூரியன் மேற்குத் திசையிலிருந்து உதயமாகாத வரை மறுமை நாள் வராது. அவ்வாறு மேற்கில் உதயமாவதை மக்கள் பார்க்கும்போது, பூமியின் மீதிருப்பவர்கள் இறைநம்பிக்கை கொள்வார்கள். அதற்கு முன் இறைநம்பிக்கை கொள்ளாமலிருந்த எந்த மனிதருக்கும் அவர் (அப்போது) கொள்ளும் இறைநம்பிக்கை பயனளிக்காத வேளையாய் அது இருக்கும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 65
4635. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சூரியன் மேற்குத் திசையிலிருந்து உதயமாகாத வரை மறுமை நாள் வராது. அவ்வாறு மேற்கில் உதயமாவதை மக்கள் பார்க்கும்போது, பூமியின் மீதிருப்பவர்கள் இறைநம்பிக்கை கொள்வார்கள். அதற்கு முன் இறைநம்பிக்கை கொள்ளாமலிருந்த எந்த மனிதருக்கும் அவர் (அப்போது) கொள்ளும் இறைநம்பிக்கை பயனளிக்காத வேளையாய் அது இருக்கும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 65
4636. حَدَّثَنِي إِسْحَاقُ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا فَإِذَا طَلَعَتْ وَرَآهَا النَّاسُ آمَنُوا أَجْمَعُونَ، وَذَلِكَ حِينَ لاَ يَنْفَعُ نَفْسًا إِيمَانُهَا ". ثُمَّ قَرَأَ الآيَةَ.
பாடம் : 8
(6:102ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “வ(க்)கீல்' எனும் சொல்லுக்கு “கண்காணித்துப் பாதுகாப்பவன்' என்பது பொருள்.
(6:111ஆவது வசனத்தின் மூலத்திலுள்) “குபுல்' எனும் சொல் கபீல் எனும் சொல்லின் பன்மையாகும். “பல வகை வேதனைகள்' என்பது அதன் பொருளாகும். ஒவ்வொரு வகையும் “கபீல்' எனப்படும்.
(6:112ஆவது வசனத்தின் மூலத் திலுள்ள) “ஸுக்ருஃபுல் கவ்ல்' எனும் சொற்றொடரானது, எழிலூட்டி அலங் கரித்துக்காட்டும் எல்லா போலிகளையும் குறிக்கும்.
(6:138ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) “ஹிஜ்ர்' எனும் சொல்லுக்கு “தடுக்கப்பட்டது' என்பது பொருள். தடை விதிக்கப்பட்ட எல்லாப் பொருட்களுக்கும் “ஹிஜ்ருன் மஹ்ஜூர்' எனப்படும். நீ கட்டி முடித்த கட்டடங்களுக்கும் “அல்ஹிஜ்ர்' எனலாம். பெட்டைக் குதிரையும் “ஹிஜ்ர்' எனப்படுகிறது. (அதைப் போன்று) அறிவுக்கும் “ஹிஜ்ர்' என்றும், “ஹிஜா' என்றும் சொல்லப்படுவதுண்டு.
“ஸமூத்' குலத்தார் வாழ்ந்த பகுதியும் “ஹிஜ்ர்' எனப்படுவதுண்டு.
தரையில் நீ பிரித்துவிட்ட பகுதியும் “ஹிஜ்ர்' எனப்படும். இதனால்தான், இறையில்லம் கஅபாவை ஒட்டியுள்ள “ஹத்தீம்' (எனும் வில் வடிவ அமைப்பிலுள்ள கால் வட்டச் சுவரும்) “ஹிஜ்ர்' (பிரிக்கப்பட்டது) எனப்படுகிறது.
(“ஃபஈல்' எனும் வாய்பாட்டில் அமைந்த இந்த) “ஹத்தீம்' எனும் சொல் (செயப்பாட்டுவினை எச்சமான) “மஹ்த்தூம்' (பிரிக்கப்பட்டது) என்ற பொருள் கொண்டதாகும். “கத்தீல்' என்பதற்கு “மக்த்தூல்' (கொல்லப்பட்டவன்) உடைய பொருள் இருப்பதைப் போல.
யமாமாவின் “ஹஜ்ர்' என்பது, (யமனுக்கும் ஹிஜாஸுக்கும் இடையிலுள்ள) ஒரு பகுதியாகும்.
பாடம் : 9
“உங்கள் சாட்சிகளைக் கொண்டுவாருங்கள்” எனும் (6:150ஆவது) வசனத்தொடர்
(இவ்வசனத்தின் மூலத்திலுள்ள) “ஹலும்ம' (கொண்டுவாருங்கள்) எனும் சொல் ஹிஜாஸ்வாசிகளின் மொழி வழக்குப்படி ஒருமைக்கும் இருமைக்கும் பன்மைக்கும் ஆக, அனைத்துக்குமே பயன்படுத்தப்படுவதாகும்.
பாடம் : 10
உம்முடைய இறைவனின் சான்றுகள் சில வெளிப்படும் (யுகமுடிவு) நாளன்று, முன்னரே இறைநம்பிக்கை கொள்ளா திருந்த மனிதருக்கோ, அல்லது இறைநம்பிக்கை கொண்டிருந் தாலும் அதற்கேற்ப நன்மை புரியாதிருந்த மனிதருக்கோ அவர் (அப்போது) இறைநம்பிக்கை கொள்வது எவ்விதப் பயனையும் அளிக்காது (எனும் 6:158ஆவது வசனத்தொடர்)
4636. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “சூரியன் மேற்குத் திசையிலிருந்து உதயமாகாத வரை யுக முடிவு நாள் வராது. சூரியன் (மேற்குத் திசையில்) உதயமாகி மக்கள் அதைப் பார்க்கும்போது அவர்கள் அனைவருமே இறைநம்பிக்கை கொள்வார்கள். அது, எந்த மனிதருக்கும் அவரது (அப்போதைய புதிய) இறைநம்பிக்கை பயனளிக்காத நேரமாகும்” என்று கூறிவிட்டு, “உம்முடைய இறைவனின் சான்றுகள் சில வெளிப்படும் (யுகமுடிவு) நாளில் முன்னரே இறைநம்பிக்கை கொள்ளாதிருந்த மனிதருக்கும், அல்லது இறைநம்பிக்கை கொண்டிருந்தும் அதற்கேற்ப நன்மை புரியாதிருந்த மனிதருக்கும் அவர் (அப்போது) இறைநம்பிக்கை கொள்வது எவ்விதப் பயனையும் அளிக்காது” எனும் இந்த (6:158ஆவது) வசனத்தை ஓதினார்கள்.14
அத்தியாயம் : 65
4636. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “சூரியன் மேற்குத் திசையிலிருந்து உதயமாகாத வரை யுக முடிவு நாள் வராது. சூரியன் (மேற்குத் திசையில்) உதயமாகி மக்கள் அதைப் பார்க்கும்போது அவர்கள் அனைவருமே இறைநம்பிக்கை கொள்வார்கள். அது, எந்த மனிதருக்கும் அவரது (அப்போதைய புதிய) இறைநம்பிக்கை பயனளிக்காத நேரமாகும்” என்று கூறிவிட்டு, “உம்முடைய இறைவனின் சான்றுகள் சில வெளிப்படும் (யுகமுடிவு) நாளில் முன்னரே இறைநம்பிக்கை கொள்ளாதிருந்த மனிதருக்கும், அல்லது இறைநம்பிக்கை கொண்டிருந்தும் அதற்கேற்ப நன்மை புரியாதிருந்த மனிதருக்கும் அவர் (அப்போது) இறைநம்பிக்கை கொள்வது எவ்விதப் பயனையும் அளிக்காது” எனும் இந்த (6:158ஆவது) வசனத்தை ஓதினார்கள்.14
அத்தியாயம் : 65
4637. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ قُلْتُ أَنْتَ سَمِعْتَ هَذَا مِنْ عَبْدِ اللَّهِ قَالَ نَعَمْ، وَرَفَعَهُ. قَالَ " لاَ أَحَدَ أَغْيَرُ مِنَ اللَّهِ، فَلِذَلِكَ حَرَّمَ الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ، وَلاَ أَحَدَ أَحَبُّ إِلَيْهِ الْمِدْحَةُ مِنَ اللَّهِ، فَلِذَلِكَ مَدَحَ نَفْسَهُ ".
பாடம்:
7. “அல்அஃராஃப்' அத்தியாயம்1
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(7:26ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள “ரீஷ்' எனும் சொல், மற்றோர் ஓதல் முறையில் “ரியாஷ்' என்று வந்துள்ளது. அந்த) “ரியாஷ்' எனும் சொல்லுக்கு “செல்வச் செழிப்பு' என்பது பொருள்.
(7:55ஆவது வசனத்தில் இடம்பெற்றுள்ள) “நிச்சயமாக அவன் எல்லை மீறுவோரை நேசிப்பதில்லை” எனும் தொடருக்கு, துஆ (பிரார்த்தனை) முதலானவற்றில் வரம்பு மீறுவோரை என்பது பொருள்.
(7:95ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அஃபவ்' எனும் சொல்லுக்கு, “அவர்களின் எண்ணிக்கையும் அவர்களது சொத்து பத்துக்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது” என்று பொருள்.
(7:89ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “இஃப்தஹ் பைனனா' எனும் சொற்றொடருக்கு, “எங்களிடையே தீர்ப்பளி' என்று பொருள். (இச்சொல்லில் இருந்து வந்த 34:26ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அல்ஃபத்தாஹ்' எனும் சொல்லுக்கு “தீர்ப்பளிப்பவன்' என்பது பொருள்.
(7:171ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “நத்தக்னல் ஜபல' எனும் வாக்கியத்திற்கு “அந்த (சினாய்) மலையை நாம் உயர்த்தினோம்' என்று பொருள்.
(7:160ஆவது வசனத்தில்) “பீறிட்டோடின' என்று குறிப்பிடப்பட்டுள்ள பொருள், மூலத்திலுள்ள “ஃபம்பஜஸத்' எனும் சொல்லுக்குரியதாகும்.
(7:139ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “முத்தப்பர்' எனும் சொல்லுக்கு “இழப்புக்குரியது' என்று பொருள்.
(7:93ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஆசா' எனும் சொல்லுக்கு “கவலைப்படுவேன்' என்று பொருள். (இதே இனச் சொல்லும், 5:26ஆவது வசனத்தின் மூலத்திலுள்ளதுமான) “தஃஸ' எனும் சொல்லுக்கு “கவலைப்படுதல்' என்பது பொருள்.
(இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அல்லாத) மற்றவர்கள் கூறுகிறார்கள்:
(7:12ஆவது வசனத்தில்) “நீ சிரம் பணியாதிருக்கும்படி உன்னைத் தடுத்தது எது?' என்று குறிப்பிடப்பட்டுள்ளதற்கு “நீ ஏன் சிரம் பணியவில்லை?' என்று பொருள்.
(7:22ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “யஃக்ஸிஃபானி' எனும் சொல்லுக்கு “அச்சோலையின் இலைகளை எடுத்துத் தங்களை மூடிக்கொள்ள அவர்கள் இருவரும் முயன்றனர்' என்று பொருள். அதாவது அந்த இலைகளில் ஒன்றோ டொன்றைக் கோத்துத் தங்க(ள் மறைவிடங்)களை மறைத்துக்கொள்ள முயன்றனர்'எனப் பொருள் விரியும்.
(இதே வசனத்திலுள்ள) “சவ்ஆத்' (மறைவிடங்கள்) எனும் சொல், அவர்களின் பிறவி உறுப்புகளைக் குறிப்பிடுகிறது.
(7:24ஆவது வசனத்திலுள்ள) “ஒரு காலம்வரை சுகம்' என்பது அப்போதிருந்து மறுமை நாள்வரை உள்ள காலத்தைக் குறிக்கிறது. “அல்ஹீன்' (காலம், நேரம்) எனும் சொல் அரபுகளிடம் சிறிது நேரம் முதல் எண்ணிறந்த காலம்வரை (எல்லா நேரத்தையும்) குறிக்கும்.
“ரியாஷ்' எனும் சொல்லும் (7:26ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ரீஷ்' எனும் சொல்லும் (“வெளிப்புற ஆடை' என்ற) ஒரே பொருள் கொண்டவை ஆகும்.
(7:27ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “கபீலுஹு' (அவனுடைய இனத்தார்) எனும் சொல், ஷைத்தானுடைய தலைமுறையைக் குறிக்கும்.
(7:38ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “இத்தாரகூ' எனும் சொல்லுக்கு “அவர்கள் குழுமினர்' என்பது பொருள்.
(7:40ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “சம்மு' எனும் சொல்லுக்கு “துவாரம்' என்பது பொருள். இதன் பன்மை “சுமூம்' என்பதாகும். மனிதன் மற்றும் கால்நடைகளின் (உடலிலுள்ள) அனைத்துத் துவாரங்களையும் இது குறிக்கும். அவையாவன: இரு கண்கள், நாசியின் இரு துளைகள், வாய், இரு காதுகள், ஆசனவாய், பிறவி உறுப்பு (ஆகிய உறுப்புகளின் துவாரங்கள்) ஆகும்.
(7:41ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஃகவாஷ்' எனும் சொல்லுக்கு “அவர்களுக்குப் போர்த்தப்படும் போர்வை' என்பது பொருள்.
(7:57ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள “புஷ்ரா- நற்செய்தி' எனும் சொல், மற்றோர் ஓதல் முறையில் “நுஷ்ரா' என்று வந்துள்ளது. அந்த) “நுஷ்ரா' எனும் சொல்லுக்கு “பரவலானது' என்று பொருள்.
(7:58ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “நகிதா' எனும் சொல்லுக்கு “சொற்பமானது' என்று பொருள்.
(7:92ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “யஃக்னவ்' எனும் சொல்லுக்கு “வாழ்வார்கள்' என்பது பொருள்.
(7:105ஆவது வசனத்தில்) “கடமை' என்று குறிப்பிடப்பட்டுள்ள பொருள், மூலத்திலுள்ள “ஹகீக்' எனும் சொல்லுக்குரியதாகும்.
(7:116ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “இஸ்தர்ஹபூஹும்' (அவர்களைத் திடுக்கிடச் செய்தனர்) என்பது “ரஹ்பத்' (திடுக்கம்) எனும் வேர்ச்சொல்லிலிருந்து பிறந்ததாகும்.
(7:117ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள “தல்கஃபு' எனும் சொல் மற்றோர் ஓதல் முறையில் “தலக்கஃபு' என்று வந்துள்ளது. அந்த) “தலக்கஃபு' எனும் சொல்லுக்கு, “விழுங்கிவிட்டது' என்று பொருள்.
(7:131ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “தாயிருஹும்' எனும் சொல்லுக்கு “அவர்களுக்கேற்பட்ட கதி' என்று பொருள்.
(7:133ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “தூஃபான்' எனும் சொல்லுக்கு “வெள்ளப் பெருக்கு' என்று பொருள். ஏராளமான உயிர்ச் சேதமும் “தூஃபான்' எனப்படுவதுண்டு.
(இதே வசனத்தின் மூலத்திலுள்ள) “கும்மல்' எனும் சொல், சிறு பூச்சி வகையான செடிப்பேனைக் குறிக்கும்.
(7:137ஆவது வசனத்தில் “மா கானூ யஅரிஷூன்' என்பதற்கு “அவர்கள் கட்டியிருந்த' என்பது பொருள். “யஅரிஷூன்' எனும் சொல்லின் பெயர்ச் சொற்களான) “உரூஷ்', “அரீஷ்' ஆகிய சொற்களுக்கு “கட்டடம்' என்பது பொருள்.
(7:149ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “சுகி(த்)த (ஃபீ அய்தீஹிம்)' எனும் சொல்லுக்கு “வருந்தினான்' என்பது பொருள். வருத்தப்படும் ஒவ்வொருவரையும் “சுகித்த ஃபீ யதிஹி' (கையில் தலையைக் கவிழ்த்தவன்) எனப்படும்.
(7:160ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அஸ்பாத்' எனும் சொல், இஸ்ராயீல் சந்ததிகளின் (பன்னிரு) குலங்களைக் குறிக்கும்.
(7:163ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “யஅதூன ஃபிஸ்ஸப்தி' என்பதற்கு “சனிக்கிழமையன்று எல்லை மீறிக்கொண்டிருந்தனர்' என்று பொருள். “தஅது' எனும் சொல்லுக்கு “நீ எல்லை மீறுகிறாய்' என்று பொருள்.
(இதே வசனத்தின் மூலத்திலுள்ள) “ஷுர்ரஅன்' எனும் சொல்லுக்கு “நீர் மட்டம்' என்பது பொருள்.
(7:165ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “பயீஸ்' எனும் சொல்லுக்கு “கடுமையானது' என்று பொருள்.
(7:176ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அக்லத இலல் அர்ள்' எனும் சொற்றொடருக்கு “அவன் இவ்வுலக (ஆசாபாச)த்தின்பால் சரிந்து முடங்கிக் கிடந்தான்' என்று பொருள்.
(7:182ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ச நஸ்தத்ரிஜுஹும்' எனும் சொல்லுக்கு, “அவர்கள் அச்சமற்று இருக்குமிடத்தில் நாம் அவர்களை (அழிக்க) வந்தோம்' என்று பொருள். “அவர்கள் எதிர்பார்க்காத வகையில் அல்லாஹ் அவர்களிடம் வந்(து அழித்)தான்” எனும் (59:2) வசனம் இதற்கு எடுத்துக்காட்டு ஆகும்.
(7:184ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “மின் ஜின்னத்' எனும் சொல்லுக்கு “பைத்தியம்' என்று பொருள்.
(7:187ஆவது வசத்தின் மூலத்திலுள்ள) “அய்யான முர்சாஹா' எனும் வாக்கியத்திற்கு, “மறுமையின் வருகை எப்போது?' என்று பொருள்.
(7:189ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஃப மர்ரத் பிஹி' எனும் வாக்கியத்திற்கு “அவர் (ஹவ்வா) கர்ப்பத்தைச் சுமந்துகொண்டேயிருந்து பூர்த்தி செய்தார்” என்று பொருள்.
(7:200ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “யன்ஸஃகன்னக்க' எனும் சொல்லுக்கு “உம்மைக் குழப்பமடையச் செய்தான்' என்று பொருள்.
(7:201ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள “தாயிஃப்' எனும் சொல் மற்றோர் ஓதல் முறையில் “தய்ஃப்' என்று வந்துள்ளது. அந்த) “தய்ஃப்' எனும் சொல்லுக்கு “ஷைத்தானின் தீண்டுதல்' என்று பொருள். (“தய்ஃப்' என்ற இச்சொல்) தாயிஃப் என்றும் ஓதப்படுகிறது. இதற்கும் அதற்கும் ஒரே பொருள்தான்.
(7:202ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “யமுத்தூனஹும்' எனும் சொல்லுக்கு “அவர்களுக்கு (சாத்தானின் சகோதரர்கள் தவறான வழிகளை) அலங்கரித்துக் காட்டுகிறார்கள்” என்று பொருள்.
(7:205ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “வ கீஃபத்' எனும் சொல்லுக்கு “பயம்' என்று பொருள். (கிட்டத்தட்ட இதே சாடையிலமைந்த) “குஃப்யத்' எனும் சொல் “இக்ஃபா' (மறைத்தல்) என்பதிலிருந்து பிறந்ததாகும்.
(இதே வசனத்தின் மூலத்திலுள்ள) “வல் ஆஸால்' (மாலை) என்பதற்கு “அஸ்ருக்கும் மஃக்ரிபுக்கும் இடைப்பட்ட நேரம்' என்று பொருள். இதன் ஒருமை “அஸீல்' என்பதாகும். “புக்ரத்தன் வ அஸீலா' (காலை, மாலை) என்ற சொல்லாடல் இதற்கு எடுத்துக்காட்டாகும்.
பாடம் : 1
என் இறைவன் வெளிப்படை யாகவும் மறைவாகவும் உள்ள மானக்கேடான செயல்களையே தடை செய்துள்ளான் என்று (நபியே!) நீர் கூறுவீராக! (எனும் 7:33ஆவது வசனத்தொடர்)
4637. அம்ர் பின் முர்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்களிடம், “நீங்கள் (பின்வரும்) இந்த ஹதீஸை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாகச் செவியுற்றீர்களா?” என்று கேட்டேன். அவர்கள், “ஆம்! அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகவும் அவர்கள் சொன்னார்கள்” என்று பதிலளித்தார்கள்.
“அல்லாஹ்வைவிட அதிக ரோஷமுடையவர் வேறெவருமிலர். ஆகவேதான், மானக்கேடான செயல்களில் வெளிப்படையானவை, மறைவானவை அனைத்தையும் அவன் தடை செய்துள்ளான். மேலும், அல்லாஹ்வைவிட அதிகமாகப் புகழ்ச்சியை விரும்பக்கூடியவர் வேறெவரும் இலர். ஆகவேதான், அவன் தன்னைத் தானே புகழ்ந்துகொண்டுள்ளான்” என்று கூறினார்கள்.2
அத்தியாயம் : 65
4637. அம்ர் பின் முர்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்களிடம், “நீங்கள் (பின்வரும்) இந்த ஹதீஸை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாகச் செவியுற்றீர்களா?” என்று கேட்டேன். அவர்கள், “ஆம்! அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகவும் அவர்கள் சொன்னார்கள்” என்று பதிலளித்தார்கள்.
“அல்லாஹ்வைவிட அதிக ரோஷமுடையவர் வேறெவருமிலர். ஆகவேதான், மானக்கேடான செயல்களில் வெளிப்படையானவை, மறைவானவை அனைத்தையும் அவன் தடை செய்துள்ளான். மேலும், அல்லாஹ்வைவிட அதிகமாகப் புகழ்ச்சியை விரும்பக்கூடியவர் வேறெவரும் இலர். ஆகவேதான், அவன் தன்னைத் தானே புகழ்ந்துகொண்டுள்ளான்” என்று கூறினார்கள்.2
அத்தியாயம் : 65
4638. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى الْمَازِنِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ قَالَ جَاءَ رَجُلٌ مِنَ الْيَهُودِ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم قَدْ لُطِمَ وَجْهُهُ وَقَالَ يَا مُحَمَّدُ إِنَّ رَجُلاً مِنْ أَصْحَابِكَ مِنَ الأَنْصَارِ لَطَمَ وَجْهِي. قَالَ " ادْعُوهُ ". فَدَعَوْهُ قَالَ " لِمَ لَطَمْتَ وَجْهَهُ ". قَالَ يَا رَسُولَ اللَّهِ، إِنِّي مَرَرْتُ بِالْيَهُودِ فَسَمِعْتُهُ يَقُولُ وَالَّذِي اصْطَفَى مُوسَى عَلَى الْبَشَرِ. فَقُلْتُ وَعَلَى مُحَمَّدٍ وَأَخَذَتْنِي غَضْبَةٌ فَلَطَمْتُهُ. قَالَ " لاَ تُخَيِّرُونِي مِنْ بَيْنِ الأَنْبِيَاءِ، فَإِنَّ النَّاسَ يَصْعَقُونَ يَوْمَ الْقِيَامَةِ فَأَكُونُ أَوَّلَ مَنْ يُفِيقُ، فَإِذَا أَنَا بِمُوسَى آخِذٌ بِقَائِمَةٍ مِنْ قَوَائِمِ الْعَرْشِ، فَلاَ أَدْرِي أَفَاقَ قَبْلِي أَمْ جُزِيَ بِصَعْقَةِ الطُّورِ ".
பாடம் : 2
நாம் குறிப்பிட்டிருந்த இடத்திற்கு மூசா வந்ததும் அவருடைய இறைவன் அவருடன் உரையாடிய போது, “என் இறைவா! எனக்கு நீ காட்சியளிப்பாயாக! நான் உன்னைப் பார்த்துக்கொள்கிறேன்” என்று வேண்டினார். அதற்கு இறைவன், “என்னை நீர் ஒருபோதும் காண முடியாது. ஆயினும் (எதிரிலுள்ள) மலையைப் பாரும்! அது தனது இருப்பிடத்தில் நிலைத்திருந்தால் என்னை நீர் காண முடியும்” என்று கூறினான்.
அவ்வாறே அவருடைய இறைவன் அம்மலையின் மீது வெளிப்பட்டபோது அது சுக்குநூறாகிவிட்டது; மூசாவும் மூர்ச்சையாகிச் சரிந்தார். பிறகு மூர்ச்சை தெளிந்தபோது, “(இறைவா!) நீ தூயவன். உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன். மேலும், நான் இறைநம்பிக்கை கொண்டோரில் முதன்மையான வனாக இருக்கின்றேன்” என்று கூறினார் (எனும் 7:143ஆவது வசனம்)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) “அரினீ' எனும் சொல்லுக்கு “எனக்கு வழங்குவாயாக' என்பது பொருள்.
4638. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
யூதர்களில் ஒருவர் (அன்சாரி ஒருவரிடம்) தமது முகத்தில் அறைவாங்கிக்கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “முஹம்மதே! உங்கள் அன்சாரித் தோழர்களில் ஒருவர் என் முகத்தில் அறைந்துவிட்டார்” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், “அவரைக் கூப்பிடுங்கள்” என்று சொன்னார்கள். உடனே மக்கள் அவரை அழைத்(து வந்)தனர்.
நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் இவர் முகத்தில் ஏன் அறைந்தீர்கள்?” என்று கேட்க அவர், “அல்லாஹ்வின் தூதரே! நான் யூதர்களைக் கடந்து சென்றேன். அப்போது இவர், “மனிதர்கள் அனைவரிலும் மூசாவை (சிறந்தவராக)த்தேர்ந்தெடுத்தவன் மீதாணையாக!” என்று சொல்லக் கேட்டேன். உடனே நான், “முஹம்மதை விடவுமா?” என்று கேட்டேன். எனக்குக் கோபம் மேலிட, நான் இவரை அறைந்துவிட்டேன்” என்று சொன்னார்.
நபி (ஸல்) அவர்கள், “இறைத்தூதர் களுக்கிடையே என்னைச் சிறந்தவர் ஆக்காதீர்கள். ஏனெனில், மக்கள் மறுமை நாளில் மூர்ச்சையாகிவிடுவார்கள். மூர்ச்சை தெளிந்து எழுகின்றவர்களில் முதல் ஆளாக நான் இருப்பேன். அப்போது நான் மூசாவின் அருகே இருப்பேன். அவர் இறைவனுடைய அரியணையின் (அர்ஷின்) கால்களில் ஒன்றைப் பிடித்துக்கொண்டிருப்பார். அவர் எனக்கு முன்பே மூர்ச்சை தெளிந்து (எழுந்து)விட்டாரா, அல்லது “தூர்சீனா' மலையில் (இறைவனைச் சந்திக்கச் சென்றபோது) அடைந்த மூர்ச்சைக்குப் பதிலாக இங்கு (மூர்ச்சையாக்கப்படாமல்) விட்டுவிடப்பட்டாரா என்பது எனக்குத் தெரியாது” என்று சொன்னார்கள்.3
மன்னும் சல்வாவும்4
அத்தியாயம் : 65
4638. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
யூதர்களில் ஒருவர் (அன்சாரி ஒருவரிடம்) தமது முகத்தில் அறைவாங்கிக்கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “முஹம்மதே! உங்கள் அன்சாரித் தோழர்களில் ஒருவர் என் முகத்தில் அறைந்துவிட்டார்” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், “அவரைக் கூப்பிடுங்கள்” என்று சொன்னார்கள். உடனே மக்கள் அவரை அழைத்(து வந்)தனர்.
நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் இவர் முகத்தில் ஏன் அறைந்தீர்கள்?” என்று கேட்க அவர், “அல்லாஹ்வின் தூதரே! நான் யூதர்களைக் கடந்து சென்றேன். அப்போது இவர், “மனிதர்கள் அனைவரிலும் மூசாவை (சிறந்தவராக)த்தேர்ந்தெடுத்தவன் மீதாணையாக!” என்று சொல்லக் கேட்டேன். உடனே நான், “முஹம்மதை விடவுமா?” என்று கேட்டேன். எனக்குக் கோபம் மேலிட, நான் இவரை அறைந்துவிட்டேன்” என்று சொன்னார்.
நபி (ஸல்) அவர்கள், “இறைத்தூதர் களுக்கிடையே என்னைச் சிறந்தவர் ஆக்காதீர்கள். ஏனெனில், மக்கள் மறுமை நாளில் மூர்ச்சையாகிவிடுவார்கள். மூர்ச்சை தெளிந்து எழுகின்றவர்களில் முதல் ஆளாக நான் இருப்பேன். அப்போது நான் மூசாவின் அருகே இருப்பேன். அவர் இறைவனுடைய அரியணையின் (அர்ஷின்) கால்களில் ஒன்றைப் பிடித்துக்கொண்டிருப்பார். அவர் எனக்கு முன்பே மூர்ச்சை தெளிந்து (எழுந்து)விட்டாரா, அல்லது “தூர்சீனா' மலையில் (இறைவனைச் சந்திக்கச் சென்றபோது) அடைந்த மூர்ச்சைக்குப் பதிலாக இங்கு (மூர்ச்சையாக்கப்படாமல்) விட்டுவிடப்பட்டாரா என்பது எனக்குத் தெரியாது” என்று சொன்னார்கள்.3
மன்னும் சல்வாவும்4
அத்தியாயம் : 65
4639. حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الْمَلِكِ، عَنْ عَمْرِو بْنِ حُرَيْثٍ، عَنْ سَعِيدِ بْنِ زَيْدٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الْكَمْأَةُ مِنَ الْمَنِّ وَمَاؤُهَا شِفَاءُ الْعَيْنِ ".
பாடம் : 2
நாம் குறிப்பிட்டிருந்த இடத்திற்கு மூசா வந்ததும் அவருடைய இறைவன் அவருடன் உரையாடிய போது, “என் இறைவா! எனக்கு நீ காட்சியளிப்பாயாக! நான் உன்னைப் பார்த்துக்கொள்கிறேன்” என்று வேண்டினார். அதற்கு இறைவன், “என்னை நீர் ஒருபோதும் காண முடியாது. ஆயினும் (எதிரிலுள்ள) மலையைப் பாரும்! அது தனது இருப்பிடத்தில் நிலைத்திருந்தால் என்னை நீர் காண முடியும்” என்று கூறினான்.
அவ்வாறே அவருடைய இறைவன் அம்மலையின் மீது வெளிப்பட்டபோது அது சுக்குநூறாகிவிட்டது; மூசாவும் மூர்ச்சையாகிச் சரிந்தார். பிறகு மூர்ச்சை தெளிந்தபோது, “(இறைவா!) நீ தூயவன். உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன். மேலும், நான் இறைநம்பிக்கை கொண்டோரில் முதன்மையான வனாக இருக்கின்றேன்” என்று கூறினார் (எனும் 7:143ஆவது வசனம்)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) “அரினீ' எனும் சொல்லுக்கு “எனக்கு வழங்குவாயாக' என்பது பொருள்.
4639. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சமையல் காளான் (தானாக வளர்வதில்) “மன்னு'வின் வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும்.
இதை சயீத் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.5
அத்தியாயம் : 65
4639. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சமையல் காளான் (தானாக வளர்வதில்) “மன்னு'வின் வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும்.
இதை சயீத் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.5
அத்தியாயம் : 65
4640. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، وَمُوسَى بْنُ هَارُونَ، قَالاَ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْعَلاَءِ بْنِ زَبْرٍ، قَالَ حَدَّثَنِي بُسْرُ بْنُ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي أَبُو إِدْرِيسَ الْخَوْلاَنِيُّ، قَالَ سَمِعْتُ أَبَا الدَّرْدَاءِ، يَقُولُ كَانَتْ بَيْنَ أَبِي بَكْرٍ وَعُمَرَ مُحَاوَرَةٌ، فَأَغْضَبَ أَبُو بَكْرٍ عُمَرَ، فَانْصَرَفَ عَنْهُ عُمَرُ مُغْضَبًا، فَاتَّبَعَهُ أَبُو بَكْرٍ يَسْأَلُهُ أَنْ يَسْتَغْفِرَ لَهُ، فَلَمْ يَفْعَلْ حَتَّى أَغْلَقَ بَابَهُ فِي وَجْهِهِ، فَأَقْبَلَ أَبُو بَكْرٍ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ أَبُو الدَّرْدَاءِ وَنَحْنُ عِنْدَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَمَّا صَاحِبُكُمْ هَذَا فَقَدْ غَامَرَ ". قَالَ وَنَدِمَ عُمَرُ عَلَى مَا كَانَ مِنْهُ فَأَقْبَلَ حَتَّى سَلَّمَ وَجَلَسَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَقَصَّ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم الْخَبَرَ. قَالَ أَبُو الدَّرْدَاءِ وَغَضِبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَجَعَلَ أَبُو بَكْرٍ يَقُولُ وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ لأَنَا كُنْتُ أَظْلَمَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " هَلْ أَنْتُمْ تَارِكُو لِي صَاحِبِي هَلْ أَنْتُمْ تَارِكُو لِي صَاحِبِي إِنِّي قُلْتُ يَا أَيُّهَا النَّاسُ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ جَمِيعًا فَقُلْتُمْ كَذَبْتَ. وَقَالَ أَبُو بَكْرٍ صَدَقْتَ قَالَ أَبُو عَبْد اللَّهِ غَامَرَ سَبَقَ بِالْخَيْر".
பாடம் : 3
(நபியே!) கூறுக: மனிதர்களே! நிச்சயமாக வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி எவனுக்குரியதோ அந்த அல்லாஹ்வின் தூதராக நான் உங்கள் அனைவருக்காகவும் அனுப்பப்பட்டுள்ளேன். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவனே உயிரளிக்கின்றான்; இறக்கச் செய்கின்றான்.
எனவே, அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்; அவனால் அனுப்பப்பட்ட “உம்மீ' (எழுத்தறிவற்ற) தூதர்மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள். அவரோ அல்லாஹ்வையும் அவனது வேத வாக்குகளையும் நம்புகின்றார். ஆகவே, அவரைப் பின்பற்றுங்கள்; அதனால் நீங்கள் நல்வழி பெறக்கூடும் (எனும் 7:158ஆவது இறைவசனம்)
4640. அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு சமயம்) அபூபக்ர் (ரலி) அவர்களுக்கும் உமர் (ரலி) அவர்களுக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தில் அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களை கோபப்படுத்திவிட்டார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் கோபத்துடன் அங்கிருந்து திரும்பிச் சென்றார்கள். உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களுக்குப் பின்னாலேயே சென்று தம்மை மன்னித்துவிடுமாறு வேண்டினார்கள். ஆனால், உமர் (ரலி) அவர்கள் மன்னிக்காமல் அபூபக்ர் (ரலி) அவர்களின் முகத்திற்கு முன்னால்(தம் வீட்டுக்) கதவைச் சாத்தினார்கள். ஆகவே, அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி வந்தார்கள்.
(அப்போது) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். (அபூபக்ர் (ரலி) அவர்கள் வருவதைக் கண்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இதோ உங்கள் தோழர் வழக்காடிவிட்டு வந்திருக்கிறார்” என்று சொன்னார்கள். (பிறகு) உமர் (ரலி) அவர்களும் தம்மால் ஏற்பட்டுவிட்ட செயலுக்கு வருந்தியவராக நபி (ஸல்) அவர்களை நோக்கி வந்து சலாம் (முகமன்) கூறி அமர்ந்தார்கள்; (நடந்த) செய்தியை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எடுத்துரைத்தார்கள்.
(அப்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கோபப்பட்டார்கள். (இதைக் கண்ட) அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! (வாக்குவாதத்தை தொடங்கிவைத்ததால் உமரைவிட) நானே அதிகம் அநீதியிழைத்தவனாகிவிட்டேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறலானார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(மக்களே!) என் தோழரை எனக்காக நீங்கள் (மன்னித்து) விட்டுவிடுவீர்களா? என் தோழரை எனக்காக நீங்கள் (மன்னித்து) விட்டுவிடுவீர்களா? (ஒரு காலத்தில்) “மக்களே! நான் உங்கள் அனைவருக்கும் இறைத்தூதராக அனுப்பப்பட்டுள்ளேன்' என்று சொன்னேன். அப்போது நீங்கள், “பொய் சொல்கிறீர்' என்று கூறினீர்கள். ஆனால் அபூபக்ர் அவர்களோ, “நீங்கள் உண்மையே சொன்னீர்கள்' என்று கூறினார்” என்றார்கள்.6
அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறுகிறேன்:
(இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) “ஃகாமர' எனும் சொல்லுக்கு “நன்மையில் முந்திக்கொண்டார்' என்பது பொருள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 65
4640. அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு சமயம்) அபூபக்ர் (ரலி) அவர்களுக்கும் உமர் (ரலி) அவர்களுக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தில் அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களை கோபப்படுத்திவிட்டார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் கோபத்துடன் அங்கிருந்து திரும்பிச் சென்றார்கள். உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களுக்குப் பின்னாலேயே சென்று தம்மை மன்னித்துவிடுமாறு வேண்டினார்கள். ஆனால், உமர் (ரலி) அவர்கள் மன்னிக்காமல் அபூபக்ர் (ரலி) அவர்களின் முகத்திற்கு முன்னால்(தம் வீட்டுக்) கதவைச் சாத்தினார்கள். ஆகவே, அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி வந்தார்கள்.
(அப்போது) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். (அபூபக்ர் (ரலி) அவர்கள் வருவதைக் கண்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இதோ உங்கள் தோழர் வழக்காடிவிட்டு வந்திருக்கிறார்” என்று சொன்னார்கள். (பிறகு) உமர் (ரலி) அவர்களும் தம்மால் ஏற்பட்டுவிட்ட செயலுக்கு வருந்தியவராக நபி (ஸல்) அவர்களை நோக்கி வந்து சலாம் (முகமன்) கூறி அமர்ந்தார்கள்; (நடந்த) செய்தியை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எடுத்துரைத்தார்கள்.
(அப்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கோபப்பட்டார்கள். (இதைக் கண்ட) அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! (வாக்குவாதத்தை தொடங்கிவைத்ததால் உமரைவிட) நானே அதிகம் அநீதியிழைத்தவனாகிவிட்டேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறலானார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(மக்களே!) என் தோழரை எனக்காக நீங்கள் (மன்னித்து) விட்டுவிடுவீர்களா? என் தோழரை எனக்காக நீங்கள் (மன்னித்து) விட்டுவிடுவீர்களா? (ஒரு காலத்தில்) “மக்களே! நான் உங்கள் அனைவருக்கும் இறைத்தூதராக அனுப்பப்பட்டுள்ளேன்' என்று சொன்னேன். அப்போது நீங்கள், “பொய் சொல்கிறீர்' என்று கூறினீர்கள். ஆனால் அபூபக்ர் அவர்களோ, “நீங்கள் உண்மையே சொன்னீர்கள்' என்று கூறினார்” என்றார்கள்.6
அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறுகிறேன்:
(இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) “ஃகாமர' எனும் சொல்லுக்கு “நன்மையில் முந்திக்கொண்டார்' என்பது பொருள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 65
4641. حَدَّثَنَا إِسْحَاقُ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " قِيلَ لِبَنِي إِسْرَائِيلَ {ادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَقُولُوا حِطَّةٌ نَغْفِرْ لَكُمْ خَطَايَاكُمْ} فَبَدَّلُوا فَدَخَلُوا يَزْحَفُونَ عَلَى أَسْتَاهِهِمْ وَقَالُوا حَبَّةٌ فِي شَعَرَةٍ ".
பாடம் : 4
“ஹித்தத்துன் (எங்கள் பாவச் சுமையை இறக்குவாயாக!) என்று சொல்(லியவாறே செல்)லுங்கள்” எனும் (7:161ஆவது) வசனத்தொடர்
4641. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இஸ்ரவேலர்களிடம், “ஹித்ததுன்' (எங்கள் பாவச் சுமையை இறக்குவாயாக!) என்று கூறிக்கொண்டே அதன் வாயிலில் சிரம் தாழ்த்தியவர்களாய் நுழையுங்கள். நாம் உங்களுடைய குற்றங்களை மன்னித்துவிடுவோம்” என்று கூறப்பட்டது.
ஆனால், (அவர்கள் தமக்குக் கூறப்பட்ட வார்த்தையை) மாற்றி(க் கூறி)யபடி தம் புட்டங்களால் தவழ்ந்த வண்ணம் சென்றார்கள். மேலும் (உள்ளே நுழையும்போது) “ஹப்பத்துன் ஃபீ ஷஅரத்தின்” (ஒரு வாற்கோதுமைக்குள் ஒரு தானிய வித்து) என்று (பரிகாசமாகச்) சொன்னார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.7
அத்தியாயம் : 65
4641. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இஸ்ரவேலர்களிடம், “ஹித்ததுன்' (எங்கள் பாவச் சுமையை இறக்குவாயாக!) என்று கூறிக்கொண்டே அதன் வாயிலில் சிரம் தாழ்த்தியவர்களாய் நுழையுங்கள். நாம் உங்களுடைய குற்றங்களை மன்னித்துவிடுவோம்” என்று கூறப்பட்டது.
ஆனால், (அவர்கள் தமக்குக் கூறப்பட்ட வார்த்தையை) மாற்றி(க் கூறி)யபடி தம் புட்டங்களால் தவழ்ந்த வண்ணம் சென்றார்கள். மேலும் (உள்ளே நுழையும்போது) “ஹப்பத்துன் ஃபீ ஷஅரத்தின்” (ஒரு வாற்கோதுமைக்குள் ஒரு தானிய வித்து) என்று (பரிகாசமாகச்) சொன்னார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.7
அத்தியாயம் : 65
4642. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَدِمَ عُيَيْنَةُ بْنُ حِصْنِ بْنِ حُذَيْفَةَ فَنَزَلَ عَلَى ابْنِ أَخِيهِ الْحُرِّ بْنِ قَيْسٍ، وَكَانَ مِنَ النَّفَرِ الَّذِينَ يُدْنِيهِمْ عُمَرُ، وَكَانَ الْقُرَّاءُ أَصْحَابَ مَجَالِسِ عُمَرَ وَمُشَاوَرَتِهِ كُهُولاً كَانُوا أَوْ شُبَّانًا. فَقَالَ عُيَيْنَةُ لاِبْنِ أَخِيهِ يَا ابْنَ أَخِي، لَكَ وَجْهٌ عِنْدَ هَذَا الأَمِيرِ فَاسْتَأْذِنْ لِي عَلَيْهِ. قَالَ سَأَسْتَأْذِنُ لَكَ عَلَيْهِ. قَالَ ابْنُ عَبَّاسٍ فَاسْتَأْذَنَ الْحُرُّ لِعُيَيْنَةَ فَأَذِنَ لَهُ عُمَرُ، فَلَمَّا دَخَلَ عَلَيْهِ قَالَ هِيْ يَا ابْنَ الْخَطَّابِ، فَوَاللَّهِ مَا تُعْطِينَا الْجَزْلَ، وَلاَ تَحْكُمُ بَيْنَنَا بِالْعَدْلِ. فَغَضِبَ عُمَرُ حَتَّى هَمَّ بِهِ، فَقَالَ لَهُ الْحُرُّ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ إِنَّ اللَّهَ تَعَالَى قَالَ لِنَبِيِّهِ صلى الله عليه وسلم {خُذِ الْعَفْوَ وَأْمُرْ بِالْعُرْفِ وَأَعْرِضْ عَنِ الْجَاهِلِينَ} وَإِنَّ هَذَا مِنَ الْجَاهِلِينَ. وَاللَّهِ مَا جَاوَزَهَا عُمَرُ حِينَ تَلاَهَا عَلَيْهِ، وَكَانَ وَقَّافًا عِنْدَ كِتَابِ اللَّهِ.
பாடம் : 5
(நபியே!) மன்னிக்கும் போக்கை மேற்கொள்வீராக! மேலும், நன்மை புரியுமாறு ஏவுவீராக! அறிவீனர்களைவிட்டு விலகியிருப்பீராக! (எனும் 7:199ஆவது இறைவசனம்)
(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) “உர்ஃப்' எனும் சொல் “நன்மை'யைக் குறிக்கும்.
4642. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உயைனா பின் ஹிஸ்ன் பின் ஹுதைஃபா (ரலி) அவர்கள் (மதீனாவுக்கு) வந்து, தம் சகோதரருடைய புதல்வர் ஹுர்ரு பின் கைஸ் (ரலி) அவர்களிடம் தங்கினார். உமர் (ரலி) அவர்கள் தம் அருகில் அமர்த்திக்கொள்பவர்களில் ஒருவராக (அந்த அளவுக்கு அவர்களுக்கு நெருக்கமானவராக) ஹுர்ரு பின் கைஸ் இருந்தார். முதியவர்களோ இளைஞர் களோ யாராயினும், குர்ஆனை நன்கறிந்த வர்களே உமர் (ரலி) அவர்களின் அவை யினராகவும் ஆலோசகர்களாகவும் இருந்தனர்.
ஆகவே, உயைனா, தம் சகோதரருடைய புதல்வரிடம், “என் சகோதரர் மகனே! உனக்கு இந்தத் தலைவரிடத்தில் செல்வாக்கு உள்ளது. ஆகவே, அவரைச் சந்திக்க எனக்கு அனுமதி பெற்றுத் தா” என்று சொன்னார். அதற்கு அவர், “உமர் (ரலி) அவர்களிடம் செல்ல நான் உமக்காக அனுமதி கேட்கிறேன்” என்று சொன்னார். அவ்வாறே உமரைச் சந்திக்க உயைனாவுக்காக ஹுர்ரு அவர்கள் அனுமதி கேட்டார். உமர் (ரலி) அவர்களும் அவருக்கு (தம்மைச் சந்திக்க) அனுமதி கொடுத்தார்கள்.
உயைனா (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம் சென்றபோது, “கத்தாபின் புதல்வரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் எங்களுக்கு அதிகமாக வழங்குவதில்லை. எங்களிடையே நீங்கள் நீதியுடன் தீர்ப்பளிப்பதில்லை” என்று சொன்னார். உமர் (ரலி) அவர்கள் கோபமுற்று அவரை நாடி (அடிக்க)ச் சென்றார்கள். உடனே ஹுர்ரு (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களை நோக்கி, “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! உயர்ந்தோன் அல்லாஹ் தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு, “(நபியே!) மன்னிக்கும் போக்கை மேற்கொள்வீராக! மேலும், நன்மை புரியுமாறு ஏவுவீராக! அறிவீனர்களை விட்டு விலகியிருப்பீராக!” (7:199) என்று கூறியுள்ளான். இவர் அறியாதவர்களில் ஒருவர்” என்று சொன்னார்.
அல்லாஹ்வின் மீதாணையாக! ஹுர்ரு (ரலி) அவர்கள் இந்த வசனத்தை உமர் (ரலி) அவர்களுக்கு ஓதிக்காட்டியபோது உமர் (ரலி) அவர்கள் அதை மீறவில்லை. (பொதுவாக) உமர் (ரலி) அவர்கள் இறைவேதத்திற்கு மிகவும் கட்டுப்படக் கூடியவர்களாய் இருந்தார்கள்.
அத்தியாயம் : 65
4642. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உயைனா பின் ஹிஸ்ன் பின் ஹுதைஃபா (ரலி) அவர்கள் (மதீனாவுக்கு) வந்து, தம் சகோதரருடைய புதல்வர் ஹுர்ரு பின் கைஸ் (ரலி) அவர்களிடம் தங்கினார். உமர் (ரலி) அவர்கள் தம் அருகில் அமர்த்திக்கொள்பவர்களில் ஒருவராக (அந்த அளவுக்கு அவர்களுக்கு நெருக்கமானவராக) ஹுர்ரு பின் கைஸ் இருந்தார். முதியவர்களோ இளைஞர் களோ யாராயினும், குர்ஆனை நன்கறிந்த வர்களே உமர் (ரலி) அவர்களின் அவை யினராகவும் ஆலோசகர்களாகவும் இருந்தனர்.
ஆகவே, உயைனா, தம் சகோதரருடைய புதல்வரிடம், “என் சகோதரர் மகனே! உனக்கு இந்தத் தலைவரிடத்தில் செல்வாக்கு உள்ளது. ஆகவே, அவரைச் சந்திக்க எனக்கு அனுமதி பெற்றுத் தா” என்று சொன்னார். அதற்கு அவர், “உமர் (ரலி) அவர்களிடம் செல்ல நான் உமக்காக அனுமதி கேட்கிறேன்” என்று சொன்னார். அவ்வாறே உமரைச் சந்திக்க உயைனாவுக்காக ஹுர்ரு அவர்கள் அனுமதி கேட்டார். உமர் (ரலி) அவர்களும் அவருக்கு (தம்மைச் சந்திக்க) அனுமதி கொடுத்தார்கள்.
உயைனா (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம் சென்றபோது, “கத்தாபின் புதல்வரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் எங்களுக்கு அதிகமாக வழங்குவதில்லை. எங்களிடையே நீங்கள் நீதியுடன் தீர்ப்பளிப்பதில்லை” என்று சொன்னார். உமர் (ரலி) அவர்கள் கோபமுற்று அவரை நாடி (அடிக்க)ச் சென்றார்கள். உடனே ஹுர்ரு (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களை நோக்கி, “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! உயர்ந்தோன் அல்லாஹ் தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு, “(நபியே!) மன்னிக்கும் போக்கை மேற்கொள்வீராக! மேலும், நன்மை புரியுமாறு ஏவுவீராக! அறிவீனர்களை விட்டு விலகியிருப்பீராக!” (7:199) என்று கூறியுள்ளான். இவர் அறியாதவர்களில் ஒருவர்” என்று சொன்னார்.
அல்லாஹ்வின் மீதாணையாக! ஹுர்ரு (ரலி) அவர்கள் இந்த வசனத்தை உமர் (ரலி) அவர்களுக்கு ஓதிக்காட்டியபோது உமர் (ரலி) அவர்கள் அதை மீறவில்லை. (பொதுவாக) உமர் (ரலி) அவர்கள் இறைவேதத்திற்கு மிகவும் கட்டுப்படக் கூடியவர்களாய் இருந்தார்கள்.
அத்தியாயம் : 65
4643. حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، {خُذِ الْعَفْوَ وَأْمُرْ بِالْعُرْفِ} قَالَ مَا أَنْزَلَ اللَّهُ إِلاَّ فِي أَخْلاَقِ النَّاسِ.
பாடம் : 5
(நபியே!) மன்னிக்கும் போக்கை மேற்கொள்வீராக! மேலும், நன்மை புரியுமாறு ஏவுவீராக! அறிவீனர்களைவிட்டு விலகியிருப்பீராக! (எனும் 7:199ஆவது இறைவசனம்)
(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) “உர்ஃப்' எனும் சொல் “நன்மை'யைக் குறிக்கும்.
4643. அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“(நபியே!) மன்னிக்கும் போக்கை மேற்கொள்வீராக! மேலும், நன்மை புரியுமாறு ஏவுவீராக!” எனும் (7:199ஆவது) வசனத்தை, மக்களின் நற்குணங்களில் ஒன்றாகவே அல்லாஹ் அருளினான்.
அத்தியாயம் : 65
4643. அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“(நபியே!) மன்னிக்கும் போக்கை மேற்கொள்வீராக! மேலும், நன்மை புரியுமாறு ஏவுவீராக!” எனும் (7:199ஆவது) வசனத்தை, மக்களின் நற்குணங்களில் ஒன்றாகவே அல்லாஹ் அருளினான்.
அத்தியாயம் : 65
4644. وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ بَرَّادٍ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، قَالَ أَمَرَ اللَّهُ نَبِيَّهُ صلى الله عليه وسلم أَنْ يَأْخُذَ الْعَفْوَ مِنْ أَخْلاَقِ النَّاسِ. أَوْ كَمَا قَالَ.
பாடம் : 5
(நபியே!) மன்னிக்கும் போக்கை மேற்கொள்வீராக! மேலும், நன்மை புரியுமாறு ஏவுவீராக! அறிவீனர்களைவிட்டு விலகியிருப்பீராக! (எனும் 7:199ஆவது இறைவசனம்)
(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) “உர்ஃப்' எனும் சொல் “நன்மை'யைக் குறிக்கும்.
4644. அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்களின் நற்குணங்களில் ஒன்றான மன்னிக்கும் போக்கை மேற்கொள்ளும்படி தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு (இவ்வசனத்தில்- 7:199) அல்லாஹ் கட்டளையிட் டுள்ளான்.8
அத்தியாயம் : 65
4644. அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்களின் நற்குணங்களில் ஒன்றான மன்னிக்கும் போக்கை மேற்கொள்ளும்படி தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு (இவ்வசனத்தில்- 7:199) அல்லாஹ் கட்டளையிட் டுள்ளான்.8
அத்தியாயம் : 65
4645. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، أَخْبَرَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا أَبُو بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ قُلْتُ لاِبْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ سُورَةُ الأَنْفَالِ قَالَ نَزَلَتْ فِي بَدْرٍ. الشَّوْكَةُ الْحَدُّ {مُرْدَفِينَ} فَوْجًا بَعْدَ فَوْجٍ، رَدِفَنِي وَأَرْدَفَنِي جَاءَ بَعْدِي {ذُوقُوا} بَاشِرُوا وَجَرِّبُوا وَلَيْسَ هَذَا مِنْ ذَوْقِ الْفَمِ {فَيَرْكُمَهُ} يَجْمَعُهُ. {شَرِّدْ} فَرِّقْ {وَإِنْ جَنَحُوا} طَلَبُوا {يُثْخِنَ} يَغْلِبَ. وَقَالَ مُجَاهِدٌ {مُكَاءً} إِدْخَالُ أَصَابِعِهِمْ فِي أَفْوَاهِهِمْ وَ{تَصْدِيَةً} الصَّفِيرُ {لِيُثْبِتُوكَ} لِيَحْبِسُوكَ.
பாடம்:
8. “அல்அன்ஃபால்' அத்தியாயம்1
பாடம் :
“(நபியே!) போரில் கிடைத்த பொருட்கள் குறித்து அவர்கள் உம்மிடம் வினவுகிறார்கள். கூறுவீராக: போரில் கிடைத்த பொருட்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உரியனவாகும். எனவே, அல்லாஹ்வை அஞ்சுங்கள். மேலும், உங்களுக்கிடையே (உள்ள உறவுகளைச்) சீராக்கிக்கொள்ளுங்கள். மேலும், நீங்கள் நம்பிக்கை கொண்டோராயின் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்” எனும் (8:1ஆவது) இறைவசனம்
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (மேற்கண்ட வசனத்தின் மூலத்திலுள்ள) “அன்ஃபால்' எனும் சொல்லுக்கு “போரில் கிடைத்த பொருள்கள் (ஃகனீமத்கள்)' என்பது பொருள்.
கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(8:46ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ரீஹுக்கும்' எனும் சொல்லுக்கு “உங்கள் போர் (வலிமை)' என்பது பொருள்.
நன்கொடைக்கும் “நாஃபிலா' என்று சொல்லப்படும்.
4645. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் “அல்அன்ஃபால்' அத்தியாயம் (எது தொடர்பாக அருளப்பெற்றது என்பது) குறித்து வினவினேன். (அதற்கு) அவர்கள், “அது பத்ர் போர் தொடர்பாக அருளப்பெற்றது” என்று சொன்னார்கள்.
(மேலும், இந்த அத்தியாயத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள கீழ்க்கண்ட சொற்களுக்குப் பின்வருமாறு விளக்க மளிக்கப்பட்டுள்ளது:)
(8:7ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அஷ்ஷவ்கத்' எனும் சொல்லுக்கு “(ஆயுத) முனை' என்பது பொருள்.
(8:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “முர்திஃபீன்' எனும் சொல்லுக்கு “படை படையாக' என்பது பொருள். (இதன் வினைச்சொல்லான) “ரதிஃபனீ' மற்றும் “அர்தஃபனீ' என்பதற்கு “என்னைத் தொடர்ந்துவந்தான்' என்று பொருள்.
(8:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஃதூகூ' (சுவைத்துப் பாருங்கள்) எனும் சொல்லுக்கு “அனுபவித்துப் பாருங்கள்' என்பது பொருள். வாயால் சுவைப்பதை இது குறிக்காது.
(8:37ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஃபயர்குமஹு' எனும் சொல்லுக்கு “தீயோரை அவன் ஒன்றுசேர்ப்பான்' என்று பொருள்.
(8:57ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஷர்ரித்' எனும் சொல்லுக்கு “சிதறி(யோ)டச்செய்யுங்கள்' என்பது பொருள்.
(8:61ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “வ இன் ஜனஹூ' எனும் சொற்றொடருக்கு “அவர்கள் (சமாதானத்தைக்) கோரினால்' என்று பொருள்.
(இதே வசனத்தின் மூலத்திலுள்ள) “அஸ்ஸில்ம்' எனும் சொல்லும் “அஸ்ஸல்ம், அஸ்ஸலாம் ஆகிய சொற்களும் (“சமாதானம்' எனும்) ஒரே பொருள் கொண்டவையாகும்.
(8:67ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “யுஸ்கின' எனும் சொல்லுக்கு “முறியடிப்பார்' என்று பொருள்.
முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(8:35ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “முகாஃ' எனும் சொல் “அவர்கள் தங்கள் விரல் (நுனி)களைத் தங்கள் வாய் களுக்குள் நுழைத்துக்கொள்வதைக்' குறிக்கும். “தஸ்தியா' எனும் சொல்லுக்கு “சீட்டியடித்தல்' என்று பொருள்.
(8:30ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “லி யுஸ்பித்தூக்க' எனும் சொல்லுக்கு “உங்களை அடைத்துவைக்க' என்பது பொருள்.
அத்தியாயம் : 65
4645. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் “அல்அன்ஃபால்' அத்தியாயம் (எது தொடர்பாக அருளப்பெற்றது என்பது) குறித்து வினவினேன். (அதற்கு) அவர்கள், “அது பத்ர் போர் தொடர்பாக அருளப்பெற்றது” என்று சொன்னார்கள்.
(மேலும், இந்த அத்தியாயத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள கீழ்க்கண்ட சொற்களுக்குப் பின்வருமாறு விளக்க மளிக்கப்பட்டுள்ளது:)
(8:7ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அஷ்ஷவ்கத்' எனும் சொல்லுக்கு “(ஆயுத) முனை' என்பது பொருள்.
(8:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “முர்திஃபீன்' எனும் சொல்லுக்கு “படை படையாக' என்பது பொருள். (இதன் வினைச்சொல்லான) “ரதிஃபனீ' மற்றும் “அர்தஃபனீ' என்பதற்கு “என்னைத் தொடர்ந்துவந்தான்' என்று பொருள்.
(8:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஃதூகூ' (சுவைத்துப் பாருங்கள்) எனும் சொல்லுக்கு “அனுபவித்துப் பாருங்கள்' என்பது பொருள். வாயால் சுவைப்பதை இது குறிக்காது.
(8:37ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஃபயர்குமஹு' எனும் சொல்லுக்கு “தீயோரை அவன் ஒன்றுசேர்ப்பான்' என்று பொருள்.
(8:57ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஷர்ரித்' எனும் சொல்லுக்கு “சிதறி(யோ)டச்செய்யுங்கள்' என்பது பொருள்.
(8:61ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “வ இன் ஜனஹூ' எனும் சொற்றொடருக்கு “அவர்கள் (சமாதானத்தைக்) கோரினால்' என்று பொருள்.
(இதே வசனத்தின் மூலத்திலுள்ள) “அஸ்ஸில்ம்' எனும் சொல்லும் “அஸ்ஸல்ம், அஸ்ஸலாம் ஆகிய சொற்களும் (“சமாதானம்' எனும்) ஒரே பொருள் கொண்டவையாகும்.
(8:67ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “யுஸ்கின' எனும் சொல்லுக்கு “முறியடிப்பார்' என்று பொருள்.
முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(8:35ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “முகாஃ' எனும் சொல் “அவர்கள் தங்கள் விரல் (நுனி)களைத் தங்கள் வாய் களுக்குள் நுழைத்துக்கொள்வதைக்' குறிக்கும். “தஸ்தியா' எனும் சொல்லுக்கு “சீட்டியடித்தல்' என்று பொருள்.
(8:30ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “லி யுஸ்பித்தூக்க' எனும் சொல்லுக்கு “உங்களை அடைத்துவைக்க' என்பது பொருள்.
அத்தியாயம் : 65
4646. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا وَرْقَاءُ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، {إِنَّ شَرَّ الدَّوَابِّ عِنْدَ اللَّهِ الصُّمُّ الْبُكْمُ الَّذِينَ لاَ يَعْقِلُونَ} قَالَ هُمْ نَفَرٌ مِنْ بَنِي عَبْدِ الدَّارِ.
பாடம் : 1
உயிரினங்களிலேயே அல்லாஹ்விடம் மோசமானவர்கள், (உண்மையை) விளங்கிக்கொள்ளாத செவிடரும் ஊமையரும்தான் (எனும் 8:22ஆவது இறைவசனம்)
4646. முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உயிரினங்களிலேயே அல்லாஹ்விடம் மோசமானவர்கள், (உண்மையை) விளங்கிக்கொள்ளாத செவிடரும் ஊமையரும்தான் எனும் (8:22ஆவது) இறைவசனம் குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகையில், “பனூ அப்தித் தார் குலத்தைச் சேர்ந்த சிலர்தான் அவர்கள்” என்று சொன்னார்கள்.2
அத்தியாயம் : 65
4646. முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உயிரினங்களிலேயே அல்லாஹ்விடம் மோசமானவர்கள், (உண்மையை) விளங்கிக்கொள்ளாத செவிடரும் ஊமையரும்தான் எனும் (8:22ஆவது) இறைவசனம் குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகையில், “பனூ அப்தித் தார் குலத்தைச் சேர்ந்த சிலர்தான் அவர்கள்” என்று சொன்னார்கள்.2
அத்தியாயம் : 65
4647. حَدَّثَنِي إِسْحَاقُ، أَخْبَرَنَا رَوْحٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ خُبَيْبِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، سَمِعْتُ حَفْصَ بْنَ عَاصِمٍ، يُحَدِّثُ عَنْ أَبِي سَعِيدِ بْنِ الْمُعَلَّى ـ رضى الله عنه ـ قَالَ كُنْتُ أُصَلِّي فَمَرَّ بِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَدَعَانِي فَلَمْ آتِهِ حَتَّى صَلَّيْتُ، ثُمَّ أَتَيْتُهُ فَقَالَ "" مَا مَنَعَكَ أَنْ تَأْتِيَ أَلَمْ يَقُلِ اللَّهُ {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَجِيبُوا لِلَّهِ وَلِلرَّسُولِ إِذَا دَعَاكُمْ} ثُمَّ قَالَ لأُعَلِّمَنَّكَ أَعْظَمَ سُورَةٍ فِي الْقُرْآنِ قَبْلَ أَنْ أَخْرُجَ "". فَذَهَبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِيَخْرُجَ فَذَكَرْتُ لَهُ.
وَقَالَ مُعَاذٌ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ خُبَيْبٍ، سَمِعَ حَفْصًا، سَمِعَ أَبَا سَعِيدٍ، رَجُلاً مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِهَذَا، وَقَالَ هِيَ {الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ} السَّبْعُ الْمَثَانِي.
பாடம் : 2
இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்கும், உங்களுக்குப் புத்துயிரளிக்கும் (உண்மை) வழிக்கு உங்களை அழைக்கும்போது இத்தூதருக்கும் பதிலளியுங்கள். மனிதனுக்கும் அவனது மனத்துக்கும் இடையே அல்லாஹ் குறுக்கிடுகின்றான் என்பதையும், அவனிடமே நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங் கள் (எனும் 8:24ஆவது இறை வசனம்)
(இந்த வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “இஸ்த்தஜீபூ' எனும் சொல்லுக்கு “பதிலளியுங்கள்' என்று பொருள். “லிமா யுஹ்யீக்கும்' (உங்களுக்குப் புத்துயிரளிக்கும்) என்பதற்கு “உங்களைச் சீராக்குகின்ற' என்பது பொருள்.
4647. அபூசயீத் பின் அல்முஅல்லா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (“மஸ்ஜிதுந் நபவீ' பள்ளிவாசலில்) தொழுதுகொண்டிருந்தேன். அப்போது என்னைக் கடந்து சென்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். நான் தொழு(து முடிக்கு)ம்வரை அவர்களிடம் செல்லவில்லை. பிறகு நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள் என்னிடம், “நீங்கள் ஏன் என்னிடம் உடனே வரவில்லை? அல்லாஹ், “இறைநம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கும், இறைத்தூதர் உங்களை அழைக்கும்போது அவனுடைய தூதருக்கும் பதில் அளியுங்கள்' என்று கூறவில்லையா?” எனக் கேட்டார்கள்.
பிறகு, “நான் (பள்ளிவாசலிலிருந்து) புறப்படுவதற்கு முன்பாக குர்ஆனில் மகத்துவமிக்க ஓர் அத்தியாயத்தை உமக்குக் கற்பிக்கிறேன்” என்று கூறினார்கள். பின்னர் நபி அவர்கள் (பள்ளிவாசலிலிருந்து) வெளியேறப்போனார்கள். அப்போது நான் அவர்களுக்கு (அவர்கள் வாக்களித்ததை) நினைவூட்டினேன். நபி (ஸல்) அவர்கள், “அது அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்' எனும் (அல்ஃபாத்திஹா அத்தியாயத்தின்) திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள்தான்” என்று சொன்னார்கள்.3
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 65
4647. அபூசயீத் பின் அல்முஅல்லா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (“மஸ்ஜிதுந் நபவீ' பள்ளிவாசலில்) தொழுதுகொண்டிருந்தேன். அப்போது என்னைக் கடந்து சென்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். நான் தொழு(து முடிக்கு)ம்வரை அவர்களிடம் செல்லவில்லை. பிறகு நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள் என்னிடம், “நீங்கள் ஏன் என்னிடம் உடனே வரவில்லை? அல்லாஹ், “இறைநம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கும், இறைத்தூதர் உங்களை அழைக்கும்போது அவனுடைய தூதருக்கும் பதில் அளியுங்கள்' என்று கூறவில்லையா?” எனக் கேட்டார்கள்.
பிறகு, “நான் (பள்ளிவாசலிலிருந்து) புறப்படுவதற்கு முன்பாக குர்ஆனில் மகத்துவமிக்க ஓர் அத்தியாயத்தை உமக்குக் கற்பிக்கிறேன்” என்று கூறினார்கள். பின்னர் நபி அவர்கள் (பள்ளிவாசலிலிருந்து) வெளியேறப்போனார்கள். அப்போது நான் அவர்களுக்கு (அவர்கள் வாக்களித்ததை) நினைவூட்டினேன். நபி (ஸல்) அவர்கள், “அது அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்' எனும் (அல்ஃபாத்திஹா அத்தியாயத்தின்) திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள்தான்” என்று சொன்னார்கள்.3
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 65
4648. حَدَّثَنِي أَحْمَدُ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الْحَمِيدِ ـ هُوَ ابْنُ كُرْدِيدٍ صَاحِبُ الزِّيَادِيِّ ـ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ أَبُو جَهْلٍ {اللَّهُمَّ إِنْ كَانَ هَذَا هُوَ الْحَقَّ مِنْ عِنْدِكَ فَأَمْطِرْ عَلَيْنَا حِجَارَةً مِنَ السَّمَاءِ أَوِ ائْتِنَا بِعَذَابٍ أَلِيمٍ} فَنَزَلَتْ {وَمَا كَانَ اللَّهُ لِيُعَذِّبَهُمْ وَأَنْتَ فِيهِمْ وَمَا كَانَ اللَّهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُونَ * وَمَا لَهُمْ أَنْ لاَ يُعَذِّبَهُمُ اللَّهُ وَهُمْ يَصُدُّونَ عَنِ الْمَسْجِدِ الْحَرَامِ} الآيَةَ.
பாடம் : 3
மேலும், அவர்கள் இவ்வாறு கூறிய தையும் (நபியே!) நீர் நினைத்துப் பார்ப்பீராக: “இறைவா! இது உன்னிடமிருந்து அருளப்பெற்ற சத்தியம்தான் என்றிருப்பின், எங்கள்மீது வானத்திலிருந்துகல்மாரி பொழிந்துவிடு; அல்லது வதைக்கும் வேதனையை எங்களுக்குக் கொண்டுவா!” எனும் (8:32ஆவது) இறைவசனம்
சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
குர்ஆனில் அல்லாஹ் “மத்(த)ர்' எனக் குறிப்பிட்டிருப்பது (பெரும்பாலும்) “வேதனை(க்காகப் பெய்த மழை)'யையே குறிக்கும். (பொதுவான மழையைக் குறிக்காது.) பொதுவான மழையைக் குறிக்க அரபியர் “அல்ஃகைஸ்' எனும் சொல்லையே பயன்படுத்துவர். “அவர்கள் நம்பிக்கையிழந்த பின்னரும் அவனே மழையைப் பொழிவிக்கின்றான்” எனும் (42:28ஆவது) வசனத்தில் இவ்வாறே (மழை என்பதைக் குறிக்க “அல்ஃகைஸ்' எனும் சொல்லே) ஆளப்பட்டுள்ளது.
4648. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(குறைஷி இணைவைப்பாளர்களின் தலைவன்) அபூஜஹ்ல், “இறைவா! இது (குர்ஆன்) உன்னிடமிருந்து வந்த சத்தியம்தான் என்றிருப்பின் எங்கள்மீது வானத்திலிருந்து கல்மாரியைப் பொழி! அல்லது துன்புறுத்தும் (ஒரு) வேதனையைஎங்களுக்குக் கொண்டுவா!” என்று சொன்னான்.
அப்போது “(நபியே!) நீர் அவர் களுக்கிடையே இருக்கும்போது அல்லாஹ் அவர்கள்மீது வேதனையைஇறக்குபவன் அல்லன். மேலும், மக்கள் பாவமன்னிப்பை வேண்டிக்கொண்டி ருக்கும் நிலையில் அவர்களை அல்லாஹ் வேதனை செய்யப்போவதில்லை. அவர்கள் (கஅபா உள்ளிட்ட) மஸ்ஜிதுல் ஹராமுக்கு (முறையான) நிர்வாகிகளாக இல்லாத நிலையில் (மக்களை) அங்கு செல்ல விடாமல் தடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் அவர்களை அல்லாஹ் வேதனைக்குள்ளாக்காமல் ஏன் இருக்க வேண்டும்? இறையச்சமுடையவர்கள் மட்டுமே அதன் (முறையான) நிர்வாகிகளாக ஆக முடியும்! எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்” எனும் வசனங்கள் (8:33,34) அருளப்பெற்றன.
அத்தியாயம் : 65
4648. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(குறைஷி இணைவைப்பாளர்களின் தலைவன்) அபூஜஹ்ல், “இறைவா! இது (குர்ஆன்) உன்னிடமிருந்து வந்த சத்தியம்தான் என்றிருப்பின் எங்கள்மீது வானத்திலிருந்து கல்மாரியைப் பொழி! அல்லது துன்புறுத்தும் (ஒரு) வேதனையைஎங்களுக்குக் கொண்டுவா!” என்று சொன்னான்.
அப்போது “(நபியே!) நீர் அவர் களுக்கிடையே இருக்கும்போது அல்லாஹ் அவர்கள்மீது வேதனையைஇறக்குபவன் அல்லன். மேலும், மக்கள் பாவமன்னிப்பை வேண்டிக்கொண்டி ருக்கும் நிலையில் அவர்களை அல்லாஹ் வேதனை செய்யப்போவதில்லை. அவர்கள் (கஅபா உள்ளிட்ட) மஸ்ஜிதுல் ஹராமுக்கு (முறையான) நிர்வாகிகளாக இல்லாத நிலையில் (மக்களை) அங்கு செல்ல விடாமல் தடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் அவர்களை அல்லாஹ் வேதனைக்குள்ளாக்காமல் ஏன் இருக்க வேண்டும்? இறையச்சமுடையவர்கள் மட்டுமே அதன் (முறையான) நிர்வாகிகளாக ஆக முடியும்! எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்” எனும் வசனங்கள் (8:33,34) அருளப்பெற்றன.
அத்தியாயம் : 65
4649. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ النَّضْرِ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الْحَمِيدِ، صَاحِبِ الزِّيَادِيِّ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، قَالَ قَالَ أَبُو جَهْلٍ {اللَّهُمَّ إِنْ كَانَ هَذَا هُوَ الْحَقَّ مِنْ عِنْدِكَ فَأَمْطِرْ عَلَيْنَا حِجَارَةً مِنَ السَّمَاءِ أَوِ ائْتِنَا بِعَذَابٍ أَلِيمٍ} فَنَزَلَتْ {وَمَا كَانَ اللَّهُ لِيُعَذِّبَهُمْ وَأَنْتَ فِيهِمْ وَمَا كَانَ اللَّهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُونَ * وَمَا لَهُمْ أَنْ لاَ يُعَذِّبَهُمُ اللَّهُ وَهُمْ يَصُدُّونَ عَنِ الْمَسْجِدِ الْحَرَامِ} الآيَةَ.
பாடம் : 4
“(நபியே!) நீர் அவர்களுக்கிடையே இருக்கும்போது அவர்கள்மீது அல்லாஹ் வேதனையை இறக்குபவன் அல்லன். மேலும், மக்கள் பாவமன்னிப்பை வேண்டிக்கொண்டிருக்கும் நிலையில் அவர்களை அல்லாஹ் வேதனை செய்யப்போவதில்லை” எனும் (8:33ஆவது) இறைவசனம்
4649. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(குறைஷி இணைவைப்பாளர்களின் தலைவன்) அபூஜஹ்ல், “இறைவா! இது (குர்ஆன்) உன்னிடமிருந்து வந்த சத்தியமே என்றிருப்பின், எங்கள்மீது வானத்திலிருந்து கல்மாரியைப் பொழி! அல்லது துன்புறுத்தும் (ஒரு) வேதனையை எங்களுக்குக் கொண்டுவா!” என்று சொன்னான்.
அப்போது “(நபியே!) நீர் அவர் களுக்கிடையே இருக்கும்போது அல்லாஹ் அவர்கள்மீது வேதனையை இறக்குபவன் அல்லன். மேலும், மக்கள் பாவமன்னிப்பை வேண்டிக் கொண்டிருக்கும் நிலையில் அவர் களை அல்லாஹ் வேதனை செய்யப்போவதில்லை. அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமுக்கு (முறையான) நிர்வாகிகளாக இல்லாத நிலையில் (மக்களை) அங்கு செல்ல விடாமல் தடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் அவர்களை அல்லாஹ் வேதனைக்குள்ளாக்காமல் ஏன் இருக்க வேண்டும்? இறையச்சமுடையவர்கள் மட்டுமே அதன் (முறையான) நிர்வாகிகளாக ஆக முடியும்! எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்” எனும் வசனங்கள் (8:33,34) அருளப்பெற்றன.
அத்தியாயம் : 65
4649. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(குறைஷி இணைவைப்பாளர்களின் தலைவன்) அபூஜஹ்ல், “இறைவா! இது (குர்ஆன்) உன்னிடமிருந்து வந்த சத்தியமே என்றிருப்பின், எங்கள்மீது வானத்திலிருந்து கல்மாரியைப் பொழி! அல்லது துன்புறுத்தும் (ஒரு) வேதனையை எங்களுக்குக் கொண்டுவா!” என்று சொன்னான்.
அப்போது “(நபியே!) நீர் அவர் களுக்கிடையே இருக்கும்போது அல்லாஹ் அவர்கள்மீது வேதனையை இறக்குபவன் அல்லன். மேலும், மக்கள் பாவமன்னிப்பை வேண்டிக் கொண்டிருக்கும் நிலையில் அவர் களை அல்லாஹ் வேதனை செய்யப்போவதில்லை. அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமுக்கு (முறையான) நிர்வாகிகளாக இல்லாத நிலையில் (மக்களை) அங்கு செல்ல விடாமல் தடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் அவர்களை அல்லாஹ் வேதனைக்குள்ளாக்காமல் ஏன் இருக்க வேண்டும்? இறையச்சமுடையவர்கள் மட்டுமே அதன் (முறையான) நிர்வாகிகளாக ஆக முடியும்! எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்” எனும் வசனங்கள் (8:33,34) அருளப்பெற்றன.
அத்தியாயம் : 65
4650. حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَبْدِ الْعَزِيزِ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَحْيَى، حَدَّثَنَا حَيْوَةُ، عَنْ بَكْرِ بْنِ عَمْرٍو، عَنْ بُكَيْرٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَجُلاً، جَاءَهُ فَقَالَ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ، أَلاَ تَسْمَعُ مَا ذَكَرَ اللَّهُ فِي كِتَابِهِ {وَإِنْ طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا} إِلَى آخِرِ الآيَةِ، فَمَا يَمْنَعُكَ أَنْ لاَ تُقَاتِلَ كَمَا ذَكَرَ اللَّهُ فِي كِتَابِهِ. فَقَالَ يَا ابْنَ أَخِي أَغْتَرُّ بِهَذِهِ الآيَةِ وَلاَ أُقَاتِلُ أَحَبُّ إِلَىَّ مِنْ أَنْ أَغْتَرَّ بِهَذِهِ الآيَةِ الَّتِي يَقُولُ اللَّهُ تَعَالَى {وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا} إِلَى آخِرِهَا. قَالَ فَإِنَّ اللَّهَ يَقُولُ {وَقَاتِلُوهُمْ حَتَّى لاَ تَكُونَ فِتْنَةٌ}. قَالَ ابْنُ عُمَرَ قَدْ فَعَلْنَا عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِذْ كَانَ الإِسْلاَمُ قَلِيلاً، فَكَانَ الرَّجُلُ يُفْتَنُ فِي دِينِهِ، إِمَّا يَقْتُلُوهُ وَإِمَّا يُوثِقُوهُ، حَتَّى كَثُرَ الإِسْلاَمُ، فَلَمْ تَكُنْ فِتْنَةٌ، فَلَمَّا رَأَى أَنَّهُ لاَ يُوَافِقُهُ فِيمَا يُرِيدُ قَالَ فَمَا قَوْلُكَ فِي عَلِيٍّ وَعُثْمَانَ. قَالَ ابْنُ عُمَرَ مَا قَوْلِي فِي عَلِيٍّ وَعُثْمَانَ أَمَّا عُثْمَانُ فَكَانَ اللَّهُ قَدْ عَفَا عَنْهُ، فَكَرِهْتُمْ أَنْ يَعْفُوَ عَنْهُ، وَأَمَّا عَلِيٌّ فَابْنُ عَمِّ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَخَتَنُهُ. وَأَشَارَ بِيَدِهِ وَهَذِهِ ابْنَتُهُ أَوْ بِنْتُهُ حَيْثُ تَرَوْنَ.
பாடம் : 5
(பூமியிலிருந்து) குழப்பம் நீங்கி, கீழ்ப்படிதல் முற்றிலுமாக அல்லாஹ் வுக்கென்றே ஆகிவிடும்வரை அவர்களுடன் நீங்கள் அறப்போர் புரியுங்கள் (எனும் 8:39ஆவது வசனத்தொடர்)
4650. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(காரிஜிய்யா கூட்டத்தைச் சேர்ந்த) ஒரு மனிதர் என்னிடம் வந்து, “அபூஅப்திர் ரஹ்மானே! அல்லாஹ் தன் வேதத்தில் (பின்வருமாறு) கூறியிருப்பதை நீங்கள் கேட்கவில்லையா? என்று கேட்டார்.
“இறைநம்பிக்கையாளர்களில் இரு பிரிவினர் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டால் அவ்விருவருக்குமிடையே சமாதானப்படுத்திவிடுங்கள். பின்னர் அவர்களில் ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினரின் மீது (எல்லை மீறி) அநீதியிழைத்தால், அநீதியிழைத்தோர் அல்லாஹ்வுடைய கட்டளையின் பக்கம் வரும்வரை அவர்களை நீங்கள் எதிர்த்துப் போரிடுங்கள். அவர்கள் (அல்லாஹ்வின் கட்டளைகளின் பக்கம்) திரும்பிவிட்டால், நியாயமான முறையில் அவ்விருவருக்கிடையே நடந்துகொள்ளுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் நீதிமான்களை நேசிக்கின்றான்” (49:9).
“இந்நிலையில், அல்லாஹ் தன் வேதத்தில் கூறியுள்ளபடி நீங்கள் போரிட முன்வராமல் இருப்பது ஏன்?” என்றும் கேட்டார்.
நான், “என் சகோதரர் மகனே! இந்த (49:9ஆவது) வசனத்திற்கு ஏதேனும் சமாதானம் கூறிவிட்டு (முஸ்லிம்களில் ஒரு பிரிவினருக்கெதிராகப்) போர் புரியாமல் இருந்துவிடுவது, “ஓர் இறை நம்பிக்கையாளரை ஒருவன் வேண்டுமென்றே கொலை செய்துவிட்டால் அவனுக்குரிய பிரதிபலன் நரகமாகும். அதில் அவன் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பான். மேலும், அவன்மீது அல்லாஹ்வின் கோபமும் அவனுடைய சாபமும் உள்ளது. மேலும், மிகப் பெரிய வேதனையும் அவனுக்காகத் தயார் செய்து வைத்துள்ளான்” என்ற (4:93ஆவது) வசனத்திற்குச் சமாதானம் சொல்வதைவிட எனக்கு உவப்பாதாயிருக்கும்” என்று கூறினேன்.4
அந்த மனிதர் “ “(பூமியிóருந்து) குழப்பம் நீங்கி, கீழ்ப்படிதல் முற்றிலுமாக அல்லாஹ்வுக்கென்றே ஆகிவிடும் வரை அவர்களுடன் நீங்கள் போர் புரியுங்கள்' (8:39) என்று அல்லாஹ் கூறுகின்றானே!” என்று கேட்டார்.
நான், “(இதை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் செயல்படுத்திவிட்டோம். அப்போது இஸ்லாம் (உறுப்பினர் எண்ணிக்கையில்) குறைவானதாக இருந்தது. அப்போது (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட) ஒரு மனிதர் தமது மார்க்கத்தின் விஷயத்தில் குழப்பத்திற்கு(ம் சோதனைக்கும்) உள்ளாக்கப்பட்டார்; ஒன்று (எதிரிகள்) அவரைக் கொன்றுவிடுவார்கள். அல்லது அவரைக் கட்டிவைத்துவிடுவார்கள். முடிவில் இஸ்லாம் (அதன் உறுப்பினர்களால்) அதிகரித்தபோது எந்தக் குழப்பமும் (எஞ்சி) இருக்கவில்லை” என்று பதிலளித்தேன்.
தாம் எண்ணி வந்ததற்கு நான் இணங்காததை அவர் கண்டதும், “அலீ (பின் அபீதாலிப்) மற்றும் உஸ்மான் (பின் அஃப்பான்) விஷயத்தில் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?” என்று கேட்டார். நான், “அலீ மற்றும் உஸ்மான் ஆகியோர் விஷயத்தில் என் கருத்து (இதுதான்:) உஸ்மான் (ரலி) அவர்களை அல்லாஹ்வே மன்னித்துவிட்டான். ஆனால் அவர்களை மன்னிக்க நீங்கள் விரும்பவில்லை. அலீ (ரலி) அவர்களோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர் மகனும் நபியவர்களின் மருமகனும் ஆவார்கள்” என்று கூறினேன்.5
(இதன்அறிவிப்பாளர் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:)
இப்னு உமர் (ரலி) அவர்கள், “இதோ நீங்கள் காண்கின்ற இந்த இடத்தில் உள்ளதுதான் நபியவர்களின் புதல்வியார் (ஃபாத்திமாவின்) இல்லமாகும்” என்று -தம் கரத்தால் சைகை செய்தவாறு- கூறினார்கள்.
அத்தியாயம் : 65
4650. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(காரிஜிய்யா கூட்டத்தைச் சேர்ந்த) ஒரு மனிதர் என்னிடம் வந்து, “அபூஅப்திர் ரஹ்மானே! அல்லாஹ் தன் வேதத்தில் (பின்வருமாறு) கூறியிருப்பதை நீங்கள் கேட்கவில்லையா? என்று கேட்டார்.
“இறைநம்பிக்கையாளர்களில் இரு பிரிவினர் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டால் அவ்விருவருக்குமிடையே சமாதானப்படுத்திவிடுங்கள். பின்னர் அவர்களில் ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினரின் மீது (எல்லை மீறி) அநீதியிழைத்தால், அநீதியிழைத்தோர் அல்லாஹ்வுடைய கட்டளையின் பக்கம் வரும்வரை அவர்களை நீங்கள் எதிர்த்துப் போரிடுங்கள். அவர்கள் (அல்லாஹ்வின் கட்டளைகளின் பக்கம்) திரும்பிவிட்டால், நியாயமான முறையில் அவ்விருவருக்கிடையே நடந்துகொள்ளுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் நீதிமான்களை நேசிக்கின்றான்” (49:9).
“இந்நிலையில், அல்லாஹ் தன் வேதத்தில் கூறியுள்ளபடி நீங்கள் போரிட முன்வராமல் இருப்பது ஏன்?” என்றும் கேட்டார்.
நான், “என் சகோதரர் மகனே! இந்த (49:9ஆவது) வசனத்திற்கு ஏதேனும் சமாதானம் கூறிவிட்டு (முஸ்லிம்களில் ஒரு பிரிவினருக்கெதிராகப்) போர் புரியாமல் இருந்துவிடுவது, “ஓர் இறை நம்பிக்கையாளரை ஒருவன் வேண்டுமென்றே கொலை செய்துவிட்டால் அவனுக்குரிய பிரதிபலன் நரகமாகும். அதில் அவன் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பான். மேலும், அவன்மீது அல்லாஹ்வின் கோபமும் அவனுடைய சாபமும் உள்ளது. மேலும், மிகப் பெரிய வேதனையும் அவனுக்காகத் தயார் செய்து வைத்துள்ளான்” என்ற (4:93ஆவது) வசனத்திற்குச் சமாதானம் சொல்வதைவிட எனக்கு உவப்பாதாயிருக்கும்” என்று கூறினேன்.4
அந்த மனிதர் “ “(பூமியிóருந்து) குழப்பம் நீங்கி, கீழ்ப்படிதல் முற்றிலுமாக அல்லாஹ்வுக்கென்றே ஆகிவிடும் வரை அவர்களுடன் நீங்கள் போர் புரியுங்கள்' (8:39) என்று அல்லாஹ் கூறுகின்றானே!” என்று கேட்டார்.
நான், “(இதை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் செயல்படுத்திவிட்டோம். அப்போது இஸ்லாம் (உறுப்பினர் எண்ணிக்கையில்) குறைவானதாக இருந்தது. அப்போது (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட) ஒரு மனிதர் தமது மார்க்கத்தின் விஷயத்தில் குழப்பத்திற்கு(ம் சோதனைக்கும்) உள்ளாக்கப்பட்டார்; ஒன்று (எதிரிகள்) அவரைக் கொன்றுவிடுவார்கள். அல்லது அவரைக் கட்டிவைத்துவிடுவார்கள். முடிவில் இஸ்லாம் (அதன் உறுப்பினர்களால்) அதிகரித்தபோது எந்தக் குழப்பமும் (எஞ்சி) இருக்கவில்லை” என்று பதிலளித்தேன்.
தாம் எண்ணி வந்ததற்கு நான் இணங்காததை அவர் கண்டதும், “அலீ (பின் அபீதாலிப்) மற்றும் உஸ்மான் (பின் அஃப்பான்) விஷயத்தில் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?” என்று கேட்டார். நான், “அலீ மற்றும் உஸ்மான் ஆகியோர் விஷயத்தில் என் கருத்து (இதுதான்:) உஸ்மான் (ரலி) அவர்களை அல்லாஹ்வே மன்னித்துவிட்டான். ஆனால் அவர்களை மன்னிக்க நீங்கள் விரும்பவில்லை. அலீ (ரலி) அவர்களோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர் மகனும் நபியவர்களின் மருமகனும் ஆவார்கள்” என்று கூறினேன்.5
(இதன்அறிவிப்பாளர் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:)
இப்னு உமர் (ரலி) அவர்கள், “இதோ நீங்கள் காண்கின்ற இந்த இடத்தில் உள்ளதுதான் நபியவர்களின் புதல்வியார் (ஃபாத்திமாவின்) இல்லமாகும்” என்று -தம் கரத்தால் சைகை செய்தவாறு- கூறினார்கள்.
அத்தியாயம் : 65
4651. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا بَيَانٌ، أَنَّ وَبَرَةَ، حَدَّثَهُ قَالَ حَدَّثَنِي سَعِيدُ بْنُ جُبَيْرٍ، قَالَ خَرَجَ عَلَيْنَا أَوْ إِلَيْنَا ابْنُ عُمَرَ، فَقَالَ رَجُلٌ كَيْفَ تَرَى فِي قِتَالِ الْفِتْنَةِ. فَقَالَ وَهَلْ تَدْرِي مَا الْفِتْنَةُ كَانَ مُحَمَّدٌ صلى الله عليه وسلم يُقَاتِلُ الْمُشْرِكِينَ، وَكَانَ الدُّخُولُ عَلَيْهِمْ فِتْنَةً، وَلَيْسَ كَقِتَالِكُمْ عَلَى الْمُلْكِ.
பாடம் : 5
(பூமியிலிருந்து) குழப்பம் நீங்கி, கீழ்ப்படிதல் முற்றிலுமாக அல்லாஹ் வுக்கென்றே ஆகிவிடும்வரை அவர்களுடன் நீங்கள் அறப்போர் புரியுங்கள் (எனும் 8:39ஆவது வசனத்தொடர்)
4651. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
எங்களிடம் இப்னு உமர் (ரலி) அவர்கள் புறப்பட்டுவந்தார்கள். (அப்போது) ஒருவர் (அன்னாரிடம்), “நீங்கள் (இந்த முஸ்லிம்களுக்கிடையிலான) குழப்பத்தின் (காரணமாக விளைந்துள்ள) போரைக் குறித்து என்ன கருதுகிறீர்கள்?” என்று கேட்டார்.
அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “குழப்பம்' (ஃபித்னா) என்றால் என்ன என்பது உமக்குத் தெரியுமா? முஹம்மத் (ஸல்) அவர்கள் இணைவைப்பாளர்களுடன் போரிட்டுவந்தார்கள். இணைவைப்பாளர்களிடம் முஸ்லிம் ஒருவர் சென்றால் குழப்பத்தில் (சோதனையில்) சிக்கிக்கொள்வார்” என்று பதிலளித்துவிட்டு, “அவர்களது போர் ஆட்சியதிகாரத்திற்காக நடக்கும் உங்களது போரைப் போன்று இருந்ததில்லை” என்றும் கூறினார்கள்.
அத்தியாயம் : 65
4651. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
எங்களிடம் இப்னு உமர் (ரலி) அவர்கள் புறப்பட்டுவந்தார்கள். (அப்போது) ஒருவர் (அன்னாரிடம்), “நீங்கள் (இந்த முஸ்லிம்களுக்கிடையிலான) குழப்பத்தின் (காரணமாக விளைந்துள்ள) போரைக் குறித்து என்ன கருதுகிறீர்கள்?” என்று கேட்டார்.
அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “குழப்பம்' (ஃபித்னா) என்றால் என்ன என்பது உமக்குத் தெரியுமா? முஹம்மத் (ஸல்) அவர்கள் இணைவைப்பாளர்களுடன் போரிட்டுவந்தார்கள். இணைவைப்பாளர்களிடம் முஸ்லிம் ஒருவர் சென்றால் குழப்பத்தில் (சோதனையில்) சிக்கிக்கொள்வார்” என்று பதிலளித்துவிட்டு, “அவர்களது போர் ஆட்சியதிகாரத்திற்காக நடக்கும் உங்களது போரைப் போன்று இருந்ததில்லை” என்றும் கூறினார்கள்.
அத்தியாயம் : 65
4652. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ لَمَّا نَزَلَتْ {إِنْ يَكُنْ مِنْكُمْ عِشْرُونَ صَابِرُونَ يَغْلِبُوا مِائَتَيْنِ} فَكُتِبَ عَلَيْهِمْ أَنْ لاَ يَفِرَّ وَاحِدٌ مِنْ عَشَرَةٍ ـ فَقَالَ سُفْيَانُ غَيْرَ مَرَّةٍ أَنْ لاَ يَفِرَّ عِشْرُونَ مِنْ مِائَتَيْنِ ـ ثُمَّ نَزَلَتِ {الآنَ خَفَّفَ اللَّهُ عَنْكُمُ} الآيَةَ، فَكَتَبَ أَنْ لاَ يَفِرَّ مِائَةٌ مِنْ مِائَتَيْنِ ـ زَادَ سُفْيَانُ مَرَّةً ـ نَزَلَتْ {حَرِّضِ الْمُؤْمِنِينَ عَلَى الْقِتَالِ إِنْ يَكُنْ مِنْكُمْ عِشْرُونَ صَابِرُونَ}. قَالَ سُفْيَانُ وَقَالَ ابْنُ شُبْرُمَةَ وَأُرَى الأَمْرَ بِالْمَعْرُوفِ وَالنَّهْىَ عَنِ الْمُنْكَرِ مِثْلَ هَذَا.
பாடம் : 6
நபியே! இறைநம்பிக்கையாளர் களுக்குப் போர் புரிவதில் ஆர்வமூட்டுவீராக! உங்களில்(நிலைகுலையாத) பொறுமையாளர் கள் இருபது பேர் இருந்தால் (எதிரி களில்) இருநூறு பேரை அவர்கள் வென்றுவிடுவார்கள். மேலும் (இத்தகையோர்) உங்களில் நூறுபேர் இருந்தால் இறைமறுப்பாளர் களில் ஓராயிரம் பேரை அவர்கள் வென்றுவிடுவார்கள்; ஏனெனில், இவர்கள் புரிந்துகொள்ளாத மக்களாக இருக்கிறார்கள் (எனும் 8:65 ஆவது இறைவசனம்)
4652. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“உங்களில் (நிலைகுலையாத) பொறுமையாளர்கள் இருபது பேர் இருந்தால் (எதிரிகளில்) இருநூறு பேரை அவர்கள் வென்றுவிடுவார்கள்” எனும் (8:65ஆவது) இறைவசனம் அருளப்பெற்றபோது, ஒருவர் பத்து பேரைக் கண்டு வெருண்டோடாமல் (எதிர்த்து நின்று சமாளித்துப் பொறுமையாக) இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு விதியாக்கப்பட்டது.
இதையே, “இருநூறு பேரைக் கண்டு இருபது பேர் வெருண்டோடக் கூடாது” என சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் பலமுறை தெரிவித்தார்கள்.
அதன் பிறகு, “எனினும் உங்களிடம் பலவீனம் இருக்கிறது என்பதை அல்லாஹ் நன்கறிந்துகொண்டு, தற்சமயம் (அதை) உங்களுக்குத் தளர்த்தி விட்டான். ஆகவே, உங்களில் (பொறுமையும்) சகிப்புத் தன்மை(யும்) உடைய நூறு பேர் இருந்தால் அவர்கள் (மற்ற) இருநூறு பேரை வெற்றி கொண்டு விடுவார்கள். (இத்தகைய) ஆயிரம் பேர் உங்களிடம் இருந்தால் அல்லாஹ்வின் உதவியால் (மற்ற) இரண்டாயிரம் பேரை வெற்றி கொண்டுவிடுவார்கள். அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்” எனும் (8:66ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.
(அதன் மூலம்) அல்லாஹ் நூறு முஸ்லிம்கள் இருநூறு பேரைக் கண்டு வெருண்டோடக் கூடாது என்று விதித்தான்.
ஒருமுறை சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் இவ்வசனம் (8:65) குறித்துக் கூறியபோது (கூஃபாவின் நீதிபதியும் தாபிஉமான அப்துல்லாஹ்) இப்னு ஷுப்ருமா (ரஹ்) அவர்கள், “நன்மை புரியும்படி கட்டளையிட்டுத் தீமையிலிருந்து தடுப்பதையும்கூட நான் இது போன்றே கருதுகின்றேன் என்று கூறினார்” என்றும் கூடுதலாக அறிவித்தார்கள்.
அத்தியாயம் : 65
4652. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“உங்களில் (நிலைகுலையாத) பொறுமையாளர்கள் இருபது பேர் இருந்தால் (எதிரிகளில்) இருநூறு பேரை அவர்கள் வென்றுவிடுவார்கள்” எனும் (8:65ஆவது) இறைவசனம் அருளப்பெற்றபோது, ஒருவர் பத்து பேரைக் கண்டு வெருண்டோடாமல் (எதிர்த்து நின்று சமாளித்துப் பொறுமையாக) இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு விதியாக்கப்பட்டது.
இதையே, “இருநூறு பேரைக் கண்டு இருபது பேர் வெருண்டோடக் கூடாது” என சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் பலமுறை தெரிவித்தார்கள்.
அதன் பிறகு, “எனினும் உங்களிடம் பலவீனம் இருக்கிறது என்பதை அல்லாஹ் நன்கறிந்துகொண்டு, தற்சமயம் (அதை) உங்களுக்குத் தளர்த்தி விட்டான். ஆகவே, உங்களில் (பொறுமையும்) சகிப்புத் தன்மை(யும்) உடைய நூறு பேர் இருந்தால் அவர்கள் (மற்ற) இருநூறு பேரை வெற்றி கொண்டு விடுவார்கள். (இத்தகைய) ஆயிரம் பேர் உங்களிடம் இருந்தால் அல்லாஹ்வின் உதவியால் (மற்ற) இரண்டாயிரம் பேரை வெற்றி கொண்டுவிடுவார்கள். அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்” எனும் (8:66ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.
(அதன் மூலம்) அல்லாஹ் நூறு முஸ்லிம்கள் இருநூறு பேரைக் கண்டு வெருண்டோடக் கூடாது என்று விதித்தான்.
ஒருமுறை சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் இவ்வசனம் (8:65) குறித்துக் கூறியபோது (கூஃபாவின் நீதிபதியும் தாபிஉமான அப்துல்லாஹ்) இப்னு ஷுப்ருமா (ரஹ்) அவர்கள், “நன்மை புரியும்படி கட்டளையிட்டுத் தீமையிலிருந்து தடுப்பதையும்கூட நான் இது போன்றே கருதுகின்றேன் என்று கூறினார்” என்றும் கூடுதலாக அறிவித்தார்கள்.
அத்தியாயம் : 65
4653. حَدَّثَنَا يَحْيَى بْنُ عَبْدِ اللَّهِ السُّلَمِيُّ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، أَخْبَرَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، قَالَ أَخْبَرَنِي الزُّبَيْرُ بْنُ خِرِّيتٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ لَمَّا نَزَلَتْ {إِنْ يَكُنْ مِنْكُمْ عِشْرُونَ صَابِرُونَ يَغْلِبُوا مِائَتَيْنِ} شَقَّ ذَلِكَ عَلَى الْمُسْلِمِينَ حِينَ فُرِضَ عَلَيْهِمْ أَنْ لاَ يَفِرَّ وَاحِدٌ مِنْ عَشَرَةٍ، فَجَاءَ التَّخْفِيفُ فَقَالَ رالآنَ خَفَّفَ اللَّهُ عَنْكُمْ وَعَلِمَ أَنَّ فِيكُمْ ضُعْفًا فَإِنْ يَكُنْ مِنْكُمْ مِائَةٌ صَابِرَةٌ يَغْلِبُوا مِائَتَيْنِ}. قَالَ فَلَمَّا خَفَّفَ اللَّهُ عَنْهُمْ مِنَ الْعِدَّةِ نَقَصَ مِنَ الصَّبْرِ بِقَدْرِ مَا خُفِّفَ عَنْهُمْ.
பாடம் : 7
“எனினும் உங்களிடம் பலவீனம் இருக்கிறது என்பதை அறிந்து கொண்டு தற்போது (அதை) உங்களுக்கு அல்லாஹ் தளர்த்தி விட்டான்” எனும் (8:66ஆவது) இறைவசனம்
4653. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“உங்களில் (நிலைகுலையாத) பொறுமையாளர்கள் இருபது பேர் இருந்தால் (எதிரிகளில்) இரு நூறு பேரை அவர்கள் வென்றுவிடுவார்கள்” எனும் (8:65ஆவது) வசனம் அருளப்பெற்று, (முஸ்óம்) ஒருவர் (இறைமறுப்பாளர்கள்) பத்துப் பேரைக் கண்டு வெருண்டோடாமல் (எதிர்த்து நின்று சமாளித்துப் பொறுமையாக) இருக்க வேண்டும் என்று விதிக்கப்பட்ட போது அது முஸ்லிம்களுக்குச் சிரமமாயிருந்தது. ஆகவே, (சட்டத்தைத்) தளர்த்தும் வசனம் வந்தது.
அதில் அல்லாஹ், “எனினும், உங்களிடம் பலவீனம் இருக்கிறது என்பதை அல்லாஹ் அறிந்துகொண்டு தற்சமயம் (அதனை) உங்களுக்குத் தளர்த்திவிட்டான். ஆகவே, உங்களில் (நிலைகுலையாத) பொறுமையாளர்கள் நூறு பேர் (எதிரிகளில்) இருநூறு பேரை வெற்றி கொள்வார்கள்” எனும் வசனம்(8:66) அருளப்பெற்றது.
(எதிரிகளைச் சமாளிக்கும்) விகிதத்தை அல்லாஹ் குறைத்துவிட்டபோதே அதே அளவுக்குச் சகிப்புத் தன்மையையும் அவன் குறைத்துவிட்டான்.
அத்தியாயம் : 65
4653. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“உங்களில் (நிலைகுலையாத) பொறுமையாளர்கள் இருபது பேர் இருந்தால் (எதிரிகளில்) இரு நூறு பேரை அவர்கள் வென்றுவிடுவார்கள்” எனும் (8:65ஆவது) வசனம் அருளப்பெற்று, (முஸ்óம்) ஒருவர் (இறைமறுப்பாளர்கள்) பத்துப் பேரைக் கண்டு வெருண்டோடாமல் (எதிர்த்து நின்று சமாளித்துப் பொறுமையாக) இருக்க வேண்டும் என்று விதிக்கப்பட்ட போது அது முஸ்லிம்களுக்குச் சிரமமாயிருந்தது. ஆகவே, (சட்டத்தைத்) தளர்த்தும் வசனம் வந்தது.
அதில் அல்லாஹ், “எனினும், உங்களிடம் பலவீனம் இருக்கிறது என்பதை அல்லாஹ் அறிந்துகொண்டு தற்சமயம் (அதனை) உங்களுக்குத் தளர்த்திவிட்டான். ஆகவே, உங்களில் (நிலைகுலையாத) பொறுமையாளர்கள் நூறு பேர் (எதிரிகளில்) இருநூறு பேரை வெற்றி கொள்வார்கள்” எனும் வசனம்(8:66) அருளப்பெற்றது.
(எதிரிகளைச் சமாளிக்கும்) விகிதத்தை அல்லாஹ் குறைத்துவிட்டபோதே அதே அளவுக்குச் சகிப்புத் தன்மையையும் அவன் குறைத்துவிட்டான்.
அத்தியாயம் : 65
4654. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ الْبَرَاءَ ـ رضى الله عنه ـ يَقُولُ آخِرُ آيَةٍ نَزَلَتْ {يَسْتَفْتُونَكَ قُلِ اللَّهُ يُفْتِيكُمْ فِي الْكَلاَلَةِ} وَآخِرُ سُورَةٍ نَزَلَتْ بَرَاءَةٌ.
பாடம்:
9. “பராஅத்' (“அத்தவ்பா') அத்தியாயம்1
(9:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “மர்ஸத்' எனும் சொல்லுக்கு “பாதை' என்பது பொருள்.
(9:8ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “இல்லன்' எனும் சொல்லுக்குப் பந்தம், பொறுப்பு, உடன்படிக்கை ஆகிய பொருள்கள் உண்டு.
(9:16ஆவது வசனத்திலுள்ள “அந்தரங்க நண்பர்கள்' என்பது மூலத்திலுள்ள “வலீஜத்' எனும் சொல்லின் பொருளாகும். பொதுவாக) மற்றொன்றினுள் நீ நுழைவித்த எல்லாப் பொருள்களையும் “வலீஜத்' எனும் சொல் குறிக்கும்.
(9:42ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அஷ்ஷுக்கா' எனும் சொல்லுக்கு “பயணம்' என்று பொருள்.
(9:47ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அல்கபால்' எனும் சொல்லுக்குச் சீர்குலைவு, மரணம் (அல்மவ்த்) ஆகிய பொருள்கள் உண்டு. (“அல்மூத்தா' என்பதன்படி “மனநோய்' எனும் பொருளும் உண்டு.)
(9:49ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “வலா தஃப்தின்னீ' எனும் சொற்றொட ருக்கு “என்னை நீர் கண்டிக்காதீர்' என்று பொருள்.
(9:53ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “கர்ஹ்' எனும் சொல்லும் (அதே வகைச் சொல்லான) “குர்ஹ்' எனும் சொல்லும் (“வெறுப்பு' எனும்) ஒரே பொருள் கொண்டவை ஆகும்.
(9:57ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “முத்தகலன்' எனும் சொல்லுக்கு “மக்களின் நுழைவிடம்' என்று பொருள்.
(இதே வசனத்தின் மூலத்திலுள்ள) “யஜ்மஹூன்' எனும் சொல்லுக்கு “விரைந்தோடுவார்கள்' என்பது பொருள்.
(9:70ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அல்முஉதஃபிக்காத்' எனும் சொல்லுக்கு “தலைகீழாகக் கவிழ்ந்த ஊர்கள்' என்று பொருள். “வல்முஃதஃபிக்கத்த அஹ்வா' எனும் (53:53ஆவது) வசனத்திற்கு, “(லூத்தின் மக்களுடைய) கவிழ்ந்து போன நகரங்களை அதலபாதாளத்தில் தூக்கிப்போட்டவனும் அவன்தான்” என்பது பொருள்.
(9:72ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அத்ன்' எனும் சொல்லுக்கு, “நிலையானது' என்பது பொருள். (அதன் வினைச்சொல்லான) “அதன்த்து பி அர்ளின்' எனும் வாக்கியத்திற்கு, “நான் ஒரு பகுதியில் நிலையாகத் தங்கினேன்' என்று பொருள்.
இதிலிருந்து “மஅதின்' (சுரங்கம்) என்ற சொல் பிறந்தது. மேலும் “மஅதினி சித்க்' என்றால் “சத்தியத்தின் பிறப்பிடம்' என்று பொருள்.
(9:87ஆவது வசனத்திலுள்ள “கவாலிஃப்' (பின்தங்கிவிட்டவர்கள்) எனும் சொல்லின் ஒருமையான) “அல்காலிஃப்' எனும் சொல், என் பின்னால் வராமல் நான் சென்றபின் (தன் வீட்டிலேயே) அமர்ந்துகொண்டவனைக் குறிக்கும். இச்சொல்லிலிருந்து “யக்லுஃபுஹு ஃபில் ஃகாபிரீன்' (அவருக்குப் பின்னால் அவருக்குப் பதிலாக அமையக்கூடிய ஒருவர்) எனும் சொல்வழக்கு பிறந்தது.
“கவாலிஃப்' என்பது “காலிஃபா' எனும் பெண்பால் ஒருமையின் பன்மையாகவும் இருக்கலாம். ஏனெனில், இந்த அமைப்பில் ஆண்பால் பன்மை ஃபாரிஸ்-ஃபவாரிஸ் (குதிரை வீரர்), ஹாலிக்-ஹவாலிக் (அழிந்துபோனவர்) ஆகிய இரு சொற்களில் மட்டுமே உண்டு.
(9:88ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அல்கைராத்' எனும் சொல்லின் ஒருமை “அல்கைரத்' என்பதாகும். இதற்கு “சிறந்தவை' என்பது பொருள்.
(9:106ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “முர்ஜவ்ன' எனும் சொல்லுக்கு “காத்திருப்பில் வைக்கப்பட்டவர்கள்' என்பது பொருள்.
(9:109ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஷஃபா' எனும் சொல்லுக்கு “விளிம்பு' என்பது பொருள்.
(இதே வசனத்தின் மூலத்திலுள்ள) “ஜுருஃப்' எனும் சொல்லுக்கு “சரிந்து விழக்கூடிய வெள்ளம் மற்றும் ஓடைகள்' என்பது பொருள். “ஹாரின்' எனும் சொல்லுக்கு “இடிந்து விழக்கூடியது' என்பது பொருள். “தஹவ்வரத்தில் பிஃரு' என்றால், “கிணறு இடிந்துவிட்டது' என்பது பொருள்.
(9:114ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ல அவ்வாஹ்' எனும் சொல்லுக்கு “பரிவோடும் பயத்தோடும் அடிபணிகின்றவர்' என்பது பொருள்.
ஒரு கவிஞர் சொன்னார்: நான் இரவில் அந்த ஒட்டகத்தில் சிவிகை பூட்ட எழுந்தால், மன சஞ்சலம் உள்ள மனிதன் அடங்கி ஒடுங்குவதைப் போன்று அந்த ஒட்டகமும் அடங்கி அடிபணியும்.
பாடம் : 1
“(இறைநம்பிக்கையாளர்களே!) இணை கற்பிப்போரில் யாரிடம் நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்டிருந்தீர்களோ அவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்தும் அவனுடைய தூதரிடமிருந்தும் வந் துள்ள விலகல் பிரகடனம் (இது)” எனும் (9:1ஆவது) இறைவசனம்
(9:3ஆவது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “அஃதான்' எனும் சொல்லுக்கு “அறிவிப்பு' என்பது பொருள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
(9:61ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “உதுனு (யுஃமினு)' எனும் சொற்றொடருக்கு “(அல்லாஹ்வை) உண்மை என நம்பும் செவி' என்பது பொருள்.
(9:103ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள “தூய்மைப்படுத்துகின்ற' எனும் ஒரே பொருள் கொண்ட) “துதஹ்ஹிருஹும்' மற்றும் “துஸக்கீஹிம்' போன்ற இரு சொற்களைப் பயன்படுத்துவது (அரபியர் வழக்கில்) மிகுதியாக உண்டு.
(“துஸக்கீஹிம்' என்பதன் வேர்ச்சொல்லான) “ஸகாத்' எனும் சொல்லுக்கு “கீழ்ப்படிதல்; “மனத் தூய்மை' ஆகிய பொருள்கள் உண்டு.
(இதே “ஸகாத்' எனும் சொல் இடம்பெற்றுள்ள 41:7ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “லா யுஉத்தூனஸ் ஸகாத்த' (ஸகாத் வழங்காதவர்கள்) என்பதன் கருத்து: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று உறுதி கூறாதவர்கள்.
(9:30ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள “யுளாஹிஊன' எனும் சொல்லின் மற்றோர் ஓதல் முறையான) “யுளாஹƒன' எனும் சொல்லுக்கு “ஒத்திருக்கிறார்கள்' என்று பொருள்.
4654. பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
“(நபியே!) உம்மிடம் அவர்கள் (வாரிசுகள் இல்லாமல் இறந்துவிடுவோர் குறித்து) தீர்ப்புக் கேட்கிறார்கள்; அத்தகையவர்கள் குறித்து உங்களுக்கு அல்லாஹ் தீர்ப்பு அளிக்கிறான்... என்று நீர் கூறுவீராக!” எனும் (4:17ஆவது) இறை வசனம்தான் கடைசியாக அருளப்பெற்ற இறைவசனமாகும்.
(9ஆவது அத்தியாயமான) “பராஅத்' (அத்தவ்பா) அத்தியாயமே இறுதியாக அருளப்பெற்ற அத்தியாயம் ஆகும்.2
அத்தியாயம் : 65
4654. பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
“(நபியே!) உம்மிடம் அவர்கள் (வாரிசுகள் இல்லாமல் இறந்துவிடுவோர் குறித்து) தீர்ப்புக் கேட்கிறார்கள்; அத்தகையவர்கள் குறித்து உங்களுக்கு அல்லாஹ் தீர்ப்பு அளிக்கிறான்... என்று நீர் கூறுவீராக!” எனும் (4:17ஆவது) இறை வசனம்தான் கடைசியாக அருளப்பெற்ற இறைவசனமாகும்.
(9ஆவது அத்தியாயமான) “பராஅத்' (அத்தவ்பா) அத்தியாயமே இறுதியாக அருளப்பெற்ற அத்தியாயம் ஆகும்.2
அத்தியாயம் : 65