441. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ جَاءَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَيْتَ فَاطِمَةَ، فَلَمْ يَجِدْ عَلِيًّا فِي الْبَيْتِ فَقَالَ "" أَيْنَ ابْنُ عَمِّكِ "". قَالَتْ كَانَ بَيْنِي وَبَيْنَهُ شَىْءٌ، فَغَاضَبَنِي فَخَرَجَ فَلَمْ يَقِلْ عِنْدِي. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لإِنْسَانٍ "" انْظُرْ أَيْنَ هُوَ "". فَجَاءَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، هُوَ فِي الْمَسْجِدِ رَاقِدٌ، فَجَاءَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهْوَ مُضْطَجِعٌ، قَدْ سَقَطَ رِدَاؤُهُ عَنْ شِقِّهِ، وَأَصَابَهُ تُرَابٌ، فَجَعَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَمْسَحُهُ عَنْهُ وَيَقُولُ "" قُمْ أَبَا تُرَابٍ، قُمْ أَبَا تُرَابٍ "".
பாடம் : 58
பள்ளிவாசலில் ஆண்கள் உறங்குவது
“உக்ல் எனும் குலத்தாரில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர்; அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாச-ன்) திண்ணையில் (தங்கி) இருந்தனர்” என அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
“திண்ணைத் தோழர்கள் ஏழைகளாக இருந்தனர்” என அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
441. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் புதல்வி ஃபாத்திமா (ரலி) அவர்களின் இல்லத்திற்கு வந்த போது, (மருமகனான) அலீ (ரலி) அவர்கள் வீட்டில் காணவில்லை. ஆகவே, உன் (தந்தையின்) பெரிய தந்தையின் புதல்வர் எங்கே?” என்று கேட்க, அதற்கு ஃபாத்திமா (ரலி) அவர்கள், “எனக்கும் அவருக்கும் இடையே சிறிய மனஸ்தாபம் ஏற்பட்டது. ஆகவே, அவர் என்னைக் கோபித்துக்கொண்டு என்னிடம் மதிய ஓய்வெடுக்காமல் (வீட்டி-ருந்து) சென்று விட்டார்” என்று கூறினார்கள்.
உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், “அவர் எங்கே என்று பாருங்கள்” என்றார்கள். உடனே அந்த மனிதர் (சென்றுவிட்டு) வந்து, “அவர் பள்ளிவாச-ல் உறங்கிக்கொண்டிருக்கிறார், அல்லாஹ்வின் தூதரே!” என்றார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலுக்கு) வந்தபோது, அலீ (ரலி) அவர்களின் மேலங்கி அவரது முதுகி-ருந்து (தரையில்) விழுந்துவிட்டிருக்க, அவரது மேனியில் மண் படிந்திருக்கும் நிலையில் அவர் ஒருக்களித்துப் படுத்திருக் கக் கண்டார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களின் மேனியி-ருந்த மண்ணைத் துடைத்தவாறே, “எழுந்திருங்கள், மண்ணின் தந்தையே (அபுத்துராப்)! எழுந்திருங்கள், மண்ணின் தந்தையே!!” என்று கூறலானார்கள்.
அத்தியாயம் : 8
441. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் புதல்வி ஃபாத்திமா (ரலி) அவர்களின் இல்லத்திற்கு வந்த போது, (மருமகனான) அலீ (ரலி) அவர்கள் வீட்டில் காணவில்லை. ஆகவே, உன் (தந்தையின்) பெரிய தந்தையின் புதல்வர் எங்கே?” என்று கேட்க, அதற்கு ஃபாத்திமா (ரலி) அவர்கள், “எனக்கும் அவருக்கும் இடையே சிறிய மனஸ்தாபம் ஏற்பட்டது. ஆகவே, அவர் என்னைக் கோபித்துக்கொண்டு என்னிடம் மதிய ஓய்வெடுக்காமல் (வீட்டி-ருந்து) சென்று விட்டார்” என்று கூறினார்கள்.
உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், “அவர் எங்கே என்று பாருங்கள்” என்றார்கள். உடனே அந்த மனிதர் (சென்றுவிட்டு) வந்து, “அவர் பள்ளிவாச-ல் உறங்கிக்கொண்டிருக்கிறார், அல்லாஹ்வின் தூதரே!” என்றார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலுக்கு) வந்தபோது, அலீ (ரலி) அவர்களின் மேலங்கி அவரது முதுகி-ருந்து (தரையில்) விழுந்துவிட்டிருக்க, அவரது மேனியில் மண் படிந்திருக்கும் நிலையில் அவர் ஒருக்களித்துப் படுத்திருக் கக் கண்டார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களின் மேனியி-ருந்த மண்ணைத் துடைத்தவாறே, “எழுந்திருங்கள், மண்ணின் தந்தையே (அபுத்துராப்)! எழுந்திருங்கள், மண்ணின் தந்தையே!!” என்று கூறலானார்கள்.
அத்தியாயம் : 8
442. حَدَّثَنَا يُوسُفُ بْنُ عِيسَى، قَالَ حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ رَأَيْتُ سَبْعِينَ مِنْ أَصْحَابِ الصُّفَّةِ، مَا مِنْهُمْ رَجُلٌ عَلَيْهِ رِدَاءٌ، إِمَّا إِزَارٌ وَإِمَّا كِسَاءٌ، قَدْ رَبَطُوا فِي أَعْنَاقِهِمْ، فَمِنْهَا مَا يَبْلُغُ نِصْفَ السَّاقَيْنِ، وَمِنْهَا مَا يَبْلُغُ الْكَعْبَيْنِ، فَيَجْمَعُهُ بِيَدِهِ، كَرَاهِيَةَ أَنْ تُرَى عَوْرَتُهُ.
பாடம் : 58
பள்ளிவாசலில் ஆண்கள் உறங்குவது
“உக்ல் எனும் குலத்தாரில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர்; அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாச-ன்) திண்ணையில் (தங்கி) இருந்தனர்” என அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
“திண்ணைத் தோழர்கள் ஏழைகளாக இருந்தனர்” என அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
442. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
திண்ணைத் தோழர்களில் எழுபது பேரை நான் பார்த்திருக்கிறேன். அவர் களில் ஒருவருக்குக்கூட மேல்துண்டு இருந்ததில்லை. (ஒரேயோர் ஆடைதான் அவர்களுக்கு இருந்தது.) ஒன்று அது கீழங்கியாக இருக்கும்; அல்லது (அது) ஒரு துணியாக (மட்டும்) இருக்கும். அதை அவர்கள் தங்கள் பிடரியில் முடிந்து கொண்டிருப்பார்கள்.
அவற்றில் சில, (பற்றாக் குறையால்) கணைக்கால்களின் பாதியளவே இருக்கும். இன்னும் சில கணுக்கால்களை எட்டு மளவுக்கு இருக்கும். அதை அவர்கள் (தொழும்போதும் மற்ற நேரங்களிலும்) தமது கரத்தால் சேர்த்துப் பிடித்துக் கொள்வார்கள். மறைக்க வேண்டிய தம் உறுப்புகளை பிறர் பார்த்துவிடக் கூடாதே! என்பதற்காக (அவ்வாறு சேர்த்துப் பிடித்தனர்.)
அத்தியாயம் : 8
442. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
திண்ணைத் தோழர்களில் எழுபது பேரை நான் பார்த்திருக்கிறேன். அவர் களில் ஒருவருக்குக்கூட மேல்துண்டு இருந்ததில்லை. (ஒரேயோர் ஆடைதான் அவர்களுக்கு இருந்தது.) ஒன்று அது கீழங்கியாக இருக்கும்; அல்லது (அது) ஒரு துணியாக (மட்டும்) இருக்கும். அதை அவர்கள் தங்கள் பிடரியில் முடிந்து கொண்டிருப்பார்கள்.
அவற்றில் சில, (பற்றாக் குறையால்) கணைக்கால்களின் பாதியளவே இருக்கும். இன்னும் சில கணுக்கால்களை எட்டு மளவுக்கு இருக்கும். அதை அவர்கள் (தொழும்போதும் மற்ற நேரங்களிலும்) தமது கரத்தால் சேர்த்துப் பிடித்துக் கொள்வார்கள். மறைக்க வேண்டிய தம் உறுப்புகளை பிறர் பார்த்துவிடக் கூடாதே! என்பதற்காக (அவ்வாறு சேர்த்துப் பிடித்தனர்.)
அத்தியாயம் : 8
443. حَدَّثَنَا خَلاَّدُ بْنُ يَحْيَى، قَالَ حَدَّثَنَا مِسْعَرٌ، قَالَ حَدَّثَنَا مُحَارِبُ بْنُ دِثَارٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَهُوَ فِي الْمَسْجِدِ ـ قَالَ مِسْعَرٌ أُرَاهُ قَالَ ضُحًى ـ فَقَالَ "" صَلِّ رَكْعَتَيْنِ "". وَكَانَ لِي عَلَيْهِ دَيْنٌ فَقَضَانِي وَزَادَنِي.
பாடம் : 59
பயணத்திலிருந்து திரும்பியதும் தொழுவது
“நபி (ஸல்) அவர்கள் பயணத்தி-ருந்து திரும்பியதும் முத-ல் பள்ளிவாசலுக்குச் சென்று தொழுவது வழக்கம்” என்று கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
443. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(பயணத்தை முடித்துக்கொண்டு) பள்ளிவாச-ல் இருந்த நபி (ஸல்) அவர்களிடம் நான் வந்தேன். அப்போது அவர்கள் (என்னிடம்), “(பயணத்தி-ருந்து திரும்பிய நீர்) இரண்டு ரக்அத்கள் தொழுவீராக!” என்று சொன்னார்கள்.
எனக்கு நபி (ஸல்) அவர்கள் தர வேண்டிய கடன் (பாக்கி) ஒன்றும் இருந்தது. அப்போது அவர்கள் அதை எனக்கு வழங்கியதுடன், மேலதிகமாகவும் வழங்கினார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான) மிஸ்அர் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்:
(எமக்கு இந்த ஹதீஸை அறிவித்த) முஹாரிப் பின் திஸார் (ரஹ்) அவர்கள், ‘முற்பகல் நேரத்தில் (நான் நபிகளாரிடம் சென்றேன்)’ என்று (ஜாபிர் (ரலி) அவர்கள்) கூறியதாகவும் குறிப்பிட்டார்கள் என நான் எண்ணுகிறேன்.
அத்தியாயம் : 8
443. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(பயணத்தை முடித்துக்கொண்டு) பள்ளிவாச-ல் இருந்த நபி (ஸல்) அவர்களிடம் நான் வந்தேன். அப்போது அவர்கள் (என்னிடம்), “(பயணத்தி-ருந்து திரும்பிய நீர்) இரண்டு ரக்அத்கள் தொழுவீராக!” என்று சொன்னார்கள்.
எனக்கு நபி (ஸல்) அவர்கள் தர வேண்டிய கடன் (பாக்கி) ஒன்றும் இருந்தது. அப்போது அவர்கள் அதை எனக்கு வழங்கியதுடன், மேலதிகமாகவும் வழங்கினார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான) மிஸ்அர் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்:
(எமக்கு இந்த ஹதீஸை அறிவித்த) முஹாரிப் பின் திஸார் (ரஹ்) அவர்கள், ‘முற்பகல் நேரத்தில் (நான் நபிகளாரிடம் சென்றேன்)’ என்று (ஜாபிர் (ரலி) அவர்கள்) கூறியதாகவும் குறிப்பிட்டார்கள் என நான் எண்ணுகிறேன்.
அத்தியாயம் : 8
444. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَمْرِو بْنِ سُلَيْمٍ الزُّرَقِيِّ، عَنْ أَبِي قَتَادَةَ السَّلَمِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا دَخَلَ أَحَدُكُمُ الْمَسْجِدَ فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ قَبْلَ أَنْ يَجْلِسَ "".
பாடம் : 60
பள்ளிவாசலுக்குச் சென்றதும் இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும்.
444. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் பள்ளிவாசலுக்குள் நுழைந்தால், உட்காருவதற்கு முன்பு இரண்டு ரக்அத்கள் தொழட்டும்.
இதை அபூகத்தாதா அஸ்ஸலமீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 8
444. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் பள்ளிவாசலுக்குள் நுழைந்தால், உட்காருவதற்கு முன்பு இரண்டு ரக்அத்கள் தொழட்டும்.
இதை அபூகத்தாதா அஸ்ஸலமீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 8
445. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" الْمَلاَئِكَةُ تُصَلِّي عَلَى أَحَدِكُمْ مَا دَامَ فِي مُصَلاَّهُ الَّذِي صَلَّى فِيهِ، مَا لَمْ يُحْدِثْ، تَقُولُ اللَّهُمَّ اغْفِرْ لَهُ اللَّهُمَّ ارْحَمْهُ "".
பாடம் : 61
பள்ளிவாச-ல் இருக்கும்போது (உளூவை முறிக்கக்கூடிய) சிறுதுடக்கு ஏற்படல்46
445. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் எந்த இடத்தில் தொழுவாரோ அந்த இடத்திலேயே அமர்ந்திருக்கும் வரை அவருக்காக வானவர்கள் பிரார்த் தனை செய்கிறார்கள்; ஆனால், (உளூவை முறிக்கக்கூடிய) சிறுதுடக்கு ஏற்படாம-ருக்க வேண்டும்.
வானவர்கள், “இறைவா! இவருக்கு மன்னிப்பு அளிப்பாயாக! இறைவா! இவருக்குக் கருணை புரிவாயாக!” என்று பிரார்த்திக்கிறார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 8
445. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் எந்த இடத்தில் தொழுவாரோ அந்த இடத்திலேயே அமர்ந்திருக்கும் வரை அவருக்காக வானவர்கள் பிரார்த் தனை செய்கிறார்கள்; ஆனால், (உளூவை முறிக்கக்கூடிய) சிறுதுடக்கு ஏற்படாம-ருக்க வேண்டும்.
வானவர்கள், “இறைவா! இவருக்கு மன்னிப்பு அளிப்பாயாக! இறைவா! இவருக்குக் கருணை புரிவாயாக!” என்று பிரார்த்திக்கிறார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 8
446. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، قَالَ حَدَّثَنَا نَافِعٌ، أَنَّ عَبْدَ اللَّهِ، أَخْبَرَهُ أَنَّ الْمَسْجِدَ كَانَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مَبْنِيًّا بِاللَّبِنِ، وَسَقْفُهُ الْجَرِيدُ، وَعُمُدُهُ خَشَبُ النَّخْلِ، فَلَمْ يَزِدْ فِيهِ أَبُو بَكْرٍ شَيْئًا، وَزَادَ فِيهِ عُمَرُ وَبَنَاهُ عَلَى بُنْيَانِهِ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِاللَّبِنِ وَالْجَرِيدِ، وَأَعَادَ عُمُدَهُ خَشَبًا، ثُمَّ غَيَّرَهُ عُثْمَانُ، فَزَادَ فِيهِ زِيَادَةً كَثِيرَةً، وَبَنَى جِدَارَهُ بِالْحِجَارَةِ الْمَنْقُوشَةِ وَالْقَصَّةِ، وَجَعَلَ عُمُدَهُ مِنْ حِجَارَةٍ مَنْقُوشَةٍ، وَسَقَفَهُ بِالسَّاجِ.
பாடம் : 62
(‘மஸ்ஜிதுந் நபவீ’) பள்ளி
வாச-ன் கட்டுமானம்
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களது (காலத்தில் மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாச-ன் மேற்கூரை பேரீச்சமர ஓலைகளால் (வேயப்பட்டதாக) இருந்தது.
உமர் (ரலி) அவர்களே (தமது ஆட்சிக் காலத்தில்) பள்ளிவாசலை (விரிவாக்கிக்) கட்டும்படி உத்தரவிட்டார்கள். (கட்டடப் பணி நடைபெற்றபோது) “மக்களை மழை நீரி-ருந்து பாதுகாக்கும் விதமாகக் கட்டுவீராக! சிவப்பு வர்ணமோ மஞ்சள் வர்ணமோ தீட்ட வேண்டாமென உன்னை நான் எச்சரிக்கிறேன். அதனால் மக்களின் கவனம் திசை திரும்பிவிடக்கூடும்” என்று (கட்டடப் பணியாளரிடம்) உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு காலம் வரும். அக்காலத்தில்) பள்ளிவாசல்களின் மூலம் மக்கள் பெருமையடித்துக்கொள்வார்கள். (வழிபாடுகள் மூலம்) அவற்றை மிகக் குறைவாகவே அலங்கரிப்பார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
யூத, கிறித்தவர்கள் (தங்கள் ஆலயங் களை) அலங்கரித்ததைப் போன்றே நீங்களும் பள்ளிவாசல்களை அலங்கரிக் கிறீர்கள் என்பது மட்டும் உறுதி.
446. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களது காலத்தில் ‘மஸ்ஜிதுந் நபவீ’ பள்ளிவாசல் (உடைய சுவர்கள்) செங்கற் களால் கட்டப்பட்டிருந்தன; அதன் மேற் கூரை பேரீச்சமர ஓலைகளாலும், அதன் தூண்கள் பேரீச்ச மரக் கட்டைகளாலும் அமைந்திருந்தன.
அபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தில்) அதில் எந்த விரிவாக்கமும் செய்யவில்லை. என்றாலும், உமர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சியில்) அதை விரிவுபடுத்தினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தி-ருந்த கட்டட அமைப்பிலேயே செங்கல், பேரீச்ச மர ஓலை ஆகியவற்றால் அதைக் கட்டினார்கள். அதன் தூண்களை முன்பு போன்றே (பேரீச்சமரக்) கட்டைகளால் அமைத்தார்கள்.
பின்னர் (ஆட்சிப் பொறுப்பேற்ற) உஸ்மான் (ரலி) அவர்கள் அதில் மாற்றம் செய்து, அதிகமான அம்சங்களைச் சேர்த்தார்கள்.
வேலைப்பாடுகள் செய்யப்பட்ட கற்களாலும் சுண்ணாம்புக் காரையாலும் அதன் சுவர்களைக் கட்டினார்கள். வேலைப்பாடுகள் செய்யப்பட்ட கற்களால் அதன் தூண்களை எழுப்பினார்கள். தேக்கு மரத்தால் அதற்கு மேற்கூரை அமைத்தார்கள்.
அத்தியாயம் : 8
446. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களது காலத்தில் ‘மஸ்ஜிதுந் நபவீ’ பள்ளிவாசல் (உடைய சுவர்கள்) செங்கற் களால் கட்டப்பட்டிருந்தன; அதன் மேற் கூரை பேரீச்சமர ஓலைகளாலும், அதன் தூண்கள் பேரீச்ச மரக் கட்டைகளாலும் அமைந்திருந்தன.
அபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தில்) அதில் எந்த விரிவாக்கமும் செய்யவில்லை. என்றாலும், உமர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சியில்) அதை விரிவுபடுத்தினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தி-ருந்த கட்டட அமைப்பிலேயே செங்கல், பேரீச்ச மர ஓலை ஆகியவற்றால் அதைக் கட்டினார்கள். அதன் தூண்களை முன்பு போன்றே (பேரீச்சமரக்) கட்டைகளால் அமைத்தார்கள்.
பின்னர் (ஆட்சிப் பொறுப்பேற்ற) உஸ்மான் (ரலி) அவர்கள் அதில் மாற்றம் செய்து, அதிகமான அம்சங்களைச் சேர்த்தார்கள்.
வேலைப்பாடுகள் செய்யப்பட்ட கற்களாலும் சுண்ணாம்புக் காரையாலும் அதன் சுவர்களைக் கட்டினார்கள். வேலைப்பாடுகள் செய்யப்பட்ட கற்களால் அதன் தூண்களை எழுப்பினார்கள். தேக்கு மரத்தால் அதற்கு மேற்கூரை அமைத்தார்கள்.
அத்தியாயம் : 8
447. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُخْتَارٍ، قَالَ حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ، عَنْ عِكْرِمَةَ، قَالَ لِي ابْنُ عَبَّاسٍ وَلاِبْنِهِ عَلِيٍّ انْطَلِقَا إِلَى أَبِي سَعِيدٍ فَاسْمَعَا مِنْ حَدِيثِهِ. فَانْطَلَقْنَا فَإِذَا هُوَ فِي حَائِطٍ يُصْلِحُهُ، فَأَخَذَ رِدَاءَهُ فَاحْتَبَى، ثُمَّ أَنْشَأَ يُحَدِّثُنَا حَتَّى أَتَى ذِكْرُ بِنَاءِ الْمَسْجِدِ فَقَالَ كُنَّا نَحْمِلُ لَبِنَةً لَبِنَةً، وَعَمَّارٌ لَبِنَتَيْنِ لَبِنَتَيْنِ، فَرَآهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَيَنْفُضُ التُّرَابَ عَنْهُ وَيَقُولُ "" وَيْحَ عَمَّارٍ تَقْتُلُهُ الْفِئَةُ الْبَاغِيَةُ، يَدْعُوهُمْ إِلَى الْجَنَّةِ، وَيَدْعُونَهُ إِلَى النَّارِ "". قَالَ يَقُولُ عَمَّارٌ أَعُوذُ بِاللَّهِ مِنَ الْفِتَنِ.
பாடம் : 63
பள்ளிவாசல் கட்ட ஒத்துழைத் தல்
(அல்லாஹ் கூறுகின்றான்:)
இணைவைப்பாளர்களுக்கு, அல்லாஹ் வின் பள்ளிவாசல்களைப் பராமரிக்கும் உரிமை கிடையாது. அவர்கள் தம்மிட முள்ள இறைமறுப்புக்குத் தாமே சாட்சி களாக உள்ளனர். அவர்களின் நல்லறங் கள் யாவும் அழிந்துவிட்டன. நரகத்தில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.
அல்லாஹ்வின் பள்ளிவாசல்களைப் பராமரிப்பவர்கள் யாரென்றால், அல்லாஹ் வையும் மறுமை நாளையும் நம்பி, தொழுகையைக் கடைப்பிடித்து, ‘ஸகாத்’ வழங்கி, அல்லாஹ்வைத் தவிர வேறெதற் கும் அஞ்சாதவர்கள்தான். அவர்களே நல்வழி பெற்றோராக முடியும். (9:17,18)
447. (இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் முன்னாள் அடிமையான) இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (பஸ்ராவின் ஆளுநராயிருந்த காலகட்டத்தில்) என்னிடமும் தம் புதல்வர் அலீ (ரஹ்) அவர்களிடமும், “நீங்கள் இருவரும் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் சென்று, அவர் கூறும் ஹதீஸைக் கேட்டு வாருங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே நாங்கள் சென்றோம்.
அப்போது அபூசயீத் (ரலி) அவர்கள் தோட்டத்தில் (நீர்பாய்ச்சி) அதைப் பராமரித்துக்கொண்டிருந்தார்கள். (அவர்கள் எங்களைக் கண்ட) உடன் தமது மேல்துண்டை எடுத்துப் போர்த்திக்கொண்டபின் (பல ஹதீஸ்களை) எங்களுக்குக் கூறத் தொடங்கினார்கள். இறுதியாக ‘மஸ்ஜிதுந் நபவீ’ கட்டியது பற்றிப் பேச்சு வந்தபோது (பின்வருமாறு) அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நாங்கள் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாச-ன்) செங்கற்களை ஒவ்வொன்றாகச் சுமந்து எடுத்துக்கொண்டு சென்றோம்.. அம்மார் (ரலி) அவர்கள் இரண்டிரண்டு செங்கற் களாகச் சுமந்த வண்ணமிருந்தார்.
அவரைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் (அவரது தலையில் படிந்திருந்த) புழுதி யைத் தட்டிவிட்டு, “பாவம் அம்மார்! அவரை ஒரு கலகக் கூட்டத்தார் கொன்று விடுவார்கள். அவர்களை அம்மார் சொர்க்கத்தி(ற்குக் காரணமான, தலை மைக்குக் கட்டுப்படும் செயலி)ன் பக்கம் அழைக்க, அந்தக் கூட்டத்தாரோ அவரை நரகத்தி(ற்குக் காரணமான நல்ல தலைமைக்கு எதிராகச் செயல்படுவத)ன் பக்கம் அழைத்துக்கொண்டிருப்பார்கள்” என்று கூறினார்கள்.
(இதைக் கேட்டதிலிருந்து) அம்மார் (ரலி) அவர்கள், “குழப்பங்களைவிட்டு அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்” என்று கூறுவார்கள்.47
அத்தியாயம் : 8
447. (இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் முன்னாள் அடிமையான) இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (பஸ்ராவின் ஆளுநராயிருந்த காலகட்டத்தில்) என்னிடமும் தம் புதல்வர் அலீ (ரஹ்) அவர்களிடமும், “நீங்கள் இருவரும் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் சென்று, அவர் கூறும் ஹதீஸைக் கேட்டு வாருங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே நாங்கள் சென்றோம்.
அப்போது அபூசயீத் (ரலி) அவர்கள் தோட்டத்தில் (நீர்பாய்ச்சி) அதைப் பராமரித்துக்கொண்டிருந்தார்கள். (அவர்கள் எங்களைக் கண்ட) உடன் தமது மேல்துண்டை எடுத்துப் போர்த்திக்கொண்டபின் (பல ஹதீஸ்களை) எங்களுக்குக் கூறத் தொடங்கினார்கள். இறுதியாக ‘மஸ்ஜிதுந் நபவீ’ கட்டியது பற்றிப் பேச்சு வந்தபோது (பின்வருமாறு) அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நாங்கள் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாச-ன்) செங்கற்களை ஒவ்வொன்றாகச் சுமந்து எடுத்துக்கொண்டு சென்றோம்.. அம்மார் (ரலி) அவர்கள் இரண்டிரண்டு செங்கற் களாகச் சுமந்த வண்ணமிருந்தார்.
அவரைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் (அவரது தலையில் படிந்திருந்த) புழுதி யைத் தட்டிவிட்டு, “பாவம் அம்மார்! அவரை ஒரு கலகக் கூட்டத்தார் கொன்று விடுவார்கள். அவர்களை அம்மார் சொர்க்கத்தி(ற்குக் காரணமான, தலை மைக்குக் கட்டுப்படும் செயலி)ன் பக்கம் அழைக்க, அந்தக் கூட்டத்தாரோ அவரை நரகத்தி(ற்குக் காரணமான நல்ல தலைமைக்கு எதிராகச் செயல்படுவத)ன் பக்கம் அழைத்துக்கொண்டிருப்பார்கள்” என்று கூறினார்கள்.
(இதைக் கேட்டதிலிருந்து) அம்மார் (ரலி) அவர்கள், “குழப்பங்களைவிட்டு அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்” என்று கூறுவார்கள்.47
அத்தியாயம் : 8
448. حَدَّثَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلٍ، قَالَ بَعَثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى امْرَأَةٍ أَنْ مُرِي غُلاَمَكِ النَّجَّارَ يَعْمَلْ لِي أَعْوَادًا أَجْلِسُ عَلَيْهِنَّ.
பாடம் : 64
சொற்பொழிவு மேடை (மிம்பர்) செய்வதற்கும் பள்ளிவாசல் கட்டுவதற்கும் தச்சர்கள், (கட்டடத்) தொழிலாளர்கள் ஆகியோரின் உதவியை நாடுதல்
448. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு (அன்சாரிப்) பெண்ணிடம் ஆள னுப்பி, “நான் மக்களுக்கு உரையாற்றும்போது அமர்ந்துகொள்வதற்கு (ஏற்ற வகையில் மேடை தயாரிக்க) எனக்கு மரச்சட்டங்களைச் செய்து தருமாறு தச்சு வேலை தெரிந்த உன் பணியாளருக்கு உத்தரவிடுவீராக” என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 8
448. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு (அன்சாரிப்) பெண்ணிடம் ஆள னுப்பி, “நான் மக்களுக்கு உரையாற்றும்போது அமர்ந்துகொள்வதற்கு (ஏற்ற வகையில் மேடை தயாரிக்க) எனக்கு மரச்சட்டங்களைச் செய்து தருமாறு தச்சு வேலை தெரிந்த உன் பணியாளருக்கு உத்தரவிடுவீராக” என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 8
449. حَدَّثَنَا خَلاَّدٌ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ أَيْمَنَ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرٍ، أَنَّ امْرَأَةً، قَالَتْ يَا رَسُولَ اللَّهِ، أَلاَ أَجْعَلُ لَكَ شَيْئًا تَقْعُدُ عَلَيْهِ، فَإِنَّ لِي غُلاَمًا نَجَّارًا قَالَ "" إِنْ شِئْتِ "". فَعَمِلَتِ الْمِنْبَرَ.
பாடம் : 64
சொற்பொழிவு மேடை (மிம்பர்) செய்வதற்கும் பள்ளிவாசல் கட்டுவதற்கும் தச்சர்கள், (கட்டடத்) தொழிலாளர்கள் ஆகியோரின் உதவியை நாடுதல்
449. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு (அன்சாரிப்) பெண்மணி, “அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் தச்சு வேலை தெரிந்த ஒரு பணியாளர் இருக்கி றார்; நீங்கள் அமர்ந்துகொள்வதற்கேற்ப (மேடை) ஒன்றை நான் உங்களுக்குச் செய்து தரலாமா?” என்று கேட்டார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் விரும்பினால் (செய்து கொடுங்கள்)” என்று கூற, அப்பெண்மணி சொற்பொழிவு மேடை (மிம்பர்) ஒன்றை செய்(து கொடுத்)தார்.
அத்தியாயம் : 8
449. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு (அன்சாரிப்) பெண்மணி, “அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் தச்சு வேலை தெரிந்த ஒரு பணியாளர் இருக்கி றார்; நீங்கள் அமர்ந்துகொள்வதற்கேற்ப (மேடை) ஒன்றை நான் உங்களுக்குச் செய்து தரலாமா?” என்று கேட்டார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் விரும்பினால் (செய்து கொடுங்கள்)” என்று கூற, அப்பெண்மணி சொற்பொழிவு மேடை (மிம்பர்) ஒன்றை செய்(து கொடுத்)தார்.
அத்தியாயம் : 8
450. حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، أَنَّ بُكَيْرًا، حَدَّثَهُ أَنَّ عَاصِمَ بْنَ عُمَرَ بْنِ قَتَادَةَ حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ عُبَيْدَ اللَّهِ الْخَوْلاَنِيَّ، أَنَّهُ سَمِعَ عُثْمَانَ بْنَ عَفَّانَ، يَقُولُ عِنْدَ قَوْلِ النَّاسِ فِيهِ حِينَ بَنَى مَسْجِدَ الرَّسُولِ صلى الله عليه وسلم إِنَّكُمْ أَكْثَرْتُمْ، وَإِنِّي سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" مَنْ بَنَى مَسْجِدًا ـ قَالَ بُكَيْرٌ حَسِبْتُ أَنَّهُ قَالَ ـ يَبْتَغِي بِهِ وَجْهَ اللَّهِ، بَنَى اللَّهُ لَهُ مِثْلَهُ فِي الْجَنَّةِ "".
பாடம் : 65
பள்ளிவாசல் கட்டியவர் (அடை யும் வெகுமதி)
450. உபைதுல்லாஹ் அல்கவ்லானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(கலீஃபா) உஸ்மான் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது பள்ளிவாசலை (அதன் பழைய அமைப்பை மாற்றி விரிவுபடுத்தி)க் கட்ட விரும்பியபோது, அவர்களைப் பற்றி மக்கள் (குறை) பேசினர்.
அப்போது உஸ்மான் (ரலி) அவர்கள் (மக்களிடம்), “நீங்கள் (உங்கள் எதிர்ப்பை) அதிகமாக்கிவிட்டீர்கள். ‘யார் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுகிறாரோ அதைப் போன்ற ஒன்றை சொர்க்கத்தில் அவருக்காக அல்லாஹ் கட்டுகிறான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்று கூறினார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) புகைர் பின் அப்தில்லாஹ் அல்அஷஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
எமக்கு இந்த ஹதீஸை அறிவித்த ஆஸிம் பின் உமர் (ரஹ்) அவர்கள், “அல்லாஹ்வின் அன்பை நாடி (யார் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுகிறாரோ)” என்று (நபியவர்கள்) கூறியதாகவே நான் கருதுகிறேன்.
அத்தியாயம் : 8
450. உபைதுல்லாஹ் அல்கவ்லானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(கலீஃபா) உஸ்மான் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது பள்ளிவாசலை (அதன் பழைய அமைப்பை மாற்றி விரிவுபடுத்தி)க் கட்ட விரும்பியபோது, அவர்களைப் பற்றி மக்கள் (குறை) பேசினர்.
அப்போது உஸ்மான் (ரலி) அவர்கள் (மக்களிடம்), “நீங்கள் (உங்கள் எதிர்ப்பை) அதிகமாக்கிவிட்டீர்கள். ‘யார் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுகிறாரோ அதைப் போன்ற ஒன்றை சொர்க்கத்தில் அவருக்காக அல்லாஹ் கட்டுகிறான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்று கூறினார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) புகைர் பின் அப்தில்லாஹ் அல்அஷஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
எமக்கு இந்த ஹதீஸை அறிவித்த ஆஸிம் பின் உமர் (ரஹ்) அவர்கள், “அல்லாஹ்வின் அன்பை நாடி (யார் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுகிறாரோ)” என்று (நபியவர்கள்) கூறியதாகவே நான் கருதுகிறேன்.
அத்தியாயம் : 8
451. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ قُلْتُ لِعَمْرٍو أَسَمِعْتَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ مَرَّ رَجُلٌ فِي الْمَسْجِدِ وَمَعَهُ سِهَامٌ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَمْسِكْ بِنِصَالِهَا "".
பாடம் : 66
(அம்புகளை எடுத்துச் செல்ப வர்) பள்ளிவாசலைக் கடந்து சென்றால், அம்பின் முனை யைப் பிடித்துக்கொள்ள வேண்டும்.
451. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் ஒருவர் அம்புகளுடன் நடந்து சென்றார். அப்போது அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவற்றின் முனை களைப் பிடித்து (மறைத்து)க்கொள்” என்று சொன்னார்கள்.48
அத்தியாயம் : 8
451. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் ஒருவர் அம்புகளுடன் நடந்து சென்றார். அப்போது அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவற்றின் முனை களைப் பிடித்து (மறைத்து)க்கொள்” என்று சொன்னார்கள்.48
அத்தியாயம் : 8
452. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، قَالَ حَدَّثَنَا أَبُو بُرْدَةَ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ سَمِعْتُ أَبَا بُرْدَةَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ مَرَّ فِي شَىْءٍ مِنْ مَسَاجِدِنَا أَوْ أَسْوَاقِنَا بِنَبْلٍ، فَلْيَأْخُذْ عَلَى نِصَالِهَا، لاَ يَعْقِرْ بِكَفِّهِ مُسْلِمًا "".
பாடம் : 67
(அம்பின் முனையைப் பிடித் துக் கொண்டு) பள்ளிவாசலைக் கடந்து செல்லல்
452. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நம்முடைய பள்ளிவாசல்களிலோ அல்லது கடைவீதிகளிலோ அம்புடன் நடந்து செல்பவர், தமது கையால் அதன் முனையைப் பிடித்து (மறைத்து)க் கொள்ளட்டும்; எந்த முஸ்-மையும் அவர் காயப்படுத்திவிட வேண்டாம்..
இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 8
452. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நம்முடைய பள்ளிவாசல்களிலோ அல்லது கடைவீதிகளிலோ அம்புடன் நடந்து செல்பவர், தமது கையால் அதன் முனையைப் பிடித்து (மறைத்து)க் கொள்ளட்டும்; எந்த முஸ்-மையும் அவர் காயப்படுத்திவிட வேண்டாம்..
இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 8
453. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ الْحَكَمُ بْنُ نَافِعٍ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، أَنَّهُ سَمِعَ حَسَّانَ بْنَ ثَابِتٍ الأَنْصَارِيَّ، يَسْتَشْهِدُ أَبَا هُرَيْرَةَ أَنْشُدُكَ اللَّهَ هَلْ سَمِعْتَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" يَا حَسَّانُ، أَجِبْ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، اللَّهُمَّ أَيِّدْهُ بِرُوحِ الْقُدُسِ "". قَالَ أَبُو هُرَيْرَةَ نَعَمْ.
பாடம் : 68
பள்ளிவாச-ல் கவிதை பாடுதல்49
453. அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(பள்ளிவாசலுக்குள் கவி பாடுவதை உமர் (ரலி) அவர்கள் கண்டித்தபோது கவிஞர்) ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களி டம், “அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் கேட்கிறேன்:
(என்னிடம்) நபி (ஸல்) அவர்கள், ‘ஹஸ்ஸானே! அல்லாஹ்வின் தூதர் (ஆகிய என்) சார்பாக (எதிரிகளின் வசைக் கவிகளுக்கு) நீங்கள் (கவிதைகளாலேயே) பதிலளியுங்கள். இறைவா! ஹஸ்ஸானை ‘ரூஹுல் குதுஸ்’ (தூய ஆத்மா வானவர் ‘ஜிப்ரீல்’) மூலம் பலப்படுத்துவாயாக!’ என்று கூறியதை நீங்கள் செவியுற்றிருக்கிறீர் களா?” என்று கேட்டார்கள். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள், “ஆம் (செவியுற்றிருக்கிறேன்)” என்று பதிலளித் தார்கள்.
அத்தியாயம் : 8
453. அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(பள்ளிவாசலுக்குள் கவி பாடுவதை உமர் (ரலி) அவர்கள் கண்டித்தபோது கவிஞர்) ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களி டம், “அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் கேட்கிறேன்:
(என்னிடம்) நபி (ஸல்) அவர்கள், ‘ஹஸ்ஸானே! அல்லாஹ்வின் தூதர் (ஆகிய என்) சார்பாக (எதிரிகளின் வசைக் கவிகளுக்கு) நீங்கள் (கவிதைகளாலேயே) பதிலளியுங்கள். இறைவா! ஹஸ்ஸானை ‘ரூஹுல் குதுஸ்’ (தூய ஆத்மா வானவர் ‘ஜிப்ரீல்’) மூலம் பலப்படுத்துவாயாக!’ என்று கூறியதை நீங்கள் செவியுற்றிருக்கிறீர் களா?” என்று கேட்டார்கள். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள், “ஆம் (செவியுற்றிருக்கிறேன்)” என்று பதிலளித் தார்கள்.
அத்தியாயம் : 8
454. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ، قَالَتْ لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمًا عَلَى باب حُجْرَتِي، وَالْحَبَشَةُ يَلْعَبُونَ فِي الْمَسْجِدِ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَسْتُرُنِي بِرِدَائِهِ، أَنْظُرُ إِلَى لَعِبِهِمْ.
பாடம் : 69
பள்ளிவாச-ல் ஈட்டி வீரர்கள் (வீரவிளையாட்டுகளில் ஈடுபடுவது)
454. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது அறையின் வாச-ல் நின்றுகொண்டிருப்பதையும் அப்போது மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாச-(ன் வளாகத்தி)ல் அபிசீனியர்கள் (வீரவிளையாட்டுகள்) விளையாடிக்கொண்டிருப்பதையும் நான் பார்வையிட்டேன்.
அவர்களின் விளையாட்டைப் பார்த் துக்கொண்டிருந்த என்னை அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது மேலங்கியால் (மற்றவர்கள் என்னைப் பார்க்காத வகையில்) மறைத்துக் கொண்டி ருந்தார்கள்.
அத்தியாயம் : 8
454. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது அறையின் வாச-ல் நின்றுகொண்டிருப்பதையும் அப்போது மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாச-(ன் வளாகத்தி)ல் அபிசீனியர்கள் (வீரவிளையாட்டுகள்) விளையாடிக்கொண்டிருப்பதையும் நான் பார்வையிட்டேன்.
அவர்களின் விளையாட்டைப் பார்த் துக்கொண்டிருந்த என்னை அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது மேலங்கியால் (மற்றவர்கள் என்னைப் பார்க்காத வகையில்) மறைத்துக் கொண்டி ருந்தார்கள்.
அத்தியாயம் : 8
455. وَزَادَ إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَالْحَبَشَةُ يَلْعَبُونَ بِحِرَابِهِمْ.
பாடம் : 69
பள்ளிவாச-ல் ஈட்டி வீரர்கள் (வீரவிளையாட்டுகளில் ஈடுபடுவது)
455. இப்ராஹீம் பின் முன்திர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “அபிசீனியர்கள் தம் ஈட்டிகளால் (வீரவிளையாட்டுகள்) விளையாடிக்கொண்டிருந்தபோது நபி (ஸல்) அவர்களை (இவ்வாறு நிற்பதைக்) கண்டேன்” என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாகக் கூடுதலாக இடம் பெற்றுள்ளது.50
அத்தியாயம் : 8
455. இப்ராஹீம் பின் முன்திர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “அபிசீனியர்கள் தம் ஈட்டிகளால் (வீரவிளையாட்டுகள்) விளையாடிக்கொண்டிருந்தபோது நபி (ஸல்) அவர்களை (இவ்வாறு நிற்பதைக்) கண்டேன்” என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாகக் கூடுதலாக இடம் பெற்றுள்ளது.50
அத்தியாயம் : 8
456. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ يَحْيَى، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ أَتَتْهَا بَرِيرَةُ تَسْأَلُهَا فِي كِتَابَتِهَا فَقَالَتْ إِنْ شِئْتِ أَعْطَيْتُ أَهْلَكِ وَيَكُونُ الْوَلاَءُ لِي. وَقَالَ أَهْلُهَا إِنْ شِئْتِ أَعْطَيْتِهَا مَا بَقِيَ ـ وَقَالَ سُفْيَانُ مَرَّةً إِنْ شِئْتِ أَعْتَقْتِهَا وَيَكُونُ الْوَلاَءُ لَنَا ـ فَلَمَّا جَاءَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ذَكَّرَتْهُ ذَلِكَ فَقَالَ "" ابْتَاعِيهَا فَأَعْتِقِيهَا، فَإِنَّ الْوَلاَءَ لِمَنْ أَعْتَقَ "". ثُمَّ قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى الْمِنْبَرِ ـ وَقَالَ سُفْيَانُ مَرَّةً فَصَعِدَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى الْمِنْبَرِ ـ فَقَالَ "" مَا بَالُ أَقْوَامٍ يَشْتَرِطُونَ شُرُوطًا لَيْسَتْ فِي كِتَابِ اللَّهِ، مَنِ اشْتَرَطَ شَرْطًا لَيْسَ فِي كِتَابِ اللَّهِ فَلَيْسَ لَهُ، وَإِنِ اشْتَرَطَ مِائَةَ مَرَّةٍ "". قَالَ عَلِيٌّ قَالَ يَحْيَى وَعَبْدُ الْوَهَّابِ عَنْ يَحْيَى عَنْ عَمْرَةَ. وَقَالَ جَعْفَرُ بْنُ عَوْنٍ عَنْ يَحْيَى قَالَ سَمِعْتُ عَمْرَةَ قَالَتْ سَمِعْتُ عَائِشَةَ. رَوَاهُ مَالِكٌ عَنْ يَحْيَى عَنْ عَمْرَةَ أَنَّ بَرِيرَةَ. وَلَمْ يَذْكُرْ صَعِدَ الْمِنْبَرَ.
பாடம் : 70
பள்ளிவாச-ல் உள்ள சொற் பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி விற்றல், வாங்கல் பற்றிப் பேசுவது
456. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(அடிமைப்பெண்) பரீரா, தனது விடுதலைப் பத்திரம் தொடர்பாக (அதில் குறிப்பிட்டுள்ள தொகையைச் செலுத்த உதவி கோரி) என்னிடம் வந்தார். நான், “நீ விரும்பினால் உன் உரிமையாளர்களுக்கு (முழுத் தொகையும்) நான் செலுத்தி விடுகிறேன். ஆனால், உன் வாரிசுரிமை (‘வலாஉ’) எனக்கே உரியதாகிவிட வேண்டும்” என்று கூறினேன்.
ஆனால், பரீராவின் உரிமையாளர்கள் என்னிடம், “நீங்கள் விரும்பினால் பரீரா செலுத்த வேண்டிய மீதித் தொகையைச் செலுத்தி (பரீராவை விடுதலை செய்து) விடலாம்” என்று கூறினார்கள்.
-(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் மற்றொரு முறை அறிவிக்கை யில், “நீங்கள் விரும்பினால் அவரை விடுதலை செய்துகொள்ளலாம். ஆனால், (பரீராவின்) வாரிசுரிமை எங்களுக்கே உரியதாகிவிட வேண்டும்.” என (பரீராவின் உரிமையாளர்கள் நிபந்தனையிட்டுக்) கூறியதாகச் சொன்னார்கள்.-
தொடர்ந்து ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தபோது, நான் அதைப் பற்றி அவர்களிடம் கூறினேன். அப்போது அவர்கள், “அவரை வாங்கி நீ விடுதலை செய்துவிடு. ஏனெனில், வாரிசுரிமை விடுதலை செய்தவருக்கே உரியது” என்று சொன்னார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாச-லுள்ள) சொற்பொழிவு மேடைமீது நின்று (உரை நிகழ்த்தலானார்கள்:) “மக்களில் சிலருக்கு என்ன நேர்ந்துவிட்டது? இறைச் சட்டத்தில் இல்லாத நிபந்தனைகளை விதிக்கிறார்களே! யார் இறைச் சட்டத்தில் இல்லாத நிபந்தனைகளை விதிக்கிறாரோ அவருக்கு அதற்கான (அதை நிறைவேற்றக் கோரும்) உரிமை இல்லை; அவர் நூறு முறை நிபந்தனை விதித்தாலும் சரியே” என்று குறிப்பிட்டார்கள்.51
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் மா-க் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘சொற்பொழிவு மேடைமீது நபி (ஸல்) அவர்கள் ஏறியது’ பற்றிய குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 8
456. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(அடிமைப்பெண்) பரீரா, தனது விடுதலைப் பத்திரம் தொடர்பாக (அதில் குறிப்பிட்டுள்ள தொகையைச் செலுத்த உதவி கோரி) என்னிடம் வந்தார். நான், “நீ விரும்பினால் உன் உரிமையாளர்களுக்கு (முழுத் தொகையும்) நான் செலுத்தி விடுகிறேன். ஆனால், உன் வாரிசுரிமை (‘வலாஉ’) எனக்கே உரியதாகிவிட வேண்டும்” என்று கூறினேன்.
ஆனால், பரீராவின் உரிமையாளர்கள் என்னிடம், “நீங்கள் விரும்பினால் பரீரா செலுத்த வேண்டிய மீதித் தொகையைச் செலுத்தி (பரீராவை விடுதலை செய்து) விடலாம்” என்று கூறினார்கள்.
-(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் மற்றொரு முறை அறிவிக்கை யில், “நீங்கள் விரும்பினால் அவரை விடுதலை செய்துகொள்ளலாம். ஆனால், (பரீராவின்) வாரிசுரிமை எங்களுக்கே உரியதாகிவிட வேண்டும்.” என (பரீராவின் உரிமையாளர்கள் நிபந்தனையிட்டுக்) கூறியதாகச் சொன்னார்கள்.-
தொடர்ந்து ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தபோது, நான் அதைப் பற்றி அவர்களிடம் கூறினேன். அப்போது அவர்கள், “அவரை வாங்கி நீ விடுதலை செய்துவிடு. ஏனெனில், வாரிசுரிமை விடுதலை செய்தவருக்கே உரியது” என்று சொன்னார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாச-லுள்ள) சொற்பொழிவு மேடைமீது நின்று (உரை நிகழ்த்தலானார்கள்:) “மக்களில் சிலருக்கு என்ன நேர்ந்துவிட்டது? இறைச் சட்டத்தில் இல்லாத நிபந்தனைகளை விதிக்கிறார்களே! யார் இறைச் சட்டத்தில் இல்லாத நிபந்தனைகளை விதிக்கிறாரோ அவருக்கு அதற்கான (அதை நிறைவேற்றக் கோரும்) உரிமை இல்லை; அவர் நூறு முறை நிபந்தனை விதித்தாலும் சரியே” என்று குறிப்பிட்டார்கள்.51
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் மா-க் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘சொற்பொழிவு மேடைமீது நபி (ஸல்) அவர்கள் ஏறியது’ பற்றிய குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 8
457. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، قَالَ أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ كَعْبٍ، أَنَّهُ تَقَاضَى ابْنَ أَبِي حَدْرَدٍ دَيْنًا كَانَ لَهُ عَلَيْهِ فِي الْمَسْجِدِ، فَارْتَفَعَتْ أَصْوَاتُهُمَا حَتَّى سَمِعَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهْوَ فِي بَيْتِهِ، فَخَرَجَ إِلَيْهِمَا حَتَّى كَشَفَ سِجْفَ حُجْرَتِهِ فَنَادَى "" يَا كَعْبُ "". قَالَ لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" ضَعْ مِنْ دَيْنِكَ هَذَا "". وَأَوْمَأَ إِلَيْهِ أَىِ الشَّطْرَ قَالَ لَقَدْ فَعَلْتُ يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" قُمْ فَاقْضِهِ "".
பாடம் : 71
(பள்ளிவாசலில் கடனாளி யிடம்) கடனைக் கேட்பதும் அதைத் திருப்பித் தருமாறு கட்டாயப்படுத்துவதும்
457. கஅப் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களது காலத்தில்) எனக்கு அப்துல்லாஹ் பின் அபீஹத்ரத் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் தர வேண்டியிருந்த ஒரு கடனை (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாச-ல் வைத்துத் திருப்பித் தரும்படி கேட்டேன். (இது தொடர்பாக எங்களிடையே வாக்கு வாதம் ஏற்பட்டு) எங்கள் இருவரின் குரல் களும் உயர்ந்தன. தமது வீட்டில் இருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் குரலைக் கேட்டுவிட்டார்கள்.
எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிருவரையும் நோக்கிப் புறப்பட்டார்கள். தமது அறையின் திரையை விலக்கி, ‘கஅப்!’ என்று அழைத்தார்கள். நான், “இதோ வந்துவிட்டேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இதை (இந்த அளவை) உமது கடனி-ருந்து தள்ளுபடி செய்க!” என்று கூறி, பாதியளவு கடனைக் குறைத்துக்கொள்ளும்படி (என்னிடம் விரலால்) சைகை செய்தார்கள்.
“அவ்வாறே செய்துவிட்டேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினேன். பிறகு நபி (ஸல்) அவர்கள் (அப்துல்லாஹ் பின் அபீஹத்ரத் அவர்களை நோக்கி,) “எழுந்து சென்று பாதிக் கடனை அடைப்பீராக!” என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 8
457. கஅப் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களது காலத்தில்) எனக்கு அப்துல்லாஹ் பின் அபீஹத்ரத் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் தர வேண்டியிருந்த ஒரு கடனை (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாச-ல் வைத்துத் திருப்பித் தரும்படி கேட்டேன். (இது தொடர்பாக எங்களிடையே வாக்கு வாதம் ஏற்பட்டு) எங்கள் இருவரின் குரல் களும் உயர்ந்தன. தமது வீட்டில் இருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் குரலைக் கேட்டுவிட்டார்கள்.
எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிருவரையும் நோக்கிப் புறப்பட்டார்கள். தமது அறையின் திரையை விலக்கி, ‘கஅப்!’ என்று அழைத்தார்கள். நான், “இதோ வந்துவிட்டேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இதை (இந்த அளவை) உமது கடனி-ருந்து தள்ளுபடி செய்க!” என்று கூறி, பாதியளவு கடனைக் குறைத்துக்கொள்ளும்படி (என்னிடம் விரலால்) சைகை செய்தார்கள்.
“அவ்வாறே செய்துவிட்டேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினேன். பிறகு நபி (ஸல்) அவர்கள் (அப்துல்லாஹ் பின் அபீஹத்ரத் அவர்களை நோக்கி,) “எழுந்து சென்று பாதிக் கடனை அடைப்பீராக!” என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 8
458. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَجُلاً، أَسْوَدَ ـ أَوِ امْرَأَةً سَوْدَاءَ ـ كَانَ يَقُمُّ الْمَسْجِدَ، فَمَاتَ، فَسَأَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْهُ فَقَالُوا مَاتَ. قَالَ "" أَفَلاَ كُنْتُمْ آذَنْتُمُونِي بِهِ دُلُّونِي عَلَى قَبْرِهِ "". ـ أَوْ قَالَ قَبْرِهَا ـ فَأَتَى قَبْرَهُ فَصَلَّى عَلَيْهِ.
பாடம் : 72
பள்ளிவாசலைப் பெருக்குவ தும் துண்டுத் துணிகள், குச்சி கள், தூசுகள் (கிடந்தால் அவற் றைப்) பொறுக்கியெடுத்து (அப்புறப்படுத்தி)விடுவதும்
458. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலைப் பெருக்குபவராக இருந்த ‘ஒரு கறுப்பு ஆண்’ அல்லது ‘ஒரு கறுப்புப் பெண்’ இறந்துவிட்டார். (அவர் இறந்த செய்தி நபி (ஸல்) அவர்களுக்குத் தெரியாம-ருந்தது.) ஆகவே, அவரைப் பற்றி (ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். அப்போது மக்கள், “அவர் இறந்துவிட்டார்” எனக் கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள், “அது பற்றி (முன்பே) என்னிடம் நீங்கள் அறிவித் திருக்கக் கூடாதா? ‘அவரது அடக்கத் தலத்தை’ அல்லது ‘அந்தப் பெண்மணி யின் அடக்கத் தலத்தை’ எனக்குக் காட்டுங்கள்” என்று கூறிவிட்டு, அவரது அடக்கத் தலத்திற்குச் சென்று அவருக்காக இறுதித் தொழுகை (ஜனாஸா) தொழுதார்கள்.
அத்தியாயம் : 8
458. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலைப் பெருக்குபவராக இருந்த ‘ஒரு கறுப்பு ஆண்’ அல்லது ‘ஒரு கறுப்புப் பெண்’ இறந்துவிட்டார். (அவர் இறந்த செய்தி நபி (ஸல்) அவர்களுக்குத் தெரியாம-ருந்தது.) ஆகவே, அவரைப் பற்றி (ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். அப்போது மக்கள், “அவர் இறந்துவிட்டார்” எனக் கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள், “அது பற்றி (முன்பே) என்னிடம் நீங்கள் அறிவித் திருக்கக் கூடாதா? ‘அவரது அடக்கத் தலத்தை’ அல்லது ‘அந்தப் பெண்மணி யின் அடக்கத் தலத்தை’ எனக்குக் காட்டுங்கள்” என்று கூறிவிட்டு, அவரது அடக்கத் தலத்திற்குச் சென்று அவருக்காக இறுதித் தொழுகை (ஜனாஸா) தொழுதார்கள்.
அத்தியாயம் : 8
459. حَدَّثَنَا عَبْدَانُ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُسْلِمٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ لَمَّا أُنْزِلَ الآيَاتُ مِنْ سُورَةِ الْبَقَرَةِ فِي الرِّبَا، خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَى الْمَسْجِدِ، فَقَرَأَهُنَّ عَلَى النَّاسِ، ثُمَّ حَرَّمَ تِجَارَةَ الْخَمْرِ.
பாடம் : 73
மதுபான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதெனப் பள்ளி வாசலில் அறிவிப்பது
459. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
‘அல்பகரா’ அத்தியாத்தின் (இறுதி) வசனங்கள் (2:275-281) வட்டி தொடர்பாக அருளப்பெற்றபோது, நபி (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்குப் புறப்பட்டு வந்து, அவற்றை மக்களுக்கு ஓதிக்காட்டினார்கள். பிறகு மது வியாபாரத்தைத் தடை செய்தார்கள்.
அத்தியாயம் : 8
459. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
‘அல்பகரா’ அத்தியாத்தின் (இறுதி) வசனங்கள் (2:275-281) வட்டி தொடர்பாக அருளப்பெற்றபோது, நபி (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்குப் புறப்பட்டு வந்து, அவற்றை மக்களுக்கு ஓதிக்காட்டினார்கள். பிறகு மது வியாபாரத்தைத் தடை செய்தார்கள்.
அத்தியாயம் : 8
460. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ وَاقِدٍ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ امْرَأَةً ـ أَوْ رَجُلاً ـ كَانَتْ تَقُمُّ الْمَسْجِدَ ـ وَلاَ أُرَاهُ إِلاَّ امْرَأَةً ـ فَذَكَرَ حَدِيثَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ صَلَّى عَلَى قَبْرِهِ.
பாடம் : 74
பள்ளிவாசலுக்கென சேவகர் கள் இருப்பது
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “இம்ரானின் துணைவி, ‘என் இறைவா! எனது வயிற்றில் (வளர்ந்துகொண்டு) இருப்பதை உனக்கு அர்ப்பணிக்க நான் நேர்ச்சை செய்துள்ளேன்’ என்று கூறியதை எண்ணிப்பார்ப்பீராக” (3:35) எனும் வசனத்தி(ற்கு விளக்கமளிக்கையி)ல், “இந்த மஸ்ஜிது(ல் அக்ஸா பள்ளிவாசலு)க்கு சேவகம் செய்வதற்காக (நேர்ச்சை செய்துள்ளேன்)” என்று கூறினார்கள்.
460. அபூராஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“(மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலை ‘ஓர் ஆண்’ அல்லது ‘ஒரு பெண்’ பெருக்கு பவராக இருந்தார்” என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள். - ‘ஒரு பெண்மணி’ என்று அவர்கள் கூறியதாகவே நான் கருதுகிறேன்.- பிறகு அவரது அடக்கத் தலத்தில் நபி (ஸல்) அவர்கள் இறுதித் தொழுகை தொழுதது பற்றிய (மேற்கண்ட 458ஆவது) ஹதீஸைக் கூறினார்கள்.
அத்தியாயம் : 8
460. அபூராஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“(மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலை ‘ஓர் ஆண்’ அல்லது ‘ஒரு பெண்’ பெருக்கு பவராக இருந்தார்” என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள். - ‘ஒரு பெண்மணி’ என்று அவர்கள் கூறியதாகவே நான் கருதுகிறேன்.- பிறகு அவரது அடக்கத் தலத்தில் நபி (ஸல்) அவர்கள் இறுதித் தொழுகை தொழுதது பற்றிய (மேற்கண்ட 458ஆவது) ஹதீஸைக் கூறினார்கள்.
அத்தியாயம் : 8