461. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ أَخْبَرَنَا رَوْحٌ، وَمُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ عِفْرِيتًا مِنَ الْجِنِّ تَفَلَّتَ عَلَىَّ الْبَارِحَةَ ـ أَوْ كَلِمَةً نَحْوَهَا ـ لِيَقْطَعَ عَلَىَّ الصَّلاَةَ، فَأَمْكَنَنِي اللَّهُ مِنْهُ، فَأَرَدْتُ أَنْ أَرْبِطَهُ إِلَى سَارِيَةٍ مِنْ سَوَارِي الْمَسْجِدِ، حَتَّى تُصْبِحُوا وَتَنْظُرُوا إِلَيْهِ كُلُّكُمْ، فَذَكَرْتُ قَوْلَ أَخِي سُلَيْمَانَ رَبِّ هَبْ لِي مُلْكًا لاَ يَنْبَغِي لأَحَدٍ مِنْ بَعْدِي "". قَالَ رَوْحٌ فَرَدَّهُ خَاسِئًا.
பாடம் : 75 கைதி, கடன்காரர் ஆகியோரைப் பள்ளிவாசலில் கட்டி வைப்பது
461. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள், “நேற்றிரவு முரட்டு ‘ஜின்’ ஒன்று என் தொழுகையை (இடையில்) துண்டிப்பதற் காகத் திடீரென்று வந்து நின்றது” என்றோ, அல்லது இதைப் போன்ற வார்த்தை யையோ கூறினார்கள்.

பிறகு “அதன் மீது அல்லாஹ் எனக்குச் சக்தியை வழங்கினான். நீங்கள் அனைவரும் காலையில் வந்து அதைக் காணும்வரை இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாச-ன் தூண்களில் ஒன்றில் அதைக் கட்டிவைக்கலாம் என்று நினைத் தேன். அப்போது “இறைவா! எனக்குப்பின் வேறெவருக்கும் கிடைக்காத ஓர் ஆளுமையை எனக்கு நீ வழங்குவாயாக’ (38:35) என்று என் சகோதரர் சுலைமான் (அலை) அவர்கள் செய்த வேண்டுதல் என் நினைவுக்கு வந்தது” என்று கூறி னார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ரவ்ஹ் பின் உபாதா (ரஹ்) அவர்கள், “ஆகவே, நான் அதை இழிந்த நிலையில் விரட்டியடித்துவிட்டேன்” என்றும் நபியவர்கள் கூறியதாக அறிவித்துள்ளார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 8
462. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ، قَالَ بَعَثَ النَّبِيُّ صلى الله عليه وسلم خَيْلاً قِبَلَ نَجْدٍ، فَجَاءَتْ بِرَجُلٍ مِنْ بَنِي حَنِيفَةَ يُقَالُ لَهُ ثُمَامَةُ بْنُ أُثَالٍ، فَرَبَطُوهُ بِسَارِيَةٍ مِنْ سَوَارِي الْمَسْجِدِ، فَخَرَجَ إِلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ "" أَطْلِقُوا ثُمَامَةَ "". فَانْطَلَقَ إِلَى نَخْلٍ قَرِيبٍ مِنَ الْمَسْجِدِ، فَاغْتَسَلَ ثُمَّ دَخَلَ الْمَسْجِدَ فَقَالَ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ.
பாடம் : 76 இஸ்லாத்தைத் தழுவும்போது குளிப்பதும், பள்ளிவாச-ல் கைதியைக் கட்டிவைப்பதும் (கூஃபாவின் நீதிபதியாயிருந்த) ஷுரைஹ் பின் அல்ஹாரிஸ் அல்கிந்தீ (ரஹ்) அவர்கள், கடன்காரரைப் பள்ளிவாசலின் தூணில் கட்டிவைக்குமாறு ஆணையிடு வார்கள்.52
462. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதவது:

நபி (ஸல்) அவர்கள் நஜ்த் பகுதியை நோக்கிக் குதிரைப்படை ஒன்றை அனுப்பி வைத்தார்கள். அவர்கள் பனூ ஹனீஃபா குலத்தைச் சேர்ந்த (‘யமாமா’வாசிகளின் தலைவரான) ஸுமாமா பின் உஸால் எனப்படும் ஒரு மனிதரைக் கொண்டு வந்தார்கள். அவரை (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாச-ன் தூண்களில் ஒன்றில் (மக்கள்) கட்டிவைத்தனர். நபி (ஸல்) அவர்கள் அவரை நோக்கி (மூன்று நாட்களாக வந்து பார்த்தார்கள். மூன்றாவது நாள்) வந்தபோது, ‘ஸுமாமாவை அவிழ்த்துவிடுங்கள்” என்று கூறினார்கள்.

அவர் பள்ளிவாசலுக்கு அருகி-ருந்த (அபூதல்ஹா (ரலி) அவர்களுக்குச் சொந்த மான) பேரீச்சந் தோட்டத்திற்குச் சென்று குளித்தார். பிறகு பள்ளிவாசலுக்குள் வந்து “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவ னில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் நான் உறுதி மொழிகிறேன்” என்றார்.

அத்தியாயம் : 8
463. حَدَّثَنَا زَكَرِيَّاءُ بْنُ يَحْيَى، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ أُصِيبَ سَعْدٌ يَوْمَ الْخَنْدَقِ فِي الأَكْحَلِ، فَضَرَبَ النَّبِيُّ صلى الله عليه وسلم خَيْمَةً فِي الْمَسْجِدِ لِيَعُودَهُ مِنْ قَرِيبٍ، فَلَمْ يَرُعْهُمْ ـ وَفِي الْمَسْجِدِ خَيْمَةٌ مِنْ بَنِي غِفَارٍ ـ إِلاَّ الدَّمُ يَسِيلُ إِلَيْهِمْ فَقَالُوا يَا أَهْلَ الْخَيْمَةِ، مَا هَذَا الَّذِي يَأْتِينَا مِنْ قِبَلِكُمْ فَإِذَا سَعْدٌ يَغْذُو جُرْحُهُ دَمًا، فَمَاتَ فِيهَا.
பாடம் : 77 நோயாளிகளுக்காகவும் மற்றவர்களுக்காகவும் பள்ளிவாச-ல் கூடாரம் அமைப்பது
463. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அகழ்ப் போரின்போது சஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் நாடி நரம்பில் தாக்கப்பட்டார்கள். அவரை அருகில்வைத்து நலம் விசாரிப்பதற்காக (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் (அவருக்கென) ஒரு கூடாரத்தை நபி (ஸல்) அவர்கள் அமைத்தார்கள் -பள்ளிவாசலில் பனூ ஃகிஃபார் குலத்தாருக்கென ஒரு கூடாரம் இருந்தது- சஅத் (ரலி) அவர்களின் (உடலில் இருந்து வழிந்தோடிய) இரத்தம் தான் அக்குலத்தாரை அதிர்ச்சியடையச் செய்தது.

அப்போது அவர்கள், “கூடாரவாசி களே! உங்கள் பகுதியி-ருந்து எங்களை நோக்கி(ப் பாய்ந்து) வருகிறதே, இது என்ன?” என்று கேட்டுக்கொண்டே அங்கு சென்று பார்த்தபோது, தமது காயத்தி-ருந்து இரத்தம் வழிய சஅத் (ரலி) அவர்கள் இருந்தார்கள். அ(ந்த நோயிலேயே, அல்லது அந்தக் கூடாரத்)தி லேயே சஅத் (ரலி) அவர்கள் இறந்தார்கள்.

அத்தியாயம் : 7
464. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ نَوْفَلٍ، عَنْ عُرْوَةَ، عَنْ زَيْنَبَ بِنْتِ أَبِي سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ شَكَوْتُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنِّي أَشْتَكِي. قَالَ "" طُوفِي مِنْ وَرَاءِ النَّاسِ وَأَنْتِ رَاكِبَةٌ "". فَطُفْتُ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي إِلَى جَنْبِ الْبَيْتِ، يَقْرَأُ بِالطُّورِ وَكِتَابٍ مَسْطُورٍ.
பாடம் : 78 தேவை நிமித்தம் ஒட்டகத்தைப் பள்ளிவாசலுக்குள் கொண்டு வருவது “நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீது (அமர்ந்தபடி இறையில்லம் கஅபாவைச்) சுற்றி (தவாஃப்) வந்தார்கள்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
464. உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

“நான் நோயுற்றுள்ளேன்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் முறையிட்டேன். அதற்கு அவர்கள், “மக்களுக்கப்பா-ருந்து வாகனத்தில் அமர்ந்து (கஅபாவைச்) சுற்றி (தவாஃப்) வருவாயாக!” என்று சொன்னார்கள்.

அவ்வாறே நான் சுற்றிவந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘அத்தூர்’ எனும் (52ஆவது) அத்தியாத்தை ஓதியவாறு கஅபாவின் ஒரு பக்கத்தில் தொழுதுகொண்டிருந்தார்கள்.

அத்தியாயம் : 8
465. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، قَالَ حَدَّثَنَا أَنَسٌ، أَنَّ رَجُلَيْنِ، مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم خَرَجَا مِنْ عِنْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي لَيْلَةٍ مُظْلِمَةٍ، وَمَعَهُمَا مِثْلُ الْمِصْبَاحَيْنِ يُضِيآنِ بَيْنَ أَيْدِيهِمَا، فَلَمَّا افْتَرَقَا صَارَ مَعَ كُلِّ وَاحِدٍ مِنْهُمَا وَاحِدٌ حَتَّى أَتَى أَهْلَهُ.
பாடம் : 79
465. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் இருவர் நபி (ஸல்) அவர்களிடமிருந்து (விடைபெற்று) இருள் கப்பிய ஓர் இரவில் (தம் இல்லங்களுக்கு நடந்து)சென்றனர். அவ்விருவருடனும் இரு விளக்குகளைப் போன்றவை அவர்களுக்கு முன்னால் ஒளிவீசிச் சென்றன. அவர்கள் (வழியில்) பிரிந்து சென்றபோது, அவர்கள் தம் வீட்டாரிடம் போய்ச் சேரும்வரை ஒவ் வொருவருடனும் ஓர் ஒளி (மற்றொன்றை விட்டுப் பிரிந்து அவர்களுடன்) சென்றது.

அத்தியாயம் : 8
466. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ، قَالَ حَدَّثَنَا فُلَيْحٌ، قَالَ حَدَّثَنَا أَبُو النَّضْرِ، عَنْ عُبَيْدِ بْنِ حُنَيْنٍ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ خَطَبَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ "" إِنَّ اللَّهَ خَيَّرَ عَبْدًا بَيْنَ الدُّنْيَا وَبَيْنَ مَا عِنْدَهُ، فَاخْتَارَ مَا عِنْدَ اللَّهِ "". فَبَكَى أَبُو بَكْرٍ ـ رضى الله عنه ـ فَقُلْتُ فِي نَفْسِي مَا يُبْكِي هَذَا الشَّيْخَ إِنْ يَكُنِ اللَّهُ خَيَّرَ عَبْدًا بَيْنَ الدُّنْيَا وَبَيْنَ مَا عِنْدَهُ فَاخْتَارَ مَا عِنْدَ اللَّهِ، فَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم هُوَ الْعَبْدَ، وَكَانَ أَبُو بَكْرٍ أَعْلَمَنَا. قَالَ "" يَا أَبَا بَكْرٍ لاَ تَبْكِ، إِنَّ أَمَنَّ النَّاسِ عَلَىَّ فِي صُحْبَتِهِ وَمَالِهِ أَبُو بَكْرٍ، وَلَوْ كُنْتُ مُتَّخِذًا خَلِيلاً مِنْ أُمَّتِي لاَتَّخَذْتُ أَبَا بَكْرٍ، وَلَكِنْ أُخُوَّةُ الإِسْلاَمِ وَمَوَدَّتُهُ، لاَ يَبْقَيَنَّ فِي الْمَسْجِدِ باب إِلاَّ سُدَّ إِلاَّ باب أَبِي بَكْرٍ "".
பாடம் : 80 பள்ளிவாச-ல் சிறு நுழை வாயில் அமைப்பதும் நடை பாதை ஏற்படுத்துவதும்
466. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (இறப்பதற்குமுன் நோய்வாய்ப்பட்டிருந்தபோது மக்களுக்கு) உரை நிகழ்த்தினார்கள். அதில், “அல்லாஹ் ஓர் அடியாருக்கு இந்த உலகம், அல்லது தன்னிடமிருப்பது ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு விருப்ப உரிமை அளித் தான். அ(ந்த அடியாரான)வர், அல்லாஹ்விடம் இருப்பதையே தேர்ந்தெடுத்துக் கொண்டார்” என்று சொன்னார்கள்.

(இதைக் கேட்ட) உடன், அபூபக்ர் (ரலி) அவர்கள் அழுதார்கள். அப்போது நான் எனக்குள்ளே, “அல்லாஹ் ஓர் அடியாருக்கு இந்த உலகம், அல்லது தன்னிடமிருப்பது ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள விருப்ப உரிமை அளித்தபோது அ(ந்த அடியாரன)வர், அல்லாஹ்விடமிருப்பதைத் தேர்ந்தெடுத் துக்கொண்டால், அதற்காக இந்தப் பெரியவர் ஏன் அழ வேண்டும்.?” என்று வினவிக்கொண்டேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தான் அந்த (விருப்ப உரிமை அளிக்கப் பட்ட) அடியாராக இருந்தார்கள். (நபி (ஸல்) அவர்கள் தமது இறப்பைப் பற்றியே குறிப்படுகிறார்கள் என்பதை அபூபக்ர்

(ரலி) அவர்கள் அறிந்துகொண்டார்கள். ஏனெனில்) அபூபக்ர் (ரலி) அவர்கள் எங்களில் மிகவும் அறிந்தவராக இருந்தார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “அபூபக்ர் அவர்களே! அழாதீர்கள்” என்று கூறிவிட்டு, “தமது நட்பிலும் செல்வத்திலும் எனக்கு மக்களிலேயே பேருதவியாளராக இருப்பவர் அபூபக்ரே ஆவார். ஒருவரை என் சமுதாயத்தாரில் நான் உற்ற நண்பராக ஆக்கிக்கொள்ள விரும்பியிருந்தால், அபூபக்ர் அவர்களையே ஆக்கிக் கொண்டிருப்பேன். ஆயினும், (அதை விடச் சிறந்த) இஸ்லாத்தின் சகோதரத்துவமும் அதனால் ஏற்படும் பாச உணர்வும் (எனக்கும் அபூபக்ருக்கும் இடையே ஏற்கெனவே) இருக்கத்தான் செய்கிறது. (எனது) இந்தப் பள்ளிவாச-ல் எந்தச் சிறு நுழைவாயிலும் அடைக்கப்படாமல் இருக்க வேண்டாம்; அபூபக்ரின் வாசலைத் தவிர” என்று சொன்னார்கள்.


அத்தியாயம் : 8
467. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْجُعْفِيُّ، قَالَ حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، قَالَ حَدَّثَنَا أَبِي قَالَ، سَمِعْتُ يَعْلَى بْنَ حَكِيمٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ خَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ عَاصِبٌ رَأْسَهُ بِخِرْقَةٍ، فَقَعَدَ عَلَى الْمِنْبَرِ، فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ "" إِنَّهُ لَيْسَ مِنَ النَّاسِ أَحَدٌ أَمَنَّ عَلَىَّ فِي نَفْسِهِ وَمَالِهِ مِنْ أَبِي بَكْرِ بْنِ أَبِي قُحَافَةَ، وَلَوْ كُنْتُ مُتَّخِذًا مِنَ النَّاسِ خَلِيلاً لاَتَّخَذْتُ أَبَا بَكْرٍ خَلِيلاً، وَلَكِنْ خُلَّةُ الإِسْلاَمِ أَفْضَلُ، سُدُّوا عَنِّي كُلَّ خَوْخَةٍ فِي هَذَا الْمَسْجِدِ غَيْرَ خَوْخَةِ أَبِي بَكْرٍ "".
பாடம் : 80 பள்ளிவாச-ல் சிறு நுழை வாயில் அமைப்பதும் நடை பாதை ஏற்படுத்துவதும்
467. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது தமது தலையில் ஒரு துணியால் கட்டுப்போட்டவர்களாக (தமது இல்லத்தி-ருந்து) புறப்பட்டு வந்து சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது அமர்ந்து அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்தார்கள்.

பிறகு “தமது நட்பிலும் செல்வத்திலும் எனக்கு அபூபக்ர் பின் அபீகுஹாஃபாவை விட வேறெவரும் பேருதவி புரிந்தவர் கிடையாது. மக்களில் ஒருவரை நான் (என்) உற்ற நண்பராக ஆக்கிக்கொள்ள விரும்பியிருந்தால், அபூபக்ர் அவர் களையே உற்ற நண்பராக ஆக்கிக் கொண்டிருப்பேன். என்றாலும், இஸ்லாமிய அடிப்படையிலான நேசமே சிறந்ததாகும்” என்று கூறிவிட்டு, “இந்தப் பள்ளிவாச-ல் என்னிடம் வருவதற்காக உள்ள எல்லா சிறு நுழைவாயில்களையும் அடைத்து விடுங்கள்; அபூபக்ரின் நுழைவாயிலைத் தவிர” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 8
468. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، وَقُتَيْبَةُ، قَالاَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَدِمَ مَكَّةَ، فَدَعَا عُثْمَانَ بْنَ طَلْحَةَ، فَفَتَحَ الْبَابَ، فَدَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَبِلاَلٌ وَأُسَامَةُ بْنُ زَيْدٍ وَعُثْمَانُ بْنُ طَلْحَةَ، ثُمَّ أُغْلِقَ الْبَابُ، فَلَبِثَ فِيهِ سَاعَةً ثُمَّ خَرَجُوا. قَالَ ابْنُ عُمَرَ فَبَدَرْتُ فَسَأَلْتُ بِلاَلاً فَقَالَ صَلَّى فِيهِ. فَقُلْتُ فِي أَىٍّ قَالَ بَيْنَ الأُسْطُوَانَتَيْنِ. قَالَ ابْنُ عُمَرَ فَذَهَبَ عَلَىَّ أَنْ أَسْأَلَهُ كَمْ صَلَّى.
பாடம் : 81 கஅபாவுக்கும் இதர இறையில் லங்களுக்கும் கதவுகளும் தாழ்ப்பாள்களும் அமைத்தல் இப்னு ஜுரைஜ் (அப்துல் ம-க் பின் அப்தில் அஸீஸ்-ரஹ்) அவர்கள் கூறியதாவது: என்னிடம் இப்னு அபீமுலைக்கா அப்துல்லாஹ் பின் உபைதில்லாஹ் அத்- தைமீ (ரஹ்) அவர்கள், “அப்துல் மலிக் அவர்களே! நீங்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் பள்ளிவாசல்களையும் அவற்றின் கதவுகளையும் பார்த்திருக்க வேண்டுமே! (அவற்றின் தூய்மையையும் உறுதியையும் கண்டு வியந்துபோயிருப்பீர் கள்)” என்றார்கள்.
468. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (மக்காவை வெற்றி கொண்டு) மக்காவுக்கு வந்தபோது உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்களை அழைத்தார்கள். அவர் (வந்து) இறையில்லம் கஅபாவின் கதவைத் திறந்தார். பிறகு நபி (ஸல்) அவர்களும், பிலால், உசாமா பின் ஸைத், உஸ்மான் பின் தல்ஹா (ரலி) ஆகியோர் உள்ளே சென்று கதவைத் தாழிட்டுக்கொண்டனர். அதில் சிறிது நேரம் இருந்துவிட்டுப் பிறகு அனைவரும் வெளியே வந்தனர்.

நான் விரைந்து வந்து பிலால் (ரலி) அவர்களிடம், (‘நபி (ஸல்) அவர்கள் கஅபாவினுள் தொழுதார்களா?’ என்று) கேட்டேன். அதற்கு பிலால் (ரலி) அவர்கள், “(ஆம்) அதனுள் தொழுதார்கள்” என்று பதிலளித்தார்கள். “எ(ந்த இடத்)தில் தொழுதார்கள்?” என்று கேட்டதற்கு, ‘இரண்டு தூண்களுக்கிடையே’ என்று பிலால் (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது “எத்தனை ரக்அத்கள் தொழு தார்கள்?” என்று கேட்கத் தவறிவிட்டேன்.

அத்தியாயம் : 8
469. حَدَّثَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ بَعَثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم خَيْلاً قِبَلَ نَجْدٍ، فَجَاءَتْ بِرَجُلٍ مِنْ بَنِي حَنِيفَةَ يُقَالُ لَهُ ثُمَامَةُ بْنُ أُثَالٍ، فَرَبَطُوهُ بِسَارِيَةٍ مِنْ سَوَارِي الْمَسْجِدِ.
பாடம் : 82 பள்ளிவாச-ல் இணைவைப் பாளர் நுழைவது
469. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நஜ்த் பகுதியை நோக்கி குதிரைப் படை ஒன்றை அனுப்பிவைத்தார்கள். அவர்கள் (சென்று) பனூ ஹனீஃபா குலத்தை சேர்ந்த (யமாமாவாசிகளின் தலைவர்) ஸுமாமா பின் உஸால் எனப்படும் ஒரு மனிதரைக் கொண்டுவந்தனர். அவரை (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாச-ன் தூண்களில் ஒன்றில் கட்டிவைத்தனர்.

அத்தியாயம் : 8
470. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا الْجُعَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ حَدَّثَنِي يَزِيدُ بْنُ خُصَيْفَةَ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ، قَالَ كُنْتُ قَائِمًا فِي الْمَسْجِدِ فَحَصَبَنِي رَجُلٌ، فَنَظَرْتُ فَإِذَا عُمَرُ بْنُ الْخَطَّابِ فَقَالَ اذْهَبْ فَأْتِنِي بِهَذَيْنِ. فَجِئْتُهُ بِهِمَا. قَالَ مَنْ أَنْتُمَا ـ أَوْ مِنْ أَيْنَ أَنْتُمَا قَالاَ مِنْ أَهْلِ الطَّائِفِ. قَالَ لَوْ كُنْتُمَا مِنْ أَهْلِ الْبَلَدِ لأَوْجَعْتُكُمَا، تَرْفَعَانِ أَصْوَاتَكُمَا فِي مَسْجِدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم
பாடம் : 83 பள்ளிவாச-ல் உரத்த குர-ல் பேசுவது
470. சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாச-ல் நின்றுகொண்டிருந்தேன். அப்போது யாரோ ஒருவர் என்மீது சிறு கல்லை வீசினார். நான் (திரும்பிப்) பார்த்தபோது அங்கே (கலீஃபா) உமர் (ரலி) அவர்கள் இருந்தார்கள். “நீர் சென்று (அதோ) அந்த இருவரையும் என்னிடம் அழைத்து வருவீராக” என்றார்கள். அவ்வாறே நான் அவ்விருவரையும் அழைத்துக்கொண்டு உமர் (ரலி) அவர்களிடம் வந்தேன்.

அப்போது உமர் (ரலி) அவர்கள் (அவ்விருவரிடமும்), ‘நீங்கள் யார்?’ அல்லது ‘நீங்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர் கள்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் இருவரும், ‘நாங்கள் தாயிஃப்வாசிகள்’ என்று பதிலளித்தனர்.

அப்போது உமர் (ரலி) அவர்கள், “(நல்ல வேளை! நீங்கள் வெளியூர்க்காரர் களாய்ப் போய்விட்டீர்கள்) நீங்கள் இந்த (மதீனா) நகரைச் சேர்ந்தவர்களாயிருந் திருந்தால், நிச்சயமாக நான் உங்கள் இருவரையும் (சாட்டையால்) அடித்திருப் பேன்; (ஏனெனில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பள்ளிவாச-ல் நீங்கள் இருவரும் குரலை உயர்த்திப் பேசிக் கொண்டிருந்தீர்கள்” என்று சொன்னார்கள்.


அத்தியாயம் : 8
471. حَدَّثَنَا أَحْمَدُ، قَالَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي يُونُسُ بْنُ يَزِيدَ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ كَعْبِ بْنِ مَالِكٍ، أَنَّ كَعْبَ بْنَ مَالِكٍ، أَخْبَرَهُ أَنَّهُ، تَقَاضَى ابْنَ أَبِي حَدْرَدٍ دَيْنًا لَهُ عَلَيْهِ، فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْمَسْجِدِ، فَارْتَفَعَتْ أَصْوَاتُهُمَا حَتَّى سَمِعَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ فِي بَيْتِهِ، فَخَرَجَ إِلَيْهِمَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى كَشَفَ سِجْفَ حُجْرَتِهِ وَنَادَى "" يَا كَعْبُ بْنَ مَالِكٍ، يَا كَعْبُ "". قَالَ لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ. فَأَشَارَ بِيَدِهِ أَنْ ضَعِ الشَّطْرَ مِنْ دَيْنِكَ. قَالَ كَعْبٌ قَدْ فَعَلْتُ يَا رَسُولَ اللَّهِ. قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" قُمْ فَاقْضِهِ "".
பாடம் : 83 பள்ளிவாச-ல் உரத்த குர-ல் பேசுவது
471. கஅப் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனக்கு அப்துல்லாஹ் பின் அபீ ஹத்ரத் (ரலி) அவர்கள் தர வேண்டி யிருந்த கடன் ஒன்றை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாச-ல் வைத்து திருப்பிச் செலுத்தும்படி கேட்டேன்.

(இது தொடர்பாக எங்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு) எங்கள் இருவரின் குரல்களும் உயர்ந்தன. தமது வீட்டில் இருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் குரலைக் கேட்டுவிட்டார்கள். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் இருவரையும் நோக்கிப் புறப்பட்டார்கள். (இதற்காக) தமது அறையின் திரையை விலக்கி, “கஅப் பின் மா-க்! கஅப்!” என்று அழைத்தார்கள். உடனே நான், “இதோ வந்துவிட்டேன், அல்லாஹ்வின் தூதரே!” என்றேன்.

அப்போது அவர்கள் “உமது கடனி-ருந்து பாதியைத் தள்ளுபடி செய்க” என்று சைகை செய்தார்கள். “அவ்வாறே செய்து விட்டேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று நான் கூறினேன். (பிறகு) நபி (ஸல்) அவர்கள் (அப்துல்லாஹ் பின் அபீஹத் ரத்தை நோக்கி), “எழுந்து சென்று பாதிக் கடனைச் செலுத்துவீராக” என்றார்கள்.53

அத்தியாயம் : 8
472. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ سَأَلَ رَجُلٌ النَّبِيَّ صلى الله عليه وسلم وَهْوَ عَلَى الْمِنْبَرِ مَا تَرَى فِي صَلاَةِ اللَّيْلِ قَالَ "" مَثْنَى مَثْنَى، فَإِذَا خَشِيَ الصُّبْحَ صَلَّى وَاحِدَةً، فَأَوْتَرَتْ لَهُ مَا صَلَّى "". وَإِنَّهُ كَانَ يَقُولُ اجْعَلُوا آخِرَ صَلاَتِكُمْ وِتْرًا، فَإِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَمَرَ بِهِ.
பாடம் : 84 பள்ளிவாச-ல் அமர்வதும் வட்டமாக வீற்றிருப்பதும்
472. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் சொற் பொழிவு மேடை (மிம்பர்)மீது இருந்தபோது ஒரு மனிதர், “இரவுத் தொழுகை பற்றித் தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(இரவுத் தொழுகை) இரண்டிரண்டு ரக்அத்களாகும். சுப்ஹு (நேரம் நுழைந்து விட்டது) பற்றி அஞ்சினால் (இறுதியில்) ஒரு ரக்அத் தொழுதுகொள்ள வேண்டும். அவர் முன்னர் தொழுதவற்றை அது ஒற்றையாக ஆக்கிவிடும்” என்றார்கள்.

(இதன் அறிவிப்பாளரான) நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இப்னு உமர் (ரலி) அவர்கள், “உங்களின் இறுதித் தொழுகையாக ‘வித்ரை’ ஆக்கிக்கொள்ளுங்கள்; ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் இவ்வாறே கட்டளை யிட்டார்கள்” என்று கூறுவார்கள்.


அத்தியாயம் : 8
473. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَجُلاً، جَاءَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَهْوَ يَخْطُبُ فَقَالَ كَيْفَ صَلاَةُ اللَّيْلِ فَقَالَ "" مَثْنَى مَثْنَى، فَإِذَا خَشِيتَ الصُّبْحَ فَأَوْتِرْ بِوَاحِدَةٍ، تُوتِرُ لَكَ مَا قَدْ صَلَّيْتَ "". قَالَ الْوَلِيدُ بْنُ كَثِيرٍ حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ أَنَّ ابْنَ عُمَرَ حَدَّثَهُمْ أَنَّ رَجُلاً نَادَى النَّبِيَّ صلى الله عليه وسلم وَهُوَ فِي الْمَسْجِدِ.
பாடம் : 84 பள்ளிவாச-ல் அமர்வதும் வட்டமாக வீற்றிருப்பதும்
473. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலில்) உரையாற்றிக்கொண்டி ருக்கையில் அவர்களை நோக்கி ஒரு மனிதர் வந்து, “இரவுத் தொழுகை எவ்வாறு (தொழ வேண்டும்)?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இரண்டி ரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும்; சுப்ஹு தொழுகை(யின் நேரம் நுழைந்து விட்டது) பற்றி நீங்கள் அஞ்சினால் (இறுதி யில்) வித்ருக்காக ஒரு ரக்அத் தொழுது கொள்ளுங்கள்! நீங்கள் தொழுது முடித்த வற்றை அது ஒற்றையாக ஆக்கிவிடும்” என்றார்கள்.54

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், ‘நபி (ஸல்) அவர்கள் பள்ளி வாசலில் இருந்தபோது ஒரு மனிதர் அவர்களைச் சப்தமிட்டு அழைத்து’ என இடம்பெற்றுள்ளது.


அத்தியாயம் : 8
474. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، أَنَّ أَبَا مُرَّةَ، مَوْلَى عَقِيلِ بْنِ أَبِي طَالِبٍ أَخْبَرَهُ عَنْ أَبِي وَاقِدٍ اللَّيْثِيِّ، قَالَ بَيْنَمَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْمَسْجِدِ فَأَقْبَلَ ثَلاَثَةُ نَفَرٍ، فَأَقْبَلَ اثْنَانِ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَذَهَبَ وَاحِدٌ، فَأَمَّا أَحَدُهُمَا فَرَأَى فُرْجَةً فَجَلَسَ، وَأَمَّا الآخَرُ فَجَلَسَ خَلْفَهُمْ، فَلَمَّا فَرَغَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" أَلاَ أُخْبِرُكُمْ عَنِ الثَّلاَثَةِ أَمَّا أَحَدُهُمْ فَأَوَى إِلَى اللَّهِ، فَآوَاهُ اللَّهُ، وَأَمَّا الآخَرُ فَاسْتَحْيَا، فَاسْتَحْيَا اللَّهُ مِنْهُ، وَأَمَّا الآخَرُ فَأَعْرَضَ، فَأَعْرَضَ اللَّهُ عَنْهُ "".
பாடம் : 84 பள்ளிவாச-ல் அமர்வதும் வட்டமாக வீற்றிருப்பதும்
474. அபூவாக்கித் அவ்ஃப் பின் அல்ஹாரிஸ் அல்லைஸீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாச-ல் (மக்களுடன் வட்டமாக அமர்ந்து) இருந்தபோது, மூன்று பேர் (அவர்களை நோக்கி) வந்தனர். (அவர்களில்) இருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை முன்னோக்கி வந்தனர். மற்றொருவர் (அலட்சியப்படுத்திவிட்டுச்) சென்றுவிட்டார். பிறகு அவ்விருவரில் ஒருவரோ வட்டமாக அமர்ந்திருந்த அந்த அவையில் ஓர் இடைவெளி இருப்பதைக் கண்டு அதில் அமர்ந்துகொண்டார். மற்றவரோ (வெட்கப் பட்டுக்கொண்டு) பின்னால் போய்விட்டார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது பேச்சை) முடித்ததும் கூறினார்கள்:

(சற்று முன்னர் வந்த) அந்த மூன்று பேரைப் பற்றி உங்களுக்கு நான் சொல்லட் டுமா? அவர்களில் ஒருவரோ, அல்லாஹ் வின் பக்கம் ஒதுங்கினார்; அல்லாஹ்வும் அவரை அரவணைத்துக்கொண்டான். மற்றொருவரோ வெட்கப்பட்டு (பின்னால் போய் உட்கார்ந்து)கொண்டார். எனவே, அல்லாஹ்வும் அவர் விஷயத்தில் (கருணைகாட்ட) வெட்கப்பட்டான்.

மூன்றாமவரோô (காரணமின்றி இந்த அவையை) அலட்சியப்படுத்தினார். எனவே, அல்லாஹ்வும் அவரை அலட்சி யம் செய்துவிட்டான்.

அத்தியாயம் : 8
475. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَمِّهِ، أَنَّهُ رَأَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مُسْتَلْقِيًا فِي الْمَسْجِدِ، وَاضِعًا إِحْدَى رِجْلَيْهِ عَلَى الأُخْرَى. وَعَنِ ابْنِ شِهَابٍ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ قَالَ كَانَ عُمَرُ وَعُثْمَانُ يَفْعَلاَنِ ذَلِكَ.
பாடம் : 85 பள்ளிவாசலில் (ஓய்வெடுக்கும் போது) மல்லாந்து படுப்பதும் கால்களை நீட்டுவதும்
475. அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாச-ல் ஒரு

கா-ன்மேல் இன்னொரு காலைப் போட்டுக்கொண்டு (கீழாடை விலகாதவாறு) மல்லாந்து படுத்து (ஓய்வெடுத்துக்)கொண்டிருந்ததை நான் கண்டேன்.

சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

உமர் (ரலி) அவர்களும் உஸ்மான் (ரலி) அவர்களும் இவ்வாறு செய்பவர்களாக இருந்தார்கள்.

அத்தியாயம் : 8
476. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ، زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ لَمْ أَعْقِلْ أَبَوَىَّ إِلاَّ وَهُمَا يَدِينَانِ الدِّينَ، وَلَمْ يَمُرَّ عَلَيْنَا يَوْمٌ إِلاَّ يَأْتِينَا فِيهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم طَرَفَىِ النَّهَارِ بُكْرَةً وَعَشِيَّةً، ثُمَّ بَدَا لأَبِي بَكْرٍ فَابْتَنَى مَسْجِدًا بِفِنَاءِ دَارِهِ، فَكَانَ يُصَلِّي فِيهِ وَيَقْرَأُ الْقُرْآنَ، فَيَقِفُ عَلَيْهِ نِسَاءُ الْمُشْرِكِينَ، وَأَبْنَاؤُهُمْ يَعْجَبُونَ مِنْهُ وَيَنْظُرُونَ إِلَيْهِ، وَكَانَ أَبُو بَكْرٍ رَجُلاً بَكَّاءً لاَ يَمْلِكُ عَيْنَيْهِ إِذَا قَرَأَ الْقُرْآنَ، فَأَفْزَعَ ذَلِكَ أَشْرَافَ قُرَيْشٍ مِنَ الْمُشْرِكِينَ.
பாடம் : 86 மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் சாலையில் பள்ளிவாசல் அமையலாம். இதுவே ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்), அய்யூப் அஸ்ஸக்தியானீ (ரஹ்), மாலிக் (ரஹ்) ஆகியோரின் கருத்தாகும்.55
476. நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் பெற்றோர் (அபூபக்ர்-உம்மு ரூமான்) எனக்கு விவரம் தெரிந்தது முதல் (இஸ்லாமிய) மார்க்கத்தைக் கடைப்பிடிப்ப வர்களாகவே இருந்தனர். பக-ன் இரு பக்கங்களான காலையிலும் மாலையிலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வராமல் (மக்காவில்) எங்களின் எந்த நாளும் கழிந்ததில்லை.

பிறகு அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு ஏதோ (யோசனை) தோன்றியது. தமது வீட்டு முற்றத்தில் தொழுமிடம் ஒன்றை உருவாக்கி அதில் தொழுது கொண்டும் குர்ஆனை ஓதிக்கொண்டும்வந்தார்கள். அப்போது இணைவைப்பாளர்களின் மனைவி, மக்கள் அபூபக்ர் (ரலி) அவர்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டு அவர்களைச் சூழ்ந்து (வேடிக்கை பார்த்துக்கொண்டு) நிற்பர். அபூபக்ர் (ரலி) அவர்கள் குர்ஆன் ஓதும்போது தம் கண்களைக் கட்டுப்படுத்த முடியாமல் (கண்ணீர் உகுத்த வண்ணம்) அதிகமாக அழக்கூடியவராக இருந்தார்கள்.

(அபூபக்ர் அவர்களின்) இந்த நடவடிக்கை (எங்கே தம் மனைவி, மக்களை மதம் மாறச் செய்துவிடுமோ என்ற அச்சம்) இணைவைப்பாளர்களான குறைஷித் தலைவர் களை பீதிக்குள்ளாக்கியது.

அத்தியாயம் : 8
477. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" صَلاَةُ الْجَمِيعِ تَزِيدُ عَلَى صَلاَتِهِ فِي بَيْتِهِ، وَصَلاَتِهِ فِي سُوقِهِ خَمْسًا وَعِشْرِينَ دَرَجَةً، فَإِنَّ أَحَدَكُمْ إِذَا تَوَضَّأَ فَأَحْسَنَ وَأَتَى الْمَسْجِدَ، لاَ يُرِيدُ إِلاَّ الصَّلاَةَ، لَمْ يَخْطُ خُطْوَةً إِلاَّ رَفَعَهُ اللَّهُ بِهَا دَرَجَةً، وَحَطَّ عَنْهُ خَطِيئَةً، حَتَّى يَدْخُلَ الْمَسْجِدَ، وَإِذَا دَخَلَ الْمَسْجِدَ كَانَ فِي صَلاَةٍ مَا كَانَتْ تَحْبِسُهُ، وَتُصَلِّي ـ يَعْنِي عَلَيْهِ ـ الْمَلاَئِكَةُ مَا دَامَ فِي مَجْلِسِهِ الَّذِي يُصَلِّي فِيهِ اللَّهُمَّ اغْفِرْ لَهُ، اللَّهُمَّ ارْحَمْهُ، مَا لَمْ يُحْدِثْ فِيهِ "".
பாடம் : 87 கடைத்தெருவிலுள்ள பள்ளி வாச-ல் தொழுவது56 கதவு மூடப்படும் ஒரு வீட்டுக்குள் அமைந்திருந்த பள்ளிவாச-ல் இப்னு அவ்ன் (ரஹ்) அவர்கள் தொழுதார்கள்.57
477. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தமது வீட்டில் தொழுவதை விடவும், தமது கடைத்தெருவில் தொழு வதைவிடவும் ‘ஜமாஅத்துடன்’ (கூட்டுத் தொழுகை) தொழுவது, மதிப்பில் இருபத்து ஐந்து (மடங்கு தொழுகைகள்) கூடுதலாகும். ஏனெனில், உங்களில் ஒருவர் அங்கத் தூய்மை (உளூ) செய்து, அதைச் செம்மை யாகச் செய்து, தொழுகின்ற ஒரே நோக்கத் துடன் பள்ளிவாசலுக்கு வந்தால், அவர் பள்ளிவாசலுக்குள் நுழையும்வரை எடுத்து வைக்கும் ஒவ்வோர் எட்டுக்கும் ஒரு தகுதியை அவருக்கு அல்லாஹ் உயர்த்து கிறான்; ஒரு பாவத்தை அவரை விட்டு நீக்குகிறான்.

அவர் பள்ளிவாசலில் நுழைந்துவிட்டால், அவர் (கூட்டுத்) தொழுகையை எதிர்பார்த்து தம்மைக் கட்டுப்படுத்திக்கொண்டிருக்கும்வரை அவர் தொழுது கொண்டிருப்பவராகவே கருதப்படுகிறார்.

மேலும் அவர் (வெளியேறிவிடாமல்) எந்த இடத்தில் தொழுகின்றாரோ அந்த இடத்திலேயே இருக்கும்வரை, அவருக் காக வானவர்கள் பிரார்த்தனை செய்கி றார்கள். ஆனால், (அங்கத் தூய்மையை அகற்றிவிடக்கூடிய) சிறுதுடக்கு அவருக்கு ஏற்படாமல் இருக்க வேண்டும். அப்போது வானவர்கள், “இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்குக் கருணை புரிவாயாக! என்று பிரார்த்திக்கிறார்கள்.

அத்தியாயம் : 8
478. حَدَّثَنَا حَامِدُ بْنُ عُمَرَ، عَنْ بِشْرٍ، حَدَّثَنَا عَاصِمٌ، حَدَّثَنَا وَاقِدٌ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ، أَوِ ابْنِ عَمْرٍو شَبَّكَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَصَابِعَهُ.
பாடம் : 88 பள்ளிவாசலிலும் மற்ற இடங் களிலும் கைவிரல்களை (ஒன் றோடு ஒன்று) கோத்துக்கொள் வது
478. இப்னு உமர், அல்லது இப்னு அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தம் கைவிரல் களைக் கோத்துக்காட்டினார்கள்.


அத்தியாயம் : 8
480. وَقَالَ عَاصِمُ بْنُ عَلِيٍّ حَدَّثَنَا عَاصِمُ بْنُ مُحَمَّدٍ، سَمِعْتُ هَذَا الْحَدِيثَ، مِنْ أَبِي فَلَمْ أَحْفَظْهُ، فَقَوَّمَهُ لِي وَاقِدٌ عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ أَبِي وَهُوَ، يَقُولُ قَالَ عَبْدُ اللَّهِ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" يَا عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو، كَيْفَ بِكَ إِذَا بَقِيتَ فِي حُثَالَةٍ مِنَ النَّاسِ بِهَذَا "".
பாடம் : 88 பள்ளிவாசலிலும் மற்ற இடங் களிலும் கைவிரல்களை (ஒன் றோடு ஒன்று) கோத்துக்கொள் வது
480. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கைவிரல்களைக் கோத்துக்காட்டி) “அப்துல்லாஹ் பின் அம்ரே! மக்களில் மிகவும் மட்டமானவர்களுடன் இப்படி நீர் (சேர்ந்து) வாழ நேர்ந்தால், உமது நிலை எப்படியிருக்கும்?” என்று கேட்டார்கள்.


அத்தியாயம் : 8