2862. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ بِالْمَدِينَةِ فَزَعٌ، فَاسْتَعَارَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَرَسًا لأَبِي طَلْحَةَ، يُقَالُ لَهُ مَنْدُوبٌ فَرَكِبَهُ، وَقَالَ "" مَا رَأَيْنَا مِنْ فَزَعٍ، وَإِنْ وَجَدْنَاهُ لَبَحْرًا "".
பாடம் : 50 முரட்டு ஊர்திப் பிராணியின் மீதும் ஆண் குதிரையின் மீதும் பயணம் செய்தல் ராஷித் பின் சஅத் (ரஹ்) அவர்கள், ‘‘முன்னோர்கள், (பயணம் செய்வதற்கு) ஆண் குதிரையையே விரும்பினார்கள். ஏனெனில், அதுதான் மிக வேகமாக ஓடக் கூடியதும், துணிச்சல் மிக்கதும் ஆகும்” என்று கூறினார்கள்.
2862. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மதீனாவில் (பகைவர்கள் படை யெடுத்து வருவதாகப்) பீதி ஏற்பட்டிருந்தது. ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அபூதல்ஹா (ரலி) அவர்களுக்குச் சொந்தமான யிமன்தூப்’ எனப்படும் குதிரை ஒன்றை இரவல் வாங்கி அதில் ஏறிச் சென்றார்கள். பிறகு (எல்லைகளைப் பார்த்துவிட்டு வந்து), ‘‘பீதி எதையும் நாம் பார்க்கவில்லை. இந்தக் குதிரையை, தங்கு தடையின்றி வேகமாக ஓடக்கூடியதாக நாம் கண்டோம்” என்று கூறினார்கள்.36

அத்தியாயம் : 56
2863. حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ أَبِي أُسَامَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم جَعَلَ لِلْفَرَسِ سَهْمَيْنِ وَلِصَاحِبِهِ سَهْمًا. وَقَالَ مَالِكٌ يُسْهَمُ لِلْخَيْلِ وَالْبَرَاذِينِ مِنْهَا لِقَوْلِهِ {وَالْخَيْلَ وَالْبِغَالَ وَالْحَمِيرَ لِتَرْكَبُوهَا} وَلاَ يُسْهَمُ لأَكْثَرَ مِنْ فَرَسٍ.
பாடம் : 51 (போர்ச் செல்வத்தில்) குதிரைக்கான பங்கு
2863. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (போரில் கிடைத்த செல்வத்திலிருந்து) குதிரைக்கு இரு பங்குகளையும் (அதல்லாமல்) அதன் உரிமையாளருக்கு ஒரு பங்கையும் கொடுத்தார்கள்.

மாலிக் (ரஹ்) அவர்கள், ‘‘அரபுக் குதிரைகளுக்கும் மற்றக் குதிரைகளுக்கும் போரில் கிடைக்கும் செல்வங்களிலிருந்து பங்கு கொடுக்கப்பட வேண்டும். ஏனெனில், யிகுதிரைகளையும், கோவேறுக் கழுதைகளையும், கழுதைகளையும் நீங்கள் பயணம் செய்வதற்காக(வும் அலங்காரமாகவும்) அவன் படைத்தான்’ (16:8) என்று அல்லாஹ் கூறுகின்றான். ஒரு குதிரையைவிட அதிகமானவற்றுக்குப் பங்கு அளிக்கப்படாது” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 56
2864. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا سَهْلُ بْنُ يُوسُفَ، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ،. قَالَ رَجُلٌ لِلْبَرَاءِ بْنِ عَازِبٍ ـ رضى الله عنهما ـ أَفَرَرْتُمْ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ حُنَيْنٍ قَالَ لَكِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمْ يَفِرَّ، إِنَّ هَوَازِنَ كَانُوا قَوْمًا رُمَاةً، وَإِنَّا لَمَّا لَقِينَاهُمْ حَمَلْنَا عَلَيْهِمْ فَانْهَزَمُوا، فَأَقْبَلَ الْمُسْلِمُونَ عَلَى الْغَنَائِمِ وَاسْتَقْبَلُونَا بِالسِّهَامِ، فَأَمَّا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَلَمْ يَفِرَّ، فَلَقَدْ رَأَيْتُهُ وَإِنَّهُ لَعَلَى بَغْلَتِهِ الْبَيْضَاءِ وَإِنَّ أَبَا سُفْيَانَ آخِذٌ بِلِجَامِهَا، وَالنَّبِيُّ صلى الله عليه وسلم يَقُولُ "" أَنَا النَّبِيُّ لاَ كَذِبْ أَنَا ابْنُ عَبْدِ الْمُطَّلِبْ "".
பாடம் : 52 போரில் அடுத்தவரின் ஊர்திப் பிராணியை ஓட்டுவது
2864. அபூஇஸ்ஹாக் அம்ர் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடம், ‘‘நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விட்டுவிட்டு ஹுனைன் (போர்) அன்று வெருண்டு ஓடிவிட்டீர்களா(மே, உண்மைதானா)?” என்று கேட்டார்.

அதற்கு அவர்கள், ‘‘(ஆம், உண்மை தான்.) ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெருண்டோடவில்லை. ஹவாஸின் குலத்தார் அம்பெய்வதில் தேர்ச்சிபெற்ற சமூகத்தாராய் இருந்தார்கள். நாங்கள் அவர்களை (போரில்) சந்தித்த போது அவர்கள்மீது (கடும்) தாக்குதல் நடத்தினோம். அதனால் அவர்கள் தோற்றுப் போய்விட்டார்கள்.

ஆகவே, முஸ்லிம்கள் (போர்க் களத்திலிருந்த) எதிரிகளின் செல்வங்களை எடுக்க முனைந்தார்கள். அப்போது எதிரிகள் அம்புகளால் எங்களை எதிர் கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோ, பின்வாங்கிச் செல்லவில்லை. (நாங்கள்தான் பின்வாங்கி ஓடிவந்துவிட்டோம்.) நான் நபி (ஸல்) அவர்களைத் தமது வெள்ளைக் கோவேறுக் கழுதையில் அமர்ந்திருக்கக் கண்டேன். அபூசுப்யான் (ரலி) அவர்கள் அதன் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள்,

‘‘நான்நபிதான்பொய்யில்லை!

நான்அப்துல் முத்தலிபின்மகன் ஆவேன்”

என்று (பாடியபடி) கூறிக்கொண்டி ருந்தார்கள்.

அத்தியாயம் : 56
2865. حَدَّثَنِي عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ أَبِي أُسَامَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. أَنَّهُ كَانَ إِذَا أَدْخَلَ رِجْلَهُ فِي الْغَرْزِ وَاسْتَوَتْ بِهِ نَاقَتُهُ قَائِمَةً، أَهَلَّ مِنْ عِنْدِ مَسْجِدِ ذِي الْحُلَيْفَةِ.
பாடம் : 53 ஊர்திப் பிராணியின் இரும்பு மற்றும் தோல் வளையம்37
2865. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தமது காலை, ஏறும் வளையத்தில் நுழைத்து, தமது ஒட்டகம் நிலைக்கு வந்துவிடும்போது துல் ஹுலைஃபா பள்ளிவாசலிலிருந்து (ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டி) யிதல்பியா’ கூறுவார்கள்.

அத்தியாயம் : 56
2866. حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه اسْتَقْبَلَهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى فَرَسٍ عُرْىٍ، مَا عَلَيْهِ سَرْجٌ، فِي عُنُقِهِ سَيْفٌ.
பாடம் : 54 சேணம் பூட்டப்படாத குதிரையில் பயணித்தல்
2866. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் சேணம் பூட்டப் படாத, திறந்தமேனி கொண்ட ஒரு குதிரையின் மீது அமர்ந்து, கழுத்தில் வாளொன்று தொங்கிக்கொண்டிருக்க, மதீனாவாசிகளை நோக்கி வந்தார்கள்.38

அத்தியாயம் : 56
2867. حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه أَنَّ أَهْلَ، الْمَدِينَةِ فَزِعُوا مَرَّةً، فَرَكِبَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَرَسًا لأَبِي طَلْحَةَ كَانَ يَقْطِفُ ـ أَوْ كَانَ فِيهِ قِطَافٌ ـ فَلَمَّا رَجَعَ قَالَ "" وَجَدْنَا فَرَسَكُمْ هَذَا بَحْرًا "". فَكَانَ بَعْدَ ذَلِكَ لاَ يُجَارَى.
பாடம் : 55 மந்தமாக நடக்கும் குதிரை
2867. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மதீனாவாசிகள் ஒருமுறை (எதிரிகள் படையெடுத்து வருவதாகக் கேள்விப் பட்டு) பீதிக்குள்ளானார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அபூதல்ஹா (ரலி) அவர்களுக்குச் சொந்தமான, மந்தமாக நடக்கும் தன்மையுடைய ஒரு குதிரையின் மீது ஏறிச் சென்றார்கள். திரும்பி வந்தபோது, ‘‘உங்களின் இந்தக் குதிரையை தங்குதடையின்றி வேகமாக ஓடக்கூடியதாக நாம் கண்டோம்” என்று கூறினார்கள்.

அதற்குப் பிறகு அந்தக் குதிரை வேறெந்த குதிரையாலும் முந்த முடியாத தாக மாறிவிட்டது.

அத்தியாயம் : 56
2868. حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ أَجْرَى النَّبِيُّ صلى الله عليه وسلم مَا ضُمِّرَ مِنَ الْخَيْلِ مِنَ الْحَفْيَاءِ إِلَى ثَنِيَّةِ الْوَدَاعِ، وَأَجْرَى مَا لَمْ يُضَمَّرْ مِنَ الثَّنِيَّةِ إِلَى مَسْجِدِ بَنِي زُرَيْقٍ. قَالَ ابْنُ عُمَرَ وَكُنْتُ فِيمَنْ أَجْرَى. قَالَ عَبْدُ اللَّهِ حَدَّثَنَا سُفْيَانُ قَالَ حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ. قَالَ سُفْيَانُ بَيْنَ الْحَفْيَاءِ إِلَى ثَنِيَّةِ الْوَدَاعِ خَمْسَةُ أَمْيَالٍ أَوْ سِتَّةٌ، وَبَيْنَ ثَنِيَّةِ إِلَى مَسْجِدِ بَنِي زُرَيْقٍ مِيلٌ.
பாடம் : 56 குதிரைப் பந்தயம்
2868. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மெலியவைக்கப் பட்ட (பயிற்சியளிக்கப்பட்ட) குதிரைகளை யிஹஃப்யா’ எனுமிடத்திலிருந்து ‘ஸனிய்யத் துல் வதா’ எனும் மலைக் குன்றுவரை (ஓட்டப் பந்தயத்தில்) ஓடச்செய்தார்கள். மெலியவைக்கப்படாத (பயிற்சியளிக் கப்படாத) குதிரைகளை ‘ஸனிய்யத்துல் வதா’விலிருந்து யிபனூ ஸுரைக்’ பள்ளிவாசல்வரை (பந்தயத்தில்) ஓடச்செய்தார்கள். நானும் பந்தயத்தில் (என் குதிரையுடன்) கலந்துகொண்டேன்.39

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. இரண்டாவது தொடரில் பின்வரும் தகவலும் காணப்படு கிறது. யிஹஃப்யா’வுக்கும் ஸனிய்யத்துல் வதாவுக்கும் இடையே ஐந்து அல்லது ஆறு மைல்கள் தூரம் இருக்கும். ஸனிய்யத்துல் வதாவுக்கும் பனூ ஸுரைக் பள்ளிவாசலுக்கும் இடையே ஒரு மைல் தூரம் இருக்கும்.

அத்தியாயம் : 56
2869. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم سَابَقَ بَيْنَ الْخَيْلِ الَّتِي لَمْ تُضَمَّرْ، وَكَانَ أَمَدُهَا مِنَ الثَّنِيَّةِ إِلَى مَسْجِدِ بَنِي زُرَيْقٍ. وَأَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ سَابَقَ بِهَا. قَالَ أَبُو عَبْد اللَّهِ أَمَدًا غَايَةً فَطَالَ عَلَيْهِمْ الْأَمَدُ
பாடம் : 57 பந்தயத்திற்காகக் குதிரையை மெலியவைப்பது
2869. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மெலியவைக்கப்படாத (பயிற்சி பெறாத) குதிரைகளுக்கிடையே பந்தயம் வைத்தார் கள். அவற்றின் பந்தய எல்லை, ‘ஸனிய்யத் துல் வதா’விலிருந்து பனூ ஸுரைக் குலத்தாரின் பள்ளிவாசல்வரை இருந்தது.

நானும் இத்தகைய குதிரைகளுக் கிடையேயான பந்தயங்களில் கலந்து கொள்வேன்.

அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறு கிறேன்:

(இங்கு யிஎல்லை’ என்பதைக் குறிக்க மூலத்தில்) ‘அமத்’ எனும் சொல் ஆளப் பட்டுள்ளது. இதற்கு யிமுடிவு’ என்பது பொருள். ‘‘அவர்கள்மீது காலம் (‘அமத்’) நீண்டுவிட்டது” (57:16) என்று அல்லாஹ் கூறுகின்றான்.

அத்தியாயம் : 56
2870. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ سَابَقَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَيْنَ الْخَيْلِ الَّتِي قَدْ أُضْمِرَتْ فَأَرْسَلَهَا مِنَ الْحَفْيَاءِ، وَكَانَ أَمَدُهَا ثَنِيَّةَ الْوَدَاعِ. فَقُلْتُ لِمُوسَى فَكَمْ كَانَ بَيْنَ ذَلِكَ قَالَ سِتَّةُ أَمْيَالٍ أَوْ سَبْعَةٌ. وَسَابَقَ بَيْنَ الْخَيْلِ الَّتِي لَمْ تُضَمَّرْ، فَأَرْسَلَهَا مِنْ ثَنِيَّةِ الْوَدَاعِ، وَكَانَ أَمَدُهَا مَسْجِدَ بَنِي زُرَيْقٍ، قُلْتُ فَكَمْ بَيْنَ ذَلِكَ قَالَ مِيلٌ أَوْ نَحْوُهُ. وَكَانَ ابْنُ عُمَرَ مِمَّنْ سَابَقَ فِيهَا.
பாடம் : 58 மெலியவைக்கப்பட்ட குதிரைகளுக்கான பந்தய எல்லை
2870. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மெலியவைக்கப்பட்ட (பயிற்சி அளிக்கப் பட்ட) குதிரைகளுக்கிடையே பந்தயம் வைத்தார்கள். அவற்றை யிஹஃப்யா’ விலிருந்து அனுப்பினார்கள். அவற்றின் (பந்தய) எல்லை ‘ஸனிய்யத்துல் வதா’வாக இருந்தது” என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூ இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

நான் (அறிவிப்பாளர்) மூசா பின் உக்பா (ரஹ்) அவர்களிடம், ‘‘அவ்விரண்டுக் குமிடையே எவ்வளவு தொலைவிருந்தது?” என்று கேட்டேன். அவர், ‘‘ஆறு அல்லது ஏழு மைல்கள்” என்று பதிலளித்தார்.

தொடர்ந்து நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

‘‘நபி (ஸல்) அவர்கள் மெலியவைக்கப் படாத (பயிற்சி பெறாத) குதிரைகளுக் கிடையேயும் பந்தயம் வைத்தார்கள். அவற்றை ஸனிய்யத்துல் வதாவிலிருந்து அனுப்பினார்கள். அவற்றின் (பந்தய) எல்லை பனூ ஸுரைக் குலத்தாரின் பள்ளிவாசலாக இருந்தது” என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். மேலும், இப்னு உமர் (ரலி) அவர்களும் (தமது குதிரையுடன்) பந்தயத்தில் கலந்துகொண்டார்கள்.

‘‘நான் மூசா பின் உக்பா (ரஹ்) அவர்களிடம், ‘‘அவ்விரண்டுக்குமிடையே எவ்வளவு தொலைவிருந்தது?” என்று கேட்க, யிசுமார் ஒரு மைல்’ என்று அவர்கள் பதிலளித்தார்கள்” என அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

அத்தியாயம் : 56
2871. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ حُمَيْدٍ، قَالَ سَمِعْتُ أَنَسًا ـ رضى الله عنه ـ يَقُولُ كَانَتْ نَاقَةُ النَّبِيِّ صلى الله عليه وسلم يُقَالُ لَهَا الْعَضْبَاءُ.
பாடம் : 59 நபி (ஸல்) அவர்களின் ஒட்டகம் ‘‘நபி (ஸல்) அவர்கள் உசாமா (ரலி) அவர்களை (தமது ஒட்டகமான) யிகஸ்வா’ வின் மீது தமக்குப் பின்னால் அமர வைத்துக்கொண்டார்கள்” என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். ‘‘நபி (ஸல்) அவர்கள், யிகஸ்வா சிரமப் படுத்தவில்லை’ என்று சொன்னார்கள்” என மிஸ்வர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.40
2871. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் ஒட்டகம் ‘அள்பா’ என்று அழைக்கப்பட்டு வந்தது.41


அத்தியாயம் : 56
2872. حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم نَاقَةٌ تُسَمَّى الْعَضْبَاءَ لاَ تُسْبَقُ ـ قَالَ حُمَيْدٌ أَوْ لاَ تَكَادُ تُسْبَقُ ـ فَجَاءَ أَعْرَابِيٌّ عَلَى قَعُودٍ فَسَبَقَهَا، فَشَقَّ ذَلِكَ عَلَى الْمُسْلِمِينَ، حَتَّى عَرَفَهُ فَقَالَ "" حَقٌّ عَلَى اللَّهِ أَنْ لاَ يَرْتَفِعَ شَىْءٌ مِنَ الدُّنْيَا إِلاَّ وَضَعَهُ "". طَوَّلَهُ مُوسَى عَنْ حَمَّادٍ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 59 நபி (ஸல்) அவர்களின் ஒட்டகம் ‘‘நபி (ஸல்) அவர்கள் உசாமா (ரலி) அவர்களை (தமது ஒட்டகமான) யிகஸ்வா’ வின் மீது தமக்குப் பின்னால் அமர வைத்துக்கொண்டார்கள்” என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். ‘‘நபி (ஸல்) அவர்கள், யிகஸ்வா சிரமப் படுத்தவில்லை’ என்று சொன்னார்கள்” என மிஸ்வர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.40
2872. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் ‘அள்பா’ என்று அழைக்கப்பட்ட ஒட்டகம் ஒன்று இருந்தது. அது பந்தயத்தில் எவரும் அதை முந்த முடியாத (அளவுக்கு விரைவாக ஓடக்கூடிய)தாக இருந்தது. இந்நிலையில், கிராமவாசி ஒருவர் பயணத்திற்கும் சுமை ஏற்றுவதற்கும் ஏற்ற ஒட்டகம் ஒன்றின்மீது வந்தார். அது நபி (ஸல்) அவர்களின் ஒட்டகத்தை முந்தி விட்டது.

இது முஸ்லிம்களுக்கு மனவேதனையை அளித்தது. இதை அறிந்தபோது நபி (ஸல்) அவர்கள், ‘‘உலகில் உயர்ந்துவிடுகின்ற எந்தப் பொருளையும் (ஒருநாள்) கீழே இறக்குவதுதான் அல்லாஹ்வின் நியதி யாகும்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. இரண்டாவது தொடரில் இந்த ஹதீஸ் இன்னும் நீளமாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம் : 56
2873. حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنِي أَبُو إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ عَمْرَو بْنَ الْحَارِثِ، قَالَ مَا تَرَكَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلاَّ بَغْلَتَهُ الْبَيْضَاءَ وَسِلاَحَهُ وَأَرْضًا تَرَكَهَا صَدَقَةً.
பாடம் : 60 கழுதையில் பயணித்துப் போருக்குச் செல்வது42 பாடம் : 61 நபி (ஸல்) அவர்களின் வெள்ளை நிறக் கோவேறுக் கழுதை இதை அனஸ் (ரலி) அவர்கள் தமது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்கள்.43 ‘‘நபி (ஸல்) அவர்களுக்கு ‘அய்லா’ வின் அரசர் வெள்ளை நிறக் கோவேறுக் கழுதையொன்றை அன்பளிப்பாக வழங்கினார்” என்று அபூஹுமைத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.44
2873. அம்ர் பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (இறந்தபோது) தமது வெள்ளை நிறக் கோவேறுக் கழுதையையும், தமது ஆயுதத்தையும், தர்மமாக விட்டுச்சென்ற ஒரு நிலத்தையும் தவிர வேறெதையும் விட்டுச்செல்ல வில்லை.45


அத்தியாயம் : 56
2874. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ سُفْيَانَ، قَالَ حَدَّثَنِي أَبُو إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ ـ رضى الله عنه ـ قَالَ لَهُ رَجُلٌ يَا أَبَا عُمَارَةَ وَلَّيْتُمْ يَوْمَ حُنَيْنٍ قَالَ لاَ، وَاللَّهِ مَا وَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم وَلَكِنْ وَلَّى سَرَعَانُ النَّاسِ، فَلَقِيَهُمْ هَوَازِنُ بِالنَّبْلِ وَالنَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى بَغْلَتِهِ الْبَيْضَاءِ، وَأَبُو سُفْيَانَ بْنُ الْحَارِثِ آخِذٌ بِلِجَامِهَا، وَالنَّبِيُّ صلى الله عليه وسلم يَقُولُ "" أَنَا النَّبِيُّ لاَ كَذِبْ أَنَا ابْنُ عَبْدِ الْمُطَّلِبْ""
பாடம் : 60 கழுதையில் பயணித்துப் போருக்குச் செல்வது42 பாடம் : 61 நபி (ஸல்) அவர்களின் வெள்ளை நிறக் கோவேறுக் கழுதை இதை அனஸ் (ரலி) அவர்கள் தமது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்கள்.43 ‘‘நபி (ஸல்) அவர்களுக்கு ‘அய்லா’ வின் அரசர் வெள்ளை நிறக் கோவேறுக் கழுதையொன்றை அன்பளிப்பாக வழங்கினார்” என்று அபூஹுமைத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.44
2874. பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் ஒரு மனிதர், ‘‘அபூஉமாராவே! ஹுனைன் போரின்போது நீங்கள் புறமுதுகிட்டு ஓடினீர்களே!” என்று கேட்டார். நான், ‘‘இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் புறமுதுகிட்டு ஓடவில்லை. ஆனால், மக்களில் அவசரக்காரர்கள்தான் புறமுது கிட்டுச் சென்றார்கள். ஆகவே, ஹவாஸின் குலத்தார் அவர்களை அம்புகளால் தாக்கினார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது வெள்ளை நிறக் கோவேறுக் கழுதையின் மீது அமர்ந்திருந்தார்கள். அபூசுஃப்யான் பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் அதன் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டிருந்தார் கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘நான் நபிதான்; பொய்யில்லை. நான் அப்துல் முத்தலிபின் (மகனின்) மகனாவேன்” என்று கூறிக் கொண்டிருந்தார்கள் என்று பதிலளித் தார்கள்.

அத்தியாயம் : 56
2875. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ مُعَاوِيَةَ بْنِ إِسْحَاقَ، عَنْ عَائِشَةَ بِنْتِ طَلْحَةَ، عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ ـ رضى الله عنها ـ قَالَتِ اسْتَأْذَنْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فِي الْجِهَادِ. فَقَالَ "" جِهَادُكُنَّ الْحَجُّ "". وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ الْوَلِيدِ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ مُعَاوِيَةَ بِهَذَا.
பாடம் : 62 பெண்களின் அறப்போர்
2875. இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடம் அறப் போரில் ஈடுபட அனுமதி கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘(பெண்களாகிய) உங்கள் அறப்போர் ஹஜ் செய்வதுதான்” என்று கூறினார்கள்.46


அத்தியாயம் : 56
2876. حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مُعَاوِيَةَ، بِهَذَا. وَعَنْ حَبِيبِ بْنِ أَبِي عَمْرَةَ، عَنْ عَائِشَةَ بِنْتِ طَلْحَةَ، عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم سَأَلَهُ نِسَاؤُهُ عَنِ الْجِهَادِ فَقَالَ "" نِعْمَ الْجِهَادُ الْحَجُّ "".
பாடம் : 62 பெண்களின் அறப்போர்
2876. இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் அவர்களுடைய துணைவியர் அறப்போர் குறித்து (அதில் ஈடுபட அனுமதியளிக்கும்படி) கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘ஹஜ் செய்வது (உங்களுக்கு) சிறந்த அறப்போர் ஆகும்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 56
2877. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الأَنْصَارِيِّ، قَالَ سَمِعْتُ أَنَسًا ـ رضى الله عنه ـ يَقُولُ دَخَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى ابْنَةِ مِلْحَانَ فَاتَّكَأَ عِنْدَهَا، ثُمَّ ضَحِكَ فَقَالَتْ لِمَ تَضْحَكُ يَا رَسُولَ اللَّهِ فَقَالَ "" نَاسٌ مِنْ أُمَّتِي يَرْكَبُونَ الْبَحْرَ الأَخْضَرَ فِي سَبِيلِ اللَّهِ، مَثَلُهُمْ مَثَلُ الْمُلُوكِ عَلَى الأَسِرَّةِ "". فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ، ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ. قَالَ "" اللَّهُمَّ اجْعَلْهَا مِنْهُمْ "". ثُمَّ عَادَ فَضَحِكَ، فَقَالَتْ لَهُ مِثْلَ أَوْ مِمَّ ذَلِكَ فَقَالَ لَهَا مِثْلَ ذَلِكَ، فَقَالَتِ ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ. قَالَ "" أَنْتِ مِنَ الأَوَّلِينَ، وَلَسْتِ مِنَ الآخِرِينَ "". قَالَ قَالَ أَنَسٌ فَتَزَوَّجَتْ عُبَادَةَ بْنَ الصَّامِتِ، فَرَكِبَتِ الْبَحْرَ مَعَ بِنْتِ قَرَظَةَ، فَلَمَّا قَفَلَتْ رَكِبَتْ دَابَّتَهَا فَوَقَصَتْ بِهَا، فَسَقَطَتْ عَنْهَا فَمَاتَتْ.
பாடம் : 63 கடலில் (பயணம் செய்து) பெண் அறப்போரில் ஈடுபடுவது
2877. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மில்ஹானின் மகளான உம்மு ஹராம் (ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கு சாய்ந்து அமர்ந்து (உறங்கிக்) கொண்டிருந்துவிட்டு, பிறகு (விழித் தெழுந்து) சிரித்தார்கள். உம்மு ஹராம் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘என் சமுதாயத்தாரில் சிலர் இறைவழியில் (போர் புரிவதற்காகப்) பசுங்கடலில் பயணம் செய்வார்கள். அவர்களின் நிலை, கட்டில்களில் (சாய்ந்து) வீற்றிருக்கும் அரசர்களின் நிலையைப் போன்றிருக்கும்” என்று கூறினார்கள்.

அதற்கு உம்மு ஹராம் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! என்னையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘இறைவா! இவரையும் அவர்களில் ஒருவராக ஆக்குவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். பிறகு மீண்டும் அவ்வாறே (சாய்ந்து அமர்ந்தவாறு உறங்கிக்கொண்டிருந்துவிட்டுப் பிறகு விழித்தெழுந்து) சிரித்தார்கள். முன்பு கேட்டதைப் போன்றே, ‘‘ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று நபி (ஸல்) அவர்களிடம் உம்மு ஹராம் (ரலி) அவர்கள் கேட்டார்கள். நபி (ஸல்) அவர்களும் முன்பு (பதிலளித்ததைப்) போன்றே பதிலளித்தார்கள்.

அதைக் கேட்டு உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘என்னையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தி யுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் (கடல் பயணம் செய்து அறப்போருக்கு) முதலாவதாகச் செல்பவர்களில் ஒருவராக இருப்பீர்கள்; ஆனால், அடுத்து (திரும்பி) வருவோரில் ஒருவராக இருக்கமாட்டீர்கள்” என்று கூறினார்கள்.

பிறகு, உம்மு ஹராம் (ரலி) அவர்கள் உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர் களை மணமுடித்துக்கொண்டார்கள். பிறகு கரழா பின் அப்தி அம்ர் என்பவரின் மகளுடன் (அறப்போருக்காகக்) கடல் பயணம் செய்தார்கள். அவர்கள் (போர் முடிந்து) புறப்பட்டபோது தமது ஊர்திப் பிராணியின் மீது ஏற, அது அவர்களைக் கீழே தள்ளிவிட்டது. அவர்கள் அதிலிருந்து விழுந்து இறந்துவிட்டார்கள்.47

அத்தியாயம் : 56
2879. حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ النُّمَيْرِيُّ، حَدَّثَنَا يُونُسُ، قَالَ سَمِعْتُ الزُّهْرِيَّ، قَالَ سَمِعْتُ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ، وَسَعِيدَ بْنَ الْمُسَيَّبِ، وَعَلْقَمَةَ بْنَ وَقَّاصٍ، وَعُبَيْدَ اللَّهِ بْنَ عَبْدِ اللَّهِ، عَنْ حَدِيثِ، عَائِشَةَ، كُلٌّ حَدَّثَنِي طَائِفَةً، مِنَ الْحَدِيثِ قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا أَرَادَ أَنْ يَخْرُجَ أَقْرَعَ بَيْنَ نِسَائِهِ، فَأَيَّتُهُنَّ يَخْرُجُ سَهْمُهَا خَرَجَ بِهَا النَّبِيُّ صلى الله عليه وسلم، فَأَقْرَعَ بَيْنَنَا فِي غَزْوَةٍ غَزَاهَا، فَخَرَجَ فِيهَا سَهْمِي، فَخَرَجْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم بَعْدَ مَا أُنْزِلَ الْحِجَابُ.
பாடம் : 64 அறப்போருக்குச் செல்லும்பொழுது ஒருவர் தம் மனைவியரில் ஒருவரை மட்டும் (குலுக்கல் முறையில் தேர்வு செய்து) அழைத்துக்கொண்டு மற்றவர்களை விட்டுவிட்டுச் செல்வது
2879. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் வெளியே (பயணம்) செல்ல நாடினால் தம் துணைவிய ரிடையே சீட்டுக் குலுக்கிப்போட்டு, எவரது பெயர் வருகிறதோ அவரை (மட்டும்) அழைத்துக்கொண்டு செல்வார்கள். இவ்வாறே, அவர்கள் (புரிந்த) ஓர் அறப் போருக்குச் சென்றபோது (அவர்களின் துணைவியராகிய) எங்களிடையே சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள்.

அதில் எனது பெயர் வரவே, நான் நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டேன். இது (பெண்கள் அந்நிய ஆண்களிட மிருந்து தம்மைத் திரையிட்டு மறைத்துக் கொள்ளவேண்டும் என்கிற) யிஹிஜாப்’ சட்டம் அருளப்பட்ட பின்னால் நடந் தது.48

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. நால்வரில் ஒவ்வொருவரும் ஹதீஸில் ஒரு பகுதியைத் தமக்கு அறிவித்ததாக ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 56
2880. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا كَانَ يَوْمُ أُحُدٍ انْهَزَمَ النَّاسُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ وَلَقَدْ رَأَيْتُ عَائِشَةَ بِنْتَ أَبِي بَكْرٍ وَأُمَّ سُلَيْمٍ وَإِنَّهُمَا لَمُشَمِّرَتَانِ أَرَى خَدَمَ سُوقِهِمَا، تَنْقُزَانِ الْقِرَبَ ـ وَقَالَ غَيْرُهُ تَنْقُلاَنِ الْقِرَبَ ـ عَلَى مُتُونِهِمَا، ثُمَّ تُفْرِغَانِهِ فِي أَفْوَاهِ الْقَوْمِ، ثُمَّ تَرْجِعَانِ فَتَمْلآنِهَا، ثُمَّ تَجِيئَانِ فَتُفْرِغَانِهَا فِي أَفْوَاهِ الْقَوْمِ.
பாடம் : 65 பெண்கள், ஆண்களுடன் அறப்போரில் கலந்துகொண்டு போரிடுவது
2880. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உஹுத் போரின்போது மக்கள் நபி (ஸல்) அவர்களை விட்டுவிட்டுத் தோல்வி யுற்று (பின்வாங்கிச்) சென்றார்கள். அப்போது நான் ஆயிஷா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்களையும் உம்மு சுலைம் (ரலி) அவர்களையும் கண்டேன்.

அவர்கள் இருவரும் (தண்ணீர் நிரம்பிய) தோல் பைகளைத் தம் முதுகுகளில் சுமந்துகொண்டு வேகவேகமாக நடந்து(சென்று காயமுற்று வீழ்ந்து கிடக்கும்) மக்களின் வாய்களில் தண்ணீரை ஊற்றுவதும் பிறகு (தண்ணீர் காலியானதும்) திரும்பிச் சென்று அவற்றை நிரப்பிக்கொண்டு, மீண்டும் வந்து மக்களின் வாய்களில் தண்ணீர் ஊற்றுவதுமாக இருந்தார்கள்.

நான் அவர்களின் கால்களில் அணிந் திருந்த தண்டைகளைப் பார்க்கும் அளவுக்கு அவர்கள் வரிந்து கட்டிக் கொண்டு (மும்முரமாகப்) பணி புரிந்து கொண்டிருந்தார்கள்.

யிதோல் பைகளைத் தம் முதுகுகளில் சுமந்து வேகமாக நடந்து சென்று’ என்ப தற்குப் பதிலாக, யிதோல் பைகளைத் தம் முதுகுகளில் சுமந்து எடுத்துச் சென்று’ என்று மற்றோர் அறிவிப்பாளர் கூறியுள் ளார்.

அத்தியாயம் : 56
2881. حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ ثَعْلَبَةُ بْنُ أَبِي مَالِكٍ إِنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ قَسَمَ مُرُوطًا بَيْنَ نِسَاءٍ مِنْ نِسَاءِ الْمَدِينَةِ، فَبَقِيَ مِرْطٌ جَيِّدٌ فَقَالَ لَهُ بَعْضُ مَنْ عِنْدَهُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ أَعْطِ هَذَا ابْنَةَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم الَّتِي عِنْدَكَ. يُرِيدُونَ أُمَّ كُلْثُومٍ بِنْتَ عَلِيٍّ. فَقَالَ عُمَرُ أُمُّ سَلِيطٍ أَحَقُّ. وَأُمُّ سَلِيطٍ مِنْ نِسَاءِ الأَنْصَارِ، مِمَّنْ بَايَعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم. قَالَ عُمَرُ فَإِنَّهَا كَانَتْ تَزْفِرُ لَنَا الْقِرَبَ يَوْمَ أُحُدٍ. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ تَزْفِرُ تَخِيطُ.
பாடம் : 66 அறப்போரில் பெண்கள் (தண்ணீர் நிரம்பிய) தோல் பைகளை மக்க ளிடம் சுமந்து செல்வது
2881. ஸஅலபா பின் அபீமாலிக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் (பட்டால் அல்லது கம்பளியால் ஆன) கீழங்கிகளை மதீனா நகரப் பெண்களி டையே பங்கிட்டார்கள். அப்போது அதில் தரமானதொரு கீழங்கி எஞ்சியது. அதைக் கண்டு, அவர்களிடமிருந்த சிலர், ‘‘இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! இதை உங்களிடமிருக்கும் அல்லாஹ்வின் தூதருடைய (மகளின்) மகளுக்குக் கொடுங்கள்” என்று கூறினார்கள் லி அவர்கள் அலீ (ரலி) அவர்களின் மகளார் உம்மு குல்ஸூம் அவர்களைக் கருத்தில் கொண்டே இப்படிக் கூறினார்கள்லி அதற்கு உமர் (ரலி) அவர்கள், ‘‘உம்மு சலீத் (ரலி) அவர்கள்தான் இதற்கு மிகவும் தகுதியானவர். உம்மு சலீத் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்த அன்சாரிப் பெண்களில் ஒருவராவார்” என்று கூறிவிட்டு, ‘‘அவர் உஹுத் போரின்போது எங்களுக்காக (முஸ்லிம் வீரர்களுக்காகத் தண்ணீர்) தோல் பைகளைச் சுமந்து வருபவராக இருந்தார்” என்று கூறினார்கள்.

அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறு கிறேன்:

(யிசுமந்துவருபவர்’ என்பவரைக் குறிக்க மூலத்தில்) யிதஸ்ஃபிரு’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு யிதைப்பவராக’ என்பது பொருளாகும்.

அத்தியாயம் : 56