942. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ سَأَلْتُهُ هَلْ صَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم يَعْنِي صَلاَةَ الْخَوْفِ قَالَ أَخْبَرَنِي سَالِمٌ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ غَزَوْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قِبَلَ نَجْدٍ، فَوَازَيْنَا الْعَدُوَّ فَصَافَفْنَا لَهُمْ فَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي لَنَا فَقَامَتْ طَائِفَةٌ مَعَهُ تُصَلِّي، وَأَقْبَلَتْ طَائِفَةٌ عَلَى الْعَدُوِّ وَرَكَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِمَنْ مَعَهُ، وَسَجَدَ سَجْدَتَيْنِ، ثُمَّ انْصَرَفُوا مَكَانَ الطَّائِفَةِ الَّتِي لَمْ تُصَلِّ، فَجَاءُوا، فَرَكَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِهِمْ رَكْعَةً، وَسَجَدَ سَجْدَتَيْنِ ثُمَّ سَلَّمَ، فَقَامَ كُلُّ وَاحِدٍ مِنْهُمْ فَرَكَعَ لِنَفْسِهِ رَكْعَةً وَسَجَدَ سَجْدَتَيْنِ.
பாடம் : 1 அச்சமான நேரத்தில் தொழு வது உயர்ந்தோன் அல்லாஹ் கூறு கின்றான்: நீங்கள் பூமியில் பயணம் செய்யும் போது இறைமறுப்பாளர்கள் உங்களைத் தாக்குவார்கள் என நீங்கள் அஞ்சினால், (அப்போது) தொழுகையைச் சுருக்கித் தொழுவதால் உங்கள்மீது தவறேதுமில்லை. இறைமறுப்பாளர்கள் உங்களுக்கு வெளிப்படையான எதிரிகளாகவே இருக்கிறார்கள். (4:101) (நபியே!) நீர் (போர்க்களத்தில்) அவர்களுடனிருந்து, அவர்களுக்கு நீர் தொழுகை நடத்தும்போது, அவர்களில் ஒரு பிரிவினர் தம் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு உம்முடன் (தொழுகை யில்) நிற்கட்டும். அவர்கள் சஜ்தா செய்து (ஒரு ரக்அத்தை முடித்து)விட்டால் அவர்கள் உங்களுக்கு அப்பால் (பாதுகாப்பில்) இருக்கட்டும். பின்னர் தொழாமலிருக்கும் மற்றொரு பிரிவினர் வந்து உம்முடன் தொழட்டும். அவர்களும் தம் ஆயுதங்களையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் எடுத்துக்கொள்ளட் டும். (ஏனெனில்,) நீங்கள் ஆயுதங்களிலும் உங்கள் தளவாடங்களிலும் கவனக் குறைவாக இருக்கும்போது, உங்கள்மீது திடீர்த் தாக்குதல் நடத்த வேண்டும் என இறைமறுப்பாளர்கள் விரும்புகின்றனர். மழையால் உங்களுக்கு இடையூறு ஏற்பட்டாலோ, நீங்கள் நோயாளிகளாக இருந்தாலோ உங்கள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிடுவது உங்கள்மீது குற்றமாகாது. எனினும், உங்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை நீங்கள் (எப்போதும்) மேற்கொள்ளுங்கள். இறைமறுப்பாளர்களுக்கு இழிவு தரும் வேதனையை அல்லாஹ் தயார் செய்துவைத்திருக்கின்றான். (4:102)
942. ஷுஐப் பின் அபீஹம்ஸா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் அச்சநேரத் தொழுகை (ஸலாத்துல் ஃகவ்ஃப்) தொழுதுள்ளார்களா?” என்று கேட்டேன். அதற்கு சா-ம் (ரஹ்) அவர்கள் தம் தந்தை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்த (பின்வரும்) ஹதீஸை ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (‘தாத்துர் ரிகாஉ’ எனும்) போருக்காக நஜ்தை நோக்கிப் புறப்பட்டுச் சென்றேன். அங்கு நாங்கள் எதிரிகளை எதிர்கொண்டு அவர்களுக்காக அணி வகுத்து நின்றோம். (போர் நடக்காவிட்டா லும் பீதி நிலவிக்கொண்டிருந்த அந்தப் போர் முனையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு அஸ்ர் தொழுகை தொழுவிப்பதற்காக நின்றார்கள். (எங்களில்) ஓர் அணியினர் நபி (ஸல்) அவர்களுடன் (தொழுகையில்) நின்றனர். மற்றோர் அணியினர் எதிரிகளை நோக்கி நின்றனர்.

நபி (ஸல்) அவர்கள் தம்மோடு இருந்த வர்களுடன் ருகூஉ செய்து இரு சஜ்தாக் கள் செய்தார்கள். பிறகு (நபியவர்களுடன் தொழுத) அந்த அணியினர், தொழாமல் (எதிரிகளைக் கண்காணித்துக்கொண்டு) இருந்த மற்றோர் அணியினரின் இடத்துக் குச் சென்றுவிட்டனர். அந்த அணியினர் வந்தனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த அணியினருடன் ஒரு ருகூஉம் இரு சஜ்தாக்களும் செய்தார்கள்; பிறகு சலாம் கொடுத்தார்கள். பிறகு அவர்களில் ஒவ்வொருவரும் எழுந்து ஒரு ருகூஉம் இரண்டு சஜ்தாக்களும் செய்து (மீதியிருந்த ஒரு ரக்அத்தைத்) தமக்காக நிறைவேற்றிக்கொண்டனர்.

அத்தியாயம் : 12
943. حَدَّثَنَا سَعِيدُ بْنُ يَحْيَى بْنِ سَعِيدٍ الْقُرَشِيُّ، قَالَ حَدَّثَنِي أَبِي قَالَ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، نَحْوًا مِنْ قَوْلِ مُجَاهِدٍ إِذَا اخْتَلَطُوا قِيَامًا. وَزَادَ ابْنُ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم "" وَإِنْ كَانُوا أَكْثَرَ مِنْ ذَلِكَ فَلْيُصَلُّوا قِيَامًا وَرُكْبَانًا "".
பாடம் : 2 நின்றுகொண்டும் ஊர்தியில் அமர்ந்துகொண்டும் அச்சநேரத் தொழுகையை நிறைவேற்றல் (2:239ஆவது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள ‘ரிஜால்’ எனும் சொல் ‘ராஜில்’ என்பதன் பன்மையாகும். அந்த) ‘ராஜில்’ எனும் சொல்லுக்கு ‘நிற்பவன்’ என்பது பொருளாகும்.2
943. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“முஸ்லிம் வீரர்கள் (தனியாகப் பிரிந்து வர முடியாத அளவுக்கு எதிரிகளுடன்) கலந்துவிட்டால், நின்றவர்களாகவே (சைகை செய்து) தொழுதுகொள்வார்கள்” என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறி னார்கள்.

முஜாஹித் (ரஹ்) அவர்களின் கூற் றைப் போன்றே இப்னு உமர் (ரலி) அவர் களின் மேற்கண்ட கூற்றும் அமைந்துள் ளது. ஆனால், இப்னு உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து கூடுத லாகப் பின்வருமாறு அறிவித்துள்ளார்கள்:

எதிரிகள் இதைவிடவும் அதிகமாக இருந்தால் நின்றுகொண்டோ ஊர்தியில் அமர்ந்துகொண்டோ அவர்கள் தொழுது கொள்ளட்டும்.

அத்தியாயம் : 12
944. حَدَّثَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَرْبٍ، عَنِ الزُّبَيْدِيِّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَقَامَ النَّاسُ مَعَهُ، فَكَبَّرَ وَكَبَّرُوا مَعَهُ، وَرَكَعَ وَرَكَعَ نَاسٌ مِنْهُمْ، ثُمَّ سَجَدَ وَسَجَدُوا مَعَهُ، ثُمَّ قَامَ لِلثَّانِيَةِ فَقَامَ الَّذِينَ سَجَدُوا وَحَرَسُوا إِخْوَانَهُمْ، وَأَتَتِ الطَّائِفَةُ الأُخْرَى فَرَكَعُوا وَسَجَدُوا مَعَهُ، وَالنَّاسُ كُلُّهُمْ فِي صَلاَةٍ، وَلَكِنْ يَحْرُسُ بَعْضُهُمْ بَعْضًا.
பாடம் : 3 அச்சநேரத் தொழுகையில் ஒருவருக்கொருவர் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.3
944. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (போர்க் களத்தில் அச்சநேரத்) தொழுகைக்காக நின்றார்கள். மக்களும் (இரு வரிசைகளில்) அவர்களுடன் நின்றுகொண்டனர். நபி (ஸல்) அவர்கள் தக்பீர் கூற அனைவரும் தக்பீர் கூறினர். நபி (ஸல்) அவர்கள் ருகூஉ செய்தபோது, அவர்களில் (முதல் வரிசையில் நின்ற) சிலர் (மட்டும்) ருகூஉ செய்தனர். நபி (ஸல்) அவர்கள் சஜ்தா செய்தபோது அவர்களும் அவர்களுடன் சஜ்தா செய்தனர்.

பிறகு இரண்டாவது ரக்அத்திற்காக நபி (ஸல்) அவர்கள் எழுந்தபோது, நபி (ஸல்) அவர்களுடன் (முதலாவது ரக்அத்தில்) சஜ்தா செய்தவர்கள் எழுந்து (இரண்டா வது வரிசைக்குச் சென்று நின்று கொண்டு) தம் சகோதரர்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டனர். (இரண்டாவது வரிசையில் நின்றுகொண்டிருந்த) அந்த அணியினர் (முதல் வரிசைக்கு) வந்து நபி (ஸல்) அவர்களுடன் ருகூஉம் சஜ்தாவும் செய்தனர். மக்கள் அனைவரும் தொழுகை யில்தான் ஈடுபட்டிருந்தனர். ஆயினும், ஒருவரையொருவர் பாதுகாத்துக்கொண்டி ருந்தனர்.

அத்தியாயம் : 12
945. حَدَّثَنَا يَحْيَى، قَالَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ عَلِيِّ بْنِ مُبَارَكٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ جَاءَ عُمَرُ يَوْمَ الْخَنْدَقِ، فَجَعَلَ يَسُبُّ كُفَّارَ قُرَيْشٍ وَيَقُولُ يَا رَسُولَ اللَّهِ مَا صَلَّيْتُ الْعَصْرَ حَتَّى كَادَتِ الشَّمْسُ أَنْ تَغِيبَ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" وَأَنَا وَاللَّهِ مَا صَلَّيْتُهَا بَعْدُ "". قَالَ فَنَزَلَ إِلَى بُطْحَانَ فَتَوَضَّأَ، وَصَلَّى الْعَصْرَ بَعْدَ مَا غَابَتِ الشَّمْسُ، ثُمَّ صَلَّى الْمَغْرِبَ بَعْدَهَا.
பாடம் : 4 (எதிரிகளின்) கோட்டைகளை வெற்றி கொள்ளும் வாய்ப்பு உள்ளபோதும் எதிரிகளை (களத்தில்) சந்திக்கும்போதும் தொழுதல் அவ்ஸாயீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: வெற்றி வாய்ப்புள்ள நிலையில் முஸ்லிம் வீரர்கள் தொழ இயலாவிட்டால், ஒவ்வொருவரும் தனித் தனியாகச் சைகை மூலம் தொழ வேண்டும். சைகை மூலமும் தொழ முடியாவிட்டால் போர் முடியும்வரை, அல்லது அச்சமற்ற நிலையை அடையும்வரை அவர்கள் தொழுகையைத் தாமதப்படுத்துவார்கள்; பின்னர் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். (இரண்டு ரக்அத்கள் தொழக்கூட) அவர்களுக்கு இயலாவிட்டால் ஒரு ருகூஉம் இரண்டு சஜ்தாக்களும் செய்வார்கள்; அதற்கும் முடியாவிட்டால், தக்பீர் கூறுவது மட்டும் போதுமாகாது. அச்சமற்ற நிலை உருவாகும்வரை தொழுகையை அவர்கள் தாமதப்படுத்தலாம்.4 இவ்வாறே மக்ஹூல் (ரஹ்) அவர்களும் கூறுகிறார்கள். அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (ஈரானிலுள்ள) ‘துஸ்தர்’ எனும் கோட் டையை ஃபஜ்ர் வெளுக்கும் நேரத்தில் வெற்றி கொள்ளும் நிலை இருந்தது. அப்போது நானும் இருந்தேன். போர்த் தீ கடுமையாக மூண்டது. மக்களால் தொழ முடியவில்லை. எனவே, நாங்கள் (ஃபஜ்ர் தொழுகையை) சூரியன் மேலே உயர்ந்த பிறகே தொழுதோம். அத்தொழுகையை நாங்கள் அபூமூசா (ரலி) அவர்களுடன் தொழுதோம். (அந்தப் போரில்) எங்க ளுக்கு வெற்றி கிடைத்தது. அந்தத் தொழுகைக்குப் பகரமாக இவ்வுலகமும் அதிலுள்ளவையும் (எனக்கு வழங்கப்பட்டாலும் அவை) எனக்கு மகிழ்ச்சியளிக்காது.5
945. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அகழ்ப் போரின்போது உமர் (ரலி) அவர்கள் குறைஷி இறைமறுப்பாளர்களை ஏசிக்கொண்டே வந்து, “அல்லாஹ்வின் தூதரே! சூரியன் மறையும் நேரம் நெருங்கி யும் என்னால் அஸ்ர் தொழுகையைத் தொழ முடியாமற் போய்விட்டது” என்று கூறினார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! நானும் தான் இதுவரை அத்தொழுகையைத் தொழவில்லை” என்று சொன்னார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் ‘புத்ஹான்’ எனும் பள்ளத்தாக்கில் இறங்கி அங்கத் தூய்மை (உளூ) செய்துவிட்டு, சூரியன் மறைந்தபின் அஸ்ர் தொழுகையைத் தொழு(வித்)தார்கள். பின்னர் மஃக்ரிப் தொழுகையைத் தொழு(வித்)தார்கள்

அத்தியாயம் : 12
946. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ، قَالَ حَدَّثَنَا جُوَيْرِيَةُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لَنَا لَمَّا رَجَعَ مِنَ الأَحْزَابِ "" لاَ يُصَلِّيَنَّ أَحَدٌ الْعَصْرَ إِلاَّ فِي بَنِي قُرَيْظَةَ "". فَأَدْرَكَ بَعْضُهُمُ الْعَصْرَ فِي الطَّرِيقِ فَقَالَ بَعْضُهُمْ لاَ نُصَلِّي حَتَّى نَأْتِيَهَا، وَقَالَ بَعْضُهُمْ بَلْ نُصَلِّي لَمْ يُرَدْ مِنَّا ذَلِكَ. فَذُكِرَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمْ يُعَنِّفْ وَاحِدًا مِنْهُمْ.
பாடம் : 5 எதிரிகளைத் தேடிச் செல்பவ ரும் எதிரிகளால் தேடப்படு பவரும் வாகனத்தில் பயணித்த வாறே சைகை மூலம் தொழுவது6 வலீத் பின் முஸ்-ம் அல்குறஷீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான், அவ்ஸாயீ (ரஹ்) அவர்களிடம், ஷுரஹ்பீல் பின் அஸ்ஸிம்த் (ரஹ்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் வாகனத்தின் மீது அமர்ந்து தொழுதது பற்றிக் கேட்டேன். அதற்கு அவ்ஸாயீ (ரஹ்) அவர்கள், “(எதிரிகள்) தப்பிவிடுவதை அஞ்சினால் இவ்வாறு (வாகனத்தின் மீது பயணித்தவாறு சைகை மூலம்) தொழுவது செல்லும் என்பதே எமது கருத்தாகும்” என்று பதிலளித்தார்கள். வலீத் (ரஹ்) அவர்கள், “பனூ குறைழா குலத்தார் வசிக்குமிடத்தை நீங்கள் அடையாத வரை (உங்களில்) யாரும் அஸ்ர் தொழுகையைத் தொழ வேண்டாம்” எனும் நபிமொழியைத் தமது கருத்துக்கு ஆதாரமாகக் கொள்கிறார்கள்.
946. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அகழ்ப் போரி-ருந்து திரும்பியபோது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம், “பனூ குறைழா குலத்தார் வசிக்குமிடத்தை நீங்கள் அடையாத வரை (உங்களில்) யாரும் அஸ்ர் தொழுகையைத் தொழ வேண்டாம்” என்று கூறினார்கள்.

வழியிலேயே அஸ்ர் நேரத்தை மக்கள் சிலர் அடைந்தனர். அப்போது சிலர், “பனூ குறைழா குலத்தாரை அடையாத வரை நாம் அஸ்ர் தொழுகையைத் தொழ மாட்டோம்” என்று கூறினர். வேறுசிலர், “(தொழுகை நேரம் தவறிப்போனாலும் தொழ வேண்டாம் என்ற) அந்த அர்த்தத்தில் நபி (ஸல்) அவர்கள் நம்மிடம் (அவ்வாறு) கூறவில்லை; (‘வேகமாக அங்கு போய்ச் சேருங்கள்’ என்ற கருத்தில்தான் இந்த வார்த்தையைக் கூறினார்கள்). எனவே, நாம் தொழுவோம்” என்று கூறினர்.

நபி (ஸல்) அவர்களிடம் இரு சாரார் குறித்தும் தெரிவிக்கப்பட்டபோது அவர்களில் எவரையும் அவர்கள் குறைகூறவில்லை.7

அத்தியாயம் : 12
947. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، وَثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم صَلَّى الصُّبْحَ بِغَلَسٍ ثُمَّ رَكِبَ فَقَالَ "" اللَّهُ أَكْبَرُ خَرِبَتْ خَيْبَرُ، إِنَّا إِذَا نَزَلْنَا بِسَاحَةِ قَوْمٍ فَسَاءَ صَبَاحُ الْمُنْذَرِينَ "". فَخَرَجُوا يَسْعَوْنَ فِي السِّكَكِ وَيَقُولُونَ مُحَمَّدٌ وَالْخَمِيسُ ـ قَالَ وَالْخَمِيسُ الْجَيْشُ ـ فَظَهَرَ عَلَيْهِمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَتَلَ الْمُقَاتِلَةَ وَسَبَى الذَّرَارِيَّ، فَصَارَتْ صَفِيَّةُ لِدِحْيَةَ الْكَلْبِيِّ، وَصَارَتْ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ تَزَوَّجَهَا وَجَعَلَ صَدَاقَهَا عِتْقَهَا. فَقَالَ عَبْدُ الْعَزِيزِ لِثَابِتٍ يَا أَبَا مُحَمَّدٍ، أَنْتَ سَأَلْتَ أَنَسًا مَا أَمْهَرَهَا قَالَ أَمْهَرَهَا نَفْسَهَا. فَتَبَسَّمَ.
பாடம் : 6 சுப்ஹு தொழுகையை அதன் ஆரம்ப நேரத்தில் இருள் இருக் கும்போதே தொழுவதும் தாக்குதல் நடக்கும்போதும் போரின் போதும் அவ்வாறே தொழுவதும்
947. அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கைபருக்கு அருகில் ஓரிடத்தில்) சுப்ஹு தொழுகையை இருள் இருக்கும்போதே (அதன் ஆரம்ப நேரத்தில்) தொழு(வித்)தார் கள். பிறகு (கைபரை நோக்கிப்) பயணமா னார்கள். (கைபருக்குள் அவர்கள் பிரவேசித்தபோது) “அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்); கைபர் பாழா(வது உறுதியா)கிவிட்டது. நாம் ஒரு சமுதாயத்தின் களத்தில் (அவர்களுடன் போரிட) இறங்குவோமாயின், எச்சரிக்கப் பட்ட அவர்களுக்கு அது மிகக் கெட்ட காலையாக அமையும்” என்று (மூன்று முறை) கூறினார்கள்.

(முஸ்-ம்களைக் கண்ட) கைபர்வாசி கள் வீதிகளில் ஓடிக்கொண்டே, “முஹம்ம தும் அவருடைய ஐந்து அணிகள் கொண்ட படையும் (வருகின்றனர்)” என்று கூறினர்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் தாக்குதலைத் தொடங்கி தம்முடன் போரிட்டவர்களை வீழ்த்தினார்கள். (போரில் கலந்துகொள்ளாத) அவர்களுடைய குடும்பத்தாரைக் கைது செய்(து தம் வீரர்களிடையே ஒப்படைத்)தார்கள்.

அப்போது (பனூ குறைழா, பனூ நளீர் குலங்களின் தலைவரின் புதல்வியான) ஸஃபிய்யா அவர்கள் திஹ்யா அல்கல்பீ (ரலி) அவர்களிடம் (அன்னாரின் போர்ச் செல்வத்தின் பங்காகப்) போய்ச்சேர்ந்தார்கள். (பிறகு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க) சொந்தமானார்கள். பின்னர் அவரது விடுதலையையே மணக் கொடையாக்கி அவரை நபி (ஸல்) அவர்கள் மணமுடித்துக்கொண்டார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இந்த ஹதீஸை ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள் அறிவித்தபோது அவர்களிடம், “அபூமுஹம்மதே! நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யாவுக்கு என்ன மணக்கொடை (மஹ்ர்) கொடுத்தார்கள் என்று அனஸ் (ரலி) அவர்களிடம் நீங்கள் கேட்டீர்களா?” என நான் வினவினேன். அதற்கு ஸாபித் (ரஹ்) அவர்கள், “அவரையே (அதாவது அவரை விடுதலை செய்வதையே) அவருக்கு மணக்கொடையாக ஆக்கினார்கள்” என்று கூறிவிட்டுப் புன்னகைத்தார்கள்.

அத்தியாயம் : 12

948. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، قَالَ أَخَذَ عُمَرُ جُبَّةً مِنْ إِسْتَبْرَقٍ تُبَاعُ فِي السُّوقِ، فَأَخَذَهَا فَأَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ ابْتَعْ هَذِهِ تَجَمَّلْ بِهَا لِلْعِيدِ وَالْوُفُودِ. فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِنَّمَا هَذِهِ لِبَاسُ مَنْ لاَ خَلاَقَ لَهُ "". فَلَبِثَ عُمَرُ مَا شَاءَ اللَّهُ أَنْ يَلْبَثَ، ثُمَّ أَرْسَلَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِجُبَّةِ دِيبَاجٍ، فَأَقْبَلَ بِهَا عُمَرُ، فَأَتَى بِهَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّكَ قُلْتَ "" إِنَّمَا هَذِهِ لِبَاسُ مَنْ لاَ خَلاَقَ لَهُ "". وَأَرْسَلْتَ إِلَىَّ بِهَذِهِ الْجُبَّةِ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" تَبِيعُهَا أَوْ تُصِيبُ بِهَا حَاجَتَكَ "".
பாடம் : 1 இரு பெருநாட்களும் அவற் றில் அலங்காரம் செய்துகொள் வதும்
948. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் கடைத்தெருவில் விற்பனை செய்யப் பட்ட தடித்த பட்டு நீளங்கி ஒன்றை விலைபேச முற்பட்டார்கள். அதை எடுத்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! இதைத் தாங்கள் வாங்கி பெருநாளிலும் தூதுக் குழுக்கள் தங்களிடம் வரும்போதும் (அணிந்து) அலங்கரித்துக்கொள்ளலாமே!” என்று கூறினார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இது (மறுமையில்) எந்தப் பேறும் இல்லாத (ஆட)வர்களின் (இவ் வுலக) ஆடையாகும்” என்று கூறினார்கள்.

(பிறகு என் தந்தை) உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ் நாடிய நாட்கள்வரை (இது பற்றி ஏதும் கேட்காமல் பொறுமை யாக) இருந்தார்கள். பிறகு (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களுக்கு அலங்காரப் பட்டாலான நீளங்கி ஒன்றைக் கொடுத் தனுப்பினார்கள். அதைப் பெற்றுக்கொண்ட உமர் (ரலி) அவர்கள் அதை எடுத்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! ‘இது (மறுமையில்) எந்தப் பேறும் இல்லாத (ஆட)வர்களின் (இவ்வுலக) ஆடை’ என்று நீங்கள் குறிப்பிட்டீர்கள். (பிறகு) நீங்களே இந்த அங்கியை எனக்குக் கொடுத்தனுப்பியுள்ளீர்களே?” என்று கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இதை நீங்கள் விற்றுவிடலாம்; அல்லது இதன் மூலம் உங்களது (வேறு ஏதேனும்) தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளலாம் (என்பதற்காகவே வழங்கினேன்)” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 13
949. حَدَّثَنَا أَحْمَدُ، قَالَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنَا عَمْرٌو، أَنَّ مُحَمَّدَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ الأَسَدِيَّ، حَدَّثَهُ عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ دَخَلَ عَلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَعِنْدِي جَارِيَتَانِ تُغَنِّيَانِ بِغِنَاءِ بُعَاثَ، فَاضْطَجَعَ عَلَى الْفِرَاشِ وَحَوَّلَ وَجْهَهُ، وَدَخَلَ أَبُو بَكْرٍ فَانْتَهَرَنِي وَقَالَ مِزْمَارَةُ الشَّيْطَانِ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَقْبَلَ عَلَيْهِ رَسُولُ اللَّهِ ـ عَلَيْهِ السَّلاَمُ ـ فَقَالَ " دَعْهُمَا " فَلَمَّا غَفَلَ غَمَزْتُهُمَا فَخَرَجَتَا.
பாடம் : 2 பெருநாள் தினத்தில் ஈட்டிகள், தோல் கேடயங்கள் (உள்ளிட்ட போர்க் கருவிகளால் வீரவிளையாட்டுகளில் ஈடுபடுவது)
949. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் அருகில் இரு (அன்சாரி) சிறுமியர் (சலங்கையில்லா கஞ்சிராக்களை அடித்து) ‘புஆஸ்’ போரைப் பற்றிய பாடலைப் பாடிக்கொண்டிருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள்.2 படுக்கையில் சாய்ந்து தமது முகத்தை (வேறு திசையில்) திருப்பிக்கொண்டார்கள் (பாட வேண்டாம் என்று அவர்களைத் தடுக்கவில்லை).

அப்போது (என் தந்தை) அபூபக்ர்

(ரலி) அவர்கள் வந்து என்னை அதட்டி, “நபி (ஸல்) அவர்களுக்கு முன்பாக ஷைத்தானின் இசைக் கருவியா?” என்று கடிந்துகொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கி, “அவர்களை(ப் பாட) விடுங்கள்” என்று கூறினார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களின் கவனம் வேறுபுறம் திரும்பியபோது அவ்விரு சிறுமியரையும் நான் விரல்களால் தொட்டுணர்த்தி (வெளியேறிவிடுமாறு கூறி)னேன். உடனே அவர்கள் இருவரும் வெளியேறிவிட்டனர்.


அத்தியாயம் : 13
950. وَكَانَ يَوْمَ عِيدٍ يَلْعَبُ السُّودَانُ بِالدَّرَقِ وَالْحِرَابِ، فَإِمَّا سَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَإِمَّا قَالَ " تَشْتَهِينَ تَنْظُرِينَ ". فَقُلْتُ نَعَمْ. فَأَقَامَنِي وَرَاءَهُ خَدِّي عَلَى خَدِّهِ، وَهُوَ يَقُولُ " دُونَكُمْ يَا بَنِي أَرْفِدَةَ ". حَتَّى إِذَا مَلِلْتُ قَالَ " حَسْبُكِ ". قُلْتُ نَعَمْ. قَالَ " فَاذْهَبِي ".
பாடம் : 2 பெருநாள் தினத்தில் ஈட்டிகள், தோல் கேடயங்கள் (உள்ளிட்ட போர்க் கருவிகளால் வீரவிளையாட்டுகளில் ஈடுபடுவது)
950. மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அன்று பெருநாள் (ஈத்) தினமாக இருந்தது. சூடானியர்கள் தோல் கேடயத்தாலும் ஈட்டிகளாலும் (பள்ளிவாசல் வளாகத்தில் வீர விளையாட்டுகள்) விளையாடிக்கொண்டி ருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் நான் (அந்த விளையாட்டைப் பார்க்க அனுமதி) கேட்டிருக்க வேண்டும்; அல்லது அவர்களே என்னிடம், “நீ (இவர்களு டைய வீர விளையாட்டுகளைப்) பார்க்க விரும்புகிறாயா?” என்று கேட்டிருக்க வேண்டும். (சரியாக எனக்கு நினைவில்லை). அதற்கு நான், ‘ஆம்’ என்று பதிலளித் தேன்.

உடனே நபி (ஸல்) அவர்கள் என் கன்னம் அவர்களது கன்னத்தின் மீது ஒட்டியபடி இருக்க, என்னைத் தமக்குப் பின்னால் நிற்கவைத்துக்கொண்டார்கள். “அர்ஃபிதாவின் மக்களே! (எத்தியோப்பி யர்களே!) விளையாட்டைத் தொடருங்கள்” என்று கூறினார்கள். இறுதியில் நான் (விளையாட்டை நன்கு பார்த்து) ச-ப் புற்றுவிட்டபோது ‘போதுமா?’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க நான், “ஆம் (போதும்)” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “அப்படியானால் நீ போகலாம்” என்று சொன்னார்கள்

அத்தியாயம் : 13
951. حَدَّثَنَا حَجَّاجٌ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي زُبَيْدٌ، قَالَ سَمِعْتُ الشَّعْبِيَّ، عَنِ الْبَرَاءِ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَخْطُبُ فَقَالَ "" إِنَّ أَوَّلَ مَا نَبْدَأُ مِنْ يَوْمِنَا هَذَا أَنْ نُصَلِّيَ، ثُمَّ نَرْجِعَ فَنَنْحَرَ، فَمَنْ فَعَلَ فَقَدْ أَصَابَ سُنَّتَنَا "".
பாடம் : 3 இரு பெருநாட்களிலும் இஸ் லாமியர் கடைப்பிடிக்க வேண் டிய வழிமுறை (சுன்னத்)
951. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (ஈதுல் அள்ஹா பெருநாளில்) உரையாற்றியதை நான் கேட்டேன். அவர்கள் (தமது உரையில்) “நாம் இன்றைய தினம் செய்யும் முதல் வேலை (பெருநாள் தொழுகை) தொழுவ தாகும். பிறகு திரும்பி வந்து ‘குர்பானி’ பிராணிகளை அறுப்பதாகும். யார் (இதைச்) செய்கிறாரோ அவர் நமது வழிமுறையைப் பின்பற்றியவர் ஆவார்” என்று கூறி னார்கள்.


அத்தியாயம் : 13
952. حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ دَخَلَ أَبُو بَكْرٍ وَعِنْدِي جَارِيَتَانِ مِنْ جَوَارِي الأَنْصَارِ تُغَنِّيَانِ بِمَا تَقَاوَلَتِ الأَنْصَارُ يَوْمَ بُعَاثَ ـ قَالَتْ وَلَيْسَتَا بِمُغَنِّيَتَيْنِ ـ فَقَالَ أَبُو بَكْرٍ أَمَزَامِيرُ الشَّيْطَانِ فِي بَيْتِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَذَلِكَ فِي يَوْمِ عِيدٍ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" يَا أَبَا بَكْرٍ إِنَّ لِكُلِّ قَوْمٍ عِيدًا، وَهَذَا عِيدُنَا "".
பாடம் : 3 இரு பெருநாட்களிலும் இஸ் லாமியர் கடைப்பிடிக்க வேண் டிய வழிமுறை (சுன்னத்)
952. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

இரு அன்சாரிச் சிறுமியர் ‘புஆஸ்’ போர் நாளில் அன்சாரிகள் (ஒருவரை யொருவர் தாக்கியும் தூக்கியும்) பாடிய பாடல்களை (சலங்கையில்லா கஞ்சிராக்களை அடித்தபடி) பாடிக்கொண்டிருந்தனர். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் (என்னிடம்) வந்தார்கள். -(உண்மையில்) அவ்விரு சிறுமியரும் பாடகியர் அல்லர்.- (இதைக் கண்ட) உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள், “இறைத்தூதர் இல்லத்திலேயே ஷைத்தானின் இசைக் கருவிகளா?” என்று கேட்டார்கள். இது நடந்தது ஒரு பெருநாள் தினத்திலாகும்.

அப்போது (படுத்துக்கொண்டிருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அவ்விருவரையும் விட்டுவிடுங்கள்) அபூபக்ரே! ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் பண்டிகை நாள் ஒன்று உண்டு. இது நமது பண்டிகை நாள்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 13
953. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنَا هُشَيْمٌ، قَالَ أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرِ بْنِ أَنَسٍ، عَنْ أَنَسٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لاَ يَغْدُو يَوْمَ الْفِطْرِ حَتَّى يَأْكُلَ تَمَرَاتٍ. وَقَالَ مُرَجَّى بْنُ رَجَاءٍ حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ قَالَ حَدَّثَنِي أَنَسٌ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَيَأْكُلُهُنَّ وِتْرًا.
பாடம் : 4 நோன்புப் பெருநாள் அன்று தொழச் செல்வதற்கு முன்பே உணவு உண்பது
953. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்) தினத் தில் சில பேரீச்சம் பழங்களை உண்ணாமல் (தொழுகைக்குப்) புறப்படமாட்டார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஓர் அறிவிப்பில், “அவற்றை ஒற்றைப்படை எண்ணிக்கையில் உண்பார்கள்” என்று வந்துள்ளது.

அத்தியாயம் : 13
954. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَنَسٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَنْ ذَبَحَ قَبْلَ الصَّلاَةِ فَلْيُعِدْ "". فَقَامَ رَجُلٌ فَقَالَ هَذَا يَوْمٌ يُشْتَهَى فِيهِ اللَّحْمُ. وَذَكَرَ مِنْ جِيرَانِهِ فَكَأَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَدَّقَهُ، قَالَ وَعِنْدِي جَذَعَةٌ أَحَبُّ إِلَىَّ مِنْ شَاتَىْ لَحْمٍ، فَرَخَّصَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَلاَ أَدْرِي أَبَلَغَتِ الرُّخْصَةُ مَنْ سِوَاهُ أَمْ لاَ.
பாடம் : 5 ஹஜ்ஜுப் பெருநாள் அன்று உணவு உண்பது
954. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஈதுல் அள்ஹா பெருநாள் அன்று) நபி (ஸல்) அவர்கள், “யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்பே குர்பானி கொடுத்துவிட்டாரோ அவர் மறுபடியும் குர்பானி கொடுக்கட்டும்” என்று கூறினார்கள்.

அப்போது ஒரு மனிதர் (அபூபுர்தா) எழுந்து, “(அல்லாஹ்வின் தூதரே!) இது, இறைச்சி விரும்பி உண்ணப்படும் நாள்” என்று கூறி, தம் (வீட்டார் மற்றும்) அண்டைவீட்டார் சிலர் (உடைய தேவை) பற்றி(யும் அதனாலேயே தாம் தொழு கைக்கு முன்பு அறுத்தது பற்றியும்) குறிப்பிட்டார். அவர் சொன்ன காரணத்தை நபி (ஸல்) அவர்கள் ஏற்றுக்கொண்டதைப் போன்று தெரிந்தது.

மேலும் அவர், “என்னிடம் இறைச்சி ஆடுகள் இரண்டைவிட நான் பெரிதும் விரும்பும் ஒரு வயது பூர்த்தியான (வெள்ளாடு) ஒன்று உள்ளது. (அதை இப்போது குர்பானி கொடுக்கலாமா?)” என்று கேட்க, நபி (ஸல்) அவர்களும் அவருக்கு அனுமதியளித்தார்கள்.3

இந்த அனுமதி அவரல்லாதவருக்கும் பொருந்துமா? அல்லது பொருந்தாதா? என்பது எனக்குத் தெரியாது.


அத்தியாயம் : 13
955. حَدَّثَنَا عُثْمَانُ، قَالَ حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ ـ رضى الله عنهما ـ قَالَ خَطَبَنَا النَّبِيُّ صلى الله عليه وسلم يَوْمَ الأَضْحَى بَعْدَ الصَّلاَةِ فَقَالَ "" مَنْ صَلَّى صَلاَتَنَا وَنَسَكَ نُسُكَنَا فَقَدْ أَصَابَ النُّسُكَ، وَمَنْ نَسَكَ قَبْلَ الصَّلاَةِ فَإِنَّهُ قَبْلَ الصَّلاَةِ، وَلاَ نُسُكَ لَهُ "". فَقَالَ أَبُو بُرْدَةَ بْنُ نِيَارٍ خَالُ الْبَرَاءِ يَا رَسُولَ اللَّهِ، فَإِنِّي نَسَكْتُ شَاتِي قَبْلَ الصَّلاَةِ، وَعَرَفْتُ أَنَّ الْيَوْمَ يَوْمُ أَكْلٍ وَشُرْبٍ، وَأَحْبَبْتُ أَنْ تَكُونَ شَاتِي أَوَّلَ مَا يُذْبَحُ فِي بَيْتِي، فَذَبَحْتُ شَاتِي وَتَغَدَّيْتُ قَبْلَ أَنْ آتِيَ الصَّلاَةَ. قَالَ "" شَاتُكَ شَاةُ لَحْمٍ "". قَالَ يَا رَسُولَ اللَّهِ، فَإِنَّ عِنْدَنَا عَنَاقًا لَنَا جَذَعَةً هِيَ أَحَبُّ إِلَىَّ مِنْ شَاتَيْنِ، أَفَتَجْزِي عَنِّي قَالَ "" نَعَمْ، وَلَنْ تَجْزِيَ عَنْ أَحَدٍ بَعْدَكَ "".
பாடம் : 5 ஹஜ்ஜுப் பெருநாள் அன்று உணவு உண்பது
955. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஈதுல் அள்ஹா பெருநாளன்று எங்களுக்குத் தொழுகைக்குப்பின் உரையாற்றினார்கள். அவர்கள் (தமது உரையில்) “யார் நமது தொழுகையைத் தொழுது (அதன் பிறகு) நமது குர்பானியைப் போன்று குர்பானி கொடுக்கிறாரோ அவரே (குர்பானி) வழிபாட்டை (முறைப்படி) முடித்தவர் ஆவார். யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்பே குர்பானி கொடுத்துவிட்டாரோ அது தொழுகைக்கு முன்புள்ளதாகும். அவரது குர்பானிவழிபாடு நிறைவேறாது” என்று கூறினார்கள்.

அப்போது என் தாய்மாமன் அபூபுர்தா பின் நியார் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நான் இன்றைய தினம் உண்பதற்கும் குடிப்பதற்கும் உரிய நாள் என்று அறிந்தேன். எனது வீட்டில் அறுக்கப்படும் ஆடுகளில் எனது ஆடே முதல் ஆடாக இருக்க வேண்டும் எனவும் நான் விரும்பினேன் ஆகவே, (பெருநாள்) தொழுகைக்கு வருவதற்கு முன்பே நான் அறுத்துவிட்டேன். காலைச் சிற்றுண்டியாக வும் (அதை) உட்கொண்டும்விட்டேன்” என்றார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(நீர் அறுத்த) உமது ஆடு இறைச்சி(க்காக அறுக்கப்பட்ட) ஆடு என்றே கருதப்படும்” என்று கூறினார்கள். அதற்கு அபூபுர்தா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! எங்களிடம் ஒரு வயதுடைய பெட்டை வெள்ளாடு ஒன்று உள்ளது. அது (கொழுத்திருப்பதால்) இரண்டு ஆடுகளை விட எனக்கு மிகவும் விருப்பமானதாகும். அ(தை நான் அறுப்ப)து எனக்குப் போதுமாகுமா?” என்று கேட்டார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆம் (உமக்கு மட்டும் அது போதுமாகும்.) உமக்குப் பிறகு வேறெவருக்கும் ஒருபோதும் அது போதுமாகாது” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 13
956. حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ أَخْبَرَنِي زَيْدٌ، عَنْ عِيَاضِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي سَرْحٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَخْرُجُ يَوْمَ الْفِطْرِ وَالأَضْحَى إِلَى الْمُصَلَّى، فَأَوَّلُ شَىْءٍ يَبْدَأُ بِهِ الصَّلاَةُ ثُمَّ يَنْصَرِفُ، فَيَقُومُ مُقَابِلَ النَّاسِ، وَالنَّاسُ جُلُوسٌ عَلَى صُفُوفِهِمْ، فَيَعِظُهُمْ وَيُوصِيهِمْ وَيَأْمُرُهُمْ، فَإِنْ كَانَ يُرِيدُ أَنْ يَقْطَعَ بَعْثًا قَطَعَهُ، أَوْ يَأْمُرَ بِشَىْءٍ أَمَرَ بِهِ، ثُمَّ يَنْصَرِفُ. قَالَ أَبُو سَعِيدٍ فَلَمْ يَزَلِ النَّاسُ عَلَى ذَلِكَ حَتَّى خَرَجْتُ مَعَ مَرْوَانَ وَهْوَ أَمِيرُ الْمَدِينَةِ فِي أَضْحًى أَوْ فِطْرٍ، فَلَمَّا أَتَيْنَا الْمُصَلَّى إِذَا مِنْبَرٌ بَنَاهُ كَثِيرُ بْنُ الصَّلْتِ، فَإِذَا مَرْوَانُ يُرِيدُ أَنْ يَرْتَقِيَهُ قَبْلَ أَنْ يُصَلِّيَ، فَجَبَذْتُ بِثَوْبِهِ فَجَبَذَنِي فَارْتَفَعَ، فَخَطَبَ قَبْلَ الصَّلاَةِ، فَقُلْتُ لَهُ غَيَّرْتُمْ وَاللَّهِ. فَقَالَ أَبَا سَعِيدٍ، قَدْ ذَهَبَ مَا تَعْلَمُ. فَقُلْتُ مَا أَعْلَمُ وَاللَّهِ خَيْرٌ مِمَّا لاَ أَعْلَمُ. فَقَالَ إِنَّ النَّاسَ لَمْ يَكُونُوا يَجْلِسُونَ لَنَا بَعْدَ الصَّلاَةِ فَجَعَلْتُهَا قَبْلَ الصَّلاَةِ.
பாடம் : 6 பெருநாள் தொழுகைக்காகச் சொற்பொழிவு மேடையேதும் இல்லாத (திறந்த வெளித்) திட லுக்குச் செல்வது
956. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளிவாச-ல் தொழாமல்) திடலுக்குப் புறப்பட்டுச் செல்பவர்களாக இருந்தார்கள். அங்கு அவர்கள் செய்யும் முதல்வேலை தொழுவதேயாகும். (தொழுகை முடிந்த) பின்னர் மக்களை முன்னோக்கி எழுந்து நிற்பார்கள். மக்கள் அனைவரும் அப்படியே தத்தம் வரிசைகளில் அமர்ந்திருப்பார்கள்.

அப்போது மக்களுக்கு அவர்கள் உபதேசம் புரிவார்கள்; (வ-யுறுத்த வேண்டியதை) அவர்களுக்கு வ-யுறுத்துவார்கள்; (கட்டளையிட வேண்டி யதை) அவர்களுக்குக் கட்டளையிடு வார்கள். (ஏதேனும் ஒரு பகுதிக்கு) படைப் பிரிவுகளை அனுப்ப நினைத்திருந்தால் அனுப்பிவைப்பார்கள். அல்லது எதைப் பற்றியேனும் உத்தரவிட வேண்டியிருந் தால் உத்தரவிடுவார்கள். (இவற்றை முடித்த) பின்னரே (மதீனாவுக்கு) திரும்பிச் செல்வார்கள்.

இவ்வாறே மக்கள் செயல்பட்டு வந்தனர்; மதீனாவின் ஆளுநராக மர்வான் பின் ஹகம் ஆகும்வரை. அவருடன் ஒரு ஹஜ்ஜுப் பெருநாளிலோ அல்லது நோன்புப் பெருநாளிலோ நான் (தொழச்) சென்றேன். நாங்கள் தொழும் திடலுக்கு வந்தபோது கஸீர் பின் ஸல்த் அவர்கள் உருவாக்கிய சொற்பொழிவு மேடை (மிம்பர்) ஒன்று அங்கே தீடீரெனக் காணப்பட்டது. அப்போது மர்வான் (பெருநாள் தொழுகையைத்) தொழுவிப்பதற்கு முன்பே சொற்பொழிவு மேடையில் ஏறப்போனார்.

உடனே நான் (முத-ல் தொழுவித்துவிட்டுப் பிறகு உரையாற்றும்படி கோர) அவரது ஆடையைப் பிடித்து இழுத்தேன். அவர் என்னை இழுத்தார். முடிவில் அவர் (சொற்பொழிவு மேடையில்) ஏறித் தொழுகைக்கு முன்பே உரை (குத்பா) நிகழ்த்தலானார். அப்போது நான் அவரிடம், “அல்லாஹ்வின் மீதாணையாக! (நபிவழியை) மாற்றிவிட்டீர்கள்” என்று சொன்னேன்.

அதற்கு மர்வான், “அபூசயீதே! நீங்கள் அறிந்திருக்கும் (அந்த) நடைமுறை மலையேறிவிட்டது” என்று சொன்னார். அதற்கு நான், “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அறிந்திருக்கும் (நபியவர்களின்) நடைமுறைதான் நான் அறியாத (இந்தப் புதிய) நடைமுறையைவிடச் சிறந்ததாகும்” என்று சொன்னேன். அதற்கு மர்வான், “மக்கள் தொழுகை முடிந்துவிட்டால் எம(து உரை)க்காக அமர்ந்துகொண்டிருக்கமாட்டார்கள். எனவே, நான் உரையைத் தொழுகைக்கு முன்பே வைத்துக்கொண்டேன்” என்று சொன்னார்.

அத்தியாயம் : 13
957. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، قَالَ حَدَّثَنَا أَنَسٌ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ،. أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي فِي الأَضْحَى وَالْفِطْرِ، ثُمَّ يَخْطُبُ بَعْدَ الصَّلاَةِ.
பாடம் : 7 பெருநாள் தொழுகைக்காக நடந்தும் ஊர்தியிலும் செல்வ தும், பாங்கும் இகாமத்தும் இல்லாமல் குத்பாவுக்கு முன்பே தொழுவதும்
957. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாளிலும் நோன்புப் பெருநாளிலும் (முத-ல்) தொழுவார்கள். தொழுகையை முடித்தபிறகே உரை (குத்பா) நிகழ்த்துவார்கள்.


அத்தியாயம் : 13
958. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، قَالَ أَخْبَرَنَا هِشَامٌ، أَنَّ ابْنَ جُرَيْجٍ، أَخْبَرَهُمْ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ سَمِعْتُهُ يَقُولُ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم خَرَجَ يَوْمَ الْفِطْرِ، فَبَدَأَ بِالصَّلاَةِ قَبْلَ الْخُطْبَةِ.
பாடம் : 7 பெருநாள் தொழுகைக்காக நடந்தும் ஊர்தியிலும் செல்வ தும், பாங்கும் இகாமத்தும் இல்லாமல் குத்பாவுக்கு முன்பே தொழுவதும்
958. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பொருநாள் அன்று புறப்பட்டுச் சென்று, உரை நிகழ்த்துவதற்குமுன் தொழுதார்கள்.


அத்தியாயம் : 13
959. قَالَ وَأَخْبَرَنِي عَطَاءٌ، أَنَّ ابْنَ عَبَّاسٍ، أَرْسَلَ إِلَى ابْنِ الزُّبَيْرِ فِي أَوَّلِ مَا بُويِعَ لَهُ إِنَّهُ لَمْ يَكُنْ يُؤَذَّنُ بِالصَّلاَةِ يَوْمَ الْفِطْرِ، إِنَّمَا الْخُطْبَةُ بَعْدَ الصَّلاَةِ.
பாடம் : 7 பெருநாள் தொழுகைக்காக நடந்தும் ஊர்தியிலும் செல்வ தும், பாங்கும் இகாமத்தும் இல்லாமல் குத்பாவுக்கு முன்பே தொழுவதும்
959. அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

‘(யஸீதுக்குப்பின் ஆட்சிப் பொறுப் பேற்ற) அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களுக்கு வாக்களிப்புப் பிரமா ணம் (பைஅத்) நடைபெற்ற முதல் நாளில் அவர்களிடம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “(நபி (ஸல்) அவர்களது காலத்தில்) நோன்புப் பெருநாளில் (பெருநாள்) தொழுகைக்காக பாங்கு சொல்லும் வழக்கம் இருக்கவில்லை; தொழுகைக்குப் பிறகுதான் உரை(யும் அமைந்திருந்தது)” என்ற செய்தியைச் சொல்லியனுப்பினார்கள்.4


அத்தியாயம் : 13
960. وَأَخْبَرَنِي عَطَاءٌ، عَنِ ابْنِ عَبَّاسٍ، وَعَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالاَ لَمْ يَكُنْ يُؤَذَّنُ يَوْمَ الْفِطْرِ وَلاَ يَوْمَ الأَضْحَى.
பாடம் : 7 பெருநாள் தொழுகைக்காக நடந்தும் ஊர்தியிலும் செல்வ தும், பாங்கும் இகாமத்தும் இல்லாமல் குத்பாவுக்கு முன்பே தொழுவதும்
960. இப்னு அப்பாஸ் (ரலி), ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) ஆகியோர் கூறியதாவது:

(நபி (ஸல்) அவர்களது காலத்தில்) நோன்புப் பெருநாளிலோ ஹஜ்ஜுப் பொருநாளிலோ பாங்கு சொல்லும் வழக்கம் இருக்கவில்லை.


அத்தியாயம் : 13
961. وَعَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ سَمِعْتُهُ يَقُولُ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَامَ فَبَدَأَ بِالصَّلاَةِ، ثُمَّ خَطَبَ النَّاسَ بَعْدُ، فَلَّمَا فَرَغَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم نَزَلَ فَأَتَى النِّسَاءَ، فَذَكَّرَهُنَّ وَهْوَ يَتَوَكَّأُ عَلَى يَدِ بِلاَلٍ، وَبِلاَلٌ بَاسِطٌ ثَوْبَهُ، يُلْقِي فِيهِ النِّسَاءُ صَدَقَةً. قُلْتُ لِعَطَاءٍ أَتَرَى حَقًّا عَلَى الإِمَامِ الآنَ أَنْ يَأْتِيَ النِّسَاءَ فَيُذَكِّرَهُنَّ حِينَ يَفْرُغُ قَالَ إِنَّ ذَلِكَ لَحَقٌّ عَلَيْهِمْ، وَمَا لَهُمْ أَنْ لاَ يَفْعَلُوا
பாடம் : 7 பெருநாள் தொழுகைக்காக நடந்தும் ஊர்தியிலும் செல்வ தும், பாங்கும் இகாமத்தும் இல்லாமல் குத்பாவுக்கு முன்பே தொழுவதும்
961. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (நோன்புப் பெருநாளில்) எழுந்து முத-ல் தொழுதார் கள். அதற்குப் பிறகே மக்களுக்கு உரையாற்றினார்கள். நபி (ஸல்) அவர்கள் உரையாற்றி முடித்ததும் அங்கிருந்து புறப்பட்டுப் பெண்கள் பகுதிக்குச் சென்று பிலால் (ரலி) அவர்களது கைமீது சாய்ந்துகொண்டு, பெண்களுக்கு அறிவுரை பகர்ந்தார்கள். அப்போது பிலால் (ரலி) அவர்கள் தமது ஆடையொன்றை விரித் துப் பிடிக்க, அதில் பெண்கள் தர்மத்தை இட்டுக்கொண்டிருந்தனர்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான) இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் அதாஉ (ரஹ்) அவர்களிடம், “உரை நிகழ்த்தியபின் பெண்கள் பகுதிக்குச் சென்று அவர்களுக்கு அறிவுரை கூறுவது இன்றைக்கும் இமாம்கள்மீது கடமை என நீங்கள் கருதுகிறீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நிச்சயமாக அது அவர்களுக்குக் கடமைதான். அவர்கள் எப்படி இதைச் செய்யமா-ருக்க முடியும்?” என்று கேட்டார்கள்.

அத்தியாயம் : 13