8. حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، قَالَ أَخْبَرَنَا حَنْظَلَةُ بْنُ أَبِي سُفْيَانَ، عَنْ عِكْرِمَةَ بْنِ خَالِدٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" بُنِيَ الإِسْلاَمُ عَلَى خَمْسٍ شَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَإِقَامِ الصَّلاَةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَالْحَجِّ، وَصَوْمِ رَمَضَانَ "".
பாடம் : 1 “இஸ்லாம் (எனும் மாளிகை) ஐந்து தூண்கள்மீது எழுப்பப் பட்டுள்ளது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது2 இறைநம்பிக்கை (ஈமான்) என்பது, சொல்லும் செயலும் இணைந்ததே ஆகும். அது கூடலாம்; குறையலாம்.3 (இதற்கான ஆதாரங்கள் வருமாறு:) உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (1) அவர்கள், தமது நம்பிக்கையுடன் (மேலும்) நம்பிக்கையை அதிகமாக்கிக் கொள்வதற்காக அவன்தான் இறை நம்பிக்கையாளர்களின் இதயங்களில் அமைதியை அருளினான். (48:4) (2) நாம் அவர்களுக்கு (அவர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும்) நல்வழியை அதிகமாக்கினோம். (18:13) (3) (ஈமான் மூலம்) நல்வழியைக் கடைப்பிடிப்போருக்கு நல்வழியை (மேலும்) அல்லாஹ் அதிகமாக்குகின் றனான். (19:76) (4) யார் (ஈமான் மூலம்) நேர்வழியைக் கடைப்பிடிக்கின்றாரோ அவருக்கு (அல்லாஹ் மேலும்) நல்வழியை அதிக மாக்குகின்றான்; அவருக்கு இறையச்சத்தையும் அவன் வழங்குகின்றான். (47:17) (5) இறைநம்பிக்கை (ஈமான்) கொண்டவர்களுக்கு அவர்களின் நம்பிக்கை இன்னும் அதிகமாவதற்காக (நரகத்தின் காவலர்களான வானவர்களின் எண்ணிக் கையை நாம் ஒரு சோதனையாக ஆக்கினோம்). (74:31) (6) (இறைவனிடமிருந்து) ஓர் அத்தியாயம் அருளப்பெற்றால், “இது உங்களில் யாருக்கு இறைநம்பிக்கையை அதிகமாக்கியது?” என்று (கேலியாகக்) கேட்போரும் (நயவஞ்சகர்களான) அவர்களில் உள்ளனர். யார் இறைநம்பிக்கை கொண்டார்களோ அவர்களுக்கு அது இறைநம்பிக்கையை அதிகமாக்கவே செய்யும். (9:124) புகழோங்கிய அல்லாஹ் கூறுகின்றான்: (7) அவர்களிடம் மக்கள் சிலர், “உங்களுக்கெதிராக மனிதர்கள் ஒன்றுதிரண்டு விட்டனர்; எனவே, அவர்களை அஞ்சுங்கள்” என்று கூறினர். ஆனால், இது அவர்களுக்கு இறைநம்பிக்கையை மேலும் அதிகமாக்கியது. (3:173) (8) இந்நிகழ்ச்சி இறைநம்பிக்கையையும் கீழ்ப்படிதலையும்தான் அவர்களுக்கு அதிமாக்கியது (33:22). அல்லாஹ்வுக்காக (ஒருவரை) நேசிப்பதும் அல்லாஹ்வுக்காக (ஒருவரை) கோபிப்பதும் இறைநம்பிக்கையில் அடங்கும் (என்கிறது ஒரு நபிமொழி).4 உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் (தம் ஆளுநர்) அதீ பின் அதீ (ரஹ்) அவர்களுக்கு (பின்வருமாறு கடிதம்) எழுதினார்கள்:5 இறைநம்பிக்கைக்குச் சில கட்டாயக் கடமைகள், கொள்கைகள், விலக்குகள், விரும்பத் தக்க (நபி)வழிகள் ஆகியவை உள்ளன. எனவே, யார் அவற்றை முழுமையாக நிறைவேற்றுகிறாரோ அவர் (தமது) இறைநம்பிக்கையை முழுமைப் படுத்திக்கொண்டவர் ஆவார். யார் அவற்றை முழுமையாக நிறைவேற்ற வில்லையோ அவர் (தமது) இறை நம்பிக்கையை முழுமைப்படுத்திக்கொள்ளவில்லை. நான் (இன்னும் சில காலம் இவ்வுலகில்) வாழ்வானேயானால், நீங்கள் (அதன்படி) செயல்படுவதற்காக அவற்றை உங்களுக்கு விளக்குவேன். (ஒரு வேளை) நான் அதற்குள் இறந்துவிட்டால், (காலமெல்லாம்) நான் உங்களுடனேயே இருக்க வேண்டுமென்ற பேராசை பிடித்தவன் அல்லன். இப்ராஹீம் (அலை) அவர்கள் கூறினார்கள் (என அல்லாஹ் கூறுகின்றான்): ...எனினும், (எனது நம்பிக்கை அதிகமாகி) எனது உள்ளம் நிம்மதி அடைவதற் காகவே (இறந்தவர்களை உயிர்ப்பித்துக்காட்டுமாறு உன்னிடம் வேண்டினேன்). (2:260) (அஸ்வத் பின் ஹிலால் (ரலி) அவர்களிடம்) முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள், “எம்முடன் நீங்களும் அமருங்கள்; நாம் சிறிது நேரம் (இறையை நினைவு கூர்ந்து) இறைநம்பிக்கை(யை அதிமாக்கிக்) கொள்வோம்” என்று சொன்னார்கள். இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள், “மன உறுதிதான் முழு இறைநம்பிக்கை ஆகும்” என்று கூறினார்கள்.6 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: உள்ளத்தில் (இது தவறாக இருக்குமோ என்ற) உறுத்தலைக்கூட கை விடாத வரை இறையச்சத்தின் உண்மையை ஓர் அடியார் எட்ட முடியாது. “எந்த மார்க்கத்தை அவன் நூஹுக்கு வகுத்தளித்திருந்தானோ அதே மார்க்கத் தைத்தான் உங்களுக்கும் அவன் நிர்ணயித் திருக்கின்றான்” (42:13) எனும் வசனத்திற்கு விளக்கமளிக்கையில் முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் (பின்வருமாறு) கூறி னார்கள்: “முஹம்மதே! உமக்கும் (நூஹ் நபியாகிய) அவருக்கும் நாம் ஒரே மார்க்கத்தையே அறிவுறுத்தியிருக்கிறோம்” என இறைவன் நபி (ஸல்) அவர்களிடம் கூறினான். “உங்களில் ஒவ்வொரு வ(குப்பா)ருக்கும் ஒரு ‘ஷிர்அத்’ (ஷரீஅத்)தையும் ஒரு ‘மின்ஹாஜை’யும் நாமே ஏற்படுத்தினோம்” (5:48) எனும் வசனத்திற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘வழியையும் நடைமுறையையும்’ என்று விளக்கமளித்தார்கள்.7 பாடம் : 2 பிரார்த்தனை (துஆ) என்பது இறைநம்பிக்கையே (ஈமான்) ஆகும். ஏனெனில், அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே! மக்களிடம்) கூறுக: உங்களது ‘துஆ’ (பிரார்த்தனை மட்டும்) இல்லாதிருந்தால், என் இறைவன் உங்களை(ச் சற்றும்) பொருட்படுத்தியிருக்கமாட்டான் (25:77). (பொதுவாக) அகராதியில் ‘துஆ’ எனும் சொல்லுக்கு ‘இறைநம்பிக்கை’ (ஈமான்) என்பதே பொருள்.8
8. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இஸ்லாம் ஐந்து தூண்கள்மீது எழுப் பப்பட்டுள்ளது.

1. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதிமொழிவது.

2. தொழுகையைக் கடைப்பிடிப்பது.

3. (கடமையானோர்) ஸகாத் (கட்டாய தர்மம்) வழங்குவது.

4. (இயன்றோர் இறையில்லம் கஅபாவில்) ஹஜ் செய்வது.

5. ரமளானில் நோன்பு நோற்பது.9

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 2
9. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، قَالَ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" الإِيمَانُ بِضْعٌ وَسِتُّونَ شُعْبَةً، وَالْحَيَاءُ شُعْبَةٌ مِنَ الإِيمَانِ "".
பாடம் : 3 இறைநம்பிக்கையின் செயல்கள் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: உங்கள் முகங்களை நீங்கள் கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ திருப்பு வது நன்மையன்று. மாறாக, நன்மை புரிவோர் யாரெனில், அல்லாஹ்வையும், இறுதி நாளையும், வானவர்களையும், வேதங்களையும், நபிமார்களையும் நம்பிக்கை கொண்டவர்கள்தான். அவர்கள் (தமது) செல்வத்தைத் தாம் விரும்பினாலும்கூட அதை உறவினர் களுக்கும், அநாதைகளுக்கும், வறியவர் களுக்கும், வழிப்போக்கருக்கும், யாசிப் போருக்கும், அடிமைகள் மீட்புக்கும் வழங்குவார்கள்; தொழுகையைக் கடைப்பிடிப்பார்கள்; ஸகாத் (எனும் கடமையான தர்மத்)தை வழங்குவார்கள்; வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவார்கள்; வறுமையிலும், நோய் நொடியிலும், போர்க் காலத்திலும் பொறுமை காப்பார்கள். அவர்களே வாய்மையாளர்கள். அவர்களே இறையச்சமுடையோர். (2:177)10 (மேலும், அல்லாஹ் கூறுகின்றான்:) இறைநம்பிக்கையாளர்கள் வெற்றி அடைந்துவிட்டனர். அவர்கள் தமது தொழுகையில் உள்ளச்சம் உடையவர்களாக இருப்பார்கள்; வீணானவற்றிலிருந்து விலகியிருப்பார்கள்... (23:1-9)
9. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைநம்பிக்கை (ஈமான்) அறுபதுக் கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்ட தாகும். நாணமும் இறைநம்பிக்கையின் ஒரு கிளையே.11

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 2
10. حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي السَّفَرِ، وَإِسْمَاعِيلَ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ، وَالْمُهَاجِرُ مَنْ هَجَرَ مَا نَهَى اللَّهُ عَنْهُ "". قَالَ أَبُو عَبْدِ اللَّهِ وَقَالَ أَبُو مُعَاوِيَةَ حَدَّثَنَا دَاوُدُ عَنْ عَامِرٍ قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. وَقَالَ عَبْدُ الأَعْلَى عَنْ دَاوُدَ عَنْ عَامِرٍ عَنْ عَبْدِ اللَّهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 4 எவரது நாவு, கை ஆகியவற்றி(ன் தொல்லைகளி)லிருந்து பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறு கிறார்களோ அவர்தான் முஸ்லிம்.
10. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எவரது நாவு, கை ஆகியவற்றி(ன் தொல்லைகளி)லிருந்து பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறார்களோ அவரே (உண்மையான) முஸ்லிம் ஆவார். எவர் அல்லாஹ் தடை விதித்தவற்றிலிருந்து விலகிக்கொண்டாரோ அவரே (உண்மை யான) முஹாஜிர் (புலம்பெயர்ந்தவர்) ஆவார்.12

இதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 2
11. حَدَّثَنَا سَعِيدُ بْنُ يَحْيَى بْنِ سَعِيدٍ الْقُرَشِيِّ، قَالَ حَدَّثَنَا أَبِي قَالَ، حَدَّثَنَا أَبُو بُرْدَةَ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ قَالَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ أَىُّ الإِسْلاَمِ أَفْضَلُ قَالَ "" مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ "".
பாடம் : 5 இஸ்லாத்தில் சிறந்தது எது?
11. அபூமூசா (அப்துல்லாஹ் பின் கைஸ்-ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாத்தில் சிறந்தது எது?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “எவரது நாவிலிருந்தும் கரத்திலிருந் தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறார்களோ அவரே (சிறந்தவர்; அவரது இஸ்லாமே சிறந்தது)” என்று பதிலளித்தார்கள்.13

அத்தியாயம் : 2
12. حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ـ رضى الله عنهما ـ أَنَّ رَجُلاً، سَأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم أَىُّ الإِسْلاَمِ خَيْرٌ قَالَ "" تُطْعِمُ الطَّعَامَ، وَتَقْرَأُ السَّلاَمَ عَلَى مَنْ عَرَفْتَ وَمَنْ لَمْ تَعْرِفْ "".
பாடம் : 6 உணவளிப்பதும் இஸ்லாத்தின் ஓர் அம்சம்.
12. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், “இஸ்லாமி(யப் பண்புகளி)ல் சிறந்தது எது?” எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “(பசித்தோருக்கு) நீங்கள் உணவளிப்பதும், நீங்கள் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் சலாம் (முகமன்) கூறுவதும் ஆகும்” என்று பதிலளித்தார்கள்.14

அத்தியாயம் : 2
13. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. وَعَنْ حُسَيْنٍ الْمُعَلِّمِ، قَالَ حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يُحِبَّ لأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ "".
பாடம் : 7 தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் ஒருவர் விரும்புவது இறைநம்பிக்கை யின் ஓர் அம்சம் ஆகும்.
13. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தமக்கு விரும்பு வதையே தம் சகோதரனுக்கும் விரும்பாத வரை (முழுமையான) இறைநம்பிக்கை கொண்டவர் ஆகமாட்டார்.15

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறி விக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 2
14. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، قَالَ حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ لاَ يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ وَوَلَدِهِ "".
பாடம் : 8 இறைத்தூதர் (ஸல்) அவர்களை நேசிப்பது இறைநம்பிக்கையின் ஓர் அம்சம் ஆகும்.
14. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! உங்களில் ஒருவருக்கு, அவருடைய தந்தையையும் அவருடைய பிள்ளையையும்விட நான் மிகவும் நேசத்திற்குரியவனாக ஆகாத வரை அவர் (உண்மையான) இறைநம்பிக்கை உள்ளவர் ஆகமாட்டார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 2
15. حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ح وَحَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لاَ يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ وَوَلَدِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ "".
பாடம் : 8 இறைத்தூதர் (ஸல்) அவர்களை நேசிப்பது இறைநம்பிக்கையின் ஓர் அம்சம் ஆகும்.
15. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவருக்கு, அவருடைய தந்தை, அவருடைய பிள்ளை, ஏனைய மக்கள் அனைவரையும்விட நான் நேசத் திற்குரியவனாக ஆகாத வரை அவர் (உண்மையான) இறைநம்பிக்கை கொண் டவர் ஆகமாட்டார்.16

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 2
16. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، قَالَ حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" ثَلاَثٌ مَنْ كُنَّ فِيهِ وَجَدَ حَلاَوَةَ الإِيمَانِ أَنْ يَكُونَ اللَّهُ وَرَسُولُهُ أَحَبَّ إِلَيْهِ مِمَّا سِوَاهُمَا، وَأَنْ يُحِبَّ الْمَرْءَ لاَ يُحِبُّهُ إِلاَّ لِلَّهِ، وَأَنْ يَكْرَهَ أَنْ يَعُودَ فِي الْكُفْرِ كَمَا يَكْرَهُ أَنْ يُقْذَفَ فِي النَّارِ "".
பாடம் : 9 இறைநம்பிக்கையின் சுவை
16. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்துகொள்வார். (அவை:)

1. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவருக்கு மற்றெதையும்விட அதிக நேசத்திற்குரியோர் ஆவது.

2. அல்லாஹ்வுக்காகவே ஒருவரை அவர் நேசிப்பது.

3. நெருப்பில் வீசப்படுவதை வெறுப் பதைப் போன்று இறைமறுப்புக்குத் திரும்புவதை அவர் வெறுப்பது.17

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 2
17. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ جَبْرٍ، قَالَ سَمِعْتُ أَنَسًا، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" آيَةُ الإِيمَانِ حُبُّ الأَنْصَارِ، وَآيَةُ النِّفَاقِ بُغْضُ الأَنْصَارِ "".
பாடம் : 10 அன்சாரிகளை நேசிப்பது இறை நம்பிக்கையின் அடையாள மாகும்.
17. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைநம்பிக்கையின் அடையாளம் அன்சாரிகளை நேசிப்பதாகும்; நயவஞ்சகத் தின் அடையாளம் அன்சாரிகளை வெறுப்பதாகும்.18

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 2
18. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي أَبُو إِدْرِيسَ، عَائِذُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ أَنَّ عُبَادَةَ بْنَ الصَّامِتِ ـ رضى الله عنه ـ وَكَانَ شَهِدَ بَدْرًا، وَهُوَ أَحَدُ النُّقَبَاءِ لَيْلَةَ الْعَقَبَةِ ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ وَحَوْلَهُ عِصَابَةٌ مِنْ أَصْحَابِهِ "" بَايِعُونِي عَلَى أَنْ لاَ تُشْرِكُوا بِاللَّهِ شَيْئًا، وَلاَ تَسْرِقُوا، وَلاَ تَزْنُوا، وَلاَ تَقْتُلُوا أَوْلاَدَكُمْ، وَلاَ تَأْتُوا بِبُهْتَانٍ تَفْتَرُونَهُ بَيْنَ أَيْدِيكُمْ وَأَرْجُلِكُمْ، وَلاَ تَعْصُوا فِي مَعْرُوفٍ، فَمَنْ وَفَى مِنْكُمْ فَأَجْرُهُ عَلَى اللَّهِ، وَمَنْ أَصَابَ مِنْ ذَلِكَ شَيْئًا فَعُوقِبَ فِي الدُّنْيَا فَهُوَ كَفَّارَةٌ لَهُ، وَمَنْ أَصَابَ مِنْ ذَلِكَ شَيْئًا ثُمَّ سَتَرَهُ اللَّهُ، فَهُوَ إِلَى اللَّهِ إِنْ شَاءَ عَفَا عَنْهُ، وَإِنْ شَاءَ عَاقَبَهُ "". فَبَايَعْنَاهُ عَلَى ذَلِكَ.
பாடம் : 11
18. பத்ர் போரில் கலந்துகொண்டவரும், இரவில் நடந்த ‘அகபா’ உடன்பாட்டில் கலந்துகொண்ட (பன்னிரண்டு) தலைவர் களில் ஒருவருமான உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மைச் சுற்றிலும் தம் தோழர்களின் ஒரு குழுவினர் இருக்க, “அல்லாஹ்வுக்கு எதையும் (எவரையும்) இணையாக்கமாட்டீர்கள் என்றும், திருட மாட்டீர்கள் என்றும், விபசாரம் புரிய மாட்டீர்கள் என்றும், உங்கள் குழந்தை களைக் கொல்லமாட்டீர்கள் என்றும், நீங்கள் எவர்மீதும் அவதூறை இட்டுக் கட்டி உங்களிடையே பரப்பமாட்டீர்கள் என்றும், எந்த நல்ல காரியத்திலும் (எனக்கு) மாறு செய்யமாட்டீர்கள் என்றும் என்னிடம் உறுதிமொழி கொடுங்கள்.

உங்களில் யார் (இவற்றையெல்லாம்) நிறைவேற்றுகிறாரோ, அவருக்குப் பிரதி பலன் அளிப்பது அல்லாஹ்வின் பொறுப் பாகும். இவற்றில் (மேற்கூறப்பட்ட குற்றங்களில்) ஏதேனுமொன்றை ஒருவர் செய்து, அதற்காக அவர் இந்த உலகத்திலயே தண்டிக்கப்பட்டுவிட்டால் அதுவே அவருக்குரிய பரிகாரமாகிவிடும். இவற்றில் ஏதேனுமொன்றை ஒருவர் செய்து அல்லாஹ் அவரது குற்றத்தை (உலகத்தில்) மறைத்துவிட்டால், அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் விடப்படுகிறார். அவன் நாடினால் அவரை மன்னிப்பான்; அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்” என்று சொன்னார்கள்.

உடனே நாங்கள் அதன்படி நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தோம்.

அத்தியாயம் : 2
19. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي صَعْصَعَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" يُوشِكُ أَنْ يَكُونَ خَيْرَ مَالِ الْمُسْلِمِ غَنَمٌ يَتْبَعُ بِهَا شَعَفَ الْجِبَالِ وَمَوَاقِعَ الْقَطْرِ، يَفِرُّ بِدِينِهِ مِنَ الْفِتَنِ "".
பாடம் : 12 குழப்பங்களிலிருந்து வெருண் டோடுவது மார்க்கத்தின் ஓர் அம்சமாகும்.
19. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு முஸ்லிமின் செல்வங்களிலேயே ஆடுதான் சிறந்த செல்வமாக இருக்கும் நிலை தோன்றக்கூடும். அவர் குழப்பங் களிலிருந்து தமது மார்க்க (விசுவாச)த் தைக் காத்துக்கொள்ள அந்த ஆட்டை ஓட்டிக்கொண்டு மலைகளின் உச்சிக்கும் மழை பொழியும் (கனவாய், பள்ளத்தாக்கு போன்ற) இடங்களுக்கும் சென்றுவிடுவார்.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 2
20. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، قَالَ أَخْبَرَنَا عَبْدَةُ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا أَمَرَهُمْ أَمَرَهُمْ مِنَ الأَعْمَالِ بِمَا يُطِيقُونَ قَالُوا إِنَّا لَسْنَا كَهَيْئَتِكَ يَا رَسُولَ اللَّهِ، إِنَّ اللَّهَ قَدْ غَفَرَ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ. فَيَغْضَبُ حَتَّى يُعْرَفَ الْغَضَبُ فِي وَجْهِهِ ثُمَّ يَقُولُ "" إِنَّ أَتْقَاكُمْ وَأَعْلَمَكُمْ بِاللَّهِ أَنَا "".
பாடம் : 13 “நான் உங்களிலேயே இறைவனைப் பற்றி மிக அதிகமாக அறிந்தவன் ஆவேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது (இறைவனையும் இறைநெறியையும்) அறிதல் என்பது உள்ளத்தின் செயலே. ஏனெனில், உயர்ந்தோன் அல்லாஹ், “நீங்கள் செய்த அர்த்தமற்ற சத்தியங்களுக்காக உங்களை அல்லாஹ் தண்டிக்கமாட்டான். மாறாக, உங்களுடைய உள்ளங்கள் முடிவெடுத்தவற்றின் காரணமாகவே உங்களைத் தண்டிப்பான்” (2:225) என்று கூறுகின்றான்.19
20. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நல்லவற்றை(ச் செய்யுமாறு) மக்களுக்குக் கட்டளையிட்டால், அவர்களால் இயன்ற செயல்களையே (செய்யுமாறு) கட்டளை யிடுவார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்களுடைய முன் பின் பாவங்களை மன்னித்துவிட்டான். (ஆனால்,) எங்கள் நிலையோ உங்கள் நிலையைப் போன்றதன்று (நாங்கள் குறைந்த அளவில் நல்லறங்கள் புரிந்தால் போதாது; அதிகமாகச் செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம்)” என்று கூறி னார்கள்.

(இதைக் கேட்ட) உடன் நபி (ஸல்) அவர்கள் கோபமடைந்தார்கள். எந்த அளவுக்கென்றால் கோபத்தின் அறிகுறி அவர்களது முகத்தில் காணப்பட்டது. பிறகு “உங்கள் அனைவரைவிடவும் நான் (அல்லாஹ்வை) நன்கு அஞ்சி நடப்பவ னும் அல்லாஹ்வைப் பற்றி அறிந்தவனும் ஆவேன்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 2
21. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" ثَلاَثٌ مَنْ كُنَّ فِيهِ وَجَدَ حَلاَوَةَ الإِيمَانِ مَنْ كَانَ اللَّهُ وَرَسُولُهُ أَحَبَّ إِلَيْهِ مِمَّا سِوَاهُمَا، وَمَنْ أَحَبَّ عَبْدًا لاَ يُحِبُّهُ إِلاَّ لِلَّهِ، وَمَنْ يَكْرَهُ أَنْ يَعُودَ فِي الْكُفْرِ بَعْدَ إِذْ أَنْقَذَهُ اللَّهُ، كَمَا يَكْرَهُ أَنْ يُلْقَى فِي النَّارِ "".
பாடம் : 14 நெருப்பில் எறியப்படுவதை வெறுப்பதைப் போன்று, இறை மறுப்புக்குத் திரும்புவதை வெறுப்பது இறைநம்பிக்கையின் ஓர் அம்சமாகும்.
21. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்துகொள்வார். (அவை:)

1. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்ற அனைத்தையும்விட அதிக நேசத்திற்குரியோர் ஆவது.

2. அல்லாஹ்வுக்காகவே ஓர் அடியாரை ஒருவர் நேசிப்பது.

3. ஒருவரை அல்லாஹ் இறைமறுப்பி லிருந்து காத்தபின், இறைமறுப்புக்குத் திரும்புவதைத் தாம் நெருப்பில் வீசப்படு வதைப் போன்று அவர் வெறுப்பது.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.20

அத்தியாயம் : 2
22. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى الْمَازِنِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" يَدْخُلُ أَهْلُ الْجَنَّةِ الْجَنَّةَ، وَأَهْلُ النَّارِ النَّارَ، ثُمَّ يَقُولُ اللَّهُ تَعَالَى أَخْرِجُوا مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ مِنْ إِيمَانٍ. فَيُخْرَجُونَ مِنْهَا قَدِ اسْوَدُّوا فَيُلْقَوْنَ فِي نَهَرِ الْحَيَا ـ أَوِ الْحَيَاةِ، شَكَّ مَالِكٌ ـ فَيَنْبُتُونَ كَمَا تَنْبُتُ الْحِبَّةُ فِي جَانِبِ السَّيْلِ، أَلَمْ تَرَ أَنَّهَا تَخْرُجُ صَفْرَاءَ مُلْتَوِيَةً "". قَالَ وُهَيْبٌ حَدَّثَنَا عَمْرٌو "" الْحَيَاةِ "". وَقَالَ "" خَرْدَلٍ مِنْ خَيْرٍ "".
பாடம் : 15 இறைநம்பிக்கையாளர்களி டையே செயல்களில் காணப் படும் ஏற்றத்தாழ்வு
22. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மறுமையில் விசாரணைகள் முடிந்த பின்) சொர்க்கவாசிகள் சொர்க்கத்திலும் நரகவாசிகள் நரகத்திலும் நுழைந்துவிடு வார்கள். பிறகு “யாருடைய உள்ளத்தில் கடுகு வித்தளவேனும் இறைநம்பிக்கை (ஈமான்) இருக்கிறதோ அவரை (நரகத் திலிருந்து) வெறியேற்றிவிடுங்கள்” என்று உயர்ந்தோன் அல்லாஹ் கட்டளை யிடுவான்.

உடனே அவர்கள் (கருகிக்) கறுத்துவிட்ட நிலையில் நரகத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள். பின்னர் ‘மழைநதி’யில் (நஹ்ருல் ஹயா) அல்லது ‘ஜீவநதி’யில் (நஹ்ருல் ஹயாத்) அவர்கள் இடப்படுவார்கள். -இந்த இடத்தில் அறிவிப்பாளர்களில் ஒருவரான மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்கள் ஐயப்பாட்டுடன் அறிவிக்கிறார்கள்.- (அவ்வாறு அவர்கள் அந்த நதியில் போடப்பட்டதும்) ஓடைக் கரையில் விதைப் பயிர் முளைப்பதைப் போன்று (நிறம்) மாறிவிடுவார்கள். அந்த வித்து(விலிருந்து வரும் பயிர்கள்) மஞ்சள் நிறத்தில் (பார்ப்பதற்கு அழகாகவும், காற்றில்) அசைந்தாடியதாக(வும்) வெளிவருவதை நீர் கண்டதில்லையா?

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், வுஹைப் பின் காலித் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், (மழைநதி அல்லது ஜீவநதி என்று சந்தேகத்தோடு அறிவிக்காமல்) ஜீவநதி என்று (உறுதியுடன்) அம்ர் பின் யஹ்யா (ரஹ்) அவர்கள்அறிவிக்கிறார்கள். ஆயினும், (கடுகு வித்தளவு இறை நம்பிக்கை என்பதற்குப் பதிலாக) ‘கடுகளவு நன்மை’ என்று அறிவித்துள்ளார்கள்.


அத்தியாயம் : 2
23. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلٍ، أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" بَيْنَا أَنَا نَائِمٌ رَأَيْتُ النَّاسَ يُعْرَضُونَ عَلَىَّ، وَعَلَيْهِمْ قُمُصٌ مِنْهَا مَا يَبْلُغُ الثُّدِيَّ، وَمِنْهَا مَا دُونَ ذَلِكَ، وَعُرِضَ عَلَىَّ عُمَرُ بْنُ الْخَطَّابِ وَعَلَيْهِ قَمِيصٌ يَجُرُّهُ "". قَالُوا فَمَا أَوَّلْتَ ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ "" الدِّينَ "".
பாடம் : 15 இறைநம்பிக்கையாளர்களி டையே செயல்களில் காணப் படும் ஏற்றத்தாழ்வு
23. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் உறங்கிக்கொண்டி ருக்கும்போது (கனவில்), மக்கள் (பல விதமான) சட்டைகளை அணிந்தவர்களாக எனக்கு எடுத்துக்காட்டப்பட்டனர். அவற்றில் (அவர்களுடைய) மார்பை எட்டக்கூடியவையும், மார்பை எட்டாத வையும் இருந்தன. உமர் பின் அல்கத்தாப் அவர்கள் (தரையில்) இழுபடும் அளவுக்கு (நீளமான) சட்டையொன்றை அணிந்தவராக எனக்குக் காட்டப்பட்டார்” என்று கூறினார்கள்.

மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! இதற்கு நீங்கள் என்ன விளக்கம் கண்டீர்கள்?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அந்தச் சட்டைகள் அவர்களுடைய) மார்க்கத்தை (மார்க்க உணர்வையும் செயல்பாடுகளையும்) குறிக்கும்” என்று பதிலளித்தார்கள்.21

அத்தியாயம் : 2
24. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مَرَّ عَلَى رَجُلٍ مِنَ الأَنْصَارِ وَهُوَ يَعِظُ أَخَاهُ فِي الْحَيَاءِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" دَعْهُ فَإِنَّ الْحَيَاءَ مِنَ الإِيمَانِ "".
பாடம் : 16 நாணம் இறைநம்பிக்கையின் ஓர் அம்சம்.22
24. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒருவரைக் கடந்து சென் றார்கள். வெட்கப்படுவது தொடர்பாக(க் கண்டித்து) தம் சகோதரருக்கு அவர் அறிவுரை கூறிக்கொண்டிருந்தார். (இதைக் கண்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அவரை(க் கண்டிக்காதீர்கள்;) விட்டுவிடுங்கள். ஏனெனில், நாணமும் இறைநம்பிக்கையின் ஓர் அம்சமே” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 2
25. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْمُسْنَدِيُّ، قَالَ حَدَّثَنَا أَبُو رَوْحٍ الْحَرَمِيُّ بْنُ عُمَارَةَ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ وَاقِدِ بْنِ مُحَمَّدٍ، قَالَ سَمِعْتُ أَبِي يُحَدِّثُ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَشْهَدُوا أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَيُقِيمُوا الصَّلاَةَ، وَيُؤْتُوا الزَّكَاةَ، فَإِذَا فَعَلُوا ذَلِكَ عَصَمُوا مِنِّي دِمَاءَهُمْ وَأَمْوَالَهُمْ إِلاَّ بِحَقِّ الإِسْلاَمِ، وَحِسَابُهُمْ عَلَى اللَّهِ "".
பாடம் : 17 “(இறைவனுக்கு இணைகற் பிக்கும்) அவர்கள் பாவமீட்பு பெற்று, தொழுகையைக் கடைப் பிடித்து, ஸகாத்தையும் வழங்கி னால், அவர்களது வழியில் (அவர்களை) விட்டு விடுங்கள்” (9:5) எனும் இறைவசனம்
25. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை; முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்” என உறுதிமொழிந்து, (கடமையான) தொழுகையைக் கடைப்பிடித்து, ஸகாத் (எனும் கட்டாய தர்மத்)தை வழங்காத வரை (இணைவைக்கும்) மக்களுடன் போரிடும்படி நான் கட்டளையிடப்பட்டேன்.

இவற்றை அவர்கள் செய்துவிடுவார்களானால், தம் உயிரையும் உடைமை களையும் என்னிடமிருந்து அவர்கள் பாதுகாத்துக்கொள்ள முடியும். (மரண தண்டனைக்குரிய) இஸ்லாத்தின் இதர உரிமைகளில் (அவர்கள் எல்லை மீறினால்) தவிர! மேலும், (இரகசியமாகக் குற்றமிழைத் தால்) அவர்களின் விசாரணை அல்லாஹ் வின் பொறுப்பில் உள்ளது.23

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 2
26. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، وَمُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالاَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، قَالَ حَدَّثَنَا ابْنُ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم سُئِلَ أَىُّ الْعَمَلِ أَفْضَلُ فَقَالَ "" إِيمَانٌ بِاللَّهِ وَرَسُولِهِ "". قِيلَ ثُمَّ مَاذَا قَالَ "" الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ "". قِيلَ ثُمَّ مَاذَا قَالَ "" حَجٌّ مَبْرُورٌ "".
பாடம் : 18 இறைநம்பிக்கை (ஈமான்) என்றாலே அது நற்செயல்தான் என்று கூறுவோரின் ஆதாரம் ஏனெனில் உயர்ந்தோன் அல்லாஹ், “இதுதான் நீங்கள் (உலகில்) செய்துகொண் டிருந்ததற்காக உங்களுக்கு வழங்கப்பட்ட சொர்க்கமாகும்” (43:72) என்று கூறுகின்றான். “உம்முடைய இறைவன் மீதாணையாக! அவர்கள் அனைவரிடமும் அவர்கள் செய்துகொண்டிருந்தவை பற்றி விசாரிப்போம்” (15:92,93) எனும் இறைவசனத்திற்கு விளக்கமளிக்கையில், “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை (லா இலாஹ இல்லல்லாஹ்) எனும் உறுதிமொழி பற்றி விசாரிப்போம்” என்றே (இப்னு உமர் (ரலி), முஜாஹித் (ரஹ்) போன்ற) பல அறிஞர்களும் தெரிவித்துள்ளனர். (சொர்க்க வாழ்வு பற்றிப் பேசிவிட்டு) அல்லாஹ், “இதைப் போன்ற (நற்பேறுகளை அடைவ)தற்காகவே உழைப்போர் உழைக்கட்டும்” (37:61) என்று கூறுகின்றான்.
26. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களி டம் “எந்த நற்செயல் சிறந்தது?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் “அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை (ஈமான்) கொள்வது” என்று பதிலளித்தார்கள்.

“பிறகு எது?” என்று கேட்கப்பட்ட போது, “இறைவழியில் அறப்போர் புரிவது” என்றார்கள். “பிறகு எது?” என்று கேட்கப் பட்டபோது, “ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்” என்று சொன்னார்கள்.24

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 2
27. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عَامِرُ بْنُ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ سَعْدٍ، رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَعْطَى رَهْطًا وَسَعْدٌ جَالِسٌ، فَتَرَكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم رَجُلاً هُوَ أَعْجَبُهُمْ إِلَىَّ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا لَكَ عَنْ فُلاَنٍ فَوَاللَّهِ إِنِّي لأَرَاهُ مُؤْمِنًا. فَقَالَ "" أَوْ مُسْلِمًا "". فَسَكَتُّ قَلِيلاً، ثُمَّ غَلَبَنِي مَا أَعْلَمُ مِنْهُ فَعُدْتُ لِمَقَالَتِي فَقُلْتُ مَا لَكَ عَنْ فُلاَنٍ فَوَاللَّهِ إِنِّي لأَرَاهُ مُؤْمِنًا فَقَالَ "" أَوْ مُسْلِمًا "". ثُمَّ غَلَبَنِي مَا أَعْلَمُ مِنْهُ فَعُدْتُ لِمَقَالَتِي وَعَادَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ قَالَ "" يَا سَعْدُ، إِنِّي لأُعْطِي الرَّجُلَ وَغَيْرُهُ أَحَبُّ إِلَىَّ مِنْهُ، خَشْيَةَ أَنْ يَكُبَّهُ اللَّهُ فِي النَّارِ "". وَرَوَاهُ يُونُسُ وَصَالِحٌ وَمَعْمَرٌ وَابْنُ أَخِي الزُّهْرِيِّ عَنِ الزُّهْرِيِّ.
பாடம் : 19 உண்மையாக அன்றி, வெளிப் படையில் காட்டுவதற்காகவோ, உயிருக்குப் பயந்தோ இஸ்லாத்தை ஏற்றால் (அது மறுமையில் பயன் தராது). ஏனெனில், உயர்ந்தோன் அல்லாஹ், “(நபியே!) நாங்களும் இறைநம்பிக்கை (ஈமான்) கொண்டுவிட்டோம் என்று கிராமவாசிகளில் சிலர் (உம்மிடம்) கூறுகிறார்கள். நீர் கூறுவீராக: நீங்கள் உண்மையில் ஈமான் கொள்ளவில்லை; ஆயினும், ‘நாங்கள் (வெளிப்படையில்) கட்டுப்பட்டோம்’ என்று வேண்டுமானால் சொல்லிக்கொள் ளுங்கள்!” (49:14) என்று கூறுகின்றான். உண்மையாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் (அது மறுமையில் பயன் தரும். ஏனெனில்,) புகழோங்கிய அல்லாஹ், “அல்லாஹ்விடம் மார்க்கம் என்பதே இஸ்லாம்தான்” (3:19) என்று கூறுகின்றான்.25
27. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடன் நான் அமர்ந்திருந்தபோது, அவர்கள் (மக்களில்) ஒரு குழுவினருக்கு (மட்டும் தர்மப் பொருட்களை) வழங்கினார் கள். அப்போது அவர்களில் எனக்குப் பிடித்த ஒருவருக்கு (ஏதும் வழங்காமல்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விட்டுவிட்டார்கள். ஆகவே நான், “அல்லாஹ்வின் தூதரே! (அவரை ஏன் விட்டுவிட்டீர்கள்?) அவர்மீது உங்களுக்கு என்ன (அதிருப்தி)? அல்லாஹ்வின் மீதாணையாக! அவரை நான் ஓர் இறைநம்பிக்கையாளர் (முஃமின்) என்றே கருதுகின்றேன்” என்றேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவரை முஸ்லிம் (வெளித் தோற்றத்தில் இறைநம்பிக்கையாளர்) என்று சொல்க” என்றார்கள். சிறிது நேரம் நான் அமைதியாக இருந்தேன். நான் அவரைப் பற்றி அறிந்திருந்த விஷயங்கள் என்னை மிகைத்துவிடவே, முன்பு சொன்னதையே திரும்பவும் சொன்னேன். “அவர் மீது உங்களுக்கு என்ன (அதிருப்தி)? அல்லாஹ்வின் மீதாணையாக! நிச்சயமாக நான் அவரை ஓர் இறைநம்பிக்கையாளர் (முஃமின்) என்றே கருதுகிறேன்” என்றேன்.

அதற்கும் அலலாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவரை முஸ்லிம் என்று சொல்க” என்றார்கள். அவரைப் பற்றி நான் அறிந்திருந்த விஷயங்கள் என்னை மிகைத்துவிடவே, முன்பு சொன்னதை மறுபடியும் சொன்னேன்.

அப்போதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பழைய பதிலையே கூறி விட்டு, “சஅத்! நான் ஒருவருக்குக் கொடுக் கிறேன்; ஆனால், மற்றொருவர் அவரை விட என் அன்புக்குரியவராய் இருப்பார். (அப்படியிருந்தும் அவருக்கு நான் கொடுப் பதற்குக்) காரணம், (கொடுக்காதிருந்து விட்டால் வறுமையால் குற்றம் இழைத்து அதனால்) அவரை அல்லாஹ் நரகத்தில் முகம்குப்புறத் தள்ளிவிடுவானோ என்ற அச்சம்தான்” என்றார்கள்.

இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 2