2778. وَقَالَ عَبْدَانُ أَخْبَرَنِي أَبِي، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ عُثْمَانَ ـ رضى الله عنه ـ حَيْثُ حُوصِرَ أَشْرَفَ عَلَيْهِمْ وَقَالَ أَنْشُدُكُمْ وَلاَ أَنْشُدُ إِلاَّ أَصْحَابَ النَّبِيِّ صلى الله عليه وسلم، أَلَسْتُمْ تَعْلَمُونَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ حَفَرَ رُومَةَ فَلَهُ الْجَنَّةُ "". فَحَفَرْتُهَا، أَلَسْتُمْ تَعْلَمُونَ أَنَّهُ قَالَ "" مَنْ جَهَّزَ جَيْشَ الْعُسْرَةِ فَلَهُ الْجَنَّةُ "". فَجَهَّزْتُهُمْ. قَالَ فَصَدَّقُوهُ بِمَا قَالَ. وَقَالَ عُمَرُ فِي وَقْفِهِ لاَ جُنَاحَ عَلَى مَنْ وَلِيَهُ أَنْ يَأْكُلَ. وَقَدْ يَلِيهِ الْوَاقِفُ وَغَيْرُهُ فَهْوَ وَاسِعٌ لِكُلٍّ.
பாடம் : 33 ஒருவர் ஒரு நிலத்தையோ கிணற்றையோ (பொதுவாக) வக்ஃப் செய்தாலோ, அல்லது மற்றமுஸ்லிம்கள் அந்தத் கிணற்றின் நீரைப் பயன்படுத்துவதைப் போன்று தமக்கும் அதைப் பயன் படுத்தும் உரிமையுண்டு என்று நிபந்தனையிட்டாலோ (செல்லும்). அனஸ் (ரலி) அவர்கள் ஒரு வீட்டை வக்ஃப் செய்தார்கள். (மதீனாவுக்கு) வரும்போதெல்லாம் அதில் அவர்கள் தங்குவார்கள். ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்கள் தம் வீடுகளைத் தர்மம் செய்தார் கள். தம் பெண்மக்களில் (மணவிலக்கு பெற்று) திருப்பி அனுப்பப்பட்டவரிடம், ‘‘நீ தீங்கிழைக்காமலும் தீங்குக்கு ஆளாகாம லும் இங்கு தங்கிக்கொள்ளலாம்” என்று கூறினார்கள். ஆனால், மறுமணம் செய்து கொண்டு, தன்னிறைவு பெற்றுவிட்டால் அவருக்கு அதில் (தங்க) உரிமையில்லை என்று நிபந்தனையும் விதித்தார்கள். இப்னு உமர் (ரலி) அவர்கள், தம் தந்தை உமர் (ரலி) அவர்களின் வீட்டிலி ருந்து தமக்குக் கிடைத்த பங்கில் தம் குடும்பத்தாரில் தேவையுள்ளவர்கள் வசித்துக்கொள்ள வகை செய்தார்கள்.
2778. அபூஅப்திர் ரஹ்மான் அப்துல்லாஹ் பின் ஹபீப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(கலீஃபா) உஸ்மான் (ரலி) அவர்கள் (கலகக்காரர்களால்) முற்றுகையிடப்பட்ட போது அவர்களுக்கு மேலிருந்து (வீட்டுக் கூரை மீதிருந்து) பின்வருமாறு பேசினார்கள்:

அல்லாஹ்வை முன்வைத்து உங்களைக் கேட்கிறேன். நான் நபி (ஸல்) அவர்களின் தோழர்களைத் தவிர வேறுயாரிடமும் கேட்கவில்லை. ‘‘யார் யிரூமா’ எனும் கிணற்றை (விலைக்கு வாங்கி) தூர்வாரி (பொது மக்கள் நலனுக்காக வக்ஃப் செய்து)விடுகிறாரோ அவருக்குச் சொர்க்கம் கிடைக்கும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற, நான் அதை (விலைக்கு வாங்கி) தூர் வாரி (வக்ஃபாக ஆக்கி)யது உங்களுக்குத் தெரியாதா?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘‘எவர் பொருளாதார நெருக்கடியிலிருக்கும் (தபூக் போருக்கான) படையை (பொருளு தவி செய்து) தயார்படுத்துகிறாரோ அவருக் குச் சொர்க்கம் கிடைக்கும்” என்று கூற, நான் அதைத் தயார்படுத்தியது உங்களுக் குத் தெரியாதா? என்று கேட்டார்கள். அவர்கள் கூறியதை நபித்தோழர்கள் உண்மையென ஏற்றுக்கொண்டனர்.

உமர் (ரலி) அவர்கள் வக்ஃப் செய்த போது, ‘‘இதை நிர்வாகம் செய்பவர் இதிலி ருந்து (எடுத்து) உண்பதில் தவறில்லை” என்று குறிப்பிட்டார்கள். வக்ஃப் செய்த வரேகூட அதை நிர்வாகம் செய்யலாம். மற்றவர்களும் அதற்கு நிர்வாகிகளாக இருக்கலாம். ஆக, (அதை) நிர்வகிக்கும் எவருக்கும் அதிலிருந்து உண்ண அனுமதியுண்டு.

அத்தியாயம் : 55
2779. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ أَبِي التَّيَّاحِ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" يَا بَنِي النَّجَّارِ ثَامِنُونِي بِحَائِطِكُمْ "". قَالُوا لاَ نَطْلُبُ ثَمَنَهُ إِلاَّ إِلَى اللَّهِ.
பாடம் : 34 வக்ஃப் செய்பவர், ‘‘இதற்கான விலையை நாம் அல்லாஹ்விடமே கோருகிறோம்” என்று கூறினால் அது செல்லும்.
2779. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், ‘‘பனூ நஜ்ஜார் குலத்தாரே! உங்கள் தோட்டத்திற்கு என்னி டம் விலை சொல்லுங்கள்” என்று கேட்டார்கள். அதற்கு அந்தக் குலத்தார், ‘‘அதன் விலையை நாங்கள் அல்லாஹ்விடமே எதிர்பார்க்கிறோம்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 55
2780. وَقَالَ لِي عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا ابْنُ أَبِي زَائِدَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي الْقَاسِمِ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ خَرَجَ رَجُلٌ مِنْ بَنِي سَهْمٍ مَعَ تَمِيمٍ الدَّارِيِّ وَعَدِيِّ بْنِ بَدَّاءٍ فَمَاتَ السَّهْمِيُّ بِأَرْضٍ لَيْسَ بِهَا مُسْلِمٌ، فَلَمَّا قَدِمَا بِتَرِكَتِهِ فَقَدُوا جَامًا مِنْ فِضَّةٍ مُخَوَّصًا مِنْ ذَهَبٍ، فَأَحْلَفَهُمَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم، ثُمَّ وُجِدَ الْجَامُ بِمَكَّةَ فَقَالُوا ابْتَعْنَاهُ مِنْ تَمِيمٍ وَعَدِيٍّ. فَقَامَ رَجُلاَنِ مِنْ أَوْلِيَائِهِ، فَحَلَفَا لَشَهَادَتُنَا أَحَقُّ مِنْ شَهَادَتِهِمَا، وَإِنَّ الْجَامَ لِصَاحِبِهِمْ. قَالَ وَفِيهِمْ نَزَلَتْ هَذِهِ الآيَةُ {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا شَهَادَةُ بَيْنِكُمْ إِذَا حَضَرَ أَحَدَكُمُ الْمَوْتُ}
பாடம் : 35 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: இறைநம்பிக்கை கொண்டோரே! உங்களில் ஒருவருக்கு இறப்பு நெருங்கும்போது அவர் இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவித்தால், உங்களைச் சேர்ந்த நேர்மையான இருவர் உங்களிடையே சாட்சியம் அளிக்க வேண்டும். அல்லது நீங்கள் பயணம் செய்யும்போது உங்க ளுக்கு இறப்பு எனும் துன்பம் நேர்ந்து விட்டால், உங்களைச் சேராத வேறிருவர் (சாட்சிகளாக) இருக்கலாம். நீங்கள் (சாட்சிகள்மீது) சந்தேகம் கொள்வீர்களாயின், தொழுகைக்குப் பின்னர் அவ்விருவரையும் நிறுத்தி வையுங்கள். அப்போது அவ்விருவரும், ‘‘(எங்கள்) உறவினர்களே ஆனாலும் இ(ந்தச் சாட்சியத்)தை நாங்கள் விலைக்கு விற்கமாட்டோம்; அல்லாஹ்வின் (பெயரால் அளிக்கப்படுகின்ற) சாட்சியத்தை நாங்கள் மறைக்கவுமாட்டோம்; அவ்வாறு செய்தால், நாங்கள் பாவிகளாகிவிடுவோம்” என அல்லாஹ்வின் பெயரால் சத்தியம் செய்ய வேண்டும். அவ்விருவரும் (பொய்ச் சாட்சியம் கூறிக்) குற்றத்துக்கு ஆளாகிவிட்டனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டால், யாருக்கு எதிராகக் குற்றம் புரிந்தார்களோ அவர் களில் (இறந்தவருக்கு) மிக நெருக்கமான வேறிருவர் அவ்விருவரின் இடத்தில் நிற்க வேண்டும். இவ்விருவரும், ‘‘எங்களது சாட்சியம் அவ்விருவரின் சாட்சியத்தைவிட மிகவும் வாய்மையானது; (இதில்) நாங்கள் எல்லை மீறவில்லை; அவ்வாறு மீறினால், நாங்கள் அநீதியிழைத்தவர் களாகிவிடுவோம்” என்று அல்லாஹ்வின் பெயரால் சத்தியம் செய்ய வேண்டும். இதுதான் அவர்கள் முறைப்படி சாட்சியம் அளிப்பதற்கு, அல்லது தாம் சத்தியம் செய்த பின்னர் சத்தியம் (செய்யும் வாய்ப்பு மற்றவருக்குப்) போய்விடுமோ என அவர்கள் அஞ்சுவதற்கு ஏற்ற வழியாகும். அல்லாஹ்வை அஞ்சுங்கள்; (அவன் கட்டளைகளுக்குச்) செவிசாயுங்கள். பாவம் புரியும் கூட்டத்தாரை அல்லாஹ் நல்வழியில் செலுத்துவதில்லை. (5:106லி108) இங்கு (5:107ஆவது வசனத்தில்) யிகண்டு பிடிக்கப்பட்டால்’ என்பதைக் குறிக்க யிஉஸிர’ எனும் சொல் மூலத்தில் ஆளப்பட் டுள்ளது. (18:21ஆவது வசனத்தில்) யிகண்டு பிடிக்கச் செய்தோம்’ என்பதைச் சுட்ட ‘அஃஸர்னா’ எனும் சொல் ஆளப்பட்டுள் ளது. யிவெளிப்படுத்தப்படல்’ என்பது இதன் பொருளாகும்.
2780. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

யிபனூ சஹ்ம்’ குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் தமீமுத் தாரீ, அதீ பின் பத்தா ஆகியோருடன் பயணம் புறப்பட்டார்.30 பனூ சஹ்ம் குலத்தைச் சேர்ந்த அவர், ஒரு முஸ்லிம்கூட இல்லாத ஒரு பூமியில் இறந்துவிட்டார். தமீமுத் தாரீயும் அதீயும் அவர் விட்டுச்சென்ற (அவருடைய) சொத்துக்களை எடுத்துக்கொண்டு வந்த போது (அவற்றில்) தங்க வேலைப்பாடு செய்யப்பட்ட வெள்ளிப் பாத்திரம் ஒன்றைக் காணவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்விருவரையும் (தாம் நிரபராதிகள் என்று) சத்தியம் செய்யும்படி கூறினார்கள். பிறகு அந்தப் பாத்திரம் மக்காவில் (சிலரிடம்) காணப் பட்டது. அவர்கள், ‘‘நாங்கள் இதை தமீமிடமிருந்தும் அதீயிடமிருந்தும் வாங்கினோம்” என்று கூறினர்.

அப்போது (இறந்துபோன) சஹ்ம் குலத்தாரின் (நெருங்கிய) உறவினர்களில் இருவர் எழுந்து சத்தியம் செய்து, ‘‘எங்கள் சாட்சியம் அவர்கள் இருவரின் சாட்சியத்தைவிட அதிகத் தகுதி வாய்ந்ததாகும்; அந்தப் பாத்திரம் எங்கள் தோழருடையதே” என்று கூறினர். அவர்கள் தொடர்பாகவே இந்த வசனங்கள் (5:106லி108) அருளப்பெற்றன.

அத்தியாயம் : 55
2781. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَابِقٍ، أَوِ الْفَضْلُ بْنُ يَعْقُوبَ عَنْهُ حَدَّثَنَا شَيْبَانُ أَبُو مُعَاوِيَةَ، عَنْ فِرَاسٍ، قَالَ قَالَ الشَّعْبِيُّ حَدَّثَنِي جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيُّ ـ رضى الله عنهما ـ أَنَّ أَبَاهُ اسْتُشْهِدَ يَوْمَ أُحُدٍ، وَتَرَكَ سِتَّ بَنَاتٍ، وَتَرَكَ عَلَيْهِ دَيْنًا، فَلَمَّا حَضَرَ جِدَادُ النَّخْلِ أَتَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ قَدْ عَلِمْتَ أَنَّ وَالِدِي اسْتُشْهِدَ يَوْمَ أُحُدٍ وَتَرَكَ عَلَيْهِ دَيْنًا كَثِيرًا، وَإِنِّي أُحِبُّ أَنْ يَرَاكَ الْغُرَمَاءُ قَالَ "" اذْهَبْ فَبَيْدِرْ كُلَّ تَمْرٍ عَلَى نَاحِيَتِهِ "". فَفَعَلْتُ ثُمَّ دَعَوْتُهُ، فَلَمَّا نَظَرُوا إِلَيْهِ أُغْرُوا بِي تِلْكَ السَّاعَةَ، فَلَمَّا رَأَى مَا يَصْنَعُونَ أَطَافَ حَوْلَ أَعْظَمِهَا بَيْدَرًا ثَلاَثَ مَرَّاتٍ ثُمَّ جَلَسَ عَلَيْهِ ثُمَّ قَالَ "" ادْعُ أَصْحَابَكَ "". فَمَا زَالَ يَكِيلُ لَهُمْ حَتَّى أَدَّى اللَّهُ أَمَانَةَ وَالِدِي، وَأَنَا وَاللَّهِ رَاضٍ أَنْ يُؤَدِّيَ اللَّهُ أَمَانَةَ وَالِدِي وَلاَ أَرْجِعَ إِلَى أَخَوَاتِي بِتَمْرَةٍ، فَسَلِمَ وَاللَّهِ الْبَيَادِرُ كُلُّهَا حَتَّى أَنِّي أَنْظُرُ إِلَى الْبَيْدَرِ الَّذِي عَلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم كَأَنَّهُ لَمْ يَنْقُصْ تَمْرَةً وَاحِدَةً. قَالَ أَبُو عَبْد اللَّهِ أُغْرُوا بِي يَعْنِي هِيجُوا بِي فَأَغْرَيْنَا بَيْنَهُمْ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ
பாடம் : 36 இறந்தவரின் கடன்களை, வாரிசு கள் வராமலேயே அவரால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர் அடைக்கலாம்.
2781. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் தந்தை உஹுத் போரின்போது கொல்லப்பட்டுவிட்டார்கள். அவர்கள் ஆறு பெண் மக்களை விட்டுச்சென்றார்கள். தம்மீது கடனையும் விட்டுச்சென்றார்கள். பேரீச்சம் பழங்களைப் பறிக்கும் காலம் வந்தபோது, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, ‘‘அல்லாஹ் வின் தூதரே! என் தந்தை உஹுத் போரின்போது கொல்லப்பட்டுவிட்டதையும் தம்மீது நிறையக் கடன்களை விட்டுச் சென்றிருப்பதையும் தாங்கள் அறிவீர்கள். கடன்காரர்கள் தங்களைப் பார்க்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்” என்று கூறினேன்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘நீ போய், ஒவ்வொரு (வகைப்) பேரீச்சம் பழத்தையும் களத்தில் அதனதன் இடத்தில் குவித்து வை” என்று கூறினார்கள்.

நான் அவ்வாறே செய்தேன்; பிறகு நபியவர்களை அழைத்தேன். கடன்காரர்கள் நபி (ஸல்) அவர்களைக் கண்டவுடன் அந்த நேரத்தில் என்னிடம் இன்னும் அதிகமாக வற்புறுத்தலாயினர். அவர்கள் (இப்படிச்) செய்ததைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், அவற்றில் மிகவும் பெரிய குவியலை மூன்றுமுறை சுற்றி வந்து அதன் அருகே உட்கார்ந்து கொண்டார்கள்.

பிறகு, ‘‘உன் கடன்காரர்களைக் கூப்பிடு” என்று சொன்னார்கள். (அவர்கள் வந்ததும்) என் தந்தையின் கடனை அல்லாஹ் நிறைவேற்றித்தரும்வரை, அவர்களுக்கு அளந்து கொடுத்துக் கொண்டேயிருந்தார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! ஒரேயொரு பேரீச்சம் பழத்தைக்கூட எடுத்துக்கொண்டு என் சகோதரிகளிடம் திரும்பிச் செல்ல முடியாது என்ற நிலை ஏற்பட்டாலும் (பரவாயில்லை); என் தந்தையின் கடன் சுமையை அல்லாஹ் தீர்த்து வைத்தால் போதும் என்று நான் இருந்தேன்.

அல்லாஹ்வின் மீதாணையாக! குவியல் கள் அனைத்தும் அப்படியே (குறையாமல்) இருந்தன; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்த குவியலை நான் பார்த்தேன். அதிலிருந்து ஒரேயொரு பேரீச்சம் பழம்கூட குறையாததைப் போன்று அப்படியே இருந்தது.31

அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறுகிறேன்:

(‘அதிகமாக வற்புறுத்தினார்கள்’ என்பதைக் குறிக்க) இங்கு மூலத்தில் ‘அஃகர்ரூ’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. அதாவது என்னைத் திணறடித்துவிட்டார்கள். ‘‘நாம் அவர்களிடையே பகைமையையும் வெறுப்பையும் மூட்டினோம்” (5:14) எனும் வசனத்தொடரில் ‘அஃக்ரைனா’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது.

அத்தியாயம் : 55

2782. حَدَّثَنَا الْحَسَنُ بْنُ صَبَّاحٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَابِقٍ، حَدَّثَنَا مَالِكُ بْنُ مِغْوَلٍ، قَالَ سَمِعْتُ الْوَلِيدَ بْنَ الْعَيْزَارِ، ذَكَرَ عَنْ أَبِي عَمْرٍو الشَّيْبَانِيِّ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ ـ رضى الله عنه ـ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَىُّ الْعَمَلِ أَفْضَلُ قَالَ "" الصَّلاَةُ عَلَى مِيقَاتِهَا "". قُلْتُ ثُمَّ أَىٌّ. قَالَ "" ثُمَّ بِرُّ الْوَالِدَيْنِ "". قُلْتُ ثُمَّ أَىٌّ قَالَ "" الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ "". فَسَكَتُّ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَلَوِ اسْتَزَدْتُهُ لَزَادَنِي.
பாடம் : 1 அறப்போரின் சிறப்பும் அதன் வழி காட்டு நெறிகளும் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: இறைநம்பிக்கையாளர்களுக்கு நிச்சயமாக (சொர்க்க)ச் சோலை கிடைக்கும் என்பதற்குப் பதிலாக அவர்களின் உயிர்களையும் அவர்களின் உடைமைகளையும் அல்லாஹ் கொள்முதல் செய்துகொண்டான். அவர்கள் அல்லாஹ்வின் வழியில் அறப்போர் புரிகின்றனர். எனவே, அவர்கள் (எதிரிகளைக்) கொல்கின்றனர்; (எதிரி களால்) கொல்லப்படவும் செய்கின்றனர். (இறைவேதங்களான) தவ்ராத், இன்ஜீல், குர்ஆன் ஆகியவற்றில் அல்லாஹ் தன் மீது விதியாக்கிக்கொண்ட வாக்குறுதியாகும் (இது). அல்லாஹ்வைவிடத் தனது வாக்கை முழுமையாக நிறைவேற்றுபவர் வேறு யார் (இருக்க முடியும்)? எனவே, (இறை நம்பிக்கையாளர்களே!) நீங்கள் (அல்லாஹ் விடம்) செய்துகொண்ட (இந்த) வணிகம் குறித்து மகிழ்ச்சி அடையுங்கள். இதுவே மகத்தான வெற்றியாகும். (அவர்கள்) பாவமன்னிப்புக் கோரு வோர், (அல்லாஹ்வை) வழிபடுவோர், (அவனைப்) புகழ்வோர், நோன்பு நோற் போர், ருகூஉ செய்வோர், சிரவணக்கம் செய்வோர், நன்மையை ஏவுவோர், தீமையிலிருந்து (மக்களைத்) தடுப்போர், அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள வரையறை களைப் பேணிக்காப்போர் ஆவர். (நபியே! இத்தகைய) இறைநம்பிக்கையாளர்களுக்கு நீர் நற்செய்தி கூறுவீராக. (9:111,112) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: இங்கு (9:112ஆவது வசனத்தில் யிவரையறைகள்’ என்பதைக் குறிக்க மூலத் தில் யிஹுதூத்’ எனும் சொல் ஆளப்பட் டுள்ளது. இது இறைவழிபாடுகளைக் குறிக்கும்.
2782. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நற்செயல்களில் சிறந்தது எது?” என்று கேட்டேன். அவர்கள், ‘‘தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவது” என்று கூறினார்கள். ‘‘பிறகு எது (சிறந்தது)?” என்று நான் கேட்டேன் அவர்கள், ‘‘பிறகு தாய் தந்தையருக்கு நன்மை செய்வது” என்று பதிலளித்தார்கள்.

நான், ‘‘பிறகு எது (சிறந்தது)?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘இறைவழியில் அறப்போர் புரிவதாகும்” என்று பதில் சொன்னார்கள்.

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (இதற்குமேல்) வேறெதுவும் கேட்காமல் மௌனமாகிவிட்டேன். நான் இன்னும் கேட்டிருந்தால் அவர்கள் இன்னும் பதிலளித்திருப்பார்கள்.2


அத்தியாயம் : 56
2783. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنِي مَنْصُورٌ، عَنْ مُجَاهِدٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ""لاَ هِجْرَةَ بَعْدَ الْفَتْحِ وَلَكِنْ جِهَادٌ وَنِيَّةٌ، وَإِذَا اسْتُنْفِرْتُمْ فَانْفِرُوا "".
பாடம் : 1 அறப்போரின் சிறப்பும் அதன் வழி காட்டு நெறிகளும் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: இறைநம்பிக்கையாளர்களுக்கு நிச்சயமாக (சொர்க்க)ச் சோலை கிடைக்கும் என்பதற்குப் பதிலாக அவர்களின் உயிர்களையும் அவர்களின் உடைமைகளையும் அல்லாஹ் கொள்முதல் செய்துகொண்டான். அவர்கள் அல்லாஹ்வின் வழியில் அறப்போர் புரிகின்றனர். எனவே, அவர்கள் (எதிரிகளைக்) கொல்கின்றனர்; (எதிரி களால்) கொல்லப்படவும் செய்கின்றனர். (இறைவேதங்களான) தவ்ராத், இன்ஜீல், குர்ஆன் ஆகியவற்றில் அல்லாஹ் தன் மீது விதியாக்கிக்கொண்ட வாக்குறுதியாகும் (இது). அல்லாஹ்வைவிடத் தனது வாக்கை முழுமையாக நிறைவேற்றுபவர் வேறு யார் (இருக்க முடியும்)? எனவே, (இறை நம்பிக்கையாளர்களே!) நீங்கள் (அல்லாஹ் விடம்) செய்துகொண்ட (இந்த) வணிகம் குறித்து மகிழ்ச்சி அடையுங்கள். இதுவே மகத்தான வெற்றியாகும். (அவர்கள்) பாவமன்னிப்புக் கோரு வோர், (அல்லாஹ்வை) வழிபடுவோர், (அவனைப்) புகழ்வோர், நோன்பு நோற் போர், ருகூஉ செய்வோர், சிரவணக்கம் செய்வோர், நன்மையை ஏவுவோர், தீமையிலிருந்து (மக்களைத்) தடுப்போர், அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள வரையறை களைப் பேணிக்காப்போர் ஆவர். (நபியே! இத்தகைய) இறைநம்பிக்கையாளர்களுக்கு நீர் நற்செய்தி கூறுவீராக. (9:111,112) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: இங்கு (9:112ஆவது வசனத்தில் யிவரையறைகள்’ என்பதைக் குறிக்க மூலத் தில் யிஹுதூத்’ எனும் சொல் ஆளப்பட் டுள்ளது. இது இறைவழிபாடுகளைக் குறிக்கும்.
2783. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(மக்காவின்) வெற்றிக்குப் பின்னால் (மக்காவிலிருந்து) புலம்பெயர்தல் (ஹிஜ்ரத்) என்பது கிடையாது. ஆனால், அறப்போர் புரிவதும் (அதற்காகவும் பிற நற்செயல்கள் புரியவும்) நாட்டம் கொள்வதும் உண்டு. போருக்குப் புறப்படும்படி நீங்கள் அழைக்கப்பட்டால் உடனே போருக்குச் செல்லுங்கள்” என்று கூறினார்கள்.3


அத்தியாயம் : 56
2784. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا خَالِدٌ، حَدَّثَنَا حَبِيبُ بْنُ أَبِي عَمْرَةَ، عَنْ عَائِشَةَ بِنْتِ طَلْحَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّهَا قَالَتْ يَا رَسُولَ اللَّهِ تُرَى الْجِهَادَ أَفْضَلَ الْعَمَلِ، أَفَلاَ نُجَاهِدُ قَالَ "" لَكِنَّ أَفْضَلَ الْجِهَادِ حَجٌّ مَبْرُورٌ "".
பாடம் : 1 அறப்போரின் சிறப்பும் அதன் வழி காட்டு நெறிகளும் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: இறைநம்பிக்கையாளர்களுக்கு நிச்சயமாக (சொர்க்க)ச் சோலை கிடைக்கும் என்பதற்குப் பதிலாக அவர்களின் உயிர்களையும் அவர்களின் உடைமைகளையும் அல்லாஹ் கொள்முதல் செய்துகொண்டான். அவர்கள் அல்லாஹ்வின் வழியில் அறப்போர் புரிகின்றனர். எனவே, அவர்கள் (எதிரிகளைக்) கொல்கின்றனர்; (எதிரி களால்) கொல்லப்படவும் செய்கின்றனர். (இறைவேதங்களான) தவ்ராத், இன்ஜீல், குர்ஆன் ஆகியவற்றில் அல்லாஹ் தன் மீது விதியாக்கிக்கொண்ட வாக்குறுதியாகும் (இது). அல்லாஹ்வைவிடத் தனது வாக்கை முழுமையாக நிறைவேற்றுபவர் வேறு யார் (இருக்க முடியும்)? எனவே, (இறை நம்பிக்கையாளர்களே!) நீங்கள் (அல்லாஹ் விடம்) செய்துகொண்ட (இந்த) வணிகம் குறித்து மகிழ்ச்சி அடையுங்கள். இதுவே மகத்தான வெற்றியாகும். (அவர்கள்) பாவமன்னிப்புக் கோரு வோர், (அல்லாஹ்வை) வழிபடுவோர், (அவனைப்) புகழ்வோர், நோன்பு நோற் போர், ருகூஉ செய்வோர், சிரவணக்கம் செய்வோர், நன்மையை ஏவுவோர், தீமையிலிருந்து (மக்களைத்) தடுப்போர், அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள வரையறை களைப் பேணிக்காப்போர் ஆவர். (நபியே! இத்தகைய) இறைநம்பிக்கையாளர்களுக்கு நீர் நற்செய்தி கூறுவீராக. (9:111,112) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: இங்கு (9:112ஆவது வசனத்தில் யிவரையறைகள்’ என்பதைக் குறிக்க மூலத் தில் யிஹுதூத்’ எனும் சொல் ஆளப்பட் டுள்ளது. இது இறைவழிபாடுகளைக் குறிக்கும்.
2784. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (நபி (ஸல்) அவர்களிடம்), ‘‘அல்லாஹ்வின் தூதரே! அறப்போர் புரிவதை சிறந்த நற்செயலாக நாங்கள் கருதுகிறோம். எனவே, (பெண்களாகிய) நாங்களும் அறப்போர் புரியலாமா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘(பெண்களான) உங்களுக்குச் சிறந்த அறப்போர், பாவச்செயல் கலவாத ஹஜ்தான்” என்று பதிலளித்தார்கள்.4


அத்தியாயம் : 56
2785. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا عَفَّانُ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جُحَادَةَ، قَالَ أَخْبَرَنِي أَبُو حَصِينٍ، أَنَّ ذَكْوَانَ، حَدَّثَهُ أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ حَدَّثَهُ قَالَ جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ دُلَّنِي عَلَى عَمَلٍ يَعْدِلُ الْجِهَادَ. قَالَ "" لاَ أَجِدُهُ ـ قَالَ ـ هَلْ تَسْتَطِيعُ إِذَا خَرَجَ الْمُجَاهِدُ أَنْ تَدْخُلَ مَسْجِدَكَ فَتَقُومَ وَلاَ تَفْتُرَ وَتَصُومَ وَلاَ تُفْطِرَ "". قَالَ وَمَنْ يَسْتَطِيعُ ذَلِكَ قَالَ أَبُو هُرَيْرَةَ إِنَّ فَرَسَ الْمُجَاهِدِ لَيَسْتَنُّ فِي طِوَلِهِ فَيُكْتَبُ لَهُ حَسَنَاتٍ.
பாடம் : 1 அறப்போரின் சிறப்பும் அதன் வழி காட்டு நெறிகளும் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: இறைநம்பிக்கையாளர்களுக்கு நிச்சயமாக (சொர்க்க)ச் சோலை கிடைக்கும் என்பதற்குப் பதிலாக அவர்களின் உயிர்களையும் அவர்களின் உடைமைகளையும் அல்லாஹ் கொள்முதல் செய்துகொண்டான். அவர்கள் அல்லாஹ்வின் வழியில் அறப்போர் புரிகின்றனர். எனவே, அவர்கள் (எதிரிகளைக்) கொல்கின்றனர்; (எதிரி களால்) கொல்லப்படவும் செய்கின்றனர். (இறைவேதங்களான) தவ்ராத், இன்ஜீல், குர்ஆன் ஆகியவற்றில் அல்லாஹ் தன் மீது விதியாக்கிக்கொண்ட வாக்குறுதியாகும் (இது). அல்லாஹ்வைவிடத் தனது வாக்கை முழுமையாக நிறைவேற்றுபவர் வேறு யார் (இருக்க முடியும்)? எனவே, (இறை நம்பிக்கையாளர்களே!) நீங்கள் (அல்லாஹ் விடம்) செய்துகொண்ட (இந்த) வணிகம் குறித்து மகிழ்ச்சி அடையுங்கள். இதுவே மகத்தான வெற்றியாகும். (அவர்கள்) பாவமன்னிப்புக் கோரு வோர், (அல்லாஹ்வை) வழிபடுவோர், (அவனைப்) புகழ்வோர், நோன்பு நோற் போர், ருகூஉ செய்வோர், சிரவணக்கம் செய்வோர், நன்மையை ஏவுவோர், தீமையிலிருந்து (மக்களைத்) தடுப்போர், அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள வரையறை களைப் பேணிக்காப்போர் ஆவர். (நபியே! இத்தகைய) இறைநம்பிக்கையாளர்களுக்கு நீர் நற்செய்தி கூறுவீராக. (9:111,112) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: இங்கு (9:112ஆவது வசனத்தில் யிவரையறைகள்’ என்பதைக் குறிக்க மூலத் தில் யிஹுதூத்’ எனும் சொல் ஆளப்பட் டுள்ளது. இது இறைவழிபாடுகளைக் குறிக்கும்.
2785. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘‘அறப்போருக்கு ஈடான ஒரு நற்செயலை எனக்கு அறிவியுங்கள்” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படி எதையும் நான் காணவில்லை” என்று கூறிவிட்டு, ‘‘அறப்போராளி (போருக்காகப்) புறப்பட்டுச் சென்றபின், (அவருக்கு இணையான நற்செயல் புரிந்திட வேண்டி) நீர் உமது பள்ளிவாசலுக்குச் சென்று இடைவிடாமல் தொழுதுகொண்டும் தொடர்ந்து நோன்பு நோற்றுக்கொண்டும் இருக்க உம்மால் முடியுமா?” என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், ‘‘அது யாரால் முடியும்?” என்று பதிலளித்தார்.5

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறு கிறார்கள்:

அறப்போராளியின் குதிரை, அதைக் கட்டிவைத்துள்ள மேய்ச்சல் கயிற்றுக் கிடையே (கால்களை உதைத்துக்கொண்டு) சில தடவை குதித்துச் சென்றால் அதுவும் அவருக்கு நன்மையாக எழுதப்படும்.

அத்தியாயம் : 56
2786. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي عَطَاءُ بْنُ يَزِيدَ اللَّيْثِيُّ، أَنَّ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ـ رضى الله عنه ـ حَدَّثَهُ قَالَ قِيلَ يَا رَسُولَ اللَّهِ، أَىُّ النَّاسِ أَفْضَلُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مُؤْمِنٌ يُجَاهِدُ فِي سَبِيلِ اللَّهِ بِنَفْسِهِ وَمَالِهِ "". قَالُوا ثُمَّ مَنْ قَالَ "" مُؤْمِنٌ فِي شِعْبٍ مِنَ الشِّعَابِ يَتَّقِي اللَّهَ، وَيَدَعُ النَّاسَ مِنْ شَرِّهِ "".
பாடம் : 2 இறைவழியில் உயிராலும் பொரு ளாலும் போராடும் இறைநம்பிக்கை யாளர்தான் மனிதர்களிலேயே சிறந்தவர். உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களை வதைக்கும் வேதனை’லிருந்து காப்பாற்றக்கூடிய ஒரு வணிக (பேர)த்தை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? (அதுதான்) நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் நம்பிக்கை கொள்வதும் இறைவழியில் உங்கள் உடைமைகளாலும் உயிர்களாலும் போராடுவதும் ஆகும். (இதனால் கிடைக்கும் பெரும் நன்மையை) நீங்கள் அறிவீர்களாயின் இதுவே உங்களுக்குச் சிறந்ததாகும். உங்கள் பாவங்களை மன்னித்து, இடையே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சொர்க்க(த் தோட்ட)ங்களில் உங்களை அவன் அனுமதிப்பான்; நிலையான சொர்க்கங்களில் சிறந்த வீடுகளையும் உங்களுக்கு அவன் அளிப்பான். அதுவே மகத்தான வெற்றியாகும். (61:10லி12)
2786. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘அல்லாஹ்வின் தூதரே! மக்களில் சிறந்தவர் யார்?” என்று கேட்கப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இறைவழியில் தமது உயிராலும் தமது பொருளாலும் போராடுபவரே (மக்களில் சிறந்தவர்)” என்று பதிலளித்தார்கள்.

மக்கள், ‘‘பிறகு யார்?” என்று கேட்டார் கள். ‘‘மலைக் கணவாய்களில் ஒன்றில் வசித்துக்கொண்டு, அல்லாஹ்வை அஞ்சிய வண்ணம் தம்மால் மக்களுக்குத் தீங்கு நேராமல் தவிர்த்து வருபவரே சிறந்தவர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.


அத்தியாயம் : 56
2787. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" مَثَلُ الْمُجَاهِدِ فِي سَبِيلِ اللَّهِ ـ وَاللَّهُ أَعْلَمُ بِمَنْ يُجَاهِدُ فِي سَبِيلِهِ ـ كَمَثَلِ الصَّائِمِ الْقَائِمِ، وَتَوَكَّلَ اللَّهُ لِلْمُجَاهِدِ فِي سَبِيلِهِ بِأَنْ يَتَوَفَّاهُ أَنْ يُدْخِلَهُ الْجَنَّةَ، أَوْ يَرْجِعَهُ سَالِمًا مَعَ أَجْرٍ أَوْ غَنِيمَةٍ "".
பாடம் : 2 இறைவழியில் உயிராலும் பொரு ளாலும் போராடும் இறைநம்பிக்கை யாளர்தான் மனிதர்களிலேயே சிறந்தவர். உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களை வதைக்கும் வேதனை’லிருந்து காப்பாற்றக்கூடிய ஒரு வணிக (பேர)த்தை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? (அதுதான்) நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் நம்பிக்கை கொள்வதும் இறைவழியில் உங்கள் உடைமைகளாலும் உயிர்களாலும் போராடுவதும் ஆகும். (இதனால் கிடைக்கும் பெரும் நன்மையை) நீங்கள் அறிவீர்களாயின் இதுவே உங்களுக்குச் சிறந்ததாகும். உங்கள் பாவங்களை மன்னித்து, இடையே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சொர்க்க(த் தோட்ட)ங்களில் உங்களை அவன் அனுமதிப்பான்; நிலையான சொர்க்கங்களில் சிறந்த வீடுகளையும் உங்களுக்கு அவன் அளிப்பான். அதுவே மகத்தான வெற்றியாகும். (61:10லி12)
2787. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைவழியில் போராடுபவரின் நிலை யானது, லிஉண்மையாகப் போராடுபவர் யார் என்பது அல்லாஹ்வுக்கே தெரியும்லி (அல்லாஹ்வைத்) தொழுதும், (அவனுக்காக) நோன்பு நோற்றும்வருபவரின் நிலையைப் போன்றதாகும்.

அல்லாஹ், தன் பாதையில் போராடுபவரின் உயிர்த் தியாகத்தை ஏற்று, அவரைச் சொர்க்கத்தில் அனுமதிக்கப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளான். அல்லது நன்மையுடனோ போர்ச் செல்வத்துடனோ அவரைத் திரும்பவைக்கப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 56
2788. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، عَنْ مَالِكٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّهُ سَمِعَهُ يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدْخُلُ عَلَى أُمِّ حَرَامٍ بِنْتِ مِلْحَانَ، فَتُطْعِمُهُ، وَكَانَتْ أُمُّ حَرَامٍ تَحْتَ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، فَدَخَلَ عَلَيْهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَأَطْعَمَتْهُ وَجَعَلَتْ تَفْلِي رَأْسَهُ، فَنَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ اسْتَيْقَظَ وَهُوَ يَضْحَكُ. قَالَتْ فَقُلْتُ وَمَا يُضْحِكُكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ "" نَاسٌ مِنْ أُمَّتِي عُرِضُوا عَلَىَّ، غُزَاةً فِي سَبِيلِ اللَّهِ، يَرْكَبُونَ ثَبَجَ هَذَا الْبَحْرِ، مُلُوكًا عَلَى الأَسِرَّةِ، أَوْ مِثْلُ الْمُلُوكِ عَلَى الأَسِرَّةِ "". شَكَّ إِسْحَاقُ. قَالَتْ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ. فَدَعَا لَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ وَضَعَ رَأْسَهُ، ثُمَّ اسْتَيْقَظَ وَهُوَ يَضْحَكُ فَقُلْتُ وَمَا يُضْحِكُكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ "" نَاسٌ مِنْ أُمَّتِي عُرِضُوا عَلَىَّ، غُزَاةً فِي سَبِيلِ اللَّهِ "". كَمَا قَالَ فِي الأَوَّلِ. قَالَتْ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ، ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ. قَالَ "" أَنْتِ مِنَ الأَوَّلِينَ "". فَرَكِبَتِ الْبَحْرَ فِي زَمَانِ مُعَاوِيَةَ بْنِ أَبِي سُفْيَانَ، فَصُرِعَتْ عَنْ دَابَّتِهَا حِينَ خَرَجَتْ مِنَ الْبَحْرِ، فَهَلَكَتْ.
பாடம் : 3 அறப்போர் புரியவும் அதில் உயிர்த் தியாகம் செய்யவும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நல்வாய்ப்பு வேண்டிப் பிரார்த்தித்தல் உமர் (ரலி) அவர்கள், ‘‘இறைவா! உன் தூதருடைய ஊரில் உயிர்த் தியாகம் செய்யும் வாய்ப்பை எனக்கு அளிப்பாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.6
2788. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் பின்த் மில்ஹான் (ரலி) அவர்களின் வீட்டிற்குச் செல்பவராக இருந்தார்கள்.7 அப்போது அவர் நபி (ஸல்) அவர்களுக்கு உணவு கொடுப்பார். உம்மு ஹராம் (ரலி) அவர்கள், உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்களின் மனைவியாக இருந்தார்கள்.

(இவ்வாறே ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அவர் நபி (ஸல்) அவர்களுக்கு உணவு கொடுத்துவிட்டு அவர்களின் தலையில் பேன்பார்க்கத் தொடங்கினார். அப்படியே நபி (ஸல்) அவர்கள் உறங்கிவிட்டார்கள்.

பிறகு சிரித்துக்கொண்டே கண் விழித் தார்கள். உம்மு ஹராம் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! ஏன் (இப்படிச்) சிரிக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘என் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் சிலர் எனக்குக் காட்டப்பட்டனர்; அவர்கள் இறைவழியில் அறப்போர் புரியும் வீரர்களாவர். அவர்கள் இந்தக் கடலின் முதுகில் கட்டில்களில் (சாய்ந்து) அமர்ந்திருக்கும் மன்னர்களாக லிஅல்லது கட்டில்களில் அமர்ந்திருக்கும் மன்னர்களைப் போன்றுலி ஏறிச்செல்கின் றார்கள்” என்று பதிலளித்தார்கள்.

அதற்கு உம்மு ஹராம் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் ஒருத்தியாக என்னை ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று கூறினார்கள். அவருக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.

பிறகு தமது தலையை(த் தலையணை யில்) வைத்(து உறங்க ஆரம்பித்)தார்கள்; பிறகு சிரித்தபடியே விழித்தெழுந்தார்கள். அப்போது உம்மு ஹராம் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! ஏன் சிரிக் கிறீர்கள்” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘என் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் சிலர், இறைவழியில் அறப்போர் புரிபவர்களாக எனக்குக் காட்டப்பட்டனர்....” என்று முன்பு போலவே கூறினார்கள்.

உம்மு ஹராம் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் ஒருத்தி யாக என்னை ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் (அறப்போருக்காகக் கடலில்) முதன்முதலாகப் பயணிப்பவர்களில் ஒருவராக இருப்பீர்கள்” என்று கூறினார்கள்.

அவ்வாறே, முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்கள் (கிழக்கு ரோம்மீது போர் புரியச் சென்ற) காலத்தில் உம்மு ஹராம் (ரலி) அவர்களும் கடல் பயணம் மேற்கொண்டார்கள். பிறகு கடலிலிருந்து புறப்பட்டு (கரைக்கு) வந்தபோது, தமது வாகனத்திலிருந்து கீழே விழுந்து இறந்து போனார்கள்.

அத்தியாயம் : 56
2790. حَدَّثَنَا يَحْيَى بْنُ صَالِحٍ، حَدَّثَنَا فُلَيْحٌ، عَنْ هِلاَلِ بْنِ عَلِيٍّ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَنْ آمَنَ بِاللَّهِ وَبِرَسُولِهِ وَأَقَامَ الصَّلاَةَ وَصَامَ رَمَضَانَ، كَانَ حَقًّا عَلَى اللَّهِ أَنْ يُدْخِلَهُ الْجَنَّةَ جَاهَدَ فِي سَبِيلِ اللَّهِ، أَوْ جَلَسَ فِي أَرْضِهِ الَّتِي وُلِدَ فِيهَا "". فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ أَفَلاَ نُبَشِّرُ النَّاسَ. قَالَ "" إِنَّ فِي الْجَنَّةِ مِائَةَ دَرَجَةٍ أَعَدَّهَا اللَّهُ لِلْمُجَاهِدِينَ فِي سَبِيلِ اللَّهِ، مَا بَيْنَ الدَّرَجَتَيْنِ كَمَا بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ، فَإِذَا سَأَلْتُمُ اللَّهَ فَاسْأَلُوهُ الْفِرْدَوْسَ، فَإِنَّهُ أَوْسَطُ الْجَنَّةِ وَأَعْلَى الْجَنَّةِ، أُرَاهُ فَوْقَهُ عَرْشُ الرَّحْمَنِ، وَمِنْهُ تَفَجَّرُ أَنْهَارُ الْجَنَّةِ "". قَالَ مُحَمَّدُ بْنُ فُلَيْحٍ عَنْ أَبِيهِ "" وَفَوْقَهُ عَرْشُ الرَّحْمَنِ "".
பாடம் : 4 இறைவழியில் அறப் போர் புரிபவர்களின் தகுதிகள் (பாதை என்பதைக் குறிக்க) மூலத்தில் யிசபீல்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இச்சொல் ஆண்பாலாகவும் பெண் பாலாகவும் பயன்படுத்தப்படுகிறது. அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறு கிறேன்: ‘அறப்போராளி’ என்பதை யிஃகாஸ்’ என்பர். இதன் பன்மை யிஃகுஸ்ஸு’ என்ப தாகும். ‘‘அவர்கள் அல்லாஹ்விடம் பலதரப்பட்டவர்கள் ஆவர்” (3:163) என்ப தற்கு ‘‘அவர்களுக்கு அல்லாஹ்விடம் பல தரங்கள் உண்டு” என்பது பொருளாகும்.
2790. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொண்டு, தொழுகையைக் கடைப்பிடித்து, ரமளானில் நோன்பும் நோற்ற மனிதரைச் சொர்க்கத்தில் அனுமதிப்பது அல்லாஹ்வின் மீது கடமையாகிவிட்டது; அவர் இறைவழியில் அறப்போர் புரிந்தாலும் சரி; அல்லது அவர் பிறந்த பூமியில் உட்கார்ந்துகொண்டாலும் சரி” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது, ‘‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் மக்களுக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கலாமா?” என்று (நபித்தோழர்கள்) கேட்டனர். அதற்கு அவர்கள், ‘‘சொர்க் கத்தில் நூறு தரங்கள் உள்ளன. அவற்றை அல்லாஹ், தமது பாதையில் அறப்போர் புரிபவர்களுக்காகத் தயார்படுத்திவைத்துள்ளான். இரு தரங்களுக்கிடையே வானத்திற்கும் பூமிக்கும் இடையிலுள்ள தைப் போன்ற இடைவெளி உள்ளது. நீங்கள் அல்லாஹ்விடம் கேட்டால், யிஃபிர்தவ்ஸ்’ எனும் (சொர்க்கத்தின்) தரத்தையே கேளுங்கள்; ஏனெனில், அதுவே சொர்க்கத்தின் மிகச் சிறந்த தரமும் மிக உயர்ந்த தரமும் ஆகும்” என்று கூறினார்கள்.

(அறிவிப்பாளரான யஹ்யா பின் ஸாலிஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:)

‘‘அதற்குமேலே கருணையாள(னான இறைவ)னின் அரியணை (அர்ஷ்) இருக்கிறது. அதிலிருந்தே சொர்க்கத்தின் ஆறுகள் பாய்கின்ற”’ என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியதாகக் கருதுகிறேன்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் முஹம்மத் பின் ஃபுலைஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘‘அதற்குமேலே ரஹ்மானின் அரியணை இருக்கிறது” என்று (நபி (ஸல்) அவர்கள் கூறியதாகச் சந்தேகத் தொனியின்றி) அறிவிக்கப்பட் டுள்ளது.


அத்தியாயம் : 56
2791. حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا جَرِيرٌ، حَدَّثَنَا أَبُو رَجَاءٍ، عَنْ سَمُرَةَ، قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" رَأَيْتُ اللَّيْلَةَ رَجُلَيْنِ أَتَيَانِي فَصَعِدَا بِي الشَّجَرَةَ، فَأَدْخَلاَنِي دَارًا هِيَ أَحْسَنُ وَأَفْضَلُ، لَمْ أَرَ قَطُّ أَحْسَنَ مِنْهَا قَالاَ أَمَّا هَذِهِ الدَّارُ فَدَارُ الشُّهَدَاءِ "".
பாடம் : 4 இறைவழியில் அறப் போர் புரிபவர்களின் தகுதிகள் (பாதை என்பதைக் குறிக்க) மூலத்தில் யிசபீல்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இச்சொல் ஆண்பாலாகவும் பெண் பாலாகவும் பயன்படுத்தப்படுகிறது. அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறு கிறேன்: ‘அறப்போராளி’ என்பதை யிஃகாஸ்’ என்பர். இதன் பன்மை யிஃகுஸ்ஸு’ என்ப தாகும். ‘‘அவர்கள் அல்லாஹ்விடம் பலதரப்பட்டவர்கள் ஆவர்” (3:163) என்ப தற்கு ‘‘அவர்களுக்கு அல்லாஹ்விடம் பல தரங்கள் உண்டு” என்பது பொருளாகும்.
2791. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இன்றிரவு இரண்டு பேரைக் (கனவில்) கண்டேன்; அவர்கள் இருவரும் என்னிடம் வந்து, என்னுடன் ஒரு மரத்தின் மீது ஏறி அழகான, சிறந்த ஒரு வீட்டினுள் புகச்செய்தார்கள். அதைவிட அழகான ஒரு வீட்டை நான் பார்த்ததே யில்லை; (அவர்களில் ஒருவர்,) ‘‘இந்த வீடு இறைவழியில் உயிர்த் தியாகம் புரிந்தவர்களின் வீடாகும்” என்று சொன்னார்.

அத்தியாயம் : 56
2792. حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لَغَدْوَةٌ فِي سَبِيلِ اللَّهِ أَوْ رَوْحَةٌ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا "".
பாடம் : 5 இறைவழியில் காலையிலும் மாலையிலும் (சிறிது நேரம் போரிடச்) செல்வதும் சொர்க்கத்தில் ஒரு வில்லின் அளவுக்கு இடம் கிடைப்பதும்
2792. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

இறைவழியில் காலை நேரத்தில் சிறிது நேரம், அல்லது ஒரு மாலை நேரத்தில் சிறிது நேரம் (போர் புரியச்) செல்வது உலகத்தையும் அதிலுள்ள பொருட்களையும் விடச் சிறந்ததாகும்.

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 56
2793. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُلَيْحٍ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ هِلاَلِ بْنِ عَلِيٍّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي عَمْرَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ""لَقَابُ قَوْسٍ فِي الْجَنَّةِ خَيْرٌ مِمَّا تَطْلُعُ عَلَيْهِ الشَّمْسُ وَتَغْرُبُ "". وَقَالَ "" لَغَدْوَةٌ أَوْ رَوْحَةٌ فِي سَبِيلِ اللَّهِ خَيْرٌ مِمَّا تَطْلُعُ عَلَيْهِ الشَّمْسُ وَتَغْرُبُ "".
பாடம் : 5 இறைவழியில் காலையிலும் மாலையிலும் (சிறிது நேரம் போரிடச்) செல்வதும் சொர்க்கத்தில் ஒரு வில்லின் அளவுக்கு இடம் கிடைப்பதும்
2793. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

சொர்க்கத்தில் ஒரு வில்லின் அளவுக்கு இடம் கிடைப்பதானது, சூரியன் எதன் மீது உதித்து மறைகின்றதோ அ(ந்த உலகத்)தைவிடச் சிறந்ததாகும். மேலும், அல்லாஹ் வின் பாதையில் ஒரு காலை நேரத்தில் சிறிது நேரம் (போர் புரியச்) செல்வது, அல்லது ஒரு மாலை நேரத்தில் சிறிது நேரம் (போர் புரியச்) செல்வது சூரியன் எதன் மீது உதித்து மறைகின்றதோ அ(ந்த உலகத்)தைவிடச் சிறந்ததாகும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 56
2794. حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" الرَّوْحَةُ وَالْغَدْوَةُ فِي سَبِيلِ اللَّهِ أَفْضَلُ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا "".
பாடம் : 5 இறைவழியில் காலையிலும் மாலையிலும் (சிறிது நேரம் போரிடச்) செல்வதும் சொர்க்கத்தில் ஒரு வில்லின் அளவுக்கு இடம் கிடைப்பதும்
2794. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

இறைவழியில் காலையிலும் மாலை யிலும் சிறிது நேரம் (போர் புரியச்) செல்வது உலகத்தைவிடவும் அதிலுள்ள பொருட்களைவிடவும் சிறந்ததாகும்.

இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 56
2795. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ حُمَيْدٍ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَا مِنْ عَبْدٍ يَمُوتُ لَهُ عِنْدَ اللَّهِ خَيْرٌ، يَسُرُّهُ أَنْ يَرْجِعَ إِلَى الدُّنْيَا، وَأَنَّ لَهُ الدُّنْيَا وَمَا فِيهَا، إِلاَّ الشَّهِيدَ، لِمَا يَرَى مِنْ فَضْلِ الشَّهَادَةِ، فَإِنَّهُ يَسُرُّهُ أَنْ يَرْجِعَ إِلَى الدُّنْيَا فَيُقْتَلَ مَرَّةً أُخْرَى "".
பாடம் : 6 யிஹூருல் ஈன்' எனும் அகன்ற விழி களையுடைய சொர்க்கக் கன்னி யரும் அவர்களின் தன்மையும் யிஹூருல் ஈன்’ எனும் சொல்லுக்கு, (அக்கன்னியரைக் காணும்) கண்கள் திகைத்துவிடும் என்பது பொருளாகும். அவர்களின் கருவிழியும் வெண்விழியும் அடர்த்தியான நிறம் கொண்டிருக்கும. (44:54; 53:30 ஆகிய வசனங்களில் இடம் பெற்றுள்ள) ‘‘அவர்களுக்கு ஹூருல் ஈன்களைத் துணைகளாக்குவோம்” என்பற்கு, ‘அவர்களுக்கு மணமுடித்துத் தருவோம்’ என்பது பொருளாகும்.
2795. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

அல்லாஹ்விடம் நற்பலன் பெறுபவராக இறந்துபோகின்ற எந்த (நல்ல) அடியாரும் இந்த உலகமும் அதிலுள்ளவை அனைத்தும் அவருக்குக் கிடைக்கும் என்றிருந்தாலும்கூட உலகிற்குத் திரும்பிவர விரும்பமாட்டார்; இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவரைத் தவிர; ஏனெனில், உயிர்த் தியாகத்தின் சிறப்பை (மறுமையில்) அவர் காண்கின்றார். ஆகவே, இந்த உலகிற்கு மீண்டும் வந்து மறுபடியும் ஒருமுறை (இறைவழியில் போரிட்டுக்) கொல்லப்படுவதை அவர் விரும்புவார்.

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 56
2796. وَسَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم "" لَرَوْحَةٌ فِي سَبِيلِ اللَّهِ أَوْ غَدْوَةٌ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا، وَلَقَابُ قَوْسِ أَحَدِكُمْ مِنَ الْجَنَّةِ أَوْ مَوْضِعُ قِيدٍ ـ يَعْنِي سَوْطَهُ ـ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا، وَلَوْ أَنَّ امْرَأَةً مِنْ أَهْلِ الْجَنَّةِ اطَّلَعَتْ إِلَى أَهْلِ الأَرْضِ لأَضَاءَتْ مَا بَيْنَهُمَا وَلَمَلأَتْهُ رِيحًا، وَلَنَصِيفُهَا عَلَى رَأْسِهَا خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا "".
பாடம் : 6 யிஹூருல் ஈன்' எனும் அகன்ற விழி களையுடைய சொர்க்கக் கன்னி யரும் அவர்களின் தன்மையும் யிஹூருல் ஈன்’ எனும் சொல்லுக்கு, (அக்கன்னியரைக் காணும்) கண்கள் திகைத்துவிடும் என்பது பொருளாகும். அவர்களின் கருவிழியும் வெண்விழியும் அடர்த்தியான நிறம் கொண்டிருக்கும. (44:54; 53:30 ஆகிய வசனங்களில் இடம் பெற்றுள்ள) ‘‘அவர்களுக்கு ஹூருல் ஈன்களைத் துணைகளாக்குவோம்” என்பற்கு, ‘அவர்களுக்கு மணமுடித்துத் தருவோம்’ என்பது பொருளாகும்.
2796. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைவழியில் காலையில் சிறிது நேரம், அல்லது மாலையில் சிறிது நேரம் (போர் புரியச்) செல்வது உலகத்தையும் அதிலுள்ள பொருட்களையும்விடச் சிறந்தது. உங்களில் ஒருவருடைய வில்லின் அளவுக்குச் சமமான, அல்லது ஒரு சாட்டையளவுக்குச் சமமான இடம் சொர்க் கத்தில் கிடைப்பதானது, உலகத்தையும் அதிலுள்ளவற்றையும்விடச் சிறந்தது.

சொர்க்கவாசிகளில் (ஹூருல் ஈன் களில்) ஒரு பெண் உலகத்தாரிடையே தோன்றினால், வானத்திற்கும் பூமிக்கு மிடையே உள்ள அனைத்தையும் அவள் ஒளிறச்செய்துவிடுவாள்; பூமியை நறுமணத்தால் நிரப்பிவிடுவாள். அவளது தலையிலுள்ள முக்காடு உலகத்தையும் அதிலுள்ளவற்றையும்விடச் சிறந்ததாகும்.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 56
2797. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْلاَ أَنَّ رِجَالاً مِنَ الْمُؤْمِنِينَ لاَ تَطِيبُ أَنْفُسُهُمْ أَنْ يَتَخَلَّفُوا عَنِّي، وَلاَ أَجِدُ مَا أَحْمِلُهُمْ عَلَيْهِ، مَا تَخَلَّفْتُ عَنْ سَرِيَّةٍ تَغْزُو فِي سَبِيلِ اللَّهِ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوَدِدْتُ أَنِّي أُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ ثُمَّ أُحْيَا، ثُمَّ أُقْتَلُ ثُمَّ أُحْيَا، ثُمَّ أُقْتَلُ ثُمَّ أُحْيَا، ثُمَّ أُقْتَلُ "".
பாடம் : 7 உயிர்த் தியாகத்தை விரும்புதல்
2797. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

என் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! இறைநம்பிக்கை யாளர்களில் சிலரை ஏற்றிச்செல்ல எனக்கு வாகனமும் கிடைக்கவில்லை; அவர்கள் என்னைவிட்டுப் பின்தங்கிவிடுவது அவர்களின் மனதுக்கு மகிழ்ச்சியும் அளிக் காது என்பது (மட்டும்) இல்லையாயின், இறைவழியில் (போருக்குப்) புறப்படும் எந்தச் சிறு படையுடனும் நான் செல்லாமல் (ஊரில்) இருக்கமாட்டேன்8.

என் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! நான் அல்லாஹ் வின் பாதையில் கொல்லப்பட்டு, பிறகு உயிராக்கப்பட்டு, மீண்டும் கொல்லப்பட்டு, பிறகு உயிராக்கப்பட்டு, மீண்டும் கொல்லப்பட்டு, பிறகு உயிராக்கப்பட்டு, மீண்டும் கொல்லப்பட வேண்டும் என்றே விரும்புகிறேன்.9



இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 56