1561. حَدَّثَنَا عُثْمَانُ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ خَرَجْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَلاَ نُرَى إِلاَّ أَنَّهُ الْحَجُّ، فَلَمَّا قَدِمْنَا تَطَوَّفْنَا بِالْبَيْتِ، فَأَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَنْ لَمْ يَكُنْ سَاقَ الْهَدْىَ أَنْ يَحِلَّ، فَحَلَّ مَنْ لَمْ يَكُنْ سَاقَ الْهَدْىَ، وَنِسَاؤُهُ لَمْ يَسُقْنَ فَأَحْلَلْنَ، قَالَتْ عَائِشَةُ ـ رضى الله عنها ـ فَحِضْتُ فَلَمْ أَطُفْ بِالْبَيْتِ، فَلَمَّا كَانَتْ لَيْلَةُ الْحَصْبَةِ قَالَتْ يَا رَسُولَ اللَّهِ، يَرْجِعُ النَّاسُ بِعُمْرَةٍ وَحَجَّةٍ وَأَرْجِعُ أَنَا بِحَجَّةٍ قَالَ "" وَمَا طُفْتِ لَيَالِيَ قَدِمْنَا مَكَّةَ "". قُلْتُ لاَ. قَالَ "" فَاذْهَبِي مَعَ أَخِيكِ إِلَى التَّنْعِيمِ، فَأَهِلِّي بِعُمْرَةٍ ثُمَّ مَوْعِدُكِ كَذَا وَكَذَا "". قَالَتْ صَفِيَّةُ مَا أُرَانِي إِلاَّ حَابِسَتَهُمْ. قَالَ "" عَقْرَى حَلْقَى، أَوَمَا طُفْتِ يَوْمَ النَّحْرِ "". قَالَتْ قُلْتُ بَلَى. قَالَ "" لاَ بَأْسَ، انْفِرِي "". قَالَتْ عَائِشَةُ ـ رضى الله عنها ـ فَلَقِيَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم وَهُوَ مُصْعِدٌ مِنْ مَكَّةَ، وَأَنَا مُنْهَبِطَةٌ عَلَيْهَا، أَوْ أَنَا مُصْعِدَةٌ وَهْوَ مُنْهَبِطٌ مِنْهَا.
பாடம் : 34
தமத்துஉ, கிரான், இஃப்ராத் ஆகிய ஹஜ்ஜின் வகைகளும் தம்முடன் குர்பானிப் பிராணி இல்லாதவர் ஹஜ்ஜை (உம்ராவாக) மாற்றிக்கொள்வதும்15
1561. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (ஹஜ்ஜுக்காக) நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். அப்போது அது ஹஜ் மட்டும்தான் என்றே நாங்கள் கருதினோம். நாங்கள் மக்காவை வந்த டைந்ததும் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்தோம். அதன் பிறகு, குர்பானிப் பிராணியைக் கொண்டுவராதவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். உடனே பிராணியைக் கொண்டுவராதவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டார்கள். நபி (ஸல்) அவர்களின் துணைவியரும் பிராணியைக் கொண்டுவராததால் அவர்களும் இஹ்ராமிலிருந்து விடுபட்டார்கள்.
ஆனால், எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்ததால் தவாஃப் செய்யவில்லை. ‘அல்முஹஸ்ஸப்’ (எனும் இடத்தில் தங்கும்) இரவு வந்தபோது, நான் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! மக்கள் ஹஜ், உம்ரா ஆகிய இரண்டையும் முடித்துத் திரும்புகின்றனர்; ஆனால், நானோ ஹஜ்ஜுடன் மட்டும் திரும்புகிறேன்” என்றேன். நபி (ஸல்) அவர்கள், “நாம் மக்காவை வந்தடைந்த இரவுகளில் நீ தவாஃப் செய்யவில்லையா?” எனக் கேட்டார்கள். நான் இல்லை என்றேன். “அப்படியானால் உன் சகோதரருடன் ‘தன்யீம்’ எனும் இடத்திற்குச் சென்று உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்து அதனை முடித்து இன்ன இன்ன இடத்திற்கு வந்துவிடு” எனக் கூறினார்கள்.16
(நபியவர்களின் மற்றொரு மனைவி யான) ஸஃபிய்யா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், “நானும் மக்களின் பயணத்தைத் தடுத்துவிட்டதாக உணர்கி றேன்” என்று சொன்னார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் “உன் கழுத்தறுந்து போக! உனக்குத் தொண்டை வலி வர! (காரியத்தைக் கெடுத்துவிட்டாயே!) துல்ஹஜ் பத்தாம் நாளில் நீ தவாஃப் செய்யவில்லையா?” என்று கேட்டார்கள். ஸஃபிய்யா ‘ஆம், செய்துவிட்டேன்’ என்றார். “பரவாயில்லை; புறப்படு!” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(தொடர்ந்து) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அதன் பிறகு என்னை நபி (ஸல்) அவர்கள் சந்தித்தபோது, அவர்கள் மக்காவிலிருந்து புறப்பட்டு ஒரு குன்றில் ஏறிக்கொண்டிருந்தார்கள். நான் குன்றிலிருந்து இறங்கிக்கொண்டிருந்தேன்; அல்லது அவர்கள் இறங்கிக்கொண்டிருந் தார்கள்; நான் ஏறிக்கொண்டிருந்தேன்.
அத்தியாயம் : 25
1561. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (ஹஜ்ஜுக்காக) நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். அப்போது அது ஹஜ் மட்டும்தான் என்றே நாங்கள் கருதினோம். நாங்கள் மக்காவை வந்த டைந்ததும் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்தோம். அதன் பிறகு, குர்பானிப் பிராணியைக் கொண்டுவராதவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். உடனே பிராணியைக் கொண்டுவராதவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டார்கள். நபி (ஸல்) அவர்களின் துணைவியரும் பிராணியைக் கொண்டுவராததால் அவர்களும் இஹ்ராமிலிருந்து விடுபட்டார்கள்.
ஆனால், எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்ததால் தவாஃப் செய்யவில்லை. ‘அல்முஹஸ்ஸப்’ (எனும் இடத்தில் தங்கும்) இரவு வந்தபோது, நான் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! மக்கள் ஹஜ், உம்ரா ஆகிய இரண்டையும் முடித்துத் திரும்புகின்றனர்; ஆனால், நானோ ஹஜ்ஜுடன் மட்டும் திரும்புகிறேன்” என்றேன். நபி (ஸல்) அவர்கள், “நாம் மக்காவை வந்தடைந்த இரவுகளில் நீ தவாஃப் செய்யவில்லையா?” எனக் கேட்டார்கள். நான் இல்லை என்றேன். “அப்படியானால் உன் சகோதரருடன் ‘தன்யீம்’ எனும் இடத்திற்குச் சென்று உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்து அதனை முடித்து இன்ன இன்ன இடத்திற்கு வந்துவிடு” எனக் கூறினார்கள்.16
(நபியவர்களின் மற்றொரு மனைவி யான) ஸஃபிய்யா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், “நானும் மக்களின் பயணத்தைத் தடுத்துவிட்டதாக உணர்கி றேன்” என்று சொன்னார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் “உன் கழுத்தறுந்து போக! உனக்குத் தொண்டை வலி வர! (காரியத்தைக் கெடுத்துவிட்டாயே!) துல்ஹஜ் பத்தாம் நாளில் நீ தவாஃப் செய்யவில்லையா?” என்று கேட்டார்கள். ஸஃபிய்யா ‘ஆம், செய்துவிட்டேன்’ என்றார். “பரவாயில்லை; புறப்படு!” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(தொடர்ந்து) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அதன் பிறகு என்னை நபி (ஸல்) அவர்கள் சந்தித்தபோது, அவர்கள் மக்காவிலிருந்து புறப்பட்டு ஒரு குன்றில் ஏறிக்கொண்டிருந்தார்கள். நான் குன்றிலிருந்து இறங்கிக்கொண்டிருந்தேன்; அல்லது அவர்கள் இறங்கிக்கொண்டிருந் தார்கள்; நான் ஏறிக்கொண்டிருந்தேன்.
அத்தியாயம் : 25
1562. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الأَسْوَدِ، مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ نَوْفَلٍ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّهَا قَالَتْ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَامَ حَجَّةِ الْوَدَاعِ، فَمِنَّا مَنْ أَهَلَّ بِعُمْرَةٍ، وَمِنَّا مَنْ أَهَلَّ بِحَجَّةٍ وَعُمْرَةٍ، وَمِنَّا مَنْ أَهَلَّ بِالْحَجِّ وَأَهَلَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِالْحَجِّ، فَأَمَّا مَنْ أَهَلَّ بِالْحَجِّ أَوْ جَمَعَ الْحَجَّ وَالْعُمْرَةَ لَمْ يَحِلُّوا حَتَّى كَانَ يَوْمُ النَّحْرِ.
பாடம் : 34
தமத்துஉ, கிரான், இஃப்ராத் ஆகிய ஹஜ்ஜின் வகைகளும் தம்முடன் குர்பானிப் பிராணி இல்லாதவர் ஹஜ்ஜை (உம்ராவாக) மாற்றிக்கொள்வதும்15
1562. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மேற்கொண்ட விடைபெறும் ஹஜ்ஜின் போது நாங்களும் அவர்களுடன் புறப்பட்டோம். எங்களில் சிலர் உம்ராவிற்காகவும் (தமத்துஉ), சிலர் ஹஜ் மற்றும் உம்ரா ஆகிய இரண்டிற்காகவும் (கிரான்), சிலர் ஹஜ்ஜுக்காக மட்டும் (இஃப்ராத்) இஹ்ராம் கட்டியிருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டியிருந்தார்கள்.
ஹஜ்ஜுக்காகவோ அல்லது ஹஜ்ஜுக் கும் உம்ராவிற்காகவும் சேர்த்தோ இஹ்ராம் கட்டியவர்கள் பிராணியைக் குர்பானி கொடுக்கும் (பத்தாம்) நாள் வரும்வரை இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை.
அத்தியாயம் : 25
1562. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மேற்கொண்ட விடைபெறும் ஹஜ்ஜின் போது நாங்களும் அவர்களுடன் புறப்பட்டோம். எங்களில் சிலர் உம்ராவிற்காகவும் (தமத்துஉ), சிலர் ஹஜ் மற்றும் உம்ரா ஆகிய இரண்டிற்காகவும் (கிரான்), சிலர் ஹஜ்ஜுக்காக மட்டும் (இஃப்ராத்) இஹ்ராம் கட்டியிருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டியிருந்தார்கள்.
ஹஜ்ஜுக்காகவோ அல்லது ஹஜ்ஜுக் கும் உம்ராவிற்காகவும் சேர்த்தோ இஹ்ராம் கட்டியவர்கள் பிராணியைக் குர்பானி கொடுக்கும் (பத்தாம்) நாள் வரும்வரை இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை.
அத்தியாயம் : 25
1563. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنْ عَلِيِّ بْنِ حُسَيْنٍ، عَنْ مَرْوَانَ بْنِ الْحَكَمِ، قَالَ شَهِدْتُ عُثْمَانَ وَعَلِيًّا ـ رضى الله عنهما ـ وَعُثْمَانُ يَنْهَى عَنِ الْمُتْعَةِ وَأَنْ يُجْمَعَ بَيْنَهُمَا. فَلَمَّا رَأَى عَلِيٌّ، أَهَلَّ بِهِمَا لَبَّيْكَ بِعُمْرَةٍ وَحَجَّةٍ قَالَ مَا كُنْتُ لأَدَعَ سُنَّةَ النَّبِيِّ صلى الله عليه وسلم لِقَوْلِ أَحَدٍ.
பாடம் : 34
தமத்துஉ, கிரான், இஃப்ராத் ஆகிய ஹஜ்ஜின் வகைகளும் தம்முடன் குர்பானிப் பிராணி இல்லாதவர் ஹஜ்ஜை (உம்ராவாக) மாற்றிக்கொள்வதும்15
1563. மர்வான் பின் அல்ஹகம் அவர்கள் கூறியதாவது:
நான் உஸ்மான் (ரலி) அவர்களுடனும், அலீ (ரலி) அவர்களுடனும் ஹஜ் செய்துள்ளேன். உஸ்மான் (ரலி) அவர்கள் ‘தமத்துஉ’ முறை ஹஜ்ஜையும் (‘கிரான்’ முறையில்) உம்ரா மற்றும் ஹஜ் ஆகிய இரண்டையும் சேர்த்துச் செய்வதையும் தடுத்தார்கள். இதைக் கண்ட அலீ (ரலி) அவர்கள், ஹஜ், உம்ரா ஆகிய இரண்டிற் கும் இஹ்ராம் கட்டி “லப்பைக்க பி உம்ரத்தின் வ ஹஜ்ஜத்தின்” என்று கூறிவிட்டு, “நபி (ஸல்) அவர்களின் வழியை யாருடைய சொல்லிற்காகவும் நான் விட்டுவிடப்போவதில்லை” எனக் கூறினார்கள்.17
அத்தியாயம் : 25
1563. மர்வான் பின் அல்ஹகம் அவர்கள் கூறியதாவது:
நான் உஸ்மான் (ரலி) அவர்களுடனும், அலீ (ரலி) அவர்களுடனும் ஹஜ் செய்துள்ளேன். உஸ்மான் (ரலி) அவர்கள் ‘தமத்துஉ’ முறை ஹஜ்ஜையும் (‘கிரான்’ முறையில்) உம்ரா மற்றும் ஹஜ் ஆகிய இரண்டையும் சேர்த்துச் செய்வதையும் தடுத்தார்கள். இதைக் கண்ட அலீ (ரலி) அவர்கள், ஹஜ், உம்ரா ஆகிய இரண்டிற் கும் இஹ்ராம் கட்டி “லப்பைக்க பி உம்ரத்தின் வ ஹஜ்ஜத்தின்” என்று கூறிவிட்டு, “நபி (ஸல்) அவர்களின் வழியை யாருடைய சொல்லிற்காகவும் நான் விட்டுவிடப்போவதில்லை” எனக் கூறினார்கள்.17
அத்தியாயம் : 25
1564. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا ابْنُ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ كَانُوا يَرَوْنَ أَنَّ الْعُمْرَةَ فِي أَشْهُرِ الْحَجِّ مِنْ أَفْجَرِ الْفُجُورِ فِي الأَرْضِ، وَيَجْعَلُونَ الْمُحَرَّمَ صَفَرًا وَيَقُولُونَ إِذَا بَرَأَ الدَّبَرْ، وَعَفَا الأَثَرْ، وَانْسَلَخَ صَفَرْ، حَلَّتِ الْعُمْرَةُ لِمَنِ اعْتَمَرْ. قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَأَصْحَابُهُ صَبِيحَةَ رَابِعَةٍ مُهِلِّينَ بِالْحَجِّ، فَأَمَرَهُمْ أَنْ يَجْعَلُوهَا عُمْرَةً فَتَعَاظَمَ ذَلِكَ عِنْدَهُمْ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ أَىُّ الْحِلِّ قَالَ "" حِلٌّ كُلُّهُ "".
பாடம் : 34
தமத்துஉ, கிரான், இஃப்ராத் ஆகிய ஹஜ்ஜின் வகைகளும் தம்முடன் குர்பானிப் பிராணி இல்லாதவர் ஹஜ்ஜை (உம்ராவாக) மாற்றிக்கொள்வதும்15
1564. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹஜ்ஜுடைய மாதங்களில் உம்ரா செய்வது பூமியில் நடக்கும் பாவங்களிலேயே மிகக் கொடிய பாவம் என (அறியாமைக் கால) மக்கள் கருதினர். (துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம் என மூன்று மாதங்கள், போர் செய்யத் தடை செய்யப்பட்ட புனித மாதங்களாகத் தொடர்ந்து வந்ததால்) முஹர்ரம் மாதத்திற்கான தடையை அவர்கள் ஸஃபருக்கு மாற்றினார்கள்.
(ஹஜ் பயணத்தில்) ஒட்டகங்களின் முதுகிலுள்ள சுமைகளின் வடு மறைந்து, காலடித் தடங்கள் அழிந்து, ஸஃபர் மாதமும் கடந்துவிட்டால் உம்ரா செய்பவர் உம்ரா செய்யலாம் என்றும் அவர்கள் கூறிவந்தனர். நபி (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் (துல்ஹஜ் மாதம்) நான்காம் நாள் காலை, ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டியவர்களாக (மக்கா நகருக்கு) வந்தபோது நபி (ஸல்) அவர்கள், மக்களின் இஹ்ராமை உம்ராவிற்குரியதாக மாற்றும்படி கட்டளையிட்டார்கள்.18
இது தோழர்களுக்கு மிகக் கடுமையானதாகத் தெரிந்தது. இதனால் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! (இவ்வாறு உம்ராவிற்குப் பிறகு) இஹ்ராமி லிருந்து விடுபடுவதால் எந்தச் செயல்கள் அனுமதிக்கப்படும்?” எனக் கேட்டனர். அதற்கு “(தடை செய்யப்படாத) அனைத்துச் செயல்களும் அனுமதிக்கப்படும்” என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 25
1564. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹஜ்ஜுடைய மாதங்களில் உம்ரா செய்வது பூமியில் நடக்கும் பாவங்களிலேயே மிகக் கொடிய பாவம் என (அறியாமைக் கால) மக்கள் கருதினர். (துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம் என மூன்று மாதங்கள், போர் செய்யத் தடை செய்யப்பட்ட புனித மாதங்களாகத் தொடர்ந்து வந்ததால்) முஹர்ரம் மாதத்திற்கான தடையை அவர்கள் ஸஃபருக்கு மாற்றினார்கள்.
(ஹஜ் பயணத்தில்) ஒட்டகங்களின் முதுகிலுள்ள சுமைகளின் வடு மறைந்து, காலடித் தடங்கள் அழிந்து, ஸஃபர் மாதமும் கடந்துவிட்டால் உம்ரா செய்பவர் உம்ரா செய்யலாம் என்றும் அவர்கள் கூறிவந்தனர். நபி (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் (துல்ஹஜ் மாதம்) நான்காம் நாள் காலை, ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டியவர்களாக (மக்கா நகருக்கு) வந்தபோது நபி (ஸல்) அவர்கள், மக்களின் இஹ்ராமை உம்ராவிற்குரியதாக மாற்றும்படி கட்டளையிட்டார்கள்.18
இது தோழர்களுக்கு மிகக் கடுமையானதாகத் தெரிந்தது. இதனால் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! (இவ்வாறு உம்ராவிற்குப் பிறகு) இஹ்ராமி லிருந்து விடுபடுவதால் எந்தச் செயல்கள் அனுமதிக்கப்படும்?” எனக் கேட்டனர். அதற்கு “(தடை செய்யப்படாத) அனைத்துச் செயல்களும் அனுமதிக்கப்படும்” என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 25
1565. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ قَالَ قَدِمْتُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم. فَأَمَرَهُ بِالْحِلِّ.
பாடம் : 34
தமத்துஉ, கிரான், இஃப்ராத் ஆகிய ஹஜ்ஜின் வகைகளும் தம்முடன் குர்பானிப் பிராணி இல்லாதவர் ஹஜ்ஜை (உம்ராவாக) மாற்றிக்கொள்வதும்15
1565. அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (ஹஜ்ஜின்போது) நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். (நான் குர்பானிப் பிராணி கொண்டுவராததால் உம்ராவை முடித்து) இஹ்ராமிலிருந்து விடுபடுமாறு அவர்கள் கட்டளையிட்டார்கள்.
அத்தியாயம் : 25
1565. அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (ஹஜ்ஜின்போது) நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். (நான் குர்பானிப் பிராணி கொண்டுவராததால் உம்ராவை முடித்து) இஹ்ராமிலிருந்து விடுபடுமாறு அவர்கள் கட்டளையிட்டார்கள்.
அத்தியாயம் : 25
1566. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ،. وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ حَفْصَةَ ـ رضى الله عنهم ـ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهَا قَالَتْ يَا رَسُولَ اللَّهِ، مَا شَأْنُ النَّاسِ حَلُّوا بِعُمْرَةٍ وَلَمْ تَحْلِلْ أَنْتَ مِنْ عُمْرَتِكَ قَالَ "" إِنِّي لَبَّدْتُ رَأْسِي، وَقَلَّدْتُ هَدْيِي فَلاَ أَحِلُّ حَتَّى أَنْحَرَ "".
பாடம் : 34
தமத்துஉ, கிரான், இஃப்ராத் ஆகிய ஹஜ்ஜின் வகைகளும் தம்முடன் குர்பானிப் பிராணி இல்லாதவர் ஹஜ்ஜை (உம்ராவாக) மாற்றிக்கொள்வதும்15
1566. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஹஃப்ஸா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! உம்ரா செய்துவிட்டு மக்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டார்கள். ஆனால், நீங்கள் உம்ரா செய்த பிறகும் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லையே! என்ன காரணம்?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “எனது முடியைக் களிம்பு தடவிப் படியச் செய்துவிட்டேன்; எனது குர்பானிப் பிராணியின் கழுத்தில் அடையாள மாலை தொங்கவிட்டுவிட்டேன். எனவே, குர்பானி கொடுக்கும்வரை நான் இஹ்ராமைக் களையக் கூடாது” என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 25
1566. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஹஃப்ஸா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! உம்ரா செய்துவிட்டு மக்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டார்கள். ஆனால், நீங்கள் உம்ரா செய்த பிறகும் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லையே! என்ன காரணம்?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “எனது முடியைக் களிம்பு தடவிப் படியச் செய்துவிட்டேன்; எனது குர்பானிப் பிராணியின் கழுத்தில் அடையாள மாலை தொங்கவிட்டுவிட்டேன். எனவே, குர்பானி கொடுக்கும்வரை நான் இஹ்ராமைக் களையக் கூடாது” என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 25
1567. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، أَخْبَرَنَا أَبُو جَمْرَةَ، نَصْرُ بْنُ عِمْرَانَ الضُّبَعِيُّ قَالَ تَمَتَّعْتُ فَنَهَانِي نَاسٌ، فَسَأَلْتُ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ فَأَمَرَنِي، فَرَأَيْتُ فِي الْمَنَامِ كَأَنَّ رَجُلاً يَقُولُ لِي حَجٌّ مَبْرُورٌ وَعُمْرَةٌ مُتَقَبَّلَةٌ، فَأَخْبَرْتُ ابْنَ عَبَّاسٍ فَقَالَ سُنَّةَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ لِي أَقِمْ عِنْدِي، فَأَجْعَلَ لَكَ سَهْمًا مِنْ مَالِي. قَالَ شُعْبَةُ فَقُلْتُ لِمَ فَقَالَ لِلرُّؤْيَا الَّتِي رَأَيْتُ.
பாடம் : 34
தமத்துஉ, கிரான், இஃப்ராத் ஆகிய ஹஜ்ஜின் வகைகளும் தம்முடன் குர்பானிப் பிராணி இல்லாதவர் ஹஜ்ஜை (உம்ராவாக) மாற்றிக்கொள்வதும்15
1567. அபூஜம்ரா நஸ்ர் பின் இம்ரான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ‘தமத்துஉ’ (ஹஜ்ஜும் உம்ராவும் தனித்தனி இஹ்ராமுடன்) செய்தேன். என்னைச் சிலர் தடுத்தார்கள். எனவே, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் இது குறித்து வினவினேன்.
அதற்கு அவர்கள், தமத்துஉ செய்யுமாறே கட்டளையிட்டார்கள். பிறகு ஒரு நாள் ஒருவர் என் கனவில் தோன்றி, “ஹஜ் ஏற்றுக்கொள்ளப்பட்டது; உம்ரா ஒப்புக்கொள்ளப்பட்டது” எனக் கூறினார். நான் இதையும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் தெரிவித்தேன். அவர்கள், “(தமத்துஉவோ) நபி (ஸல்) அவர்களின் வழிமுறையாகும் என்று கூறி, நீர் என்னுடன் தங்கிக்கொள்வீராக! எனது செல்வத்திலிருந்து ஒரு பங்கை உமக்குத் தருகிறேன்” எனக் கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தம்முடன் தங்கச் சொன்னதன் காரணம் என்ன? என்று நான் நஸ்ர் பின் இம்ரானி டம் கேட்டேன். “நான் கண்ட கனவே காரணம்” என அவர் கூறினார்.
அத்தியாயம் : 25
1567. அபூஜம்ரா நஸ்ர் பின் இம்ரான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ‘தமத்துஉ’ (ஹஜ்ஜும் உம்ராவும் தனித்தனி இஹ்ராமுடன்) செய்தேன். என்னைச் சிலர் தடுத்தார்கள். எனவே, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் இது குறித்து வினவினேன்.
அதற்கு அவர்கள், தமத்துஉ செய்யுமாறே கட்டளையிட்டார்கள். பிறகு ஒரு நாள் ஒருவர் என் கனவில் தோன்றி, “ஹஜ் ஏற்றுக்கொள்ளப்பட்டது; உம்ரா ஒப்புக்கொள்ளப்பட்டது” எனக் கூறினார். நான் இதையும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் தெரிவித்தேன். அவர்கள், “(தமத்துஉவோ) நபி (ஸல்) அவர்களின் வழிமுறையாகும் என்று கூறி, நீர் என்னுடன் தங்கிக்கொள்வீராக! எனது செல்வத்திலிருந்து ஒரு பங்கை உமக்குத் தருகிறேன்” எனக் கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தம்முடன் தங்கச் சொன்னதன் காரணம் என்ன? என்று நான் நஸ்ர் பின் இம்ரானி டம் கேட்டேன். “நான் கண்ட கனவே காரணம்” என அவர் கூறினார்.
அத்தியாயம் : 25
1568. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا أَبُو شِهَابٍ، قَالَ قَدِمْتُ مُتَمَتِّعًا مَكَّةَ بِعُمْرَةٍ فَدَخَلْنَا قَبْلَ التَّرْوِيَةِ بِثَلاَثَةِ أَيَّامٍ، فَقَالَ لِي أُنَاسٌ مِنْ أَهْلِ مَكَّةَ تَصِيرُ الآنَ حَجَّتُكَ مَكِّيَّةً. فَدَخَلْتُ عَلَى عَطَاءٍ أَسْتَفْتِيهِ فَقَالَ حَدَّثَنِي جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ أَنَّهُ حَجَّ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم يَوْمَ سَاقَ الْبُدْنَ مَعَهُ، وَقَدْ أَهَلُّوا بِالْحَجِّ مُفْرَدًا، فَقَالَ لَهُمْ "" أَحِلُّوا مِنْ إِحْرَامِكُمْ بِطَوَافِ الْبَيْتِ وَبَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ، وَقَصِّرُوا ثُمَّ أَقِيمُوا حَلاَلاً، حَتَّى إِذَا كَانَ يَوْمُ التَّرْوِيَةِ فَأَهِلُّوا بِالْحَجِّ، وَاجْعَلُوا الَّتِي قَدِمْتُمْ بِهَا مُتْعَةً "". فَقَالُوا كَيْفَ نَجْعَلُهَا مُتْعَةً وَقَدْ سَمَّيْنَا الْحَجَّ فَقَالَ "" افْعَلُوا مَا أَمَرْتُكُمْ، فَلَوْلاَ أَنِّي سُقْتُ الْهَدْىَ لَفَعَلْتُ مِثْلَ الَّذِي أَمَرْتُكُمْ، وَلَكِنْ لاَ يَحِلُّ مِنِّي حَرَامٌ حَتَّى يَبْلُغَ الْهَدْىُ مَحِلَّهُ "". فَفَعَلُوا.
قَالَ أَبُو عَبْد اللَّهِ أَبُو شِهَابٍ لَيْسَ لَهُ مُسْنَدٌ إِلَّا هَذَا
பாடம் : 34
தமத்துஉ, கிரான், இஃப்ராத் ஆகிய ஹஜ்ஜின் வகைகளும் தம்முடன் குர்பானிப் பிராணி இல்லாதவர் ஹஜ்ஜை (உம்ராவாக) மாற்றிக்கொள்வதும்15
1568. அபூஷிஹாப் மூசா பின் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஹஜ்ஜுடன் உம்ராவையும் (தமத்துஉ) செய்ய நாடி மக்காவிற்குச் சென்றேன். துல்ஹஜ் பிறை எட்டுக்கு மூன்று நாட்களுக்கு முன்னால் (அதாவது துல்ஹஜ் ஐந்தில்) மக்காவில் நுழைந்தோம். அப்போது மக்காவாசிகளில் சிலர் என்னிடம், “இப்போது உமது ஹஜ் (தமத்துஉ செய்வதால்) மக்காவாசிகளின் ஹஜ்ஜாக ஆகிவிடும் (குறைந்த நன்மைகளே கிடைக்கும்”) என்றனர்.19
நான் அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்களிடம் சென்று இதைப் பற்றி விளக்கம் கேட்டேன். அதாஉ (ரஹ்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் தம்முடன் குர்பானி ஒட்டகங்களை ஓட்டிவந்த நாளில் நானும் அவர்களுடன் ஹஜ் செய்தேன். அப்போது மக்கள் அனை வரும் ஹஜ்ஜுக்காக மட்டுமே தனியாக இஹ்ராம் கட்டியிருந்தனர். நபி (ஸல்) அவர்கள் தோழர்களிடம், “நீங்கள் தவாஃபையும், ஸஃபா, மர்வாவிற்கு மத்தி யில் ஓடுவதையும் நிறைவேற்றிவிட்டு, முடியைக் குறைத்து இஹ்ராமிலிருந்து விடுபட்டு (மக்காவில்) தங்கிக்கொள்ளுங் கள். பிறை எட்டு அன்று ஹஜ்ýக்காக இஹ்ராம் கட்டி, இதற்கு முன்னால் செய்ததை தமத்துஉ (உம்ரா) ஆக ஆக்கிக்கொள்ளுங்கள்” என்றார்கள்.
அதற்குத் தோழர்கள், “நாங்கள் ஹஜ்ஜின் பெயரில் இஹ்ராம் கட்டிக் கொண்டு வந்தோம். அதை எவ்வாறு தமத்துஉ (உம்ரா) ஆக ஆக்கிக் கொள்வது?’ என்று கேட்டனர்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உங்களுக்கு நான் கட்டளையிட்டதை நீங்கள் செய்யுங்கள். நான் என்னுடன் குர்பானிப் பிராணியைக் கொண்டு வந்திராவிடில், உங்களுக்கு நான் கட்டளையிட்டதைப் போன்று நிச்சயமாக நானும் செய்திருப்பேன்; குர்பானிப் பிராணியைக் கொண்டுவந்ததால், அது அதற்குரிய இடத்தை (மினாவை) அடையும்வரை (அங்கு அதை குர்பானி கொடுக்கும்வரை) இஹ்ராமைக் களைவது எனக்குக் கூடாது” என்றார்கள்.
உடனே தோழர்கள் நபி (ஸல்) அவர்களின் கட்டளைப்படி செயலாற்றினார்கள்.
அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்:
இதன் அறிவிப்பாளரான அபூஷிஹாப் (ரஹ்) அவர்கள் இதைத் தவிர வேறு (மர்ஃபூஆன) ஹதீஸ்கள் அறிவிக்கவில்லை.
அத்தியாயம் : 25
1568. அபூஷிஹாப் மூசா பின் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஹஜ்ஜுடன் உம்ராவையும் (தமத்துஉ) செய்ய நாடி மக்காவிற்குச் சென்றேன். துல்ஹஜ் பிறை எட்டுக்கு மூன்று நாட்களுக்கு முன்னால் (அதாவது துல்ஹஜ் ஐந்தில்) மக்காவில் நுழைந்தோம். அப்போது மக்காவாசிகளில் சிலர் என்னிடம், “இப்போது உமது ஹஜ் (தமத்துஉ செய்வதால்) மக்காவாசிகளின் ஹஜ்ஜாக ஆகிவிடும் (குறைந்த நன்மைகளே கிடைக்கும்”) என்றனர்.19
நான் அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்களிடம் சென்று இதைப் பற்றி விளக்கம் கேட்டேன். அதாஉ (ரஹ்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் தம்முடன் குர்பானி ஒட்டகங்களை ஓட்டிவந்த நாளில் நானும் அவர்களுடன் ஹஜ் செய்தேன். அப்போது மக்கள் அனை வரும் ஹஜ்ஜுக்காக மட்டுமே தனியாக இஹ்ராம் கட்டியிருந்தனர். நபி (ஸல்) அவர்கள் தோழர்களிடம், “நீங்கள் தவாஃபையும், ஸஃபா, மர்வாவிற்கு மத்தி யில் ஓடுவதையும் நிறைவேற்றிவிட்டு, முடியைக் குறைத்து இஹ்ராமிலிருந்து விடுபட்டு (மக்காவில்) தங்கிக்கொள்ளுங் கள். பிறை எட்டு அன்று ஹஜ்ýக்காக இஹ்ராம் கட்டி, இதற்கு முன்னால் செய்ததை தமத்துஉ (உம்ரா) ஆக ஆக்கிக்கொள்ளுங்கள்” என்றார்கள்.
அதற்குத் தோழர்கள், “நாங்கள் ஹஜ்ஜின் பெயரில் இஹ்ராம் கட்டிக் கொண்டு வந்தோம். அதை எவ்வாறு தமத்துஉ (உம்ரா) ஆக ஆக்கிக் கொள்வது?’ என்று கேட்டனர்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உங்களுக்கு நான் கட்டளையிட்டதை நீங்கள் செய்யுங்கள். நான் என்னுடன் குர்பானிப் பிராணியைக் கொண்டு வந்திராவிடில், உங்களுக்கு நான் கட்டளையிட்டதைப் போன்று நிச்சயமாக நானும் செய்திருப்பேன்; குர்பானிப் பிராணியைக் கொண்டுவந்ததால், அது அதற்குரிய இடத்தை (மினாவை) அடையும்வரை (அங்கு அதை குர்பானி கொடுக்கும்வரை) இஹ்ராமைக் களைவது எனக்குக் கூடாது” என்றார்கள்.
உடனே தோழர்கள் நபி (ஸல்) அவர்களின் கட்டளைப்படி செயலாற்றினார்கள்.
அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்:
இதன் அறிவிப்பாளரான அபூஷிஹாப் (ரஹ்) அவர்கள் இதைத் தவிர வேறு (மர்ஃபூஆன) ஹதீஸ்கள் அறிவிக்கவில்லை.
அத்தியாயம் : 25
1569. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ الأَعْوَرُ، عَنْ شُعْبَةَ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، قَالَ اخْتَلَفَ عَلِيٌّ وَعُثْمَانُ ـ رضى الله عنهما ـ وَهُمَا بِعُسْفَانَ فِي الْمُتْعَةِ، فَقَالَ عَلِيٌّ مَا تُرِيدُ إِلاَّ أَنْ تَنْهَى عَنْ أَمْرٍ فَعَلَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم. فَلَمَّا رَأَى ذَلِكَ عَلِيٌّ أَهَلَّ بِهِمَا جَمِيعًا.
பாடம் : 34
தமத்துஉ, கிரான், இஃப்ராத் ஆகிய ஹஜ்ஜின் வகைகளும் தம்முடன் குர்பானிப் பிராணி இல்லாதவர் ஹஜ்ஜை (உம்ராவாக) மாற்றிக்கொள்வதும்15
1569. சயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அலீ (ரலி), உஸ்மான் (ரலி) ஆகிய இருவரும் ‘உஸ்ஃபான்’ எனுமிடத்தில் ‘தமத்துஉ’ ஹஜ் தொடர்பாக கருத்து வேற்றுமை கொண்டனர். அலீ (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் செய்த ஒன்றைத் தடுக்கவே நீங்கள் எண்ணுகிறீர்கள் (போலும்)” என்று உஸ்மான் (ரலி) அவர்களிடம் கூறிவிட்டு, ஹஜ் மற்றும் உம்ராவிற்காக இஹ்ராம் கட்டினார்கள்.
அத்தியாயம் : 25
1569. சயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அலீ (ரலி), உஸ்மான் (ரலி) ஆகிய இருவரும் ‘உஸ்ஃபான்’ எனுமிடத்தில் ‘தமத்துஉ’ ஹஜ் தொடர்பாக கருத்து வேற்றுமை கொண்டனர். அலீ (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் செய்த ஒன்றைத் தடுக்கவே நீங்கள் எண்ணுகிறீர்கள் (போலும்)” என்று உஸ்மான் (ரலி) அவர்களிடம் கூறிவிட்டு, ஹஜ் மற்றும் உம்ராவிற்காக இஹ்ராம் கட்டினார்கள்.
அத்தியாயம் : 25
1570. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، قَالَ سَمِعْتُ مُجَاهِدًا، يَقُولُ حَدَّثَنَا جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَدِمْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَنَحْنُ نَقُولُ لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ بِالْحَجِّ. فَأَمَرَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَجَعَلْنَاهَا عُمْرَةً.
பாடம் : 35
ஹஜ்ஜுக்கான ‘தல்பியா’வில் ‘ஹஜ்’ என்றே குறிப்பிட்டுச் சொல்வது
1570. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (ஹஜ்ஜுக்காகச்) சென்றோம். அப்போது ‘லப்பைக்க, அல்லாஹும்ம லப்பைக்க பில்ஹஜ்’ (உன் அழைப்பை ஏற்றோம். இறைவா! ஹஜ்ஜுக்கான உன் அழைப்பை ஏற்றோம்) எனக் கூறினோம். பிறகு நபி (ஸல்) அவர்கள் (மக்கா நகருக்கு வந்த போது) அதை உம்ராவாக ஆக்கும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்; நாங்கள் அவ்வாறே அதை உம்ராவாக ஆக்கினோம்.
அத்தியாயம் : 25
1570. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (ஹஜ்ஜுக்காகச்) சென்றோம். அப்போது ‘லப்பைக்க, அல்லாஹும்ம லப்பைக்க பில்ஹஜ்’ (உன் அழைப்பை ஏற்றோம். இறைவா! ஹஜ்ஜுக்கான உன் அழைப்பை ஏற்றோம்) எனக் கூறினோம். பிறகு நபி (ஸல்) அவர்கள் (மக்கா நகருக்கு வந்த போது) அதை உம்ராவாக ஆக்கும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்; நாங்கள் அவ்வாறே அதை உம்ராவாக ஆக்கினோம்.
அத்தியாயம் : 25
1571. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، قَالَ حَدَّثَنِي مُطَرِّفٌ، عَنْ عِمْرَانَ ـ رضى الله عنه ـ قَالَ تَمَتَّعْنَا عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَنَزَلَ الْقُرْآنُ قَالَ رَجُلٌ بِرَأْيِهِ مَا شَاءَ.
பாடம் : 36
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் ‘தமத்துஉ’ செய்தல்
1571. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் ‘தமத்துஉ’ செய்தோம். குர்ஆனும் (அதை அனுமதித்தே) இறங்கியது. ஆனால், ஒரு மனிதர் (உமர் (ரலி) அவர்கள்), தாம் விரும்பியதைத் தமது சொந்தக் கருத்தாகக் கூறினார்.20
அத்தியாயம் : 25
1571. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் ‘தமத்துஉ’ செய்தோம். குர்ஆனும் (அதை அனுமதித்தே) இறங்கியது. ஆனால், ஒரு மனிதர் (உமர் (ரலி) அவர்கள்), தாம் விரும்பியதைத் தமது சொந்தக் கருத்தாகக் கூறினார்.20
அத்தியாயம் : 25
1572. وَقَالَ أَبُو كَامِلٍ فُضَيْلُ بْنُ حُسَيْنٍ الْبَصْرِيُّ حَدَّثَنَا أَبُو مَعْشَرٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ غِيَاثٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّهُ سُئِلَ عَنْ مُتْعَةِ الْحَجِّ، فَقَالَ أَهَلَّ الْمُهَاجِرُونَ وَالأَنْصَارُ وَأَزْوَاجُ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي حَجَّةِ الْوَدَاعِ وَأَهْلَلْنَا، فَلَمَّا قَدِمْنَا مَكَّةَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" اجْعَلُوا إِهْلاَلَكُمْ بِالْحَجِّ عُمْرَةً إِلاَّ مَنْ قَلَّدَ الْهَدْىَ "". فَطُفْنَا بِالْبَيْتِ وَبِالصَّفَا وَالْمَرْوَةِ وَأَتَيْنَا النِّسَاءَ، وَلَبِسْنَا الثِّيَابَ وَقَالَ "" مَنْ قَلَّدَ الْهَدْىَ فَإِنَّهُ لاَ يَحِلُّ لَهُ حَتَّى يَبْلُغَ الْهَدْىُ مَحِلَّهُ "". ثُمَّ أَمَرَنَا عَشِيَّةَ التَّرْوِيَةِ أَنْ نُهِلَّ بِالْحَجِّ، فَإِذَا فَرَغْنَا مِنَ الْمَنَاسِكِ جِئْنَا فَطُفْنَا بِالْبَيْتِ وَبِالصَّفَا وَالْمَرْوَةِ فَقَدْ تَمَّ حَجُّنَا، وَعَلَيْنَا الْهَدْىُ كَمَا قَالَ اللَّهُ تَعَالَى {فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْىِ فَمَنْ لَمْ يَجِدْ فَصِيَامُ ثَلاَثَةِ أَيَّامٍ فِي الْحَجِّ وَسَبْعَةٍ إِذَا رَجَعْتُمْ} إِلَى أَمْصَارِكُمْ. الشَّاةُ تَجْزِي، فَجَمَعُوا نُسُكَيْنِ فِي عَامٍ بَيْنَ الْحَجِّ وَالْعُمْرَةِ، فَإِنَّ اللَّهَ تَعَالَى أَنْزَلَهُ فِي كِتَابِهِ وَسَنَّهُ نَبِيُّهُ صلى الله عليه وسلم وَأَبَاحَهُ لِلنَّاسِ غَيْرَ أَهْلِ مَكَّةَ، قَالَ اللَّهُ {ذَلِكَ لِمَنْ لَمْ يَكُنْ أَهْلُهُ حَاضِرِي الْمَسْجِدِ الْحَرَامِ} وَأَشْهُرُ الْحَجِّ الَّتِي ذَكَرَ اللَّهُ تَعَالَى شَوَّالٌ وَذُو الْقَعْدَةِ وَذُو الْحَجَّةِ، فَمَنْ تَمَتَّعَ فِي هَذِهِ الأَشْهُرِ فَعَلَيْهِ دَمٌ أَوْ صَوْمٌ، وَالرَّفَثُ الْجِمَاعُ، وَالْفُسُوقُ الْمَعَاصِي، وَالْجِدَالُ الْمِرَاءُ.
பாடம் : 37
உயர்ந்தோன் அல்லாஹ் கூறு கின்றான்:
இது (‘தமத்துஉ’ முறை), யாருடைய குடும்பம் மஸ்ஜிதுல் ஹராமுக்கு அருகில் இல்லையோ அவருக்கே (பொருந்தும்). (2:196)
1572. இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ‘தமத்துஉ’ ஹஜ் பற்றிக் கேட்கப்பட்டது. அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
‘விடைபெறும் ஹஜ்ஜின்போது, முஹாஜிர்களும் அன்சாரிகளும் நபி (ஸல்) அவர்களின் துணைவியரும் (ஹஜ்ஜுக் காக) இஹ்ராம் கட்டினார்கள். நாங்களும் (அதற்காகவே) இஹ்ராம் கட்டினோம். ஆனால், நாங்கள் மக்கா நகருக்கு வந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “குர்பானி பிராணியைக் கொண்டுவந்தவர்களைத் தவிர மற்ற அனைவரும் தங்கள் ஹஜ்ஜை உம்ராவாக மாற்றிக்கொள்ளுங்கள்” என்றார்கள்.
நாங்கள் கஅபாவை தவாஃப் செய்து, ஸஃபா மர்வாவுக்கிடையே தொங்கோட்டம் ஓடி, மனைவியருடன் தாம்பத்தியஉறவு கொண்டு (தைக்கப்பட்ட) ஆடைகளை அணிந்துகொண்டோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், “தம்மோடு குர்பானி பிராணி கொண்டுவந்தவர்கள், பிராணி தனக்குரிய இடத்தை அடையும்வரை (குர்பானி கொடுக்கும்வரை) இஹ்ராமிலிருந்து விடுபடக் கூடாது” எனக் கட்டளையிட் டார்கள்.
பிறகு எட்டாம் நாள் மாலையில் நாங்கள் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். நாங்கள் ஹஜ்ஜுக்கான மற்ற கிரியை களை முடித்துவிட்டு வந்து தவாஃப் செய்தோம். ஸஃபா-மர்வாவுக்கிடையே ஓடினோம். அத்துடன் எங்களது ஹஜ் நிறைவுபெற்றுவிட்டது.
ஆனால், நாங்கள் குர்பானி கொடுக்க வேண்டியிருந்தது. “யார் ஹஜ்ஜையும் உம்ராவையும் ‘தமத்துஉ’ முறையில் நிறைவேற்றுகிறாரோ அவர் (தமக்கு) வசதிப்பட்ட பலிப் பிராணியை (பலியிட வேண்டும்). அது கிடைக்கப்பெறாதவர் ஹஜ்ஜின்போது மூன்று நாட்களும் திரும்பிய பின்னர் ஏழு நாட்களும் நோன்பு நோற்க வேண்டும்” (2:196) என்று உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்.
அதாவது உங்கள் ஊர்களுக்குத் திரும்பிய பின்னர் ஏழு நாட்களும் நோன்பு நோற்க வேண்டும். குர்பானி கொடுப்பதற்கு ஆடு போதும்.
எனவே மக்கள் ஹஜ், உம்ரா என்ற இரு கடமைகளையும் ஒரே ஆண்டில் நிறைவேற்றினர். (தமத்துஉ செய்ய அனுமதியளிக்கும்) இச்சட்டம் அல்லாஹ் தன் வேதத்தில் அருளியதும், நபி (ஸல்) அவர்களின் நடைமுறையும், மக்காவாசிகள் அல்லாத மற்ற மக்கள் அனைவருக்கும் நபி (ஸல்) அவர்கள் அனுமதித்ததும் ஆகும். ஏனெனில் அல்லாஹ், “இது யாருடைய குடும்பம் மஸ்ஜிதுல் ஹராமுக்கு அருகில் இல்லையோ அவருக்கே (பொருந்தும்)” (2:196) என்று கூறுகின்றான்.
மேலும், அல்லாஹ் (2:197ஆவது வசனத்தில்) குறிப்பிடும் ஹஜ்ஜின் மாதங்கள் ஷவ்வால், துல்கஅதா, துல்ஹிஜ்ஜா ஆகியனவாகும். இம்மாதங்களில் யார் ‘தமத்துஉ’ செய்கிறாரோ அவர்மீது பலியிடல், அல்லது நோன்பு கடமையாகும்.
(அந்த வசனத்தின் (2:197) மூலத்தில் இடம்பெறும்) ‘அர்ரஃபஸ்’ என்பது தாம்பத்திய உறவையும், ‘அல்ஃபுசூக்’ என்பது பாவங்களையும், ‘அல்ஜிதால்’ என்பது தர்க்கம் புரிவதையும் குறிக்கும்.
அத்தியாயம் : 25
1572. இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ‘தமத்துஉ’ ஹஜ் பற்றிக் கேட்கப்பட்டது. அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
‘விடைபெறும் ஹஜ்ஜின்போது, முஹாஜிர்களும் அன்சாரிகளும் நபி (ஸல்) அவர்களின் துணைவியரும் (ஹஜ்ஜுக் காக) இஹ்ராம் கட்டினார்கள். நாங்களும் (அதற்காகவே) இஹ்ராம் கட்டினோம். ஆனால், நாங்கள் மக்கா நகருக்கு வந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “குர்பானி பிராணியைக் கொண்டுவந்தவர்களைத் தவிர மற்ற அனைவரும் தங்கள் ஹஜ்ஜை உம்ராவாக மாற்றிக்கொள்ளுங்கள்” என்றார்கள்.
நாங்கள் கஅபாவை தவாஃப் செய்து, ஸஃபா மர்வாவுக்கிடையே தொங்கோட்டம் ஓடி, மனைவியருடன் தாம்பத்தியஉறவு கொண்டு (தைக்கப்பட்ட) ஆடைகளை அணிந்துகொண்டோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், “தம்மோடு குர்பானி பிராணி கொண்டுவந்தவர்கள், பிராணி தனக்குரிய இடத்தை அடையும்வரை (குர்பானி கொடுக்கும்வரை) இஹ்ராமிலிருந்து விடுபடக் கூடாது” எனக் கட்டளையிட் டார்கள்.
பிறகு எட்டாம் நாள் மாலையில் நாங்கள் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். நாங்கள் ஹஜ்ஜுக்கான மற்ற கிரியை களை முடித்துவிட்டு வந்து தவாஃப் செய்தோம். ஸஃபா-மர்வாவுக்கிடையே ஓடினோம். அத்துடன் எங்களது ஹஜ் நிறைவுபெற்றுவிட்டது.
ஆனால், நாங்கள் குர்பானி கொடுக்க வேண்டியிருந்தது. “யார் ஹஜ்ஜையும் உம்ராவையும் ‘தமத்துஉ’ முறையில் நிறைவேற்றுகிறாரோ அவர் (தமக்கு) வசதிப்பட்ட பலிப் பிராணியை (பலியிட வேண்டும்). அது கிடைக்கப்பெறாதவர் ஹஜ்ஜின்போது மூன்று நாட்களும் திரும்பிய பின்னர் ஏழு நாட்களும் நோன்பு நோற்க வேண்டும்” (2:196) என்று உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்.
அதாவது உங்கள் ஊர்களுக்குத் திரும்பிய பின்னர் ஏழு நாட்களும் நோன்பு நோற்க வேண்டும். குர்பானி கொடுப்பதற்கு ஆடு போதும்.
எனவே மக்கள் ஹஜ், உம்ரா என்ற இரு கடமைகளையும் ஒரே ஆண்டில் நிறைவேற்றினர். (தமத்துஉ செய்ய அனுமதியளிக்கும்) இச்சட்டம் அல்லாஹ் தன் வேதத்தில் அருளியதும், நபி (ஸல்) அவர்களின் நடைமுறையும், மக்காவாசிகள் அல்லாத மற்ற மக்கள் அனைவருக்கும் நபி (ஸல்) அவர்கள் அனுமதித்ததும் ஆகும். ஏனெனில் அல்லாஹ், “இது யாருடைய குடும்பம் மஸ்ஜிதுல் ஹராமுக்கு அருகில் இல்லையோ அவருக்கே (பொருந்தும்)” (2:196) என்று கூறுகின்றான்.
மேலும், அல்லாஹ் (2:197ஆவது வசனத்தில்) குறிப்பிடும் ஹஜ்ஜின் மாதங்கள் ஷவ்வால், துல்கஅதா, துல்ஹிஜ்ஜா ஆகியனவாகும். இம்மாதங்களில் யார் ‘தமத்துஉ’ செய்கிறாரோ அவர்மீது பலியிடல், அல்லது நோன்பு கடமையாகும்.
(அந்த வசனத்தின் (2:197) மூலத்தில் இடம்பெறும்) ‘அர்ரஃபஸ்’ என்பது தாம்பத்திய உறவையும், ‘அல்ஃபுசூக்’ என்பது பாவங்களையும், ‘அல்ஜிதால்’ என்பது தர்க்கம் புரிவதையும் குறிக்கும்.
அத்தியாயம் : 25
1573. حَدَّثَنِي يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، أَخْبَرَنَا أَيُّوبُ، عَنْ نَافِعٍ، قَالَ كَانَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ إِذَا دَخَلَ أَدْنَى الْحَرَمِ أَمْسَكَ عَنِ التَّلْبِيَةِ، ثُمَّ يَبِيتُ بِذِي طُوًى، ثُمَّ يُصَلِّي بِهِ الصُّبْحَ وَيَغْتَسِلُ، وَيُحَدِّثُ أَنَّ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَفْعَلُ ذَلِكَ.
பாடம் : 38
மக்காவில் நுழையும்போது குளிப்பது
1573. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள், புனித ஹரம் எல்லையை நெருங்கிவிட்டால், தல்பியாவை நிறுத்திவிடுவார்கள். பிறகு ‘தூத்துவா’ எனுமிடத்தில் இரவில் தங்கு வார்கள். பின்னர் அங்கு சுப்ஹு தொழுது விட்டு குளிப்பார்கள். “நபி (ஸல்) அவர்கள் இவ்வாறே செய்தார்கள்” என்றும் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுவார்கள்.
அத்தியாயம் : 25
1573. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள், புனித ஹரம் எல்லையை நெருங்கிவிட்டால், தல்பியாவை நிறுத்திவிடுவார்கள். பிறகு ‘தூத்துவா’ எனுமிடத்தில் இரவில் தங்கு வார்கள். பின்னர் அங்கு சுப்ஹு தொழுது விட்டு குளிப்பார்கள். “நபி (ஸல்) அவர்கள் இவ்வாறே செய்தார்கள்” என்றும் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுவார்கள்.
அத்தியாயம் : 25
1574. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ بَاتَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِذِي طُوًى حَتَّى أَصْبَحَ ثُمَّ دَخَلَ مَكَّةَ. وَكَانَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ يَفْعَلُهُ.
பாடம் : 39
பகலிலோ இரவிலோ மக்கா வில் நுழைவது
நபி (ஸல்) அவர்கள் ‘தூத்துவா’வில் இரவில் தங்கிவிட்டுக் காலையில் மக்கா வில் நுழைந்தார்கள். இப்னு உமர் (ரலி) அவர்களும் அவ்வாறே செய்துவந் தார்கள்.
1574. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ‘தூத்துவா’ எனுமிடத்தில் இரவில் தங்கிவிட்டுக் காலையில் மக்காவில் நுழைந்தார்கள்.
இப்னு உமர் (ரலி) அவர்களும் அவ்வாறே செய்துவந்தார்கள் என நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
அத்தியாயம் : 25
1574. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ‘தூத்துவா’ எனுமிடத்தில் இரவில் தங்கிவிட்டுக் காலையில் மக்காவில் நுழைந்தார்கள்.
இப்னு உமர் (ரலி) அவர்களும் அவ்வாறே செய்துவந்தார்கள் என நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
அத்தியாயம் : 25
1575. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، قَالَ حَدَّثَنِي مَعْنٌ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدْخُلُ مِنَ الثَّنِيَّةِ الْعُلْيَا، وَيَخْرُجُ مِنَ الثَّنِيَّةِ السُّفْلَى.
பாடம் : 40
மக்காவினுள் எவ்வழியே நுழைவது?
1575. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவிலிருந்து புறப்பட்டு மக்காவுக்குள்) மேற்புறக் கணவாய் வழியாக நுழைந்து கீழ்ப்புறக் கணவாய் வழியாக வெளியேறு வார்கள்.
அத்தியாயம் : 25
1575. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவிலிருந்து புறப்பட்டு மக்காவுக்குள்) மேற்புறக் கணவாய் வழியாக நுழைந்து கீழ்ப்புறக் கணவாய் வழியாக வெளியேறு வார்கள்.
அத்தியாயம் : 25
1576. حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ الْبَصْرِيُّ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم دَخَلَ مَكَّةَ مِنْ كَدَاءٍ مِنَ الثَّنِيَّةِ الْعُلْيَا الَّتِي بِالْبَطْحَاءِ، وَيَخْرُجُ مِنَ الثَّنِيَّةِ السُّفْلَى. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ كَانَ يُقَالُ هُوَ مُسَدَّدٌ كَاسْمِهِ. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ سَمِعْتُ يَحْيَى بْنَ مَعِينٍ يَقُولُ سَمِعْتُ يَحْيَى بْنَ سَعِيدٍ يَقُولُ لَوْ أَنَّ مُسَدَّدًا أَتَيْتُهُ فِي بَيْتِهِ فَحَدَّثْتُهُ لاَسْتَحَقَّ ذَلِكَ، وَمَا أُبَالِي كُتُبِي كَانَتْ عِنْدِي أَوْ عِنْدَ مُسَدَّدٍ.
பாடம் : 41
மக்காவிலிருந்து எவ்வழியே வெளியேறுவது?
1576. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘பத்ஹா’ எனும் இடத்திலுள்ள ‘கதா’ எனும் மேற்புறக் கணவாய் வழியாக மக்காவில் நுழைந்து கீழ்ப்புறக் கணவாய் வழியாக வெளியேறுவார்கள்.
அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்:
(இந்த ஹதீஸை எமக்கு அறிவித்த) முசத்தத் (ரஹ்) அவர்கள் தம் பெயருக் கேற்ப நேர்மையாளர் ஆவார். (‘முசத்தத்’ என்றால் ‘சீராக்கப்பட்டவர்’ என்பது பொருள்.) “முசத்தத் அவர்களின் இல்லத்திற்கு நான் சென்று அன்னாரிடம் நபிமொழிகளை எடுத்துரைக்கிறேன் என்றால், அதற்கு அவர் தகுதி பெற்றவர் (என்பதே பொருள்). என் நூல்கள் என்னிடம் உள்ளனவா, அல்லது முசத்தத் அவர்களிடம் உள்ளனவா என்பதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை” என்று யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாக யஹ்யா பின் மயீன் (ரஹ்) அவர்கள் சொன்னார்கள்.
அத்தியாயம் : 25
1576. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘பத்ஹா’ எனும் இடத்திலுள்ள ‘கதா’ எனும் மேற்புறக் கணவாய் வழியாக மக்காவில் நுழைந்து கீழ்ப்புறக் கணவாய் வழியாக வெளியேறுவார்கள்.
அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்:
(இந்த ஹதீஸை எமக்கு அறிவித்த) முசத்தத் (ரஹ்) அவர்கள் தம் பெயருக் கேற்ப நேர்மையாளர் ஆவார். (‘முசத்தத்’ என்றால் ‘சீராக்கப்பட்டவர்’ என்பது பொருள்.) “முசத்தத் அவர்களின் இல்லத்திற்கு நான் சென்று அன்னாரிடம் நபிமொழிகளை எடுத்துரைக்கிறேன் என்றால், அதற்கு அவர் தகுதி பெற்றவர் (என்பதே பொருள்). என் நூல்கள் என்னிடம் உள்ளனவா, அல்லது முசத்தத் அவர்களிடம் உள்ளனவா என்பதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை” என்று யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாக யஹ்யா பின் மயீன் (ரஹ்) அவர்கள் சொன்னார்கள்.
அத்தியாயம் : 25
1577. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَمَّا جَاءَ إِلَى مَكَّةَ دَخَلَ مِنْ أَعْلاَهَا وَخَرَجَ مِنْ أَسْفَلِهَا.
பாடம் : 41
மக்காவிலிருந்து எவ்வழியே வெளியேறுவது?
1577. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மக்கா நகருக்கு வந்தால், அதன் மேற்புறத்தின் வழியாக நுழைந்து அதன் கீழ்ப்புறத்தின் வழியாக வெளியேறுவார்கள்.
அத்தியாயம் : 25
1577. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மக்கா நகருக்கு வந்தால், அதன் மேற்புறத்தின் வழியாக நுழைந்து அதன் கீழ்ப்புறத்தின் வழியாக வெளியேறுவார்கள்.
அத்தியாயம் : 25
1578. حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ الْمَرْوَزِيُّ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ عَامَ الْفَتْحِ مِنْ كَدَاءٍ، وَخَرَجَ مِنْ كُدًا مِنْ أَعْلَى مَكَّةَ.
பாடம் : 41
மக்காவிலிருந்து எவ்வழியே வெளியேறுவது?
1578. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கா வெற்றியின்போது நபி (ஸல்) அவர்கள் ‘கதாஉ’ (எனும் கணவாய்) வழியாக மக்காவில் நுழைந்து மக்காவின் மேற்பகுதியிலுள்ள ‘குதா’ (எனும் கணவாய்) வழியாக வெளியேறினார்கள்.
அத்தியாயம் : 25
1578. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கா வெற்றியின்போது நபி (ஸல்) அவர்கள் ‘கதாஉ’ (எனும் கணவாய்) வழியாக மக்காவில் நுழைந்து மக்காவின் மேற்பகுதியிலுள்ள ‘குதா’ (எனும் கணவாய்) வழியாக வெளியேறினார்கள்.
அத்தியாயம் : 25
1579. حَدَّثَنَا أَحْمَدُ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنَا عَمْرٌو، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ عَامَ الْفَتْحِ مِنْ كَدَاءٍ أَعْلَى مَكَّةَ. قَالَ هِشَامٌ وَكَانَ عُرْوَةُ يَدْخُلُ عَلَى كِلْتَيْهِمَا مِنْ كَدَاءٍ وَكُدًا، وَأَكْثَرُ مَا يَدْخُلُ مِنْ كَدَاءٍ، وَكَانَتْ أَقْرَبَهُمَا إِلَى مَنْزِلِهِ.
பாடம் : 41
மக்காவிலிருந்து எவ்வழியே வெளியேறுவது?
1579. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி ஆண்டில் மக்காவின் மேற்பகுதியிலுள்ள ‘கதாஉ’ (எனும் கணவாய்) வழியாக நுழைந்தார்கள்.
அறிவிப்பாளர் ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
என் தந்தை உர்வா (ரஹ்) அவர்கள் ‘கதாஉ’, ‘குதா’ ஆகிய இரண்டின் வழி யாகவும் நுழைபவராக இருந்தார்கள். பெரும்பாலும் ‘கதாஉ’ வழியாகவே நுழைவார்கள். ஏனெனில், அவ்விரண்டில் ‘கதாஉ’தான் அவர்களது இல்லத்திற்கு அருகில் இருந்தது.
அத்தியாயம் : 25
1579. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி ஆண்டில் மக்காவின் மேற்பகுதியிலுள்ள ‘கதாஉ’ (எனும் கணவாய்) வழியாக நுழைந்தார்கள்.
அறிவிப்பாளர் ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
என் தந்தை உர்வா (ரஹ்) அவர்கள் ‘கதாஉ’, ‘குதா’ ஆகிய இரண்டின் வழி யாகவும் நுழைபவராக இருந்தார்கள். பெரும்பாலும் ‘கதாஉ’ வழியாகவே நுழைவார்கள். ஏனெனில், அவ்விரண்டில் ‘கதாஉ’தான் அவர்களது இல்லத்திற்கு அருகில் இருந்தது.
அத்தியாயம் : 25
1580. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ، حَدَّثَنَا حَاتِمٌ، عَنْ هِشَامٍ، عَنْ عُرْوَةَ، دَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَامَ الْفَتْحِ مِنْ كَدَاءٍ مِنْ أَعْلَى مَكَّةَ. وَكَانَ عُرْوَةُ أَكْثَرَ مَا يَدْخُلُ مِنْ كَدَاءٍ وَكَانَ أَقْرَبَهُمَا إِلَى مَنْزِلِهِ.
பாடம் : 41
மக்காவிலிருந்து எவ்வழியே வெளியேறுவது?
1580. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி ஆண்டில் மக்காவின் மேற்பகுதியிலுள்ள ‘கதாஉ’ எனுமிடத்தின் வழியே நுழைந்தார்கள்.
அறிவிப்பாளர் ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
(என் தந்தை) உர்வா (ரஹ்) அவர்கள் பெரும்பாலும் ‘கதாஉ’ (எனும் மேற்புறக் கணவாயின்) வழியாகவே நுழைபவராக இருந்தார்கள். அவ்விரண்டில் ‘கதாஉ’ தான் அவர்களின் இல்லத்திற்கு அருகில் இருந்தது.
அத்தியாயம் : 25
1580. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி ஆண்டில் மக்காவின் மேற்பகுதியிலுள்ள ‘கதாஉ’ எனுமிடத்தின் வழியே நுழைந்தார்கள்.
அறிவிப்பாளர் ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
(என் தந்தை) உர்வா (ரஹ்) அவர்கள் பெரும்பாலும் ‘கதாஉ’ (எனும் மேற்புறக் கணவாயின்) வழியாகவே நுழைபவராக இருந்தார்கள். அவ்விரண்டில் ‘கதாஉ’ தான் அவர்களின் இல்லத்திற்கு அருகில் இருந்தது.
அத்தியாயம் : 25