4918. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَعْبَدِ بْنِ خَالِدٍ، قَالَ سَمِعْتُ حَارِثَةَ بْنَ وَهْبٍ الْخُزَاعِيَّ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ " أَلاَ أُخْبِرُكُمْ بِأَهْلِ الْجَنَّةِ كُلُّ ضَعِيفٍ مُتَضَعِّفٍ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لأَبَرَّهُ، أَلاَ أُخْبِرُكُمْ بِأَهْلِ النَّارِ كُلُّ عُتُلٍّ جَوَّاظٍ مُسْتَكْبِرٍ ".
பாடம்: 67. ‘அல்முல்க்’ அத்தியாயம்1 (67:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அத்தஃபாவுத்’ எனும் சொல்லுக்கும், (மற்றொரு வாய்பாட்டில் அமைந்த) ‘தஃபவ்வுத்’ எனும் சொல்லுக்கும் பொருள் ஒன்றே. அதாவது ‘முரண்பாடு’ அல்லது ‘மாற்று’. (67:8ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தமய்யஸு’ எனும் சொல்லுக்கு ‘அது வெடித்துவிட’ என்று பொருள். (67:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மனாகிபிஹா’ எனும் சொல்லுக்கு ‘அதன் பல பகுதிகளுக்கு’ என்று பொருள். (67:27ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தத்தஊன்’ (நீங்கள் வற்புறுத்திக் கூறினீர்களோ) எனும் சொல்லுக்கும் ‘தத்ஊன’ என்பதற்கும் பொருள் ஒன்றே. (67:19ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யக்பிள்ன’ எனும் சொல்லுக்கு ‘சிறகடி(த்துப் பற)க்கும்’ என்பது பொருள். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (மேற்கண்ட வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஸாஃப்பாத்’ எனும் சொல்லுக்கு ‘தம் இறகுகளை விரித்து’ என்பது பொருள். (67:21ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வ நுஃபூர்’ எனும் சொல்லுக்கு ‘சத்தியத்தை மறுப்பதிலும்’ என்பது பொருள். பாடம்: 68. ‘அல்கலம்’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (68:23ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யத்தஃகாஃப்பத்தூன’ எனும் சொல்லுக்கு ‘இரகசியமாகப் பேசிக்கொண்டு போனார்கள்’ என்று பொருள். கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (68:25ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஹர்த்’ எனும் சொல்லுக்கு ‘மனதுக்குள் தீர்மானித்துக்கொண்டு’ என்று பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (68:26ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ல ளால்லூன’ எனும் சொல்லுக்கு ‘நமது தோட்டமிருந்த இடத்தை நாம் தவற விட்டுவிட்டோம்’ என்று பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அல்லாதோர் கூறுகிறார்கள்: (68:20ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கஸ்ஸரீம்’ எனும் சொல்லுக்கு ‘இரவிலிருந்து பிரிந்து வந்த அதிகாலைபோல; பகலிலிருந்து பிரிந்த இரவைப் போல’ என்று பொருள். மேலும், மணல் குவியலிலிருந்து பிரிந்துவந்த ஒவ்வொரு மணல் துகளுக்கும் ‘ஸரீம்’ என்று கூறப்படுவதுண்டு. பாடம்: 1 (அவன்) இரக்கமற்ற கொடுமைக் காரனாகவும், இத்தனைக்கும் பிறகு இழிபிறவியாகவும் இருக்கின்றான். (இவன் போன்றவனுக்கெல்லாம் நபியே! நீர் அடங்கிவிடாதீர் (எனும் 68:13ஆவது இறைவசனம்)
4918. ஹாரிஸா பின் வஹ்ப் அல் ஃகுஸாஈ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (ஒருமுறை பின் வருமாறு) கூறக் கேட்டேன்: சொர்க்க வாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கவா? அவர்கள் (மக்களின் பார்வையில்) பலவீனமானவர்கள்; பணிவானவர்கள். (ஆனால்,) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால் அல்லாஹ் அதை (அவ்வாறே) நிறைவேற்றிவைப்பான்.

(இதைப் போன்றே) நரகவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கவா? அவர்கள் இரக்கமற்றவர்கள்; (அதிகமாகச் சாப்பிட்டு) உடல் கொழுத்தவர்கள்; தற்பெருமை கொள்வோர் ஆவர்.

அத்தியாயம் : 65
4919. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ خَالِدِ بْنِ يَزِيدَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلاَلٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ " يَكْشِفُ رَبُّنَا عَنْ سَاقِهِ فَيَسْجُدُ لَهُ كُلُّ مُؤْمِنٍ وَمُؤْمِنَةٍ، وَيَبْقَى مَنْ كَانَ يَسْجُدُ فِي الدُّنْيَا رِئَاءً وَسُمْعَةً، فَيَذْهَبُ لِيَسْجُدَ فَيَعُودُ ظَهْرُهُ طَبَقًا وَاحِدًا ".
பாடம்: 2 காலின் திரை அகற்றப்ப(ட்)டு (இறைவன் காட்சியளிக்கு)ம் அந்த (மறுமை) நாளில் (மக்களெல்லாரும் தாமாகவே) சிரவணக்கம் செய்ய நிர்ப்பந்திக்கப்படும்போதுகூட (இறைமறுப்பாளர்களான) இவர்கள் (அதற்குச்) சக்தி பெறமாட்டார்கள் (எனும் 68:42ஆவது இறை வசனம்)
4919. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நம் இறைவன் (காட்சியளிப்பதற்காகத்) திரையை அகற்றித் தன் காலை வெளிப்படுத்தும் அந்த (மறுமை) நாளில், இறைநம்பிக்கையுள்ள ஒவ்வோர் ஆணும், இறைநம்பிக்கையுள்ள ஒவ்வொரு பெண்ணும் அவனுக்கு முன்னால் சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள்.

முகஸ்துதிக்காகவும் மக்களின் பாராட்டைப் பெறுவதற்காகவும் இவ்வுலகில் (தொழுது) சஜ்தா செய்துவந்தவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர். அப்போது அவர்கள் சஜ்தா செய்ய முற்படுவார்கள். (ஆனால்,) அவர்களது முதுகு (வளையாமல்) ஒரே கட்டையைப்போல் மாறிவிடும்.

இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 65
4920.
பாடம்: 69. ‘அல்ஹாக்கா’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) (69:21ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஈஷத்துர் ராளியா’ (திருப்தியான வாழ்க்கை) என்பதன் கருத்தாவது: அந்த வாழ்க்கையில் அவர் திருப்தியைக் காண்பார். (69:27ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்காளியா’ (முடிந்துபோனதாக) எனும் சொல், மறுமையில் எழுப்பப்படுவதற்குமுன் ஏற்படும் மரணத்தைக் குறிக்கும். (அந்த மரணத்தோடு எல்லாம் முடிந்திருக்கக்கூடாதா எனப் புலம்புவான்.) (69:47ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஹத்’ (எவரும்) எனும் சொல் ஒருமை, பன்மை ஆகிய இரண்டு நிலையிலும் பிரயோகிக்கப்படுகிறது. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (69:46ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்வத்தீன்’ எனும் சொல்லுக்கு ‘நாடி நரம்பு’ என்பது பொருள். (69:11ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தஃகா’ எனும் சொல்லுக்கு ‘அதிகமானது’என்று பொருள். (69:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அத்தாஃகியா’ எனும் சொல்லுக்கு ‘(எல்லை மீறிய) அட்டூழியம்’ என்று பொருள். (‘தாஃகியா’ என்பதற்கு ‘புயல்’ என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.) அந்தப் புயல் வானவர்களால்கூடக் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மிகக் கடுமையாக வீசியது. இறைத்தூதர் நூஹ் (அலை) அவர்களின் சமூகத்தார்மீது பெருவெள்ளம் மிகக் கடுமையாகப் பாய்ந்ததுபோல் இந்த (‘ஸமூத்’ மற்றும் ‘ஆத்’ சமூகத்தினருக்கும்) வேதனை எற்பட்டது. பாடம்: 70. ‘அல்மஆரிஜ்’ அத்தியாயம்1 (70:13ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபஸீலத்திஹி’ (அவனுடைய நெருங்கிய உறவினர்) எனும் சொல், ஒரு மனிதனின் குடும்ப உறவு எந்தத் தந்தை மற்றும் பாட்டனார் மூலம் வந்து சேர்கிறதோ அத்தகைய நெருக்கமான மூதாதையரைக் குறிக்கும். (70:16ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லிஷ்ஷவா’ எனும் சொல், இரண்டு கைகள், இரண்டு கால்கள், மற்றும் உடலின் அனைத்து பாகங்களையும், தலையின் சருமத்தையும் குறிக்கும் என்று சொல்லப்படுகிறது. எந்த உறுப்பைத் துண்டிப்பதால் மனிதன் இறந்துவிடமாட்டானோ அதுவும் ‘ஷவா’ என்று சொல்லப்படுகிறது. (70:37ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இஸீன்’ எனும் சொல்லுக்கு, ‘கூட்டம் கூட்டமாக’ என்பது பொருள். ‘இஸத்’ (கூட்டம்) என்பது அதன் ஒருமையாகும். பாடம்: 71. ‘நூஹ்’ அத்தியாயம்1 (71:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அத்வார்’ எனும் சொல்லுக்கு ‘மாறுபட்ட பல்வேறு நிலைகள்’ என்பது பொருள். (இதன் ஒருமையான ‘தவ்ர்’ எனும் சொல்லுக்கு ‘அளவு’, ‘வரம்பு’ எனப் பொருள் கூறப்படுவதுண்டு. இதன்படி) ‘அதா தவ்ரஹு’ எனும் வாக்கியத்திற்குத் ‘தனது வரம்பை அவன் மீறிவிட்டான்’ என்று பொருள் கொள்ளப்படுகிறது. (71:22ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘குப்பார்’ எனும் சொல்லுக்கு ‘மிகப் பெரியது’ என்று பொருள். ‘குபார்’ (பெரிய) என்பதைவிட, ‘குப்பார்’ (மிகப் பெரிய) எனும் சொல், மிகைச் சொல்லாகும். இதைப் போன்றே ‘ஜுமால்’ (அழகிய) என்பதைவிட ‘ஜும்மால்’ (மிக அழகிய) என்பது மிகைச் சொல்லாகும். ‘குபார்’ என்பதற்கு ‘கபீர்’ (பெரியவன்) என்றும் பொருளுண்டு. ‘குபார்’ என்று (அழுத்தல் குறியின்றியு)ம் ஓதப்பட்டுள்ளது. ‘அழகிய மனிதன்’ என்பதைச் சுட்ட அரபியர், ‘ரஜுலுன் ஹுஸ்ஸானுன்’, ‘ரஜுலுன் ஜும்மாலுன்’, (என அழுத்தல் குறியுடனும்) ‘ரஜுலுன் ஹுஸானுன்’, ‘ரஜுலுன் ஜுமாலுன்’ என (அழுத்தல் குறியின்றியும்) குறிப்பிடுகின்றனர். (71:26ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தய்யார்’ எனும் சொல், ‘தவ்ர்’ எனும் வேர்ச்சொல்லிலிருந்து பிறந்ததாகும். (‘தவ்ர்’ என்பதற்கு ‘குடியிருப்பு’ என்று பொருள்) ‘தய்யார்’ எனும் பதத்தின் வாய்ப்பாடு, ‘ஃபஹ்ஹால்’ எனும் வாய்பாட்டில் அமைந்துள்ளது. ‘அல்கய்யூம்’ என்பதை ‘அல்கய்யாம்’ என்றே உமர் (ரலி) அவர்கள் ஓதியுள்ளார்கள். (அதைப் போன்றே இதுவும் அமைந்துள்ளது.) மற்றவர்கள் கூறுகிறார்கள்: ‘தய்யார்’ எனும் சொல்லுக்கு ‘எவரையும்’ என்று பொருள். (71:28ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தபார்’ எனும் சொல்லுக்கு ‘அழிவு’ என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (71:11ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மித்ரார்’ எனும் சொல்லுக்கு ‘தொடர்ந்து பெய்யும் மழை’ என்று பொருள். (71:13ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வகார்’ எனும் சொல்லுக்கு ‘மாண்பு’ என்பது பொருள். பாடம்: 1 (உங்கள் தெய்வங்களாகிய) வத்து, சுவாஉ, யஃகூஸ், யஊக் மற்றும் நஸ்ர் ஆகியவற்றை(க் கேட்பாரற்று) விட்டுவிடாதீர்கள் என்று அவர்கள் சொல்லிக்கொண்டனர் (எனும் 71:23ஆவது இறைவசனம்)
4920. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இறைத்தூதர் நூஹ் (அலை) அவர்களின் (காலத்து) மக்களிடையே (வழிபாடு செய்யப்பட்டுக்கொண்டு) இருந்த சிலைகள், பின்பு அரபியரிடையே இருந்தன. ‘வத்து’ என்பது, ‘தூமத்துல் ஜந்தல்’ எனும் இடத்திலிருந்த ‘கல்ப்’ குலத்தாரின் சிலையாகும்.2 ‘சுவாஉ’ என்பது ‘பனூ ஹுஃதைல்’ குலத்தாரின் சிலையாகும்.3

‘யஃகூஸ்’ என்பது ‘பனூ முராத்’ குலத்தாரின் சிலையாக இருந்தது. பின்னர், ‘சபஉ’ சமுதாயத்தாருக்கு அருகில் (யமனிலுள்ள) ‘ஜவ்ஃப்’ எனுமிடத்தில் வசித்துவந்த ‘பனூ ஃகுதைஃப்’ குலத்தாருக்குச் சொந்தமானது. ‘யஊக்’ என்பது ‘பனூ ஹம்தான்’ குலத்தாரின் சிலையாகும். ‘நஸ்ர்’ என்பது (யமனின் பழங்குடியரான) ‘ஹிம்யர்’ மக்களின் சிலையாகும். இவர்கள் ‘துல்கிலாஉ’ என்பவருடைய சந்ததியினராவர்.

(தெய்வச் சிலைகளாகக் கற்பிக்கப்பட்ட) இவை (ஐந்தும்) நூஹ் (அலை) அவர்களின் காலத்தில் வாழ்ந்த ஐந்து நல்ல மனிதர்களின் பெயர்களேயாகும். பின்னர் இவர்கள் மரணமடைந்தபொழுது இவர்களுடைய மக்களின் மனத்தில் ஷைத்தான், ‘‘அ(ந்த நல்ல)வர்கள் அமர்ந்துவந்த அவைகளில் சிலைகளை நிறுவுங்கள். (அவர்களின் நினைவாக) அவற்றுக்கு அவர்களின் பெயர்களையே சூட்டுங்கள்!” என்று எண்ணச் செய்தான்.

(அதன்படியே) அவர்களும் செய்தனர். அப்போது அந்தச் சிலைகள் வழிபாடு செய்யப்படவில்லை. ஆனால், (தங்களின் பெரியவர்களை நினைவுகூர்வதற்காகச் சிலை நிறுவிய) அந்த மக்களும் இறந்து, (அந்தச் சிலைகள் நிறுவப்பட்டதற்கான காரணம் குறித்த) அறிவும் மங்கிவிட்டபோது அச்சிலைகள் வழிபாடு செய்யப்படத் தொடங்கின.

அத்தியாயம் :
4921. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ انْطَلَقَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي طَائِفَةٍ مِنْ أَصْحَابِهِ عَامِدِينَ إِلَى سُوقِ عُكَاظٍ، وَقَدْ حِيلَ بَيْنَ الشَّيَاطِينِ وَبَيْنَ خَبَرِ السَّمَاءِ، وَأُرْسِلَتْ عَلَيْهِمُ الشُّهُبُ فَرَجَعَتِ الشَّيَاطِينُ فَقَالُوا مَا لَكُمْ فَقَالُوا حِيلَ بَيْنَنَا وَبَيْنَ خَبَرِ السَّمَاءِ وَأُرْسِلَتْ عَلَيْنَا الشُّهُبُ. قَالَ مَا حَالَ بَيْنَكُمْ وَبَيْنَ خَبَرِ السَّمَاءِ إِلاَّ مَا حَدَثَ، فَاضْرِبُوا مَشَارِقَ الأَرْضِ وَمَغَارِبَهَا فَانْظُرُوا مَا هَذَا الأَمْرُ الَّذِي حَدَثَ. فَانْطَلَقُوا فَضَرَبُوا مَشَارِقَ الأَرْضِ وَمَغَارِبَهَا يَنْظُرُونَ مَا هَذَا الأَمْرُ الَّذِي حَالَ بَيْنَهُمْ وَبَيْنَ خَبَرِ السَّمَاءِ. قَالَ فَانْطَلَقَ الَّذِينَ تَوَجَّهُوا نَحْوَ تِهَامَةَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِنَخْلَةَ، وَهْوَ عَامِدٌ إِلَى سُوقِ عُكَاظٍ، وَهْوَ يُصَلِّي بِأَصْحَابِهِ صَلاَةَ الْفَجْرِ، فَلَمَّا سَمِعُوا الْقُرْآنَ تَسَمَّعُوا لَهُ فَقَالُوا هَذَا الَّذِي حَالَ بَيْنَكُمْ وَبَيْنَ خَبَرِ السَّمَاءِ. فَهُنَالِكَ رَجَعُوا إِلَى قَوْمِهِمْ فَقَالُوا يَا قَوْمَنَا إِنَّا سَمِعْنَا قُرْآنًا عَجَبًا يَهْدِي إِلَى الرُّشْدِ فَآمَنَّا بِهِ، وَلَنْ نُشْرِكَ بِرَبِّنَا أَحَدًا. وَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَى نَبِيِّهِ صلى الله عليه وسلم {قُلْ أُوحِيَ إِلَىَّ أَنَّهُ اسْتَمَعَ نَفَرٌ مِنَ الْجِنِّ} وَإِنَّمَا أُوحِيَ إِلَيْهِ قَوْلُ الْجِنِّ.
பாடம்: 72. ‘அல்ஜின்’ அத்தியாயம்1 பாடம்: 1 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (72:19ஆவது வசனத் தின் மூலத்திலுள்ள) ‘லிபத்’ எனும் சொல்லுக்கு ‘உதவியாளர்கள்’ என்பது பொருள்
4921. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் ‘உகாழ்’ எனும் சந்தையை நோக்கிச் சென்றார்கள். (இந்த நேரத்தில்) ஷைத்தான்களுக்கும் வானுலகச் செய்திகளுக்கும் இடையே திரையிடப்பட்டு (அச்செய்திகளைக் கேட்க விடாமல் ஷைத்தான் தடுக்கப்பட்டு)விட்டது. (வானுலகச் செய்திகளை ஒட்டுக் கேட்கச் சென்ற) ஷைத்தான்கள்மீது தீப்பந்தங்கள் ஏவிவிடப்பட்டன. (ஒட்டுக் கேட்கச் சென்ற) அந்த ஷைத்தான்கள் (ஒரு செய்தியும் கிடைக்காமல் தம் தலைவர்களிடம்) திரும்பிவந்தன.

அப்போது தலைவர்கள், ‘‘உங்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். ஷைத்தான்கள், ‘‘வானத்துச் செய்திகளுக்கும் எங்களுக்குமிடையே திரையிடப்பட்டு விட்டது; எங்கள்மீது தீப்பந்தங்கள் ஏவி விடப்பட்டன” என்று பதிலளித்தனர். ‘‘புதியதொரு நிகழ்ச்சி ஏதேனும் சம்பவித்திருக்கும். அதுவே உங்களுக்கும் வானத்துச் செய்திகளுக்கும் இடையே தடையாக அமைந்திருக்க வேண்டும். எனவே நீங்கள், பூமியின் கீழ்த்திசை, மேல்திசை (என நாலா பாகங்களிலும்) சென்று புதிதாகச் சம்பவித்துவிட்ட இந்த நிகழ்ச்சி என்னவென்று ஆராயுங்கள்” என்றனர்.

உடனே ஷைத்தான்கள் பூமியின் கீழ்த்திசை, மேல்திசை எங்கும் பயணம் செய்து தங்களுக்கும் வானுலகச் செய்திகளுக்கும் இடையே தடுப்பாய் அமைந்த அந்த நிகழ்ச்சி என்னவென்று ஆராயலாயினர்.

‘திஹாமா’ எனும் (மக்கா) பகுதியை நோக்கி ஷைத்தான்கள் வந்தபோது ‘உகாழ்’ சந்தையை நோக்கிச் சென்றுகொண்டிருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘நக்லா’ எனுமிடத்தில் தம் தோழர்களுக்கு ‘ஃபஜ்ர்’ தொழுகையை முன்னின்று நடத்திக்கொண்டிருந்தார்கள். அப்போது ஓதப்பட்ட குர்ஆன் வசனங்களை அந்த ஷைத்தான்கள் கேட்டபோது அதைக் கவனமாகச் செவிகொடுத்துக் கேட்டனர்.

அப்போது ஷைத்தான்கள் (தங்களுக்கிடையில்), ‘‘வானத்துச் செய்திகளை (கேட்க முடியாமல்) உங்களைத் தடுத்தது இதுதான்” என்று கூறிவிட்டு, தம் கூட்டத்தாரிடம் சென்று, ‘‘எங்கள் கூட்டத்தாரே! நிச்சயமாக நாங்கள் ஆச்சரியமானதொரு குர்ஆனைச் செவியுற்றோம். அது நல்வழியைக் காட்டுகின்றது. எனவே, நாங்கள் அதை நம்பிக்கை கொண்டோம். எங்கள் இறைவனுக்கு (இனி) நாங்கள் ஒருபோதும் யாரையும் இணையாகக் கருதமாட்டோம்” என்று கூறினர்.

(இதையொட்டி) வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் தன் தூதருக்கு, ‘‘(நபியே!) நீர் கூறுக: வஹீ மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது: மெய்யாகவே ஜின்களில் சிலர் (இவ்வேதத்தைச்) செவியுற்றனர்...” என்று தொடங்கும் இந்த (72ஆவது) அத்தியாயத்தை அருளினான்.

ஜின்கள் (தம் கூட்டத்தாரிடம்) கூறியதைப் பற்றி ‘வஹி’யின் மூலம்தான் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.2

அத்தியாயம் : 65
4922. حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ عَلِيِّ بْنِ الْمُبَارَكِ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، سَأَلْتُ أَبَا سَلَمَةَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَوَّلِ، مَا نَزَلَ مِنَ الْقُرْآنِ. قَالَ {يَا أَيُّهَا الْمُدَّثِّرُ} قُلْتُ يَقُولُونَ {اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ} فَقَالَ أَبُو سَلَمَةَ سَأَلْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ رضى الله عنهما عَنْ ذَلِكَ وَقُلْتُ لَهُ مِثْلَ الَّذِي قُلْتَ فَقَالَ جَابِرٌ لاَ أُحَدِّثُكَ إِلاَّ مَا حَدَّثَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " جَاوَرْتُ بِحِرَاءٍ، فَلَمَّا قَضَيْتُ جِوَارِي هَبَطْتُ فَنُودِيتُ فَنَظَرْتُ عَنْ يَمِينِي فَلَمْ أَرَ شَيْئًا، وَنَظَرْتُ عَنْ شِمَالِي فَلَمْ أَرَ شَيْئًا، وَنَظَرْتُ أَمَامِي فَلَمْ أَرَ شَيْئًا، وَنَظَرْتُ خَلْفِي فَلَمْ أَرَ شَيْئًا، فَرَفَعْتُ رَأْسِي فَرَأَيْتُ شَيْئًا، فَأَتَيْتُ خَدِيجَةَ فَقُلْتُ دَثِّرُونِي وَصُبُّوا عَلَىَّ مَاءً بَارِدًا ـ قَالَ ـ فَدَثَّرُونِي وَصَبُّوا عَلَىَّ مَاءً بَارِدًا قَالَ فَنَزَلَتْ {يَا أَيُّهَا الْمُدَّثِّرُ * قُمْ فَأَنْذِرْ * وَرَبَّكَ فَكَبِّرْ} ".
பாடம்: 73. ‘அல்முஸ்ஸம்மில்’ அத்தியாயம்1 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (73:8ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தபத்தல்’ எனும் சொல்லுக்கு ‘கலப்பற்ற முறையில் அவனுக்காகவென்றே ஆகிவிடுங்கள்’ என்று பொருள். ஹசன் அல்பளி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (73:12ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அன்கால்’ எனும் சொல்லுக்கு ‘(கை)விலங்குகள்’ என்பது பொருள். (73:18ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முன்ஃபதிருன் பிஹி’ எனும் சொல்லுக்கு ‘அதன் பளுவால் தகர்ந்துவிடும்’ என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (73:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கஸீபம் மஹீலா’ எனும் சொல்லுக்கு ‘சிதறிய மணற்குவியலாய்’ என்று பொருள். (73:16ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வபீலா’ எனும் சொல்லுக்கு ‘கடுமையாக’ என்பது பொருள். பாடம்: 74. ‘அல்முத்தஸ்ஸிர்’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (74:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அசீர்’ எனும் சொல்லுக்கு ‘மிகக் கடுமையான’ என்பது பொருள். (74:51ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கஸ்வரா’ எனும் சொல்லுக்கு ‘மனிதர்களின் கூச்சல், கூக்குரல்கள்’ என்பது பொருள். சிங்கத்திற்கும், ஒவ்வொரு கடினமான பொருளுக்கும் ‘கஸ்வரா’ என்றும், ‘கஸ்வர்’ என்றும் பெயர் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள். (74:50ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முஸ்தன்ஃபிரா’ எனும் சொல்லுக்கு ‘மிரண்டு வெருண்டோடுகின்ற’ என்பது பொருள். பாடம்: 1
4922. யஹ்யா பின் அபீகஸீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களிடம் முதன்முதலாக அருளப்பெற்ற திருக்குர்ஆன் வசனம் குறித்துக் கேட்டேன். அதற்கு அன்னார், ‘‘போர்த்தியிருப்பவரே!” (யா அய்யுஹல் முத்தஸ்ஸிர்) எனும் (74:1ஆவது) வசனம்என்றார்கள். நான், ‘‘(நபியே!) படைத்த உம்முடைய இறைவனின் பெயரால் ஓதுக!” (இக்ரஉ பிஸ்மி ரப்பிகல்லஃதீ கலக்) எனும் (96:1ஆவது) வசனம் என்றல்லவா மக்கள் கூறுகிறார்கள்? என்றேன்.

அதற்கு அபூசலமா அவர்கள், ‘‘நான் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் இது குறித்துக் கேட்டேன். நீங்கள் (என்னிடம்) கேட்டது போலவே நானும் அவர்களிடம் கேட்டேன். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குச் சொன்னதைத் தவிர வேறெதையும் உங்களுக்கு நான் சொல்லப்போவதில்லை.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் ஹிரா மலைக் குகையில் தங்கியிருந்தேன். பிறகு என் தங்குதலை முடித்துக்கொண்டு (மலையிலிருந்து) இறங்கினேன். அப்போது என்னை அழைக்கும் குரலைக் கேட்டு நான் என் வலப் பக்கத்தில் பார்த்தேன். அங்கு எதையும் நான் காணவில்லை. என் இடப் பக்கத்தில் பார்த்தேன். அங்கும் எதையும் நான் காணவில்லை. எனக்கு முன்னால் பார்த்தேன். அங்கும் நான் எதையும் காணவில்லை. எனக்குப் பின்னால் பார்த்தேன். அங்கும் நான் எதையும் காணவில்லை. ஆகவே, நான் என் தலையை உயர்த்திப் பார்த்தேன். அங்கு ஒன்றை நான் கண்டேன்.2

ஆகவே, நான் (என் துணைவியாரான) கதீஜாவிடம் சென்று, ‘‘எனக்குப் போர்த்திவிடுங்கள். குளிர்ந்த நீரை என்மீது ஊற்றுங்கள்!” என்று கூறினேன். அவர்கள் எனக்குப் போர்த்தியும்விட்டார்கள்; என்மீது குளிர்ந்த நீரை ஊற்றவும் செய்தார்கள்.

அப்போது, ‘‘போர்த்திக்கொண்டு (படுத்து) இருப்பவரே! எழுந்து எச்சரிக்கை செய்வீராக! மேலும், உம்முடைய இறைவனைப் பெருமைப்படுத்துவீராக!” எனும் (74:1-3) வசனங்கள் அருளப்பெற்றன.3

அத்தியாயம் : 65
4923. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، وَغَيْرُهُ، قَالاَ حَدَّثَنَا حَرْبُ بْنُ شَدَّادٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، رضى الله عنهما عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " جَاوَرْتُ بِحِرَاءٍ ". مِثْلَ حَدِيثِ عُثْمَانَ بْنِ عُمَرَ عَنْ عَلِيِّ بْنِ الْمُبَارَكِ.
பாடம்: 2 ‘‘எழுந்து எச்சரிக்கை செய்வீராக!” எனும் (74:2ஆவது) இறைவசனம்
4923. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் ‘ஹிரா’ மலைக் குகையில் தங்கியிருந்தேன் (எனத் தொடங்கி) மேற்கண்ட ஹதீஸைப் போன்றே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாக அறிவிக் கப்பட்டுள்ளது.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 65
4924. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا حَرْبٌ، حَدَّثَنَا يَحْيَى، قَالَ سَأَلْتُ أَبَا سَلَمَةَ أَىُّ الْقُرْآنِ أُنْزِلَ أَوَّلُ فَقَالَ {يَا أَيُّهَا الْمُدَّثِّرُ} فَقُلْتُ أُنْبِئْتُ أَنَّهُ {اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ} فَقَالَ أَبُو سَلَمَةَ سَأَلْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ أَىُّ الْقُرْآنِ أُنْزِلَ أَوَّلُ فَقَالَ {يَا أَيُّهَا الْمُدَّثِّرُ} فَقُلْتُ أُنْبِئْتُ أَنَّهُ {اقْرَأْ بِاسْمِ رَبِّكَ} فَقَالَ لاَ أُخْبِرُكَ إِلاَّ بِمَا قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " جَاوَرْتُ فِي حِرَاءٍ فَلَمَّا قَضَيْتُ جِوَارِي، هَبَطْتُ فَاسْتَبْطَنْتُ الْوَادِيَ فَنُودِيتُ، فَنَظَرْتُ أَمَامِي وَخَلْفِي وَعَنْ يَمِينِي وَعَنْ شِمَالِي فَإِذَا هُوَ جَالِسٌ عَلَى عَرْشٍ بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ، فَأَتَيْتُ خَدِيجَةَ فَقُلْتُ دَثِّرُونِي وَصُبُّوا عَلَىَّ مَاءً بَارِدًا، وَأُنْزِلَ عَلَىَّ {يَا أَيُّهَا الْمُدَّثِّرُ * قُمْ فَأَنْذِرْ * وَرَبَّكَ فَكَبِّرْ}"
பாடம்: 3 உம்முடைய இறைவனைப் பெருமைப்படுத்துவீராக! (எனும் 74:3ஆவது இறைவசனம்)
4924. யஹ்யா பின் அபீகஸீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அபூசலமா (ரஹ்) அவர்களிடம் ‘‘முதன்முதலாக அருளப்பெற்ற குர்ஆன் வசனம் எது?” என்று கேட்டேன். அதற்கு அன்னார், ‘‘போர்த்தியிருப்பவரே!” (யா அய்யுஹல் முத்தஸ்ஸிர்) எனும் (74:1ஆவது) வசனம் என்றார்கள். அப்போது நான், ‘‘(நபியே!) படைத்த உம்முடைய இறைவனின் பெயரால் ஓதுக!” (இக்ரஉ பிஸ்மி ரப்பிக்கல்லஃதீ கலக்) எனும் (96:1ஆவது) வசனம் என்றல்லவா எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது! என்றேன்.

அதற்கு அபூசலமா (ரஹ்) அவர்கள், ‘‘நான் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம், ‘‘முதன்முதலாக அருளப்பெற்ற குர்ஆன் வசனம் எது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘யா அய்யுஹல் முத்தஸ்ஸிர்” எனும் (74:1ஆவது) வசனம் என்று கூறினார்கள். உடனே நான், ‘‘இக்ரஉ பிஸ்மி ரப்பிக்கல்லஃதீ கலக்” எனும் (96:1ஆவது) வசனம்தான் (முதன்முதலில் அருளப்பட்ட வசனம்) என்று எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதே! என்று கேட்டேன். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள் சொன்னதைத் தவிர வேறெதையும் உங்களுக்கு நான் தெரிவிக்கப் போவதில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:

நான் ‘ஹிரா’ மலைக் குகையில் தங்கியிருந்தேன். நான் என் தங்குதலை முடித்துக்கொண்டு (மலையிலிருந்து) இறங்கி அங்கிருந்த பள்ளத்தாக்கின் நடுவே வந்து சேர்ந்திருப்பேன். அப்போது என்னை அழைக்கும் குரலைக் கேட்டேன். உடனே நான் எனக்கு முன்புறத்திலும் எனக்குப் பின்புறத்திலும் எனக்கு வலப் பக்கத்திலும் எனக்கு இடப் பக்கத்திலும் பார்த்தேன். அப்போது அவர் (ஜிப்ரீல்) வானத்திற்கும் பூமிக்கும் இடையே ஓர் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். உடனே நான் கதீஜாவிடம் சென்று, ‘‘எனக்குப் போர்த்திவிடுங்கள்! என்மீது குளிர்ந்த நீரை ஊற்றுங்கள்!” என்று கூறினேன்.

மேலும் எனக்கு, ‘‘போர்த்திக்கொண்டு (படுத்து) இருப்பவரே, எழுந்து எச்சரிக்கை செய்வீராக! உம்முடைய இறைவனைப் பெருமைப்படுத்துவீராக!” எனும் (74:1-3) இறைவசனங்கள் அருளப்பெற்றன.4

அத்தியாயம் : 65
4925. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ،. وَحَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، فَأَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَهْوَ يُحَدِّثُ عَنْ فَتْرَةِ الْوَحْىِ فَقَالَ فِي حَدِيثِهِ " فَبَيْنَا أَنَا أَمْشِي إِذْ سَمِعْتُ صَوْتًا مِنَ السَّمَاءِ فَرَفَعْتُ رَأْسِي فَإِذَا الْمَلَكُ الَّذِي جَاءَنِي بِحِرَاءٍ جَالِسٌ عَلَى كُرْسِيٍّ بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ، فَجَئِثْتُ مِنْهُ رُعْبًا فَرَجَعْتُ فَقُلْتُ زَمِّلُونِي زَمِّلُونِي. فَدَثَّرُونِي فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى {يَا أَيُّهَا الْمُدَّثِّرُ} إِلَى {وَالرِّجْزَ فَاهْجُرْ} ـ قَبْلَ أَنْ تُفْرَضَ الصَّلاَةُ ـ وَهْىَ الأَوْثَانُ ".
பாடம்: 4 மேலும், உம்முடைய ஆடைகளைத் தூய்மையாக வைத்திருப்பீராக! (எனும் 74:4ஆவது இறைவசனம்)
4925. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தமக்கு வஹீ (வேத அறிவிப்பு) நின்றுபோயிருந்த இடைக் காலத்தைப் பற்றி அறிவிக்கையில் (பின்வருமாறு) கூறினார்கள்:

நான் நடந்துபோய்கொண்டிருக்கும் போது வானத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டு எனது தலையை உயர்த்தினேன். அங்கே, நான் ‘ஹிரா’வில் இருந்தபோது என்னிடம் வந்த வானவர் (ஜிப்ரீல்) வானுக்கும் பூமிக்குமிடையே ஓர் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்து மிரட்சியால் நான் அதிர்ச்சிக் குள்ளாக்கப்பட்டேன். உடனே நான் (வீட்டிற்குத்) திரும்பி, (என் துணைவி யாரான) கதீஜாவிடம், ‘‘எனக்குப் போர்த்தி விடுங்கள்; எனக்குப் போர்த்திவிடுங்கள்” என்று சொன்னேன். அவர்களும் எனக்குப் போர்த்திவிட்டார்கள்.

அப்போது அல்லாஹ், ‘‘போர்த்தி யிருப்பவரே! எழுந்து எச்சரிக்கை செய்வீராக! உம்முடைய இறைவனைப் பெருமைப்படுத்துவீராக! உம்முடைய ஆடைகளைத் தூய்மையாக வைத்திருப்பீராக! அசுத்தத்திலிருந்து விலகியிருப்பீராக!” எனும் (74:1-5) வசனங்களைத் தொழுகை கடமையாக்கப்படுவதற்கு முன்னர் அருளினான்.5

(மேற்கண்ட 74:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அர்ருஜ்ஸ்’ (அசுத்தம்) என்பது சிலைகளைக் குறிக்கும்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 65
4926. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، قَالَ ابْنُ شِهَابٍ سَمِعْتُ أَبَا سَلَمَةَ، قَالَ أَخْبَرَنِي جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يُحَدِّثُ عَنْ فَتْرَةِ الْوَحْىِ " فَبَيْنَا أَنَا أَمْشِي سَمِعْتُ صَوْتًا مِنَ السَّمَاءِ فَرَفَعْتُ بَصَرِي قِبَلَ السَّمَاءِ، فَإِذَا الْمَلَكُ الَّذِي جَاءَنِي بِحِرَاءٍ قَاعِدٌ عَلَى كُرْسِيٍّ بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ، فَجَئِثْتُ مِنْهُ حَتَّى هَوَيْتُ إِلَى الأَرْضِ، فَجِئْتُ أَهْلِي فَقُلْتُ زَمِّلُونِي زَمِّلُونِي. فَزَمَّلُونِي فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى {يَا أَيُّهَا الْمُدَّثِّرُ} إِلَى قَوْلِهِ {فَاهْجُرْ} " ـ قَالَ أَبُو سَلَمَةَ وَالرِّجْزَ الأَوْثَانَ ـ " ثُمَّ حَمِيَ الْوَحْىُ وَتَتَابَعَ ".
பாடம்: 5 அசுத்தத்திலிருந்து விலகியிருப்பீ ராக! (எனும் 74:5ஆவது இறை வசனம்) (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அர்ருஜ்ஸ்’ எனும் சொல்லுக்கும் ‘அர்ரிஜ்ஸ்’ எனும் சொல்லுக்கும் ‘வேதனை’ என்று பொருள் எனக் கூறப்படுகின்றது.
4926. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

வஹீ (வேத அறிவிப்பு) நின்று போயிருந்த இடைக் காலத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் நடந்துபோய்க்கொண்டிருக்கும் போது வானத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டேன். உடனே வானை நோக்கி என் பார்வையை உயர்த்தினேன். அங்கு, ‘ஹிரா’ குகையில் என்னிடம் வந்த அதே வானவர் (ஜிப்ரீல்) வானத்திற்கும் பூமிக்குமிடையே ஓர் ஆசனத்தில் அமர்ந்துகொண்டிருந்தார்.

உடனே நான் அவரைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளாக்கப்பட்டு (கீழே) பூமியில் விழுந்துவிட்டேன். அப்போது நான் (நடுக்கமுற்றவனாக) என் வீட்டாரிடம் (திரும்பி) வந்து (கதீஜாவிடம்), ‘‘எனக்குப் போர்த்திவிடுங்கள்; எனக்குப் போர்த்திவிடுங்கள்” என்றேன். அப்போது, ‘‘போர்த்தியிருப்பவரே! எழுந்து எச்சரிக்கை செய்வீராக! உம்முடைய இறைவனைப் பெருமைப்படுத்துவீராக! உம்முடைய ஆடைகளைத் தூய்மையாக வைத்திருப்பீராக! அசுத்தத்திலிருந்து விலகியிருப்பீராக!” எனும் (74:1-5) வசனங்களை அல்லாஹ் அருளினான்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(74:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அர்ருஜ்ஸ்’ (அசுத்தம்) எனும் சொல், சிலைகளைக் குறிக்கும். (மேற்கண்ட வசனம் அருளப்பெற்ற) பின்னர் ‘வஹீ’ தொடர்ந்து அதிகமாக வரலாயிற்று.6

அத்தியாயம் : 65
4927. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا مُوسَى بْنُ أَبِي عَائِشَةَ ـ وَكَانَ ثِقَةً ـ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا نَزَلَ عَلَيْهِ الْوَحْىُ حَرَّكَ بِهِ لِسَانَهُ ـ وَوَصَفَ سُفْيَانُ ـ يُرِيدُ أَنْ يَحْفَظَهُ فَأَنْزَلَ اللَّهُ {لاَ تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ}
பாடம்: 75. ‘அல்கியாமா’ அத்தியாயம்1 பாடம்: 1 (நபியே!) இந்த வஹீயை (வேத அறிவிப்பை) அவசர அவசரமாக மனனம் செய்வதற்காக உமது நாவை அசைக்காதீர் (எனும் 75:16ஆவது இறைவசனம்) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (75:36ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘சுதா’ எனும் சொல்லுக்கு, ‘வெறுமனே’ என்பது பொருள். (75:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லி யஃப்ஜுர அமாமஹு’ (எதிர்காலத்திலும் தீமை செய்துகொண்டேயிருக்க வேண்டும் என்று விரும்புகிறான்) என்பதற்கு, ‘வெகு விரைவில் பாவமன்னிப்புக் கோருவேன்; நல்லறங்கள் புரிவேன் என்று சொல்óக் கொண்டே பாவங்களைச் செய்ய விரும்புகிறான்’ என்று பொருள். (75:11ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லா வஸர’ எனும் சொல்லுக்கு, ‘எந்தப் புகலிடமும் இருக்காது’ என்பது பொருள்.
4927. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

தம்மீது ‘வஹீ’ (வேத அறிவிப்பு) அருளப்பெறும்போது, நபி (ஸல்) அவர்கள் (தாம் இதை எங்கே மறந்துவிடப் போகிறோமோ என்ற அச்சத்தால் வேக வேகமாக ஓதி,) தமது நாவை அசைப்பவர் களாக இருந்தார்கள்.

-அருளப்பெறும் வேத வசனங்களை நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில்தான் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு தம் நாவை அசைத்து ஓதினார்கள் என சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்-

அப்போது, ‘‘(நபியே!) இந்த வஹீயை (வேத அறிவிப்பை) அவசர அவசரமாக மனனம் செய்வதற்காக உமது நாவை அசைக்காதீர்” எனும் (75:16ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.2

அத்தியாயம் : 65
4928. حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ إِسْرَائِيلَ، عَنْ مُوسَى بْنِ أَبِي عَائِشَةَ، أَنَّهُ سَأَلَ سَعِيدَ بْنَ جُبَيْرٍ عَنْ قَوْلِهِ تَعَالَى {لاَ تُحَرِّكْ بِهِ لِسَانَكَ} قَالَ وَقَالَ ابْنُ عَبَّاسٍ كَانَ يُحَرِّكُ شَفَتَيْهِ إِذَا أُنْزِلَ عَلَيْهِ، فَقِيلَ لَهُ {لاَ تُحَرِّكْ بِهِ لِسَانَكَ} ـ يَخْشَى أَنْ يَنْفَلِتَ مِنْهُ ـ {إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ} أَنْ نَجْمَعَهُ فِي صَدْرِكَ، وَقُرْآنَهُ أَنْ تَقْرَأَهُ {فَإِذَا قَرَأْنَاهُ} يَقُولُ أُنْزِلَ عَلَيْهِ {فَاتَّبِعْ قُرْآنَهُ * ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ} أَنْ نُبَيِّنَهُ عَلَى لِسَانِكَ.
பாடம்: 2 அதை (உமது மனத்தில்) ஒன்று சேர்த்து, அதை (நீர்) ஓதும்படி செய்வது எமது பொறுப்பாகும் (எனும் 75:17ஆவது இறைவசனம்)
4928. மூசா பின் அபீஆயிஷா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களிடம், ‘‘(நபியே!) இந்த வஹீயை (வேத அறிவிப்பை) அவசர அவசரமாக மனனம் செய்வதற்காக உமது நாவை அசைக்காதீர்” எனும் (75:16ஆவது) இறைவசனம் குறித்துக் கேட்டேன். அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: தம்மீது ‘வஹீ’ (வேத அறிவிப்பு) அருளப்பெறும்போது நபி (ஸல்) அவர்கள் தம்மிரு உதடுகளையும் அசைத்துக்கொண்டிருந்தார்கள். ஆகவே, (அல்லாஹ்விடமிருந்து) நபி (ஸல்) அவர்களுக்கு ‘வஹீ’ அருளப்பெறும்போது அவசர அவசரமாக உமது நாவை அசைக்காதீர் என்று உத்தரவிடப்பட்டது. (எங்கே தம்மீது அருளப்பெறும் வேத வசனங்கள் நினைவில் பதியாமல் மறதியில்,) தம்மைவிட்டு நழுவிப் போய்விடுமோ என்று நபி (ஸல்) அவர்கள் அஞ்சியதே இதற்குக் காரணமாகும்.

‘‘அதை ஒன்றுசேர்த்து, ஓதும்படி செய்வதும் எமது பொறுப்பாகும்” எனும் (75:17ஆவது) வசனத்திற்கு ‘நாமே உமது நெஞ்சத்தில் அதனை(ப் பதியச் செய்து,) ஒன்றுசேர்ப்போம். நீர் அதை ஓதும்படி செய்வோம்’ என்று பொருள்.

‘‘நாம் இதை ஓதிவிட்டோமாயின்...” எனும் (75:18ஆவது) வசனத்திற்கு, ‘ஜிப்ரீல் மூலமாக உமக்கு என் வசனங்கள் அருளப்பட்டுவிடுமாயின்...’ என்று பொருள்.

‘‘நீர் ஓதுவதைத் தொடர்வீராக! பின்னர் அ(தன் கருத்)தை விளக்குவதும் நமது பொறுப்பாகும்” எனும் (75:19ஆவது) வசனத்திற்கு, ‘உம்முடைய நாவினால் பிறருக்கு விளக்கிக் கொடுக்கச் செய்வதும் எமது பொறுப்பேயாகும்’ என்று பொருள்.

அத்தியாயம் : 65
4929. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مُوسَى بْنِ أَبِي عَائِشَةَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، فِي قَوْلِهِ {لاَ تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ} قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا نَزَلَ جِبْرِيلُ بِالْوَحْىِ، وَكَانَ مِمَّا يُحَرِّكُ بِهِ لِسَانَهُ وَشَفَتَيْهِ فَيَشْتَدُّ عَلَيْهِ وَكَانَ يُعْرَفُ مِنْهُ، فَأَنْزَلَ اللَّهُ الآيَةَ الَّتِي فِي {لاَ أُقْسِمُ بِيَوْمِ الْقِيَامَةِ} {لاَ تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ * إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ} قَالَ عَلَيْنَا أَنْ نَجْمَعَهُ فِي صَدْرِكَ، وَقُرْآنَهُ {فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ} فَإِذَا أَنْزَلْنَاهُ فَاسْتَمِعْ {ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ} عَلَيْنَا أَنْ نُبَيِّنَهُ بِلِسَانِكَ ـ قَالَ ـ فَكَانَ إِذَا أَتَاهُ جِبْرِيلُ أَطْرَقَ، فَإِذَا ذَهَبَ قَرَأَهُ كَمَا وَعَدَهُ اللَّهُ. {أَوْلَى لَكَ فَأَوْلَى} تَوَعُّدٌ.
பாடம்: 3 (நபியே!) நாம் இதை ஓதிவிட்டோமாயின் நீர் ஓதுவதைத் தொடர்வீராக! (எனும் 75:18ஆவது இறைவசனம்) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘நாம் இதை விவரிக்கும்போது அதன்படி செயல்படுவீராக!’ என்று இவ்வசனத்திற்குப் பொருள்” எனக் கூறியுள்ளார்கள்.
4929. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

‘‘(நபியே!) இந்த வஹியை (வேத அறிவிப்பை) அவசர அவசரமாக மனனம் செய்வதற்காக உமது நாவை அசைக்காதீர்” எனும் (75:16ஆவது) வசனம் குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தம்மிடம் ‘வஹீ’யைக் கொண்டுவரும்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் நாவையும் இரு உதடுகளையும் (எங்கே மறந்துவிடப்போகிறதோ என்ற அச்சத்தால், மனனமிடுவதற்காக ஓதியபடி) அசைத்துக்கொண்டிருப்பார்கள்.

இது அவர்களுக்குச் சிரமமாக இருந்தது. அது அவர்களது வதனத்திலேயே காணப்படலாயிற்று. ஆகவே அல்லாஹ், ‘‘லா உக்ஸிமு பி யவ்மில் கியாமா” என்று தொடங்கும் (75ஆவது அத்தியாயத்திலுள்ள) ‘‘இந்த வஹீயை (வேத அறிவிப்பை) அவசர அவசரமாக மனனம் செய்வதற்காக உமது நாவை அசைக்காதீர். அதை (உமது மனத்தில்) ஒன்றுசேர்த்து, அதை (நீர்) ஓதும்படி செய்வது எமது பொறுப்பாகும்” எனும் (75:16,17) வசனங்களை அருளினான்.

அதாவது, ‘உமது நெஞ்சத்தில் பதியச் செய்வதும் அதை உமது நாவால் ஓதும்படி செய்வதும் எமது பொறுப்பாகும்’ என்று இறைவன் கூறினான். மேலும், ‘‘நாம் இதை ஓதிவிட்டோமாயின், நீர் ஓதுவதைத் தொடர்வீராக!” என்ற (75:18ஆவது) வசனத்தையும் அருளினான். அதாவது ‘நாம் (வானவர் மூலம்) அருளும்போது, அதைக் கவனத்துடன் கேட்பீராக!’ என்று கூறினான். ‘‘பின்னர், அதை விளக்குவதும் எமது பொறுப்பாகும்” எனும் (75:19ஆவது) வசனத்தையும் அருளினான். அதாவது, ‘உமது நாவால் அதை(ப் பிறருக்கு) விளக்கித் தரும்படி உம்மை (ஆயத்தம்) செய்வது நமது பொறுப்பாகும்’ என்று கூறினான்.

(இந்த இறைவசனங்கள் அருளப்பட்ட பின்னர்) தம்மிடம் ஜிப்ரீல் (அலை) அவர்கள் (‘வஹீ’ கொண்டுவரும்போது,) தலையைத் தாழ்த்தி (அருளப்படுவதை நபி (ஸல்) அவர்கள் மௌனத்துடன் கேட்டு)க்கொண்டிருப்பார்கள். (இறைவசனங்களை அருளிவிட்டு) ஜிப்ரீல் (அலை) அவர்கள் சென்றுவிடும்போது, அல்லாஹ் வாக்களித்த பிரகாரம் நபி (ஸல்) அவர்கள் அவற்றை ஓதினார்கள்.

‘‘(மனிதனே! இது) உனக்குக் கேடுதான்! கேடேதான்” எனும் (75:34ஆவது) வசனம் ஓர் எச்சரிக்கையாகும்.

அத்தியாயம் : 65
4930. حَدَّثَنِي مَحْمُودٌ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَأُنْزِلَتْ عَلَيْهِ وَالْمُرْسَلاَتِ، وَإِنَّا لَنَتَلَقَّاهَا مِنْ فِيهِ فَخَرَجَتْ حَيَّةٌ، فَابْتَدَرْنَاهَا فَسَبَقَتْنَا فَدَخَلَتْ جُحْرَهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " وُقِيَتْ شَرَّكُمْ، كَمَا وُقِيتُمْ شَرَّهَا ".
பாடம்: 76. ‘அத்தஹ்ர்’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) (76:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஹல் அத்தா அலல் இன்சான்’ எனும் சொற்றொடருக்கு ‘மனிதன் குறிப்பிடத்தக்க ஒரு பொருளாக இல்லாதிருந்த ஒரு காலம் நிச்சயம் அவன்மீது சென்றுவிட்டது’ என்று பொருள். இதிலுள்ள ‘ஹல்’ எனும் (வினா) இடைச்சொல் சிலவேளை ஒன்றை மறுக்கும் தொனியில் வினவுவதற்காக வரும். இன்னும் சில சமயம் (நடப்பைக் குறிக்கும்) செய்தியாகவும் வரும். இங்கே செய்தியாகவே வந்துள்ளது. அதாவது (ஆரம்பத்தில்) மனிதன் ஒரு பொருளாக இருந்தான். ஆனால், இன்ன பொருள் என்று குறிப்பட்டுச் சொல்லும் நிலையில் அவன் இருக்கவில்லை. இந்த வசனம் (முதல்) மனிதரைக் களிமண்ணினால் படைத்து, அவருக்குள் உயிர் ஊதப்படும் வரையிலுள்ள கால வரம்பைக் குறிக்கின்றது. (76:2ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அம்ஷாஜ்’ எனும் சொல்லுக்கு ‘கலக்கப்பட்ட’ என்பது பொருள். அதாவது, ஆணின் நீர் (விந்து உயிரணு) மற்றும் பெண்ணின் நீர் (கருமுட்டை) மூலம் (கலக்கப்பட்ட ஓர் இந்திரியத் துளியிலிருந்து மனிதனைப் படைத்தோம்). பிறகு, அது (படிப்படியாக) இரத்தக் கட்டியாக, சதைப் பிண்டமாக மாறியது. ஒரு பொருள் இன்னொரு பொருளோடு கலக்கும்போது, கலக்கப்பட்ட பொருள் (‘மஷீஜ்’) என்று சொல்லப்படுகிறது. (மேற்கண்ட வசனத்தின் மூலத்திலுள்ள ‘அம்ஷாஜ்’ எனும் சொல், ‘மஷீஜ்’ எனும் சொல்லின் பன்மையாகும்). இதற்கு ‘மம்ஷூஜ்’ (கலக்கப்பட்டது) என்று பொருள். (76:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘சலாசில வ அஃக்லால்’ (சங்கிலிகளையும் விலங்குகளையும்) எனும் சொல்லை ‘சலாசிலன் வ அஃக்லாலன்’ என்று சிலர் ஓதினர். ஆனால், மற்றவர்கள் இதை அனுமதிக்கவில்லை. (‘சலாசில வ அஃக்லால்’ என்றே ஓத வேண்டும் என்று கூறுகின்றனர்). (76:7ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முஸ்த்ததீர்’ எனும் சொல்லுக்கு ‘துன்பங்கள் நீண்ட’ என்பது பொருள். (76:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கம்தரீர்’ எனும் சொல்லுக்கு ‘கடுமையானது’ என்று பொருள். ‘யவ்முன் கம்தரீர், யவ்முன் குமாதிர்’ ஆகிய சொற்களைக் கடும் துன்ப நாளைக் குறிக்க (அரபியர்) பயன்படுத்துகின்றனர். ‘அல்அபூஸ்’, ‘அல்கம்தரீர்’, ‘அல்குமாதிர்’, ‘அல்அஸீப்’ ஆகிய சொற்கள் கடுமையான துன்ப நாளைக் குறிக்கும். அபூஉபைதா மஅமர் பின் முஸன்னா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (76:28ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஷதத்னா அஸ்ரஹும்’ எனும் வாக்கியத்திற்கு ‘அவர்களை வலுவாகப் படைத்தோம்’ என்பது பொருள். (‘அசிர’ எனும் இறந்தகால வினைச்சொல்லுக்கு ‘இறுக்கமாகக் கட்டினான்’ என்பது பொருள். இந்த வகையில்,) எதையெல்லாம் மனிதன் இறுக்கமாகக் கட்டுவானோ அதற்கு ‘மஅஸூர்’ (இறுக்கமாகக் கட்டப்பட்டது) என்று கூறப்படும். உதாரணமாக, ஒட்டகத்தின் சிவிகையைக் கூறலாம். (அதை ஒட்டகத்தின் மீது இறுக்கமாகவே கட்டிவைக்கப்படுகிறது). பாடம்: 77. ‘அல்முர்சலாத்’ அத்தியாயம்1 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (77:33ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘ஜிமாலாத்’ எனும் சொல் ‘ஜுமாலாத்’ என்றும் ஓதப்பட்டுள்ளது. இந்த) ‘ஜுமாலாத்’ எனும் சொல்லுக்கு, ‘கப்பலின் கயிறுகள்’ என்று பொருள். (77:48ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இர்கஊ’ (குனிந்து ருகூஉ செய்து வழிபடுங்கள்) எனும் சொல்லுக்கு ‘தொழுகையை நிறைவேற்றுங்கள்’ என்பது பொருள். (இதே வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லா யர்கஊன்’ (அவர்கள் குனிந்து ருகூஉ செய்து வழிபடுவதில்லை) எனும் சொல்லுக்கு, ‘அவர்கள் தொழுவதில்லை’ என்பது பொருள். (77:35ஆவது வசனத்தில்) ‘‘இந்த மறுமை நாளில் அவர்கள் எதுவும் பேசமாட்டார்கள்” என்றும், (6:23ஆவது வசனத்தில்) ‘‘எங்கள் இறைவனாகிய அல்லாஹ்வின் மீதாணையாக,! நாங்கள் ஒருபோதும் இணைவைப்போராக இருக்கவில்லை (என்று பொய் சொல்வார்கள்)” என்றும், (36:65ஆவது வசனத்தில்) ‘‘(மறுமை நாள்) அன்று அவர்களுடைய வாய்களுக்கு முத்திரை வைத்துவிடுவோம். (அவர்களது வாய் பேசாது)” என்றும் (முரண்பாடு இருப்பதுபோல்) காணப்படுகிறதே என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘(இணைவைப்பாளர்களுக்கு மறுமை நாளில்) பல்வேறு கட்டங்கள் உண்டு. சில சந்தர்ப்பங்களில் அவர்கள் பேசுவார்கள்; இன்னும் சில சந்தர்ப்பங்களில் அவர்களால் பேச முடியாதவாறு அவர்களது வாய்க்கு முத்திரை வைக்கப்படும்” என்று பதிலளித்தார்கள்.2 பாடம்: 1
4930. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மினாவிலுள்ள ஒரு குகையில் தங்கி) இருந்தோம். அப்போது அவர்களுக்கு, ‘‘வல்முர்சலாத்தி (ஒன்றன் பின் ஒன்றாக அனுப்பப்படுகின்றவைமீது சத்தியமாக!)” எனும் (77ஆவது) அத்தியாயம் அருளப்பட்டது. அதை நாங்கள் நபி (ஸல்) அவர்களின் வாயிலிருந்து (அவர்களே ஓதக்) கேட்டுக்கொண்டிருந்தோம்.

அப்போது பாம்பு ஒன்று (தனது புற்றிலிருந்து) வெளிப்பட்டது. (அதைக் கொல்ல) போட்டியிட்டுக்கொண்டு நாங்கள் விரைந்தோம். அது எங்களை முந்திக்கொண்டு தனது புற்றுக்குள் நுழைந்துவிட்டது. அப்போது அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் அதன் தீங்கிலிருந்து காப்பாற்றப்பட்டதைப் போன்றே அதுவும் உங்கள் தீங்கிóருந்து காப்பாற்றப்பட்டுவிட்டது” என்று சொன் னார்கள்.3


அத்தியாயம் : 65
4931. حَدَّثَنَا عَبْدَةُ بْنُ عَبْدِ اللَّهِ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ آدَمَ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ مَنْصُورٍ، بِهَذَا. وَعَنْ إِسْرَائِيلَ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، مِثْلَهُ. وَتَابَعَهُ أَسْوَدُ بْنُ عَامِرٍ عَنْ إِسْرَائِيلَ،. وَقَالَ حَفْصٌ وَأَبُو مُعَاوِيَةَ وَسُلَيْمَانُ بْنُ قَرْمٍ عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ،. قَالَ يَحْيَى بْنُ حَمَّادٍ أَخْبَرَنَا أَبُو عَوَانَةَ، عَنْ مُغِيرَةَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ،. وَقَالَ ابْنُ إِسْحَاقَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الأَسْوَدِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ بَيْنَا نَحْنُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي غَارٍ إِذْ نَزَلَتْ عَلَيْهِ وَالْمُرْسَلاَتِ فَتَلَقَّيْنَاهَا مِنْ فِيهِ وَإِنَّ فَاهُ لَرَطْبٌ بِهَا إِذْ خَرَجَتْ حَيَّةٌ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" عَلَيْكُمُ اقْتُلُوهَا "". قَالَ فَابْتَدَرْنَاهَا فَسَبَقَتْنَا ـ قَالَ ـ فَقَالَ "" وُقِيَتْ شَرَّكُمْ، كَمَا وُقِيتُمْ شَرَّهَا "".
பாடம்: 76. ‘அத்தஹ்ர்’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) (76:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஹல் அத்தா அலல் இன்சான்’ எனும் சொற்றொடருக்கு ‘மனிதன் குறிப்பிடத்தக்க ஒரு பொருளாக இல்லாதிருந்த ஒரு காலம் நிச்சயம் அவன்மீது சென்றுவிட்டது’ என்று பொருள். இதிலுள்ள ‘ஹல்’ எனும் (வினா) இடைச்சொல் சிலவேளை ஒன்றை மறுக்கும் தொனியில் வினவுவதற்காக வரும். இன்னும் சில சமயம் (நடப்பைக் குறிக்கும்) செய்தியாகவும் வரும். இங்கே செய்தியாகவே வந்துள்ளது. அதாவது (ஆரம்பத்தில்) மனிதன் ஒரு பொருளாக இருந்தான். ஆனால், இன்ன பொருள் என்று குறிப்பட்டுச் சொல்லும் நிலையில் அவன் இருக்கவில்லை. இந்த வசனம் (முதல்) மனிதரைக் களிமண்ணினால் படைத்து, அவருக்குள் உயிர் ஊதப்படும் வரையிலுள்ள கால வரம்பைக் குறிக்கின்றது. (76:2ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அம்ஷாஜ்’ எனும் சொல்லுக்கு ‘கலக்கப்பட்ட’ என்பது பொருள். அதாவது, ஆணின் நீர் (விந்து உயிரணு) மற்றும் பெண்ணின் நீர் (கருமுட்டை) மூலம் (கலக்கப்பட்ட ஓர் இந்திரியத் துளியிலிருந்து மனிதனைப் படைத்தோம்). பிறகு, அது (படிப்படியாக) இரத்தக் கட்டியாக, சதைப் பிண்டமாக மாறியது. ஒரு பொருள் இன்னொரு பொருளோடு கலக்கும்போது, கலக்கப்பட்ட பொருள் (‘மஷீஜ்’) என்று சொல்லப்படுகிறது. (மேற்கண்ட வசனத்தின் மூலத்திலுள்ள ‘அம்ஷாஜ்’ எனும் சொல், ‘மஷீஜ்’ எனும் சொல்லின் பன்மையாகும்). இதற்கு ‘மம்ஷூஜ்’ (கலக்கப்பட்டது) என்று பொருள். (76:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘சலாசில வ அஃக்லால்’ (சங்கிலிகளையும் விலங்குகளையும்) எனும் சொல்லை ‘சலாசிலன் வ அஃக்லாலன்’ என்று சிலர் ஓதினர். ஆனால், மற்றவர்கள் இதை அனுமதிக்கவில்லை. (‘சலாசில வ அஃக்லால்’ என்றே ஓத வேண்டும் என்று கூறுகின்றனர்). (76:7ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முஸ்த்ததீர்’ எனும் சொல்லுக்கு ‘துன்பங்கள் நீண்ட’ என்பது பொருள். (76:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கம்தரீர்’ எனும் சொல்லுக்கு ‘கடுமையானது’ என்று பொருள். ‘யவ்முன் கம்தரீர், யவ்முன் குமாதிர்’ ஆகிய சொற்களைக் கடும் துன்ப நாளைக் குறிக்க (அரபியர்) பயன்படுத்துகின்றனர். ‘அல்அபூஸ்’, ‘அல்கம்தரீர்’, ‘அல்குமாதிர்’, ‘அல்அஸீப்’ ஆகிய சொற்கள் கடுமையான துன்ப நாளைக் குறிக்கும். அபூஉபைதா மஅமர் பின் முஸன்னா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (76:28ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஷதத்னா அஸ்ரஹும்’ எனும் வாக்கியத்திற்கு ‘அவர்களை வலுவாகப் படைத்தோம்’ என்பது பொருள். (‘அசிர’ எனும் இறந்தகால வினைச்சொல்லுக்கு ‘இறுக்கமாகக் கட்டினான்’ என்பது பொருள். இந்த வகையில்,) எதையெல்லாம் மனிதன் இறுக்கமாகக் கட்டுவானோ அதற்கு ‘மஅஸூர்’ (இறுக்கமாகக் கட்டப்பட்டது) என்று கூறப்படும். உதாரணமாக, ஒட்டகத்தின் சிவிகையைக் கூறலாம். (அதை ஒட்டகத்தின் மீது இறுக்கமாகவே கட்டிவைக்கப்படுகிறது). பாடம்: 77. ‘அல்முர்சலாத்’ அத்தியாயம்1 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (77:33ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘ஜிமாலாத்’ எனும் சொல் ‘ஜுமாலாத்’ என்றும் ஓதப்பட்டுள்ளது. இந்த) ‘ஜுமாலாத்’ எனும் சொல்லுக்கு, ‘கப்பலின் கயிறுகள்’ என்று பொருள். (77:48ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இர்கஊ’ (குனிந்து ருகூஉ செய்து வழிபடுங்கள்) எனும் சொல்லுக்கு ‘தொழுகையை நிறைவேற்றுங்கள்’ என்பது பொருள். (இதே வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லா யர்கஊன்’ (அவர்கள் குனிந்து ருகூஉ செய்து வழிபடுவதில்லை) எனும் சொல்லுக்கு, ‘அவர்கள் தொழுவதில்லை’ என்பது பொருள். (77:35ஆவது வசனத்தில்) ‘‘இந்த மறுமை நாளில் அவர்கள் எதுவும் பேசமாட்டார்கள்” என்றும், (6:23ஆவது வசனத்தில்) ‘‘எங்கள் இறைவனாகிய அல்லாஹ்வின் மீதாணையாக,! நாங்கள் ஒருபோதும் இணைவைப்போராக இருக்கவில்லை (என்று பொய் சொல்வார்கள்)” என்றும், (36:65ஆவது வசனத்தில்) ‘‘(மறுமை நாள்) அன்று அவர்களுடைய வாய்களுக்கு முத்திரை வைத்துவிடுவோம். (அவர்களது வாய் பேசாது)” என்றும் (முரண்பாடு இருப்பதுபோல்) காணப்படுகிறதே என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘(இணைவைப்பாளர்களுக்கு மறுமை நாளில்) பல்வேறு கட்டங்கள் உண்டு. சில சந்தர்ப்பங்களில் அவர்கள் பேசுவார்கள்; இன்னும் சில சந்தர்ப்பங்களில் அவர்களால் பேச முடியாதவாறு அவர்களது வாய்க்கு முத்திரை வைக்கப்படும்” என்று பதிலளித்தார்கள்.2 பாடம்: 1
4931. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருநாள் மினாவிலுள்ள) ஒரு குகையில் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்துகொண்டிருந்தபோது அவர்களுக்கு, ‘‘வல்முர்சலாத்தி (ஒன்றன் பின் ஒன்றாக அனுப்பப்படுகின்றவைமீது சத்தியமாக!)” எனும் (77ஆவது) அத்தியாயம் அருளப்பட்டது. அதை நாங்கள் நபி (ஸல்) அவர்களின் வாயிலிருந்து புத்தம் புதியதாக (ஓதக்) கேட்டுக்கொண்டிருந்தோம். அந்நேரம் பாம்பு ஒன்று (தனது புற்றிó ருந்து) வெளிப்பட்டது.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘‘அதை விடாதீர்கள்; கொன்று விடுங்கள்” என்று கூறினார்கள். உடனே (அதைக் கொல்ல) போட்டியிட்டுக்கொண்டு நாங்கள் விரைந்தோம். அது எங்களை முந்திக்கொண்டு (தனது புற்றுக்குள் புகுந்து)விட்டது.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் அதன் தீங்கிலிருந்து காப்பாற்றப் பட்டதைப் போன்றே அதுவும் உங்கள் தீங்கிலிருந்து காப்பாற்றப்பட்டுவிட்டது” என்று சொன்னார்கள்.

இந்த ஹதீஸ் ஒன்பது அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 65
4932. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَابِسٍ، قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، إِنَّهَا تَرْمِي بِشَرَرٍ كَالْقَصْرِ قَالَ كُنَّا نَرْفَعُ الْخَشَبَ بِقَصَرٍ ثَلاَثَةَ أَذْرُعٍ أَوْ أَقَلَّ، فَنَرْفَعُهُ لِلشِّتَاءِ فَنُسَمِّيهِ الْقَصَرَ.
பாடம்: 2 ‘‘அந்த நெருப்பு , மாளிகைகளைப் போன்ற பெரும் பெரும் தீக்கங்குகளைக் கக்கும்” எனும் (77:32ஆவது) இறைவசனம்
4932. அப்துர் ரஹ்மான் பின் ஆபிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(மேற்கண்ட வசனத்தின் மூலத்திலுள்ள ‘கஸ்ர்’ எனும் சொல்லுக்கு விளக்கம் கூறுகையில்,) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன்னார்கள்:

நாங்கள் குளிர் காலத்தில் குளிர்காய்வதற்காக மூன்று முழம், அல்லது அதைவிடக் குறைந்த அளவில் மரக்கட்டைகளை வெட்டி எடுத்துவருவோம். அவற்றுக்கு நாங்கள் ‘கஸர்’ எனப் பெயரிட்டழைத்துவந்தோம்.4

அத்தியாயம் : 65
4933. حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا يَحْيَى، أَخْبَرَنَا سُفْيَانُ، حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَابِسٍ، سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ {تَرْمِي بِشَرَرٍ} كُنَّا نَعْمِدُ إِلَى الْخَشَبَةِ ثَلاَثَةَ أَذْرُعٍ وَفَوْقَ ذَلِكَ، فَنَرْفَعُهُ لِلشِّتَاءِ فَنُسَمِّيهِ الْقَصَرَ. {كَأَنَّهُ جِمَالاَتٌ صُفْرٌ} حِبَالُ السُّفْنِ تُجْمَعُ حَتَّى تَكُونَ كَأَوْسَاطِ الرِّجَالِ.
பாடம்: 3 ‘‘அது (குமுறி எழும்போது) மஞ்சள் நிற ஒட்டகங்களைப்போல் இருக்கும்” எனும் (77:33ஆவது) இறைவசனம்
4933. அப்துர் ரஹ்மான் பின் ஆபிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

‘‘அந்த நெருப்பு, மாளிகைகளைப் போன்ற பெரும் பெரும் தீக்கங்குகளைக் கக்கும்” எனும் (77:32ஆவது) இறைவசனத் திற்கு விளக்கம் கூறுகையில், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறக் கேட்டேன்:

நாங்கள் மூன்று முழம், அல்லது அதைவிட அதிகமான அளவிலுள்ள மரக்கட்டைகளை நாடிச் செல்வோம். அவற்றைக் குளிர் காலத்திற்காக நாங்கள் எடுத்துவைப்போம். அவற்றுக்கு ‘அல்கஸர்’ எனப் பெயரிட்டு அழைத்துவந்தோம்.

(77:33ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஜிமாலத்துன் ஸுஃப்ர்’ எனும் சொற்றொடர், மரக்கலங்களைக் கட்டும் கயிறுகளைக் குறிக்கும். அக்கயிறுகள் மனிதர்களின் இடுப்புகளைப் போல் (பருமனாக) மாறும் அளவுக்குத் திரிக்கப்படும்.

அத்தியாயம் : 65
4934. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنِي إِبْرَاهِيمُ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ بَيْنَمَا نَحْنُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي غَارٍ إِذْ نَزَلَتْ عَلَيْهِ وَالْمُرْسَلاَتِ، فَإِنَّهُ لَيَتْلُوهَا وَإِنِّي لأَتَلَقَّاهَا مِنْ فِيهِ وَإِنَّ فَاهُ لَرَطْبٌ بِهَا، إِذْ وَثَبَتْ عَلَيْنَا حَيَّةٌ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " اقْتُلُوهَا ". فَابْتَدَرْنَاهَا فَذَهَبَتْ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " وُقِيَتْ شَرَّكُمْ، كَمَا وُقِيتُمْ شَرَّهَا ". قَالَ عُمَرُ حَفِظْتُهُ مِنْ أَبِي فِي غَارٍ بِمِنًى.
பாடம்: 4 இது, அவர்கள் (ஏதும்) பேச முடியாத நாளாகும் (எனும் 77:35ஆவது இறைவசனம்)
4934. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மினாவிலுள்ள) ஒரு குகையில் இருந்துகொண்டிருந்தோம். அப்போது அவர்களுக்கு, ‘‘வல்முர்சலாத்தி” (ஒன்றன்பின் ஒன்றாக அனுப்பப்படுகின்றவைமீது சத்தியமாக!) எனும் (77ஆவது) அத்தியாயம் அருளப்பட்டது. அதை நபி (ஸல்) அவர்கள் ஓதிக்கொண்டிருந்தார்கள். நான் அதை அவர்களின் வாயிலிருந்து புத்தம் புதிதாகச் செவியுற்றுக்கொண்டிருந்தேன்.

அப்போது ஒரு பாம்பு (புற்றிலிருந்து) எங்களை நோக்கிச் சீறிக்கொண்டு வந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அதைக் கொல்லுங்கள்!” என்றார்கள். அதை நோக்கி போட்டியிட்டுக்கொண்டு நாங்கள் விரைந்தோம். அது (தனது புற்றுக்குள் ஓடிப்)போய் (நுழைந்து)விட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் அதன் தீங்கிலிருந்து காப்பாற்றப்பட்டதைப் போன்றே அதுவும் உங்கள் தீங்கிலிருந்து காப்பாற்றப்பட்டுவிட்டது” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளரான உமர் பின் ஹஃப்ஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

‘‘இந்நிகழ்ச்சி மினாவிலிருந்த ஒரு குகையில் நடந்தது” என்று என் தந்தையிடமிருந்து (கேட்டு) நான் மனனமிட்டுள்ளேன்.

அத்தியாயம் : 65
4935. حَدَّثَنِي مُحَمَّدٌ، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا بَيْنَ النَّفْخَتَيْنِ أَرْبَعُونَ ". قَالَ أَرْبَعُونَ يَوْمًا قَالَ أَبَيْتُ. قَالَ أَرْبَعُونَ شَهْرًا قَالَ أَبَيْتُ. قَالَ أَرْبَعُونَ سَنَةً قَالَ أَبَيْتُ. قَالَ " ثُمَّ يُنْزِلُ اللَّهُ مِنَ السَّمَاءِ مَاءً. فَيَنْبُتُونَ كَمَا يَنْبُتُ الْبَقْلُ لَيْسَ مِنَ الإِنْسَانِ شَىْءٌ إِلاَّ يَبْلَى إِلاَّ عَظْمًا وَاحِدًا وَهْوَ عَجْبُ الذَّنَبِ، وَمِنْهُ يُرَكَّبُ الْخَلْقُ يَوْمَ الْقِيَامَةِ ".
பாடம்: 78. ‘அந்நபஉ’ அத்தியாயம்1 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (78:27ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லா யர்ஜƒன ஹிசாபா’ (அவர்கள் விசாரணையை நம்பக்கூடியவர்களாக இருக்கவில்லை) என்பதன் கருத்தாவது: அதைப் பற்றிய அச்சம் அவர்களுக்கு இருக்கவில்லை. (78:37ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லா யம்லிகூன மின்ஹு கிதாபா’ (அவனிடம் பேச அவர்களுக்கு அதிகாரம் கிடையாது) என்பதன் கருத்தாவது: இறைவன் அனுமதித்தாலன்றி அவனிடம் அவர்கள் பேச முடியாது. (78:38ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஸவாப்’ எனும் சொல்லுக்கு ‘சத்தியத்தைப் பேசி அதன் வழி நடத்தல்’ என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (78:13ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வஹ்ஹாஜ்’ எனும் சொல்லுக்கு ‘ஒளிர்கின்ற’ என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அல்லாதோர் கூறுகிறார்கள்: (78:25ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃகஸ்ஸாக்’ எனும் சொல்லுக்கு, ‘வழிகின்ற (சீழ்)’ என்பது பொருள். (இதன் வினைச்சொல்லான) ‘ஃகஸகத் அய்னுஹு’ எனும் வாக்கியத்திற்கு ‘அவனது கண்ணிலிருந்து (பீளை) வழிந்தது’ என்பது பொருள். ‘யஃக்ஸிகுல் ஜுர்ஹு’ என்பதற்கு ‘காயத்திலிருந்து (சீழ்) வழிகின்றது’ என்பது பொருள். (78:36ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘அத்தாஅன் ஹிசாபா’ எனும் சொல்லுக்கு ‘போதிய வெகுமதி’ என்று பொருள். ‘அஃதானீ மா அஹ்சபனீ’ எனும் வாக்கியத்திற்கு (வழக்கில்) ‘போதிய அளவுக்கு எனக்கு வழங்கினான்’ என்று பொருள். பாடம்: 1 ‘ஸூர்’ எனும் எக்காளம் ஊதப்படும் நாளில் நீங்கள் கூட்டம் கூட்டமாக (கிளம்பி) வருவீர்கள் (எனும் 78:18ஆவது இறைவசனம்) இதன் மூலத்திலுள்ள ‘அஃப்வாஜ்’ எனும் சொல்லுக்கு ‘கூட்டங்கள்’ என்பது பொருள்.
4935. அபூசாலிஹ் ஃதக்வான் அஸ் ஸம்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

‘‘(உலக முடிவு நாளில் அனைத்தையும் அழிப்பதற்காகவும், பின்னர் அனைவரை யும் எழுப்புவதற்காகவும் ஊதப்படும்) இரு எக்காளத்திற்கும் (ஸூர்) மத்தியில் (இடைப்பட்டக் காலம்) நாற்பது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் சொன்னார்கள். (அபூஹுரைரா (ரலி) அவர்களுடைய நண்பர்கள்,) ‘‘(அபூஹுரைரா அவர்களே!) நாட்களில் நாற்பதா?” என்று கேட்டனர்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள், ‘‘(நான் அறியாததற்குப் பதிலளிப்பதிலிருந்து) நான் விலகிக்கொள்கிறேன்” என்று சொன்னார்கள். (நண்பர்களான) அவர்கள், ‘‘நாற்பது மாதங்களா?” என்று கேட்டனர். அதற்கும் ‘‘நான் விலகிக்கொள்கிறேன்” என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள். ‘‘வருடங்கள் நாற்பதா?” என்று கேட்டனர். அப்போதும் அபூஹுரைரா (ரலி) அவர்கள், ‘‘நான் விலகிக்கொள்கிறேன்” என்று சொன்னார்கள்.

பின்னர், ‘‘வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்குவான். அப்போது (மண்ணறைகளுக்குள் உக்கிப்போயிருக்கும் மனித சடலங்கள்) தாவரங்கள் முளைத்து எழுவதுபோல் எழுவார்கள். மனிதனிலுள்ள (உறுப்புகள்) அனைத்துமே (மண்ணுக்குள்) உக்கிப்போகாமல் இருப்பதில்லை. ஆனால், ஒரேயோர் எலும்பைத் தவிர!

அதுதான் (முதுகுத்தண்டின் வேர்ப்பகுதியிலிருக்கும்) உள்வால் எலும்பின் (அணுவளவு) நுனியாகும். அதை வைத்தே படைப்பினங்கள் (மீண்டும்) மறுமை நாளில் உருவாக்கப்படும்” என்று மேலும் சொன்னார்கள்.2

அத்தியாயம் : 65
4936. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْمِقْدَامِ، حَدَّثَنَا الْفُضَيْلُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا أَبُو حَازِمٍ، حَدَّثَنَا سَهْلُ بْنُ سَعْدٍ ـ رضى الله عنه ـ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ بِإِصْبَعَيْهِ هَكَذَا بِالْوُسْطَى وَالَّتِي تَلِي الإِبْهَامَ " بُعِثْتُ وَالسَّاعَةَ كَهَاتَيْنِ ".
பாடம்: 79. ‘அந்நாஸிஆத்’ அத்தியாயம்1 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (79:20ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்ஆயத்துல் குப்ரா’ (பெரும் சான்று) எனும் சொல், மூசா (அலை) அவர்களது கைத்தடியையும் (அற்புதமாகப் பிரகாசித்த) அன்னாரது கரத்தையும் குறிக்கும். (79:11ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘நகிரா’ (இற்றுப்போன) எனும் சொல்லும் ‘நாகிரா’ எனும் சொல்லும் (பொருளில்) சமமானதே. ‘தாமிஉ’, ‘தமிஉ’ இரண்டும் (‘ஆசைமிக்கவன்’ எனும் ஒரே பொருள் கொண்டிருப்பதுபோல; ‘அல்பாகில்’, ‘அல்பகீல்’ இரண்டும் (‘கருமி’ எனும்) ஒரே பொருள் கொண்டிருப்பதுபோல. வேறுசிலர், (‘நகிரா’விற்கும், ‘நாகிரா’விற்கும் வித்தியாசம் உண்டு:) ‘நகிரா’ என்பதற்கு ‘இற்றுப்போனது’ என்று பொருள். ‘நாகிரா’ என்பதற்கு ‘துளையுள்ள எலும்பு’ என்று பொருள்; அதனுள் காற்று ஊடுருவிச் சென்று இரையும் (அத்தகைய எலும்பே ‘நாகிரா’)” என்று கூறுகின்றனர். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (79:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்ஹாஃபிரா’ எனும் சொல்லுக்கு ‘பழைய வாழ்க்கை நிலை’ என்று பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அல்லாதோர் கூறுகிறார்கள்: (79:42ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அய்யான முர்சாஹா’ எனும் வாக்கியத்திற்கு ‘அந்த இறுதி நேரம் எப்போது வரும்’ என்று பொருள். இறுதியாக எந்த இடத்தில் போய் கப்பல் நிற்குமோ, அந்த இடத்திற்கு ‘முர்சஸ் ஸஃபீனா’ என்பர். பாடம் : 1
4936. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

தமது நடுவிரலையும், பெருவிரலை அடுத்துள்ள (ஆட்காட்டி) விரலையும் இணைத்தவாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நானும் மறுமை நாளும் இதோ இந்த இரு விரல்கள்போல் (நெருக்கமாகவே) அனுப்பட்டுள்ளோம்” என்று கூறக் கேட்டேன்.

(79:34ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அத்தாம்மா’ (அமளி) எனும் சொல்லுக்கு ‘அனைத்துப் பொருள்களையும் துவம்சம் செய்யக்கூடியது’ என்று பொருள்.

அத்தியாயம் : 65
4937. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا قَتَادَةُ، قَالَ سَمِعْتُ زُرَارَةَ بْنَ أَوْفَى، يُحَدِّثُ عَنْ سَعْدِ بْنِ هِشَامٍ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَثَلُ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ وَهْوَ حَافِظٌ لَهُ مَعَ السَّفَرَةِ الْكِرَامِ الْبَرَرَةِ، وَمَثَلُ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ وَهْوَ يَتَعَاهَدُهُ وَهْوَ عَلَيْهِ شَدِيدٌ، فَلَهُ أَجْرَانِ ".
பாடம்: 80. ‘அபச’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) (80:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அபச வத்தவல்லா’ எனும் வாக்கியத்திற்கு ‘அவர் கடுகடுத்தார்; மேலும் முகத்தைத் திருப்பிக்கொண்டார்’ என்பது பொருள். (80:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முதஹ்ஹரா’ (பரிசுத்தமான ஏடுகள்) என்பதன் கருத்தாவது: தூய்மையானவர்களாகிய வானவர்களைத் தவிர வேறு எவராலும் தொட முடியாத (‘லவ்ஹுல் மஹ்ஃபூழ் எனும்) ஏடுகள். இந்த வசனம்,”முந்திச் செல்பவர்(களான வானவர்)கள்மீது சத்தியமாக” எனும் (79:5ஆவது) வசனத்தைப் போல அமைந்துள்ளது. (உண்மையில், ‘முந்திச் செல்லல்’ என்பது வானவர்களைச் சுமந்து செல்லும் குதிரைகளின் தன்மையாகும்; ஆனால், வானவர்களின் தன்மைபோல் பொருள் கொள்ளப்பட்டுள்ளது.) வானவர்களையும் அந்த ஏடுகளையும் பரிசுத்தமானவை என்று இறைவன் கூறுகின்றான். ஏனெனில், பரிசுத்தம் என்பது (வேத) ஏடுகளால் கிடைக்கிறது. ஆகவே, அந்த ஏடுகளைச் சுமப்பவர்க(ளான வானவர்க)ளுக்கும் பரிசுத்தம் கிடைக்கும். (80:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘சஃபரா’ (சமாதானத் தூதர்கள்) எனும் சொல், வானவர்களைக் குறிக்கிறது. ‘சஃபரா’ என்பதன் ஒருமை ‘சாஃபிர்’ என்பதாகும். ‘சஃபர்த்து’ எனும் (தன்மை வினைச்)சொல்லுக்கு ‘அவர்களுக்கிடையே சமாதானம் செய்துவைத்தேன்’ என்பது பொருள். இறைவனின் ‘வஹீ’யைப் பெற்றுக்கொண்டு, அதை இறைத்தூதர்களிடம் சேர்ப்பதற்காக இறங்கிவரும் வானவர்கள் மக்களிடையே சமாதானம் செய்துவைக்கும் தூதர்களைப்போல் உள்ளனர். (80:6ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தஸத்தா’ எனும் சொல்லுக்கு ‘அலட்சியம் செய்தார்’ என்பது பொருள். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (80:23ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லம்மா யக்ளீ’ எனும் சொற்றொடருக்கு ‘தமக்கு இறைவனால் ஏவப்பட்டதை ஒருவரும் நிறைவேற்றுவதில்லை’ என்று பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (80:41ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தர்ஹகுஹா’ எனும் சொல்லுக்கு ‘அதில் கடுமையாகக் கப்பியிருக்கும்’ என்று பொருளாகும். (80:38ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முஸ்ஃபிரா’ எனும் சொல்லுக்கு ‘இலங்கிக்கொண்டிக்கும்’ என்று பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (80:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘பி அய்தீ சஃபரா’ எனும் சொற்றொடருக்கு ‘எழுதுபவர்களின் கைகளால்’ என்று பொருள். ‘அஸ்ஃபார்’ எனும் (பன்மைச்) சொல்லுக்கு ‘ஏடுகள்’ என்பது பொருள். இதன் ஒருமை ‘சிஃப்ர்’ என்று கூறப்படுகிறது. (80:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தலஹ்ஹா’ எனும் சொல்லுக்கு ‘பாராமுகமாக இருந்துவிடுகிறீர்கள்’ என்று பொருள்.
4937. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குர்ஆனை மனனமிட்டு(ச் சிரம மின்றி) ஓதிவருபவர் கண்ணியம் நிறைந்த தூதர்க(ளான வானவர்க)ளுடன் இருப்பவரைப் போன்றவராவார். குர்ஆனை (மனனம் செய்திராவிட்டாலும் அதைச்) சிரமத்துடன் தொடர்ந்து ஓதிவருகின்றவர் இரு மடங்கு நன்மைகளுக்குரியவரைப் போன்றவராவார்.

இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 65