2822. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ عُمَيْرٍ، سَمِعْتُ عَمْرَو بْنَ مَيْمُونٍ الأَوْدِيَّ، قَالَ كَانَ سَعْدٌ يُعَلِّمُ بَنِيهِ هَؤُلاَءِ الْكَلِمَاتِ كَمَا يُعَلِّمُ الْمُعَلِّمُ الْغِلْمَانَ الْكِتَابَةَ، وَيَقُولُ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَتَعَوَّذُ مِنْهُنَّ دُبُرَ الصَّلاَةِ "" اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ، وَأَعُوذُ بِكَ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ "". فَحَدَّثْتُ بِهِ مُصْعَبًا فَصَدَّقَهُ.
பாடம் : 25 கோழைத்தனத்திலிருந்து பாதுகாப் புக் கோரல்
2822. அம்ர் பின் மைமூன் அல் அவ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆசிரியர் சிறுவர்களுக்கு எழுத்தைக் கற்பிப்பதைப் போன்று, சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் தம் மக்களுக்குப் பின்வரும் (பிரார்த்தனை) வாசகங்களைக் கற்றுக்கொடுத்துவந்தார்கள்; மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகைக்குப்பின்னால் இவற்றைச் சொல்லி பாதுகாப்புக் கோரிவந்தார்கள் என்றும் கூறுவார்கள்:

அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் —ýப்னி, வஅஊது பிக்க அன் உரத்த இலா அர்தலில் உமுரி, வ அஊது பிக்க மின் ஃபித்னத்தித் துன்யா, வ அஊது பிக்க மின் அதாபில் கப்ரி.

(பொருள்: இறைவா! நான் கோழைத்தனத்திலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்; தள்ளாத வயதில் தள்ளப்படுவதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்; உலகின் சோதனைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்; புதைகுழியின் வேதனை’லிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.)

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. இரண்டாவது தொடரின் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல் மலிக் பின் உமைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இந்த ஹதீஸை நான் முஸ்அப் பின் சஅத் (ரஹ்) அவர்களிடம் அறிவித்தேன். இது உண்மையானதுதான் என அவர்கள் உறுதிப்படுத்தினார்கள்.


அத்தியாயம் : 56
2823. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، قَالَ سَمِعْتُ أَبِي قَالَ، سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقُولُ "" اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَالْجُبْنِ وَالْهَرَمِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ "".
பாடம் : 25 கோழைத்தனத்திலிருந்து பாதுகாப் புக் கோரல்
2823. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் அஜ்ஸி வல்கசலி வல்—ýப்னி வல்ஹரம்; வ அஊது பிக்க மின் ஃபித்னத்தில் மஹ்யா வல்மமாத்; வ அஊது பிக்க மின் அதாபில் கப்ர்” என்று ஓதுவார்கள்.

(பொருள்: இறைவா! நான் இயலாமை ‘லிருந்தும், சோம்பலிலிருந்தும், கோழைத்தனத்திலிருந்தும், மூப்பிலிருந் தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், வாழ்வின் சோதனை’லிருந்தும் இறப்பின் சோதனை’லிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், புதைகுழியின் வேதனை’லிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.)

அத்தியாயம் : 56
2824. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا حَاتِمٌ، عَنْ مُحَمَّدِ بْنِ يُوسُفَ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ، قَالَ صَحِبْتُ طَلْحَةَ بْنَ عُبَيْدِ اللَّهِ وَسَعْدًا وَالْمِقْدَادَ بْنَ الأَسْوَدِ وَعَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ ـ رضى الله عنهم ـ فَمَا سَمِعْتُ أَحَدًا، مِنْهُمْ يُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، إِلاَّ أَنِّي سَمِعْتُ طَلْحَةَ يُحَدِّثُ عَنْ يَوْمِ أُحُدٍ.
பாடம் : 26 அறப்போரில் தாம் சந்தித்தவை பற்றி ஒருவர் எடுத்துரைப்பது இது குறித்து சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடமிருந்து அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
2824. சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி), சஅத் பின் அபீவக்காஸ் (ரலி), மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) ஆகியோரு டன் தோழமை கொண்டிருந்தேன். அவர்களில் யாரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து (நபிமொழி எதையும்) அறிவித்ததை நான் கேட்ட தில்லை. ஆனால், தல்ஹா (ரலி) அவர்கள் உஹுத் போர் நாள் குறித்து அறிவித்ததை நான் கேட்டிருக்கிறேன்.

அத்தியாயம் : 56
2825. حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنِي مَنْصُورٌ، عَنْ مُجَاهِدٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ يَوْمَ الْفَتْحِ "" لاَ هِجْرَةَ بَعْدَ الْفَتْحِ وَلَكِنْ جِهَادٌ وَنِيَّةٌ، وَإِذَا اسْتُنْفِرْتُمْ فَانْفِرُوا "".
பாடம் : 27 போருக்குச் செல்வது கடமையாகும் என்பதும், அறப்போரில் கடமை யான அளவு எது என்பதும், அதற் காக நாட்டம் கொள்வதும் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: எளிதானாலும் சுமையானாலும் நீங்கள் (அறப்போருக்குப்) புறப்படுங்கள். உங்கள் உயிர்களாலும் உங்கள் உடைமைகளாலும் அல்லாஹ்வின் வழியில் அறப்போர் புரியுங்கள். நீங்கள் அறிந்தவர்களாக இருப்பின், இதுவே உங்களுக்கு நன்மை ஆகும். (நபியே!) அ(வர்களை நீர் அழைத்த)து, உடனடியாக (கைமேல்) கிடைக்கும் பலனாகவும் குறைந்த தூரப் பயணமாகவும் இருந்திருக்குமானால், நிச்சயமாக அவர்கள் உம்மைப் பின்தொடர்ந்திருப்பார்கள். ஆயினும், அவர்களுக்குப் பயண தூரம் நீண்டுவிட்டது. (எனவே, அவர்கள் பின்வாங்கிவிட்டனர்.) பின்னர் அவர்கள் (உங்களைச் சந்திக்கும்போது), ‘‘எங்களால் முடிந்திருந்தால் நாங்களும் உங்களுடன் புறப்பட்டுவந்திருப்போம்” என்று அல்லாஹ்வின் பெயரால் சத்தியம் செய்வர். அவர்கள் தம்மைத் தாமே அழித்துக்கொள்கின்றனர். நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள்தான் என்பதை அல்லாஹ் அறிந்தே இருக்கின்றான்.22 (9:41,42) மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: இறைநம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கு என்ன நேர்ந்தது? ‘‘அல்லாஹ் வின் வழியில் புறப்படுங்கள்” என்று உங்களிடம் சொல்லப்பட்டால், நீங்கள் இவ்வுலக (சுக)த்தின் பக்கம் சாய்ந்து விடுகிறீர்களே! மறுமையை விடுத்து இம்மை வாழ்க்கையைக் கொண்டே நீங்கள் திருப்தியடைந்துவிட்டீர்களா? மறுமைக்கு முன்னால் இம்மை வாழ்க்கை யின் சுகம் (மிகவும்) சொற்பமானதே அன்றி வேறில்லை. நீங்கள் (அல்லாஹ்வின் வழியில்) புறப்படவில்லையாயின், அல்லாஹ் உங்களுக்கு வதைக்கும் வேதனையை வழங்குவான்; உங்களுக்குப் பதிலாக வேறொரு சமுதாயத்தாரைக் கொண்டுவருவான். அவனுக்கு நீங்கள் எந்தத் தீங்கும் இழைக்க முடியாது. அல்லாஹ் அனைத்துப் பொருட்கள்மீதும் ஆற்றலுள்ளவன் ஆவான். (9:38,39) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘அணியணியாகப் புறப்படுங்கள்” (4:71) (ஸுபாத்’) என்பதற்கு, ‘(தனித் தனியாகிப்) பிரிந்து செல்லும் பல படையணிகளாகப் புறப்படுங்கள்’ என்பது பொருள்” எனக் கூறினார்கள். ‘ஸுபாத்’ என்பது ‘ஸுபத்’ என்பதன் பன்மையாகும்.
2825. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி கொள்ளப்பட்ட நாளில், ‘‘(மக்காவின்) வெற்றிக்குப் பின்பு (மக்காவிலிருந்து) புலம்பெயர்தல் (ஹிஜ்ரத்) என்பது கிடையாது; ஆனால், அறப்போர் புரிவதும் (அதற்காகவும் பிற நற்செயல்களுக்காகவும்) நாட்டம் கொள்வதும் உண்டு. நீங்கள் அறப்போருக்காகப் புறப்படும்படி சொல்லப்பட்டால் புறப்பட்டுச் செல்லுங்கள்” என்று கூறினார்கள்.23

அத்தியாயம் : 56
2826. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" يَضْحَكُ اللَّهُ إِلَى رَجُلَيْنِ يَقْتُلُ أَحَدُهُمَا الآخَرَ يَدْخُلاَنِ الْجَنَّةَ، يُقَاتِلُ هَذَا فِي سَبِيلِ اللَّهِ فَيُقْتَلُ، ثُمَّ يَتُوبُ اللَّهُ عَلَى الْقَاتِلِ فَيُسْتَشْهَدُ "".
பாடம் : 28 இறைமறுப்பாளர் முஸ்லிமைக் கொன்றபின் இஸ்லாத்தில் இணைந்து சீராக நடந்து, பிறகு (இறைவழியில்) கொல்லப்படல்
2826. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் இரண்டு மனிதர்களைப் பார்த்துச் சிரிக்கின்றான். அவ்விருவரில் ஒருவர் மற்றொருவரைக் கொன்று விடுகின்றார். இருவருமே சொர்க்கத்தில் நுழைகிறார்கள். இவர் இறைவழியில் போரிட்டுக் கொல்லப்படுகிறார். பிறகு (அவரைக்) கொன்றவர் பாவ மன்னிப்புக் கோர, அதை ஏற்று அவரை அல்லாஹ் மன்னித்துவிடுகிறான். பிறகு அவரும் அறப்போரில் (கொல்லப்பட்டு) உயிர்த் தியாகி ஆகிவிடுகிறார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 56
2827. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، قَالَ أَخْبَرَنِي عَنْبَسَةُ بْنُ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ أَتَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَهْوَ بِخَيْبَرَ بَعْدَ مَا افْتَتَحُوهَا، فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَسْهِمْ لِي. فَقَالَ بَعْضُ بَنِي سَعِيدِ بْنِ الْعَاصِ لاَ تُسْهِمْ لَهُ يَا رَسُولَ اللَّهِ. فَقَالَ أَبُو هُرَيْرَةَ هَذَا قَاتِلُ ابْنِ قَوْقَلٍ. فَقَالَ ابْنُ سَعِيدِ بْنِ الْعَاصِ وَاعَجَبًا لِوَبْرٍ تَدَلَّى عَلَيْنَا مِنْ قَدُومِ ضَأْنٍ، يَنْعَى عَلَىَّ قَتْلَ رَجُلٍ مُسْلِمٍ أَكْرَمَهُ اللَّهُ عَلَى يَدَىَّ وَلَمْ يُهِنِّي عَلَى يَدَيْهِ. قَالَ فَلاَ أَدْرِي أَسْهَمَ لَهُ أَمْ لَمْ يُسْهِمْ لَهُ. قَالَ سُفْيَانُ وَحَدَّثَنِيهِ السَّعِيدِيُّ عَنْ جَدِّهِ عَنْ أَبِي هُرَيْرَةَ. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ السَّعِيدِيُّ عَمْرُو بْنُ يَحْيَى بْنِ سَعِيدِ بْنِ عَمْرِو بْنِ سَعِيدِ بْنِ الْعَاصِ.
பாடம் : 28 இறைமறுப்பாளர் முஸ்லிமைக் கொன்றபின் இஸ்லாத்தில் இணைந்து சீராக நடந்து, பிறகு (இறைவழியில்) கொல்லப்படல்
2827. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

கைபர் வெற்றிக்குப் பிறகு அங்கிருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் சென்றேன். ‘‘அல்லாஹ் வின் தூதரே! எனக்கு (போரில் கிடைத்த செல்வத்தில்) ஒரு பங்கு கொடுங்கள்” என்று நான் கேட்டேன். அப்போது சயீத் பின் அல்ஆஸ் உடைய மகன்களில் ஒருவர் (அபான் என்பவர்), ‘‘இவருக்குப் பங்கு கொடுக்காதீர்கள், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார்.

உடனே நான், ‘‘இவர் (நுஅமான்) இப்னு கவ்கல் அவர்களை (உஹுத் போரில்) கொன்றவர்” என்று கூறினேன். அதற்கு சயீத் பின் அல்ஆஸ் அவர்களின் மகன் (என்னைப் பற்றி), ‘‘என்ன ஆச்சரி யம்! (தன் யிதவ்ஸ்’ குலத்தார் வசிக்கின்ற) ‘ளஃன்’ என்னும் மலை உச்சியிலிருந்து வந்திருக்கும் இந்தக் குழிமுயல் ஒரு முஸ்லிமைக் கொன்றுவிட்டதற்காக என்னைக் குறைசொல்கிறதே! அந்த முஸ்லிமை அல்லாஹ் என் கைகளால் கண்ணியப்படுத்தியுள்ளான். அவர் கைகளால் என்னை அவன் கேவலப்படுத்தி விடவில்லை” என்று கூறினார்.24

அறிவிப்பாளர்களில் ஒருவர், ‘‘நபி (ஸல்) அவர்கள் அபூஹுரைராவுக்குப் பங்கு கொடுத்தார்களா, பங்கு கொடுக்கவில்லையா என்பது எனக்குத் தெரியாது” எனக் கூறுகிறார்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. இரண்டாவது தொடரில் உள்ள சயீதீ (ரஹ்) அவர்களின் (முழுப்) பெயர்: அம்ர் பின் யஹ்யா பின் சயீத் பின் அம்ர் பின் சயீத் பின் அல்ஆஸ்.

அத்தியாயம் : 56
2828. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا ثَابِتٌ الْبُنَانِيُّ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ أَبُو طَلْحَةَ لاَ يَصُومُ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْ أَجْلِ الْغَزْوِ، فَلَمَّا قُبِضَ النَّبِيُّ صلى الله عليه وسلم لَمْ أَرَهُ مُفْطِرًا، إِلاَّ يَوْمَ فِطْرٍ أَوْ أَضْحَى.
பாடம் : 29 நோன்பைவிட அறப்போருக்கு முதலிடம் கொடுப்பது
2828. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூதல்ஹா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் காலத்தில் (புனிதப்) போர்களில் கலந்துகொண்ட காரணத்தால் நோன்பு நோற்காதவராக இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் இறந்தபின் (இஸ்லாம் பலம் பெற்றுவிட்ட நிலையில்), நான் அபூதல்ஹா (ரலி) அவர்களை நோன்புப் பெருநாளிலும் ஹஜ் பெருநாளிலும் தவிர (வேறெந்த நாளிலும்) நோன்பு நோற்காத வராகக் கண்டதில்லை.

அத்தியாயம் : 56
2829. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ سُمَىٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" الشُّهَدَاءُ خَمْسَةٌ الْمَطْعُونُ، وَالْمَبْطُونُ، وَالْغَرِقُ وَصَاحِبُ الْهَدْمِ، وَالشَّهِيدُ فِي سَبِيلِ اللَّهِ "".
பாடம் : 30 இறைவழியில் கொல்லப்படுவது மட்டுமன்றி ஏழு வகையான உயிர்த் தியாகங்கள் உண்டு.25
2829. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உயிர்த் தியாகிகள் ஐந்து பேர் ஆவர்:

1) கொள்ளை நோயால் இறந்தவர் 2) வயிற்று(ப் போக்கு போன்ற) நோய்களால் இறந்தவர் 3) தண்ணீரில் மூழ்கி இறந்தவர் 4) (வீடு, கட்டடம் ஆகியவை இடிந்து விழும்போது) இடிபாடுகளில் சிக்கி இறந்தவர் 5) இறைவழியில் (அறப்போரில் ஈடுபட்டு) இறந்தவர்.26

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 56
2830. حَدَّثَنَا بِشْرُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا عَاصِمٌ، عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" الطَّاعُونُ شَهَادَةٌ لِكُلِّ مُسْلِمٍ "".
பாடம் : 30 இறைவழியில் கொல்லப்படுவது மட்டுமன்றி ஏழு வகையான உயிர்த் தியாகங்கள் உண்டு.25
2830. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

கொள்ளை நோயால் இறக்கின்ற ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அது வீர மரணமாகும்.

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 56
2831. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ الْبَرَاءَ ـ رضى الله عنه ـ يَقُولُ لَمَّا نَزَلَتْ {لاَ يَسْتَوِي الْقَاعِدُونَ مِنَ الْمُؤْمِنِينَ} دَعَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم زَيْدًا، فَجَاءَ بِكَتِفٍ فَكَتَبَهَا، وَشَكَا ابْنُ أُمِّ مَكْتُومٍ ضَرَارَتَهُ فَنَزَلَتْ {لاَ يَسْتَوِي الْقَاعِدُونَ مِنَ الْمُؤْمِنِينَ غَيْرُ أُولِي الضَّرَرِ }.
பாடம் : 31 வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: இறைநம்பிக்கையாளர்களில் தக்க காரணமின்றி (போருக்குச் செல்லாமல் வீட்டில்) தங்கிவிடுவோரும் இறைவழியில் தம் செல்வங்களாலும் உயிர்களாலும் அறப்போர் புரிவோரும் சமமாகமாட்டர். (போருக்குச் செல்லாமல் வீட்டில்) தங்கிவிடுவோரைவிடத் தம் செல்வங்களாலும் உயிர்களாலும் அறப்போர் புரிவோரைத் தகுதியில் அல்லாஹ் சிறப்பாக்கியுள்ளான். அனைவருக்கும் அல்லாஹ் நல்லதையே வாக்களித்துள்ளான். (எனினும்,) அறப்போர் புரிவோருக்கு மகத்தான பிரதிபலனை வழங்கி அவர் களை, (போருக்குச் செல்லாமல் வீட்டில்) தங்கிவிடுவோரைவிட அவன் சிறப்பித் துள்ளான். (மேலும்) தன்னிடமிருந்து பதவிகளை யும் மன்னிப்பையும் கருணையையும் (அவர்களுக்கு வழங்குகின்றான்). அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனும் மிகுந்த கருணையாளனும் ஆவான். (4:95,96)
2831. பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘இறைநம்பிக்கையாளர்களில் (தக்க காரணமின்றி போருக்குச் செல்லாமல் வீட்டில்) தங்கிவிடுவோரும் இறைவழியில் தம் செல்வங்களாலும் உயிர்களாலும் அறப்போர் புரிவோரும் சமமாகமாட்டர்” (4:95) எனும் வசனம் அருளப்பட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களை அழைத்தார்கள். அவர் அகலமான எலும்பு ஒன்றைக் கொண்டு வந்து, அந்த வசனத்தை எழுதினார்.

(அருகில் இருந்த கண்பார்வையற்ற) அப்துல்லாஹ் பின் உம்மி மக்த்தூம் (ரலி) அவர்கள் தமது (கண்பார்வையற்ற) குறை குறித்து முறையிட்டார்கள். அப்போது, யிதக்க காரணமின்றி’ என்ற (வாசகம் சேர்ந்த) முழு வசனம் (4:95) அருளப்பட்டது.


அத்தியாயம் : 56
2832. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ الزُّهْرِيُّ، قَالَ حَدَّثَنِي صَالِحُ بْنُ كَيْسَانَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ، أَنَّهُ قَالَ رَأَيْتُ مَرْوَانَ بْنَ الْحَكَمِ جَالِسًا فِي الْمَسْجِدِ، فَأَقْبَلْتُ حَتَّى جَلَسْتُ إِلَى جَنْبِهِ، فَأَخْبَرَنَا أَنَّ زَيْدَ بْنَ ثَابِتٍ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَمْلَى عَلَيْهِ لاَ يَسْتَوِي الْقَاعِدُونَ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ قَالَ فَجَاءَهُ ابْنُ أُمِّ مَكْتُومٍ وَهُوَ يُمِلُّهَا عَلَىَّ، فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، لَوْ أَسْتَطِيعُ الْجِهَادَ لَجَاهَدْتُ. وَكَانَ رَجُلاً أَعْمَى، فَأَنْزَلَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى عَلَى رَسُولِهِ صلى الله عليه وسلم وَفَخِذُهُ عَلَى فَخِذِي، فَثَقُلَتْ عَلَىَّ حَتَّى خِفْتُ أَنْ تَرُضَّ فَخِذِي، ثُمَّ سُرِّيَ عَنْهُ، فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ {غَيْرُ أُولِي الضَّرَرِ}.
பாடம் : 31 வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: இறைநம்பிக்கையாளர்களில் தக்க காரணமின்றி (போருக்குச் செல்லாமல் வீட்டில்) தங்கிவிடுவோரும் இறைவழியில் தம் செல்வங்களாலும் உயிர்களாலும் அறப்போர் புரிவோரும் சமமாகமாட்டர். (போருக்குச் செல்லாமல் வீட்டில்) தங்கிவிடுவோரைவிடத் தம் செல்வங்களாலும் உயிர்களாலும் அறப்போர் புரிவோரைத் தகுதியில் அல்லாஹ் சிறப்பாக்கியுள்ளான். அனைவருக்கும் அல்லாஹ் நல்லதையே வாக்களித்துள்ளான். (எனினும்,) அறப்போர் புரிவோருக்கு மகத்தான பிரதிபலனை வழங்கி அவர் களை, (போருக்குச் செல்லாமல் வீட்டில்) தங்கிவிடுவோரைவிட அவன் சிறப்பித் துள்ளான். (மேலும்) தன்னிடமிருந்து பதவிகளை யும் மன்னிப்பையும் கருணையையும் (அவர்களுக்கு வழங்குகின்றான்). அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனும் மிகுந்த கருணையாளனும் ஆவான். (4:95,96)
2832. சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் மர்வான் பின் அல்ஹகமைப் பள்ளிவாசலில் அமர்ந்திருக்கக் கண்டேன். நான் அவரை நோக்கிச் சென்று அவருக்குப் பக்கத்தில் அமர்ந்துகொண்டேன். அப்போது அவர் எங்களுக்கு அறிவித்தார்: ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘இறை நம்பிக்கையாளர்களில் (தக்க காரணமின்றி போருக்குச் செல்லாமல் வீட்டில்) தங்கி விடுவோரும் இறைவழியில் தம் செல்வங் களாலும் உயிர்களாலும் அறப்போர் புரிவோரும் சமமாகமாட்டர்” (4:95) எனும் இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

அதை நபி (ஸல்) அவர்கள் எனக்கு ஓதிக்காட்டிக்கொண்டிருந்தபோது அவர்களிடம் அப்துல்லாஹ் பின் உம்மி மக்த் தூம் (ரலி) அவர்கள் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! என்னால் அறப்போரில் கலந்து கொள்ள முடியுமென்றால் நான் அறப் போரில் பங்கெடுத்திருப்பேன்” என்று கூறினார்கள். அவர் கண்பார்வையற்ற மனிதராக இருந்தார். ஆகவே, அப்போது உயர்ந்தோனும் வளமிக்கோனுமான அல்லாஹ் தன் தூதருக்கு (வேத அறிவிப்பை) அருளினான்.

நபி (ஸல்) அவர்களின் தொடை அப்போது என் தொடையின் மீதிருந்தது. (வேத அறிவிப்பு வரத்தொடங்கிய காரணத் தால்) அது என்மீது (கனத்துப்போய்) கடுமையாக (அழுத்த) ஆரம்பித்தது. எந்த அளவுக்கென்றால் என் தொடை நசுங்கிவிடும் என்று அஞ்சினேன். பிறகு நபியவர்களைவிட்டு அந்நிலை அகற்றப்பட்டது. அப்போது அல்லாஹ், யிதகுந்த காரணமின்றி (தங்கிவிட்டவர்கள்)› எனும் வாசகத்தை (மேற்கண்ட வசனத்துடன் சேர்த்து) அருளியிருந்தான்.

அத்தியாயம் : 56
2833. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ سَالِمٍ أَبِي النَّضْرِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي أَوْفَى، كَتَبَ فَقَرَأْتُهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا لَقِيتُمُوهُمْ فَاصْبِرُوا "".
பாடம் : 32 போரில் பொறுமை
2833. சாலிம் அபுந்நள்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் (உமர் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்களுக்குக்) கடிதம் எழுதினார் கள். நான் அதைப் படித்தேன். அதில் அவர், ‘‘பகைவர்களை நீங்கள் சந்தித்தால் பொறுமையுடன் (நிலைகுலையாமல்) இருங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக எழுதியிருந் தார்கள்.

அத்தியாயம் : 56
2834. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ حُمَيْدٍ، قَالَ سَمِعْتُ أَنَسًا ـ رضى الله عنه ـ يَقُولُ خَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى الْخَنْدَقِ فَإِذَا الْمُهَاجِرُونَ وَالأَنْصَارُ يَحْفِرُونَ فِي غَدَاةٍ بَارِدَةٍ، فَلَمْ يَكُنْ لَهُمْ عَبِيدٌ يَعْمَلُونَ ذَلِكَ لَهُمْ، فَلَمَّا رَأَى مَا بِهِمْ مِنَ النَّصَبِ وَالْجُوعِ قَالَ اللَّهُمَّ إِنَّ الْعَيْشَ عَيْشُ الآخِرَهْ فَاغْفِرْ لِلأَنْصَارِ وَالْمُهَاجِرَهْ. فَقَالُوا مُجِيبِينَ لَهُ نَحْنُ الَّذِينَ بَايَعُوا مُحَمَّدًا عَلَى الْجِهَادِ مَا بَقِينَا أَبَدًا
பாடம் : 33 போர் புரியும்படி ஆர்வமூட்டல் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: நபியே! இறைநம்பிக்கையாளர்களுக் குப் போர் புரிவதில் ஆர்வமூட்டுவீராக! (8:65)
2834. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அகழ்ப் போரின்போது) அகழ் (வெட்டும் பணி நடக்கும் இடத்தை) நோக்கிப் புறப் பட்டார்கள்.27 அப்போது முஹாஜிர்களும் அன்சாரிகளும் (கடும்) குளிரான காலை நேரத்தில் (அகழ்) தோண்டிக்கொண்டி ருந்தார்கள். அந்தப் பணியை அவர்களுக் காகச் செய்திட அவர்களிடம் அப்போது அடிமை (ஊழியர்)கள் இல்லை.

அவர்களுக்கு ஏற்பட்டிருந்த களைப்பையும் பசியையும் கண்டபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,

‘‘இறைவாமறுமை வாழ்வேவாழ்வாகும்.ஆகவே, (அதற்காக உழைக்கும்)அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும்மன்னிப்பருள்வாயாக!”

என்று (பாடலில்) கூறினார்கள்.

இதைக் கேட்ட நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பதிலளிக்கும் வகையில்,

‘‘நாங்கள்முஹம்மத் (ஸல்) அவர்களிடம்உறுதிமொழி கொடுத்திருக்கிறோம்உயிரோடு இருக்கும்வரைஇஸ்லாத்தில் நிலைப்போம்”

என்று (பாடியபடி) கூறினார்கள்.

அத்தியாயம் : 56
2835. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ جَعَلَ الْمُهَاجِرُونَ وَالأَنْصَارُ يَحْفِرُونَ الْخَنْدَقَ حَوْلَ الْمَدِينَةِ، وَيَنْقُلُونَ التُّرَابَ عَلَى مُتُونِهِمْ وَيَقُولُونَ نَحْنُ الَّذِينَ بَايَعُوا مُحَمَّدًا عَلَى الإِسْلاَمِ مَا بَقِينَا أَبَدًا وَالنَّبِيُّ صلى الله عليه وسلم يُجِيبُهُمْ وَيَقُولُ اللَّهُمَّ إِنَّهُ لاَ خَيْرَ إِلاَّ خَيْرُ الآخِرَهْ فَبَارِكْ فِي الأَنْصَارِ وَالْمُهَاجِرَهْ.
பாடம் : 34 அகழ் தோண்டுதல்
2835. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஹாஜிர்களும் அன்சாரிகளும் மதீனாவைச் சுற்றிலும் அகழ் தோண்டி மண்ணைத் தம் முதுகுகள்மீது சுமந்து, (வேறிடத்திற்குக்) கொண்டுசெல்லத் தொடங்கினார்கள். அப்போது அவர்கள்,

‘‘நாங்கள்முஹம்மத் (ஸல்) அவர்களிடம்உறுதிமொழி கொடுத்துள்ளோம்உயிரோடு இருக்கும்வரைஎப்போதும்அறப்போர் புரிவோம்”

என்று பாடலானார்கள்.

அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள்,

‘‘இறைவா!மறுமையின் நன்மை தவிரவேறு நன்மை கிடையாது!அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும்வளம் வழங்குவாயாக!”

என்று (பாடலிலேயே) பதிலளித் தார்கள்.


அத்தியாயம் : 56
2836. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، سَمِعْتُ الْبَرَاءَ ـ رضى الله عنه ـ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَنْقُلُ وَيَقُولُ "" لَوْلاَ أَنْتَ مَا اهْتَدَيْنَا "".
பாடம் : 34 அகழ் தோண்டுதல்
2836. பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (அகழ்ப் போருக் காக அகழ் தோண்டியபோது) மண்ணைச் சுமந்து சென்றுகொண்டிருந்தார்கள். அப்போது,

‘‘(இறைவா!)நீ இல்லாவிட்டால்நாங்கள்நல்வழி அடைந்திருக்கமாட்டோம்”

என்று (பாடலில்) கூறிக்கொண்டிருந் தார்கள்.


அத்தியாயம் : 56
2837. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ ـ رضى الله عنه ـ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ الأَحْزَابِ يَنْقُلُ التُّرَابَ وَقَدْ وَارَى التُّرَابُ بَيَاضَ بَطْنِهِ، وَهُوَ يَقُولُ لَوْلاَ أَنْتَ مَا اهْتَدَيْنَا وَلاَ تَصَدَّقْنَا وَلاَ صَلَّيْنَا. فَأَنْزِلِ السَّكِينَةَ عَلَيْنَا وَثَبِّتِ الأَقْدَامَ إِنْ لاَقَيْنَا. إِنَّ الأُلَى قَدْ بَغَوْا عَلَيْنَا إِذَا أَرَادُوا فِتْنَةً أَبَيْنَا.
பாடம் : 34 அகழ் தோண்டுதல்
2837. பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அகழ்ப் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மண்ணைச் சுமந்துகொண்டு செல்வதை நான் பார்த்தேன். மண் அவர்களுடைய வயிற்றின் வெண்மையை மறைத்திருந்தது. அப்போது அவர்கள் இவ்வாறு (பாடிய வண்ணம்) கூறிக்கொண்டிருந்தார்கள்:

(இறைவா!)நீ இல்லாவிட்டால்நாங்கள்நல்வழி அடைந்திருக்கமாட்டோம்!தர்மம் செய்திருக்கமாட்டோம்!தொழுதும் இருக்கமாட்டோம்!

எங்கள்மீதுபொழிவாயாக அமைதியை!(எதிரிகளை)நாங்கள் சந்திக்கும்போதுபாதங்களைஉறுதிப்படுத்துவாயாக!

இவர்கள் (எதிரிகள்)எங்களுக்குஅநீதியிழைத்துவிட்டனர்எங்களைச்சோதனையில் ஆழ்த்தஇவர்கள்விரும்பினாலும்இடம் தரமாட்டோம்!

அத்தியாயம் : 56
2838. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا حُمَيْدٌ، أَنَّ أَنَسًا، حَدَّثَهُمْ قَالَ رَجَعْنَا مِنْ غَزْوَةِ تَبُوكَ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 35 ஒருவருக்குத் தகுந்த காரணம் எதுவும் இருந்து, அதனால் அவர் அறப்போரில் பங்குபெற முடியாமல் போவது
2838. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் தபூக் போரிலிருந்து நபி (ஸல்) அவர்களுடன் திரும்பிவந்தோம்...


அத்தியாயம் : 56
2839. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ ـ هُوَ ابْنُ زَيْدٍ ـ عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ فِي غَزَاةٍ فَقَالَ "" إِنَّ أَقْوَامًا بِالْمَدِينَةِ خَلْفَنَا، مَا سَلَكْنَا شِعْبًا وَلاَ وَادِيًا إِلاَّ وَهُمْ مَعَنَا فِيهِ، حَبَسَهُمُ الْعُذْرُ "". وَقَالَ مُوسَى حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ حُمَيْدٍ، عَنْ مُوسَى بْنِ أَنَسٍ، عَنْ أَبِيهِ، قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ الأَوَّلُ أَصَحُّ.
பாடம் : 35 ஒருவருக்குத் தகுந்த காரணம் எதுவும் இருந்து, அதனால் அவர் அறப்போரில் பங்குபெற முடியாமல் போவது
2839. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஓர் அறப்போரில் (தபூக் போரில்) ஈடுபட்டிருந்தார்கள். அப்போது அவர்கள், ‘‘(நம்முடன் வராமல் தங்கிவிட்ட) சிலர் மதீனாவில் இருக்கின்றனர். நாம் எந்த மலைக் கணவாயையும் பள்ளத்தாக்கையும் கடந்து சென்றாலும், அவர்களும் நம்முடன் அதில் இல்லாமல் இருப்பதில்லை. தகுந்த காரணமே (அறப்போரில் கலந்துகொள்ள விடாமல்) அவர்களைத் தடுத்துவிட்டது” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. முதலாவது தொடரே மிகவும சரியானது ஆகும்.

அத்தியாயம் : 56
2840. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي يَحْيَى بْنُ سَعِيدٍ، وَسُهَيْلُ بْنُ أَبِي صَالِحٍ، أَنَّهُمَا سَمِعَا النُّعْمَانَ بْنَ أَبِي عَيَّاشٍ، عَنْ أَبِي سَعِيدٍ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" مَنْ صَامَ يَوْمًا فِي سَبِيلِ اللَّهِ بَعَّدَ اللَّهُ وَجْهَهُ عَنِ النَّارِ سَبْعِينَ خَرِيفًا "".
பாடம் : 36 இறைவழியில் (போரிடும்போது) நோன்பு நோற்பதன் சிறப்பு
2840. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

இறைவழியில் (அறப்போருக்குச் செல்லும்போது) ஒருநாள் நோன்பு நோற்றவரின் முகத்தை, அல்லாஹ் நரக நெருப்பைவிட்டு எழுபது ஆண்டுகள் (பயணத்) தொலைவிற்கு அப்புறப்படுத்தி விடுவான்.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 56
2841. حَدَّثَنَا سَعْدُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ أَنْفَقَ زَوْجَيْنِ فِي سَبِيلِ اللَّهِ دَعَاهُ خَزَنَةُ الْجَنَّةِ، كُلُّ خَزَنَةِ باب أَىْ فُلُ هَلُمَّ "". قَالَ أَبُو بَكْرٍ يَا رَسُولَ اللَّهِ، ذَاكَ الَّذِي لاَ تَوَى عَلَيْهِ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنِّي لأَرْجُو أَنْ تَكُونَ مِنْهُمْ "".
பாடம் : 37 இறைவழியில் (அறப்போருக்காகச்) செலவிடுவதன் சிறப்பு
2841. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘யார் இறைவழியில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவிட்டாரோ அவரைச் சொர்க்க வாசல்களின் காவலர்கள் ஒவ்வொருவரும், யிஇன்னாரே! இங்கே வாரும்’ என்று அழைப்பார்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதைக் கேட்ட அபூபக்ர் (ரலி) அவர்கள் ‘‘அல்லாஹ்வின் தூதரே! இப்படிப்பட்டவருக்குக் கவலையே கிடையாது (எந்த வாசல் வழியாகவும் அவர் சொர்க்கத்தினுள் நுழையலாம்)” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவர்களில் நீங்களும் ஒருவராக இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்” என்று சொன்னார்கள்.


அத்தியாயம் : 56