2594. وَقَالَ بَكْرٌ عَنْ عَمْرٍو، عَنْ بُكَيْرٍ، عَنْ كُرَيْبٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ إِنَّ مَيْمُونَةَ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَعْتَقَتْ وَلِيدَةً لَهَا فَقَالَ لَهَا "" وَلَوْ وَصَلْتِ بَعْضَ أَخْوَالِكِ كَانَ أَعْظَمَ لأَجْرِكِ "".
பாடம் : 16 யாருக்கு முதலில் அன்பளிப்பு வழங்குவது?
2594. இப்னு அப்பாஸ் (ரலி) அவர் களின் முன்னாள் அடிமையான குரைப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் துணைவி யாரான மைமூனா (ரலி) அவர்கள் தம் அடிமைப் பெண் ஒருத்தியை விடுதலை செய்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் மைமூனா (ரலி) அவர்களிடம், ‘‘(இந்த அடிமைப் பெண்ணை அன்பளிப்பாகக் கொடுத்து,) உன் தாய்மாமன்கள் சிலரது உறவைப் பேணியிருந்தால் உனக்குப் பெரும் நற்பலன் கிடைத்திருக்கும்” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 50
2595. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ، عَنْ طَلْحَةَ بْنِ عَبْدِ اللَّهِ ـ رَجُلٍ مِنْ بَنِي تَيْمِ بْنِ مُرَّةَ ـ عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ، إِنَّ لِي جَارَيْنِ فَإِلَى أَيِّهِمَا أُهْدِي قَالَ "" إِلَى أَقْرَبِهِمَا مِنْكِ بَابًا "".
பாடம் : 16 யாருக்கு முதலில் அன்பளிப்பு வழங்குவது?
2595. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (நபி (ஸல்) அவர்களிடம்), ‘‘அல்லாஹ்வின் தூதரே! எனக்கு அண்டை வீட்டுக்காரர்கள் இருவர் உள்ளனர். அவர்களில் யாருக்கு நான் அன்பளிப்பு வழங்க வேண்டும்?” என்று கேட்டேன். ‘‘அவ்விருவரில் எவரது வாசல் உன் வீட்டு வாசலுக்கு அருகிலுள்ளதோ அவருக்கு அன்பளிப்பு வழங்கு” என்று கூறி னார்கள்.

அத்தியாயம் : 50
2596. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ الصَّعْبَ بْنَ جَثَّامَةَ اللَّيْثِيَّ،، وَكَانَ، مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم يُخْبِرُ أَنَّهُ أَهْدَى لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حِمَارَ وَحْشٍ وَهْوَ بِالأَبْوَاءِ ـ أَوْ بِوَدَّانَ ـ وَهْوَ مُحْرِمٌ فَرَدَّهُ، قَالَ صَعْبٌ فَلَمَّا عَرَفَ فِي وَجْهِي رَدَّهُ هَدِيَّتِي قَالَ "" لَيْسَ بِنَا رَدٌّ عَلَيْكَ، وَلَكِنَّا حُرُمٌ "".
பாடம் : 17 தகுந்த காரணத்துக்காக அன்ப ளிப்பை ஏற்காமலிருப்பது ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களது காலத்தில் அன்பளிப்பு அன்பளிப் பாக இருந்தது; இன்று அது இலஞ்சமாக மாறிவிட்டது” என்று உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
2596. நபித்தோழர் ஸஅப் பின் ஜஸ் ஸாமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘அப்வா’ என்னும் இடத்தில் அல்லது யிவத்தான்’ என்னும் இடத்தில் இருந்தபோது, ஒரு காட்டுக் கழுதையை அவர்களுக்கு நான் அன்பளிப்பாக வழங்கினேன். (அது நான் வேட்டையாடியதாகும்.) அப்போது அவர்கள் இஹ்ராம் கட்டியிருந்தார்கள். அதனால், அதை ஏற்க மறுத்துவிட் டார்கள்.

அவர்கள் என் அன்பளிப்பை ஏற்க மறுத்துவிட்டதால் என் முகத்தில் தோன் றிய கவலையைக் கண்டபோது, ‘‘நாமாக உமது அன்பளிப்பை மறுக்கவில்லை; மாறாக, நாம் யிஇஹ்ராம்’ கட்டியுள்ளோம்” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 50
2597. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ أَبِي حُمَيْدٍ السَّاعِدِيِّ ـ رضى الله عنه ـ قَالَ اسْتَعْمَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم رَجُلاً مِنَ الأَزْدِ يُقَالُ لَهُ ابْنُ اللُّتْبِيَّةِ عَلَى الصَّدَقَةِ، فَلَمَّا قَدِمَ قَالَ هَذَا لَكُمْ، وَهَذَا أُهْدِيَ لِي. قَالَ "" فَهَلاَّ جَلَسَ فِي بَيْتِ أَبِيهِ أَوْ بَيْتِ أُمِّهِ، فَيَنْظُرَ يُهْدَى لَهُ أَمْ لاَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لاَ يَأْخُذُ أَحَدٌ مِنْهُ شَيْئًا إِلاَّ جَاءَ بِهِ يَوْمَ الْقِيَامَةِ يَحْمِلُهُ عَلَى رَقَبَتِهِ، إِنْ كَانَ بَعِيرًا لَهُ رُغَاءٌ أَوْ بَقَرَةً لَهَا خُوَارٌ أَوْ شَاةً تَيْعَرُ ـ ثُمَّ رَفَعَ بِيَدِهِ، حَتَّى رَأَيْنَا عُفْرَةَ إِبْطَيْهِ ـ اللَّهُمَّ هَلْ بَلَّغْتُ اللَّهُمَّ هَلْ بَلَّغْتُ ثَلاَثًا "".
பாடம் : 17 தகுந்த காரணத்துக்காக அன்ப ளிப்பை ஏற்காமலிருப்பது ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களது காலத்தில் அன்பளிப்பு அன்பளிப் பாக இருந்தது; இன்று அது இலஞ்சமாக மாறிவிட்டது” என்று உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
2597. அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி)அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ‘அஸ்த்’ என்னும் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரை ஸகாத் வசூலிப்பவராக நியமித்தார்கள். அவர் யிஇப்னுல் லுத்பிய்யா’ என்று அழைக்கப் பட்டுவந்தார். அவர் (ஸகாத் வசூலித் துக்கொண்டு) வந்தபோது, ‘‘இது உங்களுக் குரியது; இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது” என்று கூறினார்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘இவர் தம் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்துகொண்டு, தமக்கு அன்பளிப்புக் கிடைக்கிறதா, இல்லையா என்று பார்க்கட்டுமே! என் உயிர் யார் கையில் உள்ளதோ அ(ந்த இறை)வன்மீது சத்தியமாக! உங்களில் யாரேனும் (அதில்) ஒன்றை (முறைகேடாக)ப் பெற்றிருந்தால், அதை அவர் தமது பிடரியில் சுமந்துகொண்டு மறுமை நாளன்று வருவார்.

அது ஒட்டகமாக இருந்தால் கனைத்துக் கொண்டிருக்கும்; பசுவாகவோ ஆடாகவோ இருந்தால் கத்திக்கொண்டிருக்கும்” என்று கூறினார்கள்.

பிறகு நபி (ஸல்) அவர்கள் தம் அக் குள்களின் வெண்மையை நாங்கள் பார்க் கும் அளவுக்குத் தம் கைகளை உயர்த்தி, ‘‘இறைவா! (உன் செய்தியை மக்களுக்கு) நான் எடுத்துரைத்துவிட்டேன் அல்லவா? நான் எடுத்துரைத்துவிட்டேன் அல்லவா?” என்று மும்முறை கூறினார்கள்.

அத்தியாயம் : 50
2598. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا ابْنُ الْمُنْكَدِرِ، سَمِعْتُ جَابِرًا ـ رضى الله عنه ـ قَالَ قَالَ لِي النَّبِيُّ صلى الله عليه وسلم "" لَوْ جَاءَ مَالُ الْبَحْرَيْنِ أَعْطَيْتُكَ هَكَذَا ثَلاَثًا "". فَلَمْ يَقْدَمْ حَتَّى تُوُفِّيَ النَّبِيُّ صلى الله عليه وسلم، فَأَمَرَ أَبُو بَكْرٍ مُنَادِيًا فَنَادَى مَنْ كَانَ لَهُ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم عِدَةٌ أَوْ دَيْنٌ فَلْيَأْتِنَا. فَأَتَيْتُهُ فَقُلْتُ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم وَعَدَنِي. فَحَثَى لِي ثَلاَثًا.
பாடம் : 18 ஒருவர் அன்பளிப்பு வழங்கினார்; அல்லது ஒரு வாக்கு அளித்தார்; உரியவருக்கு அது வந்து சேர்வதற்குமுன்பே (இருவரில் ஒருவர்) இறந்துவிட்டால்... அபீதா பின் அம்ர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: (வாக்களித்தவர், வாக்களிக்கப்பட்டவர்) இருவருமே இறந்துவிட்டால், அன்பளிப்புப் பெறுபவர் உயிரோடு இருந்தபோதே அன்பளிப்புப் பொருள் தனியாக எடுத்துவைக்கப்பட்டிருந்தால், அது அன்பளிப்புப் பெறுபவருடைய வாரிசுகளுக்குரியதாகும். அன்பளிப்புப் பெறுபவர் உயிரோடு இருந்தபோது அன்பளிப்புப் பொருள் (அவருக்கென்று) தனியாக எடுத்துவைக்கப்படவில்லை யென்றால் அது அன்பளிப்புச் செய்தவரின் வாரிசுகளுக்குரியதாகும். ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘இருவரில் யார் முதலில் இறந்தாலும் அன்பளிப்புப் பெறுபவரின் தூதர் அன்பளிப்பைக் கைப்பற்றியிருந்தால், அது அன்பளிப்புப் பெற்றவரின் வாரிசு களுக்கே உரியதாகும்.
2598. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘பஹ்ரைனின் நிதி வந்துவிட்டால் உனக்கு இவ்வளவு (இவ்வளவு) தருவேன்” என்று மூன்று முறை கூறினார்கள். ஆனால், நபி (ஸல்) அவர்கள் இறக்கும்வரை அந்த நிதி வந்து சேரவில்லை.

பிறகு (ஆட்சித் தலைவரான) அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘எவருக்காவது நபி (ஸல்) அவர்கள் எதனையும் வாக்களித்திருந்தால், அல்லது எவருக்காவது அவர்கள் கடன் கொடுக்க வேண்டியிருந்தால் அவர் நம்மிடம் வரட்டும்” என்று (பொது) அறிவிப்புச் செய்யும்படி பொதுஅறிவிப்பாளருக்குக் கட்டளையிட, அவர் அவ்வாறே அறிவித்தார்.

ஆகவே, நான் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று, ‘‘எனக்கு (பஹ்ரைனின் நிதியிலிருந்து) தருவதாக நபி (ஸல்) அவர்கள் வாக்களித்திருந்தார்கள்” என்று கூறினேன். இதைக் கேட்ட அவர்கள், எனக்கு (நிதியை) மூன்று முறை கைகளால் அள்ளிக் கொடுத்தார்கள்.

அத்தியாயம் : 50
2599. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ ـ رضى الله عنهما ـ قَالَ قَسَمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَقْبِيَةً، وَلَمْ يُعْطِ مَخْرَمَةَ مِنْهَا شَيْئًا، فَقَالَ مَخْرَمَةُ يَا بُنَىَّ انْطَلِقْ بِنَا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. فَانْطَلَقْتُ مَعَهُ، فَقَالَ ادْخُلْ فَادْعُهُ لِي. قَالَ فَدَعَوْتُهُ لَهُ فَخَرَجَ إِلَيْهِ، وَعَلَيْهِ قَبَاءٌ مِنْهَا، فَقَالَ "" خَبَأْنَا هَذَا لَكَ "". قَالَ فَنَظَرَ إِلَيْهِ، فَقَالَ رَضِيَ مَخْرَمَةُ.
பாடம் : 19 (அன்பளிப்பு) அடிமையையும் பொருளையும் கைப்பற்றல் எப்படி?17 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறி னார்கள்: நான் ஒரு முரட்டு இளம் ஒட்டகத்தின் மீது (பயணித்துக்கொண்டு) இருந்தேன்; அதை நபி (ஸல்) அவர்கள் விலைக்கு வாங்கினார்கள். பின்னர், ‘‘அப்துல்லாஹ்வே! இது உனக்கு (அன்பளிப்பு)” என்று நபியவர்கள் கூறினார்கள்.18
2599. மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சில அங்கிகளைப் பங்கிட்டார்கள்; ஆனால், என் தந்தை (மக்ரமாவு)க்கு ஒன்றும் கொடுக்கவில்லை. என் தந்தை மக்ரமா (ரலி) அவர்கள், ‘‘என் அன்பு மகனே! என்னுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வா!” என்று கூறினார்கள். நான் அவர்களுடன் சென்றேன். என் தந்தை, ‘‘நீ போய், எனக்காக நபி (ஸல்) அவர்களைக் கூப்பிடு” என்று கூற, நான் நபி (ஸல்) அவர்களை என் தந்தைக்காக அழைத்தேன்; நபி (ஸல்) அவர்கள் வெளியே வந்தார்கள்.

அவர்கள்மீது அந்த அங்கிகளில் ஒன்று இருந்தது. அவர்கள், ‘‘நாம் உமக்காக இதை (யாருக்கும் தராமல்) எடுத்து வைத்திருந்தோம்” என்று கூறினார்கள். என் தந்தை மக்ரமா (ரலி) அவர்கள் அதைப் பார்த்துவிட்டு, ‘யிமக்ரமா திருப்தியடைந் தான்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 50
2600. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَحْبُوبٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ هَلَكْتُ. فَقَالَ "" وَمَا ذَاكَ "". قَالَ وَقَعْتُ بِأَهْلِي فِي رَمَضَانَ. قَالَ "" تَجِدُ رَقَبَةً "". قَالَ لاَ. قَالَ "" فَهَلْ تَسْتَطِيعُ أَنْ تَصُومَ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ "". قَالَ لاَ. قَالَ "" فَتَسْتَطِيعُ أَنْ تُطْعِمَ سِتِّينَ مِسْكِينًا "". قَالَ لاَ. قَالَ فَجَاءَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ بِعَرَقٍ ـ وَالْعَرَقُ الْمِكْتَلُ ـ فِيهِ تَمْرٌ فَقَالَ "" اذْهَبْ بِهَذَا فَتَصَدَّقْ بِهِ "". قَالَ عَلَى أَحْوَجَ مِنَّا يَا رَسُولَ اللَّهِ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ مَا بَيْنَ لاَبَتَيْهَا أَهْلُ بَيْتٍ أَحْوَجُ مِنَّا. قَالَ "" اذْهَبْ فَأَطْعِمْهُ أَهْلَكَ "".
பாடம் : 20 ஒருவர் அன்பளிப்பு வழங்க, மற்றவர் அதைப் பெற்றுக்கொண்டார்; ஆனால், (அன்பளிப்பை) ஏற்றேன் என்று அவர் கூறாவிட்டால்...
2600. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, ‘‘நான் அழிந்து விட்டேன்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘‘என்ன விஷயம்?” என்று கேட்டார்கள். அவர் ‘‘நான் ரமளான் மாதத்தில் (பகலில்) என் மனைவியுடன் உடலுறவு கொண்டுவிட்டேன்” என்றார்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘உன்னிடம் (விடுதலை செய்ய) அடிமை எவரும் உண்டா?” என்று கேட்டார்கள். அம்மனிதர், ‘‘இல்லை” என்று கூறினார். ‘‘இரு மாதங்கள் தொடர்ந்து நோன்பு நோற்க உன்னால் முடியுமா?” என்று கேட்டார்கள். அதற்கும் அவர், ‘‘முடியாது” என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியென்றால் அறுபது ஏழைகளுக்கு உன்னால் உணவளிக்க முடியுமா?” என்று கேட்டார்கள். அதற்கும் அவர், ‘‘முடியாது” என்று பதிலளித்தார்.

அப்போது அன்சாரி ஒருவர், ‘அரக்’ ஒன்றைக் கொண்டுவந்தார். ‘அரக்’ என்பது பேரீச்சம்பழக் கூடையாகும். நபி (ஸல்) அவர்கள் (கேள்வி கேட்ட) அம்மனிதரிடம், ‘‘இதை எடுத்துச் சென்று தர்மம் செய்துவிடு” என்று கூறினார்கள்.

அதற்கு அம்மனிதர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! எங்களைவிட அதிகத் தேவை உடையவர்களுக்கா நான் இதைத் தர்மம் செய்ய வேண்டும்! உங்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பிவைத்த (இறை)வனின் மீதாணையாக! மதீனாவின் இரு மலைகளுக்கிடையே எங்களைவிட அதிகத் தேவையுடைய வீட்டார் யாரு மில்லை” என்று கூறினார்; அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘‘போ! (போய்) உன் வீட்டாருக்கே இதை உண்ணக் கொடு” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 50
2601. حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ،. وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ حَدَّثَنِي ابْنُ كَعْبِ بْنِ مَالِكٍ، أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ أَنَّ أَبَاهُ قُتِلَ يَوْمَ أُحُدٍ شَهِيدًا، فَاشْتَدَّ الْغُرَمَاءُ فِي حُقُوقِهِمْ، فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَكَلَّمْتُهُ، فَسَأَلَهُمْ أَنْ يَقْبَلُوا ثَمَرَ حَائِطِي، وَيُحَلِّلُوا أَبِي، فَأَبَوْا، فَلَمْ يُعْطِهِمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَائِطِي، وَلَمْ يَكْسِرْهُ لَهُمْ، وَلَكِنْ قَالَ "" سَأَغْدُو عَلَيْكَ "". فَغَدَا عَلَيْنَا حَتَّى أَصْبَحَ، فَطَافَ فِي النَّخْلِ، وَدَعَا فِي ثَمَرِهِ بِالْبَرَكَةِ، فَجَدَدْتُهَا، فَقَضَيْتُهُمْ حُقُوقَهُمْ، وَبَقِيَ لَنَا مِنْ ثَمَرِهَا بَقِيَّةٌ، ثُمَّ جِئْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَهْوَ جَالِسٌ، فَأَخْبَرْتُهُ بِذَلِكَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِعُمَرَ "" اسْمَعْ ـ وَهْوَ جَالِسٌ ـ يَا عُمَرُ "". فَقَالَ أَلاَّ يَكُونُ قَدْ عَلِمْنَا أَنَّكَ رَسُولُ اللَّهِ، وَاللَّهِ إِنَّكَ لَرَسُولُ اللَّهِ.
பாடம் : 21 ஒருவர் தர வேண்டிய கடனை அன்பளிப்பாக வழங்குவது யிஇதற்கு அனுமதியுண்டு’ என ஹகம் பின் (உ(த்)தைபா (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள். ஹுசைன் பின் அலீ (ரலி) அவர்கள் தமக்கு ஒரு மனிதர் தர வேண்டிய கடனை அன்பளிப்புச் செய்தார்கள். ‘‘யார்மீது ஒரு கடன் இருக்கிறதோ, அதை அவர் கொடுத்துவிடட்டும்! அல்லது உரியவரிடம் (மன்னிப்புக் கேட்டு) விமோசனம் பெறட்டும்!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் தந்தை தம்மீது கடன் உள்ள நிலையில் கொல்லப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் என் தந்தைக்குக் கடன் கொடுத்தவர்களிடம், என் தோட்டத்தின் கனிகளைப் பெற்றுக்கொள்ளும்படியும் (மீதியிருந்த கடனைத் தள்ளுபடி செய்து) என் தந்தைக்கு (மன்னிப்பு வழங்கி) விமோசனம் அளிக்கும்படியும் கேட்டுக்கொண்டார்கள்.
2601. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் தந்தை உஹுத் போரின்போது தியாகியாகக் கொல்லப்பட்டார்கள். கடன் காரர்கள் தங்கள் உரிமைகள் விஷயத்தில் (கடனைத் திரும்பப் பெறுவதில்) கடுமையாக நடந்துகொண்டார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று (இது பற்றிப்) பேசினேன். என் தந்தைக்குக் கடன் கொடுத்தவர்களிடம், என் தோட்டத்தின் கனிகளைப் பெற்றுக் கொண்டு, (மீதியுள்ள கடனை மன்னித்து) விமோசனம் அளிக்கும்படி நபியவர் கள் கேட்டுக்கொண்டார்கள்.

ஆனால், அவர்கள் மறுத்துவிட்டார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தோட்டத்தை அவர்களிடம் கொடுக்கவுமில்லை; கனிகளைப் பறித்து அவர்களுக்குத் தரவுமில்லை. மாறாக, ‘‘நான் உன்னிடம் நாளை வருவேன்” என்று கூறினார்கள். அவ்வாறே, (அடுத்த நாள்) காலையில் எங்களிடம் வந்தார்கள். பேரீச்ச மரங்களுக்கிடையே சுற்றி வந்து, அதன் கனிகளில் வளம் உண்டாகப் பிரார்த்தித்தார்கள்.

நான் அவற்றைப் பறித்துக் கடன்காரர் களின் உரிமைகளை நிறைவேற்றினேன். அதன் பழங்களில் சிறிதளவு எங்களுக்கு எஞ்சியது.

பிறகு, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்தபொழுது அவர்களிடம் வந்து, நடந்ததைத் தெரிவித்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு அமர்ந்திருந்த உமர் (ரலி) அவர்களிடம், ‘‘உமரே! கேளுங்கள்” என்றார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், ‘‘தாங்கள் அல்லாஹ்வின் தூதர்தான் என்று நாங்கள் அறிந்திருக்கவில்லையா? அல்லாஹ்வின் மீதாணையாக! தாங்கள் அல்லாஹ்வின் தூதர்தான்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 50
2602. حَدَّثَنَا يَحْيَى بْنُ قَزَعَةَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أُتِيَ بِشَرَابٍ فَشَرِبَ، وَعَنْ يَمِينِهِ غُلاَمٌ وَعَنْ يَسَارِهِ الأَشْيَاخُ فَقَالَ لِلْغُلاَمِ "" إِنْ أَذِنْتَ لِي أَعْطَيْتُ هَؤُلاَءِ "". فَقَالَ مَا كُنْتُ لأُوثِرَ بِنَصِيبِي مِنْكَ يَا رَسُولَ اللَّهِ أَحَدًا. فَتَلَّهُ فِي يَدِهِ.
பாடம் : 22 ஒருவர் பலருக்குச் செய்யும் அன்பளிப்பு அஸ்மா (ரலி) அவர்கள், காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்களையும்19 அப்துல்லாஹ் பின் அபீஅத்தீக் (ரஹ்)20 அவர்களையும் பார்த்து, ‘‘நான் என் சகோதரி ஆயிஷாவிடமிருந்து யிஃகாபா’வி லிருந்த21 ஒரு சொத்தை வாரிசாகப் பெற்றேன். அதற்குப் பகரமாக முஆவியா (ரலி) அவர்கள் எனக்கு ஒரு லட்சம் கொடுத்திருந்தார்கள். அதை உங்கள் இருவருக்கும் என் அன்பளிப்பாகக் கொடுத்துவிடுகிறேன்” என்று கூறி னார்கள்.
2602. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பானம் (பால்) கொண்டுவரப்பட்டது. (அதை) அவர்கள் அருந்தினார்கள். அப்போது அவர்களுடைய வலப் பக்கத்தில் ஒரு சிறுவரும் இடப் பக்கத்தில் முதியவர்களும் இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் அந்தச் சிறுவரிடம், ‘‘நீ அனுமதியளித்தால் நான் இவர்களுக்கு (இந்த முதியவர்களுக்கு) இதைக் கொடுத்துவிடுகிறேன்” என்று கூறினார்கள்.

அந்தச் சிறுவர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! தங்களிடமிருந்து (எனக்குக் கிடைக்கக்கூடிய) என் பங்கை வேறெவருக்காகவும் விட்டுக்கொடுக்க நான் தயாராக இல்லை” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அச்சிறுவரின் கையில் அந்த (மீதி) பானத்தை வைத்தார்கள்.

அத்தியாயம் : 50
2603. حَدَّثَنَا ثَابِتٌ حَدَّثَنَا مِسْعَرٌ عَنْ مُحَارِبٍ عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَسْجِدِ فَقَضَانِي وَزَادَنِي
பாடம் : 23 கைவசம் பெற்றுக்கொள்ளப்பட்ட அன்பளிப்பும், பெற்றுக்கொள்ளப் படாத அன்பளிப்பும், பங்கிடப்பட்ட அன்பளிப்பும், பங்கிடப்படாத அன்பளிப்பும் நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் யிஹவாஸின்’ குலத்தாருக்கு, அவர்களிடமிருந்து போர்ச் செல்வங்களாக தாங்கள் பெற்றவற்றை அவை பங்கிடப் படாத நிலையிலேயே அன்பளிப்புச் செய்துவிட்டார்கள்.
2603. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் பள்ளிவாசலில் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன்; எனக்கு (என்னிடம் வாங்கிய ஒட்டகத்தின் விலையைச்) செலுத்தி எனக்கு அதிகமாகவும் தந் தார்கள்.


அத்தியாயம் : 50
2604. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَارِبٍ، سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ يَقُولُ بِعْتُ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم بَعِيرًا فِي سَفَرٍ، فَلَمَّا أَتَيْنَا الْمَدِينَةَ قَالَ "" ائْتِ الْمَسْجِدَ فَصَلِّ رَكْعَتَيْنِ "". فَوَزَنَ ـ قَالَ شُعْبَةُ أُرَاهُ فَوَزَنَ لِي فَأَرْجَحَ، فَمَا زَالَ مِنْهَا شَىْءٌ حَتَّى أَصَابَهَا أَهْلُ الشَّأْمِ يَوْمَ الْحَرَّةِ.
பாடம் : 23 கைவசம் பெற்றுக்கொள்ளப்பட்ட அன்பளிப்பும், பெற்றுக்கொள்ளப் படாத அன்பளிப்பும், பங்கிடப்பட்ட அன்பளிப்பும், பங்கிடப்படாத அன்பளிப்பும் நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் யிஹவாஸின்’ குலத்தாருக்கு, அவர்களிடமிருந்து போர்ச் செல்வங்களாக தாங்கள் பெற்றவற்றை அவை பங்கிடப் படாத நிலையிலேயே அன்பளிப்புச் செய்துவிட்டார்கள்.
2604. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு பிர யாணத்தில் ஒட்டகம் ஒன்றை நான் விற்றேன். மதீனாவிற்கு நான் வந்தபோது நபி (ஸல்) அவர்கள், ‘‘பள்ளிவாசலுக்குச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழு” என்று கூறினார்கள். பிறகு நிறுத்(துத் தந்)தார்கள்; சிறிது அதிகமாகவும் தந்தார்கள். ஷாம் (சிரியா)வாசிகள் ‘அல்ஹர்ரா’ நாளில் அதை எடுத்துக்கொள்ளும்வரை அதிலி ருந்து சிறிதளவு எப்போதும் என்னிடம் இருந்துவந்தது.22


அத்தியாயம் : 50
2605. حَدَّثَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أُتِيَ بِشَرَابٍ، وَعَنْ يَمِينِهِ غُلاَمٌ وَعَنْ يَسَارِهِ أَشْيَاخٌ، فَقَالَ لِلْغُلاَمِ "" أَتَأْذَنُ لِي أَنْ أُعْطِيَ هَؤُلاَءِ "". فَقَالَ الْغُلاَمُ لاَ، وَاللَّهِ لاَ أُوثِرُ بِنَصِيبِي مِنْكَ أَحَدًا. فَتَلَّهُ فِي يَدِهِ.
பாடம் : 23 கைவசம் பெற்றுக்கொள்ளப்பட்ட அன்பளிப்பும், பெற்றுக்கொள்ளப் படாத அன்பளிப்பும், பங்கிடப்பட்ட அன்பளிப்பும், பங்கிடப்படாத அன்பளிப்பும் நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் யிஹவாஸின்’ குலத்தாருக்கு, அவர்களிடமிருந்து போர்ச் செல்வங்களாக தாங்கள் பெற்றவற்றை அவை பங்கிடப் படாத நிலையிலேயே அன்பளிப்புச் செய்துவிட்டார்கள்.
2605. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு பானம் (பால்) கொண்டு வரப்பட்டது; அப்போது அவர்களின் வலப் பக்கத்தில் ஒரு சிறுவரும் அவர்களின் இடப் பக்கத்தில் முதியவர்கள் சிலரும் இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் சிறுவரை நோக்கி, ‘‘இவர்களுக்கு (இந்தப் பாலைக்) கொடுப்பதற்கு எனக்கு அனுமதி தரு கிறாயா?” என்று கேட்டார்கள்.

அச்சிறுவர், ‘‘மாட்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! தங்களிடமிருந்து எனக்குக் கிடைக்கக்கூடிய (நற்)பேற்றை வேறெ வருக்காகவும் நான் விட்டுத்தரமாட்டேன்” என்று கூறினார். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அந்தப் பானத்தைச் சிறுவரின் கையிலேயே வைத்தார்கள்.


அத்தியாயம் : 50
2606. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُثْمَانَ بْنِ جَبَلَةَ، قَالَ أَخْبَرَنِي أَبِي، عَنْ شُعْبَةَ، عَنْ سَلَمَةَ، قَالَ سَمِعْتُ أَبَا سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ لِرَجُلٍ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم دَيْنٌ فَهَمَّ بِهِ أَصْحَابُهُ، فَقَالَ "" دَعُوهُ فَإِنَّ لِصَاحِبِ الْحَقِّ مَقَالاً. وَقَالَ اشْتَرُوا لَهُ سِنًّا فَأَعْطُوهَا إِيَّاهُ "". فَقَالُوا إِنَّا لاَ نَجِدُ سِنًّا إِلاَّ سِنًّا هِيَ أَفْضَلُ مِنْ سِنِّهِ. قَالَ "" فَاشْتَرُوهَا فَأَعْطُوهَا إِيَّاهُ، فَإِنَّ مِنْ خَيْرِكُمْ أَحْسَنَكُمْ قَضَاءً "".
பாடம் : 23 கைவசம் பெற்றுக்கொள்ளப்பட்ட அன்பளிப்பும், பெற்றுக்கொள்ளப் படாத அன்பளிப்பும், பங்கிடப்பட்ட அன்பளிப்பும், பங்கிடப்படாத அன்பளிப்பும் நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் யிஹவாஸின்’ குலத்தாருக்கு, அவர்களிடமிருந்து போர்ச் செல்வங்களாக தாங்கள் பெற்றவற்றை அவை பங்கிடப் படாத நிலையிலேயே அன்பளிப்புச் செய்துவிட்டார்கள்.
2606. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியிருந்தது. (அவர் நபி (ஸல்) அவர்களிடம் கடுமையாகப் பேசியதால்) நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் அந்த மனிதரைத் தண்டிக்க முனைந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவரை விட்டுவிடுங்கள். ஏனெனில், கடன் கொடுத்தவருக்குக் கடுமையாகப் பேச உரிமையுண்டு” என்று கூறிவிட்டு, ‘‘அவருக்கு (நான் தரவேண்டிய ஒட்டகத்தின்) சம வயதுடைய ஒட்டகத்தை வாங்கி, அதை அவரிடம் கொடுத்துவிடுங்கள்” என்று கூறினார்கள்.

நபித்தோழர்கள், ‘‘தாங்கள் தரவேண்டிய ஒட்டகத்தின் வயதைவிட அதிக வயதுடைய ஒட்டகம்தான் எங்களுக்குக் கிடைக்கிறது” என்று கூற, நபி (ஸல்) அவர்கள், ‘‘அதையே வாங்கி, அவருக்குக் கொடுத்துவிடுங்கள். ஏனெனில், உங்களில் யார் அழகிய முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துகிறாரோ அவரே உங்களில் சிறந்தவர் ஆவார்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 50
2607. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، أَنَّ مَرْوَانَ بْنَ الْحَكَمِ، وَالْمِسْوَرَ بْنَ مَخْرَمَةَ، أَخْبَرَاهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ حِينَ جَاءَهُ وَفْدُ هَوَازِنَ مُسْلِمِينَ، فَسَأَلُوهُ أَنْ يَرُدَّ إِلَيْهِمْ أَمْوَالَهُمْ وَسَبْيَهُمْ فَقَالَ لَهُمْ "" مَعِي مَنْ تَرَوْنَ، وَأَحَبُّ الْحَدِيثِ إِلَىَّ أَصْدَقُهُ، فَاخْتَارُوا إِحْدَى الطَّائِفَتَيْنِ إِمَّا السَّبْىَ وَإِمَّا الْمَالَ، وَقَدْ كُنْتُ اسْتَأْنَيْتُ "". وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم انْتَظَرَهُمْ بِضْعَ عَشْرَةَ لَيْلَةً حِينَ قَفَلَ مِنَ الطَّائِفِ، فَلَمَّا تَبَيَّنَ لَهُمْ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم غَيْرُ رَادٍّ إِلَيْهِمْ إِلاَّ إِحْدَى الطَّائِفَتَيْنِ قَالُوا فَإِنَّا نَخْتَارُ سَبْيَنَا. فَقَامَ فِي الْمُسْلِمِينَ فَأَثْنَى عَلَى اللَّهِ بِمَا هُوَ أَهْلُهُ ثُمَّ قَالَ "" أَمَّا بَعْدُ فَإِنَّ إِخْوَانَكُمْ هَؤُلاَءِ جَاءُونَا تَائِبِينَ، وَإِنِّي رَأَيْتُ أَنْ أَرُدَّ إِلَيْهِمْ سَبْيَهُمْ، فَمَنْ أَحَبَّ مِنْكُمْ أَنْ يُطَيِّبَ ذَلِكَ فَلْيَفْعَلْ، وَمَنْ أَحَبَّ أَنْ يَكُونَ عَلَى حَظِّهِ حَتَّى نُعْطِيَهُ إِيَّاهُ مِنْ أَوَّلِ مَا يُفِيءُ اللَّهُ عَلَيْنَا فَلْيَفْعَلْ "". فَقَالَ النَّاسُ طَيَّبْنَا يَا رَسُولَ اللَّهِ لَهُمْ. فَقَالَ لَهُمْ "" إِنَّا لاَ نَدْرِي مَنْ أَذِنَ مِنْكُمْ فِيهِ مِمَّنْ لَمْ يَأْذَنْ، فَارْجِعُوا حَتَّى يَرْفَعَ إِلَيْنَا عُرَفَاؤُكُمْ أَمْرَكُمْ "". فَرَجَعَ النَّاسُ فَكَلَّمَهُمْ عُرَفَاؤُهُمْ، ثُمَّ رَجَعُوا إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَخْبَرُوهُ أَنَّهُمْ طَيَّبُوا وَأَذِنُوا. وَهَذَا الَّذِي بَلَغَنَا مِنْ سَبْىِ هَوَازِنَ هَذَا آخِرُ قَوْلِ الزُّهْرِيِّ، يَعْنِي فَهَذَا الَّذِي بَلَغَنَا.
பாடம் : 24 பலர் பலருக்கு அன்பளிப்புச் செய்தல்
2607. மர்வான் பின் அல் ஹகம், மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) ஆகி யோர் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் யிஹவாஸின்’ தூதுக்குழுவினர் முஸ்லிம்களாக வந்த போது அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், தங்கள் செல்வங்களையும் போர்க்கைதி களையும் தங்களிடம் திருப்பித் தந்துவிடும் படி கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், ‘‘என்னுடன் நீங்கள் பார்க்கின்ற (இந்தப்) படைவீரர்களும் இருக்கின்றனர். உண்மை பேசுவது எனக்கு மிகவும் விருப்பமான தாகும். (உங்கள்) போர்க் கைதிகள், அல்லது (உங்கள்) செல்வம் ஆகிய இரண் டில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுத் துக்கொள்ளுங்கள். நான் (உங்களை) எதிர் பார்த்துக் காத்திருந்தேன்” என்று கூறி னார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தாயிஃப் நகரத்தி லிருந்து புறப்பட்ட நேரத்திலிருந்து பத்துக்கு மேற்பட்ட இரவுகள் அவர்களை எதிர்பார்த்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் போர்ச் செல்வங்கள், அல்லது போர்க் கைதிகள் ஆகிய இரண்டில் ஒன்றைத்தான் திருப்பித் தருவார்கள் என்று அவர்களுக் குத் தெளிவாகிவிட்டபோது, ‘‘நாங்கள் எங்கள் போர்க்கைதிகளையே திரும்பப் பெற்றுக்கொள்கிறோம்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களி டையே எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ப புகழ்ந்தார்கள்.

பிறகு, ‘‘இறைவாழ்த்துக்குப்பின்! (முஸ்லிம்களே!) உங்களுடைய இந்தச் சகோதரர்கள் மனம் திருந்தி நம்மிடம் வந்துள்ளனர். அவர்களிடம் அவர்களுடைய போர்க் கைதிகளைத் திரும்பக் கொடுத்துவிடலாமென நான் கருதுகிறேன். உங்களில் எவர் இதற்கு மனப்பூர்வமாகச் சம்மதிக்கிறாரோ அவர் அவ்வாறே செய்யட்டும். (போர்க் கைதிகளை விடுதலை செய்யட்டும்.) எவர் நமக்கு (இனி) அல்லாஹ் முதன் முதலாக வழங்கவிருக்கும் செல்வத் திலிருந்து அவருக்கு நாம் கொடுக்கின்ற வரை தமது பங்கைத் தாமே வைத்துக் கொள்ள விரும்புகின்றாரோ, அவர் அவ்வாறே செய்யட்டும்; (அதுவரை தம்மிடமே வைத்துக்கொள்ளட்டும்)” என்று கூறினார்கள்.

மக்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் மனப்பூர்வமாக அவர்களிடம் (அவர்களுடைய உறவினர்களான போர்க் கைதிகளைத் திருப்பித்) தந்துவிடுகிறோம்” என்று கூறினார்கள்.

அப்போது அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்களில் எவர் சம்மதிக்கிறார்; எவர் சம்மதிக்கவில்லை என்பது எமக்குத் தெரியாது. ஆகையால், நீங்கள் திரும்பிச் செல்லுங்கள். உங்கள் தலைவர்கள் வந்து (உங்கள் முடிவை) நம்மிடம் தெரிவிக்கட் டும்” என்று கூறினார்கள். பிறகு அவர்கள் (தலைவர்கள்) நபி (ஸல்) அவர்களிடம் திரும்பி வந்து, போர்க் கைதிகளைத் திருப்பித் தர மனப்பூர்வமாகச் சம்மதிப்ப தாகத் தெரிவித்தார்கள்.

அத்தியாயம் : 50
2609. حَدَّثَنَا ابْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ أَخَذَ سِنًّا فَجَاءَ صَاحِبُهُ يَتَقَاضَاهُ فَقَالَ "" إِنَّ لِصَاحِبِ الْحَقِّ مَقَالاً "". ثُمَّ قَضَاهُ أَفْضَلَ مِنْ سِنِّهِ وَقَالَ "" أَفْضَلُكُمْ أَحْسَنُكُمْ قَضَاءً "".
பாடம் : 25 சகாக்களுடன் அமர்ந்திருக்கும் ஒருவருக்கு அன்பளிப்பு வழங்கப் பட்டால் அவரே அதைப் பெறுவ தற்கு அதிக உரிமையுடையவர் ஆவார். ‘‘சகாக்களும் அதில் அவருடன் கூட்டாளிகளாவர்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அது உண்மையல்ல.
2609. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரு குறிப்பிட்ட வயதுடைய ஒட்டகத்தை ஒருவரிடமிருந்து (கடனாகப்) பெற்றார்கள். கடன் கொடுத்தவர் நபி (ஸல்) அவர்களிடம் கடனைத் திருப்பிச் செலுத்தும்படி கேட்டு வந்தார். (அப்போது அவர் நபியவர்களிடம் சற்று கடுமையாகப் பேசினார். ஆகவே, தோழர் கள் அவரைத் தண்டிக்க விரும்பி னார்கள்.)

நபி (ஸல்) அவர்கள் (தம் தோழர்களைத் தடுத்து), ‘‘கடன் கொடுத்தவருக்குக் கடுமையாகப் பேச உரிமை உண்டு” என்று கூறினார்கள். பிறகு, அவரது இளம் வயது ஒட்டகத்தைவிடச் சிறந்ததைக் கொடுத்து அவரது கடனை அடைத் தார்கள். மேலும், ‘‘உங்களில் எவர் அழகிய முறையில் கடனை அடைக்கி றாரோ அவரே உங்களில் சிறந்தவர்” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 50
2610. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرٍو، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّهُ كَانَ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي سَفَرٍ فَكَانَ عَلَى بَكْرٍ لِعُمَرَ صَعْبٍ، فَكَانَ يَتَقَدَّمُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَيَقُولُ أَبُوهُ يَا عَبْدَ اللَّهِ لاَ يَتَقَدَّمِ النَّبِيَّ صلى الله عليه وسلم أَحَدٌ. فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم "" بِعْنِيهِ "". فَقَالَ عُمَرُ هُوَ لَكَ. فَاشْتَرَاهُ ثُمَّ قَالَ "" هُوَ لَكَ يَا عَبْدَ اللَّهِ، فَاصْنَعْ بِهِ مَا شِئْتَ "".
பாடம் : 25 சகாக்களுடன் அமர்ந்திருக்கும் ஒருவருக்கு அன்பளிப்பு வழங்கப் பட்டால் அவரே அதைப் பெறுவ தற்கு அதிக உரிமையுடையவர் ஆவார். ‘‘சகாக்களும் அதில் அவருடன் கூட்டாளிகளாவர்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அது உண்மையல்ல.
2610. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தேன். உமர் (ரலி) அவர்களுக்குச் சொந்தமான முரட்டு ஒட்டகம் ஒன்றின் மீது நான் பயணம் செய்துகொண்டிருந்தேன். அது நபி (ஸல்) அவர்களை முந்திக்கொண்டு சென்றது. அப்போது என் தந்தை உமர் (ரலி) அவர்கள், ‘‘அப்துல்லாஹ்வே! நபி (ஸல்) அவர்களை யாரும் முந்தக் கூடாது” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் என் தந்தையிடம், ‘‘அதை எனக்கு விற்று விடுங்கள்” என்று கேட்டார்கள்.

என் தந்தை, ‘‘அது உங்களுக்குத்தான்” என்று கூறினார்கள். அதை நபி (ஸல்) அவர்கள் விலைக்கு வாங்கினார்கள். பிறகு (என்னிடம்) ‘‘அப்துல்லாஹ்வே! இது உமக்குரியது. நீர் விரும்பியபடி இதைப் பயன்படுத்திக்கொள்க!” என்று சொன்னார்கள்.

அத்தியாயம் : 50
2611. وَقَالَ الْحُمَيْدِيُّ حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا عَمْرٌو، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي سَفَرٍ، وَكُنْتُ عَلَى بَكْرٍ صَعْبٍ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لِعُمَرَ "" بِعْنِيهِ "". فَابْتَاعَهُ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" هُوَ لَكَ يَا عَبْدَ اللَّهِ "".
பாடம் : 26 ஒருவர், தமது ஒட்டகத்தில் பயணித்துக்கொண்டிருப்பவருக்கே அதை அன்பளிப்பாக வழங்கினால் அது செல்லும்.
2611. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ஒரு பயணத்தில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். நான் (என் தந்தைக்குச் சொந்தமான) ஒரு முரட்டு ஒட்டகத்தின் மீது பயணம் செய்து கொண்டிருந்தேன். நபி (ஸல்) அவர்கள் (என் தந்தை) உமர் (ரலி) அவர்களிடம், ‘‘இதை எனக்கு விற்றுவிடுங்கள்” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அதை விலைக்கு வாங்கி (கையகப்படுத்தாம லேயே), ‘‘அப்துல்லாஹ்வே! இது உமக் குரியது” என்று என்னிடம் கூறினார்கள்.

அத்தியாயம் : 50
2612. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ رَأَى عُمَرُ بْنُ الْخَطَّابِ حُلَّةً سِيَرَاءَ عِنْدَ باب الْمَسْجِدِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ لَوِ اشْتَرَيْتَهَا فَلَبِسْتَهَا يَوْمَ الْجُمُعَةِ وَلِلْوَفْدِ قَالَ "" إِنَّمَا يَلْبَسُهَا مَنْ لاَ خَلاَقَ لَهُ فِي الآخِرَةِ "". ثُمَّ جَاءَتْ حُلَلٌ فَأَعْطَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عُمَرَ مِنْهَا حُلَّةً، وَقَالَ أَكَسَوْتَنِيهَا وَقُلْتَ فِي حُلَّةِ عُطَارِدٍ مَا قُلْتَ. فَقَالَ "" إِنِّي لَمْ أَكْسُكَهَا لِتَلْبَسَهَا "". فَكَسَا عُمَرُ أَخًا لَهُ بِمَكَّةَ مُشْرِكًا.
பாடம் : 27 அணியக் கூடாத துணியை அன்பளிப்பாக வழங்குவது
2612. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், பள்ளிவாசலின் நுழைவாயில் அருகே (விற்கப்பட்ட) பட்டு அங்கியைக் கண்டார் கள். எனவே, ‘‘அல்லாஹ்வின் தூதரே! இதை நீங்கள் வாங்கி, வெள்ளிக்கிழமை யிலும் தூதுக் குழுக்கள் உங்களைச் சந்திக்க வரும்போதும் அணிந்துகொண் டால் நன்றாயிருக்குமே” என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘எவருக்கு மறுமையில் எந்த நற்பேறும் இல்லையோ அவர்தான் இதை அணிவார்” என்று கூறினார்கள்.

பிறகு சில பட்டு அங்கிகள் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு) வந்தன. அவற்றில் ஓர் அங்கியை அல்லாஹ்வின் துதர் (ஸல்) அவர்கள், உமர் (ரலி) அவர்களுக்குக் கொடுத்தார்கள். உமர் (ரலி) அவர்கள், ‘‘எனக்கு இதை அணிந்துகொள்ளக் கொடுக்கிறீர்களா? யிஉ(த்)தாரிக்’ அங்கி தொடர்பாக நீங்கள் முன்பு ஒரு விதமாகச் சொன்னீர்களே!” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘இதை நீங்கள் அணிந்துகொள்வதற்காக நான் உங்களுக்குத் தரவில்லை” என்று பதிலளித்தார்கள்.23

ஆகவே, உமர் (ரலி) அவர்கள் அதை மக்காவிலிருந்த இணைவைப்பாளரான தம் (பால்குடி) சகோதரர் ஒருவருக்குக் கொடுத்துவிட்டார்கள்.


அத்தியாயம் : 50
2613. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ أَبُو جَعْفَرٍ، حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ أَتَى النَّبِيُّ صلى الله عليه وسلم بَيْتَ فَاطِمَةَ فَلَمْ يَدْخُلْ عَلَيْهَا، وَجَاءَ عَلِيٌّ فَذَكَرَتْ لَهُ ذَلِكَ فَذَكَرَهُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِنِّي رَأَيْتُ عَلَى بَابِهَا سِتْرًا مَوْشِيًّا "". فَقَالَ "" مَا لِي وَلِلدُّنْيَا "". فَأَتَاهَا عَلِيٌّ فَذَكَرَ ذَلِكَ لَهَا فَقَالَتْ لِيَأْمُرْنِي فِيهِ بِمَا شَاءَ. قَالَ تُرْسِلُ بِهِ إِلَى فُلاَنٍ. أَهْلِ بَيْتٍ بِهِمْ حَاجَةٌ.
பாடம் : 27 அணியக் கூடாத துணியை அன்பளிப்பாக வழங்குவது
2613. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், (தம் புதல்வி) ஃபாத்திமா (ரலி) அவர்களின் வீட்டுக்கு (ஒருமுறை) வந்தார்கள். ஆனால், வீட்டுக்குள் செல்லவில்லை. (திரும்பிப் போய்விட்டார்கள்.) (இதற்கிடையில் அங்கே) அலீ (ரலி) அவர்கள் வந்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் விஷயத்தைச் சொன்னார்கள். அலீ (ரலி) அவர்கள் அதை நபி (ஸல்) அவர்களிடம் சொல்ல, ‘‘நான் ஃபாத்திமா வின் வீட்டு வாசலில் பல வண்ணக் கோடுகள் வரையப்பட்ட திரைச் சீலை ஒன்றைக் கண்டேன். எனக்கும் இந்த (ஆடம்பரமான) உலகத்திற்கும் என்ன தொடர்பு? (அதனால்தான் திரும்பி வந்துவிட்டேன்)” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அலீ (ரலி) அவர்கள் ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் சென்று, நபி (ஸல்) அவர்கள் கூறியதைச் சொன்னார்கள். அதற்கு ஃபாத்திமா (ரலி) அவர்கள், ‘‘அந்தத் திரைச் சீலையை என்ன செய்ய வேண்டும் என்று தாம் விரும்புவதை எனக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடட்டும். (அதன்படியே நான் நடந்துகொள்கிறேன்)” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘அதை இன்னாரின் வீட்டாரிடம் அனுப்பிவிடு. அவர்களுக்குத் தேவையுள்ளது” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 50