2554. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" كُلُّكُمْ رَاعٍ فَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، فَالأَمِيرُ الَّذِي عَلَى النَّاسِ رَاعٍ وَهْوَ مَسْئُولٌ عَنْهُمْ، وَالرَّجُلُ رَاعٍ عَلَى أَهْلِ بَيْتِهِ وَهْوَ مَسْئُولٌ عَنْهُمْ، وَالْمَرْأَةُ رَاعِيَةٌ عَلَى بَيْتِ بَعْلِهَا وَوَلَدِهِ وَهْىَ مَسْئُولَةٌ عَنْهُمْ، وَالْعَبْدُ رَاعٍ عَلَى مَالِ سَيِّدِهِ وَهْوَ مَسْئُولٌ عَنْهُ، أَلاَ فَكُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ "".
பாடம் : 17 அடிமையிடம் உயர்வு (தாழ்வு) காட்டுவதும் யிஎன் அடிமை' (அப்தீ), யிஎன் அடிமைப் பெண்' (அமத்தீ) என்று குறிப்பிடுவதும் விரும்பத் தக்கதல்ல. உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: உங்கள் ஆண், பெண் அடிமைகளில் நல்லவர்களுக்கும்... (24:32) பிறருக்கு உடைமையாக்கப்பட்ட ஓர் அடிமை... (16:75) அப்போது அவளுடைய தலைவனை (கணவனை)த் தலைவாயிலில் இருவரும் கண்டார்கள். (12:25) இறைநம்பிக்கை கொண்ட உங்கள் அடிமைப் பெண்களில்... (4:25) நபி (ஸல்) அவர்கள் ‘‘உங்கள் தலைவருக்காக எழுந்து நில்லுங்கள்” என்று கூறினார்கள். அல்லாஹ் கூறுகின்றான்: ‘‘என்னைப் பற்றி உம்முடைய எசமானி டம் சொல்வீராக!” என்று (யூசுஃப்) கூறினார். (12:42) நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்கள் தலைவர் யார்?” என்று கேட்டார்கள்.25
2554. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளி களே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். மக்கள்மீது ஆட்சி புரியும் தலைவர் மக்களுக்குப் பொறுப்பாளியாவார். அவர்களை (ஆட்சி புரிந்த விதம்) குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஆண், தன் வீட்டாருக்குப் பொறுப்பாளியாவான். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவன் விசாரிக்கப்படுவான்.

பெண், தன் கணவனின் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி யாவாள். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். அடிமை (அப்த்), தன் உரிமையாளரின் (சய்யித்) செல்வத்திற்குப் பொறுப் பாளியாவான். அவன் அதை (பாதுகாத்த விதம்) குறித்து விசாரிக்கப்படுவான். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 49
2555. حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ، سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، وَزَيْدَ بْنَ خَالِدٍ، رضى الله عنهما عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا زَنَتِ الأَمَةُ فَاجْلِدُوهَا، ثُمَّ إِذَا زَنَتْ فَاجْلِدُوهَا، ثُمَّ إِذَا زَنَتْ فَاجْلِدُوهَا، فِي الثَّالِثَةِ أَوِ الرَّابِعَةِ بِيعُوهَا وَلَوْ بِضَفِيرٍ "".
பாடம் : 17 அடிமையிடம் உயர்வு (தாழ்வு) காட்டுவதும் யிஎன் அடிமை' (அப்தீ), யிஎன் அடிமைப் பெண்' (அமத்தீ) என்று குறிப்பிடுவதும் விரும்பத் தக்கதல்ல. உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: உங்கள் ஆண், பெண் அடிமைகளில் நல்லவர்களுக்கும்... (24:32) பிறருக்கு உடைமையாக்கப்பட்ட ஓர் அடிமை... (16:75) அப்போது அவளுடைய தலைவனை (கணவனை)த் தலைவாயிலில் இருவரும் கண்டார்கள். (12:25) இறைநம்பிக்கை கொண்ட உங்கள் அடிமைப் பெண்களில்... (4:25) நபி (ஸல்) அவர்கள் ‘‘உங்கள் தலைவருக்காக எழுந்து நில்லுங்கள்” என்று கூறினார்கள். அல்லாஹ் கூறுகின்றான்: ‘‘என்னைப் பற்றி உம்முடைய எசமானி டம் சொல்வீராக!” என்று (யூசுஃப்) கூறினார். (12:42) நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்கள் தலைவர் யார்?” என்று கேட்டார்கள்.25
2555. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அடிமைப் பெண் விபசாரம் செய்தால் அவளுக்குச் சாட்டையடி கொடுங்கள். அதன் பிறகும் அவள் விபசாரம் செய்தால் (அப்போதும்) அவளுக்குச் சாட்டையடி(யே) கொடுங்கள். பிறகு மூன்றாவதாகவோ, நான்காவதாகவோ விபசாரம் செய்தால் அவளை ஒரு முடிக்கற்றைக்கேனும் விற்றுவிடுங்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்களும் ஸைத் பின் காலித் (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 49
2557. حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ زِيَادٍ، سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم "" إِذَا أَتَى أَحَدَكُمْ خَادِمُهُ بِطَعَامِهِ، فَإِنْ لَمْ يُجْلِسْهُ مَعَهُ، فَلْيُنَاوِلْهُ لُقْمَةً أَوْ لُقْمَتَيْنِ أَوْ أُكْلَةً أَوْ أُكْلَتَيْنِ، فَإِنَّهُ وَلِيَ عِلاَجَهُ "".
பாடம் : 18 உங்களில் ஒருவருடைய பணி யாள் அவருக்கு உணவு கொண்டு வந்தால்...
2557. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

உங்களில் ஒருவரிடம் அவருடைய பணியாள் அவரது உணவைக் கொண்டு வந்தால், அவர் அப்பணியாளைத் தம்முடன் (அமரச் செய்து உண்ணட்டும். அவ்வாறு) அமரச்செய்யவில்லையென் றாலும், அவருக்கு யிஒரு கவளம் அல்லது இரு கவளங்கள்’ அல்லது யிஒரு வாய் அல்லது இரு வாய்கள்’ (அந்த உணவி லிருந்து) கொடுக்கட்டும். ஏனெனில், அதைத் தயாரிக்கும் சுமையை அந்தப் பணியாள் ஏற்றுள்ளார்.

அத்தியாயம் : 49
2558. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" كُلُّكُمْ رَاعٍ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، فَالإِمَامُ رَاعٍ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالرَّجُلُ فِي أَهْلِهِ رَاعٍ وَهْوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالْمَرْأَةُ فِي بَيْتِ زَوْجِهَا رَاعِيَةٌ وَهْىَ مَسْئُولَةٌ عَنْ رَعِيَّتِهَا، وَالْخَادِمُ فِي مَالِ سَيِّدِهِ رَاعٍ وَهْوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ "". قَالَ فَسَمِعْتُ هَؤُلاَءِ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَأَحْسِبُ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" وَالرَّجُلُ فِي مَالِ أَبِيهِ رَاعٍ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، فَكُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ "".
பாடம் : 19 ‘‘அடிமை தன் உரிமையாளரின் செல்வத்திற்குப் பொறுப்பாளி யாவான்”. (இதில்) நபி (ஸல்) அவர்கள் செல் வத்தை உரிமையாளருடன் இணைத்துக் கூறியுள்ளார்கள்.
2558. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே; உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளியாவார். தம் பிரஜைகள் குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளியாவான். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளி யாவாள். அவளது பொறுப்புக்குட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள் (அடிமை) தன் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவை பற்றி விசாரிக்கப் படுவான்.

இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்த இப்னு உமர் (ரலி) அவர்கள், ‘‘நான் இவற்றையெல்லாம் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன். மேலும், நபி (ஸல்) அவர்கள், ‘‘மனிதன் (மகன்) தன் தந்தையின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவனது பொறுப்புக் குட்பட்டவை குறித்து அவன் விசாரிக்கப் படுவான். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்’ என்று சொன்ன தாகவும் எண்ணுகிறேன்” என்று கூறி னார்கள்.

அத்தியாயம் : 49
2559. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ حَدَّثَنِي مَالِكُ بْنُ أَنَسٍ، قَالَ وَأَخْبَرَنِي ابْنُ فُلاَنٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا قَاتَلَ أَحَدُكُمْ فَلْيَجْتَنِبِ الْوَجْهَ "".
பாடம் : 20 ஒருவர் (தம்) அடிமையை அடித் தால் முகத்தில் அடிப்பதைத் தவிர்த் துக்கொள்ளட்டும்!
2559. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் (யாரையேனும்) தாக்கினால், முகத்(தில் அடிப்ப)தைத் தவிர்க்கட்டும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 49
2560. وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ عُرْوَةُ قَالَتْ عَائِشَةُ ـ رضى الله عنها ـ إِنَّ بَرِيرَةَ دَخَلَتْ عَلَيْهَا تَسْتَعِينُهَا فِي كِتَابَتِهَا وَعَلَيْهَا خَمْسَةُ أَوَاقٍ، نُجِّمَتْ عَلَيْهَا فِي خَمْسِ سِنِينَ، فَقَالَتْ لَهَا عَائِشَةُ وَنَفِسَتْ فِيهَا أَرَأَيْتِ إِنْ عَدَدْتُ لَهُمْ عَدَّةً وَاحِدَةً، أَيَبِيعُكِ أَهْلُكِ، فَأُعْتِقَكِ، فَيَكُونَ وَلاَؤُكِ لِي فَذَهَبَتْ بَرِيرَةُ إِلَى أَهْلِهَا، فَعَرَضَتْ ذَلِكَ عَلَيْهِمْ فَقَالُوا لاَ إِلاَّ أَنْ يَكُونَ لَنَا الْوَلاَءُ. قَالَتْ عَائِشَةُ فَدَخَلْتُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرْتُ ذَلِكَ لَهُ. فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" اشْتَرِيهَا فَأَعْتِقِيهَا، فَإِنَّمَا الْوَلاَءُ لِمَنْ أَعْتَقَ "". ثُمَّ قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ "" مَا بَالُ رِجَالٍ يَشْتَرِطُونَ شُرُوطًا لَيْسَتْ فِي كِتَابِ اللَّهِ، مَنِ اشْتَرَطَ شَرْطًا لَيْسَ فِي كِتَابِ اللَّهِ فَهْوَ بَاطِلٌ، شَرْطُ اللَّهِ أَحَقُّ وَأَوْثَقُ "".
பாடம்: தம் அடிமை பற்றி அவதூறு கூறியவரின் பாவம்2 பாடம் : 1 விடுதலை ஆவணம் பெற்ற அடிமையும் அவன் ஒவ்வோர் ஆண்டும் செலுத்த வேண்டிய தொகையும் அல்லாஹ் கூறுகின்றான்: உங்கள் அடிமைகளில் விடுதலை ஆவணம் எழுதித்தரும்படி கோருகின்றவர் களிடம் நன்மை இருப்பதாக நீங்கள் அறிந்தால், அவர்களுக்கு விடுதலை ஆவணம் எழுதிக்கொடுங்கள். அல்லாஹ் உங்களுக்கு வழங்கியிருக்கும் செல்வத்தி லிருந்து அவர்களுக்கு வழங்குங்கள். (24:33) இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அதா பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்களிடம், ‘‘என் அடிமையிடம் பொருள் (பணம்) இருப்பதாக நான் அறிந் தால், அவனுக்கு விடுதலைப் பத்திரம் எழுதிக்கொடுப்பது என்மீது கடமையா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘நான் அதைக் கடமையாகவே கருதுகிறேன்” என்று பதிலளித்தார்கள். அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அதா பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்களிடம், ‘‘இதை எந்த நபித்தோழரிட மிருந்தாவது கேட்டுத்தான் அறிவிக்கிறீரா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘இல்லை” என்று பதிலளித்தார்கள். பிறகு மூசா பின் அனஸ் (ரஹ்) அவர்கள் தெரிவித்ததாவது: (அனஸ் (ரலி) அவர்களின் அடிமையாக இருந்த) சீரீன் (ரஹ்) அவர்கள் அனஸ் (ரலி) அவர்களிடம் விடுதலைப் பத்திரம் எழுதித்தரும்படி கேட்டார். அனஸ் அதிக செல்வமுடையவராக இருந்தும், விடுதலைப் பத்திரம் தர மறுத்துவிட்டார்கள். உடனே சீரின் (ரஹ்) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம் சென்று முறையிட் டார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், அனஸ் (ரலி) அவர்களிடம் ‘‘எழுதிக் கொடுங்கள்” என்று கூற, அப்போதும் அவர் மறுத்து விடவே உமர் (ரலி) அவர்கள் அனஸ் (ரலி) அவர்களைச் சாட்டையால் அடித்து மேற்கண்ட இறைவசனத்தை (24:33) ஓதிக்காட்டினார்கள். பிறகு அனஸ் (ரலி) அவர்கள், சீரீன் (ரஹ்) அவர்களுக்கு விடுதலைப் பத்திரம் எழுதிக்கொடுத் தார்கள்.
2560. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அடிமையாய் இருந்த) பரீரா (ரலி) அவர்கள் (தம் உரிமையாளர்களிடமிருந்து) எழுதி வாங்கிய விடுதலைப் பத்திரத்தின் தொகையைச் செலுத்துவதற்குத் தமக்கு உதவி செய்யும்படி கேட்டு என்னிடம் வந்தார். அவர் (தம் உரிமையாளர்களுக்கு விடுதலைத் தொகையாக) ஐந்து யிஊக்கி யாக்’களை3 ஐந்து ஆண்டுகளில், (ஆண் டுக்கு ஒரு ஊக்கியா வீதம்) தவணை முறையில் செலுத்த வேண்டியிருந்தது.

ஆகவே, நான் லிஅவரை விடுதலை செய்ய ஆசைப்பட்டுலி ‘‘உன் உரிமையாளர் களுக்கு ஒரே தடவையில் முழுத் தொகையையும் நான் செலுத்திவிடுகிறேன்; அவர்கள் உன்னை விற்(பதற்கு சம்மதிப்)பார்களா? பின்னர் உன்னை நான் விடுதலையும் செய்துவிடுகிறேன். ஆனால், (உனது வாரிசுரிமை எனக்கே இருக்க வேண்டும்! என்ன சொல்கிறாய்?” என்று கேட்டேன்.

உடனே பரீரா (ரலி), தன் உரிமையாளர்களிடம் சென்று, எனது நிபந்தனையை அவர்கள்முன் வைத்தார். அதற்கு அவர்கள், ‘‘இதை நாங்கள் ஒப்புக்கொள்ள முடியாது. (உனது) வாரிசுரிமை (உன்னை விற்ற பின்பும்) எங்களுக்கே இருக்க வேண்டும்” என்று கூறிவிட்டனர். (இதை அறிந்த) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று விஷயத்தைக் கூறினேன். அவர்கள் என்னிடம், ‘‘(அவரை) விலைக்கு வாங்கி விடுதலை செய்துவிடு. ஏனெனில், விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை உரியதாகும்” என்று கூறினார்கள்.

பிறகு எழுந்து நின்று, ‘‘சில மனிதர் களுக்கு என்ன நேர்ந்தது? இறைச் சட்டத் தில் இல்லாத நிபந்தனைகளையெல்லாம் விதிக்கிறார்களே! ஒருவர் இறைச் சட்டத் தில் இல்லாத நிபந்தனைகளை விதித்தால் அது செல்லாது. அல்லாஹ்வின் நிபந் தனையே (ஏற்று) பின்பற்றத் தக்கதும் உறுதி மிக்கதும் ஆகும்” என்று கூறி னார்கள்.

அத்தியாயம் : 49
2561. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَخْبَرَتْهُ أَنَّ بَرِيرَةَ جَاءَتْ تَسْتَعِينُهَا فِي كِتَابَتِهَا، وَلَمْ تَكُنْ قَضَتْ مِنْ كِتَابَتِهَا شَيْئًا، قَالَتْ لَهَا عَائِشَةُ ارْجِعِي إِلَى أَهْلِكِ، فَإِنْ أَحَبُّوا أَنْ أَقْضِيَ عَنْكِ كِتَابَتَكِ، وَيَكُونَ وَلاَؤُكِ لِي فَعَلْتُ. فَذَكَرَتْ ذَلِكَ بَرِيرَةُ لأَهْلِهَا فَأَبَوْا وَقَالُوا إِنْ شَاءَتْ أَنْ تَحْتَسِبَ عَلَيْكِ فَلْتَفْعَلْ، وَيَكُونَ وَلاَؤُكِ لَنَا، فَذَكَرَتْ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" ابْتَاعِي فَأَعْتِقِي، فَإِنَّمَا الْوَلاَءُ لِمَنْ أَعْتَقَ "". قَالَ ثُمَّ قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ "" مَا بَالُ أُنَاسٍ يَشْتَرِطُونَ شُرُوطًا لَيْسَتْ فِي كِتَابِ اللَّهِ مَنِ اشْتَرَطَ شَرْطًا لَيْسَ فِي كِتَابِ اللَّهِ فَلَيْسَ لَهُ، وَإِنْ شَرَطَ مِائَةَ مَرَّةٍ، شَرْطُ اللَّهِ أَحَقُّ وَأَوْثَقُ "".
பாடம் : 2 விடுதலை ஆவணம் பெற்ற அடிமைக்கு விதிக்கப்படும் செல்லத் தக்க நிபந்தனைகளும் இறைச் சட்டத்தில் இல்லாத நிபந்தனையை விதிப்பவரும்... இது தொடர்பாக நபி (ஸல்) அவர்களிட மிருந்து இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.4
2561. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அடிமையாய் இருந்த) பரீரா (ரலி), தாம் (தம் உரிமையாளர்களிடம்) எழுதி வாங்கிய விடுதலை ஆவணத்திற்கான தொகையைச் செலுத்துவதற்கு உதவி கோரி என்னிடம் வந்தார். (அப்போது) அவர் தமது விடுதலைத் தொகையில் சிறிதளவும் செலுத்தியிருக்கவில்லை. நான் அவரிடம், ‘‘நீ உன் உரிமையாளர்களிடம் திரும்பிச் சென்று, (அவர்களின் சம்மதத்தைக் கேள்.) நான் உன் சார்பாக உன் விடுதலைப் பத்திரத்தின் தொகையைச் செலுத்தி விடுகிறேன். ஆனால், உன் வாரிசுரிமை எனக்குத்தான் இருக்க வேண்டும். இதை அவர்கள் விரும்பினால், அவ்வாறு நான் செய்கிறேன்” என்று கூறினேன்.

அவ்வாறே, பரீரா (ரலி) தன் உரிமை யாளர்களிடம் கேட்க, அவர்கள் மறுத்து, ‘‘உன்(னை வாங்கி விடுதலை செய்வதன்) மூலம் அவர் (ஆயிஷா (ரலி) அவர்கள்) இறைவனிடம் நன்மையைப் பெற விரும்பு வாராயின் அவ்வாறே செய்யட்டும். ஆனால், உனது வாரிசுரிமை எங்களுக்கே உரியதாக இருக்கும்” என்று கூறிவிட்டார் கள். இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நீ அவரை வாங்கி விடுதலை செய்துவிடு, ஏனெனில், விடுதலை செய்பவருக்கே வாரிசுரிமை உரியதாகும்” என்று கூறி னார்கள்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து, ‘‘மக்களில் சிலருக்கு என்னவாயிற்று? இறைச் சட்டத்தில் இல்லாத நிபந்தனைகளை விதிக்கின்றார் களே! இறைச் சட்டத்தில் இல்லாத ஒரு நிபந்தனையை ஒருவர் விதித்தால், அது செல்லாது; அவர் நூறுமுறை நிபந்தனை விதித்தாலும் சரியே! அல்லாஹ்வின் நிபந்தனையே (ஏற்று) பின்பற்றத் தக்கதும் உறுதி வாய்ந்ததும் ஆகும்” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 49
2562. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ أَرَادَتْ عَائِشَةُ أُمُّ الْمُؤْمِنِينَ أَنْ تَشْتَرِيَ جَارِيَةً لِتُعْتِقَهَا، فَقَالَ أَهْلُهَا عَلَى أَنَّ وَلاَءَهَا لَنَا. قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لاَ يَمْنَعُكِ ذَلِكِ، فَإِنَّمَا الْوَلاَءُ لِمَنْ أَعْتَقَ "".
பாடம் : 2 விடுதலை ஆவணம் பெற்ற அடிமைக்கு விதிக்கப்படும் செல்லத் தக்க நிபந்தனைகளும் இறைச் சட்டத்தில் இல்லாத நிபந்தனையை விதிப்பவரும்... இது தொடர்பாக நபி (ஸல்) அவர்களிட மிருந்து இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.4
2562. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், விடுதலை செய்வதற்காக ஓர் அடிமைப் பெண்ணை விலைக்கு வாங்க விரும்பினார்கள். அப்போது அப்பெண்ணின் உரிமையாளர்கள், ‘அவரது வாரிசுரிமை எங்களுக்கே உரியது’ என்னும் நிபந்தனையின் பேரில்தான் நாங்கள் அவரை விற்போம் என்று கூறினார்கள்.

(இதை அறிந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அவர்களுடைய இந்த நிபந்தனை உனக்குத் தடை ஆகாது. ஏனெனில், விடுதலை செய்தவருக்கே (விடுதலை செய்யப்பட்ட அடிமையின்) வாரிசுரிமை உரியதாகும்” என்று கூறி னார்கள்.

அத்தியாயம் : 49
2563. حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ جَاءَتْ بَرِيرَةُ فَقَالَتْ إِنِّي كَاتَبْتُ أَهْلِي عَلَى تِسْعِ أَوَاقٍ، فِي كُلِّ عَامٍ وَقِيَّةٌ، فَأَعِينِينِي. فَقَالَتْ عَائِشَةُ إِنْ أَحَبَّ أَهْلُكِ أَنْ أَعُدَّهَا لَهُمْ عَدَّةً وَاحِدَةً، وَأُعْتِقَكِ فَعَلْتُ، وَيَكُونَ وَلاَؤُكِ لِي. فَذَهَبَتْ إِلَى أَهْلِهَا، فَأَبَوْا ذَلِكَ عَلَيْهَا، فَقَالَتْ إِنِّي قَدْ عَرَضْتُ ذَلِكَ عَلَيْهِمْ، فَأَبَوْا إِلاَّ أَنْ يَكُونَ الْوَلاَءُ لَهُمْ. فَسَمِعَ بِذَلِكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَسَأَلَنِي فَأَخْبَرْتُهُ، فَقَالَ "" خُذِيهَا، فَأَعْتِقِيهَا، وَاشْتَرِطِي لَهُمُ الْوَلاَءَ، فَإِنَّمَا الْوَلاَءُ لِمَنْ أَعْتَقَ "". قَالَتْ عَائِشَةُ فَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي النَّاسِ، فَحَمِدَ اللَّهَ، وَأَثْنَى عَلَيْهِ، ثُمَّ قَالَ "" أَمَّا بَعْدُ، فَمَا بَالُ رِجَالٍ مِنْكُمْ يَشْتَرِطُونَ شُرُوطًا لَيْسَتْ فِي كِتَابِ اللَّهِ فَأَيُّمَا شَرْطٍ لَيْسَ فِي كِتَابِ اللَّهِ فَهْوَ بَاطِلٌ، وَإِنْ كَانَ مِائَةَ شَرْطٍ، فَقَضَاءُ اللَّهِ أَحَقُّ، وَشَرْطُ اللَّهِ أَوْثَقُ، مَا بَالُ رِجَالٍ مِنْكُمْ يَقُولُ أَحَدُهُمْ أَعْتِقْ يَا فُلاَنُ وَلِيَ الْوَلاَءُ إِنَّمَا الْوَلاَءُ لِمَنْ أَعْتَقَ "".
பாடம் : 3 விடுதலை ஆவணம் பெற்ற அடிமை உதவி கோருவதும் மக்களிடம் (அதற்காக) இரத்தலும்
2563. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

பரீரா (ரலி) அவர்கள் (என்னிடம்) வந்து, ‘‘நான் என் உரிமையாளர்களிடம் (விடுதலைத் தொகையாக) ஒவ்வோர் ஆண்டும் ஓர் யிஊக்கியா’ வீதம் ஒன்பது யிஊக்கியா’க்களைச் செலுத்திவிட வேண்டும் எனும் நிபந்தனையின் பேரில் விடுதலைப் பத்திரம் எழுதி வாங்கியுள்ளேன்; ஆகவே, நீங்கள் எனக்கு உதவுங்கள்” என்று கேட்டார்.5

நான், ‘‘உன் உரிமையாளர்களுக்கு அந்த யிஊக்கியாக்’களை ஒரே தடவையில் கொடுத்து உன்னை விடுதலை செய்துவிடுவதை அவர்கள் விரும்பினால் அவ்வாறே செய்கிறேன். ஆனால், உன் வாரிசுரிமை எனக்குத்தான் இருக்க வேண்டும்” என்று கூறினேன்.

எனவே, பரீரா (ரலி) தன் உரிமையாளர்களிடம் சென்றார். (அவர்களிடம் நான் சொன்னதைக் கூற) அவர்கள் அவரிடம் அதற்கு மறுப்புத் தெரிவித்துவிட்டார்கள். பிறகு பரீரா (என்னிடம் வந்து), ‘‘அவர்களிடம் உங்கள் விருப்பத்தை முன்வைத் தேன். ‘(என்) வாரிசுரிமை தங்களுக்குக் கிடைத்தால் தவிர அதற்கு ஒப்புக் கொள்ள முடியாது’ என்று அவர்கள் மறுத்துவிட்டனர்” என்று கூறினார்.

இதைச் செவியுற்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அது பற்றி) என்னைக் கேட்க, நான் அவர்களுக்கு விவரத்தைச் சொன்னேன். பரீராவை வாங்கி விடுதலை செய்துவிடு. அவருடைய வாரிசுரிமை அவர்களுக்கே உரியது என்று நிபந்தனை விதித்துவிடு (பின்னர் பார்த்துக்கொள்வோம்.) ஏனெனில், சட்டப்படி விடுதலை செய்ப வருக்கே வாரிசுரிமை உரியதாகும்” என்று கூறினார்கள்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று, அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்தார்கள். பிறகு கூறினார்கள்: இறைவாழ்த்துக்குப்பின்! உங்களில் சில மனிதர்களுக்கு என்ன நேர்ந்தது? இறைச் சட்டத்தில் இல்லாத நிபந்தனைகளை விதிக்கின்றார்களே! இறைச் சட்டத்தில் இல்லாத எந்த ஒரு நிபந்தனையும் செல்லாது; நூறு முறை நிபந்தனை விதித்தாலும் சரியே! அல்லாஹ்வின் தீர்ப்பே (ஏற்று) பின்பற்றத் தக்கதாகும். அல்லாஹ்வின் நிபந்தனையே உறுதி வாய்ந்ததாகும்.

உங்களில் சில மனிதர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்களில் ஒருவர் ‘‘இன்னாரே! (என் அடிமையை விலைக்கு வாங்கி) விடுதலை செய்துவிடு. ஆனால், வாரிசுரிமை எனக்கே உரியது” என்று கூறுகிறாரே! (உண்மையில்) விடுதலை செய்பவருக்கே வாரிசுரிமை உரியதாகும்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 49
2564. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ بَرِيرَةَ، جَاءَتْ تَسْتَعِينُ عَائِشَةَ أُمَّ الْمُؤْمِنِينَ ـ رضى الله عنها ـ فَقَالَتْ لَهَا إِنْ أَحَبَّ أَهْلُكِ أَنْ أَصُبَّ لَهُمْ ثَمَنَكِ صَبَّةً وَاحِدَةً فَأُعْتِقَكِ فَعَلْتُ. فَذَكَرَتْ بَرِيرَةُ ذَلِكَ لأَهْلِهَا، فَقَالُوا لاَ. إِلاَّ أَنْ يَكُونَ وَلاَؤُكِ لَنَا. قَالَ مَالِكٌ قَالَ يَحْيَى فَزَعَمَتْ عَمْرَةُ أَنَّ عَائِشَةَ ذَكَرَتْ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ "" اشْتَرِيهَا وَأَعْتِقِيهَا، فَإِنَّمَا الْوَلاَءُ لِمَنْ أَعْتَقَ "".
பாடம் : 4 விடுதலை ஆவணம் பெற்ற அடிமையை, அவன் இசைந்தால் விற்பது6 ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘விடுதலை ஆவணம் பெற்ற அடிமை தனது விலை முழுவதையும் செலுத்தாமல் இன்னும் பாக்கி வைத்திருக்கும்வரை அடிமையாகவே இருப்பான்” என்று கூறினார்கள். ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள், ‘‘அவன் ஒரேயொரு யிதிர்ஹம்’ பாக்கி வைத்திருந்தாலும்கூட அடிமையே ஆவான்” என்று கூறினார்கள். ‘‘அவன் சிறிது தொகை பாக்கி வைத்திருக்கும்வரை லிஅவன் வாழ்ந்தாலும் சரி, இறந்தாலும் சரி, அவன் குற்றம் புரிந்தாலும் சரிலி அடிமையே” என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
2564. அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

பரீரா (ரலி) அவர்கள், இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் (தமது விடுதலைப் பத்திரத் தொகையைச் செலுத்தும் விஷயத்தில்) உதவி கேட்டு வந்தார். அவரிடம் ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘நான் உன் உரிமையாளர்களுக்கு உன் விலையை ஒரே தடவையில் கொடுத்துவிடுகிறேன். பிறகு உன்னை விடுதலை செய்துவிடுகிறேன். இதை அவர்கள் விரும்பினால் அவ்வாறே செய்(யத் தயாராக இருக்)கி றேன்” என்று கூறினார்கள்.

(அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களின் இந்த விருப்பத்தை பரீரா (ரலி) தம் உரிமையாளர்களிடம் தெரிவித்தார். அதற்கு அவர்கள், ‘‘(உனது) வாரிசுரிமை எங்களுக்கே உரியதாக இருந்தால் தவிர, நாங்கள் இதற்குச் சம்மதிக்கமாட்டோம்” என்று கூறிவிட்டனர். ஆயிஷா (ரலி) அவர்கள் இந்தச் செய்தியை அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அதற்கு அவர்கள், ‘‘நீ அவரை விலைக்கு வாங்கி விடுதலை செய்துவிடு. ஏனெனில், விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை உரியதாகும்” என்று கூறி னார்கள்.

அத்தியாயம் : 49

2565. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ أَيْمَنَ، قَالَ حَدَّثَنِي أَبِي أَيْمَنُ، قَالَ دَخَلْتُ عَلَى عَائِشَةَ ـ رضى الله عنها ـ فَقُلْتُ كُنْتُ غُلاَمًا لِعُتْبَةَ بْنِ أَبِي لَهَبٍ، وَمَاتَ وَوَرِثَنِي بَنُوهُ، وَإِنَّهُمْ بَاعُونِي مِنَ ابْنِ أَبِي عَمْرٍو، فَأَعْتَقَنِي ابْنُ أَبِي عَمْرٍو، وَاشْتَرَطَ بَنُو عُتْبَةَ الْوَلاَءَ. فَقَالَتْ دَخَلَتْ بَرِيرَةُ وَهْىَ مُكَاتَبَةٌ فَقَالَتِ اشْتَرِينِي وَأَعْتِقِينِي. قَالَتْ نَعَمْ. قَالَتْ لاَ يَبِيعُونِي حَتَّى يَشْتَرِطُوا وَلاَئِي. فَقَالَتْ لاَ حَاجَةَ لِي بِذَلِكَ. فَسَمِعَ بِذَلِكَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَوْ بَلَغَهُ، فَذَكَرَ لِعَائِشَةَ، فَذَكَرَتْ عَائِشَةُ مَا قَالَتْ لَهَا، فَقَالَ "" اشْتَرِيهَا وَأَعْتِقِيهَا، وَدَعِيهِمْ يَشْتَرِطُونَ مَا شَاءُوا "". فَاشْتَرَتْهَا عَائِشَةُ فَأَعْتَقَتْهَا وَاشْتَرَطَ أَهْلُهَا الْوَلاَءَ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" الْوَلاَءُ لِمَنْ أَعْتَقَ، وَإِنِ اشْتَرَطُوا مِائَةَ شَرْطٍ "".
பாடம்: 5 விடுதலை ஆவணம் பெற்ற அடிமை, ‘‘என்னை விலைக்கு வாங்கி விடுதலை செய்வீராக!” என்று (ஒருவரிடம்) சொல்ல, அவரும் அதற்காக விலைக்கு வாங்கினால்...
2565. அய்மன் பின் உம்மி அய்மன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, ‘‘நான் உத்பா பின் அபீலஹபுக்கு அடிமையாக இருந்தேன். அவர் இறந்துவிட்டார். பிறகு அவருடைய மக்கள் எனக்கு உரிமையாளர்கள் ஆனார்கள். அவர்கள் என்னை அபூஅம்ருடைய மகனுக்கு விற்றார்கள். ஆனால், உத்பாவின் மக்கள், எனது வாரிசுரிமை தமக்கே கிடைக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்கள்” என்று கூறினேன்.

அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: விடுதலைப் பத்திரம் எழுதிக் கொடுக்கப்பட்ட பரீரா என்னிடம் வந்திருந்தார். ‘‘என்னை விலைக்கு வாங்கி விடுதலை செய்துவிடுங்கள்” என்று கேட்டுக்கொண்டார். நான், ‘‘சரி” என்று சொன்னேன். அதற்கு அவர், ‘‘என் உரிமையாளர்கள் தங்களுக்கே (எனது) வாரிசுரிமை வேண்டும் என்று நிபந்தனை விதிக்காமல் என்னை விற்கமாட்டார்கள்” என்று கூறினார்.

அதற்கு நான், ‘‘அப்படியென்றால் எனக்கு அது தேவையற்றது” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் இதைச் செவியுற்றார்கள்; அல்லது இந்தச் செய்தி அவர்களுக்கு எட்டியது. உடனே, நபி (ஸல்) அவர்கள் என்னிடம் இது பற்றிக் கேட்க, நான் பரீரா என்னிடம் கூறியதைச் சொன்னேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அவரை விலைக்கு வாங்கி விடுதலை செய்துவிடு. அவருடைய உரிமையாளர்கள் தாங்கள் விரும்பியவற்றையெல்லாம் நிபந்தனையிட்டுக்கொள்ளட்டும் (அது செல்லப் போவதில்லை)” என்று கூறினார்கள். ஆகவே, நான் பரீராவை விலைக்கு வாங்கி விடுதலை செய்துவிட்டேன்.

(அப்போதும்) அவருடைய உரிமையாளர்கள் (அவரது) வாரிசுரிமை தங்களுக்கே உரியது என்று நிபந்தனை விதித்தார்கள். (இதை அறிந்த) நபி (ஸல்) அவர்கள், ‘‘விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை உரியதாகும்; அவர்கள் (அடிமையின் உரிமையாளர்கள்) நூறு முறை நிபந்தனை விதித்தாலும் சரியே” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 50
2566. حَدَّثَنَا عَاصِمُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الْمَقْبُرِيِّ، {عَنْ أَبِيهِ،} عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" يَا نِسَاءَ الْمُسْلِمَاتِ لاَ تَحْقِرَنَّ جَارَةٌ لِجَارَتِهَا، وَلَوْ فِرْسِنَ شَاةٍ "".
பாடம் : 1
2566. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

முஸ்லிம் பெண்களே! ஓர் அண்டை வீட்டுக்காரி, மற்றோர் அண்டை வீட்டுக் காரிக்கு ஓர் ஆட்டின் கால் குளம்பை (அன்பளிப்பாக) அளித்தாலும் அதை அவள் அற்பமாகக் கருத வேண்டாம்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 50
2567. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ الأُوَيْسِيُّ، حَدَّثَنَا ابْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ يَزِيدَ بْنِ رُومَانَ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّهَا قَالَتْ لِعُرْوَةَ ابْنَ أُخْتِي، إِنْ كُنَّا لَنَنْظُرُ إِلَى الْهِلاَلِ ثُمَّ الْهِلاَلِ، ثَلاَثَةَ أَهِلَّةٍ فِي شَهْرَيْنِ، وَمَا أُوقِدَتْ فِي أَبْيَاتِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم نَارٌ. فَقُلْتُ يَا خَالَةُ مَا كَانَ يُعِيشُكُمْ قَالَتِ الأَسْوَدَانِ التَّمْرُ وَالْمَاءُ، إِلاَّ أَنَّهُ قَدْ كَانَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم جِيرَانٌ مِنَ الأَنْصَارِ كَانَتْ لَهُمْ مَنَائِحُ، وَكَانُوا يَمْنَحُونَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ أَلْبَانِهِمْ، فَيَسْقِينَا.
பாடம் : 1
2567. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘என் சகோதரி (அஸ்மாவின்) மகனே! நாங்கள் உறுதியாகப் பிறை பார்ப்போம்; மீண்டும் (அடுத்த) பிறை பார்ப்போம்; பிறகும் (அடுத்த) பிறை பார்ப்போம். இப்படி இரண்டு மாதங்களில் மூன்று பிறைகளைப் பார்த்திருப்போம்.2 அப்படி யிருந்தும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (துணைவியர்) இல்லங்களில் (அடுப்பில்) நெருப்பு பற்றவைக்கப் பட்டிராது” என்று கூறினார்கள்.

நான், ‘‘என் சிற்றன்னையே! நீங்கள் எப்படி வாழ்க்கை நடத்தினீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘இரு கறுப்புப் பொருட்களான பேரீச்சம் பழமும் தண்ணீரும்தான் (எங்கள் உணவு). தவிரவும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அன்சாரிகளான சில அண்டை வீட்டார் இருந்தார்கள். அவர்களிடம் அன்பளிப்பு ஒட்டகங்கள் (மனீஹா) இருந்தன. அவர்கள் (அவற்றி லிருந்து கிடைக்கின்ற) தமக்குரிய பாலை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வழங்குவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை எங்களுக்கு அருந்தக் கொடுப்பார்கள்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 50
2568. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لَوْ دُعِيتُ إِلَى ذِرَاعٍ أَوْ كُرَاعٍ لأَجَبْتُ، وَلَوْ أُهْدِيَ إِلَىَّ ذِرَاعٌ أَوْ كُرَاعٌ لَقَبِلْتُ "".
பாடம் : 2 சிறிய அன்பளிப்பு
2568. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓர் ஆட்டில் (எனக்குப் பிடித்த) கணைக்கால் பகுதி, அல்லது (விலையற்ற) கணுக்காலுக்குக் கீழுள்ள பகுதி(யைச் சமைத்து விருந்து)க்கு நான் அழைக்கப் பட்டாலும் நிச்சயம் (அதை) நான் ஏற்றுக் கொள்வேன்; ஆட்டின் கணைக்கால் பகுதி, அல்லது கணுக்காலுக்குக் கீழே உள்ள பகுதி எனக்கு அன்பளிப்பாகத் தரப்பட்டாலும் நிச்சயம் நான் பெற்றுக் கொள்வேன்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 50
2569. حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا أَبُو غَسَّانَ، قَالَ حَدَّثَنِي أَبُو حَازِمٍ، عَنْ سَهْلٍ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَرْسَلَ إِلَى امْرَأَةٍ مِنَ الْمُهَاجِرِينَ، وَكَانَ لَهَا غُلاَمٌ نَجَّارٌ قَالَ لَهَا "" مُرِي عَبْدَكِ فَلْيَعْمَلْ لَنَا أَعْوَادَ الْمِنْبَرِ "". فَأَمَرَتْ عَبْدَهَا، فَذَهَبَ فَقَطَعَ مِنَ الطَّرْفَاءِ، فَصَنَعَ لَهُ مِنْبَرًا، فَلَمَّا قَضَاهُ أَرْسَلَتْ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَدْ قَضَاهُ، قَالَ صلى الله عليه وسلم "" أَرْسِلِي بِهِ إِلَىَّ "". فَجَاءُوا بِهِ فَاحْتَمَلَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَوَضَعَهُ حَيْثُ تَرَوْنَ.
பாடம் : 3 நண்பர்களிடம் ஒன்றை அன்பளிப்பு கேட்பது அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘உங்களுடன் எனக்கும் ஒரு பங்கை ஒதுக்குங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.3
2569. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஹாஜிர் (மக்கா) பெண்மணி ஒருவரி டம் தச்சு வேலை தெரிந்த அடிமை ஒருவர் இருந்தார். அப்பெண்மணியிடம் நபி (ஸல்) அவர்கள் ஆள் அனுப்பி, ‘‘சொற்பொழிவு மேடைக்கு வேண்டிய மரச் சட்டங்களைச் செய்து தரும்படி உன் அடிமைக்குக் கட்டளையிடு” என்று கேட்டுக்கொண்டார்கள். அவ்வாறே, அப் பெண்மணி தன் அடிமைக்குக் கட்டளையிட, அவ்வடிமை (காட்டிற்குச்) சென்று, சவுக்கு மரத்தை வெட்டியெடுத்து வந்து நபி (ஸல்) அவர்களுக்கு சொற்பொழிவு மேடை ஒன்றைச் செய்தார்.

அதைச் செய்து முடித்தபின் அப்பெண்மணி நபி (ஸல்) அவர்களுக்கு, அவர் அதைச் செய்து முடித்துவிட்டதாகத் தகவல் சொல்லி அனுப்பினார். நபி (ஸல்) அவர்கள் அதைத் தமக்குக் கொடுத்தனுப்புமாறு சொன்னார்கள். பின்னர் அதைக் கொண்டுவந்தனர். நபி (ஸல்) அவர்கள் அதைச் சுமந்து சென்று இப்போது நீங்கள் பார்க்கும் இடத்தில் வைத்தார்கள்.


அத்தியாயம் : 50
2570. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ السَّلَمِيِّ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ قَالَ كُنْتُ يَوْمًا جَالِسًا مَعَ رِجَالٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي مَنْزِلٍ فِي طَرِيقِ مَكَّةَ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم نَازِلٌ أَمَامَنَا وَالْقَوْمُ مُحْرِمُونَ، وَأَنَا غَيْرُ مُحْرِمٍ، فَأَبْصَرُوا حِمَارًا وَحْشِيًّا، وَأَنَا مَشْغُولٌ أَخْصِفُ نَعْلِي، فَلَمْ يُؤْذِنُونِي بِهِ، وَأَحَبُّوا لَوْ أَنِّي أَبْصَرْتُهُ، وَالْتَفَتُّ فَأَبْصَرْتُهُ، فَقُمْتُ إِلَى الْفَرَسِ فَأَسْرَجْتُهُ ثُمَّ رَكِبْتُ وَنَسِيتُ السَّوْطَ وَالرُّمْحَ فَقُلْتُ لَهُمْ نَاوِلُونِي السَّوْطَ وَالرُّمْحَ. فَقَالُوا لاَ وَاللَّهِ، لاَ نُعِينُكَ عَلَيْهِ بِشَىْءٍ. فَغَضِبْتُ فَنَزَلْتُ فَأَخَذْتُهُمَا، ثُمَّ رَكِبْتُ، فَشَدَدْتُ عَلَى الْحِمَارِ فَعَقَرْتُهُ، ثُمَّ جِئْتُ بِهِ وَقَدْ مَاتَ، فَوَقَعُوا فِيهِ يَأْكُلُونَهُ، ثُمَّ إِنَّهُمْ شَكُّوا فِي أَكْلِهِمْ إِيَّاهُ، وَهُمْ حُرُمٌ، فَرُحْنَا وَخَبَأْتُ الْعَضُدَ مَعِي، فَأَدْرَكْنَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَسَأَلْنَاهُ عَنْ ذَلِكَ فَقَالَ "" مَعَكُمْ مِنْهُ شَىْءٌ "". فَقُلْتُ نَعَمْ. فَنَاوَلْتُهُ الْعَضُدَ فَأَكَلَهَا، حَتَّى نَفَّدَهَا وَهْوَ مُحْرِمٌ. فَحَدَّثَنِي بِهِ زَيْدُ بْنُ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ أَبِي قَتَادَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.
பாடம் : 3 நண்பர்களிடம் ஒன்றை அன்பளிப்பு கேட்பது அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘உங்களுடன் எனக்கும் ஒரு பங்கை ஒதுக்குங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.3
2570. அபூகத்தாதா அஸ்ஸலமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (ஹுதைபியா ஆண்டில்) ஒரு நாள் மக்கா (செல்லும்) சாலையில் இருந்த ஒரு வீட்டில் நபித்தோழர்கள் சிலருடன் அமர்ந்திருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு முன்னால் தங்கியிருந்தார்கள். மக்கள் அனைவரும் (உம்ராவுக்காக) யிஇஹ்ராம்’ கட்டியிருந்தார் கள். நான் (மட்டும்) யிஇஹ்ராம்’ கட்டாமலி ருந்தேன். அப்போது அவர்கள் ஒரு காட்டுக் கழுதையைப் பார்த்தார்கள். நானோ, என் காலணியைத் தைப்பதில் ஈடுபட்டிருந்தேன். ஆகவே, அ(வர்கள் பார்த்த)தை எனக்கு அறிவிக்கவில்லை.

எனினும், நான் அதைப் பார்த்தால் நன்றாயிருக்கும் என்று அவர்கள் விரும்பினார்கள். (தற்செயலாக) நான் அதைத் திரும்பிப் பார்த்தேன். உடனே நான் எழுந்து குதிரையின் பக்கம் சென்று, அதற்குச் சேணம் பூட்டி, பிறகு அதில் ஏறினேன். சாட்டையையும் ஈட்டியையும் (எடுத்துக்கொள்ள) நான் மறந்துவிட்டேன். ஆகவே, அவர்களிடம், ‘‘எனக்குச் சாட்டை யையும் ஈட்டியையும் எடுத்துக் கொடுங் கள்” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் (இஹ்ராம் கட்டியிருந்ததால்), ‘‘இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் உமக்கு இந்த விஷயத்தில் சிறிதும் உதவமாட்டோம்” என்று கூறிவிட்டனர்.

எனக்குக் கோபம் வந்தது. உடனே (குதிரையிலிருந்து) இறங்கி அவ்விரண்டையும் எடுத்துக்கொண்டேன். (குதிரையில்) மீண்டும் ஏறி கழுதையைத் தாக்கி காயப்படுத்தி னேன். பிறகு, அது இறந்துவிட்ட நிலையில் அதைக் கொண்டு வந்தேன். அவர்கள் (என் தோழர்கள்) அதன்மீது பாய்ந்து உண்ணலானார்கள்.

பிறகு தாங்கள் இஹ்ராம் கட்டியுள்ள நிலையில் அதை உண்டது தொடர்பாகச் சந்தேகம் கொண்டார்கள். ஆகவே, நாங்கள் (நபி (ஸல்) அவர்களிடம்) சென்றோம். நான் (கழுதையின்) ஒரு புஜத்தை என்னுடன் மறைத்து(எடுத்து)க் கொண்டேன். நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அடைந்ததும், அவர்களிடம் அது பற்றிக் கேட்டோம்.

அவர்கள், ‘‘அதிலிருந்து (இறைச்சி) ஏதும் உங்களுடன் இருக்கின்றதா?” என்று கேட்டார்கள். நான், ‘‘ஆம்” என்று சொல்லி, அவர்களுக்கு (அதன்) புஜத்தை (முன்னங்காலை)க் கொடுத்தேன். நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டியிருந்த நிலையில் அதை உண்டு முடித்தார்கள்.4

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 50
2571. حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، قَالَ حَدَّثَنِي أَبُو طَوَالَةَ ـ اسْمُهُ عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ـ قَالَ سَمِعْتُ أَنَسًا ـ رضى الله عنه ـ يَقُولُ أَتَانَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي دَارِنَا هَذِهِ، فَاسْتَسْقَى، فَحَلَبْنَا لَهُ شَاةً لَنَا، ثُمَّ شُبْتُهُ مِنْ مَاءِ بِئْرِنَا هَذِهِ، فَأَعْطَيْتُهُ وَأَبُو بَكْرٍ عَنْ يَسَارِهِ، وَعُمَرُ تُجَاهَهُ وَأَعْرَابِيٌّ عَنْ يَمِينِهِ فَلَمَّا فَرَغَ قَالَ عُمَرُ هَذَا أَبُو بَكْرٍ. فَأَعْطَى الأَعْرَابِيَّ، ثُمَّ قَالَ "" الأَيْمَنُونَ، الأَيْمَنُونَ، أَلاَ فَيَمِّنُوا "". قَالَ أَنَسٌ فَهْىَ سُنَّةٌ فَهْىَ سُنَّةٌ. ثَلاَثَ مَرَّاتٍ.
பாடம் : 4 நீர் (அல்லது பால்) வழங்கும்படி கோருவது சஹ்ல் (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னிடம் நபி (ஸல்) அவர்கள், ‘‘எனக்குத் தண்ணீர் தாருங்கள்” என்று கேட்டார்கள்.
2571. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களின் இந்த வீட்டிற்கு வந்தார்கள். (எங்களிடம்) அருந்துவதற்கு ஏதேனும் கேட்டார்கள். ஆகவே, நாங்கள் எங்களின் ஓர் ஆட்டிலிருந்து அவர்களுக்காகப் பால் கறந்தோம். பிறகு, நான் எங்களுடைய இந்தக் கிணற்றின் தண்ணீரை அதில் கலந்து அதை அவர்களுக்குக் கொடுத்தேன். அப்போது நபி (ஸல்) அவர்களின் இடப் பக்கத்தில் அபூபக்ர் (ரலி) அவர்களும், எதிரில் உமர் (ரலி) அவர்களும் வலப் பக்கத்தில் ஒரு கிராமவாசியும் இருந் தனர்.

நபி (ஸல்) அவர்கள் (பாலைக் குடித்து) முடித்தவுடன் உமர் (ரலி) அவர்கள், ‘‘இதோ, அபூபக்ர்” என்று கூறினார்கள். எனினும், நபி (ஸல்) அவர்கள் தாம் அருந்தியதன் மீதியைக் கிராமவாசிக்குக் கொடுத்தார்கள். பிறகு ‘‘வலப் பக்கத்தி லிருப்பவர்களே முன்னுரிமையுடைவர்கள். ஆகவே, வலப் பக்கத்திலிருப்பவர்களுக்கே முதலிடம் கொடுங்கள்” என்று கூறி னார்கள்.

இறுதியில் அனஸ் (ரலி) அவர்கள், ‘அது நபிவழியாகும், அது நபிவழியாகும்’ என்று மும்முறை கூறினார்கள் என இதை அவர்களிடமிருந்து கேட்டு அறிவிக்கும் அப்துல்லாஹ் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

அத்தியாயம் : 50
2572. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ هِشَامِ بْنِ زَيْدِ بْنِ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ أَنْفَجْنَا أَرْنَبًا بِمَرِّ الظَّهْرَانِ، فَسَعَى الْقَوْمُ فَلَغَبُوا، فَأَدْرَكْتُهَا فَأَخَذْتُهَا، فَأَتَيْتُ بِهَا أَبَا طَلْحَةَ فَذَبَحَهَا، وَبَعَثَ بِهَا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِوَرِكِهَا ـ أَوْ فَخِذَيْهَا قَالَ فَخِذَيْهَا لاَ شَكَّ فِيهِ ـ فَقَبِلَهُ. قُلْتُ وَأَكَلَ مِنْهُ قَالَ وَأَكَلَ مِنْهُ. ثُمَّ قَالَ بَعْدُ قَبِلَهُ.
பாடம் : 5 வேட்டைப் பிராணி அன்பளிப்புச் செய்யப்பட்டால் ஏற்றுக் கொள்ளல் நபி (ஸல்) அவர்கள், அபூகத்தாதா (ரலி) அவர்களிடமிருந்து வேட்டைப் பிராணியின் புஜத்தை (அன்பளிப்பாக) ஏற்றுக்கொண்டார்கள்.
2572. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

யிமர்ருழ் ழஹ்ரான்’ எனுமிடத்தில் நாங்கள் ஒரு முயலை (அதன் பொந்திலிருந்து) கிளப்பி விரட்டினோம். மக்கள் அதைப் பிடிக்க முயற்சி செய்து களைத்துவிட்டார் கள். நான் அதைப் பின்தொடர்ந்து சென்று பிடித்துவிட்டேன். அதை எடுத்துக் கொண்டு அபூதல்ஹா (ரலி) அவர்களிடத்தில் வந்தேன். அவர்கள் அதை அறுத்து அதன் பிட்டத்தை லிஅல்லது தொடைகளைலி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களி டம் அனுப்பினார்கள். அதை நபி (ஸல்) அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

‘‘அதிலிருந்து நபி (ஸல்) அவர்கள் உண்டார்களா?” என்று அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்கள் கேட்க, ‘‘(ஆம்,) நபி (ஸல்) அவர்கள் அதிலிருந்து உண்டார்கள்” என்று ஹிஷாம் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறிவிட்டு, அதன் பிறகு, ‘‘அதை நபி (ஸல்) அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்” என்று கூறினார்.

அத்தியாயம் : 50
2573. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، عَنِ الصَّعْبِ بْنِ جَثَّامَةَ ـ رضى الله عنهم ـ أَنَّهُ أَهْدَى لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حِمَارًا وَحْشِيًّا وَهْوَ بِالأَبْوَاءِ أَوْ بِوَدَّانَ فَرَدَّ عَلَيْهِ، فَلَمَّا رَأَى مَا فِي وَجْهِهِ قَالَ "" أَمَا إِنَّا لَمْ نَرُدَّهُ عَلَيْكَ إِلاَّ أَنَّا حُرُمٌ "".
பாடம் : 6 (குறிப்பிட்ட) அன்பளிப்பை ஏற்றல்
2573. ஸஅப் பின் ஜஸ்ஸாமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஒரு காட்டுக் கழுதையைப் பரிசாக அளித்தேன். அப்போது அவர்கள் ‘அப்வா’ என்னும் இடத்தில் லிஅல்லது யிவத்தான்’5 எனும் இடத்தில்லி இருந்தார் கள். அதை நபி (ஸல்) அவர்கள் என்னி டமே திருப்பிக் கொடுத்துவிட்டார்கள்.

என் முகத்தில் ஏற்பட்ட (மாற்றத்)தை கண்டபோது, ‘‘நாம் இஹ்ராம் கட்டியிருப்ப தால்தான் உம்மிடம் அதைத் திருப்பித் தந்தோம்” என்று கூறினார்கள்.6

அத்தியாயம் : 50