2114. حَدَّثَنِي إِسْحَاقُ، حَدَّثَنَا حَبَّانُ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَبِي الْخَلِيلِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ، عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" الْبَيِّعَانِ بِالْخِيَارِ مَا لَمْ يَتَفَرَّقَا "" ـ قَالَ هَمَّامٌ وَجَدْتُ فِي كِتَابِي يَخْتَارُ ثَلاَثَ مِرَارٍ ـ ""فَإِنْ صَدَقَا وَبَيَّنَا بُورِكَ لَهُمَا فِي بَيْعِهِمَا، وَإِنْ كَذَبَا وَكَتَمَا فَعَسَى أَنْ يَرْبَحَا رِبْحًا، وَيُمْحَقَا بَرَكَةَ بَيْعِهِمَا "". قَالَ وَحَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا أَبُو التَّيَّاحِ، أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ الْحَارِثِ، يُحَدِّثُ بِهَذَا الْحَدِيثِ عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 46 விற்பவர் முறித்துக்கொள்ளும் உரிமை பெற்றிருக்கும்போது, அந்த வணிகம் செல்லுமா?
2114. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

விற்பவரும் வாங்குபவரும் (அந்த இடத்திலிருந்து) பிரியாத வரை முறித்துக்கொள்ளும் உரிமை பெறுகின்றனர். விற்பவரும் வாங்குபவரும் உண்மை கூறி (குறைகளைத்) தெளிவுபடுத்தினால் அவர்களின் வணிகத்தில் வளம் (பரக்கத்) வழங்கப்படும். அவர்கள் பொய் சொல்லி (குறைகளை) மறைத்தால் அவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கலாம். ஆனாலும், வணிகத்தின் வளம் (பரக்கத்) அழிக்கப் பட்டுவிடும்.

இதை ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

‘‘நான் பதிவு செய்த ஏட்டில், இவ்வாறு மூன்று முறை உரிமையைப் பயன்படுத்தலாம் என்று உள்ளது என (அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹம்மாம் பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 34
2115. وَقَالَ الْحُمَيْدِيُّ حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا عَمْرٌو، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي سَفَرٍ فَكُنْتُ عَلَى بَكْرٍ صَعْبٍ لِعُمَرَ، فَكَانَ يَغْلِبُنِي فَيَتَقَدَّمُ أَمَامَ الْقَوْمِ، فَيَزْجُرُهُ عُمَرُ وَيَرُدُّهُ، ثُمَّ يَتَقَدَّمُ فَيَزْجُرُهُ عُمَرُ وَيَرُدُّهُ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لِعُمَرَ "" بِعْنِيهِ "". قَالَ هُوَ لَكَ يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" بِعْنِيهِ "". فَبَاعَهُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" هُوَ لَكَ يَا عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ تَصْنَعُ بِهِ مَا شِئْتَ "".
பாடம் : 47 ஒருவர் ஒரு பொருளை விலைக்கு வாங்கி, விற்றவர் ஆட்சேபிக்காத நிலையில் இருவரும் பிரிவதற்கு முன்னால் அப்போதே அன்பளிப் பாக வழங்குவதும், ஓர் அடிமையை வாங்கி உடனே விடுதலை செய்வதும் ஒருவர் விற்பவரின் சம்மதத்துடன் ஒரு பொருளை விலைக்கு வாங்கி, பிறகு அவர் அதை (வேறொருவருக்கு) விற்றால் அந்த வணிகம் கட்டாயமாகிவிடும்; இலாபம் இரண்டாவதாக விற்றவருக்கு உரியது என்று தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
2115. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். அப்போது நான் (என் தந்தை) உமர் (ரலி) அவர்களுக்குச் சொந்தமான முரட்டு ஒட்டகத்தின் மீது (பயணம் செய்துகொண்டு) இருந்தேன். அது என்னை மீறிக் கூட்டத்தாருக்கு முன்னால் சென்றது. உமர் (ரலி) அவர்கள் அதை அதட்டிப் பழைய இடத்திற்குத் திருப்பியனுப்பினார்கள்; மீண்டும் அது முன்னே சென்றது. அப்போதும் உமர் (ரலி) அவர்கள் அதை அதட்டிப் பழைய இடத்திற்குத் திருப்பியனுப்பினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம், ‘‘இதை எனக்கு விற்றுவிடுவீராக!” என்றார்கள்.

உமர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே இது உங்களுக்கு உரியது” என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘எனக்கு இதை விலைக்குத் தருவீராக!” என்று கேட்டார்கள். உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அதை விற்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், (என்னி டம்), ‘‘அப்துல்லாஹ் பின் உமரே! இது உமக்குரியது; நீர் விரும்பியவாறு இதைப் பயன்படுத்திக்கொள்ளும்!” என்றார்கள்.


அத்தியாயம் : 34
2116. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ بِعْتُ مِنْ أَمِيرِ الْمُؤْمِنِينَ عُثْمَانَ مَالاً بِالْوَادِي بِمَالٍ لَهُ بِخَيْبَرَ، فَلَمَّا تَبَايَعْنَا رَجَعْتُ عَلَى عَقِبِي حَتَّى خَرَجْتُ مِنْ بَيْتِهِ، خَشْيَةَ أَنْ يُرَادَّنِي الْبَيْعَ، وَكَانَتِ السُّنَّةُ أَنَّ الْمُتَبَايِعَيْنِ بِالْخِيَارِ حَتَّى يَتَفَرَّقَا، قَالَ عَبْدُ اللَّهِ فَلَمَّا وَجَبَ بَيْعِي وَبَيْعُهُ رَأَيْتُ أَنِّي قَدْ غَبَنْتُهُ بِأَنِّي سُقْتُهُ إِلَى أَرْضِ ثَمُودٍ بِثَلاَثِ لَيَالٍ وَسَاقَنِي إِلَى الْمَدِينَةِ بِثَلاَثِ لَيَالٍ.
பாடம் : 47 ஒருவர் ஒரு பொருளை விலைக்கு வாங்கி, விற்றவர் ஆட்சேபிக்காத நிலையில் இருவரும் பிரிவதற்கு முன்னால் அப்போதே அன்பளிப் பாக வழங்குவதும், ஓர் அடிமையை வாங்கி உடனே விடுதலை செய்வதும் ஒருவர் விற்பவரின் சம்மதத்துடன் ஒரு பொருளை விலைக்கு வாங்கி, பிறகு அவர் அதை (வேறொருவருக்கு) விற்றால் அந்த வணிகம் கட்டாயமாகிவிடும்; இலாபம் இரண்டாவதாக விற்றவருக்கு உரியது என்று தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
2116. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் (கலீஃபா) உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களிடம் யிவாதில் குரா’ எனும் இடத்தில் இருந்த எனது சொத்தை கைபரில் அவர்களுக்கு இருந்த ஒரு சொத்திற்குப் பகரமாக விற்றேன். நாங்கள் வணிகம் பேசி முடித்ததும் உடனடியாக அவர்களது வீட்டிலிருந்து வெளியேறி, வந்தவழியே திரும்பி விட்டேன். அவர்கள் அந்த வியாபாரத்தை முறித்துவிடுவார்களோ என்ற அச்சமே அதற்குக் காரணமாகும்.

ஏனெனில், ‘‘(பேரம் நடந்த இடத்தை விட்டுப்) பிரியாத வரை விற்பவருக்கும் வாங்குபவருக்கும் (வியாபாரத்தை) முறித்துக்கொள்ளும் உரிமை உள்ளது” என்பது நபிவழியாக உள்ளது. நான் வாங்குவதும் அவர்கள் விற்பதும் முடிவானதும் உஸ்மான் (ரலி) அவர்களுக்கு நான் துரோகம் செய்துவிட்டதாகக் கருதினேன்; ஏனெனில், மதீனாவிலிருந்து மூன்று இரவுகள் பயணத் தொலைவுள்ள, ஸமூத் குலத்தார் வசித்த பகுதிக்கு அவர்களை நான் தள்ளிவிட்டேன்; அவர்கள் (அங்கிருந்து) மூன்று இரவுகள் பயணத் தொலைவுள்ள மதீனாவுக்கு என்னைத் தள்ளினார்கள்.31

அத்தியாயம் : 34
2117. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَجُلاً، ذَكَرَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ يُخْدَعُ فِي الْبُيُوعِ، فَقَالَ "" إِذَا بَايَعْتَ فَقُلْ لاَ خِلاَبَةَ "".
பாடம் : 48 வியாபாரத்தில் மோசடி கூடாது.
2117. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், தாம் வணிகத்தின்போது ஏமாற்றப்படு வதாகக் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நீர் வணிகம் செய்யும்போது ஏமாற்றுதல் கூடாது என்று (முன்பே) கூறிவிடுவீராக!” என்றார்கள்.32

அத்தியாயம் : 34
2118. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ زَكَرِيَّاءَ، عَنْ مُحَمَّدِ بْنِ سُوقَةَ، عَنْ نَافِعِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، قَالَ حَدَّثَتْنِي عَائِشَةُ ـ رضى الله عنها ـ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" يَغْزُو جَيْشٌ الْكَعْبَةَ، فَإِذَا كَانُوا بِبَيْدَاءَ مِنَ الأَرْضِ يُخْسَفُ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ "". قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ يُخْسَفُ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ، وَفِيهِمْ أَسْوَاقُهُمْ وَمَنْ لَيْسَ مِنْهُمْ. قَالَ "" يُخْسَفُ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ، ثُمَّ يُبْعَثُونَ عَلَى نِيَّاتِهِمْ "".
பாடம் : 49 சந்தைகள் பற்றிய குறிப்பு33 அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நாங்கள் மதீனாவுக்கு வந்தபோது, வணிகம் நடைபெறுகின்ற கடைவீதி ஏதேனும் (இங்கு) உண்டா? என்று நான் கேட்டேன். ‘‘கைனுகா எனும் கடைவீதி இருக்கிறது” என்று சஅத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்கள் கூறினார்கள்.34 ‘‘எனக்குக் கடைவீதியைக் காட்டுங்கள்!” என்று அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.35 ‘‘சந்தைகளின் வியாபாரக் கொடுக்கல் வாங்கல்கள் இதை நான் அறிந்திட முடியாமல் என் கவனத்தைத் திசைதிருப்பிவிட்ட”’ என்று உமர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.36
2118. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘ஒரு படையினர் கஅபாவின் மீது படையெடுப்பார்கள்; யிபைதாஉ’ எனும் இடத்தில் அவர்கள் இருக்கும்போது அவர்களில் ஆரம்பமானவர் முதல், கடைசி நபர்வரை (உயிருடன்) பூமிக்குள் புதையுண்டுபோவார்கள்” என்று கூறினார்கள்.

அப்போது நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் ஆரம்பமானவர் முதல், கடைசி நபர்வரை எவ்வாறு புதை யுண்டுபோவார்கள்? அங்கே அவர்களைச் சேராதவர்களும் இருப்பார்கள்; கடைவீதி களும் இருக்குமே!” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அவர்களில் ஆரம்பமானவர் முதல், கடைசி நபர்வரை (எல்லாரும்) புதையுண்டுபோகத்தான் செய்வார்கள்; எனினும், (அதற்குப்) பின்னர் அவரவரது எண்ணத்திற்கேற்ப எழுப்பப்படுவார்கள்” என்றார்கள்.


அத்தியாயம் : 34
2119. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" صَلاَةُ أَحَدِكُمْ فِي جَمَاعَةٍ تَزِيدُ عَلَى صَلاَتِهِ فِي سُوقِهِ وَبَيْتِهِ بِضْعًا وَعِشْرِينَ دَرَجَةً، وَذَلِكَ بِأَنَّهُ إِذَا تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ، ثُمَّ أَتَى الْمَسْجِدَ، لاَ يُرِيدُ إِلاَّ الصَّلاَةَ، لاَ يَنْهَزُهُ إِلاَّ الصَّلاَةُ، لَمْ يَخْطُ خَطْوَةً إِلاَّ رُفِعَ بِهَا دَرَجَةً، أَوْ حُطَّتْ عَنْهُ بِهَا خَطِيئَةٌ، وَالْمَلاَئِكَةُ تُصَلِّي عَلَى أَحَدِكُمْ مَا دَامَ فِي مُصَلاَّهُ الَّذِي يُصَلِّي فِيهِ اللَّهُمَّ صَلِّ عَلَيْهِ، اللَّهُمَّ ارْحَمْهُ، مَا لَمْ يُحْدِثْ فِيهِ، مَا لَمْ يُؤْذِ فِيهِ "". وَقَالَ "" أَحَدُكُمْ فِي صَلاَةٍ مَا كَانَتِ الصَّلاَةُ تَحْبِسُهُ "".
பாடம் : 49 சந்தைகள் பற்றிய குறிப்பு33 அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நாங்கள் மதீனாவுக்கு வந்தபோது, வணிகம் நடைபெறுகின்ற கடைவீதி ஏதேனும் (இங்கு) உண்டா? என்று நான் கேட்டேன். ‘‘கைனுகா எனும் கடைவீதி இருக்கிறது” என்று சஅத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்கள் கூறினார்கள்.34 ‘‘எனக்குக் கடைவீதியைக் காட்டுங்கள்!” என்று அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.35 ‘‘சந்தைகளின் வியாபாரக் கொடுக்கல் வாங்கல்கள் இதை நான் அறிந்திட முடியாமல் என் கவனத்தைத் திசைதிருப்பிவிட்ட”’ என்று உமர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.36
2119. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் (ஜமாஅத்துடன்) கூட்டாகத் தொழுவது, அவர் தமது கடைத்தெருவிலோ வீட்டிலோ (தனியாகத்) தொழுவதைவிட இருபதுக்கும் அதிகமான மடங்கு சிறந்ததாகும். ஏனெனில், அவர் அங்கத் தூய்மை செய்து, அதை அழகுறச் செய்து, பிறகு பள்ளிவாசலுக்கு வருகிறார். தொழுகையைத் தவிர வேறு எதையும் அவர் நாடவில்லை. தொழுகையைத் தவிர வேறு எதுவும் அவரை (பள்ளி வாசலுக்கு) எழுந்து செல்லவைக்கவில்லை.

இவர் எடுத்துவைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் ஒரு பதவி அவருக்கு உயர்த்தப்படுகிறது; அல்லது ஒரு தவறு அவரைவிட்டு நீக்கப்படுகிறது. மேலும், உங்களில் ஒருவர், தாம் தொழக்கூடிய இடத்தில் அமர்ந்திருக்கும்வரை வானவர்கள் அவருக்காகப் பிரார்த்திக்கின்றனர். அங்கே, அவருக்கு அங்கத் தூய்மை கலையாமல் இருக்கும்வரை, (பிறருக்குத்) தொல்லை தரும் எதையும் அவர் செய்யா மலிருக்கும்வரை, ‘‘இறைவா! இவருக்குக் கருணை செய்வாயாக! இவருக்கு அருள் புரிவாயாக!” என்று வானவர்கள் பிரார்த்திக் கிறார்கள். உங்களில் ஒருவர் தொழுகைக் காகக் காத்திருக்கும்வரை அவர் தொழுகை யிலேயே இருக்கிறார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 34
2120. حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي السُّوقِ، فَقَالَ رَجُلٌ يَا أَبَا الْقَاسِمِ. فَالْتَفَتَ إِلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ إِنَّمَا دَعَوْتُ هَذَا. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" سَمُّوا بِاسْمِي، وَلاَ تَكَنَّوْا بِكُنْيَتِي "".
பாடம் : 49 சந்தைகள் பற்றிய குறிப்பு33 அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நாங்கள் மதீனாவுக்கு வந்தபோது, வணிகம் நடைபெறுகின்ற கடைவீதி ஏதேனும் (இங்கு) உண்டா? என்று நான் கேட்டேன். ‘‘கைனுகா எனும் கடைவீதி இருக்கிறது” என்று சஅத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்கள் கூறினார்கள்.34 ‘‘எனக்குக் கடைவீதியைக் காட்டுங்கள்!” என்று அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.35 ‘‘சந்தைகளின் வியாபாரக் கொடுக்கல் வாங்கல்கள் இதை நான் அறிந்திட முடியாமல் என் கவனத்தைத் திசைதிருப்பிவிட்ட”’ என்று உமர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.36
2120. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் கடைவீதியில் இருந்தார்கள். அப்போது ஒரு மனிதர் ‘‘அபுல்காசிமே! (காஸிமின் தந்தையே!)” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவர் பக்கம் திரும்பினார்கள். அவர் (வேறொருவரைச் சுட்டிக்காட்டி) ‘‘நான் இவரைத்தான் அழைத்தேன். (தங்களை அழைக்கவில்லை)” என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘எனது (முஹம்மத் எனும்) பெயரை நீங்கள் சூட்டிக்கொள்ளுங்கள். எனது (அபுல்காசிம் எனும்) குறிப்புப் பெயரைச் சூட்டிக்கொள்ளாதீர்கள்!” என்றார்கள்.


அத்தியாயம் : 34
2121. حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ دَعَا رَجُلٌ بِالْبَقِيعِ يَا أَبَا الْقَاسِمِ. فَالْتَفَتَ إِلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ لَمْ أَعْنِكَ. قَالَ "" سَمُّوا بِاسْمِي، وَلاَ تَكْتَنُوا بِكُنْيَتِي "".
பாடம் : 49 சந்தைகள் பற்றிய குறிப்பு33 அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நாங்கள் மதீனாவுக்கு வந்தபோது, வணிகம் நடைபெறுகின்ற கடைவீதி ஏதேனும் (இங்கு) உண்டா? என்று நான் கேட்டேன். ‘‘கைனுகா எனும் கடைவீதி இருக்கிறது” என்று சஅத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்கள் கூறினார்கள்.34 ‘‘எனக்குக் கடைவீதியைக் காட்டுங்கள்!” என்று அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.35 ‘‘சந்தைகளின் வியாபாரக் கொடுக்கல் வாங்கல்கள் இதை நான் அறிந்திட முடியாமல் என் கவனத்தைத் திசைதிருப்பிவிட்ட”’ என்று உமர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.36
2121. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் ‘அல்பகீஉ’ பொது மையவாடியில் ‘அபுல்காசிமே!› என்று அழைத்தார். நபி (ஸல்) அவர்கள் அவரைத் திரும்பிப் பார்த்தார்கள். அப்போது அவர், ‘‘உங்களை எண்ணி நான் அழைக்கவில்லை” என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘‘என் பெயரை நீங்கள் சூட்டிக்கொள்ளுங்கள்; எனது (‘அபுல்காசிம்’ எனும்) குறிப்புப் பெயரைச் சூட்டிக்கொள்ளாதீர்கள்” என்றார்கள்.


அத்தியாயம் : 34
2122. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي يَزِيدَ، عَنْ نَافِعِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ الدَّوْسِيِّ ـ رضى الله عنه ـ قَالَ خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي طَائِفَةِ النَّهَارِ لاَ يُكَلِّمُنِي وَلاَ أُكَلِّمُهُ حَتَّى أَتَى سُوقَ بَنِي قَيْنُقَاعَ، فَجَلَسَ بِفِنَاءِ بَيْتِ فَاطِمَةَ فَقَالَ "" أَثَمَّ لُكَعُ أَثَمَّ لُكَعُ "". فَحَبَسَتْهُ شَيْئًا فَظَنَنْتُ أَنَّهَا تُلْبِسُهُ سِخَابًا أَوْ تُغَسِّلُهُ، فَجَاءَ يَشْتَدُّ حَتَّى عَانَقَهُ وَقَبَّلَهُ، وَقَالَ "" اللَّهُمَّ أَحْبِبْهُ وَأَحِبَّ مَنْ يُحِبُّهُ "". قَالَ سُفْيَانُ قَالَ عُبَيْدُ اللَّهِ أَخْبَرَنِي أَنَّهُ رَأَى نَافِعَ بْنَ جُبَيْرٍ أَوْتَرَ بِرَكْعَةٍ.
பாடம் : 49 சந்தைகள் பற்றிய குறிப்பு33 அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நாங்கள் மதீனாவுக்கு வந்தபோது, வணிகம் நடைபெறுகின்ற கடைவீதி ஏதேனும் (இங்கு) உண்டா? என்று நான் கேட்டேன். ‘‘கைனுகா எனும் கடைவீதி இருக்கிறது” என்று சஅத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்கள் கூறினார்கள்.34 ‘‘எனக்குக் கடைவீதியைக் காட்டுங்கள்!” என்று அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.35 ‘‘சந்தைகளின் வியாபாரக் கொடுக்கல் வாங்கல்கள் இதை நான் அறிந்திட முடியாமல் என் கவனத்தைத் திசைதிருப்பிவிட்ட”’ என்று உமர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.36
2122. அபூஹுரைரா அத்தவ்சி (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரு பகல் வேளையில் புறப்பட்டார்கள். (நானும் சென்றேன்.) அவர்கள் என்னுடன் பேசவில்லை; நானும் அவர்களுடன் பேச வில்லை. யிபனூ கைனுகா’ கடைவீதிக்கு அவர்கள் வந்ததும் ஃபாத்திமா (ரலி) அவர்களின் வீட்டு முற்றத்தில் அமர்ந் தார்கள். ‘‘இங்கே அந்தப் பொடிப்பையன் இருக்கிறானா? இங்கே அந்தப் பொடிப் பையன் இருக்கிறானா?” என்று (பேரர் ஹசன் (ரலி) அவர்கள் குறித்துக்) கேட்டார் கள்.

ஃபாத்திமா (ரலி) அவர்கள் தம் மகனைச் சற்று நேரம் தாமதப்படுத்தினார். அவர் தம் மகனுக்கு நறுமண மாலையை அணிவித்துக்கொண்டிருக்கிறார்; அல்லது மகனை நீராட்டிக்கொண்டிருக்கிறார் என்று நான் நினைத்தேன். அப்போது ஃபாத்திமா (ரலி) அவர்களின் மகன் (ஹசன் (ரலி) அவர்கள்) ஓடிவந்தார். உடனே நபி (ஸல்) அவர்கள் அவரைக் கட்டியணைத்து முத்தமிட்டார்கள். ‘‘இறைவா! இவரை நீ நேசிப்பாயாக! இவரை நேசிப்பவர்களையும் நீ நேசிப்பாயாக!” என்று கூறினார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்:

(இதை எனக்கு அறிவித்த) நாஃபிஉ பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள், ஒரு ரக்அத் யிவித்ர்’ தொழுததை நான் பார்த்தேன். (இதிலிருந்து அவரை இவர் சந்தித்துள்ளார் என அறியலாம்.)


அத்தியாயம் : 34
2123. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا أَبُو ضَمْرَةَ، حَدَّثَنَا مُوسَى، عَنْ نَافِعٍ، حَدَّثَنَا ابْنُ عُمَرَ، أَنَّهُمْ كَانُوا يَشْتَرُونَ الطَّعَامَ مِنَ الرُّكْبَانِ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَيَبْعَثُ عَلَيْهِمْ مَنْ يَمْنَعُهُمْ أَنْ يَبِيعُوهُ حَيْثُ اشْتَرَوْهُ، حَتَّى يَنْقُلُوهُ حَيْثُ يُبَاعُ الطَّعَامُ.
பாடம் : 49 சந்தைகள் பற்றிய குறிப்பு33 அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நாங்கள் மதீனாவுக்கு வந்தபோது, வணிகம் நடைபெறுகின்ற கடைவீதி ஏதேனும் (இங்கு) உண்டா? என்று நான் கேட்டேன். ‘‘கைனுகா எனும் கடைவீதி இருக்கிறது” என்று சஅத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்கள் கூறினார்கள்.34 ‘‘எனக்குக் கடைவீதியைக் காட்டுங்கள்!” என்று அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.35 ‘‘சந்தைகளின் வியாபாரக் கொடுக்கல் வாங்கல்கள் இதை நான் அறிந்திட முடியாமல் என் கவனத்தைத் திசைதிருப்பிவிட்ட”’ என்று உமர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.36
2123. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களது காலத்தில் மக்கள் உணவுப் பொருட்களைச் சந்தைக்குக் கொண்டுவரும் வியாபாரிகளிடம் (வழிமறித்து) வாங்கிக்கொண்டிருந்தனர். ‘‘உணவுப் பொருட்களை, அவை விற்பனை செய்யப்படும் இடத்திற்கு (சந்தைக்கு) கொண்டுசென்ற பின்புதான் விற்க வேண் டும்; வாங்கிய இடத்திலேயே அவற்றை விற்கக் கூடாது!” என்று வியாபாரிகளைத் தடுப்பதற்காக நபி (ஸல்) அவர்கள் ஆட்களை அனுப்பி வைப்பார்கள்.


அத்தியாயம் : 34
2124. قَالَ وَحَدَّثَنَا ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يُبَاعَ الطَّعَامُ إِذَا اشْتَرَاهُ حَتَّى يَسْتَوْفِيَهُ.
பாடம் : 49 சந்தைகள் பற்றிய குறிப்பு33 அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நாங்கள் மதீனாவுக்கு வந்தபோது, வணிகம் நடைபெறுகின்ற கடைவீதி ஏதேனும் (இங்கு) உண்டா? என்று நான் கேட்டேன். ‘‘கைனுகா எனும் கடைவீதி இருக்கிறது” என்று சஅத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்கள் கூறினார்கள்.34 ‘‘எனக்குக் கடைவீதியைக் காட்டுங்கள்!” என்று அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.35 ‘‘சந்தைகளின் வியாபாரக் கொடுக்கல் வாங்கல்கள் இதை நான் அறிந்திட முடியாமல் என் கவனத்தைத் திசைதிருப்பிவிட்ட”’ என்று உமர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.36
2124. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உணவுப் பொருளை வாங்கினால், அது (முழுமையாக) கைக்கு வந்து சேருவதற்கு முன்பு அதை விற்பதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.

அத்தியாயம் : 34
2125. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ، حَدَّثَنَا فُلَيْحٌ، حَدَّثَنَا هِلاَلٌ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، قَالَ لَقِيتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ ـ رضى الله عنهما ـ قُلْتُ أَخْبِرْنِي عَنْ صِفَةِ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي التَّوْرَاةِ. قَالَ أَجَلْ، وَاللَّهِ إِنَّهُ لَمَوْصُوفٌ فِي التَّوْرَاةِ بِبَعْضِ صِفَتِهِ فِي الْقُرْآنِ يَا أَيُّهَا النَّبِيُّ إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا، وَحِرْزًا لِلأُمِّيِّينَ، أَنْتَ عَبْدِي وَرَسُولِي سَمَّيْتُكَ الْمُتَوَكِّلَ، لَيْسَ بِفَظٍّ وَلاَ غَلِيظٍ وَلاَ سَخَّابٍ فِي الأَسْوَاقِ، وَلاَ يَدْفَعُ بِالسَّيِّئَةِ السَّيِّئَةَ وَلَكِنْ يَعْفُو وَيَغْفِرُ، وَلَنْ يَقْبِضَهُ اللَّهُ حَتَّى يُقِيمَ بِهِ الْمِلَّةَ الْعَوْجَاءَ بِأَنْ يَقُولُوا لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ. وَيَفْتَحُ بِهَا أَعْيُنًا عُمْيًا، وَآذَانًا صُمًّا، وَقُلُوبًا غُلْفًا. تَابَعَهُ عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ عَنْ هِلاَلٍ. وَقَالَ سَعِيدٌ عَنْ هِلاَلٍ عَنْ عَطَاءٍ عَنِ ابْنِ سَلاَمٍ. غُلْفٌ كُلُّ شَىْءٍ فِي غِلاَفٍ، سَيْفٌ أَغْلَفُ، وَقَوْسٌ غَلْفَاءُ، وَرَجُلٌ أَغْلَفُ إِذَا لَمْ يَكُنْ مَخْتُونًا.
பாடம் : 50 சந்தைகளில் கூச்சலிடுவது அருவருக்கத் தக்கது.
2125. அதாஉ பின் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களைச் சந்தித்து, ‘‘தவ்ராத் வேதத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பற்றிக் கூறப்பட்டி ருக்கும் வர்ணனை பற்றி எனக்குச் சொல்லுங்கள்” என்றேன். அவர்கள், சரி என்று சொல்லிவிட்டு (பின்வருமாறு) கூறினார்கள்:

அல்லாஹ்வின் மீதாணையாக! குர்ஆனில் கூறப்பட்டுள்ள அவர்களின் சில பண்புகளாலேயே யிதவ்ராத்’திலும் அவர்கள் வர்ணிக்கப்பட்டுள்ளார்கள்:

நபியே! உம்மை ஒரு சாட்சியாகவும் நற்செய்தி கூறுபவராகவும் எச்சரிக்கை செய்பவராகவும் எழுதப் படிக்கத் தெரியா பாமரர்களின் பாதுகாவலராகவும் நாம் அனுப்பியிருக்கிறோம். நீர் என் அடிமையும் என் தூதரும் ஆவீர். ‘அல்லாஹ் வையே சார்ந்திருப்பவர்’ (அல்முத்தவக்கில்) என உமக்கு நான் பெயரிட் டுள்ளேன்.

(என் தூதரான) அவர் கடுகடுப்பான வரோ கல்நெஞ்சம் படைத்தவரோ சந்தைகளில் கூச்சலிடுபவரோ அல்லர். தீமையை தீமையைக் கொண்டு அகற்ற (முனைய)மாட்டார். மாறாக, மன்னித்து, விட்டுவிடுவார். வளைந்த மார்க்கத்தை அவர் மூலம் நிமிர்த்தாத வரை அல்லாஹ் அவ(ரது உயி)ரைக் கைப்பற்றமாட்டான். மக்கள் ‘‘அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை” என்று கூறுவார்கள்; அதன் மூலம் குருட்டுக் கண்களும் செவிட்டுக் காதுகளும் மூடப்பட்ட உள்ளங் களும் திறக்கப்படும்.37

இந்த ஹதீஸ் அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்களிடமிருந்தும் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

(யிமூடப்பட்ட’ உள்ளங்கள் என்பதைக் குறிக்க மூலத்தில்) யிஃகுல்ஃப்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு, யிஉறையிலுள்ள பொருட்கள்’ என்பது பொருள். உறை’ லுள்ள வாள், உறையிலுள்ள வில், விருத்த சேதனம் செய்யப்படாத மனிதன் ஆகிய பொருள்களைக் குறிக்க இச்சொல் (அஃக்லஃப்) ஆளப்படுகிறது.

அத்தியாயம் : 34
2126. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" مَنِ ابْتَاعَ طَعَامًا فَلاَ يَبِيعُهُ حَتَّى يَسْتَوْفِيَهُ "".
பாடம் : 51 அளந்து கொடுப்பது விற்பவர், (தொகையைக்) கொடுப்பவர் ஆகியோரின் பொறுப்பாகும்.38 வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: இவர்கள் மக்களுக்கு அளந்தோ, நிறுத்தோ கொடுத்தால் குறைத்து விடுகிறார்கள். (83:3) அதாவது மக்களுக்காக இவர்கள் அளந்து கொடுக்கும்போதும், மக்களுக்காக இவர்கள் நிறுத்துக் கொடுக்கும்போதும் (அளவைக்) குறைத்துவிடுகிறார்கள். ‘‘(நீங்கள் அளந்து வாங்கும்போது, நீஙகள் கொடுத்த விலைக்கேற்ப) நிறைவாக அளந்து வாங்குங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் விற்கும் போது (சரியாக) அளந்துகொடுங்கள்; வாங்கும்போது (சரியாக) அளந்து வாங்குங்கள்” என்று உஸ்மான் (ரலி) அவர்களிடம் கூறினார்கள்.
2126. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உணவுப் பொருளை விலைக்கு வாங்கிய ஒருவர், அது தமது கைக்கு (முழுமையாக) வந்து சேர்வதற்குமுன் (மற்றவருக்கு) விற்க வேண்டாம்!

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 34
2127. حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ مُغِيرَةَ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ جَابِرٍ ـ رضى الله عنه ـ قَالَ تُوُفِّيَ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرِو بْنِ حَرَامٍ، وَعَلَيْهِ دَيْنٌ فَاسْتَعَنْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم عَلَى غُرَمَائِهِ أَنْ يَضَعُوا مِنْ دَيْنِهِ، فَطَلَبَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَيْهِمْ، فَلَمْ يَفْعَلُوا، فَقَالَ لِي النَّبِيُّ صلى الله عليه وسلم "" اذْهَبْ فَصَنِّفْ تَمْرَكَ أَصْنَافًا، الْعَجْوَةَ عَلَى حِدَةٍ، وَعَذْقَ زَيْدٍ عَلَى حِدَةٍ، ثُمَّ أَرْسِلْ إِلَىَّ "". فَفَعَلْتُ، ثُمَّ أَرْسَلْتُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَجَلَسَ عَلَى أَعْلاَهُ، أَوْ فِي وَسَطِهِ ثُمَّ قَالَ "" كِلْ لِلْقَوْمِ "". فَكِلْتُهُمْ حَتَّى أَوْفَيْتُهُمُ الَّذِي لَهُمْ، وَبَقِيَ تَمْرِي، كَأَنَّهُ لَمْ يَنْقُصْ مِنْهُ شَىْءٌ. وَقَالَ فِرَاسٌ عَنِ الشَّعْبِيِّ حَدَّثَنِي جَابِرٌ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم، فَمَا زَالَ يَكِيلُ لَهُمْ حَتَّى أَدَّاهُ، وَقَالَ هِشَامٌ عَنْ وَهْبٍ عَنْ جَابِرٍ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" جُذَّ لَهُ فَأَوْفِ لَهُ "".
பாடம் : 51 அளந்து கொடுப்பது விற்பவர், (தொகையைக்) கொடுப்பவர் ஆகியோரின் பொறுப்பாகும்.38 வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: இவர்கள் மக்களுக்கு அளந்தோ, நிறுத்தோ கொடுத்தால் குறைத்து விடுகிறார்கள். (83:3) அதாவது மக்களுக்காக இவர்கள் அளந்து கொடுக்கும்போதும், மக்களுக்காக இவர்கள் நிறுத்துக் கொடுக்கும்போதும் (அளவைக்) குறைத்துவிடுகிறார்கள். ‘‘(நீங்கள் அளந்து வாங்கும்போது, நீஙகள் கொடுத்த விலைக்கேற்ப) நிறைவாக அளந்து வாங்குங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் விற்கும் போது (சரியாக) அளந்துகொடுங்கள்; வாங்கும்போது (சரியாக) அளந்து வாங்குங்கள்” என்று உஸ்மான் (ரலி) அவர்களிடம் கூறினார்கள்.
2127. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஹராம் (ரலி) அவர்கள் தம்மீது கடன் உள்ள நிலையில் இறந்துவிட்டார்கள்; அவருக்குக் கடன் கொடுத்தவர்கள், அவரது கடனில் சிறிது தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதற்காக நபி (ஸல்) அவர்களின் உதவியை நான் நாடினேன். அவ்வாறே, நபி (ஸல்) அவர்களும் (கடனைத் தள்ளுபடி செய்யும்படி) அவர்களிடம் கோரினார்கள். ஆனால், அவர்கள் அதைச் செய்யவில்லை.

அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘நீர் சென்று உமது பேரீச்சம் பழத்தில் ‘அஜ்வா’ எனும் (உயர்) ரகத்தைத் தனியாகவும் யிஇப்னு ஸைத்’ எனும் ரகத்தைத் தனியாகவும் ஒவ்வொரு ரகத்தையும் தனித்தனியாகவும் வகைப்படுத்துவீராக! பிறகு என்னிடம் ஆளனுப்புவீராக!” என்றார்கள்.

அவ்வாறே நான் செய்து அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஆளனுப் பினேன். அவர்கள் வந்து அதன் மேற் புறத்திலோ நடுப்புறத்திலோ அமர்ந்தார்கள். பிறகு என்னிடம் ‘‘(கடன் கொடுத்த) இக்கூட்டத்தாருக்கு அளந்து கொடுப்பீராக!” என்றார்கள். அவர்களுக்குக் கொடுக்க வேண்டியதை முழுமையாக நான் அளந்து கொடுத்தேன். எனது பேரீச்சம் பழத்தில் எதுவும் குறையாததைப் போன்று அப்படியே எஞ்சியிருந்தது.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஃபிராஸ் பின் யஹ்யா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘‘அவர்களுக்கு (முழுமை யாக) கடனை அடைக்கும்வரை அளந்து கொடுத்துக்கொண்டே இருந்தார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘‘கடன் கொடுத்தவருக்காக (பேரீச்சம் பாளையைத்) தனியாகப் பிரித்து, முழுமையாகக் கொடுத்துவிடு” என்று ஜாபிர் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம் : 34
2128. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، حَدَّثَنَا الْوَلِيدُ، عَنْ ثَوْرٍ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنِ الْمِقْدَامِ بْنِ مَعْدِيكَرِبَ، رضى الله عنه عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" كِيلُوا طَعَامَكُمْ يُبَارَكْ لَكُمْ "".
பாடம் : 52 அளந்துகொள்வது விரும்பத் தக்கது.
2128. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் உணவு(ப் பொருட்)களை அளந்துகொள்ளுங்கள்; உங்களுக்கு வளம் (பரக்கத்) வழங்கப்படும்.39

இதை மிக்தாம் பின் மஅதீகரிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 34
2129. حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا عَمْرُو بْنُ يَحْيَى، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ الأَنْصَارِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم "" أَنَّ إِبْرَاهِيمَ حَرَّمَ مَكَّةَ، وَدَعَا لَهَا، وَحَرَّمْتُ الْمَدِينَةَ كَمَا حَرَّمَ إِبْرَاهِيمُ مَكَّةَ، وَدَعَوْتُ لَهَا فِي مُدِّهَا وَصَاعِهَا، مِثْلَ مَا دَعَا إِبْرَاهِيمُ ـ عَلَيْهِ السَّلاَمُ ـ لِمَكَّةَ "".
பாடம் : 53 நபி (ஸல்) அவர்கள் காலத்து (அளவைகளான) ஸாஉ, யிமுத்' ஆகியவற்றில் வளம் (பரக்கத்)40 இது பற்றி நபி (ஸல்) அவர்களிட மிருந்து ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் உள்ளது.41
2129. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்கா வைப் புனித நகரமாக அறிவித்து, அதற் காகப் பிரார்த்தித்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவைப் புனித நகரமாக அறிவித்ததைப் போன்று நான் மதீனாவைப் புனித நகரமாக அறிவிக்கிறேன். இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவிற்காகப் பிரார்த்தித்ததைப் போன்று நான் மதீனாவிற்காக அதன் (அளவை களான) ஸாஉ, யிமுத்’ ஆகியவற்றில் (வளம் ஏற்பட) பிரார்த்தித்தேன்.

இதை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 34
2130. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِي مِكْيَالِهِمْ، وَبَارِكْ لَهُمْ فِي صَاعِهِمْ وَمُدِّهِمْ "". يَعْنِي أَهْلَ الْمَدِينَةِ.
பாடம் : 53 நபி (ஸல்) அவர்கள் காலத்து (அளவைகளான) ஸாஉ, யிமுத்' ஆகியவற்றில் வளம் (பரக்கத்)40 இது பற்றி நபி (ஸல்) அவர்களிட மிருந்து ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் உள்ளது.41
2130. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைவா! அவர்களின் லிஅதாவது மதீனாவாசிகளின்லி முகத்தலளவையில் நீ வளம் (பரக்கத்) வழங்குவாயாக! (குறிப்பாக) அவர்களது ஸாஉ, யிமுத்’ ஆகியவற்றில் நீ வளத்தை வழங்குவாயாக!

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 34
2131. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنِ الأَوْزَاعِيِّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ قَالَ رَأَيْتُ الَّذِينَ يَشْتَرُونَ الطَّعَامَ مُجَازَفَةً يُضْرَبُونَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يَبِيعُوهُ حَتَّى يُئْوُوهُ إِلَى رِحَالِهِمْ.
பாடம் : 54 உணவுப் பொருட்களை விற்பது, பதுக்குவது தொடர்பாகக் கூறப்பட் டுள்ளவை
2131. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களது காலத்தில் மக்கள் குத்துமதிப்பாக உணவுப் பொருட்களை விலைக்கு வாங்கிக்கொண்டிருந்தபோது, அவற்றைத் தம் இருப்பிடங்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்காமல் அதே இடத்தில் விற்றதற்காக அடிக்கப்பட்டதை நான் பார்த்துள்ளேன்.


அத்தியாயம் : 34
2132. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنِ ابْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى أَنْ يَبِيعَ الرَّجُلُ طَعَامًا حَتَّى يَسْتَوْفِيَهُ. قُلْتُ لاِبْنِ عَبَّاسٍ كَيْفَ ذَاكَ قَالَ ذَاكَ دَرَاهِمُ بِدَرَاهِمَ وَالطَّعَامُ مُرْجَأٌ. قَالَ أَبُو عَبْد اللَّهِ مُرْجَئُونَ مُؤَخَّرُونَ
பாடம் : 54 உணவுப் பொருட்களை விற்பது, பதுக்குவது தொடர்பாகக் கூறப்பட் டுள்ளவை
2132. தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

‘‘உணவுப் பொருள் கைக்கு வந்து சேர்வதற்கு முன்பு அதை விற்பதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். ‘‘அது எவ்வாறு?” என்று நான் கேட் டேன்.

அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘உணவுப் பொருள் (அதை வாங்கியவரின் கைக்குப்) போய்ச்சேராத (நிலையில் விற்கப்படுவ)தால் இது (உண்மையில்) காசுக்குக் காசை விற்பதாகும்” என்று பதிலளித்தார்கள்.42

அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்:

(இங்கு மூலத்தில் யிவந்து சேராதது’ என்பதைக் குறிக்க யிமுர்ஜஉ’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. குர்ஆனில் இதன் பன்மையான) யிமுர்ஜஊ” (முர்ஜவ்ன) எனும் சொல் (9:106) ஆளப்பட்டுள்ளது. இதற்கு, யிதாமதத்தில் (காத்திருப்பில்) வைக்கப்பட்டவர்கள்’ என்பது பொருளாகும்.


அத்தியாயம் : 34
2133. حَدَّثَنِي أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ يَقُولُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَنِ ابْتَاعَ طَعَامًا فَلاَ يَبِعْهُ حَتَّى يَقْبِضَهُ "".
பாடம் : 54 உணவுப் பொருட்களை விற்பது, பதுக்குவது தொடர்பாகக் கூறப்பட் டுள்ளவை
2133. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உணவுப் பொருளை விலைக்கு வாங்கிய ஒருவர், அது தமது கைக்கு வந்து சேர்வதற்குமுன் (மற்றவருக்கு) விற்க வேண்டாம்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 34