1304. حَدَّثَنَا أَصْبَغُ، عَنِ ابْنِ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرٌو، عَنْ سَعِيدِ بْنِ الْحَارِثِ الأَنْصَارِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ اشْتَكَى سَعْدُ بْنُ عُبَادَةَ شَكْوَى لَهُ فَأَتَاهُ النَّبِيُّ صلى الله عليه وسلم يَعُودُهُ مَعَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ وَسَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ وَعَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ـ رضى الله عنهم ـ فَلَمَّا دَخَلَ عَلَيْهِ فَوَجَدَهُ فِي غَاشِيَةِ أَهْلِهِ فَقَالَ "" قَدْ قَضَى "". قَالُوا لاَ يَا رَسُولَ اللَّهِ. فَبَكَى النَّبِيُّ صلى الله عليه وسلم فَلَمَّا رَأَى الْقَوْمُ بُكَاءَ النَّبِيِّ صلى الله عليه وسلم بَكَوْا فَقَالَ "" أَلاَ تَسْمَعُونَ إِنَّ اللَّهَ لاَ يُعَذِّبُ بِدَمْعِ الْعَيْنِ، وَلاَ بِحُزْنِ الْقَلْبِ، وَلَكِنْ يُعَذِّبُ بِهَذَا ـ وَأَشَارَ إِلَى لِسَانِهِ ـ أَوْ يَرْحَمُ وَإِنَّ الْمَيِّتَ يُعَذَّبُ بِبُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ "". وَكَانَ عُمَرُ ـ رضى الله عنه ـ يَضْرِبُ فِيهِ بِالْعَصَا، وَيَرْمِي بِالْحِجَارَةِ وَيَحْثِي بِالتُّرَابِ.
பாடம் : 44 நோயாளிக்கு அருகில் அழுவது
1304. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் நோயுற்றபோது நபி (ஸல்) அவர்கள், அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி), சஅத் பின் அபீவக்காஸ் (ரலி), அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) ஆகி யோருடன் நலம் விசாரிக்கச் சென்றார் கள். வீட்டில் நுழைந்தபோது (சஅத் பின் உபாதாவின்) குடும்பத்தார் அவரைச் சூழ்ந்திருப்பதைக் கண்டதும், “என்ன? இறந்துவிட்டாரா?” எனக் கேட்டார்கள். “இல்லை, அல்லாஹ்வின் தூதரே!” என்றனர்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் அழலானார்கள். அவர்கள் அழுவதைக் கண்ட மக்களும் அழத்தொடங்கினர். பிறகு நபி (ஸல்) அவர்கள், “(மக்களே!) நீங்கள் (செவிசாய்த்துக்) கேட்கமாட்டீர்களா? நிச்சயமாகக் கண்கள் அழுவதாலும் உள்ளம் கவலை கொள்வ தாலும் அல்லாஹ் தண்டிப்பதில்லை -பின்பு தமது நாவைச் சுட்டிக்காட்டி- எனினும், இதன் காரணமாகத்தான் தண்டனையோ அருளோ வழங்கு கிறான். நிச்சயமாகக் குடும்பத்தார் (ஒப்பாரிவைத்து) அழுவதால் இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்” என்று கூறினார்கள்.

உமர் (ரலி) அவர்கள் ஒப்பாரி வைப்பவர்களைக் கண்டால், தடியால் அடிப்பார்கள்; கல் எறிவார்கள்; மண் வாரி தூற்றுவார்கள்.

அத்தியாயம் : 23
1305. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ حَوْشَبٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ أَخْبَرَتْنِي عَمْرَةُ، قَالَتْ سَمِعْتُ عَائِشَةَ ـ رضى الله عنها ـ تَقُولُ لَمَّا جَاءَ قَتْلُ زَيْدِ بْنِ حَارِثَةَ وَجَعْفَرٍ وَعَبْدِ اللَّهِ بْنِ رَوَاحَةَ، جَلَسَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُعْرَفُ فِيهِ الْحُزْنُ، وَأَنَا أَطَّلِعُ مِنْ شَقِّ الْبَابِ، فَأَتَاهُ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ نِسَاءَ جَعْفَرٍ وَذَكَرَ بُكَاءَهُنَّ فَأَمَرَهُ بِأَنْ يَنْهَاهُنَّ، فَذَهَبَ الرَّجُلُ ثُمَّ أَتَى فَقَالَ قَدْ نَهَيْتُهُنَّ، وَذَكَرَ أَنَّهُنَّ لَمْ يُطِعْنَهُ، فَأَمَرَهُ الثَّانِيَةَ أَنْ يَنْهَاهُنَّ، فَذَهَبَ، ثُمَّ أَتَى، فَقَالَ وَاللَّهِ لَقَدْ غَلَبْنَنِي أَوْ غَلَبْنَنَا الشَّكُّ مِنْ مُحَمَّدِ بْنِ حَوْشَبٍ ـ فَزَعَمَتْ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" فَاحْثُ فِي أَفْوَاهِهِنَّ التُّرَابَ "". فَقُلْتُ أَرْغَمَ اللَّهُ أَنْفَكَ، فَوَاللَّهِ مَا أَنْتَ بِفَاعِلٍ وَمَا تَرَكْتَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مِنَ الْعَنَاءِ.
பாடம் : 45 ஒப்பாரி வைப்பது, (சப்தமிட்டு) அழுவது ஆகியவற்றைத் தடுப் பதும் அதைக் கண்டிப்பதும்
1305. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது :

(மூத்தா போரில்) ஸைத் பின் ஹாரிஸா (ரலி), ஐஅஃபர் பின் அபீ தாலிப் (ரலி), அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) ஆகியோர் கொல்லப் பட்ட செய்தி வந்தபோது, நபி (ஸல்) அவர்கள் கவலை தோய்ந்த முகத்தோடு அமர்ந்திருந்தார்கள். நான் கதவின் இடைவெளியில் நபி (ஸல்) அவர்களைக் கவனித்துக்கொண்டிருந்தேன்.

அப்போது ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! ஜஅஃபர் (ரலி) அவர்களின் வீட்டுப் பெண்கள் (ஒப்பாரிவைத்து) அழுகிறார்கள்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (அவ்வாறு அழுவதைத்) தடுக்கும்படி அவருக்குக் கட்டளையிட்டார்கள். அவர் சென்று திரும்பிவந்து, “நான் தடுத்தேன்: அவர்கள் எனது சொல்லுக்குக் கட்டுப்படவில்லை” என்றார்.

உடனே நபி (ஸல்) அவர்கள், “(நீர் சென்று) அவர்களைத் தடுத்து நிறுத்துவீராக!” என இரண்டாவது முறையாகக் கட்டளையிட்டார்கள். மீண்டும் அவர் சென்றுவிட்டு வந்து, “அல்லாஹ் வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணை யாக! ‘என்னை (அப்பெண்கள்) மிஞ்சி விட்டனர்’ அல்லது ‘நம்மை அவர்கள் மிஞ்சிவிட்டனர்’ என்றார். அப்போது “அப்பெண்களின் வாயில் மண்ணை அள்ளிப்போடுங்கள்” என நபி (ஸல்) அவர்கள் (கடிந்து) கூறினார்கள் என நான் நினைக்கிறேன்.

பின்னர் அவரை நோக்கி, “அல்லாஹ் உமது மூக்கை மண்ணைக் கவ்வச்செய்வானாக! நபி (ஸல்) அவர்கள் உமக்குக் கட்டளையிட்டதையும் உம் மால் செய்ய முடியவில்லை: நபியவர் களைத் தொந்தரவு செய்வதையும் நீர் நிறுத்தவில்லை” எனக் கூறினேன்.


அத்தியாயம் : 23
1306. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أُمِّ عَطِيَّةَ ـ رضى الله عنها ـ قَالَتْ أَخَذَ عَلَيْنَا النَّبِيُّ صلى الله عليه وسلم عِنْدَ الْبَيْعَةِ أَنْ لاَ نَنُوحَ، فَمَا وَفَتْ مِنَّا امْرَأَةٌ غَيْرَ خَمْسِ نِسْوَةٍ أُمِّ سُلَيْمٍ وَأُمِّ الْعَلاَءِ وَابْنَةِ أَبِي سَبْرَةَ امْرَأَةِ مُعَاذٍ وَامْرَأَتَيْنِ أَوِ ابْنَةِ أَبِي سَبْرَةَ وَامْرَأَةِ مُعَاذٍ وَامْرَأَةٍ أُخْرَى.
பாடம் : 45 ஒப்பாரி வைப்பது, (சப்தமிட்டு) அழுவது ஆகியவற்றைத் தடுப் பதும் அதைக் கண்டிப்பதும்
1306. உம்மு அ(த்)திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒப்பாரிவைக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் உறுதி மொழி வாங்கினார்கள். எனினும். இந்த உறுதிமொழியை எங்களில் ஐந்து பெண் களைத் தவிர வேறு யாரும் நிறை வேற்றவில்லை.

அப்பெண்கள் உம்மு சுலைம் (ரலி), உம்முல் அலா (ரலி), ‘முஆத் (ரலி) அவர்களின் மனைவியான அபூஸப்ராவின் மகள் மேலும் இரண்டு பெண்கள்’ அல்லது ‘அபூஸப்ராவின் மகள், முஆத் (ரலி) உடைய மனைவி, இன்னும் ஒரு பெண்’ ஆகியோர் ஆவர். (அறிவிப்பாளர்களில் ஒருவர் இவ்வாறு ஐயப்பாட்டுடன் அறிவிக்கிறார்.)

அத்தியாயம் : 23
1307. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَامِرِ بْنِ رَبِيعَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا رَأَيْتُمُ الْجَنَازَةَ فَقُومُوا حَتَّى تُخَلِّفَكُمْ "". قَالَ سُفْيَانُ قَالَ الزُّهْرِيُّ أَخْبَرَنِي سَالِمٌ عَنْ أَبِيهِ قَالَ أَخْبَرَنَا عَامِرُ بْنُ رَبِيعَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. زَادَ الْحُمَيْدِيُّ "" حَتَّى تُخَلِّفَكُمْ أَوْ تُوضَعَ "".
பாடம் : 46 பிரேதத்திற்காக எழுந்து நிற்பது
1307. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் பிரேதத்தைக் கண்டால், அது உங்களைக் கடந்து செல்லும்வரை எழுந்து நில்லுங்கள்.

இதை ஆமிர் பின் ரபீஆ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஹுமைதீ (ரஹ்) அவர்களின் அறிவிப் பில், “உங்களைக் கடக்கும்வரை, அல்லது (கீழே) பிரேதம் வைக்கப்படும் வரை (நில்லுங்கள்)” என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம் : 23
1308. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنْ عَامِرِ بْنِ رَبِيعَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا رَأَى أَحَدُكُمْ جَنَازَةً فَإِنْ لَمْ يَكُنْ مَاشِيًا مَعَهَا فَلْيَقُمْ حَتَّى يُخَلِّفَهَا، أَوْ تُخَلِّفَهُ أَوْ تُوضَعَ مِنْ قَبْلِ أَنْ تُخَلِّفَهُ "".
பாடம் : 47 பிரேதத்திற்காக எழுந்தவர் எப்போது அமர வேண்டும்?
1308. நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்:

உங்களில் ஒருவர் பிரேதத்தைக் கண்டும் அதனுடன் நடந்து செல்லப் போவதில்லை என்றால், அவர் அதைக் கடந்து செல்லும்வரை, அல்லது அது அவரைக் கடந்து செல்லும்வரை, அல்லது அது அவருக்கு முன்னால் (கீழே) வைக்கப்படும்வரை எழுந்து நிற்கட்டும்!

இதை ஆமிர் பின் ரபீஆ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 23
1309. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ كُنَّا فِي جَنَازَةٍ فَأَخَذَ أَبُو هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ بِيَدِ مَرْوَانَ فَجَلَسَا قَبْلَ أَنْ تُوضَعَ، فَجَاءَ أَبُو سَعِيدٍ ـ رضى الله عنه ـ فَأَخَذَ بِيَدِ مَرْوَانَ فَقَالَ قُمْ فَوَاللَّهِ لَقَدْ عَلِمَ هَذَا أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَانَا عَنْ ذَلِكَ. فَقَالَ أَبُو هُرَيْرَةَ صَدَقَ.
பாடம் : 47 பிரேதத்திற்காக எழுந்தவர் எப்போது அமர வேண்டும்?
1309. அபூசயீத் கைசான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ஒரு நல்லடக்கத்தில் பங்கேற்றோம். அப்போது அபூஹுரைரா (ரலி) அவர்கள், (மதீனாவின் ஆட்சியராக இருந்த) மர்வான் பின் அல்ஹகம் அவர்களின் கையைப் பற்றினார். பிறகு பிரேதம் (தரையில்) இறக்கி வைக்கப்படுவதற்குமுன் இருவரும் அமர்ந்துவிட்டார்கள்.

அப்போது அங்கு வந்த அபூசயீத் (ரலி) அவர்கள், மர்வானின் கையைப் பிடித்து, “எழுந்திரும்! அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் இ(வ்வாறு அமர்வ)தைத் தடுத்துள்ளார்கள் என்பதை இவர் (அபூஹுரைரா) நன்கு அறிந்துள்ளார்” எனக் கூறினார்கள். உடனே “அபூசயீத் சொன்னது உண்மை தான்” என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அத்தியாயம் : 23
1310. حَدَّثَنَا مُسْلِمٌ ـ يَعْنِي ابْنَ إِبْرَاهِيمَ ـ حَدَّثَنَا هِشَامٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا رَأَيْتُمُ الْجَنَازَةَ فَقُومُوا، فَمَنْ تَبِعَهَا فَلاَ يَقْعُدْ حَتَّى تُوضَعَ "".
பாடம் : 48 பிரேதத்தைப் பின்தொடர்ந்து செல்பவர், பிரேதத்தைச் சுமந்து செல்வோரின் தோளிலிருந்து பிரேதம் இறக்கி வைக்கப்படும் வரை உட்காரக் கூடாது. அதற்குமுன் உட்கார்ந்துவிட் டால் எழும்படி கட்டளை யிடப்படும்.
1310. நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்:

நீங்கள் பிரேதத்தைக் கண்டால் எழுந்து நில்லுங்கள். அதைப் பின் தொடர்ந்து செல்பவர், (அது கீழே) வைக்கப்படும்வரை உட்கார வேண்டாம்.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 23
1311. حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ مِقْسَمٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ مَرَّ بِنَا جَنَازَةٌ فَقَامَ لَهَا النَّبِيُّ صلى الله عليه وسلم وَقُمْنَا بِهِ. فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ، إِنَّهَا جَنَازَةُ يَهُودِيٍّ. قَالَ "" إِذَا رَأَيْتُمُ الْجَنَازَةَ فَقُومُوا "".
பாடம் : 49 யூதரின் பிரேதத்துக்காக எழுந்து நிற்பது
1311. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு பிரேத (ஊர்வல)ம் எங்களைக் கடந்துசென்றது. உடனே நபி (ஸல்) அவர்கள் எழுந்து நின்றார்கள். நாங்களும் எழுந்து நின்றோம்.

பின்பு நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! இது ஒரு யூதரின் பிரேதம்” என்றோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “பிரேதத்தைக் கண்டால் எழுந்து நில்லுங்கள்” எனக் கூறினார்கள்.


அத்தியாயம் : 23
1312. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَمْرُو بْنُ مُرَّةَ، قَالَ سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي لَيْلَى، قَالَ كَانَ سَهْلُ بْنُ حُنَيْفٍ وَقَيْسُ بْنُ سَعْدٍ قَاعِدَيْنِ بِالْقَادِسِيَّةِ، فَمَرُّوا عَلَيْهِمَا بِجَنَازَةٍ فَقَامَا. فَقِيلَ لَهُمَا إِنَّهَا مِنْ أَهْلِ الأَرْضِ، أَىْ مِنْ أَهْلِ الذِّمَّةِ فَقَالاَ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم مَرَّتْ بِهِ جَنَازَةٌ فَقَامَ فَقِيلَ لَهُ إِنَّهَا جَنَازَةُ يَهُودِيٍّ. فَقَالَ " أَلَيْسَتْ نَفْسًا ".
பாடம் : 49 யூதரின் பிரேதத்துக்காக எழுந்து நிற்பது
1312. அப்துர் ரஹ்மான் பின் அபீ லைலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி), கைஸ் பின் சஅத் (ரலி) ஆகியோர் காதிசிய்யாவில் ஓரிடத்தில் அமர்ந் திருந்தபோது, ஒரு பிரேத (ஊர்வல)ம் அவர்களைக் கடந்துசென்றது. உடனே அவர்கள் இருவரும் எழுந்தார்கள். அப்போது அவர்களிடம், “இது இந்நாட்டின் சிறுபான்மையினத்தவரின் (முஸ்லிமல்லாத) பிரேதமல்லவா?” எனக் கேட்கப்பட்டது.

அதற்கு அவ்விருவரும், “நபி (ஸல்) அவர்களைக் கடந்து ஒரு பிரேதம் கொண்டு செல்லப்பட்டபோது அவர்கள் எழுந்து நின்றார்கள். அப்போது அவர்களிடம், “அது யூதரின் பிரேதம்” எனக் கூறப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அதுவும் மனித உயிரில் லையா?’ எனப் பதிலளித்தார்கள்” என்றார்கள்.23


அத்தியாயம் : 23
1313. وَقَالَ أَبُو حَمْزَةَ عَنِ الأَعْمَشِ، عَنْ عَمْرٍو، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، قَالَ كُنْتُ مَعَ قَيْسٍ وَسَهْلٍ ـ رضى الله عنهما ـ فَقَالاَ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم. وَقَالَ زَكَرِيَّاءُ عَنِ الشَّعْبِيِّ عَنِ ابْنِ أَبِي لَيْلَى كَانَ أَبُو مَسْعُودٍ وَقَيْسٌ يَقُومَانِ لِلْجِنَازَةِ.
பாடம் : 49 யூதரின் பிரேதத்துக்காக எழுந்து நிற்பது
1313. இப்னு அபீலைலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் கைஸ் (ரலி) அவர்களுடனும் சஹ்ல் (ரலி) அவர்களுடனும் இருந்தேன். அவர்கள் கூறினார்கள்:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். (அப்போது இது போன்ற சம்பவம் நிகழ்ந்தது என்று கூறும் மற்றோர் அறிவிப்பும் வந்துள்ளது).

அபூமஸ்ஊத் உக்பா (ரலி) அவர்களும் கைஸ் (ரலி) அவர்களும் பிரேதத் திற்காக எழுந்து நின்றார்கள் என்றும் இப்னு அபீலைலா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 23
1314. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا وُضِعَتِ الْجِنَازَةُ وَاحْتَمَلَهَا الرِّجَالُ عَلَى أَعْنَاقِهِمْ، فَإِنْ كَانَتْ صَالِحَةً قَالَتْ قَدِّمُونِي. وَإِنْ كَانَتْ غَيْرَ صَالِحَةٍ قَالَتْ يَا وَيْلَهَا أَيْنَ يَذْهَبُونَ بِهَا يَسْمَعُ صَوْتَهَا كُلُّ شَىْءٍ إِلاَّ الإِنْسَانَ، وَلَوْ سَمِعَهُ صَعِقَ "".
பாடம் : 50 பிரேதத்தை ஆண்களே சுமந்து செல்ல வேண்டும்; பெண்கள் அல்ல.
1314. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பிரேதம் (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தம் தோள்களில் தூக்கிச் செல்லும்போது அந்தப் பிரேதம் நல்லறங்கள் புரிந்ததாக இருக்குமானால், “என்னை விரைந்து கொண்டுசெல்லுங் கள்” என்று கூறும். அது நல்லறங்கள் புரியாததாக இருக்குமானால், “நாசமே! என்னை எங்கே கொண்டுசெல்கிறார் கள்?” என்று கூறும்.

இவ்வாறு அது கூறும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்துப் பொருட் களும் செவியுறும். மனிதன் அதைச் செவியுற்றால் மூர்ச்சையாகிவிடுவான்.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 23
1315. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَفِظْنَاهُ مِنَ الزُّهْرِيِّ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" أَسْرِعُوا بِالْجِنَازَةِ، فَإِنْ تَكُ صَالِحَةً فَخَيْرٌ تُقَدِّمُونَهَا {إِلَيْهِ}، وَإِنْ يَكُ سِوَى ذَلِكَ فَشَرٌّ تَضَعُونَهُ عَنْ رِقَابِكُمْ "".
பாடம் : 51 பிரேதத்தை விரைவாகக் கொண்டுசெல்வது “நீங்கள் பிரேதத்தை அடக்கம் செய்யக் கொண்டுசெல்வதாயிருந்தால் அதன் முன்னால், பின்னால், வலப்புறம், இடப்புறம் என எல்லாப் பக்கமும் நடந்து செல்லுங்கள்” என அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். “அத்துடன் பிரேதத்துக்குச் சமீப மாகவும் நடக்க வேண்டும்” என்று மற்றவர்கள் கூறுகின்றனர்.
1315. நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்:

பிரேதத்தைச் (சுமந்து செல்லும் போது) விரைந்து செல்லுங்கள். அது (பிரேதம்) நல்லறங்கள் புரிந்ததாயிருந் தால், அந்த நன்மையின்பால் அதை விரைந்து கொண்டுசெல்கிறீர்கள், அது வேறுவிதமாக இருந்தால், ஒரு தீங்கை (விரைவில்) உங்கள் தோள்களிலிருந்து இறக்கி வைக்கிறீர்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 23
1316. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقُولُ "" إِذَا وُضِعَتِ الْجِنَازَةُ فَاحْتَمَلَهَا الرِّجَالُ عَلَى أَعْنَاقِهِمْ، فَإِنْ كَانَتْ صَالِحَةً قَالَتْ قَدِّمُونِي. وَإِنْ كَانَتْ غَيْرَ صَالِحَةٍ قَالَتْ لأَهْلِهَا يَا وَيْلَهَا أَيْنَ يَذْهَبُونَ بِهَا يَسْمَعُ صَوْتَهَا كُلُّ شَىْءٍ إِلاَّ الإِنْسَانَ، وَلَوْ سَمِعَ الإِنْسَانُ لَصَعِقَ "".
பாடம் : 52 பிரேதம் சவப்பெட்டியில் இருக் கும்போதே, ‘என்னை விரைந்து கொண்டுசெல்லுங்கள்’ என்று அது கூறுவது
1316. நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்:

பிரேதம் (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தம் தோள்களில் தூக்கிச் செல்லும்போது, அந்தப் பிரேதம் நல்லறங்கள் புரிந்ததாக இருப்பின், “என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள்” என்று கூறும். அது நல்லறங்கள் புரியாததாக இருப்பின், “நாசமே! என்னை எங்கே கொண்டுசெல்கிறார்கள்?” என்று கூறும்.

இவ்வாறு அது கூறும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்துப் பொருட் களும் செவியுறும். மனிதன் அதைச் செவியுற்றால் மூர்ச்சையாகிவிடுவான்.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 23
1317. حَدَّثَنَا مُسَدَّدٌ، عَنْ أَبِي عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم صَلَّى عَلَى النَّجَاشِيِّ، فَكُنْتُ فِي الصَّفِّ الثَّانِي أَوِ الثَّالِثِ.
பாடம் : 53 இறுதித் தொழுகையின்போது இமாமுக்குப் பின்னால் இரண்டு அல்லது மூன்று வரிசைகளாக நிற்பது
1317. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், (அபிசீனிய மன்னர்) நஜாஷீ அவர்களுக்காக இறுதித் தொழுகை நடத்தினார்கள். அப்போது நான் இரண்டாவது அல்லது மூன்றாவது வரிசையில் நின்றிருந்தேன்.

அத்தியாயம் : 23
1318. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ نَعَى النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَى أَصْحَابِهِ النَّجَاشِيَّ، ثُمَّ تَقَدَّمَ فَصَفُّوا خَلْفَهُ فَكَبَّرَ أَرْبَعًا.
பாடம் : 54 இறுதித் தொழுகையின் போது அணிவகுத்து நிற்றல்
1318. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (அபிசீனிய மன்னர்) நஜாஷீ அவர்களின் மரணச் செய்தியைத் தம் தோழர்களுக்கு அறிவித்துவிட்டு, பிறகு சற்று முன்னால் நகர்ந்தார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நின்றதும் நபி (ஸல்) அவர்கள், நான்கு தக்பீர்கள் கூறி (ஜனாஸா) தொழுகை நடத்தினார்கள்.


அத்தியாயம் : 23
1319. حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا الشَّيْبَانِيُّ، عَنِ الشَّعْبِيِّ، قَالَ أَخْبَرَنِي مَنْ، شَهِدَ النَّبِيَّ صلى الله عليه وسلم أَنَّهُ أَتَى عَلَى قَبْرٍ مَنْبُوذٍ فَصَفَّهُمْ وَكَبَّرَ أَرْبَعًا. قُلْتُ مَنْ حَدَّثَكَ قَالَ ابْنُ عَبَّاسٍ رضى الله عنهما.
பாடம் : 54 இறுதித் தொழுகையின் போது அணிவகுத்து நிற்றல்
1319. சுலைமான் பின் அபீசுலைமான் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“நபி (ஸல்) அவர்கள், தனியாக இருந்த ஓர் அடக்கத் தலத்தின் அருகில் வந்து தோழர்களை அணிவகுக்கச் செய்து நான்கு தக்பீர்கள் கூறி (இறுதித் தொழுகை நடத்தி)னார்கள் என்று நபி (ஸல்) அவர்களை நேரில் பார்த்த ஒருவர் என்னிடம் கூறினார்” என ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

நான் “அம்ரின் தந்தை (ஷஅபீ)யே! உமக்குக் கூறிய (அ)வர் யார்?” எனக் கேட்டதும் “இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்தான்” என்று பதிலளித்தார்கள்.


அத்தியாயம் : 23
1320. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، أَنَّ ابْنَ جُرَيْجٍ، أَخْبَرَهُمْ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ يَقُولُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" قَدْ تُوُفِّيَ الْيَوْمَ رَجُلٌ صَالِحٌ مِنَ الْحَبَشِ فَهَلُمَّ فَصَلُّوا عَلَيْهِ "". قَالَ فَصَفَفْنَا فَصَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَيْهِ وَنَحْنُ صُفُوفٌ. قَالَ أَبُو الزُّبَيْرِ عَنْ جَابِرٍ كُنْتُ فِي الصَّفِّ الثَّانِي.
பாடம் : 54 இறுதித் தொழுகையின் போது அணிவகுத்து நிற்றல்
1320. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள், “இன்றைய தினம் அபிசீனியாவைச் சேர்ந்த ஒரு நல்ல மனிதர் (மன்னர் நஜாஷீ) இறந்துவிட்டார். எனவே, வாருங்கள்; அவருக்காக இறுதித் தொழுகை (ஜனாஸா) தொழுங்கள்” என கூறினார்கள்.

நாங்கள் அணிவகுத்து நின்றதும் நபி (ஸல்) அவர்கள் தொழுவித்தார்கள். அப்போது நான் இரண்டாவது வரிசை யில் நின்றிருந்தேன்.

அத்தியாயம் : 23
1321. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا الشَّيْبَانِيُّ، عَنْ عَامِرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مَرَّ بِقَبْرٍ قَدْ دُفِنَ لَيْلاً فَقَالَ "" مَتَى دُفِنَ هَذَا "". قَالُوا الْبَارِحَةَ. قَالَ "" أَفَلاَ آذَنْتُمُونِي "". قَالُوا دَفَنَّاهُ فِي ظُلْمَةِ اللَّيْلِ فَكَرِهْنَا أَنْ نُوقِظَكَ. فَقَامَ فَصَفَفْنَا خَلْفَهُ. قَالَ ابْنُ عَبَّاسٍ وَأَنَا فِيهِمْ فَصَلَّى عَلَيْهِ.
பாடம் : 55 இறுதித் தொழுகையின்போது பெரியவர்களுடன் சிறுவர்கள் அணிவகுத்தல்
1321. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இரவில் அடக்கம் செய்யப்பட்ட ஒருவரின் அடக்கத் தலத்தைக் கடந்து சென்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இது எப்போது அடக்கம் செய்யப்பட்டது?” எனக் கேட்டார்கள். தோழர்கள் ‘நேற்றிரவுதான்’ என்றதும், “எனக்கும் சொல்லியனுப்பியிருக்கக் கூடாதா?” எனக் கேட்டார்கள்.

அதற்கு மக்கள், “அதை நாங்கள் இருள் படர்ந்த இரவில் அடக்கினோம். எனவேதான், உங்களை விழிக்கச்செய்ய விரும்பவில்லை” என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் (தொழத் தயாராக) எழுந்து நின்றார்கள். (சிறுவனாக இருந்த) நான் உட்பட அனைவரும் அவர்களுக் குப் பின்னால் அணிவகுத்ததும் அவர்கள் (ஜனாஸா) தொழுதார்கள்.

அத்தியாயம் : 23
1322. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الشَّيْبَانِيِّ، عَنِ الشَّعْبِيِّ، قَالَ أَخْبَرَنِي مَنْ، مَرَّ مَعَ نَبِيِّكُمْ صلى الله عليه وسلم عَلَى قَبْرٍ مَنْبُوذٍ فَأَمَّنَا فَصَفَفْنَا خَلْفَهُ. فَقُلْنَا يَا أَبَا عَمْرٍو مَنْ حَدَّثَكَ قَالَ ابْنُ عَبَّاسٍ رضى الله عنهما.
பாடம் : 56 இறுதித் தொழுகை நடை முறைப்படுத்தப்படல் நபி (ஸல்) அவர்கள், “யார் இறுதித் தொழுகை தொழுதாரோ...” என்றும், “உங்கள் தோழருக்கு நீங்கள் (இறுதித் தொழுகை) தொழுங்கள்” என்றும், (அபிசீனிய மன்னர்) “நஜாஷிக்கு நீங்கள் (இறுதித்) தொழுகை நடத்துங்கள்” என்றும் கூறியதன் மூலம் அதை ‘தொழுகை’ என்றே குறிப்பிட்டுள் ளார்கள். (நபி (ஸல்) அவர்கள் இதை ‘தொழுகை’ என்று கூறினாலும்) இதில் ருகூஉவோ சஜ்தாவோ கிடையாது; பேசுவதும் கூடாது. ஆனால், தக்பீர் கூறுவதும் சலாம் கொடுப்பதும் உண்டு. இப்னு உமர் (ரலி) அவர்கள், தூய்மையின்றி ஜனாஸா தொழுகை தொழவே மாட்டார்கள்; சூரியன் உதிக்கும்போதும் மறையும்போதும் (ஜனாஸா) தொழமாட்டார்கள்; (தக்பீரின்போது) கைகளை உயர்த்துபவராக இருந்தார்கள். ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் மக்களை (நபித்தோழர்கள் மற்றும் நபித்தோழர் காலத்தவர்களான தாபிஈன்களை)ப் பார்த்திருக்கிறேன். அவர்கள், கடமையான தொழுகையில் தலைமை தாங்கித் தொழுகை நடத்துவதற்கு யார் தகுதியானவரோ அவரையே ஜனாஸா தொழுகைக்கும் தலைமை தாங்கித் தொழுவிக்க தகுதியனவராகக் கருதினார்கள். மேலும், பெருநாள் மற்றும் ஜனாஸா தொழுகையில் யாருக்கேனும் அங்கத் தூய்மை (உளூ) முறிந்துவிட்டால், அவர் தண்ணீரைத் தேடி (உளூச் செய்து)க்கொள்ள வேண்டும். ‘தயம்மும்’ செய்யலாகாது. மக்கள் ஜனாஸா தொழுகை தொழுதுகொண்டிருக்கும் போது (இடையில்) ஒருவர் அங்கு வந்தால், தக்பீர் கூறி அவரும் கூட்டுத் தொழுகையில் (ஜமாஅத்) இணைந்து விட வேண்டியதுதான் என்றும் அவர்கள் கருதினார்கள். இரவானாலும் பகலானாலும் பயணத் தில் இருந்தாலும் ஊரில் இருந்தாலும் ஜனாஸா தொழுகையில் நான்கு தக்பீர் கள் சொல்லப்பட வேண்டும் என்று சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார் கள்: முதல் தக்பீர் (ஜனாஸா) தொழு கையை ஆரம்பிப்பதற்குரியதாகும். ஜனாஸா தொழுகையில் அணிவகுப்பும் இமாமும் உண்டு. மேலும், “(நபியே!) அ(ந்நய)வ(ஞ்சக)ர் களில் யாருக்காகவும் நீர் ஒருபோதும் (இறுதித்) தொழுகை நடத்த வேண்டாம்” (9:84) என அல்லாஹ் கூறியுள்ளான் (இந்த வசனமே, ஜனாஸா தொழுகை மார்க்கத்தில் உள்ளது என்பதற்கான சான்றாகும்.)
1322. சுலைமான் பின் அபீசுலைமான் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“தனியாக இருந்த ஓர் அடக்கத் தலத்தைக் கடந்து சென்ற நபி (ஸல்) அவர்கள், அங்கு எங்களுக்கு இமாமாக நின்று (ஜனாஸா தொழுகை) தொழுவித்தார்கள். நாங்களும் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்துத் தொழுதோம்” என நபி (ஸல்) அவர்களுடன் சென்ற ஒருவர் எனக்கு அறிவித்தார் என்று ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

நாங்கள் “அம்ரின் தந்தை(யாகிய ஷஅபீ)யே! உங்களுக்கு அதை அறிவித்த வர் யார்?” எனக் கேட்டதற்கு, “இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்தான்” என்று ஷஅபீ (ரஹ்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அத்தியாயம் : 23
1323. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، قَالَ سَمِعْتُ نَافِعًا، يَقُولُ حُدِّثَ ابْنُ عُمَرَ، أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنهم ـ يَقُولُ مَنْ تَبِعَ جَنَازَةً فَلَهُ قِيرَاطٌ. فَقَالَ أَكْثَرَ أَبُو هُرَيْرَةَ عَلَيْنَا. فَصَدَّقَتْ ـ يَعْنِي عَائِشَةَ ـ أَبَا هُرَيْرَةَ وَقَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُهُ. فَقَالَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ لَقَدْ فَرَّطْنَا فِي قَرَارِيطَ كَثِيرَةٍ. {فَرَّطْتُ} ضَيَّعْتُ مِنْ أَمْرِ اللَّهِ.
பாடம் : 57 ஜனாஸாவைப் பின்தொடர் வதன் சிறப்பு நீ (ஜனாஸா தொழுகை) தொழுது விட்டால், உன் மீதுள்ளகடமையை நீ நிறைவேற்றிவிட்டாய் என்று ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியுள் ளார்கள். ஜனாஸா தொழுகை தொழுததும் (அடக்கம் செய்வதற்குமுன் திரும்பு வதற்காக இறந்தவரின் உறவினர்களி டம்) அனுமதி பெற வேண்டும் என்ற விதியிருப்பதாக நாம் அறிந்ததில்லை. ஆனாலும், யார் ஜனாஸா தொழுகை தொழுதுவிட்டு (அடக்கப் பணியில் கலந்துகொள்ளாமல்) திரும்பிவிடுகி றாரோ அவருக்கு ஒரு ‘கீராத்’ நன்மை மட்டுமே உண்டு என ஹுமைத் பின் ஹிலால் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
1323. 1324 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

யார் ஜனாஸாவைப் பின்தொடர்கிறாரோ அவருக்கு ஒரு ‘கீராத்’ நன்மை உண்டு என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரலி) அவர்களிடம் அறிவிக்கப்பட்டது. அப்போது அவர்கள், “அபூஹுரைரா (ரலி) அவர்கள் (நபிமொழிகளை) அதிகமாக அறிவிக்கிறார்” என்றார்கள்.24

ஆயிஷா (ரலி) அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களின் (இந்த) அறிவிப்பை உறுதிப்படுத்தியதுடன், நானும் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறக் கேட்டிருக்கிறேன் என்றும் கூறினார்கள்.

இதைக் கேட்ட இப்னு உமர் (ரலி) அவர்கள், “அப்படியாயின் நாம் அதிக மான ‘கீராத்’களைப் பாழ்படுத்தி விட்டோமே!” என்றார்கள்.

அத்தியாயம் : 23