1284. حَدَّثَنَا عَبْدَانُ، وَمُحَمَّدٌ، قَالاَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا عَاصِمُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِي عُثْمَانَ، قَالَ حَدَّثَنِي أُسَامَةُ بْنُ زَيْدٍ ـ رضى الله عنهما ـ قَالَ أَرْسَلَتِ ابْنَةُ النَّبِيِّ صلى الله عليه وسلم إِلَيْهِ إِنَّ ابْنًا لِي قُبِضَ فَائْتِنَا. فَأَرْسَلَ يُقْرِئُ السَّلاَمَ وَيَقُولُ "" إِنَّ لِلَّهِ مَا أَخَذَ وَلَهُ مَا أَعْطَى وَكُلٌّ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى، فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ "". فَأَرْسَلَتْ إِلَيْهِ تُقْسِمُ عَلَيْهِ لَيَأْتِيَنَّهَا، فَقَامَ وَمَعَهُ سَعْدُ بْنُ عُبَادَةَ وَمُعَاذُ بْنُ جَبَلٍ وَأُبَىُّ بْنُ كَعْبٍ وَزَيْدُ بْنُ ثَابِتٍ وَرِجَالٌ، فَرُفِعَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم الصَّبِيُّ وَنَفْسُهُ تَتَقَعْقَعُ ـ قَالَ حَسِبْتُهُ أَنَّهُ قَالَ ـ كَأَنَّهَا شَنٌّ. فَفَاضَتْ عَيْنَاهُ. فَقَالَ سَعْدٌ يَا رَسُولَ اللَّهِ مَا هَذَا فَقَالَ "" هَذِهِ رَحْمَةٌ جَعَلَهَا اللَّهُ فِي قُلُوبِ عِبَادِهِ، وَإِنَّمَا يَرْحَمُ اللَّهُ مِنْ عِبَادِهِ الرُّحَمَاءَ "".
பாடம் : 32 “குடும்பத்தாரின் சில அழுகை யால், இறந்தவர் வேதனை செய்யப்படுவார்” எனும் நபிமொழி இது, ஒப்பாரிவைத்து அழும் பழக்கம் உடையவராக (அதை ஆதரிப்பவராக) இறந்தவர் இருக்கும்போதுதான்.16 ஏனெனில், உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் நரகத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். (66:1) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். அவர் தமது பொறுப்பி லுள்ளவர்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஒப்பாரிவைக்கும் வழக்கமில்லாத ஒருவர் இறந்துவிட்டால் இந்த நிலை இல்லை. ஏனெனில், அவரது நிலை, “பாவியான எவரும் மற்றவரின் பாவத்தைச் சுமப்பதில்லை” (6:164) எனும் இறை வசனத்தை மேற்கோள் காட்டி ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியுள்ளதைப் போன்ற தாகும். அல்லாஹ் கூறுகின்றான்: பளுவான (பாவச்) சுமையைச் சுமப்ப வன், அதில் (சிறிதேனும்) சுமந்துகொள் ளும்படி (வேறொருவனை) அழைத் தாலும் அதில் சிறிதளவுகூட அவ்வாறு சுமக்கப்படாது (35:18) மேலும், ஒப்பாரி இன்றி அழ அனுமதியுண்டு. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அநியாயமாக யார் கொல்லப்பட் டாலும், (ஆதி மனிதர்) ஆதமின் முதல் மகனுக்கு அந்த இரத்தத்தில் (கொலை யில்) ஒரு பங்கு இல்லாமலிருப்பதில்லை. கொலை செய்வதை ஆரம்பித்து வைத்தவர் அவரே என்பதே இதற்குக் காரணம்.
1284. உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் மகள் (ஸைனப்-ரலி) தம் மகன் இறக்கும் தறுவாயில் இருப்பதால் உடனே வரும்படி நபியவர்களுக்குச் செய்தியனுப்பினார். நபி (ஸல்) அவர்கள், தம் மகளுக்கு சலாம் கூறி அனுப்பியதோடு, “எடுத்ததும் கொடுத்ததும் அல்லாஹ்வுக்குரியதே! ஒவ்வொன்றுக்கும் அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணை உண்டு. எனவே, பொறுமையாக இருந்து நன்மையை எதிர்பார்ப்பீராக!” என்றும் கூறி அனுப்பினார்கள்.

அப்போது அவர்களுடைய மகள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு, கண்டிப்பாக வரவேண்டும் எனக் கூறியனுப்பினார். உடனே நபி (ஸல்) அவர்கள் எழுந்தார்கள். அவர்களுடன் சஅத் பின் உபாதா, முஆத் பின் ஜபல், உபை பின் கஅப், ஸைத் பின் ஸாபித் (ரலி) ஆகியோரும் மற்றும் பலரும் எழுந் தனர்.

(வீட்டுக்குச் சென்ற) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறிக்கொண்டி ருந்த குழந்தை எடுத்துத் தரப்பட்டது. இற்றுப்போன பழைய தோல்துருத்தி போல் (குழந்தையின் மார்பு ஏறி இறங்கியது.) நபி (ஸல்) அவர்களின் கண்கள் நீர் சொரிந்தன.

அப்போது “அல்லாஹ்வின் தூதரே! என்ன இது (அழுகிறீர்கள்)?” என சஅத் (ரலி) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இது, அல்லாஹ் தன் அடியார்களின் உள்ளங்களில் ஏற்படுத்திய இரக்க உணர்வாகும். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார் களில் இரக்கமுடையவர்க்கே இரக்கம் காட்டுகிறான்” என்றார்கள்.


அத்தியாயம் : 23
1285. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ، حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، عَنْ هِلاَلِ بْنِ عَلِيٍّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ شَهِدْنَا بِنْتًا لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم جَالِسٌ عَلَى الْقَبْرِ ـ قَالَ فَرَأَيْتُ عَيْنَيْهِ تَدْمَعَانِ قَالَ ـ فَقَالَ "" هَلْ مِنْكُمْ رَجُلٌ لَمْ يُقَارِفِ اللَّيْلَةَ "". فَقَالَ أَبُو طَلْحَةَ أَنَا. قَالَ "" فَانْزِلْ "". قَالَ فَنَزَلَ فِي قَبْرِهَا.
பாடம் : 32 “குடும்பத்தாரின் சில அழுகை யால், இறந்தவர் வேதனை செய்யப்படுவார்” எனும் நபிமொழி இது, ஒப்பாரிவைத்து அழும் பழக்கம் உடையவராக (அதை ஆதரிப்பவராக) இறந்தவர் இருக்கும்போதுதான்.16 ஏனெனில், உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் நரகத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். (66:1) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். அவர் தமது பொறுப்பி லுள்ளவர்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஒப்பாரிவைக்கும் வழக்கமில்லாத ஒருவர் இறந்துவிட்டால் இந்த நிலை இல்லை. ஏனெனில், அவரது நிலை, “பாவியான எவரும் மற்றவரின் பாவத்தைச் சுமப்பதில்லை” (6:164) எனும் இறை வசனத்தை மேற்கோள் காட்டி ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியுள்ளதைப் போன்ற தாகும். அல்லாஹ் கூறுகின்றான்: பளுவான (பாவச்) சுமையைச் சுமப்ப வன், அதில் (சிறிதேனும்) சுமந்துகொள் ளும்படி (வேறொருவனை) அழைத் தாலும் அதில் சிறிதளவுகூட அவ்வாறு சுமக்கப்படாது (35:18) மேலும், ஒப்பாரி இன்றி அழ அனுமதியுண்டு. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அநியாயமாக யார் கொல்லப்பட் டாலும், (ஆதி மனிதர்) ஆதமின் முதல் மகனுக்கு அந்த இரத்தத்தில் (கொலை யில்) ஒரு பங்கு இல்லாமலிருப்பதில்லை. கொலை செய்வதை ஆரம்பித்து வைத்தவர் அவரே என்பதே இதற்குக் காரணம்.
1285. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் மகள் (ஒருவரை அடக்கம் செய்யும்போது அவருக்கு) அருகே நாங்கள் இருந்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், குழியின் அருகே அமர்ந்திருந்தார்கள். அப்போது அவர்களின் கண்கள் கண்ணீர் வடித்ததை நான் கண்டேன்.

“இன்றிரவு தம் மனைவியோடு தாம்பத்திய உறவு கொள்ளாதவர் யாரேனும் உங்களில் உண்டா?”என வினவினார்கள். “நான் உள்ளேன்” என அபூதல்ஹா (ரலி) அவர்கள் கூறியவுடன், அவரை குழியினுள் இறங்குமாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவரும் (நபியவர்களின் மகளுடைய) குழிக்குள் இறங்கினார்.17


அத்தியாயம் : 23
1286. حَدَّثَنَا عَبْدَانُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي مُلَيْكَةَ، قَالَ تُوُفِّيَتِ ابْنَةٌ لِعُثْمَانَ ـ رضى الله عنه ـ بِمَكَّةَ وَجِئْنَا لِنَشْهَدَهَا، وَحَضَرَهَا ابْنُ عُمَرَ وَابْنُ عَبَّاسٍ ـ رضى الله عنهم ـ وَإِنِّي لَجَالِسٌ بَيْنَهُمَا ـ أَوْ قَالَ جَلَسْتُ إِلَى أَحَدِهِمَا. ثُمَّ جَاءَ الآخَرُ، فَجَلَسَ إِلَى جَنْبِي فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عَمَرَ ـ رضى الله عنهما ـ لِعَمْرِو بْنِ عُثْمَانَ أَلاَ تَنْهَى عَنِ الْبُكَاءِ، فَإِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ الْمَيِّتَ لَيُعَذَّبُ بِبُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ ". فَقَالَ ابْنُ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَدْ كَانَ عُمَرُ ـ رضى الله عنه ـ يَقُولُ بَعْضَ ذَلِكَ، ثُمَّ حَدَّثَ قَالَ صَدَرْتُ مَعَ عُمَرَ ـ رضى الله عنه ـ مِنْ مَكَّةَ حَتَّى إِذَا كُنَّا بِالْبَيْدَاءِ، إِذَا هُوَ بِرَكْبٍ تَحْتَ ظِلِّ سَمُرَةٍ فَقَالَ اذْهَبْ، فَانْظُرْ مَنْ هَؤُلاَءِ الرَّكْبُ قَالَ فَنَظَرْتُ فَإِذَا صُهَيْبٌ، فَأَخْبَرْتُهُ فَقَالَ ادْعُهُ لِي. فَرَجَعْتُ إِلَى صُهَيْبٍ فَقُلْتُ ارْتَحِلْ فَالْحَقْ أَمِيرَ الْمُؤْمِنِينَ. فَلَمَّا أُصِيبَ عُمَرُ دَخَلَ صُهَيْبٌ يَبْكِي يَقُولُ وَاأَخَاهُ، وَاصَاحِبَاهُ. فَقَالَ عُمَرُ ـ رضى الله عنه ـ يَا صُهَيْبُ أَتَبْكِي عَلَىَّ وَقَدْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ الْمَيِّتَ يُعَذَّبُ بِبَعْضِ بُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ ". قَالَ ابْنُ عَبَّاسٍ ـ رضى الله عنهما فَلَمَّا مَاتَ عُمَرُ ـ رضى الله عنه ـ ذَكَرْتُ ذَلِكَ لِعَائِشَةَ ـ رضى الله عنها ـ فَقَالَتْ رَحِمَ اللَّهُ عُمَرَ، وَاللَّهِ مَا حَدَّثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِنَّ اللَّهَ لَيُعَذِّبُ الْمُؤْمِنَ بِبُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ. وَلَكِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ اللَّهَ لَيَزِيدُ الْكَافِرَ عَذَابًا بِبُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ ". وَقَالَتْ حَسْبُكُمُ الْقُرْآنُ {وَلاَ تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى}. قَالَ ابْنُ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عِنْدَ ذَلِكَ وَاللَّهُ هُوَ أَضْحَكَ وَأَبْكَى. قَالَ ابْنُ أَبِي مُلَيْكَةَ وَاللَّهِ مَا قَالَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ شَيْئًا.
பாடம் : 32 “குடும்பத்தாரின் சில அழுகை யால், இறந்தவர் வேதனை செய்யப்படுவார்” எனும் நபிமொழி இது, ஒப்பாரிவைத்து அழும் பழக்கம் உடையவராக (அதை ஆதரிப்பவராக) இறந்தவர் இருக்கும்போதுதான்.16 ஏனெனில், உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் நரகத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். (66:1) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். அவர் தமது பொறுப்பி லுள்ளவர்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஒப்பாரிவைக்கும் வழக்கமில்லாத ஒருவர் இறந்துவிட்டால் இந்த நிலை இல்லை. ஏனெனில், அவரது நிலை, “பாவியான எவரும் மற்றவரின் பாவத்தைச் சுமப்பதில்லை” (6:164) எனும் இறை வசனத்தை மேற்கோள் காட்டி ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியுள்ளதைப் போன்ற தாகும். அல்லாஹ் கூறுகின்றான்: பளுவான (பாவச்) சுமையைச் சுமப்ப வன், அதில் (சிறிதேனும்) சுமந்துகொள் ளும்படி (வேறொருவனை) அழைத் தாலும் அதில் சிறிதளவுகூட அவ்வாறு சுமக்கப்படாது (35:18) மேலும், ஒப்பாரி இன்றி அழ அனுமதியுண்டு. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அநியாயமாக யார் கொல்லப்பட் டாலும், (ஆதி மனிதர்) ஆதமின் முதல் மகனுக்கு அந்த இரத்தத்தில் (கொலை யில்) ஒரு பங்கு இல்லாமலிருப்பதில்லை. கொலை செய்வதை ஆரம்பித்து வைத்தவர் அவரே என்பதே இதற்குக் காரணம்.
1286. 1287 & 1288 அப்துல்லாஹ் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மக்காவில் உஸ்மான் (ரலி) அவர் களுடைய மகள் (உம்மு அபான்) இறந்த போது நாங்கள் (ஜனாஸாவில்) கலந்து கொள்வதற்காக அங்கு சென்றோம். அங்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் வந்திருந்தனர். நான் ‘அவர்களிருவருக் கும் நடுவில்’ அல்லது ‘அவர்களில் ஒருவருக்கு அருகில்’ அமர்ந்திருந்தேன். பிறகு மற்றொருவர் வந்து என்னருகில் அமர்ந்தார்.

அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், உஸ்மான் (ரலி) உடைய மகன் அம்ர் (ரஹ்) அவர்களிடம், “(சப்த மிட்டு) அழுபவர்களை நீர் தடுக்க வேண்டாமா? ஏனெனில், அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘குடும்பத் தார் (சப்தமிட்டு) அழுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்’ எனக் கூறியுள்ளார்கள்” என்றார்கள்.

உடனே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “உமர் (ரலி) அவர்கள் இதே போன்ற சில ஹதீஸ்களைக் கூறிக் கொண்டிருந்தார்கள். நான் உமர் (ரலி) அவர்களுடன் மக்காவிலிருந்து புறப்பட்டேன். நாங்கள் ‘பைதா’ எனும் இடத்தை அடைந்தோம். அங்கு கருவேல மரத்தின் நிழலில் ஒரு பயணக் கூட்டம் நிற்பதைக் கண்டோம்.

அப்போது “நீர் சென்று அப்பயணக் கூட்டம் யாரெனப் பார்த்து வாரீர்’ என உமர் (ரலி) அவர்கள் என்னை அனுப்பினார்கள். நான் அங்கு (சென்று) பார்த்தபோது அங்கே ஸுஹைப் (ரலி) அவர்கள் இருந்தார்கள். அதை உமர் (ரலி) அவர்களிடம் தெரிவித்தேன். “அவரை என்னிடம் அழைத்து வாரீர்” என உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். நான் ஸுஹைப் அவர்களிடம் சென்று, “இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் (அமீருல் முஃமினீன்) அவர்களைச் சந்திக்கப் புறப்படுங்கள்” எனக் கூறினேன்.

பின்னர் (சிறிது காலம் கழித்து) உமர் (ரலி) அவர்கள் (கத்தியால்) குத்தப்பட்ட போது, ‘சகோதரரே! நண்பரே!’ எனக் கூறி அழுதவராக ஸுஹைப் (ரலி) அவர்கள் அங்கு வந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், “ஸுஹைபே! எனக்காகவா நீர் அழுகிறீர்? குடும்பத் தார் (சப்தமிட்டு) அழுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார் களல்லவா?” என்றார்கள். உமர் (ரலி) அவர்கள் இறந்தபோது, (அவர்கள்) இறப்பதற்குமுன் கூறிய செய்தியை நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறினேன்.

அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “அல்லாஹ் உமருக்கு அருள் புரிவானாக! அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘குடும்பத்தார் அழுவதன் காரணமாக இறைநம்பிக்கையாளரை (முஃமின்) அல்லாஹ் வேதனை செய்வான்’ எனக் கூறவில்லை. மாறாக, ‘குடும்பத்தார் (சப்தமிட்டு) அழுவதன் காரணத்தால் இறைமறுப்பாளருக்கு அல்லாஹ் நிச்சயமாக வேதனையை அதிகமாக்குகிறான்’ என்றே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று சொல்லிவிட்டு, ‘பாவியான எவரும் மற்றவரின் பாவத்தைச் சுமப்பதில்லை” (6:164) எனும் இறைவசனம் உங்களுக்குப் போதுமே” என்றும் கூறினார்கள்.

இதைக் கூறி முடித்த பொழுது “சிரிக்கச் செய்பவனும் அழ வைப்பவ னும் அவனே” (53:43) என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

“அல்லாஹ்வின் மீதாணையாக! இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் இச் சொல்லைத் செவியுற்ற அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் இதைப் பற்றி எதுவும் கூறவில்லை” என்று இப்னு அபீமுலைக்கா (ரஹ்) அவர்கள் கூறி னார்கள்.


அத்தியாயம் : 23
1289. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهَا أَخْبَرَتْهُ أَنَّهَا، سَمِعَتْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ إِنَّمَا مَرَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى يَهُودِيَّةٍ يَبْكِي عَلَيْهَا أَهْلُهَا فَقَالَ "" إِنَّهُمْ لَيَبْكُونَ عَلَيْهَا، وَإِنَّهَا لَتُعَذَّبُ فِي قَبْرِهَا "".
பாடம் : 32 “குடும்பத்தாரின் சில அழுகை யால், இறந்தவர் வேதனை செய்யப்படுவார்” எனும் நபிமொழி இது, ஒப்பாரிவைத்து அழும் பழக்கம் உடையவராக (அதை ஆதரிப்பவராக) இறந்தவர் இருக்கும்போதுதான்.16 ஏனெனில், உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் நரகத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். (66:1) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். அவர் தமது பொறுப்பி லுள்ளவர்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஒப்பாரிவைக்கும் வழக்கமில்லாத ஒருவர் இறந்துவிட்டால் இந்த நிலை இல்லை. ஏனெனில், அவரது நிலை, “பாவியான எவரும் மற்றவரின் பாவத்தைச் சுமப்பதில்லை” (6:164) எனும் இறை வசனத்தை மேற்கோள் காட்டி ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியுள்ளதைப் போன்ற தாகும். அல்லாஹ் கூறுகின்றான்: பளுவான (பாவச்) சுமையைச் சுமப்ப வன், அதில் (சிறிதேனும்) சுமந்துகொள் ளும்படி (வேறொருவனை) அழைத் தாலும் அதில் சிறிதளவுகூட அவ்வாறு சுமக்கப்படாது (35:18) மேலும், ஒப்பாரி இன்றி அழ அனுமதியுண்டு. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அநியாயமாக யார் கொல்லப்பட் டாலும், (ஆதி மனிதர்) ஆதமின் முதல் மகனுக்கு அந்த இரத்தத்தில் (கொலை யில்) ஒரு பங்கு இல்லாமலிருப்பதில்லை. கொலை செய்வதை ஆரம்பித்து வைத்தவர் அவரே என்பதே இதற்குக் காரணம்.
1289. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

“இப்பெண் இறந்ததற்காக இவர்கள் அழுதுகொண்டிருக்கிறார்கள், அவளோ சவக்குழியில் வேதனை செய்யப்படுகி றாள்” என்று யூதப் பெண்ணொருத்தி இறந்ததற்காக அவளுடைய குடும்பத் தார் அழுதுகொண்டிருப்பதைப் பார்த்த போதுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இறைநம்பிக்கை யாளர்கள் தொடர்பாக இவ்வாறு கூறவில்லை).


அத்தியாயம் : 23
1290. حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ خَلِيلٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ ـ وَهْوَ الشَّيْبَانِيُّ ـ عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ لَمَّا أُصِيبَ عُمَرُ ـ رضى الله عنه ـ جَعَلَ صُهَيْبٌ يَقُولُ وَاأَخَاهُ. فَقَالَ عُمَرُ أَمَا عَلِمْتَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ الْمَيِّتَ لَيُعَذَّبُ بِبُكَاءِ الْحَىِّ "".
பாடம் : 32 “குடும்பத்தாரின் சில அழுகை யால், இறந்தவர் வேதனை செய்யப்படுவார்” எனும் நபிமொழி இது, ஒப்பாரிவைத்து அழும் பழக்கம் உடையவராக (அதை ஆதரிப்பவராக) இறந்தவர் இருக்கும்போதுதான்.16 ஏனெனில், உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் நரகத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். (66:1) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். அவர் தமது பொறுப்பி லுள்ளவர்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஒப்பாரிவைக்கும் வழக்கமில்லாத ஒருவர் இறந்துவிட்டால் இந்த நிலை இல்லை. ஏனெனில், அவரது நிலை, “பாவியான எவரும் மற்றவரின் பாவத்தைச் சுமப்பதில்லை” (6:164) எனும் இறை வசனத்தை மேற்கோள் காட்டி ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியுள்ளதைப் போன்ற தாகும். அல்லாஹ் கூறுகின்றான்: பளுவான (பாவச்) சுமையைச் சுமப்ப வன், அதில் (சிறிதேனும்) சுமந்துகொள் ளும்படி (வேறொருவனை) அழைத் தாலும் அதில் சிறிதளவுகூட அவ்வாறு சுமக்கப்படாது (35:18) மேலும், ஒப்பாரி இன்றி அழ அனுமதியுண்டு. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அநியாயமாக யார் கொல்லப்பட் டாலும், (ஆதி மனிதர்) ஆதமின் முதல் மகனுக்கு அந்த இரத்தத்தில் (கொலை யில்) ஒரு பங்கு இல்லாமலிருப்பதில்லை. கொலை செய்வதை ஆரம்பித்து வைத்தவர் அவரே என்பதே இதற்குக் காரணம்.
1290. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்கள் (கத்தியால் குத்தப்பட்டு) காயமுற்றிருந்தபோது, ‘சகோதரரே’ எனக் கூறியவராக ஸுஹைப் (ரலி) அவர்கள் (சப்தமிட்டு) அழத் தொடங்கினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், “உயிரோடிருப்பவர்கள் அழுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார் என நபி (ஸல்) அவர்கள் கூறியதை நீர் அறியவில்லையா?” எனக் கேட்டார்கள்.18

அத்தியாயம் : 23
1291. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُبَيْدٍ، عَنْ عَلِيِّ بْنِ رَبِيعَةَ، عَنِ الْمُغِيرَةِ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" إِنَّ كَذِبًا عَلَىَّ لَيْسَ كَكَذِبٍ عَلَى أَحَدٍ، مَنْ كَذَبَ عَلَىَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ "". سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" مَنْ نِيحَ عَلَيْهِ يُعَذَّبُ بِمَا نِيحَ عَلَيْهِ "".
பாடம் 33 இறந்தவருக்காக ஒப்பாரி வைத்து அழுவது வெறுக்கத் தக்கதாகும். “அபூசுலைமான் (காலித் பின் அல் வலீத்-ரலி) அவர்களின் இறப்புக்காக அழுது கொண்டிருக்கும் இப்பெண்களை இந்நிலையிலேயே (தடுக்காமல்) விட்டு விடுங்கள்; அவர்கள் தம் தலையில் மண்ணை வாரி இறைக்காமலும் (நக்உ) கூச்சலிடாமலும் (லக்லகா) இருக்கும்வரை” என உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
1291. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என்மீது கூறும் பொய் (உங்களில்) ஒருவர்மீது கூறும் பொய்யைப் போன்ற தன்று. யார் என்மீது வேண்டுமென்றே பொய்யுரைக்கிறாரோ அவர் தமது இருப் பிடத்தை நரகத்தில் ஆக்கிக்கொள்ளட் டும்: மேலும், யாருக்காக ஒப்பாரிவைக்கப் படுகிறதோ அவர் அதனால் (மறுமை நாளில்) வேதனை செய்யப்படுவார்.

இதை முஃகீரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 23
1292. حَدَّثَنَا عَبْدَانُ، قَالَ أَخْبَرَنِي أَبِي، عَنْ شُعْبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" الْمَيِّتُ يُعَذَّبُ فِي قَبْرِهِ بِمَا نِيحَ عَلَيْهِ "". تَابَعَهُ عَبْدُ الأَعْلَى حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ حَدَّثَنَا سَعِيدٌ حَدَّثَنَا قَتَادَةُ. وَقَالَ آدَمُ عَنْ شُعْبَةَ "" الْمَيِّتُ يُعَذَّبُ بِبُكَاءِ الْحَىِّ عَلَيْهِ "".
பாடம் 33 இறந்தவருக்காக ஒப்பாரி வைத்து அழுவது வெறுக்கத் தக்கதாகும். “அபூசுலைமான் (காலித் பின் அல் வலீத்-ரலி) அவர்களின் இறப்புக்காக அழுது கொண்டிருக்கும் இப்பெண்களை இந்நிலையிலேயே (தடுக்காமல்) விட்டு விடுங்கள்; அவர்கள் தம் தலையில் மண்ணை வாரி இறைக்காமலும் (நக்உ) கூச்சலிடாமலும் (லக்லகா) இருக்கும்வரை” என உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
1292. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒப்பாரிவைக்கப்படுவதால், இறந்தவர் அடக்கத் தலத்தில் வேதனை செய்யப் படுகிறார்.

இதை உமர் (ரலி) அவர்கள் அறி விக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஆதம் பின் இயாஸ் (ரஹ்) அவர்கள் வழியாக வரும் ஷுஅபா (ரஹ்) அவர் களின் அறிவிப்பில், “உயிருள்ளவர்கள் (ஒப்பாரிவைத்து) அழுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படு கின்றார்” எனக் காணப்படுகிறது.

அத்தியாயம் : 23
1293. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا ابْنُ الْمُنْكَدِرِ، قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ جِيءَ بِأَبِي يَوْمَ أُحُدٍ، قَدْ مُثِّلَ بِهِ حَتَّى وُضِعَ بَيْنَ يَدَىْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَقَدْ سُجِّيَ ثَوْبًا فَذَهَبْتُ أُرِيدُ أَنْ أَكْشِفَ عَنْهُ فَنَهَانِي قَوْمِي، ثُمَّ ذَهَبْتُ أَكْشِفُ عَنْهُ فَنَهَانِي قَوْمِي، فَأَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَرُفِعَ فَسَمِعَ صَوْتَ صَائِحَةٍ فَقَالَ "" مَنْ هَذِهِ "". فَقَالُوا ابْنَةُ عَمْرٍو أَوْ أُخْتُ عَمْرٍو. قَالَ "" فَلِمَ تَبْكِي أَوْ لاَ تَبْكِي فَمَا زَالَتِ الْمَلاَئِكَةُ تُظِلُّهُ بِأَجْنِحَتِهَا حَتَّى رُفِعَ "".
பாடம் : 34
1293. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உஹுத் போர் தினத்தன்று உறுப் புகள் சிதைக்கப்பட்ட நிலையில் என் தந்தையின் உடல் கொண்டுவரப்பட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முன்னிலையில் வைக்கப்பட்டது. அவ்வுடல்மீது ஒரு துணி போர்த்தப் பட்டிருந்தது. அப்போது நான் சென்று அந்தத் துணியை நீக்கி (என் தந்தை யை)ப் பார்க்க விரும்பினேன். எனினும், என் சமூகத்தார் என்னைத் தடுத்து விட்டனர். நான் மீண்டும் சென்று துணியை நீக்க முனைந்தேன். மீண்டும் என் சமூகத்தார் என்னைத் தடுத்துவிட்டனர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பிரேதத்தைத் தூக்கும்படி) கட்டளையிட்டார்கள். (பிரேதம்) தூக்கப்பட்டபோது ஒரு பெண் சப்தமாக அழுவதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், “யார் அந்தப் பெண்?” என்று கேட்டார்கள். ‘அம்ர் (பின் ஹராம்) அவர்களின் மகள்’ என்றோ அல்லது ‘அம்ருடைய சகோதரி’ என்றோ (கூடியிருந்தோர்) கூறினர்.

நபி (ஸல்) அவர்கள், ‘நீ ஏன் அழு கிறாய்?’ அல்லது ‘நீ அழ வேண்டாம்’ என்று கூறிவிட்டு, “பிரேதம் தூக்கப் படும்வரை வானவர்கள் தங்களின் இறக்கைகளை விரித்து அதற்கு நிழல் கொடுத்துக்கொண்டிருந்தார்கள்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 23
1294. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا زُبَيْدٌ الْيَامِيُّ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لَيْسَ مِنَّا مَنْ لَطَمَ الْخُدُودَ، وَشَقَّ الْجُيُوبَ، وَدَعَا بِدَعْوَى الْجَاهِلِيَّةِ "".
பாடம் : 35 (துக்கத்தில்) சட்டைப் பைகளை கிழித்துக்கொள்பவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்.
1294. நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்.

(துன்பத்தில்) கன்னங்களில் அறைந்து கொள்பவரும் சட்டைப் பைகளைக் கிழித்துக்கொள்பவரும் அறியாமைக்கால வழக்கப்படி புலம்புகின்றவரும் நம்மைச் சார்ந்தவர் அல்லர்.19

இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 23
1295. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَامِرِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَعُودُنِي عَامَ حَجَّةِ الْوَدَاعِ مِنْ وَجَعٍ اشْتَدَّ بِي فَقُلْتُ إِنِّي قَدْ بَلَغَ بِي مِنَ الْوَجَعِ وَأَنَا ذُو مَالٍ، وَلاَ يَرِثُنِي إِلاَّ ابْنَةٌ، أَفَأَتَصَدَّقُ بِثُلُثَىْ مَالِي قَالَ "" لاَ "". فَقُلْتُ بِالشَّطْرِ فَقَالَ "" لاَ "" ثُمَّ قَالَ "" الثُّلُثُ وَالثُّلْثُ كَبِيرٌ ـ أَوْ كَثِيرٌ ـ إِنَّكَ أَنْ تَذَرَ وَرَثَتَكَ أَغْنِيَاءَ خَيْرٌ مِنْ أَنْ تَذَرَهُمْ عَالَةً يَتَكَفَّفُونَ النَّاسَ، وَإِنَّكَ لَنْ تُنْفِقَ نَفَقَةً تَبْتَغِي بِهَا وَجْهَ اللَّهِ إِلاَّ أُجِرْتَ بِهَا، حَتَّى مَا تَجْعَلُ فِي فِي امْرَأَتِكَ "". فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ، أُخَلَّفُ بَعْدَ أَصْحَابِي قَالَ "" إِنَّكَ لَنْ تُخَلَّفَ فَتَعْمَلَ عَمَلاً صَالِحًا إِلاَّ ازْدَدْتَ بِهِ دَرَجَةً وَرِفْعَةً، ثُمَّ لَعَلَّكَ أَنْ تُخَلَّفَ حَتَّى يَنْتَفِعَ بِكَ أَقْوَامٌ وَيُضَرَّ بِكَ آخَرُونَ، اللَّهُمَّ أَمْضِ لأَصْحَابِي هِجْرَتَهُمْ، وَلاَ تَرُدَّهُمْ عَلَى أَعْقَابِهِمْ، لَكِنِ الْبَائِسُ سَعْدُ ابْنُ خَوْلَةَ، يَرْثِي لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ مَاتَ بِمَكَّةَ "".
பாடம் : 36 சஅத் பின் கவ்லா (ரலி) அவர்களுக்காக நபி (ஸல்) அவர்கள் இரங்கல் தெரிவித்தது
1295. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது கடும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த என்னை நலம் விசாரிக்க வரும் வழக்கமுடையவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்தார்கள்.

அப்போது நான் அவர்களிடம், “(அல்லாஹ்வின் தூதரே!) எனக்குக் கடுமையான நோய் ஏற்பட்டுவிட்டது. நான் தனவந்தன்; ஒரு மகளைத் தவிர வேறு யாரும் எனக்கு வாரிசுக்காரர்கள் இல்லை: எனவே, எனது செல்வத்தில் மூன்றில் இரண்டு பாகம் நான் தர்மம் செய்துவிடட்டுமா?” எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “வேண்டாம்” என்றார்கள்.

பின்னர் நான், “பாதியை(க் கொடுக் கட்டுமா)?” எனக் கேட்டேன். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் “வேண்டாம்: மூன்றில் ஒரு பாகம் வேண்டுமானால் தர்மம் செய்வீராக! அதுவும் அதிகம் தான்; ஏனெனில், உம்முடைய வாரிசு களை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டுச்செல்வதைவிட தன்னிறைவுடையவர்களாக விட்டுச் செல்வதே சிறந்தது. அல்லாஹ்வின் அன்பை வேண்டி நீர் செய்கின்ற எந்த ஒரு செலவானாலும் சரி. அதற்காக உமக்கு நன்மை கொடுக்கப்படாமல் இருப்பதில்லை; நீர் உம்முடைய மனைவியின் வாயில் இடுகின்ற உணவுக் கவளத்திற்கும்கூட (உமக்கு நன்மையுண்டு)” என்று கூறினார்கள்.

நான் அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! (என் தோழர்களெல்லாரும் மதீனாவுக்குச் சென்றுவிடுவார்கள்) நான் மட்டும் இங்கு (மக்காவில்) பின்தங்கியவனாக ஆகிவிடுவேனே!” எனக் கேட்டேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீர் இங்கு இருந்தபோதிலும் நல்லறங்கள் செய்துகொண்டே இருந்தால், உமது தகுதியும் மேன்மையும் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கும்” எனக் கூறிவிட்டு, “உம்மை வைத்துச் சில கூட்டத்தார் நன்மை அடைவதற்காகவும் வேறுசிலர் துன்பம் அடைவதற்காகவும் நீர் இங்கேயே தங்க வைக்கப்படலாம்” என்று கூறினார்கள்.20

பின்னர் “இறைவா! என் தோழர் களின் ஹிஜ்ரத்தை முழுமையாக்கு வாயாக! அவர்களைத் தம் கால் சுவடு களின் வழியே (முந்திய மார்க்கத்திற்கே) திரும்பிச் செல்லும்படி செய்துவிடாதே!” எனப் பிரார்த்தித்தார்கள்.

நோயாளியாயிருந்த சஅத் பின் கவ்லா (ரலி) அவர்கள் மக்காவிலேயே இறந்துவிட்டதற்காக “பாவம் சஅத் பின் கவ்லா (அவர் நினைத்தது நடக்க வில்லை)” என்று நபி (ஸல்) அவர்கள் இரங்கல் தெரிவித்தார்கள்.21

அத்தியாயம் : 23
1296. وَقَالَ الْحَكَمُ بْنُ مُوسَى حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جَابِرٍ، أَنَّ الْقَاسِمَ بْنَ مُخَيْمِرَةَ، حَدَّثَهُ قَالَ حَدَّثَنِي أَبُو بُرْدَةَ بْنُ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ قَالَ وَجِعَ أَبُو مُوسَى وَجَعًا فَغُشِيَ عَلَيْهِ، وَرَأْسُهُ فِي حَجْرِ امْرَأَةٍ مِنْ أَهْلِهِ، فَلَمْ يَسْتَطِعْ أَنْ يَرُدَّ عَلَيْهَا شَيْئًا، فَلَمَّا أَفَاقَ قَالَ أَنَا بَرِيءٌ مِمَّنْ بَرِئَ مِنْهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم، إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَرِئَ مِنَ الصَّالِقَةِ وَالْحَالِقَةِ وَالشَّاقَّةِ.
பாடம் : 37 துக்கத்தைத் தெரிவிக்க மொட்டையடித்துக்கொள்வது தடுக்கப்பட்டுள்ளது.
1296. அபூபுர்தா ஆமிர் பின் அபீமூசா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) அபூமூசா (ரலி) அவர்கள் தமது கடுமையான நோயால் மயக்க மடைந்துவிட்டார்கள். அவர்களின் தலை அன்னாருடைய மனைவியின் மடியில் இருந்தது. (தம் மனைவியின் எந்தப் பேச்சுக்கும்) அவரால் பதில் சொல்ல முடியவில்லை.

பின்பு மயக்கம் தெளிந்தபோது, “நபி (ஸல்) அவர்கள், (துன்பத்தின்போது) அதிகமாகச் சப்தமிட்டு அழும் பெண்ணை விட்டும் மொட்டையடித்துக் கொள்ளும் பெண்ணைவிட்டும் ஆடைகளைக் கிழித் துக்கொள்ளும் பெண்ணைவிட்டும் தமது பொறுப்பை விலக்கிக் கொள்வதாக அறிவித்தார்கள். எவரிடமிருந்து நபி (ஸல்) அவர்கள் தமது பொறுப்பை விலக்கிக் கொண்டார்களோ அவரிடமிருந்து நானும் பொறுப்பை விலக்கிக்கொள்கிறேன்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 23
1297. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لَيْسَ مِنَّا مَنْ ضَرَبَ الْخُدُودَ، وَشَقَّ الْجُيُوبَ، وَدَعَا بِدَعْوَى الْجَاهِلِيَّةِ "".
பாடம் : 38 (துக்கத்தால்) கன்னங்களில் அறைந்துகொள்பவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்.
1297. நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்:

(துக்கத்தால்) கன்னங்களில் அறைந்துகொள்பவரும் சட்டைப்பைகளைக் கிழித்துக்கொள்பவரும் அறியாமைக்கால வழக்கப்படி புலம்புகின்றவரும் நம்மைச் சார்ந்தவர்கள் அல்லர்.

இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 23
1298. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لَيْسَ مِنَّا مَنْ ضَرَبَ الْخُدُودَ، وَشَقَّ الْجُيُوبَ، وَدَعَا بِدَعْوَى الْجَاهِلِيَّةِ "".
பாடம் : 39 துயரத்தின்போது ‘எனக்கு நேர்ந்த நாசமே!’ என்பது உள்ளிட்ட அறியாமைக்கால புலம்பல்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
1298. நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்:

(துன்பத்தின்போது) கன்னங்களில் அறைந்துகொள்பவரும், சட்டைப் பைகளைக் கிழித்துக்கொள்பவரும், அறியாமைக் கால வழக்கப்படி புலம்பு கின்றவரும் நம்மைச் சார்ந்தவர் அல்லர்.

இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 23
1299. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، قَالَ سَمِعْتُ يَحْيَى، قَالَ أَخْبَرَتْنِي عَمْرَةُ، قَالَتْ سَمِعْتُ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ لَمَّا جَاءَ النَّبِيَّ صلى الله عليه وسلم قَتْلُ ابْنِ حَارِثَةَ وَجَعْفَرٍ وَابْنِ رَوَاحَةَ جَلَسَ يُعْرَفُ فِيهِ الْحُزْنُ، وَأَنَا أَنْظُرُ مِنْ صَائِرِ الْبَابِ ـ شَقِّ الْبَابِ ـ فَأَتَاهُ رَجُلٌ، فَقَالَ إِنَّ نِسَاءَ جَعْفَرٍ، وَذَكَرَ بُكَاءَهُنَّ، فَأَمَرَهُ أَنْ يَنْهَاهُنَّ، فَذَهَبَ ثُمَّ أَتَاهُ الثَّانِيَةَ، لَمْ يُطِعْنَهُ فَقَالَ انْهَهُنَّ. فَأَتَاهُ الثَّالِثَةَ قَالَ وَاللَّهِ غَلَبْنَنَا يَا رَسُولَ اللَّهِ فَزَعَمَتْ أَنَّهُ قَالَ "" فَاحْثُ فِي أَفْوَاهِهِنَّ التُّرَابَ "". فَقُلْتُ أَرْغَمَ اللَّهُ أَنْفَكَ، لَمْ تَفْعَلْ مَا أَمَرَكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَلَمْ تَتْرُكْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مِنَ الْعَنَاءِ.
பாடம் : 40 துயரத்தின்போது, கவலை தோய்ந்த முகத்துடன் ஒருவர் அமர்ந்திருப்பது
1299. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மூத்தா போரில்) ஸைத் பின் ஹாரிஸா (ரலி), ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி), அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) ஆகியோர் கொல்லப் பட்ட செய்தி வந்தபோது, நபி (ஸல்) அவர்கள் கவலை தோய்ந்த முகத் தோடு அமர்ந்திருந்தார்கள். நான் கதவிடுக்கில் நபி (ஸல்) அவர்களைக் கவனித்துக்கொண்டிருந்தேன்.

அப்போது ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ஜஅஃபர் (ரலி) அவர்களின் வீட்டுப் பெண்கள் (ஒப்பாரிவைத்து) அழுவதாகக் கூறினார்.

நபி (ஸல்) அவர்கள் (அவ்வாறு அழுவதைத்) தடுக்கும்படி கட்டளை யிட்டார்கள்.

அவர் சென்றுவிட்டு மீண்டும் வந்து, அவர்கள் (தமது சொல்லுக்குக்) கட்டுப்படவில்லை என்றார். உடனே நபி (ஸல்) அவர்கள், “நீர் (சென்று) அவர்களைத் தடுத்து நிறுத்துவீராக!” எனக் கட்டளையிட்டார்கள். அவர் சென்று விட்டு மூன்றாம் முறையாக வந்து, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! எங்களை (அப்பெண் கள்) மிகைத்துவிட்டனர்” என்றார்.

“அப்பெண்களின் வாயில் மண்ணை அள்ளிப்போடுங்கள்” என நபி (ஸல்) அவர்கள் (கடிந்து) கூறினார்கள் என நான் நினைக்கிறேன். பின்னர் நான் அவரை நோக்கி, “அல்லாஹ் உமது மூக்கை மண்கவ்வச் செய்வானாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உமக்குக் கட்டளையிட்டதையும் உம் மால் செய்ய முடியவில்லை; இன்னும் அவர்களைத் தொந்தரவு செய்வதையும் நீர் நிறுத்தவில்லை” எனக் கூறினேன்.


அத்தியாயம் : 23
1300. حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، حَدَّثَنَا عَاصِمٌ الأَحْوَلُ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ قَنَتَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم شَهْرًا حِينَ قُتِلَ الْقُرَّاءُ، فَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم حَزِنَ حُزْنًا قَطُّ أَشَدَّ مِنْهُ.
பாடம் : 40 துயரத்தின்போது, கவலை தோய்ந்த முகத்துடன் ஒருவர் அமர்ந்திருப்பது
1300. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

குர்ஆன் (மனனம் செய்து அதை முறைப்படி ஓதத் தெரிந்திருந்த எழுபது) அறிஞர்கள் (வஞ்சித்துக்) கொல்லப்பட்ட போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மாதம் (தொடர்ந்து தொழுகையில்) ‘குனூத்’ (எனும் சிறப்பு துஆ) ஓதினார்கள். இந்தத் தருணத்தைவிட வேறு எப்போதும் இவ்வளவு அதிகக் கவலை கொண்டவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நான் பார்த்ததில்லை.

அத்தியாயம் : 23
1301. حَدَّثَنَا بِشْرُ بْنُ الْحَكَمِ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ يَقُولُ اشْتَكَى ابْنٌ لأَبِي طَلْحَةَ ـ قَالَ ـ فَمَاتَ وَأَبُو طَلْحَةَ خَارِجٌ، فَلَمَّا رَأَتِ امْرَأَتُهُ أَنَّهُ قَدْ مَاتَ هَيَّأَتْ شَيْئًا وَنَحَّتْهُ فِي جَانِبِ الْبَيْتِ، فَلَمَّا جَاءَ أَبُو طَلْحَةَ قَالَ كَيْفَ الْغُلاَمُ قَالَتْ قَدْ هَدَأَتْ نَفْسُهُ، وَأَرْجُو أَنْ يَكُونَ قَدِ اسْتَرَاحَ. وَظَنَّ أَبُو طَلْحَةَ أَنَّهَا صَادِقَةٌ، قَالَ فَبَاتَ، فَلَمَّا أَصْبَحَ اغْتَسَلَ، فَلَمَّا أَرَادَ أَنْ يَخْرُجَ، أَعْلَمَتْهُ أَنَّهُ قَدْ مَاتَ، فَصَلَّى مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم ثُمَّ أَخْبَرَ النَّبِيَّ صلى الله عليه وسلم بِمَا كَانَ مِنْهُمَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لَعَلَّ اللَّهَ أَنْ يُبَارِكَ لَكُمَا فِي لَيْلَتِكُمَا "". قَالَ سُفْيَانُ فَقَالَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ فَرَأَيْتُ لَهُمَا تِسْعَةَ أَوْلاَدٍ كُلُّهُمْ قَدْ قَرَأَ الْقُرْآنَ.
பாடம் 41 துயரத்தின்போது கவலையை வெளிப்படுத்தாமலிருப்பது (இவ்வாறு கவலையை வெளிப்படுத்தாமல், ‘பதற்றம்’ இன்றி இருக்க வேண்டும்.) ‘பதற்றம்’ (அல்ஜஸஉ) என்பது, (கவலையை அதிகப்படுத்தும்) தகாத சொற்களும் (அல்லாஹ்விடம் பொறுப்பு ஒப்படைக்காமல் நிராசை அடையும்) கெட்ட எண்ணங்களும் ஆகும் என முஹம்மத் பின் கஅப் அல்குரழீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். நபி யஅகூப் (அலை) அவர்கள், “நான் என் சோகத்தையும் கவலையையும் அல்லாஹ்விடம் மட்டுமே முறையிடு கிறேன்” (12:86) என்றார்கள்.
1301. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியவதாவது:

அபூதல்ஹா (ரலி) அவர்களின் ஆண் குழந்தை ஒன்று நோயுற்றிருந்தது. ஒரு நாள் அபூதல்ஹா (ரலி) அவர்கள் வெளியே சென்றிருந்தபோது அக் குழந்தை இறந்துவிட்டது. இதைக் கண்ட அபூதல்ஹா (ரலி) அவர்களின் துணை வியார் உடனே சிறிது (உணவைத்) தயார் செய்தார். பிறகு குழந்தையின் பிரே தத்தை வீட்டின் ஒரு மூலையில் வைத்தார்.

வெளியே சென்றிருந்த அபூதல்ஹா (ரலி) அவர்கள் வீடு திரும்பியவுடன், “மகன் எவ்வாறுள்ளான்?” எனக் கேட்டார்கள். அதற்கு அவருடைய மனைவி, “அமைதியாகிவிட்டான்; நிம்மதி (ஓய்வு) பெற்றுவிட்டிருப்பான் என்பதே எனது எதிர்பார்ப்பு” எனப் பதிலளித்தார். அபூதல்ஹா (ரலி) அவர்கள் தம் மனைவி கூறியது உண்மைதான் என்றெண்ணி (நிம்மதி யுடன் தம் மனைவியோடு) இரவைக் கழித்தார்.

பொழுது விடிந்து நீராடிவிட்டு (தொழுகைக்காக) வெளியே செல்ல அபூதல்ஹா (ரலி) அவர்கள் நாடியபோது, மகன் இறந்துவிட்டதை மனைவி கூறினார். அபூதல்ஹா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டுத் தமது இல்லத்தில் நடந்ததை நபியவர்களிடம் கூறினார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இந்த இரவு நடந்தவற்றில் அல்லாஹ் உங்கள் இருவருக்கும் அருள்வளம் செய்யக்கூடும்” என்றார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்:

அந்த இருவருக்கும் ஒன்பது குழந்தைகள் இருப்பதை நான் பார்த் தேன். அவர்கள் அனைவரும் குர்ஆன் அறிஞர்களாக இருந்தனர் என மதீனாவைச் சேர்ந்த அன்சாரிகளில் ஒருவர் கூறினார்.

அத்தியாயம் : 23
1302. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ ثَابِتٍ، قَالَ سَمِعْتُ أَنَسًا ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" الصَّبْرُ عِنْدَ الصَّدْمَةِ الأُولَى "".
பாடம் : 42 துன்பம் ஏற்பட்ட முதல் கட்டத்தில் மேற்கொள்வதே பொறுமை ஆகும். “அவர்கள், தமக்குத் துன்பம் ஏதேனும் நேர்ந்தால், ‘நாங்கள் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனி டமே திரும்பிச் செல்பவர்கள்’ என்று கூறுவார்கள். அத்தகையோருக்கே அவர்களுடைய இறைவனின் மன்னிப்பும் கருணையும் உண்டு. அவர்களே நல்வழி பெற்றவர்கள் ஆவர்” (2:156,157) என்று இறைவன் கூறுகின்றான். இது குறித்து உமர் (ரலி) அவர்கள், “(ஒட்டகத்தின்) இரு (புறங்களில் சமமாகத் தொங்கவிடப்பட்ட) சுமைகளும், (அதன்) நடுப் பகுதி(யிலுள்ள கூடுதலான) சுமையும் எவ்வளவு அழகாக அமைந்துள்ளன!” என்று குறிப்பிட்டார்கள். (அதாவது பொறுமைக்குப் பரிசாகத் தரப்படும் மன்னிப்பும் கருணையும் இரு சமமான சுமைகள் என்றால், அவற்றுக்கிடையே கூடுதல் சுமையாக இருப்பது நல்வழி ஆகும்.) மேலும், உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான் : நீங்கள் பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் (இறையிடம்) உதவி கோருங்கள். உண்மையில் இது, (இறைக்குப்) பணிந்து நடப்போரைத் தவிர (மற்றவர்களுக்குப்) பெரும் பாரமாகவே இருக்கும். (2:45).
1302. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பொறுமை என்பது துன்பம் ஏற்பட்ட முதல்கட்டத்தில் கடைப்பிடிப்பதே ஆகும்.22

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறி விக்கிறார்கள்.

அத்தியாயம் : 23
1303. حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَبْدِ الْعَزِيزِ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَسَّانَ، حَدَّثَنَا قُرَيْشٌ ـ هُوَ ابْنُ حَيَّانَ ـ عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ دَخَلْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى أَبِي سَيْفٍ الْقَيْنِ ـ وَكَانَ ظِئْرًا لإِبْرَاهِيمَ ـ عَلَيْهِ السَّلاَمُ ـ فَأَخَذَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِبْرَاهِيمَ فَقَبَّلَهُ وَشَمَّهُ، ثُمَّ دَخَلْنَا عَلَيْهِ بَعْدَ ذَلِكَ، وَإِبْرَاهِيمُ يَجُودُ بِنَفْسِهِ، فَجَعَلَتْ عَيْنَا رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم تَذْرِفَانِ. فَقَالَ لَهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ ـ رضى الله عنه ـ وَأَنْتَ يَا رَسُولَ اللَّهِ فَقَالَ "" يَا ابْنَ عَوْفٍ إِنَّهَا رَحْمَةٌ "". ثُمَّ أَتْبَعَهَا بِأُخْرَى فَقَالَ صلى الله عليه وسلم "" إِنَّ الْعَيْنَ تَدْمَعُ، وَالْقَلْبَ يَحْزَنُ، وَلاَ نَقُولُ إِلاَّ مَا يَرْضَى رَبُّنَا، وَإِنَّا بِفِرَاقِكَ يَا إِبْرَاهِيمُ لَمَحْزُونُونَ "". رَوَاهُ مُوسَى عَنْ سُلَيْمَانَ بْنِ الْمُغِيرَةِ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 43 நபி (ஸல்) அவர்கள் (தம் குழந்தை இப்ராஹீம் இறந்த போது), “உன் (பிரிவின்) காரண மாக நாங்கள் கவலைப்படு கிறோம்” எனக் கூறியது இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: “கண் அழுகின்றது: உள்ளம் கவலைப்படுகின்றது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
1303. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது :

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (அவர்களுடைய குழந்தை இப்ராஹீம் வளர்ந்துவந்த) ஆபூஸைஃப் என்ற கொல்லரின் வீட்டிற்குச் சென்றோம். அவர் இப்ராஹீமின் பால்குடித் தாயாரு டைய கணவர் ஆவார். நபி (ஸல்) அவர்கள் இப்ராஹீமைத் தூக்கி முகர்ந்து முத்தமிட்டார்கள்.

அதன் பிறகு மீண்டும் ஒரு முறை நாங்கள் அவரது வீட்டினுள் நுழைந்தோம். அப்போது இப்ராஹீமின் உயிர் பிரிந்துகொண்டிருந்தது. நபி (ஸல்) அவர்களின் கண்கள் நீரைப் பொழியலாயின. இதைக் கண்ட அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! தாங்களுமா (அழுகிறீர்கள்)?” என்று கேட்டார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவ்ஃபின் புதல்வரே! இது கருணை (யின் வெளிப்பாடு)” என்று கூறிவிட்டுத் தொடர்ந்து அழுதார்கள். பிறகு “கண் அழுகின்றது; உள்ளம் வருந்துகின்றது. நம் இறைவன் விரும்புவதைத் தவிர வேறு எதையும் நாம் கூறமாட்டோம். இப்ராஹீமே! நிச்சயமாக நாம் உம(து பிரிவு)க்காகக் கவலைப்படுகிறோம்” என்றார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 23