121. حَدَّثَنَا حَجَّاجٌ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي عَلِيُّ بْنُ مُدْرِكٍ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ جَرِيرٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لَهُ فِي حَجَّةِ الْوَدَاعِ "" اسْتَنْصِتِ النَّاسَ "" فَقَالَ "" لاَ تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ "".
பாடம் : 43 அறிஞர்கள் கூறுவதை அமைதி யாகச் செவியுறல்
121. ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது (மக்களுக்கு உரையாற் றிய சமயம்) என்னிடம், “மக்களை மௌனமாக இருக்கச் சொல்லுங்கள்” என்று கூறிவிட்டு, “(மக்களே!) “எனக்குப் பின்னால் உங்களில் ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக்கொள்ளும் இறைமறுப்பாளர்களாய் மாறிவிடாதீர்கள்” என்று சொன்னார்கள்.

அத்தியாயம் : 3
122. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنَا عَمْرٌو، قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ جُبَيْرٍ، قَالَ قُلْتُ لاِبْنِ عَبَّاسٍ إِنَّ نَوْفًا الْبِكَالِيَّ يَزْعُمُ أَنَّ مُوسَى لَيْسَ بِمُوسَى بَنِي إِسْرَائِيلَ، إِنَّمَا هُوَ مُوسَى آخَرُ. فَقَالَ كَذَبَ عَدُوُّ اللَّهِ، حَدَّثَنَا أُبَىُّ بْنُ كَعْبٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" قَامَ مُوسَى النَّبِيُّ خَطِيبًا فِي بَنِي إِسْرَائِيلَ، فَسُئِلَ أَىُّ النَّاسِ أَعْلَمُ فَقَالَ أَنَا أَعْلَمُ. فَعَتَبَ اللَّهُ عَلَيْهِ، إِذْ لَمْ يَرُدَّ الْعِلْمَ إِلَيْهِ، فَأَوْحَى اللَّهُ إِلَيْهِ أَنَّ عَبْدًا مِنْ عِبَادِي بِمَجْمَعِ الْبَحْرَيْنِ هُوَ أَعْلَمُ مِنْكَ. قَالَ يَا رَبِّ وَكَيْفَ بِهِ فَقِيلَ لَهُ احْمِلْ حُوتًا فِي مِكْتَلٍ فَإِذَا فَقَدْتَهُ فَهْوَ ثَمَّ، فَانْطَلَقَ وَانْطَلَقَ بِفَتَاهُ يُوشَعَ بْنِ نُونٍ، وَحَمَلاَ حُوتًا فِي مِكْتَلٍ، حَتَّى كَانَا عِنْدَ الصَّخْرَةِ وَضَعَا رُءُوسَهُمَا وَنَامَا فَانْسَلَّ الْحُوتُ مِنَ الْمِكْتَلِ فَاتَّخَذَ سَبِيلَهُ فِي الْبَحْرِ سَرَبًا، وَكَانَ لِمُوسَى وَفَتَاهُ عَجَبًا، فَانْطَلَقَا بَقِيَّةَ لَيْلَتِهِمَا وَيَوْمِهِمَا فَلَمَّا أَصْبَحَ قَالَ مُوسَى لِفَتَاهُ آتِنَا غَدَاءَنَا، لَقَدْ لَقِينَا مِنْ سَفَرِنَا هَذَا نَصَبًا، وَلَمْ يَجِدْ مُوسَى مَسًّا مِنَ النَّصَبِ حَتَّى جَاوَزَ الْمَكَانَ الَّذِي أُمِرَ بِهِ. فَقَالَ لَهُ فَتَاهُ أَرَأَيْتَ إِذْ أَوَيْنَا إِلَى الصَّخْرَةِ فَإِنِّي نَسِيتُ الْحُوتَ، قَالَ مُوسَى ذَلِكَ مَا كُنَّا نَبْغِي، فَارْتَدَّا عَلَى آثَارِهِمَا قَصَصًا، فَلَمَّا انْتَهَيَا إِلَى الصَّخْرَةِ إِذَا رَجُلٌ مُسَجًّى بِثَوْبٍ ـ أَوْ قَالَ تَسَجَّى بِثَوْبِهِ ـ فَسَلَّمَ مُوسَى. فَقَالَ الْخَضِرُ وَأَنَّى بِأَرْضِكَ السَّلاَمُ فَقَالَ أَنَا مُوسَى. فَقَالَ مُوسَى بَنِي إِسْرَائِيلَ قَالَ نَعَمْ. قَالَ هَلْ أَتَّبِعُكَ عَلَى أَنْ تُعَلِّمَنِي مِمَّا عُلِّمْتَ رَشَدًا قَالَ إِنَّكَ لَنْ تَسْتَطِيعَ مَعِيَ صَبْرًا، يَا مُوسَى إِنِّي عَلَى عِلْمٍ مِنْ عِلْمِ اللَّهِ عَلَّمَنِيهِ لاَ تَعْلَمُهُ أَنْتَ، وَأَنْتَ عَلَى عِلْمٍ عَلَّمَكَهُ لاَ أَعْلَمُهُ. قَالَ سَتَجِدُنِي إِنْ شَاءَ اللَّهُ صَابِرًا، وَلاَ أَعْصِي لَكَ أَمْرًا، فَانْطَلَقَا يَمْشِيَانِ عَلَى سَاحِلِ الْبَحْرِ لَيْسَ لَهُمَا سَفِينَةٌ، فَمَرَّتْ بِهِمَا سَفِينَةٌ، فَكَلَّمُوهُمْ أَنْ يَحْمِلُوهُمَا، فَعُرِفَ الْخَضِرُ، فَحَمَلُوهُمَا بِغَيْرِ نَوْلٍ، فَجَاءَ عُصْفُورٌ فَوَقَعَ عَلَى حَرْفِ السَّفِينَةِ، فَنَقَرَ نَقْرَةً أَوْ نَقْرَتَيْنِ فِي الْبَحْرِ. فَقَالَ الْخَضِرُ يَا مُوسَى، مَا نَقَصَ عِلْمِي وَعِلْمُكَ مِنْ عِلْمِ اللَّهِ إِلاَّ كَنَقْرَةِ هَذَا الْعُصْفُورِ فِي الْبَحْرِ. فَعَمَدَ الْخَضِرُ إِلَى لَوْحٍ مِنْ أَلْوَاحِ السَّفِينَةِ فَنَزَعَهُ. فَقَالَ مُوسَى قَوْمٌ حَمَلُونَا بِغَيْرِ نَوْلٍ، عَمَدْتَ إِلَى سَفِينَتِهِمْ فَخَرَقْتَهَا لِتُغْرِقَ أَهْلَهَا قَالَ أَلَمْ أَقُلْ إِنَّكَ لَنْ تَسْتَطِيعَ مَعِيَ صَبْرًا قَالَ لاَ تُؤَاخِذْنِي بِمَا نَسِيتُ. فَكَانَتِ الأُولَى مِنْ مُوسَى نِسْيَانًا. فَانْطَلَقَا فَإِذَا غُلاَمٌ يَلْعَبُ مَعَ الْغِلْمَانِ، فَأَخَذَ الْخَضِرُ بِرَأْسِهِ مِنْ أَعْلاَهُ فَاقْتَلَعَ رَأْسَهُ بِيَدِهِ. فَقَالَ مُوسَى أَقَتَلْتَ نَفْسًا زَكِيَّةً بِغَيْرِ نَفْسٍ قَالَ أَلَمْ أَقُلْ لَكَ إِنَّكَ لَنْ تَسْتَطِيعَ مَعِيَ صَبْرًا ـ قَالَ ابْنُ عُيَيْنَةَ وَهَذَا أَوْكَدُ ـ فَانْطَلَقَا حَتَّى إِذَا أَتَيَا أَهْلَ قَرْيَةٍ اسْتَطْعَمَا أَهْلَهَا، فَأَبَوْا أَنْ يُضَيِّفُوهُمَا، فَوَجَدَا فِيهَا جِدَارًا يُرِيدُ أَنْ يَنْقَضَّ فَأَقَامَهُ. قَالَ الْخَضِرُ بِيَدِهِ فَأَقَامَهُ. فَقَالَ لَهُ مُوسَى لَوْ شِئْتَ لاَتَّخَذْتَ عَلَيْهِ أَجْرًا. قَالَ هَذَا فِرَاقُ بَيْنِي وَبَيْنِكَ "". قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" يَرْحَمُ اللَّهُ مُوسَى، لَوَدِدْنَا لَوْ صَبَرَ حَتَّى يُقَصَّ عَلَيْنَا مِنْ أَمْرِهِمَا "".
பாடம் : 44 ஓர் அறிஞரிடம் “மக்களிலேயே மிகவும் அறிந்தவர் யார்?” என்று வினவப்பட்டால், “இதைப் பற்றிய அறிவு அல்லாஹ்வுக்கே உண்டு” என இறைவனிடம் சாட்டிவிடுவதே நன்று.
122. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “(‘களிர்’ (அலை) அவர் களைச் சந்தித்த) மூசா, இஸ்ரவேலர்களின் (இறைத்தூதரான) மூசா அல்லர். அவர் வேறொரு மூசா” என்று (பேச்சாளர்) நவ்ஃப் அல்பகாலீ என்பவர் கூறுகிறாரே?’ என்று கேட்டேன்.28

அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “இறை விரோதியான அவர் பொய்யுரைத்துவிட்டார். நபி (ஸல்) அவர்கள் கூறியதாக எங்களுக்கு உபை பின் கஅப் (ரலி) அவர்கள், (பின்வருமாறு) அறிவித்தார்கள் என்றார்கள்:

(ஒரு முறை) நபி மூசா (அலை) அவர்கள் பனூ இஸ்ராயீல் மக்களிடையே நின்று உரையாற்றியபோது அவர்களிடம், “மக்களிலேயே மிகவும் அறிந்தவர் யார்?” என்று வினவப்பட்டது. அதற்கு மூசா (அலை) அவர்கள் “(நான் அறிந்தவரையில்) நானே மிகவும் அறிந்தவன்” என்று பதிலளித்துவிட்டார்கள்.

ஆகவே, அவர்களை அல்லாஹ் கண்டித்தான். ஏனெனில், மூசா (அலை) அவர்கள், “(இதைப் பற்றிய) அறிவு அல்லாஹ்வுக்கே உண்டு” என்று சொல்லாமல் விட்டுவிட்டார்கள். எனவே, அல்லாஹ் “(இல்லை) இரு கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் என் அடியார்களில் ஒருவர் இருக்கிறார். அவர் உம்மைவிட அதிகமாக அறிந்தவர்” என்று மூசா (அலை) அவர்களுக்கு அறிவித்தான்.

மூசா (அலை) அவர்கள், “என் இறைவா! அவரை நான் சந்திக்க என்ன வழி?” என்று கேட்டார்கள். அதற்கு, “கூடை ஒன்றில் ஒரு மீனை எடுத்துக்கொண்டு (அப்படியே கடலோரமாக நடந்து) செல்லுங்கள். நீங்கள் அம்மீனை எங்கு தொலைத்துவிடுகிறீர்களோ அங்குதான் அவர் இருப்பார்” என்று அவர்களிடம் கூறப்பட்டது.

அவ்வாறே மூசா (அலை) அவர்கள் (தம்முடன்) தம் உதவியாளர் யூஷஉ பின் நூன் என்பவரையும் அழைத்துக் கொண்டு ஒரு கூடையில் மீனைத் தூக்கிக்கொண்டு நடந்தார்கள். இருவரும் (இரு கடல்கள் சங்கமிக்கும் இடத்திலிருந்த) ஒரு பாறைக் கருகில் வந்து சேர்ந்தபோது அங்கு இருவரும் தலை வைத்து உறங்கினர்.

கூடையிலிருந்த மீன் (உயிராகி) மெல்ல நழுவி கடலில் (சுரங்கம் போன்று) பாதை அமைத்துக்கொண்டு (சென்று) விட்டது. இது, மூசா (அலை) அவர்களுக் கும் அவர்களுடைய உதவியாளருக்கும் வியப்பாய் அமைந்தது. (மீன் தவறிப் போனதைக் கூற உதவியாளர் மறந்துவிட்டார்.)

இந்நிலையில் அன்றைய மீதிப்பொழுதிலும் இரவிலும் அவர்கள் (தொடர்ந்து) நடந்தனர். மறுநாள் பொழுது விடிந்தபோது, மூசா (அலை) அவர்கள் தம் உதவியாளரிடம் “நமது காலைச் சிற்றுண்டியை கொண்டுவாரும். நாம் இந்தப் பயணத்தில் மிகவும் களைப்படைந்துவிட்டோம்” என்றார்கள். தமக்குக் கட்டளையிடப்பட்டிருந்த இடத்தைக் கடக்கும்வரை மூசா (அலை) அவர்கள் எந்தக் களைப்பையும் உணரவில்லை.

அவர்களுடைய உதவியாளர், “நாம் அந்தப் பாறையில் தங்கியிருந்தோமே, பார்த்தீர்களா? அங்குதான் நான் அந்த மீனை மறந்து (தவற விட்டு)விட்டேன் (அதை நான் (உங்களிடம்) கூறுவதை ஷைத்தான்தான் எனக்கு மறக்கடித்துவிட்டான். அவ்விடத்தில் அது, கடலில் செல்ல விந்தையான விதத்தில் தனது பாதையை அமைத்துக்கொண்டது)” என்றார். மூசா (அலை) அவர்கள், “நாம் தேடி வந்த இடம் அதுதான்” என்று கூறினார்கள்.

பிறகு இருவரும் தமது காலடிச் சுவடுகளைப் பின்பற்றி (வந்த வழியே) திரும்பிச் சென்றனர். இருவரும் அந்தக் குறிப்பிட்ட பாறைக்கு வந்தபோது அங்கு ‘தம்மை முழுவதுமாக ஓர் துணியால்’ அல்லது ‘தமது ஆடையால்’ தம்மைப் போர்த்தியபடி ஒருமனிதர் (களிர்) இருந்தார். மூசா (அலை) அவர்கள் அவருக்கு முகமன் (சலாம்) சொல்ல, அம்மனிதர், “உங்களுடைய (இந்த) வட்டாரத்தில் (அறியப்படாத) சலாம் (உங்களுக்கு மட்டும்) எவ்வாறு (தெரியும்? நீங்கள் யார்?)” என்று கேட்டார். அதற்கு மூசா (அலை) அவர்கள், “நான்தான் மூசா” என்று பதிலளித்தார்கள்.

அம்மனிதர், “இஸ்ரவேலர்களின் (இறைத் தூதரான) மூசாவா?” என்று கேட்டார். மூசா (அலை) அவர்கள், ‘ஆம்’ என்று பதிலளித்துவிட்டு, “உங்களுக்கு (இறைவனால்) கற்றுத்தரப்பட்டுள்ள அறிவிலிருந்து எனக்கும் (சிறிது) நீங்கள் கற்றுத் தருவதற்காக உங்களைப் பின்தொடர்ந்து வரட்டுமா?” என்று கேட்டார்கள்.

அதற்கு களிர் (அலை) அவர்கள் மூசா (அலை) அவர்களிடம், “நிச்சயமாக உங்களால் என்னுடன் பொறுமையோடு இருக்க முடியாது. மூசா! அல்லாஹ் எனக்குக் கற்றுத்தந்த ஓர் அறிவு என்னிடம் உள்ளது. அதை நீங்கள் அறியமாட்டீர்கள். அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத்தந்த ஓர் அறிவு உங்களிடம் உள்ளது. அதை நான் அறியமாட்டேன்” என்று கூறினார்கள்.

அதற்கு மூசா (அலை) அவர்கள், “அல்லாஹ் நாடினால் என்னை நீங்கள் பொறுமையாளனாகக் காண்பீர்கள். எந்த விஷயத்திலும் உங்களுக்கு நான் மாறு செய்யமாட்டேன்” என்றார்கள்.

(முடிவில் மூசா, களிர் ஆகிய) இருவரும் மரக்கலம் ஏதும் தங்களிடம் இல்லாததால், கடற்கரையோரமாக நடந்து சென்றுகொண்டிருந்தபோது ஒரு மரக்கலம் அவர்களைக் கடந்து சென்றது. அப்போது அவர்கள் தங்கள் இருவரையும் (மரக்கலத்தில்) ஏற்றிச் செல்லுமாறு மரக்கலக்காரர்களிடம் கோரினர். (ஏழைகளான மரக்கல உரிமையாளர்களால்) களிர் (அலை) அவர்கள் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டார்கள். எனவே, அவர்கள் இருவரையும் (தங்களது மரக்கலத்தில்) கட்டணம் ஏதுமின்றி ஏற்றிக்கொண்டனர்.

அப்போது ஒரு சிட்டுக்குருவி வந்து மரக்கலத்தின் விளிம்பின் மீது விழுந்து, (தனது சின்னஞ்சிறு அலகால்) கடலில் ஒன்றிரண்டு முறை கொத்தியது. அப்போது (மூசா (அலை) அவர்களிடம்) களிர் (அலை) அவர்கள், “மூசாவே! உமது அறிவும் எனது அறிவும் அல்லாஹ்வின் அறிவிலிருந்து இந்தச் சிட்டுக்குருவி கொத்தியெடுத்த (நீரின்) அளவில்தான் உள்ளது” என்று கூறினார்கள்.

(சற்று நேரம் கழிந்ததும்) களிர் (அலை) அவர்கள் அந்த மரக்கலத்தின் (அடிப்) பலகைகளில் ஒன்றை வேண்டுமென்றே கழற்றி (அந்த இடத்தில் முளைக்குச்சியை அறைந்து)விட்டார்கள். (இதைக் கண்ட) மூசா (அலை) அவர்கள் “நம்மைக் கட்டணம் ஏதுமில்லாமலேயே ஏற்றிக்கொண்ட மக்களின் மரக்கலத்தை வேண்டுமென்றே பின்னப்படுத்திவிட்டீர்களே? அதில் உள்ளவர்களை (நீரில்) மூழ்கடிக்கவா?” என்று கேட்டார்கள்.

அதற்கு களிர் (அலை) அவர்கள், “என்னுடன் உங்களால் பொறுமையோடு இருக்க முடியாது என்று நான் (முன்பே) சொல்லவில்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு மூசா (அலை) அவர்கள், ‘நான் மறந்துபோனதற்காக என்னைத் தண்டித்துவிடாதீர்கள்” என்று கூறினார்கள்.

-(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:) முதல் தடவை மூசா (அலை) அவர்கள் பொறுமையிழந்தது மறதியினால் ஆகும்.-

(பிறகு இருவரும் மரக்கலத்திலிருந்து வெளியேறி கடலோரமாக) நடந்துபோய்க் கொண்டிருக்கும்போது, ஒரு சிறுவன் சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தான். களிர் (அலை) அவர்கள் அவனது உச்சந் தலையைத் தமது கையால் திருகி தனியே எடுத்துவிட்டார்கள். உடனே மூசா (அலை) அவர்கள், “ஒரு பாவமும் அறியாத (பச்சிளம்) உயிரையா நீங்கள் பறித்துவிட்டீர்கள்? அவன் வேறெந்த உயிரையும் பறிக்கவில்லையே?” என்று கேட்டார்கள்.

அதற்கு களிர் (அலை) அவர்கள், “நீங்கள் என்னுடன் பொறுமையாக இருக்க முடியாது என்று (முன்பே) நான் உங்களிடம் சொல்லவில்லையா?” என்று கேட்டார்கள்.

-(அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இ(ம்முறை களிர் (அலை) அவர்கள் கூறிய)து, முதல் முறை கூறியதைவிடக் கூடுதலான அழுத்தம் கொண்டதாகும்.-

மீண்டும் இருவரும் (சமாதானமாகி) நடந்தார்கள். இறுதியில் ஒரு கிராமத்துக்கு வந்தார்கள். அக்கிராம மக்களிடம் உண்ண உணவு கேட்டார்கள். ஆனால்,

அவ்வூரார் அவ்விருவரையும் உபசரிக்க மறுத்து விட்டனர். இந்நிலையில்

அவ்வூரில் (சாய்ந்தபடி) கீழே விழலாமா என்று யோசித்துக்கொண்டிருந்த சுவர் ஒன்றை அவர்கள் இருவரும் கண்டார்கள்.

(அதைக் கண்ட) களிர் (அலை) அவர்கள் அச்சுவரைத் தமது கரத்தால் செப்பனிட்டார்கள். மூசா (அலை) அவர்கள், “நீங்கள் நினைத்தால் இதற்குக் கூலி பெற்றுக்கொண்டிருக்கலாமே!” என்றார்கள்.

களிர் (அலை) அவர்கள், ‘’இதுதான் நானும் நீங்களும் பிரிய வேண்டிய கட்டம்” என்று கூறினார்கள்.

(இந்த நிகழ்ச்சியை கூறி முடித்தபின்) நபி (ஸல்) அவர்கள், “மூசா பொறுமை யாக இருந்திருப்பாரேயானால் அவ்விருவர் பற்றிய (நிறைய) விஷயங்கள் (அல்லாஹ்வின் மூலம்) நமக்கு எடுத்துரைக்கப்பட்டிருக்குமே! என நாம் விரும்பினோம்” என்று சொன்னார்கள்.29

அத்தியாயம் : 3
123. حَدَّثَنَا عُثْمَانُ، قَالَ أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ أَبِي مُوسَى، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، مَا الْقِتَالُ فِي سَبِيلِ اللَّهِ فَإِنَّ أَحَدَنَا يُقَاتِلُ غَضَبًا، وَيُقَاتِلُ حَمِيَّةً. فَرَفَعَ إِلَيْهِ رَأْسَهُ ـ قَالَ وَمَا رَفَعَ إِلَيْهِ رَأْسَهُ إِلاَّ أَنَّهُ كَانَ قَائِمًا ـ فَقَالَ "" مَنْ قَاتَلَ لِتَكُونَ كَلِمَةُ اللَّهِ هِيَ الْعُلْيَا فَهُوَ فِي سَبِيلِ اللَّهِ عَزَّ وَجَلَّ "".
பாடம் : 45 அமர்ந்திருக்கும் அறிஞரிடம் நின்றுகொண்டு கேள்வி கேட்பது
123. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் (தனிப்பட்ட) கோபத்தால் போரிடு கிறார். (மற்றொருவர்) இனமாச்சரியத்தால் போரிடுகிறார். இவற்றில் அல்லாஹ்வின் பாதையில் செய்யப்படும் போர் எது?” என்று கேட்டார்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், அவரை நோக்கித் தமது தலையை உயர்த்தி, “யார் அல்லாஹ்வின் வாக்கே மேலோங்கியதாய் இருக்க வேண்டும் என்பதற்காகப் போரிடுகின்றாரோ அவர் தான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர் ஆவார்” என்று பதிலளித்தார்கள்.

கேள்வி கேட்டவர் நின்றுகொண்டி ருந்ததால்தான் நபி (ஸல்) அவர்கள் தமது தலையை உயர்த்திப் பார்த் தார்கள்.

அத்தியாயம் : 3
124. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عِيسَى بْنِ طَلْحَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم عِنْدَ الْجَمْرَةِ وَهُوَ يُسْأَلُ، فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ نَحَرْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ. قَالَ "" ارْمِ وَلاَ حَرَجَ "". قَالَ آخَرُ يَا رَسُولَ اللَّهِ حَلَقْتُ قَبْلَ أَنْ أَنْحَرَ. قَالَ "" انْحَرْ وَلاَ حَرَجَ "". فَمَا سُئِلَ عَنْ شَىْءٍ قُدِّمَ وَلاَ أُخِّرَ إِلاَّ قَالَ افْعَلْ وَلاَ حَرَجَ.
பாடம் : 46 (ஹஜ்ஜின்போது கல்லெறிய வேண்டிய இடங்களில்) கல்லெறி யும் நேரத்தில் கேள்வி கேட்பதும் பதிலளிப்பதும்
124. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (கல்லெறியும் இடமான) ‘ஜம்ரா’வில் இருந்தபோது, கேள்வி கேட்கப்படுவதை நான் கண்டேன். அப்போது ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! நான் (தெரியாமல்) கல் எறிவதற்கு முன்பே குர்பானி கொடுத்துவிட்டேன்” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “குற்றமில்லை; (இப்போது) கல்லெறிந்துவிடுக” என்றார்கள்.

மற்றொருவர், “அல்லாஹ்வின் தூதரே! நான் குர்பானி கொடுப்பற்கு முன்பே தலை முடியை மழித்துவிட்டேன்” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “குற்ற மில்லை; (இப்போது) குர்பானி கொடுத்து விடுக!” என்றார்கள்.

(அன்றைய தினம் பிந்திச் செய்ய வேண்டிய சில கிரியைகள்) முந்திச் செய்யப்பட்டுவிட்டதாகவும் (முந்திச் செய்ய வேண்டிய சில கிரியைகள்) பிந்திச் செய்யப்பட்டுவிட்டதாகவும் நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட எல்லா கேள்விகளுக்கும் “குற்றமில்லை; (விடுபட் டதை) செய்வீராக!” என்றே சொன் னார்கள்.30

அத்தியாயம் : 3
125. حَدَّثَنَا قَيْسُ بْنُ حَفْصٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، قَالَ حَدَّثَنَا الأَعْمَشُ، سُلَيْمَانُ عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ بَيْنَا أَنَا أَمْشِي، مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي خَرِبِ الْمَدِينَةِ، وَهُوَ يَتَوَكَّأُ عَلَى عَسِيبٍ مَعَهُ، فَمَرَّ بِنَفَرٍ مِنَ الْيَهُودِ، فَقَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ سَلُوهُ عَنِ الرُّوحِ. وَقَالَ بَعْضُهُمْ لاَ تَسْأَلُوهُ لاَ يَجِيءُ فِيهِ بِشَىْءٍ تَكْرَهُونَهُ. فَقَالَ بَعْضُهُمْ لَنَسْأَلَنَّهُ. فَقَامَ رَجُلٌ مِنْهُمْ فَقَالَ يَا أَبَا الْقَاسِمِ، مَا الرُّوحُ فَسَكَتَ. فَقُلْتُ إِنَّهُ يُوحَى إِلَيْهِ. فَقُمْتُ، فَلَمَّا انْجَلَى عَنْهُ، قَالَ {وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي وَمَا أُوتُيتُمْ مِنَ الْعِلْمِ إِلاَّ قَلِيلاً}. قَالَ الأَعْمَشُ هَكَذَا فِي قِرَاءَتِنَا.
பாடம் : 47 “உங்களுக்குச் சிறிதளவு அறிவே கொடுக்கப்பட்டுள் ளது” (17:85) எனும் இறை வசனம்
125. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் மதீனாவின் (மக்கள் வசிப்பிடமில்லாத) ஒரு பாழ்வெளியில் சென்றுகொண்டிருந்தேன். அப்போது நபியவர்கள் தம்முடனிருந்த ஒரு பேரீச்ச மட்டையை ஊன்றிக்கொண்டு வந்தார்கள். அப்போது யூதர்கள் சிலரைக் கடந்துசென்றார்கள்.

அப்போது அவர்களில் ஒருவர் மற்றவரிடம் (நபியவர்களைச் சுட்டிக்காட்டி) “அவரிடம் உயிரைப் பற்றிக் கேளுங்கள்” என்றார். இன்னொருவர் “அவரிடம் நீங்கள் கேட்க வேண்டாம்; நீங்கள் விரும்பாத (பதில்) ஏதும் அவரிடமிருந்து வந்துவிடப் போகிறது” என்றார். இறுதியில் அவர்களில் சிலர், இறைவன்மீது ஆணையாக நாம் (அதைப் பற்றி) கட்டாயம் அவரிடம் கேட்டேவிடுவோம்” என்றனர்.

அப்போது அவர்களில் ஒருவர் எழுந்து, “அபுல்காசிமே! உயிர் (ரூஹ்) என்றால் என்ன?” என்று கேட்டார். அதற்கு (பதிலளிக்காமல்) நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்தார்கள். அப்போது நான், “நபியவர்களுக்கு இறைவனிடமிருந்து வேதஅறிவிப்பு (வஹீ) அருளப்பெறுகின்றது” என்று சொல்லிக்கொண்டேன். (வேத அறிவிப் பின்போது ஏற்படும் சிரம நிலை விலகி) அவர்கள் தெளிவடைந்தபோது, “(நபியே!) உங்களிடம் அவர்கள் உயிர் பற்றிக் கேட்கின்றனர். கூறுக: உயிர் என்பது என் இறைவனின் கட்டளையால் உருவானது. அவர்களுக்குச் சிறிதளவு அறிவே கொடுக்கப்பட்டுள்ளது” (17:85) எனும் இறைவசனத்தைக் கூறினார்கள்.

(அறிவிப்பாளர்களில் ஒருவரான) அஃமஷ் (சுலைமான் பின் மிஹ்ரான் -ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(‘உங்களுக்கு’ சிறிதளவு அறிவே வழங்கப்பட்டுள்ளது என்பதற்குப் பதிலாக) ‘அவர்களுக்கு’ (‘வமா ஊ(த்)தூ’) என்றுதான் எங்களது ஓதல்முறையில் உள்ளது.

அத்தியாயம் : 3
126. حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الأَسْوَدِ، قَالَ قَالَ لِي ابْنُ الزُّبَيْرِ كَانَتْ عَائِشَةُ تُسِرُّ إِلَيْكَ كَثِيرًا فَمَا حَدَّثَتْكَ فِي الْكَعْبَةِ قُلْتُ قَالَتْ لِي قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" يَا عَائِشَةُ، لَوْلاَ قَوْمُكِ حَدِيثٌ عَهْدُهُمْ ـ قَالَ ابْنُ الزُّبَيْرِ بِكُفْرٍ ـ لَنَقَضْتُ الْكَعْبَةَ فَجَعَلْتُ لَهَا بَابَيْنِ باب يَدْخُلُ النَّاسُ، وَبَابٌ يَخْرُجُونَ "". فَفَعَلَهُ ابْنُ الزُّبَيْرِ.
பாடம் : 48 மக்கள் சிலர், ஒன்றைத் தவறாக விளங்கி விபரீத முடிவுக்கு வந்துவிடக்கூடும் என்று அஞ்சி, சிறந்த ஒன்றைக்கூட செய்யாமல் விட்டுவிடுவது
126. அஸ்வத் பின் யஸீத் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள், “ஆயிஷா (ரலி) அவர்கள் உம்மிடம் நிறைய இரகசியங்களைத் தெரிவிப்பவர்களாயிருந்தார்களே! அவர்கள் இறையில்லம் கஅபாவைப் பற்றி உம்மிடம் என்ன சொன்னார்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு நான் (பின்வருமாறு) பதிலளித்தேன்:

ஆயிஷா (ரலி) அவர்கள் (என்னிடம்) கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்கள், “ஆயிஷா! உன்னுடைய சமுதாயத்தார் (குறைஷியர்) இறைமறுப்பிலிருந்து புதிதாக (இஸ்லாத் துக்கு) வந்தவர்கள் என்பது மட்டும் இல்லாமலிருந்தால், நான் இறையில்லம் கஅபாவைத் துளைத்து, மக்கள் நுழைவ தற்கு ஒரு வாசலும், வெளியேறுவதற்கு ஒரு வாசலுமாக அதற்கு இரண்டு வாசல்களை அமைத்திருப்பேன்” என்று கூறினார்கள்.

அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தில் நபி (ஸல்) அவர்களின் எண்ணத்தை) செய்து முடித்தார்கள்.

அத்தியாயம் : 3
127. حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى عَنْ مَعْرُوفِ بْنِ خَرَّبُوذٍ عَنْ أَبِي الطُّفَيْلِ عَنْ عَلِيٍّ بِذَلِكَ.
பாடம் : 49 புரிந்துகொள்ளளமாட்டார்கள் என்ற அச்சம் இருக்கும்போது, ஒரு குழுவினரை விட்டுவிட்டு வேறொரு குழுவினருக்கு மட்டும் கல்வி கற்பித்தல்
127. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கள் எதைப் புரிந்துகொள்வார்களோ அதையே அவர்களிடம் கூறுங்கள். (அவர்களுக்குப் புரியாதவற்றைப் பேசி, அதனால்) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் (அவர்களால்) பொய்யர்களென்று கருதப்படுவதை நீங்கள் விரும்புகிறீர்களா, என்ன?


அத்தியாயம் : 3
128. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، قَالَ حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم وَمُعَاذٌ رَدِيفُهُ عَلَى الرَّحْلِ قَالَ "" يَا مُعَاذُ بْنَ جَبَلٍ "". قَالَ لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ وَسَعْدَيْكَ. قَالَ "" يَا مُعَاذُ "". قَالَ لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ وَسَعْدَيْكَ. ثَلاَثًا. قَالَ "" مَا مِنْ أَحَدٍ يَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ صِدْقًا مِنْ قَلْبِهِ إِلاَّ حَرَّمَهُ اللَّهُ عَلَى النَّارِ "". قَالَ يَا رَسُولَ اللَّهِ، أَفَلاَ أُخْبِرُ بِهِ النَّاسَ فَيَسْتَبْشِرُوا قَالَ "" إِذًا يَتَّكِلُوا "". وَأَخْبَرَ بِهَا مُعَاذٌ عِنْدَ مَوْتِهِ تَأَثُّمًا .
பாடம் : 49 புரிந்துகொள்ளளமாட்டார்கள் என்ற அச்சம் இருக்கும்போது, ஒரு குழுவினரை விட்டுவிட்டு வேறொரு குழுவினருக்கு மட்டும் கல்வி கற்பித்தல்
128. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு பயணத்தில் வாகனமொன்றில்) நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் முஆத் (ரலி) அவர்கள் அமர்ந்திருந்தபோது, நபி (ஸல்) அவர்கள் “முஆத் பின் ஜபலே!” என்று அழைத்தார்கள். “அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கி றேன் (கூறுங்கள்)” என்று முஆத் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். ‘முஆதே!’ என (மீண்டும்) நபி (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். “அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் (கூறுங்கள்)” என (மீண்டும்) முஆத் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். இவ்வாறு மூன்று முறை (அழைப்பும் பதிலும்) நடந்தது.

பிறகு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள் என்றும் உளப்பூர்வமாக உறுதிகூறும் எவருக்கும் அல்லாஹ் நரகத்தைத் தடை செய்யாமல் இருப்பதில்லை” என்று கூறினார்கள்.

உடனே முஆத் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! இந்தச் செய்தியை நான் மக்களுக்கு அறிவித்துவிடட்டுமா? (இதைக் கேட்டு) அவர்கள் புளகாங்கிதம் அடைவார்களே!” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “(இல்லை; வேண்டாம்) இவ்வாறு நீர் அறிவித்தால் (அதைக் கேட்டுவிட்டு) அவர்கள் (இது மட்டும் போதுமே என்று நல்லறங்களில் ஈடுபடாமல்) அசட்டையாக இருந்துவிடு வார்கள்” என்று கூறினார்கள்.

(கல்வியை மறைத்த) குற்றத்திலிருந்து தப்புவதற்காகத் தமது மரணத் தறுவாயில் இந்த ஹதீஸை முஆத் (ரலி) அவர்கள் (மக்களுக்கு) அறிவித்தார்கள்.


அத்தியாயம் : 3
129. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا مُعْتَمِرٌ، قَالَ سَمِعْتُ أَبِي قَالَ، سَمِعْتُ أَنَسًا، قَالَ ذُكِرَ لِي أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لِمُعَاذٍ "" مَنْ لَقِيَ اللَّهَ لاَ يُشْرِكُ بِهِ شَيْئًا دَخَلَ الْجَنَّةَ "". قَالَ أَلاَ أُبَشِّرُ النَّاسَ قَالَ "" لاَ، إِنِّي أَخَافُ أَنْ يَتَّكِلُوا "".
பாடம் : 49 புரிந்துகொள்ளளமாட்டார்கள் என்ற அச்சம் இருக்கும்போது, ஒரு குழுவினரை விட்டுவிட்டு வேறொரு குழுவினருக்கு மட்டும் கல்வி கற்பித்தல்
129. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“அல்லாஹ்வுக்கு எவரையும் இணையாக்காதவராக யார் அல்லாஹ்வைச் சந்திக்கிறாரோ, அவர் உறுதியாகச் சொர்க்கம் புகுவார்” என முஆத் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று எனக்குக் கூறப்பட்டது.

அதற்கு முஆத் (ரலி) அவர்கள், “இந்த நற்செய்தியை நான் மக்களுக்குச் சொல்லட்டுமா?” என்று கேட்க, “(இல்லை) வேண்டாம். மக்கள் (இதை மட்டும் நம்பிக்கொண்டு நல்லறங்கள் புரியாமல்) அசட்டையாக இருந்துவிடுவார்களோ என நான் அஞ்சுகிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.31

அத்தியாயம் : 3
130. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، قَالَ أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ زَيْنَبَ ابْنَةِ أُمِّ سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ جَاءَتْ أُمُّ سُلَيْمٍ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ اللَّهَ لاَ يَسْتَحْيِي مِنَ الْحَقِّ، فَهَلْ عَلَى الْمَرْأَةِ مِنْ غُسْلٍ إِذَا احْتَلَمَتْ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِذَا رَأَتِ الْمَاءَ "". فَغَطَّتْ أُمُّ سَلَمَةَ ـ تَعْنِي وَجْهَهَا ـ وَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ وَتَحْتَلِمُ الْمَرْأَةُ قَالَ "" نَعَمْ تَرِبَتْ يَمِينُكِ فَبِمَ يُشْبِهُهَا وَلَدُهَا "".
பாடம் : 50 கற்றலில் நாணம்32 முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (ஒன்றைக் கற்றுக்கொள்வ தற்கு) வெட்கப்படுபவரும் (தனக்கு எல்லாம் தெரிந்துவிட்டது எனக் கருதி) அகந்தை கொள்பவரும் (ஒருக்காலும்) கல்வியைக் கற்றுக்கொள்ளமாட்டர். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: பெண்களில் சிறந்தவர்கள் அன்சாரிப் பெண்களே. (ஏனெனில்,) மார்க்கத்தைக் கற்றுக்கொள்வதற்கு வெட்கம் ஒருபோதும் அவர்களுக்குத் தடையாக இருந்ததில்லை.
130. உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அபூதல்ஹா (ரலி) அவர்களின் துணைவியார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! சத்தியத் தைச் சொல்ல அல்லாஹ் வெட்கப்படுவ தில்லை. ஒரு பெண்ணுக்கு தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டால் அவள்மீது குளியல் கடமையாகுமா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(ஆம்! உறங்கி விழித்ததும் தன்மீது) அவள் (மதன) நீரைப் பார்த்தால் (குளியல் அவள்மீது கடமை தான்)” என்று பதிலளித்தார்கள்.

உடனே நான் (வெட்கத்தால்) எனது முகத்தை மூடிக்கொண்டு, “பெண்களுக்கும் ஸ்கலிதம் ஏற்படுமா? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உன் வலக்கரம் மண்ணைக் கவ்வட்டும் (நன்றாகக் கேட்டாய், போ)! பிறகு எவ்வாறு குழந்தை தாயின் சாயலில் பிறக்கிறது?” என்று கேட்டார்கள்.


அத்தியாயம் : 3
131. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ مِنَ الشَّجَرِ شَجَرَةً لاَ يَسْقُطُ وَرَقُهَا، وَهِيَ مَثَلُ الْمُسْلِمِ، حَدِّثُونِي مَا هِيَ "". فَوَقَعَ النَّاسُ فِي شَجَرِ الْبَادِيَةِ، وَوَقَعَ فِي نَفْسِي أَنَّهَا النَّخْلَةُ. قَالَ عَبْدُ اللَّهِ فَاسْتَحْيَيْتُ. فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ، أَخْبِرْنَا بِهَا. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" هِيَ النَّخْلَةُ "". قَالَ عَبْدُ اللَّهِ فَحَدَّثْتُ أَبِي بِمَا وَقَعَ فِي نَفْسِي فَقَالَ لأَنْ تَكُونَ قُلْتَهَا أَحَبُّ إِلَىَّ مِنْ أَنْ يَكُونَ لِي كَذَا وَكَذَا.
பாடம் : 50 கற்றலில் நாணம்32 முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (ஒன்றைக் கற்றுக்கொள்வ தற்கு) வெட்கப்படுபவரும் (தனக்கு எல்லாம் தெரிந்துவிட்டது எனக் கருதி) அகந்தை கொள்பவரும் (ஒருக்காலும்) கல்வியைக் கற்றுக்கொள்ளமாட்டர். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: பெண்களில் சிறந்தவர்கள் அன்சாரிப் பெண்களே. (ஏனெனில்,) மார்க்கத்தைக் கற்றுக்கொள்வதற்கு வெட்கம் ஒருபோதும் அவர்களுக்குத் தடையாக இருந்ததில்லை.
131. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“மரங்களில் (இப்படியும்) ஒருவகை மரம் உண்டு; அதன் இலை உதிர்வ தில்லை. அது முஸ்லிமுக்கு உவமை யாகும். அது என்ன மரம் என்று சொல் லுங்கள்!” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். காட்டு மரங்களை நோக்கி மக்களின் கவனம் போயிற்று. அது பேரீச்ச மரம்தான் என்று எனக்குத் தோன்றியது. (மூத்தவர்கள் மௌனமாய் இருக்கும் அவையில் நான் எப்படிச் சொல்வது என்று) வெட்கப்பட்டுக்கொண்டு (அமைதியாக) இருந்துவிட்டேன்.

பிறகு மக்கள் “அது என்ன மரம் என்று தாங்களே சொல்லுங்கள், அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்க, “அது பேரீச்ச மரம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பின்னர் என் தந்தை (உமர் (ரலி) அவர்கள்) இடம் என் மனதில் தோன்றிய விஷயத்தை நான் கூறினேன். அதைக் கேட்ட என் தந்தை “நீ அதைக் கூறி யிருந்தால் இன்னின்னவை எனக்குக் கிடைப்பதைவிட அது எனக்கு மிகவும் விருப்பமானதாக இருந்திருக்கும்” என்றார்கள்.

அத்தியாயம் : 3

132. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُنْذِرٍ الثَّوْرِيِّ، عَنْ مُحَمَّدٍ ابْنِ الْحَنَفِيَّةِ، عَنْ عَلِيٍّ، قَالَ كُنْتُ رَجُلاً مَذَّاءً فَأَمَرْتُ الْمِقْدَادَ أَنْ يَسْأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَسَأَلَهُ فَقَالَ "" فِيهِ الْوُضُوءُ "".
பாடம் : 51 (கேள்வி கேட்க) வெட்கப்பட் டுப் பிறரைக் கேட்கச் சொல்லல்
132. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

பாலுணர்வு கிளர்ச்சி நீர் (‘மதீ’) அதிக மாக வெளிப்படும் ஆடவனாக நான் இருந்தேன். (இது பற்றிக் கேட்க வெட்கப் பட்டு) மிக்தாத் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்களிடம் கேட்குமாறு பணித்தேன். அவர் அதுபற்றி நபியவர்களிடம் கேட்டார். “அதற்காக அங்கத் தூய்மை (உளூ) செய்வதுதான் கடமை (குளிக்க வேண்டிய கட்டாயமில்லை)” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அத்தியாயம் : 4
133. حَدَّثَنِي قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، قَالَ حَدَّثَنَا نَافِعٌ، مَوْلَى عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ بْنِ الْخَطَّابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ،. أَنَّ رَجُلاً، قَامَ فِي الْمَسْجِدِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، مِنْ أَيْنَ تَأْمُرُنَا أَنْ نُهِلَّ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" يُهِلُّ أَهْلُ الْمَدِينَةِ مِنْ ذِي الْحُلَيْفَةِ، وَيُهِلُّ أَهْلُ الشَّأْمِ مِنَ الْجُحْفَةِ، وَيُهِلُّ أَهْلُ نَجْدٍ مِنْ قَرْنٍ "". وَقَالَ ابْنُ عُمَرَ وَيَزْعُمُونَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" وَيُهِلُّ أَهْلُ الْيَمَنِ مِنْ يَلَمْلَمَ "". وَكَانَ ابْنُ عُمَرَ يَقُولُ لَمْ أَفْقَهْ هَذِهِ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம் : 52 பள்ளிவாசலில் கற்பிப்பதும் தீர்ப்பு வழங்குவதும்
133. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் எழுந்து நின்று (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எந்த இடத்திலிருந்து (ஹஜ் ஜுக்கா) ‘இஹ்ராம்’ கட்ட வேண்டும் எனக் கட்டளையிடுகிறீர்கள்?” என்று கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “மதீனாவாசிகள் ‘துல்ஹுலைஃபா’ எனும் இடத்திலிருந்தும், ஷாம் (சிரியா)வாசிகள் ‘அல்ஜுஹ்ஃபா’ எனும் இடத்திலி ருந்தும், நஜ்த்வாசிகள் ‘கர்ன்’ எனும் இடத்திலிருந்தும் ‘இஹ்ராம்’ கட்ட வேண்டும்” என்று பதிலளித்தார்கள்.

‘யமன்’வாசிகள் ‘யலம்லம்’ எனும் இடத்திலிருந்து இஹ்ராம் கட்ட வேண்டும் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகச் சிலர் கூறுகிறார்கள். இது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து (எதையும்) நான் அறியவில்லை.

அத்தியாயம் : 4
134. حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. وَعَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ رَجُلاً سَأَلَهُ مَا يَلْبَسُ الْمُحْرِمُ فَقَالَ "" لاَ يَلْبَسِ الْقَمِيصَ وَلاَ الْعِمَامَةَ وَلاَ السَّرَاوِيلَ وَلاَ الْبُرْنُسَ وَلاَ ثَوْبًا مَسَّهُ الْوَرْسُ أَوِ الزَّعْفَرَانُ، فَإِنْ لَمْ يَجِدِ النَّعْلَيْنِ فَلْيَلْبَسِ الْخُفَّيْنِ وَلْيَقْطَعْهُمَا حَتَّى يَكُونَا تَحْتَ الْكَعْبَيْنِ "".
பாடம் : 53 வினவப்பட்டதைவிட விரி வாகப் பதில் கூறல்
134. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், ‘இஹ்ராம்’ கட்டியவர் எந்த ஆடையை அணிய வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “முழு நீளச் சட்டை, தலைப்பாகை, முழுக்கால் சட்டை, முக்காடுள்ள மேலங்கி (புர்னுஸ்), (சாயம் எடுக்கப் பயன்படும்) ‘வர்ஸ்’ எனும் வாசனைச் செடியால் சாயம் தோய்த்த ஆடை, அல்லது குங்குமச் சாயம் தோய்த்த ஆடை ஆகியவற்றை (இஹ்ராம் கட்டியவர்) அணியக் கூடாது. காலணிகள் கிடைக்கா விட்டால் (தோலினாலான உயரமான) காலுறைகளை அணிந்து கொள்ளலாம். (ஆனால்) காலுறைகள் கணுக்காலுக்குக் கீழே இருக்கும்படி கத்தரித்து (அணிந்து)கொள்ளட்டும்” என்று சொன்னார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 4
135. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لاَ تُقْبَلُ صَلاَةُ مَنْ أَحْدَثَ حَتَّى يَتَوَضَّأَ "". قَالَ رَجُلٌ مِنْ حَضْرَمَوْتَ مَا الْحَدَثُ يَا أَبَا هُرَيْرَةَ قَالَ فُسَاءٌ أَوْ ضُرَاطٌ.
பாடம் : 1 அங்கத் தூய்மை தொடர்பாக வந்துள்ளவை உயர்ந்தோன் அல்லாஹ் கூறு கின்றான்: இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்குச் சென்றால், உங்கள் முகங்களையும், முழங்கைகள்வரை உங்கள் கைகளையும் கழுவிக் கொள்ளுங்கள். உங்கள் தலைகளை (ஈரக் கையால்) தடவிக்கொள்ளுங்கள். கணுக்கால்கள்வரை உங்கள் கால்களையும் (கழுவிக்கொள்ளுங்கள்). (5:6) அபூஅப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகின்றேன்: அங்கத் தூய்மை செய்யும்போது உறுப்புகளை ஒரு தடவை கழுவுவதுதான் கட்டாயமாகும் என்பதை நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். மேலும், அவர்களே அவ்வுறுப்புகளை இரண்டிரண்டு தடவைகளும் மும்மூன்று தடவைகளும் கழுவி அங்கத் தூய்மை செய்திருக்கிறார்கள். மூன்று தடவைக்கு மேல் அதிகப்படுத்தியது இல்லை. நபி (ஸல்) அவர்களின் செயல் முறையை மீறுவதையும் அங்கத் தூய்மை யில் (மூன்று தடவைகள் என்ற அந்த) எல்லையைத் தாண்டுவதையும் மார்க்க அறிஞர்கள் வெறுத்திருக்கிறார்கள்.2 பாடம் : 2 உடல் தூய்மையின்றி தொழுகை ஏற்கப்படாது.
135. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “சிறு துடக்கு ஏற்பட்டவர் அங்கத் தூய்மை செய்யாத வரை அவரது தொழுகை ஏற்கப்படாது” எனக் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அப்போது ‘ஹள்ரமவ்த்’ (யமன்) எனும் இடத்தைச் சேர்ந்த ஒருவர், “அபூஹுரைரா (ரலி) அவர்களே! சிறு துடக்கு என்பது என்ன?” என்று கேட்டார். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள், ‘சப்தத் துடனோ சப்தமின்றியோ நாற்ற வாயு பிரிவது’ என்று பதிலளித்தார்கள்.3

அத்தியாயம் : 4
136. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ خَالِدٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلاَلٍ، عَنْ نُعَيْمٍ الْمُجْمِرِ، قَالَ رَقِيتُ مَعَ أَبِي هُرَيْرَةَ عَلَى ظَهْرِ الْمَسْجِدِ، فَتَوَضَّأَ فَقَالَ إِنِّي سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" إِنَّ أُمَّتِي يُدْعَوْنَ يَوْمَ الْقِيَامَةِ غُرًّا مُحَجَّلِينَ مِنْ آثَارِ الْوُضُوءِ، فَمَنِ اسْتَطَاعَ مِنْكُمْ أَنْ يُطِيلَ غُرَّتَهُ فَلْيَفْعَلْ "".
பாடம் : 3 அங்கத் தூய்மையின் சிறப்பும் அங்கத் தூய்மையின் அடை யாளமாக முகம், கை, கால் ஆகி யவை (மறுமையில்) பிரகாசிப் பதும்
136. நுஐம் பின் அப்தில்லாஹ் அல் முஜ்மிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலின் மேல் புறத்தில் அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் நானும் ஏறிச் சென்றேன். அபூஹுரைரா (ரலி) அவர்கள் அங்கத் தூய்மை செய்தார்கள்.

பின்னர் “மறுமை நாளில் என் சமுதாயத்தார் அங்கத் தூய்மையின் உறுப்புகளிலுள்ள அடையாளங்களால் ‘(பிரதான) உறுப்புகள் பிரகாசிப்போரே!’ என்று அழைக்கப்படுவார்கள். எனவே, உங்களில் யாருக்கு (தம் உறுப்புகளை நீட்டிக் கழுவி) தமது பிரகாசத்தையும் நீட்டிக்கொள்ள முடியுமோ அவர் அதைச் செய்து கொள்ளட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதைக் கேட்டிருக்கிறேன் என்றார்கள்.4

அத்தியாயம் : 4
137. حَدَّثَنَا عَلِيٌّ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، وَعَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَمِّهِ، أَنَّهُ شَكَا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم الرَّجُلُ الَّذِي يُخَيَّلُ إِلَيْهِ أَنَّهُ يَجِدُ الشَّىْءَ فِي الصَّلاَةِ. فَقَالَ "" لاَ يَنْفَتِلْ ـ أَوْ لاَ يَنْصَرِفْ ـ حَتَّى يَسْمَعَ صَوْتًا أَوْ يَجِدَ رِيحًا "".
பாடம் : 4 அங்கத் தூய்மை முறிந்தது உறுதியாகத் தெரியாத வரை சந்தேகத்தின் பேரில் (மீண்டும்) அங்கத் தூய்மை செய்ய வேண் டியதில்லை.
137. அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், தொழும்போது வாயு பிரி வதைப் போன்ற உணர்வு ஒருவருக்கு ஏற்படுவது பற்றி முறையிட்டேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(வாயு பிரிவதன்) சப்தத்தைக் கேட்காத வரை, அல்லது நாற்றத்தை உணராத வரை அவர் (தொழுகையிலி ருந்து) திரும்ப வேண்டாம்” என்றார்கள்.5

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 4
138. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، قَالَ أَخْبَرَنِي كُرَيْبٌ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَامَ حَتَّى نَفَخَ ثُمَّ صَلَّى ـ وَرُبَّمَا قَالَ اضْطَجَعَ حَتَّى نَفَخَ ـ ثُمَّ قَامَ فَصَلَّى. ثُمَّ حَدَّثَنَا بِهِ سُفْيَانُ مَرَّةً بَعْدَ مَرَّةٍ عَنْ عَمْرٍو عَنْ كُرَيْبٍ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ بِتُّ عِنْدَ خَالَتِي مَيْمُونَةَ لَيْلَةً، فَقَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنَ اللَّيْلِ، فَلَمَّا كَانَ فِي بَعْضِ اللَّيْلِ قَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَتَوَضَّأَ مِنْ شَنٍّ مُعَلَّقٍ وُضُوءًا خَفِيفًا ـ يُخَفِّفُهُ عَمْرٌو وَيُقَلِّلُهُ ـ وَقَامَ يُصَلِّي فَتَوَضَّأْتُ نَحْوًا مِمَّا تَوَضَّأَ، ثُمَّ جِئْتُ فَقُمْتُ عَنْ يَسَارِهِ ـ وَرُبَّمَا قَالَ سُفْيَانُ عَنْ شِمَالِهِ ـ فَحَوَّلَنِي فَجَعَلَنِي عَنْ يَمِينِهِ، ثُمَّ صَلَّى مَا شَاءَ اللَّهُ، ثُمَّ اضْطَجَعَ، فَنَامَ حَتَّى نَفَخَ، ثُمَّ أَتَاهُ الْمُنَادِي فَآذَنَهُ بِالصَّلاَةِ، فَقَامَ مَعَهُ إِلَى الصَّلاَةِ، فَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ. قُلْنَا لِعَمْرٍو إِنَّ نَاسًا يَقُولُونَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم تَنَامُ عَيْنُهُ وَلاَ يَنَامُ قَلْبُهُ. قَالَ عَمْرٌو سَمِعْتُ عُبَيْدَ بْنَ عُمَيْرٍ يَقُولُ رُؤْيَا الأَنْبِيَاءِ وَحْىٌ، ثُمَّ قَرَأَ {إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ}.
பாடம் : 5 அங்கத் தூய்மையில் (உறுப்புகளை) இலேசாகக் கழுவுதல்
138. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களின் இல்லத்தில் ஓரிரவு தங்கியிருந்தேன். அந்த இரவில் (தொழுகைக்காக) நபி (ஸல்) அவர்கள் எழுந்தார்கள்.

இரவின் ஒரு பகுதி ஆனதும் (உறங்கிக்கொண்டிருந்த) நபி (ஸல்) அவர்கள் எழுந்து, தொங்கவிடப்பட்டிருந்த ஒரு பழைய தோல் பையிலிருந்து, (தண்ணீர் எடுத்து) இலேசாக அங்கத் தூய்மை செய்தார்கள்.

-(இதன் அறிவிப்பவர்களில் ஒருவ ரான) அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள், ‘இலேசாக அங்கத் தூய்மை செய்தார்கள்’ என்பதோடு ‘குறைந்தபட்ச அளவில்’ என்ற வார்த்தையையும் சேர்த்துக் கூறினார்கள்.-6

பிறகு நபி (ஸல்) அவர்கள் தொழுவதற் காக நின்றார்கள். உடனே நானும் அவர்களைப் போன்றே (இலேசாக) அங்கத் தூய்மை செய்துவிட்டுவந்து அவர்களுக்கு இடப் பக்கத்தில் நின்று கொண்டேன். உடனே நபி (ஸல்) அவர்கள் என்னைத் திருப்பி தமக்கு வலப் பக்கத்தில் நிறுத்திக்கொண்டார்கள். பின்னர் அவர்கள் அல்லாஹ் நாடிய அளவுக்குத் தொழுதுவிட்டுப் பின்னர் மீண்டும் சாய்ந்துபடுத்து குறட்டைவிட்டு உறங்கினார்கள்.

பிறகு அவர்களிடம் தொழுகை அழைப்பாளர் வந்து தொழுகைக்கு அவர்களை அழைத்தார். அப்போது எழுந்து அவருடன் (சுப்ஹு) தொழுகைக்குப் போய் மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். ஆனால், (மீண்டும்) அவர்கள் அங்கத் தூய்மை செய்யவில்லை.7

(இதன் அறிவிப்பாளரான) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்:

நாங்கள் அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களிடம், “மக்கள் ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கண்கள்தான் உறங்குகின்றன; அவர்களின் உள்ளம் உறங்காது’ என்று கூறுகின்றனரே! (அது உண்மையா?)” என்று கேட்டோம். அதற்கு அம்ர் (ரஹ்) அவர்கள், “இறைத் தூதர்களின் கனவு இறைவனிடமிருந்து வரும் செய்தி(யான வஹீ)யாகும் என்று (வந்துள்ள நபிமொழியை) உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்று கூறினார்கள்.

பிறகு “(மகனே!) உன்னை நான் அறுத்துப் பலியிடுவதாக கனவில் கண்டேன்” (37:102) எனும் இறைவசனத்தையும் (தமது கருத்துக்குச் சான்றாக) ஓதிக்காட்டினார்கள்.

சுஃப்யான் (ரஹ்) அவர்கள் சில நேரங்களில், “நபி (ஸல்) அவர்கள், குறட்டை விட்டுத் தூங்கிவிட்டு பிறகு (எழுந்து) தொழுவார்கள்” என்றும், வேறுசில நேரங்களில் “நபி (ஸல்) அவர்கள் சாய்ந்துபடுத்து குறட்டைவிட்டு உறங்கினார்கள். பிறகு எழுந்து தொழுதார்கள்” என்றும் அறிவித்துள்ளார்கள்.

ஆனால், மேற்கண்ட முழு ஹதீஸில் உள்ளவாறே பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிவித்துள்ளார்கள்.

அத்தியாயம் : 4
139. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ كُرَيْبٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، أَنَّهُ سَمِعَهُ يَقُولُ دَفَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ عَرَفَةَ حَتَّى إِذَا كَانَ بِالشِّعْبِ نَزَلَ فَبَالَ، ثُمَّ تَوَضَّأَ وَلَمْ يُسْبِغِ الْوُضُوءَ. فَقُلْتُ الصَّلاَةَ يَا رَسُولَ اللَّهِ. فَقَالَ "" الصَّلاَةُ أَمَامَكَ "". فَرَكِبَ، فَلَمَّا جَاءَ الْمُزْدَلِفَةَ نَزَلَ فَتَوَضَّأَ، فَأَسْبَغَ الْوُضُوءَ، ثُمَّ أُقِيمَتِ الصَّلاَةُ فَصَلَّى الْمَغْرِبَ، ثُمَّ أَنَاخَ كُلُّ إِنْسَانٍ بَعِيرَهُ فِي مَنْزِلِهِ، ثُمَّ أُقِيمَتِ الْعِشَاءُ فَصَلَّى وَلَمْ يُصَلِّ بَيْنَهُمَا.
பாடம் : 6 அங்கத் தூய்மையை நிறைவாகச் செய்தல் இப்னு உமர் (ரலி) அவர்கள், ‘அங்கத் தூய்மையை நிறைவாகச் செய்தல்’ (இஸ்பாஃகுல் உளூ) என்பதன் கருத்து, ‘நன்கு தூய்மைப்படுத்துதல் என்பதுதான்’ என்று கூறியுள்ளார்கள்.
139. உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஹஜ்ஜின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘அரஃபா’விலிருந்து (‘முஸ்தலிஃபா’வுக்குத்) திரும்பிக்கொண்டி ருந்தார்கள். ஒரு கணவாயை அடைந்த போது, அங்கு (தமது ஊர்தியைவிட்டு) இறங்கி, சிறுநீர் கழித்தார்கள். பின்னர் அங்கத் தூய்மை செய்தார்கள்; அங்கத் தூய்மையை (சுருக்கமாகவே செய்தார்கள். நன்கு தேய்த்து மும்முறை கழுவி) முழுமையாக்கவில்லை.

அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! (இங்கு) தொழப் போகிறீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “தொழுகை உமக்கு முன்னர் (உள்ள முஸ்தலிஃபாவில்) நடைபெறும்” என்று கூறிவிட்டு ஊர்தியில் ஏறிக்கொண்டார்கள்.

‘முஸ்தலிஃபா’வுக்கு வந்ததும், இறங்கி மீண்டும் அங்கத் தூய்மை செய்தார்கள். இப்போது அங்கத் தூய்மையை நிறைவாகச் செய்தார்கள். பின்னர் தொழுகைக்காக ‘இகாமத்’ சொல்லப்பட்டதும், மஃக்ரிப் தொழுகை நடத்தினார்கள். பிறகு ஒவ்வொரு மனிதரும் தத்தமது ஒட்டகத்தை தம் தங்குமிடங்களில் படுக்கவைத்தனர்.

தொடர்ந்து இஷா தொழுகைக்காக ‘இகாமத்’ சொல்லப்பட்டபோது, அதையும் தொழுவித்தார்கள். (மஃக்ரிப், இஷா ஆகிய) இரு தொழுகைகளுக்கிடையே வேறெந்தத் தொழுகையையும் அவர்கள் தொழவில்லை.

அத்தியாயம் : 4
140. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، قَالَ أَخْبَرَنَا أَبُو سَلَمَةَ الْخُزَاعِيُّ، مَنْصُورُ بْنُ سَلَمَةَ قَالَ أَخْبَرَنَا ابْنُ بِلاَلٍ ـ يَعْنِي سُلَيْمَانَ ـ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ تَوَضَّأَ فَغَسَلَ وَجْهَهُ، ثُمَّ أَخَذَ غَرْفَةً مِنْ مَاءٍ، فَمَضْمَضَ بِهَا وَاسْتَنْشَقَ، ثُمَّ أَخَذَ غَرْفَةً مِنْ مَاءٍ، فَجَعَلَ بِهَا هَكَذَا، أَضَافَهَا إِلَى يَدِهِ الأُخْرَى، فَغَسَلَ بِهِمَا وَجْهَهُ، ثُمَّ أَخَذَ غَرْفَةً مِنْ مَاءٍ، فَغَسَلَ بِهَا يَدَهُ الْيُمْنَى، ثُمَّ أَخَذَ غَرْفَةً مِنْ مَاءٍ، فَغَسَلَ بِهَا يَدَهُ الْيُسْرَى، ثُمَّ مَسَحَ بِرَأْسِهِ، ثُمَّ أَخَذَ غَرْفَةً مِنْ مَاءٍ فَرَشَّ عَلَى رِجْلِهِ الْيُمْنَى حَتَّى غَسَلَهَا، ثُمَّ أَخَذَ غَرْفَةً أُخْرَى، فَغَسَلَ بِهَا رِجْلَهُ ـ يَعْنِي الْيُسْرَى ـ ثُمَّ قَالَ هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَتَوَضَّأُ.
பாடம் : 7 ஒரு கை நிரம்பத் தண்ணீர் அள்ளி இரண்டு கைகளையும் சேர்த்துக்கொண்டு முகத்தைக் கழுவுதல்8
140. அதாஉ பின் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அங்கத் தூய்மை செய்தார்கள். அப்போது (ஒரு கையில் தண்ணீர் அள்ளி அதைக் கொண்டு) தமது முகத்தைக் கழுவினார்கள்.

-அதாவது (ஒரே) ஒரு கையில் தண்ணீர் எடுத்து அதன் மூலமே வாயும் கொப்புளித்து மூக்கிற்கும் நீர் செலுத்தி னார்கள். பிறகு ஒரு கையில் தண்ணீர் அள்ளி அதை -இவ்வாறு- மற்றொரு கையுடன் சேர்த்துக்கொண்டு அதன் மூலம் தமது முகத்தைக் கழுவினார்கள்.

பிறகு ஒரு கையில் தண்ணீர் அள்ளி அதன் மூலம் தமது வலக் கையைக் கழுவினார்கள். பின்னர் ஒரு கையில் தண்ணீர் அள்ளி அதன் மூலம் தமது இடக் கையைக் கழுவினார்கள். பிறகு தமது (ஈரக்கையால்) தலையைத் தடவி (மஸ்ஹு செய்யலா)னார்கள்.

பிறகு ஒரு கையில் தண்ணீர் அள்ளி அதைத் தமது வலக் காலின் மீது சிறுகச் சிறுக ஊற்றி அதைக் கழுவினார்கள். பின்னர் இன்னொரு கைத் தண்ணீர் அள்ளித் தமது இடக் காலில் ஊற்றிக் கழுவினார்கள்.

பிறகு “இப்படித்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை செய்வதை நான் பார்த்தேன்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அத்தியாயம் : 4