97. أَخْبَرَنَا مُحَمَّدٌ ـ هُوَ ابْنُ سَلاَمٍ ـ حَدَّثَنَا الْمُحَارِبِيُّ، قَالَ حَدَّثَنَا صَالِحُ بْنُ حَيَّانَ، قَالَ قَالَ عَامِرٌ الشَّعْبِيُّ حَدَّثَنِي أَبُو بُرْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" ثَلاَثَةٌ لَهُمْ أَجْرَانِ رَجُلٌ مِنْ أَهْلِ الْكِتَابِ آمَنَ بِنَبِيِّهِ، وَآمَنَ بِمُحَمَّدٍ صلى الله عليه وسلم وَالْعَبْدُ الْمَمْلُوكُ إِذَا أَدَّى حَقَّ اللَّهِ وَحَقَّ مَوَالِيهِ، وَرَجُلٌ كَانَتْ عِنْدَهُ أَمَةٌ {يَطَؤُهَا} فَأَدَّبَهَا، فَأَحْسَنَ تَأْدِيبَهَا، وَعَلَّمَهَا فَأَحْسَنَ تَعْلِيمَهَا، ثُمَّ أَعْتَقَهَا فَتَزَوَّجَهَا، فَلَهُ أَجْرَانِ "". ثُمَّ قَالَ عَامِرٌ أَعْطَيْنَاكَهَا بِغَيْرِ شَىْءٍ، قَدْ كَانَ يُرْكَبُ فِيمَا دُونَهَا إِلَى الْمَدِينَةِ.
பாடம் : 31 ஒருவர் தம் அடிமைப் பெண் ணுக்கும் குடும்பத்தாருக்கும் கல்வி கற்பித்தல்
97. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூன்று பேருக்கு (அல்லாஹ்விடத் தில்) இரட்டை நன்மைகள் கிடைக்கும்.

1. வேதக்காரர்களில் ஒருவர், தம் (சமூகத்திற்கு நியமிக்கப்பட்ட) இறைத் தூதர்மீதும் (இறுதித் தூதர்) முஹம்மத் (ஸல்) அவர்கள்மீதும் நம்பிக்கை கொண்டார்.

2. ஓர் அடிமை, அல்லாஹ்வின் கடமைகளையும் தம் உரிமையாளரின் கடமைகளையும் நிறைவேற்றினான்.

3. ஒருவரிடம் அடிமைப் பெண்ணொருத்தி இருந்தாள். அவளுக்கு அவர் ஒழுக்கம் கற்பித்து, அதை செம்மையாகச் செய்து, அவளுக்குக் கல்வி கற்பித்து, அதையும் செம்மையாகச் செய்தார். பிறகு அவளை அடிமைத் தளையிலிருந்து விடுதலை செய்து, அவளை அவரே மணந்தும்கொண்டார். (இம்மூவருக்கும் இரட்டை நன்மைகள் உண்டு.)

இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான) சாலிஹ் பின் ஹய்யான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(இந்த நபிமொழியை அறிவித்த) பின்னர் ஆமிர் அஷ்ஷஅபீ (ரஹ்) அவர்கள் (தம்மிடம் சட்ட விளக்கம் கேட்.டுவந்த ‘குராசான்’வாசி ஒருவரிடம்), “(சிரமம்) ஏதுமில்லாமலேயே இந்தக் கல்வியை நாம் உங்களுக்கு வழங்கியிருக் கிறோம். இதைவிடச் சிறிய பிரச்சினை களுக்காக மதீனாவுக்கு (வாகனங்களில்) பயணம் மேற்கொள்ளப்பட்டது உண்டு” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 3
98. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَيُّوبَ، قَالَ سَمِعْتُ عَطَاءً، قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، قَالَ أَشْهَدُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم ـ أَوْ قَالَ عَطَاءٌ أَشْهَدُ عَلَى ابْنِ عَبَّاسٍ ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَرَجَ وَمَعَهُ بِلاَلٌ، فَظَنَّ أَنَّهُ لَمْ يُسْمِعِ النِّسَاءَ فَوَعَظَهُنَّ، وَأَمَرَهُنَّ بِالصَّدَقَةِ، فَجَعَلَتِ الْمَرْأَةُ تُلْقِي الْقُرْطَ وَالْخَاتَمَ، وَبِلاَلٌ يَأْخُذُ فِي طَرَفِ ثَوْبِهِ. وَقَالَ إِسْمَاعِيلُ عَنْ أَيُّوبَ عَنْ عَطَاءٍ وَقَالَ عَنِ ابْنِ عَبَّاسٍ أَشْهَدُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 32 தலைவர் (இமாம்) பெண்களுக்கு அறிவுரை வழங்குவதும் அவர்களுக்குக் கல்வி கற்பிப்பதும்
98. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு பெருநாள் தினத்தில் உரையாற்றி விட்டு) பெண்கள் செவியுறும் விதத்தில் தாம் பேசவில்லை என்று எண்ணியவர்களாக (பெண்கள் இருக்கும் பகுதிக்கு) பிலால் (ரலி) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றார்கள்.

அங்கு பெண்களுக்கு அறிவுரை கூறிவிட்டு, தர்மம் செய்யும்படி வலியுறுத்தினார் கள். அங்கிருந்த பெண்கள் தங்கள் காதணிகளையும் மோதிரங்களையும் (கழற்றிப்) போடலானார்கள். பிலால் (ரலி) அவர்கள் தமது ஆடையின் ஓரத்தில் அவற்றைப் பெற்றுக்கொண்டிருந்தார்கள் என நான் உறுதியளிக்கிறேன்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அய்யூப் அஸ்ஸக்தீயானீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

‘நான் உறுதியளிக்கிறேன்’ என்று அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்களா, அல்லது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்களா என்று எனக்குத் தெரியவில்லை.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இஸ்மாயீல் பின் உலய்யா (ரஹ்) அவர் களது அறிவிப்பில், ‘நான் உறுதியளிக்கி றேன்’ என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாக (ஐயப்பாடின்றி) அறிவிக்கப் பட்டுள்ளது.

அத்தியாயம் : 3
99. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي سُلَيْمَانُ، عَنْ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ قَالَ قِيلَ يَا رَسُولَ اللَّهِ، مَنْ أَسْعَدُ النَّاسِ بِشَفَاعَتِكَ يَوْمَ الْقِيَامَةِ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لَقَدْ ظَنَنْتُ يَا أَبَا هُرَيْرَةَ أَنْ لاَ يَسْأَلَنِي عَنْ هَذَا الْحَدِيثِ أَحَدٌ أَوَّلُ مِنْكَ، لِمَا رَأَيْتُ مِنْ حِرْصِكَ عَلَى الْحَدِيثِ، أَسْعَدُ النَّاسِ بِشَفَاعَتِي يَوْمَ الْقِيَامَةِ مَنْ قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، خَالِصًا مِنْ قَلْبِهِ أَوْ نَفْسِهِ "".
பாடம் : 33 நபிமொழியை (ஹதீஸ்) அறிவ தில் ஆர்வம்காட்டல்
99. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

“அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாளில் மக்களிலேயே தங்களின் பரிந்துரை மூலம் நற்பேறு பெறுகின்றவர் யார்?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப் பட்டது. (அதாவது நான் கேட்டேன்.)

அப்போது, “அபூஹுரைரா! என்னைப் பற்றிய செய்திகள் (ஹதீஸ்)மீது உமக் கிருக்கும் பேராவல் எனக்குத் தெரியும். ஆதலால், இந்தச் செய்தியைப் பற்றியும் உமக்கு முன்னர் வேறு யாரும் என்னிடம் கேட்கமாட்டார்கள் என நான் எண்ணி யிருந்தேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, “மறுமை நாளில் மக்கள் அனைவரிலும் என் பரிந்துரை மூலம் நற்பேறு பெறுகின்றவர் யார் எனில், உளப்பூர்வமாக தூய எண்ணத்துடன் யார் ‘அல்லாஹ் வைத் தவிர வேறு இறைவனில்லை’ (லா இலாஹ இல்லல்லாஹ்) என்று சொன்னாரோ அவர்தான்” என்றார்கள்.

அத்தியாயம் : 3
100. حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" إِنَّ اللَّهَ لاَ يَقْبِضُ الْعِلْمَ انْتِزَاعًا، يَنْتَزِعُهُ مِنَ الْعِبَادِ، وَلَكِنْ يَقْبِضُ الْعِلْمَ بِقَبْضِ الْعُلَمَاءِ، حَتَّى إِذَا لَمْ يُبْقِ عَالِمًا، اتَّخَذَ النَّاسُ رُءُوسًا جُهَّالاً فَسُئِلُوا، فَأَفْتَوْا بِغَيْرِ عِلْمٍ، فَضَلُّوا وَأَضَلُّوا "". قَالَ الْفِرَبْرِيُّ حَدَّثَنَا عَبَّاسٌ قَالَ حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ هِشَامٍ نَحْوَهُ.
பாடம் : 34 கல்வி எவ்வாறு கைப்பற்றப்படும்? உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் (மதீனாவின் ஆளுநராயிருந்த) அபூபக்ர் பின் ஹஸ்ம் (ரஹ்) அவர்களுக் குக் கடிதம் எழுதினார்கள். அதில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களைப் பற்றிய செய்தி (ஹதீஸ்)களை ஆராய்ந்து அவற்றை எழுதி(த் தொகுத்து) வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில், (மார்க்கக்) கல்வி அழிந்துபோய்விடு மென்றும் (மார்க்க) அறிஞர்கள் (இவ்வு லகைவிட்டுச்) சென்றுவிடுவார்கள் என்றும் நான் அஞ்சுகின்றேன். (அவ்வாறு எழுதும் போது) நபி (ஸல்) அவர்களின் செய்தி (ஹதீஸ்)களைத் தவிர வேறு எதையும் (பதிவுக்கு) ஏற்கக் கூடாது. (கற்றவர்கள்) அறிவைப் பரப்பட்டும்; கல்லாதவர்களுக்கு அது கற்பிக்கப்படும் வரை கற்றோர் (ஓரிடத்தில் நிலையாக) அமர்ந்துகொள்ளட்டும். ஏனெனில், கல்வி மறைக்கப்படும்போதுதான் அழிகிறது. அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “அறிஞர்கள் (உலகைவிட்டுச்) சென்றுவிடுவார்கள்” என்பதுவரைதான் உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களின் கடிதத்தில் இடம்பெற்றிருந்ததாகக் காணப்படுகிறது.
100. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் கல்வியை(த் தன்) அடியார்களிடமிருந்து ஒரேடியாகப் பறித்துக் கொள்ளமாட்டான். ஆயினும், அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைப் பறிப்பான். இறுதியில் எந்த அறிஞரையும் அல்லாஹ் விட்டுவைக்காத போது, மக்கள் அறிவீனர்களைத் (தம்) தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட, அவர்கள் எந்த அறிவுமில்லாமல் தீர்ப்பு வழங்குவார்கள். எனவே, தாமும் வழிதவறி, பிறரையும் வழிதவறச்செய்வார்கள்.23

இதை அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.

இதே கருத்தில் அமைந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாக வும் வந்துள்ளது.

அத்தியாயம் : 3
101. حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ حَدَّثَنِي ابْنُ الأَصْبَهَانِيِّ، قَالَ سَمِعْتُ أَبَا صَالِحٍ، ذَكْوَانَ يُحَدِّثُ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ،. قَالَتِ النِّسَاءُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم غَلَبَنَا عَلَيْكَ الرِّجَالُ، فَاجْعَلْ لَنَا يَوْمًا مِنْ نَفْسِكَ. فَوَعَدَهُنَّ يَوْمًا لَقِيَهُنَّ فِيهِ، فَوَعَظَهُنَّ وَأَمَرَهُنَّ، فَكَانَ فِيمَا قَالَ لَهُنَّ "" مَا مِنْكُنَّ امْرَأَةٌ تُقَدِّمُ ثَلاَثَةً مِنْ وَلَدِهَا إِلاَّ كَانَ لَهَا حِجَابًا مِنَ النَّارِ "". فَقَالَتِ امْرَأَةٌ وَاثْنَيْنِ فَقَالَ "" وَاثْنَيْنِ "".
பாடம் : 35 பெண்களின் கல்விக்காகத் தனியே ஒரு நாளை ஒதுக்க லாமா?
101. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு சமயம்) பெண்கள் நபி (ஸல்) அவர்களிடம், “(நாங்கள் தங்களை அணுகி விளக்கங்கள் கேட்க முடியாதபடி) தங்க ளிடம் (எப்போதும்) ஆண்களே எங்களை மிகைத்து நிற்கிறார்கள். எனவே, எங்களுக் காக (தனியாக) ஒரு நாளை நீங்களே ஒதுக்குங்கள்” எனக் கேட்டுக் கொண் டார்கள்.

அவ்வாறே அப்பெண்களுக்கென ஒரு நாளை நபி (ஸல்) அவர்கள் வாக்களித்து, அந்நாளில் அவர்களைச் சந்தித்து அவர்களுக்கு அறிவுரை பகர்ந்தார்கள்; (மார்க்கக்) கட்டளைகளை வலியுறுத்தினார்கள்.

பெண்களுக்கு நபி (ஸல்) அவர்கள் சொன்னவற்றில் இதுவும் அடங்கும்: “உங்களில் எந்தப் பெண் (தனது மரணத்திற்கு) முன்பாகத் தன் குழந்தைகளில் மூவரை (இறப்பின் மூலம்) இழந்து (இறைவனிடம்) அனுப்பிவைத்துவிடுகிறாரோ அவருக்கு அந்தக் குழந்தைகள் நரகத்திலிருந்து காக்கும் திரை (தடை)யாக இருப்பார்கள்” என்று கூறினார்கள்.

உடனே ஒரு பெண்மணி, ‘இரண்டு குழந்தைகளை ஒருத்தி இழந்துவிட்டால்...?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ‘(ஆம்) இரண்டு, குழந்தைகளை இழந்து விட்டாலும்தான்’ என்று பதிலளித்தார்கள்.


அத்தியாயம் : 3
102. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا غُنْدَرٌ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الأَصْبَهَانِيِّ، عَنْ ذَكْوَانَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِهَذَا. وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الأَصْبَهَانِيِّ، قَالَ سَمِعْتُ أَبَا حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ "" ثَلاَثَةً لَمْ يَبْلُغُوا الْحِنْثَ "".
பாடம் : 35 பெண்களின் கல்விக்காகத் தனியே ஒரு நாளை ஒதுக்க லாமா?
102. மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாக வும் வந்துள்ளது.

அபூஹுரைரா (ரலி) அவர்களிட மிருந்து வரும் மற்றோர் அறிவிப்பில், “பருவ வயதை அடையாத மூன்று குழந்தைகளை (ஒரு பெண் இழந்து விட்டால் அவருக்கு அந்தக் குழந்தைகள் நரகத்திலிருந்து காக்கும் திரையாக இருப்பார்கள்)” என்று (நபி (ஸல்) அவர்கள் கூறியதாக) இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம் : 3
103. حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، قَالَ أَخْبَرَنَا نَافِعُ بْنُ عُمَرَ، قَالَ حَدَّثَنِي ابْنُ أَبِي مُلَيْكَةَ، أَنَّ عَائِشَةَ، زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم كَانَتْ لاَ تَسْمَعُ شَيْئًا لاَ تَعْرِفُهُ إِلاَّ رَاجَعَتْ فِيهِ حَتَّى تَعْرِفَهُ، وَأَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ حُوسِبَ عُذِّبَ "". قَالَتْ عَائِشَةُ فَقُلْتُ أَوَ لَيْسَ يَقُولُ اللَّهُ تَعَالَى {فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا} قَالَتْ فَقَالَ "" إِنَّمَا ذَلِكَ الْعَرْضُ، وَلَكِنْ مَنْ نُوقِشَ الْحِسَابَ يَهْلِكْ "".
பாடம் : 36 ஒரு விஷயத்தைக் கேட்ட ஒருவர் அதை விளங்கிக்கொள் ளாதபோது, அதை (நன்கு) புரிந்துகொள்ளும்வரைத் திரும் பத் திரும்பக் கேட்பது
103. இப்னு அபீமுலைக்கா (அப்துல்லாஹ் பின் உபைதில்லாஹ் - ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் தமக்குப் புரியாத ஒரு செய்தியைக் கேட்டால், அதை அவர்கள் (நன்கு) புரிந்துகொள்ளும்வரைத் திரும்பத் திரும்பக் கேள்வி கேட்டுத் தெரிந்துகொள்வார்கள்.

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள், “யார் (மறுமை நாளில்) விசாரணை செய்யப்படுவாரோ அவர் வேதனை செய்யப்படுவார்” என்று கூறினார்கள்.

அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், “அல்லாஹ் (குர்ஆனில்) “வலக் கரத்தில் தமது வினைப் பதிவுச்சீட்டு வழங்கப் பட்டவரிடம் எளிய முறையில் கணக்கு வாங்கப்படும்’ (84:7,8) என்றல்லவா கூறுகின்றான்?” என்று கேட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள், “இது (கேள்வி கணக்குத் தொடர்பானது அன்று: மாறாக, மனிதர்களின் நன்மை தீமைகளின் பட்டியல் அவர்களுக்குமுன்) சமர்ப்பிக் கப்படுவதுதான். ஆனால், துருவித் துருவி விசாரிக்கப்படுபவர் அழிந்துபோவார்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 3
104. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي سَعِيدٌ، عَنْ أَبِي شُرَيْحٍ، أَنَّهُ قَالَ لِعَمْرِو بْنِ سَعِيدٍ وَهْوَ يَبْعَثُ الْبُعُوثَ إِلَى مَكَّةَ ائْذَنْ لِي أَيُّهَا الأَمِيرُ أُحَدِّثْكَ قَوْلاً قَامَ بِهِ النَّبِيُّ صلى الله عليه وسلم الْغَدَ مِنْ يَوْمِ الْفَتْحِ، سَمِعَتْهُ أُذُنَاىَ وَوَعَاهُ قَلْبِي، وَأَبْصَرَتْهُ عَيْنَاىَ، حِينَ تَكَلَّمَ بِهِ، حَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ "" إِنَّ مَكَّةَ حَرَّمَهَا اللَّهُ، وَلَمْ يُحَرِّمْهَا النَّاسُ، فَلاَ يَحِلُّ لاِمْرِئٍ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ أَنْ يَسْفِكَ بِهَا دَمًا، وَلاَ يَعْضِدَ بِهَا شَجَرَةً، فَإِنْ أَحَدٌ تَرَخَّصَ لِقِتَالِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِيهَا فَقُولُوا إِنَّ اللَّهَ قَدْ أَذِنَ لِرَسُولِهِ، وَلَمْ يَأْذَنْ لَكُمْ. وَإِنَّمَا أَذِنَ لِي فِيهَا سَاعَةً مِنْ نَهَارٍ، ثُمَّ عَادَتْ حُرْمَتُهَا الْيَوْمَ كَحُرْمَتِهَا بِالأَمْسِ، وَلْيُبَلِّغِ الشَّاهِدُ الْغَائِبَ "". فَقِيلَ لأَبِي شُرَيْحٍ مَا قَالَ عَمْرٌو قَالَ أَنَا أَعْلَمُ مِنْكَ يَا أَبَا شُرَيْحٍ، لاَ يُعِيذُ عَاصِيًا، وَلاَ فَارًّا بِدَمٍ، وَلاَ فَارًّا بِخَرْبَةٍ.
பாடம் : 37 இந்தக் கல்வியை இங்கே வந்தி ருப்போர் வராதவர்களுக்குச் சொல்லிவிடட்டும்! இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.
104. சயீத் பின் அபீசயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(யஸீதின் ஆட்சியில் மதீனாவின் ஆளுநராயிருந்த) அம்ர் பின் சயீத், (அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களுக்கு எதிராக) மக்காவை நோக்கிப் படைகளை அனுப்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரிடம் அபூஷுரைஹ் அல்அதவீ (ரலி) அவர்கள் கூறினார்கள்:

தலைவரே! எனக்கு அனுமதி அளியுங்கள்! மக்கா வெற்றிக்கு மறுநாள் நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தி ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கிறேன்: என் காதுகள் அதைக் கேட்டிருக்கின்றன; என் உள்ளம் அதை நினைவில் வைத்துள்ளது. நபியவர்கள் உரையாற்றியபோது என் கண்கள் அவர்களைப் பார்த்திருக்கின்றன.

அவ்வுரையில் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, “அல்லாஹ் தான் மக்கா நகருக்குப் புனிதத்தை வழங்கினான். மனிதர்கள் அதற்குப் புனிதத்தை வழங்கவில்லை. எனவே, அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக் கூடிய எவருக்கும் இங்கே (சண்டையிட்டு) இரத்தத்தைச் சிந்துவதோ இங்குள்ள மரங்களை வெட்டுவதோ அனுமதிக்கப் படவில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றி நாளில், ஒரு பகல் பொழுது மட்டும்) இங்கு போரிட்டதனால் (அதை ஆதாரமாகக் கொண்டு) இதைப் பொது அனுமதி என்று யாரேனும் கருதினால், “அல்லாஹ் தன் தூதருக்கு (மட்டும்) அனுமதியளித்தான்; உங்களுக்கு அவன் அனுமதி வழங்கவில்லை” என்று சொல்லி விடுங்கள்.

“எனக்குக்கூட (நேற்றைய) பகல் பொழுது மட்டுமே (இங்கு போர் புரிய) அனுமதியளித்தான். நேற்று இருந்ததைப் போன்றே, இன்று அதன் புனிதம் திரும்ப வந்து விட்டது. (நாம் சொன்ன விஷயங் கள் யாவற்றையும் இங்கு) வந்திருப்பவர் கள் வராதவர்களுக்குத் சொல்லிவிடுங் கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

“அதற்கு அம்ர் பின் சயீத் என்ன பதிலளித்தார்?” என்று அபூஷுரைஹ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு “அபூஷுரைஹே! உம்மைவிட (இதைப் பற்றி) நான் நன்கு அறிவேன்; நிச்சயமாக (புனித நகரமான) மக்கா குற்றவாளிக்கும் மரண தண்டனைக்குப் பயந்து (மக்காவுக்குள்) ஓடிவந்தவனுக்கும், திருட்டுக் குற்றம் புரிந்துவிட்டு ஓடிவந்தவனுக்கும் பாதுகாப்பளிக்காது” என்று அம்ர் கூறினார் என்றார்கள்.


அத்தியாயம் : 3
105. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنِ ابْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِي بَكْرَةَ، ذُكِرَ النَّبِيُّ صلى الله عليه وسلم قَالَ "" فَإِنَّ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ ـ قَالَ مُحَمَّدٌ وَأَحْسِبُهُ قَالَ وَأَعْرَاضَكُمْ ـ عَلَيْكُمْ حَرَامٌ كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا فِي شَهْرِكُمْ هَذَا، أَلاَ لِيُبَلِّغِ الشَّاهِدُ مِنْكُمُ الْغَائِبَ "". وَكَانَ مُحَمَّدٌ يَقُولُ صَدَقَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ ذَلِكَ "" أَلاَ هَلْ بَلَّغْتُ "" مَرَّتَيْنِ.
பாடம் : 37 இந்தக் கல்வியை இங்கே வந்தி ருப்போர் வராதவர்களுக்குச் சொல்லிவிடட்டும்! இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.
105. அபூபக்ரா (நுஃபைஉ பின் ஹாரிஸ்-ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (விடைபெறும் ஹஜ்ஜின் போது ஆற்றிய பேருரையில்) “...எனவே, (மக்களே!) உங்களுடைய (புனித மிக்க) இந்த மாதத்தில் இன்றைய தினம் எந்த அளவுக்குப் புனிதமானதோ அந்த அளவுக்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் உங்களுக்குப் புனித மிக்கவை ஆகும். அறிந்துகொள்ளுங்கள்: இங்கு வந்திருப்பவர்கள் வராதவர் களுக்கு (நான் கூறியவற்றை) சொல்லி விடட்டும்!” என்று கூறினார்கள்.

மேலும், “(மக்களுக்குத் தெரிவிக்கும்படி எனக்குக் கட்டளையிடப்பட்டவற்றை) நான் சமர்ப்பித்துவிட்டேனா?” என்று இரண்டு முறை (மக்களைப் பார்த்துக்) கேட்டார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(அபூபக்ரா (ரலி) அவர்களிடம் இந்த ஹதீஸை செவியுற்ற அவர்களின் புதல்வர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ரா (ரஹ்) அவர்கள், “(‘உங்கள் உடைமைகளும்’ என்பதற்கு அடுத்து) ‘உங்கள் மானங் களும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறி னார்கள் என்றே நான் கருதுகிறேன்” என்றார்கள்.

முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உண்மையே சொன்னார்கள். அவர்கள் சொன்னபடியே (வந்தவர்கள் வராதவர் களுக்குச் சொல்லும் பணி) நடந்தது” என்று (இந்த நபிமொழியை அறிவித்தபின்) கூறுவது வழக்கம்.

அத்தியாயம் : 3
106. حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ، قَالَ أَخْبَرَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي مَنْصُورٌ، قَالَ سَمِعْتُ رِبْعِيَّ بْنَ حِرَاشٍ، يَقُولُ سَمِعْتُ عَلِيًّا، يَقُولُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لاَ تَكْذِبُوا عَلَىَّ، فَإِنَّهُ مَنْ كَذَبَ عَلَىَّ فَلْيَلِجِ النَّارَ "".
பாடம் : 38 நபி (ஸல்) அவர்கள்மீது பொய் உரைப்போருக்குக் கிடைக்கும் பாவம்
106. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(நான் சொல்லாததை நான் சொன்னதாக) என்மீது பொய் உரைக்காதீர்கள். ஏனெனில், என்மீது பொய்யுரைப்பவன் நிச்சயம் நரகத்தில் நுழைவான்.24

இதை அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 3
107. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ جَامِعِ بْنِ شَدَّادٍ، عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ أَبِيهِ، قَالَ قُلْتُ لِلزُّبَيْرِ إِنِّي لاَ أَسْمَعُكَ تُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم كَمَا يُحَدِّثُ فُلاَنٌ وَفُلاَنٌ. قَالَ أَمَا إِنِّي لَمْ أُفَارِقْهُ وَلَكِنْ سَمِعْتُهُ يَقُولُ "" مَنْ كَذَبَ عَلَىَّ فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ "".
பாடம் : 38 நபி (ஸல்) அவர்கள்மீது பொய் உரைப்போருக்குக் கிடைக்கும் பாவம்
107. அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (என் தந்தை) ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களிடம், “(தந்தையே!) உங்களைப் போன்று (நபி (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்ட) இன்னவர் இன்னவரெல்லாம் நபி (ஸல்) அவர்கள் பற்றி (அதிகமாக ஹதீஸ்) அறிவிப்பதைப் போன்று, தாங்கள் அவர்களைப் பற்றி அறிவிப்பதை நான் செவியுற்றதேயில்லையே, ஏன்?” என்று கேட்டேன்.

அதற்கு ஸுபைர் (ரலி) அவர்கள், “(மகனே) இதோ பார்! மெய்யாகவே நான் (இஸ்லாத்தை ஏற்றதிலிருந்து பெரும் பாலும்) நபி (ஸல்) அவர்களைப் பிரிந்ததே இல்லை. ஆயினும், ‘என்மீது யார் பொய் சொல்வாரோ அவர் நரகத்தில் தமது இருப்பிடத்தை அமைத்துக்கொள்ளட்டும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். (அதனால்தான் நான் அதிகமாக நபிமொழிகளை அறிவிக்கவில்லை)” என்றார்கள்.


அத்தியாயம் : 3
108. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ عَبْدِ الْعَزِيزِ، قَالَ أَنَسٌ إِنَّهُ لَيَمْنَعُنِي أَنْ أُحَدِّثَكُمْ حَدِيثًا كَثِيرًا أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ تَعَمَّدَ عَلَىَّ كَذِبًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ "".
பாடம் : 38 நபி (ஸல்) அவர்கள்மீது பொய் உரைப்போருக்குக் கிடைக்கும் பாவம்
108. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், “என்மீது யார் வேண்டுமென்றே (இட்டுக்கட்டி) பொய் சொல்வாரோ அவர் தமது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக்கொள்ளட்டும்” என்று கூறியதுதான், உங்களுக்கு நான் அதிகமான நபிமொழிகளை எடுத்துரைக்காமல் என்னைத் தடுத்துவிட்டது.


அத்தியாயம் : 3
109. حَدَّثَنَا مَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" مَنْ يَقُلْ عَلَىَّ مَا لَمْ أَقُلْ فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ "".
பாடம் : 38 நபி (ஸல்) அவர்கள்மீது பொய் உரைப்போருக்குக் கிடைக்கும் பாவம்
109. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் கூறாத ஒன்றை நான் கூறியதாக

யார் சொல்வாரோ அவர் நரகத்தில் தமது இருப்பிடத்தை அமைத்துக்கொள்ளட்டும்.

இதை சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 3
110. حَدَّثَنَا مُوسَى، قَالَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" تَسَمَّوْا بِاسْمِي وَلاَ تَكْتَنُوا بِكُنْيَتِي، وَمَنْ رَآنِي فِي الْمَنَامِ فَقَدْ رَآنِي، فَإِنَّ الشَّيْطَانَ لاَ يَتَمَثَّلُ فِي صُورَتِي، وَمَنْ كَذَبَ عَلَىَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ "".
பாடம் : 38 நபி (ஸல்) அவர்கள்மீது பொய் உரைப்போருக்குக் கிடைக்கும் பாவம்
110. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(முஹம்மத், அஹ்மத் என்ற) எனது இயற்பெயரை நீங்களும் சூட்டிக்கொள் ளுங்கள்; (அபுல்காசிம் என்ற) எனது குறிப்புப்பெயரை உங்கள் குறிப்புப் பெயராக்கிக்கொள்ளாதீர்கள். கனவில் யார் என்னைக் கண்டாரோ அவர் என்னையே கண்டார். ஏனெனில், ஷைத்தான் என் உருவத்தில் காட்சியளிக்கமாட்டான்.

மேலும், என்மீது யார் வேண்டுமென்றே (இட்டுக்கட்டி) பொய் சொல்வாரோ அவர் நரகத்தில் தமது இருப்பிடத்தை அமைத்துக்கொள்ளட்டும்.25

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 3
111. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، قَالَ أَخْبَرَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ مُطَرِّفٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ أَبِي جُحَيْفَةَ، قَالَ قُلْتُ لِعَلِيٍّ هَلْ عِنْدَكُمْ كِتَابٌ قَالَ لاَ، إِلاَّ كِتَابُ اللَّهِ، أَوْ فَهْمٌ أُعْطِيَهُ رَجُلٌ مُسْلِمٌ، أَوْ مَا فِي هَذِهِ الصَّحِيفَةِ. قَالَ قُلْتُ فَمَا فِي هَذِهِ الصَّحِيفَةِ قَالَ الْعَقْلُ، وَفَكَاكُ الأَسِيرِ، وَلاَ يُقْتَلُ مُسْلِمٌ بِكَافِرٍ.
பாடம் : 39 கல்வியை எழுதி வைத்துக் கொள்ளல்
111. அபூஜுஹைஃபா (வஹ்ப் பின் அப்தில்லாஹ் - ரலி) அவர்கள் கூறியதாவது:

அலீ (ரலி) அவர்களிடம், “(நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தாராகிய) உங்களி டம் எழுதப்பட்ட ஏடு ஏதேனும் உள்ளதா?” என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள் “(குர்ஆன் எனும்) அல்லாஹ்வின் வேதத்தையும், (குர்ஆனி லிருந்து) ஒரு முஸ்லிமான மனிதருக்கு வழங்கப்படும் விளக்கத்தையும், மேலும் இந்த ஏட்டில் உள்ளதையும் தவிர, வேறு எதுவும் (எங்களிடம்) இல்லை” என்றார்கள்.

நான் “இந்த ஏட்டில் என்ன இருக் கிறது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “உயிரீட்டுத் தொகை (பற்றிய சட்டங்கள்), போர்க் கைதிகளை (எதிரியிட மிருந்து) விடுவித்தல், இறைமறுப்பாளன் கொலை செய்யப்பட்டதற்காக ஒரு முஸ்லிம் கொல்லப்படக் கூடாது (என்பவை இதில் உள்ளன)” என்று பதிலளித்தார்கள்.


அத்தியாயம் : 3
112. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ الْفَضْلُ بْنُ دُكَيْنٍ، قَالَ حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ خُزَاعَةَ، قَتَلُوا رَجُلاً مِنْ بَنِي لَيْثٍ عَامَ فَتْحِ مَكَّةَ بِقَتِيلٍ مِنْهُمْ قَتَلُوهُ، فَأُخْبِرَ بِذَلِكَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَرَكِبَ رَاحِلَتَهُ، فَخَطَبَ فَقَالَ "" إِنَّ اللَّهَ حَبَسَ عَنْ مَكَّةَ الْقَتْلَ ـ أَوِ الْفِيلَ شَكَّ أَبُو عَبْدِ اللَّهِ ـ وَسَلَّطَ عَلَيْهِمْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَالْمُؤْمِنِينَ، أَلاَ وَإِنَّهَا لَمْ تَحِلَّ لأَحَدٍ قَبْلِي، وَلاَ تَحِلُّ لأَحَدٍ بَعْدِي أَلاَ وَإِنَّهَا حَلَّتْ لِي سَاعَةً مِنْ نَهَارٍ، أَلاَ وَإِنَّهَا سَاعَتِي هَذِهِ حَرَامٌ، لاَ يُخْتَلَى شَوْكُهَا، وَلاَ يُعْضَدُ شَجَرُهَا، وَلاَ تُلْتَقَطُ سَاقِطَتُهَا إِلاَّ لِمُنْشِدٍ، فَمَنْ قُتِلَ فَهُوَ بِخَيْرِ النَّظَرَيْنِ إِمَّا أَنْ يُعْقَلَ، وَإِمَّا أَنْ يُقَادَ أَهْلُ الْقَتِيلِ "". فَجَاءَ رَجُلٌ مِنْ أَهْلِ الْيَمَنِ فَقَالَ اكْتُبْ لِي يَا رَسُولَ اللَّهِ. فَقَالَ "" اكْتُبُوا لأَبِي فُلاَنٍ "". فَقَالَ رَجُلٌ مِنْ قُرَيْشٍ إِلاَّ الإِذْخِرَ يَا رَسُولَ اللَّهِ، فَإِنَّا نَجْعَلُهُ فِي بُيُوتِنَا وَقُبُورِنَا. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِلاَّ الإِذْخِرَ، إِلاَّ الإِذْخِرَ "". قَالَ أَبُو عَبْدِ اللَّهِ يُقَالُ يُقَادُ بِالْقَافِ. فَقِيلَ لأَبِي عَبْدِ اللَّهِ أَىُّ شَىْءٍ كَتَبَ لَهُ قَالَ كَتَبَ لَهُ هَذِهِ الْخُطْبَةَ.
பாடம் : 39 கல்வியை எழுதி வைத்துக் கொள்ளல்
112. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அறியாமைக் காலத்தில்) தம் குலத்தாரில் ஒருவரைக் கொலை செய்ததற்குப் பதிலாக மக்கா வெற்றி ஆண்டில் ‘பனூ லைஸ்’ குலத்தைச் சேர்ந்த ஒருவரை ‘குஸாஆ’ குலத்தார் கொலை செய்துவிட்டனர். இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனே நபியவர்கள் தமது ஊர்தியில் ஏறி (அமர்ந்து), உரை நிகழ்த்தினார்கள்.

(அவ்வுரையில்) “இந்த(ப் புனித மக்கா) நகரைவிட்டு ‘யானைப் படையை’ அல்லது ‘கொலையை’ அல்லாஹ் தடுத்துவிட்டான். மக்காவாசிகள்மீது அல்லாஹ் தன் தூதருக்கும் இறைநம்பிக்கையாளர்களுக் கும் அதிகாரம் அளித்தான். எச்சரிக்கை! மக்காவில் போர் செய்வது எனக்கு முன்னர் யாருக்கும் அனுமதிக்கப்பட்ட தில்லை; எனக்குப் பின்னரும் எவருக்கும் அனுமதிக்கப்படப் போவதுமில்லை. நினைவில் கொள்க! எனக்குக்கூட பகலில் சிறிது நேரம் போர் புரியவே அனுமதி கிடைத்தது. எச்சரிக்கை! இங்கு போர் செய்வது இந்த நிமிடத்திலிருந்து (முற்றாகத்) தடை செய்யப்பட்டுவிட்டது.

எனவே, இந்நகரின் முட்செடி பிடுங்கப் படக் கூடாது; இங்குள்ள மரம் வெட்டப் படக் கூடாது. இங்கே தவறி விழும் பொருட்களை (அவற்றைப் பற்றி மக்களுக்கு) அறிவிப்புச் செய்பவரைத் தவிர (வேறு யாரும்) எடுக்கக் கூடாது. (இனிமேல்) எவரேனும் கொலை செய்யப் பட்டுவிட்டால், அவருடைய உறவினர்கள் இழப்பீடு பெறுதல், அல்லது பழிவாங்குதல் ஆகிய இரு யோசனைகளில் சிறந்ததைத் தேர்வு செய்யலாம்” என்று கூறினார்கள்.

அப்போது யமன்வாசிகளில் (அபூஷாஹ் எனும்) ஒருவர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (இந்த உரையை) எனக்கு எழுதித்தரச் சொல்லுங்கள்” என்று கேட்டுக் கொண்டார். உடனே நபி (ஸல்) அவர்கள், “இன்ன மனிதரின் தந்தைக்கு (அபூஷாஹிற்கு) எழுதிக்கொடுங்கள்” என்றார்கள்.

அப்போது குறைஷியரில் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! (மக்காவின் செடிகொடிகளை வெட்டக் கூடாது என்பதிலிருந்து வாசனைத் தாவரமான) ‘இத்கிர்’ புல்லுக்கு விதிவிலக்கு அளியுங்கள்; ஏனெனில், நாங்கள் அதை எங்கள் வீடுகளி(ன் கூரைகளி)லும் எங்கள் மண்ணறைகளிலும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம்” என்றார். நபி (ஸல்) அவர்கள் ‘இத்கிர் புல்லைத் தவிர’ என்று சொன்னார்கள்.

அபூஅப்தில்லாஹ் (புகாரீயாகிய நான்) கூறுகிறேன்:

(இந்த ஹதீஸின் மூலத்தில் சில பிரதிகளில் உள்ள ‘அய்யுஃபாத’ எனும் சொல்) ‘அய்யுகாத’ என்றும் வாசிக்கப்படுகிறது.

என்னிடம், “(அபூஷாஹ் எனும்) அவருக்கு எதை எழுதிக்கொடுக்கும்படி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?” என்று கேட்கப்பட்டது. நான், “நபி (ஸல்) அவர்கள் ஆற்றிய இந்த உரையைத்தான் (எழுதித் தரச்சொன்னார்கள்)” என்று பதிலளித்தேன்.


அத்தியாயம் : 3
113. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنَا عَمْرٌو، قَالَ أَخْبَرَنِي وَهْبُ بْنُ مُنَبِّهٍ، عَنْ أَخِيهِ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ مَا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَحَدٌ أَكْثَرَ حَدِيثًا عَنْهُ مِنِّي، إِلاَّ مَا كَانَ مِنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو فَإِنَّهُ كَانَ يَكْتُبُ وَلاَ أَكْتُبُ. تَابَعَهُ مَعْمَرٌ عَنْ هَمَّامٍ عَنْ أَبِي هُرَيْرَةَ.
பாடம் : 39 கல்வியை எழுதி வைத்துக் கொள்ளல்
113. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் யாரும் என்னைவிட அதிகமான நபி மொழிகளை அறிவிக்கவில்லை; அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களி டம் இருந்த (அதிகமான) நபிமொழி களைத் தவிர. ஏனெனில், அவர்கள் (ஹதீஸ்களை) எழுதிவைத்துக்கொள்வார் கள். நான் (நினைவில் வைத்துக்கொள் வேனே தவிர) எழுதி வைத்துக்கொண்ட தில்லை.

இந்தத் தகவல் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 3
114. حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ لَمَّا اشْتَدَّ بِالنَّبِيِّ صلى الله عليه وسلم وَجَعُهُ قَالَ "" ائْتُونِي بِكِتَابٍ أَكْتُبُ لَكُمْ كِتَابًا لاَ تَضِلُّوا بَعْدَهُ "". قَالَ عُمَرُ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم غَلَبَهُ الْوَجَعُ وَعِنْدَنَا كِتَابُ اللَّهِ حَسْبُنَا فَاخْتَلَفُوا وَكَثُرَ اللَّغَطُ. قَالَ "" قُومُوا عَنِّي، وَلاَ يَنْبَغِي عِنْدِي التَّنَازُعُ "". فَخَرَجَ ابْنُ عَبَّاسٍ يَقُولُ إِنَّ الرَّزِيَّةَ كُلَّ الرَّزِيَّةِ مَا حَالَ بَيْنَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَبَيْنَ كِتَابِهِ.
பாடம் : 39 கல்வியை எழுதி வைத்துக் கொள்ளல்
114. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களுக்கு (இறப்பு நெருங்கி, நோயின்) வேதனை அதிகமான போது, “என்னிடம் ஓர் ஏட்டைக் கொண்டு வாருங்கள். உங்களுக்கு நான் ஒரு மடலை எழுதித்தருகிறேன். அதன் பிறகு நீங்கள் வழிதவறவேமாட்டீர்கள்” என்றார்கள்.

(நபி அவர்களின் வேதனையை அறிந்த) உமர் (ரலி) அவர்கள் “நபி (ஸல்) அவர்களுக்கு வேதனை அதிகமாகிவிட்டது; (அவர்களைத் தொந்தரவு செய்யாதீர்கள்.) நம்மிடம்தான் அல்லாஹ்வின் வேதம் இருக்கின்றதே! நமக்கு (அதுவே) போதும்” என்றார்கள். உடனே (அங்கிருந்த மக்கள்) கருத்து வேறுபாடு கொண்டனர். கூச்சல் அதிகரித்தது.

இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், “என்னை விட்டு எழுந்து செல்லுங்கள்; என்னருகில் (இது போன்ற) சச்சரவுகள் இருப்பது தகாது” என்றார்கள்.

(இதன் அறிவிப்பாளரான உபைதுல் லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (இந்த ஹதீஸை அறிவித்துவிட்டு), “அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும், அவர்கள் (எழுத நினைத்த) மடலுக்கும் மத்தி யில் குறுக்கீடு ஏற்பட்டதே சோதனையி லும் பெரும் சோதனையாகும்” என்று கூறியபடி (எங்களிடமிருந்து) புறப்பட்டுச் சென்றார்கள்.

அத்தியாயம் : 3
115. حَدَّثَنَا صَدَقَةُ، أَخْبَرَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ هِنْدٍ، عَنْ أُمِّ سَلَمَةَ، وَعَمْرٍو، وَيَحْيَى بْنِ سَعِيدٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ هِنْدٍ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتِ اسْتَيْقَظَ النَّبِيُّ صلى الله عليه وسلم ذَاتَ لَيْلَةٍ فَقَالَ "" سُبْحَانَ اللَّهِ مَاذَا أُنْزِلَ اللَّيْلَةَ مِنَ الْفِتَنِ وَمَاذَا فُتِحَ مِنَ الْخَزَائِنِ أَيْقِظُوا صَوَاحِبَاتِ الْحُجَرِ، فَرُبَّ كَاسِيَةٍ فِي الدُّنْيَا عَارِيَةٍ فِي الآخِرَةِ "".
பாடம் : 40 இரவில் கற்(பிப்)பதும் உபதேசிப் பதும்
115. உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஓர் இரவில் நபி (ஸல்) அவர்கள் தூக்கத்திலிருந்து (பதற்றத்துடன்) விழித் தெழுந்து, “அல்லாஹ் தூயவன்! இன்றிரவு இறக்கிவைக்கப்பட்ட சோதனைகள் (குழப்பங்கள்)தான் என்ன! (இன்றிரவு) திறந்து விடப்பட்ட கருவூலங்கள்தான் என்ன!” என்று கூறிவிட்டு, (தம் துணைவியரை கருத்தில் கொண்டு) “இந்த அறைகளிலுள்ள பெண்களை எழுப்பிவிடுங்கள். (அவர்கள் அல்லாஹ்வை வழிபடட்டும்.) ஏனெனில், இவ்வுலகில் ஆடை அணிந்திருக்கும் எத்தனையோ பெண்கள் மறுவுலகில் நிர்வாணிகளாய் இருப்பார்கள்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 3
116. حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، قَالَ حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ، وَأَبِي، بَكْرِ بْنِ سُلَيْمَانَ بْنِ أَبِي حَثْمَةَ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، قَالَ صَلَّى بِنَا النَّبِيُّ صلى الله عليه وسلم الْعِشَاءَ فِي آخِرِ حَيَاتِهِ، فَلَمَّا سَلَّمَ قَامَ فَقَالَ "" أَرَأَيْتَكُمْ لَيْلَتَكُمْ هَذِهِ، فَإِنَّ رَأْسَ مِائَةِ سَنَةٍ مِنْهَا لاَ يَبْقَى مِمَّنْ هُوَ عَلَى ظَهْرِ الأَرْضِ أَحَدٌ "".
பாடம் : 41 இரவில் (உறங்குவதற்குமுன்) கல்வி குறித்த உரையாடல்
116. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தமது வாழ் நாளின் இறுதிக் காலத்தில் (ஒரு நாள்) எங்களுக்கு இஷா தொழுகை நடத்தி னார்கள். சலாம் கொடுத்து முடித்ததும் எழுந்து நின்று, “உங்களது இந்த இரவைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இன்றி லிருந்து (சரியாக) ஒரு நூற்றாண்டின் ஆரம்பத்தில் இப்போது பூமியின்மேல் இருக்கக்கூடியவர்களில் ஒருவர்கூட எஞ்சியிருக்கமாட்டார்கள்” என்று கூறினார்கள்.26

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 3