68. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَتَخَوَّلُنَا بِالْمَوْعِظَةِ فِي الأَيَّامِ، كَرَاهَةَ السَّآمَةِ عَلَيْنَا.
பாடம் : 10 சொல்வதற்கும் செயல்படுவதற் கும் முன்பு அறிந்துகொள்ளல்5 ஏனெனில், உயர்ந்தோனாகிய அல்லாஹ், “(நபியே!) நீர் அறிந்து கொள்வீ ராக: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை” (47:19) என்று கூறுகின் றான். இந்த வசனத்தில் அறிதலை இறைவன் முதலில் குறிப்பிட்டுள்ளான். அறிஞர்கள் இறைத்தூதர்களின் வாரிசுகள் ஆவர். அவர்கள் அறிவைத்தான் வாரிசுச் சொத்தாக விட்டுச்சென்றுள்ளார்கள். இந்த அறிவைப் பெற்றவரே நிறைவான பேற்றைப் பெற்றவர் ஆவார்.6 கல்வியைத் தேடி ஒருவர் ஒரு வழியில் சென்றால், அவருக்குச் சொர்க்கத்திற்கான வழியை அல்லாஹ் எளிதாக்குகிறான்.7 புகழோங்கிய அல்லாஹ் கூறுகின் றான்: அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுபவர்கள் அறிஞர்கள் தான். (35:28) அல்லாஹ் கூறுகின்றான்: (உதாரணங்களாக நாம் குறிப்பிட்ட) இவற்றை அறிஞர்களைத் தவிர (வேறெ வரும்) புரிந்துகொள்ளமாட்டர். (29:43) அல்லாஹ் கூறுகின்றான்: “நாங்கள் (அவரது போதனையை செவிதாழ்த்திக்) கேட்டிருந்தாலோ அல்லது அவற்றைப் புரிந்துகொண்டிருந்தாலோ (இன்று) நரகவாசிகளாய் நாங்கள் ஆகியிருக்கமாட்டோம்” என்று (இறைமறுப்பாளர்கள் மறுமையில்) கூறுவார்கள். (67:10) அல்லாஹ் (மற்றொரு வசனத்தில்), “அறிந்தவர்களும் அறியாதவர்களும் சமமாவார்களா?” (39:9) என்று வினவுகின்றான். “அல்லாஹ் யாருக்கு நன்மையை நாடுகிறானோ அவரை (மார்க்க விளக்கமுடைய) அறிஞராக்குகிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.8 நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள்: அறிவு (வளர்ச்சி) என்பது கற்பதன் மூலமே கிடைக்கும்.9 அபூதர் (ரலி) அவர்கள் தமது பிடரியைச் சுட்டிக்காட்டி, “இதன்மீது நீங்கள் உருவிய வாளை வைத்திருந்தாலும், நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்ற ஒரு செய்தியைச் சொல்ல நினைத்துவிட்டால், என்னை நீங்கள் கொல்வதற்குள் நான் அதைச் சொல்லி முடித்துவிடுவேன்” என்றார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “(மக்களே!) ரப்பானிகளாய் (அதாவது) விவேகம் மிக்கவர்களாய் மார்க்கத்தின் சட்டதிட்டங்களைத் தெரிந்தவர்களாய் இருங்கள்” என்று கூறினார்கள். ‘ரப்பானீ’ என்பவர், மக்களுக்குப் பெரிய விஷயங்களைச் சொல்வதற்கு முன்னால் சிறிய விஷயங்களைப் படிப் படியாகப் பயிற்றுவிப்பவர் ஆவார் என்றும் கூறப்படுகிறது. பாடம் : 11 மக்கள் சலிப்படைந்துவிடக் கூடாது என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் (நிலைமை அறிந்து) பக்குவமாகப் போதனை செய்த தும் கல்வி புகட்டியதும்
68. இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எங்களுக்குச் சலிப்பேற்பட்டுவிடக் கூடும் என்று அஞ்சி (தொடர்ச்சியாக இல்லாமல்) பல்வேறு நாட்களில் (விட்டு விட்டு) எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அறிவுரை வழங்குபவர்களாக இருந் தார்கள்.


அத்தியாயம் : 3
69. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ حَدَّثَنِي أَبُو التَّيَّاحِ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" يَسِّرُوا وَلاَ تُعَسِّرُوا، وَبَشِّرُوا وَلاَ تُنَفِّرُوا "".
பாடம் : 10 சொல்வதற்கும் செயல்படுவதற் கும் முன்பு அறிந்துகொள்ளல்5 ஏனெனில், உயர்ந்தோனாகிய அல்லாஹ், “(நபியே!) நீர் அறிந்து கொள்வீ ராக: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை” (47:19) என்று கூறுகின் றான். இந்த வசனத்தில் அறிதலை இறைவன் முதலில் குறிப்பிட்டுள்ளான். அறிஞர்கள் இறைத்தூதர்களின் வாரிசுகள் ஆவர். அவர்கள் அறிவைத்தான் வாரிசுச் சொத்தாக விட்டுச்சென்றுள்ளார்கள். இந்த அறிவைப் பெற்றவரே நிறைவான பேற்றைப் பெற்றவர் ஆவார்.6 கல்வியைத் தேடி ஒருவர் ஒரு வழியில் சென்றால், அவருக்குச் சொர்க்கத்திற்கான வழியை அல்லாஹ் எளிதாக்குகிறான்.7 புகழோங்கிய அல்லாஹ் கூறுகின் றான்: அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுபவர்கள் அறிஞர்கள் தான். (35:28) அல்லாஹ் கூறுகின்றான்: (உதாரணங்களாக நாம் குறிப்பிட்ட) இவற்றை அறிஞர்களைத் தவிர (வேறெ வரும்) புரிந்துகொள்ளமாட்டர். (29:43) அல்லாஹ் கூறுகின்றான்: “நாங்கள் (அவரது போதனையை செவிதாழ்த்திக்) கேட்டிருந்தாலோ அல்லது அவற்றைப் புரிந்துகொண்டிருந்தாலோ (இன்று) நரகவாசிகளாய் நாங்கள் ஆகியிருக்கமாட்டோம்” என்று (இறைமறுப்பாளர்கள் மறுமையில்) கூறுவார்கள். (67:10) அல்லாஹ் (மற்றொரு வசனத்தில்), “அறிந்தவர்களும் அறியாதவர்களும் சமமாவார்களா?” (39:9) என்று வினவுகின்றான். “அல்லாஹ் யாருக்கு நன்மையை நாடுகிறானோ அவரை (மார்க்க விளக்கமுடைய) அறிஞராக்குகிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.8 நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள்: அறிவு (வளர்ச்சி) என்பது கற்பதன் மூலமே கிடைக்கும்.9 அபூதர் (ரலி) அவர்கள் தமது பிடரியைச் சுட்டிக்காட்டி, “இதன்மீது நீங்கள் உருவிய வாளை வைத்திருந்தாலும், நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்ற ஒரு செய்தியைச் சொல்ல நினைத்துவிட்டால், என்னை நீங்கள் கொல்வதற்குள் நான் அதைச் சொல்லி முடித்துவிடுவேன்” என்றார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “(மக்களே!) ரப்பானிகளாய் (அதாவது) விவேகம் மிக்கவர்களாய் மார்க்கத்தின் சட்டதிட்டங்களைத் தெரிந்தவர்களாய் இருங்கள்” என்று கூறினார்கள். ‘ரப்பானீ’ என்பவர், மக்களுக்குப் பெரிய விஷயங்களைச் சொல்வதற்கு முன்னால் சிறிய விஷயங்களைப் படிப் படியாகப் பயிற்றுவிப்பவர் ஆவார் என்றும் கூறப்படுகிறது. பாடம் : 11 மக்கள் சலிப்படைந்துவிடக் கூடாது என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் (நிலைமை அறிந்து) பக்குவமாகப் போதனை செய்த தும் கல்வி புகட்டியதும்
69. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மார்க்க விஷயங்களில் மக்களிடம்) எளிதாக நடந்துகொள்ளுங்கள். (மக்க ளைச்) சிரமப்படுத்தாதீர்கள். நற்செய்தி (களை அதிகம்) சொல்லுங்கள். வெறுப் பேற்றிடாதீர்கள்.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 3
70. حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، قَالَ كَانَ عَبْدُ اللَّهِ يُذَكِّرُ النَّاسَ فِي كُلِّ خَمِيسٍ، فَقَالَ لَهُ رَجُلٌ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ لَوَدِدْتُ أَنَّكَ ذَكَّرْتَنَا كُلَّ يَوْمٍ. قَالَ أَمَا إِنَّهُ يَمْنَعُنِي مِنْ ذَلِكَ أَنِّي أَكْرَهُ أَنْ أُمِلَّكُمْ، وَإِنِّي أَتَخَوَّلُكُمْ بِالْمَوْعِظَةِ كَمَا كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَتَخَوَّلُنَا بِهَا، مَخَافَةَ السَّآمَةِ عَلَيْنَا.
பாடம் : 12 கல்வியாளர்களுக்கென்று சில குறிப்பிட்ட நாட்களை ஒதுக் குவது
70. அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் மக்களுக்கு அறிவுரை கூறிவந் தார்கள். (ஒரு நாள்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “அபூஅப்திர் ரஹ்மான்! தாங்கள் தினமும் எங்களுக்கு அறிவுரை கூற வேண்டும் என நான் பெரிதும் விரும்புகிறேன்” என்றார்.

அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், “உங்களைச் சலிப்படை யச் செய்துவிடுவேனோ என்று நான் அஞ்சுவதுதான் இதைச் செய்யவிடாமல் என்னைத் தடுக்கிறது. நாங்கள் சலிப்படை வதை அஞ்சி (நிலைமை அறிந்து) பக்குவ மாக நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு அறிவுரை கூறிவந்ததைப் போன்றே, உங்களுக்கும் பக்குமாக நான் அறிவுரை கூறுகிறேன்” என்றார்கள்.

அத்தியாயம் : 3
71. حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، قَالَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ قَالَ حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ سَمِعْتُ مُعَاوِيَةَ، خَطِيبًا يَقُولُ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" مَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ، وَإِنَّمَا أَنَا قَاسِمٌ وَاللَّهُ يُعْطِي، وَلَنْ تَزَالَ هَذِهِ الأُمَّةُ قَائِمَةً عَلَى أَمْرِ اللَّهِ لاَ يَضُرُّهُمْ مَنْ خَالَفَهُمْ حَتَّى يَأْتِيَ أَمْرُ اللَّهِ "".
பாடம் : 13 அல்லாஹ் யாருக்கு நன்மையை நாடுகிறானோ அவரை மார்க்கத் தில் (விளக்கமுடைய) அறிஞ ராக்குகிறான்.
71. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் யாருக்கு நன்மையை நாடுகிறானோ அவரை மார்க்க (விளக்கமுடைய) அறிஞராக்குகிறான். நான் விநியோகிப்பவன்தான். அல்லாஹ்வே வழங்குகிறான். இந்தச் சமுதாயத்தார் (இடையே ஒரு குழுவினர்) இறைக் கட்டளைமீது நிலைத்திருப்பார்கள். அவர்களுக்கு மாறு செய்வோர் எந்தத் தீங்கும் இழைத்துவிட முடியாது. (அவர்கள் இதே நிலையில் இருக்க) அல்லாஹ்வின் கட்டளை (மறுமை நாள்) வந்துவிடும்.10

இதை முஆவியா (ரலி) அவர்கள் தமது சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள்.

அத்தியாயம் : 3
72. حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ قَالَ لِي ابْنُ أَبِي نَجِيحٍ عَنْ مُجَاهِدٍ، قَالَ صَحِبْتُ ابْنَ عُمَرَ إِلَى الْمَدِينَةِ فَلَمْ أَسْمَعْهُ يُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِلاَّ حَدِيثًا وَاحِدًا، قَالَ كُنَّا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَأُتِيَ بِجُمَّارٍ فَقَالَ "" إِنَّ مِنَ الشَّجَرِ شَجَرَةً مَثَلُهَا كَمَثَلِ الْمُسْلِمِ "". فَأَرَدْتُ أَنْ أَقُولَ هِيَ النَّخْلَةُ، فَإِذَا أَنَا أَصْغَرُ الْقَوْمِ فَسَكَتُّ، قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" هِيَ النَّخْلَةُ "".
பாடம் : 14 சமயோஜித அறிவு
72. முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு உமர் (ரலி) அவர்களு டன் மதீனாவரை சென்றேன். (அப்பய ணத்தில்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது எந்த ஹதீஸையும் அறிவித்ததை நான் கேட்கவில்லை; ஒரேயொரு ஹதீஸைத் தவிர! (அந்த ஹதீஸ் வருமாறு:)

(ஒரு சமயம்) நாங்கள் நபி (ஸல்) அவர்கள் அருகில் இருந்தோம். அப்போது அவர்களிடம் பேரீச்ச மரக் குருத்தொன்று கொண்டுவரப்பட்டது. அதைக் கண்டதும் நபி (ஸல்) அவர்கள், “மரங்களில் ஒரு வகை மரம் உள்ளது; அது முஸ்லிமுக்கு உதாரணமாகும் (அது என்ன மரம்?)” என்று கேட்டார்கள்.

“அது பேரீச்ச மரம்தான்” என்று நான் சொல்ல நினைத்தேன். ஆனால், அப்போது நான் அங்கிருந்தவர்களிலெல்லாம் வயதில் சிறியவனாயிருந்தேன். (மூத்தவர்கள் மௌனமாயிருக்க நான் கூறுவதா என்று எண்ணி) மௌனமாயிருந்துவிட்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அது பேரீச்சமரம்” என்று கூறினார்கள்.11

அத்தியாயம் : 3
73. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنِي إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ، عَلَى غَيْرِ مَا حَدَّثَنَاهُ الزُّهْرِيُّ، قَالَ سَمِعْتُ قَيْسَ بْنَ أَبِي حَازِمٍ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لاَ حَسَدَ إِلاَّ فِي اثْنَتَيْنِ رَجُلٌ آتَاهُ اللَّهُ مَالاً فَسُلِّطَ عَلَى هَلَكَتِهِ فِي الْحَقِّ، وَرَجُلٌ آتَاهُ اللَّهُ الْحِكْمَةَ، فَهْوَ يَقْضِي بِهَا وَيُعَلِّمُهَا "".
பாடம் : 15 கல்வியிலும் ஞானத்திலும் பொறாமை கொள்வது உமர் (ரலி) அவர்கள், “நீங்கள் தலைவர்களாவதற்கு முன்பே சட்டங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்” என்று கூறி னார்கள். அபூஅப்தில்லாஹ் (முஹம்மத் பின் இஸ்மாயீல் புகாரியாகிய நான்) கூறுகின் றேன்: நீங்கள் தலைவர்களாக ஆன பிறகும் (சட்டங்களை அறிந்துகொள்ளுங்கள்). (ஏனெனில்,) நபி (ஸல்) அவர்களுடைய தோழர்கள் முதுமைப் பருவத்தில்கூடக் கல்வி கற்றுள்ளனர்.12
73. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரண்டு விஷயங்களில் தவிர வேறெதிலும் பொறாமை கொள்ளக் கூடாது. ஒரு மனிதர் தமக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அறப்பணியில் அர்ப்பணித்தல்; இன்னொரு மனிதர் தமக்கு அல்லாஹ் வழங்கிய ஞானத்தால் (மக்கள் பிரச்சினைகளுக்குத்) தீர்ப்பு வழங்கிக் கொண்டும் (பிறருக்கு) அதைக் கற்பித்துக்கொண்டும் இருத்தல்.13

இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 3
74. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ غُرَيْرٍ الزُّهْرِيُّ، قَالَ حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَ أَنَّ عُبَيْدَ اللَّهِ بْنَ عَبْدِ اللَّهِ أَخْبَرَهُ عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ تَمَارَى هُوَ وَالْحُرُّ بْنُ قَيْسِ بْنِ حِصْنٍ الْفَزَارِيُّ فِي صَاحِبِ مُوسَى قَالَ ابْنُ عَبَّاسٍ هُوَ خَضِرٌ. فَمَرَّ بِهِمَا أُبَىُّ بْنُ كَعْبٍ، فَدَعَاهُ ابْنُ عَبَّاسٍ فَقَالَ إِنِّي تَمَارَيْتُ أَنَا وَصَاحِبِي، هَذَا فِي صَاحِبِ مُوسَى الَّذِي سَأَلَ مُوسَى السَّبِيلَ إِلَى لُقِيِّهِ، هَلْ سَمِعْتَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَذْكُرُ شَأْنَهُ قَالَ نَعَمْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" بَيْنَمَا مُوسَى فِي مَلإٍ مِنْ بَنِي إِسْرَائِيلَ، جَاءَهُ رَجُلٌ فَقَالَ هَلْ تَعْلَمُ أَحَدًا أَعْلَمَ مِنْكَ قَالَ مُوسَى لاَ. فَأَوْحَى اللَّهُ إِلَى مُوسَى بَلَى، عَبْدُنَا خَضِرٌ، فَسَأَلَ مُوسَى السَّبِيلَ إِلَيْهِ، فَجَعَلَ اللَّهُ لَهُ الْحُوتَ آيَةً، وَقِيلَ لَهُ إِذَا فَقَدْتَ الْحُوتَ فَارْجِعْ، فَإِنَّكَ سَتَلْقَاهُ، وَكَانَ يَتَّبِعُ أَثَرَ الْحُوتِ فِي الْبَحْرِ، فَقَالَ لِمُوسَى فَتَاهُ أَرَأَيْتَ إِذْ أَوَيْنَا إِلَى الصَّخْرَةِ فَإِنِّي نَسِيتُ الْحُوتَ، وَمَا أَنْسَانِيهِ إِلاَّ الشَّيْطَانُ أَنْ أَذْكُرَهُ. قَالَ ذَلِكَ مَا كُنَّا نَبْغِي، فَارْتَدَّا عَلَى آثَارِهِمَا قَصَصًا، فَوَجَدَا خَضِرًا. فَكَانَ مِنْ شَأْنِهِمَا الَّذِي قَصَّ اللَّهُ ـ عَزَّ وَجَلَّ ـ فِي كِتَابِهِ "".
பாடம் : 16 களிர் (அலை) அவர்களைத் தேடி மூசா (அலை) அவர்கள் கடலுக்குச் சென்றது தொடர்பாகக் கூறப்பட்டவை14 “உங்களுக்குக் கற்றுத்தரப்பட்டுள்ள அறிவிலிருந்து எனக்கும் (சிறிது) நீங்கள் கற்றுத்தர நான் உங்களைப் பின் தொடர்ந்து வரலாமா?” (18:66) என்று (களிர் (அலை) அவர்களிடம் மூசா (அலை) அவர்கள் கேட்டதாக) உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்.
74. உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா பின் மஸ்ஊத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மூசா (அலை) அவர்கள் (சந்தித்த அந்த) நண்பர் யார் என்பது தொடர்பாக, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் ஹுர்ரு பின் கைஸ் பின் ஹிஸ்ன் அல் ஃபஸாரீ (ரலி) அவர்களும் விவாதித்துக் கொண்டனர். “அவர் ‘களிர்’ (அலை) அவர்கள்தான்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். (ஹுர்ரு பின் கைஸ் (ரலி) அவர்கள் வேறொரு மனிதர் என்றார்கள்.)

அப்போது அவர்கள் இருவரையும் கடந்து உபை பின் கஅப் (ரலி) அவர்கள் சென்றார்கள். அவரை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அழைத்து, “நானும் என்னுடைய இந்தத் தோழரும் மூசா (அலை) அவர்கள் எந்த நண்பரைச் சந்திக்க (அல்லாஹ்விடம்) வழி கேட்டார்களோ அந்த நண்பர் (யார் என்பது) தொடர்பாக) விவாதித்துக் கொண்டோம். அவர் தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் எதுவும் சொல்ல நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?” என்று கேட்டார்கள்.

அதற்கு உபை பின் கஅப் (ரலி) அவர்கள் “ஆம்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) சொல்ல நான் கேட்டேன்” என்றார்கள்:

பனூ இஸ்ராயீல் குலத்தாரின் (பிரமுகர் கள்) கூட்டம் ஒன்றில் ஒரு மனிதர் வந்து மூசா (அலை) அவர்களிடம், “உங்களை விட அதிகமாக அறிந்தவர் யாரையாவது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார். அதற்கு மூசா (அலை) அவர்கள், “(அப்படி யாரும் இருப்பதாக) எனக்குத் தெரிய வில்லை” என்றார்கள். அப்போது அல்லாஹ், “அப்படியல்ல; நம் அடியார் ‘களிர்’ (உங்களைவிட அறிந்தவராக) இருக்கிறார்” என்று கூறினான். உடனே மூசா (அலை) அவர்கள் அவரைச் சந்திக் கும் வழி என்னவென்று (அல்லாஹ்விடம்) கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ், மூசா (அலை) அவர்களுக்கு மீனை அடையாளமாக்கி னான். “இந்த மீனை எங்கே தொலைத்து விடுகிறீரோ அங்கிருந்து வந்த வழியே திரும்பிவிட வேண்டும். அங்கு அவரை நீர் சந்திப்பீர்” என்று சொல்லப்பட்டது. அவ்வாறே, மூசா (அலை) அவர்கள் கடலில் மீன் (தொலைந்து போனபின் அதன்) சுவட்டைப் பின்பற்றிச் சென்றார்கள். அதாவது மூசா (அலை) அவர்களுடன் வந்த உதவியாளர், “நாம் ஒரு பாறை ஓரமாக ஒதுங்கி ஓய்வெடுத்தோம் பார்த்தீர்களா? அந்த இடத்தில் மீனை நான் மறந்து (தவற விட்டு) விட்டேன். அதைக் கூறவிடாமல் என்னை ஷைத்தான்தான் மறக்கடித்துவிட்டான்” என்று கூறினார். மூசா (அலை) அவர்கள், “அதைத்தான் நாம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம்” என்று சொன்னார்கள்.

பிறகு இருவரும் தம் (பாதச்) சுவடுகளைத் தேடித் திரும்பிச் சென்றார்கள்; அங்கே களிர் (அலை) அவர்களைக் கண்டார்கள். பிறகு வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் தனது வேதத்தில் (18:60-82) எடுத்துரைத்துள்ள அவ்விருவர் தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அத்தியாயம் : 3
75. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، قَالَ حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ ضَمَّنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَقَالَ "" اللَّهُمَّ عَلِّمْهُ الْكِتَابَ "".
பாடம் : 17 “இறைவா! இவருக்கு உன் வேதத்தைக் கற்றுத்தருவாயாக” என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தது
75. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சிறுவனாக இருந்த) என்னை(த் தம் நெஞ்சோடு) அணைத்து, “இறைவா! இவருக்கு உன் வேதத்தைக் கற்றுத் தருவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

அத்தியாயம் : 3
76. حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، قَالَ أَقْبَلْتُ رَاكِبًا عَلَى حِمَارٍ أَتَانٍ، وَأَنَا يَوْمَئِذٍ قَدْ نَاهَزْتُ الاِحْتِلاَمَ، وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي بِمِنًى إِلَى غَيْرِ جِدَارٍ، فَمَرَرْتُ بَيْنَ يَدَىْ بَعْضِ الصَّفِّ وَأَرْسَلْتُ الأَتَانَ تَرْتَعُ، فَدَخَلْتُ فِي الصَّفِّ، فَلَمْ يُنْكَرْ ذَلِكَ عَلَىَّ.
பாடம் : 18 சிறுவர்கள் எந்த வயதில் செவியுற்ற செய்தி ஏற்கப் படும்?15
76. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது) ‘மினா’வில் சுவர் (போன்ற தடுப்பு) எதை யும் முன்னோக்காதவர்களாக (திறந்த வெளியில் மக்களுக்கு)த் தொழுவித்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போது நான் பெட்டைக் கழுதையொன்றில் பயணித்தபடி அவர்களை நோக்கிச் சென்றேன். -அந்நாளில் நான் பருவ வயதை நெருங்கிக் கொண்டிருந்தேன்.- (தொழுது கொண்டிருந்தவர்களின்) வரிசையில் ஒரு பகுதிக்கு முன்னால் நான் கடந்து சென்று, கழுதையை மேய விட்டுவிட்டு, (தொழுவோரின்) வரிசையில் நானும் நின்றுகொண்டேன். அ(வ்வாறு நான் தொழுகை வரிசையைக் கடந்துசென்ற)தற்காக என்மீது ஆட்சேபம் தெரிவிக்கப்படவில்லை.


அத்தியாயம் : 3
77. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قَالَ حَدَّثَنَا أَبُو مُسْهِرٍ، قَالَ حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَرْبٍ، حَدَّثَنِي الزُّبَيْدِيُّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ، قَالَ عَقَلْتُ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم مَجَّةً مَجَّهَا فِي وَجْهِي وَأَنَا ابْنُ خَمْسِ سِنِينَ مِنْ دَلْوٍ.
பாடம் : 18 சிறுவர்கள் எந்த வயதில் செவியுற்ற செய்தி ஏற்கப் படும்?15
77. மஹ்மூத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் ஐந்து வயது சிறுவனாக இருந்த போது, நபி (ஸல்) அவர்கள் (எங்கள் வீட்டுக் கிணற்றிலிருந்து சேந்திய) ஒரு வாளியிலி ருந்து (தண்ணீரை எடுத்துத் தமது வாயில் வைத்து) என் முகத்தில் ஒரு முறை உமிழ்ந்ததை நான் (இப்போதும்) நினைவில் வைத்திருக்கிறேன்.

அத்தியாயம் : 3
78. حَدَّثَنَا أَبُو الْقَاسِمِ، خَالِدُ بْنُ خَلِيٍّ قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَرْبٍ، قَالَ قَالَ الأَوْزَاعِيُّ أَخْبَرَنَا الزُّهْرِيُّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ تَمَارَى هُوَ وَالْحُرُّ بْنُ قَيْسِ بْنِ حِصْنٍ الْفَزَارِيُّ فِي صَاحِبِ مُوسَى، فَمَرَّ بِهِمَا أُبَىُّ بْنُ كَعْبٍ، فَدَعَاهُ ابْنُ عَبَّاسٍ فَقَالَ إِنِّي تَمَارَيْتُ أَنَا وَصَاحِبِي هَذَا فِي صَاحِبِ مُوسَى الَّذِي سَأَلَ السَّبِيلَ إِلَى لُقِيِّهِ، هَلْ سَمِعْتَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَذْكُرُ شَأْنَهُ فَقَالَ أُبَىٌّ نَعَمْ، سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَذْكُرُ شَأْنَهُ يَقُولُ "" بَيْنَمَا مُوسَى فِي مَلإٍ مِنْ بَنِي إِسْرَائِيلَ، إِذْ جَاءَهُ رَجُلٌ فَقَالَ أَتَعْلَمُ أَحَدًا أَعْلَمَ مِنْكَ قَالَ مُوسَى لاَ. فَأَوْحَى اللَّهُ عَزَّ وَجَلَّ إِلَى مُوسَى بَلَى، عَبْدُنَا خَضِرٌ، فَسَأَلَ السَّبِيلَ إِلَى لُقِيِّهِ، فَجَعَلَ اللَّهُ لَهُ الْحُوتَ آيَةً، وَقِيلَ لَهُ إِذَا فَقَدْتَ الْحُوتَ فَارْجِعْ، فَإِنَّكَ سَتَلْقَاهُ، فَكَانَ مُوسَى صلى الله عليه وسلم يَتَّبِعُ أَثَرَ الْحُوتِ فِي الْبَحْرِ. فَقَالَ فَتَى مُوسَى لِمُوسَى أَرَأَيْتَ إِذْ أَوَيْنَا إِلَى الصَّخْرَةِ فَإِنِّي نَسِيتُ الْحُوتَ، وَمَا أَنْسَانِيهِ إِلاَّ الشَّيْطَانُ أَنْ أَذْكُرَهُ. قَالَ مُوسَى ذَلِكَ مَا كُنَّا نَبْغِي. فَارْتَدَّا عَلَى آثَارِهِمَا قَصَصًا، فَوَجَدَا خَضِرًا، فَكَانَ مِنْ شَأْنِهِمَا مَا قَصَّ اللَّهُ فِي كِتَابِهِ "".
பாடம் : 19 கல்வியைத் தேடிப் புறப்படுவது ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் ஒரே ஒரு நபிமொழியைத் தெரிவதற்காக அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரலி) அவர்களைத் தேடி ஒரு மாதத் தொலை தூரத்திற்கு (சிரியா நாட்டுக்கு)ப் பயணமானார்கள்.
78. உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா பின் மஸ்ஊத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் ஹுர்ரு பின் கைஸ் பின் ஹிஸ்ன் அல் ஃபஸாரீ (ரலி) அவர்களும் மூசா (அலை) அவர்கள் (சந்தித்த அந்த) நண்பர் யார் என்பது தொடர்பாக விவாதித்துக் கொண்டனர். அப்போது அவர்கள் இருவரையும் கடந்து உபை பின் கஅப் (ரலி) அவர்கள் சென்றார்கள்.

அவரை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அழைத்து, “நானும் என்னுடைய இந்தத் தோழரும் மூசா (அலை) அவர்கள் எந்த நண்பரைச் சந்திக்க (அல்லாஹ்விடம்) வழி கேட்டார்களோ அந்த நண்பர் (யார் என்பது) தொடர்பாக விவாதித்துக்கொண் டோம். அவர் தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதுவும் சொல்ல நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு உபை பின் கஅப் (ரலி) அவர்கள் “ஆம்; நபி (ஸல்) அவர்கள் அவர் தொடர்பாக (பின்வருமாறு) சொல்ல நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்:

பனூ இஸ்ராயீல் குலத்தாரின் (பிரமு கர்கள்) கூட்டம் ஒன்றில் ஒரு மனிதர் வந்து மூசா (அலை) அவர்களிடம், “உங்களைவிட அதிகமாக அறிந்தவர் யாரையாவது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார். மூசா (அலை) அவர்கள் “(அப்படி யாரும் இருப்பதாக) எனக்குத் தெரியவில்லை” என்றார்கள். அப்போது அல்லாஹ் “அப்படியல்ல; நம் அடியார் ‘களிர்’ (உங்களைவிட அறிந்தவராய்) இருக்கிறார்” என்று கூறினான்.

உடனே மூசா (அலை) அவர்கள் அவரைச் சந்திக்கும் வழி என்னவென்று (இறைவனிடம்) கேட்டார்கள். அதற்கு அல்லாஹ் மூசா (அலை) அவர்களுக்கு மீனை அடையாளமாக்கினான். “இந்த மீனை எங்கே தொலைத்துவிடுகிறீரோ அங்கிருந்து வந்த வழியே திரும்பிவிட வேண்டும். அங்கு அவரை நீர் சந்திப்பீர்” என்று சொல்லப்பட்டது. அவ்வாறே, மூசா (அலை) அவர்கள் கடலில் மீன் (தொலைந்து போனபின் அதன்) சுவட்டைப் பின்பற்றிச் சென்றார்கள்.

அதாவது மூசா (அலை) அவர்களுடன் வந்த உதவியாளர், “நாம் ஒரு பாறை ஓரமாக ஒதுங்கி ஓய்வெடுத்தோமல்லவா? அந்த இடத்தில் மீனை நான் மறந்து (தவறவிட்டு)விட்டேன். அதைக் கூற விடாமல் என்னை ஷைத்தான்தான் மறக்கடித்துவிட்டான்” என்று கூறினார். மூசா (அலை) அவர்கள், “அதைத்தான் நாம் எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம்” என்று சொன்னார்கள். பிறகு இருவரும் தம் (பாதச்) சுவடுகளைத் தேடித் திரும்பிச் சென்றார் கள். அங்கே களிர் (அலை) அவர்களைக் கண்டார்கள். பிறகு அல்லாஹ் தனது வேதத்தில் (18:60-82) எடுத்துரைத்துள்ள அவ்விருவர் தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெற்றன.16

அத்தியாயம் : 3
79. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ أُسَامَةَ، عَنْ بُرَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَثَلُ مَا بَعَثَنِي اللَّهُ بِهِ مِنَ الْهُدَى وَالْعِلْمِ كَمَثَلِ الْغَيْثِ الْكَثِيرِ أَصَابَ أَرْضًا، فَكَانَ مِنْهَا نَقِيَّةٌ قَبِلَتِ الْمَاءَ، فَأَنْبَتَتِ الْكَلأَ وَالْعُشْبَ الْكَثِيرَ، وَكَانَتْ مِنْهَا أَجَادِبُ أَمْسَكَتِ الْمَاءَ، فَنَفَعَ اللَّهُ بِهَا النَّاسَ، فَشَرِبُوا وَسَقَوْا وَزَرَعُوا، وَأَصَابَتْ مِنْهَا طَائِفَةً أُخْرَى، إِنَّمَا هِيَ قِيعَانٌ لاَ تُمْسِكُ مَاءً، وَلاَ تُنْبِتُ كَلأً، فَذَلِكَ مَثَلُ مَنْ فَقِهَ فِي دِينِ اللَّهِ وَنَفَعَهُ مَا بَعَثَنِي اللَّهُ بِهِ، فَعَلِمَ وَعَلَّمَ، وَمَثَلُ مَنْ لَمْ يَرْفَعْ بِذَلِكَ رَأْسًا، وَلَمْ يَقْبَلْ هُدَى اللَّهِ الَّذِي أُرْسِلْتُ بِهِ "". قَالَ أَبُو عَبْدِ اللَّهِ قَالَ إِسْحَاقُ وَكَانَ مِنْهَا طَائِفَةٌ قَيَّلَتِ الْمَاءَ. قَاعٌ يَعْلُوهُ الْمَاءُ، وَالصَّفْصَفُ الْمُسْتَوِي مِنَ الأَرْضِ.
பாடம் : 20 தாமும் கற்றுப் பிறருக்கும் கற்பிப்பவரின் சிறப்பு
79. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் எனக்கு அருளியுள்ள நல்வழி மற்றும் கல்விக்கு உதாரணமா கிறது, ஒரு நிலத்தில் பெய்த பெருமழை போன்றதாகும். அந்த நிலத்தில் நல்ல பகுதியும் உண்டு. அது நீரை உள்வாங்கிக் கொண்டது; அதில் புல்லும் அதிகமான பச்சைச் செடிகொடிகளும் முளைத்தன.

அந்த நிலத்தில் தரிசும் உண்டு. அது நீரை (உள்வாங்காமல்) தேக்கிவைத்துக் கொண்டது. அதை இறைவன் மக்களுக் குப் பயன்படச்செய்தான். மக்கள் அருந் தினர்; (தம் கால்நடைகளுக்கும்) புகட்டினர்; விவசாயமும் செய்தனர்.

அந்தப் பெருமழை இன்னொரு வகை நிலத்திலும் பெய்தது. அது (ஒன்றுக்கும் உதவாத) வெறும் கட்டாந்தரை. அது தண்ணீரைத் தேக்கி வைத்துக்கொள்ளவும் இல்லை; அதில் புற்பூண்டுகளை முளைக்கவுமில்லை.

இதுதான், அல்லாஹ்வின் மார்க்கத்தை விளங்கி, அல்லாஹ் எனக்கு அருளியதன் மூலம் பயனடைந்து, தாமும் கற்றுப் பிறருக்கும் கற்பித்தவருக்கு உதாரணமாகும்; அவ்வாறே, அல்லாஹ் எனக்கு அருளியதை ஏறிட்டுப் பார்க்காமலும், எனக்கு அருளப்பெற்ற அல்லாஹ்வின் நல் வழியை ஏற்றுக்கொள்ளாமலும் வாழ்கிற வனுக்கும் உவமையாகும்.17

இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அபூஅப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகின்றேன்:

இஸ்ஹாக் பின் ராஹவைஹி (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “அவற்றில் இன்னும் சில நிலங்களும் உள்ளன. அவை தண்ணீரை உறிஞ்சிக்கொள்கின்றன” என்று இடம்பெற்றுள்ளது.

(இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள ‘கீஆன்’ என்பதன் பன்மை ‘காஉ’ என்பதாகும்.) ‘காஉ’ என்பதற்கு ‘தண்ணீர் தேங்காத பூமி’ என்பது பொருள். ‘ஸஃப் ஸஃப்’ என்பதற்கு ‘சம நிலம்’ என்பது பொருள்.

அத்தியாயம் : 3
80. حَدَّثَنَا عِمْرَانُ بْنُ مَيْسَرَةَ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ أَبِي التَّيَّاحِ، عَنْ أَنَسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ يُرْفَعَ الْعِلْمُ، وَيَثْبُتَ الْجَهْلُ، وَيُشْرَبَ الْخَمْرُ، وَيَظْهَرَ الزِّنَا "".
பாடம் : 21 கல்வி அகற்றப்படுவதும் அறியாமை வெளிப்படுவதும்18 ரபீஆ பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: சிறிதளவேனும் கல்வியறிவு உள்ள ஒருவர், (அதைப் பயன்படுத்தாமல்) தம்மைப் பாழாக்கிக்கொள்வது முறையாகாது.19
80. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கல்வி அகற்றப்படுவதும், அறியாமை நிலைப்படுவதும், மது (மலிவாக) அருந்தப் படுவதும், விபசாரம் பரவலாய் நடப்பதும் மறுமை நாளின் அடையாளங்களில் அடங்கும்.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறி விக்கிறார்கள்.


அத்தியாயம் : 3
81. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ لأُحَدِّثَنَّكُمْ حَدِيثًا لاَ يُحَدِّثُكُمْ أَحَدٌ بَعْدِي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ يَقِلَّ الْعِلْمُ، وَيَظْهَرَ الْجَهْلُ، وَيَظْهَرَ الزِّنَا، وَتَكْثُرَ النِّسَاءُ وَيَقِلَّ الرِّجَالُ، حَتَّى يَكُونَ لِخَمْسِينَ امْرَأَةً الْقَيِّمُ الْوَاحِدُ "".
பாடம் : 21 கல்வி அகற்றப்படுவதும் அறியாமை வெளிப்படுவதும்18 ரபீஆ பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: சிறிதளவேனும் கல்வியறிவு உள்ள ஒருவர், (அதைப் பயன்படுத்தாமல்) தம்மைப் பாழாக்கிக்கொள்வது முறையாகாது.19
81. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனக்குப் பின்னர் வேறு யாரும் உங்களுக்கு அறிவிக்க முடியாத நபி மொழி ஒன்றை (இப்போது) நான் உங்களுக்கு அறிவிக்கப்போகிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்:

கல்வி குறைந்துபோவதும், அறியாமை வெளிப்படுவதும், விபசாரம் (பரவலாக) நடப்பதும், ஐம்பது பெண்களுக்கு, அவர்களை நிர்வகிக்க ஒரே ஆண் என்ற நிலைமை வரும் அளவுக்குப் பெண்கள் மிகுந்து, ஆண்கள் குறைந்துபோவதும் மறுமை நாளின் அடையாளங்களில் அடங்கும்.20

அத்தியாயம் : 3
82. حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، قَالَ حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حَمْزَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ ابْنَ عُمَرَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" بَيْنَا أَنَا نَائِمٌ أُتِيتُ بِقَدَحِ لَبَنٍ، فَشَرِبْتُ حَتَّى إِنِّي لأَرَى الرِّيَّ يَخْرُجُ فِي أَظْفَارِي، ثُمَّ أَعْطَيْتُ فَضْلِي عُمَرَ بْنَ الْخَطَّابِ "". قَالُوا فَمَا أَوَّلْتَهُ يَا رَسُولَ اللَّهِ قَالَ "" الْعِلْمَ "".
பாடம் : 22 கல்வியின் சிறப்பு
82. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் உறங்கிக்கொண்டிருந்தபோது, (கனவில்) என்னிடம் ஒரு பால் கோப்பை கொண்டு வரப்பட்டது. (அதிலிருந்த பாலை) நான் (தாகம் தீர) அருந்தினேன். இறுதியில் என் நகக்கண்கள் ஊடே (பால்) வெளிவரக் கண்டேன். பிறகு (நான் அருந்தியது போக இருந்த) மிச்சத்தை உமர் பின் அல்கத்தாப் அவர்களுக்குக் கொடுத்தேன்” என்று கூறினார்கள்.

மக்கள். “இதற்கு (இந்தப் பாலுக்கு) தாங்கள் என்ன விளக்கம் கண்டீர்கள், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்க, அதற்கு அவர்கள் ‘அறிவு’ என்று பதிலளித்தார்கள்.21

அத்தியாயம் : 3
83. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عِيسَى بْنِ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَقَفَ فِي حَجَّةِ الْوَدَاعِ بِمِنًى لِلنَّاسِ يَسْأَلُونَهُ، فَجَاءَهُ رَجُلٌ فَقَالَ لَمْ أَشْعُرْ فَحَلَقْتُ قَبْلَ أَنْ أَذْبَحَ. فَقَالَ "" اذْبَحْ وَلاَ حَرَجَ "". فَجَاءَ آخَرُ فَقَالَ لَمْ أَشْعُرْ، فَنَحَرْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ. قَالَ "" ارْمِ وَلاَ حَرَجَ "". فَمَا سُئِلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ شَىْءٍ قُدِّمَ وَلاَ أُخِّرَ إِلاَّ قَالَ افْعَلْ وَلاَ حَرَجَ.
பாடம் : 23 ஊர்திப் பிராணிகள் உள்ளிட் டவைமீது இருந்துகொண்டு தீர்ப்பு வழங்குவது
83. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது ‘மினா’வில் தம்மிடம் மக்கள் கேள்வி கேட்பதற்காக (ஒட்டகத்தின் மீது அமர்ந்து) இருந்தார்கள். அப்போது ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “நான் (சட்டம்) தெரியாமல் குர்பானி (பலி) கொடுப்பதற்கு முன்பே என் தலைமுடியை மழித்துவிட்டேன்” என்றார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “குற்றமில்லை; இப்போது குர்பானி கொடுத்துக்கொள்வீராக!” என்றார்கள். மற்றொருவர் வந்து, “நான் தெரியாமல் கல் எறிவற்கு முன்பே குர்பானி கொடுத்துவிட்டேன்” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “குற்றமில்லை; இப்போது கல் எறிந்து கொள்வீராக!” என்றார்கள்.

(அன்றைய தினம் பின்னால் செய்ய வேண்டிய) சில கிரியைகள் முன்னால் செய்யப்பட்டுவிட்டதாகவும் (முன்னால் செய்ய வேண்டிய) சில கிரியைகள் பின்னால் செய்யப்பட்டுவிட்டதாகவும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டபோதெல்லாம் “குற்றமில்லை; (விடுபட்டதைச்) செய்யுங்கள்” என்றே சொன்னார்கள்.

அத்தியாயம் : 3
84. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا وُهَيْبٌ، قَالَ حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم سُئِلَ فِي حَجَّتِهِ فَقَالَ ذَبَحْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ، فَأَوْمَأَ بِيَدِهِ قَالَ وَلاَ حَرَجَ. قَالَ حَلَقْتُ قَبْلَ أَنْ أَذْبَحَ. فَأَوْمَأَ بِيَدِهِ وَلاَ حَرَجَ.
பாடம் : 24 கை அல்லது தலை சமிக்ஞை யால் கேள்விக்குப் பதிலளித் தல்
84. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் ‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது பல கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது ஒருவர், “நான் கல்லெறிவதற்கு முன்பே குர்பானி கொடுத்துவிட்டேன்” என்றார். நபி (ஸல்) அவர்கள் ‘குற்றமில்லை’ எனத் தமது கையால் சைகை காட்டினார்கள். மற்றொருவர், “குர்பானி கொடுப்பதற்குமுன்பே தலை முடியை மழித்துவிட்டேன்” என்றார். அதற்கும் நபி அவர்கள் ‘குற்றமில்லை’ எனத் தமது கையால் சைகை செய்தார்கள்.


அத்தியாயம் : 3
85. حَدَّثَنَا الْمَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ أَخْبَرَنَا حَنْظَلَةُ بْنُ أَبِي سُفْيَانَ، عَنْ سَالِمٍ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" يُقْبَضُ الْعِلْمُ، وَيَظْهَرُ الْجَهْلُ وَالْفِتَنُ، وَيَكْثُرُ الْهَرْجُ "". قِيلَ يَا رَسُولَ اللَّهِ وَمَا الْهَرْجُ فَقَالَ هَكَذَا بِيَدِهِ، فَحَرَّفَهَا، كَأَنَّهُ يُرِيدُ الْقَتْلَ.
பாடம் : 24 கை அல்லது தலை சமிக்ஞை யால் கேள்விக்குப் பதிலளித் தல்
85. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், “(உலக முடிவு நாளின்போது) கல்வி கைப்பற்றப்பட்டுவிடும்; அறியாமையும் குழப்பங்களும் வெளிப் பட்டு (பரவி)விடும்; ‘ஹர்ஜ்’ பெருகிவிடும்” என்று கூறினார்கள். அப்போது ‘ஹர்ஜ்’ என்றால் என்ன, அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்கப்பட்டது. நபியவர்கள் தமது கையால் ‘இப்படி’ என்று கொலை செய்வதைப் போன்று பாவனை செய்து காட்டினார்கள்.


அத்தியாயம் : 3
86. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا وُهَيْبٌ، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، عَنْ فَاطِمَةَ، عَنْ أَسْمَاءَ، قَالَتْ أَتَيْتُ عَائِشَةَ وَهِيَ تُصَلِّي فَقُلْتُ مَا شَأْنُ النَّاسِ فَأَشَارَتْ إِلَى السَّمَاءِ، فَإِذَا النَّاسُ قِيَامٌ، فَقَالَتْ سُبْحَانَ اللَّهِ. قُلْتُ آيَةٌ فَأَشَارَتْ بِرَأْسِهَا، أَىْ نَعَمْ، فَقُمْتُ حَتَّى تَجَلاَّنِي الْغَشْىُ، فَجَعَلْتُ أَصُبُّ عَلَى رَأْسِي الْمَاءَ، فَحَمِدَ اللَّهَ عَزَّ وَجَلَّ النَّبِيُّ صلى الله عليه وسلم وَأَثْنَى عَلَيْهِ، ثُمَّ قَالَ "" مَا مِنْ شَىْءٍ لَمْ أَكُنْ أُرِيتُهُ إِلاَّ رَأَيْتُهُ فِي مَقَامِي حَتَّى الْجَنَّةَ وَالنَّارَ، فَأُوحِيَ إِلَىَّ أَنَّكُمْ تُفْتَنُونَ فِي قُبُورِكُمْ، مِثْلَ ـ أَوْ قَرِيبًا لاَ أَدْرِي أَىَّ ذَلِكَ قَالَتْ أَسْمَاءُ ـ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ، يُقَالُ مَا عِلْمُكَ بِهَذَا الرَّجُلِ فَأَمَّا الْمُؤْمِنُ ـ أَوِ الْمُوقِنُ لاَ أَدْرِي بِأَيِّهِمَا قَالَتْ أَسْمَاءُ ـ فَيَقُولُ هُوَ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ جَاءَنَا بِالْبَيِّنَاتِ وَالْهُدَى، فَأَجَبْنَا وَاتَّبَعْنَا، هُوَ مُحَمَّدٌ. ثَلاَثًا، فَيُقَالُ نَمْ صَالِحًا، قَدْ عَلِمْنَا إِنْ كُنْتَ لَمُوقِنًا بِهِ، وَأَمَّا الْمُنَافِقُ ـ أَوِ الْمُرْتَابُ لاَ أَدْرِي أَىَّ ذَلِكَ قَالَتْ أَسْمَاءُ ـ فَيَقُولُ لاَ أَدْرِي، سَمِعْتُ النَّاسَ يَقُولُونَ شَيْئًا فَقُلْتُهُ "".
பாடம் : 24 கை அல்லது தலை சமிக்ஞை யால் கேள்விக்குப் பதிலளித் தல்
86. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(சூரிய கிரகணம் ஏற்பட்டபோது,) நான் (என் சகோதரி) ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்தேன். அப்போது (மக்களுடன்) ஆயிஷா (ரலி) அவர்கள் தொழுதுகொண்டிருந்தார்கள். நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “மக்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டேன். (தொழுகையில் நின்ற) ஆயிஷா (ரலி) அவர்கள் வானை நோக்கி(த் தமது கையால்) சைகை செய்தார்கள். அப்போது மக்கள் தொழுதுகொண்டிருந்தார்கள். எனவே, ‘சுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ் தூயவன்) என்று ஆயிஷா கூறினார்கள்.

அப்போது “(இது மக்களைப் பாதிக்கும்) ஏதேனும் அடையாளமா?” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் ‘ஆம்’ என்று தலையால் சைகை செய்தார்கள். உடனே நானும் (தொழுகையில்) நின்றுகொண்டேன். (நீண்ட நேரம் நின்றதால்) நான் கிறக்கமுற்றேன். (கிறக்கம் நீங்க) என் தலைமீது தண்ணீரை ஊற்றலானேன்.

(தொழுகை முடிந்ததும்) நபி (ஸல்) அவர்கள் (தமது உரையில்) அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, பின்வருமாறு கூறினார்கள்: எனக்கு இதுவரை காட்டப்பட்டிராத அனைத்தையும் இந்த இடத்தில் (தொழுகையில் இருந்தபோது) கண்டேன். சொர்க்கம், நரகம் உட்பட (அனைத்தையும் கண்டேன்). மேலும், எனக்கு (பின்வருமாறு) இறைவனிடமிருந்து (வஹீ) அறிவிக்கப்பட்டது: நீங்கள் உங்கள் மண்ணறைகளில் (கப்றில் பெருங்குழப்பவாதியான) மஸீஹுத் தஜ்ஜாலின் சோதனைக்கு ‘நிகரான’ அல்லது ‘நெருக்க மான’ அளவுக்குச் சோதிக்கப்படுவீர்கள்.

அப்போது (கப்றில் அடக்கம் செய்யப்பட்டவரிடம்), “இந்த மனிதரைப் பற்றி உமக்கு என்ன தெரியும்?” என்று (நபியாகிய என்னைப் பற்றிக்) கேட்கப் படும். அப்போது ‘இறைநம்பிக்கையாளர்’ அல்லது ‘உறுதி கொண்டவர்’ “இவர் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) ஆவார்கள்; அவர்கள் எங்களிடம் தெளிவான சான்றுகளையும் நல்வழியை யும் கொண்டுவந்தார்கள்; நாங்கள் (அவர்களது அழைப்பை) ஏற்றோம்; அவர்களைப் பின்பற்றினோம்; இவர் முஹம்மத் (ஸல்) அவர்கள்தான்” என்று மும்முறை கூறுவார்.

அப்போது (கேள்வி கேட்ட வானவர்களின் தரப்பிலிருந்து), “பயன் பெற்றவராக நீர் (நிம்மதியோடு) உறங்குவீராக!” என்றும் “நிச்சயமாக நீர் (இறைத்தூதரான) இவரைப் பற்றி இத்தகைய உறுதியான நம்பிக்கையுடையவராகவே (உலகில்) இருந்தீர் என்று நாங்கள் அறிந்திருந்தோம்” என்றும் கூறப்படும்.

‘நயவஞ்சகனோ’ அல்லது ‘சந்தேகப்பேர்வழியோ’, “எனக்கு எதுவும் தெரியாது; மக்கள் (அவரைப் பற்றி) ஏதோ சொல்லக் கேட்டேன். எனவே, நானும் அது போன்று கூறினேன்” என்பான்.

-அறிவிப்பாளர் ஃபாத்திமா பின்த் அல்முன்திர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(‘நிகரான’ அல்லது ‘நெருக்கமான’ ஆகிய) இவற்றில் எதை அஸ்மா (ரலி) அவர்கள் கூறினார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. அவ்வாறே, (இறை நம்பிக்கையாளர் அல்லது உறுதி கொண்டவர் ஆகிய) இவ்விரண்டில் எதை அஸ்மா (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள் என்பதும் எனக்குத் தெரியாது. மேலும், (நயவஞ்சகன் அல்லது சந்தேகப்பேர்வழி ஆகிய) இவ்விரண்டில் எதை அஸ்மா (ரலி) அவர்கள் கூறினார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை.

அத்தியாயம் : 3
87. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا غُنْدَرٌ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي جَمْرَةَ، قَالَ كُنْتُ أُتَرْجِمُ بَيْنَ ابْنِ عَبَّاسٍ وَبَيْنَ النَّاسِ فَقَالَ إِنَّ وَفْدَ عَبْدِ الْقَيْسِ أَتَوُا النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ "" مَنِ الْوَفْدُ ـ أَوْ مَنِ الْقَوْمُ "". قَالُوا رَبِيعَةُ. فَقَالَ "" مَرْحَبًا بِالْقَوْمِ ـ أَوْ بِالْوَفْدِ ـ غَيْرَ خَزَايَا وَلاَ نَدَامَى "". قَالُوا إِنَّا نَأْتِيكَ مِنْ شُقَّةٍ بَعِيدَةٍ، وَبَيْنَنَا وَبَيْنَكَ هَذَا الْحَىُّ مِنْ كُفَّارِ مُضَرَ، وَلاَ نَسْتَطِيعُ أَنْ نَأْتِيَكَ إِلاَّ فِي شَهْرٍ حَرَامٍ فَمُرْنَا بِأَمْرٍ نُخْبِرْ بِهِ مَنْ وَرَاءَنَا، نَدْخُلُ بِهِ الْجَنَّةَ. فَأَمَرَهُمْ بِأَرْبَعٍ، وَنَهَاهُمْ عَنْ أَرْبَعٍ أَمَرَهُمْ بِالإِيمَانِ بِاللَّهِ عَزَّ وَجَلَّ وَحْدَهُ. قَالَ "" هَلْ تَدْرُونَ مَا الإِيمَانُ بِاللَّهِ وَحْدَهُ "". قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ "" شَهَادَةُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَإِقَامُ الصَّلاَةِ، وَإِيتَاءُ الزَّكَاةِ، وَصَوْمُ رَمَضَانَ، وَتُعْطُوا الْخُمُسَ مِنَ الْمَغْنَمِ "". وَنَهَاهُمْ عَنِ الدُّبَّاءِ وَالْحَنْتَمِ وَالْمُزَفَّتِ. قَالَ شُعْبَةُ رُبَّمَا قَالَ النَّقِيرِ، وَرُبَّمَا قَالَ الْمُقَيَّرِ. قَالَ "" احْفَظُوهُ وَأَخْبِرُوهُ مَنْ وَرَاءَكُمْ "".
பாடம் : 25 இறைநம்பிக்கையையும் கல்வியையும் நினைவில் வைத்துக் கொள்ளும்படியும், (அவற்றை) தமக்குப் பின்னால் உள்ள மக்களுக்கு அறிவிக்கும்படியும் அப்துல் கைஸ் தூதுக் குழுவி னரை நபி (ஸல்) அவர்கள் தூண்டியது (அப்துல் கைஸ் தூதுக் குழுவில் இடம் பெற்றிருந்த) மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் உங்கள் குடும்பத்தாரிடம் திரும்பிச் சென்று, அவர்களுக்கு (நான் கூறியவற்றைக்) கற்றுக்கொடுங்கள்” என்று எங்களிடம் நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்.
87. அபூஜம்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(பஸ்ராவின் ஆளுநராயிருந்த) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் மக்களுக் கும் இடையே நான் (பாரசீக மொழியில்) மொழி பெயர்க்கக்கூடியவனாக இருந் தேன். (ஒரு முறை) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அப்துல் கைஸ் தூதுக் குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தபோது ‘இம் மக்கள் யார்?’ அல்லது ‘இத்தூதுக் குழுவினர் யார்?’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு மக்கள், “(இவர்கள்) ரபீஆ குடும்பத்தார்” என்றார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் “இழிவுக்குள்ளாகாமலும் மனவருத்தத்திற்குள்ளாகாமலும் (தாமாக முன்வந்து இஸ்லாத்தை ஏற்ற நிலையில்) வருகை புரிந்துள்ள ‘சமுதாயமே’ அல்லது ‘தூதுக்குழுவே’ வருக!” என்று (வாழ்த்துக்) கூறினார்கள்.

அத்தூதுக் குழுவினர், “நாங்கள் வெகு தொலைவிலிருந்து உங்களிடம் வந்துள்ளோம். எங்களுக்கும் உங்களுக்கும் இடையே (எதிரிகளான) ‘முளர்’ குலத்து இறைமறுப்பாளர்களின் இந்தக் குடும்பத்தார் (நாம் சந்திக்க முடியாதபடி தடையாக) உள்ளனர். எனவே, (போர் நிறுத்தம் செய்யப்படும்) புனித மாதங்கள் தவிர மற்ற மாதங்களில் எங்களால் தங்களிடம் வர முடியவில்லை. எனவே, தெளிவான ஆணையொன்றை எங்களுக்குப் பிறப்பியுங்கள்! அதை நாங்கள் எங்களுக்குப் பின்னால் உள்ளவர்களுக்குத் தெரிவிப்போம். அ(தைச் செயல்படுத்துவ)தன் மூலம் நாங்களும் சொர்க்கம் செல்வோம்” என்று கேட்டுக்கொண்டார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் நான்கு விஷயங்களைக் கட்டளையிட்டார்கள்; நான்கு விஷயங்களை அவர்களுக்குத் தடை செய்தார்கள். 1. வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் ஒருவனையே நம்புமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டு விட்டு, “அல்லாஹ் ஒருவனையே நம்புதல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள் “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்” என்று கூறினர்.

நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ் வின் தூதர் என்றும் உறுதி கூறுவது.

2. தொழுகையைக் கடைப்பிடிப்பது.

3. ஸகாத் வழங்குவது. 4. ரமளான் மாதம் நோன்பு நோற்பது. (இவையன்றி,) போரில் கிடைக்கும் பொருட்களிலிருந்து ஐந்தில் ஒரு பாகத்தை (அல்லாஹ்வுக்காக) நீங்கள் வழங்க வேண்டும்” என்று கூறினார்கள்.

(மது ஊற்றிவைக்கப் பயன்படும்) சுரைக்காய் குடுவை, மண்சாடி, தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமென அவர்களுக்குத் தடை விதித்து, “இவற்றை மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள்; உங்களுக்குப் பின்னால் இருப்போருக்கு அறிவித்துவிடுங்கள்” என்றும் சொன்னார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

‘பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்படும் மரப் பீப்பாய்’ என்றும் நபி (ஸல்) அவர்கள் சிலவேளை குறிப்பிட்டுள்ளார்கள்.22

அத்தியாயம் : 3