3210. حَدَّثَنَا مُحَمَّدٌ، حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنَا اللَّيْثُ، حَدَّثَنَا ابْنُ أَبِي جَعْفَرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" إِنَّ الْمَلاَئِكَةَ تَنْزِلُ فِي الْعَنَانِ ـ وَهْوَ السَّحَابُ ـ فَتَذْكُرُ الأَمْرَ قُضِيَ فِي السَّمَاءِ، فَتَسْتَرِقُ الشَّيَاطِينُ السَّمْعَ، فَتَسْمَعُهُ فَتُوحِيهِ إِلَى الْكُهَّانِ، فَيَكْذِبُونَ مَعَهَا مِائَةَ كَذْبَةٍ مِنْ عِنْدِ أَنْفُسِهِمْ "".
பாடம் : 6 வானவர்கள் லி அவர்கள்மீது சாந்தி பொழியட்டும்!19 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘வானவர் களில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் யூதர் களின் பகைவர் ஆவார்” என்று சொன் னார்கள். யிநிச்சயமாக நாங்களே அணிவகுத்துப் பணிபுரிபவர்களாக இருக்கிறோம்’ (37:165) என்று சொல்வது வானவர்கள்தான்’ என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன் னார்கள்.
3210. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வானவர்கள் மேகத்தில் இறங்கி, விண்ணில் தீர்மானிக்கப்பட்ட விஷயங்கள் குறித்துப் பேசிக்கொள்கிறார்கள். ஷைத்தான்கள் திருட்டுத்தனமாக (ஒளிந் திருந்து) அவற்றை ஒட்டுக்கேட்டு, சோதிடர்களுக்கு அவற்றை (உள்ளுதிப்பாக) அறிவித்துவிடுகின்றன. சோதிடர்கள் அதனுடன் (அந்த உண்மையுடன்) நூறு பொய்களைத் தம் தரப்பிலிருந்து புனைந்து (சேர்த்துக்) கூறுவார்கள்.23

இதை நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 59
3211. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، حَدَّثَنَا ابْنُ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، وَالأَغَرِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِذَا كَانَ يَوْمُ الْجُمُعَةِ كَانَ عَلَى كُلِّ باب مِنْ أَبْوَابِ الْمَسْجِدِ الْمَلاَئِكَةُ، يَكْتُبُونَ الأَوَّلَ فَالأَوَّلَ، فَإِذَا جَلَسَ الإِمَامُ طَوَوُا الصُّحُفَ وَجَاءُوا يَسْتَمِعُونَ الذِّكْرَ "".
பாடம் : 6 வானவர்கள் லி அவர்கள்மீது சாந்தி பொழியட்டும்!19 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘வானவர் களில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் யூதர் களின் பகைவர் ஆவார்” என்று சொன் னார்கள். யிநிச்சயமாக நாங்களே அணிவகுத்துப் பணிபுரிபவர்களாக இருக்கிறோம்’ (37:165) என்று சொல்வது வானவர்கள்தான்’ என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன் னார்கள்.
3211. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் வானவர்கள் (ஜுமுஆ தொழுகை நடக் கும்) பள்ளிவாசலின் நுழைவாயில்களில் ஒவ்வொரு வாசலிலும் (இருந்துகொண்டு) முதன் முதலாக உள்ளே நுழைபவரையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவரையும் (அவர்களின் பெயர்களை) எழுதிப் பதிவு செய்துகொண்டிருப்பார்கள். இமாம், சொற்பொழிவு மேடையில் (உரையாற்றுவதற்காக) அமர்ந்துவிட்டால் (பதிவு செய்யும்) ஏடுகளைச் சுருட்டி வைத்துவிட்டு (அவரது உபதேச) உரையைச் செவியுற்ற வண்ணம் வானவர்கள் (உள்ளே) வருவார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.24

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 59
3212. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، قَالَ مَرَّ عُمَرُ فِي الْمَسْجِدِ وَحَسَّانُ يُنْشِدُ، فَقَالَ كُنْتُ أُنْشِدُ فِيهِ، وَفِيهِ مَنْ هُوَ خَيْرٌ مِنْكَ، ثُمَّ الْتَفَتَ إِلَى أَبِي هُرَيْرَةَ، فَقَالَ أَنْشُدُكَ بِاللَّهِ، أَسَمِعْتَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" أَجِبْ عَنِّي، اللَّهُمَّ أَيِّدْهُ بِرُوحِ الْقُدُسِ "". قَالَ نَعَمْ.
பாடம் : 6 வானவர்கள் லி அவர்கள்மீது சாந்தி பொழியட்டும்!19 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘வானவர் களில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் யூதர் களின் பகைவர் ஆவார்” என்று சொன் னார்கள். யிநிச்சயமாக நாங்களே அணிவகுத்துப் பணிபுரிபவர்களாக இருக்கிறோம்’ (37:165) என்று சொல்வது வானவர்கள்தான்’ என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன் னார்கள்.
3212. சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் (நபித்தோழரும் கவிஞருமான) ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கவிபாடிக் கொண்டிருக்க, உமர் (ரலி) அவர்கள் அங்கு வந்தார்கள். (ஹஸ்ஸான் (ரலி) அவர்களை நோக்கி ™மைதியாக இருக்குமாறு சைகை செய்தார்கள்.)

அப்போது ஹஸ்ஸான் (ரலி) அவர்கள், ‘‘நான் இந்தப் பள்ளிவாசலில் உங்களை விடச் சிறந்தவர் (நபி (ஸல்) அவர்கள்) இருக்கும்போதே கவிபாடிக்கொண்டிருந் தேன்” என்று கூறிவிட்டு, அபூஹுரைரா (ரலி) அவர்கள் பக்கம் திரும்பி, ‘‘அல்லாஹ்வை முன்வைத்து உங்களிடம் கேட்கிறேன்: (என்னிடம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘(ஹஸ்ஸானே!) என் சார்பாக (எதிரிகளின் வசைக் கவி களுக்கு) நீங்கள் (கவிகளாலேயே) பதிலளியுங்கள். இறைவா! ஹஸ்ஸானுக்குத் தூய ஆன்மா(வான வானவர் ஜிப்ரீல்) மூலம் துணை புரிவாயாக!› என்று கூறியதை நீங்கள் செவியுற்றிருக்கிறீர்களா?” என்று கேட்டார்கள்.

அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள், ‘‘ஆம் (செவியுற்றிருக்கிறேன்)” என்று பதிலளித்தார்கள்.25


அத்தியாயம் : 59
3213. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنِ الْبَرَاءِ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لِحَسَّانَ "" اهْجُهُمْ ـ أَوْ هَاجِهِمْ ـ وَجِبْرِيلُ مَعَكَ "".
பாடம் : 6 வானவர்கள் லி அவர்கள்மீது சாந்தி பொழியட்டும்!19 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘வானவர் களில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் யூதர் களின் பகைவர் ஆவார்” என்று சொன் னார்கள். யிநிச்சயமாக நாங்களே அணிவகுத்துப் பணிபுரிபவர்களாக இருக்கிறோம்’ (37:165) என்று சொல்வது வானவர்கள்தான்’ என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன் னார்கள்.
3213. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கவிஞர் ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்களிடம், ‘‘எதிரிகளுக்கு (பதிலடியாக) வசைக்கவி பாடுங்கள். (வானவர்) ஜிப்ரீல் உங்களுடன் (துணையாக) இருப்பார்” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 59
3214. وَحَدَّثَنَا إِسْحَاقُ، أَخْبَرَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، حَدَّثَنَا أَبِي قَالَ، سَمِعْتُ حُمَيْدَ بْنَ هِلاَلٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ كَأَنِّي أَنْظُرُ إِلَى غُبَارٍ سَاطِعٍ فِي سِكَّةِ بَنِي غَنْمٍ. زَادَ مُوسَى مَوْكِبَ جِبْرِيلَ.
பாடம் : 6 வானவர்கள் லி அவர்கள்மீது சாந்தி பொழியட்டும்!19 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘வானவர் களில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் யூதர் களின் பகைவர் ஆவார்” என்று சொன் னார்கள். யிநிச்சயமாக நாங்களே அணிவகுத்துப் பணிபுரிபவர்களாக இருக்கிறோம்’ (37:165) என்று சொல்வது வானவர்கள்தான்’ என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன் னார்கள்.
3214. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்த) பனூ ஃகன்ம் கிளையாரின் குறுகலான வீதியில் கிளம்புகின்ற புழுதியை (இன்றும்) நான் பார்ப்பதைப் போன்றுள்ளது.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் மூசா பின் இஸ்மாயில் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘(வானவர்) ஜிப்ரீல் அவர் களின் படைகள் கிளப்பிய’ என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.26


அத்தியாயம் : 59
3215. حَدَّثَنَا فَرْوَةُ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ الْحَارِثَ بْنَ هِشَامٍ، سَأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم كَيْفَ يَأْتِيكَ الْوَحْىُ قَالَ "" كُلُّ ذَاكَ يَأْتِي الْمَلَكُ أَحْيَانًا فِي مِثْلِ صَلْصَلَةِ الْجَرَسِ، فَيَفْصِمُ عَنِّي وَقَدْ وَعَيْتُ مَا قَالَ، وَهْوَ أَشَدُّهُ عَلَىَّ، وَيَتَمَثَّلُ لِي الْمَلَكُ أَحْيَانًا رَجُلاً، فَيُكَلِّمُنِي فَأَعِي مَا يَقُولُ "".
பாடம் : 6 வானவர்கள் லி அவர்கள்மீது சாந்தி பொழியட்டும்!19 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘வானவர் களில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் யூதர் களின் பகைவர் ஆவார்” என்று சொன் னார்கள். யிநிச்சயமாக நாங்களே அணிவகுத்துப் பணிபுரிபவர்களாக இருக்கிறோம்’ (37:165) என்று சொல்வது வானவர்கள்தான்’ என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன் னார்கள்.
3215. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘தங்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) எப்படி வருகிறது?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவையெல்லாம் (இப்படித்தான்:) சில வேளைகளில் வானவர் (ஜிப்ரீல்) என்னிடம் மணியோசையைப் போன்று (சத்தம் எழுப்பிய நிலையில்) வருவார். அவர் கூறியதை நான் நினைவில் (பாதுகாத்து) வைத்துக்கொண்ட நிலையில் அவர் என்னைவிட்டுப் பிரிந்துவிடுவார். இவ்வாறு வருவது எனக்கு மிகவும் கடினமானதாக இருக்கும்.

சில வேளைகளில் அந்த வானவர் ஒரு மனிதரைப் போன்று என் முன் தோன்றி காட்சியளித்து என்னுடன் பேசுவார். அப்போது அவர் கூறுவதை நான் நினைவிலிருத்திக்கொள்வேன்” என்று பதிலளித்தார்கள்.27


அத்தியாயம் : 59
3216. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شَيْبَانُ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" مَنْ أَنْفَقَ زَوْجَيْنِ فِي سَبِيلِ اللَّهِ دَعَتْهُ خَزَنَةُ الْجَنَّةِ أَىْ فُلُ هَلُمَّ "". فَقَالَ أَبُو بَكْرٍ ذَاكَ الَّذِي لاَ تَوَى عَلَيْهِ. قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَرْجُو أَنْ تَكُونَ مِنْهُمْ "".
பாடம் : 6 வானவர்கள் லி அவர்கள்மீது சாந்தி பொழியட்டும்!19 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘வானவர் களில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் யூதர் களின் பகைவர் ஆவார்” என்று சொன் னார்கள். யிநிச்சயமாக நாங்களே அணிவகுத்துப் பணிபுரிபவர்களாக இருக்கிறோம்’ (37:165) என்று சொல்வது வானவர்கள்தான்’ என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன் னார்கள்.
3216. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘ஒரு ஜோடி (பொருட்களை) அல்லாஹ் வின் பாதையில் செலவழித்தவர்களை சொர்க்கத்தின் காவலர்(களான வானவர்)கள் யிஇன்னாரே! இங்கே வாருங்கள்’ என்று அழைப்பார்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதைக் கேட்ட அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘இப்படிப்பட்டவருக்குக் கவலையே கிடையாதே” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் அவர்களில் ஒருவராயிருப்பீர்கள் என்று நான் எதிர் பார்க்கிறேன்” என்று சொன்னார்கள்.28


அத்தியாயம் : 59
3217. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا هِشَامٌ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لَهَا "" يَا عَائِشَةُ، هَذَا جِبْرِيلُ يَقْرَأُ عَلَيْكِ السَّلاَمَ "". فَقَالَتْ وَعَلَيْهِ السَّلاَمُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ. تَرَى مَا لاَ أَرَى. تُرِيدُ النَّبِيَّ صلى الله عليه وسلم.
பாடம் : 6 வானவர்கள் லி அவர்கள்மீது சாந்தி பொழியட்டும்!19 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘வானவர் களில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் யூதர் களின் பகைவர் ஆவார்” என்று சொன் னார்கள். யிநிச்சயமாக நாங்களே அணிவகுத்துப் பணிபுரிபவர்களாக இருக்கிறோம்’ (37:165) என்று சொல்வது வானவர்கள்தான்’ என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன் னார்கள்.
3217. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘ஆயிஷாவே! இதோ (வானவர்) ஜிப்ரீல் உனக்கு முகமன் (சலாம்) கூறுகிறார்” என்று கூறினார்கள். நான், ‘‘வ அலைஹிஸ் ஸலாமு வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு” (அவர்மீதும் சாந்தியும் அல்லாஹ்வின் கருணையும் அவனுடைய அருள்வளங் களும் பொழியட்டும்.)

(அல்லாஹ்வின் தூதரே!) நான் பார்க்க முடியாததையெல்லாம் நீங்கள் பார்க்கி றீர்கள்” என்று கூறினேன்.

ஆயிஷா (ரலி) அவர்கள் ‘நீங்கள்’ என்று நபி (ஸல்) அவர்களையே குறிப்பிட்டதாக அறிவிப்பாளர் கூறுகிறார்.


அத்தியாயம் : 59
3218. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا عُمَرُ بْنُ ذَرٍّ، ح قَالَ حَدَّثَنِي يَحْيَى بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ عُمَرَ بْنِ ذَرٍّ، عَنْ أَبِيهِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِجِبْرِيلَ "" أَلاَ تَزُورُنَا أَكْثَرَ مِمَّا تَزُورُنَا "" قَالَ فَنَزَلَتْ {وَمَا نَتَنَزَّلُ إِلاَّ بِأَمْرِ رَبِّكَ لَهُ مَا بَيْنَ أَيْدِينَا وَمَا خَلْفَنَا} الآيَةَ.
பாடம் : 6 வானவர்கள் லி அவர்கள்மீது சாந்தி பொழியட்டும்!19 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘வானவர் களில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் யூதர் களின் பகைவர் ஆவார்” என்று சொன் னார்கள். யிநிச்சயமாக நாங்களே அணிவகுத்துப் பணிபுரிபவர்களாக இருக்கிறோம்’ (37:165) என்று சொல்வது வானவர்கள்தான்’ என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன் னார்கள்.
3218. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களிடம், ‘‘தாங்கள் (இப்போது) எம்மைச் சந்தித்துக் கொண்டிருப்பதைவிட அதிகமாக (அடிக்கடி) சந்திக்கமாட்டீர்களா?” என்று (ஆர்வமுடன்) கேட்டார்கள்.

அப்போது, ‘‘(நபியே!) நாம் உங்கள் இறைவனின் உத்தரவின்றி இறங்கு வதில்லை. எமக்கு முன்னிருப்பவையும் எமக்குப் பின்னால் இருப்பவையும் அவனுக்கே உரியவை” (19:64) எனும் இறைவசனம் அருளப்பட்டது.29

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 59
3219. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي سُلَيْمَانُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" أَقْرَأَنِي جِبْرِيلُ عَلَى حَرْفٍ، فَلَمْ أَزَلْ أَسْتَزِيدُهُ حَتَّى انْتَهَى إِلَى سَبْعَةِ أَحْرُفٍ "".
பாடம் : 6 வானவர்கள் லி அவர்கள்மீது சாந்தி பொழியட்டும்!19 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘வானவர் களில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் யூதர் களின் பகைவர் ஆவார்” என்று சொன் னார்கள். யிநிச்சயமாக நாங்களே அணிவகுத்துப் பணிபுரிபவர்களாக இருக்கிறோம்’ (37:165) என்று சொல்வது வானவர்கள்தான்’ என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன் னார்கள்.
3219. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரேயொரு (வட்டார) மொழிவழக்குப் படி (வானவர்) ஜிப்ரீல் (குர்ஆனை) எனக்கு ஓதக் கற்றுத்தந்தார். ஆனால், நான் அதை இன்னும் பல (வட்டார) மொழிவழக்குகளின்படி எனக்கு ஓதக் கற்றுத்தருமாறு அவரிடம் கேட்டுக்கொண்டேயிருந்தேன். (நான் கேட்க, கேட்க அதிகரித்துக் கொண்டே வந்து,) இறுதியில் ஏழு (வட்டார) மொழிவழக்குகள் அளவுக்கு வந்து நின்றது.30

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:


அத்தியாயம் : 59
3220. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَجْوَدَ النَّاسِ، وَكَانَ أَجْوَدَ مَا يَكُونُ فِي رَمَضَانَ حِينَ يَلْقَاهُ جِبْرِيلُ، وَكَانَ جِبْرِيلُ يَلْقَاهُ فِي كُلِّ لَيْلَةٍ مِنْ رَمَضَانَ، فَيُدَارِسُهُ الْقُرْآنَ، فَلَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ يَلْقَاهُ جِبْرِيلُ أَجْوَدُ بِالْخَيْرِ مِنَ الرِّيحِ الْمُرْسَلَةِ. وَعَنْ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا مَعْمَرٌ بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ. وَرَوَى أَبُو هُرَيْرَةَ وَفَاطِمَةُ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ جِبْرِيلَ كَانَ يُعَارِضُهُ الْقُرْآنَ.
பாடம் : 6 வானவர்கள் லி அவர்கள்மீது சாந்தி பொழியட்டும்!19 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘வானவர் களில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் யூதர் களின் பகைவர் ஆவார்” என்று சொன் னார்கள். யிநிச்சயமாக நாங்களே அணிவகுத்துப் பணிபுரிபவர்களாக இருக்கிறோம்’ (37:165) என்று சொல்வது வானவர்கள்தான்’ என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன் னார்கள்.
3220. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே அதிகமாக வாரி வழங்கக் கூடியவர்களாக இருந்தார்கள்; ரமளான் மாதத்தில் அவர்களை வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் சந்திக்கும் வேளையில் (வழக்கத்தைவிட) அதிகமாக வாரி வழங்கு வார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமளான் மாதத்தின் ஒவ்வோர் இரவிலும் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து (அதுவரை அருளப்பட்டிருந்த) குர்ஆனை அவர்களுக்கு (ஓதிக்காட்டிக்) கற்றுத் தருவார்கள்.31

ஜிப்ரீல் (அலை) அவர்கள், அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்திக்கும் போது நபியவர்கள் (மழைக்)காற்றைவிட அதிகமாக (மக்களுக்கு) நன்மையை வாரி வழங்கும் கொடையாளராகத் திகழ் வார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

நபி (ஸல்) அவர்கள் ‘‘எனக்கு குர்ஆன் முழுவதையும் (வானவர்) ஜிப்ரீல் ஓதிக் காட்டிவந்தார்” என்று கூறியதாக அபூஹுரைரா (ரலி), ஃபாத்திமா (ரலி) ஆகியோர் அறிவிக்கின்றனர்.


அத்தியாயம் : 59
3221. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا لَيْثٌ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ، أَخَّرَ الْعَصْرَ شَيْئًا فَقَالَ لَهُ عُرْوَةُ أَمَا إِنَّ جِبْرِيلَ قَدْ نَزَلَ فَصَلَّى أَمَامَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. فَقَالَ عُمَرُ اعْلَمْ مَا تَقُولُ يَا عُرْوَةُ. قَالَ سَمِعْتُ بَشِيرَ بْنَ أَبِي مَسْعُودٍ يَقُولُ سَمِعْتُ أَبَا مَسْعُودٍ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" نَزَلَ جِبْرِيلُ فَأَمَّنِي، فَصَلَّيْتُ مَعَهُ، ثُمَّ صَلَّيْتُ مَعَهُ، ثُمَّ صَلَّيْتُ مَعَهُ، ثُمَّ صَلَّيْتُ مَعَهُ، ثُمَّ صَلَّيْتُ مَعَهُ "". يَحْسُبُ بِأَصَابِعِهِ خَمْسَ صَلَوَاتٍ.
பாடம் : 6 வானவர்கள் லி அவர்கள்மீது சாந்தி பொழியட்டும்!19 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘வானவர் களில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் யூதர் களின் பகைவர் ஆவார்” என்று சொன் னார்கள். யிநிச்சயமாக நாங்களே அணிவகுத்துப் பணிபுரிபவர்களாக இருக்கிறோம்’ (37:165) என்று சொல்வது வானவர்கள்தான்’ என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன் னார்கள்.
3221. இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் அஸ்ர் தொழுகையைச் சிறிது தாமதப்படுத்தித் தொழுதார்கள். உடனே உர்வா (ரஹ்) அவர்கள், ‘‘(வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் (வானிலிருந்து) இறங்கி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் (அஸ்ரை இதற்கு முந்திய நேரத்தில்) தொழுதார்கள்” என்று சொன்னார்கள். அதற்கு உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள், ‘‘நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதை அறிந்து சொல்லுங்கள், ‘‘உர்வா!” என்று சொன்னார்கள்.

அப்போது உர்வா (ரஹ்) அவர்கள், ‘‘ஜிப்ரீல் (அலை) அவர்கள் (வானிலிருந்து) இறங்கி, எனக்குத் தொழுவிக்க, நான் அவருடன் தொழுதேன். பிறகு (இரண்டாம் முறையாக) அவருடன் தொழுதேன். பிறகு (மூன்றாம் முறையாக) அவருடன் தொழு தேன். பிறகு (நான்காம் முறையாக) அவருடன் தொழுதேன். பிறகு (ஐந்தாம் முறையாக) அவருடன் தொழுதேன்” என்று தம் விரல்களால் ஐந்து தொழுகை களை எண்ணியபடி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டேன் என்று தம் தந்தை அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் சொல்லக் கேட்டதாக பஷீர் பின் அபீமஸ்ஊத் (ரஹ்) அவர்கள் சொல்ல நான் செவியுற்றேன்” என்றார்கள்.32


அத்தியாயம் : 59
3222. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ، عَنْ أَبِي ذَرٍّ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" قَالَ لِي جِبْرِيلُ مَنْ مَاتَ مِنْ أُمَّتِكَ لاَ يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا دَخَلَ الْجَنَّةَ، أَوْ لَمْ يَدْخُلِ النَّارَ، قَالَ وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ قَالَ وَإِنْ "".
பாடம் : 6 வானவர்கள் லி அவர்கள்மீது சாந்தி பொழியட்டும்!19 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘வானவர் களில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் யூதர் களின் பகைவர் ஆவார்” என்று சொன் னார்கள். யிநிச்சயமாக நாங்களே அணிவகுத்துப் பணிபுரிபவர்களாக இருக்கிறோம்’ (37:165) என்று சொல்வது வானவர்கள்தான்’ என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன் னார்கள்.
3222. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘உங்கள் சமுதாயத்தாரில் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாகக் கருதாமல் இறந்துவிடுபவர், சொர்க்கத்தில் நுழைவார் லிஅல்லது நரகம் செல்லமாட்டார்லி என்று (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் கூறினார்கள்” என நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

நான், ‘‘அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம்; அவன் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரியே!” என்று பதிலளித்தார்கள்.33


அத்தியாயம் : 59
3223. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" الْمَلاَئِكَةُ يَتَعَاقَبُونَ، مَلاَئِكَةٌ بِاللَّيْلِ وَمَلاَئِكَةٌ بِالنَّهَارِ، وَيَجْتَمِعُونَ فِي صَلاَةِ الْفَجْرِ وَالْعَصْرِ، ثُمَّ يَعْرُجُ إِلَيْهِ الَّذِينَ بَاتُوا فِيكُمْ، فَيَسْأَلُهُمْ وَهْوَ أَعْلَمُ، فَيَقُولُ كَيْفَ تَرَكْتُمْ {عِبَادِي} فَيَقُولُونَ تَرَكْنَاهُمْ يُصَلُّونَ، وَأَتَيْنَاهُمْ يُصَلُّونَ "".
பாடம் : 6 வானவர்கள் லி அவர்கள்மீது சாந்தி பொழியட்டும்!19 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘வானவர் களில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் யூதர் களின் பகைவர் ஆவார்” என்று சொன் னார்கள். யிநிச்சயமாக நாங்களே அணிவகுத்துப் பணிபுரிபவர்களாக இருக்கிறோம்’ (37:165) என்று சொல்வது வானவர்கள்தான்’ என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன் னார்கள்.
3223. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

இரவு நேரத்தில் சில வானவர்களும் பகல் நேரத்தில் சில வானவர்களும் ஒருவர்பின் ஒருவராக அடுத்தடுத்து வருகிறார்கள். ஃபஜ்ருடைய தொழுகை யிலும் அஸ்ருடைய தொழுகையிலும் ஒன்றுசேர்கின்றார்கள். பிறகு, அல்லாஹ் லிஅவனோ மிகவும் அறிந்தவன்லி அவர்களிடம், ‘‘(பூமியிலுள்ள) என் அடியார்களை எந்த நிலையில் விட்டுவந்தீர்கள்?” என்று கேட்பான்.

அதற்கு அவ்வானவர்கள், ‘‘அவர்களை உன்னைத் தொழுகின்ற நிலையில் விட்டு வந்தோம். அவர்கள் (உன்னைத்) தொழுது கொண்டிருந்த நிலையிலேயே அவர்களி டம் நாங்கள் சென்றோம்” என்று பதிலளிப் பார்கள்.34

அத்தியாயம் : 59
3224. حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا مَخْلَدٌ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أُمَيَّةَ، أَنَّ نَافِعًا، حَدَّثَهُ أَنَّ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ حَدَّثَهُ عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ حَشَوْتُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم وِسَادَةً فِيهَا تَمَاثِيلُ كَأَنَّهَا نُمْرُقَةٌ، فَجَاءَ فَقَامَ بَيْنَ الْبَابَيْنِ وَجَعَلَ يَتَغَيَّرُ وَجْهُهُ، فَقُلْتُ مَا لَنَا يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" مَا بَالُ هَذِهِ الْوِسَادَةِ "". قَالَتْ وِسَادَةٌ جَعَلْتُهَا لَكَ لِتَضْطَجِعَ عَلَيْهَا. قَالَ "" أَمَا عَلِمْتِ أَنَّ الْمَلاَئِكَةَ لاَ تَدْخُلُ بَيْتًا فِيهِ صُورَةٌ، وَأَنَّ مَنْ صَنَعَ الصُّورَةَ يُعَذَّبُ يَوْمَ الْقِيَامَةِ يَقُولُ أَحْيُوا مَا خَلَقْتُمْ "".
பாடம் : 7 ஒருவர் யிஆமீன்'35 சொல்ல, வானிலுள்ள வானவர்களும் யிஆமீன்' சொல்ல இருவரது ஆமீனும் (நேரத்தில்) ஒத்தமைந்துவிட்டால், அதற்கு முன் அவர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்36
3224. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது

நபி (ஸல்) அவர்களுக்கு நான் ஒரு தலையணையை (ஈச்ச நாரை அடைத்துத்) தயாரித்தேன். அதில் உருவப் படங்கள் வரையப்பட்டிருந்தன. அது சிறிய மெத்தை போன்றிருந்தது. நபி (ஸல்) அவர்கள் வந்ததும் (அதைப் பார்த்துவிட்டு) இரு கதவுகளுக்கிடையே நின்றுகொண்டார்கள். அவர்களின் முகம் (கோபத்தால் நிறம்) மாறத்தொடங்கியது. நான், ‘‘நாங்கள் என்ன (தவறு) செய்துவிட்டோம்? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘இந்தத் தலையணையின் நிலை என்ன?” என்று (கோபமாகக்) கேட்டார்கள்.

நான், ‘‘இது, நீங்கள் (தலைவைத்துப்) படுத்துக்கொள்வதற்காக தங்களுக்கென நான் தயாரித்த தலையணை” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘‘உருவப் படம் உள்ள வீட்டினுள் (அருள்) வானவர்கள் நுழையமாட்டார்கள் என்பதும், உருவப் படத்தைச் செய்தவன் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவான் என்பதும் அப்போது அல்லாஹ் (உருவப் படத்தைச் செய்தவர்களை நோக்கி), ‘நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள்’ என்று சொல்வான் என்பதும் உனக்குத் தெரியாதா?” என்று கேட்டார்கள்.37


அத்தியாயம் : 59
3225. حَدَّثَنَا ابْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّهُ سَمِعَ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ يَقُولُ سَمِعْتُ أَبَا طَلْحَةَ، يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" لاَ تَدْخُلُ الْمَلاَئِكَةُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلاَ صُورَةُ تَمَاثِيلَ "".
பாடம் : 7 ஒருவர் யிஆமீன்'35 சொல்ல, வானிலுள்ள வானவர்களும் யிஆமீன்' சொல்ல இருவரது ஆமீனும் (நேரத்தில்) ஒத்தமைந்துவிட்டால், அதற்கு முன் அவர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்36
3225. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நாயும் (உயிரினங்களின் சிலைகள் அல்லது) உருவப் படங்களும் உள்ள வீட்டினுள் (அருள்) வானவர்கள் நுழைய மாட்டார்கள்.

இதை அபூதல்ஹா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 59
3226. حَدَّثَنَا أَحْمَدُ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنَا عَمْرٌو، أَنَّ بُكَيْرَ بْنَ الأَشَجِّ، حَدَّثَهُ أَنَّ بُسْرَ بْنَ سَعِيدٍ حَدَّثَهُ أَنَّ زَيْدَ بْنَ خَالِدٍ الْجُهَنِيَّ ـ رضى الله عنه ـ حَدَّثَهُ وَمَعَ، بُسْرِ بْنِ سَعِيدٍ عُبَيْدُ اللَّهِ الْخَوْلاَنِيُّ الَّذِي كَانَ فِي حَجْرِ مَيْمُونَةَ ـ رضى الله عنها ـ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم حَدَّثَهُمَا زَيْدُ بْنُ خَالِدٍ أَنَّ أَبَا طَلْحَةَ حَدَّثَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ تَدْخُلُ الْمَلاَئِكَةُ بَيْتًا فِيهِ صُورَةٌ "". قَالَ بُسْرٌ فَمَرِضَ زَيْدُ بْنُ خَالِدٍ، فَعُدْنَاهُ فَإِذَا نَحْنُ فِي بَيْتِهِ بِسِتْرٍ فِيهِ تَصَاوِيرُ، فَقُلْتُ لِعُبَيْدِ اللَّهِ الْخَوْلاَنِيِّ أَلَمْ يُحَدِّثْنَا فِي التَّصَاوِيرِ فَقَالَ إِنَّهُ قَالَ "" إِلاَّ رَقْمٌ فِي ثَوْبٍ "". أَلاَ سَمِعْتَهُ قُلْتُ لاَ. قَالَ بَلَى قَدْ ذَكَرَهُ.
பாடம் : 7 ஒருவர் யிஆமீன்'35 சொல்ல, வானிலுள்ள வானவர்களும் யிஆமீன்' சொல்ல இருவரது ஆமீனும் (நேரத்தில்) ஒத்தமைந்துவிட்டால், அதற்கு முன் அவர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்36
3226. ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ(ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘(உயிரினங்களின்) உருவப் படமுள்ள வீட்டில் (அருள்) வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என என்னிடம் அபூதல்ஹா (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள்.

அறிவிப்பாளர் புஸ்ர் பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(ஒருமுறை) ஸைத் பின் காலித் (ரலி) அவர்கள் நோய்வாய்ப்பட்டார்கள். அவர் களை உடல் நலம் விசாரிக்க நாங்கள் சென்றோம். அப்போது நாங்கள் அவர் களின் வீட்டில் ஒரு திரையைக் கண்டோம். அந்தத் திரையில் உருவப் படங்கள் (வரையப்பட்டு) இருந்தன. ஆகவே, நான் (என்னுடன் இருந்த) உபைதுல்லாஹ் அல்கவ்லானீ அவர்களிடம், ‘‘இவர்கள் (ஸைத் (ரலி) அவர்கள்) நமக்கு உருவங் களைப் பற்றிய நபிமொழியை அறிவிக்க வில்லையா?” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், ‘‘ஆம். ஆனால், ஸைத் (ரலி) அவர்கள் (அதை அறிவிக்கும்போது) யிதுணியில் பொறிக்கப்பட்டதைத் தவிர’ என்று (ஸைத் (ரலி) அவர்கள்) சொன்னார்களே அதை நீங்கள் கேட்கவில்லையா?” என்று கேட்டார்கள். நான், ‘‘கேட்கவில்லை” என்றேன். அதற்கு அவர்கள், ‘‘ஆம்; அவர்கள் அவ்வாறுதான் சொன்னார்கள்” என்று கூறினார்கள்.38


அத்தியாயம் : 59
3227. حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، قَالَ حَدَّثَنِي عُمَرُ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ وَعَدَ النَّبِيَّ صلى الله عليه وسلم جِبْرِيلُ فَقَالَ إِنَّا لاَ نَدْخُلُ بَيْتًا فِيهِ صُورَةٌ وَلاَ كَلْبٌ.
பாடம் : 7 ஒருவர் யிஆமீன்'35 சொல்ல, வானிலுள்ள வானவர்களும் யிஆமீன்' சொல்ல இருவரது ஆமீனும் (நேரத்தில்) ஒத்தமைந்துவிட்டால், அதற்கு முன் அவர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்36
3227. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (தாம் வருவதாக) வாக்களித்திருந்தார்கள். (ஆனால், வர வில்லை. நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் அது பற்றிக் கேட்டபோது) ‘‘உருவப் படமுள்ள வீட்டி லும் நாய் உள்ள வீட்டிலும் (வானவர் களாகிய) நாங்கள் நுழைவதில்லை” என்று சொன்னார்கள்.


அத்தியாயம் : 59
3228. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ سُمَىٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا قَالَ الإِمَامُ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ. فَقُولُوا اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ، فَإِنَّهُ مَنْ وَافَقَ قَوْلُهُ قَوْلَ الْمَلاَئِكَةِ، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ "".
பாடம் : 7 ஒருவர் யிஆமீன்'35 சொல்ல, வானிலுள்ள வானவர்களும் யிஆமீன்' சொல்ல இருவரது ஆமீனும் (நேரத்தில்) ஒத்தமைந்துவிட்டால், அதற்கு முன் அவர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்36
3228. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இமாம் (தொழுகையில்), ‘‘சமிஅல் லாஹு லிமன் ஹமிதஹு” (தன்னைப் புகழ்ந்தவனின் புகழுரையை அல்லாஹ் செவிமடுத்தான்) என்று கூறும்போது நீங்கள், ‘‘அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து” (இறைவா, எங்கள் இரட்சகனே! உனக்கே புகழ் அனைத்தும் உரியன) என்று கூறுங்கள். ஏனெனில், யாருடைய இந்த வார்த்தை வானவர்களின் வார்த் தைக்கு (நேரத்தில்) ஒத்து அமைகிறதோ அவர் அதற்குமுன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:39


அத்தியாயம் : 59
3229. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُلَيْحٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ هِلاَلِ بْنِ عَلِيٍّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي عَمْرَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ أَحَدَكُمْ فِي صَلاَةٍ مَا دَامَتِ الصَّلاَةُ تَحْبِسُهُ، وَالْمَلاَئِكَةُ تَقُولُ اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ. مَا لَمْ يَقُمْ مِنْ صَلاَتِهِ أَوْ يُحْدِثْ "".
பாடம் : 7 ஒருவர் யிஆமீன்'35 சொல்ல, வானிலுள்ள வானவர்களும் யிஆமீன்' சொல்ல இருவரது ஆமீனும் (நேரத்தில்) ஒத்தமைந்துவிட்டால், அதற்கு முன் அவர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்36
3229. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தொழுகைக்காகக் காத்திருக்கும்வரை அவர் தொழுகை யிலேயே இருக்கிறார். அவர் தொழுகை முடிந்து எழாதிருக்கும்வரை, அல்லது அவருக்கு துடக்கு ஏற்படாதிருக்கும்வரை வானவர்கள், ‘‘இறைவா! இவரை மன்னித்து, இவருக்குக் கருணை புரிவாயாக!” என்று பிரார்த்தனை செய்கி றார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.40


அத்தியாயம் : 59