2782. حَدَّثَنَا الْحَسَنُ بْنُ صَبَّاحٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَابِقٍ، حَدَّثَنَا مَالِكُ بْنُ مِغْوَلٍ، قَالَ سَمِعْتُ الْوَلِيدَ بْنَ الْعَيْزَارِ، ذَكَرَ عَنْ أَبِي عَمْرٍو الشَّيْبَانِيِّ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ ـ رضى الله عنه ـ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَىُّ الْعَمَلِ أَفْضَلُ قَالَ "" الصَّلاَةُ عَلَى مِيقَاتِهَا "". قُلْتُ ثُمَّ أَىٌّ. قَالَ "" ثُمَّ بِرُّ الْوَالِدَيْنِ "". قُلْتُ ثُمَّ أَىٌّ قَالَ "" الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ "". فَسَكَتُّ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَلَوِ اسْتَزَدْتُهُ لَزَادَنِي.
பாடம் : 1 அறப்போரின் சிறப்பும் அதன் வழி காட்டு நெறிகளும் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: இறைநம்பிக்கையாளர்களுக்கு நிச்சயமாக (சொர்க்க)ச் சோலை கிடைக்கும் என்பதற்குப் பதிலாக அவர்களின் உயிர்களையும் அவர்களின் உடைமைகளையும் அல்லாஹ் கொள்முதல் செய்துகொண்டான். அவர்கள் அல்லாஹ்வின் வழியில் அறப்போர் புரிகின்றனர். எனவே, அவர்கள் (எதிரிகளைக்) கொல்கின்றனர்; (எதிரி களால்) கொல்லப்படவும் செய்கின்றனர். (இறைவேதங்களான) தவ்ராத், இன்ஜீல், குர்ஆன் ஆகியவற்றில் அல்லாஹ் தன் மீது விதியாக்கிக்கொண்ட வாக்குறுதியாகும் (இது). அல்லாஹ்வைவிடத் தனது வாக்கை முழுமையாக நிறைவேற்றுபவர் வேறு யார் (இருக்க முடியும்)? எனவே, (இறை நம்பிக்கையாளர்களே!) நீங்கள் (அல்லாஹ் விடம்) செய்துகொண்ட (இந்த) வணிகம் குறித்து மகிழ்ச்சி அடையுங்கள். இதுவே மகத்தான வெற்றியாகும். (அவர்கள்) பாவமன்னிப்புக் கோரு வோர், (அல்லாஹ்வை) வழிபடுவோர், (அவனைப்) புகழ்வோர், நோன்பு நோற் போர், ருகூஉ செய்வோர், சிரவணக்கம் செய்வோர், நன்மையை ஏவுவோர், தீமையிலிருந்து (மக்களைத்) தடுப்போர், அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள வரையறை களைப் பேணிக்காப்போர் ஆவர். (நபியே! இத்தகைய) இறைநம்பிக்கையாளர்களுக்கு நீர் நற்செய்தி கூறுவீராக. (9:111,112) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: இங்கு (9:112ஆவது வசனத்தில் யிவரையறைகள்’ என்பதைக் குறிக்க மூலத் தில் யிஹுதூத்’ எனும் சொல் ஆளப்பட் டுள்ளது. இது இறைவழிபாடுகளைக் குறிக்கும்.
2782. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நற்செயல்களில் சிறந்தது எது?” என்று கேட்டேன். அவர்கள், ‘‘தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவது” என்று கூறினார்கள். ‘‘பிறகு எது (சிறந்தது)?” என்று நான் கேட்டேன் அவர்கள், ‘‘பிறகு தாய் தந்தையருக்கு நன்மை செய்வது” என்று பதிலளித்தார்கள்.

நான், ‘‘பிறகு எது (சிறந்தது)?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘இறைவழியில் அறப்போர் புரிவதாகும்” என்று பதில் சொன்னார்கள்.

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (இதற்குமேல்) வேறெதுவும் கேட்காமல் மௌனமாகிவிட்டேன். நான் இன்னும் கேட்டிருந்தால் அவர்கள் இன்னும் பதிலளித்திருப்பார்கள்.2


அத்தியாயம் : 56
2783. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنِي مَنْصُورٌ، عَنْ مُجَاهِدٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ""لاَ هِجْرَةَ بَعْدَ الْفَتْحِ وَلَكِنْ جِهَادٌ وَنِيَّةٌ، وَإِذَا اسْتُنْفِرْتُمْ فَانْفِرُوا "".
பாடம் : 1 அறப்போரின் சிறப்பும் அதன் வழி காட்டு நெறிகளும் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: இறைநம்பிக்கையாளர்களுக்கு நிச்சயமாக (சொர்க்க)ச் சோலை கிடைக்கும் என்பதற்குப் பதிலாக அவர்களின் உயிர்களையும் அவர்களின் உடைமைகளையும் அல்லாஹ் கொள்முதல் செய்துகொண்டான். அவர்கள் அல்லாஹ்வின் வழியில் அறப்போர் புரிகின்றனர். எனவே, அவர்கள் (எதிரிகளைக்) கொல்கின்றனர்; (எதிரி களால்) கொல்லப்படவும் செய்கின்றனர். (இறைவேதங்களான) தவ்ராத், இன்ஜீல், குர்ஆன் ஆகியவற்றில் அல்லாஹ் தன் மீது விதியாக்கிக்கொண்ட வாக்குறுதியாகும் (இது). அல்லாஹ்வைவிடத் தனது வாக்கை முழுமையாக நிறைவேற்றுபவர் வேறு யார் (இருக்க முடியும்)? எனவே, (இறை நம்பிக்கையாளர்களே!) நீங்கள் (அல்லாஹ் விடம்) செய்துகொண்ட (இந்த) வணிகம் குறித்து மகிழ்ச்சி அடையுங்கள். இதுவே மகத்தான வெற்றியாகும். (அவர்கள்) பாவமன்னிப்புக் கோரு வோர், (அல்லாஹ்வை) வழிபடுவோர், (அவனைப்) புகழ்வோர், நோன்பு நோற் போர், ருகூஉ செய்வோர், சிரவணக்கம் செய்வோர், நன்மையை ஏவுவோர், தீமையிலிருந்து (மக்களைத்) தடுப்போர், அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள வரையறை களைப் பேணிக்காப்போர் ஆவர். (நபியே! இத்தகைய) இறைநம்பிக்கையாளர்களுக்கு நீர் நற்செய்தி கூறுவீராக. (9:111,112) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: இங்கு (9:112ஆவது வசனத்தில் யிவரையறைகள்’ என்பதைக் குறிக்க மூலத் தில் யிஹுதூத்’ எனும் சொல் ஆளப்பட் டுள்ளது. இது இறைவழிபாடுகளைக் குறிக்கும்.
2783. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(மக்காவின்) வெற்றிக்குப் பின்னால் (மக்காவிலிருந்து) புலம்பெயர்தல் (ஹிஜ்ரத்) என்பது கிடையாது. ஆனால், அறப்போர் புரிவதும் (அதற்காகவும் பிற நற்செயல்கள் புரியவும்) நாட்டம் கொள்வதும் உண்டு. போருக்குப் புறப்படும்படி நீங்கள் அழைக்கப்பட்டால் உடனே போருக்குச் செல்லுங்கள்” என்று கூறினார்கள்.3


அத்தியாயம் : 56
2784. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا خَالِدٌ، حَدَّثَنَا حَبِيبُ بْنُ أَبِي عَمْرَةَ، عَنْ عَائِشَةَ بِنْتِ طَلْحَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّهَا قَالَتْ يَا رَسُولَ اللَّهِ تُرَى الْجِهَادَ أَفْضَلَ الْعَمَلِ، أَفَلاَ نُجَاهِدُ قَالَ "" لَكِنَّ أَفْضَلَ الْجِهَادِ حَجٌّ مَبْرُورٌ "".
பாடம் : 1 அறப்போரின் சிறப்பும் அதன் வழி காட்டு நெறிகளும் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: இறைநம்பிக்கையாளர்களுக்கு நிச்சயமாக (சொர்க்க)ச் சோலை கிடைக்கும் என்பதற்குப் பதிலாக அவர்களின் உயிர்களையும் அவர்களின் உடைமைகளையும் அல்லாஹ் கொள்முதல் செய்துகொண்டான். அவர்கள் அல்லாஹ்வின் வழியில் அறப்போர் புரிகின்றனர். எனவே, அவர்கள் (எதிரிகளைக்) கொல்கின்றனர்; (எதிரி களால்) கொல்லப்படவும் செய்கின்றனர். (இறைவேதங்களான) தவ்ராத், இன்ஜீல், குர்ஆன் ஆகியவற்றில் அல்லாஹ் தன் மீது விதியாக்கிக்கொண்ட வாக்குறுதியாகும் (இது). அல்லாஹ்வைவிடத் தனது வாக்கை முழுமையாக நிறைவேற்றுபவர் வேறு யார் (இருக்க முடியும்)? எனவே, (இறை நம்பிக்கையாளர்களே!) நீங்கள் (அல்லாஹ் விடம்) செய்துகொண்ட (இந்த) வணிகம் குறித்து மகிழ்ச்சி அடையுங்கள். இதுவே மகத்தான வெற்றியாகும். (அவர்கள்) பாவமன்னிப்புக் கோரு வோர், (அல்லாஹ்வை) வழிபடுவோர், (அவனைப்) புகழ்வோர், நோன்பு நோற் போர், ருகூஉ செய்வோர், சிரவணக்கம் செய்வோர், நன்மையை ஏவுவோர், தீமையிலிருந்து (மக்களைத்) தடுப்போர், அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள வரையறை களைப் பேணிக்காப்போர் ஆவர். (நபியே! இத்தகைய) இறைநம்பிக்கையாளர்களுக்கு நீர் நற்செய்தி கூறுவீராக. (9:111,112) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: இங்கு (9:112ஆவது வசனத்தில் யிவரையறைகள்’ என்பதைக் குறிக்க மூலத் தில் யிஹுதூத்’ எனும் சொல் ஆளப்பட் டுள்ளது. இது இறைவழிபாடுகளைக் குறிக்கும்.
2784. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (நபி (ஸல்) அவர்களிடம்), ‘‘அல்லாஹ்வின் தூதரே! அறப்போர் புரிவதை சிறந்த நற்செயலாக நாங்கள் கருதுகிறோம். எனவே, (பெண்களாகிய) நாங்களும் அறப்போர் புரியலாமா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘(பெண்களான) உங்களுக்குச் சிறந்த அறப்போர், பாவச்செயல் கலவாத ஹஜ்தான்” என்று பதிலளித்தார்கள்.4


அத்தியாயம் : 56
2785. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا عَفَّانُ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جُحَادَةَ، قَالَ أَخْبَرَنِي أَبُو حَصِينٍ، أَنَّ ذَكْوَانَ، حَدَّثَهُ أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ حَدَّثَهُ قَالَ جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ دُلَّنِي عَلَى عَمَلٍ يَعْدِلُ الْجِهَادَ. قَالَ "" لاَ أَجِدُهُ ـ قَالَ ـ هَلْ تَسْتَطِيعُ إِذَا خَرَجَ الْمُجَاهِدُ أَنْ تَدْخُلَ مَسْجِدَكَ فَتَقُومَ وَلاَ تَفْتُرَ وَتَصُومَ وَلاَ تُفْطِرَ "". قَالَ وَمَنْ يَسْتَطِيعُ ذَلِكَ قَالَ أَبُو هُرَيْرَةَ إِنَّ فَرَسَ الْمُجَاهِدِ لَيَسْتَنُّ فِي طِوَلِهِ فَيُكْتَبُ لَهُ حَسَنَاتٍ.
பாடம் : 1 அறப்போரின் சிறப்பும் அதன் வழி காட்டு நெறிகளும் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: இறைநம்பிக்கையாளர்களுக்கு நிச்சயமாக (சொர்க்க)ச் சோலை கிடைக்கும் என்பதற்குப் பதிலாக அவர்களின் உயிர்களையும் அவர்களின் உடைமைகளையும் அல்லாஹ் கொள்முதல் செய்துகொண்டான். அவர்கள் அல்லாஹ்வின் வழியில் அறப்போர் புரிகின்றனர். எனவே, அவர்கள் (எதிரிகளைக்) கொல்கின்றனர்; (எதிரி களால்) கொல்லப்படவும் செய்கின்றனர். (இறைவேதங்களான) தவ்ராத், இன்ஜீல், குர்ஆன் ஆகியவற்றில் அல்லாஹ் தன் மீது விதியாக்கிக்கொண்ட வாக்குறுதியாகும் (இது). அல்லாஹ்வைவிடத் தனது வாக்கை முழுமையாக நிறைவேற்றுபவர் வேறு யார் (இருக்க முடியும்)? எனவே, (இறை நம்பிக்கையாளர்களே!) நீங்கள் (அல்லாஹ் விடம்) செய்துகொண்ட (இந்த) வணிகம் குறித்து மகிழ்ச்சி அடையுங்கள். இதுவே மகத்தான வெற்றியாகும். (அவர்கள்) பாவமன்னிப்புக் கோரு வோர், (அல்லாஹ்வை) வழிபடுவோர், (அவனைப்) புகழ்வோர், நோன்பு நோற் போர், ருகூஉ செய்வோர், சிரவணக்கம் செய்வோர், நன்மையை ஏவுவோர், தீமையிலிருந்து (மக்களைத்) தடுப்போர், அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள வரையறை களைப் பேணிக்காப்போர் ஆவர். (நபியே! இத்தகைய) இறைநம்பிக்கையாளர்களுக்கு நீர் நற்செய்தி கூறுவீராக. (9:111,112) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: இங்கு (9:112ஆவது வசனத்தில் யிவரையறைகள்’ என்பதைக் குறிக்க மூலத் தில் யிஹுதூத்’ எனும் சொல் ஆளப்பட் டுள்ளது. இது இறைவழிபாடுகளைக் குறிக்கும்.
2785. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘‘அறப்போருக்கு ஈடான ஒரு நற்செயலை எனக்கு அறிவியுங்கள்” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படி எதையும் நான் காணவில்லை” என்று கூறிவிட்டு, ‘‘அறப்போராளி (போருக்காகப்) புறப்பட்டுச் சென்றபின், (அவருக்கு இணையான நற்செயல் புரிந்திட வேண்டி) நீர் உமது பள்ளிவாசலுக்குச் சென்று இடைவிடாமல் தொழுதுகொண்டும் தொடர்ந்து நோன்பு நோற்றுக்கொண்டும் இருக்க உம்மால் முடியுமா?” என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், ‘‘அது யாரால் முடியும்?” என்று பதிலளித்தார்.5

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறு கிறார்கள்:

அறப்போராளியின் குதிரை, அதைக் கட்டிவைத்துள்ள மேய்ச்சல் கயிற்றுக் கிடையே (கால்களை உதைத்துக்கொண்டு) சில தடவை குதித்துச் சென்றால் அதுவும் அவருக்கு நன்மையாக எழுதப்படும்.

அத்தியாயம் : 56
2786. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي عَطَاءُ بْنُ يَزِيدَ اللَّيْثِيُّ، أَنَّ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ـ رضى الله عنه ـ حَدَّثَهُ قَالَ قِيلَ يَا رَسُولَ اللَّهِ، أَىُّ النَّاسِ أَفْضَلُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مُؤْمِنٌ يُجَاهِدُ فِي سَبِيلِ اللَّهِ بِنَفْسِهِ وَمَالِهِ "". قَالُوا ثُمَّ مَنْ قَالَ "" مُؤْمِنٌ فِي شِعْبٍ مِنَ الشِّعَابِ يَتَّقِي اللَّهَ، وَيَدَعُ النَّاسَ مِنْ شَرِّهِ "".
பாடம் : 2 இறைவழியில் உயிராலும் பொரு ளாலும் போராடும் இறைநம்பிக்கை யாளர்தான் மனிதர்களிலேயே சிறந்தவர். உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களை வதைக்கும் வேதனை’லிருந்து காப்பாற்றக்கூடிய ஒரு வணிக (பேர)த்தை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? (அதுதான்) நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் நம்பிக்கை கொள்வதும் இறைவழியில் உங்கள் உடைமைகளாலும் உயிர்களாலும் போராடுவதும் ஆகும். (இதனால் கிடைக்கும் பெரும் நன்மையை) நீங்கள் அறிவீர்களாயின் இதுவே உங்களுக்குச் சிறந்ததாகும். உங்கள் பாவங்களை மன்னித்து, இடையே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சொர்க்க(த் தோட்ட)ங்களில் உங்களை அவன் அனுமதிப்பான்; நிலையான சொர்க்கங்களில் சிறந்த வீடுகளையும் உங்களுக்கு அவன் அளிப்பான். அதுவே மகத்தான வெற்றியாகும். (61:10லி12)
2786. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘அல்லாஹ்வின் தூதரே! மக்களில் சிறந்தவர் யார்?” என்று கேட்கப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இறைவழியில் தமது உயிராலும் தமது பொருளாலும் போராடுபவரே (மக்களில் சிறந்தவர்)” என்று பதிலளித்தார்கள்.

மக்கள், ‘‘பிறகு யார்?” என்று கேட்டார் கள். ‘‘மலைக் கணவாய்களில் ஒன்றில் வசித்துக்கொண்டு, அல்லாஹ்வை அஞ்சிய வண்ணம் தம்மால் மக்களுக்குத் தீங்கு நேராமல் தவிர்த்து வருபவரே சிறந்தவர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.


அத்தியாயம் : 56
2787. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" مَثَلُ الْمُجَاهِدِ فِي سَبِيلِ اللَّهِ ـ وَاللَّهُ أَعْلَمُ بِمَنْ يُجَاهِدُ فِي سَبِيلِهِ ـ كَمَثَلِ الصَّائِمِ الْقَائِمِ، وَتَوَكَّلَ اللَّهُ لِلْمُجَاهِدِ فِي سَبِيلِهِ بِأَنْ يَتَوَفَّاهُ أَنْ يُدْخِلَهُ الْجَنَّةَ، أَوْ يَرْجِعَهُ سَالِمًا مَعَ أَجْرٍ أَوْ غَنِيمَةٍ "".
பாடம் : 2 இறைவழியில் உயிராலும் பொரு ளாலும் போராடும் இறைநம்பிக்கை யாளர்தான் மனிதர்களிலேயே சிறந்தவர். உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களை வதைக்கும் வேதனை’லிருந்து காப்பாற்றக்கூடிய ஒரு வணிக (பேர)த்தை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? (அதுதான்) நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் நம்பிக்கை கொள்வதும் இறைவழியில் உங்கள் உடைமைகளாலும் உயிர்களாலும் போராடுவதும் ஆகும். (இதனால் கிடைக்கும் பெரும் நன்மையை) நீங்கள் அறிவீர்களாயின் இதுவே உங்களுக்குச் சிறந்ததாகும். உங்கள் பாவங்களை மன்னித்து, இடையே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சொர்க்க(த் தோட்ட)ங்களில் உங்களை அவன் அனுமதிப்பான்; நிலையான சொர்க்கங்களில் சிறந்த வீடுகளையும் உங்களுக்கு அவன் அளிப்பான். அதுவே மகத்தான வெற்றியாகும். (61:10லி12)
2787. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைவழியில் போராடுபவரின் நிலை யானது, லிஉண்மையாகப் போராடுபவர் யார் என்பது அல்லாஹ்வுக்கே தெரியும்லி (அல்லாஹ்வைத்) தொழுதும், (அவனுக்காக) நோன்பு நோற்றும்வருபவரின் நிலையைப் போன்றதாகும்.

அல்லாஹ், தன் பாதையில் போராடுபவரின் உயிர்த் தியாகத்தை ஏற்று, அவரைச் சொர்க்கத்தில் அனுமதிக்கப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளான். அல்லது நன்மையுடனோ போர்ச் செல்வத்துடனோ அவரைத் திரும்பவைக்கப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 56
2788. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، عَنْ مَالِكٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّهُ سَمِعَهُ يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدْخُلُ عَلَى أُمِّ حَرَامٍ بِنْتِ مِلْحَانَ، فَتُطْعِمُهُ، وَكَانَتْ أُمُّ حَرَامٍ تَحْتَ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، فَدَخَلَ عَلَيْهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَأَطْعَمَتْهُ وَجَعَلَتْ تَفْلِي رَأْسَهُ، فَنَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ اسْتَيْقَظَ وَهُوَ يَضْحَكُ. قَالَتْ فَقُلْتُ وَمَا يُضْحِكُكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ "" نَاسٌ مِنْ أُمَّتِي عُرِضُوا عَلَىَّ، غُزَاةً فِي سَبِيلِ اللَّهِ، يَرْكَبُونَ ثَبَجَ هَذَا الْبَحْرِ، مُلُوكًا عَلَى الأَسِرَّةِ، أَوْ مِثْلُ الْمُلُوكِ عَلَى الأَسِرَّةِ "". شَكَّ إِسْحَاقُ. قَالَتْ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ. فَدَعَا لَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ وَضَعَ رَأْسَهُ، ثُمَّ اسْتَيْقَظَ وَهُوَ يَضْحَكُ فَقُلْتُ وَمَا يُضْحِكُكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ "" نَاسٌ مِنْ أُمَّتِي عُرِضُوا عَلَىَّ، غُزَاةً فِي سَبِيلِ اللَّهِ "". كَمَا قَالَ فِي الأَوَّلِ. قَالَتْ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ، ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ. قَالَ "" أَنْتِ مِنَ الأَوَّلِينَ "". فَرَكِبَتِ الْبَحْرَ فِي زَمَانِ مُعَاوِيَةَ بْنِ أَبِي سُفْيَانَ، فَصُرِعَتْ عَنْ دَابَّتِهَا حِينَ خَرَجَتْ مِنَ الْبَحْرِ، فَهَلَكَتْ.
பாடம் : 3 அறப்போர் புரியவும் அதில் உயிர்த் தியாகம் செய்யவும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நல்வாய்ப்பு வேண்டிப் பிரார்த்தித்தல் உமர் (ரலி) அவர்கள், ‘‘இறைவா! உன் தூதருடைய ஊரில் உயிர்த் தியாகம் செய்யும் வாய்ப்பை எனக்கு அளிப்பாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.6
2788. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் பின்த் மில்ஹான் (ரலி) அவர்களின் வீட்டிற்குச் செல்பவராக இருந்தார்கள்.7 அப்போது அவர் நபி (ஸல்) அவர்களுக்கு உணவு கொடுப்பார். உம்மு ஹராம் (ரலி) அவர்கள், உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்களின் மனைவியாக இருந்தார்கள்.

(இவ்வாறே ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அவர் நபி (ஸல்) அவர்களுக்கு உணவு கொடுத்துவிட்டு அவர்களின் தலையில் பேன்பார்க்கத் தொடங்கினார். அப்படியே நபி (ஸல்) அவர்கள் உறங்கிவிட்டார்கள்.

பிறகு சிரித்துக்கொண்டே கண் விழித் தார்கள். உம்மு ஹராம் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! ஏன் (இப்படிச்) சிரிக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘என் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் சிலர் எனக்குக் காட்டப்பட்டனர்; அவர்கள் இறைவழியில் அறப்போர் புரியும் வீரர்களாவர். அவர்கள் இந்தக் கடலின் முதுகில் கட்டில்களில் (சாய்ந்து) அமர்ந்திருக்கும் மன்னர்களாக லிஅல்லது கட்டில்களில் அமர்ந்திருக்கும் மன்னர்களைப் போன்றுலி ஏறிச்செல்கின் றார்கள்” என்று பதிலளித்தார்கள்.

அதற்கு உம்மு ஹராம் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் ஒருத்தியாக என்னை ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று கூறினார்கள். அவருக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.

பிறகு தமது தலையை(த் தலையணை யில்) வைத்(து உறங்க ஆரம்பித்)தார்கள்; பிறகு சிரித்தபடியே விழித்தெழுந்தார்கள். அப்போது உம்மு ஹராம் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! ஏன் சிரிக் கிறீர்கள்” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘என் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் சிலர், இறைவழியில் அறப்போர் புரிபவர்களாக எனக்குக் காட்டப்பட்டனர்....” என்று முன்பு போலவே கூறினார்கள்.

உம்மு ஹராம் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் ஒருத்தி யாக என்னை ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் (அறப்போருக்காகக் கடலில்) முதன்முதலாகப் பயணிப்பவர்களில் ஒருவராக இருப்பீர்கள்” என்று கூறினார்கள்.

அவ்வாறே, முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்கள் (கிழக்கு ரோம்மீது போர் புரியச் சென்ற) காலத்தில் உம்மு ஹராம் (ரலி) அவர்களும் கடல் பயணம் மேற்கொண்டார்கள். பிறகு கடலிலிருந்து புறப்பட்டு (கரைக்கு) வந்தபோது, தமது வாகனத்திலிருந்து கீழே விழுந்து இறந்து போனார்கள்.

அத்தியாயம் : 56
2790. حَدَّثَنَا يَحْيَى بْنُ صَالِحٍ، حَدَّثَنَا فُلَيْحٌ، عَنْ هِلاَلِ بْنِ عَلِيٍّ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَنْ آمَنَ بِاللَّهِ وَبِرَسُولِهِ وَأَقَامَ الصَّلاَةَ وَصَامَ رَمَضَانَ، كَانَ حَقًّا عَلَى اللَّهِ أَنْ يُدْخِلَهُ الْجَنَّةَ جَاهَدَ فِي سَبِيلِ اللَّهِ، أَوْ جَلَسَ فِي أَرْضِهِ الَّتِي وُلِدَ فِيهَا "". فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ أَفَلاَ نُبَشِّرُ النَّاسَ. قَالَ "" إِنَّ فِي الْجَنَّةِ مِائَةَ دَرَجَةٍ أَعَدَّهَا اللَّهُ لِلْمُجَاهِدِينَ فِي سَبِيلِ اللَّهِ، مَا بَيْنَ الدَّرَجَتَيْنِ كَمَا بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ، فَإِذَا سَأَلْتُمُ اللَّهَ فَاسْأَلُوهُ الْفِرْدَوْسَ، فَإِنَّهُ أَوْسَطُ الْجَنَّةِ وَأَعْلَى الْجَنَّةِ، أُرَاهُ فَوْقَهُ عَرْشُ الرَّحْمَنِ، وَمِنْهُ تَفَجَّرُ أَنْهَارُ الْجَنَّةِ "". قَالَ مُحَمَّدُ بْنُ فُلَيْحٍ عَنْ أَبِيهِ "" وَفَوْقَهُ عَرْشُ الرَّحْمَنِ "".
பாடம் : 4 இறைவழியில் அறப் போர் புரிபவர்களின் தகுதிகள் (பாதை என்பதைக் குறிக்க) மூலத்தில் யிசபீல்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இச்சொல் ஆண்பாலாகவும் பெண் பாலாகவும் பயன்படுத்தப்படுகிறது. அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறு கிறேன்: ‘அறப்போராளி’ என்பதை யிஃகாஸ்’ என்பர். இதன் பன்மை யிஃகுஸ்ஸு’ என்ப தாகும். ‘‘அவர்கள் அல்லாஹ்விடம் பலதரப்பட்டவர்கள் ஆவர்” (3:163) என்ப தற்கு ‘‘அவர்களுக்கு அல்லாஹ்விடம் பல தரங்கள் உண்டு” என்பது பொருளாகும்.
2790. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொண்டு, தொழுகையைக் கடைப்பிடித்து, ரமளானில் நோன்பும் நோற்ற மனிதரைச் சொர்க்கத்தில் அனுமதிப்பது அல்லாஹ்வின் மீது கடமையாகிவிட்டது; அவர் இறைவழியில் அறப்போர் புரிந்தாலும் சரி; அல்லது அவர் பிறந்த பூமியில் உட்கார்ந்துகொண்டாலும் சரி” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது, ‘‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் மக்களுக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கலாமா?” என்று (நபித்தோழர்கள்) கேட்டனர். அதற்கு அவர்கள், ‘‘சொர்க் கத்தில் நூறு தரங்கள் உள்ளன. அவற்றை அல்லாஹ், தமது பாதையில் அறப்போர் புரிபவர்களுக்காகத் தயார்படுத்திவைத்துள்ளான். இரு தரங்களுக்கிடையே வானத்திற்கும் பூமிக்கும் இடையிலுள்ள தைப் போன்ற இடைவெளி உள்ளது. நீங்கள் அல்லாஹ்விடம் கேட்டால், யிஃபிர்தவ்ஸ்’ எனும் (சொர்க்கத்தின்) தரத்தையே கேளுங்கள்; ஏனெனில், அதுவே சொர்க்கத்தின் மிகச் சிறந்த தரமும் மிக உயர்ந்த தரமும் ஆகும்” என்று கூறினார்கள்.

(அறிவிப்பாளரான யஹ்யா பின் ஸாலிஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:)

‘‘அதற்குமேலே கருணையாள(னான இறைவ)னின் அரியணை (அர்ஷ்) இருக்கிறது. அதிலிருந்தே சொர்க்கத்தின் ஆறுகள் பாய்கின்ற”’ என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியதாகக் கருதுகிறேன்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் முஹம்மத் பின் ஃபுலைஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘‘அதற்குமேலே ரஹ்மானின் அரியணை இருக்கிறது” என்று (நபி (ஸல்) அவர்கள் கூறியதாகச் சந்தேகத் தொனியின்றி) அறிவிக்கப்பட் டுள்ளது.


அத்தியாயம் : 56
2791. حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا جَرِيرٌ، حَدَّثَنَا أَبُو رَجَاءٍ، عَنْ سَمُرَةَ، قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" رَأَيْتُ اللَّيْلَةَ رَجُلَيْنِ أَتَيَانِي فَصَعِدَا بِي الشَّجَرَةَ، فَأَدْخَلاَنِي دَارًا هِيَ أَحْسَنُ وَأَفْضَلُ، لَمْ أَرَ قَطُّ أَحْسَنَ مِنْهَا قَالاَ أَمَّا هَذِهِ الدَّارُ فَدَارُ الشُّهَدَاءِ "".
பாடம் : 4 இறைவழியில் அறப் போர் புரிபவர்களின் தகுதிகள் (பாதை என்பதைக் குறிக்க) மூலத்தில் யிசபீல்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இச்சொல் ஆண்பாலாகவும் பெண் பாலாகவும் பயன்படுத்தப்படுகிறது. அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறு கிறேன்: ‘அறப்போராளி’ என்பதை யிஃகாஸ்’ என்பர். இதன் பன்மை யிஃகுஸ்ஸு’ என்ப தாகும். ‘‘அவர்கள் அல்லாஹ்விடம் பலதரப்பட்டவர்கள் ஆவர்” (3:163) என்ப தற்கு ‘‘அவர்களுக்கு அல்லாஹ்விடம் பல தரங்கள் உண்டு” என்பது பொருளாகும்.
2791. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இன்றிரவு இரண்டு பேரைக் (கனவில்) கண்டேன்; அவர்கள் இருவரும் என்னிடம் வந்து, என்னுடன் ஒரு மரத்தின் மீது ஏறி அழகான, சிறந்த ஒரு வீட்டினுள் புகச்செய்தார்கள். அதைவிட அழகான ஒரு வீட்டை நான் பார்த்ததே யில்லை; (அவர்களில் ஒருவர்,) ‘‘இந்த வீடு இறைவழியில் உயிர்த் தியாகம் புரிந்தவர்களின் வீடாகும்” என்று சொன்னார்.

அத்தியாயம் : 56
2792. حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لَغَدْوَةٌ فِي سَبِيلِ اللَّهِ أَوْ رَوْحَةٌ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا "".
பாடம் : 5 இறைவழியில் காலையிலும் மாலையிலும் (சிறிது நேரம் போரிடச்) செல்வதும் சொர்க்கத்தில் ஒரு வில்லின் அளவுக்கு இடம் கிடைப்பதும்
2792. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

இறைவழியில் காலை நேரத்தில் சிறிது நேரம், அல்லது ஒரு மாலை நேரத்தில் சிறிது நேரம் (போர் புரியச்) செல்வது உலகத்தையும் அதிலுள்ள பொருட்களையும் விடச் சிறந்ததாகும்.

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 56
2793. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُلَيْحٍ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ هِلاَلِ بْنِ عَلِيٍّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي عَمْرَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ""لَقَابُ قَوْسٍ فِي الْجَنَّةِ خَيْرٌ مِمَّا تَطْلُعُ عَلَيْهِ الشَّمْسُ وَتَغْرُبُ "". وَقَالَ "" لَغَدْوَةٌ أَوْ رَوْحَةٌ فِي سَبِيلِ اللَّهِ خَيْرٌ مِمَّا تَطْلُعُ عَلَيْهِ الشَّمْسُ وَتَغْرُبُ "".
பாடம் : 5 இறைவழியில் காலையிலும் மாலையிலும் (சிறிது நேரம் போரிடச்) செல்வதும் சொர்க்கத்தில் ஒரு வில்லின் அளவுக்கு இடம் கிடைப்பதும்
2793. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

சொர்க்கத்தில் ஒரு வில்லின் அளவுக்கு இடம் கிடைப்பதானது, சூரியன் எதன் மீது உதித்து மறைகின்றதோ அ(ந்த உலகத்)தைவிடச் சிறந்ததாகும். மேலும், அல்லாஹ் வின் பாதையில் ஒரு காலை நேரத்தில் சிறிது நேரம் (போர் புரியச்) செல்வது, அல்லது ஒரு மாலை நேரத்தில் சிறிது நேரம் (போர் புரியச்) செல்வது சூரியன் எதன் மீது உதித்து மறைகின்றதோ அ(ந்த உலகத்)தைவிடச் சிறந்ததாகும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 56
2794. حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" الرَّوْحَةُ وَالْغَدْوَةُ فِي سَبِيلِ اللَّهِ أَفْضَلُ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا "".
பாடம் : 5 இறைவழியில் காலையிலும் மாலையிலும் (சிறிது நேரம் போரிடச்) செல்வதும் சொர்க்கத்தில் ஒரு வில்லின் அளவுக்கு இடம் கிடைப்பதும்
2794. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

இறைவழியில் காலையிலும் மாலை யிலும் சிறிது நேரம் (போர் புரியச்) செல்வது உலகத்தைவிடவும் அதிலுள்ள பொருட்களைவிடவும் சிறந்ததாகும்.

இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 56
2795. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ حُمَيْدٍ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَا مِنْ عَبْدٍ يَمُوتُ لَهُ عِنْدَ اللَّهِ خَيْرٌ، يَسُرُّهُ أَنْ يَرْجِعَ إِلَى الدُّنْيَا، وَأَنَّ لَهُ الدُّنْيَا وَمَا فِيهَا، إِلاَّ الشَّهِيدَ، لِمَا يَرَى مِنْ فَضْلِ الشَّهَادَةِ، فَإِنَّهُ يَسُرُّهُ أَنْ يَرْجِعَ إِلَى الدُّنْيَا فَيُقْتَلَ مَرَّةً أُخْرَى "".
பாடம் : 6 யிஹூருல் ஈன்' எனும் அகன்ற விழி களையுடைய சொர்க்கக் கன்னி யரும் அவர்களின் தன்மையும் யிஹூருல் ஈன்’ எனும் சொல்லுக்கு, (அக்கன்னியரைக் காணும்) கண்கள் திகைத்துவிடும் என்பது பொருளாகும். அவர்களின் கருவிழியும் வெண்விழியும் அடர்த்தியான நிறம் கொண்டிருக்கும. (44:54; 53:30 ஆகிய வசனங்களில் இடம் பெற்றுள்ள) ‘‘அவர்களுக்கு ஹூருல் ஈன்களைத் துணைகளாக்குவோம்” என்பற்கு, ‘அவர்களுக்கு மணமுடித்துத் தருவோம்’ என்பது பொருளாகும்.
2795. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

அல்லாஹ்விடம் நற்பலன் பெறுபவராக இறந்துபோகின்ற எந்த (நல்ல) அடியாரும் இந்த உலகமும் அதிலுள்ளவை அனைத்தும் அவருக்குக் கிடைக்கும் என்றிருந்தாலும்கூட உலகிற்குத் திரும்பிவர விரும்பமாட்டார்; இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவரைத் தவிர; ஏனெனில், உயிர்த் தியாகத்தின் சிறப்பை (மறுமையில்) அவர் காண்கின்றார். ஆகவே, இந்த உலகிற்கு மீண்டும் வந்து மறுபடியும் ஒருமுறை (இறைவழியில் போரிட்டுக்) கொல்லப்படுவதை அவர் விரும்புவார்.

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 56
2796. وَسَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم "" لَرَوْحَةٌ فِي سَبِيلِ اللَّهِ أَوْ غَدْوَةٌ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا، وَلَقَابُ قَوْسِ أَحَدِكُمْ مِنَ الْجَنَّةِ أَوْ مَوْضِعُ قِيدٍ ـ يَعْنِي سَوْطَهُ ـ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا، وَلَوْ أَنَّ امْرَأَةً مِنْ أَهْلِ الْجَنَّةِ اطَّلَعَتْ إِلَى أَهْلِ الأَرْضِ لأَضَاءَتْ مَا بَيْنَهُمَا وَلَمَلأَتْهُ رِيحًا، وَلَنَصِيفُهَا عَلَى رَأْسِهَا خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا "".
பாடம் : 6 யிஹூருல் ஈன்' எனும் அகன்ற விழி களையுடைய சொர்க்கக் கன்னி யரும் அவர்களின் தன்மையும் யிஹூருல் ஈன்’ எனும் சொல்லுக்கு, (அக்கன்னியரைக் காணும்) கண்கள் திகைத்துவிடும் என்பது பொருளாகும். அவர்களின் கருவிழியும் வெண்விழியும் அடர்த்தியான நிறம் கொண்டிருக்கும. (44:54; 53:30 ஆகிய வசனங்களில் இடம் பெற்றுள்ள) ‘‘அவர்களுக்கு ஹூருல் ஈன்களைத் துணைகளாக்குவோம்” என்பற்கு, ‘அவர்களுக்கு மணமுடித்துத் தருவோம்’ என்பது பொருளாகும்.
2796. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைவழியில் காலையில் சிறிது நேரம், அல்லது மாலையில் சிறிது நேரம் (போர் புரியச்) செல்வது உலகத்தையும் அதிலுள்ள பொருட்களையும்விடச் சிறந்தது. உங்களில் ஒருவருடைய வில்லின் அளவுக்குச் சமமான, அல்லது ஒரு சாட்டையளவுக்குச் சமமான இடம் சொர்க் கத்தில் கிடைப்பதானது, உலகத்தையும் அதிலுள்ளவற்றையும்விடச் சிறந்தது.

சொர்க்கவாசிகளில் (ஹூருல் ஈன் களில்) ஒரு பெண் உலகத்தாரிடையே தோன்றினால், வானத்திற்கும் பூமிக்கு மிடையே உள்ள அனைத்தையும் அவள் ஒளிறச்செய்துவிடுவாள்; பூமியை நறுமணத்தால் நிரப்பிவிடுவாள். அவளது தலையிலுள்ள முக்காடு உலகத்தையும் அதிலுள்ளவற்றையும்விடச் சிறந்ததாகும்.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 56
2797. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْلاَ أَنَّ رِجَالاً مِنَ الْمُؤْمِنِينَ لاَ تَطِيبُ أَنْفُسُهُمْ أَنْ يَتَخَلَّفُوا عَنِّي، وَلاَ أَجِدُ مَا أَحْمِلُهُمْ عَلَيْهِ، مَا تَخَلَّفْتُ عَنْ سَرِيَّةٍ تَغْزُو فِي سَبِيلِ اللَّهِ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوَدِدْتُ أَنِّي أُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ ثُمَّ أُحْيَا، ثُمَّ أُقْتَلُ ثُمَّ أُحْيَا، ثُمَّ أُقْتَلُ ثُمَّ أُحْيَا، ثُمَّ أُقْتَلُ "".
பாடம் : 7 உயிர்த் தியாகத்தை விரும்புதல்
2797. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

என் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! இறைநம்பிக்கை யாளர்களில் சிலரை ஏற்றிச்செல்ல எனக்கு வாகனமும் கிடைக்கவில்லை; அவர்கள் என்னைவிட்டுப் பின்தங்கிவிடுவது அவர்களின் மனதுக்கு மகிழ்ச்சியும் அளிக் காது என்பது (மட்டும்) இல்லையாயின், இறைவழியில் (போருக்குப்) புறப்படும் எந்தச் சிறு படையுடனும் நான் செல்லாமல் (ஊரில்) இருக்கமாட்டேன்8.

என் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! நான் அல்லாஹ் வின் பாதையில் கொல்லப்பட்டு, பிறகு உயிராக்கப்பட்டு, மீண்டும் கொல்லப்பட்டு, பிறகு உயிராக்கப்பட்டு, மீண்டும் கொல்லப்பட்டு, பிறகு உயிராக்கப்பட்டு, மீண்டும் கொல்லப்பட வேண்டும் என்றே விரும்புகிறேன்.9



இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 56
2798. حَدَّثَنَا يُوسُفُ بْنُ يَعْقُوبَ الصَّفَّارُ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنْ أَيُّوبَ، عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ خَطَبَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ "" أَخَذَ الرَّايَةَ زَيْدٌ فَأُصِيبَ، ثُمَّ أَخَذَهَا جَعْفَرٌ فَأُصِيبَ، ثُمَّ أَخَذَهَا عَبْدُ اللَّهِ بْنُ رَوَاحَةَ فَأُصِيبَ، ثُمَّ أَخَذَهَا خَالِدُ بْنُ الْوَلِيدِ عَنْ غَيْرِ إِمْرَةٍ فَفُتِحَ لَهُ ـ وَقَالَ ـ مَا يَسُرُّنَا أَنَّهُمْ عِنْدَنَا "". قَالَ أَيُّوبُ أَوْ قَالَ "" مَا يَسُرُّهُمْ أَنَّهُمْ عِنْدَنَا "". وَعَيْنَاهُ تَذْرِفَانِ.
பாடம் : 7 உயிர்த் தியாகத்தை விரும்புதல்
2798. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் உரையாற்றினார் கள். அப்போது (மூத்தா போர்க் களத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளை இங்கிருந்து கொண்டே நேரில் காண்பதுபோல் கூறலானார்கள்:) ‘‘ஸைத் பின் அல்ஹாரிஸா கொடியைப் பிடித்திருந்தார்; இப்போது அவர் கொல்லப்பட்டுவிட்டார். பிறகு ஜஅஃபர் அதைப் பற்றினார்; அவரும் கொல்லப்பட்டுவிட்டார். பிறகு அதை அப்துல்லாஹ் பின் ரவாஹா பிடித்தார்; இப்போது அவரும் கொல்லப்பட்டுவிட்டார். பிறகு காலித் பின் அல்வலீத் (தளபதியாக) நியமிக்கப்படாமலேயே அதைப் பிடித்தார். அவருக்கு வெற்றியளிக்கப்பட்டுவிட்டது.10

(வீரமரணத்தால் அவர்கள் பெற்ற பெரும்பேற்றினை நாம் அறிந்தபிறகும்) அவர்கள் நம்முடன் இருப்பது நமக்கு மகிழ்ச்சியளிக்காது.

லிஅறிவிப்பாளர் அய்யூப் (ரஹ்) அவர்கள், அல்லது, ‘அவர்கள் நம்முடன் இருப்பது அவர்களுக்கே மகிழ்ச்சியளிக்காது’ என்றும் அறிவிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறுகிறார்லி

இதைக் கூறியபோது நபி (ஸல்) அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

அத்தியாயம் : 56
2799. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ حَدَّثَنِي اللَّيْثُ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ خَالَتِهِ أُمِّ حَرَامٍ بِنْتِ مِلْحَانَ، قَالَتْ نَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَوْمًا قَرِيبًا مِنِّي، ثُمَّ اسْتَيْقَظَ يَتَبَسَّمُ. فَقُلْتُ مَا أَضْحَكَكَ قَالَ "" أُنَاسٌ مِنْ أُمَّتِي عُرِضُوا عَلَىَّ يَرْكَبُونَ هَذَا الْبَحْرَ الأَخْضَرَ، كَالْمُلُوكِ عَلَى الأَسِرَّةِ "". قَالَتْ فَادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ. فَدَعَا لَهَا، ثُمَّ نَامَ الثَّانِيَةَ، فَفَعَلَ مِثْلَهَا، فَقَالَتْ مِثْلَ قَوْلِهَا، فَأَجَابَهَا مِثْلَهَا. فَقَالَتِ ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ. فَقَالَ "" أَنْتِ مِنَ الأَوَّلِينَ "". فَخَرَجَتْ مَعَ زَوْجِهَا عُبَادَةَ بْنِ الصَّامِتِ غَازِيًا أَوَّلَ مَا رَكِبَ الْمُسْلِمُونَ الْبَحْرَ مَعَ مُعَاوِيَةَ، فَلَمَّا انْصَرَفُوا مِنْ غَزْوِهِمْ قَافِلِينَ فَنَزَلُوا الشَّأْمَ، فَقُرِّبَتْ إِلَيْهَا دَابَّةٌ لِتَرْكَبَهَا فَصَرَعَتْهَا فَمَاتَتْ.
பாடம் : 8 இறைவழியில் (போரிடச்) சென்று கீழே விழுந்து இறந்துபோனவரும் உயிர்த் தியாகிகளில் ஒருவரே. வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: யார் தமது இல்லத்திலிருந்து புறப்பட்டு அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் புலம்பெயர்ந்து செல்லும்போது, அவரை இறப்பு சந்தித்துவிடுகிறதோ அவருக்குரிய பிரதிபலன் அல்லாஹ்விடம் உறுதியாகிவிட்டது. (4:100) (இங்கு யிஉறுதியாகிவிட்டது’ என்பதைக் குறிக்க மூலத்தில்) யிவகஅ’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு (யிநிகழ்ந்து விட்டது’ என்பது சொற்பொருளாக இருப்பினும் இங்கு) யிஉறுதியாகிவிட்டது (வஜப) என்பதே பொருளாகும்.
2799. உம்மு ஹராம் பின்த் மில்ஹான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் எனக்கு அருகில் உறங்கினார்கள். பிறகு புன்னகைத்துக்கொண்டே கண்விழித் தார்கள். நான், ‘‘ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘என் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் சிலர் இந்தப் பசுங்கடலில் கட்டில்களில் (சாய்ந்து) அமர்ந்திருக்கும் அரசர்களைப் போன்று (கப்பல்களில் ஏறிப்) பயணம் செய்துகொண்டிருப்பதாக எனக்கு (கனவில்) காட்டப்பட்டது” என்று கூறினார்கள்.

நான், ‘‘அவர்களில் ஒருத்தியாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று சொன்னேன். (அவ்வாறே) அவர்கள் எனக்காகப் பிரார்த்தித்தார்கள். பிறகு இரண்டாம் முறையாக உறங்கினார்கள். முன்பு செய்ததைப் போன்றே செய்தார்கள். நானும் முன்பு கேட்டதைப் போன்றே கேட்டேன். முன்பு பதில் சொன்னதைப் போலவே அவர்களும் பதில் சொன்னார் கள். நான், ‘‘அவர்களில் ஒருத்தியாக என்னை ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று கூறினேன். அவர்கள், ‘‘முதன் முதலாகச் செல்பவர் களில் நீங்களும் ஒருவர்தான்” என்று கூறினார்கள்.

(உம்மு ஹராம் (ரலி) அவர்களின் சகோதரி மகன் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் தெரிவிக்கிறார்கள்:)

அவ்வாறே, (தளபதி) முஆவியா (ரலி) அவர்களுடன் முஸ்லிம்கள் (கிழக்கு ரோமில் அறப்போர் புரிய) கடலில் பயணம் செய்த முதல் படையினரில் ஓர் அறப்போர் வீரராக, தம் கணவர் உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்களுடன் உம்மு ஹராம் (ரலி) அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். தமது படையெடுப்பிலிருந்து அவர்கள் திரும்பி வந்தபோது ஷாம் (சிரியா) நாட்டில் இறங்கினார்கள்.

உம்மு ஹராம் (ரலி) அவர்கள் ஏறிக்கொள்வதற்காக அவர்களுக்கருகே வாகனம் ஒன்று கொண்டுவரப்பட்டது. (அவர்கள் அதில் ஏறிக்கொள்ள) அது அவர்களைக் கீழே தள்ளிவிட்டது; அதனால் அவர்கள் இறந்துவிட்டார்கள்.11

அத்தியாயம் : 56
2801. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ الْحَوْضِيُّ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ إِسْحَاقَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ بَعَثَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَقْوَامًا مِنْ بَنِي سُلَيْمٍ إِلَى بَنِي عَامِرٍ فِي سَبْعِينَ، فَلَمَّا قَدِمُوا، قَالَ لَهُمْ خَالِي أَتَقَدَّمُكُمْ، فَإِنْ أَمَّنُونِي حَتَّى أُبَلِّغَهُمْ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَإِلاَّ كُنْتُمْ مِنِّي قَرِيبًا. فَتَقَدَّمَ، فَأَمَّنُوهُ، فَبَيْنَمَا يُحَدِّثُهُمْ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم إِذْ أَوْمَئُوا إِلَى رَجُلٍ مِنْهُمْ، فَطَعَنَهُ فَأَنْفَذَهُ فَقَالَ اللَّهُ أَكْبَرُ، فُزْتُ وَرَبِّ الْكَعْبَةِ. ثُمَّ مَالُوا عَلَى بَقِيَّةِ أَصْحَابِهِ فَقَتَلُوهُمْ، إِلاَّ رَجُلاً أَعْرَجَ صَعِدَ الْجَبَلَ. قَالَ هَمَّامٌ فَأُرَاهُ آخَرَ مَعَهُ، فَأَخْبَرَ جِبْرِيلُ ـ عَلَيْهِ السَّلاَمُ ـ النَّبِيَّ صلى الله عليه وسلم أَنَّهُمْ قَدْ لَقُوا رَبَّهُمْ، فَرَضِيَ عَنْهُمْ وَأَرْضَاهُمْ، فَكُنَّا نَقْرَأُ أَنْ بَلِّغُوا قَوْمَنَا أَنْ قَدْ لَقِينَا رَبَّنَا فَرَضِيَ عَنَّا وَأَرْضَانَا. ثُمَّ نُسِخَ بَعْدُ، فَدَعَا عَلَيْهِمْ أَرْبَعِينَ صَبَاحًا، عَلَى رِعْلٍ وَذَكْوَانَ وَبَنِي لِحْيَانَ وَبَنِي عُصَيَّةَ الَّذِينَ عَصَوُا اللَّهَ وَرَسُولَهُ صلى الله عليه وسلم.
பாடம் : 9 இறைவழியில் துன்புறுத்தப்படுபவர்
2801. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பனூ சுலைம் குலத்தார் சிலருடன் எழுபது பேர் (கொண்ட வேத அறிஞர்களான அன்சாரி)களை பனூ ஆமிர் குலத்தாரிடம் (இஸ்லாத்தை எடுத்துரைப்பதற்காக) அனுப்பினார்கள். அவர்கள் (அங்கு) சென்றபோது என் தாய்மாமன் (ஹராம் பின் மில்ஹான், தம்முடன் வந்த தோழர்களிடம்), ‘‘உங்களுக்கு முன்னால் நான் போகிறேன். அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் குறித்து நான் எடுத்துரைத்திட (அவர்கள் என்னை அனுமதித்து) எனக்குப் பாதுகாப்பளித்தால் சரி; இல்லையென்றால் நீங்கள் என் (பின்னால் என்) அருகிலேயே இருங்கள்” என்று கூறிவிட்டு சற்று முன்னால் சென் றார். அவர்கள் அவருக்குப் பாதுகாப்ப ளித்தார்கள்.

அவர் நபி (ஸல்) அவர்களைப் பற்றி அவர்களுக்கு எடுத்துரைத்துக்கொண்டி ருந்தபோது, தங்களில் ஒருவரைப் பார்த்து அவர்கள் சைகை செய்தார்கள். அவன் என் தாய் மாமனை (ஈட்டியால்) குத்தி அவரைக் கொன்றுவிட்டான். (உயிர் பிரியும் வேளையில்) அவர், ‘‘அல்லாஹ் மிகப் பெரியவன். கஅபாவின் அதிபதிமீது சத்தியமாக! நான் வெற்றி பெற்றுவிட்டேன்” என்று கூறினார். பிறகு, அவருடைய எஞ்சிய தோழர்களின் மீதும் பாய்ந்து அவர்களையும் கொன்றுவிட்டார்கள்; மலையின் மீது ஏறிக்கொண்ட கால் ஊனமுற்ற ஒரு மனிதரைத் தவிர.

அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹம்மாம் (ரஹ்) அவர்கள், ‘‘கால் ஊனமுற்ற அந்த மனிதருடன் மற்றொருவரும் (தப்பித்துக்கொண்டார்) என்று (அறிவிக்கப்பட்ட தாகவே) நான் கருதுகிறேன்” என்று கூறுகிறார்.

(வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு, நீங்கள் அனுப்பிய போதகர்கள் தங்கள் இறைவனைச் சந்தித்துவிட்டனர். அவர்களைக் குறித்து அவன் திருப்தியடைந்தான். அவர்களும் (தாம் பெற்ற நற்பலனைக் குறித்து) திருப்தி கொள்ளும்படிச் செய்தான் என்று அறிவித்தார்கள். நாங்கள் (அப்போது அருளப்பட்ட), ‘‘நாங்கள் எங்கள் இறைவனைச் சந்தித்துவிட்டோம். எங்களைக் குறித்து அவன் திருப்தியடைந்துவிட்டான். தன் (வெகுமதியி)னைக் குறித்து எங்களைத் திருப்தியடையும்படி அவன் செய்தான் என்று எங்கள் சமுதாயத்தாரிடம் தெரிவித்துவிடுங்கள்” என்னும் இறைவசனத்தை ஓதிக்கொண்டிருந்தோம். அது பின்னாளில் (இறைவனால்) நீக்கப்பட்டுவிட்டது.

நபி (ஸல்) அவர்கள் (பனூ சுலைம் குலத்தைச் சேர்ந்த) ரிஅல், தக்வான், பனூ லிஹ்யான், அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் மாறு செய்த பனூ உஸய்யா ஆகிய கூட்டத்தாருக்கெதிராக நாற்பது நாட்கள் காலை (தொழுகை) நேரங்களில் பிரார்த்தனை செய்தார்கள்.12


அத்தியாயம் : 56