1881. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا الْوَلِيدُ، حَدَّثَنَا أَبُو عَمْرٍو، حَدَّثَنَا إِسْحَاقُ، حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لَيْسَ مِنْ بَلَدٍ إِلاَّ سَيَطَؤُهُ الدَّجَّالُ، إِلاَّ مَكَّةَ وَالْمَدِينَةَ، لَيْسَ لَهُ مِنْ نِقَابِهَا نَقْبٌ إِلاَّ عَلَيْهِ الْمَلاَئِكَةُ صَافِّينَ، يَحْرُسُونَهَا، ثُمَّ تَرْجُفُ الْمَدِينَةُ بِأَهْلِهَا ثَلاَثَ رَجَفَاتٍ، فَيُخْرِجُ اللَّهُ كُلَّ كَافِرٍ وَمُنَافِقٍ "".
பாடம் : 9 தஜ்ஜால் மதீனாவில் நுழையமாட்டான்.9
1881. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மக்காவையும் மதீனாவையும் தவிர தஜ்ஜால் கால்வைக்காத எந்த ஊரும் இராது. மதீனாவின் எந்தவொரு நுழை வாயிலானாலும் அங்கே வானவர்கள் அணிவகுத்து நின்று அதைக் காவல் புரிந்துகொண்டு இருப்பார்கள்.

பின்னர் மதீனா, தனது குடிமக்களுடன் மூன்று முறை குலுங்கும்; அப்போது ஒவ்வோர் இறைமறுப்பாளனையும் நய வஞ்சகனையும் அல்லாஹ் (மதீனா விலிருந்து) வெளியேற்றிவிடுவான்.

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 29
1882. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ـ رضى الله عنه ـ قَالَ حَدَّثَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَدِيثًا طَوِيلاً عَنِ الدَّجَّالِ، فَكَانَ فِيمَا حَدَّثَنَا بِهِ أَنْ قَالَ "" يَأْتِي الدَّجَّالُ ـ وَهُوَ مُحَرَّمٌ عَلَيْهِ أَنْ يَدْخُلَ نِقَابَ الْمَدِينَةِ ـ بَعْضَ السِّبَاخِ الَّتِي بِالْمَدِينَةِ، فَيَخْرُجُ إِلَيْهِ يَوْمَئِذٍ رَجُلٌ، هُوَ خَيْرُ النَّاسِ ـ أَوْ مِنْ خَيْرِ النَّاسِ ـ فَيَقُولُ أَشْهَدُ أَنَّكَ الدَّجَّالُ، الَّذِي حَدَّثَنَا عَنْكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَدِيثَهُ، فَيَقُولُ الدَّجَّالُ أَرَأَيْتَ إِنْ قَتَلْتُ هَذَا ثُمَّ أَحْيَيْتُهُ، هَلْ تَشُكُّونَ فِي الأَمْرِ فَيَقُولُونَ لاَ. فَيَقْتُلُهُ، ثُمَّ يُحْيِيهِ فَيَقُولُ حِينَ يُحْيِيهِ وَاللَّهِ مَا كُنْتُ قَطُّ أَشَدَّ بَصِيرَةً مِنِّي الْيَوْمَ، فَيَقُولُ الدَّجَّالُ أَقْتُلُهُ فَلاَ أُسَلَّطُ عَلَيْهِ "".
பாடம் : 9 தஜ்ஜால் மதீனாவில் நுழையமாட்டான்.9
1882. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு நாள்) தஜ்ஜாலைப் பற்றி நீண்டதொரு ஹதீஸை எங்களுக்கு அறிவித்தார்கள். எங்களுக்கு அவர்கள் அறிவித்தவற்றில் பின்வரும் தகவலும் அடங்கும்:

மதீனாவின் நுழைவாயில்களில் நுழை வது தஜ்ஜாலுக்குத் தடை செய்யப்பட்டி ருக்கும் நிலையில் தஜ்ஜால் வருவான். மதீனா(வை அடுத்துள்ள) உவர் நிலம் ஒன்றில் அவன் தங்குவான்; அவனை நோக்கி மக்களிலேயே சிறந்த ஒரு மனிதர் புறப்படுவார்; அவர் அவனிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எவனது செய்தியை எங்களுக்கு முன்னறி விப்புச் செய்தார்களோ அந்த தஜ்ஜால் நீதான் என்று நான் உறுதிகூறுகிறேன்” என்பார்.

அப்போது தஜ்ஜால் (மக்களை நோக்கி), “நான் இவனைக் கொன்று, பிறகு உயிர்ப்பித்தால் (நான்தான் இறைவன் எனும்) இந்த விஷயத்தில் நீங்கள் சந்தேகம்கொள்வீர்களா?” என்று கேட்பான். மக்கள் “இல்லை” என்பார்கள்.

உடனே, அவன் அவரைக் கொன்று, பின்னர் உயிர்ப்பிப்பான். அப்போது அந்த (நல்ல) மனிதர் உயிர்பெற்றதும், “அல்லாஹ்வின் மீதாணையாக! இன்றைய தினத்தைவிடத் தெளிவாக உன்னைப் பற்றி நான் (இதற்குமுன்) ஒருபோதும் அறிந்திருக்கவில்லை” என்று கூறுவார். தஜ்ஜால், “நான் இவரைக் கொல்வேன்” என்பான். ஆனால், அவர்மீது அவனுக்கு அதிகாரம் வழங்கப்படாது.

அத்தியாயம் : 29
1883. حَدَّثَنَا عَمْرُو بْنُ عَبَّاسٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ ـ رضى الله عنه ـ جَاءَ أَعْرَابِيٌّ النَّبِيَّ صلى الله عليه وسلم فَبَايَعَهُ عَلَى الإِسْلاَمِ، فَجَاءَ مِنَ الْغَدِ مَحْمُومًا، فَقَالَ أَقِلْنِي، فَأَبَى ثَلاَثَ مِرَارٍ، فَقَالَ "" الْمَدِينَةُ كَالْكِيرِ، تَنْفِي خَبَثَهَا، وَيَنْصَعُ طَيِّبُهَا "".
பாடம் : 10 மதீனா தீயவர்களை வெளியேற்றும்.
1883. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தை ஏற்பதாக விசுவாசப் பிரமாணம் செய்தார். மறுநாள் அவர் காய்ச்சலுடன் வந்து, “(இஸ்லாத்தை ஏற்கும் விசுவாசப் பிரமாணத்திலிருந்து) என்னை நீக்கிவிடுங்கள்” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை அதை மறுத்தார்கள். (எனவே, அவர் மதீனாவை விட்டு வெளியேறினார்.)

அப்போது நபி (ஸல்) அவர்கள், “மதீனா, (கொல்லனின்) உலையைப் போன்றதாகும். அது தன்னிலுள்ள தீயவர் களை வெளியேற்றிவிடும்; அதிலுள்ள நல்லவர்கள் தூய்மை பெற்றுத் திகழ்வார் கள்” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 29
1884. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، قَالَ سَمِعْتُ زَيْدَ بْنَ ثَابِتٍ ـ رضى الله عنه ـ يَقُولُ لَمَّا خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَى أُحُدٍ رَجَعَ نَاسٌ مِنْ أَصْحَابِهِ فَقَالَتْ فِرْقَةٌ نَقْتُلُهُمْ. وَقَالَتْ فِرْقَةٌ لاَ نَقْتُلُهُمْ. فَنَزَلَتْ {فَمَا لَكُمْ فِي الْمُنَافِقِينِ فِئَتَيْنِ} وَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنَّهَا تَنْفِي الرِّجَالَ كَمَا تَنْفِي النَّارُ خَبَثَ الْحَدِيدِ "".
பாடம் : 10 மதீனா தீயவர்களை வெளியேற்றும்.
1884. ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் உஹுத் போருக்குப் புறப்பட்டபோது அவர்களின் தோழர்களிடையே கலந்துவிட்டிருந்த (நயவஞ்சகர்கள்) சிலர் (போரில் பங்கெடுக் காமல்) திரும்பலானார்கள். அப்போது (போரில் பங்கெடுத்தவர்களில்) ஒரு பிரிவினர், “இவர்களைக் கொல்வோம்” என்றனர். மற்றொரு பிரிவினர், “இவர் களைக் கொல்லக் கூடாது!” என்றனர்.

அப்போது “உங்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? நயவஞ்சகர்கள் விஷயத்தில் இரு பிரிவினர்களாக உள்ளீர்கள்!” (4:88) எனும் இறைவசனம் அருளப்பெற்றது. “நெருப்பு, இரும்பின் துருவை அகற்றுவதைப் போன்று இந்நகரம் (தீய) மனிதர்களை வெளியேற்றிவிடும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அத்தியாயம் : 29
1885. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، حَدَّثَنَا أَبِي، سَمِعْتُ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" اللَّهُمَّ اجْعَلْ بِالْمَدِينَةِ ضِعْفَىْ مَا جَعَلْتَ بِمَكَّةَ مِنَ الْبَرَكَةِ "". تَابَعَهُ عُثْمَانُ بْنُ عُمَرَ عَنْ يُونُسَ.
பாடம்:
1885. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், “இறைவா! மக்காவில் நீ ஏற்படுத்திய வளத்தை (பரக்கத்) போன்று இரு மடங்கை மதீனா வில் ஏற்படுத்துவாயாக!” என்று பிரார்த்தித் தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 29
1886. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا قَدِمَ مِنْ سَفَرٍ، فَنَظَرَ إِلَى جُدُرَاتِ الْمَدِينَةِ أَوْضَعَ رَاحِلَتَهُ، وَإِنْ كَانَ عَلَى دَابَّةٍ، حَرَّكَهَا مِنْ حُبِّهَا.
பாடம்:
1886. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பயணத்திலிருந்து ஊர் திரும்பும்போது மதீனாவி(ல் உள்ள வீடுகளி)ன் சுவர்களைக் கண்டதும் தமது ஊர்தி ஒட்டகத்தை விரைவாகச் செலுத்து வார்கள். அவர்கள் பிராணியின்மீது அமர்ந்திருந்தால், மதீனாமீது கொண்ட அன்பால் அதை முடுக்கிவிடுவார்கள்.

அத்தியாயம் : 29
1887. حَدَّثَنَا ابْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا الْفَزَارِيُّ، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ أَرَادَ بَنُو سَلِمَةَ أَنْ يَتَحَوَّلُوا، إِلَى قُرْبِ الْمَسْجِدِ، فَكَرِهَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ تُعْرَى الْمَدِينَةُ، وَقَالَ "" يَا بَنِي سَلِمَةَ. أَلاَ تَحْتَسِبُونَ آثَارَكُمْ "". فَأَقَامُوا.
பாடம் : 11 மதீனா(வின் குடியிருப்புப் பகுதி) காலி செய்யப்படுவதை நபி (ஸல்) அவர்கள் வெறுத்தது
1887. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பனூ சலிமா குலத்தார் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசல் அருகே இடம்பெயர விரும்பினர். மதீனா(வின் மற்ற பகுதிகள்) காலி செய்யப்படுவதை நபி (ஸல்) அவர்கள் வெறுத்தார்கள். எனவே, “பனூ சலிமா குலத்தாரே! நீங்கள் (பள்ளிவாசலுக்கு நடந்து வருவதற்கான) காலடித் தடங்களின் நன்மைகளை எதிர்பார்க்கமாட்டீர்களா?” என்று கேட்டார்கள்.

ஆகவே, பனூ சலிமா குலத்தார் (தாம் முன்பு வசித்துக்கொண்டிருந்த இடத்திலேயே) தங்கிவிட்டனர்.

அத்தியாயம் : 29
1888. حَدَّثَنَا مُسَدَّدٌ، عَنْ يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ حَدَّثَنِي خُبَيْبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَا بَيْنَ بَيْتِي وَمِنْبَرِي رَوْضَةٌ مِنْ رِيَاضِ الْجَنَّةِ، وَمِنْبَرِي عَلَى حَوْضِي "".
பாடம் : 12
1888. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனது இல்லத்திற்கும் எனது சொற் பொழிவுமேடை (மிம்பரு)க்கும் இடைப் பட்ட பகுதியானது, சொர்க்கத்துப் பூஞ்சோலைகளில் ஒரு பூஞ்சோலையாகும். எனது சொற்பொழிவு மேடையானது, எனது (அல்கவ்ஸர்) தடாகத்தின் மீது அமைந்துள்ளது.10

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 29
1889. حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ لَمَّا قَدِمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمَدِينَةَ وُعِكَ أَبُو بَكْرٍ وَبِلاَلٌ، فَكَانَ أَبُو بَكْرٍ إِذَا أَخَذَتْهُ الْحُمَّى يَقُولُ كُلُّ امْرِئٍ مُصَبَّحٌ فِي أَهْلِهِ وَالْمَوْتُ أَدْنَى مِنْ شِرَاكِ نَعْلِهِ وَكَانَ بِلاَلٌ إِذَا أُقْلِعَ عَنْهُ الْحُمَّى يَرْفَعُ عَقِيرَتَهُ يَقُولُ أَلاَ لَيْتَ شِعْرِي هَلْ أَبِيتَنَّ لَيْلَةً بِوَادٍ وَحَوْلِي إِذْخِرٌ وَجَلِيلُ وَهَلْ أَرِدَنْ يَوْمًا مِيَاهَ مَجَنَّةٍ وَهَلْ يَبْدُوَنْ لِي شَامَةٌ وَطَفِيلُ قَالَ اللَّهُمَّ الْعَنْ شَيْبَةَ بْنَ رَبِيعَةَ، وَعُتْبَةَ بْنَ رَبِيعَةَ، وَأُمَيَّةَ بْنَ خَلَفٍ، كَمَا أَخْرَجُونَا مِنْ أَرْضِنَا إِلَى أَرْضِ الْوَبَاءِ ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" اللَّهُمَّ حَبِّبْ إِلَيْنَا الْمَدِينَةَ كَحُبِّنَا مَكَّةَ أَوْ أَشَدَّ، اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي صَاعِنَا، وَفِي مُدِّنَا، وَصَحِّحْهَا لَنَا وَانْقُلْ حُمَّاهَا إِلَى الْجُحْفَةِ "". قَالَتْ وَقَدِمْنَا الْمَدِينَةَ، وَهْىَ أَوْبَأُ أَرْضِ اللَّهِ. قَالَتْ فَكَانَ بُطْحَانُ يَجْرِي نَجْلاً. تَعْنِي مَاءً آجِنًا.
பாடம் : 12
1889. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்தபோது ஆபூபக்ர் (ரலி), பிலால் (ரலி) ஆகியோருக்குக் காய்ச்சல் கண்டது. அபூபக்ர் (ரலி) அவர்கள் தமக்குக் காய்ச்சல் ஏற்படும்போது, இவ்வாறு (கவிதை) கூறுவார்கள்:

காலை

வாழ்த்துக் கூறப்பெற்ற

நிலையில்

ஒவ்வொரு மனிதனும்

தம் குடும்பத்தாரோடு

காலைப் பொழுதை அடைகிறான்

(ஆனால்,)

அவன் செருப்புவாரைவிட

மிக அருகில்

மரணம் இருக்கிறது

(என்பதை அவன் அறிவதில்லை)

பிலால் (ரலி) அவர்கள் காய்ச்சல் நீங்கியதும் வேதனைக் குரல் எழுப்பி பின்வரும் கவிதை கூறுவார்கள்:

‘இத்கிர்’ (நறுமணப்) புல்லும்

‘ஜலீல்’ கூரைப் புல்லும்

என்னைச்

சுற்றியிருக்க,

ஒரு இராப் பெழுதையேனும்

(மக்காவின்) பள்ளத்தாக்கில்

நான் கழிப்பேனா?

(மக்காவின்)

‘மிஜன்னா’ (சுனை) நீரை

ஒரு நாள் ஒரு பொழுது

நான் சுவைப்பேனா?

அந்த ஷாமா, தஃபீல் மலைகள் எனக்குத் தென்படுமா?

மேலும் பிலால் (ரலி) அவர்கள், “இறைவா! ஷைபா பின் ரபிஆ, உத்பா பின் ரபீஆ, உமய்யா பின் கலஃப் ஆகியோர் எங்களை எங்கள் மண்ணிலிருந்து வெளியேற்றி, இந்த நோய்ப் பிரதேசத்திற்கு விரட்டியதைப் போன்று, அவர்களை நீ உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்தி (சபித்து)விடுவாயாக!” என்று கூறுவார்கள்.

பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறைவா! நாங்கள் மக்காவை நேசித்ததைப் போன்று, அல்லது அதைவிட அதிகமாக மதீனாவை எங்கள் நேசத்திற்குரியதாக ஆக்குவாயாக! இறைவா! எங்களுடைய (அளவைகளான) ‘ஸாஉ’, ‘முத்’து ஆகியவற்றில் (எங்கள் உணவில்) எங்களுக்கு நீ வளம் புரிவாயாக! இவ்வூரை எங்களுக்கு ஆரோக்கியமானதாக ஆக்குவாயாக! இங்குள்ள காய்ச்சலை ‘ஜுஹ்ஃபா’ எனும் பகுதிக்கு இடம்பெயரச் செய்வாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

நாங்கள் மதீனாவிற்கு வந்தபோது, அது அல்லாஹ்வின் பூமியிலேயே நோய் நொடிகள் அதிகமான பிரதேசமாக இருந்தது; (ஏனெனில்) ‘புத்ஹான்’ எனும் ஓடையில் மாசடைந்த தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது.


அத்தியாயம் : 29
1890. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ خَالِدِ بْنِ يَزِيدَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلاَلٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، عَنْ عُمَرَ ـ رضى الله عنه ـ قَالَ اللَّهُمَّ ارْزُقْنِي شَهَادَةً فِي سَبِيلِكَ، وَاجْعَلْ مَوْتِي فِي بَلَدِ رَسُولِكَ صلى الله عليه وسلم. وَقَالَ ابْنُ زُرَيْعٍ عَنْ رَوْحِ بْنِ الْقَاسِمِ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أُمِّهِ، عَنْ حَفْصَةَ بِنْتِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَتْ سَمِعْتُ عُمَرَ، نَحْوَهُ. وَقَالَ هِشَامٌ عَنْ زَيْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ حَفْصَةَ، سَمِعْتُ عُمَرَ، رضى الله عنه.
பாடம் : 12
1890. உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இறைவா! உன் பாதையில் வீர மரணம் அடையும் பாக்கியத்தை எனக்கு வழங்கு வாயாக! எனது மரணத்தை உன் தூதருடைய ஊரில் ஏற்படுத்துவாயாக!

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 29

1891. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ أَبِي سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ، أَنَّ أَعْرَابِيًّا، جَاءَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ثَائِرَ الرَّأْسِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَخْبِرْنِي مَاذَا فَرَضَ اللَّهُ عَلَىَّ مِنَ الصَّلاَةِ فَقَالَ "" الصَّلَوَاتِ الْخَمْسَ، إِلاَّ أَنْ تَطَّوَّعَ شَيْئًا "". فَقَالَ أَخْبِرْنِي مَا فَرَضَ اللَّهُ عَلَىَّ مِنَ الصِّيَامِ فَقَالَ "" شَهْرَ رَمَضَانَ، إِلاَّ أَنْ تَطَّوَّعَ شَيْئًا "". فَقَالَ أَخْبِرْنِي بِمَا فَرَضَ اللَّهُ عَلَىَّ مِنَ الزَّكَاةِ فَقَالَ فَأَخْبَرَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم شَرَائِعَ الإِسْلاَمِ. قَالَ وَالَّذِي أَكْرَمَكَ لاَ أَتَطَوَّعُ شَيْئًا، وَلاَ أَنْقُصُ مِمَّا فَرَضَ اللَّهُ عَلَىَّ شَيْئًا. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَفْلَحَ إِنْ صَدَقَ، أَوْ دَخَلَ الْجَنَّةَ إِنْ صَدَقَ "".
பாடம் : 1 ரமளான் நோன்பு கடமையாக்கப்படல் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: இறைநம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கு முன்னிருந்தோர்மீது கடமையாக்கப்பட்டதைப் போன்றே உங்கள்மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது; (இதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம். (2 : 183)
1891. தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு கிராமவாசி தலைவிரி கோலத்துடன் (பயணம் முடித்த கையோடு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்; ‘‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் என்மீது கடமையாக்கியுள்ள தொழுகை எது என்று சொல்லுங்கள்?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘ஐந்து நேரத் தொழுகைகள்; (அவற்றைத் தவிர, கடமையான தொழுகை வேறெதுவுமில்லை; கூடுதலாக) எதையும் நீயாக விரும்பித் தொழுவதைத் தவிர!” என்று பதிலளித் தார்கள்.

அவர், ‘‘அல்லாஹ் என்மீது கடமையாக்கியுள்ள நோன்பைப் பற்றி எனக்குக் கூறுங்கள்!” என்றார். ‘‘ரமளான் மாத நோன்பு; (அதைத் தவிர கடமையான நோன்பு வேறெதுவுமில்லை; கூடுதலாக) ஏதேனும் நீயாக விரும்பி நோற்பதைத் தவிர!” என்று பதிலளித்தார்கள்.

அவர், ‘‘அல்லாஹ் என்மீது கடமையாக்கியுள்ள ஸகாத் எது என்று எனக்குக் கூறுங்கள்” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இஸ்லாத்தின் சட்டவிதிகளை அவருக்குக் கூறினார்கள். அப்போது அவர், ‘‘சத்தியத்தைக் கொண்டு உங்களைக் கண்ணியப்படுத்திய இறைவன் மீதாணையாக! நான் கூடுதலாக எதையும் செய்யமாட்டேன்; அல்லாஹ் என்மீது கடமையாக்கியதில் எதையும் குறைக்கவும்மாட்டேன்” என்றார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இவர் (தாம் கூறுவதில்) உண்மையாளராக இருந்தால் வெற்றியடைந்துவிட்டார்” என்றோ, ‘‘இவர் (தாம் கூறுவதில்) உண்மையாளராக இருந்தால் சொர்க்கத்தில் நுழைவார்” என்றோ கூறினார்கள்.


அத்தியாயம் : 30
1892. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ صَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَاشُورَاءَ، وَأَمَرَ بِصِيَامِهِ. فَلَمَّا فُرِضَ رَمَضَانُ تُرِكَ. وَكَانَ عَبْدُ اللَّهِ لاَ يَصُومُهُ، إِلاَّ أَنْ يُوَافِقَ صَوْمَهُ.
பாடம் : 1 ரமளான் நோன்பு கடமையாக்கப்படல் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: இறைநம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கு முன்னிருந்தோர்மீது கடமையாக்கப்பட்டதைப் போன்றே உங்கள்மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது; (இதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம். (2 : 183)
1892. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஆஷூரா (முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாள்) நோன்பு நோற்றார்கள். அதில் நோன்பு நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளை யிட்டார்கள். ரமளான் நோன்பு கடமை யாக்கப்பட்டதும் ஆஷூரா நோன்பு (கட்டாயம் என்பது) கைவிடப்பட்டது.

‘‘தம்முடைய வேறு நோன்பு (ஏதாவது) அந்நாளில் தற்செயலாக அமைந்தால் தவிர, இப்னு உமர் (ரலி) அவர்கள் ஆஷூரா தினத்தில் நோன்பு நோற்க மாட்டார்கள்” என்று நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.


அத்தியாயம் : 30
1893. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، أَنَّ عِرَاكَ بْنَ مَالِكٍ، حَدَّثَهُ أَنَّ عُرْوَةَ أَخْبَرَهُ عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ قُرَيْشًا، كَانَتْ تَصُومُ يَوْمَ عَاشُورَاءَ فِي الْجَاهِلِيَّةِ، ثُمَّ أَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِصِيَامِهِ حَتَّى فُرِضَ رَمَضَانُ وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَنْ شَاءَ فَلْيَصُمْهُ، وَمَنْ شَاءَ أَفْطَرَ "".
பாடம் : 1 ரமளான் நோன்பு கடமையாக்கப்படல் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: இறைநம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கு முன்னிருந்தோர்மீது கடமையாக்கப்பட்டதைப் போன்றே உங்கள்மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது; (இதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம். (2 : 183)
1893. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அறியாமைக் காலத்தில் குறைஷியர் ஆஷூரா தினத்தில் நோன்பு நோற்றுவந்தனர். ரமளான் நோன்பு கடமையாக்கப்படும்வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் ஆஷூரா நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள்; (ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்ட) பின்னர் ‘‘(ஆஷூரா நாளின் நோன்பை) நோற்க விரும்புபவர் அதை நோற்கட்டும்! விட்டுவிட விரும்புபவர் அதை விட்டுவிடட்டும்!” எனக் கூறினார்கள்.

அத்தியாயம் : 30
1894. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" الصِّيَامُ جُنَّةٌ، فَلاَ يَرْفُثْ وَلاَ يَجْهَلْ، وَإِنِ امْرُؤٌ قَاتَلَهُ أَوْ شَاتَمَهُ فَلْيَقُلْ إِنِّي صَائِمٌ. مَرَّتَيْنِ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَخُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ تَعَالَى مِنْ رِيحِ الْمِسْكِ، يَتْرُكُ طَعَامَهُ وَشَرَابَهُ وَشَهْوَتَهُ مِنْ أَجْلِي، الصِّيَامُ لِي، وَأَنَا أَجْزِي بِهِ، وَالْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا "".
பாடம் : 2 நோன்பின் சிறப்பு
1894. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயம் ஆகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேச வேண்டாம்! அறிவீனமாக நடந்துகொள்ள வேண்டாம்! யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் ‘நான் நோன்பாளி' என்று இரு முறை கூறட்டும்! என் உயிர் எவன் கையில் உள்ளதோ அ(ந்த இறை)வன்மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் மணத்தைவிட நறுமணமிக்கதாகும்.

(மேலும்) ‘‘எனக்காகவே நோன்பாளி தமது உணவையும் பானத்தையும் ஆசையையும் கைவிடுகிறார்; நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்” (என்று அல்லாஹ் கூறுகின்றான்). ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்கு களாகும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.2

அத்தியாயம் : 30
1895. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا جَامِعٌ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ، قَالَ قَالَ عُمَرُ ـ رضى الله عنه ـ مَنْ يَحْفَظُ حَدِيثًا عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي الْفِتْنَةِ قَالَ حُذَيْفَةُ أَنَا سَمِعْتُهُ يَقُولُ "" فِتْنَةُ الرَّجُلِ فِي أَهْلِهِ وَمَالِهِ وَجَارِهِ تُكَفِّرُهَا الصَّلاَةُ وَالصِّيَامُ وَالصَّدَقَةُ "". قَالَ لَيْسَ أَسْأَلُ عَنْ ذِهِ، إِنَّمَا أَسْأَلُ عَنِ الَّتِي تَمُوجُ كَمَا يَمُوجُ الْبَحْرُ. قَالَ وَإِنَّ دُونَ ذَلِكَ بَابًا مُغْلَقًا. قَالَ فَيُفْتَحُ أَوْ يُكْسَرُ قَالَ يُكْسَرُ. قَالَ ذَاكَ أَجْدَرُ أَنْ لاَ يُغْلَقَ إِلَى يَوْمِ الْقِيَامَةِ. فَقُلْنَا لِمَسْرُوقٍ سَلْهُ أَكَانَ عُمَرُ يَعْلَمُ مَنِ الْبَابُ فَسَأَلَهُ فَقَالَ نَعَمْ، كَمَا يَعْلَمُ أَنَّ دُونَ غَدٍ اللَّيْلَةَ.
பாடம் : 3 நோன்பு குற்றங்களுக்குப் பரிகாரமாகும்.
1895. ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(கலீஃபா) உமர் (ரலி) அவர்கள், ‘‘குழப்பங்கள் (ஃபித்னா) பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தியை யார் நினைவில் வைத்திருக்கிறார்?” என்று கேட்டார்கள். ‘‘நான் அதைச் செவியுற்றிருக்கிறேன்: ஒருவர் தம் குடும்பத்தார் விஷயத்தில் (அவர்கள்மீது அளவு கடந்த பாசம் வைப்பதன் மூலமும்), தமது செல்வம் விஷயத்தில் (அதைத் திரட்டு வதில் ஈடுபடுவதன் மூலமும்), அண்டை வீட்டார் விஷயத்தில் (அவர்களின் உரிமைகளில் குறைவைப்பதன் மூலமும்) சோதனையில் (ஃபித்னாவில்) ஆழ்த்தப் படும்போது தொழுகை, நோன்பு, தர்மம் ஆகியவை அதற்கான பரிகாரமாக அமையும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்றேன்.

அதற்கு உமர் (ரலி) அவர்கள், ‘‘நான் (சோதனை எனும் பொருளில் அமைந்த) இந்த ஃபித்னாவைப் பற்றிக் கேட்கவில்லை; கடலலை போன்று அடுக்கடுக்காக வரக் கூடிய (குழப்பம் எனும் பொருளிலமைந்த) ஃபித்னாவைப் பற்றியே கேட்கிறேன்” என்றார்கள். அதற்கு நான், ‘‘உங்களுக்கும் அவற்றுக்கும் இடையே மூடப்பட்ட கதவு இருக்கிறது” என்று கூறினேன். ‘‘அது திறக்கப்படுமா, உடைக்கப்படுமா?” என்று உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். நான் ‘‘உடைக்கப்படும்” என்று பதிலளித்தேன். ‘‘அப்படியானால் மறுமை நாள்வரை அது மூடப்படாது” என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

‘‘அந்தக் கதவு எது என்று உமர் (ரலி) அவர்கள் அறிந்திருந்தார்களா என்று ஹுதைஃபா (ரலி) அவர்களிடம் கேளுங்கள்” என்று மஸ்ரூக் (ரஹ்) அவர்களிடம் நாங்கள் கூறினோம். அவ்வாறே அவர் கேட்டார். அதற்கு ஹுதைஃபா (ரலி) அவர்கள் ‘‘ஆம்! பகலுக்குமுன் இரவு உண்டு என்பதை அறிவதைப் போன்று அதை அவர்கள் அறிந்திருந்தார்கள் என்று பதிலளித்தார்” என அறிவிப்பாளர் அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.3

அத்தியாயம் : 30
1896. حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، قَالَ حَدَّثَنِي أَبُو حَازِمٍ، عَنْ سَهْلٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ فِي الْجَنَّةِ بَابًا يُقَالُ لَهُ الرَّيَّانُ، يَدْخُلُ مِنْهُ الصَّائِمُونَ يَوْمَ الْقِيَامَةِ، لاَ يَدْخُلُ مِنْهُ أَحَدٌ غَيْرُهُمْ يُقَالُ أَيْنَ الصَّائِمُونَ فَيَقُومُونَ، لاَ يَدْخُلُ مِنْهُ أَحَدٌ غَيْرُهُمْ، فَإِذَا دَخَلُوا أُغْلِقَ، فَلَمْ يَدْخُلْ مِنْهُ أَحَدٌ "".
பாடம் : 4 ‘ரய்யான்' எனும் (சொர்க்க) வாசல் நோன்பாளிகளுக்குரியது.
1896. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சொர்க்கத்தில் ‘ரய்யான்' எனப்படும் ஒரு நுழைவாயில் இருக்கிறது. மறுமை நாளில், அதன் வழியாக நோன்பாளிகளே நுழைவார்கள்; அவர்களைத் தவிர வேறு யாரும் அதன் வழியாக நுழையமாட்டார் கள். நோன்பாளிகள் எங்கே?' என்று கேட்கப்படும்; உடனே அவர்கள் எழுவார் கள்; அவர்களைத் தவிர வேறு யாரும் அதன் வழியாக நுழையமாட்டார்கள்; அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும்; அதன் வழியாக வேறு யாரும் நுழையமாட்டார்கள்.4

இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 30
1897. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، قَالَ حَدَّثَنِي مَعْنٌ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ أَنْفَقَ زَوْجَيْنِ فِي سَبِيلِ اللَّهِ نُودِيَ مِنْ أَبْوَابِ الْجَنَّةِ يَا عَبْدَ اللَّهِ، هَذَا خَيْرٌ. فَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصَّلاَةِ دُعِيَ مِنْ باب الصَّلاَةِ، وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الْجِهَادِ دُعِيَ مِنْ باب الْجِهَادِ، وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصِّيَامِ دُعِيَ مِنْ باب الرَّيَّانِ، وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصَّدَقَةِ دُعِيَ مِنْ باب الصَّدَقَةِ "". فَقَالَ أَبُو بَكْرٍ ـ رضى الله عنه ـ بِأَبِي أَنْتَ وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ، مَا عَلَى مَنْ دُعِيَ مِنْ تِلْكَ الأَبْوَابِ مِنْ ضَرُورَةٍ، فَهَلْ يُدْعَى أَحَدٌ مِنْ تِلْكَ الأَبْوَابِ كُلِّهَا قَالَ "" نَعَمْ. وَأَرْجُو أَنْ تَكُونَ مِنْهُمْ "".
பாடம் : 4 ‘ரய்யான்' எனும் (சொர்க்க) வாசல் நோன்பாளிகளுக்குரியது.
1897. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘யார் அல்லாஹ்வின் பாதையில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவு செய் தாரோ அவர் சொர்க்கத்தின் வாசல்களிலிருந்து, ‘அல்லாஹ்வின் அடியாரே! இது சிறந்ததாகும். (இதன் வழியாக நுழையுங்கள்!)› என்று அழைக்கப்படுவார். அதாவது தொழுகையாளியாய் இருந்தவர் தொழுகையின் வாசல் வழியாக அழைக்கப்படுவார்; அறப்போர் புரிந்தவர் அறப்போருக்கான வாசல் வழியாக அழைக்கப்படுவார்; நோன்பாளியாய் இருந்தவர் ‘ரய்யான்' எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவார்; தர்மம் செய்தவர் தர்மத்திற்குரிய வாசல் வழியாக அழைக்கப்படுவார்” என்று கூறினார்கள்.

அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! இந்த வாசல்களிலிருந்து அழைக்கப்படும் ஒருவருக்கு (வேறு வாசல் வழியாகச் செல்ல வேண்டிய) அவசியம் இராது. (ஏனெனில், எந்த வழியிலாவது அவர் சொர்க்கம் சென்றுவிடுவார். இருந்தாலும்,) அந்த வாசல்கள் ஒவ்வொன்றிலிருந்தும் யாராவது அழைக்கப்படுவாரா?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘‘ஆம்! அவர்களில் நீங்களும் ஒருவராக இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்” என்றார்கள்.

அத்தியாயம் : 30
1898. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ أَبِي سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا جَاءَ رَمَضَانُ فُتِحَتْ أَبْوَابُ الْجَنَّةِ "".
பாடம் : 5 ‘ரமளான்' என்று கூற வேண்டுமா? அல்லது ‘ஷஹ்ரு ரமளான்' (ரமளான் மாதம்) என்றுதான் கூற வேண்டுமா என்பதும், ‘எப்படியும் கூறலாம்' என்ற கருத்தும்5 நபி (ஸல்) அவர்கள், ‘ஒருவர் ரமளானில் நோன்பு நோற்றால்' என்றும் ‘ரமளானுக்கு முந்தி' என்றும் (‘மாதம்' என்பதைச் சேர்க்காமல்) குறிப்பிட்டுள் ளார்கள்.
1898. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ரமளான் வந்துவிட்டால் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 30
1899. حَدَّثَنِي يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ حَدَّثَنِي اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي ابْنُ أَبِي أَنَسٍ، مَوْلَى التَّيْمِيِّينَ أَنَّ أَبَاهُ، حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِذَا دَخَلَ شَهْرُ رَمَضَانَ فُتِّحَتْ أَبْوَابُ السَّمَاءِ، وَغُلِّقَتْ أَبْوَابُ جَهَنَّمَ، وَسُلْسِلَتِ الشَّيَاطِينُ "".
பாடம் : 5 ‘ரமளான்' என்று கூற வேண்டுமா? அல்லது ‘ஷஹ்ரு ரமளான்' (ரமளான் மாதம்) என்றுதான் கூற வேண்டுமா என்பதும், ‘எப்படியும் கூறலாம்' என்ற கருத்தும்5 நபி (ஸல்) அவர்கள், ‘ஒருவர் ரமளானில் நோன்பு நோற்றால்' என்றும் ‘ரமளானுக்கு முந்தி' என்றும் (‘மாதம்' என்பதைச் சேர்க்காமல்) குறிப்பிட்டுள் ளார்கள்.
1899. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ரமளான் மாதம் வந்துவிட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன; நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படு கின்றன; ஷைத்தான்கள் விலங்கிடப்படு கின்றனர்.6

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 30
1900. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ حَدَّثَنِي اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي سَالِمٌ، أَنَّ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" إِذَا رَأَيْتُمُوهُ فَصُومُوا، وَإِذَا رَأَيْتُمُوهُ فَأَفْطِرُوا، فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَاقْدُرُوا لَهُ "". وَقَالَ غَيْرُهُ عَنِ اللَّيْثِ حَدَّثَنِي عُقَيْلٌ وَيُونُسُ لِهِلاَلِ رَمَضَانَ.
பாடம் : 5 ‘ரமளான்' என்று கூற வேண்டுமா? அல்லது ‘ஷஹ்ரு ரமளான்' (ரமளான் மாதம்) என்றுதான் கூற வேண்டுமா என்பதும், ‘எப்படியும் கூறலாம்' என்ற கருத்தும்5 நபி (ஸல்) அவர்கள், ‘ஒருவர் ரமளானில் நோன்பு நோற்றால்' என்றும் ‘ரமளானுக்கு முந்தி' என்றும் (‘மாதம்' என்பதைச் சேர்க்காமல்) குறிப்பிட்டுள் ளார்கள்.
1900. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் ரமளான் பிறை கண்டதும் நோன்பு நோறுங்கள்; (மறு) பிறை கண்டதும் நோன்பை விடுங்கள்; உங்களுக்கு (வானில்) மேகமூட்டம் தென்பட்டால் அதை (முப்பது நாட்களாக)க் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 30