1801. حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَارِبٍ، عَنْ جَابِرٍ ـ رضى الله عنه ـ قَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يَطْرُقَ أَهْلَهُ لَيْلاً.
பாடம் : 16 நகரை அடைந்துவிட்டாலும் திடீரென இரவு நேரத்தில் வீட் டாரிடம் செல்லக் கூடாது.
1801. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(பயணத்திலிருந்து திரும்பும்போது) இரவு நேரத்தில் திடீரென வீட்டாரிடம் செல்வதை நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள்.

அத்தியாயம் : 26
1802. حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ أَخْبَرَنِي حُمَيْدٌ، أَنَّهُ سَمِعَ أَنَسًا ـ رضى الله عنه ـ يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا قَدِمَ مِنْ سَفَرٍ، فَأَبْصَرَ دَرَجَاتِ الْمَدِينَةِ أَوْضَعَ نَاقَتَهُ، وَإِنْ كَانَتْ دَابَّةً حَرَّكَهَا. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ زَادَ الْحَارِثُ بْنُ عُمَيْرٍ عَنْ حُمَيْدٍ حَرَّكَهَا مِنْ حُبِّهَا. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، قَالَ جُدُرَاتٍ. تَابَعَهُ الْحَارِثُ بْنُ عُمَيْرٍ.
பாடம் : 17 மதீனாவை அடைந்ததும் ஒட்டகத்தை விரைவாகச் செலுத்துதல்
1802. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பயணத்திலிருந்து திரும்பி மதீனாவின் உயரமான பாதைகளைப் பார்க்கும்போது தமது ஒட்டகத்தை விரைவாகச் செலுத்து வார்கள்; வாகனம் கால்நடையாக இருப் பின் அதைத் தட்டிவிடுவார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் ஹாரிஸ் பின் உமைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “மதீனாமீது கொண்ட அன்பால் ஒட்டகத்தை முடுக்கி விடுவார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

இஸ்மாயீல் பின் ஜஅஃபர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘மதீனாவின் (சுற்றுச்) சுவர்களைப் பார்க்கும்போது’ என இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம் : 26
1803. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ الْبَرَاءَ ـ رضى الله عنه ـ يَقُولُ نَزَلَتْ هَذِهِ الآيَةُ فِينَا، كَانَتِ الأَنْصَارُ إِذَا حَجُّوا فَجَاءُوا لَمْ يَدْخُلُوا مِنْ قِبَلِ أَبْوَابِ بُيُوتِهِمْ، وَلَكِنْ مِنْ ظُهُورِهَا، فَجَاءَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ، فَدَخَلَ مِنْ قِبَلِ بَابِهِ، فَكَأَنَّهُ عُيِّرَ بِذَلِكَ، فَنَزَلَتْ {وَلَيْسَ الْبِرُّ بِأَنْ تَأْتُوا الْبُيُوتَ مِنْ ظُهُورِهَا وَلَكِنَّ الْبِرَّ مَنِ اتَّقَى وَأْتُوا الْبُيُوتَ مِنْ أَبْوَابِهَا}.
பாடம் : 18 உயர்ந்தோன் அல்லாஹ் கூறு கின்றான்: வீடுகளுக்குள் அவற்றின் வாசல்கள் வழியாகவே வாருங்கள். (2:189)
1803. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இந்த வசனம் (அன்சாரிகளான) எங்கள் விஷயத்தில்தான் அருளப் பெற்றது. (அறியாமைக் காலத்தில்) அன்சாரிகள் ஹஜ் செய்(ய இஹ்ராம் கட்டி முடித்)துவிட்டு, மீண்டும் (வீட்டுக்கு) வருவதானால், வீடுகளில் (முன்பக்க) வாசல் வழியாக நுழையமாட்டார்கள். மாறாக, பின்பக்க வாசல் வழியேதான் நுழைவார்கள்.

இந்நிலையில் அன்சாரிகளில் ஒருவர் தமது (வீட்டின்) முன்வாசல் வழியாகவே நுழைந்துவிட்டார். இதனால் அவரைப் பற்றி குறைசொல்லப்பட்டது.

அப்போதுதான், “நீங்கள் வீடுகளுக்குள் அவற்றின் பின்புற வழியாக வருவது புண்ணியமன்று. மாறாக, (இறைவனுக்கு) அஞ்சி நடப்பவரே புண்ணியவான் ஆவார். ஆகவே, வீடுகளுக்குள் அவற் றின் வாசல்கள் வழியாகவே வாருங்கள்” (2:189) எனும் வசனம் அருளப்பெற்றது.

அத்தியாயம் : 26
1804. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ سُمَىٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" السَّفَرُ قِطْعَةٌ مِنَ الْعَذَابِ، يَمْنَعُ أَحَدَكُمْ طَعَامَهُ وَشَرَابَهُ وَنَوْمَهُ، فَإِذَا قَضَى نَهْمَتَهُ فَلْيُعَجِّلْ إِلَى أَهْلِهِ "".
பாடம் : 19 பயணம் வேதனையில் ஒரு பகுதியாகும்.
1804. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பயணம் வேதனையில் ஒரு பகுதி யாகும். அது உங்களில் ஒருவரது உணவையும் பானத்தையும் உறக்கத்தை யும் தடுத்துவிடுகிறது. எனவே, ஒருவர் தமது தேவையை முடித்ததும் தம் குடும்பத்தாரிடம் விரைந்து செல்லட்டும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 26
1805. حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ أَخْبَرَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، قَالَ كُنْتُ مَعَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ بِطَرِيقِ مَكَّةَ، فَبَلَغَهُ عَنْ صَفِيَّةَ بِنْتِ أَبِي عُبَيْدٍ شِدَّةُ وَجَعٍ فَأَسْرَعَ السَّيْرَ، حَتَّى كَانَ بَعْدَ غُرُوبِ الشَّفَقِ نَزَلَ، فَصَلَّى الْمَغْرِبَ وَالْعَتَمَةَ، جَمَعَ بَيْنَهُمَا، ثُمَّ قَالَ إِنِّي رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم إِذَا جَدَّ بِهِ السَّيْرُ أَخَّرَ الْمَغْرِبَ، وَجَمَعَ بَيْنَهُمَا.
பாடம் : 20 அவசர நிலை ஏற்பட்டால், பயணி தம் குடும்பத்தாரிடம் விரைந்து செல்ல வேண்டும்.
1805. அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் மக்கா செல்லும் வழியில் நானும் அவர்களுடன் (பயணம் செய்துகொண்டு) இருந்தேன். (அவர்களின் துணைவியார்) ஸஃபிய்யா பின்த் அபீஉபைத் அவர்களின் உடல்நிலை மோசமான செய்தி அவர்களுக்குக் கிடைத்தது. உடனே பயணத்தை விரைவுபடுத்தினார்கள்.

செம்மேகம் மறையும்வரை (மஃக்ரிப் தொழுகையைத்) தாமதப்படுத்தி ஓரிடத்தில் இறங்கினார்கள். அங்கு மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுதார்கள்.

“நபி (ஸல்) அவர்கள் அவசரமாகப் பயணம் செய்ய நேரிட்டால் (இவ்வாறுதான்) மஃக்ரிபைத் தாமதப்படுத்தி இரு தொழுகைகளையும் சேர்த்துத் தொழுவதை நான் பார்த்திருக்கிறேன்” என்றும் இப்னு உமர் (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள்.

அத்தியாயம் : 26

1806. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ حِينَ خَرَجَ إِلَى مَكَّةَ مُعْتَمِرًا فِي الْفِتْنَةِ قَالَ إِنْ صُدِدْتُ عَنِ الْبَيْتِ صَنَعْتُ كَمَا صَنَعْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. فَأَهَلَّ بِعُمْرَةٍ، مِنْ أَجْلِ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ أَهَلَّ بِعُمْرَةٍ عَامَ الْحُدَيْبِيَةِ.
பாடம் : 1 உம்ராவுக்குச் செல்பவர் தடுக் கப்பட்டால்..?2
1806. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், (மக்காவில் அரசியல்) குழப்பம் இருந்த காலத்தில் உம்ராவிற்காக மக்கா விற்குப் புறப்பட்டார்கள். “நான் கஅபா விற்குச் செல்ல விடாமல் தடுக்கப்பட்டால், நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (தடுக்கப்பட்டபோது) செய்ததைப் போன்று செய்வேன்” என்று கூறிவிட்டு, உம்ராவிற்காக இஹ்ராம் கட்டினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுதைபியா ஆண்டில் உம்ரா விற்காக இஹ்ராம் கட்டியிருந்த(போது தடுக்கப்பட்ட)தே இதற்குக் காரணமாகும்.


அத்தியாயம் : 27
1807. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ، حَدَّثَنَا جُوَيْرِيَةُ، عَنْ نَافِعٍ، أَنَّ عُبَيْدَ اللَّهِ بْنَ عَبْدِ اللَّهِ، وَسَالِمَ بْنَ عَبْدِ اللَّهِ، أَخْبَرَاهُ أَنَّهُمَا، كَلَّمَا عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ لَيَالِيَ نَزَلَ الْجَيْشُ بِابْنِ الزُّبَيْرِ فَقَالاَ لاَ يَضُرُّكَ أَنْ لاَ تَحُجَّ الْعَامَ، وَإِنَّا نَخَافُ أَنْ يُحَالَ بَيْنَكَ وَبَيْنَ الْبَيْتِ. فَقَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَحَالَ كُفَّارُ قُرَيْشٍ دُونَ الْبَيْتِ، فَنَحَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم هَدْيَهُ، وَحَلَقَ رَأْسَهُ، وَأُشْهِدُكُمْ أَنِّي قَدْ أَوْجَبْتُ الْعُمْرَةَ، إِنْ شَاءَ اللَّهُ أَنْطَلِقُ، فَإِنْ خُلِّيَ بَيْنِي وَبَيْنَ الْبَيْتِ طُفْتُ، وَإِنْ حِيلَ بَيْنِي وَبَيْنَهُ فَعَلْتُ كَمَا فَعَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَأَنَا مَعَهُ. فَأَهَلَّ بِالْعُمْرَةِ مِنْ ذِي الْحُلَيْفَةِ، ثُمَّ سَارَ سَاعَةً، ثُمَّ قَالَ "" إِنَّمَا شَأْنُهُمَا وَاحِدٌ، أُشْهِدُكُمْ أَنِّي قَدْ أَوْجَبْتُ حَجَّةً مَعَ عُمْرَتِي "". فَلَمْ يَحِلَّ مِنْهُمَا حَتَّى حَلَّ يَوْمَ النَّحْرِ، وَأَهْدَى، وَكَانَ يَقُولُ لاَ يَحِلُّ حَتَّى يَطُوفَ طَوَافًا وَاحِدًا يَوْمَ يَدْخُلُ مَكَّةَ.
பாடம் : 1 உம்ராவுக்குச் செல்பவர் தடுக் கப்பட்டால்..?2
1807. 1808 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(மக்காவின் ஆட்சியராக இருந்த) அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள்மீது (போர் தொடுப்பதற்காக ஹஜ்ஜாஜ் பின் யூசுஃபின்) படைகள் வந்திறங்கியிருந்த நாட்களில் (ஹஜ் செய்ய விரும்பிய) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் (அன்னாரின் புதல்வர்களான) உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்), சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) ஆகியோர் பேசினார்கள்.

“இந்த ஆண்டு ஹஜ்ஜு செய்யாமலிருப்பதால் உங்களுக்கு எந்த இழப்பும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. நீங்கள் கஅபாவிலிருந்து தடுக்கப்படலாம் என நாங்கள் அஞ்சுகிறோம்” என்று அவ்விரு வரும் கூறினர்.

அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம்; கஅபாவுக் குச் செல்ல விடாமல் (நபியவர்களை) குறைஷி இறைமறுப்பாளர்கள் தடுத்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது குர்பானி பிராணியை அறுத்து (பலியிட்டு விட்டு)த் தமது தலைமுடியை மழித்தார்கள். (அவ்வாறே) நான் உம்ரா செய்ய முடிவு செய்துவிட்டேன் என்பதற்கு உங்களைச் சாட்சியாக்குகிறேன். அல்லாஹ் நாடினால் நான் புறப்பட்டுச் செல்வேன்; கஅபாவிற் குச் செல்ல வழி விடப்பட்டால் தவாஃப் செய்வேன். அங்கு செல்ல முடியாதவாறு நான் தடுக்கப்பட்டுவிட்டால், நபி (ஸல்) அவர்களுடன் நான் இருந்தபோது அவர்கள் செய்ததைப் போன்று நானும் செய்வேன்” என்றார்கள்.

பிறகு துல்ஹுலைஃபா எனும் இடத் தில் உம்ராவிற்காக இஹ்ராம் கட்டினார் கள். பிறகு சிறிது தூரம் பயணம் செய்து விட்டு, “ஹஜ், உம்ரா ஆகிய இரண்டின் நிலையும் ஒன்றுதான். நான் என் உம்ராவுடன் ஹஜ்ஜையும் (என்மீது) கடமையாக்கிக் கொண்டேன் என்பதற்கு உங்களைச் சாட்சியாக்குகிறேன்” என்றார்கள்.

துல்ஹஜ் மாதத்தின் பத்தாம் நாள் வந்து, பலியிடும்வரை அவ்விரண்டின் இஹ்ராமிலிருந்தும் அவர்கள் விடுபடவில்லை. “மக்காவில் நுழையும் தினத்தில் (ஹஜ், உம்ராவிற்காக) ஒரேயொரு தவாஃப் செய்யும்வரை இஹ்ராமிலிருந்து (முழுமையாக) விடுபட முடியாது” என்றும் அவர்கள் கூறிவந்தார்கள்.

“ ‘நீங்கள் இங்கேயே தங்கிவிடலாமே!’ என இப்னு உமர் (ரலி) அவர்களிடம் அவர்களுடைய புதல்வர்களில் ஒருவர் (மேற்கண்ட சம்பவத்தின்போது) கூறினார்” என்று மற்றோர் அறிவிப்பில் காணப்படுகிறது.


அத்தியாயம் : 27
1809. حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ صَالِحٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ سَلاَّمٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ عِكْرِمَةَ، قَالَ قَالَ ابْنُ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَدْ أُحْصِرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَحَلَقَ رَأْسَهُ وَجَامَعَ نِسَاءَهُ، وَنَحَرَ هَدْيَهُ، حَتَّى اعْتَمَرَ عَامًا قَابِلاً.
பாடம் : 1 உம்ராவுக்குச் செல்பவர் தடுக் கப்பட்டால்..?2
1809. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கஅபாவிற்குச் செல்ல முடியாமல்) தடுக்கப் பட்டபோது, தமது தலையை மழித்துக் கொண்டு, தம் துணைவியருடன் தாம்பத் திய உறவு கொண்டு, தமது பலிப் பிராணி யையும் அறுத்துப் பலியிட்டார்கள்; அடுத்த ஆண்டு உம்ரா செய்தார்கள்.

அத்தியாயம் : 27
1810. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي سَالِمٌ، قَالَ كَانَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ يَقُولُ أَلَيْسَ حَسْبُكُمْ سُنَّةَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، إِنْ حُبِسَ أَحَدُكُمْ عَنِ الْحَجِّ طَافَ بِالْبَيْتِ وَبِالصَّفَا وَالْمَرْوَةِ، ثُمَّ حَلَّ مِنْ كُلِّ شَىْءٍ، حَتَّى يَحُجَّ عَامًا قَابِلاً، فَيُهْدِي أَوْ يَصُومُ، إِنْ لَمْ يَجِدْ هَدْيًا. وَعَنْ عَبْدِ اللَّهِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي سَالِمٌ، عَنِ ابْنِ عُمَرَ، نَحْوَهُ.
பாடம் : 2 ஹஜ்ஜிலிருந்து தடுக்கப்படுதல்
1810. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் வழிமுறை உங்களுக்குப் போதாதா? உங்களில் ஒருவர் ஹஜ்ஜிலிருந்து தடுக்கப் பட்டால். (முடிந்தால்) அவர் கஅபாவை தவாஃப் செய்து, ஸஃபா-மர்வாவுக் கிடையே ‘சயீ’ செய்து, இஹ்ராமிலிருந்து விடுபடட்டும்! அடுத்த ஆண்டு ஹஜ் செய்து பலியிடட்டும்! பலி பிராணி கிடைக்காவிட்டால் நோன்பு நோற்கட்டும்!

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 27
1811. حَدَّثَنَا مَحْمُودٌ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنِ الْمِسْوَرِ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَحَرَ قَبْلَ أَنْ يَحْلِقَ، وَأَمَرَ أَصْحَابَهُ بِذَلِكَ.
பாடம் : 3 (ஹஜ் அல்லது உம்ரா செய்வ திலிருந்து) தடுக்கப்படும்போது, தலையை மழித்துக்கொள்வ தற்குமுன் குர்பானி கொடுத்தல்
1811. மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உம்ராவிலிருந்து தடுக்கப்பட்டபோது) தலையை மழித்துக்கொள்வதற்குமுன் (பலிப்பிராணியை) அறுத்துப் பலியிட்டார் கள்; அவ்வாறே செய்யும்படி தம் தோழர் களுக்கும் கட்டளையிட்டார்கள்.


அத்தியாயம் : 27
1812. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، أَخْبَرَنَا أَبُو بَدْرٍ، شُجَاعُ بْنُ الْوَلِيدِ عَنْ عُمَرَ بْنِ مُحَمَّدٍ الْعُمَرِيِّ، قَالَ وَحَدَّثَ نَافِعٌ، أَنَّ عَبْدَ اللَّهِ، وَسَالِمًا، كَلَّمَا عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ فَقَالَ خَرَجْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم مُعْتَمِرِينَ، فَحَالَ كُفَّارُ قُرَيْشٍ دُونَ الْبَيْتِ، فَنَحَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بُدْنَهُ، وَحَلَقَ رَأْسَهُ.
பாடம் : 3 (ஹஜ் அல்லது உம்ரா செய்வ திலிருந்து) தடுக்கப்படும்போது, தலையை மழித்துக்கொள்வ தற்குமுன் குர்பானி கொடுத்தல்
1812. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் (அவர்களின் புதல்வர்கள்) சாலிம், அப்துல்லாஹ் (ரஹ்) ஆகியோர் (குழப்பமான சூழ்நிலையில் ஹஜ்ஜுக்குச் செல்வது குறித்துப்) பேசினார்கள்.

அப்போது இப்னு உமர் (ரலி) அவர்கள், “நாங்கள் நபி (ஸல்) அவர்களு டன் உம்ரா செய்வதற்காகப் புறப்பட்டோம்; கஅபாவிற்குச் செல்ல விடாமல் குறைஷி இறைமறுப்பாளர்கள் தடுத்துவிட்டார்கள்; ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவாகள் தம் ஒட்டகங்களை அறுத்து (குர்பானி கொடுத்து)விட்டுத் தமது தலையை மழித்துக்கொண்டார்கள். (இஹ்ராமி லிருந்து விடுபட்டுவிட்டார்கள்)” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 27
1813. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ حِينَ خَرَجَ إِلَى مَكَّةَ مُعْتَمِرًا فِي الْفِتْنَةِ إِنْ صُدِدْتُ عَنِ الْبَيْتِ صَنَعْنَا كَمَا صَنَعْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَهَلَّ بِعُمْرَةٍ، مِنْ أَجْلِ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ أَهَلَّ بِعُمْرَةٍ عَامَ الْحُدَيْبِيَةِ، ثُمَّ إِنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ نَظَرَ فِي أَمْرِهِ فَقَالَ مَا أَمْرُهُمَا إِلاَّ وَاحِدٌ. فَالْتَفَتَ إِلَى أَصْحَابِهِ فَقَالَ مَا أَمْرُهُمَا إِلاَّ وَاحِدٌ، أُشْهِدُكُمْ أَنِّي قَدْ أَوْجَبْتُ الْحَجَّ مَعَ الْعُمْرَةِ، ثُمَّ طَافَ لَهُمَا طَوَافًا وَاحِدًا، وَرَأَى أَنَّ ذَلِكَ مُجْزِيًا عَنْهُ، وَأَهْدَى.
பாடம் : 4 (ஹஜ் அல்லது உம்ராவிலிருந்து) தடுக்கப்பட்டவர் மீண்டும் அதை (‘களா’) செய்ய வேண்டியதில்லை என்ற கருத்து3 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: யார் (தாம்பத்திய) இன்பத்தை அனுப வித்ததன் மூலம் தமது ஹஜ்ஜை முறித்துக் கொள்கிறாரோ அவர்மீதுதான் மீண்டும் (அதை) நிறைவேற்றும் கடமை உள்ளது. இயற்கையான இடையூறோ வேறு ஏதேனும் காரணமோ ஒருவரைத் தடுத் திருந்தால், அவர் இஹ்ராமிலிருந்து விடுபடுவார்; அவர் திரும்ப (‘களா’) செய்ய வேண்டியதில்லை. தடுக்கப்படும்போது அவரிடம் குர்பானி பிராணி இருந்தால், அதைப் பலியிடும் இடத்திற்கு (ஹரமுக்கு) அனுப்ப இயலாவிட்டால், தடுக்கப்பட்ட இடத்திலேயே அதை அறுத்துப் பலியிடு வார். அனுப்ப இயலுமானால் பலிப் பிராணி அதற்குரிய இடத்தை (ஹரமை) அடையும்வரை அவர் இஹ்ராமிலிருந்து விடுபடக் கூடாது. இமாம் மாலிக் (ரஹ்) உள்ளிட்டோர் கூறினார்கள்: தடுக்கப்படுபவர் எந்த இடத்தில் தடுக்கப்பட்டாலும் அங்கு தமது பலிப் பிராணியை அறுத்துப் பலியிட்டுவிட்டு, தலையை மழித்துக்கொள்வார்; (தடுக்கப் பட்ட ஹஜ்ஜை அல்லது உம்ராவை) அவர் திரும்ப நிறைவேற்ற வேண்டியதில்லை. ஏனெனில், நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் ஹுதைபியாவில் (உம்ராவிலிருந்து தடுக்கப்பட்டபோது) அவர்கள் அறுத்துப் பலியிட்டார்கள்; தலையை மழித்துக்கொண்டார்கள்; தவாஃப் செய்வதற்கு முன்பும் பலிப் பிராணி கஅபாவை அடைவதற்கு முன்பும் எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டுவிட்டார்கள். மேலும், நபி (ஸல்) அவர்கள், எதையும் மீண்டும் வந்து (களாவாக) திரும்பச் செய்யுமாறு எவருக்கும் கட்டளையிட்டதாகக் கூறப்படவில்லை. மேலும், ஹுதைபியா எனும் இடம் ஹரம் எல்லைக்கு வெளியே உள்ளதாகும்.
1813. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(அரசியல்) குழப்பம் ஏற்பட்டிருந்த போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் உம்ரா செய்வதற்காக மக்கா புறப்பட்டார்கள். அப்போது “கஅபாவுக்குச் செல்ல விடாமல் நான் தடுக்கப்பட்டால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களு டன் (சென்றபோது) நாங்கள் செய்ததைப் போன்று செய்வோம்” என்றார்கள். ஹுதைபியா ஆண்டின்போது நபி (ஸல்) அவர்கள் உம்ராவிற்கு இஹ்ராம் கட்டிய காரணத்தால் இப்னு உமர் (ரலி) அவர்களும் உம்ராவிற்கு இஹ்ராம் கட்டினார்கள்.

பின்னர் சிந்தித்துப் பார்த்துவிட்டு, “ஹஜ், உம்ரா ஆகிய இரண்டின் நிலையும் ஒன்றுதான்” என்று கூறினார்கள். பின்னர் தம் தோழர்களை நோக்கி, “இவ்விரண்டின் நிலையும் ஒன்றுதான். எனவே, உம்ரா வுடன் ஹஜ்ஜையும் (நிறைவேற்றுவதை என்மீது) நான் கடமையாக்கிக்கொண்டேன் என்பதற்கு உங்களை நான் சாட்சியாக்கு கிறேன்” என்றார்கள்.

பிறகு இவ்விரண்டிற்கும் (ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்கும்) சேர்த்து ஒரே தவாஃப் செய்தார்கள். அதுவே (இரண்டிற்கும்) போதுமானது எனக் கருதினார்கள்; (பலிப் பிராணியை) பலியிடவும் செய்தார்கள்.

அத்தியாயம் : 27
1814. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ حُمَيْدِ بْنِ قَيْسٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ ـ رضى الله عنه ـ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ "" لَعَلَّكَ آذَاكَ هَوَامُّكَ "". قَالَ نَعَمْ يَا رَسُولَ اللَّهِ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" احْلِقْ رَأْسَكَ وَصُمْ ثَلاَثَةَ أَيَّامٍ، أَوْ أَطْعِمْ سِتَّةَ مَسَاكِينَ، أَوِ انْسُكْ بِشَاةٍ "".
பாடம் : 5 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: உங்களில் ஒருவர் நோயாளியாக இருந்தாலோ, அல்லது அவரது தலையில் பாதிப்பு ஏதேனும் இருந்தாலோ (அவர் தலையை மழிக்கலாம். ஆனால்,) அதற்குப் பரிகாரமாக நோன்பு நோற்க வேண்டும்; அல்லது தர்மம் செய்ய வேண்டும்; அல்லது குர்பானி கொடுக்க வேண்டும். (2:196) (இம்மூன்றில் எதைச் செய்வதற்கும்) அவருக்கு அனுமதி உண்டு. நோன்பு நோற்பது என்றால், மூன்று நாட்கள் நோற்க வேண்டும்.4
1814. கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(உம்ராவிற்காக நான் இஹ்ராம் கட்டியிருந்தபோது) என்னிடம் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், “உமது (தலையிலுள்ள) பேன்கள் உமக்குத் துன்பம் தருகின்றனவா?” என்று கேட்டார் கள். நான் “ஆம்! அல்லாஹ்வின் தூதரே!” என்றேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உமது தலையை மழித்துக் கொண்டு, மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக! அல்லது ஆறு ஏழைகளுக்கு உணவளிப்பீராக! அல்லது ஓர் ஆட்டைப் பலியிடுவீராக!” என்றார்கள்.

அத்தியாயம் : 27
1815. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سَيْفٌ، قَالَ حَدَّثَنِي مُجَاهِدٌ، قَالَ سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي لَيْلَى، أَنَّ كَعْبَ بْنَ عُجْرَةَ، حَدَّثَهُ قَالَ وَقَفَ عَلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِالْحُدَيْبِيَةِ، وَرَأْسِي يَتَهَافَتُ قَمْلاً فَقَالَ "" يُؤْذِيكَ هَوَامُّكَ "". قُلْتُ نَعَمْ. قَالَ "" فَاحْلِقْ رَأْسَكَ ـ أَوْ قَالَ ـ احْلِقْ "". قَالَ فِيَّ نَزَلَتْ هَذِهِ الآيَةُ {فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ بِهِ أَذًى مِنْ رَأْسِهِ} إِلَى آخِرِهَا. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" صُمْ ثَلاَثَةَ أَيَّامٍ، أَوْ تَصَدَّقْ بِفَرَقٍ بَيْنَ سِتَّةٍ، أَوِ انْسُكْ بِمَا تَيَسَّرَ "".
பாடம் : 6 “அல்லது தர்மம் செய்ய வேண்டும்” (2:196) எனும் வசனத்தொடர். ‘தர்மம்’ என்பது, ஆறு ஏழைகளுக்கு உணவளிப்பதைக் குறிக்கும்.
1815. கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நான் இஹ்ராம் கட்டியிருந்தபோது) ஹுதைபியாவில் என்னருகில் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்றார்கள். என் தலையிலிருந்து பேன்கள் உதிர்ந்து கொண்டிருந்தன. அப்போது அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், “உமது (தலை யிலுள்ள) பேன்கள் உமக்குத் துன்பம் தருகின்றனவா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன்.

அதற்கு “உமது தலையை மழித்துக் கொள்வீராக” என்றார்கள். என் தொடர் பாகவே, “உங்களில் ஒருவர் நோயாளியாக இருந்தாலோ, அல்லது அவரது தலையில் பாதிப்பு ஏதேனும் இருந்தாலோ...” (2:196) எனும் வசனம் அருளப்பெற்றது.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக! அல்லது மூன்று ‘ஸாஉ’ தானியத்தை ஆறு ஏழைகளுக்குத் தர்மம் செய்வீராக! அல்லது உம்மால் முடிந்ததைப் பலியிடு வீராக!” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 27
1816. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الأَصْبِهَانِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَعْقِلٍ، قَالَ جَلَسْتُ إِلَى كَعْبِ بْنِ عُجْرَةَ ـ رضى الله عنه ـ فَسَأَلْتُهُ عَنِ الْفِدْيَةِ، فَقَالَ نَزَلَتْ فِيَّ خَاصَّةً، وَهْىَ لَكُمْ عَامَّةً، حُمِلْتُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَالْقَمْلُ يَتَنَاثَرُ عَلَى وَجْهِي فَقَالَ "" مَا كُنْتُ أُرَى الْوَجَعَ بَلَغَ بِكَ مَا أَرَى أَوْ مَا كُنْتُ أُرَى الْجَهْدَ بَلَغَ بِكَ مَا أَرَى، تَجِدُ شَاةً "". فَقُلْتُ لاَ. فَقَالَ "" فَصُمْ ثَلاَثَةَ أَيَّامٍ، أَوْ أَطْعِمْ سِتَّةَ مَسَاكِينَ، لِكُلِّ مِسْكِينٍ نِصْفَ صَاعٍ "".
பாடம் : 7 (இஹ்ராம் கட்டிய நிலையில் ஏற்படும் குற்றங்களுக்குப்) பரிகாரமாக ஓர் ஏழைக்கு அரை ‘ஸாஉ’ வீதம் (ஆறு ஏழை களுக்கு) உணவளித்தல்
1816. அப்துல்லாஹ் பின் மஅகல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்களிடம் அமர்ந்திருந்தேன்; (ஹஜ்ஜில் ஏற்படும் குறைகளுக்குப்) பரிகாரம் பற்றி அவர்களிடம் கேட்டேன்; அதற்கு அவர்கள், “என் தொடர்பாகவே அந்த இறைவசனம் (2:196) அருளப்பெற்றது; என்றாலும், அது உங்கள் அனைவருக்கும் பொதுவானதே! பேன்கள் என் முகத்தில் உதிர்ந்துகொண்டிருக்க, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தூக்கிச் செல்லப்பட்டேன்; நபி (ஸல்) அவர்கள், ‘உமக்கு இவ்வளவு அதிகமாக வேதனை ஏற்பட்டிருக்கும் என்று நான் நினைக்கவில்லை, அல்லது ‘உமக்கு இந்த அளவுக்குச் சிரமம் ஏற்பட்டிருக்கும் என்று நான் நினைத்திருக்கவில்லை’ என்று கூறிவிட்டு, உம்மிடம் ஓர் ஆடு இருக்கி றதா?’ என்று கேட்டார்கள்; நான் ‘இல்லை!’ என்றேன்.

நபி (ஸல்) அவர்கள் ‘(தலையை மழித்துக்கொண்டு) மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக! அல்லது ஒவ்வொரு ஏழைக்கும் அரை ‘ஸாஉ’ வீதம் ஆறு ஏழைகளுக்கு உணவளிப்பீராக!’ என்று கூறினார்கள்” என்றார்கள்.

அத்தியாயம் : 27
1817. حَدَّثَنَا إِسْحَاقُ، حَدَّثَنَا رَوْحٌ، حَدَّثَنَا شِبْلٌ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، قَالَ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي لَيْلَى، عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَآهُ وَأَنَّهُ يَسْقُطُ عَلَى وَجْهِهِ فَقَالَ "" أَيُؤْذِيكَ هَوَامُّكَ "". قَالَ نَعَمْ. فَأَمَرَهُ أَنْ يَحْلِقَ وَهُوَ بِالْحُدَيْبِيَةِ، وَلَمْ يَتَبَيَّنْ لَهُمْ أَنَّهُمْ يَحِلُّونَ بِهَا، وَهُمْ عَلَى طَمَعٍ أَنْ يَدْخُلُوا مَكَّةَ، فَأَنْزَلَ اللَّهُ الْفِدْيَةَ، فَأَمَرَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يُطْعِمَ فَرَقًا بَيْنَ سِتَّةٍ، أَوْ يُهْدِيَ شَاةً، أَوْ يَصُومَ ثَلاَثَةَ أَيَّامٍ.
பாடம் : 8 (2:196ஆவது வசனத்தில் இடம் பெற்றுள்ள) ‘குர்பானி’ என்பது ஆட்டைப் பலியிடுவதைக் குறிக்கும்.
1817. 1818 கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(உம்ராவுக்கு இஹ்ராம் கட்டியிருந்த) என் முகத்தில் பேன்கள் விழுந்து கொண் டிருந்தபோது என்னை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். “உமது (தலையிலுள்ள) பேன்கள் உமக்குத் துன்பம் தருகின்றனவா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன்.

நான் ஹுதைபியாவில் இருந்தபோது, நபி (ஸல்) அவர்கள் என் தலையை மழிக்குமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். மக்காவிற்குள் நுழைய வேண்டுமென்ற எதிர்பார்ப்பில் இருந்த மக்களுக்கு, அங்கு (ஹுதைபியாவில்)தான் இஹ்ராமிலிருந்து விடுபடப்போகிறார்கள் என்பது அப்போது தெளிவாகாமல் இருந்தது.

இந்நிலையில்தான், அல்லாஹ் பரிகாரம் தொடர்பான வசனத்தை அருளினான். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “மூன்று ஸாஉ தானியத்தை ஆறு பேருக்கு வழங்க வேண்டும்; அல்லது ஓர் ஆட்டைப் பலியிட வேண்டும்; அல்லது மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும்” என்று எனக்குக் கட்டளை யிட்டார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 27
1819. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَنْ حَجَّ هَذَا الْبَيْتَ، فَلَمْ يَرْفُثْ وَلَمْ يَفْسُقْ، رَجَعَ كَمَا وَلَدَتْهُ أُمُّهُ "".
பாடம் : 9 “ஹஜ்ஜின்போது தாம்பத்திய உறவு கூடாது” (2:197) எனும் வசனத்தொடர்
1819. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் தாம்பத்திய உறவு கொள்ளாமலும் எந்தப் பாவமும் செய்யாமலும் யார் இந்த ஆலயத்தை ஹஜ் செய்கிறாரோ அவர் அன்று பிறந்த பாலகனைப் போன்று திரும்புகிறார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 27
1820. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَنْ حَجَّ هَذَا الْبَيْتَ، فَلَمْ يَرْفُثْ، وَلَمْ يَفْسُقْ، رَجَعَ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ "".
பாடம் : 10 “ஹஜ்ஜின்போது குற்றம் புரிவதோ தர்க்கம் செய்வதோ கூடாது” (2:197) எனும் வசனத் தொடர்
1820. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் தாம்பத்திய உறவு கொள்ளாமலும் எந்தப் பாவமும் செய்யாமலும் இந்த ஆலயத்தை ஹஜ் செய்கிறாரோ அவர் அன்று பிறந்த பாலகனைப் போன்று திரும்புகிறார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 27