1733. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ جَعْفَرِ بْنِ رَبِيعَةَ، عَنِ الأَعْرَجِ، قَالَ حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ حَجَجْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَفَضْنَا يَوْمَ النَّحْرِ، فَحَاضَتْ صَفِيَّةُ، فَأَرَادَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنْهَا مَا يُرِيدُ الرَّجُلُ مِنْ أَهْلِهِ. فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّهَا حَائِضٌ. قَالَ "" حَابِسَتُنَا هِيَ "". قَالُوا يَا رَسُولَ اللَّهِ، أَفَاضَتْ يَوْمَ النَّحْرِ. قَالَ "" اخْرُجُوا "". وَيُذْكَرُ عَنِ الْقَاسِمِ وَعُرْوَةَ وَالأَسْوَدِ عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَفَاضَتْ صَفِيَّةُ يَوْمَ النَّحْرِ.
பாடம் : 129 துல்ஹஜ் பத்தாம் நாள் ‘தவாஃபுஸ் ஸியாரத்’ செய்தல்63 நபி (ஸல்) அவர்கள் தவாஃபுஸ் ஸியாரத்தை இரவுவரை தாமதமாக்கினார்கள் என ஆயிஷா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் அறிவித்துள்ளனர். நபி (ஸல்) அவர்கள் மினாவில் தங்கும் நாட்களில் தவாபுஸ் ஸியாரா செய்தார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
1733. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்தோம். துல்ஹஜ் பத்தாம் நாள் நாங்கள், (தவாஃபுஸ் ஸியாரா) செய்தபோது, ஸஃபிய்யா (ரலி) அவர்களுக்கு மாத விடாய் ஏற்பட்டுவிட்டது. நபி (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸஃபிய்யா (ரலி) அவர்களிடம் ஓர் ஆண் தன் மனைவியிடம் எதிர்பார்ப்பதை (தாம்பத்திய உறவு கொள்ள) நாடினார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! அவருக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே!” என்றேன்.

அதற்கு அவர்கள், “அவர் (நமது பயணத்தைத்) தடுத்துவிட்டாரா?” எனக் கேட்டார்கள். உடனே தோழர்கள், “அவர் துல்ஹஜ் பத்தாம் நாளே ‘தவாஃபுல் இஃபாளா’ செய்துவிட்டார்” என்றனர். “அப்படியாயின் புறப்படுங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் சில அறிவிப்புகளில், ஸஃபிய்யா (ரலி) அவர்கள் துல்ஹஜ் பத்தாம் நாள் தவாஃபுல் இஃபாளா செய்தார் என ஆயிஷா (ரலி) அவர்களே கூறியதாகக் காணப்படுகிறது.

அத்தியாயம் : 25
1734. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا ابْنُ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قِيلَ لَهُ فِي الذَّبْحِ وَالْحَلْقِ وَالرَّمْىِ وَالتَّقْدِيمِ وَالتَّأْخِيرِ فَقَالَ "" لاَ حَرَجَ "".
பாடம் : 130 மறதியினாலோ அறியாமை யினாலோ மாலை நேரத்தில் கல்லெறிவதும் குர்பானி கொடுக்கப்படுவதற்கு முன்பு தலையை மழிப்பதும்
1734. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் (துல்ஹஜ் பத்தாம் நாள் செய்ய வேண்டிய) குர்பானி கொடுப்பது, தலையை மழிப்பது, கல்லெறி வது ஆகியவற்றை முன் பின்னாகச் செய்வது குறித்து வினவப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், “குற்றமில்லை” எனக் கூறினார்கள்.


அத்தியாயம் : 25
1735. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُسْأَلُ يَوْمَ النَّحْرِ بِمِنًى، فَيَقُولُ "" لاَ حَرَجَ "". فَسَأَلَهُ رَجُلٌ، فَقَالَ حَلَقْتُ قَبْلَ أَنْ أَذْبَحَ. قَالَ "" اذْبَحْ، وَلاَ حَرَجَ "". وَقَالَ رَمَيْتُ بَعْدَ مَا أَمْسَيْتُ. فَقَالَ "" لاَ حَرَجَ "".
பாடம் : 130 மறதியினாலோ அறியாமை யினாலோ மாலை நேரத்தில் கல்லெறிவதும் குர்பானி கொடுக்கப்படுவதற்கு முன்பு தலையை மழிப்பதும்
1735. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மினாவில் இருந்தபோது துல்ஹஜ் பத்தாம் நாள் (பல கேள்விகள்) கேட்கப்பட்டதற்கு, “குற்றமில்லை” என்றே பதில் கூறினார்கள்.

ஒருவர் “நான் குர்பானி கொடுப்பதற்குமுன் தலையை மழித்துவிட்டேன்!” என்றார், நபி (ஸல்) அவர்கள் “குற்றமில்லை; (இப்போது) குர்பானி கொடுப்பீராக!” என்று கூறினார்கள். பிறகு அவர் “நான் மாலை நேரமான பின்பே கல்லெறிந்தேன்” என்றதும் நபி (ஸல்) அவர்கள் “குற்றமில்லை” என்றார்கள்.

அத்தியாயம் : 25
1736. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عِيسَى بْنِ طَلْحَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَقَفَ فِي حَجَّةِ الْوَدَاعِ، فَجَعَلُوا يَسْأَلُونَهُ، فَقَالَ رَجُلٌ لَمْ أَشْعُرْ فَحَلَقْتُ قَبْلَ أَنْ أَذْبَحَ. قَالَ "" اذْبَحْ وَلاَ حَرَجَ "". فَجَاءَ آخَرُ فَقَالَ لَمْ أَشْعُرْ فَنَحَرْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ. قَالَ "" ارْمِ وَلاَ حَرَجَ "". فَمَا سُئِلَ يَوْمَئِذٍ عَنْ شَىْءٍ قُدِّمَ وَلاَ أُخِّرَ إِلاَّ قَالَ افْعَلْ وَلاَ حَرَجَ.
பாடம் : 131 (ஹஜ்ஜில் கல்லெறியும் இடமான) ஜம்ராவில் வாகனத்தில் அமர்ந்து கொண்டு (மக்களுக்குத்) தீர்ப் பளித்தல்
1736. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடைபெறும் ஹஜ்ஜின்போது (மினாவில் தமது வாகனத்தின் மீது) அமர்ந்திருந் தார்கள். அப்போது மக்கள் அவர்களிடம் (சில சந்தேகங்களைக்) கேட்கத் தொடங் கினர். ஒருவர், “நான் பலியிடுவதற்கு முன்பாக, தெரியாமல் தலையை மழித்து விட்டேன்” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “குற்றமில்லை. (இப்போது குர்பானி பிராணியை) அறுப்பீராக!” என்று கூறினார்கள்.

பிறகு மற்றொருவர் வந்து, “கல்லெறி வதற்கு முன்பு தெரியாமல் அறுத்து குர்பானி கொடுத்துவிட்டேன்” என்றார். நபியவர்கள், “குற்றமில்லை இப்போது கல்லெறிவீராக!” என்று கூறினார்கள். அன்று முந்திச் செய்யப்பட்டது என்றோ, பிந்திச் செய்யப்பட்டது என்றோ கேட்கப் பட்ட எந்தக் கேள்விக்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “குற்றமில்லை (விடுபட்டதைச் இப்போது) செய்வீராக!” என்றே விடையளித்தார்கள்.


அத்தியாயம் : 25
1737. حَدَّثَنَا سَعِيدُ بْنُ يَحْيَى بْنِ سَعِيدٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، حَدَّثَنِي الزُّهْرِيُّ، عَنْ عِيسَى بْنِ طَلْحَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ ـ رضى الله عنه ـ حَدَّثَهُ أَنَّهُ، شَهِدَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَخْطُبُ يَوْمَ النَّحْرِ، فَقَامَ إِلَيْهِ رَجُلٌ، فَقَالَ كُنْتُ أَحْسِبُ أَنَّ كَذَا قَبْلَ كَذَا. ثُمَّ قَامَ آخَرُ فَقَالَ كُنْتُ أَحْسِبُ أَنَّ كَذَا قَبْلَ كَذَا حَلَقْتُ قَبْلَ أَنْ أَنْحَرَ، نَحَرْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ. وَأَشْبَاهَ ذَلِكَ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" افْعَلْ وَلاَ حَرَجَ "". لَهُنَّ كُلِّهِنَّ، فَمَا سُئِلَ يَوْمَئِذٍ عَنْ شَىْءٍ إِلاَّ قَالَ افْعَلْ وَلاَ حَرَجَ.
பாடம் : 131 (ஹஜ்ஜில் கல்லெறியும் இடமான) ஜம்ராவில் வாகனத்தில் அமர்ந்து கொண்டு (மக்களுக்குத்) தீர்ப் பளித்தல்
1737. 1738 அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் பத்தாம் நாள் உரை நிகழ்த்திக்கொண்டிருக்கும் போது நான் அங்கிருந்தேன். அப்போது ஒருவர் எழுந்து, “நான் இன்ன கிரியைக்குமுன் இன்ன கிரியை என எண்ணிக்கொண்டிருந்தேன்” என்றார். மற்றொருவர் எழுந்து, “நான் இன்னதற்குமுன் இன்னது என எண்ணியிருந்தேன். குர்பானி கொடுப்பதற்குமுன் தலையை மழித்துவிட்டேன்; கல்லெறிவதற்குமுன் குர்பானி கொடுத்துவிட்டேன்” என்பன போன்றவற்றைக் கூறலானார்.

அவை அனைத்திற்குமே நபி (ஸல்) அவர்கள், “குற்றமில்லை விடுபட்டதைச் செய்யுங்கள்” என்றே கூறினார்கள். அன்று கேட்கப்பட்ட எல்லாக் கேள்விகளுக்கும் “குற்றமில்லை (விடுபட்டதைச்) செய்யுங் கள்” என்றே நபியவர்கள் விடையளித் தார்கள்.64

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் ஓர் அறிவிப்பில், “(அன்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்தில் அமர்ந்திருந்தார்கள்” என்று ஹதீஸ் தொடங்குகிறது.

அத்தியாயம் : 25
1739. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنِي يَحْيَى بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا فُضَيْلُ بْنُ غَزْوَانَ، حَدَّثَنَا عِكْرِمَةُ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَطَبَ النَّاسَ يَوْمَ النَّحْرِ فَقَالَ "" يَا أَيُّهَا النَّاسُ. أَىُّ يَوْمٍ هَذَا "". قَالُوا يَوْمٌ حَرَامٌ. قَالَ "" فَأَىُّ بَلَدٍ هَذَا "". قَالُوا بَلَدٌ حَرَامٌ. قَالَ "" فَأَىُّ شَهْرٍ هَذَا "". قَالُوا شَهْرٌ حَرَامٌ. قَالَ "" فَإِنَّ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ وَأَعْرَاضَكُمْ عَلَيْكُمْ حَرَامٌ، كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا، فِي بَلَدِكُمْ هَذَا فِي شَهْرِكُمْ هَذَا "". فَأَعَادَهَا مِرَارًا، ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَقَالَ "" اللَّهُمَّ هَلْ بَلَّغْتُ اللَّهُمَّ هَلْ بَلَّغْتُ "". قَالَ ابْنُ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّهَا لَوَصِيَّتُهُ إِلَى أُمَّتِهِ ـ "" فَلْيُبْلِغِ الشَّاهِدُ الْغَائِبَ، لاَ تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ "".
பாடம் : 132 மினாவில் தங்கும் நாட்களில் உரை நிகழ்த்துதல்65
1739. 1740 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் துல்ஹஜ் பத்தாம் நாள் உரை நிகழ்த்தி னார்கள். அப்போது “மக்களே! இது எந்த நாள்?” எனக் கேட்டார்கள். மக்கள் ‘புனித நாள்’ என்றனர். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இது எந்த நகரம்?” எனக் கேட்டார்கள். மக்கள் ‘புனித நகரம்’ என்றனர். பிறகு அவர்கள், “இது எந்த மாதம்?” எனக் கேட்டதும் மக்கள் “புனித மாதம்!” என்றனர்.66

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவாகள், “நிச்சயமாக உங்களுடைய இந்த மாதத்தில், உங்களுடைய இந்த நகரத்தில், உங்களுடைய இந்த நாள் எவ்வாறு புனிதம் பெற்று விளங்குகிறதோ அவ்வாறே உங்களின் உயிர்களும் உடைமைகளும் மானமும் உங்களுக்குப் புனிதமானவையாகும்” எனப் பல தடவை கூறினார்கள். பிறகு தலையை உயர்த்தி, “இறைவா! நான் (உன் செய்திகள் அனைத்தையும்) சேர்த்துவிட்டேனா? இறைவா! நான் (உன் செய்திகள் அனைத்தையும்) சேர்த்துவிட்டேனா?” என்று கேட்டார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(வ்விறை)வன் மீது சத்தியமாக! இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் சமுதாயத்தாருக்குச் செய்த இறுதி உபதேசமாகும்.

பின்னர் “இங்கு வந்தவர்கள் வராதவர் களுக்கு இதை அறிவித்துவிடுங்கள். என(து இறப்பு)க்குப்பின் ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் நிராகரிப்பவர்களாய் மாறி விடாதீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஓர் அறிவிப்பில், “நபி (ஸல்) அவர்கள் அரஃபாவில் உரை நிகழ்த்த நான் கேட்டேன்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.


அத்தியாயம் : 25
1741. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ، حَدَّثَنَا قُرَّةُ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، قَالَ أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِي بَكْرَةَ،، وَرَجُلٌ، أَفْضَلُ فِي نَفْسِي مِنْ عَبْدِ الرَّحْمَنِ حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي بَكْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ خَطَبَنَا النَّبِيُّ صلى الله عليه وسلم يَوْمَ النَّحْرِ، قَالَ "" أَتَدْرُونَ أَىُّ يَوْمٍ هَذَا "". قُلْنَا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. فَسَكَتَ حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ بِغَيْرِ اسْمِهِ. قَالَ "" أَلَيْسَ يَوْمَ النَّحْرِ "". قُلْنَا بَلَى. قَالَ "" أَىُّ شَهْرٍ هَذَا "". قُلْنَا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. فَسَكَتَ حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ بِغَيْرِ اسْمِهِ. فَقَالَ "" أَلَيْسَ ذُو الْحَجَّةِ "". قُلْنَا بَلَى. قَالَ "" أَىُّ بَلَدٍ هَذَا "". قُلْنَا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. فَسَكَتَ حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ بِغَيْرِ اسْمِهِ. قَالَ "" أَلَيْسَتْ بِالْبَلْدَةِ الْحَرَامِ "". قُلْنَا بَلَى. قَالَ "" فَإِنَّ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ عَلَيْكُمْ حَرَامٌ، كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا، فِي شَهْرِكُمْ هَذَا، فِي بَلَدِكُمْ هَذَا، إِلَى يَوْمِ تَلْقَوْنَ رَبَّكُمْ. أَلاَ هَلْ بَلَّغْتُ "". قَالُوا نَعَمْ. قَالَ "" اللَّهُمَّ اشْهَدْ، فَلْيُبَلِّغِ الشَّاهِدُ الْغَائِبَ، فَرُبَّ مُبَلَّغٍ أَوْعَى مِنْ سَامِعٍ، فَلاَ تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ "".
பாடம் : 132 மினாவில் தங்கும் நாட்களில் உரை நிகழ்த்துதல்65
1741. அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாம்) நாளில் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது, “இது எந்த நாள் என்பதை நீங்கள் அறிவீர் களா?” எனக் கேட்டார்கள். நாங்கள் “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்” என்றோம். அந்நாளுக்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்துவிட்டு, “இது நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாம்) நாளல்லவா?” என்று கேட்டார்கள். நாங்கள் “ஆம்” என்றோம்.

பிறகு “இது எந்த மாதம்?” என அவர்கள் கேட்டதும் நாங்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நன்கறிவர்” என்றோம். அப்போதும் அம்மாதத்துக்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்தார்கள். பிறகு, “இது துல்ஹஜ் மாதம் அல்லவா?” என அவர்கள் கேட்க, நாங்கள் “ஆம்” என்றோம்.

பிறகு “இது எந்த நகரம்?” எனக் கேட்டார்கள். அதற்கு நாங்கள் “அல்லாஹ் வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்” என்றோம். அப்போதும் அவர்கள் அதற்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்தார்கள். பிறகு “இது புனித நகரமல்லவா?” எனக் கேட்க, நாங்கள் “ஆம்” என்றோம்.

பிறகு “உங்களுடைய (புனிதமிக்க) இந்த நகரத்தில் உங்களுடைய (புனிதமிக்க) இந்த மாதத்தில் இன்றைய தினம் எந்த அளவுக்குப் புனிதமானதோ அந்த அளவுக்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் நீங்கள் உங்கள் இரட்ச கனைச் சந்திக்கும் நாள் (மறுமை)வரை புனிதமானவையாகும்” என்று கூறிவிட்டு, “நான் உங்களிடம் (இறைச்செய்திகள் அனைத்தையும்) சேர்த்துவிட்டேனா?” எனக் கேட்டார்கள். மக்கள் “ஆம்” என்றனர்.

பிறகு அவர்கள், “இறைவா! இதற்கு நீயே சாட்சி. இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு அறிவித்துவிடுங்கள்! ஏனெனில், (ஒன்றைச்) செவியுறுபவரைவிட அவரிடம் செவியுறும் எத்தனையோ பேர் (அதை நன்கு விளங்கி) பாதுகாப்போராக இருக்கலாம். எனக்குப்பின் ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக்கொள்ளும் நிராகரிப்பாளர்களாய் மாறிவிடாதீர்கள்” எனக் கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 25
1742. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا عَاصِمُ بْنُ مُحَمَّدِ بْنِ زَيْدٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِمِنًى "" أَتَدْرُونَ أَىُّ يَوْمٍ هَذَا "". قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. فَقَالَ "" فَإِنَّ هَذَا يَوْمٌ حَرَامٌ، أَفَتَدْرُونَ أَىُّ بَلَدٍ هَذَا "". قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ "" بَلَدٌ حَرَامٌ، أَفَتَدْرُونَ أَىُّ شَهْرٍ هَذَا "". قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ "" شَهْرٌ حَرَامٌ ـ قَالَ ـ فَإِنَّ اللَّهَ حَرَّمَ عَلَيْكُمْ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ وَأَعْرَاضَكُمْ، كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا، فِي شَهْرِكُمْ هَذَا، فِي بَلَدِكُمْ هَذَا "". وَقَالَ هِشَامُ بْنُ الْغَازِ أَخْبَرَنِي نَافِعٌ عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ وَقَفَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَوْمَ النَّحْرِ بَيْنَ الْجَمَرَاتِ فِي الْحَجَّةِ الَّتِي حَجَّ بِهَذَا، وَقَالَ "" هَذَا يَوْمُ الْحَجِّ الأَكْبَرِ ""، فَطَفِقَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقُولُ "" اللَّهُمَّ اشْهَدْ "". وَوَدَّعَ النَّاسَ. فَقَالُوا هَذِهِ حَجَّةُ الْوَدَاعِ.
பாடம் : 132 மினாவில் தங்கும் நாட்களில் உரை நிகழ்த்துதல்65
1742. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மினாவில் இருந்தபோது, “இது எந்த நாள் என்பதை நீங்கள் அறிவீர்களா?” எனக் கேட்டார்கள். அதற்கு மக்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்” என்றனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இது புனித நாளாகும்; இது எந்த நகரம் என்பதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார்கள்.

மக்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்” என்றனர். அப்போது நபியவர்கள் “(இது) புனித நகரமாகும்; இது எந்த மாதம் என்பதை அறிவீர்களா?” என்று கேட்டார்கள். மக்கள், “அல்லாஹ் வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்” என்றனர்.

பிறகு நபி (ஸல்) அவர்கள், “(இது) புனித மாதமாகும்” எனக் கூறிவிட்டு, “உங்களுடைய இந்த (புனித) நகரத்தில் இந்த (புனித) மாதத்தில் உங்களுடைய இந்த நாள் எந்த அளவுக்குப் புனித மானதோ அந்த அளவுக்கு உங்கள் உயிர்களையும் உடைமைகளையும் உங்கள் மானம் மரியாதைகளையும் அல்லாஹ் புனிதமாக்கியுள்ளான்” எனக் கூறினார்கள்.

மற்றோர் அறிவிப்பில், “நபி (ஸல்) அவர்கள், மேற்கொண்ட ஹஜ்ஜின்போது நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாம்) நாளில் (ஷைத்தானுக்குக் கல்லெறியும் இடங் களான) ‘ஜம்ரா’க்கள் இடையே நின்று கொண்டு இந்த ஹதீஸைக் கூறினார்கள்” என இடம்பெற்றுள்ளது.

“மேலும், இது (துல்ஹஜ் பத்தாம் நாள்), மாபெரும் ஹஜ்ஜின் (அல்ஹஜ்ஜுல் அக்பர்) தினமாகும்” என்றும் கூறினார்கள்; மேலும், “இறைவா! நீயே சாட்சி” என்றும் கூறி மக்களிடமிருந்து விடைபெற்றார்கள். எனவே மக்களும், “இது (நபி (ஸல்) அவர்கள் நம்மிடம்) விடைபெற்ற ஹஜ்ஜாகும் (ஹஜ்ஜத்துல் வதா)” எனப் பேசிக்கொண்டனர்.

அத்தியாயம் : 25
1743. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ بْنِ مَيْمُونٍ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ رَخَّصَ النَّبِيُّ صلى الله عليه وسلم.
பாடம் : 133 தண்ணீர் வழங்குபவர்களோ மற்றவர்களோ மினாவில் தங்க வேண்டிய இரவுகளில் மக்காவில் தங்கலாமா?
1743. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்காவில் (ஹாஜிகளுக்கு) தண்ணீர் வழங்க வேண்டியிருப்பதால் மினாவில் தங்க வேண்டிய இரவுகளில் மக்காவில் தங்குவதற்கு அப்பாஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டர்கள். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதி யளித்தார்கள்.67

இந்த ஹதீஸ் (மொத்தம்) ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 25
1746. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا مِسْعَرٌ، عَنْ وَبَرَةَ، قَالَ سَأَلْتُ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ مَتَى أَرْمِي الْجِمَارَ قَالَ إِذَا رَمَى إِمَامُكَ فَارْمِهْ. فَأَعَدْتُ عَلَيْهِ الْمَسْأَلَةَ، قَالَ كُنَّا نَتَحَيَّنُ، فَإِذَا زَالَتِ الشَّمْسُ رَمَيْنَا.
பாடம் : 134 (ஷைத்தானுக்கு) கற்கள் எறி யுதல்68 நபி (ஸல்) அவர்கள் நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாம்) நாளில் முற்பகல் (ளுஹா) நேரத்தில் (ஷைத்தானுக்கு) கல்லெறிந்தார்கள். மறு நாட்களில் சூரியன் உச்சி சாய்ந்ததும் கல்லெறிந்தார்கள் என ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
1746. வபரா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் “நான் (நஹ்ருடைய நாட்கள் அல்லாத நாட்களில்) எப்போது (ஷைத்தானுக்கு) கல் எறிய வேண்டும்?” எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் “உம்முடைய (ஹஜ்) தலைவர் எறியும்போது நீரும் எறியும்!” என்றார்கள். நான் மீண்டும் அதே கேள்வி கேட்டபோது, “நாங்கள் சூரியன் உச்சி சாயும்வரை காத்திருப்போம்; பிறகு கல்லெறிவோம்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 25
1747. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، قَالَ رَمَى عَبْدُ اللَّهِ مِنْ بَطْنِ الْوَادِي، فَقُلْتُ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ، إِنَّ نَاسًا يَرْمُونَهَا مِنْ فَوْقِهَا، فَقَالَ وَالَّذِي لاَ إِلَهَ غَيْرُهُ هَذَا مَقَامُ الَّذِي أُنْزِلَتْ عَلَيْهِ سُورَةُ الْبَقَرَةِ صلى الله عليه وسلم. وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ الْوَلِيدِ حَدَّثَنَا سُفْيَانُ حَدَّثَنَا الأَعْمَشُ بِهَذَا.
பாடம் : 135 ‘பத்னுல் வாதீ’ எனும் பள்ளத் திலிருந்து (ஷைத்தானுக்கு) கல்லெறிதல்69
1747. அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், ‘பத்னுல் வாதி’ பள்ளத்திலிருந்து கல்லெறிந்தார்கள். அப்போது நான், “அப்துர் ரஹ்மானின் தந்தையே! மக்கள் மேற்பரப்பில் இருந்தல்லவா கல்லை எறிகின்றனர்?” எனக் கேட்டேன்.

அதற்கு அவர்கள், “எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன் மீதாணையாக! ‘அல்பகரா’ அத்தியாயம் யாருக்கு அருளப்பட்டதோ அந்த நபி (ஸல்) அவர்கள் (கல் எறிந்த வண்ணம்) நின்றிருந்த இடம் இதுதான்” எனக் கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 25
1748. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ أَنَّهُ انْتَهَى إِلَى الْجَمْرَةِ الْكُبْرَى جَعَلَ الْبَيْتَ عَنْ يَسَارِهِ، وَمِنًى عَنْ يَمِينِهِ، وَرَمَى بِسَبْعٍ، وَقَالَ هَكَذَا رَمَى الَّذِي أُنْزِلَتْ عَلَيْهِ سُورَةُ الْبَقَرَةِ صلى الله عليه وسلم.
பாடம் : 136 (ஜம்ராக்களின் மீது கல்லெறி யும்போது) ஏழு சிறு கற்களை எறிதல் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு எறிந்த தாக இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
1748. அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் பெரிய ஜம்ராவுக்கு (ஜம்ரத்துல் அகபாவுக்கு) வந்ததும், தமது இடப் பக்கத்தில் இறையில்லம் கஅபாவும் வலப் பக்கத்தில் மினாவும் இருக்கும்படி நின்றுகொண்டு, ஏழு சிறு கற்களை எறிந்தார்கள்.

பிறகு “இவ்வாறுதான், ‘அல்பகரா’ அத்தியாயம் யாருக்கு அருளப்பட்டதோ அந்த நபி (ஸல்) அவர்களும் எறிந்தார் கள்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 25
1749. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا الْحَكَمُ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، أَنَّهُ حَجَّ مَعَ ابْنِ مَسْعُودٍ ـ رضى الله عنه ـ فَرَآهُ يَرْمِي الْجَمْرَةَ الْكُبْرَى بِسَبْعِ حَصَيَاتٍ، فَجَعَلَ الْبَيْتَ عَنْ يَسَارِهِ، وَمِنًى عَنْ يَمِينِهِ، ثُمَّ قَالَ هَذَا مَقَامُ الَّذِي أُنْزِلَتْ عَلَيْهِ سُورَةُ الْبَقَرَةِ.
பாடம் : 137 ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறியும்போது இறையில்லம் கஅபா இடப் பக்கம் அமையுதல்
1749. அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர் களுடன் ஹஜ் செய்தேன்; அப்போது அவர்கள் ஜம்ரத்துல் அகபாவில் ஏழு சிறு கற்களை எறிந்தார்கள். அவர்கள் தமது இடப் பக்கத்தில் கஅபாவும் வலப் பக்கத்தில் மினாவும் இருக்குமாறு நின்று கொண்டார்கள்.

பிறகு அவர்கள், “இதுவே ‘அல்பகரா’ அத்தியாயம் யாருக்கு அருளப்பட்டதோ அவர்கள் கல்லெறிந்த இடமாகும்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 25
1750. حَدَّثَنَا مُسَدَّدٌ، عَنْ عَبْدِ الْوَاحِدِ، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ سَمِعْتُ الْحَجَّاجَ، يَقُولُ عَلَى الْمِنْبَرِ السُّورَةُ الَّتِي يُذْكَرُ فِيهَا الْبَقَرَةُ، وَالسُّورَةُ الَّتِي يُذْكَرُ فِيهَا آلُ عِمْرَانَ، وَالسُّورَةُ الَّتِي يُذْكَرُ فِيهَا النِّسَاءُ. قَالَ فَذَكَرْتُ ذَلِكَ لإِبْرَاهِيمَ، فَقَالَ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ يَزِيدَ أَنَّهُ كَانَ مَعَ ابْنِ مَسْعُودٍ ـ رضى الله عنه ـ حِينَ رَمَى جَمْرَةَ الْعَقَبَةِ، فَاسْتَبْطَنَ الْوَادِيَ، حَتَّى إِذَا حَاذَى بِالشَّجَرَةِ اعْتَرَضَهَا، فَرَمَى بِسَبْعِ حَصَيَاتٍ، يُكَبِّرُ مَعَ كُلِّ حَصَاةٍ، ثُمَّ قَالَ مِنْ هَا هُنَا وَالَّذِي لاَ إِلَهَ غَيْرُهُ قَامَ الَّذِي أُنْزِلَتْ عَلَيْهِ سُورَةُ الْبَقَرَةِ صلى الله عليه وسلم.
பாடம் : 138 ஒவ்வொரு கல்லையும் எறியும் போது தக்பீர் கூற வேண்டும். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் செய்த தாக இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
1750. சுலைமான் பின் மஹ்ரான் அல்அஃமஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது இருந்தபடி, (அல்பகரா அத்தியாயம் என்று கூறாமல்) ‘பசுமாடு பற்றிக் கூறப்படுகின்ற அத்தியாயம்’ என்றும், (ஆலு இம்ரான் அத்தியாயம் என்று கூறாமல்) ‘இம்ரானின் சந்ததிகள் பற்றிக் கூறப்படுகின்ற அத்தியாயம்’ என்றும், (அந்நிசா அத்தியாயம் என்று கூறாமல்) ‘பெண்கள் பற்றிக் கூறப்படும் அத்தியாயம்’ என்றும் கூறியதை நான் செவியுற்றேன். இது பற்றி நான் இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்களிடம் கூறியபோது அவர்கள், அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் (பின்வருமாறு) கூறியதாகத் தெரிவித்தார்கள்:

இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறியும்போது நான் அவர்களுடன் இருந்தேன். அவர்கள் பத்னுல் வாதி எனும் பள்ளத்தில் இறங்கி, அதில் உள்ள மரத்திற்கு நேராக வந்ததும் அதன் குறுக்கே நின்றுகொண்டு ஏழு கற்களை (ஒவ்வொன்றாக) எறிந்தார்கள். ஒவ்வொரு கல்லை எறியும்போதும் தக்பீர் கூறினார்கள்.

“பிறகு அல்லாஹ்வின் மீதாணையாக! யாருக்கு அல்பகரா அத்தியாயம் அருளப்பட்டதோ அந்த நபி (ஸல்) அவர்கள் இந்த இடத்தில்தான் (கல்லெறிந் தபடி) நின்றார்கள்” என இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அத்தியாயம் : 25
1751. حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا طَلْحَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّهُ كَانَ يَرْمِي الْجَمْرَةَ الدُّنْيَا بِسَبْعِ حَصَيَاتٍ، يُكَبِّرُ عَلَى إِثْرِ كُلِّ حَصَاةٍ، ثُمَّ يَتَقَدَّمُ حَتَّى يُسْهِلَ فَيَقُومَ مُسْتَقْبِلَ الْقِبْلَةِ فَيَقُومُ طَوِيلاً، وَيَدْعُو وَيَرْفَعُ يَدَيْهِ، ثُمَّ يَرْمِي الْوُسْطَى، ثُمَّ يَأْخُذُ ذَاتَ الشِّمَالِ فَيَسْتَهِلُ وَيَقُومُ مُسْتَقْبِلَ الْقِبْلَةِ فَيَقُومُ طَوِيلاً وَيَدْعُو وَيَرْفَعُ يَدَيْهِ، وَيَقُومُ طَوِيلاً، ثُمَّ يَرْمِي جَمْرَةَ ذَاتِ الْعَقَبَةِ مِنْ بَطْنِ الْوَادِي، وَلاَ يَقِفُ عِنْدَهَا ثُمَّ يَنْصَرِفُ فَيَقُولُ هَكَذَا رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَفْعَلُهُ.
பாடம் : 139 ஜம்ரத்துல் அகபாவில் கல்லெ றிந்த பின்பு அங்கு நிற்காமல் வந்துவிடுவது இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் செய்ததாக இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.70 பாடம் : 140 இரண்டு ஜம்ராக்களில் கல்லெ றிந்த பின்பு கிப்லாவை முன் னோக்கிச் சமதளத்தில் நிற்பது71
1751. சாலிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள் முதல் ஜம்ராவில் ஏழு கற்களை எறிவார்கள். ஒவ்வொன்றையும் எறிந்ததும் தக்பீர் கூறுவார்கள். பிறகு முன்னேறி சமதளப் பகுதிக்கு வந்து கிப்லாவை முன்னோக்கி நிற்பார்கள். தம் கைகளை உயர்த்தி, நீண்ட நேரம் நின்று பிரார்த்திப்பார்கள்.

பின்பு இரண்டாவது ஜம்ராவில் கல்லெறிவார்கள். பிறகு இடது பக்கமாக நகர்ந்து, சமதளப் பகுதிக்குப் போய், கிப்லாவை முன்னோக்கி, நீண்ட நேரம் நின்று, கைகளை உயர்த்திப் பிரார்த்திப்பார் கள். பின்பு ‘பத்னுல் வாதி’ பள்ளத்திலிருந்து கடைசி ஜம்ராவில் கல்லெறிவார்கள்; ஆனால், அங்கு நிற்கமாட்டார்கள். பிறகு திரும்பிவிடுவார்கள்.

“இவ்வாறுதான் நபி (ஸல்) அவர்கள் செய்ய நான் பார்த்திருக்கிறேன்” எனக் கூறுவார்கள்.

அத்தியாயம் : 25
1752. حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي أَخِي، عَنْ سُلَيْمَانَ، عَنْ يُونُسَ بْنِ يَزِيدَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ كَانَ يَرْمِي الْجَمْرَةَ الدُّنْيَا بِسَبْعِ حَصَيَاتٍ، ثُمَّ يُكَبِّرُ عَلَى إِثْرِ كُلِّ حَصَاةٍ، ثُمَّ يَتَقَدَّمُ فَيُسْهِلُ، فَيَقُومُ مُسْتَقْبِلَ الْقِبْلَةِ قِيَامًا طَوِيلاً، فَيَدْعُو وَيَرْفَعُ يَدَيْهِ، ثُمَّ يَرْمِي الْجَمْرَةَ الْوُسْطَى كَذَلِكَ، فَيَأْخُذُ ذَاتَ الشِّمَالِ فَيُسْهِلُ، وَيَقُومُ مُسْتَقْبِلَ الْقِبْلَةِ قِيَامًا طَوِيلاً، فَيَدْعُو وَيَرْفَعُ يَدَيْهِ، ثُمَّ يَرْمِي الْجَمْرَةَ ذَاتَ الْعَقَبَةِ مِنْ بَطْنِ الْوَادِي، وَلاَ يَقِفُ عِنْدَهَا، وَيَقُولُ هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَفْعَلُ.
பாடம் : 141 முதல் மற்றும் இரண்டாவது ஐம்ராவில் கைகளை உயர்த்(தி பிரார்த்தித்)தல்
1752. சாலிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள் முதல் ஐம்ராவில் ஏழு கற்களை எறிவார்கள். ஒவ்வொன்றையும் எறிந்ததும் தக்பீர் கூறுவார்கள். பிறகு முன்னேறி சமதளப் பகுதிக்கு வந்து கிப்லாவை முன்னோக்கிக் கைகளை உயர்த்தி, நீண்ட நேரம் நின்று பிரார்த்திப்பார்கள். பின்பு இரண்டாவது ஜம்ராவில் அவ்வாறே கல்லெறிவார்கள். பிறகு இடப் பக்கமாக நகர்ந்து, சமதளப் பகுதிக்குப் போய் கிப்லாவை முன்னோக்கி நீண்ட நேரம் நின்றுகொண்டு கைகளை உயர்த்திப் பிரார்த்திப்பார்கள்.

பின்பு ‘பத்னுல் வாதி’ பள்ளத்திலிருந்து, கடைசி ஜம்ராவில் கல்லெறிவார்கள். அங்கு நிற்கமாட்டார்கள்; பிறகு திரும்பிவிடுவார்கள். “இவ்வாறுதான் நபி (ஸல்) அவர்கள் செய்ய நான் பார்த்திருக்கிறேன்” எனக் கூறுவார்கள்.

அத்தியாயம் : 25