1706. حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا عَبْدُ الأَعْلَى بْنُ عَبْدِ الأَعْلَى، عَنْ مَعْمَرٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عِكْرِمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم رَأَى رَجُلاً يَسُوقُ بَدَنَةً، قَالَ "" ارْكَبْهَا "". قَالَ إِنَّهَا بَدَنَةٌ. قَالَ "" ارْكَبْهَا "". قَالَ فَلَقَدْ رَأَيْتُهُ رَاكِبَهَا يُسَايِرُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَالنَّعْلُ فِي عُنُقِهَا.
تَابَعَهُ مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، أَخْبَرَنَا عَلِيُّ بْنُ الْمُبَارَكِ، عَنْ يَحْيَى، عَنْ عِكْرِمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 112
காலணியை அடையாளமாகத் தொங்கவிடல்
1706. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
குர்பானி பிராணியை இழுத்துக் கொண்டு (நடந்து) சென்ற ஒருவரைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள், “அதில் ஏறிக்கொள்ளும்” என்றார்கள். அதற்கு அவர், “இது குர்பானி பிராணி” என்றதும், “அதில் ஏறுவீராக!” என்று மீண்டும் கூறினார்கள்.
பிறகு அவர் அதில் ஏறிச் சென்றதை நான் பார்த்தேன். அவர் நபி (ஸல்) அவர்களுடன் பயணித்துக்கொண்டிருந் தார். அப்போது அந்த ஒட்டகத்தின் கழுத்தில் காலணி கிடந்தது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 25
1706. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
குர்பானி பிராணியை இழுத்துக் கொண்டு (நடந்து) சென்ற ஒருவரைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள், “அதில் ஏறிக்கொள்ளும்” என்றார்கள். அதற்கு அவர், “இது குர்பானி பிராணி” என்றதும், “அதில் ஏறுவீராக!” என்று மீண்டும் கூறினார்கள்.
பிறகு அவர் அதில் ஏறிச் சென்றதை நான் பார்த்தேன். அவர் நபி (ஸல்) அவர்களுடன் பயணித்துக்கொண்டிருந் தார். அப்போது அந்த ஒட்டகத்தின் கழுத்தில் காலணி கிடந்தது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 25
1707. حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ عَلِيٍّ ـ رضى الله عنه ـ قَالَ أَمَرَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ أَتَصَدَّقَ بِجِلاَلِ الْبُدْنِ الَّتِي نَحَرْتُ وَبِجُلُودِهَا.
பாடம் : 113
குர்பானி ஒட்டகங்களுக்குச் சேணம் பூட்டல்
இப்னு உமர் (ரலி) அவர்கள், (ஒட்டகத்தின்) திமில் உள்ள அளவுக்கு மட்டுமே சேணத்தை வெட்டித் தயாரிப்பார்கள். குர்பானி பிராணியை அறுத்ததும் சேணத்தில் இரத்தம் பட்டுவிடும் என்று அஞ்சி அதை உடனேயே கழற்றிவிடுவார்கள். பிறகு சேணத்தைக் கொடுத்து தர்மம் செய்து விடுவார்கள்.
1707. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அறுக்கும் குர்பானி பிராணியின் சேணத்தையும் அதன் தோலையும் தர்மம் செய்துவிட வேண்டுமென நபி (ஸல்) அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள்.
அத்தியாயம் : 25
1707. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அறுக்கும் குர்பானி பிராணியின் சேணத்தையும் அதன் தோலையும் தர்மம் செய்துவிட வேண்டுமென நபி (ஸல்) அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள்.
அத்தியாயம் : 25
1708. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا أَبُو ضَمْرَةَ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، قَالَ أَرَادَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ الْحَجَّ عَامَ حَجَّةِ الْحَرُورِيَّةِ فِي عَهْدِ ابْنِ الزُّبَيْرِ ـ رضى الله عنهما ـ فَقِيلَ لَهُ إِنَّ النَّاسَ كَائِنٌ بَيْنَهُمْ قِتَالٌ، وَنَخَافُ أَنْ يَصُدُّوكَ. فَقَالَ {لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ} إِذًا أَصْنَعَ كَمَا صَنَعَ، أُشْهِدُكُمْ أَنِّي أَوْجَبْتُ عُمْرَةً. حَتَّى كَانَ بِظَاهِرِ الْبَيْدَاءِ قَالَ مَا شَأْنُ الْحَجِّ وَالْعُمْرَةِ إِلاَّ وَاحِدٌ، أُشْهِدُكُمْ أَنِّي جَمَعْتُ حَجَّةً مَعَ عُمْرَةٍ. وَأَهْدَى هَدْيًا مُقَلَّدًا اشْتَرَاهُ حَتَّى قَدِمَ، فَطَافَ بِالْبَيْتِ وَبِالصَّفَا، وَلَمْ يَزِدْ عَلَى ذَلِكَ، وَلَمْ يَحْلِلْ مِنْ شَىْءٍ حَرُمَ مِنْهُ حَتَّى يَوْمِ النَّحْرِ، فَحَلَقَ وَنَحَرَ وَرَأَى أَنْ قَدْ قَضَى طَوَافَهُ الْحَجَّ وَالْعُمْرَةَ بِطَوَافِهِ الأَوَّلِ، ثُمَّ قَالَ كَذَلِكَ صَنَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم.
பாடம் : 114
செல்லும் வழியில் குர்பானி பிராணியை விலைக்கு வாங்கி அதில் அடையாள மாலை தொங்கவிடல்
1708. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களின் காலத்தில் ‘ஹரூரிய்யா’க்கள் (காரிஜிய்யா) ஹஜ் செய்த ஆண்டில் இப்னு உமர் (ரலி) அவர்களும் ஹஜ் செய்ய விரும்பினார்கள்.56
அப்போது அவர்களிடம், “மக்களிடையே போர் மூண்டுள்ளது; எனவே, உங்களை ஹஜ் செய்ய விடாமல் அவர்கள் தடுப்பார் கள் என நாங்கள் அஞ்சுகின்றோம்” எனக் கூறப்பட்டது.
உடனே அவர்கள், “அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி உள்ளது. எனவே, அந்த நேரத்தில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்று நானும் செய்வேன். நான் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டிவிட்டேன் என்பதற்கு உங்களையே சாட்சியாக்கு கின்றேன்” என்றார்கள்.
பிறகு புறப்பட்டு ‘அல்பைதாஉ’ எனுமிடத்திற்கு வந்ததும் “ஹஜ்ஜின் நிலையும் உம்ராவின் நிலையும் ஒன்றே தான்; (எனவே) நான் உம்ராவுடன் ஹஜ்ஜுக்கும் சேர்த்தே இஹ்ராம் கட்டியுள்ளேன் என்பதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள்” எனக் கூறினார்கள். மேலும், அடையாள மாலையிடப்பட்ட குர்பானி பிராணியை விலைக்கு வாங்கிக் கொண்டுசென்றார்கள். மக்கா வந்து கஅபாவை தவாஃப் செய்துவிட்டு, ஸஃபா-மர்வாவுக்கிடையே ஓடி ‘சயீ’ செய்தார்கள். இதைவிட வேறெதுவும் அதிகமாகச் செய்யவில்லை.
துல்ஹஜ் பத்தாம் நாளில்தான் குர்பானி பிராணியைப் பலியிட்டுவிட்டுத் தலைமுடியை மழித்தார்கள். அதுவரை, இஹ்ராம் கட்டிய நிலையில் விலக்கப்பட்ட எதையும் செய்யவில்லை. முதலில் தாம் நிறைவேற்றிவிட்ட தவாஃபே ஹஜ் மற்றும் உம்ரா ஆகிய இரண்டிற்கும் போதும் என்றும் கருதினார்கள். மேலும், “இப்படித்தான் நபி (ஸல்) அவர்கள் செய்தார்கள்” என்றும் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம் : 25
1708. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களின் காலத்தில் ‘ஹரூரிய்யா’க்கள் (காரிஜிய்யா) ஹஜ் செய்த ஆண்டில் இப்னு உமர் (ரலி) அவர்களும் ஹஜ் செய்ய விரும்பினார்கள்.56
அப்போது அவர்களிடம், “மக்களிடையே போர் மூண்டுள்ளது; எனவே, உங்களை ஹஜ் செய்ய விடாமல் அவர்கள் தடுப்பார் கள் என நாங்கள் அஞ்சுகின்றோம்” எனக் கூறப்பட்டது.
உடனே அவர்கள், “அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி உள்ளது. எனவே, அந்த நேரத்தில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்று நானும் செய்வேன். நான் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டிவிட்டேன் என்பதற்கு உங்களையே சாட்சியாக்கு கின்றேன்” என்றார்கள்.
பிறகு புறப்பட்டு ‘அல்பைதாஉ’ எனுமிடத்திற்கு வந்ததும் “ஹஜ்ஜின் நிலையும் உம்ராவின் நிலையும் ஒன்றே தான்; (எனவே) நான் உம்ராவுடன் ஹஜ்ஜுக்கும் சேர்த்தே இஹ்ராம் கட்டியுள்ளேன் என்பதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள்” எனக் கூறினார்கள். மேலும், அடையாள மாலையிடப்பட்ட குர்பானி பிராணியை விலைக்கு வாங்கிக் கொண்டுசென்றார்கள். மக்கா வந்து கஅபாவை தவாஃப் செய்துவிட்டு, ஸஃபா-மர்வாவுக்கிடையே ஓடி ‘சயீ’ செய்தார்கள். இதைவிட வேறெதுவும் அதிகமாகச் செய்யவில்லை.
துல்ஹஜ் பத்தாம் நாளில்தான் குர்பானி பிராணியைப் பலியிட்டுவிட்டுத் தலைமுடியை மழித்தார்கள். அதுவரை, இஹ்ராம் கட்டிய நிலையில் விலக்கப்பட்ட எதையும் செய்யவில்லை. முதலில் தாம் நிறைவேற்றிவிட்ட தவாஃபே ஹஜ் மற்றும் உம்ரா ஆகிய இரண்டிற்கும் போதும் என்றும் கருதினார்கள். மேலும், “இப்படித்தான் நபி (ஸல்) அவர்கள் செய்தார்கள்” என்றும் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம் : 25
1709. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، قَالَتْ سَمِعْتُ عَائِشَةَ ـ رضى الله عنها ـ تَقُولُ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لِخَمْسٍ بَقِينَ مِنْ ذِي الْقَعْدَةِ، لاَ نُرَى إِلاَّ الْحَجَّ، فَلَمَّا دَنَوْنَا مِنْ مَكَّةَ أَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَنْ لَمْ يَكُنْ مَعَهُ هَدْىٌ، إِذَا طَافَ وَسَعَى بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ أَنْ يَحِلَّ، قَالَتْ فَدُخِلَ عَلَيْنَا يَوْمَ النَّحْرِ بِلَحْمِ بَقَرٍ. فَقُلْتُ مَا هَذَا قَالَ نَحَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ أَزْوَاجِهِ. قَالَ يَحْيَى فَذَكَرْتُهُ لِلْقَاسِمِ، فَقَالَ أَتَتْكَ بِالْحَدِيثِ عَلَى وَجْهِهِ.
பாடம் : 115
ஒருவர் தம் துணைவியர் சொல் லாமலேயே அவர்கள் சார்பாக மாட்டை அறுத்துக் குர்பானி கொடுப்பது
1709. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹஜ்ஜை மட்டுமே நிறைவேற்றும் எண்ணத்தில் துல்கஅதா மாதத்தின் இருபத்தைந்தாம் நாள், நாங்கள் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப் பட்டோம். மக்காவை நாங்கள் நெருங்கிய தும், “குர்பானிப் பிராணியைக் கொண்டு வராதவர்கள் தவாஃப் செய்துவிட்டு, ஸஃபா-மர்வாவுக்கிடையே ஓடி முடித்த வுடன், இஹ்ராமைக் களைந்துவிட வேண்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
பிறகு துல்ஹஜ் பத்தாம் நாள் மாட்டி றைச்சி எங்களிடம் கொண்டுவரப்பட்டது. “இது என்ன?” என நான் கேட்டேன். “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியர் சார்பாக குர்பானி கொடுத்தார் கள்” என்று (வந்தவர்) சொன்னார்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் இந்த ஹதீஸை, காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்களிடம் கூறினேன். அப்போது அவர்கள், “உமக்கு இந்த ஹதீஸை அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரஹ்) சரியாகவே அறிவித்துள்ளார்” என்றார்கள்.
அத்தியாயம் : 25
1709. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹஜ்ஜை மட்டுமே நிறைவேற்றும் எண்ணத்தில் துல்கஅதா மாதத்தின் இருபத்தைந்தாம் நாள், நாங்கள் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப் பட்டோம். மக்காவை நாங்கள் நெருங்கிய தும், “குர்பானிப் பிராணியைக் கொண்டு வராதவர்கள் தவாஃப் செய்துவிட்டு, ஸஃபா-மர்வாவுக்கிடையே ஓடி முடித்த வுடன், இஹ்ராமைக் களைந்துவிட வேண்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
பிறகு துல்ஹஜ் பத்தாம் நாள் மாட்டி றைச்சி எங்களிடம் கொண்டுவரப்பட்டது. “இது என்ன?” என நான் கேட்டேன். “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியர் சார்பாக குர்பானி கொடுத்தார் கள்” என்று (வந்தவர்) சொன்னார்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் இந்த ஹதீஸை, காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்களிடம் கூறினேன். அப்போது அவர்கள், “உமக்கு இந்த ஹதீஸை அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரஹ்) சரியாகவே அறிவித்துள்ளார்” என்றார்கள்.
அத்தியாயம் : 25
1710. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، سَمِعَ خَالِدَ بْنَ الْحَارِثِ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ ـ رضى الله عنه ـ كَانَ يَنْحَرُ فِي الْمَنْحَرِ. قَالَ عُبَيْدُ اللَّهِ مَنْحَرِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம் : 116
மினாவில் நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்த இடத்தில் குர்பானி கொடுப்பது
1710. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் வழக்கமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்த இடத்திலேயே குர்பானி கொடுப்பார்கள்.
அத்தியாயம் : 25
1710. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் வழக்கமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்த இடத்திலேயே குர்பானி கொடுப்பார்கள்.
அத்தியாயம் : 25
1711. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، أَنَّ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ كَانَ يَبْعَثُ بِهَدْيِهِ مِنْ جَمْعٍ مِنْ آخِرِ اللَّيْلِ، حَتَّى يُدْخَلَ بِهِ مَنْحَرُ النَّبِيِّ صلى الله عليه وسلم مَعَ حُجَّاجٍ فِيهِمُ الْحُرُّ وَالْمَمْلُوكُ.
பாடம் : 116
மினாவில் நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்த இடத்தில் குர்பானி கொடுப்பது
1711. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள் முஸ்தலி ஃபாவிலிருந்து இரவின் கடைசிப் பகுதி யில் தமது குர்பானிப் பிராணியை ஹாஜிகளுடன் அனுப்புவார்கள். நபி (ஸல்) அவர்கள் பலியிட்ட இடத்தில் சேர்ப்பதற் காக இவ்வாறு அனுப்புவார்கள். அந்த ஹாஜிகளில் அடிமைகளும் சுதந்திர மானவர்களும் இருந்தனர்.57
அத்தியாயம் : 25
1711. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள் முஸ்தலி ஃபாவிலிருந்து இரவின் கடைசிப் பகுதி யில் தமது குர்பானிப் பிராணியை ஹாஜிகளுடன் அனுப்புவார்கள். நபி (ஸல்) அவர்கள் பலியிட்ட இடத்தில் சேர்ப்பதற் காக இவ்வாறு அனுப்புவார்கள். அந்த ஹாஜிகளில் அடிமைகளும் சுதந்திர மானவர்களும் இருந்தனர்.57
அத்தியாயம் : 25
1712. حَدَّثَنَا سَهْلُ بْنُ بَكَّارٍ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ ـ وَذَكَرَ الْحَدِيثَ ـ قَالَ وَنَحَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِيَدِهِ سَبْعَ بُدْنٍ قِيَامًا، وَضَحَّى بِالْمَدِينَةِ كَبْشَيْنِ أَمْلَحَيْنِ أَقْرَنَيْنِ. مُخْتَصَرًا.
பாடம் : 117
ஒருவர் தமது கையாலேயே குர்பானி பிராணியை அறுப்பது
1712. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜின்போது) ஏழு ஒட்டகங்களை நிற்கவைத்துத் தமது கையாலேயே அறுத்தார்கள், மேலும், அவர்கள் மதீனாவில், பெரிய கொம்புகளை உடைய, கறுப்பு நிறம் கலந்த வெள்ளை நிற செம்மறி ஆடுகள் இரண்டையும் குர்பானி கொடுத்தார்கள்.
அத்தியாயம் : 25
1712. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜின்போது) ஏழு ஒட்டகங்களை நிற்கவைத்துத் தமது கையாலேயே அறுத்தார்கள், மேலும், அவர்கள் மதீனாவில், பெரிய கொம்புகளை உடைய, கறுப்பு நிறம் கலந்த வெள்ளை நிற செம்மறி ஆடுகள் இரண்டையும் குர்பானி கொடுத்தார்கள்.
அத்தியாயம் : 25
1713. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ يُونُسَ، عَنِ زِيَادِ بْنِ جُبَيْرٍ، قَالَ رَأَيْتُ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَتَى عَلَى رَجُلٍ، قَدْ أَنَاخَ بَدَنَتَهُ يَنْحَرُهَا، قَالَ ابْعَثْهَا قِيَامًا مُقَيَّدَةً، سُنَّةَ مُحَمَّدٍ صلى الله عليه وسلم. وَقَالَ شُعْبَةُ عَنْ يُونُسَ أَخْبَرَنِي زِيَادٌ.
பாடம் : 118
ஒட்டகத்தைக் கட்டிப்போட்டு அறுத்தல்
1713. ஸியாத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அறுப்பதற்காகத் தமது ஒட்டகத்தைப் படுக்கவைத்திருந்த ஒருவரிடம் இப்னு உமர் (ரலி) அவர்கள் வந்து, “அதை எழுப்பி நிற்கவைத்து (இடது காலை மட்டும்) கட்டிப்போட்டு அறுப்பீராக! அதுவே முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிமுறை ஆகும்” என்று கூறியதை நான் பார்த்தேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது
அத்தியாயம் : 25
1713. ஸியாத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அறுப்பதற்காகத் தமது ஒட்டகத்தைப் படுக்கவைத்திருந்த ஒருவரிடம் இப்னு உமர் (ரலி) அவர்கள் வந்து, “அதை எழுப்பி நிற்கவைத்து (இடது காலை மட்டும்) கட்டிப்போட்டு அறுப்பீராக! அதுவே முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிமுறை ஆகும்” என்று கூறியதை நான் பார்த்தேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது
அத்தியாயம் : 25
1714. حَدَّثَنَا سَهْلُ بْنُ بَكَّارٍ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ صَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم الظُّهْرَ بِالْمَدِينَةِ أَرْبَعًا، وَالْعَصْرَ بِذِي الْحُلَيْفَةِ رَكْعَتَيْنِ، فَبَاتَ بِهَا، فَلَمَّا أَصْبَحَ رَكِبَ رَاحِلَتَهُ، فَجَعَلَ يُهَلِّلُ وَيُسَبِّحُ، فَلَمَّا عَلاَ عَلَى الْبَيْدَاءِ لَبَّى بِهِمَا جَمِيعًا، فَلَمَّا دَخَلَ مَكَّةَ أَمَرَهُمْ أَنْ يَحِلُّوا. وَنَحَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِيَدِهِ سَبْعَ بُدْنٍ قِيَامًا، وَضَحَّى بِالْمَدِينَةِ كَبْشَيْنِ أَمْلَحَيْنِ أَقْرَنَيْنِ.
பாடம் : 119
ஒட்டகங்களை நிற்கவைத்து அறுத்தல்
இப்னு உமர் (ரலி) அவர்கள், “அதுவே (ஒட்டகத்தை நிற்கவைத்து அறுப்பதே) முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிமுறை” என்று கூறுகிறார்கள்.
“(குர்ஆனில் 22:36ஆவது வசனத்திலுள்ள) ‘ஸவாஃப்ப’ எனும் வார்த்தைக்கு ‘நிற்கவைக்கப்பட்ட நிலையில்’ என்றுதான் பொருள்” என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
1714. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (ஹஜ் பயணத்தைத் தொடங்கியபோது) மதீனாவில் நான்கு ரக்அத்கள் லுஹ்ர் தொழு(வித்)தார்கள். ‘துல்ஹுலைஃபா’வில் இரண்டு ரக்அத்கள் அஸ்ர் தொழுதுவிட்டு அங்கேயே இரவில் தங்கினார்கள். காலை விடிந்ததும் தமது ஊர்தி ஒட்டகத்தில் ஏறிக்கொண்டு ‘லா இலாஹ இல்லல்லாஹ்’வும் ‘சுப்ஹானல்லாஹ்’ வும் கூறிக்கொண்டே சென்றார்கள். ‘அல்பைதாஉ’ எனுமிடத்தைச் சென்றடைந்ததும் ஹஜ் மற்றும் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டி தல்பியா கூறலானார்கள்.
மக்காவை அடைந்ததும் இஹ்ராமி லிருந்து விடுபடுமாறு மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். மேலும், நபி (ஸல்) அவர்கள் தமது கையாலேயே ஏழு ஒட்டகங்களை நிற்கவைத்து அறுத்துப் பலியிட்டார்கள். (பெருநாளன்று) பெரிய கொம்புகளை உடைய, கறுப்பு நிறம் கலந்த வெள்ளை நிற செம்மறி ஆடுகள் இரண்டை மதீனாவில் குர்பானி கொடுத் தார்கள்.
அத்தியாயம் : 25
1714. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (ஹஜ் பயணத்தைத் தொடங்கியபோது) மதீனாவில் நான்கு ரக்அத்கள் லுஹ்ர் தொழு(வித்)தார்கள். ‘துல்ஹுலைஃபா’வில் இரண்டு ரக்அத்கள் அஸ்ர் தொழுதுவிட்டு அங்கேயே இரவில் தங்கினார்கள். காலை விடிந்ததும் தமது ஊர்தி ஒட்டகத்தில் ஏறிக்கொண்டு ‘லா இலாஹ இல்லல்லாஹ்’வும் ‘சுப்ஹானல்லாஹ்’ வும் கூறிக்கொண்டே சென்றார்கள். ‘அல்பைதாஉ’ எனுமிடத்தைச் சென்றடைந்ததும் ஹஜ் மற்றும் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டி தல்பியா கூறலானார்கள்.
மக்காவை அடைந்ததும் இஹ்ராமி லிருந்து விடுபடுமாறு மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். மேலும், நபி (ஸல்) அவர்கள் தமது கையாலேயே ஏழு ஒட்டகங்களை நிற்கவைத்து அறுத்துப் பலியிட்டார்கள். (பெருநாளன்று) பெரிய கொம்புகளை உடைய, கறுப்பு நிறம் கலந்த வெள்ளை நிற செம்மறி ஆடுகள் இரண்டை மதீனாவில் குர்பானி கொடுத் தார்கள்.
அத்தியாயம் : 25
1715. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ صَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم الظُّهْرَ بِالْمَدِينَةِ أَرْبَعًا، وَالْعَصْرَ بِذِي الْحُلَيْفَةِ رَكْعَتَيْنِ. وَعَنْ أَيُّوبَ عَنْ رَجُلٍ عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ ثُمَّ بَاتَ حَتَّى أَصْبَحَ، فَصَلَّى الصُّبْحَ، ثُمَّ رَكِبَ رَاحِلَتَهُ حَتَّى إِذَا اسْتَوَتْ بِهِ الْبَيْدَاءَ أَهَلَّ بِعُمْرَةٍ وَحَجَّةٍ.
பாடம் : 119
ஒட்டகங்களை நிற்கவைத்து அறுத்தல்
இப்னு உமர் (ரலி) அவர்கள், “அதுவே (ஒட்டகத்தை நிற்கவைத்து அறுப்பதே) முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிமுறை” என்று கூறுகிறார்கள்.
“(குர்ஆனில் 22:36ஆவது வசனத்திலுள்ள) ‘ஸவாஃப்ப’ எனும் வார்த்தைக்கு ‘நிற்கவைக்கப்பட்ட நிலையில்’ என்றுதான் பொருள்” என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
1715. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (ஹஜ் பயணத்தின் போது) மதீனாவில் நான்கு ரக்அத்கள் லுஹ்ர் தொழுதார்கள். துல்ஹுலைஃபா வில் இரண்டு ரக்அத்கள் அஸ்ர் தொழு தார்கள். இரவில் அங்கேயே தங்கிவிட்டு, விடிந்ததும் சுப்ஹு தொழுதார்கள். பிறகு தமது ஊர்தி ஒட்டகத்தில் ஏறி ‘அல்பைதாஉ’ எனுமிடத்தை அடைந்த போது ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்கும் சேர்த்து இஹ்ராம் கட்டி தல்பியா கூறினார்கள்.
அத்தியாயம் : 25
1715. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (ஹஜ் பயணத்தின் போது) மதீனாவில் நான்கு ரக்அத்கள் லுஹ்ர் தொழுதார்கள். துல்ஹுலைஃபா வில் இரண்டு ரக்அத்கள் அஸ்ர் தொழு தார்கள். இரவில் அங்கேயே தங்கிவிட்டு, விடிந்ததும் சுப்ஹு தொழுதார்கள். பிறகு தமது ஊர்தி ஒட்டகத்தில் ஏறி ‘அல்பைதாஉ’ எனுமிடத்தை அடைந்த போது ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்கும் சேர்த்து இஹ்ராம் கட்டி தல்பியா கூறினார்கள்.
அத்தியாயம் : 25
1716. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، قَالَ أَخْبَرَنِي ابْنُ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ عَلِيٍّ ـ رضى الله عنه ـ قَالَ بَعَثَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم فَقُمْتُ عَلَى الْبُدْنِ، فَأَمَرَنِي فَقَسَمْتُ لُحُومَهَا، ثُمَّ أَمَرَنِي فَقَسَمْتُ جِلاَلَهَا وَجُلُودَهَا. قَالَ سُفْيَانُ وَحَدَّثَنِي عَبْدُ الْكَرِيمِ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ عَلِيٍّ ـ رضى الله عنه ـ قَالَ أَمَرَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ أَقُومَ عَلَى الْبُدْنِ، وَلاَ أُعْطِيَ عَلَيْهَا شَيْئًا فِي جِزَارَتِهَا.
பாடம் : 120
குர்பானி பிராணியை அறுப்ப வருக்குக் கூலியாக அதில் எதையும் கொடுக்கக் கூடாது.
1716. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (குர்பானி ஒட்டகங்களைப் பலியிடுவதற்கு) என்னை நியமித் தார்கள். பிறகு அவற்றின் இறைச்சிகளைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார் கள். அவ்வாறே நான் செய்தேன். அவற்றின் சேணங்களையும் தோல்களையும் (ஏழைகளுக்குப்) பங்கிட்டுவிடுமாறும் எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் செய்தேன்.
மற்றோர் அறிவிப்பில், “குர்பானி பிராணிகளைக் கவனித்துக்கொள்ளுமாறும் அவற்றை அறுப்பதற்குக் கூலியாக அவற்றில் எதையும் கொடுக்கக் கூடாது என்றும் எனக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்” என அலீ (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 25
1716. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (குர்பானி ஒட்டகங்களைப் பலியிடுவதற்கு) என்னை நியமித் தார்கள். பிறகு அவற்றின் இறைச்சிகளைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார் கள். அவ்வாறே நான் செய்தேன். அவற்றின் சேணங்களையும் தோல்களையும் (ஏழைகளுக்குப்) பங்கிட்டுவிடுமாறும் எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் செய்தேன்.
மற்றோர் அறிவிப்பில், “குர்பானி பிராணிகளைக் கவனித்துக்கொள்ளுமாறும் அவற்றை அறுப்பதற்குக் கூலியாக அவற்றில் எதையும் கொடுக்கக் கூடாது என்றும் எனக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்” என அலீ (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 25
1717. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي الْحَسَنُ بْنُ مُسْلِمٍ، وَعَبْدُ الْكَرِيمِ الْجَزَرِيُّ، أَنَّ مُجَاهِدًا، أَخْبَرَهُمَا أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي لَيْلَى أَخْبَرَهُ أَنَّ عَلِيًّا ـ رضى الله عنه ـ أَخْبَرَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَمَرَهُ أَنْ يَقُومَ عَلَى بُدْنِهِ، وَأَنْ يَقْسِمَ بُدْنَهُ كُلَّهَا، لُحُومَهَا وَجُلُودَهَا وَجِلاَلَهَا، وَلاَ يُعْطِيَ فِي جِزَارَتِهَا شَيْئًا.
பாடம் : 121
குர்பானி பிராணிகளின் தோல் களைத் தர்மம் செய்ய வேண்டும்.
1717. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தமது குர்பானி ஒட்டகங்களை (அறுத்துப் பலியிடும் பொறுப்பை)க் கவனிக்குமாறும் அவற்றின் இறைச்சி, தோல், சேணம் ஆகிய அனைத் தையும் (தர்மமாகப்) பங்கிடுமாறும் உரிப்ப தற்கான கூலியாக, அவற்றில் எதையும் கொடுக்கக் கூடாது என்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள்.
அத்தியாயம் : 25
1717. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தமது குர்பானி ஒட்டகங்களை (அறுத்துப் பலியிடும் பொறுப்பை)க் கவனிக்குமாறும் அவற்றின் இறைச்சி, தோல், சேணம் ஆகிய அனைத் தையும் (தர்மமாகப்) பங்கிடுமாறும் உரிப்ப தற்கான கூலியாக, அவற்றில் எதையும் கொடுக்கக் கூடாது என்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள்.
அத்தியாயம் : 25
1718. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سَيْفُ بْنُ أَبِي سُلَيْمَانَ، قَالَ سَمِعْتُ مُجَاهِدًا، يَقُولُ حَدَّثَنِي ابْنُ أَبِي لَيْلَى، أَنَّ عَلِيًّا ـ رضى الله عنه ـ حَدَّثَهُ قَالَ أَهْدَى النَّبِيُّ صلى الله عليه وسلم مِائَةَ بَدَنَةٍ، فَأَمَرَنِي بِلُحُومِهَا فَقَسَمْتُهَا، ثُمَّ أَمَرَنِي بِجِلاَلِهَا فَقَسَمْتُهَا، ثُمَّ بِجُلُودِهَا فَقَسَمْتُهَا.
பாடம் : 122
குர்பானி ஒட்டகங்களின் சேணங்கள் தர்மம் செய்யப்பட வேண்டும்.
1718. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்தார்கள். அப்போது அவற்றின் இறைச்சிகளை (ஏழைகளுக்கு)ப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட் டார்கள். அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன். பின்பு அவற்றின் சேணங் களை (ஏழைகளுக்கு)ப் பங்கிடுமாறு எனக் குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன். பிறகு அவற்றின் தோல்களை (ஏழைகளுக்கு)ப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட் டார்கள்; அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன்.
அத்தியாயம் : 25
1718. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்தார்கள். அப்போது அவற்றின் இறைச்சிகளை (ஏழைகளுக்கு)ப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட் டார்கள். அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன். பின்பு அவற்றின் சேணங் களை (ஏழைகளுக்கு)ப் பங்கிடுமாறு எனக் குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன். பிறகு அவற்றின் தோல்களை (ஏழைகளுக்கு)ப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட் டார்கள்; அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன்.
அத்தியாயம் : 25
1719. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنِ ابْنِ جُرَيْجٍ، حَدَّثَنَا عَطَاءٌ، سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ يَقُولُ كُنَّا لاَ نَأْكُلُ مِنْ لُحُومِ بُدْنِنَا فَوْقَ ثَلاَثِ مِنًى، فَرَخَّصَ لَنَا النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ "" كُلُوا وَتَزَوَّدُوا "". فَأَكَلْنَا وَتَزَوَّدْنَا. قُلْتُ لِعَطَاءٍ أَقَالَ حَتَّى جِئْنَا الْمَدِينَةَ قَالَ لاَ.
பாடம் : 123
அல்லாஹ் கூறுகின்றான்:
(நபியே!) நாம் இப்றாஹீமுக்கு (புனித) ஆலயத்தின் இடத்தை நிர்ணயித்து (பின்வருமாறு) கட்டளையிட்டதை எண்ணிப்பார்ப்பீராக: நீர் எனக்கு எதனை யும் இணைவைக்காதீர்; என்னுடைய (இந்த) ஆலயத்தைச் சுற்றி வருவோருக் கும் அதில் ருகூஉ, சுஜூத் செய்(து தொழு)வோருக்கும் அதைத் தூய்மை செய்துவைப்பீராக!
மேலும், ஹஜ் செய்ய வருமாறு மக்களிடையே அறிவிப்புச் செய்வீராக! அவர்கள் நடந்தும் வெகு தொலைவிலுள்ள பாதைகள் ஒவ்வொன்றிலிருந்து வரும் மெலிந்த ஒட்டகங்களில் பயணம் செய்தும் உம்மிடம் வருவார்கள்.
அவர்கள் தங்களுக்குரிய பலன்களைக் காண்பதற்காகவும் குறிப்பிட்ட நாட்களில், அவர்களுக்கு அல்லாஹ் அளித்துள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகள் மீது அவன் பெயரைச் சொல்லி குர்பானி கொடுப்பதற்காகவும் (அவர்கள் வருவார்கள்). எனவே, அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக்கொடுங்கள்!
பின்னர் அவர்கள் (தலைமுடி மழித்து, நகம் வெட்டி, குளித்து)த் தம் அழுக்குகளை நீக்கி, தங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றி, (அந்தப் புனிதமான) தொன்மை ஆலயத்தை தவாஃபும் செய்யட்டும்!
இதுவே (ஹஜ்ஜின் வழிபாட்டு முறை யாகும்)! அல்லாஹ்வால் புனிதப்படுத்தப் பட்டவற்றுக்கு யார் கண்ணியமளிக்கி றாரோ அது அவருக்கு அவருடைய இறைவனிடம் சிறந்ததாகும். (22:26-30)
பாடம் : 124
குர்பானி ஒட்டகங்களில் உண் ணப்படுபவையும் தர்மம் செய்யப்படுபவையும்
இஹ்ராம் கட்டிய நிலையில் வேட்டை யாடிய குற்றத்திற்குப் பரிகாரமாகவோ நேர்ச்சையாகவோ குர்பானி கொடுப்பவர் கள் அவற்றின் இறைச்சியை உண்ண லாகாது; மற்றப் பிராணிகளை உண்ணலாம் என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
‘தமத்துஉ’ வகை ஹஜ்ஜில் (கொடுக்கப் படும் குர்பானியை) உண்ணலாம்; பிறருக்கு உண்ணக்கொடுக்கலாம் என அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
1719. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ‘மினா’வில் தங்கும் நாளிலிருந்து மூன்று நாட்களுக்குமேல் குர்பானி பிராணிகளின் இறைச்சியை உண்ணாமலிருந்தோம். பிறகு நபி (ஸல்) அவர்கள், “உண்ணுங்கள்; சேமித்தும் வைத்துக்கொள்ளுங்கள்” என்று கூறி எங்களுக்கு அனுமதி வழங்கியதும் நாங்கள் உண்ணலானோம்; சேமித்துவைக்கலானோம்.
‘மதீனா வரும்வரை (உண்டோம்)’ என்று ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்களா என அதாஉ (ரஹ்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர் ‘இல்லை’ என்றார் என இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.58
அத்தியாயம் : 25
1719. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ‘மினா’வில் தங்கும் நாளிலிருந்து மூன்று நாட்களுக்குமேல் குர்பானி பிராணிகளின் இறைச்சியை உண்ணாமலிருந்தோம். பிறகு நபி (ஸல்) அவர்கள், “உண்ணுங்கள்; சேமித்தும் வைத்துக்கொள்ளுங்கள்” என்று கூறி எங்களுக்கு அனுமதி வழங்கியதும் நாங்கள் உண்ணலானோம்; சேமித்துவைக்கலானோம்.
‘மதீனா வரும்வரை (உண்டோம்)’ என்று ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்களா என அதாஉ (ரஹ்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர் ‘இல்லை’ என்றார் என இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.58
அத்தியாயம் : 25
1720. حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ، قَالَ حَدَّثَنِي يَحْيَى، قَالَ حَدَّثَتْنِي عَمْرَةُ، قَالَتْ سَمِعْتُ عَائِشَةَ ـ رضى الله عنها ـ تَقُولُ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لِخَمْسٍ بَقِينَ مِنْ ذِي الْقَعْدَةِ، وَلاَ نَرَى إِلاَّ الْحَجَّ، حَتَّى إِذَا دَنَوْنَا مِنْ مَكَّةَ أَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَنْ لَمْ يَكُنْ مَعَهُ هَدْىٌ إِذَا طَافَ بِالْبَيْتِ ثُمَّ يَحِلُّ. قَالَتْ عَائِشَةُ ـ رضى الله عنها ـ فَدُخِلَ عَلَيْنَا يَوْمَ النَّحْرِ بِلَحْمِ بَقَرٍ فَقُلْتُ مَا هَذَا فَقِيلَ ذَبَحَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ أَزْوَاجِهِ. قَالَ يَحْيَى فَذَكَرْتُ هَذَا الْحَدِيثَ لِلْقَاسِمِ. فَقَالَ أَتَتْكَ بِالْحَدِيثِ عَلَى وَجْهِهِ.
பாடம் : 123
அல்லாஹ் கூறுகின்றான்:
(நபியே!) நாம் இப்றாஹீமுக்கு (புனித) ஆலயத்தின் இடத்தை நிர்ணயித்து (பின்வருமாறு) கட்டளையிட்டதை எண்ணிப்பார்ப்பீராக: நீர் எனக்கு எதனை யும் இணைவைக்காதீர்; என்னுடைய (இந்த) ஆலயத்தைச் சுற்றி வருவோருக் கும் அதில் ருகூஉ, சுஜூத் செய்(து தொழு)வோருக்கும் அதைத் தூய்மை செய்துவைப்பீராக!
மேலும், ஹஜ் செய்ய வருமாறு மக்களிடையே அறிவிப்புச் செய்வீராக! அவர்கள் நடந்தும் வெகு தொலைவிலுள்ள பாதைகள் ஒவ்வொன்றிலிருந்து வரும் மெலிந்த ஒட்டகங்களில் பயணம் செய்தும் உம்மிடம் வருவார்கள்.
அவர்கள் தங்களுக்குரிய பலன்களைக் காண்பதற்காகவும் குறிப்பிட்ட நாட்களில், அவர்களுக்கு அல்லாஹ் அளித்துள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகள் மீது அவன் பெயரைச் சொல்லி குர்பானி கொடுப்பதற்காகவும் (அவர்கள் வருவார்கள்). எனவே, அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக்கொடுங்கள்!
பின்னர் அவர்கள் (தலைமுடி மழித்து, நகம் வெட்டி, குளித்து)த் தம் அழுக்குகளை நீக்கி, தங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றி, (அந்தப் புனிதமான) தொன்மை ஆலயத்தை தவாஃபும் செய்யட்டும்!
இதுவே (ஹஜ்ஜின் வழிபாட்டு முறை யாகும்)! அல்லாஹ்வால் புனிதப்படுத்தப் பட்டவற்றுக்கு யார் கண்ணியமளிக்கி றாரோ அது அவருக்கு அவருடைய இறைவனிடம் சிறந்ததாகும். (22:26-30)
பாடம் : 124
குர்பானி ஒட்டகங்களில் உண் ணப்படுபவையும் தர்மம் செய்யப்படுபவையும்
இஹ்ராம் கட்டிய நிலையில் வேட்டை யாடிய குற்றத்திற்குப் பரிகாரமாகவோ நேர்ச்சையாகவோ குர்பானி கொடுப்பவர் கள் அவற்றின் இறைச்சியை உண்ண லாகாது; மற்றப் பிராணிகளை உண்ணலாம் என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
‘தமத்துஉ’ வகை ஹஜ்ஜில் (கொடுக்கப் படும் குர்பானியை) உண்ணலாம்; பிறருக்கு உண்ணக்கொடுக்கலாம் என அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
1720. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹஜ்ஜை மட்டுமே நிறைவேற்றும் எண்ணத்தில் துல்கஅதா மாதத்தின் இருபத்தைந்தாம் நாள் நாங்கள் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப் பட்டோம். நாங்கள் மக்காவை நெருங்கிய தும், குர்பானிப் பிராணியைக் கொண்டு வராதவர் தவாஃப் செய்துவிட்டு இஹ்ராமி லிருந்து விடுபட வேண்டும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
பிறகு துல்ஹஜ் பத்தாம் நாள் மாட்டிறைச்சி எங்களிடம் கொண்டுவரப் பட்டது. “இது என்ன?” என நான் கேட்டேன். மக்கள், “நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரின் சார்பாகப் பலியிட்டார் கள்” என்று சொல்லப்பட்டது.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் இந்த ஹதீஸை, காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்களிடம் கூறினேன். அப்போது அவர்கள், “உமக்கு இந்த ஹதீஸை அறிவித்த அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரஹ்) சரியாகவே அறிவித்துள்ளார்” என்றார்கள்.
அத்தியாயம் : 25
1720. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹஜ்ஜை மட்டுமே நிறைவேற்றும் எண்ணத்தில் துல்கஅதா மாதத்தின் இருபத்தைந்தாம் நாள் நாங்கள் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப் பட்டோம். நாங்கள் மக்காவை நெருங்கிய தும், குர்பானிப் பிராணியைக் கொண்டு வராதவர் தவாஃப் செய்துவிட்டு இஹ்ராமி லிருந்து விடுபட வேண்டும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
பிறகு துல்ஹஜ் பத்தாம் நாள் மாட்டிறைச்சி எங்களிடம் கொண்டுவரப் பட்டது. “இது என்ன?” என நான் கேட்டேன். மக்கள், “நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரின் சார்பாகப் பலியிட்டார் கள்” என்று சொல்லப்பட்டது.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் இந்த ஹதீஸை, காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்களிடம் கூறினேன். அப்போது அவர்கள், “உமக்கு இந்த ஹதீஸை அறிவித்த அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரஹ்) சரியாகவே அறிவித்துள்ளார்” என்றார்கள்.
அத்தியாயம் : 25
1721. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ حَوْشَبٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا مَنْصُورٌ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ سُئِلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَمَّنْ حَلَقَ قَبْلَ أَنْ يَذْبَحَ وَنَحْوِهِ. فَقَالَ "" لاَ حَرَجَ، لاَ حَرَجَ "".
பாடம் : 125
தலைமுடியை மழிப்பதற்குமுன் குர்பானி கொடுத்தல்59
1721. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் (ஹஜ்ஜின் போது), குர்பானி கொடுப்பதற்குமுன் தலைமுடியை மழித்துவிடுதல் மற்றும் அது போன்றவற்றைப் பற்றி வினவப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் “குற்ற மில்லை! குற்றமில்லை” என்றார்கள்.
அத்தியாயம் : 25
1721. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் (ஹஜ்ஜின் போது), குர்பானி கொடுப்பதற்குமுன் தலைமுடியை மழித்துவிடுதல் மற்றும் அது போன்றவற்றைப் பற்றி வினவப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் “குற்ற மில்லை! குற்றமில்லை” என்றார்கள்.
அத்தியாயம் : 25
1722. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، أَخْبَرَنَا أَبُو بَكْرٍ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ رُفَيْعٍ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ رَجُلٌ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم زُرْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ. قَالَ "" لاَ حَرَجَ "". قَالَ حَلَقْتُ قَبْلَ أَنْ أَذْبَحَ. قَالَ "" لاَ حَرَجَ "". قَالَ ذَبَحْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ. قَالَ "" لاَ حَرَجَ "". وَقَالَ عَبْدُ الرَّحِيمِ الرَّازِيُّ عَنِ ابْنِ خُثَيْمٍ أَخْبَرَنِي عَطَاءٌ عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. وَقَالَ الْقَاسِمُ بْنُ يَحْيَى حَدَّثَنِي ابْنُ خُثَيْمٍ عَنْ عَطَاءٍ عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. وَقَالَ عَفَّانُ أُرَاهُ عَنْ وُهَيْبٍ، حَدَّثَنَا ابْنُ خُثَيْمٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. وَقَالَ حَمَّادٌ عَنْ قَيْسِ بْنِ سَعْدٍ وَعَبَّادِ بْنِ مَنْصُورٍ عَنْ عَطَاءٍ عَنْ جَابِرٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 125
தலைமுடியை மழிப்பதற்குமுன் குர்பானி கொடுத்தல்59
1722. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருவர் (ஹஜ்ஜின்போது) நபி (ஸல்) அவர்களிடம், “நான் கல்லெறிவதற்கு முன்பே ‘தவாஃபுல் இஃபாளா’ (தவாஃபுஸ் ஸியாரத்) செய்துவிட்டேன்” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “குற்ற மில்லை” என்றார்கள். பிறகு அவர், “நான் குர்பானி கொடுப்பதற்கு முன்பாகத் தலையை மழித்துவிட்டேன்” என்றதும், அவர்கள் “குற்றமில்லை” என்றார்கள்.
மேலும் அவர், “நான் கல்லெறிவதற்கு முன்பாகவே குர்பானி கொடுத்துவிட்டேன்” என்றார். அப்போதும் அவர்கள் “குற்ற மில்லை” என்றார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
இதே ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிட மிருந்து இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 25
1722. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருவர் (ஹஜ்ஜின்போது) நபி (ஸல்) அவர்களிடம், “நான் கல்லெறிவதற்கு முன்பே ‘தவாஃபுல் இஃபாளா’ (தவாஃபுஸ் ஸியாரத்) செய்துவிட்டேன்” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “குற்ற மில்லை” என்றார்கள். பிறகு அவர், “நான் குர்பானி கொடுப்பதற்கு முன்பாகத் தலையை மழித்துவிட்டேன்” என்றதும், அவர்கள் “குற்றமில்லை” என்றார்கள்.
மேலும் அவர், “நான் கல்லெறிவதற்கு முன்பாகவே குர்பானி கொடுத்துவிட்டேன்” என்றார். அப்போதும் அவர்கள் “குற்ற மில்லை” என்றார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
இதே ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிட மிருந்து இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 25
1723. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ سُئِلَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ رَمَيْتُ بَعْدَ مَا أَمْسَيْتُ. فَقَالَ "" لاَ حَرَجَ "". قَالَ حَلَقْتُ قَبْلَ أَنْ أَنْحَرَ. قَالَ "" لاَ حَرَجَ "".
பாடம் : 125
தலைமுடியை மழிப்பதற்குமுன் குர்பானி கொடுத்தல்59
1723. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், “நான் மாலை நேரம் வந்தபின் கல்லெறிந்தேன்” என்று கேட்டார். அவர்கள், “குற்றமில்லை” என்று கூறினார்கள். பிறகு அவர், “நான் குர்பானி கொடுப்பதற்கு முன்பாகவே தலையை மழித்துவிட்டேன்” என்றபோதும் அவர்கள், “குற்றமில்லை” என்றே கூறினார்கள்.
அத்தியாயம் : 25
1723. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், “நான் மாலை நேரம் வந்தபின் கல்லெறிந்தேன்” என்று கேட்டார். அவர்கள், “குற்றமில்லை” என்று கூறினார்கள். பிறகு அவர், “நான் குர்பானி கொடுப்பதற்கு முன்பாகவே தலையை மழித்துவிட்டேன்” என்றபோதும் அவர்கள், “குற்றமில்லை” என்றே கூறினார்கள்.
அத்தியாயம் : 25
1724. حَدَّثَنَا عَبْدَانُ، قَالَ أَخْبَرَنِي أَبِي، عَنْ شُعْبَةَ، عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ قَالَ قَدِمْتُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ بِالْبَطْحَاءِ. فَقَالَ "" أَحَجَجْتَ "". قُلْتُ نَعَمْ. قَالَ "" بِمَا أَهْلَلْتَ "". قُلْتُ لَبَّيْكَ بِإِهْلاَلٍ كَإِهْلاَلِ النَّبِيِّ صلى الله عليه وسلم. قَالَ "" أَحْسَنْتَ، انْطَلِقْ فَطُفْ بِالْبَيْتِ وَبِالصَّفَا وَالْمَرْوَةِ "". ثُمَّ أَتَيْتُ امْرَأَةً مِنْ نِسَاءِ بَنِي قَيْسٍ، فَفَلَتْ رَأْسِي، ثُمَّ أَهْلَلْتُ بِالْحَجِّ، فَكُنْتُ أُفْتِي بِهِ النَّاسَ، حَتَّى خِلاَفَةِ عُمَرَ ـ رضى الله عنه ـ فَذَكَرْتُهُ لَهُ. فَقَالَ إِنْ نَأْخُذْ بِكِتَابِ اللَّهِ فَإِنَّهُ يَأْمُرُنَا بِالتَّمَامِ، وَإِنْ نَأْخُذْ بِسُنَّةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَإِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمْ يَحِلَّ حَتَّى بَلَغَ الْهَدْىُ مَحِلَّهُ.
பாடம் : 125
தலைமுடியை மழிப்பதற்குமுன் குர்பானி கொடுத்தல்59
1724. அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘அல்பத்ஹா’ பள்ளத்தாக்கில் இருந்தபோது (ஹஜ்ஜுக்காக) நான் (யமன் நாட்டிலிருந்து) வந்தேன். அப்போது அவர்கள், “ஹஜ் செய்ய நாடிவிட்டீரா?” எனக் கேட்க, நான் ‘ஆம்’ என்றேன். “எதற்காக இஹ்ராம் கட்டினீர்?” என அவர்கள் கேட்டார்கள். “நபி (ஸல்) அவர்கள் எதற்காக இஹ்ராம் கட்டினார்களோ அதற்காக” என்றேன். அவர்கள், “நன்றே செய்தீர். போய் இறையில்லம் கஅபாவையும் ஸஃபா- மர்வாவையும் தவாஃப் செய்யும்!” என்றார் கள்.
பிறகு நான் பனூ கைஸ் குலத்தைச் சேர்ந்த (என் நெருங்கிய உறவுப்) பெண்களில் ஒருவரிடம் வந்தேன்; அவர் எனது தலையில் பேன் பார்த்தார். பிறகு நான் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டினேன்.
இந்த அடிப்படையிலேயே உமர் (ரலி) அவர்களது ஆட்சிக் காலம்வரை நான் மக்களுக்குத் தீர்ப்புக் கூறிவந்தேன். உமர் (ரலி) அவர்களிடம் இது பற்றி நான் கூறியதும் அவர்கள், “நாம் இறைவேதத்தை எடுத்துக்கொண்டால், அதுவோ (ஹஜ் மற்றும் உம்ராவை) முழுமையாக நிறைவேற்றுமாறு நமக்குக் கட்டளையிடுகின்றது; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறையை எடுத்துக்கொண்டால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குர்பானி பிராணி பலியிடப்படும் இடத்தை அடையாத வரை இஹ்ராமிலிருந்து விடுபட்டதில்லை” என்று கூறினார்கள்.60
அத்தியாயம் : 25
1724. அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘அல்பத்ஹா’ பள்ளத்தாக்கில் இருந்தபோது (ஹஜ்ஜுக்காக) நான் (யமன் நாட்டிலிருந்து) வந்தேன். அப்போது அவர்கள், “ஹஜ் செய்ய நாடிவிட்டீரா?” எனக் கேட்க, நான் ‘ஆம்’ என்றேன். “எதற்காக இஹ்ராம் கட்டினீர்?” என அவர்கள் கேட்டார்கள். “நபி (ஸல்) அவர்கள் எதற்காக இஹ்ராம் கட்டினார்களோ அதற்காக” என்றேன். அவர்கள், “நன்றே செய்தீர். போய் இறையில்லம் கஅபாவையும் ஸஃபா- மர்வாவையும் தவாஃப் செய்யும்!” என்றார் கள்.
பிறகு நான் பனூ கைஸ் குலத்தைச் சேர்ந்த (என் நெருங்கிய உறவுப்) பெண்களில் ஒருவரிடம் வந்தேன்; அவர் எனது தலையில் பேன் பார்த்தார். பிறகு நான் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டினேன்.
இந்த அடிப்படையிலேயே உமர் (ரலி) அவர்களது ஆட்சிக் காலம்வரை நான் மக்களுக்குத் தீர்ப்புக் கூறிவந்தேன். உமர் (ரலி) அவர்களிடம் இது பற்றி நான் கூறியதும் அவர்கள், “நாம் இறைவேதத்தை எடுத்துக்கொண்டால், அதுவோ (ஹஜ் மற்றும் உம்ராவை) முழுமையாக நிறைவேற்றுமாறு நமக்குக் கட்டளையிடுகின்றது; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறையை எடுத்துக்கொண்டால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குர்பானி பிராணி பலியிடப்படும் இடத்தை அடையாத வரை இஹ்ராமிலிருந்து விடுபட்டதில்லை” என்று கூறினார்கள்.60
அத்தியாயம் : 25
1725. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ حَفْصَةَ ـ رضى الله عنهم ـ أَنَّهَا قَالَتْ يَا رَسُولَ اللَّهِ، مَا شَأْنُ النَّاسِ حَلُّوا بِعُمْرَةٍ وَلَمْ تَحْلِلْ أَنْتَ مِنْ عُمْرَتِكَ قَالَ "" إِنِّي لَبَّدْتُ رَأْسِي، وَقَلَّدْتُ هَدْيِي، فَلاَ أَحِلُّ حَتَّى أَنْحَرَ "".
பாடம் : 126
இஹ்ராமின்போது தலை முடியில் களிம்பு தடவிப் படிய வைப்பதும் (பின்னர்) தலையை மழித்துக்கொள்வதும்
1725. ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (நபி (ஸல்) அவர்களிடம்) “அல்லாஹ்வின் தூதரே! உம்ரா செய்து விட்டு மக்கள் தங்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டார்கள்; ஆனால், நீங்கள் உம்ரா செய்தபிறகும் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லையே, என்ன காரணம்?” எனக் கேட்டேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “எனது முடியைக் களிம்பு தடவிப் படிய வைத்துவிட்டேன்; எனது குர்பானிப் பிராணியின் கழுத்தில் அடையாள மாலையும் தொங்கவிட்டுவிட்டேன்; எனவே, குர்பானி கொடுக்காத வரை நான் இஹ்ராமிலிருந்து விடுபடக் கூடாது!” என்றார்கள்.
அத்தியாயம் : 25
1725. ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (நபி (ஸல்) அவர்களிடம்) “அல்லாஹ்வின் தூதரே! உம்ரா செய்து விட்டு மக்கள் தங்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டார்கள்; ஆனால், நீங்கள் உம்ரா செய்தபிறகும் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லையே, என்ன காரணம்?” எனக் கேட்டேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “எனது முடியைக் களிம்பு தடவிப் படிய வைத்துவிட்டேன்; எனது குர்பானிப் பிராணியின் கழுத்தில் அடையாள மாலையும் தொங்கவிட்டுவிட்டேன்; எனவே, குர்பானி கொடுக்காத வரை நான் இஹ்ராமிலிருந்து விடுபடக் கூடாது!” என்றார்கள்.
அத்தியாயம் : 25