168. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي أَشْعَثُ بْنُ سُلَيْمٍ، قَالَ سَمِعْتُ أَبِي، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُعْجِبُهُ التَّيَمُّنُ فِي تَنَعُّلِهِ وَتَرَجُّلِهِ وَطُهُورِهِ وَفِي شَأْنِهِ كُلِّهِ.
பாடம் : 31 அங்கத் தூய்மையிலும் குளியலி லும் வலப் பக்கத்திலிருந்து ஆரம்பித்தல்
168. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், தாம் காலணி அணிந்துகொள்ளும்போதும் தலைவாரிக் கொள்ளும்போதும் சுத்தம் செய்யும் போதும் தம் அனைத்து வேலைகளிலும் வலப் பக்கத்திலிருந்து தொடங்குவதையே விரும்பிவந்தார்கள்.16

அத்தியாயம் : 4
169. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّهُ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَحَانَتْ صَلاَةُ الْعَصْرِ، فَالْتَمَسَ النَّاسُ الْوَضُوءَ فَلَمْ يَجِدُوهُ، فَأُتِيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِوَضُوءٍ، فَوَضَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي ذَلِكَ الإِنَاءِ يَدَهُ، وَأَمَرَ النَّاسَ أَنْ يَتَوَضَّئُوا مِنْهُ. قَالَ فَرَأَيْتُ الْمَاءَ يَنْبُعُ مِنْ تَحْتِ أَصَابِعِهِ حَتَّى تَوَضَّئُوا مِنْ عِنْدِ آخِرِهِمْ.
பாடம் : 32 தொழுகையின் நேரம் வந்ததும் அங்கத் தூய்மை செய்வதற் காகத் தண்ணீரைத் தேடுதல் (ஒரு பயணத்தின்போது) சுப்ஹு தொழுகையின் நேரம் வந்ததும் (அங்கத் தூய்மை செய்வதற்காகத்) தண்ணீர் தேடப்பட்டது. ஆனால், தண்ணீர் கிடைக்க வில்லை. அப்போதுதான் ‘தயம்மும்’ (தொடர்பான இறைவசனம்) அருளப் பெற்றது என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
169. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) அஸ்ர் தொழுகையின் நேரம் நெருங்கியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நான் பார்த்தேன். மக்கள் அங்கத் தூய்மை செய்வதற்குத் தண்ணீரைத் தேடினார்கள். தண்ணீர் கிடைக்கவில்லை. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு பாத்திரத்தில் (சிறிது) தண்ணீர் கொண்டுவரப்பட்டது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் பாத்திரத்தினுள் தமது கரத்தை வைத்து, அப்பாத்திரத்திலிருந்து அங்கத் தூய்மை செய்யுமாறு மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் விரல்களுக்குக் கீழேயிருந்து தண்ணீர் சுரப்பதை நான் கண்டேன். மக்களில் இறுதி ஆள்வரை அனைவரும் அங்கத் தூய்மை செய்து முடித்தார்கள்.

அத்தியாயம் : 4
170. حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ عَاصِمٍ، عَنِ ابْنِ سِيرِينَ، قَالَ قُلْتُ لِعَبِيدَةَ عِنْدَنَا مِنْ شَعَرِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَصَبْنَاهُ مِنْ قِبَلِ أَنَسٍ، أَوْ مِنْ قِبَلِ أَهْلِ أَنَسٍ فَقَالَ لأَنْ تَكُونَ عِنْدِي شَعَرَةٌ مِنْهُ أَحَبُّ إِلَىَّ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا.
பாடம் : 33 மனித முடியைக் கழுவிய தண்ணீர், நாய் வாய்வைத்த தண்ணீர், பள்ளிவாசலில் நாய் கடந்துசென்ற இடம் (ஆகிய வற்றின் சட்டம்).17 மனித முடியிலிருந்து கயிறுகளும் நூல்களும் திரித்தெடுப்பதை அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் குற்றமாகக் கருதவில்லை. தண்ணீர் உள்ள ஒரு பாத்திரத்தில் நாய் வாய்வைத்துவிட, அந்தத் தண்ணீரைத் தவிர வேறு தண்ணீர் இல்லையென்றால், அந்தத் தண்ணீரால் அங்கத் தூய்மை செய்யலாம் என முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறிய) இந்தச் சட்டம், “உங்களுக்குத் தண்ணீர் கிடைக்க வில்லையானால், சுத்தமான மண்ணால் ‘தயம்மும்’ செய்துகொள்ளுங்கள்” (4:43) எனும் இறைவசனத்திலிருந்தே பெறப்படுகிறது. (ஏனெனில், ‘தண்ணீர்’ என்று பொதுவாக அல்லாஹ் கூறுவதால் நாய் வாய்வைத்த) இந்தத் தண்ணீரும் தண்ணீர்தான். என்றாலும், அங்கத் தூய்மை செய்பவரின் மனத்தில் உறுத்தல் ஏற்படுகிறது. ஆகவே, அந்தத் தண்ணீரில் அங்கத் தூய்மை செய்பவர் ‘தயம்மும்’ செய்து கொள்ளவும் வேண்டும்.
170. முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அபீதா (பின் அம்ர் அஸ்ஸல் மானீ-ரஹ்) அவர்களிடம், ‘அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து’ அல்லது ‘அனஸின் குடும்பத்தாரிடமிருந்து’ நாங்கள் பெற்ற நபி (ஸல்) அவர்களின் சில முடிகள் எங்களி டம் இருக்கின்றன என்று சொன்னேன்.

அதற்கு அபீதா (ரஹ்) அவர்கள், “நபி (ஸல்) அவர்களின் ஒரு முடி என்னிடம் இருப்பது உலகமும் அதில் உள்ளவற்றை யும்விட எனக்கு மிகவும் உவப்பான தாகும்” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 4
171. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، قَالَ أَخْبَرَنَا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنَا عَبَّادٌ، عَنِ ابْنِ عَوْنٍ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمَّا حَلَقَ رَأْسَهُ كَانَ أَبُو طَلْحَةَ أَوَّلَ مَنْ أَخَذَ مِنْ شَعَرِهِ.
பாடம் : 33 மனித முடியைக் கழுவிய தண்ணீர், நாய் வாய்வைத்த தண்ணீர், பள்ளிவாசலில் நாய் கடந்துசென்ற இடம் (ஆகிய வற்றின் சட்டம்).17 மனித முடியிலிருந்து கயிறுகளும் நூல்களும் திரித்தெடுப்பதை அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் குற்றமாகக் கருதவில்லை. தண்ணீர் உள்ள ஒரு பாத்திரத்தில் நாய் வாய்வைத்துவிட, அந்தத் தண்ணீரைத் தவிர வேறு தண்ணீர் இல்லையென்றால், அந்தத் தண்ணீரால் அங்கத் தூய்மை செய்யலாம் என முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறிய) இந்தச் சட்டம், “உங்களுக்குத் தண்ணீர் கிடைக்க வில்லையானால், சுத்தமான மண்ணால் ‘தயம்மும்’ செய்துகொள்ளுங்கள்” (4:43) எனும் இறைவசனத்திலிருந்தே பெறப்படுகிறது. (ஏனெனில், ‘தண்ணீர்’ என்று பொதுவாக அல்லாஹ் கூறுவதால் நாய் வாய்வைத்த) இந்தத் தண்ணீரும் தண்ணீர்தான். என்றாலும், அங்கத் தூய்மை செய்பவரின் மனத்தில் உறுத்தல் ஏற்படுகிறது. ஆகவே, அந்தத் தண்ணீரில் அங்கத் தூய்மை செய்பவர் ‘தயம்மும்’ செய்து கொள்ளவும் வேண்டும்.
171. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜில்) தமது தலைமுடியை மழித்த போது, அபூதல்ஹா (ரலி) அவர்களே முதன் முதலில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முடிகளில் சிலவற்றை எடுத்து (பத்திரப்படுத்தி)க்கொண்டார்கள்.


அத்தியாயம் : 4
172. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا شَرِبَ الْكَلْبُ فِي إِنَاءِ أَحَدِكُمْ فَلْيَغْسِلْهُ سَبْعًا "".
பாடம் : 33 மனித முடியைக் கழுவிய தண்ணீர், நாய் வாய்வைத்த தண்ணீர், பள்ளிவாசலில் நாய் கடந்துசென்ற இடம் (ஆகிய வற்றின் சட்டம்).17 மனித முடியிலிருந்து கயிறுகளும் நூல்களும் திரித்தெடுப்பதை அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் குற்றமாகக் கருதவில்லை. தண்ணீர் உள்ள ஒரு பாத்திரத்தில் நாய் வாய்வைத்துவிட, அந்தத் தண்ணீரைத் தவிர வேறு தண்ணீர் இல்லையென்றால், அந்தத் தண்ணீரால் அங்கத் தூய்மை செய்யலாம் என முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறிய) இந்தச் சட்டம், “உங்களுக்குத் தண்ணீர் கிடைக்க வில்லையானால், சுத்தமான மண்ணால் ‘தயம்மும்’ செய்துகொள்ளுங்கள்” (4:43) எனும் இறைவசனத்திலிருந்தே பெறப்படுகிறது. (ஏனெனில், ‘தண்ணீர்’ என்று பொதுவாக அல்லாஹ் கூறுவதால் நாய் வாய்வைத்த) இந்தத் தண்ணீரும் தண்ணீர்தான். என்றாலும், அங்கத் தூய்மை செய்பவரின் மனத்தில் உறுத்தல் ஏற்படுகிறது. ஆகவே, அந்தத் தண்ணீரில் அங்கத் தூய்மை செய்பவர் ‘தயம்மும்’ செய்து கொள்ளவும் வேண்டும்.
172. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவருடைய பாத்திரத் தில் நாய் (வாய்வைத்துக்) குடித்துவிடு மானால், அவர் அந்தப் பாத்திரத்தை ஏழு முறை கழுவட்டும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 4
173. حَدَّثَنَا إِسْحَاقُ، أَخْبَرَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، سَمِعْتُ أَبِي، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم "" أَنَّ رَجُلاً رَأَى كَلْبًا يَأْكُلُ الثَّرَى مِنَ الْعَطَشِ، فَأَخَذَ الرَّجُلُ خُفَّهُ فَجَعَلَ يَغْرِفُ لَهُ بِهِ حَتَّى أَرْوَاهُ، فَشَكَرَ اللَّهُ لَهُ فَأَدْخَلَهُ الْجَنَّةَ "".
பாடம் : 33 மனித முடியைக் கழுவிய தண்ணீர், நாய் வாய்வைத்த தண்ணீர், பள்ளிவாசலில் நாய் கடந்துசென்ற இடம் (ஆகிய வற்றின் சட்டம்).17 மனித முடியிலிருந்து கயிறுகளும் நூல்களும் திரித்தெடுப்பதை அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் குற்றமாகக் கருதவில்லை. தண்ணீர் உள்ள ஒரு பாத்திரத்தில் நாய் வாய்வைத்துவிட, அந்தத் தண்ணீரைத் தவிர வேறு தண்ணீர் இல்லையென்றால், அந்தத் தண்ணீரால் அங்கத் தூய்மை செய்யலாம் என முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறிய) இந்தச் சட்டம், “உங்களுக்குத் தண்ணீர் கிடைக்க வில்லையானால், சுத்தமான மண்ணால் ‘தயம்மும்’ செய்துகொள்ளுங்கள்” (4:43) எனும் இறைவசனத்திலிருந்தே பெறப்படுகிறது. (ஏனெனில், ‘தண்ணீர்’ என்று பொதுவாக அல்லாஹ் கூறுவதால் நாய் வாய்வைத்த) இந்தத் தண்ணீரும் தண்ணீர்தான். என்றாலும், அங்கத் தூய்மை செய்பவரின் மனத்தில் உறுத்தல் ஏற்படுகிறது. ஆகவே, அந்தத் தண்ணீரில் அங்கத் தூய்மை செய்பவர் ‘தயம்மும்’ செய்து கொள்ளவும் வேண்டும்.
173. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(முற்காலத்தில்) ஒரு நாய் தாகத்தால் (தவித்து) ஈர மண்ணை (நக்கி) உண்டு கொண்டிருப்பதை ஒரு மனிதர் பார்த்தார். உடனே அவர் (தாம் அணிந்திருந்த தோல்) காலுறையை எடுத்து அதில் தண்ணீர் அள்ளிவந்து, அந்நாய் தாகம் தீரும்வரை கொடுத்தார். எனவே அல்லாஹ், அவரது நற்செயலைப் பாராட்டி (ஏற்று) அவரைச் சொர்க்கத்தில் அனுமதித்தான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 4
174. وَقَالَ أَحْمَدُ بْنُ شَبِيبٍ حَدَّثَنَا أَبِي، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ حَدَّثَنِي حَمْزَةُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، قَالَ كَانَتِ الْكِلاَبُ تَبُولُ وَتُقْبِلُ وَتُدْبِرُ فِي الْمَسْجِدِ فِي زَمَانِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَلَمْ يَكُونُوا يَرُشُّونَ شَيْئًا مِنْ ذَلِكَ.
பாடம் : 33 மனித முடியைக் கழுவிய தண்ணீர், நாய் வாய்வைத்த தண்ணீர், பள்ளிவாசலில் நாய் கடந்துசென்ற இடம் (ஆகிய வற்றின் சட்டம்).17 மனித முடியிலிருந்து கயிறுகளும் நூல்களும் திரித்தெடுப்பதை அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் குற்றமாகக் கருதவில்லை. தண்ணீர் உள்ள ஒரு பாத்திரத்தில் நாய் வாய்வைத்துவிட, அந்தத் தண்ணீரைத் தவிர வேறு தண்ணீர் இல்லையென்றால், அந்தத் தண்ணீரால் அங்கத் தூய்மை செய்யலாம் என முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறிய) இந்தச் சட்டம், “உங்களுக்குத் தண்ணீர் கிடைக்க வில்லையானால், சுத்தமான மண்ணால் ‘தயம்மும்’ செய்துகொள்ளுங்கள்” (4:43) எனும் இறைவசனத்திலிருந்தே பெறப்படுகிறது. (ஏனெனில், ‘தண்ணீர்’ என்று பொதுவாக அல்லாஹ் கூறுவதால் நாய் வாய்வைத்த) இந்தத் தண்ணீரும் தண்ணீர்தான். என்றாலும், அங்கத் தூய்மை செய்பவரின் மனத்தில் உறுத்தல் ஏற்படுகிறது. ஆகவே, அந்தத் தண்ணீரில் அங்கத் தூய்மை செய்பவர் ‘தயம்மும்’ செய்து கொள்ளவும் வேண்டும்.
174. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களது காலத்தில், (வெளியே) சிறுநீர் கழித்துவிட்டு, (மண்தரையாக இருந்த) பள்ளிவாசலுக்குள் நாய்கள் வந்து கொண்டும் போய்க்கொண்டும் இருந்தன. இதற்காக மக்கள் (பள்ளிவாசலில் தண்ணீர்) எதையும் தெளிப்பவர்களாக இருக்க வில்லை.


அத்தியாயம் : 4
175. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ ابْنِ أَبِي السَّفَرِ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ سَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ "" إِذَا أَرْسَلْتَ كَلْبَكَ الْمُعَلَّمَ فَقَتَلَ فَكُلْ، وَإِذَا أَكَلَ فَلاَ تَأْكُلْ، فَإِنَّمَا أَمْسَكَهُ عَلَى نَفْسِهِ "". قُلْتُ أُرْسِلُ كَلْبِي فَأَجِدُ مَعَهُ كَلْبًا آخَرَ قَالَ "" فَلاَ تَأْكُلْ، فَإِنَّمَا سَمَّيْتَ عَلَى كَلْبِكَ، وَلَمْ تُسَمِّ عَلَى كَلْبٍ آخَرَ "".
பாடம் : 33 மனித முடியைக் கழுவிய தண்ணீர், நாய் வாய்வைத்த தண்ணீர், பள்ளிவாசலில் நாய் கடந்துசென்ற இடம் (ஆகிய வற்றின் சட்டம்).17 மனித முடியிலிருந்து கயிறுகளும் நூல்களும் திரித்தெடுப்பதை அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் குற்றமாகக் கருதவில்லை. தண்ணீர் உள்ள ஒரு பாத்திரத்தில் நாய் வாய்வைத்துவிட, அந்தத் தண்ணீரைத் தவிர வேறு தண்ணீர் இல்லையென்றால், அந்தத் தண்ணீரால் அங்கத் தூய்மை செய்யலாம் என முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறிய) இந்தச் சட்டம், “உங்களுக்குத் தண்ணீர் கிடைக்க வில்லையானால், சுத்தமான மண்ணால் ‘தயம்மும்’ செய்துகொள்ளுங்கள்” (4:43) எனும் இறைவசனத்திலிருந்தே பெறப்படுகிறது. (ஏனெனில், ‘தண்ணீர்’ என்று பொதுவாக அல்லாஹ் கூறுவதால் நாய் வாய்வைத்த) இந்தத் தண்ணீரும் தண்ணீர்தான். என்றாலும், அங்கத் தூய்மை செய்பவரின் மனத்தில் உறுத்தல் ஏற்படுகிறது. ஆகவே, அந்தத் தண்ணீரில் அங்கத் தூய்மை செய்பவர் ‘தயம்மும்’ செய்து கொள்ளவும் வேண்டும்.
175. அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியாவது:

(நாய் மூலம் வேட்டையாடுவதைப் பற்றி) நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் “வேட்டைக்காகப் பயிற்சி அளிக்கப்பட்ட நாயை நீங்கள் அனுப்பிவைத்து, அது (பிராணிகளைக் கவ்விக்) கொன்றுவிட்டாலும் அதை நீங்கள் உண்ணலாம். (அந்தப் பிராணியை) நாய் தின்றிருக்குமானால் அதை நீங்கள் உண்ணாதீர்கள். ஏனெனில், அது (அப்பிராணியை) தனக்காகவே (கவ்வி) வைத்துக் கொண்டுள்ளது” என்று கூறினார்கள்.

நான், “எனது நாயை வேட்டையாட அனுப்புகிறேன்; அதனுடன் மற்றொரு நாயையும் காண்கிறேன் (இவ்விரண்டில் பிராணியைப் பிடித்தது எது என்று எனக்குத் தெரியாது. இந்நிலையில் என்ன செய்வது)?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் உங்கள் நாயைத்தான் அல்லாஹ்வின் பெயர் (பிஸ்மில்லாஹ்) கூறி அனுப்பினீர்களே தவிர, மற்றொரு நாயை அல்லாஹ்வின் பெயர் கூறி அனுப்பவில்லை; எனவே, (அதை) உண்ணாதீர்கள்” என்று சொன்னார்கள்.18

அத்தியாயம் : 4
176. حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لاَ يَزَالُ الْعَبْدُ فِي صَلاَةٍ مَا كَانَ فِي الْمَسْجِدِ يَنْتَظِرُ الصَّلاَةَ، مَا لَمْ يُحْدِثْ "". فَقَالَ رَجُلٌ أَعْجَمِيٌّ مَا الْحَدَثُ يَا أَبَا هُرَيْرَةَ قَالَ الصَّوْتُ. يَعْنِي الضَّرْطَةَ.
பாடம் : 34 முன், பின் இரு துவாரங்களி லிருந்து ஏதேனும் வெளியேறி னால் மட்டுமே அங்கத் தூய்மை முறியும் என்று கூறுவோர்19 ஏனெனில் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: அல்லது உங்களில் ஒருவர் கழிப்பிடத்திலிருந்து (இயற்கைக் கடனை முடித்துவிட்டு) வந்தால்... (தொழுகைக்காக அங்கத் தூய்மை செய்துகொள்ள வேண்டும்.) (4:43)20 அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவரது பின் துவாரத்தி லிருந்து புழுவோ, அல்லது முன் துவாரத் திலிருந்து பேன் போன்ற சிறு பூச்சியோ வெளியேறினால் (அவரது அங்கத் தூய்மை நீங்கிவிடுகிறது.) அவர் மீண்டும் அங்கத் தூய்மை செய்ய வேண்டும். ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருவர் தொழுகையில் (சப்தமிட்டுச்) சிரித்தால் அவர் அந்தத் தொழுகையைத்தான் திரும்பத் தொழ வேண்டுமே தவிர, திரும்பவும் அங்கத் தூய்மை செய்ய வேண்டியதில்லை. ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவர் (தமது உடலிலுள்ள) முடியையோ நகங்களையோ களைவதால், அல்லது தமது காலுறையைக் கழற்றி விடுவதால் அவர் மீண்டும் அங்கத் தூய்மை செய்ய வேண்டியதில்லை. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: சிறு துடக்கு (தூய்மைக் கேடு) ஏற்பட்டால்தான் அங்கத் தூய்மையைத் திரும்பச் செய்ய வேண்டும். ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘தாத்துர் ரிகாஉ’ போரில் நபி (ஸல்) அவர்களும் இருந்தார்கள். அப்போரில் (முஸ்லிம்களில்) ஒருவர்மீது அம்பு பாய்ந்தது. அவருக்குக் கடுமையான இரத்தக் கசிவு ஏற்பட்டது. ஆயினும், அவர் ருகூஉ, சஜ்தா செய்து தொழுகையைத் தொடர்ந்தார். ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: தங்களின் உடலில் காயங்கள் இருக்கவே (நபித்தோழர்களான) முஸ்லிம்கள் தொழுதுகொண்டேயிருந்தார்கள். இரத்தம் வெளியேறுவதன் காரணமாக அங்கத் தூய்மையைத் திரும்பச் செய்ய வேண்டியதில்லை என்று தாவூஸ் பின் கைசான் (ரஹ்), முஹம்மத் பின் அலீ (ரஹ்), அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) உள்ளிட்ட ஹிஜாஸ்வாசிகள் கூறியுள்ளனர். இப்னு உமர் (ரலி) அவர்கள் (தமது உடலிலிருந்த) சிறு கொப்புளத்தை நசுக்கி னார்கள். அதிலிருந்து இரத்தம் வெளி யானது. ஆனால், அவர்கள் திரும்பவும் அங்கத் தூய்மை செய்யவில்லை. அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்களின் உமிழ் நீரில் இரத்தம் வந்தது. (அதற்காக அங்கத் தூய்மையைத் திரும்பச் செய்யாமலேயே) அவர்கள் தொழுகை யைத் தொடர்ந்துகொண்டிருந்தார்கள். இப்னு உமர் (ரலி), ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) ஆகியோர் கூறினர்: ஒருவர் (நோய்க்காக) குருதி உறிஞ்சி எடுப்பாரானால், அவர் அந்த இடத்தை மட்டும் கழுவினால் போதும் (மீண்டும் அங்கத் தூய்மை செய்ய வேண்டிய தில்லை).
176. சயீத் அல்மக்புரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், “ஓர் அடியார் (அங்கத் தூய்மை செய்து கூட்டுத்) தொழுகையை எதிர்பார்த்தபடி பள்ளிவாசலில் இருக்கும் நேரமெல்லாம் அவர் தொழுகையில் இருப்பவராகவே கருதப்படுகிறாôர்; அவருக்கு சிறு துடக்கு (ஹதஸ்) ஏற்படாத வரை” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அப்போது அரபி மொழி (நன்கு) தெரியாத ஒருவர், “ஹதஸ் என்றால் என்ன, அபூஹுரைரா அவர்களே!?” என்று கேட்டார். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள், “பின்துவாரத்திலிருந்து வெளியாகும் காற்று (சப்தம்)” என்று பதிலளித் தார்கள்.


அத்தியாயம் : 4
177. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَمِّهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ يَنْصَرِفْ حَتَّى يَسْمَعَ صَوْتًا أَوْ يَجِدَ رِيحًا "".
பாடம் : 34 முன், பின் இரு துவாரங்களி லிருந்து ஏதேனும் வெளியேறி னால் மட்டுமே அங்கத் தூய்மை முறியும் என்று கூறுவோர்19 ஏனெனில் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: அல்லது உங்களில் ஒருவர் கழிப்பிடத்திலிருந்து (இயற்கைக் கடனை முடித்துவிட்டு) வந்தால்... (தொழுகைக்காக அங்கத் தூய்மை செய்துகொள்ள வேண்டும்.) (4:43)20 அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவரது பின் துவாரத்தி லிருந்து புழுவோ, அல்லது முன் துவாரத் திலிருந்து பேன் போன்ற சிறு பூச்சியோ வெளியேறினால் (அவரது அங்கத் தூய்மை நீங்கிவிடுகிறது.) அவர் மீண்டும் அங்கத் தூய்மை செய்ய வேண்டும். ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருவர் தொழுகையில் (சப்தமிட்டுச்) சிரித்தால் அவர் அந்தத் தொழுகையைத்தான் திரும்பத் தொழ வேண்டுமே தவிர, திரும்பவும் அங்கத் தூய்மை செய்ய வேண்டியதில்லை. ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவர் (தமது உடலிலுள்ள) முடியையோ நகங்களையோ களைவதால், அல்லது தமது காலுறையைக் கழற்றி விடுவதால் அவர் மீண்டும் அங்கத் தூய்மை செய்ய வேண்டியதில்லை. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: சிறு துடக்கு (தூய்மைக் கேடு) ஏற்பட்டால்தான் அங்கத் தூய்மையைத் திரும்பச் செய்ய வேண்டும். ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘தாத்துர் ரிகாஉ’ போரில் நபி (ஸல்) அவர்களும் இருந்தார்கள். அப்போரில் (முஸ்லிம்களில்) ஒருவர்மீது அம்பு பாய்ந்தது. அவருக்குக் கடுமையான இரத்தக் கசிவு ஏற்பட்டது. ஆயினும், அவர் ருகூஉ, சஜ்தா செய்து தொழுகையைத் தொடர்ந்தார். ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: தங்களின் உடலில் காயங்கள் இருக்கவே (நபித்தோழர்களான) முஸ்லிம்கள் தொழுதுகொண்டேயிருந்தார்கள். இரத்தம் வெளியேறுவதன் காரணமாக அங்கத் தூய்மையைத் திரும்பச் செய்ய வேண்டியதில்லை என்று தாவூஸ் பின் கைசான் (ரஹ்), முஹம்மத் பின் அலீ (ரஹ்), அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) உள்ளிட்ட ஹிஜாஸ்வாசிகள் கூறியுள்ளனர். இப்னு உமர் (ரலி) அவர்கள் (தமது உடலிலிருந்த) சிறு கொப்புளத்தை நசுக்கி னார்கள். அதிலிருந்து இரத்தம் வெளி யானது. ஆனால், அவர்கள் திரும்பவும் அங்கத் தூய்மை செய்யவில்லை. அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்களின் உமிழ் நீரில் இரத்தம் வந்தது. (அதற்காக அங்கத் தூய்மையைத் திரும்பச் செய்யாமலேயே) அவர்கள் தொழுகை யைத் தொடர்ந்துகொண்டிருந்தார்கள். இப்னு உமர் (ரலி), ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) ஆகியோர் கூறினர்: ஒருவர் (நோய்க்காக) குருதி உறிஞ்சி எடுப்பாரானால், அவர் அந்த இடத்தை மட்டும் கழுவினால் போதும் (மீண்டும் அங்கத் தூய்மை செய்ய வேண்டிய தில்லை).
177. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(தொழுகையில் நிற்கும்போது பின்துவாரத்திலிருந்து பிரியும் காற்றின்) சப்தத்தைக் கேட்காத வரை, அல்லது (அதன்) நாற்றத்தை உணராத வரை (தொழுகையை விட்டு) திரும்பிச் செல்ல வேண்டாம்.

இதை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 4
178. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُنْذِرٍ أَبِي يَعْلَى الثَّوْرِيِّ، عَنْ مُحَمَّدٍ ابْنِ الْحَنَفِيَّةِ، قَالَ قَالَ عَلِيٌّ كُنْتُ رَجُلاً مَذَّاءً، فَاسْتَحْيَيْتُ أَنْ أَسْأَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَأَمَرْتُ الْمِقْدَادَ بْنَ الأَسْوَدِ فَسَأَلَهُ فَقَالَ "" فِيهِ الْوُضُوءُ "". وَرَوَاهُ شُعْبَةُ عَنِ الأَعْمَشِ.
பாடம் : 34 முன், பின் இரு துவாரங்களி லிருந்து ஏதேனும் வெளியேறி னால் மட்டுமே அங்கத் தூய்மை முறியும் என்று கூறுவோர்19 ஏனெனில் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: அல்லது உங்களில் ஒருவர் கழிப்பிடத்திலிருந்து (இயற்கைக் கடனை முடித்துவிட்டு) வந்தால்... (தொழுகைக்காக அங்கத் தூய்மை செய்துகொள்ள வேண்டும்.) (4:43)20 அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவரது பின் துவாரத்தி லிருந்து புழுவோ, அல்லது முன் துவாரத் திலிருந்து பேன் போன்ற சிறு பூச்சியோ வெளியேறினால் (அவரது அங்கத் தூய்மை நீங்கிவிடுகிறது.) அவர் மீண்டும் அங்கத் தூய்மை செய்ய வேண்டும். ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருவர் தொழுகையில் (சப்தமிட்டுச்) சிரித்தால் அவர் அந்தத் தொழுகையைத்தான் திரும்பத் தொழ வேண்டுமே தவிர, திரும்பவும் அங்கத் தூய்மை செய்ய வேண்டியதில்லை. ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவர் (தமது உடலிலுள்ள) முடியையோ நகங்களையோ களைவதால், அல்லது தமது காலுறையைக் கழற்றி விடுவதால் அவர் மீண்டும் அங்கத் தூய்மை செய்ய வேண்டியதில்லை. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: சிறு துடக்கு (தூய்மைக் கேடு) ஏற்பட்டால்தான் அங்கத் தூய்மையைத் திரும்பச் செய்ய வேண்டும். ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘தாத்துர் ரிகாஉ’ போரில் நபி (ஸல்) அவர்களும் இருந்தார்கள். அப்போரில் (முஸ்லிம்களில்) ஒருவர்மீது அம்பு பாய்ந்தது. அவருக்குக் கடுமையான இரத்தக் கசிவு ஏற்பட்டது. ஆயினும், அவர் ருகூஉ, சஜ்தா செய்து தொழுகையைத் தொடர்ந்தார். ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: தங்களின் உடலில் காயங்கள் இருக்கவே (நபித்தோழர்களான) முஸ்லிம்கள் தொழுதுகொண்டேயிருந்தார்கள். இரத்தம் வெளியேறுவதன் காரணமாக அங்கத் தூய்மையைத் திரும்பச் செய்ய வேண்டியதில்லை என்று தாவூஸ் பின் கைசான் (ரஹ்), முஹம்மத் பின் அலீ (ரஹ்), அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) உள்ளிட்ட ஹிஜாஸ்வாசிகள் கூறியுள்ளனர். இப்னு உமர் (ரலி) அவர்கள் (தமது உடலிலிருந்த) சிறு கொப்புளத்தை நசுக்கி னார்கள். அதிலிருந்து இரத்தம் வெளி யானது. ஆனால், அவர்கள் திரும்பவும் அங்கத் தூய்மை செய்யவில்லை. அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்களின் உமிழ் நீரில் இரத்தம் வந்தது. (அதற்காக அங்கத் தூய்மையைத் திரும்பச் செய்யாமலேயே) அவர்கள் தொழுகை யைத் தொடர்ந்துகொண்டிருந்தார்கள். இப்னு உமர் (ரலி), ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) ஆகியோர் கூறினர்: ஒருவர் (நோய்க்காக) குருதி உறிஞ்சி எடுப்பாரானால், அவர் அந்த இடத்தை மட்டும் கழுவினால் போதும் (மீண்டும் அங்கத் தூய்மை செய்ய வேண்டிய தில்லை).
178. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

பாலுணர்வு கிளர்ச்சி நீர் (‘மதீ’) அதிக மாக வெளிப்படும் ஆடவனாக நான் இருந்தேன். (இது பற்றிக்) கேட்க வெட் கப்பட்டு மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி) அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்குமாறு பணித்தேன். அவ்வாறே அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டார்.

“அதற்காக அங்கத் தூய்மை (உளூ) செய்வதுதான் கடமை; (குளிக்க வேண்டிய கட்டாயமில்லை)” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 4
179. حَدَّثَنَا سَعْدُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، أَنَّ عَطَاءَ بْنَ يَسَارٍ، أَخْبَرَهُ أَنْ زَيْدَ بْنَ خَالِدٍ أَخْبَرَهُ أَنَّهُ، سَأَلَ عُثْمَانَ بْنَ عَفَّانَ ـ رضى الله عنه ـ قُلْتُ أَرَأَيْتَ إِذَا جَامَعَ فَلَمْ يُمْنِ قَالَ عُثْمَانُ يَتَوَضَّأُ كَمَا يَتَوَضَّأُ لِلصَّلاَةِ، وَيَغْسِلُ ذَكَرَهُ. قَالَ عُثْمَانُ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. فَسَأَلْتُ عَنْ ذَلِكَ عَلِيًّا، وَالزُّبَيْرَ، وَطَلْحَةَ، وَأُبَىَّ بْنَ كَعْبٍ ـ رضى الله عنهم ـ فَأَمَرُوهُ بِذَلِكَ.
பாடம் : 34 முன், பின் இரு துவாரங்களி லிருந்து ஏதேனும் வெளியேறி னால் மட்டுமே அங்கத் தூய்மை முறியும் என்று கூறுவோர்19 ஏனெனில் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: அல்லது உங்களில் ஒருவர் கழிப்பிடத்திலிருந்து (இயற்கைக் கடனை முடித்துவிட்டு) வந்தால்... (தொழுகைக்காக அங்கத் தூய்மை செய்துகொள்ள வேண்டும்.) (4:43)20 அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவரது பின் துவாரத்தி லிருந்து புழுவோ, அல்லது முன் துவாரத் திலிருந்து பேன் போன்ற சிறு பூச்சியோ வெளியேறினால் (அவரது அங்கத் தூய்மை நீங்கிவிடுகிறது.) அவர் மீண்டும் அங்கத் தூய்மை செய்ய வேண்டும். ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருவர் தொழுகையில் (சப்தமிட்டுச்) சிரித்தால் அவர் அந்தத் தொழுகையைத்தான் திரும்பத் தொழ வேண்டுமே தவிர, திரும்பவும் அங்கத் தூய்மை செய்ய வேண்டியதில்லை. ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவர் (தமது உடலிலுள்ள) முடியையோ நகங்களையோ களைவதால், அல்லது தமது காலுறையைக் கழற்றி விடுவதால் அவர் மீண்டும் அங்கத் தூய்மை செய்ய வேண்டியதில்லை. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: சிறு துடக்கு (தூய்மைக் கேடு) ஏற்பட்டால்தான் அங்கத் தூய்மையைத் திரும்பச் செய்ய வேண்டும். ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘தாத்துர் ரிகாஉ’ போரில் நபி (ஸல்) அவர்களும் இருந்தார்கள். அப்போரில் (முஸ்லிம்களில்) ஒருவர்மீது அம்பு பாய்ந்தது. அவருக்குக் கடுமையான இரத்தக் கசிவு ஏற்பட்டது. ஆயினும், அவர் ருகூஉ, சஜ்தா செய்து தொழுகையைத் தொடர்ந்தார். ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: தங்களின் உடலில் காயங்கள் இருக்கவே (நபித்தோழர்களான) முஸ்லிம்கள் தொழுதுகொண்டேயிருந்தார்கள். இரத்தம் வெளியேறுவதன் காரணமாக அங்கத் தூய்மையைத் திரும்பச் செய்ய வேண்டியதில்லை என்று தாவூஸ் பின் கைசான் (ரஹ்), முஹம்மத் பின் அலீ (ரஹ்), அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) உள்ளிட்ட ஹிஜாஸ்வாசிகள் கூறியுள்ளனர். இப்னு உமர் (ரலி) அவர்கள் (தமது உடலிலிருந்த) சிறு கொப்புளத்தை நசுக்கி னார்கள். அதிலிருந்து இரத்தம் வெளி யானது. ஆனால், அவர்கள் திரும்பவும் அங்கத் தூய்மை செய்யவில்லை. அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்களின் உமிழ் நீரில் இரத்தம் வந்தது. (அதற்காக அங்கத் தூய்மையைத் திரும்பச் செய்யாமலேயே) அவர்கள் தொழுகை யைத் தொடர்ந்துகொண்டிருந்தார்கள். இப்னு உமர் (ரலி), ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) ஆகியோர் கூறினர்: ஒருவர் (நோய்க்காக) குருதி உறிஞ்சி எடுப்பாரானால், அவர் அந்த இடத்தை மட்டும் கழுவினால் போதும் (மீண்டும் அங்கத் தூய்மை செய்ய வேண்டிய தில்லை).
179. ஸைத் பின் காலித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களிடம் “ஒருவர் (தம் மனைவி யுடன்) தாம்பத்திய உறவு மேற்கொண்டார். ஆனால், விந்து வெளியாகவில்லை (இந்நிலையில் அவர்மீது குளியல் கடமையாகுமா, என்ன) சொல்லுங்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “அவர் தமது ஆண் குறியைக் கழுவிவிட்டுத் தொழுகைக்குச் செய்வதைப் போன்று அங்கத் தூய்மை (உளூ) செய்துகொள்ள வேண்டும். இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றுள்ளேன்” என்று கூறினார்கள்.

மேலும், இது பற்றி அலீ (ரலி), ஸுபைர் (ரலி), தல்ஹா (ரலி), உபை பின் கஅப் (ரலி) ஆகியோரைக் கேட்டபோது, இவ்வாறே அவர் செய்ய வேண்டுமென அவர்கள் அனை வரும் வலியுறுத்தினர்.21


அத்தியாயம் : 4
180. حَدَّثَنَا إِسْحَاقُ، قَالَ أَخْبَرَنَا النَّضْرُ، قَالَ أَخْبَرَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنْ ذَكْوَانَ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَرْسَلَ إِلَى رَجُلٍ مِنَ الأَنْصَارِ فَجَاءَ وَرَأْسُهُ يَقْطُرُ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لَعَلَّنَا أَعْجَلْنَاكَ "". فَقَالَ نَعَمْ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِذَا أُعْجِلْتَ أَوْ قُحِطْتَ، فَعَلَيْكَ الْوُضُوءُ "". تَابَعَهُ وَهْبٌ قَالَ حَدَّثَنَا شُعْبَةُ. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ وَلَمْ يَقُلْ غُنْدَرٌ وَيَحْيَى عَنْ شُعْبَةَ الْوُضُوءُ.
பாடம் : 34 முன், பின் இரு துவாரங்களி லிருந்து ஏதேனும் வெளியேறி னால் மட்டுமே அங்கத் தூய்மை முறியும் என்று கூறுவோர்19 ஏனெனில் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: அல்லது உங்களில் ஒருவர் கழிப்பிடத்திலிருந்து (இயற்கைக் கடனை முடித்துவிட்டு) வந்தால்... (தொழுகைக்காக அங்கத் தூய்மை செய்துகொள்ள வேண்டும்.) (4:43)20 அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவரது பின் துவாரத்தி லிருந்து புழுவோ, அல்லது முன் துவாரத் திலிருந்து பேன் போன்ற சிறு பூச்சியோ வெளியேறினால் (அவரது அங்கத் தூய்மை நீங்கிவிடுகிறது.) அவர் மீண்டும் அங்கத் தூய்மை செய்ய வேண்டும். ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருவர் தொழுகையில் (சப்தமிட்டுச்) சிரித்தால் அவர் அந்தத் தொழுகையைத்தான் திரும்பத் தொழ வேண்டுமே தவிர, திரும்பவும் அங்கத் தூய்மை செய்ய வேண்டியதில்லை. ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவர் (தமது உடலிலுள்ள) முடியையோ நகங்களையோ களைவதால், அல்லது தமது காலுறையைக் கழற்றி விடுவதால் அவர் மீண்டும் அங்கத் தூய்மை செய்ய வேண்டியதில்லை. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: சிறு துடக்கு (தூய்மைக் கேடு) ஏற்பட்டால்தான் அங்கத் தூய்மையைத் திரும்பச் செய்ய வேண்டும். ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘தாத்துர் ரிகாஉ’ போரில் நபி (ஸல்) அவர்களும் இருந்தார்கள். அப்போரில் (முஸ்லிம்களில்) ஒருவர்மீது அம்பு பாய்ந்தது. அவருக்குக் கடுமையான இரத்தக் கசிவு ஏற்பட்டது. ஆயினும், அவர் ருகூஉ, சஜ்தா செய்து தொழுகையைத் தொடர்ந்தார். ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: தங்களின் உடலில் காயங்கள் இருக்கவே (நபித்தோழர்களான) முஸ்லிம்கள் தொழுதுகொண்டேயிருந்தார்கள். இரத்தம் வெளியேறுவதன் காரணமாக அங்கத் தூய்மையைத் திரும்பச் செய்ய வேண்டியதில்லை என்று தாவூஸ் பின் கைசான் (ரஹ்), முஹம்மத் பின் அலீ (ரஹ்), அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) உள்ளிட்ட ஹிஜாஸ்வாசிகள் கூறியுள்ளனர். இப்னு உமர் (ரலி) அவர்கள் (தமது உடலிலிருந்த) சிறு கொப்புளத்தை நசுக்கி னார்கள். அதிலிருந்து இரத்தம் வெளி யானது. ஆனால், அவர்கள் திரும்பவும் அங்கத் தூய்மை செய்யவில்லை. அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்களின் உமிழ் நீரில் இரத்தம் வந்தது. (அதற்காக அங்கத் தூய்மையைத் திரும்பச் செய்யாமலேயே) அவர்கள் தொழுகை யைத் தொடர்ந்துகொண்டிருந்தார்கள். இப்னு உமர் (ரலி), ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) ஆகியோர் கூறினர்: ஒருவர் (நோய்க்காக) குருதி உறிஞ்சி எடுப்பாரானால், அவர் அந்த இடத்தை மட்டும் கழுவினால் போதும் (மீண்டும் அங்கத் தூய்மை செய்ய வேண்டிய தில்லை).
180. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒருவரை அழைத்து வருமாறு ஆளனுப்பினார்கள். தலையிலி ருந்து தண்ணீர் சொட்டும் நிலையில் அவர் வந்தார். இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள். “நாம் உங்களை அவசரப் படுத்திவிட்டோம் போலும்?” என்றார்கள். அதற்கு அவர் ‘ஆம்’ என்றார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள் (தாம்பத்திய உறவு கொள்ளும்போது) அவசரப்பட்டு எழ நேர்ந்தால், அல்லது விந்து வெளியாக்காம லிருந்தால் அங்கத் தூய்மை செய்வது (மட்டுமே) உங்கள்மீது கடமையாகும்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அபூஅப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்:

ஷுஅபா (ரஹ்) அவர்களிடமிருந்து ஃகுன்தர் (ரஹ்), யஹ்யா (ரஹ்) ஆகியோர் வழியாக வரும் அறிவிப்பில் “அங்கத் தூய்மை கடமையாகும்” எனும் வாசகம் இடம்பெறவில்லை. (“உங்கள்மீது குளியல் கடமையாகாது” என்ற வாசகமே காணப்படுகிறது.)

அத்தியாயம் : 4
181. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، قَالَ أَخْبَرَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ يَحْيَى، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ كُرَيْبٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمَّا أَفَاضَ مِنْ عَرَفَةَ عَدَلَ إِلَى الشِّعْبِ، فَقَضَى حَاجَتَهُ. قَالَ أُسَامَةُ بْنُ زَيْدٍ فَجَعَلْتُ أَصُبُّ عَلَيْهِ وَيَتَوَضَّأُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَتُصَلِّي فَقَالَ "" الْمُصَلَّى أَمَامَكَ "".
பாடம் : 35 அங்கத் தூய்மை செய்ய நண்பருக்கு உதவுதல்
181. உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜின்போது) ‘அரஃபா’ பெருவெளி யிலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்துகொண்டிருந்தபோது, அங்கிருந்த ஒரு கணவாயை நோக்கிச் சென்று அங்கு இயற்கைக் கடனை நிறைவேற்றினார்கள். அப்போது நான் அவர்களுக்குத் தண்ணீர் ஊற்ற, அவர்கள் அங்கத் தூய்மை செய்யலானார்கள்.

அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?” என்று கேட்டேன். அதற்கு, “தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா எனும் இடத்தில்) வருகிறது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.22


அத்தியாயம் : 4
182. حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، قَالَ سَمِعْتُ يَحْيَى بْنَ سَعِيدٍ، قَالَ أَخْبَرَنِي سَعْدُ بْنُ إِبْرَاهِيمَ، أَنَّ نَافِعَ بْنَ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ عُرْوَةَ بْنَ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، يُحَدِّثُ عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، أَنَّهُ كَانَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي سَفَرٍ، وَأَنَّهُ ذَهَبَ لِحَاجَةٍ لَهُ، وَأَنَّ مُغِيرَةَ جَعَلَ يَصُبُّ الْمَاءَ عَلَيْهِ، وَهُوَ يَتَوَضَّأُ، فَغَسَلَ وَجْهَهُ وَيَدَيْهِ وَمَسَحَ بِرَأْسِهِ وَمَسَحَ عَلَى الْخُفَّيْنِ.
பாடம் : 35 அங்கத் தூய்மை செய்ய நண்பருக்கு உதவுதல்
182. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் ஒரு பயணத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் தமது (இயற்கைத்) தேவைக்காகப் புறப்பட்டுச் சென்றார்கள். (அவர்கள் திரும்பி வந்தபோது) அவர்களின் (கை கால்கள்)மீது நான் தண்ணீர் ஊற்றலானேன். அவர்கள் அங்கத் தூய்மை செய்தார்கள்.

அப்போது அவர்கள் தமது முகத்தையும் இரு கைகளையும் கழுவினார்கள். ஈரக்கையால் தலையைத் தடவி (மஸ்ஹு செய்திடலா)னார்கள். ஈரக்கையால் காலுறைகள்மீது தடவினார்கள் (காலுறைகளைக் கழற்றி கால்களைக் கழுவவில்லை).

அத்தியாயம் : 4
183. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ مَخْرَمَةَ بْنِ سُلَيْمَانَ، عَنْ كُرَيْبٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ، أَخْبَرَهُ أَنَّهُ، بَاتَ لَيْلَةً عِنْدَ مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَهِيَ خَالَتُهُ فَاضْطَجَعْتُ فِي عَرْضِ الْوِسَادَةِ، وَاضْطَجَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَهْلُهُ فِي طُولِهَا، فَنَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى إِذَا انْتَصَفَ اللَّيْلُ، أَوْ قَبْلَهُ بِقَلِيلٍ أَوْ بَعْدَهُ بِقَلِيلٍ، اسْتَيْقَظَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَجَلَسَ يَمْسَحُ النَّوْمَ عَنْ وَجْهِهِ بِيَدِهِ، ثُمَّ قَرَأَ الْعَشْرَ الآيَاتِ الْخَوَاتِمَ مِنْ سُورَةِ آلِ عِمْرَانَ، ثُمَّ قَامَ إِلَى شَنٍّ مُعَلَّقَةٍ، فَتَوَضَّأَ مِنْهَا فَأَحْسَنَ وُضُوءَهُ، ثُمَّ قَامَ يُصَلِّي. قَالَ ابْنُ عَبَّاسٍ فَقُمْتُ فَصَنَعْتُ مِثْلَ مَا صَنَعَ، ثُمَّ ذَهَبْتُ، فَقُمْتُ إِلَى جَنْبِهِ، فَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى رَأْسِي، وَأَخَذَ بِأُذُنِي الْيُمْنَى، يَفْتِلُهَا، فَصَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ أَوْتَرَ، ثُمَّ اضْطَجَعَ، حَتَّى أَتَاهُ الْمُؤَذِّنُ، فَقَامَ، فَصَلَّى رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ، ثُمَّ خَرَجَ فَصَلَّى الصُّبْحَ.
பாடம் : 36 சிறுதுடக்கு ஏற்பட்ட பின்னரும் குர்ஆன் முதலியவற்றை ஓதுதல் மன்ஸூர் பின் முஅதமிர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: குளியல் அறையில் குர்ஆன் ஓதுவதும் அங்கத் தூய்மை யின்றி (அல்லாஹ்வின் திருப்பெயர் எழுதி) கடிதம் வரைவதும் குற்றமில்லை என இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறினார்கள். ஹம்மாத் பின் அபீசுலைமான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (குளியல் அறையில் இருப்போர்) கீழாடை அணிந் திருந்தால் அவர்களுக்கு முகமன் (சலாம்) கூறலாம். அவ்வாறில்லை என்றால், முகமன் கூறாதீர்கள் என்று இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
183. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் என் சிறிய தாயாரும் நபி (ஸல்) அவர்களின் துணைவியாருமான மைமூனா (ரலி) அவர்களின் இல்லத்தில் (ஒரு நாள்) இரவு தங்கினேன். நான் தலையணையின் அகலவாக்கில் (தலை வைத்துப்) படுத்துக்கொண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களின் வீட்டாரும் அதன் நீளவாக்கில் (தலைவைத்துப்) படுத்திருந்தனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவின் பாதிவரை, அல்லது அதற்கு சற்று முன்புவரை, அல்லது சற்றுப் பின்புவரை உறங்கினார்கள். (பின்னர்) அவர்கள் விழித்தெழுந்து அமர்ந்து, தமது கரத்தால் தமது முகத்தில் தடவித் தூக்க(க் கலக்கத்)தைத் துடைக்கலானார்கள். பிறகு ‘ஆலு இம்ரான்’ அத்தியாயத்தின் கடைசிப் பத்து வசனங்களை (3:190-200) ஓதினார்கள்.

பிறகு (கட்டித்) தொங்கவிடப்பட்டிருந்த ஒரு தண்ணீர் பையருகே சென்று (அதைச் சரித்து) அதிலிருந்து அங்கத் தூய்மை செய்தார்கள். தமது அங்கத் தூய்மையைச் செம்மையாகச் செய்து கொண்ட பின்னர் தொழுவதற்காக நின்றார்கள்.

நானும் எழுந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்று (அங்கத் தூய்மை) செய்துவிட்டு அவர்களுக்கு (இடப்) பக்கத்தில் போய் நின்றேன். உடனே அவர்கள் தமது வலக் கரத்தை என் தலைமீது வைத்து, என் வலது காதைப் பிடித்துத் திருகி (தம் வலப் பக்கத்தில் இழுத்து) நிறுத்தினார்கள்.

அப்போது இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகும் இரண்டு ரக் அத்கள் தொழுதார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள், மறுபடியும் இரண்டு ரக்அத்து கள், மேலும் இரண்டு ரக்அத்கள் தொழு தார்கள். பின்பு ‘வித்ர்’ தொழுதார்கள்.

பின்னர் தொழுகை அறிவிப்பாளர் (தொழுகை அறிவிப்புச் செய்துவிட்டுத் தம்மிடம்) வரும்வரை சாய்ந்து படுத்திருந் தார்கள். பிறகு (அவர் வந்தவுடன்) எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (சுப்ஹுடைய சுன்னத்) தொழுதுவிட்டு, (வீட்டிலிருந்து) புறப்பட்டுச் சென்று சுப்ஹு தொழு(வித்)தார்கள்.

அத்தியாயம் : 4
184. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنِ امْرَأَتِهِ، فَاطِمَةَ عَنْ جَدَّتِهَا، أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ أَنَّهَا قَالَتْ أَتَيْتُ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم حِينَ خَسَفَتِ الشَّمْسُ، فَإِذَا النَّاسُ قِيَامٌ يُصَلُّونَ، وَإِذَا هِيَ قَائِمَةٌ تُصَلِّي فَقُلْتُ مَا لِلنَّاسِ فَأَشَارَتْ بِيَدِهَا نَحْوَ السَّمَاءِ وَقَالَتْ سُبْحَانَ اللَّهِ. فَقُلْتُ آيَةٌ فَأَشَارَتْ أَىْ نَعَمْ. فَقُمْتُ حَتَّى تَجَلاَّنِي الْغَشْىُ، وَجَعَلْتُ أَصُبُّ فَوْقَ رَأْسِي مَاءً، فَلَمَّا انْصَرَفَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ، ثُمَّ قَالَ "" مَا مِنْ شَىْءٍ كُنْتُ لَمْ أَرَهُ إِلاَّ قَدْ رَأَيْتُهُ فِي مَقَامِي هَذَا حَتَّى الْجَنَّةِ وَالنَّارِ، وَلَقَدْ أُوحِيَ إِلَىَّ أَنَّكُمْ تُفْتَنُونَ فِي الْقُبُورِ مِثْلَ أَوْ قَرِيبًا مِنْ فِتْنَةِ الدَّجَّالِ ـ لاَ أَدْرِي أَىَّ ذَلِكَ قَالَتْ أَسْمَاءُ ـ يُؤْتَى أَحَدُكُمْ فَيُقَالُ مَا عِلْمُكَ بِهَذَا الرَّجُلِ فَأَمَّا الْمُؤْمِنُ ـ أَوِ الْمُوقِنُ لاَ أَدْرِي أَىَّ ذَلِكَ قَالَتْ أَسْمَاءُ ـ فَيَقُولُ هُوَ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ، جَاءَنَا بِالْبَيِّنَاتِ وَالْهُدَى، فَأَجَبْنَا وَآمَنَّا وَاتَّبَعْنَا، فَيُقَالُ نَمْ صَالِحًا، فَقَدْ عَلِمْنَا إِنْ كُنْتَ لَمُؤْمِنًا، وَأَمَّا الْمُنَافِقُ ـ أَوِ الْمُرْتَابُ لاَ أَدْرِي أَىَّ ذَلِكَ قَالَتْ أَسْمَاءُ ـ فَيَقُولُ لاَ أَدْرِي، سَمِعْتُ النَّاسَ يَقُولُونَ شَيْئًا فَقُلْتُهُ "".
பாடம் : 37 (உணர்வை இழக்கச்செய்யும்) கடுமையான மயக்கம் ஏற்பட்டால் தான் (புதிதாக) அங்கத் தூய்மை செய்ய வேண்டும்.
184. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) சூரிய கிரகணம் எற்பட்டபோது நான் நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது மக்கள் நின்று தொழுதுகொண்டிருந்தனர். ஆயிஷா (ரலி) அவர்களும் நின்று தொழுதுகொண் டிருந்தார்கள். (தொழுகையிலிருந்த ஆயிஷா (ரலி) அவர்களிடம்) நான், “மக்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது?” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் (ஏதும் கூறாமல்) வானை நோக்கித் தமது கரத்தால் சைகை செய் தார்கள். (தொழுகையில் பேசக் கூடாது என்பதை உணர்த்துவதற்காக) ‘சுப்ஹானல் லாஹ்’ (அல்லாஹ் தூயவன்) என்று கூறினார்கள்.

“இது (ஏதாவது) அடையாளமா?” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் ‘ஆம்’ என்று தலையால் சைகை செய்தார்கள். உடனே நானும் (அவர் களோடு நீண்ட நெடிய அத்தொழுகையில்) நின்றுகொண்டேன். எந்த அளவுக் கென்றால் (நீண்ட நேரம் நின்றதால்) எனக்குக் கிறக்கமே ஏற்பட்டுவிட்டது. (கிறக்கம் நீங்க) என் தலைமீது தண்ணீரை ஊற்றலானேன்.

தொழுது முடித்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, பின்வருமாறு கூறினார்கள்: எனக்கு இதுவரை காட்டப்பட்டிராத அனைத்தையும் இந்த இடத்தில் (தொழுகையில் இருந்தபோது) கண்டேன். சொர்க்கம், நரகம் உட்பட (அனைத்தையும் கண்டேன்). மேலும், எனக்கு (வஹீ) அறிவிக்கப்பட்டது: நிச்சயமாக நீங்கள் உங்கள் மண்ணறைகளில் (கப்றில்) ‘தஜ்ஜால்’ என்பவனுடைய சோதனைக்கு ‘நிகரான’ அல்லது ‘நெருக்கமான’ அளவுக்குச் சோதிக்கப்படுவீர்கள்.

-இதன் அறிவிப்பாளரான பாத்திமா பின்த் அல்முன்திர் (ரஹ்) கூறுகிறார்: (நிகரான/நெருக்கமான) இவற்றில் எந்த வாசகத்தை அஸ்மா (ரலி) அவர்கள் கூறினார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை.-

அப்போது (மண்ணறையிலிருக்கும்) உங்களில் ஒருவரிடம் (என்னைக் காட்டி), “இந்த மனிதரைப் பற்றி உமக்கு என்ன தெரியும்?” என்று (வானவர்களால்) கேட்கப்படும். அதற்கு ‘இறைநம்பிக்கையாளரோ’ அல்லது ‘உறுதி கொண்டவரோ’ -இவற்றில் அஸ்மா (ரலி) அவர்கள் எதைச் சொன்னார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை.- “அவர் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் ஆவார்கள். அவர்கள் எங்களிடம் தெளிவான சான்றுகளையும் நல்வழியை யும் கொண்டுவந்தார்கள். நாங்கள் (அவர் களது அழைப்பை) ஏற்றுப் பின்பற்றி னோம்” என்று பதிலளிப்பார்.

அப்போது கேள்வி கேட்ட (வான)வர் களின் தரப்பிலிருந்து “நல்லபடியாக நீர் உறங்குவீராக! நீர் (இந்த இறைத்தூதரை ஏற்ற நல்ல) நம்பிக்கையாளராய் இருந்தீர் என்று நாங்கள் அறிந்திருந்தோம்” என்று கூறப்படும்.

‘நயவஞ்சகரோ’ அல்லது ‘சந்தேகப் பேர்வழியோ’ -இவற்றில் அஸ்மா (ரலி) அவர்கள் எதைச் சொன்னார்கள் என்று எனக்குத் தெரியவில்லை- “எனக்கு எதுவும் தெரியாது. மக்கள் எதையோ சொல்லக் கேட்டேன். அதையே நானும் சொன்னேன்” என்று கூறுவார்.23

அத்தியாயம் : 4
185. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى الْمَازِنِيِّ، عَنْ أَبِيهِ، أَنَّ رَجُلاً، قَالَ لِعَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ ـ وَهُوَ جَدُّ عَمْرِو بْنِ يَحْيَى ـ أَتَسْتَطِيعُ أَنْ تُرِيَنِي، كَيْفَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَتَوَضَّأُ فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ زَيْدٍ نَعَمْ. فَدَعَا بِمَاءٍ، فَأَفْرَغَ عَلَى يَدَيْهِ فَغَسَلَ يَدَهُ مَرَّتَيْنِ، ثُمَّ مَضْمَضَ وَاسْتَنْثَرَ ثَلاَثًا، ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلاَثًا، ثُمَّ غَسَلَ يَدَيْهِ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ إِلَى الْمِرْفَقَيْنِ، ثُمَّ مَسَحَ رَأْسَهُ بِيَدَيْهِ، فَأَقْبَلَ بِهِمَا وَأَدْبَرَ، بَدَأَ بِمُقَدَّمِ رَأْسِهِ، حَتَّى ذَهَبَ بِهِمَا إِلَى قَفَاهُ، ثُمَّ رَدَّهُمَا إِلَى الْمَكَانِ الَّذِي بَدَأَ مِنْهُ، ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ.
பாடம் : 38 (அங்கத் தூய்மையின்போது) ஈரக் கையால் தலை முழுவதையும் தடவுதல் ஏனெனில், உயர்ந்தோன் அல்லாஹ், “(ஈரக் கையால்) உங்களின் தலையையும் தடவுங்கள்” (5:6) என்று கூறுகின்றான். சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள், “பெண்களும் ஆண்களைப் போன்றே (ஈரக் கையால் தலை முழுவதையும்) தடவ வேண்டும்” என்று கூறியுள்ளார்கள். மாலிக் (ரஹ்) அவர்களிடம், “(அங்கத் தூய்மையில்) தலையில் ஒரு பகுதியை மட்டும் (ஈரக் கையால்) தடவினால் போதுமா?” என்று கேட்கப்பட்டது அதற்கு மாலிக் (ரஹ்) அவர்கள், பின்வரும் அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர் களின் ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு பதிலளித்தார்கள்.24
185. யஹ்யா அல்மாஸினீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர், “அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் எப்படி அங்கத் தூய்மை செய்தார்கள் என்பதை எனக்கு நீங்கள் செய்து காட்ட முடியுமா?” எனக் கேட்டார். அதற்கு அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் ‘ஆம்’ (செய்துகாட்டுகிறேன்) என்று கூறித் தண்ணீர் கொண்டுவரச் சொன்னார்கள். அதைத் தம் இரு (முன்) கைகளிலும் ஊற்றி இரு முறை கழுவினார்கள்.

பின்னர் மூன்று முறை வாய் கொப்புளித்து, (மூக்கிற்கு நீர் செலுத்தி) மூக்கைச் சிந்தினார்கள். பின்னர் தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள். பின்னர் தம் இரு கைகளையும் முழங்கைவரை இரண்டு இரண்டு முறை கழுவினார்கள். பின்னர் (ஈரக்) கைகளால் தமது தலையைத் தடவி (மஸ்ஹு செய்திடலா)னார்கள். (அதாவது) தம் இரு கைகளையும் (முன்)தலையில் வைத்து பின்னே கொண்டுசென்றார்கள். பிறகு பின் தலையில் வைத்து முன்னே கொண்டு வந்தார்கள். ஆரம்பமாக முன் தலையில் வைத்து அப்படியே அதைத் தமது பிடரிவரைக் கொண்டுசென்றபின் அப்படியே ஆரம்பித்த இடத்திற்கே திரும்பவும் கொண்டுசென்றார்கள். பிறகு இரு கால்களையும் கழுவினார்கள்.

அத்தியாயம் : 4
186. حَدَّثَنَا مُوسَى، قَالَ حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ عَمْرٍو، عَنْ أَبِيهِ، شَهِدْتُ عَمْرَو بْنَ أَبِي حَسَنٍ سَأَلَ عَبْدَ اللَّهِ بْنَ زَيْدٍ عَنْ وُضُوءِ النَّبِيِّ، صلى الله عليه وسلم فَدَعَا بِتَوْرٍ مِنْ مَاءٍ، فَتَوَضَّأَ لَهُمْ وُضُوءَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَكْفَأَ عَلَى يَدِهِ مِنَ التَّوْرِ، فَغَسَلَ يَدَيْهِ ثَلاَثًا، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي التَّوْرِ، فَمَضْمَضَ وَاسْتَنْشَقَ وَاسْتَنْثَرَ ثَلاَثَ غَرَفَاتٍ، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فَغَسَلَ وَجْهَهُ ثَلاَثًا، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فَغَسَلَ يَدَيْهِ مَرَّتَيْنِ إِلَى الْمِرْفَقَيْنِ مَرَّتَيْنِ، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فَمَسَحَ رَأْسَهُ، فَأَقْبَلَ بِهِمَا وَأَدْبَرَ مَرَّةً وَاحِدَةً، ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ إِلَى الْكَعْبَيْنِ.
பாடம் : 39 இரு கால்களையும் கணுக்கால் கள்வரை கழுவுதல்
186. யஹ்யா அல்மாஸினீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அம்ர் பின் அபீஹசன் (ரஹ்) அவர் களுடன் (ஒரு நாள்) நான் இருந்தேன். அவர்கள் அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் செய்த அங்கத் தூய்மை பற்றிக் கேட்டார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் ஒரு கல் பாத்திரத்தில் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி, நபி (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்று அங்கத் தூய்மை செய்துகாட்டினார்கள்:

(ஆரம்பமாக) பாத்திரத்திலிருந்த தண்ணீரைத் தமது கையில் ஊற்றி மூன்று முறை கைகளைக் கழுவினார்கள். பின்னர் தமது கையைப் பாத்திரத்தில் நுழைத்து மூன்று முறை தண்ணீர் அள்ளி வாய்கொப்புளித்து மூக்கிற்குள் நீர் செலுத்திச் சிந்தினார்கள். மீண்டும் தமது கையைப் பாத்திரத்தில் நுழைத்து மூன்று முறை முகத்தைக் கழுவினார்கள். பின்னர் தம் இரு கைகளையும் முழங்கைவரை இரு முறை கழுவினார்கள்.

பின்னர் கையை (பாத்திரத்தில்) நுழைத்து (ஈரக் கையால்) தமது தலையைத் தடவினார்கள். (அதாவது) இரு கைகளையும் முன் தலையில் வைத்து பின்னால் கொண்டுசென்றார்கள். அப்படியே பின்னாலிருந்து முன் பகுதிக்கு (ஆரம்பித்த இடத்திற்கே) கொண்டுவந்தார்கள். இவ்வாறு ஒரு தடவை மட்டுமே செய்தார்கள் (மூன்று தடவை செய்யவில்லை). பின்னர் தம் கால்களை கணுக்கால்கள்வரை கழுவினார்கள்.

அத்தியாயம் : 4
187. حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ حَدَّثَنَا الْحَكَمُ، قَالَ سَمِعْتُ أَبَا جُحَيْفَةَ، يَقُولُ خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِالْهَاجِرَةِ، فَأُتِيَ بِوَضُوءٍ فَتَوَضَّأَ، فَجَعَلَ النَّاسُ يَأْخُذُونَ مِنْ فَضْلِ وَضُوئِهِ فَيَتَمَسَّحُونَ بِهِ، فَصَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم الظُّهْرَ رَكْعَتَيْنِ وَالْعَصْرَ رَكْعَتَيْنِ، وَبَيْنَ يَدَيْهِ عَنَزَةٌ.
பாடம் : 40 மக்கள் அங்கத் தூய்மை செய்து விட்டு வைத்த மீதித் தண்ணீ ரைப் பயன்படுத்துதல் ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள், தாம் பல் துலக்கிவிட்டு மீதி வைத்த தண்ணீரில் அங்கத் தூய்மை செய்ய தம் வீட்டாரை அனுமதித்தார்கள்.
187. அபூஜுஹைஃபா (வஹ்ப் பின் அப்தில்லாஹ்-ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஹஜ்ஜின்போது ‘அப்தஹ்’ எனுமிடத் திலிருந்த கூடாரத்திலிருந்து) அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் நண்பகல் நேரத்தில் எங்களிடம் வந்தார்கள். அங்கத் தூய்மை செய்யத் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. அதில் அவர்கள் அங்கத் தூய்மை செய்தார்கள். அவர்கள் அங்கத் தூய்மை செய்த தண்ணீரின் மீதியைப் பெற்று மக்கள் தங்கள்மீது தடவிக் கொள்ளலாயினர்.

பின்னர் நபி (ஸல்) அவர்கள், தமக்குமுன் (இரும்புப் பூண் போட்ட) கைத்தடி ஒன்றை (தடுப்பாக) வைத்து, லுஹ்ரையும் அஸ்ரையும் இரண்டு இரண்டு ரக்அத் களாகத் தொழுதார்கள்.


அத்தியாயம் : 4