1606. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ مَا تَرَكْتُ اسْتِلاَمَ هَذَيْنِ الرُّكْنَيْنِ فِي شِدَّةٍ وَلاَ رَخَاءٍ، مُنْذُ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَسْتَلِمُهُمَا. قُلْتُ لِنَافِعٍ أَكَانَ ابْنُ عُمَرَ يَمْشِي بَيْنَ الرُّكْنَيْنِ قَالَ إِنَّمَا كَانَ يَمْشِي لِيَكُونَ أَيْسَرَ لاِسْتِلاَمِهِ.
பாடம் : 57
ஹஜ்ஜிலும் உம்ராவிலும் தோள்களைக் குலுக்கியவாறு விரைந்து ஓடுவது
1606. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நெரிசலுள்ள நேரத்திலும் நெரிசலற்ற நேரத்திலும் நபி (ஸல்) அவர்கள் ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீ ஆகிய இரண்டு மூலைகளையும் முத்தமிட்டதைப் பார்த்ததி லிருந்து நானும் இவ்விரண்டு மூலைகளையும் முத்தமிடுவதைக் கைவிட்டதில்லை.
அறிவிப்பாளர் உபைதுல்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) நாஃபி (ரஹ்) அவர்களிடம், “இப்னு உமர் (ரலி) அவர்கள், அவ்விரு மூலைகளுக்கிடையே (மட்டும் சாதாரண மாக) நடந்து செல்வார்களா?” என்று கேட்டேன். “முத்தமிடுவதற்கு வசதியாக இருக்க வேண்டும் என்பதற்காக நடந்து செல்வார்கள்” எனப் பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 25
1606. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நெரிசலுள்ள நேரத்திலும் நெரிசலற்ற நேரத்திலும் நபி (ஸல்) அவர்கள் ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீ ஆகிய இரண்டு மூலைகளையும் முத்தமிட்டதைப் பார்த்ததி லிருந்து நானும் இவ்விரண்டு மூலைகளையும் முத்தமிடுவதைக் கைவிட்டதில்லை.
அறிவிப்பாளர் உபைதுல்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) நாஃபி (ரஹ்) அவர்களிடம், “இப்னு உமர் (ரலி) அவர்கள், அவ்விரு மூலைகளுக்கிடையே (மட்டும் சாதாரண மாக) நடந்து செல்வார்களா?” என்று கேட்டேன். “முத்தமிடுவதற்கு வசதியாக இருக்க வேண்டும் என்பதற்காக நடந்து செல்வார்கள்” எனப் பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 25
1607. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، وَيَحْيَى بْنُ سُلَيْمَانَ، قَالاَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ طَافَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي حَجَّةِ الْوَدَاعِ عَلَى بَعِيرٍ، يَسْتَلِمُ الرُّكْنَ بِمِحْجَنٍ. تَابَعَهُ الدَّرَاوَرْدِيُّ عَنِ ابْنِ أَخِي الزُّهْرِيِّ عَنْ عَمِّهِ.
பாடம் : 58
முனை வளைந்த கைத்தடி மூலம் ஹஜருல் அஸ்வதைத் தொ(ட்டு முத்தமி)டல்
1607. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் விடைபெறும் ஹஜ்ஜில் ஒட்டகத்தின் மீதமர்ந்து தவாஃப் செய்தார்கள். அப்போது முனை வளைந்த கைத்தடியால் ஹஜருல் அஸ்வதைத் தொட்(டு முத்தமி)ட்டார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 25
1607. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் விடைபெறும் ஹஜ்ஜில் ஒட்டகத்தின் மீதமர்ந்து தவாஃப் செய்தார்கள். அப்போது முனை வளைந்த கைத்தடியால் ஹஜருல் அஸ்வதைத் தொட்(டு முத்தமி)ட்டார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 25
1608. وَقَالَ مُحَمَّدُ بْنُ بَكْرٍ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ دِينَارٍ، عَنْ أَبِي الشَّعْثَاءِ، أَنَّهُ قَالَ وَمَنْ يَتَّقِي شَيْئًا مِنَ الْبَيْتِ، وَكَانَ مُعَاوِيَةُ يَسْتَلِمُ الأَرْكَانَ، فَقَالَ لَهُ ابْنُ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ إِنَّهُ لاَ يُسْتَلَمُ هَذَانِ الرُّكْنَانِ. فَقَالَ لَيْسَ شَىْءٌ مِنَ الْبَيْتِ مَهْجُورًا، وَكَانَ ابْنُ الزُّبَيْرِ ـ رضى الله عنهما ـ يَسْتَلِمُهُنَّ كُلَّهُنَّ.
பாடம் : 59
ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீ ஆகிய இரு மூலைகள் தவிர மற்ற மூலைகளை முத்தமிடாதிருத்தல்
1608. அபுஷ்ஷஅஸா ஜாபிர் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
கஅபாவில் எந்தப் பகுதியையும் யார் தவிர்க்க முடியும்? முஆவியா (ரலி) அவர்கள் (கஅபாவின்) எல்லா மூலைகளையும் முத்தமிடுபவராக இருந்தார்கள். அப்போது முஆவியா (ரலி) அவர்களிடம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “(ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீயைத் தவிரவுள்ள) இந்த இரு மூலைகளை முத்தமிடக் கூடாது” என்றார்கள். அதற்கு முஆவியா (ரலி) அவர்கள், “இந்த ஆலயத்தில் (முத்தமிடத்) தடுக்கப்பட்ட பகுதி எதுவுமில்லை” என்றார்கள்.
அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள், எல்லா மூலைகளையும் முத்த மிடுவார்கள்.
அத்தியாயம் : 25
1608. அபுஷ்ஷஅஸா ஜாபிர் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
கஅபாவில் எந்தப் பகுதியையும் யார் தவிர்க்க முடியும்? முஆவியா (ரலி) அவர்கள் (கஅபாவின்) எல்லா மூலைகளையும் முத்தமிடுபவராக இருந்தார்கள். அப்போது முஆவியா (ரலி) அவர்களிடம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “(ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீயைத் தவிரவுள்ள) இந்த இரு மூலைகளை முத்தமிடக் கூடாது” என்றார்கள். அதற்கு முஆவியா (ரலி) அவர்கள், “இந்த ஆலயத்தில் (முத்தமிடத்) தடுக்கப்பட்ட பகுதி எதுவுமில்லை” என்றார்கள்.
அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள், எல்லா மூலைகளையும் முத்த மிடுவார்கள்.
அத்தியாயம் : 25
1609. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا لَيْثٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنهما ـ قَالَ لَمْ أَرَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَسْتَلِمُ مِنَ الْبَيْتِ إِلاَّ الرُّكْنَيْنِ الْيَمَانِيَيْنِ.
பாடம் : 59
ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீ ஆகிய இரு மூலைகள் தவிர மற்ற மூலைகளை முத்தமிடாதிருத்தல்
1609. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீ ஆகிய இரு மூலைகளைத் தவிர இந்த ஆலயத்தில் எந்த இடத்தையும் நபி (ஸல்) அவர்கள் முத்தமிட்டதை நான் பார்த்த தில்லை.
அத்தியாயம் : 25
1609. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீ ஆகிய இரு மூலைகளைத் தவிர இந்த ஆலயத்தில் எந்த இடத்தையும் நபி (ஸல்) அவர்கள் முத்தமிட்டதை நான் பார்த்த தில்லை.
அத்தியாயம் : 25
1610. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سِنَانٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا وَرْقَاءُ، أَخْبَرَنَا زَيْدُ بْنُ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، قَالَ رَأَيْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ قَبَّلَ الْحَجَرَ وَقَالَ لَوْلاَ أَنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَبَّلَكَ مَا قَبَّلْتُكَ.
பாடம் : 60
ஹஜருல் அஸ்வதை முத்த மிடல்
1610. அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
‘ஹஜருல் அஸ்வத்’ (எனும் கறுப்பு நிறக்) கல்லை உமர் (ரலி) அவர்கள் முத்த மிடுவதை நான் பார்த்தேன். அப்போது அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் கண்டிராவிட்டால், உன்னை முத்தமிட்டிருக்கமாட்டேன்” என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 25
1610. அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
‘ஹஜருல் அஸ்வத்’ (எனும் கறுப்பு நிறக்) கல்லை உமர் (ரலி) அவர்கள் முத்த மிடுவதை நான் பார்த்தேன். அப்போது அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் கண்டிராவிட்டால், உன்னை முத்தமிட்டிருக்கமாட்டேன்” என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 25
1611. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنِ الزُّبَيْرِ بْنِ عَرَبِيٍّ، قَالَ سَأَلَ رَجُلٌ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ اسْتِلاَمِ الْحَجَرِ،. فَقَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَسْتَلِمُهُ وَيُقَبِّلُهُ. قَالَ قُلْتُ أَرَأَيْتَ إِنْ زُحِمْتُ أَرَأَيْتَ إِنْ غُلِبْتُ قَالَ اجْعَلْ أَرَأَيْتَ بِالْيَمَنِ، رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَسْتَلِمُهُ وَيُقَبِّلُهُ.
பாடம் : 60
ஹஜருல் அஸ்வதை முத்த மிடல்
1611. ஸுபைர் பின் அரபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் ஹஜருல் அஸ்வத் (எனும் கறுப்பு நிறக்) கல்லை முத்தமிடுவதைப் பற்றிக் கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “நான், நபி (ஸல்) அவர்கள் அதைக் கையால் தொட்டு முத்தமிடுவதையும் வாயால் முத்தமிடுவதையும் கண்டேன்” எனக் கூறினார்கள்.
அப்போது நான், “கூட்டம் அதிகமாக இருந்தாலும், நாம் அதனை நெருங்க முடியாது என்றாலும் முத்தமிட வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்களா?” எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், “கருதுகிறீர் களா, நினைக்கிறீர்களா என்பதையெல்லாம் (உமது ஊராகிய) யமனில் வைத்துக் கொள்வீராக! நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைக் கையால் தொட்டு முத்தமிடுவதையும் வாயால் முத்தமிடு வதையும் கண்டேன்” என (மீண்டும்) கூறினார்கள்.
அத்தியாயம் : 25
1611. ஸுபைர் பின் அரபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் ஹஜருல் அஸ்வத் (எனும் கறுப்பு நிறக்) கல்லை முத்தமிடுவதைப் பற்றிக் கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “நான், நபி (ஸல்) அவர்கள் அதைக் கையால் தொட்டு முத்தமிடுவதையும் வாயால் முத்தமிடுவதையும் கண்டேன்” எனக் கூறினார்கள்.
அப்போது நான், “கூட்டம் அதிகமாக இருந்தாலும், நாம் அதனை நெருங்க முடியாது என்றாலும் முத்தமிட வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்களா?” எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், “கருதுகிறீர் களா, நினைக்கிறீர்களா என்பதையெல்லாம் (உமது ஊராகிய) யமனில் வைத்துக் கொள்வீராக! நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைக் கையால் தொட்டு முத்தமிடுவதையும் வாயால் முத்தமிடு வதையும் கண்டேன்” என (மீண்டும்) கூறினார்கள்.
அத்தியாயம் : 25
1612. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ طَافَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِالْبَيْتِ عَلَى بَعِيرٍ، كُلَّمَا أَتَى عَلَى الرُّكْنِ أَشَارَ إِلَيْهِ.
பாடம் : 61
ஹஜருல் அஸ்வதிற்கு நேராக வரும்போது சைகை செய்வது
1612. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்து கஅபாவை ‘தவாஃப்’ செய்தார் கள்; ஹஜருல் அஸ்வதின் பக்கம் வரும் போதெல்லாம் அதை நோக்கிச் சைகை செய்தார்கள்.
அத்தியாயம் : 25
1612. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்து கஅபாவை ‘தவாஃப்’ செய்தார் கள்; ஹஜருல் அஸ்வதின் பக்கம் வரும் போதெல்லாம் அதை நோக்கிச் சைகை செய்தார்கள்.
அத்தியாயம் : 25
1613. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ طَافَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِالْبَيْتِ عَلَى بَعِيرٍ، كُلَّمَا أَتَى الرُّكْنَ أَشَارَ إِلَيْهِ بِشَىْءٍ كَانَ عِنْدَهُ وَكَبَّرَ. تَابَعَهُ إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ عَنْ خَالِدٍ الْحَذَّاءِ.
பாடம் : 62
ஹஜருல் அஸ்வதின் அருகில் தக்பீர் கூறல்
1613. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்து கஅபாவை ‘தவாஃப்’ செய்தார்கள். ஹஜருல் அஸ்வதின் பக்கம் வரும்போதெல்லாம் தம்மிடம் இருந்த ஏதோ ஒரு பொருளால் (அதாவது கைத்தடியால்) ஹஜருல் அஸ்வதை நோக்கிச் சைகை செய்துவிட்டு, ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 25
1613. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்து கஅபாவை ‘தவாஃப்’ செய்தார்கள். ஹஜருல் அஸ்வதின் பக்கம் வரும்போதெல்லாம் தம்மிடம் இருந்த ஏதோ ஒரு பொருளால் (அதாவது கைத்தடியால்) ஹஜருல் அஸ்வதை நோக்கிச் சைகை செய்துவிட்டு, ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 25
1614. حَدَّثَنَا أَصْبَغُ، عَنِ ابْنِ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ،، ذَكَرْتُ لِعُرْوَةَ، قَالَ فَأَخْبَرَتْنِي عَائِشَةُ ـ رضى الله عنها ـ أَنَّ أَوَّلَ، شَىْءٍ بَدَأَ بِهِ حِينَ قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنَّهُ تَوَضَّأَ، ثُمَّ طَافَ، ثُمَّ لَمْ تَكُنْ عُمْرَةً، ثُمَّ حَجَّ أَبُو بَكْرٍ وَعُمَرُ ـ رضى الله عنهما ـ مِثْلَهُ، ثُمَّ حَجَجْتُ مَعَ أَبِي الزُّبَيْرِ ـ رضى الله عنه ـ فَأَوَّلُ شَىْءٍ بَدَأَ بِهِ الطَّوَافُ، ثُمَّ رَأَيْتُ الْمُهَاجِرِينَ وَالأَنْصَارَ يَفْعَلُونَهُ، وَقَدْ أَخْبَرَتْنِي أُمِّي أَنَّهَا أَهَلَّتْ هِيَ وَأُخْتُهَا وَالزُّبَيْرُ وَفُلاَنٌ وَفُلاَنٌ بِعُمْرَةٍ، فَلَمَّا مَسَحُوا الرُّكْنَ حَلُّوا.
பாடம் : 63
(‘உம்ரா’ செய்வதற்காக) மக்கா வந்தவர் தமது இருப்பிடம் செல்வதற்கு முன்னால் தவாஃப் செய்துவிட்டு, இரண்டு ரக்அத் கள் தொழுது, பிறகு ஸஃபாவிற் குச் செல்வது34
1614. 1615 உர்வா பின் அஸ் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“நபி (ஸல்) அவர்கள் மக்கா வந்தவுடன் முதல் வேலையாக அங்கத் தூய்மை (உளூ) செய்து, கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்தார்கள். அது (வெறும்) உம்ராவாக இருக்கவில்லை. பின்னர் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் இதைப் போன்றே ஹஜ் செய்தார்கள்” என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
நான் என் தந்தை ஸுபைர் (ரலி) அவர்களுடன் ஹஜ் செய்தேன். அவர்களும் முதல் வேலையாக தவாஃப்தான் செய்தார்கள். பிறகு முஹாஜிர்களும் அன்சாரிகளும் இவ்வாறு செய்ததையே நான் பார்த்தேன். மேலும் என் தாயார் (அஸ்மா), “நானும் என் சகோதரியும் (ஆயிஷா) (கணவர்) ஸுபைரும் இன்னாரும் இன்னாரும் உம்ராவிற்காக இஹ்ராம் கட்டினோம். நாங்கள் ஹஜருல் அஸ்வதைத் தொட்(டு முத்தமிட்)டபின் (‘சயீ’ செய்து முடித்ததும்) இஹ்ராமிலிருந்து விடுபட்டோம்” என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 25
1614. 1615 உர்வா பின் அஸ் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“நபி (ஸல்) அவர்கள் மக்கா வந்தவுடன் முதல் வேலையாக அங்கத் தூய்மை (உளூ) செய்து, கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்தார்கள். அது (வெறும்) உம்ராவாக இருக்கவில்லை. பின்னர் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் இதைப் போன்றே ஹஜ் செய்தார்கள்” என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
நான் என் தந்தை ஸுபைர் (ரலி) அவர்களுடன் ஹஜ் செய்தேன். அவர்களும் முதல் வேலையாக தவாஃப்தான் செய்தார்கள். பிறகு முஹாஜிர்களும் அன்சாரிகளும் இவ்வாறு செய்ததையே நான் பார்த்தேன். மேலும் என் தாயார் (அஸ்மா), “நானும் என் சகோதரியும் (ஆயிஷா) (கணவர்) ஸுபைரும் இன்னாரும் இன்னாரும் உம்ராவிற்காக இஹ்ராம் கட்டினோம். நாங்கள் ஹஜருல் அஸ்வதைத் தொட்(டு முத்தமிட்)டபின் (‘சயீ’ செய்து முடித்ததும்) இஹ்ராமிலிருந்து விடுபட்டோம்” என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 25
1616. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا أَبُو ضَمْرَةَ، أَنَسٌ حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا طَافَ فِي الْحَجِّ أَوِ الْعُمْرَةِ أَوَّلَ مَا يَقْدَمُ سَعَى ثَلاَثَةَ أَطْوَافٍ، وَمَشَى أَرْبَعَةً، ثُمَّ سَجَدَ سَجْدَتَيْنِ، ثُمَّ يَطُوفُ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ.
பாடம் : 63
(‘உம்ரா’ செய்வதற்காக) மக்கா வந்தவர் தமது இருப்பிடம் செல்வதற்கு முன்னால் தவாஃப் செய்துவிட்டு, இரண்டு ரக்அத் கள் தொழுது, பிறகு ஸஃபாவிற் குச் செல்வது34
1616. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காகவோ உம்ராவுக்காகவோ (மக்கா) வந்ததும் முதன் முதலாக தவாஃப் செய்வார்கள். அதில் (முதல்) மூன்று சுற்றுகளில் விரைந்து ஓடுவார்கள்; (பிந்திய) நான்கு சுற்றுகளில் (சாதாரணமாக) நடப்பார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு, ஸஃபா, மர்வாவிற்கு இடையே சுற்றுவார்கள்.
அத்தியாயம் : 25
1616. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காகவோ உம்ராவுக்காகவோ (மக்கா) வந்ததும் முதன் முதலாக தவாஃப் செய்வார்கள். அதில் (முதல்) மூன்று சுற்றுகளில் விரைந்து ஓடுவார்கள்; (பிந்திய) நான்கு சுற்றுகளில் (சாதாரணமாக) நடப்பார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு, ஸஃபா, மர்வாவிற்கு இடையே சுற்றுவார்கள்.
அத்தியாயம் : 25
1617. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا طَافَ بِالْبَيْتِ الطَّوَافَ الأَوَّلَ يَخُبُّ ثَلاَثَةَ أَطْوَافٍ، وَيَمْشِي أَرْبَعَةً، وَأَنَّهُ كَانَ يَسْعَى بَطْنَ الْمَسِيلِ إِذَا طَافَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ.
பாடம் : 63
(‘உம்ரா’ செய்வதற்காக) மக்கா வந்தவர் தமது இருப்பிடம் செல்வதற்கு முன்னால் தவாஃப் செய்துவிட்டு, இரண்டு ரக்அத் கள் தொழுது, பிறகு ஸஃபாவிற் குச் செல்வது34
1617. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் கஅபா ஆலயத் தில் முதல் தவாஃப் செய்யும்போது (முதல்) மூன்று சுற்றுகளில் விரைந்து நடப்பார்கள். (பிந்திய) நான்கு சுற்றுகளில் (சாதாரணமாக) நடப்பார்கள். மேலும் ஸஃபா, மர்வாவுக் கிடையே சுற்றும்போது, ‘பத்னுல் மசீல்’ எனும் (நீரோடை) பகுதியில் மட்டும் விரைந்து நடப்பார்கள்.
அத்தியாயம் : 25
1617. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் கஅபா ஆலயத் தில் முதல் தவாஃப் செய்யும்போது (முதல்) மூன்று சுற்றுகளில் விரைந்து நடப்பார்கள். (பிந்திய) நான்கு சுற்றுகளில் (சாதாரணமாக) நடப்பார்கள். மேலும் ஸஃபா, மர்வாவுக் கிடையே சுற்றும்போது, ‘பத்னுல் மசீல்’ எனும் (நீரோடை) பகுதியில் மட்டும் விரைந்து நடப்பார்கள்.
அத்தியாயம் : 25
1618. وَقَالَ لِي عَمْرُو بْنُ عَلِيٍّ حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنَا قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ، إِذْ مَنَعَ ابْنُ هِشَامٍ النِّسَاءَ الطَّوَافَ مَعَ الرِّجَالِ قَالَ كَيْفَ يَمْنَعُهُنَّ، وَقَدْ طَافَ نِسَاءُ النَّبِيِّ صلى الله عليه وسلم مَعَ الرِّجَالِ قُلْتُ أَبَعْدَ الْحِجَابِ أَوْ قَبْلُ قَالَ إِي لَعَمْرِي لَقَدْ أَدْرَكْتُهُ بَعْدَ الْحِجَابِ. قُلْتُ كَيْفَ يُخَالِطْنَ الرِّجَالَ قَالَ لَمْ يَكُنَّ يُخَالِطْنَ كَانَتْ عَائِشَةُ ـ رضى الله عنها ـ تَطُوفُ حَجْرَةً مِنَ الرِّجَالِ لاَ تُخَالِطُهُمْ، فَقَالَتِ امْرَأَةٌ انْطَلِقِي نَسْتَلِمْ يَا أُمَّ الْمُؤْمِنِينَ. قَالَتْ {انْطَلِقِي} عَنْكِ. وَأَبَتْ. {وَكُنَّ} يَخْرُجْنَ مُتَنَكِّرَاتٍ بِاللَّيْلِ، فَيَطُفْنَ مَعَ الرِّجَالِ، وَلَكِنَّهُنَّ كُنَّ إِذَا دَخَلْنَ الْبَيْتَ قُمْنَ حَتَّى يَدْخُلْنَ وَأُخْرِجَ الرِّجَالُ، وَكُنْتُ آتِي عَائِشَةَ أَنَا وَعُبَيْدُ بْنُ عُمَيْرٍ وَهِيَ مُجَاوِرَةٌ فِي جَوْفِ ثَبِيرٍ. قُلْتُ وَمَا حِجَابُهَا قَالَ هِيَ فِي قُبَّةٍ تُرْكِيَّةٍ لَهَا غِشَاءٌ، وَمَا بَيْنَنَا وَبَيْنَهَا غَيْرُ ذَلِكَ، وَرَأَيْتُ عَلَيْهَا دِرْعًا مُوَرَّدًا.
பாடம் : 64
ஆண்களுடன் பெண்களும் தவாஃப் செய்வது
1618. இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(மக்காவில் ஹஜ் அதிகாரியாக இருந்த) இப்னு ஹிஷாம், ஆண்களுடன் (சேர்ந்து) பெண்களும் தவாஃப் செய்வதைத் தடுத்தபோது, “நபி (ஸல்) அவர்களின் துணைவியர் ஆண்களுடன் (சேர்ந்து) தவாஃப் செய்திருக்க, அவர்களை அவர் எப்படித் தடுக்கலாம்?” என்று தாம் கேள்வி எழுப்பியதாக அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்.
நான் (அவரிடம், “நபியவர்களின் துணைவியர் இவ்வாறு தவாஃப் செய்தது, (திரைக்கப்பால் நின்றே அவர்களிடம் பேச வேண்டும் என்ற) ‘ஹிஜாப்’ சட்டம் வந்த பின்பா? அல்லது அதற்கு முன்பா?” என்று கேட்டேன். அவர் “ஆம்! என் வாழ்நாளின் (அதிபதி)மீது சத்தியமாக! ஹிஜாபுடைய சட்டம் அருளப்பட்டதற்குப் பின்னரே இதை நான் கண்டேன்” என்றார்.
நான், “அது எப்படி? பெண்கள் ஆண்களோடு (ஒருவரோடொருவர்) கலந்துவிடுவார்களே?” என்று கேட்டேன். அதற்கு அவர், “கலந்துவிடமாட்டார்கள்; ஆயிஷா (ரலி) அவர்கள் ஆண்களுடன் கலக்காமல் ஓரமாக தவாஃப் செய்வார்கள்; அப்போது ஒரு பெண், ‘இறைநம்பிக்கை யாளர்களின் தாயே! நடங்கள்! நாம் (சென்று ஹஜருல் அஸ்வதை) முத்தமிடுவோம்’ என்றார்; அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், ‘நீ போ(ய் முத்தமிடு; நான் வரவில்லை)!’ என்று மறுத்தார்கள். இரவிலும் பெண்கள் தம்மைத் திரையிட்டு மறைத்துக்கொண்டு சென்று ஆண்களோடு தவாஃப் செய்வார்கள். ஆனால், பெண்கள் கஅபாவினுள் நுழைய நாடினால், உள்ளே இருக்கும் ஆண்கள் வெளியேற்றப்படும்வரை அதற்காகக் காத்திருப்பார்கள்; நானும் உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்களும் ஆயிஷா (ரலி) அவர்களைச் சந்திப்போம்; அப்போது அவர்கள் ஸபீர் எனும் மலையின் நடுப்பகுதியில் தங்கி (இஃதிகாஃபில்) இருந்தார்கள்” என்று கூறினார்.
நான் அதாஉ (ரஹ்) அவர்களிடம், “(அப்போது) அவர்களின் ஹிஜாப் என்னவாக இருந்தது?” எனக் கேட்டேன். “ஆயிஷா (ரலி) அவர்கள், துருக்கி நாட்டுத் துணியாலான ஒரு கூடாரத்தில் இருந்தார்கள். அதில் ஒரு திரை இருந்தது. எங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் அதைத் தவிர வேறொன்றும் இருக்கவில்லை. மேலும், ஆயிஷா (ரலி) அவர்கள் இளஞ்சிவப்பு நிறமுள்ள சட்டை அணிந்திருந்ததை நான் பார்த்தேன்” என்று அதாஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம் : 25
1618. இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(மக்காவில் ஹஜ் அதிகாரியாக இருந்த) இப்னு ஹிஷாம், ஆண்களுடன் (சேர்ந்து) பெண்களும் தவாஃப் செய்வதைத் தடுத்தபோது, “நபி (ஸல்) அவர்களின் துணைவியர் ஆண்களுடன் (சேர்ந்து) தவாஃப் செய்திருக்க, அவர்களை அவர் எப்படித் தடுக்கலாம்?” என்று தாம் கேள்வி எழுப்பியதாக அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்.
நான் (அவரிடம், “நபியவர்களின் துணைவியர் இவ்வாறு தவாஃப் செய்தது, (திரைக்கப்பால் நின்றே அவர்களிடம் பேச வேண்டும் என்ற) ‘ஹிஜாப்’ சட்டம் வந்த பின்பா? அல்லது அதற்கு முன்பா?” என்று கேட்டேன். அவர் “ஆம்! என் வாழ்நாளின் (அதிபதி)மீது சத்தியமாக! ஹிஜாபுடைய சட்டம் அருளப்பட்டதற்குப் பின்னரே இதை நான் கண்டேன்” என்றார்.
நான், “அது எப்படி? பெண்கள் ஆண்களோடு (ஒருவரோடொருவர்) கலந்துவிடுவார்களே?” என்று கேட்டேன். அதற்கு அவர், “கலந்துவிடமாட்டார்கள்; ஆயிஷா (ரலி) அவர்கள் ஆண்களுடன் கலக்காமல் ஓரமாக தவாஃப் செய்வார்கள்; அப்போது ஒரு பெண், ‘இறைநம்பிக்கை யாளர்களின் தாயே! நடங்கள்! நாம் (சென்று ஹஜருல் அஸ்வதை) முத்தமிடுவோம்’ என்றார்; அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், ‘நீ போ(ய் முத்தமிடு; நான் வரவில்லை)!’ என்று மறுத்தார்கள். இரவிலும் பெண்கள் தம்மைத் திரையிட்டு மறைத்துக்கொண்டு சென்று ஆண்களோடு தவாஃப் செய்வார்கள். ஆனால், பெண்கள் கஅபாவினுள் நுழைய நாடினால், உள்ளே இருக்கும் ஆண்கள் வெளியேற்றப்படும்வரை அதற்காகக் காத்திருப்பார்கள்; நானும் உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்களும் ஆயிஷா (ரலி) அவர்களைச் சந்திப்போம்; அப்போது அவர்கள் ஸபீர் எனும் மலையின் நடுப்பகுதியில் தங்கி (இஃதிகாஃபில்) இருந்தார்கள்” என்று கூறினார்.
நான் அதாஉ (ரஹ்) அவர்களிடம், “(அப்போது) அவர்களின் ஹிஜாப் என்னவாக இருந்தது?” எனக் கேட்டேன். “ஆயிஷா (ரலி) அவர்கள், துருக்கி நாட்டுத் துணியாலான ஒரு கூடாரத்தில் இருந்தார்கள். அதில் ஒரு திரை இருந்தது. எங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் அதைத் தவிர வேறொன்றும் இருக்கவில்லை. மேலும், ஆயிஷா (ரலி) அவர்கள் இளஞ்சிவப்பு நிறமுள்ள சட்டை அணிந்திருந்ததை நான் பார்த்தேன்” என்று அதாஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம் : 25
1619. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ نَوْفَلٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ زَيْنَبَ بِنْتِ أَبِي سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ ـ رضى الله عنها ـ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ شَكَوْتُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنِّي أَشْتَكِي. فَقَالَ "" طُوفِي مِنْ وَرَاءِ النَّاسِ، وَأَنْتِ رَاكِبَةٌ "". فَطُفْتُ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حِينَئِذٍ يُصَلِّي إِلَى جَنْبِ الْبَيْتِ، وَهْوَ يَقْرَأُ {وَالطُّورِ * وَكِتَابٍ مَسْطُورٍ}
பாடம் : 64
ஆண்களுடன் பெண்களும் தவாஃப் செய்வது
1619. நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஹஜ்ஜின்போது) “நான் நோயுற்றுள் ளேன்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். அதற்கு அவர்கள், “நீ மக்களுக்குப் பின்னால் வாகனத்தில் அமர்ந்து தவாஃப் செய்” என்றார்கள். நான் அவ்வாறே தவாஃப் செய்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘அத்தூர்’ எனும் (52ஆவது) அத்தியாயத்தை ஓதியவாறு கஅபாவின் ஒரு பக்கத்தில் (சுப்ஹு) தொழுதுகொண்டிருந்தார்கள்.
அத்தியாயம் : 25
1619. நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஹஜ்ஜின்போது) “நான் நோயுற்றுள் ளேன்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். அதற்கு அவர்கள், “நீ மக்களுக்குப் பின்னால் வாகனத்தில் அமர்ந்து தவாஃப் செய்” என்றார்கள். நான் அவ்வாறே தவாஃப் செய்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘அத்தூர்’ எனும் (52ஆவது) அத்தியாயத்தை ஓதியவாறு கஅபாவின் ஒரு பக்கத்தில் (சுப்ஹு) தொழுதுகொண்டிருந்தார்கள்.
அத்தியாயம் : 25
1620. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، حَدَّثَنَا هِشَامٌ، أَنَّ ابْنَ جُرَيْجٍ، أَخْبَرَهُمْ قَالَ أَخْبَرَنِي سُلَيْمَانُ الأَحْوَلُ، أَنَّ طَاوُسًا، أَخْبَرَهُ عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم مَرَّ وَهُوَ يَطُوفُ بِالْكَعْبَةِ بِإِنْسَانٍ رَبَطَ يَدَهُ إِلَى إِنْسَانٍ بِسَيْرٍ، أَوْ بِخَيْطٍ، أَوْ بِشَىْءٍ غَيْرِ ذَلِكَ، فَقَطَعَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم بِيَدِهِ، ثُمَّ قَالَ "" قُدْهُ بِيَدِهِ "".
பாடம் : 65
தவாஃப் செய்யும்போது பேசுவது
1620. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் கஅபாவை தவாஃப் செய்துகொண்டிருந்தபோது, ஒரு மனிதருக்கு அருகே சென்றார்கள். அவர் தமது கையை வாரினாலோ அல்லது கயிற் றாலோ அல்லது வேறு ஒரு பொருளாலோ மற்றொருவரின் கையோடு இணைத்துக் கட்டி (தவாஃப் செய்து)கொண்டிருந்தார்.
உடனே நபி (ஸல்) அவர்கள் அதைத் தமது கையால் துண்டித்துவிட்டு, “இவரது கையைப் பிடித்துக் கூட்டிச் செல்லும்!” என்று (அந்த மற்றொருவரிடம்) கூறினார்கள்.
அத்தியாயம் : 25
1620. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் கஅபாவை தவாஃப் செய்துகொண்டிருந்தபோது, ஒரு மனிதருக்கு அருகே சென்றார்கள். அவர் தமது கையை வாரினாலோ அல்லது கயிற் றாலோ அல்லது வேறு ஒரு பொருளாலோ மற்றொருவரின் கையோடு இணைத்துக் கட்டி (தவாஃப் செய்து)கொண்டிருந்தார்.
உடனே நபி (ஸல்) அவர்கள் அதைத் தமது கையால் துண்டித்துவிட்டு, “இவரது கையைப் பிடித்துக் கூட்டிச் செல்லும்!” என்று (அந்த மற்றொருவரிடம்) கூறினார்கள்.
அத்தியாயம் : 25
1621. حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ سُلَيْمَانَ الأَحْوَلِ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَأَى رَجُلاً يَطُوفُ بِالْكَعْبَةِ بِزِمَامٍ أَوْ غَيْرِهِ فَقَطَعَهُ.
பாடம் : 66
ஒருவர் ‘தவாஃப்’ செய்யும்போது, வாரையோ விரும்பத் தகாத வேறு பொருளையோ கண்டால் அதைத் துண்டித்துவிடுவது
1621. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் (கையில்) கயிரையோ வேறொரு பொருளையோ கட்டிக்கொண்டு ‘தவாஃப்’ செய்வதை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். உடனே அதைத் துண்டித் தார்கள்.
அத்தியாயம் : 25
1621. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் (கையில்) கயிரையோ வேறொரு பொருளையோ கட்டிக்கொண்டு ‘தவாஃப்’ செய்வதை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். உடனே அதைத் துண்டித் தார்கள்.
அத்தியாயம் : 25
1622. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ يُونُسُ قَالَ ابْنُ شِهَابٍ حَدَّثَنِي حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، أَخْبَرَهُ أَنَّ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ ـ رضى الله عنه ـ بَعَثَهُ فِي الْحَجَّةِ الَّتِي أَمَّرَهُ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَبْلَ حَجَّةِ الْوَدَاعِ يَوْمَ النَّحْرِ فِي رَهْطٍ يُؤَذِّنُ فِي النَّاسِ "" أَلاَ لاَ يَحُجُّ بَعْدَ الْعَامِ مُشْرِكٌ، وَلاَ يَطُوفُ بِالْبَيْتِ عُرْيَانٌ "".
பாடம் : 67
கஅபாவை நிர்வாணமாக தவாஃப் செய்யக் கூடாது; இணைவைப்பாளர்கள் ஹஜ் செய்வது கூடாது.
1622. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
விடைபெறும் ஹஜ்ஜுக்கு முந்தைய ஹஜ்ஜில், அபூபக்ர் (ரலி) அவர்களை (ஹஜ் குழுவிற்குத்) தலைவராக நியமித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பிவைத்தார்கள். (அங்கு) துல்ஹஜ் பத்தாம் நாள் (மினாவில்), “எச்சரிக்கை! இந்த ஆண்டுக்குப் பின்னர் இணை வைப்பாளர்கள் யாரும் ஹஜ் செய்யக் கூடாது. கஅபாவை நிர்வாணமாக யாரும் தவாஃப் செய்யக் கூடாது” எனப் பொது அறிவிப்புச் செய்யும் குழுவினரில் என்னையும் ஒருவனாக அபூபக்ர் (ரலி) அவர்கள் அனுப்பிவைத்தார்கள்.
அத்தியாயம் : 25
1622. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
விடைபெறும் ஹஜ்ஜுக்கு முந்தைய ஹஜ்ஜில், அபூபக்ர் (ரலி) அவர்களை (ஹஜ் குழுவிற்குத்) தலைவராக நியமித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பிவைத்தார்கள். (அங்கு) துல்ஹஜ் பத்தாம் நாள் (மினாவில்), “எச்சரிக்கை! இந்த ஆண்டுக்குப் பின்னர் இணை வைப்பாளர்கள் யாரும் ஹஜ் செய்யக் கூடாது. கஅபாவை நிர்வாணமாக யாரும் தவாஃப் செய்யக் கூடாது” எனப் பொது அறிவிப்புச் செய்யும் குழுவினரில் என்னையும் ஒருவனாக அபூபக்ர் (ரலி) அவர்கள் அனுப்பிவைத்தார்கள்.
அத்தியாயம் : 25
1623. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، سَأَلْنَا ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَيَقَعُ الرَّجُلُ عَلَى امْرَأَتِهِ فِي الْعُمْرَةِ قَبْلَ أَنْ يَطُوفَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ قَالَ قَدِمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَطَافَ بِالْبَيْتِ سَبْعًا، ثُمَّ صَلَّى خَلْفَ الْمَقَامِ رَكْعَتَيْنِ، وَطَافَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ، وَقَالَ {لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ}. قَالَ وَسَأَلْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ فَقَالَ لاَ يَقْرَبِ امْرَأَتَهُ حَتَّى يَطُوفَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ.
பாடம் : 68
தவாஃபுக்கு இடையில் (தொழுகையில்) நின்றுவிடல்35
ஒருவர் தவாஃப் செய்யும்போது தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டு விட்டால், அல்லது அந்த இடத்திலிருந்து அவர் அப்புறப்படுத்தப்பட்டுவிட்டால் தொழுகை முடிந்து சலாம் கொடுத்தவுடன் விட்ட இடத்திலிருந்து தவாஃபைத் தொடர வேண்டும் என அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
இப்னு உமர் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) ஆகியோரும் இவ்வாறு கூறியதாகவே அறிவிக்கப்பட் டுள்ளது.
பாடம் : 69
(தவாஃபின்போது) ஏழு சுற்று களுக்கு ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் இரு ரக்அத்கள் தொழுதார்கள்.
இப்னு உமர் (ரலி) அவர்கள், ஒவ்வொரு ஏழு சுற்றுகளுக்கும் இரண்டு ரக்அத் தொழுவார்கள் என நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
இஸ்மாயீல் பின் உமய்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
“தவாஃப் செய்தபின் கடமையான தொழுகை தொழுதால், அது தவாஃபின் இரண்டு ரக்அத்களுக்குப் போதுமாகும்” என அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுவதாக நான் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம் கூறினேன். அதற்கு அவர்கள், “நபிவழியே சிறந்தது; நபி (ஸல்) அவர்கள், ஒவ்வொரு ஏழு சுற்றுக்குப் பிறகும் இரண்டு ரக்அத்கள் தொழாமல் இருந்ததில்லை” என்று கூறினார்கள்.
1623. 1624 அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், “உம்ரா செய்யும் மனிதர் ஸஃபா, மர்வாவுக்கு மத்தியில் சுற்றுவதற்குமுன் தம் மனைவியோடு தாம்பத்திய உறவு கொள்ளலாமா?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவுக்கு வந்தபோது, கஅபாவை ஏழு முறை சுற்றினார்கள்; பிறகு மகாமு இப்ராஹீமுக்குப் பின்னால் இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு, ஸஃபா- மர்வாவிற்கு இடையில் சுற்றி னார்கள்” என்று கூறிவிட்டு, இப்னு உமர் (ரலி) அவர்கள், “உங்களுக்கு அல்லாஹ் வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உள்ளது” (33:21) என்ற இறைவசனத்தை ஓதினார்கள்.
நான் இதே கேள்வியை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் கேட் டேன். அதற்கு, “ஸஃபா-மர்வாவுக்கு இடையில் சுற்றுவதற்கு முன்னால் மனைவியிடம் (தாம்பத்திய உறவு கொள்ள) நெருங்கக் கூடாது” என அவர்கள் பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 25
1623. 1624 அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், “உம்ரா செய்யும் மனிதர் ஸஃபா, மர்வாவுக்கு மத்தியில் சுற்றுவதற்குமுன் தம் மனைவியோடு தாம்பத்திய உறவு கொள்ளலாமா?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவுக்கு வந்தபோது, கஅபாவை ஏழு முறை சுற்றினார்கள்; பிறகு மகாமு இப்ராஹீமுக்குப் பின்னால் இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு, ஸஃபா- மர்வாவிற்கு இடையில் சுற்றி னார்கள்” என்று கூறிவிட்டு, இப்னு உமர் (ரலி) அவர்கள், “உங்களுக்கு அல்லாஹ் வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உள்ளது” (33:21) என்ற இறைவசனத்தை ஓதினார்கள்.
நான் இதே கேள்வியை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் கேட் டேன். அதற்கு, “ஸஃபா-மர்வாவுக்கு இடையில் சுற்றுவதற்கு முன்னால் மனைவியிடம் (தாம்பத்திய உறவு கொள்ள) நெருங்கக் கூடாது” என அவர்கள் பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 25
1625. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ، حَدَّثَنَا فُضَيْلٌ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، أَخْبَرَنِي كُرَيْبٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَكَّةَ، فَطَافَ وَسَعَى بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ، وَلَمْ يَقْرَبِ الْكَعْبَةَ بَعْدَ طَوَافِهِ بِهَا حَتَّى رَجَعَ مِنْ عَرَفَةَ.
பாடம் : 70
முதல் தவாஃப் (தவாஃபுல் குதூம்) செய்தபின் அரஃபா செல்லும்வரை தவாஃப் செய்ய கஅபாவை நெருங்காமல் இருத்தல்
1625. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜுக்காக) மக்காவுக்கு வந்தபோது தவாஃப் (குதூம்) செய்தார்கள்; ஸஃபா- மர்வாவிற்கு இடையில் ஓடினார்கள். இந்த தவாஃபிற்குப் பின்னால் அரஃபாவிலிருந்து திரும்பும்வரை நபியவர்கள் கஅபாவிற்குச் செல்லவில்லை.36
அத்தியாயம் : 25
1625. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜுக்காக) மக்காவுக்கு வந்தபோது தவாஃப் (குதூம்) செய்தார்கள்; ஸஃபா- மர்வாவிற்கு இடையில் ஓடினார்கள். இந்த தவாஃபிற்குப் பின்னால் அரஃபாவிலிருந்து திரும்பும்வரை நபியவர்கள் கஅபாவிற்குச் செல்லவில்லை.36
அத்தியாயம் : 25