1546. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ صَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم بِالْمَدِينَةِ أَرْبَعًا، وَبِذِي الْحُلَيْفَةِ رَكْعَتَيْنِ، ثُمَّ بَاتَ حَتَّى أَصْبَحَ بِذِي الْحُلَيْفَةِ، فَلَمَّا رَكِبَ رَاحِلَتَهُ وَاسْتَوَتْ بِهِ أَهَلَّ.
பாடம் : 24 விடியும்வரை ‘துல்ஹுலைஃபா’ வில் தங்குவது இதுபற்றி நபி (ஸல்) அவர்களிட மிருந்து இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
1546. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜுக்குச் சென்றபோது) மதீனாவில் நான்கு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் ‘துல்ஹுலைஃபா’வில் இரண்டு ரத்அத்கள் (கஸ்ராகத்) தொழுதுவிட்டு அங்கேயே விடியும்வரை தங்கினார்கள். பிறகு ஊர்தி ஒட்டகத்தில் ஏறி அமர்ந்து, ஒட்டகம் நிலைக்கு வந்தபோது இஹ்ராம் கட்டி னார்கள்.


அத்தியாயம் : 25
1547. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى الظُّهْرَ بِالْمَدِينَةِ أَرْبَعًا، وَصَلَّى الْعَصْرَ بِذِي الْحُلَيْفَةِ رَكْعَتَيْنِ، قَالَ وَأَحْسِبُهُ بَاتَ بِهَا حَتَّى أَصْبَحَ.
பாடம் : 24 விடியும்வரை ‘துல்ஹுலைஃபா’ வில் தங்குவது இதுபற்றி நபி (ஸல்) அவர்களிட மிருந்து இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
1547. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் நான்கு ரக்அத்கள் லுஹ்ர் தொழுதார்கள். பிறகு ‘துல்ஹுலைஃபா’வில் இரண்டு ரக்அத்கள் (கஸ்ராக) அஸ்ர் தொழுதார்கள். அவர்கள் அங்கேயே விடியும்வரை தங்கினார்கள் என்றே எண்ணுகிறேன்.9

அத்தியாயம் : 25
1548. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ صَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم بِالْمَدِينَةِ الظُّهْرَ أَرْبَعًا، وَالْعَصْرَ بِذِي الْحُلَيْفَةِ رَكْعَتَيْنِ، وَسَمِعْتُهُمْ يَصْرُخُونَ بِهِمَا جَمِيعًا.
பாடம் : 25 ‘தல்பியா’வை உரத்த குரலில் கூறல்
1548. அனஸ் (ரலி) கூறியதாவது

நபி (ஸல்) அவர்கள் (ஹஜ் பயணத்தின் போது) மதீனாவில் நான்கு ரக்அத்கள் லுஹ்ர் தொழுதார்கள். ‘துல்ஹுலைஃபா’ வில் இரண்டு ரக்அத்கள் அஸ்ர் தொழு தார்கள். அனைவரும் ஹஜ், உம்ராவிற் கான ‘தல்பியா’வை உரத்த குரலில் கூறியதை நான் கேட்டேன்.

அத்தியாயம் : 25
1549. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ تَلْبِيَةَ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لاَ شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ، لاَ شَرِيكَ لَكَ.
பாடம் : 26 ‘தல்பியா’ கூறல்10
1549. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“லப்பைக், அல்லாஹும்ம லப்பைக். லப்பைக், லா ஷரீக்க ல(க்)க லப்பைக். இன்னல் ஹம்த வந்நிஅமத்த லக்க, வல்முல்க்க லா ஷரீக்க லக்” என்பதே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ‘தல்பியா’ ஆகும்.

(இதோ, உன் அழைப்பை ஏற்று வந்துவிட்டேன்! இறைவா! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன்! உனக்கு இணை துணை கிடையாது. எல்லாப் புகழும் அருட் கொடையும் ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு இணையானவர் யாருமில்லை).


அத்தியாயம் : 25
1550. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ عُمَارَةَ، عَنْ أَبِي عَطِيَّةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ إِنِّي لأَعْلَمُ كَيْفَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُلَبِّي لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لاَ شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ. تَابَعَهُ أَبُو مُعَاوِيَةَ عَنِ الأَعْمَشِ. وَقَالَ شُعْبَةُ أَخْبَرَنَا سُلَيْمَانُ، سَمِعْتُ خَيْثَمَةَ، عَنْ أَبِي عَطِيَّةَ، سَمِعْتُ عَائِشَةَ ـ رضى الله عنها ـ.
பாடம் : 26 ‘தல்பியா’ கூறல்10
1550. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு ‘தல்பியா’ கூறிவந்தார்கள் என்பதை நிச்சயமாக நான் அறிவேன்:

“லப்பைக் அல்லாஹும்ம லப்பைக், லப்பைக், லா ஷரீ(க்)க ல(க்)க லப்பைக், இன்னல் ஹம்த வந்நிஅமத்த லக்” என்று கூறுவார்கள்.

(இதோ, உன் அழைப்பை ஏற்று வந்துவிட்டேன். இறைவா! உனக்கே நான் கீழ்ப்படிகின்றேன். உனக்கு இணை துணை கிடையாது. உன் அழைப்பை ஏற்று வந்துவிட்டேன். எல்லாப் புகழும் அருட்கொடையும் உனக்கே உரியன.)

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 25
1551. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ صَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَنَحْنُ مَعَهُ بِالْمَدِينَةِ الظُّهْرَ أَرْبَعًا، وَالْعَصْرَ بِذِي الْحُلَيْفَةِ رَكْعَتَيْنِ، ثُمَّ بَاتَ بِهَا حَتَّى أَصْبَحَ، ثُمَّ رَكِبَ حَتَّى اسْتَوَتْ بِهِ عَلَى الْبَيْدَاءِ، حَمِدَ اللَّهَ وَسَبَّحَ وَكَبَّرَ، ثُمَّ أَهَلَّ بِحَجٍّ وَعُمْرَةٍ، وَأَهَلَّ النَّاسُ بِهِمَا، فَلَمَّا قَدِمْنَا أَمَرَ النَّاسَ فَحَلُّوا، حَتَّى كَانَ يَوْمُ التَّرْوِيَةِ أَهَلُّوا بِالْحَجِّ قَالَ وَنَحَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم بَدَنَاتٍ بِيَدِهِ قِيَامًا، وَذَبَحَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِالْمَدِينَةِ كَبْشَيْنِ أَمْلَحَيْنِ. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ قَالَ بَعْضُهُمْ هَذَا عَنْ أَيُّوبَ عَنْ رَجُلٍ عَنْ أَنَسٍ.
பாடம் : 27 ‘தல்பியா’ சொல்வதற்கு முன்னால் வாகனத்தின் மீதமர்ந்த நிலையிலேயே அல்ஹம்து லில்லாஹ், சுப்ஹானல்லாஹ், அல்லாஹ் அக்பர் கூறுவது
1551. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (ஹஜ் பயணத்தில்) அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அவர்கள் மதீனாவில் நான்கு ரக்அத்கள் லுஹ்ர் தொழுதார்கள். ‘துல்ஹுலைஃபா’வில் இரண்டு ரக்அத்கள் அஸ்ர் தொழுதார்கள். பிறகு விடியும்வரை அங்கேயே இரவில் தங்கினார்கள். பிறகு வாகனத்தின் மீதமர்ந்து ‘பைதா’ எனுமிடத் தில் வாகனம் நிலைக்கு வந்தபோது, ‘அல்ஹம்து லில்லாஹ், சுப்ஹானல்லாஹ், அல்லாஹு அக்பர்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே, அல்லாஹ் தூயவன், அல்லாஹ் மிகப் பெரியவன்) எனக் கூறினார்கள்.

பிறகு ஹஜ் மற்றும் உம்ரா இரண்டிற் காகவும் இஹ்ராம் கட்டி, தல்பியா கூறினார்கள். மக்களும் ஹஜ் மற்றும் உம்ரா இரண்டிற்குமே இஹ்ராம் கட்டி தல்பியா கூறினர். நாங்கள் (மக்கா) வந்(து உம்ராவை முடித்)தபோது இஹ்ராமி லிருந்து விடுபடும்படி மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். மக்கள் அவ்வாறே செய்தனர்; துல்ஹஜ் பிறை எட்டாம் நாள் ஹஜ்ஜுக்காக மீண்டும் இஹ்ராம் கடடினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் (குர்பானி) ஒட்டகங்களை நிற்கவைத்துத் தம் கைகளாலேயே அறுத்தார்கள். இன்னும் நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் பெருநாளன்று இரண்டு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்களை அறுத்(து குர்பானி கொடுத்)தார்கள்.

அத்தியாயம் : 25
1552. حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي صَالِحُ بْنُ كَيْسَانَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ أَهَلَّ النَّبِيُّ صلى الله عليه وسلم حِينَ اسْتَوَتْ بِهِ رَاحِلَتُهُ قَائِمَةً.
பாடம் : 28 வாகனம் நிலைக்கு வரும்போது ‘தல்பியா’ கூறல்
1552. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், தமது ஊர்தி ஒட்டகம் நிலைக்கு வந்தபோது ‘தல்பியா’ கூறினார்கள்.

அத்தியாயம் : 25
1553. وَقَالَ أَبُو مَعْمَرٍ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ نَافِعٍ، قَالَ كَانَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ إِذَا صَلَّى بِالْغَدَاةِ بِذِي الْحُلَيْفَةِ أَمَرَ بِرَاحِلَتِهِ فَرُحِلَتْ ثُمَّ رَكِبَ، فَإِذَا اسْتَوَتْ بِهِ اسْتَقْبَلَ الْقِبْلَةَ قَائِمًا، ثُمَّ يُلَبِّي حَتَّى يَبْلُغَ الْمَحْرَمَ، ثُمَّ يُمْسِكُ حَتَّى إِذَا جَاءَ ذَا طُوًى بَاتَ بِهِ حَتَّى يُصْبِحَ، فَإِذَا صَلَّى الْغَدَاةَ اغْتَسَلَ، وَزَعَمَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَعَلَ ذَلِكَ. تَابَعَهُ إِسْمَاعِيلُ عَنْ أَيُّوبَ فِي الْغَسْلِ.
பாடம் : 29 கிப்லாவை முன்னோக்கி ‘தல்பியா’ கூறல்
1553. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள், ‘துல் ஹுலைஃபா’வில் ‘சுப்ஹு’ தொழுதவுடன், தமது ஊர்தி ஒட்டகத்தை(ப் பயணத்திற்கு)த் தயாராக்கும்படி கட்டளையிடுவார்கள். அவ்வாறே தயார் செய்யப்படும். பிறகு அவர்கள் (அதில்) ஏறி, ஒட்டகம் நிலைக்கு வந்ததும் நேராக (அமர்ந்து) ‘கிப்லா’வை முன்னோக்குவார்கள்.

பின்னர் ‘தல்பியா’ கூறத் தொடங்குவார் கள். புனித (ஹரம்) எல்லை வரும்வரை தல்பியா கூறிக்கொண்டேயிருப்பார்கள். பிறகு ‘தூத்துவா’ எனுமிடத்தை அடையும் போது தல்பியாவை நிறுத்தி அங்கேயே விடியும்வரை தங்குவார்கள். சுப்ஹு தொழுதுவிட்டு (அங்கேயே) குளிப்பார்கள். இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் செய்த தாகவும் கூறுவார்கள்.

இது, இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. இரண்டாவது அறிவிப்பில் குளித்தது உள்ளிட்ட சில தகவல்களே இடம்பெறுகின்றன.


அத்தியாயம் : 25
1554. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ أَبُو الرَّبِيعِ، حَدَّثَنَا فُلَيْحٌ، عَنْ نَافِعٍ، قَالَ كَانَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ إِذَا أَرَادَ الْخُرُوجَ إِلَى مَكَّةَ ادَّهَنَ بِدُهْنٍ لَيْسَ لَهُ رَائِحَةٌ طَيِّبَةٌ، ثُمَّ يَأْتِي مَسْجِدَ الْحُلَيْفَةِ فَيُصَلِّي ثُمَّ يَرْكَبُ، وَإِذَا اسْتَوَتْ بِهِ رَاحِلَتُهُ قَائِمَةً أَحْرَمَ، ثُمَّ قَالَ هَكَذَا رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَفْعَلُ.
பாடம் : 29 கிப்லாவை முன்னோக்கி ‘தல்பியா’ கூறல்
1554. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள், (ஹஜ் மற்றும் உம்ராவிற்காக) மக்கா செல்ல நாடினால், நறுமணமில்லாத எண்ணெய் தேய்ப்பார்கள். பிறகு ‘துல்ஹுலைஃபா’ பள்ளிவாசலுக் குச் சென்று, (அதிகாலைத் தொழுகையைத்) தொழுவார்கள். பிறகு (தமது வாகனத்தில்) ஏறுவார்கள். அவர்களின் ஊர்தி ஒட்டகம் நேராக நிலைக்கு வந்தபின் இஹ்ராம் கட்டுவார்கள்.

“இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் செய்ய நான் கண்டேன்” எனக் கூறு வார்கள்.

அத்தியாயம் : 25
1555. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنِي ابْنُ أَبِي عَدِيٍّ، عَنِ ابْنِ عَوْنٍ، عَنْ مُجَاهِدٍ، قَالَ كُنَّا عِنْدَ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ فَذَكَرُوا الدَّجَّالَ أَنَّهُ قَالَ "" مَكْتُوبٌ بَيْنَ عَيْنَيْهِ كَافِرٌ "". فَقَالَ ابْنُ عَبَّاسٍ لَمْ أَسْمَعْهُ وَلَكِنَّهُ قَالَ "" أَمَّا مُوسَى كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ إِذِ انْحَدَرَ فِي الْوَادِي يُلَبِّي "".
பாடம் : 30 இஹ்ராம் கட்டியவர் பள்ளத் தாக்கில் இறங்கும்போது தல்பியா கூறல்
1555. முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடன் இருந்தோம். அப்போது மக்கள், (இறுதிக் காலத்தில் வரவிருக்கும் மகா பொய்யன்) தஜ்ஜாலைப் பற்றிப் பேசிக்கொண்டார்கள். அப்போது ஒருவர், “அவனுடைய இரு கண்களுக்கு மத்தியில் ‘காஃபிர்’ (இறைமறுப்பாளன்) என எழுதப்பட்டிருக்கும்” என்று சொன்னார்.

அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “நான் இதைக் கேள்விப்படவில்லை; மாறாக, ‘மூசா (அலை) அவர்கள் ‘தல்பியா’ கூறியவாறு பள்ளத்தாக்கில் இறங்குவதை நான் இப்போதும் காண்பதைப் போன்று உள்ளது’ என நபி (ஸல்) அவர்கள் கூறியதையே நான் கேட்டிருக்கிறேன்” என்றார்கள்.11

அத்தியாயம் : 25
1556. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ خَرَجْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي حَجَّةِ الْوَدَاعِ، فَأَهْلَلْنَا بِعُمْرَةٍ ثُمَّ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَنْ كَانَ مَعَهُ هَدْىٌ فَلْيُهِلَّ بِالْحَجِّ مَعَ الْعُمْرَةِ، ثُمَّ لاَ يَحِلَّ حَتَّى يَحِلَّ مِنْهُمَا جَمِيعًا "" فَقَدِمْتُ مَكَّةَ وَأَنَا حَائِضٌ، وَلَمْ أَطُفْ بِالْبَيْتِ وَلاَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ، فَشَكَوْتُ ذَلِكَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ "" انْقُضِي رَأْسَكِ وَامْتَشِطِي، وَأَهِلِّي بِالْحَجِّ، وَدَعِي الْعُمْرَةَ "". فَفَعَلْتُ فَلَمَّا قَضَيْنَا الْحَجَّ أَرْسَلَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم مَعَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ إِلَى التَّنْعِيمِ فَاعْتَمَرْتُ فَقَالَ "" هَذِهِ مَكَانَ عُمْرَتِكِ "". قَالَتْ فَطَافَ الَّذِينَ كَانُوا أَهَلُّوا بِالْعُمْرَةِ بِالْبَيْتِ وَبَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ، ثُمَّ حَلُّوا، ثُمَّ طَافُوا طَوَافًا وَاحِدًا بَعْدَ أَنْ رَجَعُوا مِنْ مِنًى، وَأَمَّا الَّذِينَ جَمَعُوا الْحَجَّ وَالْعُمْرَةَ فَإِنَّمَا طَافُوا طَوَافًا وَاحِدًا.
பாடம் : 31 மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணும் மகப்பேறு இரத்தப் போக்குள்ள பெண்ணும் எப்படி இஹ்ராம் கட்ட வேண்டும்? (இஹ்ராம் கட்டுதல் என்பதைக் குறிக்க மூலத்தில் ‘இஹ்லால்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது.) ஒருவர் ஒன்றை மொழிவதற்கும் (அஹல்ல), பிறை தென்படு வதற்கும் (இஸ்திஹ்லால்) இச்சொல் பயன்படுத்தப்படுவது உண்டு. இவை யெல்லாம் ‘வெளிப்படல்’ என்ற பொருளை மையப்படுத்துபவை ஆகும். ‘அல்லாஹ் அல்லாதவரின் பெயர் கூறி அறுக்கப் பட்டது’ (5:3) என்பதைக் குறிக்க குர்ஆனில் இச்சொல் (உஹில்ல) ஆளப்பட்டுள்ளது. இது குழந்தை பிறக்கும்போது எழுப்பும் (அழு) குரலைக் குறிக்கும் சொல்லாகும்.
1556. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

விடைபெறும் ஹஜ்ஜிற்காக நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் சென்றிருந்தபோது, உம்ராவுக்காக இஹ்ராம் கட்டினோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், “யாருடன் குர்பானிப் பிராணி உள்ளதோ அவர் உம்ராவுடன் ஹஜ்ஜுக்கும் சேர்த்து இஹ்ராம் கட்டிக்கொள்ளட்டும். பிறகு அவர் அவ்விரண்டையும் நிறைவேற்றாத வரை இஹ்ராமிலிருந்து விடுபடக் கூடாது” என்றார்கள்.

ஆனால், நான் மக்கா வந்தபோது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. இதனால் கஅபாவை தவாஃபும், செய்யவில்லை; ஸஃபா, மர்வாவுக்கிடையே ஓடவுமில்லை. இதை நபி (ஸல்) அவர்களிடம் நான் முறையிட்டேன். அதற்கு அவர்கள் “உனது தலைமுடியை அவிழ்த்துவிட்டு தலைவாரிக்கொள். பிறகு ஹஜ்ஜுக்காக மட்டும் இஹ்ராம் கட்டிக்கொண்டு உம்ராவை விட்டுவிடு” என்றார்கள். நானும் அவ்வாறே செய்தேன். நாங்கள் ஹஜ்ஜை முடித்தபோது, (என் சகோதரர்) அப்துர் ரஹ்மானுடன் என்னை ‘தன்யீம்’ எனும் இடத்திற்கு நபி (ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். நான் (அங்கு இஹ்ராம் கட்டியபின்) உம்ரா செய்தேன். “இது விடுபட்ட உன்னுடைய உம்ராவுக்குப் பகரமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் அப்போது கூறினார்கள்.

உம்ராவுக்காக (மட்டும்) இஹ்ராம் கட்டியவர்கள் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்து ஸஃபா, மர்வாவுக்கிடையே ஓடி (சயீ செய்து)விட்டு இஹ்ராமிலிருந்து விடுபட்டு விட்டார்கள். மினாவிலிருந்து திரும்பிய போது மீண்டும் ஒரு முறை (ஹஜ்ஜுக்காக) கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்தார்கள். ஹஜ் மற்றும் உம்ரா இரண்டுக்கும் சேர்த்து இஹ்ராம் கட்டியவர்கள் ஒரு முறை மட்டுமே தவாஃப் செய்தார்கள்.

அத்தியாயம் : 25
1557. حَدَّثَنَا الْمَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ عَطَاءٌ قَالَ جَابِرٌ ـ رضى الله عنه ـ أَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلِيًّا ـ رضى الله عنه ـ أَنْ يُقِيمَ عَلَى إِحْرَامِهِ، وَذَكَرَ قَوْلَ سُرَاقَةَ.
பாடம் : 32 நபி (ஸல்) அவர்களின் இஹ்ரா மைப் போன்றே நானும் இஹ்ராம் கட்டுகிறேன் என நபி (ஸல்) அவர்களது காலத்தில் ஒருவர் இஹ்ராம் கட்டுவது இது (செல்லும் என்பது) தொடர்பாக இப்னு உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார்கள்.
1557. அதாஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அலீ (ரலி) அவர்களிடம் (ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்கும் சேர்த்து) அவர்கள் கட்டியிருந்த இஹ்ராமிலேயே நீடிக்கும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள் என ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

மேலும், இது தொடர்பாக (‘இது உங்களுக்கு மட்டுமா, அல்லது அனைவருக்கும் பொதுவானதா?’ என) சுராக்கா (ரலி) அவர்கள் (கேட்க, “எப்போதைக்கும் உரியதே; அனைவருக்கும் பொதுவானதே” என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்த அந்தச்) செய்தியையும் கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் முஹம்மத் பின் பக்ர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம், “நீர் இப்போது இருப்பதைப் போன்றே, இஹ்ராமிலேயே நீடித்து (ஹஜ்ஜையும் உம்ராவையும் முடித்தபின்) குர்பானி கொடுப்பீராக!” என்று கூறியதாகக் கூடுதல் தகவல் காணப்படுகிறது.


அத்தியாயம் : 25
1558. حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ الْهُذَلِيُّ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا سَلِيمُ بْنُ حَيَّانَ، قَالَ سَمِعْتُ مَرْوَانَ الأَصْفَرَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ قَدِمَ عَلِيٌّ ـ رضى الله عنه ـ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم مِنَ الْيَمَنِ فَقَالَ "" بِمَا أَهْلَلْتَ "". قَالَ بِمَا أَهَلَّ بِهِ النَّبِيُّ صلى الله عليه وسلم. فَقَالَ "" لَوْلاَ أَنَّ مَعِي الْهَدْىَ لأَحْلَلْتُ "". وَزَادَ مُحَمَّدُ بْنُ بَكْرٍ عَنِ ابْنِ جُرَيْجٍ قَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم "" بِمَا أَهْلَلْتَ يَا عَلِيُّ "". قَالَ بِمَا أَهَلَّ بِهِ النَّبِيُّ صلى الله عليه وسلم قَالَ "" فَأَهْدِ وَامْكُثْ حَرَامًا كَمَا أَنْتَ "".
பாடம் : 32 நபி (ஸல்) அவர்களின் இஹ்ரா மைப் போன்றே நானும் இஹ்ராம் கட்டுகிறேன் என நபி (ஸல்) அவர்களது காலத்தில் ஒருவர் இஹ்ராம் கட்டுவது இது (செல்லும் என்பது) தொடர்பாக இப்னு உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார்கள்.
1558. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஹஜ்ஜுக்காக) யமனிலிருந்து திரும் பிய அலீ (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் “எதற்காக இஹ்ராம் கட்டினீர் (ஹஜ்ஜுடன் உம்ராவிற்கும் சேர்த்தா? உம்ராவிற்கு மட்டுமா)?” என்று கேட்டார் கள். அதற்கு அலீ (ரலி) அவர்கள் “நீங்கள் இஹ்ராம் கட்டியதைப் போன்றே நானும் இஹ்ராம் கட்டியுள்ளேன்” என்று பதிலளித் தார்கள். நபி (ஸல்) அவர்கள், “என்னுடன் குர்பானிப் பிராணி இல்லையெனில் (உம்ராவை முடித்து) நான் இஹ்ராமி லிருந்து விடுபட்டிருப்பேன்” என்றார்கள்.


அத்தியாயம் : 25
1559. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ قَالَ بَعَثَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَى قَوْمٍ بِالْيَمَنِ فَجِئْتُ وَهْوَ بِالْبَطْحَاءِ فَقَالَ "" بِمَا أَهْلَلْتَ "". قُلْتُ أَهْلَلْتُ كَإِهْلاَلِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" هَلْ مَعَكَ مِنْ هَدْىٍ "". قُلْتُ لاَ. فَأَمَرَنِي فَطُفْتُ بِالْبَيْتِ وَبِالصَّفَا وَالْمَرْوَةِ ثُمَّ أَمَرَنِي فَأَحْلَلْتُ فَأَتَيْتُ امْرَأَةً مِنْ قَوْمِي فَمَشَطَتْنِي، أَوْ غَسَلَتْ رَأْسِي، فَقَدِمَ عُمَرُ ـ رضى الله عنه ـ فَقَالَ إِنْ نَأْخُذْ بِكِتَابِ اللَّهِ فَإِنَّهُ يَأْمُرُنَا بِالتَّمَامِ قَالَ اللَّهُ {وَأَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ} وَإِنْ نَأْخُذْ بِسُنَّةِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَإِنَّهُ لَمْ يَحِلَّ حَتَّى نَحَرَ الْهَدْىَ.
பாடம் : 32 நபி (ஸல்) அவர்களின் இஹ்ரா மைப் போன்றே நானும் இஹ்ராம் கட்டுகிறேன் என நபி (ஸல்) அவர்களது காலத்தில் ஒருவர் இஹ்ராம் கட்டுவது இது (செல்லும் என்பது) தொடர்பாக இப்னு உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார்கள்.
1559. அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் யமன் நாட்டின் ஒரு கூட்டத்தாரிடம் என்னை அனுப்பி வைத்தார்கள். நான் (திரும்பி) வந்தபோது அவர்கள் (துல்ஹுலைஃபாவில்) ‘அல் பத்ஹா’ பள்ளத்தாக்கில் இருந்தார்கள். அப்போது அவர்கள் என்னிடம், “நீங்கள் எதற்கு இஹ்ராம் கட்டினீர்கள்? (ஹஜ் மற்றும் உம்ரா இரண்டிற்காகவுமா? உம்ராவிற்காக மட்டுமா?)” என்று கேட்டார்கள். நான், “நபி (ஸல்) அவர்களின் இஹ்ராமைப் போன்றே இஹ்ராம் கட்டினேன்” என்றேன்.

“உம்மிடம் குர்பானிப் பிராணி ஏதேனும் உண்டா?” என நபி (ஸல்) அவர்கள் கேட்க, நான், “இல்லை” என்றேன். அப்போது இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வருமாறும் ஸஃபா-மர்வா மலைக்குன்றுகளுக்கிடையே தொங்கோட்டம் ஓடுமாறும் அதன் பிறகு இஹ்ராமிலிருந்து விடுபடுமாறும் என்னைப் பணித்தார்கள். அதன்படி நான் செய்தேன். அதற்குப் பிறகு நான் என் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் வந்தேன். ‘அவள் எனக்கு தலைவாரிவிட்டாள்’ அல்லது ‘எனது தலையை அவள் கழுவினாள்’.

உமர் (ரலி) அவர்கள் (பதவிக்கு) வந்தபோது கூறினார்கள்:

நாம் இறைவேதத்தின்படி நடப்ப தெனில், “அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும் உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்” (2:196) எனும் வசனத்தின்படி ‘ஹஜ், உம்ரா இரண்டையும் முழுமையாக நிறைவேற்று மாறு அது நமக்குக் கட்டளையிடுகின்றது. நாம் நபிவழியின்படி நடப்பதென்றாலும், அவர்கள் குர்பானிப் பிராணியை அறுக் கும்வரை இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை (அதாவது இரண்டையும் சேர்த்தே செய்தார்கள்.)12

அத்தியாயம் : 25
1560. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنِي أَبُو بَكْرٍ الْحَنَفِيُّ، حَدَّثَنَا أَفْلَحُ بْنُ حُمَيْدٍ، سَمِعْتُ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي أَشْهُرِ الْحَجِّ، وَلَيَالِي الْحَجِّ وَحُرُمِ الْحَجِّ، فَنَزَلْنَا بِسَرِفَ قَالَتْ فَخَرَجَ إِلَى أَصْحَابِهِ فَقَالَ "" مَنْ لَمْ يَكُنْ مِنْكُمْ مَعَهُ هَدْىٌ فَأَحَبَّ أَنْ يَجْعَلَهَا عُمْرَةً فَلْيَفْعَلْ، وَمَنْ كَانَ مَعَهُ الْهَدْىُ فَلاَ "". قَالَتْ فَالآخِذُ بِهَا وَالتَّارِكُ لَهَا مِنْ أَصْحَابِهِ قَالَتْ فَأَمَّا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَرِجَالٌ مِنْ أَصْحَابِهِ فَكَانُوا أَهْلَ قُوَّةٍ، وَكَانَ مَعَهُمُ الْهَدْىُ، فَلَمْ يَقْدِرُوا عَلَى الْعُمْرَةِ قَالَتْ فَدَخَلَ عَلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَنَا أَبْكِي فَقَالَ "" مَا يُبْكِيكِ يَا هَنْتَاهْ "". قُلْتُ سَمِعْتُ قَوْلَكَ لأَصْحَابِكَ فَمُنِعْتُ الْعُمْرَةَ. قَالَ "" وَمَا شَأْنُكِ "". قُلْتُ لاَ أُصَلِّي. قَالَ "" فَلاَ يَضِيرُكِ، إِنَّمَا أَنْتِ امْرَأَةٌ مِنْ بَنَاتِ آدَمَ كَتَبَ اللَّهُ عَلَيْكِ مَا كَتَبَ عَلَيْهِنَّ، فَكُونِي فِي حَجَّتِكِ، فَعَسَى اللَّهُ أَنْ يَرْزُقَكِيهَا "". قَالَتْ فَخَرَجْنَا فِي حَجَّتِهِ حَتَّى قَدِمْنَا مِنًى فَطَهَرْتُ، ثُمَّ خَرَجْتُ مِنْ مِنًى فَأَفَضْتُ بِالْبَيْتِ قَالَتْ ثُمَّ خَرَجَتْ مَعَهُ فِي النَّفْرِ الآخِرِ حَتَّى نَزَلَ الْمُحَصَّبَ، وَنَزَلْنَا مَعَهُ فَدَعَا عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي بَكْرٍ فَقَالَ "" اخْرُجْ بِأُخْتِكَ مِنَ الْحَرَمِ، فَلْتُهِلَّ بِعُمْرَةٍ ثُمَّ افْرُغَا، ثُمَّ ائْتِيَا هَا هُنَا، فَإِنِّي أَنْظُرُكُمَا حَتَّى تَأْتِيَانِي "". ـ قَالَتْ ـ فَخَرَجْنَا حَتَّى إِذَا فَرَغْتُ، وَفَرَغْتُ مِنَ الطَّوَافِ ثُمَّ جِئْتُهُ بِسَحَرَ فَقَالَ "" هَلْ فَرَغْتُمْ "". فَقُلْتُ نَعَمْ. فَآذَنَ بِالرَّحِيلِ فِي أَصْحَابِهِ، فَارْتَحَلَ النَّاسُ فَمَرَّ مُتَوَجِّهًا إِلَى الْمَدِينَةِ. ضَيْرُ مِنْ ضَارَ يَضِيرُ ضَيْرًا، وَيُقَالُ ضَارَ يَضُورُ ضَوْرًا وَضَرَّ يَضُرُّ ضَرًّا.
பாடம் : 33 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: ஹஜ்(ஜுக்கான காலம்) குறிப்பிட்ட சில மாதங்களாகும். அந்த மாதங்களில் ஒருவர் (தம்மீது) ஹஜ்ஜைக் கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின்போது தாம்பத்திய உறவு கொள்வதோ, குற்றம் புரிவதோ, தர்க்கம் செய்வதோ கூடாது. (2:197) மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: பிறைகளைப் பற்றி அவர்கள் உம்மி டம் வினவுகின்றனர். “அவை மக்க(ளின் பணிக)ளுக்கும் ஹஜ்ஜுக்கும் காலம் காட்டிகள்” என்று கூறுவீராக! (2:189) “ஷவ்வால், துல்கஅதா மற்றும் துல்ஹஜ்ஜில் (முந்திய) பத்து நாட்கள் ஆகியவை ஹஜ்ஜுடைய மாதங்களாகும்” என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். “ஹஜ் செய்வதற்காக ஹஜ்ஜுடைய மாதங்களில் மட்டுமே இஹ்ராம் கட்டுவது தான் நபிவழியாகும்” என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். குராசான் அல்லது கர்மான் ஆகிய இடங்களிலிருந்து இஹ்ராம் கட்டுவதை உஸ்மான் (ரலி) அவர்கள் வெறுத்துள்ளார்கள்.13
1560. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹஜ் மாதத்தில், ஹஜ் நாட்களில், ஹஜ்ஜின் புனித கிரியைகளில் புறப்பட்டு ‘ஸரிஃப்’ எனுமிடத்தில் இறங்கி னோம். நபி (ஸல்) அவர்கள் (தம் கூடாரத்திலிருந்து) புறப்பட்டு தம் தோழர் களிடம் வந்து, “உங்களில் யாருடன் குர்பானிப் பிராணி இல்லையோ அவர் தமது இஹ்ராமை உம்ராவுக்காக மாற்றிக் கொள்ள விரும்பினால், அவ்வாறே செய்து கொள்ளட்டும்; யாருடன் குர்பானிப் பிராணி உள்ளதோ அவர் இவ்வாறு செய்ய வேண்டாம்” என்றார்கள். தோழர் களில் சிலர் இதன்படி செய்தார்கள்; சிலர் இதன்படி செய்யவில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடனும் அவர்களுடனிருந்த வசதி படைத்த தோழர்களில் சிலருடனும் குர்பானிப் பிராணி இருந்ததால் அவர் களால் உம்ரா(வை மட்டும் செய்து இஹ்ராமிலிருந்து விடுபட) முடியவில்லை.

இந்நிலையில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தபோது நான் அழுதுகொண்டிருந்தேன். “ஏய்! ஏன் அழுகிறாய்?” எனக் கேட்டார்கள். “நீங்கள் உங்கள் தோழர்களுக்குக் கூறியதைக் கேட்டேன்; நான் உம்ரா செய்ய முடியாம லாகிவிட்டது” என்றேன். “உனக்கு என்னவாயிற்று?” எனக் கேட்டார்கள். “நான் தொழுகை இல்லாமல் இருக்கிறேன்” என்றேன். “அதனால் உனக்குப் பாதிப்பில்லை. ஆதமின் பெண் மக்களில் நீயும் ஒருத்தி! எனவே, இறைவன் அவர்களுக்கு விதியாக்கிய ஒன்றைத்தான் உனக்கும் விதியாக்கியுள்ளான். நீ ஹஜ் செய்துகொண்டிரு! அல்லாஹ் உனக்கு உம்ரா செய்யும் வாய்ப்பையும் தரலாம்” என்றார்கள்.

நாங்கள் அந்த ஹஜ்ஜுக்காகப் புறப்பட்டு மினாவை அடைந்தபோது நான் தூய்மையானேன். பிறகு மினாவிலிருந்து சென்று கஅபாவை தவாஃப் செய்தேன். பிறகு நான் நபி (ஸல்) அவர்களுடன் வந்த கடைசிக் கூட்டத்தினரோடு புறப்பட்டு ‘அல்முஹஸ்ஸப்’ எனுமிடத்தில் நபி (ஸல்) அவர்களுடனேயே தங்கினேன். அப்போது (என் சகோதரர்) அப்துர் ரஹ்மானை நபி (ஸல்) அவர்கள் அழைத்து, “உம்முடைய சகோதரியை ஹரமுக்கு வெளியே அழைத்துச் சென்று உம்ராவிற்கு இஹ்ராம் அணிந்து இருவரும் உம்ராவை முடியுங்கள். பிறகு இதே இடத்திற்குத் திரும்பி வாருங்கள். நீங்கள் வரும்வரை உங்களுக்காக நான் காத்திருக்கிறேன்” என்றார்கள்.

அவ்வாறே நாங்கள் புறப்பட்டோம். தவாஃபை முடித்து ஸஹருடைய நேரத் தில் நபியவர்களிடம் வந்து சேர்ந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், (“உம்ராவை) முடித்துவிட்டீர்களா?” எனக் கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்றேன். பிறகு நபி (ஸல்) அவர்கள், தம் தோழர்கள் புறப்பட அனுமதித்தார்கள். மக்கள் அனைவரும் புறப்பட்டதும் மதீனாவை நோக்கி நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள்.14

அத்தியாயம் : 25
1561. حَدَّثَنَا عُثْمَانُ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ خَرَجْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَلاَ نُرَى إِلاَّ أَنَّهُ الْحَجُّ، فَلَمَّا قَدِمْنَا تَطَوَّفْنَا بِالْبَيْتِ، فَأَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَنْ لَمْ يَكُنْ سَاقَ الْهَدْىَ أَنْ يَحِلَّ، فَحَلَّ مَنْ لَمْ يَكُنْ سَاقَ الْهَدْىَ، وَنِسَاؤُهُ لَمْ يَسُقْنَ فَأَحْلَلْنَ، قَالَتْ عَائِشَةُ ـ رضى الله عنها ـ فَحِضْتُ فَلَمْ أَطُفْ بِالْبَيْتِ، فَلَمَّا كَانَتْ لَيْلَةُ الْحَصْبَةِ قَالَتْ يَا رَسُولَ اللَّهِ، يَرْجِعُ النَّاسُ بِعُمْرَةٍ وَحَجَّةٍ وَأَرْجِعُ أَنَا بِحَجَّةٍ قَالَ "" وَمَا طُفْتِ لَيَالِيَ قَدِمْنَا مَكَّةَ "". قُلْتُ لاَ. قَالَ "" فَاذْهَبِي مَعَ أَخِيكِ إِلَى التَّنْعِيمِ، فَأَهِلِّي بِعُمْرَةٍ ثُمَّ مَوْعِدُكِ كَذَا وَكَذَا "". قَالَتْ صَفِيَّةُ مَا أُرَانِي إِلاَّ حَابِسَتَهُمْ. قَالَ "" عَقْرَى حَلْقَى، أَوَمَا طُفْتِ يَوْمَ النَّحْرِ "". قَالَتْ قُلْتُ بَلَى. قَالَ "" لاَ بَأْسَ، انْفِرِي "". قَالَتْ عَائِشَةُ ـ رضى الله عنها ـ فَلَقِيَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم وَهُوَ مُصْعِدٌ مِنْ مَكَّةَ، وَأَنَا مُنْهَبِطَةٌ عَلَيْهَا، أَوْ أَنَا مُصْعِدَةٌ وَهْوَ مُنْهَبِطٌ مِنْهَا.
பாடம் : 34 தமத்துஉ, கிரான், இஃப்ராத் ஆகிய ஹஜ்ஜின் வகைகளும் தம்முடன் குர்பானிப் பிராணி இல்லாதவர் ஹஜ்ஜை (உம்ராவாக) மாற்றிக்கொள்வதும்15
1561. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (ஹஜ்ஜுக்காக) நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். அப்போது அது ஹஜ் மட்டும்தான் என்றே நாங்கள் கருதினோம். நாங்கள் மக்காவை வந்த டைந்ததும் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்தோம். அதன் பிறகு, குர்பானிப் பிராணியைக் கொண்டுவராதவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். உடனே பிராணியைக் கொண்டுவராதவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டார்கள். நபி (ஸல்) அவர்களின் துணைவியரும் பிராணியைக் கொண்டுவராததால் அவர்களும் இஹ்ராமிலிருந்து விடுபட்டார்கள்.

ஆனால், எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்ததால் தவாஃப் செய்யவில்லை. ‘அல்முஹஸ்ஸப்’ (எனும் இடத்தில் தங்கும்) இரவு வந்தபோது, நான் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! மக்கள் ஹஜ், உம்ரா ஆகிய இரண்டையும் முடித்துத் திரும்புகின்றனர்; ஆனால், நானோ ஹஜ்ஜுடன் மட்டும் திரும்புகிறேன்” என்றேன். நபி (ஸல்) அவர்கள், “நாம் மக்காவை வந்தடைந்த இரவுகளில் நீ தவாஃப் செய்யவில்லையா?” எனக் கேட்டார்கள். நான் இல்லை என்றேன். “அப்படியானால் உன் சகோதரருடன் ‘தன்யீம்’ எனும் இடத்திற்குச் சென்று உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்து அதனை முடித்து இன்ன இன்ன இடத்திற்கு வந்துவிடு” எனக் கூறினார்கள்.16

(நபியவர்களின் மற்றொரு மனைவி யான) ஸஃபிய்யா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், “நானும் மக்களின் பயணத்தைத் தடுத்துவிட்டதாக உணர்கி றேன்” என்று சொன்னார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் “உன் கழுத்தறுந்து போக! உனக்குத் தொண்டை வலி வர! (காரியத்தைக் கெடுத்துவிட்டாயே!) துல்ஹஜ் பத்தாம் நாளில் நீ தவாஃப் செய்யவில்லையா?” என்று கேட்டார்கள். ஸஃபிய்யா ‘ஆம், செய்துவிட்டேன்’ என்றார். “பரவாயில்லை; புறப்படு!” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(தொடர்ந்து) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அதன் பிறகு என்னை நபி (ஸல்) அவர்கள் சந்தித்தபோது, அவர்கள் மக்காவிலிருந்து புறப்பட்டு ஒரு குன்றில் ஏறிக்கொண்டிருந்தார்கள். நான் குன்றிலிருந்து இறங்கிக்கொண்டிருந்தேன்; அல்லது அவர்கள் இறங்கிக்கொண்டிருந் தார்கள்; நான் ஏறிக்கொண்டிருந்தேன்.


அத்தியாயம் : 25
1562. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الأَسْوَدِ، مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ نَوْفَلٍ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّهَا قَالَتْ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَامَ حَجَّةِ الْوَدَاعِ، فَمِنَّا مَنْ أَهَلَّ بِعُمْرَةٍ، وَمِنَّا مَنْ أَهَلَّ بِحَجَّةٍ وَعُمْرَةٍ، وَمِنَّا مَنْ أَهَلَّ بِالْحَجِّ وَأَهَلَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِالْحَجِّ، فَأَمَّا مَنْ أَهَلَّ بِالْحَجِّ أَوْ جَمَعَ الْحَجَّ وَالْعُمْرَةَ لَمْ يَحِلُّوا حَتَّى كَانَ يَوْمُ النَّحْرِ.
பாடம் : 34 தமத்துஉ, கிரான், இஃப்ராத் ஆகிய ஹஜ்ஜின் வகைகளும் தம்முடன் குர்பானிப் பிராணி இல்லாதவர் ஹஜ்ஜை (உம்ராவாக) மாற்றிக்கொள்வதும்15
1562. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மேற்கொண்ட விடைபெறும் ஹஜ்ஜின் போது நாங்களும் அவர்களுடன் புறப்பட்டோம். எங்களில் சிலர் உம்ராவிற்காகவும் (தமத்துஉ), சிலர் ஹஜ் மற்றும் உம்ரா ஆகிய இரண்டிற்காகவும் (கிரான்), சிலர் ஹஜ்ஜுக்காக மட்டும் (இஃப்ராத்) இஹ்ராம் கட்டியிருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டியிருந்தார்கள்.

ஹஜ்ஜுக்காகவோ அல்லது ஹஜ்ஜுக் கும் உம்ராவிற்காகவும் சேர்த்தோ இஹ்ராம் கட்டியவர்கள் பிராணியைக் குர்பானி கொடுக்கும் (பத்தாம்) நாள் வரும்வரை இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை.


அத்தியாயம் : 25
1563. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنْ عَلِيِّ بْنِ حُسَيْنٍ، عَنْ مَرْوَانَ بْنِ الْحَكَمِ، قَالَ شَهِدْتُ عُثْمَانَ وَعَلِيًّا ـ رضى الله عنهما ـ وَعُثْمَانُ يَنْهَى عَنِ الْمُتْعَةِ وَأَنْ يُجْمَعَ بَيْنَهُمَا. فَلَمَّا رَأَى عَلِيٌّ، أَهَلَّ بِهِمَا لَبَّيْكَ بِعُمْرَةٍ وَحَجَّةٍ قَالَ مَا كُنْتُ لأَدَعَ سُنَّةَ النَّبِيِّ صلى الله عليه وسلم لِقَوْلِ أَحَدٍ.
பாடம் : 34 தமத்துஉ, கிரான், இஃப்ராத் ஆகிய ஹஜ்ஜின் வகைகளும் தம்முடன் குர்பானிப் பிராணி இல்லாதவர் ஹஜ்ஜை (உம்ராவாக) மாற்றிக்கொள்வதும்15
1563. மர்வான் பின் அல்ஹகம் அவர்கள் கூறியதாவது:

நான் உஸ்மான் (ரலி) அவர்களுடனும், அலீ (ரலி) அவர்களுடனும் ஹஜ் செய்துள்ளேன். உஸ்மான் (ரலி) அவர்கள் ‘தமத்துஉ’ முறை ஹஜ்ஜையும் (‘கிரான்’ முறையில்) உம்ரா மற்றும் ஹஜ் ஆகிய இரண்டையும் சேர்த்துச் செய்வதையும் தடுத்தார்கள். இதைக் கண்ட அலீ (ரலி) அவர்கள், ஹஜ், உம்ரா ஆகிய இரண்டிற் கும் இஹ்ராம் கட்டி “லப்பைக்க பி உம்ரத்தின் வ ஹஜ்ஜத்தின்” என்று கூறிவிட்டு, “நபி (ஸல்) அவர்களின் வழியை யாருடைய சொல்லிற்காகவும் நான் விட்டுவிடப்போவதில்லை” எனக் கூறினார்கள்.17


அத்தியாயம் : 25
1564. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا ابْنُ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ كَانُوا يَرَوْنَ أَنَّ الْعُمْرَةَ فِي أَشْهُرِ الْحَجِّ مِنْ أَفْجَرِ الْفُجُورِ فِي الأَرْضِ، وَيَجْعَلُونَ الْمُحَرَّمَ صَفَرًا وَيَقُولُونَ إِذَا بَرَأَ الدَّبَرْ، وَعَفَا الأَثَرْ، وَانْسَلَخَ صَفَرْ، حَلَّتِ الْعُمْرَةُ لِمَنِ اعْتَمَرْ. قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَأَصْحَابُهُ صَبِيحَةَ رَابِعَةٍ مُهِلِّينَ بِالْحَجِّ، فَأَمَرَهُمْ أَنْ يَجْعَلُوهَا عُمْرَةً فَتَعَاظَمَ ذَلِكَ عِنْدَهُمْ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ أَىُّ الْحِلِّ قَالَ "" حِلٌّ كُلُّهُ "".
பாடம் : 34 தமத்துஉ, கிரான், இஃப்ராத் ஆகிய ஹஜ்ஜின் வகைகளும் தம்முடன் குர்பானிப் பிராணி இல்லாதவர் ஹஜ்ஜை (உம்ராவாக) மாற்றிக்கொள்வதும்15
1564. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹஜ்ஜுடைய மாதங்களில் உம்ரா செய்வது பூமியில் நடக்கும் பாவங்களிலேயே மிகக் கொடிய பாவம் என (அறியாமைக் கால) மக்கள் கருதினர். (துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம் என மூன்று மாதங்கள், போர் செய்யத் தடை செய்யப்பட்ட புனித மாதங்களாகத் தொடர்ந்து வந்ததால்) முஹர்ரம் மாதத்திற்கான தடையை அவர்கள் ஸஃபருக்கு மாற்றினார்கள்.

(ஹஜ் பயணத்தில்) ஒட்டகங்களின் முதுகிலுள்ள சுமைகளின் வடு மறைந்து, காலடித் தடங்கள் அழிந்து, ஸஃபர் மாதமும் கடந்துவிட்டால் உம்ரா செய்பவர் உம்ரா செய்யலாம் என்றும் அவர்கள் கூறிவந்தனர். நபி (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் (துல்ஹஜ் மாதம்) நான்காம் நாள் காலை, ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டியவர்களாக (மக்கா நகருக்கு) வந்தபோது நபி (ஸல்) அவர்கள், மக்களின் இஹ்ராமை உம்ராவிற்குரியதாக மாற்றும்படி கட்டளையிட்டார்கள்.18

இது தோழர்களுக்கு மிகக் கடுமையானதாகத் தெரிந்தது. இதனால் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! (இவ்வாறு உம்ராவிற்குப் பிறகு) இஹ்ராமி லிருந்து விடுபடுவதால் எந்தச் செயல்கள் அனுமதிக்கப்படும்?” எனக் கேட்டனர். அதற்கு “(தடை செய்யப்படாத) அனைத்துச் செயல்களும் அனுமதிக்கப்படும்” என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.


அத்தியாயம் : 25
1565. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ قَالَ قَدِمْتُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم. فَأَمَرَهُ بِالْحِلِّ.
பாடம் : 34 தமத்துஉ, கிரான், இஃப்ராத் ஆகிய ஹஜ்ஜின் வகைகளும் தம்முடன் குர்பானிப் பிராணி இல்லாதவர் ஹஜ்ஜை (உம்ராவாக) மாற்றிக்கொள்வதும்15
1565. அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (ஹஜ்ஜின்போது) நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். (நான் குர்பானிப் பிராணி கொண்டுவராததால் உம்ராவை முடித்து) இஹ்ராமிலிருந்து விடுபடுமாறு அவர்கள் கட்டளையிட்டார்கள்.


அத்தியாயம் : 25