4958. حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ عَبْدِ الْكَرِيمِ الْجَزَرِيِّ، عَنْ عِكْرِمَةَ، قَالَ ابْنُ عَبَّاسٍ قَالَ أَبُو جَهْلٍ لَئِنْ رَأَيْتُ مُحَمَّدًا يُصَلِّي عِنْدَ الْكَعْبَةِ لأَطَأَنَّ عَلَى عُنُقِهِ. فَبَلَغَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ " لَوْ فَعَلَهُ لأَخَذَتْهُ الْمَلاَئِكَةُ ". تَابَعَهُ عَمْرُو بْنُ خَالِدٍ عَنْ عُبَيْدِ اللَّهِ عَنْ عَبْدِ الْكَرِيمِ.
பாடம்: 5 ‘‘அவ்வாறன்று! அவன் (இந்த நடத்தையிலிருந்து) விலகிக் கொள்ளவில்லையெனில், நிச்சய மாக, அவனது நெற்றி முடியைப் பற்றி இழுப்போம்; கடும் தவறி ழைத்த- பொய்யுரைத்த அந்த நெற்றியை!” எனும் (96:15,16 ஆகிய) இறைவசனங்கள்
4958. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘கஅபா’ அருகில் முஹம்மத் தொழுது கொண்டிருப்பதை நான் கண்டால் அவரது கழுத்தின் மீது நிச்சயமாக மிதிப்பேன் என்று அபூஜஹ்ல் சொன்னான். இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டிய போது, ‘‘அவன் மட்டும் அப்படிச் செய்தால், வானவர்கள் அவனைக் கடுமையாகப் பிடி(த்துத் தண்டி)ப்பார்கள்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 65
4959. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، سَمِعْتُ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لأُبَىٍّ. " إِنَّ اللَّهَ أَمَرَنِي أَنْ أَقْرَأَ عَلَيْكَ {لَمْ يَكُنِ الَّذِينَ كَفَرُوا} ". قَالَ وَسَمَّانِي قَالَ " نَعَمْ ". فَبَكَى.
பாடம்: 97. ‘அல்கத்ர்’ அத்தியாயம்1 (97:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மத்லஉ’ எனும் சொல்லுக்கு ‘உதயமாதல்’ என்று பொருள். (மற்றோர் ஓதல் முறையில் வந்துள்ள இதே சொல்லான) ‘மத்லிஉ’ என்பதற்கு ‘உதயமாகுமிடம்’ என்று பொருள். (97:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அன்ஸல்னாஹு’ என்பதிலுள்ள ‘ஹு’ எனும் பிரதிப்பெயர்ச் சொல், குர்ஆனையே சுட்டுகிறது. (குர்ஆனை) அருளியவன் அல்லாஹ் ஒருவனாயிருக்க (நான் இதை இறக்கி வைத்தேன் என்பதற்குப் பதிலாக) நாம் இ(ந்)த (குர்ஆ)னை இறக்கிவைத்தோம்’ என்று பன்மையாகக் குறிப்பிட்டதற்குக் காரணம், (பொதுவாக) அரபியர் ஒருமை வினையை வலியுறுத்த பன்மையைப் பயன்படுத்துவர். இதன் மூலம் அந்தச் சொல் ஊர்ஜிதம் செய்யப்பட்டதாக ஆகும். பாடம்: 98. ‘அல்பய்யினா’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) (98:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முன்ஃபக்கீன’ எனும் சொல்லுக்கு ‘விலகிக்கொள்வோர்’ என்பது பொருள். (98:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்கய்யிமா’ எனும் சொல்லுக்கு ‘நிலையானது’ என்பது பொருள். (98:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தீனுல் கய்யிமா’ (நிலையான மார்க்கம்) என்பதில், ‘தீன்’ எனும் (ஆண்பால்) சொல்லை ‘அல்கய்யிமா’ எனும் பெண்பால் சொல்லுடன் இறைவன் இணைத்துள்ளான். (‘தீன்’ எனும் ஆண்பால் சொல்லை ‘அல்மில்லத்’ (மார்க்கம்) எனும் பெண்பால் சொல்லாலும் அழைப்பதே காரணம்.) பாடம்: 1
4959. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம், ‘‘உங்களுக்கு ‘லம் யகுனில்லஃதீன கஃபரூ’ எனும் (98ஆவது) அத்தியாயத்தை ஓதிக்காட்டுமாறு அல்லாஹ் என்னைப் பணித்துள்ளான்” என்று சொன்னார்கள்.

உபை (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ் என் பெயரைக் குறிப்பிட்டா (அப்படிச்) சொன்னான்?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘ஆம்’ என்று பதிலளிக்க, (ஆனந்த மிகுதியால்) அப்போது உபை (ரலி) அவர்கள் அழுதுவிட்டார்கள்.2

அத்தியாயம் : 65
4960. حَدَّثَنَا حَسَّانُ بْنُ حَسَّانَ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لأُبَىٍّ " إِنَّ اللَّهَ أَمَرَنِي أَنْ أَقْرَأَ عَلَيْكَ الْقُرْآنَ ". قَالَ أُبَىٌّ آللَّهُ سَمَّانِي لَكَ قَالَ " اللَّهُ سَمَّاكَ لِي ". فَجَعَلَ أُبَىٌّ يَبْكِي. قَالَ قَتَادَةُ فَأُنْبِئْتُ أَنَّهُ قَرَأَ عَلَيْهِ {لَمْ يَكُنِ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ}
பாடம்: 2
4960. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம், ‘‘உங்களுக்கு குர்ஆனை ஓதிக்காட்டுமாறு அல்லாஹ் எனக்குக் கட்டளையிட்டுள்ளான்” என்று சொன்னார்கள். உபை (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ் என் பெயரைத் தங்களிடம் குறிப்பிட்டானா?” என்று கேட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘(ஆம்) அல்லாஹ் உங்கள் பெயரைக் குறிப்பிட்டான்” என்று சொன்னார்கள். (இதைக் கேட்ட) உபை (ரலி) அவர்கள், (ஆனந்த மேலீட்டால்) அழலானார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்கள், ‘‘உபை பின் கஅப் (ரலி) அவர்களுக்கு ‘லம் யகுனில்லஃதீன கஃபரூ’ எனும் (98ஆவது) அத்தியாயத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக்காட்டினார்கள் என எனக்குச் செய்தி எட்டியுள்ளது” என்றார்கள்.

அத்தியாயம் : 65
4961. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي دَاوُدَ أَبُو جَعْفَرٍ الْمُنَادِي، حَدَّثَنَا رَوْحٌ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لأُبَىِّ بْنِ كَعْبٍ " إِنَّ اللَّهَ أَمَرَنِي أَنْ أُقْرِئَكَ الْقُرْآنَ ". قَالَ آللَّهُ سَمَّانِي لَكَ قَالَ " نَعَمْ ". قَالَ وَقَدْ ذُكِرْتُ عِنْدَ رَبِّ الْعَالَمِينَ قَالَ " نَعَمْ ". فَذَرَفَتْ عَيْنَاهُ.
பாடம் : 3
4961. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம், ‘‘உங்களுக்கு நான் குர்ஆனை ஓதிக்காட்ட வேண்டுமென எனக்கு அல்லாஹ் உத்தரவிட்டுள்ளான்” என்று சொன்னார்கள். உபை (ரலி) அவர்கள், ‘‘என் பெயரை அல்லாஹ் தங்களிடம் குறிப்பிட்டானா?” என (பெருமிதத்துடன்) கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘ஆம்’ என்று சொன்னார்கள்.

(இதைக் கேட்ட) உபை (ரலி) அவர்கள், ‘‘அகிலத்தாரின் அதிபதியிடம் நான் பிரஸ்தாபிக்கப்பட்டேனா?” என்று (மீண்டும்) கேட்க, நபி (ஸல்) அவர்கள், ‘ஆம்’ என்று சொன்னார்கள். இதைக் கேட்ட (உபை) அவர்களின் கண்கள் (ஆனந்தத்தால்) கண்ணீரை உகுத்தன.

அத்தியாயம் : 65
4962. حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " الْخَيْلُ لِثَلاَثَةٍ، لِرَجُلٍ أَجْرٌ، وَلِرَجُلٍ سِتْرٌ، وَعَلَى رَجُلٍ وِزْرٌ، فَأَمَّا الَّذِي لَهُ أَجْرٌ فَرَجُلٌ رَبَطَهَا فِي سَبِيلِ اللَّهِ فَأَطَالَ لَهَا فِي مَرْجٍ أَوْ رَوْضَةٍ، فَمَا أَصَابَتْ فِي طِيَلِهَا ذَلِكَ فِي الْمَرْجِ وَالرَّوْضَةِ، كَانَ لَهُ حَسَنَاتٍ، وَلَوْ أَنَّهَا قَطَعَتْ طِيَلَهَا فَاسْتَنَّتْ شَرَفًا أَوْ شَرَفَيْنِ كَانَتْ آثَارُهَا وَأَرْوَاثُهَا حَسَنَاتٍ لَهُ، وَلَوْ أَنَّهَا مَرَّتْ بِنَهَرٍ فَشَرِبَتْ مِنْهُ وَلَمْ يُرِدْ أَنْ يَسْقِيَ بِهِ كَانَ ذَلِكَ حَسَنَاتٍ لَهُ فَهْىَ لِذَلِكَ الرَّجُلِ أَجْرٌ، وَرَجُلٌ رَبَطَهَا تَغَنِّيًا وَتَعَفُّفًا وَلَمْ يَنْسَ حَقَّ اللَّهِ فِي رِقَابِهَا وَلاَ ظُهُورِهَا فَهْىَ لَهُ سِتْرٌ، وَرَجُلٌ رَبَطَهَا فَخْرًا وَرِئَاءً وَنِوَاءً فَهْىَ عَلَى ذَلِكَ وِزْرٌ. فَسُئِلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْحُمُرِ. قَالَ " مَا أَنْزَلَ اللَّهُ عَلَىَّ فِيهَا إِلاَّ هَذِهِ الآيَةَ الْفَاذَّةَ الْجَامِعَةَ {فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ * وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ}
பாடம்: 99. ‘அஸ்ஸில்ஸால்’ அத்தியாயம்1 பாடம்: 1 ‘‘ஆகவே, யார் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர் (மறுமையில்) அதனையும் கண்டு கொள்வார்” எனும் (99:7ஆவது) இறைவசனம் (99:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அவ்ஹா லஹா’ (வஹீ மூலம் அதற்கு அறிவித்தான்) எனும் (சொல்லின் நான்கெழுத்து) வினைச்சொல்லும், ‘அவ்ஹா இலைஹா’ எனும் சொல்லும், (மூன்றெழுத்து வினைச்சொற்களான) ‘வஹா லஹா’, ‘வஹா இலைஹா’ ஆகியனவும் (பொருளில்) ஒன்றேயாகும்.
4962. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குதிரை (வைத்திருப்பது) மூன்று பேருக்கு (மூன்று வகையான விளைவுகளைத் தருவதாகும்). ஒரு மனிதருக்கு நற்பலன் பெற்றுத் தருவதாகும். மற்றொரு மனிதருக்கு (பொருளாதாரப்) பாதுகாப்பளிக்கக்கூடியதாகும். இன்னொரு மனிதருக்குப் பாவச் சுமையாகும்.

குதிரையை இறைவழியில் பயன்படுத்து வதற்காகப் பசுமையான ஒரு ‘வெட்ட வெளியில்’ அல்லது ‘தோட்டத்தில்’ ஒரு நீண்ட கயிற்றால் கட்டிவைத்துப் பராமரிக்கும் மனிதருக்கு அது (மறுமையில்) நற்பலனைப் பெற்றுத் தரும். அந்தக் குதிரை தன்(னைக் கட்டிவைத்திருக்கும்) கயிற்றின் நீளத்திற்கேற்ப எந்த அளவிற்கு ‘அந்தப் பசும் புல்வெளியில்’ அல்லது ‘அந்தத் தோட்டத்தில்’ மேயுமோ அந்த அளவுக்கு அவருக்கு நன்மைகள் கிடைக்கும்.

அது தன் கயிற்றைத் துண்டித்துக் கொண்டு ஓரிரு முறை குதித்து (அல்லது ஒன்றிரண்டு மேடுகளைக் கடந்து) சென்றால், அதன் பாதச் சுவடுகளும், கெட்டிச் சாணங்களும்கூட அவருக்கு நன்மைகளாக மாறும். அந்தக் குதிரை ஓர் ஆற்றைக் கடந்து செல்லும்போது, அதிலிருந்து தண்ணீர் குடித்தால் அதற்குத் தண்ணீர் புகட்டும் எண்ணம் (குதிரையின் உரிமையாளரான) அவருக்கு இல்லாமலிருந்தாலும் அதுவும் (அவர் புகட்டியதாகவே கருதப்பட்டு) அவருக்குரிய நன்மையாகவே ஆகும்.

இன்னொருவர் தம் தேவைகளை நிவர்த்தி செய்துகொள்ளவும் பிறரிடம் கையேந்துவதிலிருந்து தம்மைத் தற்காத்துக்கொள்ளவும் அதைக் கட்டிவை(த்துப் பராமரி)க்கின்றவர் ஆவார். மேலும், அதனுடைய பிடரியின் (அதாவது அதை விற்ற தொகையின் ஸகாத்தைச் செலுத்தும்) விஷயத்திலும் (அதனால் தாங்கவியலும் சுமையை மட்டுமே) அதன் முதுகின் (மீது தூக்கிவைக்கும்) விஷயத்திலும் அல்லாஹ்வின் கட்டளையை (நிறைவேற்ற) மறக்காதவர் ஆவார். இப்படிப்பட்டவருக்கு, (அவரது) இந்தக் குதிரை (வறுமையிலிருந்து அவரைக் காக்கும்) திரையாகும்.

மற்றொருவர் பெருமைக்காகவும் பகட்டுக்காகவும் (சன்மார்க்கத்தாருடன்) பகைமை பாராட்டுவதற்காகவும் அதனைக் கட்டிவை(த்துப் பராமரி)க்கின்றவர் ஆவார். அதன் காரணத்தால், அது அவருக்குப் பாவச்சுமையாக மாறிவிடுகின்றது.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கழுதைகள் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘அவற்றைக் குறித்து எந்தக் கட்டளையையும் அல்லாஹ் எனக்கு அருளவில்லை; ‘யார் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர் அத(ன் நற்பல)னைக் கண்டுகொள்வார். மேலும், யார் அணுவளவு தீமை புரிந்திருந்தாரோ அவரும் அத(ற்கான தண்ட)னை(யை)க் கண்டுகொள்வார்’ எனும் தனித்துவம் வாய்ந்த ஒருங்கிணைந்த இந்த (99:7,8) வசனங்களைத் தவிர” என்று சொன்னார்கள்.2

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.

அத்தியாயம் : 65
4963. حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي مَالِكٌ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رضى الله عنه سُئِلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَنِ الْحُمُرِ فَقَالَ " لَمْ يُنْزَلْ عَلَىَّ فِيهَا شَىْءٌ إِلاَّ هَذِهِ الآيَةُ الْجَامِعَةُ الْفَاذَّةُ {فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ * وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ}".
பாடம்: 2 யார் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தாரோ அவர் அதையும் கண்டுகொள்வார் (எனும் 99:8ஆவது இறைவசனம்)
4963. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் கழுதைகள் குறித்து வினவப்பட்டது. அப்போது அவர்கள், ‘‘இவை குறித்து எனக்கு இந்தத் தனித்துவம் வாய்ந்த ஒருங்கிணைந்த வசனத்தைத் தவிர வேறெதுவும் அருளப்படவில்லை” என்று கூறிவிட்டு, ‘யார் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர் அத(ன் நற்பல)னைக் கண்டுகொள்வார். மேலும், யார் அணுவளவு தீமை புரிந்திருந்தாரோ அவரும் அத(ற்கான தண்ட)னை(யை)க் கண்டுகொள்வார்’ எனும் (99:7,8) இறை வசனங்களை ஓதிக்காட்டினார்கள்.

அத்தியாயம் : 65
4964. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شَيْبَانُ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا عُرِجَ بِالنَّبِيِّ صلى الله عليه وسلم إِلَى السَّمَاءِ قَالَ " أَتَيْتُ عَلَى نَهَرٍ حَافَتَاهُ قِبَابُ اللُّؤْلُؤِ مُجَوَّفًا فَقُلْتُ مَا هَذَا يَا جِبْرِيلُ قَالَ هَذَا الْكَوْثَرُ ".
பாடம்: 100. ‘அல்ஆதியாத்’ அத்தியாயம்1 முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (100:6ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கநூத்’ எனும் சொல்லுக்கு ‘நன்றி கெட்டவன்’ என்பது பொருள். (100:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபஅஸர்ன பிஹி நக்ஆ’ எனும் வாக்கியத்திற்கு ‘அதனால் புழுதியைக் கிளப்புகின்றவற்றின் மீது சத்தியமாக’ என்று பொருள் எனக் கூறப்படுகிறது. (100:8ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லி ஹுப்பில் கைரி ல ஷதீத்’ என்பதன் பொருளாவது: செல்வத்தை அவன் நேசிப்பதன் காரணத்தால் கருமியாக இருக்கிறான். கருமிக்கு ‘ஷதீத்’ எனச் சொல்லப்படுவதுண்டு. (100:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஹுஸ்ஸில’ எனும் சொல்லுக்கு ‘பகுத்து ஆயப்படும்’ என்று பொருள். பாடம்: 101. ‘அல்காரிஆ’ அத்தியாயம்1ஆ (101:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கல்ஃபராஷில் மப்ஸƒஸ்’ எனும் தொடருக்கு ‘‘ஒன்றன் மீது ஒன்றாக வீழ்ந்துபோகும் திக்குத் தெரியாத வெட்டுக்கிளிகள் போல், (அந்நாளில்) மனிதர்கள் ஒருவரை ஒருவர் சுற்றி வருவர்” என்று பொருள். (101:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கல்இஹ்ன்’ எனும் சொல்லுக்கு ‘பல்வேறு நிறங்களைக் கொண்ட பஞ்சுகள்போல’ என்று பொருள். (இந்த வசனத்தில்) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், (‘கல்இஹ்ன்’ எனுமிடத்தில்) ‘கஸ்ஸூஃப்’ (கம்பளியைப் போல) என்று ஓதியுள்ளார்கள். பாடம்: 102. ‘அத்தகாஸுர்’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (102:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அத்தகாஸுர்’ எனும் சொல்லுக்கு ‘வசதி வாய்ப்புகளையும் குழந்தை குட்டிகளையும் கூடுதலாகப் பெற வேண்டுமென்ற ஆசை’ என்று பொருள். பாடம்: 103. ‘அல்அஸ்ர்’ அத்தியாயம்1 யஹ்யா பின் ஸியாத் அல்ஃபர்ராஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:2 (103:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வல்அஸ்ரி’ எனும் சொல்லில், இறைவன் காலத்தின் மீது சத்தியமிட்டுக் கூறுகின்றான். பாடம்: 104. ‘அல்ஹுமஸா’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) (104:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்ஹுத்தமா’ என்பது, ‘சகர்’, ‘லழா’ ஆகியன போன்று நரகத்தின் பெயராகும். பாடம்: 105. ‘அல்ஃபீல்’ அத்தியாயம்1 முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (105:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அலம் தர’ எனும் சொற்றொடருக்கு, ‘நீர் அறியவில்லையா?’ என்பது பொருள். (105:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அபாபீல்’ எனும் சொல்லுக்கு ‘சாரை சாரையாக கூட்டங்கூட்டமாக’ என்று பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (105:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘சிஜ்ஜீல்’ எனும் சொல், ‘சன்கி கில்’ எனும் (பாரசீகச்) சொல்லின் மருவலாகும். (பொருள்: களிமண் கற்கள்.) பாடம்: 106. ‘குறைஷ்’ அத்தியாயம்1 முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (106:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லி ஈலாஃபி குறைஷ்’ (குறைஷியரைப் பழக்கப்படுத்துவதற்காக) என்பதன் கருத்தாவது: கோடை காலத்திலும் குளிர் காலத்திலும் (வணிகப்) பயணம் மேற்கொள்வதைக் குறைஷியர் பழக்கப்படுத்திக்கொண்டனர். ஆகவே, அது அவர்களுக்குச் சிரமம் அளிக்கவில்லை. (106:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஆமனஹும்’ (அவர்களுக்கு அபயமளித்தான்) எனும் சொல்லுக்கு புனித (ஹரம்) எல்லையில் எல்லா எதிரிகளின் அச்சத்திலிருந்தும் அவர்களுக்கு அபயமளித்தான்’ என்று பொருள். சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (106:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லி ஈலாஃபி குறைஷ்’ எனும் சொற்றொடருக்கு ‘குறைஷியருக்கு நான் அருள் புரிந்ததற்காக’ என்று பொருள். பாடம்: 107. ‘அல்மாஊன்’ அத்தியாயம்1 முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (107:2ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யதுஃஉ’ எனும் சொல்லுக்கு ‘அவர்களின் உரிமையைத் தருவதில்லை’ என்று பொருள். இச்சொல் ‘தஅஉத்து (நான் மறுத்தேன்) எனும் (வினைச்)சொல்லிலிருந்து வந்ததாகும். (52:13ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யுதஃஊன எனும் சொல்லுக்கு ‘விரட்டியடிக்கப்படுவர்’ என்று பொருள். (107:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘சாஹூன்’ எனும் சொல்லுக்கு ‘(அலட்சியத்தால்) பாழாக்குபவர்கள்’ என்று பொருள். (107:7ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்மாஊன்’ எனும் சொல், நல்ல காரியங்கள் அனைத்தையும் குறிக்கும். அரபியரில் சிலர் ‘மாஊன்’ என்பதற்கு ‘தண்ணீர்’ என்று பொருள் எனக் கூறுகின்றனர். இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: மாஊனில் உயர்ந்தது கடமையாக்கப்பட்ட ‘ஸகாத்’ ஆகும். அதில் மிகத் தாழ்ந்தது இரவல் (வழங்கப்படும் ஊசி போன்ற சிறு) பொருட்கள் ஆகும். பாடம்: 108. ‘அல்கவ்ஸர்’ அத்தியாயம்1ஆ பாடம்: 1 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (108:3ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) ‘ஷானிஅக்க’ எனும் சொல்லுக்கு ‘உம்முடைய பகைவன்’ என்பது பொருள்.
4964. தாம் அழைத்துச் செல்லப்பட்ட விண்ணுலகப் பயணம் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் ஓர் ஆற்றின் அருகே சென்றேன். அதன் இருமருங்கிலும் துளையுள்ள முத்துக் கலசங்கள் காணப்பட்டன. அப்போது நான், ‘‘ஜிப்ரீலே, இது என்ன?” என்று கேட்டேன்.

‘‘இது அல்கவ்ஸர்” என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் பதிலளித்தார்கள்.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 65
4965. حَدَّثَنَا خَالِدُ بْنُ يَزِيدَ الْكَاهِلِيُّ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي عُبَيْدَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَ سَأَلْتُهَا عَنْ قَوْلِهِ تَعَالَى {إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ} قَالَتْ نَهَرٌ أُعْطِيَهُ نَبِيُّكُمْ صلى الله عليه وسلم شَاطِئَاهُ عَلَيْهِ دُرٌّ مُجَوَّفٌ آنِيَتُهُ كَعَدَدِ النُّجُومِ. رَوَاهُ زَكَرِيَّاءُ وَأَبُو الأَحْوَصِ وَمُطَرِّفٌ عَنْ أَبِي إِسْحَاقَ.
பாடம்: 100. ‘அல்ஆதியாத்’ அத்தியாயம்1 முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (100:6ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கநூத்’ எனும் சொல்லுக்கு ‘நன்றி கெட்டவன்’ என்பது பொருள். (100:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபஅஸர்ன பிஹி நக்ஆ’ எனும் வாக்கியத்திற்கு ‘அதனால் புழுதியைக் கிளப்புகின்றவற்றின் மீது சத்தியமாக’ என்று பொருள் எனக் கூறப்படுகிறது. (100:8ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லி ஹுப்பில் கைரி ல ஷதீத்’ என்பதன் பொருளாவது: செல்வத்தை அவன் நேசிப்பதன் காரணத்தால் கருமியாக இருக்கிறான். கருமிக்கு ‘ஷதீத்’ எனச் சொல்லப்படுவதுண்டு. (100:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஹுஸ்ஸில’ எனும் சொல்லுக்கு ‘பகுத்து ஆயப்படும்’ என்று பொருள். பாடம்: 101. ‘அல்காரிஆ’ அத்தியாயம்1ஆ (101:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கல்ஃபராஷில் மப்ஸƒஸ்’ எனும் தொடருக்கு ‘‘ஒன்றன் மீது ஒன்றாக வீழ்ந்துபோகும் திக்குத் தெரியாத வெட்டுக்கிளிகள் போல், (அந்நாளில்) மனிதர்கள் ஒருவரை ஒருவர் சுற்றி வருவர்” என்று பொருள். (101:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கல்இஹ்ன்’ எனும் சொல்லுக்கு ‘பல்வேறு நிறங்களைக் கொண்ட பஞ்சுகள்போல’ என்று பொருள். (இந்த வசனத்தில்) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், (‘கல்இஹ்ன்’ எனுமிடத்தில்) ‘கஸ்ஸூஃப்’ (கம்பளியைப் போல) என்று ஓதியுள்ளார்கள். பாடம்: 102. ‘அத்தகாஸுர்’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (102:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அத்தகாஸுர்’ எனும் சொல்லுக்கு ‘வசதி வாய்ப்புகளையும் குழந்தை குட்டிகளையும் கூடுதலாகப் பெற வேண்டுமென்ற ஆசை’ என்று பொருள். பாடம்: 103. ‘அல்அஸ்ர்’ அத்தியாயம்1 யஹ்யா பின் ஸியாத் அல்ஃபர்ராஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:2 (103:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வல்அஸ்ரி’ எனும் சொல்லில், இறைவன் காலத்தின் மீது சத்தியமிட்டுக் கூறுகின்றான். பாடம்: 104. ‘அல்ஹுமஸா’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) (104:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்ஹுத்தமா’ என்பது, ‘சகர்’, ‘லழா’ ஆகியன போன்று நரகத்தின் பெயராகும். பாடம்: 105. ‘அல்ஃபீல்’ அத்தியாயம்1 முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (105:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அலம் தர’ எனும் சொற்றொடருக்கு, ‘நீர் அறியவில்லையா?’ என்பது பொருள். (105:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அபாபீல்’ எனும் சொல்லுக்கு ‘சாரை சாரையாக கூட்டங்கூட்டமாக’ என்று பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (105:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘சிஜ்ஜீல்’ எனும் சொல், ‘சன்கி கில்’ எனும் (பாரசீகச்) சொல்லின் மருவலாகும். (பொருள்: களிமண் கற்கள்.) பாடம்: 106. ‘குறைஷ்’ அத்தியாயம்1 முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (106:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லி ஈலாஃபி குறைஷ்’ (குறைஷியரைப் பழக்கப்படுத்துவதற்காக) என்பதன் கருத்தாவது: கோடை காலத்திலும் குளிர் காலத்திலும் (வணிகப்) பயணம் மேற்கொள்வதைக் குறைஷியர் பழக்கப்படுத்திக்கொண்டனர். ஆகவே, அது அவர்களுக்குச் சிரமம் அளிக்கவில்லை. (106:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஆமனஹும்’ (அவர்களுக்கு அபயமளித்தான்) எனும் சொல்லுக்கு புனித (ஹரம்) எல்லையில் எல்லா எதிரிகளின் அச்சத்திலிருந்தும் அவர்களுக்கு அபயமளித்தான்’ என்று பொருள். சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (106:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லி ஈலாஃபி குறைஷ்’ எனும் சொற்றொடருக்கு ‘குறைஷியருக்கு நான் அருள் புரிந்ததற்காக’ என்று பொருள். பாடம்: 107. ‘அல்மாஊன்’ அத்தியாயம்1 முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (107:2ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யதுஃஉ’ எனும் சொல்லுக்கு ‘அவர்களின் உரிமையைத் தருவதில்லை’ என்று பொருள். இச்சொல் ‘தஅஉத்து (நான் மறுத்தேன்) எனும் (வினைச்)சொல்லிலிருந்து வந்ததாகும். (52:13ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யுதஃஊன எனும் சொல்லுக்கு ‘விரட்டியடிக்கப்படுவர்’ என்று பொருள். (107:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘சாஹூன்’ எனும் சொல்லுக்கு ‘(அலட்சியத்தால்) பாழாக்குபவர்கள்’ என்று பொருள். (107:7ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்மாஊன்’ எனும் சொல், நல்ல காரியங்கள் அனைத்தையும் குறிக்கும். அரபியரில் சிலர் ‘மாஊன்’ என்பதற்கு ‘தண்ணீர்’ என்று பொருள் எனக் கூறுகின்றனர். இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: மாஊனில் உயர்ந்தது கடமையாக்கப்பட்ட ‘ஸகாத்’ ஆகும். அதில் மிகத் தாழ்ந்தது இரவல் (வழங்கப்படும் ஊசி போன்ற சிறு) பொருட்கள் ஆகும். பாடம்: 108. ‘அல்கவ்ஸர்’ அத்தியாயம்1ஆ பாடம்: 1 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (108:3ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) ‘ஷானிஅக்க’ எனும் சொல்லுக்கு ‘உம்முடைய பகைவன்’ என்பது பொருள்.
4965. அபூஉபைதா ஆமிர் பின் அப்தில்லாஹ் பின் மஸ்ஊத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், ‘‘(நபியே!) நாம் உங்களுக்கு ‘அல்கவ்ஸரை’ அருளினோம்” எனும் (108:1ஆவது) இறைவசனம் தொடர்பாகக் கேட்டேன். அவர்கள், ‘‘(அது சொர்க்க) நதியாகும். அது உங்கள் நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. அதன் இருமருங்கிலும் துளையுள்ள முத்துகள் உள்ளன. அதன் பாத்திரங்கள் விண்மீன்களின் எண்ணிக்கை போன்று (எண்ணற்றதாய்) இருக்கும்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 65
4966. حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هُشَيْمٌ، حَدَّثَنَا أَبُو بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّهُ قَالَ فِي الْكَوْثَرِ هُوَ الْخَيْرُ الَّذِي أَعْطَاهُ اللَّهُ إِيَّاهُ. قَالَ أَبُو بِشْرٍ قُلْتُ لِسَعِيدِ بْنِ جُبَيْرٍ فَإِنَّ النَّاسَ يَزْعُمُونَ أَنَّهُ نَهَرٌ فِي الْجَنَّةِ. فَقَالَ سَعِيدٌ النَّهَرُ الَّذِي فِي الْجَنَّةِ مِنَ الْخَيْرِ الَّذِي أَعْطَاهُ اللَّهُ إِيَّاهُ.
பாடம்: 100. ‘அல்ஆதியாத்’ அத்தியாயம்1 முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (100:6ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கநூத்’ எனும் சொல்லுக்கு ‘நன்றி கெட்டவன்’ என்பது பொருள். (100:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபஅஸர்ன பிஹி நக்ஆ’ எனும் வாக்கியத்திற்கு ‘அதனால் புழுதியைக் கிளப்புகின்றவற்றின் மீது சத்தியமாக’ என்று பொருள் எனக் கூறப்படுகிறது. (100:8ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லி ஹுப்பில் கைரி ல ஷதீத்’ என்பதன் பொருளாவது: செல்வத்தை அவன் நேசிப்பதன் காரணத்தால் கருமியாக இருக்கிறான். கருமிக்கு ‘ஷதீத்’ எனச் சொல்லப்படுவதுண்டு. (100:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஹுஸ்ஸில’ எனும் சொல்லுக்கு ‘பகுத்து ஆயப்படும்’ என்று பொருள். பாடம்: 101. ‘அல்காரிஆ’ அத்தியாயம்1ஆ (101:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கல்ஃபராஷில் மப்ஸƒஸ்’ எனும் தொடருக்கு ‘‘ஒன்றன் மீது ஒன்றாக வீழ்ந்துபோகும் திக்குத் தெரியாத வெட்டுக்கிளிகள் போல், (அந்நாளில்) மனிதர்கள் ஒருவரை ஒருவர் சுற்றி வருவர்” என்று பொருள். (101:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கல்இஹ்ன்’ எனும் சொல்லுக்கு ‘பல்வேறு நிறங்களைக் கொண்ட பஞ்சுகள்போல’ என்று பொருள். (இந்த வசனத்தில்) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், (‘கல்இஹ்ன்’ எனுமிடத்தில்) ‘கஸ்ஸூஃப்’ (கம்பளியைப் போல) என்று ஓதியுள்ளார்கள். பாடம்: 102. ‘அத்தகாஸுர்’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (102:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அத்தகாஸுர்’ எனும் சொல்லுக்கு ‘வசதி வாய்ப்புகளையும் குழந்தை குட்டிகளையும் கூடுதலாகப் பெற வேண்டுமென்ற ஆசை’ என்று பொருள். பாடம்: 103. ‘அல்அஸ்ர்’ அத்தியாயம்1 யஹ்யா பின் ஸியாத் அல்ஃபர்ராஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:2 (103:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வல்அஸ்ரி’ எனும் சொல்லில், இறைவன் காலத்தின் மீது சத்தியமிட்டுக் கூறுகின்றான். பாடம்: 104. ‘அல்ஹுமஸா’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) (104:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்ஹுத்தமா’ என்பது, ‘சகர்’, ‘லழா’ ஆகியன போன்று நரகத்தின் பெயராகும். பாடம்: 105. ‘அல்ஃபீல்’ அத்தியாயம்1 முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (105:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அலம் தர’ எனும் சொற்றொடருக்கு, ‘நீர் அறியவில்லையா?’ என்பது பொருள். (105:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அபாபீல்’ எனும் சொல்லுக்கு ‘சாரை சாரையாக கூட்டங்கூட்டமாக’ என்று பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (105:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘சிஜ்ஜீல்’ எனும் சொல், ‘சன்கி கில்’ எனும் (பாரசீகச்) சொல்லின் மருவலாகும். (பொருள்: களிமண் கற்கள்.) பாடம்: 106. ‘குறைஷ்’ அத்தியாயம்1 முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (106:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லி ஈலாஃபி குறைஷ்’ (குறைஷியரைப் பழக்கப்படுத்துவதற்காக) என்பதன் கருத்தாவது: கோடை காலத்திலும் குளிர் காலத்திலும் (வணிகப்) பயணம் மேற்கொள்வதைக் குறைஷியர் பழக்கப்படுத்திக்கொண்டனர். ஆகவே, அது அவர்களுக்குச் சிரமம் அளிக்கவில்லை. (106:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஆமனஹும்’ (அவர்களுக்கு அபயமளித்தான்) எனும் சொல்லுக்கு புனித (ஹரம்) எல்லையில் எல்லா எதிரிகளின் அச்சத்திலிருந்தும் அவர்களுக்கு அபயமளித்தான்’ என்று பொருள். சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (106:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லி ஈலாஃபி குறைஷ்’ எனும் சொற்றொடருக்கு ‘குறைஷியருக்கு நான் அருள் புரிந்ததற்காக’ என்று பொருள். பாடம்: 107. ‘அல்மாஊன்’ அத்தியாயம்1 முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (107:2ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யதுஃஉ’ எனும் சொல்லுக்கு ‘அவர்களின் உரிமையைத் தருவதில்லை’ என்று பொருள். இச்சொல் ‘தஅஉத்து (நான் மறுத்தேன்) எனும் (வினைச்)சொல்லிலிருந்து வந்ததாகும். (52:13ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யுதஃஊன எனும் சொல்லுக்கு ‘விரட்டியடிக்கப்படுவர்’ என்று பொருள். (107:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘சாஹூன்’ எனும் சொல்லுக்கு ‘(அலட்சியத்தால்) பாழாக்குபவர்கள்’ என்று பொருள். (107:7ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்மாஊன்’ எனும் சொல், நல்ல காரியங்கள் அனைத்தையும் குறிக்கும். அரபியரில் சிலர் ‘மாஊன்’ என்பதற்கு ‘தண்ணீர்’ என்று பொருள் எனக் கூறுகின்றனர். இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: மாஊனில் உயர்ந்தது கடமையாக்கப்பட்ட ‘ஸகாத்’ ஆகும். அதில் மிகத் தாழ்ந்தது இரவல் (வழங்கப்படும் ஊசி போன்ற சிறு) பொருட்கள் ஆகும். பாடம்: 108. ‘அல்கவ்ஸர்’ அத்தியாயம்1ஆ பாடம்: 1 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (108:3ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) ‘ஷானிஅக்க’ எனும் சொல்லுக்கு ‘உம்முடைய பகைவன்’ என்பது பொருள்.
4966. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(108:1ஆவது வசனத்தில் இடம்பெற் றுள்ள) ‘அல்கவ்ஸர்’ தொடர்பாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகையில், ‘‘அது நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியுள்ள (அனைத்து) நன்மைகளாகும்” எனத் தெரிவித்தார்கள்.

(அறிவிப்பாளர்களில், ஒருவரான) அபூபிஷ்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்:

நான் சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களிடம், ‘‘மக்கள் ‘அல்கவ்ஸர்’ என்பது சொர்க்கத்திலுள்ள நதி என்று கூறுகின்றனரே?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அருளிய (அளவற்ற) நன்மைகளில் சொர்க்கத்திலுள்ள அந்த நதியும் அடங்கும்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 65
4967. حَدَّثَنَا الْحَسَنُ بْنُ الرَّبِيعِ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ مَا صَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم صَلاَةً بَعْدَ أَنْ نَزَلَتْ عَلَيْهِ {إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ} إِلاَّ يَقُولُ فِيهَا " سُبْحَانَكَ رَبَّنَا وَبِحَمْدِكَ، اللَّهُمَّ اغْفِرْ لِي ".
பாடம்: 109. ‘அல்காஃபிரூன்’ அத்தியாயம்1 (109:6ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லக்கும் தீனுக்கும்’ (உங்களுடைய மதம் உங்களுக்கு) என்பதன் கருத்தாவது: இறைமறுப்பு உங்களுக்கு. ‘வலிய தீன்’ (எனது மார்க்கம் எனக்கு) என்பதன் கருத்தாவது: இஸ்லாம் எனக்கு. இதில், ‘எனது மார்க்கம்’ என்று குறிப்பிட, ‘தீனீ’ என்று (தன்னிலைப் பிரதிப் பெயர்ச்சொல்லுடன் இணைத்து) அல்லாஹ் கூறவில்லை. காரணம், இந்த (அத்தியாயத்திலுள்ள) எல்லா வசனங்களும் ‘னகர’ ஒலியுடன் (நூனில்) முற்றுப்பெற்றுள்ளன. எனவேதான் (‘தீனீ’ என்பதிலுள்ள) யகரம் நீக்கப்பட்டது. அல்லாஹ், (‘யஹ்தீனீ’ என்பதற்குப் பதிலாக) ‘யஹ்தீன்’ என்றும் (‘யஷ்ஃபீனீ’ என்பதற்குப் பதிலாக) ‘யஷ்ஃபீன்’ என்றும் கூறியிருப்பதைப் போல. (காண்க: குர்ஆன் மூலம்: 26:78,80) மற்றவர்கள் கூறுகிறார்கள்: (109:2ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லா அஉபுது மா தஉபுதூன்’ என்பதற்கு ‘நீங்கள் வழிபட்டுக்கொண்டிருப்பவற்றை தற்போதும் நான் வழிபடமாட்டேன்; என் ஆயுளில் எஞ்சிய நாட்களிலும் அதற்கு இணங்கமாட்டேன்’ என்பது பொருள். ‘நான் வழிபடுபவனை நீங்களும் வழிபடுபவர்கள் அல்லர்’ எனும் (109:5ஆவது) வசனத்தில் குறிப்பிடப்பட்டிருப்போர் தொடர்பாகவே இறைவன் பின்வருமாறு கூறுகின்றான்: உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பெற்ற (இவ்வேதமான)துஅவர்களில் பெரும்பாலோருக்கு அட்டூழியத்தையும் இறைமறுப்பையும் நிச்சயமாக அதிகப்படுத்திவருகிறது. ஆகவே, இறைமறுப்பாளர்களான இம்மக்களுக்காக நீர் கவலை கொள்ளாதீர். (5:68) பாடம்: 110. ‘அந்நஸ்ர்’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) பாடம் : 1
4967. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘(நபியே! உமக்கு) அல்லாஹ்வின் உதவியும், (அவன் அளிக்கும்) வெற்றி யும் கிடைத்து...” எனும் (110ஆவது) அத்தியாயம் தமக்கு அருளப்பட்ட பின்னர் ‘சுப்ஹானக்க ரப்பனா வபி ஹம்திக்க, அல்லாஹும்மஃக்பிர் லீ’ (எங்கள் இறைவா! நீ தூயவன்; உன்னைப் போற்றுகின்றோம்; இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக!) என்று தொழுகையில் கூறாமல் எந்தவொரு தொழுகையையும் நபி (ஸல்) அவர்கள் தொழுததில்லை.

அத்தியாயம் : 65
4968. حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُكْثِرُ أَنْ يَقُولَ فِي رُكُوعِهِ وَسُجُودِهِ " سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ، اللَّهُمَّ اغْفِرْ لِي ". يَتَأَوَّلُ الْقُرْآنَ.
பாடம்: 2
4968. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குர்ஆனின் (110ஆவது அத்தியாயத்தின்) கட்டளையைச் செயல்படுத்தும் முகமாக, தமது (தொழுகையின்) ருகூஉவிலும் சஜ்தாவிலும் அதிகமாக ‘சுப்ஹானக்க ரப்பனா வபி ஹம்திக்க, அல்லாஹும் மஃக்பிர் லீ’ (எங்கள் இறைவா! நீ தூயவன்; உன்னைப் போற்றுகின்றோம்; இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக!) என்று கூறிவந்தார்கள்.2

அத்தியாயம் : 65
4969. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، عَنْ سُفْيَانَ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ عُمَرَ ـ رضى الله عنه ـ سَأَلَهُمْ عَنْ قَوْلِهِ تَعَالَى {إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ} قَالُوا فَتْحُ الْمَدَائِنِ وَالْقُصُورِ قَالَ مَا تَقُولُ يَا ابْنَ عَبَّاسٍ قَالَ أَجَلٌ أَوْ مَثَلٌ ضُرِبَ لِمُحَمَّدٍ صلى الله عليه وسلم نُعِيَتْ لَهُ نَفْسُهُ.
பாடம்: 3 மேலும், (நபியே!) அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது (எனும் 110:2ஆவது இறை வசனம்)
4969. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது.:

உமர் (ரலி) அவர்கள், ‘‘(நபியே! உமக்கு) அல்லாஹ்வின் உதவியும், (அவன் அளிக்கும்) வெற்றியும் கிடைத்து...” எனும் (110ஆவது) அத்தியாயம் குறித்து (பத்ர் போரில் கலந்துகொண்ட) நண்பர் களிடம் கேட்டார்கள். நண்பர்கள், ‘‘பல நாடுகளையும் கோட்டைகளையும் வெற்றி கொள்வது (குறித்துத்தான் இந்த வசனம் முன்னறிவிப்புச் செய்கிறது)” என்று கூறினர். ‘‘இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களே! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று உமர் (ரலி) அவர்கள் (என்னிடம்) கேட்டார்கள்.

‘‘(இது,) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது ஆயுட்காலம், அல்லது ஓர் உதாரணமாகும். (இதன் மூலம்) அவர்களது இறப்புச் செய்தி முன்னறிவிப்புச் செய்யப்பட்டுள்ளது” என்று (விளக்கம்) கூறினேன்.3

அத்தியாயம் : 65
4970. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كَانَ عُمَرُ يُدْخِلُنِي مَعَ أَشْيَاخِ بَدْرٍ، فَكَأَنَّ بَعْضَهُمْ وَجَدَ فِي نَفْسِهِ فَقَالَ لِمَ تُدْخِلُ هَذَا مَعَنَا وَلَنَا أَبْنَاءٌ مِثْلُهُ فَقَالَ عُمَرُ إِنَّهُ مِنْ حَيْثُ عَلِمْتُمْ. فَدَعَا ذَاتَ يَوْمٍ ـ فَأَدْخَلَهُ مَعَهُمْ ـ فَمَا رُئِيتُ أَنَّهُ دَعَانِي يَوْمَئِذٍ إِلاَّ لِيُرِيَهُمْ. قَالَ مَا تَقُولُونَ فِي قَوْلِ اللَّهِ تَعَالَى {إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ} فَقَالَ بَعْضُهُمْ أُمِرْنَا نَحْمَدُ اللَّهَ وَنَسْتَغْفِرُهُ، إِذَا نُصِرْنَا وَفُتِحَ عَلَيْنَا. وَسَكَتَ بَعْضُهُمْ فَلَمْ يَقُلْ شَيْئًا فَقَالَ لِي أَكَذَاكَ تَقُولُ يَا ابْنَ عَبَّاسٍ فَقُلْتُ لاَ. قَالَ فَمَا تَقُولُ قُلْتُ هُوَ أَجَلُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَعْلَمَهُ لَهُ، قَالَ {إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ} وَذَلِكَ عَلاَمَةُ أَجَلِكَ {فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا}. فَقَالَ عُمَرُ مَا أَعْلَمُ مِنْهَا إِلاَّ مَا تَقُولُ.
பாடம்: 4 ‘‘உம்முடைய இறைவனைப் புகழ்ந்துகொண்டு அவனைத் துதிப்பீராக! மேலும், அவனிடம் பாவமன்னிப்புக் கோருவீராக! நிச்சயமாக அவன் பாவமன்னிப் பைப் பெரிதும் ஏற்பவனாக இருக் கின்றான்” எனும் (110:3ஆவது) இறைவசனம் (இவ்வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தவ்வாப்’ எனும் சொல்லுக்கு, ‘அடியார் களின் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்பவன்’ என்பது பொருள். மக்களில் பாவமன்னிப்புக் கோருபவருக்கும் ‘தவ்வாப்’ என்று கூறப்படுவது உண்டு.
4970. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்கள் பத்ர் போரில் கலந்துகொண்ட புண்ணியவான்களுடன் எனக்கும் (தம் அவையில்) இடமளித்து வந்தார்கள். ஆகவே, அவர்களில் சிலர் வருத்தமடைந்து, ‘‘எங்களுக்கு இவரைப் போன்ற (வயதில்) பிள்ளைகள் இருக்க, இவரை எங்களுடன் ஏன் அமரச் செய்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், ‘‘அவர் நீங்கள் அறிந்துள்ள வகையில் (அருமை பெருமைகள் உடையவராக) இருக்கிறார் என்பதால்தான்” என்றார்கள்.

பின்னர் ஒருநாள் (எங்களை) உமர் (ரலி) அவர்கள் (தமது அவைக்கு) அழைத்தார்கள். அப்போதும் என்னை அவர்களுடன் அமரச் செய்தார்கள். அவர்களுக்கு (என் தகுதியை உணர்த்திக்) காட்டுவதற்காகவே அன்று என்னை அழைத்தார்கள் என்றே கருதினேன்.

(எனவே, அனைவரும் வந்ததும் அவர்களிடம்) உமர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்துவிட்டால்...” எனும் (110:1ஆவது) இறைவசனம் குறித்து நீங்கள் என்ன (விளக்கம்) கூறுகிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அவர்களில் சிலர், ‘‘நமக்கு உதவியும் வெற்றியும் அளிக்கப்படும்போது அல்லாஹ்வைப் புகழும்படியும் அவனிடம் பாவமன்னிப்புக் கோரும்படியும் நாம் பணிக்கப்பட்டுள்ளோம்” என்று (அவ்வசனத்திற்கு விளக்கம்) கூறினர். அவர்களில் இன்னும் சிலர் ஏதும் சொல்லாமல் அமைதியாயிருந்தனர்.

அப்போது உமர் (ரலி) அவர்கள் என்னிடம், ‘‘இப்னு அப்பாஸே! நீங்களும் இவ்வாறுதான் கூறுகிறீர்களா?” எனக் கேட்டார்கள். நான், ‘இல்லை’ என்றேன். ‘‘அவ்வாறாயின், நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்?” என்று கேட்டார்கள். நான், ‘‘அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அவர்களது ஆயுட்காலம் (முடிந்துவிட்டதைக்) குறித்து (முன்)அறிவிப்புச் செய்ததாகும். ‘இறைவனின் உதவியும் வெற்றியும் வந்துவிட்டால்...’ அதாவது இது, உங்களின் ஆயுட்காலம் (முடிந்துவிட்டது) பற்றிய அறிகுறியாகும். எனவே, உங்களுடைய இறைவனைப் புகழ்ந்து, அவனது தூய்மையை எடுத்துரைத்து, அவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள். அவன் பாவமன்னிப்பை ஏற்றுக்கொள்பவன் ஆவான் (என்பதே இதன் விளக்கமாகும்)” என்று பதிலளித்தேன்.

அப்போது உமர் (ரலி) அவர்கள், ‘‘நீங்கள் கூறுகின்ற விளக்கத்தையே இ(ந்த அத்தியாயத்)திலிருந்து நானும் அறிகின்றேன்” என்று சொன்னார்கள்.4

111. ‘அல்லஹப்’ அத்தியாயம்1

(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...)

(111:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘தப்ப’ எனும் சொல்லின் வேர்ச்சொல்லும், 40:37ஆவது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றதுமான) ‘தபாப்’ எனும் சொல்லுக்கு ‘இழப்பு’ என்பது பொருள்.

(11:101ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தத்பீப்’ எனும் சொல்லுக்கு ‘சீரழிவு’ என்று பொருள்.

அத்தியாயம் : 65
4971. حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا عَمْرُو بْنُ مُرَّةَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ لَمَّا نَزَلَتْ {وَأَنْذِرْ عَشِيرَتَكَ الأَقْرَبِينَ} وَرَهْطَكَ مِنْهُمُ الْمُخْلَصِينَ، خَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى صَعِدَ الصَّفَا فَهَتَفَ " يَا صَبَاحَاهْ ". فَقَالُوا مَنْ هَذَا، فَاجْتَمَعُوا إِلَيْهِ. فَقَالَ " أَرَأَيْتُمْ إِنْ أَخْبَرْتُكُمْ أَنَّ خَيْلاً تَخْرُجُ مِنْ سَفْحِ هَذَا الْجَبَلِ أَكُنْتُمْ مُصَدِّقِيَّ ". قَالُوا مَا جَرَّبْنَا عَلَيْكَ كَذِبًا. قَالَ " فَإِنِّي نَذِيرٌ لَكُمْ بَيْنَ يَدَىْ عَذَابٍ شَدِيدٍ ". قَالَ أَبُو لَهَبٍ تَبًّا لَكَ مَا جَمَعْتَنَا إِلاَّ لِهَذَا ثُمَّ قَامَ فَنَزَلَتْ {تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ} وَقَدْ تَبَّ هَكَذَا قَرَأَهَا الأَعْمَشُ يَوْمَئِذٍ.
பாடம் : 1
4971. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘(நபியே!) உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்வீ ராக!” (அதாவது,) ‘தூய மனம் படைத்த உம்முடைய குழுவினரையும் (எச்சரிக்கை செய்வீராக!’) எனும் (26:214ஆவது) இறைவசனம் அருளப்பட்டபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டுச் சென்று ‘ஸஃபா’ (மலை) மீதேறி உரத்த குரலில், ‘‘யா ஸபாஹா (அதிகாலை ஆபத்து! உதவி! உதவி!)” என்று கூறினார்கள். அப்போது (மக்கா நகர) மக்கள், ‘‘யார் இவர்?” என்று கூறியவாறு நபியவர்களிடம் ஒன்றுகூடினர்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘இந்த மலையின் அடிவாரத்திலிருந்து (உங்களைத் தாக்குவதற்காக பகைவர்களின்) குதிரைப் படையொன்று புறப்பட்டு வருகிறது என்று நான் உங்களிடம் தெரிவித்தால், என்னை நீங்கள் நம்பியிருப்பீர்களா?” என்று கேட்டார்கள். மக்கள், ‘‘உம்மிடமிருந்து எந்தப் பொய்யையும் நாங்கள் அனுபவித்ததில்லை. (அவ்வாறிருக்க, இதை நாங்கள் நம்பாமல் இருப்போமா?)” என்று சொன்னார்கள்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியென்றால், நான் கடும் வேதனையொன்று எதிர்நோக்கி யுள்ளது என்று உங்களுக்கு எச்சரிக்கை செய்கின்றேன்” என்றார்கள். (அப்போது நபியவர்களைப் பார்த்து) அபூலஹப், ‘‘உமக்கு அழிவுண்டாகட்டும்! இதற்காகத்தான் எங்களை ஒன்றுகூட்டினாயா?” என்று கேட்டான். பின்னர் நபி (ஸல்) அவர்கள் எழுந்தார்கள். அப்போது, ‘‘அழியட்டும் அபூலஹபின் இரு கரங்கள்; அவனுமே அழியட்டும்” எனும் (111ஆவது) அத்தியாயம் அருளப்பெற்றது.

இந்த (111:1ஆவது) வசனத்தை (அதன் இறுதியில் ‘கத்’ எனும் இடைச்சொல்லை இணைத்து) ‘வ கத் தப்ப’ (அவன் அழிந்தும்விட்டான்) என்றே அப்போது (அறிவிப்பாளர்) அஃமஷ் (ரஹ்) அவர்கள் ஓதினார்கள்.2

அத்தியாயம் : 65
4972. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم خَرَجَ إِلَى الْبَطْحَاءِ فَصَعِدَ إِلَى الْجَبَلِ فَنَادَى " يَا صَبَاحَاهْ ". فَاجْتَمَعَتْ إِلَيْهِ قُرَيْشٌ فَقَالَ " أَرَأَيْتُمْ إِنْ حَدَّثْتُكُمْ أَنَّ الْعَدُوَّ مُصَبِّحُكُمْ أَوْ مُمَسِّيكُمْ، أَكُنْتُمْ تُصَدِّقُونِي ". قَالُوا نَعَمْ. قَالَ " فَإِنِّي نَذِيرٌ لَكُمْ بَيْنَ يَدَىْ عَذَابٍ شَدِيدٍ ". فَقَالَ أَبُو لَهَبٍ أَلِهَذَا جَمَعْتَنَا تَبًّا لَكَ. فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ {تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ} إِلَى آخِرِهَا.
பாடம்: 2 அவனும் நாசமாகிவிட்டான். அவனது செல்வமும் அவன் சம்பாதித் தவையும் அவனுக்கு எந்தப் பலனையும் அளிக்கா (எனும் 111:2ஆவது இறைவசனம்)
4972. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (மக்காவின்) பள்ளத்தாக்கு நோக்கிக் கிளம்பிச் சென்று (அங்குள்ள ‘ஸஃபா’ எனும்) அந்த மலைமீதேறி, ‘‘யா ஸபாஹா! (இதோ, அதிகாலை ஆபத்து! உதவி! உதவி!) என்று கூவியழைத்தார்கள். உடனே அவர்களிடம் குறைஷியர் குழுமினர்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘நான் உங்களிடம் ‘காலையிலோ மாலையிலோ (உங்களைத் தாக்குவதற்காக) உங்களை நோக்கிப் பகைவர்கள் வருகிறார்கள்’ என்று தகவல் சொன்னால் என்னை நீங்கள் நம்பியிருப்பீர்களா?, கூறுங்கள்!” என்று கேட்டார்கள். (குழுமியிருந்த மக்கா) மக்கள், ‘‘ஆம் (நம்பவே செய்வோம்)” என்று பதிலளித்தனர்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியானால், கடும் வேதனையொன்று எதிர்நோக்கி யுள்ளது என உங்களுக்கு எச்சரிக்கை செய்கின்றேன்” என்று சொன்னார்கள். (இதைக் கேட்ட) உடன் அபூலஹப், ‘‘உனக்கு அழிவுண்டாகட்டும்; இதற்காகத்தான் எங்களை ஒன்றுதிரட்டினாயா?” என்று கேட்டான். அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், ‘‘அழியட்டும் அபூலஹபின் இரு கரங்கள்” என்று தொடங்கும் (111ஆவது) அத்தியாயத்தை அருளினான்.

அத்தியாயம் : 65
4973. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنِي عَمْرُو بْنُ مُرَّةَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ أَبُو لَهَبٍ تَبًّا لَكَ أَلِهَذَا جَمَعْتَنَا فَنَزَلَتْ {تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ}.
பாடம்: 3 ‘‘அவன் கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் நுழைவான்” எனும் (111:3ஆவது) இறைவசனம்
4973. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘உமக்கு அழிவுண்டாகட்டும்; இதற்காகவா எங்களை நீ ஒன்றுகூட்டினாய்!” என்று (நபி (ஸல்) அவர்களைப் பார்த்து) அபூலஹப் கேட்டான். அப்போது, ‘‘அழியட்டும், அபூலஹபின் இரு கரங்கள்...” எனும் (111ஆவது) அத்தியாயம் அருளப்பெற்றது.

அத்தியாயம் : 65
4974. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، حَدَّثَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " قَالَ اللَّهُ كَذَّبَنِي ابْنُ آدَمَ وَلَمْ يَكُنْ لَهُ ذَلِكَ، وَشَتَمَنِي وَلَمْ يَكُنْ لَهُ ذَلِكَ، فَأَمَّا تَكْذِيبُهُ إِيَّاىَ فَقَوْلُهُ لَنْ يُعِيدَنِي كَمَا بَدَأَنِي، وَلَيْسَ أَوَّلُ الْخَلْقِ بِأَهْوَنَ عَلَىَّ مِنْ إِعَادَتِهِ، وَأَمَّا شَتْمُهُ إِيَّاىَ فَقَوْلُهُ اتَّخَذَ اللَّهُ وَلَدًا، وَأَنَا الأَحَدُ الصَّمَدُ لَمْ أَلِدْ وَلَمْ أُولَدْ وَلَمْ يَكُنْ لِي كُفْأً أَحَدٌ ".
பாடம்: 4 அவனுடன் அவன் மனைவியும் (அழியட்டும்!) அவளோ விறகு சுமப்பவள் (எனும் 111:4 ஆவது இறைவசனம்) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்: (இவ்வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஹம்மாலத்தல் ஹதப்’ எனும் சொல்லுக்கு ‘புறம் பேசித் திரிகின்றவள்’ (முஸ்லிம்களுக்கும் இணைவைப்பாளர்களுக்கும் இடையே பகைமையை வளர்ப்பவள்) என்று பொருள். (111:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மசத்’ எனும் சொல், பனைமர நாருக்குச் சொல்லப்படும். இதுவே (மறுமையில்) நரகத்தின் சங்கிலியைக் குறிக்கும். பாடம்: 112. ‘அல்இக்லாஸ்’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) (112:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஹத்’ எனும் சொல்லை (‘அஹதுன்’ என்று ‘தன்வீன்’) ‘னகர ஒலி இணை’யுடன் வாசிக்கப்படாது என்று சொல்லப்படுகிறது. பொருள்: ஒருவன். பாடம் : 1
4974. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் கூறினான்: ஆதமின் மகன் என்னை நம்ப மறுக்கின்றான்; ஆனால், அவனுக்கு அது (தகுதி) இல்லை. அவன் என்னை ஏசுகின்றான்; ஆனால், அவனுக்கு அது (தகுதி) இல்லை. நான், (மனிதனான) அவனை முதலில் படைத்தது போன்றே மீண்டும் அவனை நான் படைக்கமாட்டேன் என்று அவன் கூறுவதே அவன் என்னை நம்ப மறுப்பதாகும்.

(உண்மையில், மனிதன் இறந்த பிறகு) அவனுக்கு மீண்டும் உயிர் கொடுத்து எழுப்புவதைவிட, அவனை ஆரம்பமாகப் படைத்தது சுலபமன்று. (அதையே செய்துவிட்ட எனக்கு மீண்டும் உயிர் கொடுப்பது கடினமன்று.)

‘அல்லாஹ் (தனக்குக்) குழந்தையை ஏற்படுத்திக்கொண்டான்’ என்று அவன் கூறுவதே அவன் என்னை ஏசுவதாகும். ஆனால், நானோ ஏகன்; (எவரிடமும்) எந்தத் தேவையுமற்றவன்; நான் யாரையும் பெற்றவனுமல்லன்; யாருக்கும் பிறந்தவனுமல்லன். எனக்கு நிகராக யாருமில்லை.2

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 65
4975. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، قَالَ وَحَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " قَالَ اللَّهُ كَذَّبَنِي ابْنُ آدَمَ وَلَمْ يَكُنْ لَهُ ذَلِكَ، وَشَتَمَنِي وَلَمْ يَكُنْ لَهُ ذَلِكَ، أَمَّا تَكْذِيبُهُ إِيَّاىَ أَنْ يَقُولَ إِنِّي لَنْ أُعِيدَهُ كَمَا بَدَأْتُهُ، وَأَمَّا شَتْمُهُ إِيَّاىَ أَنْ يَقُولَ اتَّخَذَ اللَّهُ وَلَدًا، وَأَنَا الصَّمَدُ الَّذِي لَمْ أَلِدْ وَلَمْ أُولَدْ وَلَمْ يَكُنْ لِي كُفُؤًا أَحَدٌ ". {لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ * وَلَمْ يَكُنْ لَهُ كُفُؤًا أَحَدٌ} كُفُؤًا وَكَفِيئًا وَكِفَاءً وَاحِدٌ.
பாடம்: 2 ‘‘அல்லாஹ் (எவரிடத்திலும்) எத்தேவையுமில்லாதவன்” எனும் (112:2ஆவது) இறைவசனம். அரபுகள் தங்களுடைய பிரமுகர்களை ‘அஸ்ஸமத்’ என்று அழைக்கின்றனர். அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: எவரிடம் தலைமைப் பதவி போய்முடிகிறதோ அத்தகைய (உயர் மட்டத்) தலைவரே ‘அஸ்ஸமத்’ எனப்படுவார்.
4975. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் கூறினான்: ஆதமின் மகன் என்னை நம்ப மறுக்கின்றான்; ஆனால், அவனுக்கு அது (தகுதி) இல்லை. அவன் என்னை ஏசுகின்றான்; ஆனால், அவனுக்கு அது (தகுதி) இல்லை. நான், (மனிதனான) அவனை ஆரம்பத்தில் படைத்ததைப் போன்றே மீண்டும் அவனை நான் படைக்கமாட்டேன் என்று அவன் கூறுவதே அவன் என்னை நம்ப மறுப்பதாகும். ‘அல்லாஹ் (தனக்குக்) குழந்தையை ஏற்படுத்திக்கொண்டான்’ என்று அவன் கூறுவதே அவன் என்னை ஏசுவதாகும்.

ஆனால், நானோ (எவரிடமும்) எந்தத் தேவையுமற்றவன்; நான் யாரையும் பெற்றவனுமல்லன்; யாருக்கும் பிறந்தவனுமல்லன். எனக்கு நிகராக யாருமில்லை.

(அல்லாஹ் கூறுகின்றான்:) ‘‘அவன் (எவரையும்) பெற்றவனுமல்லன்; (யாருக்கும்) பிறந்தவனுமல்லன். (ஆகவே, அவனுக்குப் பெற்றோருமில்லை; பிள்ளைகளுமில்லை). தவிர, அவனுக்கு நிகராகவும் யாருமில்லை” (112:3,4)

(112:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘குஃப்வ்’ எனும் சொல்லும், கஃபீஃ, கிஃபாஉ ஆகிய சொற்களும் (‘நிகரானவன்’ என்ற) ஒரே பொருள் கொண்டவையாகும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 65
4976. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَاصِمٍ، وَعَبْدَةَ، عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ، قَالَ سَأَلْتُ أُبَىَّ بْنَ كَعْبٍ عَنِ الْمُعَوِّذَتَيْنِ، فَقَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ قِيلَ لِي فَقُلْتُ فَنَحْنُ نَقُولُ كَمَا قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம்: 113. ‘அல்ஃபலக்’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (113:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்ஃபலக்’ எனும் சொல்லுக்கு ‘வைகறை’ என்பது பொருள். (113:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃகாஸிக்’ (இருள் கப்பியது) எனும் சொல் இரவைக் குறிக்கிறது. (இதே வசனத்திலுள்ள) ‘வகப’ (அது படர்ந்தது) எனும் சொல், சூரிய அஸ்தமனத்தைக் குறிக்கிறது. (பொதுவாக அரபியரின் வழக்கில்) ‘அப்யனு மின் ஃபரக்கி வ ஃபலக்கிஸ் ஸுப்ஹி’ (அது வைகறையைவிடத் தெளிவானது) என்று (‘ஃபரக்’ எனும் சொல்லையும் ‘ஃபலக்’ எனும் சொல்லையும் ஒரே பொருளில் ஆண்டு) வழங்குகின்றனர். ‘ஒரு பொருள் மற்றொரு பொருளுக்குள் முழுவதுமாக நுழைந்து, இருள் கப்பிக்கொள்ளும்போது, ‘வகப’ என்பர்.
4976. ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் உபை பின் கஅப் (ரலி) அவர்களி டம் ‘முஅவ்விதத்தைனி’ (பாதுகாப்புக் கோரும் பிரார்த்தனைகளான 113, 114ஆவது அத்தியாயங்கள் குர்ஆனில் கட்டுப்பட்டவையா என்பது) பற்றிக் கேட்டேன் அதற்கு அவர்கள் (பின் வருமாறு) கூறினார்கள்:

இது குறித்து நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘என்னிடம் (நபியே! கூறுக: நான் பாதுகாப்புக் கோருகிறேன் என்று) கூறப்பட்டது. நானும் கூறினேன்” என்று சொன்னார்கள்.

(அறிவிப்பாளர் ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:)

ஆகவே, நாங்களும் (நானும் உபை பின் கஅபும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்றே சொல்வோம்.2

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 65
4977. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ أَبِي لُبَابَةَ، عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ، وَحَدَّثَنَا عَاصِمٌ، عَنْ زِرٍّ، قَالَ سَأَلْتُ أُبَىَّ بْنَ كَعْبٍ قُلْتُ يَا أَبَا الْمُنْذِرِ إِنَّ أَخَاكَ ابْنَ مَسْعُودٍ يَقُولُ كَذَا وَكَذَا. فَقَالَ أُبَىٌّ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ لِي قِيلَ لِي. فَقُلْتُ، قَالَ فَنَحْنُ نَقُولُ كَمَا قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம்: 114. ‘அந்நாஸ்’ அத்தியாயம்1 (114:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்வஸ்வாஸ்’ எனும் சொல்லி(ன் (விளக்கவுரையி)ல் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: குழந்தை பிறந்தால் அக்குழந்தையை ஷைத்தான் தீண்டுகிறான். அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்(வின் பெயர்) கூறப்பட்டால், அவன் போய்விடுகிறான்; அல்லாஹ்(வின் பெயர்) கூறப்படவில்லையாயின், அக்குழந்தையின் இதயத்தின் மீதே அவன் நிலைகொண்டுவிடுகிறான்.
4977. ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம், ‘‘அபூமுன்ஃதிரே! தங்கள் சகோதரர் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் இப்படி இப்படிச் சொல்கிறாரே?” என்று கேட்டேன்.2

அதற்கு உபை (ரலி) அவர்கள், ‘‘நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (இது குறித்துக்) கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘என்னிடம் (இவ்விரு அத்தியாயங்களிலும், ‘நபியே! கூறுக: நான் பாதுகாப்புக் கோருகிறேன்’ என்று) கூறப்பட்டது. (அதற்கேற்ப) நானும் கூறினேன்” என்று சொன்னார்கள்.

(அறிவிப்பாளர் ஸிர்ரு கூறுகிறார்கள்:)

ஆகவே, நாங்கள் (நானும் உபை அவர்களும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்றே சொல்வோம்.3

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 65