4046. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَجُلٌ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم يَوْمَ أُحُدٍ أَرَأَيْتَ إِنْ قُتِلْتُ فَأَيْنَ أَنَا قَالَ "" فِي الْجَنَّةِ "" فَأَلْقَى تَمَرَاتٍ فِي يَدِهِ، ثُمَّ قَاتَلَ حَتَّى قُتِلَ.
பாடம் : 17 உஹுத் போர்106 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே! “உஹுத்') போருக்காக இறை நம்பிக்கையாளர்களை (உரிய) இடங்களில் நிறுத்த உம் குடும்பத்தாரிடமிருந்து அதிகாலையில் நீர் புறப்பட்டதை எண்ணிப்பார்ப்பீராக! அல்லாஹ் நன்கு செவியுறுவோனும் நன்கறிந்தோனும் ஆவான். (3:121) புகழோங்கிய அல்லாஹ் கூறுகின் றான்: நீங்கள் தளர்ந்துவிடாதீர்கள்; கவலைப் படாதீர்கள். நீங்கள் (உண்மையில்) இறைநம்பிக்கையாளர்களாக இருந்தால், நீங்களே மேலானவர்கள். (தற்போது) உங்களுக்கு(ப் போரில்) காயம் ஏற்பட்டி ருக்கிறது என்றால், (உங்கள் எதிரிகளான) அந்தக் கூட்டத்தாருக்கும் இதைப் போன்ற காயம் ஏற்படவே செய்தது. (இத்தகைய) நாட்களை மக்களிடையே நாம் சுழற்சி முறையில் வரச் செய்கின்றோம். இறைநம்பிக்கை கொண்டவர்களை அல்லாஹ் கண்டறிய வேண்டுமென்பதும், உங்களில் உயிர்த் தியாகிகளை உண்டாக்க வேண்டுமென்பதும் இதற்குக் காரணமாகும். அநீதி இழைப்போரை அல்லாஹ் நேசிக்கமாட்டான். மேலும், இறைநம்பிக்கை கொண்டவர்களை அல்லாஹ் தூய்மைப்படுத்தி, இறைமறுப்பாளர்களை அழிக்க வேண்டும் என்பதும் இதற்குக் காரணமாகும். உங்களில் (இறைவழியில்) போரிடுவோர் யார் என்பதையும், (அதில் நிலைகுலையாமல்) பொறுமை காப்போர் யார் என்பதையும் அல்லாஹ் (பரிசோதித்து) அறியாமலேயே நீங்கள் சொர்க்கத்தில் நுழைந்துவிடலாம் என எண்ணுகிறீர்களா? நீங்கள் இறப்பைச் சந்திப்பதற்கு முன்பு அதை அடைய ஆர்வம் கொண்டிருந்தீர்கள். (இப்போது)அதை நீங்கள் நேரில் பார்த்துவிட்டீர்கள். (3:139-143) மேலும், அல்லாஹ் கூறுகின்றான் : அல்லாஹ்வின் ஆணையின் பேரில் நீங்கள் அ(ந்தப் பகை)வர்களை வீழ்த்திக்கொண்டிருந்தபோது, அல்லாஹ் உங்களுக்கு (அளித்திருந்த) தனது வாக்குறுதியை உண்மையாக்கவே செய்தான். (ஆனால்) இறுதியில் நீங்கள் ஊக்கம் குன்றிவிட்டீர்கள்; (இறைத்தூதர் இட்ட) கட்டளை தொடர்பாகச் சர்ச்சையில் ஈடுபட்டீர்கள். நீங்கள் விரும்பியதை உங்களுக்கு அல்லாஹ் காட்டிய பிறகும் நீங்கள் மாறு புரிந்தீர்கள். உங்களில் இம்மையை விரும்புகின்றவரும் உள்ளார். உங்களில் மறுமையை விரும்புகின்றவரும் உள்ளார். பின்னர் உங்களைப் பரிசோதிப்பதற்காக, (நீங்கள் வெற்றி பெற முடியாமல்) அவர்களைக் கொண்டு உங்களை அல்லாஹ் திசை மாற்றிவிட்டான். (இதன் பிறகும்) உங்களை அவன் மன்னிக்கவே செய்தான். இறைநம்பிக்கையாளர்கள்மீது அல்லாஹ் அருள் உடையவன் ஆவான். (3:152) மேலும், உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ்வின் வழியில் கொல்லப்பட்டவர்களை, இறந்தோர் என்று ஒரு போதும் நீர் எண்ண வேண்டாம்...(3:169)
4046. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உஹுத் போரின்போது ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், “நான் கொல்லப்பட்டால் எங்கே (இருப்பேன்)?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “சொர்க்கத்தில்' என்று பதிலளித்தார்கள். (அந்த மனிதர்) தமது கையிலிருந்த பேரீச்சங்கனிகளை உடனே தூக்கி எறிந்துவிட்டு (களத்தில் குதித்து), தாம் கொல்லப்படும்வரையில் போரிட்டார்.113


அத்தியாயம் : 64
4047. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ شَقِيقٍ، عَنْ خَبَّابٍ ـ رضى الله عنه ـ قَالَ هَاجَرْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم نَبْتَغِي وَجْهَ اللَّهِ، فَوَجَبَ أَجْرُنَا عَلَى اللَّهِ، وَمِنَّا مَنْ مَضَى أَوْ ذَهَبَ لَمْ يَأْكُلْ مِنْ أَجْرِهِ شَيْئًا، كَانَ مِنْهُمْ مُصْعَبُ بْنُ عُمَيْرٍ قُتِلَ يَوْمَ أُحُدٍ، لَمْ يَتْرُكْ إِلاَّ نَمِرَةً، كُنَّا إِذَا غَطَّيْنَا بِهَا رَأْسَهُ خَرَجَتْ رِجْلاَهُ، وَإِذَا غُطِّيَ بِهَا رِجْلاَهُ خَرَجَ رَأْسُهُ، فَقَالَ لَنَا النَّبِيُّ صلى الله عليه وسلم "" غَطُّوا بِهَا رَأْسَهُ، وَاجْعَلُوا عَلَى رِجْلِهِ الإِذْخِرَ ـ أَوْ قَالَ أَلْقُوا عَلَى رِجْلِهِ مِنَ الإِذْخِرِ "". وَمِنَّا مَنْ قَدْ أَيْنَعَتْ لَهُ ثَمَرَتُهُ فَهْوَ يَهْدُبُهَا.
பாடம் : 17 உஹுத் போர்106 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே! “உஹுத்') போருக்காக இறை நம்பிக்கையாளர்களை (உரிய) இடங்களில் நிறுத்த உம் குடும்பத்தாரிடமிருந்து அதிகாலையில் நீர் புறப்பட்டதை எண்ணிப்பார்ப்பீராக! அல்லாஹ் நன்கு செவியுறுவோனும் நன்கறிந்தோனும் ஆவான். (3:121) புகழோங்கிய அல்லாஹ் கூறுகின் றான்: நீங்கள் தளர்ந்துவிடாதீர்கள்; கவலைப் படாதீர்கள். நீங்கள் (உண்மையில்) இறைநம்பிக்கையாளர்களாக இருந்தால், நீங்களே மேலானவர்கள். (தற்போது) உங்களுக்கு(ப் போரில்) காயம் ஏற்பட்டி ருக்கிறது என்றால், (உங்கள் எதிரிகளான) அந்தக் கூட்டத்தாருக்கும் இதைப் போன்ற காயம் ஏற்படவே செய்தது. (இத்தகைய) நாட்களை மக்களிடையே நாம் சுழற்சி முறையில் வரச் செய்கின்றோம். இறைநம்பிக்கை கொண்டவர்களை அல்லாஹ் கண்டறிய வேண்டுமென்பதும், உங்களில் உயிர்த் தியாகிகளை உண்டாக்க வேண்டுமென்பதும் இதற்குக் காரணமாகும். அநீதி இழைப்போரை அல்லாஹ் நேசிக்கமாட்டான். மேலும், இறைநம்பிக்கை கொண்டவர்களை அல்லாஹ் தூய்மைப்படுத்தி, இறைமறுப்பாளர்களை அழிக்க வேண்டும் என்பதும் இதற்குக் காரணமாகும். உங்களில் (இறைவழியில்) போரிடுவோர் யார் என்பதையும், (அதில் நிலைகுலையாமல்) பொறுமை காப்போர் யார் என்பதையும் அல்லாஹ் (பரிசோதித்து) அறியாமலேயே நீங்கள் சொர்க்கத்தில் நுழைந்துவிடலாம் என எண்ணுகிறீர்களா? நீங்கள் இறப்பைச் சந்திப்பதற்கு முன்பு அதை அடைய ஆர்வம் கொண்டிருந்தீர்கள். (இப்போது)அதை நீங்கள் நேரில் பார்த்துவிட்டீர்கள். (3:139-143) மேலும், அல்லாஹ் கூறுகின்றான் : அல்லாஹ்வின் ஆணையின் பேரில் நீங்கள் அ(ந்தப் பகை)வர்களை வீழ்த்திக்கொண்டிருந்தபோது, அல்லாஹ் உங்களுக்கு (அளித்திருந்த) தனது வாக்குறுதியை உண்மையாக்கவே செய்தான். (ஆனால்) இறுதியில் நீங்கள் ஊக்கம் குன்றிவிட்டீர்கள்; (இறைத்தூதர் இட்ட) கட்டளை தொடர்பாகச் சர்ச்சையில் ஈடுபட்டீர்கள். நீங்கள் விரும்பியதை உங்களுக்கு அல்லாஹ் காட்டிய பிறகும் நீங்கள் மாறு புரிந்தீர்கள். உங்களில் இம்மையை விரும்புகின்றவரும் உள்ளார். உங்களில் மறுமையை விரும்புகின்றவரும் உள்ளார். பின்னர் உங்களைப் பரிசோதிப்பதற்காக, (நீங்கள் வெற்றி பெற முடியாமல்) அவர்களைக் கொண்டு உங்களை அல்லாஹ் திசை மாற்றிவிட்டான். (இதன் பிறகும்) உங்களை அவன் மன்னிக்கவே செய்தான். இறைநம்பிக்கையாளர்கள்மீது அல்லாஹ் அருள் உடையவன் ஆவான். (3:152) மேலும், உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ்வின் வழியில் கொல்லப்பட்டவர்களை, இறந்தோர் என்று ஒரு போதும் நீர் எண்ண வேண்டாம்...(3:169)
4047. கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் அன்பை நாடியவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹிஜ்ரத் செய்தோம். எங்களுக்கான பிரதிபலனை அளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகிவிட்டது. எங்களில் சிலர் தம் பிரதிபலனை (இவ்வுலகத்தில்) அனுபவிக்காமலேயே சென்றுவிட்டனர். அவர்களில் ஒருவர் தான், முஸ்அப் பின் உமைர் (ரலி). அவர் உஹுத் போர் நாளன்று கொல்லப்பட்டார். அவர் கோடுபோட்ட வண்ணத் துணி ஒன்றை மட்டுமே விட்டுச்சென்றார். அதைக் கொண்டு அவரது தலையை நாங்கள் மறைத்தால் அவருடைய இரு கால்கள் வெளியில் தெரிந்தன; கால்களை மறைத்தால் தலை வெளியில் தெரிந்தது.

அப்போது எங்களிடம் நபி (ஸல்) அவர்கள், “அவரது தலையை அத்துணி யால் மறைத்துவிட்டு, அவரது கால்மீது “இத்கிர்' புல்லையிடுங்கள் -அல்லது அவரது கால் மீது சிறிது “இத்கிர்' புல்லைப் போடுங்கள்” என்று கூறினார்கள்.

(உஹுத் போரில் கலந்துகொண்ட) எங்களில் வேறுசிலர் இருக்கிறார்கள். அவர்களின் (தியாகத்திற்கான) பிரதிபலன் (இந்த உலகிலும்) கனிந்துவிட்டது. அதை அவர்கள் பறித்து (அனுபவித்து)க்கொண்டார்கள்.114


அத்தியாயம் : 64
4048. أَخْبَرَنَا حَسَّانُ بْنُ حَسَّانَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ طَلْحَةَ، حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّ عَمَّهُ، غَابَ عَنْ بَدْرٍ فَقَالَ غِبْتُ عَنْ أَوَّلِ قِتَالِ النَّبِيِّ صلى الله عليه وسلم، لَئِنْ أَشْهَدَنِي اللَّهُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم لَيَرَيَنَّ اللَّهُ مَا أُجِدُّ. فَلَقِيَ يَوْمَ أُحُدٍ، فَهُزِمَ النَّاسُ فَقَالَ اللَّهُمَّ إِنِّي أَعْتَذِرُ إِلَيْكَ مِمَّا صَنَعَ هَؤُلاَءِ ـ يَعْنِي الْمُسْلِمِينَ ـ وَأَبْرَأُ إِلَيْكَ مِمَّا جَاءَ بِهِ الْمُشْرِكُونَ. فَتَقَدَّمَ بِسَيْفِهِ فَلَقِيَ سَعْدَ بْنَ مُعَاذٍ فَقَالَ أَيْنَ يَا سَعْدُ إِنِّي أَجِدُ رِيحَ الْجَنَّةِ دُونَ أُحُدٍ. فَمَضَى فَقُتِلَ، فَمَا عُرِفَ حَتَّى عَرَفَتْهُ أُخْتُهُ بِشَامَةٍ أَوْ بِبَنَانِهِ، وَبِهِ بِضْعٌ وَثَمَانُونَ مِنْ طَعْنَةٍ وَضَرْبَةٍ وَرَمْيَةٍ بِسَهْمٍ.
பாடம் : 17 உஹுத் போர்106 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே! “உஹுத்') போருக்காக இறை நம்பிக்கையாளர்களை (உரிய) இடங்களில் நிறுத்த உம் குடும்பத்தாரிடமிருந்து அதிகாலையில் நீர் புறப்பட்டதை எண்ணிப்பார்ப்பீராக! அல்லாஹ் நன்கு செவியுறுவோனும் நன்கறிந்தோனும் ஆவான். (3:121) புகழோங்கிய அல்லாஹ் கூறுகின் றான்: நீங்கள் தளர்ந்துவிடாதீர்கள்; கவலைப் படாதீர்கள். நீங்கள் (உண்மையில்) இறைநம்பிக்கையாளர்களாக இருந்தால், நீங்களே மேலானவர்கள். (தற்போது) உங்களுக்கு(ப் போரில்) காயம் ஏற்பட்டி ருக்கிறது என்றால், (உங்கள் எதிரிகளான) அந்தக் கூட்டத்தாருக்கும் இதைப் போன்ற காயம் ஏற்படவே செய்தது. (இத்தகைய) நாட்களை மக்களிடையே நாம் சுழற்சி முறையில் வரச் செய்கின்றோம். இறைநம்பிக்கை கொண்டவர்களை அல்லாஹ் கண்டறிய வேண்டுமென்பதும், உங்களில் உயிர்த் தியாகிகளை உண்டாக்க வேண்டுமென்பதும் இதற்குக் காரணமாகும். அநீதி இழைப்போரை அல்லாஹ் நேசிக்கமாட்டான். மேலும், இறைநம்பிக்கை கொண்டவர்களை அல்லாஹ் தூய்மைப்படுத்தி, இறைமறுப்பாளர்களை அழிக்க வேண்டும் என்பதும் இதற்குக் காரணமாகும். உங்களில் (இறைவழியில்) போரிடுவோர் யார் என்பதையும், (அதில் நிலைகுலையாமல்) பொறுமை காப்போர் யார் என்பதையும் அல்லாஹ் (பரிசோதித்து) அறியாமலேயே நீங்கள் சொர்க்கத்தில் நுழைந்துவிடலாம் என எண்ணுகிறீர்களா? நீங்கள் இறப்பைச் சந்திப்பதற்கு முன்பு அதை அடைய ஆர்வம் கொண்டிருந்தீர்கள். (இப்போது)அதை நீங்கள் நேரில் பார்த்துவிட்டீர்கள். (3:139-143) மேலும், அல்லாஹ் கூறுகின்றான் : அல்லாஹ்வின் ஆணையின் பேரில் நீங்கள் அ(ந்தப் பகை)வர்களை வீழ்த்திக்கொண்டிருந்தபோது, அல்லாஹ் உங்களுக்கு (அளித்திருந்த) தனது வாக்குறுதியை உண்மையாக்கவே செய்தான். (ஆனால்) இறுதியில் நீங்கள் ஊக்கம் குன்றிவிட்டீர்கள்; (இறைத்தூதர் இட்ட) கட்டளை தொடர்பாகச் சர்ச்சையில் ஈடுபட்டீர்கள். நீங்கள் விரும்பியதை உங்களுக்கு அல்லாஹ் காட்டிய பிறகும் நீங்கள் மாறு புரிந்தீர்கள். உங்களில் இம்மையை விரும்புகின்றவரும் உள்ளார். உங்களில் மறுமையை விரும்புகின்றவரும் உள்ளார். பின்னர் உங்களைப் பரிசோதிப்பதற்காக, (நீங்கள் வெற்றி பெற முடியாமல்) அவர்களைக் கொண்டு உங்களை அல்லாஹ் திசை மாற்றிவிட்டான். (இதன் பிறகும்) உங்களை அவன் மன்னிக்கவே செய்தான். இறைநம்பிக்கையாளர்கள்மீது அல்லாஹ் அருள் உடையவன் ஆவான். (3:152) மேலும், உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ்வின் வழியில் கொல்லப்பட்டவர்களை, இறந்தோர் என்று ஒரு போதும் நீர் எண்ண வேண்டாம்...(3:169)
4048. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் தந்தையின் சகோதரர் (அனஸ் பின் அந்நள்ர்-ரலி) அவர்கள் பத்ர் போரில் கலந்துகொள்ளாமல் எங்கோ சென்றுவிட்டார். அன்னார் (திரும்பி வந்தவுடன்), “(இணைவைப்பாளர்களுடன்) நபி (ஸல்) அவர்கள் நடத்திய முதல் போரில் நான் கலந்துகொள்ள முடியவில்லை. நபி (ஸல்) அவர்களுடன் என்னையும் அல்லாஹ் பங்கு பெறவைத்திருந்தால் நான் கடும் முயற்சியெடுத்து (வீரமாகப்) போரிடுவதை அல்லாஹ் நிச்சயம் பார்த்திருப்பான்” என்று சொன்னார்.

அவர் உஹுத் போரைச் சந்தித்தார். (அதில் கலந்துகொண்டார். அந்தப் போரில்) மக்கள் தோல்வியுற்றனர். அப்போது அவர், “இறைவா! இந்த முஸ்லிம்கள்செய்த (பின்வாங்கிச் சென்ற) செயலுக்காக உன்னிடம் நான் மன்னிப்புக் கோருகி றேன். இணைவைப்பாளர்கள் செய்த (நபியவர்களுக்கெதிரான) இந்தப் போருக் கும் எனக்கும் தொடர்பில்லை என்று அறிவிக்கிறேன்” என்று கூறிவிட்டு, பிறகு (போர்க் களத்தில்) தமது வாளுடன் முன்னேறிச் சென்றார்.

அப்போது (எதிரில் வந்த) சஅத் பின் முஆத் (ரலி) அவர்களைச் சந்தித்து, “சஅதே! எங்கே (செல்கிறீர்கள்)? உஹுத் மலைக்கு அருகிலிருந்து நான் சொர்க்கத்தின் சுகந்தத்தை உணர்கிறேன்” என்று கூறிவிட்டுச் சென்றார். பிறகு, (உடல் முழுதும் சிதைந்துபோனதால்) அடையாளம் அறியப்படாத நிலைமையில் கொல்லப்பட்டார்.

அவரை அவருடைய சகோதரி, மச்சத்தை வைத்தோ -அல்லது அவருடைய கை விரல் நுனிகளை வைத்தோ அடையாளம் கண்டுகொண்டார். அவரது உடலில் (வாளால்) வெட்டப்பட்டும், (ஈட்டியால்) குத்தப்பட்டும், அம்பால் துளைக்கப்பட்டும் எண்பதுக்கும் மேற்பட்ட காயங்கள் இருந்தன.115


அத்தியாயம் : 64
4049. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، حَدَّثَنَا ابْنُ شِهَابٍ، أَخْبَرَنِي خَارِجَةُ بْنُ زَيْدِ بْنِ ثَابِتٍ، أَنَّهُ سَمِعَ زَيْدَ بْنَ ثَابِتٍ ـ رضى الله عنه ـ يَقُولُ فَقَدْتُ آيَةً مِنَ الأَحْزَابِ حِينَ نَسَخْنَا الْمُصْحَفَ، كُنْتُ أَسْمَعُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقْرَأُ بِهَا، فَالْتَمَسْنَاهَا فَوَجَدْنَاهَا مَعَ خُزَيْمَةَ بْنِ ثَابِتٍ الأَنْصَارِيِّ {مِنَ الْمُؤْمِنِينَ رِجَالٌ صَدَقُوا مَا عَاهَدُوا اللَّهَ عَلَيْهِ فَمِنْهُمْ مَنْ قَضَى نَحْبَهُ وَمِنْهُمْ مَنْ يَنْتَظِرُ } فَأَلْحَقْنَاهَا فِي سُورَتِهَا فِي الْمُصْحَفِ.
பாடம் : 17 உஹுத் போர்106 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே! “உஹுத்') போருக்காக இறை நம்பிக்கையாளர்களை (உரிய) இடங்களில் நிறுத்த உம் குடும்பத்தாரிடமிருந்து அதிகாலையில் நீர் புறப்பட்டதை எண்ணிப்பார்ப்பீராக! அல்லாஹ் நன்கு செவியுறுவோனும் நன்கறிந்தோனும் ஆவான். (3:121) புகழோங்கிய அல்லாஹ் கூறுகின் றான்: நீங்கள் தளர்ந்துவிடாதீர்கள்; கவலைப் படாதீர்கள். நீங்கள் (உண்மையில்) இறைநம்பிக்கையாளர்களாக இருந்தால், நீங்களே மேலானவர்கள். (தற்போது) உங்களுக்கு(ப் போரில்) காயம் ஏற்பட்டி ருக்கிறது என்றால், (உங்கள் எதிரிகளான) அந்தக் கூட்டத்தாருக்கும் இதைப் போன்ற காயம் ஏற்படவே செய்தது. (இத்தகைய) நாட்களை மக்களிடையே நாம் சுழற்சி முறையில் வரச் செய்கின்றோம். இறைநம்பிக்கை கொண்டவர்களை அல்லாஹ் கண்டறிய வேண்டுமென்பதும், உங்களில் உயிர்த் தியாகிகளை உண்டாக்க வேண்டுமென்பதும் இதற்குக் காரணமாகும். அநீதி இழைப்போரை அல்லாஹ் நேசிக்கமாட்டான். மேலும், இறைநம்பிக்கை கொண்டவர்களை அல்லாஹ் தூய்மைப்படுத்தி, இறைமறுப்பாளர்களை அழிக்க வேண்டும் என்பதும் இதற்குக் காரணமாகும். உங்களில் (இறைவழியில்) போரிடுவோர் யார் என்பதையும், (அதில் நிலைகுலையாமல்) பொறுமை காப்போர் யார் என்பதையும் அல்லாஹ் (பரிசோதித்து) அறியாமலேயே நீங்கள் சொர்க்கத்தில் நுழைந்துவிடலாம் என எண்ணுகிறீர்களா? நீங்கள் இறப்பைச் சந்திப்பதற்கு முன்பு அதை அடைய ஆர்வம் கொண்டிருந்தீர்கள். (இப்போது)அதை நீங்கள் நேரில் பார்த்துவிட்டீர்கள். (3:139-143) மேலும், அல்லாஹ் கூறுகின்றான் : அல்லாஹ்வின் ஆணையின் பேரில் நீங்கள் அ(ந்தப் பகை)வர்களை வீழ்த்திக்கொண்டிருந்தபோது, அல்லாஹ் உங்களுக்கு (அளித்திருந்த) தனது வாக்குறுதியை உண்மையாக்கவே செய்தான். (ஆனால்) இறுதியில் நீங்கள் ஊக்கம் குன்றிவிட்டீர்கள்; (இறைத்தூதர் இட்ட) கட்டளை தொடர்பாகச் சர்ச்சையில் ஈடுபட்டீர்கள். நீங்கள் விரும்பியதை உங்களுக்கு அல்லாஹ் காட்டிய பிறகும் நீங்கள் மாறு புரிந்தீர்கள். உங்களில் இம்மையை விரும்புகின்றவரும் உள்ளார். உங்களில் மறுமையை விரும்புகின்றவரும் உள்ளார். பின்னர் உங்களைப் பரிசோதிப்பதற்காக, (நீங்கள் வெற்றி பெற முடியாமல்) அவர்களைக் கொண்டு உங்களை அல்லாஹ் திசை மாற்றிவிட்டான். (இதன் பிறகும்) உங்களை அவன் மன்னிக்கவே செய்தான். இறைநம்பிக்கையாளர்கள்மீது அல்லாஹ் அருள் உடையவன் ஆவான். (3:152) மேலும், உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ்வின் வழியில் கொல்லப்பட்டவர்களை, இறந்தோர் என்று ஒரு போதும் நீர் எண்ண வேண்டாம்...(3:169)
4049. ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களின் உத்தரவுப்படி) நாங்கள் திருக்குர்ஆனைப் (பல ஏடுகளில்) பிரதியெடுத்துக்கொண்டிருந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓத, நான் கேட்டிருந்த “அல்அஹ்ஸாப்' (எனும் 33ஆவது) அத்தியாயத்தின் ஒரு வசனம் எனக்குக் கிடைக்கவில்லை. எனவே,அதை நாங்கள் தேடிப்பார்த்தபோது அது குஸைமா பின் ஸாபித் அல்அன்சாரீ (ரலி) அவர்களிடம் இருக்கக் கண்டோம். (அந்த வசனம் இதுதான்:)

இறைநம்பிக்கையாளரில் இத்தகைய வர்களும் இருக்கின்றனர்: அல்லாஹ்விடம் தாம் கொடுத்த வாக்குறுதியை அவர்கள் மெய்ப்படுத்திக் காட்டிவிட்டிருக் கிறார்கள்; அவர்களில் சிலர் தமது இலட்சியத்தை நிறைவேற்றிவிட்டார்கள்; இன்னும் சிலர் (அதை நிறைவேற்ற தருணம்) எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். (33:23)

உடனே அந்த வசனத்தைத் திருக்குர்ஆனில் அதற்குரிய அத்தியாயத்தில் (எழுதிச்) சேர்த்துவிட்டோம்.116


அத்தியாயம் : 64
4050. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ يَزِيدَ،، يُحَدِّثُ عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَى أُحُدٍ، رَجَعَ نَاسٌ مِمَّنْ خَرَجَ مَعَهُ، وَكَانَ أَصْحَابُ النَّبِيِّ صلى الله عليه وسلم فِرْقَتَيْنِ، فِرْقَةً تَقُولُ نُقَاتِلُهُمْ. وَفِرْقَةً تَقُولُ لاَ نُقَاتِلُهُمْ. فَنَزَلَتْ {فَمَا لَكُمْ فِي الْمُنَافِقِينَ فِئَتَيْنِ وَاللَّهُ أَرْكَسَهُمْ بِمَا كَسَبُوا} وَقَالَ "" إِنَّهَا طَيْبَةُ تَنْفِي الذُّنُوبَ كَمَا تَنْفِي النَّارُ خَبَثَ الْفِضَّةِ "".
பாடம் : 17 உஹுத் போர்106 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே! “உஹுத்') போருக்காக இறை நம்பிக்கையாளர்களை (உரிய) இடங்களில் நிறுத்த உம் குடும்பத்தாரிடமிருந்து அதிகாலையில் நீர் புறப்பட்டதை எண்ணிப்பார்ப்பீராக! அல்லாஹ் நன்கு செவியுறுவோனும் நன்கறிந்தோனும் ஆவான். (3:121) புகழோங்கிய அல்லாஹ் கூறுகின் றான்: நீங்கள் தளர்ந்துவிடாதீர்கள்; கவலைப் படாதீர்கள். நீங்கள் (உண்மையில்) இறைநம்பிக்கையாளர்களாக இருந்தால், நீங்களே மேலானவர்கள். (தற்போது) உங்களுக்கு(ப் போரில்) காயம் ஏற்பட்டி ருக்கிறது என்றால், (உங்கள் எதிரிகளான) அந்தக் கூட்டத்தாருக்கும் இதைப் போன்ற காயம் ஏற்படவே செய்தது. (இத்தகைய) நாட்களை மக்களிடையே நாம் சுழற்சி முறையில் வரச் செய்கின்றோம். இறைநம்பிக்கை கொண்டவர்களை அல்லாஹ் கண்டறிய வேண்டுமென்பதும், உங்களில் உயிர்த் தியாகிகளை உண்டாக்க வேண்டுமென்பதும் இதற்குக் காரணமாகும். அநீதி இழைப்போரை அல்லாஹ் நேசிக்கமாட்டான். மேலும், இறைநம்பிக்கை கொண்டவர்களை அல்லாஹ் தூய்மைப்படுத்தி, இறைமறுப்பாளர்களை அழிக்க வேண்டும் என்பதும் இதற்குக் காரணமாகும். உங்களில் (இறைவழியில்) போரிடுவோர் யார் என்பதையும், (அதில் நிலைகுலையாமல்) பொறுமை காப்போர் யார் என்பதையும் அல்லாஹ் (பரிசோதித்து) அறியாமலேயே நீங்கள் சொர்க்கத்தில் நுழைந்துவிடலாம் என எண்ணுகிறீர்களா? நீங்கள் இறப்பைச் சந்திப்பதற்கு முன்பு அதை அடைய ஆர்வம் கொண்டிருந்தீர்கள். (இப்போது)அதை நீங்கள் நேரில் பார்த்துவிட்டீர்கள். (3:139-143) மேலும், அல்லாஹ் கூறுகின்றான் : அல்லாஹ்வின் ஆணையின் பேரில் நீங்கள் அ(ந்தப் பகை)வர்களை வீழ்த்திக்கொண்டிருந்தபோது, அல்லாஹ் உங்களுக்கு (அளித்திருந்த) தனது வாக்குறுதியை உண்மையாக்கவே செய்தான். (ஆனால்) இறுதியில் நீங்கள் ஊக்கம் குன்றிவிட்டீர்கள்; (இறைத்தூதர் இட்ட) கட்டளை தொடர்பாகச் சர்ச்சையில் ஈடுபட்டீர்கள். நீங்கள் விரும்பியதை உங்களுக்கு அல்லாஹ் காட்டிய பிறகும் நீங்கள் மாறு புரிந்தீர்கள். உங்களில் இம்மையை விரும்புகின்றவரும் உள்ளார். உங்களில் மறுமையை விரும்புகின்றவரும் உள்ளார். பின்னர் உங்களைப் பரிசோதிப்பதற்காக, (நீங்கள் வெற்றி பெற முடியாமல்) அவர்களைக் கொண்டு உங்களை அல்லாஹ் திசை மாற்றிவிட்டான். (இதன் பிறகும்) உங்களை அவன் மன்னிக்கவே செய்தான். இறைநம்பிக்கையாளர்கள்மீது அல்லாஹ் அருள் உடையவன் ஆவான். (3:152) மேலும், உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ்வின் வழியில் கொல்லப்பட்டவர்களை, இறந்தோர் என்று ஒரு போதும் நீர் எண்ண வேண்டாம்...(3:169)
4050. ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உஹுத் போருக்காக நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டுச் சென்றபோது, நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றவர்களில் சிலர் (நயவஞ்சகர்கள்) திரும்பி வந்து விட்டனர்.117 (இவர்கள்மீது எப்படி நடவடிக்கை எடுப்பது என்பது தொடர்பாக) நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் இரு பிரிவினராகப் பிரிந்துவிட்டார்கள். ஒரு பிரிவினர், “(திரும்பி ஓடியவர்களைக்) கொன்றுவிடுவோம்” என்று கூறினர். மற்றொரு பிரிவினர், “அவர்களை நாம் கொலை செய்யக் கூடாது” என்று கூறினர். (அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்தனர்.) அப்போது பின்வரும் வசனம் அருளப்பெற்றது:

உங்களுக்கு என்ன நேர்ந்தது? நயவஞ்சகர்கள் விஷயத்தில் நீங்கள் இரு பிரிவினர்களாக உள்ளீர்கள்? அவர்கள் தேடிக்கொண்ட (தீய) வினையால் அவர் களை அல்லாஹ் வீழ்த்திவிட்டான். யாரை அல்லாஹ் தவறான வழியில் விட்டுவிட்டானோ அவரை நீங்கள் நல்வழிப்படுத்த விரும்புகிறீர்களா? (நபியே!) அல்லாஹ் யாரை வழிதவற விட்டுவிடுகிறானோ அவருக்கு எந்த (நல்) வழியையும் ஒருபோதும் நீர் காணமாட்டீர். (4:88)

மேலும், நபி (ஸல்) அவர்கள், “மதீனா தூய்மையானது; நெருப்பு, வெள்ளியின் அழுக்கை நீக்குவதைப்போல் அது பாவங்களைப் போக்கிவிடுகிறது” என்று சொன்னார்கள்.118

அத்தியாயம் : 64
4051. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، عَنِ ابْنِ عُيَيْنَةَ، عَنْ عَمْرٍو، عَنْ جَابِرٍ ـ رضى الله عنه ـ قَالَ نَزَلَتْ هَذِهِ الآيَةُ فِينَا {إِذْ هَمَّتْ طَائِفَتَانِ مِنْكُمْ أَنْ تَفْشَلاَ} بَنِي سَلِمَةَ وَبَنِي حَارِثَةَ، وَمَا أُحِبُّ أَنَّهَا لَمْ تَنْزِلْ، وَاللَّهُ يَقُولُ {وَاللَّهُ وَلِيُّهُمَا}
பாடம் : 18 “அப்போது உங்களில் இரு குழுவினர் தைரியமிழந்து (திரும்பி)விட நினைத்தனர். ஆனால், அவர்களுக்கு அல்லாஹ் உதவியாள(னாய் இருந்தா)ன். இறைநம்பிக்கை கொண்ட (அ)வர்கள் அல்லாஹ்வின் மீதே முழு நம்பிக்கை வைத்திருக்கட்டும்” (எனும் (3:122ஆவது) இறைவசனம்119
4051. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறிய தாவது:

“அப்போது உங்களில் இரு குழுவினர் தைரியமிழந்து (திரும்பி)விட நினைத்தனர்” என்னும் இந்த (3:122ஆம்) இறைவசனம், பனூ சலிமா மற்றும் பனூ ஹாரிஸா கூட்டத்தாராகிய எங்களைக் குறித்தே அருளப்பெற்றது. மேலும், இந்த வசனம் இறங்காமலிருந்திருக்கக் கூடாதா என்று நான் ஆசைப்படமாட்டேன். (ஏனெனில்) அல்லாஹ், “அவ்விரு பிரிவினருக்கும் அல்லாஹ்வே பாதுகாவலனாக இருந்தான்” என்று (எங்களை அவ்வசனத்தில் மேன்மைப்படுத்திக்) கூறுகின்றான்.120


அத்தியாயம் : 64
4052. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، أَخْبَرَنَا عَمْرٌو، عَنْ جَابِرٍ، قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" هَلْ نَكَحْتَ يَا جَابِرُ "". قُلْتُ نَعَمْ. قَالَ "" مَاذَا أَبِكْرًا أَمْ ثَيِّبًا "". قُلْتُ لاَ بَلْ ثَيِّبًا. قَالَ "" فَهَلاَّ جَارِيَةً تُلاَعِبُكَ "". قُلْتُ يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أَبِي قُتِلَ يَوْمَ أُحُدٍ وَتَرَكَ تِسْعَ بَنَاتٍ كُنَّ لِي تِسْعَ أَخَوَاتٍ، فَكَرِهْتُ أَنْ أَجْمَعَ إِلَيْهِنَّ جَارِيَةً خَرْقَاءَ مِثْلَهُنَّ، وَلَكِنِ امْرَأَةً تَمْشُطُهُنَّ وَتَقُومُ عَلَيْهِنَّ. قَالَ "" أَصَبْتَ "".
பாடம் : 18 “அப்போது உங்களில் இரு குழுவினர் தைரியமிழந்து (திரும்பி)விட நினைத்தனர். ஆனால், அவர்களுக்கு அல்லாஹ் உதவியாள(னாய் இருந்தா)ன். இறைநம்பிக்கை கொண்ட (அ)வர்கள் அல்லாஹ்வின் மீதே முழு நம்பிக்கை வைத்திருக்கட்டும்” (எனும் (3:122ஆவது) இறைவசனம்119
4052. ஜாபிர் (பின் அப்தில்லாஹ்-ரலி) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “திருமணம் முடித்துக் கொண்டாயா, ஜாபிரே?” என்று கேட்டார்கள். நான், “ஆம்' என்று கூறினேன்.”கன்னி கழிந்த பெண்ணையா? கன்னிப் பெண்ணையா?” என்று கேட்டார்கள். நான், “(கன்னிப் பெண்ணை) அல்ல; கன்னி கழிந்த பெண்ணைத்தான் (மணந்துகொண்டேன்)” என்று கூறினேன். “உன்னோடு கொஞ்சிக் குலவும் கன்னிப் பெண்ணை மணமுடித்திருக்கக் கூடாதா?” என்று கேட்டார்கள்.

நான், “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை (அப்துல்லாஹ் (ரலி) அவர்கள்) ஒன்பது புதல்வியரை விட்டுவிட்டு உஹுத் போரின்போது (உயிர்த் தியாகியாகக்) கொல்லப்பட்டார்கள். அவர்கள் (ஒன்பது பேரும்) என் சகோதரிகளாக உள்ளனர். எனவே, பக்குவமில்லாத அவர்களைப் போன்ற இன்னொருத்தியை அவர்களுடன் சேர்த்துவிடுவதை நான் வெறுத்தேன். மாறாக, அவர்களுக்குத் தலை வாரிவிட்டு, அவர்களை (கருத்தாக)ப் பராமரித்துவரும் ஒரு பெண்ணை (திருமணம் செய்ய நினைத்தே இவ்வாறு தேர்ந்தெடுத்தேன்)” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், “நீ செய்தது சரிதான்” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 64
4053. حَدَّثَنِي أَحْمَدُ بْنُ أَبِي سُرَيْجٍ، أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ فِرَاسٍ، عَنِ الشَّعْبِيِّ، قَالَ حَدَّثَنِي جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما أَنَّ أَبَاهُ، اسْتُشْهِدَ يَوْمَ أُحُدٍ وَتَرَكَ عَلَيْهِ دَيْنًا، وَتَرَكَ سِتَّ بَنَاتٍ، فَلَمَّا حَضَرَ جِذَاذُ النَّخْلِ قَالَ أَتَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقُلْتُ قَدْ عَلِمْتَ أَنَّ وَالِدِي قَدِ اسْتُشْهِدَ يَوْمَ أُحُدٍ، وَتَرَكَ دَيْنًا كَثِيرًا، وَإِنِّي أُحِبُّ أَنْ يَرَاكَ الْغُرَمَاءُ. فَقَالَ "" اذْهَبْ فَبَيْدِرْ كُلَّ تَمْرٍ عَلَى نَاحِيَةٍ "". فَفَعَلْتُ ثُمَّ دَعَوْتُهُ، فَلَمَّا نَظَرُوا إِلَيْهِ كَأَنَّهُمْ أُغْرُوا بِي تِلْكَ السَّاعَةَ، فَلَمَّا رَأَى مَا يَصْنَعُونَ أَطَافَ حَوْلَ أَعْظَمِهَا بَيْدَرًا ثَلاَثَ مَرَّاتٍ، ثُمَّ جَلَسَ عَلَيْهِ، ثُمَّ قَالَ "" ادْعُ لَكَ أَصْحَابَكَ "". فَمَا زَالَ يَكِيلُ لَهُمْ حَتَّى أَدَّى اللَّهُ عَنْ وَالِدِي أَمَانَتَهُ، وَأَنَا أَرْضَى أَنْ يُؤَدِّيَ اللَّهُ أَمَانَةَ وَالِدِي، وَلاَ أَرْجِعَ إِلَى أَخَوَاتِي بِتَمْرَةٍ، فَسَلَّمَ اللَّهُ الْبَيَادِرَ كُلَّهَا وَحَتَّى إِنِّي أَنْظُرُ إِلَى الْبَيْدَرِ الَّذِي كَانَ عَلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم كَأَنَّهَا لَمْ تَنْقُصْ تَمْرَةً وَاحِدَةً.
பாடம் : 18 “அப்போது உங்களில் இரு குழுவினர் தைரியமிழந்து (திரும்பி)விட நினைத்தனர். ஆனால், அவர்களுக்கு அல்லாஹ் உதவியாள(னாய் இருந்தா)ன். இறைநம்பிக்கை கொண்ட (அ)வர்கள் அல்லாஹ்வின் மீதே முழு நம்பிக்கை வைத்திருக்கட்டும்” (எனும் (3:122ஆவது) இறைவசனம்119
4053. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

தம்மீது கடன் இருக்கும் நிலையில் ஆறு புதல்வியரை (அநாதைகளாக) விட்டுவிட்டு என் தந்தை உஹுத் போரில் உயிர்த் தியாகியாகக் கொல்லப்பட்டார். பேரீச்சம்பழங்களைக் கொய்யும் (அறுவடைக்) காலம் வந்தபோது, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, “என் தந்தை உஹுத் போரில் உயிர்த் தியாகியாகக் கொல்லப்பட்டார் என்பது தங்களுக்குத் தெரியும். அவர் நிறையக் கடனையும் விட்டுச்சென்றுள்ளார். கடன்காரர்கள் தங்களைச் சந்திக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்” என்று கூறினேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ சென்று எல்லாப் பேரீச்சங்கனிகளையும் களத்தில் ஒரு மூலையில் (தனித் தனியாகக்) குவித்து வை!” என்று கூறினார்கள். நான் அவ்வாறே செய்தேன். பிறகு நபி (ஸல்) அவர்களை நான் அழைத்தேன். நபி (ஸல்) அவர்களைக் கடன்காரர்கள் கண்டபோது என்னால் ஆத்திரமூட்டப்பட்டவர்களைப் போல அந்த நேரத்தில் தெரிந்தார்கள். கடன்காரர்கள் (கடுமையாக) நடந்துகொள்வதை நபி (ஸல்) அவர்கள் கண்டபோது, அதில் பெரிய குவியலை மூன்று முறை சுற்றிவந்து அதன் அருகே அமர்ந்தார்கள். பிறகு, “உன் (கடன்காரத்) தோழர்களைக் கூப்பிடு” என்று கூறினார்கள்.

(பிறகு) நபி (ஸல்) அவர்கள் (பேரீச்சங் கனிகளை) அவர்களுக்கு அளந்து கொடுத்துக்கொண்டேயிருந்தார்கள். என் தந்தையின் (கடன்) பொறுப்பை அல்லாஹ் நிறைவேற்றிவிட்டான். நானோ, “அல்லாஹ், என் தந்தையின் (கடன்) பொறுப்பை நிறைவேற்றினால் போதும். என் சகோதரிகளிடம் ஒரு பேரீச்சம் பழத்துடன் திரும்பிச் செல்லாவிட்டாலும்கூடப் பரவாயில்லை' என்று திருப்திப்பட்டுக் கொண்டிருந்தேன். அந்தப் பேரீச்சம் பழக் குவியல்கள் முழுவதையும் (தீர்ந்து போகாமல்) அல்லாஹ் பாதுகாத்தான். எந்த அளவுக்கென்றால் நபி (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்த அந்தக் குவியலில் ஒரு பேரீச்சங்கனிகூட குறையாமலிருந்ததை நான் பார்த்தேன்.121


அத்தியாயம் : 64
4054. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ ـ رضى الله عنه ـ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ أُحُدٍ، وَمَعَهُ رَجُلاَنِ يُقَاتِلاَنِ عَنْهُ، عَلَيْهِمَا ثِيَابٌ بِيضٌ، كَأَشَدِّ الْقِتَالِ، مَا رَأَيْتُهُمَا قَبْلُ وَلاَ بَعْدُ.
பாடம் : 18 “அப்போது உங்களில் இரு குழுவினர் தைரியமிழந்து (திரும்பி)விட நினைத்தனர். ஆனால், அவர்களுக்கு அல்லாஹ் உதவியாள(னாய் இருந்தா)ன். இறைநம்பிக்கை கொண்ட (அ)வர்கள் அல்லாஹ்வின் மீதே முழு நம்பிக்கை வைத்திருக்கட்டும்” (எனும் (3:122ஆவது) இறைவசனம்119
4054. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உஹுத் போரின்போது அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களை நான் பார்த்தேன். அவர்களுடன் இரண்டு மனிதர்கள் இருந்தார்கள். அவ்விருவரும் நபியவர்களுக்காகக் கடுமையாகப் போரிட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்கள் வெள்ளை நிற உடையணிந்திருந்தார்கள். அதற்கு முன்போ அதற்குப் பின்போ அவ்விருவரையும் நான் பார்த்ததில்லை.122


அத்தியாயம் : 64
4055. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، حَدَّثَنَا هَاشِمُ بْنُ هَاشِمٍ السَّعْدِيُّ، قَالَ سَمِعْتُ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ، يَقُولُ سَمِعْتُ سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ، يَقُولُ نَثَلَ لِي النَّبِيُّ صلى الله عليه وسلم كِنَانَتَهُ يَوْمَ أُحُدٍ فَقَالَ "" ارْمِ فِدَاكَ أَبِي وَأُمِّي "".
பாடம் : 18 “அப்போது உங்களில் இரு குழுவினர் தைரியமிழந்து (திரும்பி)விட நினைத்தனர். ஆனால், அவர்களுக்கு அல்லாஹ் உதவியாள(னாய் இருந்தா)ன். இறைநம்பிக்கை கொண்ட (அ)வர்கள் அல்லாஹ்வின் மீதே முழு நம்பிக்கை வைத்திருக்கட்டும்” (எனும் (3:122ஆவது) இறைவசனம்119
4055. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உஹுத் போரின்போது நபி (ஸல்) அவர்கள் தமது அம்புக் கூட்டிலிருந்துஎனக்காக (அம்புகளை) உருவிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது (என்னிடம்), “அம்பெய்யுங்கள். என் தந்தையும் என் தாயும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 64
4056. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، قَالَ سَمِعْتُ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ، قَالَ سَمِعْتُ سَعْدًا، يَقُولُ جَمَعَ لِي النَّبِيُّ صلى الله عليه وسلم أَبَوَيْهِ يَوْمَ أُحُدٍ.
பாடம் : 18 “அப்போது உங்களில் இரு குழுவினர் தைரியமிழந்து (திரும்பி)விட நினைத்தனர். ஆனால், அவர்களுக்கு அல்லாஹ் உதவியாள(னாய் இருந்தா)ன். இறைநம்பிக்கை கொண்ட (அ)வர்கள் அல்லாஹ்வின் மீதே முழு நம்பிக்கை வைத்திருக்கட்டும்” (எனும் (3:122ஆவது) இறைவசனம்119
4056. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உஹுத் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எனக்காகத் தம் தாயையும் தந்தையையும் ஒன்றுசேர்த்து, (“என் தந்தையும் என் தாயும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்” என்று) கூறி (போர் புரிய உற்சாகமூட்டி)னார்கள்.123


அத்தியாயம் : 64
4057. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا لَيْثٌ، عَنْ يَحْيَى، عَنِ ابْنِ الْمُسَيَّبِ، أَنَّهُ قَالَ قَالَ سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ ـ رضى الله عنه ـ لَقَدْ جَمَعَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ أُحُدٍ أَبَوَيْهِ كِلَيْهِمَا. يُرِيدُ حِينَ قَالَ "" فِدَاكَ أَبِي وَأُمِّي "". وَهُوَ يُقَاتِلُ.
பாடம் : 18 “அப்போது உங்களில் இரு குழுவினர் தைரியமிழந்து (திரும்பி)விட நினைத்தனர். ஆனால், அவர்களுக்கு அல்லாஹ் உதவியாள(னாய் இருந்தா)ன். இறைநம்பிக்கை கொண்ட (அ)வர்கள் அல்லாஹ்வின் மீதே முழு நம்பிக்கை வைத்திருக்கட்டும்” (எனும் (3:122ஆவது) இறைவசனம்119
4057. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உஹுத் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் பெற்றோர் இருவரையுமே ஒன்று சேர்த்து எனக்காக (அர்ப்பணிப்பதாக)க் கூறினார்கள்.

அறிவிப்பாளர் சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

தாம் போர் புரிந்துகொண்டிருந்தபோது, “என் தந்தையும் என் தாயும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்” என்று தம்மிடம் நபி (ஸல்) அவர்கள் கூறியதைப் பற்றியே இவ்வாறு சஅத் (ரலி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.


அத்தியாயம் : 64
4058. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا مِسْعَرٌ، عَنْ سَعْدٍ، عَنِ ابْنِ شَدَّادٍ، قَالَ سَمِعْتُ عَلِيًّا ـ رضى الله عنه ـ يَقُولُ مَا سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَجْمَعُ أَبَوَيْهِ لأَحَدٍ غَيْرَ سَعْدٍ.
பாடம் : 18 “அப்போது உங்களில் இரு குழுவினர் தைரியமிழந்து (திரும்பி)விட நினைத்தனர். ஆனால், அவர்களுக்கு அல்லாஹ் உதவியாள(னாய் இருந்தா)ன். இறைநம்பிக்கை கொண்ட (அ)வர்கள் அல்லாஹ்வின் மீதே முழு நம்பிக்கை வைத்திருக்கட்டும்” (எனும் (3:122ஆவது) இறைவசனம்119
4058. அலீ (பின் அபீதாலிப் -ரலி) அவர்கள் கூறியதாவது :

நபி (ஸல்) அவர்கள் தம் பெற்றோர் இருவரையும் ஒன்றுசேர்த்து சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களைத் தவிர வேறு யாருக்கும் (அர்ப்பணிப்பதாகக்) கூறியதை நான் கேட்டதில்லை.


அத்தியாயம் : 64
4059. حَدَّثَنَا يَسَرَةُ بْنُ صَفْوَانَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَدَّادٍ، عَنْ عَلِيٍّ ـ رضى الله عنه ـ قَالَ مَا سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم جَمَعَ أَبَوَيْهِ لأَحَدٍ إِلاَّ لِسَعْدِ بْنِ مَالِكٍ، فَإِنِّي سَمِعْتُهُ يَقُولُ يَوْمَ أُحُدٍ "" يَا سَعْدُ ارْمِ، فِدَاكَ أَبِي وَأُمِّي "".
பாடம் : 18 “அப்போது உங்களில் இரு குழுவினர் தைரியமிழந்து (திரும்பி)விட நினைத்தனர். ஆனால், அவர்களுக்கு அல்லாஹ் உதவியாள(னாய் இருந்தா)ன். இறைநம்பிக்கை கொண்ட (அ)வர்கள் அல்லாஹ்வின் மீதே முழு நம்பிக்கை வைத்திருக்கட்டும்” (எனும் (3:122ஆவது) இறைவசனம்119
4059. அலீ (ரலி) அவர்கள் கூறிய தாவது:

நபி (ஸல்) அவர்கள் தம் பெற்றோர் இருவரையும் ஒன்றுசேர்த்து சஅத் பின்மாலிக் (ரலி) அவர்களைத் தவிர124 வேறு யாருக்கும் (அர்ப்பணிப்பதாகக்) கூறியதை நான் கேட்டதில்லை. ஏனெனில், நான் உஹுத் (போர் நடந்த) நாளில், “சஅதே! அம்பெய்யுங்கள். என் தந்தையும் என் தாயும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் (சஅத் அவர்களிடம்) கூறியதைக் கேட்டேன்.


அத்தியாயம் : 64
4060. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، عَنْ مُعْتَمِرٍ، عَنْ أَبِيهِ، قَالَ زَعَمَ أَبُو عُثْمَانَ أَنَّهُ لَمْ يَبْقَ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي بَعْضِ تِلْكَ الأَيَّامِ الَّتِي يُقَاتِلُ فِيهِنَّ غَيْرُ طَلْحَةَ وَسَعْدٍ. عَنْ حَدِيثِهِمَا.
பாடம் : 18 “அப்போது உங்களில் இரு குழுவினர் தைரியமிழந்து (திரும்பி)விட நினைத்தனர். ஆனால், அவர்களுக்கு அல்லாஹ் உதவியாள(னாய் இருந்தா)ன். இறைநம்பிக்கை கொண்ட (அ)வர்கள் அல்லாஹ்வின் மீதே முழு நம்பிக்கை வைத்திருக்கட்டும்” (எனும் (3:122ஆவது) இறைவசனம்119
4060. அபூஉஸ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (உஹுதில்) போரிட்டுவந்த அந்த நாட்களில் ஒன்றில், தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்களையும், சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களையும் தவிர்த்து (முஹாஜிர்களில் வேறு யாரும்) அவர்களுடன் எஞ்சியிருக்கவில்லை.

இது குறித்து தல்ஹா (ரலி) அவர்களும், சஅத் (ரலி) அவர்களும் (நேரடியாக) அறிவித்த ஹதீஸையும் அபூஉஸ்மான் (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.125


அத்தியாயம் : 64
4062. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي الأَسْوَدِ، حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ مُحَمَّدِ بْنِ يُوسُفَ، قَالَ سَمِعْتُ السَّائِبَ بْنَ يَزِيدَ، قَالَ صَحِبْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ وَطَلْحَةَ بْنَ عُبَيْدِ اللَّهِ وَالْمِقْدَادَ وَسَعْدًا رضى الله عنهم فَمَا سَمِعْتُ أَحَدًا مِنْهُمْ يُحَدِّثُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم، إِلاَّ أَنِّي سَمِعْتُ طَلْحَةَ يُحَدِّثُ عَنْ يَوْمِ أُحُدٍ
பாடம் : 18 “அப்போது உங்களில் இரு குழுவினர் தைரியமிழந்து (திரும்பி)விட நினைத்தனர். ஆனால், அவர்களுக்கு அல்லாஹ் உதவியாள(னாய் இருந்தா)ன். இறைநம்பிக்கை கொண்ட (அ)வர்கள் அல்லாஹ்வின் மீதே முழு நம்பிக்கை வைத்திருக்கட்டும்” (எனும் (3:122ஆவது) இறைவசனம்119
4062. சாயிப் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப், தல்ஹா பின் உபைதில்லாஹ், மிக்தாத் பின் அல்அஸ்வத், சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) ஆகியோருடன் நான் தோழமை கொண்டிருந்தேன். அவர்களில் ஒருவரும் நபி (ஸல்) அவர்களிடமிருந்து (நபிமொழி எதையும்) அறிவிப்பதை நான் கேட்டதில்லை.

ஆயினும், தல்ஹா (ரலி) அவர்கள் (மட்டும்) உஹுத் போர் நாள் பற்றி அறிவிப்பதை நான் கேட்டுள்ளேன்.126


அத்தியாயம் : 64
4063. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ، قَالَ رَأَيْتُ يَدَ طَلْحَةَ شَلاَّءَ، وَقَى بِهَا النَّبِيَّ صلى الله عليه وسلم يَوْمَ أُحُدٍ.
பாடம் : 18 “அப்போது உங்களில் இரு குழுவினர் தைரியமிழந்து (திரும்பி)விட நினைத்தனர். ஆனால், அவர்களுக்கு அல்லாஹ் உதவியாள(னாய் இருந்தா)ன். இறைநம்பிக்கை கொண்ட (அ)வர்கள் அல்லாஹ்வின் மீதே முழு நம்பிக்கை வைத்திருக்கட்டும்” (எனும் (3:122ஆவது) இறைவசனம்119
4063. கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்களின் செயலிழந்துபோன கையைப் பார்த்தேன். உஹுத் நாளில் அந்தக் கையால் நபி (ஸல்) அவர்களை அன்னார் காத்த(போது எதிரிகளால் வெட்டப்பட்ட)ôர்கள்.127


அத்தியாயம் : 64
4064. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا كَانَ يَوْمَ أُحُدٍ انْهَزَمَ النَّاسُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَأَبُو طَلْحَةَ بَيْنَ يَدَىِ النَّبِيِّ صلى الله عليه وسلم مُجَوِّبٌ عَلَيْهِ بِحَجَفَةٍ لَهُ، وَكَانَ أَبُو طَلْحَةَ رَجُلاً رَامِيًا شَدِيدَ النَّزْعِ، كَسَرَ يَوْمَئِذٍ قَوْسَيْنِ أَوْ ثَلاَثًا، وَكَانَ الرَّجُلُ يَمُرُّ مَعَهُ بِجَعْبَةٍ مِنَ النَّبْلِ فَيَقُولُ انْثُرْهَا لأَبِي طَلْحَةَ. قَالَ وَيُشْرِفُ النَّبِيُّ صلى الله عليه وسلم يَنْظُرُ إِلَى الْقَوْمِ، فَيَقُولُ أَبُو طَلْحَةَ بِأَبِي أَنْتَ وَأُمِّي، لاَ تُشْرِفْ يُصِيبُكَ سَهْمٌ مِنْ سِهَامِ الْقَوْمِ، نَحْرِي دُونَ نَحْرِكَ. وَلَقَدْ رَأَيْتُ عَائِشَةَ بِنْتَ أَبِي بَكْرٍ وَأُمَّ سُلَيْمٍ، وَإِنَّهُمَا لَمُشَمِّرَتَانِ أَرَى خَدَمَ سُوقِهِمَا تَنْقُزَانِ الْقِرَبَ عَلَى مُتُونِهِمَا، تُفْرِغَانِهِ فِي أَفْوَاهِ الْقَوْمِ ثُمَّ تَرْجِعَانِ فَتَمْلآنِهَا، ثُمَّ تَجِيئَانِ فَتُفْرِغَانِهِ فِي أَفْوَاهِ الْقَوْمِ، وَلَقَدْ وَقَعَ السَّيْفُ مِنْ يَدَىْ أَبِي طَلْحَةَ إِمَّا مَرَّتَيْنِ وَإِمَّا ثَلاَثًا.
பாடம் : 18 “அப்போது உங்களில் இரு குழுவினர் தைரியமிழந்து (திரும்பி)விட நினைத்தனர். ஆனால், அவர்களுக்கு அல்லாஹ் உதவியாள(னாய் இருந்தா)ன். இறைநம்பிக்கை கொண்ட (அ)வர்கள் அல்லாஹ்வின் மீதே முழு நம்பிக்கை வைத்திருக்கட்டும்” (எனும் (3:122ஆவது) இறைவசனம்119
4064. அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது:

உஹுத் போரின்போது நபி (ஸல்) அவர்களை (தனியே) விட்டுவிட்டு மக்கள் தோற்று (ஓடி)விட்டனர். அபூதல்ஹா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களைத் தமது தோல் கேடயத்தால் மறைத்துக்கொண்டு பாதுகாத்தபடி நின்றார்கள்.

மேலும், அபூதல்ஹா (ரலி) அவர்கள் வில்லின் நாணை நன்கு இழுத்து வேகமாக அம்பெய்யக்கூடியவர்களாக இருந்தார்கள். அன்று அவர்கள், இரண்டு அல்லது மூன்று வில்களை உடைத்துவிட்டார்கள். எவரேனும் ஒரு மனிதர் அம்புக் கூட்டுடன் செல்வதைக் கண்டால் நபி (ஸல்) அவர்கள், “அதை அபூதல்ஹாவிடம் போடு” என்று சொல்வார்கள்.

அந்த நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் மேலேயிருந்து மக்களை (தலையை உயர்த்தி) எட்டிப் பார்க்க, அபூதல்ஹா அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும். எட்டிப் பார்க்காதீர்கள். எதிரிகளின் அம்புகளில் ஏதேனும் ஒன்று தங்களைத் தாக்கிவிடலாம். (தாங்கள் எட்டிப் பார்க்காமலிருந்தால்) என் மார்பு தங்கள் மார்புக்கு முன்னால் (கேடயம் போன்று உங்களுக்குப் பாதுகாப்பாக) இருக்கும்” என்று சொன்னார்கள்.

அபூபக்ர் (ரலி) அவர்களின் மகள் ஆயிஷா (ரலி) அவர்களும் (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களும் (காயமுற்றவர்களுக்கு) மும்முரமாக (பணிவிடைகள் செய்துகொண்டு) இருப்பதை நான் கண்டேன்.

அவர்கள் (தண்ணீர் நிரம்பிய தோல்பைகளைத் தங்கள் முதுகுகளில் சுமந்துகொண்டு எடுத்துச் சென்று (காயமுற்று வீழ்ந்துகிடக்கும்) மக்களின் வாய்களில் ஊற்றிவிட்டு, பிறகு திரும்பிச் சென்று, அவற்றை (மீண்டும்) நிரப்பிக் கொண்டுவந்து, அவர்களுடைய வாய்களில் மீண்டும் ஊற்றிக்கொண்டிருக்கும் நிலையில் அவர்களின் கால் கொலுசுகளை நான் கண்டேன். அபூதல்ஹா (ரலி) அவர்களின் கரத்திலிருந்து இரு முறையோ மும்முறையோ வாள் (கீழே தவறி) விழுந்தது.128


அத்தியாயம் : 64
4065. حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ لَمَّا كَانَ يَوْمَ أُحُدٍ هُزِمَ الْمُشْرِكُونَ، فَصَرَخَ إِبْلِيسُ لَعْنَةُ اللَّهِ عَلَيْهِ أَىْ عِبَادَ اللَّهِ أُخْرَاكُمْ. فَرَجَعَتْ أُولاَهُمْ فَاجْتَلَدَتْ هِيَ وَأُخْرَاهُمْ فَبَصُرَ حُذَيْفَةُ فَإِذَا هُوَ بِأَبِيهِ الْيَمَانِ فَقَالَ أَىْ عِبَادَ اللَّهِ أَبِي أَبِي. قَالَ قَالَتْ فَوَاللَّهِ مَا احْتَجَزُوا حَتَّى قَتَلُوهُ فَقَالَ حُذَيْفَةُ يَغْفِرُ اللَّهُ لَكُمْ. قَالَ عُرْوَةُ فَوَاللَّهِ مَا زَالَتْ فِي حُذَيْفَةَ بَقِيَّةُ خَيْرٍ حَتَّى لَحِقَ بِاللَّهِ. بَصُرْتُ عَلِمْتُ، مِنَ الْبَصِيرَةِ فِي الأَمْرِ، وَأَبْصَرْتُ مِنْ بَصَرِ الْعَيْنِ وَيُقَالُ بَصُرْتُ وَأَبْصَرْتُ وَاحِدٌ.
பாடம் : 18 “அப்போது உங்களில் இரு குழுவினர் தைரியமிழந்து (திரும்பி)விட நினைத்தனர். ஆனால், அவர்களுக்கு அல்லாஹ் உதவியாள(னாய் இருந்தா)ன். இறைநம்பிக்கை கொண்ட (அ)வர்கள் அல்லாஹ்வின் மீதே முழு நம்பிக்கை வைத்திருக்கட்டும்” (எனும் (3:122ஆவது) இறைவசனம்119
4065. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

உஹுத் போரின் (தொடக்கத்தின்)போது இணைவைப்பாளர்கள் தோற்கடிக்கப் பட்டனர். அப்போது இப்லீஸ்,-அல்லாஹ் அவனைத் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக!- “அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்குப் பின்னால்இருப்பவர்களைக் கவனியுங்கள்” என்று கத்தினான். உடனே, முஸ்óம்களில் முன் அணியினர் (எதிரிகள் என்றெண்ணி, பின்அணியினரை நோக்கித்) திரும்பிச் செல்ல, பின்அணியினருடன் (மோதலேற் பட்டுப்) போரிட்டுக்கொண்டனர்.

அப்போது ஹுதைஃபா (ரலி) அவர்கள், தம் தந்தை “அல்யமான்' அவர்கள் அங்கே (முஸ்லிம்களின் தாக்குதலுக்கு ஆளாக) இருப்பதைக் கண்டார்கள். ஆகவே, “அல்லாஹ்வின் அடியார்களே! என் தந்தை! என் தந்தை!” என்று (உரக்கக்) கூவினார்கள்.

(ஆனால்) அல்லாஹ்வின் மீதாணை யாக! அவரைக் கொன்ற பின்புதான் அவர்கள் (அவரைவிட்டு) நகர்ந்தார்கள். அப்போது ஹுதைஃபா (ரலி) அவர்கள் (தம் தந்தையைக் கொன்றவர்களை நோக்கி), “அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

அல்லாஹ்வின் மீதாணையாக! ஹுதைஃபா (ரலி) அவர்கள் (இவ்வாறு மன்னித்ததால் அவர்கள்) அல்லாஹ்வைச் சந்திக்கும்வரை அவர்களிடம் நல்ல பலன் இருந்துகொண்டேயிருந்தது.129

(இங்கு ஹ‚தைஃபா (ரலி) அவர்கள் தம் தந்தையை “கண்டார்கள்' என்பதைக் குறிக்க “பஸ‚ர' எனும் சொல் ஆளப்பட்டுள்ளது.)

“பஸ‚ர்த்து' என்பது ஒரு காரியத்தில் ஒருவருக்குள்ள “அகப் பார்வையை'க் குறிக்கும். “அப்ஸர்த்து' என்பது கண்ணால் பார்க்கும் “புறப் பார்வையை'க் குறிக்கும். சிலர், பஸ‚ர்த்து, அப்ஸர்த்து இரண்டும் ஒன்றே என்பர்.

அத்தியாயம் : 64