3826. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ، حَدَّثَنَا فُضَيْلُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، رضى الله عنهما أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَقِيَ زَيْدَ بْنَ عَمْرِو بْنِ نُفَيْلٍ بِأَسْفَلِ بَلْدَحَ، قَبْلَ أَنْ يَنْزِلَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم الْوَحْىُ فَقُدِّمَتْ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم سُفْرَةٌ، فَأَبَى أَنْ يَأْكُلَ مِنْهَا ثُمَّ قَالَ زَيْدٌ إِنِّي لَسْتُ آكُلُ مِمَّا تَذْبَحُونَ عَلَى أَنْصَابِكُمْ، وَلاَ آكُلُ إِلاَّ مَا ذُكِرَ اسْمُ اللَّهِ عَلَيْهِ. وَأَنَّ زَيْدَ بْنَ عَمْرٍو كَانَ يَعِيبُ عَلَى قُرَيْشٍ ذَبَائِحَهُمْ، وَيَقُولُ الشَّاةُ خَلَقَهَا اللَّهُ، وَأَنْزَلَ لَهَا مِنَ السَّمَاءِ الْمَاءَ، وَأَنْبَتَ لَهَا مِنَ الأَرْضِ، ثُمَّ تَذْبَحُونَهَا عَلَى غَيْرِ اسْمِ اللَّهِ إِنْكَارًا لِذَلِكَ وَإِعْظَامًا لَهُ.
பாடம் : 24 ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் அவர்களைப் பற்றிய செய்தி62
3826. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், தமக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப்படுவதற்கு முன்பு கீழ் “பல்தஹில்'63 ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் அவர்களைச் சந்தித்தார்கள். அப்போது (குறைஷியரின்) பயண உணவு ஒன்று நபி (ஸல்) அவர்கள் முன்னிலையில் பரிமாறப்பட்டது. அந்த உணவை ஸைத் பின் அம்ர் உண்ண மறுத்துவிட்டார்.

பிறகு ஸைத் (உணவைப் பரிமாறிய குறைஷியரிடம்), “நீங்கள் உங்கள் (சிலைகளுக்குப் பலியிடும்) பலிபீடக் கற்களில் வைத்து அறுப்பவற்றை நான் உண்ணமாட்டேன். (அறுக்கும்போது) அல்லாஹ்வின் பெயர் எதன்மீது கூறப் பட்டதோ அதைத் தவிர வேறெதையும் உண்ணமாட்டேன்” என்று சொன்னார்கள்.

ஸைத் பின் அம்ர் அவர்கள், குறைஷி யரால் (சிலைகளுக்காக) அறுக்கப்பட்ட வற்றைக் குறைகூறிவந்தார்கள். மேலும், “ஆட்டை அல்லாஹ்வே படைத்தான்; அதற்காக வானத்திலிருந்து தண்ணீரைப் பொழிந்தான்; அதற்காக பூமியிலிருந்து (புற்பூண்டுகளை) முளைக்கச்செய்தான். (இத்தனைக்கும்) பிறகு நீங்கள் அல்லாஹ் வின் பெயரல்லாத மற்ற (கற்பனைத் தெய்வங்களின்) பெயர் சொல்லி அதை அறுக்கிறீர்கள்; இறைவனின் அருட் கொடையை நிராகரிக்கும் விதத்திலும் அல்லாஹ் அல்லாதவரை கண்ணியப் படுத்தும் விதத்திலும் இப்படிச் செய்கிறீர் கள்” என்று கூறிவந்தார்கள்.


அத்தியாயம் : 63
3827. قَالَ مُوسَى حَدَّثَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، وَلاَ أَعْلَمُهُ إِلاَّ تُحُدِّثَ بِهِ عَنِ ابْنِ عُمَرَ أَنَّ زَيْدَ بْنَ عَمْرِو بْنِ نُفَيْلٍ خَرَجَ إِلَى الشَّأْمِ، يَسْأَلُ عَنِ الدِّينِ وَيَتْبَعُهُ فَلَقِيَ عَالِمًا مِنَ الْيَهُودِ، فَسَأَلَهُ عَنْ دِينِهِمْ، فَقَالَ إِنِّي لَعَلِّي أَنْ أَدِينَ دِينَكُمْ، فَأَخْبِرْنِي. فَقَالَ لاَ تَكُونُ عَلَى دِينِنَا حَتَّى تَأْخُذَ بِنَصِيبِكَ مِنْ غَضَبِ اللَّهِ. قَالَ زَيْدٌ مَا أَفِرُّ إِلاَّ مِنْ غَضَبِ اللَّهِ، وَلاَ أَحْمِلُ مِنْ غَضَبِ اللَّهِ شَيْئًا أَبَدًا، وَأَنَّى أَسْتَطِيعُهُ فَهَلْ تَدُلُّنِي عَلَى غَيْرِهِ قَالَ مَا أَعْلَمُهُ إِلاَّ أَنْ يَكُونَ حَنِيفًا. قَالَ زَيْدٌ وَمَا الْحَنِيفُ قَالَ دِينُ إِبْرَاهِيمَ لَمْ يَكُنْ يَهُودِيًّا وَلاَ نَصْرَانِيًّا وَلاَ يَعْبُدُ إِلاَّ اللَّهَ. فَخَرَجَ زَيْدٌ فَلَقِيَ عَالِمًا مِنَ النَّصَارَى، فَذَكَرَ مِثْلَهُ، فَقَالَ لَنْ تَكُونَ عَلَى دِينِنَا حَتَّى تَأْخُذَ بِنَصِيبِكَ مِنْ لَعْنَةِ اللَّهِ. قَالَ مَا أَفِرُّ إِلاَّ مِنْ لَعْنَةِ اللَّهِ، وَلاَ أَحْمِلُ مِنْ لَعْنَةِ اللَّهِ وَلاَ مِنْ غَضَبِهِ شَيْئًا أَبَدًا، وَأَنَّى أَسْتَطِيعُ فَهَلْ تَدُلُّنِي عَلَى غَيْرِهِ قَالَ مَا أَعْلَمُهُ إِلاَّ أَنْ يَكُونَ حَنِيفًا. قَالَ وَمَا الْحَنِيفُ قَالَ دِينُ إِبْرَاهِيمَ لَمْ يَكُنْ يَهُودِيًّا وَلاَ نَصْرَانِيًّا وَلاَ يَعْبُدُ إِلاَّ اللَّهَ. فَلَمَّا رَأَى زَيْدٌ قَوْلَهُمْ فِي إِبْرَاهِيمَ ـ عَلَيْهِ السَّلاَمُ ـ خَرَجَ، فَلَمَّا بَرَزَ رَفَعَ يَدَيْهِ فَقَالَ اللَّهُمَّ إِنِّي أَشْهَدُ أَنِّي عَلَى دِينِ إِبْرَاهِيمَ.
பாடம் : 24 ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் அவர்களைப் பற்றிய செய்தி62
3827. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல், (நபித்துவக் காலத்திற்கு முன்பு) ஏகத்துவ மார்க்கத்தைப் பற்றி விசாரித்துப் பின்பற்றுவதற்காக ஷாம் (சிரியா) நாட்டை நோக்கிப் புறப்பட்டார். அப்போது யூத அறிஞர் ஒருவரைச் சந்தித்து யூதர்களின் மார்க்கத்தைப் பற்றி அவரிடம் விசாரித்தார்.

அந்த அறிஞரிடம், “நான் உங்கள் மார்க்கத்தை ஏற்றுப் பின்பற்றக்கூடும். ஆகவே, எனக்கு (அதைப் பற்றித்) தெரிவியுங்கள்” என்று சொன்னார். அதற்கு அந்த அறிஞர், “அல்லாஹ்வின் கோபத்தில் உனக்குள்ள பங்கை நீ எடுத்துக்(கொண்டு அதற்காக வேதனையை அனுபவித்துக்)கொள்ளாத வரை நீ எங்கள் மார்க்கத்தில் இருக்க முடியாது” என்று சொன்னார்.

ஸைத் அவர்கள், “நான் அல்லாஹ்வின் கோபத்திலிருந்துதானே வெருண்டோடி வருகிறேன்! மேலும், அல்லாஹ்வின் கோபத்தில் சிறிதளவைக்கூட ஒருபோதும் நான் தாங்கமாட்டேன். என்னால் எப்படி அதைத் தாங்க முடியும்? வேறெந்த மார்க்கத்தையாவது எனக்கு அறிவித்துத் தர முடியுமா?” என்று கேட்டார். அந்த அறிஞர், “அது (ஏகத்துவ மார்க்கமான) நேரிய மார்க்கம் (ஹனீஃப்) ஆகத் தவிர வேறொன்றாக இருக்க முடியாது என்பதை நான் நன்கறிவேன்” என்று பதிலளித்தார். ஸைத் அவர்கள், “நேரிய மார்க்கம் என்றால் என்ன?” என்று கேட்டார்.

அதற்கு அந்த அறிஞர், “அது இப்ராஹீம் (அலை) அவர்களின் மார்க்கம். அவர்கள் யூதராகவும் இருக்கவில்லை. கிறித்தவராகவும் இருக்கவில்லை. மேலும், அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் அவர்கள் வழிபடமாட்டார்கள்” என்று சொன்னார்.

(மீண்டும்) புறப்பட்டுச் சென்று கிறித்தவ அறிஞர் ஒருவரைச் சந்தித்தார். அவரும் யூத அறிஞரைப் போலவே, “அல்லாஹ்வின் (கருணையைவிட்டு அப்புறப்படுத்தப்படும்) சாபத்தில் உனக்குள்ள பங்கை நீ எடுத்துக்கொள்ளாத வரை நீ எங்கள் மார்க்கத்தில் இருக்க முடியாது” என்று சொன்னார். ஸைத் அவர்கள், “அல்லாஹ்வின் சாபத்திலிருந்துதானே நான் வெருண்டோடி வருகின்றேன். அல்லாஹ்வின் சாபத்திலிருந்தும் அவனது கோபத்திலிருந்தும் சிறிதளவைக்கூட ஒருபோதும் நான் தாங்கமாட்டேன். (அவற்றை) எப்படி என்னால் தாங்க முடியும்? வேறெந்த மார்க்கத்தையாவது எனக்கு நீங்கள் அறிவித்துத் தருவீர்களா?” என்று கேட்க, அதற்கு அவர், “நேரிய (ஏகத்துவ) மார்க்கமாகத்தான் அது இருக்குமென்பதை நான் நன்கறிவேன்” என்று சொன்னார்.

ஸைத் அவர்கள், “நேரிய மார்க்கம் என்றால் என்ன?” என்று கேட்டார். அதற்கு அந்த அறிஞர், “இப்ராஹீம் (அலை) அவர்களின் மார்க்கம். அவர்கள் யூதராகவோ கிறித்தவராகவோ இருக்கவில்லை. மேலும் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் அவர்கள் வழிபடமாட்டார்கள்” என்று பதிலளித்தார். ஸைத் அவர்கள் அந்த அறிஞர்கள் இப்ராஹீம் (அலை) அவர் களின் மார்க்கத்தைப் பற்றிக் கூறியதைக் கண்டபோது, (அவர்களிடமிருந்து) புறப்பட்டு வெளியே வந்ததும் தம் கைகளை உயர்த்தி, “இறைவா! நான் இப்ராஹீம் (அலை) அவர்களுடைய (ஏகத்துவ) மார்க்கத்தில் உள்ளேன் என்று உறுதிகூறுகிறேன்” எனச் சொன்னார்.


அத்தியாயம் : 63
3828. وَقَالَ اللَّيْثُ كَتَبَ إِلَىَّ هِشَامٌ عَنْ أَبِيهِ، عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ ـ رضى الله عنهما ـ قَالَتْ رَأَيْتُ زَيْدَ بْنَ عَمْرِو بْنِ نُفَيْلٍ قَائِمًا مُسْنِدًا ظَهْرَهُ إِلَى الْكَعْبَةِ يَقُولُ يَا مَعَاشِرَ قُرَيْشٍ، وَاللَّهِ مَا مِنْكُمْ عَلَى دِينِ إِبْرَاهِيمَ غَيْرِي، وَكَانَ يُحْيِي الْمَوْءُودَةَ، يَقُولُ لِلرَّجُلِ إِذَا أَرَادَ أَنْ يَقْتُلَ ابْنَتَهُ لاَ تَقْتُلْهَا، أَنَا أَكْفِيكَهَا مَئُونَتَهَا. فَيَأْخُذُهَا فَإِذَا تَرَعْرَعَتْ قَالَ لأَبِيهَا إِنْ شِئْتَ دَفَعْتُهَا إِلَيْكَ، وَإِنْ شِئْتَ كَفَيْتُكَ مَئُونَتَهَا.
பாடம் : 24 ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் அவர்களைப் பற்றிய செய்தி62
3828. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் அவர்கள் (நபித்துவக் காலத்திற்கு முன்பு) இறையில்லம் கஅபாவின் மீது சாய்ந்து கொண்டு நின்றபடி, “குறைஷிக் குலத்தாரே! அல்லாஹ்வின் மீதாணையாக! என்னைத் தவிர உங்களில் எவரும் இப்ராஹீம் (அலை) அவர்களுடைய மார்க்கத்தின் படி நடக்கவில்லை” என்று சொல்லிக் கொண்டி ருந்ததை நான் பார்த்தேன்.

மேலும், அவர், உயிரோடு புதைக்கப் படவிருந்த பெண் குழந்தைகளைக் காப்பாற்றி வாழவைத்துவந்தார். எவரேனும் தம் பெண்மகவைக் கொல்ல நாடினால் அவரிடம், “அவளைக் கொல்லாதே. அவளுடைய செலவுக்கு உன்னிடம் நான் பொறுப்பேற்கிறேன்” என்று சொல்லிவிட்டு, அந்தப் பெண் குழந்தையை (தாமே வளர்க்க) எடுத்துக்கொள்வார்.

அவள் வளர்ந்ததும் அவளுடைய தந்தையிடம் (சென்று), “நீ விரும்பினால் இவளை உன்னிடம் ஒப்படைத்துவிடுகிறேன்; நீ விரும்பினால் அவளது செலவுக்குப் பொறுப்பேற்று (பழையபடி நானே பராமரித்து)க்கொள்கிறேன்” என்று சொல்வார்.

அத்தியாயம் : 63
3829. حَدَّثَنِي مَحْمُودٌ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ أَخْبَرَنِي ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرُو بْنُ دِينَارٍ، سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ لَمَّا بُنِيَتِ الْكَعْبَةُ ذَهَبَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَعَبَّاسٌ يَنْقُلاَنِ الْحِجَارَةَ، فَقَالَ عَبَّاسٌ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم اجْعَلْ إِزَارَكَ عَلَى رَقَبَتِكَ يَقِيكَ مِنَ الْحِجَارَةِ، فَخَرَّ إِلَى الأَرْضِ، وَطَمَحَتْ عَيْنَاهُ إِلَى السَّمَاءِ ثُمَّ أَفَاقَ فَقَالَ "" إِزَارِي إِزَارِي "". فَشَدَّ عَلَيْهِ إِزَارَهُ.
பாடம் : 25 கஅபாவைக் கட்டுதல்64
3829. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நபியவர்களின் காலத்தில் குறைஷி யரால்) கஅபா (புதுப்பித்துக்) கட்டப்பட்ட போது நபி (ஸல்) அவர்களும் அப்பாஸ் (ரலி) அவர்களும் கற்களை(ச் சுமந்து) எடுத்து வந்துகொண்டிருந்தார்கள். அப்போது அப்பாஸ் (ரலி) அவர்கள் (சிறுவரான) நபி (ஸல்) அவர்களிடம், “உங்கள் கீழங்கியை (அவிழ்த்து) உங்கள் பிடரிக்குமேல் வைத்துக்கொள்ளுங்கள். கல்லி(ன் சுமையால் ஏற்படும் வலியி)லிருந்து அது உங்களைக் காக்கும்” என்று சொன்னார்கள்.

(நபி (ஸல்) அவர்கள் அப்படிச் செய்ய முனைந்தபோது) அவர்கள் பூமியில் (மூர்ச்சையாகி) விழுந்துவிட்டார்கள். அவர்களுடைய இரு கண்களும் வானத்தை நோக்கியபடி நிலைகுத்தி நின்றுவிட்டன.

பிறகு மூர்ச்சை தெளிந்ததும், “என் கீழங்கி, என் கீழங்கி” என்று கேட்கலானார்கள். (கீழங்கி தரப்பட்ட) உடனே அதை இறுக்கமாகக் கட்டிக்கொண்டார்கள்.65


அத்தியாயம் : 63
3830. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، وَعُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي يَزِيدَ، قَالاَ لَمْ يَكُنْ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم حَوْلَ الْبَيْتِ حَائِطٌ، كَانُوا يُصَلُّونَ حَوْلَ الْبَيْتِ، حَتَّى كَانَ عُمَرُ، فَبَنَى حَوْلَهُ حَائِطًا ـ قَالَ عُبَيْدُ اللَّهِ ـ جَدْرُهُ قَصِيرٌ، فَبَنَاهُ ابْنُ الزُّبَيْرِ.
பாடம் : 25 கஅபாவைக் கட்டுதல்64
3830. அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களும் உபைதுல்லாஹ் பின் அபீயஸீத் (ரஹ்) அவர்களும் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் (இறையில்லமான) பைத்துல் ஹராமைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் இருந்ததில்லை.66 மக்கள் இறையில்லத்தைச் சுற்றிலும் தொழுதுவந்தார்கள். உமர் (ரலி) அவர் களுடைய ஆட்சிக் காலம் வந்தபோது அதைச் சுற்றிலும் சுறறுச் சுவர் கட்டி னார்கள்.

அறிவிப்பாளர் உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்கள், “அந்தச் சுவர் குட்டையாக இருந்தது. பிறகு அதை (அப்துல்லாஹ்) இப்னுஸ் ஸுபைர் (ரலி) அவர்கள் (உயர்த்திக்) கட்டினார்கள்” என்று கூறுகி றார்கள்.

அத்தியாயம் : 63
3831. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، قَالَ هِشَامٌ حَدَّثَنِي أَبِي، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ عَاشُورَاءُ يَوْمًا تَصُومُهُ قُرَيْشٌ فِي الْجَاهِلِيَّةِ، وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَصُومُهُ، فَلَمَّا قَدِمَ الْمَدِينَةَ صَامَهُ وَأَمَرَ بِصِيَامِهِ، فَلَمَّا نَزَلَ رَمَضَانُ كَانَ مَنْ شَاءَ صَامَهُ، وَمَنْ شَاءَ لاَ يَصُومُهُ.
பாடம் : 26 அறியாமைக் காலம்67
3831. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாள் என்பது அறியாமைக் காலத்தில் குறைஷி யர் நோன்பு நோற்கின்ற நாளாக இருந்துவந்தது. நபி (ஸல்) அவர்களும் அந்த நாளில் நோன்பு நோற்றுவந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்குச் சென்ற போது அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்கும்படி (முஸ்லிம் களுக்கு) உத்தரவுமிட்டார்கள்.

ரமளான் (நோன்பின் கட்டளை) வந்தபோது68 ஆஷூரா தினம், விரும்பி யவர்கள் நோன்பு நோற்கவும் செய்யலாம்; விரும்பாதவர்கள் நோன்பு நோற்காமலும் இருக்கலாம் என்ற நிலைக்கு வந்து விட்டது.69


அத்தியாயம் : 63
3832. حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا ابْنُ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ كَانُوا يَرَوْنَ أَنَّ الْعُمْرَةَ فِي أَشْهُرِ الْحَجِّ مِنَ الْفُجُورِ فِي الأَرْضِ، وَكَانُوا يُسَمُّونَ الْمُحَرَّمَ صَفَرًا وَيَقُولُونَ إِذَا بَرَا الدَّبَرْ، وَعَفَا الأَثَرْ، حَلَّتِ الْعُمْرَةُ لِمَنِ اعْتَمَرْ. قَالَ فَقَدِمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَصْحَابُهُ رَابِعَةً مُهِلِّينَ بِالْحَجِّ وَأَمَرَهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يَجْعَلُوهَا عُمْرَةً. قَالُوا يَا رَسُولَ اللَّهِ، أَىُّ الْحِلِّ قَالَ "" الْحِلُّ كُلُّهُ "".
பாடம் : 26 அறியாமைக் காலம்67
3832. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“ஹஜ்ஜுடைய மாதங்களில் (ஹஜ் மட்டுமே செய்ய வேண்டும்; அம்மாதங் களில்) உம்ரா செய்வது பூமியில் நடக்கும் பாவகரமான செயல்களில் ஒன்று' என (அறியாமைக் கால) மக்கள் கருதிக் கொண்டிருந்தார்கள். (போரிடுவது தடை செய்யப்பட்ட நான்கு மாதங்களில் துல்கஅதா, துல்ஹிஜ்ஜா, முஹர்ரம் ஆகிய மூன்று மாதங்கள் தொடர்ந்து வந்ததால் சலிப்புற்று முஹர்ரம் மாதத்திற்கான தடையை அவர்கள் ஸஃபர் மாதத்திற்கு மாற்றி) ஸஃபருக்கு “முஹர்ரம்' என்று பெயர் சூட்டிவந்தார்கள்.

“(ஹஜ் பயணத்துக்கான சுமையைச் சுமந்த ஒட்டகங்களின் முதுகில்) வடு மறைந்து காலடித்தடங்கள் அழிந்து ஸஃபர் மாதம் கழிந்தால் உம்ரா செய்யலாம்; உம்ரா செய்பவர்” என்று கூறிவந்தனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் (துல்ஹிஜ்ஜா மாதம்) நான்காம் நாள் காலை, ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டிக்கொண்டு (மதீனாவிலிருந்து) மக்கா நகருக்கு வந்தபோது நபி (ஸல்) அவர்கள், மக்கள் தம் இஹ்ராமை உம்ராவிற்குரியதாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கட்டளை யிட்டார்கள்.

அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! (இவ்வாறு உம்ராவிற்குப் பிறகு) இஹ்ராமிóருந்து விடுபடுவதால் எந்தச் செயல்கள் அனுமதிக்கப்படும்?” எனக் கேட்டனர். அதற்கு, “(இஹ்ராம் கட்டிய வருக்கு விலக்கப்பட்டிருந்த) அனைத்து செயல்களும் அனுமதிக்கப்படும்”70 என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.


அத்தியாயம் : 63
3833. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ كَانَ عَمْرٌو يَقُولُ حَدَّثَنَا سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ جَاءَ سَيْلٌ فِي الْجَاهِلِيَّةِ فَكَسَا مَا بَيْنَ الْجَبَلَيْنِ. قَالَ سُفْيَانُ وَيَقُولُ إِنَّ هَذَا لَحَدِيثٌ لَهُ شَأْنٌ.
பாடம் : 26 அறியாமைக் காலம்67
3833. ஹஸ்ன் பின் அபீவஹ்ப் அல் முஹாஜிரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(இஸ்லாத்திற்கு முந்தைய) அறியா மைக் காலத்தில் (ஒருமுறை) பெருவெள்ளம் ஒன்று (பெருக்கெடுத்து) வந்து (மக்காவின்) இரு மலைகளையும் மூடிக்கொண்டது.

இதை சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் தம் தந்தை முசய்யப் பின் ஹஸ்ன் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக் கிறார்கள்.

சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

“இது பெரியதொரு நிகழ்ச்சியை விவரிக்கும் அறிவிப்பாகும்” என்று அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.71


அத்தியாயம் : 63
3834. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ بَيَانٍ أَبِي بِشْرٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، قَالَ دَخَلَ أَبُو بَكْرٍ عَلَى امْرَأَةٍ مِنْ أَحْمَسَ يُقَالُ لَهَا زَيْنَبُ، فَرَآهَا لاَ تَكَلَّمُ، فَقَالَ مَا لَهَا لاَ تَكَلَّمُ قَالُوا حَجَّتْ مُصْمِتَةً. قَالَ لَهَا تَكَلَّمِي، فَإِنَّ هَذَا لاَ يَحِلُّ، هَذَا مِنْ عَمَلِ الْجَاهِلِيَّةِ. فَتَكَلَّمَتْ، فَقَالَتْ مَنْ أَنْتَ قَالَ امْرُؤٌ مِنَ الْمُهَاجِرِينَ. قَالَتْ أَىُّ الْمُهَاجِرِينَ قَالَ مِنْ قُرَيْشٍ. قَالَتْ مِنْ أَىِّ قُرَيْشٍ أَنْتَ قَالَ إِنَّكِ لَسَئُولٌ أَنَا أَبُو بَكْرٍ. قَالَتْ مَا بَقَاؤُنَا عَلَى هَذَا الأَمْرِ الصَّالِحِ الَّذِي جَاءَ اللَّهُ بِهِ بَعْدَ الْجَاهِلِيَّةِ قَالَ بَقَاؤُكُمْ عَلَيْهِ مَا اسْتَقَامَتْ بِكُمْ أَئِمَّتُكُمْ. قَالَتْ وَمَا الأَئِمَّةُ قَالَ أَمَا كَانَ لِقَوْمِكِ رُءُوسٌ وَأَشْرَافٌ يَأْمُرُونَهُمْ فَيُطِيعُونَهُمْ قَالَتْ بَلَى. قَالَ فَهُمْ أُولَئِكَ عَلَى النَّاسِ.
பாடம் : 26 அறியாமைக் காலம்67
3834. கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூபக்ர் (ரலி) அவர்கள் “ஸைனப்' என்றழைக்கப்படும் “அஹ்மஸ்' குலத்துப் பெண்ணொருத்தியிடம் (அவளது இல்லத்துக்குச்) சென்றார்கள். அவளை (மௌன விரதம் பூண்டு) பேசாமலிருப்பவளாகக் கண்டார்கள். உடனே, “இவளுக்கென்ன ஆயிற்று? ஏன் பேசாமலிருக்கிறாள்?” என்று கேட்டார்கள். மக்கள், “(இவள் ஹஜ் செய்யும்வரை) எவருடனும் பேசமாட்டேன் என்று நேர்ச்சை செய்திருக்கிறாள்” என்று சொன்னார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் அவளிடம், “நீ பேசு. ஏனெனில் இ(வ்வாறு மௌனவிரதம் பூணுவ)து அனுமதிக்கப் பட்ட செயலன்று; இது அறியாமைக் காலச் செயலாகும்” என்று சொன்னார்கள்.

ஆகவே, அவள் (மௌன விரதத்தைக் கலைத்துப்) பேசினாள். “நீங்கள் யார்?” என்று கேட்டாள். அபூபக்ர் (ரலி) அவர்கள், “முஹாஜிர்களில் ஒருவன்” என்று பதிலளித் தார்கள். அப்பெண், “முஹாஜிர்களில் நீங்கள் எந்தக் குலத்தைச் சேர்ந்தவர்?” என்று கேட்க, அபூபக்ர் (ரலி) அவர்கள், “குறைஷிக் குலத்தைச் சேர்ந்தவன்” என்று பதிலளித்தார்கள். அப்பெண், “குறைஷி யரில் நீங்கள் எந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்?” என்று கேட்க, அபூபக்ர் (ரலி) அவர்கள், “நீ அதிகமாகக் கேள்வி கேட்கிறாயே? நான்தான் அபூபக்ர்” என்று பதிலளித்தார்கள்.

அப்பெண், “அறியாமைக் காலத்திற் குப் பிறகு எங்களிடம் வந்த இந்த (இஸ்லாம் எனும்) நல்ல நிலையில் நாங்கள் நீடித்து நிலைத்திருக்க வழி யாது?” என்று கேட்டாள். அபூபக்ர் (ரலி) அவர்கள், “உங்கள் தலைவர்கள் உங்களைச் சீராக நிர்வகித்து வரும்வரை அதில் நீங்கள் நீடித்து நிலைத்திருப்பீர்கள்” என்று பதிலளித்தார்கள்.

அந்தப் பெண், “அந்தத் தலைவர்கள் யார்?” என்று கேட்க, அபூபக்ர் (ரலி) அவர்கள், “உங்கள் சமுதாயத்தாருக்குக் கட்டளையிடவும், அதற்கு அவர்கள் கீழ்ப்படியவும் செய்கின்ற தலைவர்களும் முக்கியஸ்தர்களும் உங்களுக்கு இல்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண், “ஆம், இருக்கிறார்கள்” என்று பதிலளித்தாள். அபூபக்ர் (ரலி) அவர்கள், “அவர்கள்தான் மக்களின் தலைவர்கள்” என்று சொன்னார்கள்.


அத்தியாயம் : 63
3835. حَدَّثَنِي فَرْوَةُ بْنُ أَبِي الْمَغْرَاءِ، أَخْبَرَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ أَسْلَمَتِ امْرَأَةٌ سَوْدَاءُ لِبَعْضِ الْعَرَبِ، وَكَانَ لَهَا حِفْشٌ فِي الْمَسْجِدِ قَالَتْ فَكَانَتْ تَأْتِينَا فَتَحَدَّثُ عِنْدَنَا فَإِذَا فَرَغَتْ مِنْ حَدِيثِهَا قَالَتْ وَيَوْمُ الْوِشَاحِ مِنْ تَعَاجِيبِ رَبِّنَا أَلاَ إِنَّهُ مِنْ بَلْدَةِ الْكُفْرِ أَنْجَانِي فَلَمَّا أَكْثَرَتْ قَالَتْ لَهَا عَائِشَةُ وَمَا يَوْمُ الْوِشَاحِ قَالَتْ خَرَجَتْ جُوَيْرِيَةٌ لِبَعْضِ أَهْلِي، وَعَلَيْهَا وِشَاحٌ مِنْ أَدَمٍ فَسَقَطَ مِنْهَا، فَانْحَطَّتْ عَلَيْهِ الْحُدَيَّا وَهْىَ تَحْسِبُهُ لَحْمًا، فَأَخَذَتْ فَاتَّهَمُونِي بِهِ فَعَذَّبُونِي، حَتَّى بَلَغَ مِنْ أَمْرِي أَنَّهُمْ طَلَبُوا فِي قُبُلِي، فَبَيْنَا هُمْ حَوْلِي وَأَنَا فِي كَرْبِي إِذْ أَقْبَلَتِ الْحُدَيَّا حَتَّى وَازَتْ بِرُءُوسِنَا ثُمَّ أَلْقَتْهُ، فَأَخَذُوهُ فَقُلْتُ لَهُمْ هَذَا الَّذِي اتَّهَمْتُمُونِي بِهِ وَأَنَا مِنْهُ بَرِيئَةٌ.
பாடம் : 26 அறியாமைக் காலம்67
3835. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஓர் அரபுக் கோத்திரத்திற்குச் சொந்த மான கறுப்பு (நிற அடிமைப்) பெண் ஒருத்தி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டாள். அவளுக்குப் பள்ளிவாசலில் சிறிய (தங்கும்) அறையொன்று இருந்தது. அவள் எங்களிடம் வந்து பேசிக்கொண்டி ருப்பாள்.

அவள் பேசி முடிக்கும்போது, “அரை யணித் தோள்பட்டிகை72 (காணாமற் போன) நாள் எம் இறைவனின் விந்தை களில் ஒன்றாகும். அந்த நாள் இறைமறுப்பு (மேலோங்கி) இருந்த ஊரிலிருந்து என்னை (வெளியேற்றிக்) காப்பாற்றிவிட்டது” என்று பாடுவாள். இவ்வாறு அவள் அதிகமாகப் பாடுவதைக் கேட்ட நான், “அரையணித் தோள்பட்டிகை நாள் என்றால் என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவள் சொன்னாள்:

என் (எஜமானியர்) குடும்பத்தாரில் ஒருவருக்குரிய சிறுமி ஒருத்தி (மணப் பெண்ணாக இருந்ததால்) பதனிடப்பட்ட தோலால் ஆன (சிவப்பு) அரையணித் தோள்பட்டிகை ஒன்றை அணிந்து கொண்டு (குளியலறைக்குச்) சென்றாள். அப்போது அந்தப் பட்டிகை (எதிர்பாராத விதமாக) அவளிடமிருந்து (கழன்று) விழுந்துவிட, அதைப் பருந்து ஒன்று இறைச்சி என்று நினைத்துக் கவ்வி எடுத்துச் சென்றுவிட்டது.

(என் எஜமானர்கள் நான்தான் அதைத் திருடினேன் என்று) என்மீது குற்றம் சாட்டி என்னைச் சித்திரவதை செய்தார்கள். எந்த அளவுக்கென்றால், அவர்கள் என் பிறவி உறுப்பையும் சோதனையிட்டார்கள். அவர்கள் என்னைச் சூழ்ந்திருக்க, நான் கடும் வேதனையில் (துடித்தபடி) இருந்தபோது, அந்தப் பருந்து எங்கள் தலைகளுக்கு நேராக வந்து அந்தப் பட்டிகையை(க் கீழே) போட்டது. உடனே அதை அவர்கள் எடுத்துக்கொண்டனர். அப்போது நான் அவர்களிடம், “நான் குற்றமற்றவளாயிருக்க, நான் திருடிவிட் டதாக நீங்கள் குற்றம் சாட்டினீர்களே அந்தப் பட்டிகைதான் இது” என்று சொன்னேன்.73


அத்தியாயம் : 63
3836. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" أَلاَ مَنْ كَانَ حَالِفًا فَلاَ يَحْلِفْ إِلاَّ بِاللَّهِ "". فَكَانَتْ قُرَيْشٌ تَحْلِفُ بِآبَائِهَا، فَقَالَ "" لاَ تَحْلِفُوا بِآبَائِكُمْ "".
பாடம் : 26 அறியாமைக் காலம்67
3836. இப்னு உமர் (ரலி) அவர்கள் அவர்கள் கூறியதாவது:

“எவர் சத்தியம் செய்ய விரும்புகிறாரோ அவர் அல்லாஹ்வின் மீதே தவிர (வேறெவர்மீதும்) சத்தியம் செய்ய வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஏனெனில், குறைஷியர் தம் முன்னோர்கள்மீது சத்தியம் செய்து வந்தார்கள். ஆகவே நபி (ஸல்) அவர்கள், “உங்கள் முன்னோர்கள்மீது சத்தியம் செய்யாதீர்கள்” என்று சொன்னார்கள்.74


அத்தியாயம் : 63
3837. حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرٌو، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الْقَاسِمِ، حَدَّثَهُ أَنَّ الْقَاسِمَ كَانَ يَمْشِي بَيْنَ يَدَىِ الْجَنَازَةِ وَلاَ يَقُومُ لَهَا، وَيُخْبِرُ عَنْ عَائِشَةَ قَالَتْ كَانَ أَهْلُ الْجَاهِلِيَّةِ يَقُومُونَ لَهَا، يَقُولُونَ إِذَا رَأَوْهَا كُنْتِ فِي أَهْلِكِ مَا أَنْتِ. مَرَّتَيْنِ.
பாடம் : 26 அறியாமைக் காலம்67
3837. அப்துர் ரஹ்மான் பின் அல்காசிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) காசிம் (ரஹ்) அவர்கள் ஜனாஸாவுக்கு (பிரேதத்திற்கு) முன்னால் நடந்து செல்வார்கள். அதற்காக எழுந்து நிற்கமாட்டார்கள்.

மேலும், ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து இப்படியும் அறிவிப்பார்கள்:

ஜனாஸாவுக்காக எழுந்து நிற்பதும் அதைக் கண்டால், “(உன் வாழ்நாளில்) நீ எப்படி இருந்தாயோ அப்படியே இப்போதும் இருப்பாய்” என்று இருமுறை கூறுவதும் அறியாமைக் கால மக்களின் வழக்கமாகும்.75


அத்தியாயம் : 63
3838. حَدَّثَنِي عَمْرُو بْنُ عَبَّاسٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، قَالَ قَالَ عُمَرُ ـ رضى الله عنه ـ إِنَّ الْمُشْرِكِينَ كَانُوا لاَ يُفِيضُونَ مِنْ جَمْعٍ حَتَّى تَشْرُقَ الشَّمْسُ عَلَى ثَبِيرٍ، فَخَالَفَهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَأَفَاضَ قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ.
பாடம் : 26 அறியாமைக் காலம்67
3838. உமர் (ரலி) அவர்கள் கூறிய தாவது:

(ஹஜ்ஜின்போது) “ஸபீர்' மலைமீது சூரியன் ஒளிராதவரை, இணைவைப்பாளர் கள் முஸ்தலிஃபாவைவிட்டுப் புறப்பட மாட்டார்கள். அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் மாறு செய்து சூரியன் உதிக்கும் முன்பாகப் புறப்பட்டார்கள்.76


அத்தியாயம் : 63
3839. حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ قُلْتُ لأَبِي أُسَامَةَ حَدَّثَكُمْ يَحْيَى بْنُ الْمُهَلَّبِ، حَدَّثَنَا حُصَيْنٌ، عَنْ عِكْرِمَةَ، {وَكَأْسًا دِهَاقًا} قَالَ مَلأَى مُتَتَابِعَةً.
பாடம் : 26 அறியாமைக் காலம்67
3839. (இப்னு அப்பாஸ் (ரலி) அவர் களின் முன்னாள் அடிமையான) இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

திருக்குர்ஆனில் (78:34ல்) இடம் பெற்றுள்ள “கஃஸன் திஹாக்கன்' (நிரம் பிய கிண்ணமும்) என்பதற்கு “(தீரத் தீரத்) தொடர்ந்து நிரம்பிக்கொண்டிருக்கக்கூடிய கிண்ணமும் (சொர்க்கத்தில் உண்டு)' என்பது பொருளாகும்.


அத்தியாயம் : 63
3840. قَالَ وَقَالَ ابْنُ عَبَّاسٍ سَمِعْتُ أَبِي يَقُولُ، فِي الْجَاهِلِيَّةِ اسْقِنَا كَأْسًا دِهَاقًا.
பாடம் : 26 அறியாமைக் காலம்67
3840. மேலும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “என் தந்தை (அப்பாஸ் (ரலி) அவர்கள் இஸ்லாத்தில் இணைவதற்கு முன் அவர்களது) அறியாமைக் காலத்தில் “எங்களுக்குத் தொடர்ந்து நிரம்பும் கிண்ணத்(திலிருப்ப)தை அருந்தச்செய்' என்று (தம் பணியாளரிடம்) கூற நான் கேட்டேன்” எனச் சொன்னார்கள்.


அத்தியாயம் : 63
3841. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ الْمَلِكِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَصْدَقُ كَلِمَةٍ قَالَهَا الشَّاعِرُ كَلِمَةُ لَبِيدٍ أَلاَ كُلُّ شَىْءٍ مَا خَلاَ اللَّهَ بَاطِلٌ وَكَادَ أُمَيَّةُ بْنُ أَبِي الصَّلْتِ أَنْ يُسْلِمَ "".
பாடம் : 26 அறியாமைக் காலம்67
3841. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(கவிஞர்) லபீத் அவர்கள்77 சொன்ன, “இதோ (பாருங்கள்)! அல்லாஹ்வைத் தவிர மற்றப் பொருள்கள் அனைத்துமே அழியக்கூடியவையே” எனும் சொல்தான், கவிஞர் சொன்ன சொற்களிலேயே மிக உண்மையான சொல்லாகும். (கவிஞர்) உமய்யா பின் அபிஸ்ஸல்த்78 (தம் கவிதை யின் கருத்துகளால்) இஸ்லாத்தை ஏற்கும் அளவுக்கு வந்துவிட்டார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 63
3842. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنِي أَخِي، عَنْ سُلَيْمَانَ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ لأَبِي بَكْرٍ غُلاَمٌ يُخْرِجُ لَهُ الْخَرَاجَ، وَكَانَ أَبُو بَكْرٍ يَأْكُلُ مِنْ خَرَاجِهِ، فَجَاءَ يَوْمًا بِشَىْءٍ فَأَكَلَ مِنْهُ أَبُو بَكْرٍ فَقَالَ لَهُ الْغُلاَمُ تَدْرِي مَا هَذَا فَقَالَ أَبُو بَكْرٍ وَمَا هُوَ قَالَ كُنْتُ تَكَهَّنْتُ لإِنْسَانٍ فِي الْجَاهِلِيَّةِ وَمَا أُحْسِنُ الْكِهَانَةَ، إِلاَّ أَنِّي خَدَعْتُهُ، فَلَقِيَنِي فَأَعْطَانِي بِذَلِكَ، فَهَذَا الَّذِي أَكَلْتَ مِنْهُ. فَأَدْخَلَ أَبُو بَكْرٍ يَدَهُ فَقَاءَ كُلَّ شَىْءٍ فِي بَطْنِهِ.
பாடம் : 26 அறியாமைக் காலம்67
3842. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:

அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு அடிமை ஒருவன் இருந்தான். அவன் (அடிமை என்ற முறையில் தன் எசமானாகிய) அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு(த் தனது சம்பாத்தியத்தில்) நிர்ணயிக்கப்பட்ட தொகையைச் செலுத்திவந்தான். அபூபக்ர் (ரலி) அவர்கள் அவன் செலுத்தும் தொகையிலிருந்து உண்டுவந்தார்கள். ஒருநாள் அவன் ஏதோ ஒரு பொருளைக் கொண்டு வந்தான். அதிலிருந்து அபூபக்ர் (ரலி) அவர்கள் சிறிது உண்டார்கள். அப்போது அவர்களி டம் அந்த அடிமை, “இது என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டான். அபூபக்ர் (ரலி) அவர்கள், “இது என்ன?” என்று கேட்டார்கள்.

அவன், “நான் அறியாமைக் காலத்தில் ஒரு மனிதருக்குக் குறி சொல்லிவந்தேன்; எனக்கு நன்றாகக் குறி சொல்லத் தெரியாது. ஆயினும், (குறி சொல்லத் தெரிந்தவன் போல் நடித்து) அவரை நான் ஏமாற்றி விட்டேன். அவர் அதற்காக எனக்குக் கூலி கொடுத்தார். நீங்கள் உண்டது (குறி சொன்னதற்காக) எனக்குக் கூலியாகக் கிடைத்த அந்தப் பொருளிலிருந்துதான்” என்று சொன்னான்.

உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் தம் கையை (வாய்க்குள்) நுழைத்துத் தம் வயிற்றிலிருந்த அனைத்தையும் வாந்தி யெடுத்துவிட்டார்கள்.


அத்தியாயம் : 63
3843. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، أَخْبَرَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ أَهْلُ الْجَاهِلِيَّةِ يَتَبَايَعُونَ لُحُومَ الْجَزُورِ إِلَى حَبَلِ الْحَبَلَةِ، قَالَ وَحَبَلُ الْحَبَلَةِ أَنْ تُنْتَجَ النَّاقَةُ مَا فِي بَطْنِهَا، ثُمَّ تَحْمِلَ الَّتِي نُتِجَتْ، فَنَهَاهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ ذَلِكَ.
பாடம் : 26 அறியாமைக் காலம்67
3843. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அறியாமைக் கால மக்கள் ஹபலுல் ஹபலாவுக்காக - கருவிலுள்ள ஒட்டகக் குட்டி பிறந்து அந்தக் குட்டி சுமந்து பெறவிருக்கும் குட்டிக்காக- ஒட்டகத்தின் இறைச்சிகளை விற்றுவந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் இத்தகைய வியாபாரம் செய்யக் கூடாது என்று அவர்களுக்குத் தடை விதித்தார்கள்.79


அத்தியாயம் : 63
3844. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا مَهْدِيٌّ، قَالَ غَيْلاَنُ بْنُ جَرِيرٍ كُنَّا نَأْتِي أَنَسَ بْنَ مَالِكٍ فَيُحَدِّثُنَا عَنِ الأَنْصَارِ،، وَكَانَ، يَقُولُ لِي فَعَلَ قَوْمُكَ كَذَا وَكَذَا يَوْمَ كَذَا وَكَذَا، وَفَعَلَ قَوْمُكَ كَذَا وَكَذَا يَوْمَ كَذَا وَكَذَا.
பாடம் : 26 அறியாமைக் காலம்67
3844. ஃகைலான் பின் ஜரீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் செல்வோம். அவர்கள் அன்சாரிகளைக் குறித்து எங்களிடம் பேசுவார்கள்.

அவர்கள், “(அறியாமைக் காலத்தில்) உங்கள் (அன்சாரி) சமுதாயத்தார் இன்ன இன்ன நாளில் இப்படி இப்படியெல்லாம் செய்துவந்தார்கள். (அறியாமைக் காலத்தில்) உங்கள் (அன்சாரி) சமுதாயத்தார் இன்ன இன்ன நாளில் இப்படி இப்படியெல்லாம் செய்துவந்தார்கள்” என்று என்னிடம் சொல்வார்கள்.80

அத்தியாயம் : 63
3845. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا قَطَنٌ أَبُو الْهَيْثَمِ، حَدَّثَنَا أَبُو يَزِيدَ الْمَدَنِيُّ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ إِنَّ أَوَّلَ قَسَامَةٍ كَانَتْ فِي الْجَاهِلِيَّةِ لَفِينَا بَنِي هَاشِمٍ، كَانَ رَجُلٌ مِنْ بَنِي هَاشِمٍ اسْتَأْجَرَهُ رَجُلٌ مِنْ قُرَيْشٍ مِنْ فَخِذٍ أُخْرَى، فَانْطَلَقَ مَعَهُ فِي إِبِلِهِ، فَمَرَّ رَجُلٌ بِهِ مِنْ بَنِي هَاشِمٍ قَدِ انْقَطَعَتْ عُرْوَةُ جُوَالِقِهِ فَقَالَ أَغِثْنِي بِعِقَالٍ أَشُدُّ بِهِ عُرْوَةَ جُوَالِقِي، لاَ تَنْفِرُ الإِبِلُ. فَأَعْطَاهُ عِقَالاً، فَشَدَّ بِهِ عُرْوَةَ جُوَالِقِهِ، فَلَمَّا نَزَلُوا عُقِلَتِ الإِبِلُ إِلاَّ بَعِيرًا وَاحِدًا، فَقَالَ الَّذِي اسْتَأْجَرَهُ مَا شَأْنُ هَذَا الْبَعِيرِ لَمْ يُعْقَلْ مِنْ بَيْنِ الإِبِلِ قَالَ لَيْسَ لَهُ عِقَالٌ. قَالَ فَأَيْنَ عِقَالُهُ قَالَ فَحَذَفَهُ بِعَصًا كَانَ فِيهَا أَجَلُهُ، فَمَرَّ بِهِ رَجُلٌ مِنْ أَهْلِ الْيَمَنِ، فَقَالَ أَتَشْهَدُ الْمَوْسِمَ قَالَ مَا أَشْهَدُ، وَرُبَّمَا شَهِدْتُهُ. قَالَ هَلْ أَنْتَ مُبْلِغٌ عَنِّي رِسَالَةً مَرَّةً مِنَ الدَّهْرِ قَالَ نَعَمْ. قَالَ فَكُنْتَ إِذَا أَنْتَ شَهِدْتَ الْمَوْسِمَ فَنَادِ يَا آلَ قُرَيْشٍ. فَإِذَا أَجَابُوكَ، فَنَادِ يَا آلَ بَنِي هَاشِمٍ. فَإِنْ أَجَابُوكَ فَسَلْ عَنْ أَبِي طَالِبٍ، فَأَخْبِرْهُ أَنَّ فُلاَنًا قَتَلَنِي فِي عِقَالٍ، وَمَاتَ الْمُسْتَأْجَرُ، فَلَمَّا قَدِمَ الَّذِي اسْتَأْجَرَهُ أَتَاهُ أَبُو طَالِبٍ فَقَالَ مَا فَعَلَ صَاحِبُنَا قَالَ مَرِضَ، فَأَحْسَنْتُ الْقِيَامَ عَلَيْهِ، فَوَلِيتُ دَفْنَهُ. قَالَ قَدْ كَانَ أَهْلَ ذَاكَ مِنْكَ. فَمَكُثَ حِينًا، ثُمَّ إِنَّ الرَّجُلَ الَّذِي أَوْصَى إِلَيْهِ أَنْ يُبْلِغَ عَنْهُ وَافَى الْمَوْسِمَ فَقَالَ يَا آلَ قُرَيْشٍ. قَالُوا هَذِهِ قُرَيْشٌ. قَالَ يَا آلَ بَنِي هَاشِمٍ. قَالُوا هَذِهِ بَنُو هَاشِمٍ. قَالَ أَيْنَ أَبُو طَالِبٍ قَالُوا هَذَا أَبُو طَالِبٍ. قَالَ أَمَرَنِي فُلاَنٌ أَنْ أُبْلِغَكَ رِسَالَةً أَنَّ فُلاَنًا قَتَلَهُ فِي عِقَالٍ. فَأَتَاهُ أَبُو طَالِبٍ فَقَالَ لَهُ اخْتَرْ مِنَّا إِحْدَى ثَلاَثٍ، إِنْ شِئْتَ أَنْ تُؤَدِّيَ مِائَةً مِنَ الإِبِلِ، فَإِنَّكَ قَتَلْتَ صَاحِبَنَا، وَإِنْ شِئْتَ حَلَفَ خَمْسُونَ مِنْ قَوْمِكَ أَنَّكَ لَمْ تَقْتُلْهُ، فَإِنْ أَبَيْتَ قَتَلْنَاكَ بِهِ فَأَتَى قَوْمَهُ، فَقَالُوا نَحْلِفُ. فَأَتَتْهُ امْرَأَةٌ مِنْ بَنِي هَاشِمٍ كَانَتْ تَحْتَ رَجُلٍ مِنْهُمْ قَدْ وَلَدَتْ لَهُ. فَقَالَتْ يَا أَبَا طَالِبٍ أُحِبُّ أَنْ تُجِيزَ ابْنِي هَذَا بِرَجُلٍ مِنَ الْخَمْسِينَ وَلاَ تَصْبُرْ يَمِينَهُ حَيْثُ تُصْبَرُ الأَيْمَانُ. فَفَعَلَ فَأَتَاهُ رَجُلٌ مِنْهُمْ فَقَالَ يَا أَبَا طَالِبٍ، أَرَدْتَ خَمْسِينَ رَجُلاً أَنْ يَحْلِفُوا مَكَانَ مِائَةٍ مِنَ الإِبِلِ، يُصِيبُ كُلَّ رَجُلٍ بَعِيرَانِ، هَذَانِ بَعِيرَانِ فَاقْبَلْهُمَا عَنِّي وَلاَ تَصْبُرْ يَمِينِي حَيْثُ تُصْبِرُ الأَيْمَانُ. فَقَبِلَهُمَا، وَجَاءَ ثَمَانِيةٌ وَأَرْبَعُونَ فَحَلَفُوا. قَالَ ابْنُ عَبَّاسٍ فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ، مَا حَالَ الْحَوْلُ وَمِنَ الثَّمَانِيَةِ وَأَرْبَعِينَ عَيْنٌ تَطْرِفُ.
பாடம் : 27 “அல்கசாமா' எனும் அறியாமைக் காலச் சத்திய முறை81
3845. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அறியாமைக் காலத்தில் நடைபெற்ற முதல் “கசாமா' (எனும் சத்தியம் தொடர்பான சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்ட சம்பவம்) எங்கள் பனூ ஹாஷிம் குலத்தாரிடையேதான் நிகழ்ந்தது. (அதன் விவரம் வருமாறு:) பனூ ஹாஷிம் குலத்தில் (அம்ர் பின் அல்கமா என்று) ஒருவர் இருந்தார். அவரைக் குறைஷியரில் மற்றொரு கிளையைச் சேர்ந்த (கிதாஷ் பின் அப்தில்லாஹ் என்ற) ஒருவர் கூலிக்கு அமர்த்திக்கொண்டார். அந்தக் கூலிக்காரர் தம் முதலாளியுடன் அவ ருடைய ஒட்டகத்தில் (வாணிபக் குழுவின ருடன் ஷாம் நோக்கிச்) சென்றார்.

அப்போது பனூ ஹாஷிம் குலத்தைச் சேர்ந்த இன்னொருவர் அந்தக் கூலிக் காரரின் அருகே சென்றுகொண்டிருந்தார். அந்த பனூ ஹாஷிம் குலத்தாருடைய (ஒட்டகத்தின் இரு பக்கங்களிலும் தொங்கவிடப்படும்) பையின் பிடி அறுந்துவிட்டிருந்தது. அவர் அந்தக் கூலிக்காரரைப் பார்த்து, “எனது ஒட்டகம் தப்பியோடாமல் இருக்க, (அறுந்துபோன) எனது பையின் பிடியை (இணைத்து)க் கட்டுவதற்கு ஒரு கயிறு தந்து எனக்கு உதவி செய்யுங்கள்” என்று கூறினார். அந்தக் கூலியாள் அவருக்கு ஒரு கயிறு கொடுத்தார். உடனே அவர், அதன் மூலம் தனது பையின் பிடியை (இணைத்து)க் கட்டிக்கொண்டார்.

அவர்கள் அனைவரும் (ஓய்வெடுப்பதற்காக ஓரிடத்தில்) தங்கியபோது எல்லா ஒட்டகங்களும் (அவற்றுக்குரிய கயிறுகளால்) கட்டிப்போடப்பட்டன. ஒரேயோர் ஒட்டகம் மட்டும் (அதன் கயிற்றை பனூ ஹாஷிம் குலத்தாருக்கு அந்தக் கூலிக்காரர் கொடுத்துவிட்டிருந்ததால்) கட்டிப்போடப்படாமல் இருந்தது. அப்போது (கூலிக்காரரை நோக்கி) அந்தக் குறைஷி (முதலாளி), “இந்த ஒட்டகத்திற்கென்ன? பிற ஒட்டகங்களுக்கிடையே இது மட்டும் ஏன் கட்டிப்போடப்படவில்லை?” என்று கேட்டார். அதற்கு அந்தக் கூலிக்காரர், “அதற்குக் கயிறு இல்லை” என்று கூறினார். முதலாளி, “(ஏன்?) அதன் கயிறு எங்கே (போனது)?” என்று கேட்டார்.

பிறகு அந்தக் கூலிக்காரரின் மீது (கோபம் கொண்டு) ஒரு தடியை (எடுத்து) எறிந்தார். அந்த அடியே அந்தக் கூலிக்காரரின் மரணத்திற்குக் காரணமாக அமைந்தது. அப்போது (அடிபட்டுக் குற்றுயிராய்க் கிடந்த) அந்தக் கூலிக்காரரை யமன் நாட்டைச் சேர்ந்த ஒரு மனிதர் கடந்து சென்றார். அவரை நோக்கி (அந்தக் கூலிக்காரர்), “ஹஜ் பருவத்தில் நீங்கள் (ஹஜ்ஜில்) கலந்துகொள்வீர்களா?” என்று கேட்டார். அந்த வழிப்போக்கர், “நான் கலந்துகொள்ளமாட்டேன். ஒருகால் நான் கலந்துகொள்ளவும் செய்யலாம்” என்று கூறினார். அந்தக் கூலிக்காரர், “என் சார்பாக ஒரு செய்தியை எப்போதாவது (நான் சொல்லும் குலத்தாரிடம்) தெரிவித்து விடுவாயா?” என்று கேட்டார்.

அதற்கு அவர், “ஆம் (செய்கிறேன்)” என்று கூறினார். உடனே அந்தக் கூலிக்காரர், “நீ ஹஜ் பருவத்தில் கலந்து கொண்டால் “குறைஷிக் குலத்தாரே!' என்று கூப்பிடு! அவர்கள் பதிலளித்தால் உடனே (குறைஷிக் கிளையான) “பனூ ஹாஷிம் குலத்தாரே!' என்று கூப்பிடு! அவர்கள் உனக்குப் பதிலளித்தால் (பனூ ஹாஷிம் குடும்பத் தலைவரான) “அபூதாலிப்' பற்றி விசாரி! (அவரைச் சந்தித்து) அவரிடம், “இன்னான் ஒரு கயிற்றுக்காக என்னைக் கொன்றுவிட்டான்' என்று தெரிவித்துவிடு” என்று கூறினார். பிறகு அந்தக் கூலிக்காரர் இறந்தும்விட்டார்.

அவரைக் கூலிக்கு அமர்த்திச் சென்ற அந்த குறைஷி முதலாளி (மக்காவிற்குத்) திரும்பி வந்தபோது அவரிடம் அபூதாலிப் வந்து, “(கூலிக்காரரான) எங்கள் ஆள் என்ன ஆனார்?” என்று கேட்டார். “அவர் நோய்வாய்ப்பட்டார். அவரை நல்ல முறையில் நான் கவனித்துவந்தேன். (ஆனாலும் அவர் இறந்துவிட்டார்.) அவரை அடக்கம் செய்யும் பொறுப்பையும் நானே ஏற்றுக்கொண்டேன்” என்று கூறினார். “உம்மிடமிருந்து (இந்த உதவிகளைப் பெறுவதற்கு) அவர் தகுதியானவரே” என்று அபூதாலிப் கூறினார்.

பின்னர் சிறிது காலம் கழிந்தது. தன்னைப் பற்றிய செய்தியைத் தெரிவித்து விடும்படி அந்தக் கூலிக்காரர் இறுதி உபதேசம் செய்து அனுப்பிய (யமன் நாட்டைச் சேர்ந்த) அந்த மனிதர் ஹஜ் பருவத்தில் (ஹஜ்ஜுக்கு) வந்தார். அவர், “குறைஷிக் குலத்தாரே!' என்று அழைத்தார். “(சிலரைக் காட்டி) இவர்கள்தான் குறைஷியர்” என்று மக்கள் கூறினார்கள்.

“பனூ ஹாஷிம் குலத்தாரே!' என்று அவர் அழைத்தார். “இவர்கள்தான் பனூ ஹாஷிம் குலத்தார்” என்று மக்கள் தெரிவித்தனர். அவர், “அபூதாலிப் எங்கே?” என்று கேட்டார். “இவர்தான் அபூதாலிப்” என்று மக்கள் சொன்னார்கள். “ஒரு கயிற்றுக்காக இன்ன மனிதன் என்னைக் கொன்றுவிட்டான் என்ற செய்தியை உங்களிடம் தெரிவித்துவிடும்படி இன்ன மனிதர் எனக்கு உத்தரவிட்டார்” என்று அவர் (அபூதாலிடம்) கூறினார்.

அந்த முதலாளியிடம் அபூதாலிப் சென்று, “எங்களிடமிருந்து மூன்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்” என்று கூறி(விட்டு அறியாமைக்கால வழக்கப்படி பின்வருமாறு சொன்)னார்: 1. நீ விரும்பி னால், எங்கள் ஆளை நீ கொலை செய்த தற்காக (நமது மரபுப்படி) நூறு ஒட்டகத்தை (நஷ்ட ஈடாகச்) செலுத்தலாம். 2. நீ விரும்பி னால் உன் சமுதாயத்திலிருந்து ஐம்பது பேர் “நீ அவரைக் கொலை செய்யவில்லை' என்று சத்தியம் செய்யலாம். 3. (இந்த இரண்டையும் செய்ய) நீ மறுத்தால் உன்னை நாங்கள் அவருக்குப் பதிலாகக் கொன்றுவிடுவோம்” (என்று கூறினார்.)

அந்த குறைஷி (முதலாளி) தம் சமுதாயத்தாரிடம் சென்றார். அப்போது அவர்கள், “நாங்கள் சத்தியம் செய்கிறோம்” என்று கூறினர். அபூதாலிபிடம் பனூ ஹாஷிம் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்82 வந்தாள். பனூ ஹாஷிம் குலத்(தில் கொலையாளியின் குடும்பத்)தைச் சேர்ந்த ஒருவருடைய மனைவியாக அவள் இருந்தாள். அவருக்காக ஒரு குழந்தையையும் அவள் பெற்றெடுத்திருந்தாள்.

அவள் கூறினாள்: “அபூதாலிப் அவர்களே! (சத்தியம் செய்ய வேண்டிய) ஐம்பது பேர்களில் இந்த என் மகனும் ஒருவனாக இருக்க அனுமதிக்க வேண்டும் என விரும்புகிறேன். ஆனால், சத்தியம் மேற்கொள்ளப்படும் (கஅபாவிலுள்ள ருக்ன்- மகாமு இப்ராஹீம் இடையிலான) இடத்தில் இவனைச் சத்தியம் செய்யும்படி கட்டாயப்படுத்தாதீர்கள்.” (அவளது கோரிக்கைப்படி) அபூதாலிப் செயல் பட்டார்.

அப்போது பனூ ஹாஷிம் குலத்தாரில் (கொலையாளியின் குடும்பத்தைச் சேர்ந்த) இன்னொரு மனிதரும் வந்து, “அபூதாலிப் அவர்களே! (கொலைக் குற்றத்திற்குப் பரிகாரமாகத் தரப்படும்) நூறு ஒட்டகங் களுக்குப் பதிலாக ஐம்பது ஆண்கள் சத்தியம் செய்ய வேண்டுமென்று நீங்கள் விரும்பினீர்கள். ஒவ்வோர் ஆணுக்கும் இரண்டு ஒட்டகங்கள் (விகிதம்) வரும். இதோ, இந்த இரண்டு ஒட்டகங்களை எனக்காக ஏற்றுக்கொள்ளுங்கள். சத்தியம் செய்யுமாறு (அவர்களை) நீங்கள் கட்டாயப் படுத்தும்போது என்னையும் கட்டாயப் படுத்தாதீர்கள்” என்று கூறினார்.

அந்த இருவரது கோரிக்கையையும் அபூதாலிப் ஏற்றுக்கொண்டார். ஆக, நாற்பத்தெட்டுப் பேர் வந்து, (“எங்கள் குலத்தைச் சேர்ந்த கிதாஷ், கொலை செய்யப்பட்டவரின் உயிரீட்டுத் தொகை யைச் செலுத்த வேண்டிய பொறுப்பிலிருந்து விடுபட்டுவிட்டார்” என்று) சத்தியம் செய்தனர்.

அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! (அவர்கள் சத்தியம் செய்து) ஓராண்டுகூடக் கழியவில்லை; அதற்குள் (பொய்ச் சத்தியம் செய்த) அந்த நாற்பத்தெட்டுப் பேரும் மாண்டனர்.


அத்தியாயம் : 63