3702. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا حَاتِمٌ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ، قَالَ كَانَ عَلِيٌّ قَدْ تَخَلَّفَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي خَيْبَرَ وَكَانَ بِهِ رَمَدٌ فَقَالَ أَنَا أَتَخَلَّفُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَخَرَجَ عَلِيٌّ فَلَحِقَ بِالنَّبِيِّ صلى الله عليه وسلم، فَلَمَّا كَانَ مَسَاءُ اللَّيْلَةِ الَّتِي فَتَحَهَا اللَّهُ فِي صَبَاحِهَا، قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لأُعْطِيَنَّ الرَّايَةَ ـ أَوْ لَيَأْخُذَنَّ الرَّايَةَ ـ غَدًا رَجُلاً يُحِبُّهُ اللَّهُ وَرَسُولُهُ ـ أَوْ قَالَ يُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ ـ يَفْتَحُ اللَّهُ عَلَيْهِ "". فَإِذَا نَحْنُ بِعَلِيٍّ وَمَا نَرْجُوهُ، فَقَالُوا هَذَا عَلِيٌّ. فَأَعْطَاهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَفَتَحَ اللَّهُ عَلَيْهِ.
பாடம் : 9 அபுல்ஹசன் அலீ பின் அபீதாலிப் அல்குறஷீ அல்ஹாஷிமீ (ரலி) அவர்களின் சிறப்புகள்67 நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம், “நீங்கள் என்னைச் சேர்ந்தவர்; நான் உங்களைச் சேர்ந்தவன்” என்று சொன்னார்கள்.68 “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களைக் குறித்து திருப்தி யுடனிருந்த நிலையில் இறந்தார்கள்” என்று உமர் (ரலி) அவர்கள் சொன்னார் கள்.69
3702. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அலீ (ரலி) அவர்கள் கைபர் போரின்போது நபி (ஸல்) அவர்களுடன் (போருக்குச்) செல்லாமல் பின்தங்கிவிட்டிருந்தார்கள். அவர்களுக்குக் கண் வலி ஏற்பட்டிருந்தது. “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (போருக்குச்) செல்லாமல் பின்தங்கிவிட்டேனே” என்று (வருத்தத்துடன்) கூறினார்கள். பிறகு அலீ (ரலி) அவர்கள் புறப்பட்டு (வந்து) நபி (ஸல்) அவர்களுடன் சேர்ந்து கொண்டார்கள்.

எந்த நாளின் காலைப் பொழுதில் கைபரை அல்லாஹ் வெற்றி கொள்ளச் செய்தானோ அதற்கு முந்தைய மாலை நேரம் வந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நேசிக்கின்ற- அல்லது அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கின்ற- ஒரு மனிதரிடம் நாளை இந்தக் கொடியைத் தரப்போகிறேன்- அல்லது அத்தகைய ஒரு மனிதர் இக்கொடியைப் பிடித்திருப்பார்- என்று சொல்லிவிட்டு, “அவருக்கு அல்லாஹ் வெற்றியளிப்பான்” என்று கூறினார்கள்.

நாங்கள் எதிர்பார்க்காத நிலையில் அலீ (ரலி) அவர்கள் வந்து எங்களுடன் இருக்கக் கண்டோம். உடனே மக்கள், “இதோ, அலீ அவர்கள்!” என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் கொடியைக் கொடுக்க, அவர்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தான்.71


அத்தியாயம் : 62
3703. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، أَنَّ رَجُلاً، جَاءَ إِلَى سَهْلِ بْنِ سَعْدٍ فَقَالَ هَذَا فُلاَنٌ ـ لأَمِيرِ الْمَدِينَةِ ـ يَدْعُو عَلِيًّا عِنْدَ الْمِنْبَرِ. قَالَ فَيَقُولُ مَاذَا قَالَ يَقُولُ لَهُ أَبُو تُرَابٍ. فَضَحِكَ قَالَ وَاللَّهِ مَا سَمَّاهُ إِلاَّ النَّبِيُّ صلى الله عليه وسلم، وَمَا كَانَ لَهُ اسْمٌ أَحَبَّ إِلَيْهِ مِنْهُ. فَاسْتَطْعَمْتُ الْحَدِيثَ سَهْلاً، وَقُلْتُ يَا أَبَا عَبَّاسٍ كَيْفَ قَالَ دَخَلَ عَلِيٌّ عَلَى فَاطِمَةَ ثُمَّ خَرَجَ فَاضْطَجَعَ فِي الْمَسْجِدِ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَيْنَ ابْنُ عَمِّكِ "". قَالَتْ فِي الْمَسْجِدِ. فَخَرَجَ إِلَيْهِ فَوَجَدَ رِدَاءَهُ قَدْ سَقَطَ عَنْ ظَهْرِهِ، وَخَلَصَ التُّرَابُ إِلَى ظَهْرِهِ، فَجَعَلَ يَمْسَحُ التُّرَابَ عَنْ ظَهْرِهِ فَيَقُولُ "" اجْلِسْ يَا أَبَا تُرَابٍ "". مَرَّتَيْنِ.
பாடம் : 9 அபுல்ஹசன் அலீ பின் அபீதாலிப் அல்குறஷீ அல்ஹாஷிமீ (ரலி) அவர்களின் சிறப்புகள்67 நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம், “நீங்கள் என்னைச் சேர்ந்தவர்; நான் உங்களைச் சேர்ந்தவன்” என்று சொன்னார்கள்.68 “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களைக் குறித்து திருப்தி யுடனிருந்த நிலையில் இறந்தார்கள்” என்று உமர் (ரலி) அவர்கள் சொன்னார் கள்.69
3703. அபூஹாஸிம் சலமா பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் சஹ்ல் பின் சஅத் (ரó) அவர்களிடம் வந்து, “இன்னவர் - அதாவது மதீனாவின் ஆளுநர் (மர்வான் பின் அல்ஹகம்) அலீ (ரலி) அவர்களைச் சொற்பொழிவு மேடைக்கருகில் (விரும்பத் தகாத பெயரால்) அழைக்கிறார்” என்று சொன்னார். சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள், “அவர் (அப்படி) என்ன சொன்னார்?” என்று கேட்க அம்மனிதர், “அபூதுராப் (மண்ணின் தந்தை) என்று அழைக்கிறார்” என்று பதிலளித்தார்.

இதைக் கேட்டு சஹ்ல் (ரலி) அவர்கள் சிரித்துவிட்டு, “அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள்தான் அலீ (ரலி) அவர்களுக்கு அந்தப் பெயரைச் சூட்டினார்கள். அலீ (ரலி) அவர்களுக்கு அதைவிடப் பிரியமான ஒரு பெயர் எதுவும் இருந்ததில்லை” என்று சொன்னார்கள்.

இந்த ஹதீஸை முழுமையாகச் சொல்லும்படி நான் சஹ்ல் (ரலி) அவர்களிடம் கேட்டுக்கொண்டு, “அபுல் அப்பாஸ் (சஹ்ல் பின் சஅத்) அவர்களே! அது எப்படி?” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள் சொன்னார்கள்: (ஒருமுறை) அலீ (ரலி) அவர்கள் ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் சென்றார்கள். பிறகு (அலீ - ஃபாத்திமா இடையே மனஸ்தாபம் ஏற்படவே) வெளியே வந்து பள்ளிவாசலில் படுத்துக்கொண்டார்கள். (அப்போது ஃபாத்திமா (ரலி) அவர்களின் வீட்டுக்கு வந்த) நபி (ஸல்) அவர்கள், உன் (தந்தையுடைய) பெரிய தந்தை மகன் (அலீ) எங்கே” என்று கேட்க அவர்கள், “பள்ளிவாசலில் இருக்கிறார்” என்று பதிலளித்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள், அலீ (ரலி) அவர்களிடம் சென்றபோது அவர்களின் மேல்துண்டு அவர்களுடைய முதுகிலிருந்து (தரையில்) விழுந்துவிட்டிருப்பதையும் (தரையிலுள்ள) மண் அவர்களுடைய முதுகில் ஒட்டிக்கொண்டிருப்பதையும் கண்டு அவர்களுடைய முதுகிலிருந்து மண்ணைத் துடைக்கலானார்கள். அப்போது, “(எழுந்து) அமருங்கள், அபூதுராப் (மண்ணின் தந்தை) அவர்களே!” என்று (நபி (ஸல்) அவர்கள்) இருமுறை சொன்னார்கள்.72


அத்தியாயம் : 62
3704. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا حُسَيْنٌ، عَنْ زَائِدَةَ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى ابْنِ عُمَرَ، فَسَأَلَهُ عَنْ عُثْمَانَ،، فَذَكَرَ عَنْ مَحَاسِنِ، عَمَلِهِ، قَالَ لَعَلَّ ذَاكَ يَسُوؤُكَ. قَالَ نَعَمْ. قَالَ فَأَرْغَمَ اللَّهُ بِأَنْفِكَ. ثُمَّ سَأَلَهُ عَنْ عَلِيٍّ، فَذَكَرَ مَحَاسِنَ عَمَلِهِ قَالَ هُوَ ذَاكَ، بَيْتُهُ أَوْسَطُ بُيُوتِ النَّبِيِّ صلى الله عليه وسلم. ثُمَّ قَالَ لَعَلَّ ذَاكَ يَسُوؤُكَ. قَالَ أَجَلْ. قَالَ فَأَرْغَمَ اللَّهُ بِأَنْفِكَ، انْطَلِقْ فَاجْهَدْ عَلَىَّ جَهْدَكَ.
பாடம் : 9 அபுல்ஹசன் அலீ பின் அபீதாலிப் அல்குறஷீ அல்ஹாஷிமீ (ரலி) அவர்களின் சிறப்புகள்67 நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம், “நீங்கள் என்னைச் சேர்ந்தவர்; நான் உங்களைச் சேர்ந்தவன்” என்று சொன்னார்கள்.68 “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களைக் குறித்து திருப்தி யுடனிருந்த நிலையில் இறந்தார்கள்” என்று உமர் (ரலி) அவர்கள் சொன்னார் கள்.69
3704. சஅத் பின் உபைதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்களிடம் ஒருவர் வந்து உஸ்மான் (ரலி) அவர்களைப் பற்றிக் கேட்டார். இப்னு உமர் (ரலி) அவர்கள், உஸ்மான் (ரலி) அவர்களின் நற்செயல்களை எடுத்துரைத்தார்கள். (பிறகு) அந்த மனிதரிடம், “நான் சொன்னவை உமக்கு எரிச்சலூட்டியிருக்குமே!” என்று சொன்னார்கள். (ஏனெனில் அந்த மனிதர் குறை காணும் நோக்கத்துடன் வந்திருந்தார்.) அதற்கு அந்த மனிதர், “ஆம்” என்று பதிலளித்தார். இப்னு உமர் (ரலி) அவர்கள், “அப்படியென்றால் அல்லாஹ் உன் மூக்கில் மண்படியச் செய்யட்டும்” என்று சொன்னார்கள்.

பிறகு அந்த மனிதர் அலீ (ரலி) அவர்களைப் பற்றிக் கேட்க, இப்னு உமர் (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களின் நற்செயல்களைத் எடுத்துரைத்துவிட்டு, “அவர்கள் அவ்வாறுதான்; அவர்களது இல்லம் நபி (ஸல்) அவர்களுடைய (குடும்பத்தாரின்) வீடுகளுக்கு நடுவில் இருந்தது” என்று கூறினார்கள்.

பிறகு, “நான் சொன்னது உமக்கு எரிச்சலூட்டியிருக்குமே!” என்று கேட்டார் கள். அதற்கு அம்மனிதர், “ஆம்” என்று பதிலளித்தார். இப்னு உமர் (ரலி) அவர்கள், “அப்படியென்றால் அல்லாஹ் உன் மூக்கில் மண்படியச் செய்யட்டும். போ! போய் (நான் இப்படி உண்மையைச் சொன்னதற்காக என்னை நீ தண்டிக்க விரும்பினால்) எனக்கெதிராக உன்னால் ஆனதைச் செய்” என்று சொன்னார்கள்.


அத்தியாயம் : 62
3705. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، سَمِعْتُ ابْنَ أَبِي لَيْلَى، قَالَ حَدَّثَنَا عَلِيٌّ، أَنَّ فَاطِمَةَ، عَلَيْهَا السَّلاَمُ شَكَتْ مَا تَلْقَى مِنْ أَثَرِ الرَّحَا، فَأَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم سَبْىٌ، فَانْطَلَقَتْ فَلَمْ تَجِدْهُ، فَوَجَدَتْ عَائِشَةَ، فَأَخْبَرَتْهَا، فَلَمَّا جَاءَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَخْبَرَتْهُ عَائِشَةُ بِمَجِيءِ فَاطِمَةَ، فَجَاءَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَيْنَا، وَقَدْ أَخَذْنَا مَضَاجِعَنَا، فَذَهَبْتُ لأَقُومَ فَقَالَ "" عَلَى مَكَانِكُمَا "". فَقَعَدَ بَيْنَنَا حَتَّى وَجَدْتُ بَرْدَ قَدَمَيْهِ عَلَى صَدْرِي وَقَالَ "" أَلاَ أُعَلِّمُكُمَا خَيْرًا مِمَّا سَأَلْتُمَانِي إِذَا أَخَذْتُمَا مَضَاجِعَكُمَا تُكَبِّرَا أَرْبَعًا وَثَلاَثِينَ، وَتُسَبِّحَا ثَلاَثًا وَثَلاَثِينَ، وَتَحْمَدَا ثَلاَثَةً وَثَلاَثِينَ، فَهْوَ خَيْرٌ لَكُمَا مِنْ خَادِمٍ "".
பாடம் : 9 அபுல்ஹசன் அலீ பின் அபீதாலிப் அல்குறஷீ அல்ஹாஷிமீ (ரலி) அவர்களின் சிறப்புகள்67 நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம், “நீங்கள் என்னைச் சேர்ந்தவர்; நான் உங்களைச் சேர்ந்தவன்” என்று சொன்னார்கள்.68 “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களைக் குறித்து திருப்தி யுடனிருந்த நிலையில் இறந்தார்கள்” என்று உமர் (ரலி) அவர்கள் சொன்னார் கள்.69
3705. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

திரிகை சுற்றுவதால் தாம் அடையும் வேதனை குறித்து (என் மனைவி) ஃபாத்திமா முறையிட்டார். (இந்நிலையில்) நபி (ஸல்) அவர்களிடம் போர்க் கைதிகள் சிலர் கொண்டுவரப்பட்டனர். அப்போது, ஃபாத்திமா (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம் வீட்டு வேலைக்காகக் கைதி எவரையாவது கேட்டு வாங்கிவரச்) சென்றார். ஆனால், நபி (ஸல்) அவர்களைக் காணவில்லை; ஆயிஷா (ரலி) அவர்களைத்தான் அங்கே கண்டார். ஆகவே, (தாம் வந்த நோக்கத்தை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் ஃபாத்திமா தெரிவித்தார். நபி (ஸல்) அவர்கள் (வீட்டிற்கு) வந்தபோது ஆயிஷா (ரலி) அவர்கள் ஃபாத்திமா வந்ததைத் தெரிவித்தார்கள்.

உடனே நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அதற்குள் நாங்கள் எங்கள் படுக்கைக்குச் சென்று விட்டிருந்தோம். (நபி (ஸல்) அவர்களைக் கண்டவுடன்) நான் எழுந்து நிற்கப் போனேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் (இருவரும்) உங்கள் இடத்திலேயே இருங்கள்” என்று சொல்லிவிட்டு எங்களுக்கிடையே (வந்து) அமர்ந்துகொண்டார்கள். எந்த அளவுக்கென்றால் அவர்களுடைய கால்களின் குளிர்ச்சியை நான் என் நெஞ்சின் மீது உணர்ந்தேன்.

பிறகு, “நீங்கள் இருவரும் என்னிடம் கோரிய (உதவி)தனைவிடச் சிறந்த ஒன்றை உங்கள் இருவருக்கும் நான் கற்றுத்தரட்டுமா? நீங்கள் இருவரும் உங்கள் படுக்கைக்குச் செல்கையில் முப்பத்து நான்கு முறை “அல்லாஹு அக்பர்' (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று சொல்லுங்கள்; முப்பத்து மூன்று முறை “சுப்ஹானல்லாஹ்' (அல்லாஹ் தூயவன்) என்று சொல்லுங்கள்; முப்பத்து மூன்று முறை “அல்ஹம்து லில்லாஹ்' (அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்) என்று சொல்லுங்கள். அது ஒரு பணியாளை விட உங்கள் இருவருக்கும் சிறந்ததாகும்” என்று சொன்னார்கள்.73


அத்தியாயம் : 62
3706. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدٍ، قَالَ سَمِعْتُ إِبْرَاهِيمَ بْنَ سَعْدٍ، عَنْ أَبِيهِ، قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لِعَلِيٍّ "" أَمَا تَرْضَى أَنْ تَكُونَ مِنِّي بِمَنْزِلَةِ هَارُونَ مِنْ مُوسَى "".
பாடம் : 9 அபுல்ஹசன் அலீ பின் அபீதாலிப் அல்குறஷீ அல்ஹாஷிமீ (ரலி) அவர்களின் சிறப்புகள்67 நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம், “நீங்கள் என்னைச் சேர்ந்தவர்; நான் உங்களைச் சேர்ந்தவன்” என்று சொன்னார்கள்.68 “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களைக் குறித்து திருப்தி யுடனிருந்த நிலையில் இறந்தார்கள்” என்று உமர் (ரலி) அவர்கள் சொன்னார் கள்.69
3706. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம், “(நபி) ஹாரூன் அவர்களுக்கு (அவர்களின் சகோதரர்-நபி) மூசா அவர்களிடம் எந்த இடம் இருந்ததோ அதே இடத்தில் நீங்கள் என்னிடம் இருப்பதை விரும்பவில்லையா?” என்று கேட்டார்கள்.74


அத்தியாயம் : 62
3707. حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ أَيُّوبَ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ عَبِيدَةَ، عَنْ عَلِيٍّ ـ رضى الله عنه ـ قَالَ اقْضُوا كَمَا كُنْتُمْ تَقْضُونَ، فَإِنِّي أَكْرَهُ الاِخْتِلاَفَ حَتَّى يَكُونَ لِلنَّاسِ جَمَاعَةٌ، أَوْ أَمُوتَ كَمَا مَاتَ أَصْحَابِي. فَكَانَ ابْنُ سِيرِينَ يَرَى أَنَّ عَامَّةَ مَا يُرْوَى عَلَى عَلِيٍّ الْكَذِبُ.
பாடம் : 9 அபுல்ஹசன் அலீ பின் அபீதாலிப் அல்குறஷீ அல்ஹாஷிமீ (ரலி) அவர்களின் சிறப்புகள்67 நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம், “நீங்கள் என்னைச் சேர்ந்தவர்; நான் உங்களைச் சேர்ந்தவன்” என்று சொன்னார்கள்.68 “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களைக் குறித்து திருப்தி யுடனிருந்த நிலையில் இறந்தார்கள்” என்று உமர் (ரலி) அவர்கள் சொன்னார் கள்.69
3707. அபீதா பின் அம்ர் அஸ்ஸல் மானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அலீ (ரலி) அவர்கள் (இராக் வந்திருந்தபோது இராக் அறிஞர்களிடம் “உம்முல் வலதை' விற்கலாம் என்று கருத்துத் தெரிவிக்க, அதை நான் விரும்பாதபோது), பின்வருமாறு கூறினார்கள்:

நீங்கள் முன்பு (உமர் (ரலி) அவர் களின் கருத்துப்படி உம்முல் வலதை விற்கக் கூடாது என்று) தீர்ப்பளித்துவந்ததைப் போன்றே இனிமேலும் தீர்ப்பளித்துவாருங்கள். ஏனெனில், (மக்களிடையே சச்சரவுகளுக்குக் காரணமாய் அமையும் வகையில் அறிஞர்களுக்கிடையிலான) கருத்து வேறுபாடுகளை (பகிரங்கமாக்குவதை) நான் விரும்பவில்லை.75

மக்கள் அனைவரும் (ஒத்த கருத்துடைய) ஒரே குழுவினராய் ஆகும்வரை, அல்லது என் தோழர்கள் இறந்துவிட்டதைப் போல் நானும் இறந்துவிடும்வரை நான் இவ்வாறே (கருத்து வேறுபாடுகளைப் பகிரங்கப்படுத்த விரும்பாதவனாக) இருப்பேன்.

“அலீ (ரலி) அவர்களிடமிருந்து (வந்த தாக ஷியாக்கள் மூலம்) அறிவிக்கப்படு கின்றவற்றில் பெரும்பாலானவை பொய்கள்தான்” என்று இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் கருதுகிறார்கள்.76

அத்தியாயம் : 62
3708. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ دِينَارٍ أَبُو عَبْدِ اللَّهِ الْجُهَنِيُّ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ النَّاسَ، كَانُوا يَقُولُونَ أَكْثَرَ أَبُو هُرَيْرَةَ. وَإِنِّي كُنْتُ أَلْزَمُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بِشِبَعِ بَطْنِي، حَتَّى لاَ آكُلُ الْخَمِيرَ، وَلاَ أَلْبَسُ الْحَبِيرَ، وَلاَ يَخْدُمُنِي فُلاَنٌ وَلاَ فُلاَنَةُ، وَكُنْتُ أُلْصِقُ بَطْنِي بِالْحَصْبَاءِ مِنَ الْجُوعِ، وَإِنْ كُنْتُ لأَسْتَقْرِئُ الرَّجُلَ الآيَةَ هِيَ مَعِي كَىْ يَنْقَلِبَ بِي فَيُطْعِمَنِي، وَكَانَ أَخْيَرَ النَّاسِ لِلْمِسْكِينِ جَعْفَرُ بْنُ أَبِي طَالِبٍ، كَانَ يَنْقَلِبُ بِنَا فَيُطْعِمُنَا مَا كَانَ فِي بَيْتِهِ، حَتَّى إِنْ كَانَ لَيُخْرِجُ إِلَيْنَا الْعُكَّةَ الَّتِي لَيْسَ فِيهَا شَىْءٌ، فَنَشُقُّهَا فَنَلْعَقُ مَا فِيهَا.
பாடம் : 10 ஜஅஃபர் பின் அபீதாலிப் அல் ஹாஷிமீ (ரலி) அவர்களின் சிறப்பு கள்77 இவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் என் குணத்திலும் என் தோற்றத்திலும் (என்னை) ஒத்திருக் கிறீர்கள்” என்று சொன்னார்கள்.78
3708. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

“(நபிமொழிகளை) அதிகமாக அபூஹுரைரா அறிவிக்கிறாரே” என்று மக்கள் (என்னைப் பற்றிக் குறை) கூறிக் கொண்டிருந்தார்கள். நான் என் பசி அடங்கினால் போதும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடனேயே எப்போதும் இருந்துவந்தேன். புளித்து உப்பிய (உயர்தரமான) ரொட்டியை நான் உண்பதுமில்லை; கோடுபோட்ட அழகிய (உயர்ந்த) துணியை நான் அணிவதுமில்லை. இன்னின்னவர் எனக்குப் பணிவிடை செய்வதுமில்லை. பசியின் காரணத்தால் நான் என் வயிற்றில் கூழாங்கற்களை வைத்துக் கட்டிக்கொண்டிருந்தேன்.

என்னை ஒரு மனிதர் (தமது இல்லத் திற்கு) அழைத்துச் சென்று, எனக்கு அவர் உணவளிக்க வேண்டும் என்ப(தை உணர்த்துவ)தற்காக (“எனக்கு விருந்தளி யுங்கள்' என்ற பொருள் கொண்ட “அக்ரினீ' என்னும் சொல்லை சற்று மாற்றி)” அக்ரிஃனீ' (எனக்கு ஓர் இறைவசனத்தை ஓதிக்காட்டுங்கள்) என்பேன். அவ்வசனம் என்னுடன் (முன்பே மனப்பாடமாக) இருக்கும்.79

—அஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் ஏழைகளுக்கு மிகவும் உதவி செய்பவர்களாயிருந்தார். அவர் எங்களை அழைத்துச் சென்று தம் வீட்டில் இருக்கும் உணவை எங்களுக்கு அளிப்பார். எந்த அளவுக்கென்றால் அவர் எதுவுமில்லாத (காலியான) நெய்ப் பையை எங்களிடம் கொண்டுவந்து அதைப் பிளந்துவிடுவார். நாங்கள் அதில் (ஒட்டிக்கொண்டு) இருப்பதை நக்கி உண்போம்.


அத்தியாயம் : 62
3709. حَدَّثَنِي عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ، عَنِ الشَّعْبِيِّ، أَنَّ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ كَانَ إِذَا سَلَّمَ عَلَى ابْنِ جَعْفَرٍ قَالَ السَّلاَمُ عَلَيْكَ يَا ابْنَ ذِي الْجَنَاحَيْنِ.
பாடம் : 10 ஜஅஃபர் பின் அபீதாலிப் அல் ஹாஷிமீ (ரலி) அவர்களின் சிறப்பு கள்77 இவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் என் குணத்திலும் என் தோற்றத்திலும் (என்னை) ஒத்திருக் கிறீர்கள்” என்று சொன்னார்கள்.78
3709. ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள், ஜஅஃபர் (ரலி) அவர்களின் மகனா(ர் அப்துல்லாஹ் பின் ஜஅஃப)ருக்கு சலாம் சொன்னால், “இரு சிறகுகள் உடைய வரின் மகனே! உங்கள்மீது சாந்தி உண்டாகட்டும்' என்று சொல்வார்கள்.80

அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறுகிறேன்: “இரு சிறகுகள்' என்பது “இரு பக்க (பல)ங் களைக்' குறிக்கும்.

அத்தியாயம் : 62
3710. حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيُّ، حَدَّثَنِي أَبِي عَبْدُ اللَّهِ بْنُ الْمُثَنَّى، عَنْ ثُمَامَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَنَسٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، كَانَ إِذَا قَحَطُوا اسْتَسْقَى بِالْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ، فَقَالَ اللَّهُمَّ إِنَّا كُنَّا نَتَوَسَّلُ إِلَيْكَ بِنَبِيِّنَا صلى الله عليه وسلم فَتَسْقِينَا، وَإِنَّا نَتَوَسَّلُ إِلَيْكَ بِعَمِّ نَبِيِّنَا فَاسْقِنَا. قَالَ فَيُسْقَوْنَ.
பாடம் : 11 அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள் பற்றிய குறிப்பு81
3710. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கள் பஞ்சத்தால் பீடிக்கப்படும் போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்களை (அல்லாஹ் விடம்) மழைகோரிப் பிரார்த்திக்கும்படி கேட்பார்கள்.

(அத்தகைய சந்தர்ப்பங்களில்) உமர் (ரலி) அவர்கள், “இறைவா! நாங்கள் எங்கள் நபி (ஸல்) அவர்கள் (உயிருடன் இருந்தபோது அவர்கள் உன்னிடம் பிரார்த்தித்ததன்) மூலம் உன்னிடம் நாங்கள் உதவி கோரிவந்தோம். அப்போது (அதை ஏற்று) நீயும் எங்களுக்கு மழை பொழியச் செய்துவந்தாய். இப்போது எங்கள் நபியின் தந்தையின் சகோதரர் (அப்பாஸ் (ரலி) அவர்கள் உன்னிடம் பிரார்த்திப்பதன்) வாயிலாக உன்னிடம் (மழை பொழியும்படி) கோருகின்றோம். எங்களுக்கு மழை பொழியச்செய்வாயாக!” என்று கேட்பார்கள்.

அதன்படியே மக்களுக்கு மழை பொழிந்துவந்தது.82

அத்தியாயம் : 62
3711. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، أَنَّ فَاطِمَةَ ـ عَلَيْهَا السَّلاَمُ ـ أَرْسَلَتْ إِلَى أَبِي بَكْرٍ تَسْأَلُهُ مِيرَاثَهَا مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِيمَا أَفَاءَ اللَّهُ عَلَى رَسُولِهِ صلى الله عليه وسلم، تَطْلُبُ صَدَقَةَ النَّبِيِّ صلى الله عليه وسلم الَّتِي بِالْمَدِينَةِ وَفَدَكٍ وَمَا بَقِيَ مِنْ خُمُسِ خَيْبَرَ. فَقَالَ أَبُو بَكْرٍ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لاَ نُورَثُ، مَا تَرَكْنَا فَهْوَ صَدَقَةٌ، إِنَّمَا يَأْكُلُ آلُ مُحَمَّدٍ مِنْ هَذَا الْمَالِ ـ يَعْنِي مَالَ اللَّهِ ـ لَيْسَ لَهُمْ أَنْ يَزِيدُوا عَلَى الْمَأْكَلِ ". وَإِنِّي وَاللَّهِ لاَ أُغَيِّرُ شَيْئًا مِنْ صَدَقَاتِ النَّبِيِّ صلى الله عليه وسلم الَّتِي كَانَتْ عَلَيْهَا فِي عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم، وَلأَعْمَلَنَّ فِيهَا بِمَا عَمِلَ فِيهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم. فَتَشَهَّدَ عَلِيٌّ، ثُمَّ قَالَ إِنَّا قَدْ عَرَفْنَا يَا أَبَا بَكْرٍ فَضِيلَتَكَ. وَذَكَرَ قَرَابَتَهُمْ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَحَقَّهُمْ. فَتَكَلَّمَ أَبُو بَكْرٍ فَقَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَقَرَابَةُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَحَبُّ إِلَىَّ أَنْ أَصِلَ مِنْ قَرَابَتِي.
பாடம் : 12 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய உறவினர்களின் சிறப்புகளும்83 நபி (ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களின் சிறப்பும்84 நபி (ஸல்) அவர்கள், “ஃபாத்திமா, சொர்க்கவாசிகளில் பெண்களின் தலைவி யாவார்” என்று சொன்னார்கள்.85
3711. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் ஒதுக்கித் தந்த “ஃபய்உ' செல்வத்திலிருந்து தமக்கு நபி (ஸல்) அவர்களிடமிருந்து வர வேண்டிய வாரிசுப் பங்கைக் கொடுக்கும்படி அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கேட்டு ஃபாத்திமா (ரலி) அவர்கள் ஆளனுப்பினார். நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் தர்மமாக விட்டுச் சென்ற நிலத்தையும் “ஃபதக்' பிரதேசத்திலிருந்த நிலத்தையும் கைபரில் கிடைத்த “குமுஸ்' நிதியில் மீதியையும் அவர் கேட்டார்.86


அத்தியாயம் : 62
3712. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، أَنَّ فَاطِمَةَ ـ عَلَيْهَا السَّلاَمُ ـ أَرْسَلَتْ إِلَى أَبِي بَكْرٍ تَسْأَلُهُ مِيرَاثَهَا مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِيمَا أَفَاءَ اللَّهُ عَلَى رَسُولِهِ صلى الله عليه وسلم، تَطْلُبُ صَدَقَةَ النَّبِيِّ صلى الله عليه وسلم الَّتِي بِالْمَدِينَةِ وَفَدَكٍ وَمَا بَقِيَ مِنْ خُمُسِ خَيْبَرَ. فَقَالَ أَبُو بَكْرٍ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لاَ نُورَثُ، مَا تَرَكْنَا فَهْوَ صَدَقَةٌ، إِنَّمَا يَأْكُلُ آلُ مُحَمَّدٍ مِنْ هَذَا الْمَالِ ـ يَعْنِي مَالَ اللَّهِ ـ لَيْسَ لَهُمْ أَنْ يَزِيدُوا عَلَى الْمَأْكَلِ ". وَإِنِّي وَاللَّهِ لاَ أُغَيِّرُ شَيْئًا مِنْ صَدَقَاتِ النَّبِيِّ صلى الله عليه وسلم الَّتِي كَانَتْ عَلَيْهَا فِي عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم، وَلأَعْمَلَنَّ فِيهَا بِمَا عَمِلَ فِيهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم. فَتَشَهَّدَ عَلِيٌّ، ثُمَّ قَالَ إِنَّا قَدْ عَرَفْنَا يَا أَبَا بَكْرٍ فَضِيلَتَكَ. وَذَكَرَ قَرَابَتَهُمْ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَحَقَّهُمْ. فَتَكَلَّمَ أَبُو بَكْرٍ فَقَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَقَرَابَةُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَحَبُّ إِلَىَّ أَنْ أَصِلَ مِنْ قَرَابَتِي.
பாடம் : 12 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய உறவினர்களின் சிறப்புகளும்83 நபி (ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களின் சிறப்பும்84 நபி (ஸல்) அவர்கள், “ஃபாத்திமா, சொர்க்கவாசிகளில் பெண்களின் தலைவி யாவார்” என்று சொன்னார்கள்.85
3712. அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(நபிமார்களான) எங்கள் சொத்துகளுக்கு வாரிசாக யாரும் வர முடியாது. நாங்கள் விட்டுச்செல்வதெல்லாம் தர்மம்தான்' என்று சொன்னார்கள்; மேலும், முஹம்மதின் குடும்பத்தார் உண்பதெல்லாம் இந்தச் செல்வத்திலிருந்துதான்; அதாவது அல்லாஹ்வின் செல்வத்திலிருந்துதான். அதில் தங்கள் உணவுச் செலவைவிட அதிகமாக எடுத்துக்கொள்ள அவர்களுக்கு உரிமையில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களின் தர்மப் பொருட்கள், நபியவர்களின் காலத்தில் எந்த வழிமுறைப்படி கையாளப்பட்டு வந்தனவோ அதில் சிறிதையும் நான் மாற்றமாட்டேன். அவற்றின் விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எப்படி நடந்துகொண்டார்களோ அவ்வாறே நான் நடந்துகொள்வேன்” என்று சொன்னார்கள்.

உடனே, அலீ (ரலி) அவர்கள், ஏகத்துவ உறுதிமொழியைக் கூறி இறைவனைப் புகழ்ந்துவிட்டு, “அபூபக்ர் அவர்களே! உங்கள் சிறப்பை நாங்கள் அறிந்திருக்கிறோம்” என்று சொன்னார்கள். -மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தமக்கிருக்கும் உறவையும் அவர்களுடைய உரிமையையும் எடுத்துரைத்தார்கள்- உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் (தாம் பங்கு தர மறுப்பதற்குக் காரணம் கூறும் விதத்தில்) பேசினார்கள்.

“என் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! என் உறவினர் களின் உறவைப் பேணி (அவர்களுடன் நல்ல முறையில்) நடந்துகொள்வதைவிட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடைய உறவினர்களே எனக்கு மிகவும் பிரியமானவர்கள்” என்று சொன்னார்கள்.87


அத்தியாயம் : 62
3713. أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ، حَدَّثَنَا خَالِدٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ وَاقِدٍ، قَالَ سَمِعْتُ أَبِي يُحَدِّثُ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ أَبِي بَكْرٍ ـ رضى الله عنهم ـ قَالَ ارْقُبُوا مُحَمَّدًا صلى الله عليه وسلم فِي أَهْلِ بَيْتِهِ.
பாடம் : 12 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய உறவினர்களின் சிறப்புகளும்83 நபி (ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களின் சிறப்பும்84 நபி (ஸல்) அவர்கள், “ஃபாத்திமா, சொர்க்கவாசிகளில் பெண்களின் தலைவி யாவார்” என்று சொன்னார்கள்.85
3713. அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறி னார்கள்:

முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தார் விஷயத்தில் கவனமாக நடந்துகொள்ளுங்கள். (அவர்களைப் பாதுகாத்துவாருங்கள். அவர்களுக்குத் துன்பம் தராதீர்கள்.)

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 62
3714. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" فَاطِمَةُ بَضْعَةٌ مِنِّي، فَمَنْ أَغْضَبَهَا أَغْضَبَنِي "".
பாடம் : 12 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய உறவினர்களின் சிறப்புகளும்83 நபி (ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களின் சிறப்பும்84 நபி (ஸல்) அவர்கள், “ஃபாத்திமா, சொர்க்கவாசிகளில் பெண்களின் தலைவி யாவார்” என்று சொன்னார்கள்.85
3714. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். எனவே, அவருக்குக் கோபமூட்டியவர் எனக்குக் கோபமூட்டியவர் ஆவார்.

இதை மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.88


அத்தியாயம் : 62
3715. حَدَّثَنَا يَحْيَى بْنُ قَزَعَةَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ دَعَا النَّبِيُّ صلى الله عليه وسلم فَاطِمَةَ ابْنَتَهُ فِي شَكْوَاهُ الَّذِي قُبِضَ فِيهَا، فَسَارَّهَا بِشَىْءٍ فَبَكَتْ، ثُمَّ دَعَاهَا فَسَارَّهَا فَضَحِكَتْ، قَالَتْ فَسَأَلْتُهَا عَنْ ذَلِكَ.
பாடம் : 12 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய உறவினர்களின் சிறப்புகளும்83 நபி (ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களின் சிறப்பும்84 நபி (ஸல்) அவர்கள், “ஃபாத்திமா, சொர்க்கவாசிகளில் பெண்களின் தலைவி யாவார்” என்று சொன்னார்கள்.85
3715. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது, தம் மகள் ஃபாத்திமாவை அழைத்து அவரிடம் ஏதோ இரகசியமாகச் சொன்னார் கள். (நபி (ஸல்) அவர்கள் சொன்னதைக் கேட்டு) ஃபாத்திமா அழுதார். மீண்டும் ஃபாத்திமாவை நபி (ஸல்) அவர்கள் அழைத்து எதையோ இரகசியமாகக் கூறினார்கள். (அதைக் கேட்டவுடன்) ஃபாத்திமா சிரித்தார்.

நான் அதைப் பற்றி (நபி (ஸல்) அவர்கள் இரகசியமாகச் சொன்னது என்ன என்று) அவரிடம் கேட்டேன்.89


அத்தியாயம் : 62
3716. فَقَالَتْ سَارَّنِي النَّبِيُّ صلى الله عليه وسلم فَأَخْبَرَنِي أَنَّهُ يُقْبَضُ فِي وَجَعِهِ الَّذِي تُوُفِّيَ فِيهِ فَبَكَيْتُ، ثُمَّ سَارَّنِي فَأَخْبَرَنِي أَنِّي أَوَّلُ أَهْلِ بَيْتِهِ أَتْبَعُهُ فَضَحِكْتُ.
பாடம் : 12 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய உறவினர்களின் சிறப்புகளும்83 நபி (ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களின் சிறப்பும்84 நபி (ஸல்) அவர்கள், “ஃபாத்திமா, சொர்க்கவாசிகளில் பெண்களின் தலைவி யாவார்” என்று சொன்னார்கள்.85
3716. அதற்கு ஃபாத்திமா, “நபி (ஸல்) அவர்கள் (முதல் முறை) என்னிடம் இரகசியமாகப் பேசியபோது, தமக்கு ஏற்பட்டிருந்த அந்த (நோயின்) வலியி லேயே தாம் இறக்கவிருப்பதாகத் தெரிவித்தார்கள். அதனால் நான் அழுதேன். பிறகு (இரண்டாம் முறை) இரகசியமாகப் பேசியபோது அவர்களுடைய குடும்பத்தாரில் நான்தான் அவர்களைத் தொடர்ந்து (இறைவனிடம்) செல்லப்போகும் முதல் ஆள் என்று சொன்னார்கள். அதனால் நான் (மகிழ்ச்சியோடு) சிரித்தேன்” என்று பதிலளித்தார்கள்.90

அத்தியாயம் : 62
3717. حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، قَالَ أَخْبَرَنِي مَرْوَانُ بْنُ الْحَكَمِ، قَالَ أَصَابَ عُثْمَانَ بْنَ عَفَّانَ رُعَافٌ شَدِيدٌ سَنَةَ الرُّعَافِ، حَتَّى حَبَسَهُ عَنِ الْحَجِّ وَأَوْصَى، فَدَخَلَ عَلَيْهِ رَجُلٌ مِنْ قُرَيْشٍ قَالَ اسْتَخْلِفْ. قَالَ وَقَالُوهُ قَالَ نَعَمْ. قَالَ وَمَنْ فَسَكَتَ، فَدَخَلَ عَلَيْهِ رَجُلٌ آخَرُ ـ أَحْسِبُهُ الْحَارِثَ ـ فَقَالَ اسْتَخْلِفْ. فَقَالَ عُثْمَانُ وَقَالُوا فَقَالَ نَعَمْ. قَالَ وَمَنْ هُوَ فَسَكَتَ قَالَ فَلَعَلَّهُمْ قَالُوا الزُّبَيْرَ قَالَ نَعَمْ. قَالَ أَمَا وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّهُ لَخَيْرُهُمْ مَا عَلِمْتُ، وَإِنْ كَانَ لأَحَبَّهُمْ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம் : 13 ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களின் சிறப்புகள்91 “(ஸுபைர் - ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் பிரத்யேக உதவி யாளர் (ஹவாரீ) ஆவார்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன்னார் கள்.92 (ஈசா (அலை) அவர்களின் உதவியாளர் களான) ஹவாரிய்யீன்களுக்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டதற்கு, அவர்களின் ஆடைகள் வெண்மையாக இருந்ததே காரணமாகும்.
3717. மர்வான் பின் அல்ஹகம் அவர்கள் கூறியதாவது:

“சில்லு மூக்கு' நோய் (பரவலாக ஏற்பட்ட) ஆண்டில்93 உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களுக்கும் மூக்கில் கடுமையாகக் குருதி கொட்டும் நோய் ஏற்பட்டது. எந்த அளவுக்கென்றால் அது அவர்களை ஹஜ் செய்ய விடாமல் தடுத்துவிட்டது. அவர்கள் தம் இறுதி விருப்பத்தையும் தெரிவித்து (மரண சாசனம் செய்து)விட்டார்கள். அப்போது குறைஷியரில் ஒரு மனிதர் உஸ்மான் (ரலி) அவர்களிடம் வந்து, “(உங்களுக்குப்பின்) பிரதிநிதி ஒருவரை நியமியுங்கள்” என்று சொன்னார். உஸ்மான் (ரலி) அவர்கள், “மக்கள் (இப்படி நியமிக்கச்) சொன்னார்களா?” என்று கேட்க அம்மனிதர், “ஆம்” என்றார். “யாரை நியமிப்பது?” என்று உஸ்மான் (ரலி) அவர்கள் கேட்க, அவர் (பதில் சொல்லாமல்) மௌனமாயிருந்தார்.

அப்போது இன்னொரு மனிதர் வந்தார். -அவர் (என் சகோதரர்) ஹாரிஸ் (பின் ஹகம்) என்று நான் நினைக்கிறேன் -அவரும், “(உஸ்மான் (ரலி) அவர்களே! உங்களுக்குப்பின்) ஒரு கலீஃபாவை (பிரதிநிதியை) நியமியுங்கள்” என்று சொன்னார். உஸ்மான் (ரலி) அவர்கள், “மக்கள் (இப்படிச்) சொன்னார்களா?” என்று கேட்க அவர், “ஆம்” என்று பதிலளித்தார். உஸ்மான் (ரலி) அவர்கள், “யாரை நியமிப்பது?” என்று கேட்க. அந்த மனிதர் (பதில் சொல்லாமல்) மௌனமாயிருந்துவிட்டார்.

பிறகு உஸ்மான் (ரலி) அவர்கள், “அவர்கள் ஸுபைர் (ரலி) அவர்களை (கலீஃபாவாக நியமிக்கச்) சொல்லியிருக்கலாம்” என்று சொல்ல, அந்த மனிதர், “ஆம்” என்று பதிலளித்தார். உஸ்மான் (ரலி) அவர்கள், “என் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது ஆணையாக! நான் அறிந்தவரை ஸுபைர் (ரலி) அவர்களே மக்களில் சிறந்தவர். (யாரை கலீஃபாவாக நியமிக்கலாம் என்று மக்கள் ஆலோசனை சொன்னார்களோ) அவர்களிலேயே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மிகவும் பிரியமான வராக அவர் இருந்தார்” என்று சொன் னார்கள்.


அத்தியாயம் : 62
3718. حَدَّثَنِي عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، أَخْبَرَنِي أَبِي، سَمِعْتُ مَرْوَانَ، كُنْتُ عِنْدَ عُثْمَانَ، أَتَاهُ رَجُلٌ فَقَالَ اسْتَخْلِفْ. قَالَ وَقِيلَ ذَاكَ قَالَ نَعَمْ، الزُّبَيْرُ. قَالَ أَمَا وَاللَّهِ إِنَّكُمْ لَتَعْلَمُونَ أَنَّهُ خَيْرُكُمْ. ثَلاَثًا.
பாடம் : 13 ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களின் சிறப்புகள்91 “(ஸுபைர் - ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் பிரத்யேக உதவி யாளர் (ஹவாரீ) ஆவார்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன்னார் கள்.92 (ஈசா (அலை) அவர்களின் உதவியாளர் களான) ஹவாரிய்யீன்களுக்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டதற்கு, அவர்களின் ஆடைகள் வெண்மையாக இருந்ததே காரணமாகும்.
3718. மர்வான் பின் அல்ஹகம் அவர்கள் கூறியதாவது:

நான் உஸ்மான் (ரலி) அவர்களிடம் இருந்தபோது ஒரு மனிதர் அவர்களிடம் வந்து, “(உங்களுக்குப்பின் ஆட்சி செய்ய) ஒரு பிரதிநிதியை நியமியுங்கள்” என்று சொன்னார். உஸ்மான் (ரலி) அவர்கள், “அவ்வாறு (மக்களால்) கூறப்பட்டதா?” என்று கேட்க அம்மனிதர், “ஆம்; ஸுபைர் (ரலி) அவர்களைத்தான் (கலீஃபாவாக ஆக்கும்படி மக்கள் சொல்கிறார்கள்)” என்று பதில் சொன்னார். அப்போது உஸ்மான் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! அவரே உங்களில் சிறந்தவர் என்பதை நிச்சயமாக நீங்கள் அறிவீர்கள்” என்று மூன்று முறை கூறினார்கள்.94


அத்தியாயம் : 62
3719. حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ ـ هُوَ ابْنُ أَبِي سَلَمَةَ ـ عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنَّ لِكُلِّ نَبِيٍّ حَوَارِيًّا، وَإِنَّ حَوَارِيَّ الزُّبَيْرُ بْنُ الْعَوَّامِ "".
பாடம் : 13 ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களின் சிறப்புகள்91 “(ஸுபைர் - ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் பிரத்யேக உதவி யாளர் (ஹவாரீ) ஆவார்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன்னார் கள்.92 (ஈசா (அலை) அவர்களின் உதவியாளர் களான) ஹவாரிய்யீன்களுக்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டதற்கு, அவர்களின் ஆடைகள் வெண்மையாக இருந்ததே காரணமாகும்.
3719. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒவ்வோர் இறைத்தூதருக்கும் ஒரு பிரத்யேக உதவியாளர் (ஹவாரிய்யு) உண்டு. என் பிரத்யேக உதவியாளர் ஸுபைர் பின் அல்அவ்வாம் ஆவார்.95

இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.96


அத்தியாயம் : 62
3720. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا {عَبْدُ اللَّهِ} أَخْبَرَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، قَالَ كُنْتُ يَوْمَ الأَحْزَابِ جُعِلْتُ أَنَا وَعُمَرُ بْنُ أَبِي سَلَمَةَ، فِي النِّسَاءِ، فَنَظَرْتُ فَإِذَا أَنَا بِالزُّبَيْرِ، عَلَى فَرَسِهِ، يَخْتَلِفُ إِلَى بَنِي قُرَيْظَةَ مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا، فَلَمَّا رَجَعْتُ قُلْتُ يَا أَبَتِ، رَأَيْتُكَ تَخْتَلِفُ. قَالَ أَوَهَلْ رَأَيْتَنِي يَا بُنَىَّ قُلْتُ نَعَمْ. قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ يَأْتِ بَنِي قُرَيْظَةَ فَيَأْتِينِي بِخَبَرِهِمْ "". فَانْطَلَقْتُ، فَلَمَّا رَجَعْتُ جَمَعَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَبَوَيْهِ فَقَالَ "" فِدَاكَ أَبِي وَأُمِّي "".
பாடம் : 13 ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களின் சிறப்புகள்91 “(ஸுபைர் - ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் பிரத்யேக உதவி யாளர் (ஹவாரீ) ஆவார்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன்னார் கள்.92 (ஈசா (அலை) அவர்களின் உதவியாளர் களான) ஹவாரிய்யீன்களுக்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டதற்கு, அவர்களின் ஆடைகள் வெண்மையாக இருந்ததே காரணமாகும்.
3720. அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அகழ்ப் போரின்போது நானும் உமர் பின் அபீசலமா (ரலி) அவர்களும் (நபி (ஸல்) அவர்களின் வீட்டுப்) பெண்களி டையே (பாதுகாப்புப்) பணியில் அமர்த்தப் பட்டோம். நான் அப்போது (என் தந்தை) ஸுபைர் (ரலி) அவர்கள் தமது குதிரையில் ஏறி (யூதர்களான) பனூ குறைழா குலத்தாரை நோக்கி இரண்டு- அல்லது மூன்று- முறை போய் வந்துகொண்டி ருப்பதைப் பார்த்தேன்.

நான் (இருப்பிடத்திற்குத்) திரும்பி வந்தபோது, “என் தந்தையே! தாங்கள் போய்க்கொண்டும் வந்துகொண்டுமிருந் ததை நான் பார்த்தேன்” என்று சொன்னேன். அவர்கள், “என்னை நீ பார்த்தாயா? என் அருமை மகனே!” என்று கேட்டார்கள். நான், “ஆம் (பார்த்தேன்)” என்று பதிலளித்தேன்.

அதற்கு அவர்கள், “பனூ குறைழாவிடம் சென்று (உளவறிந்து) என்னிடம் அவர்களுடைய செய்தியைக் கொண்டு வருபவர் யார்?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான் (அந்தப் பணியைச் செய்ய ஒப்புக் கொண்டு) சென்றேன். நான் (அவர்களின் செய்தியை உளவறிந்துகொண்டு) திரும்பி வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னை கௌரவிக்கும் வகையில்) தம் தாய் தந்தையர் இருவரை யும் சேர்த்து, “என் தந்தையும் என் தாயும் உமக்கு அர்ப்பணமாகட்டும்' எனக் கூறினார்கள்” என்று சொன்னார்கள்.


அத்தியாயம் : 62
3721. حَدَّثَنَا عَلِيُّ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، أَخْبَرَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ أَصْحَابَ النَّبِيِّ، صلى الله عليه وسلم قَالُوا لِلزُّبَيْرِ يَوْمَ الْيَرْمُوكِ أَلاَ تَشُدُّ فَنَشُدَّ مَعَكَ فَحَمَلَ عَلَيْهِمْ، فَضَرَبُوهُ ضَرْبَتَيْنِ عَلَى عَاتِقِهِ، بَيْنَهُمَا ضَرْبَةٌ ضُرِبَهَا يَوْمَ بَدْرٍ. قَالَ عُرْوَةُ فَكُنْتُ أُدْخِلُ أَصَابِعِي فِي تِلْكَ الضَّرَبَاتِ أَلْعَبُ وَأَنَا صَغِيرٌ.
பாடம் : 13 ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களின் சிறப்புகள்91 “(ஸுபைர் - ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் பிரத்யேக உதவி யாளர் (ஹவாரீ) ஆவார்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன்னார் கள்.92 (ஈசா (அலை) அவர்களின் உதவியாளர் களான) ஹவாரிய்யீன்களுக்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டதற்கு, அவர்களின் ஆடைகள் வெண்மையாக இருந்ததே காரணமாகும்.
3721. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) ஸுபைர் (ரலி) அவர்களிடம் நபித்தோழர்கள் யர்மூக் போரின் போது,97 “நீங்கள் (கிழக்கு ரோமானிய இணைவைப்போர்மீது) தாக்குதல் நடத்த மாட்டீர்களா? நாங்களும் உங்களுடன் சேர்ந்து தாக்குதல் நடத்துவோமே” என்று கேட்டார்கள். ஆகவே, ஸுபைர் (ரலி) அவர்கள், இணைவைப்போர்மீது தாக்குதல் தொடுத்தார்கள்.

இணைவைப்பாளர்கள் ஸுபைர் (ரலி) அவர்களுடைய தோளின் மீது இரண்டு முறை வெட்டினார்கள். அவ்விரண்டுக்கும் இடையே பத்ர் போரில் ஸுபைர் (ரலி) அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட இன்னொரு காயம் இருந்தது. நான் சிறுவனாயிருந்தபோது அந்த காயங்(களால் ஏற்பட்ட துளை போன்ற வடுக்)களுக்கிடையே என் விரல்களை நுழைத்து விளையாடிவந்தேன்.

அத்தியாயம் : 62