3646. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" الْخَيْلُ لِثَلاَثَةٍ لِرَجُلٍ أَجْرٌ، وَلِرَجُلٍ سِتْرٌ وَعَلَى رَجُلٍ وِزْرٌ. فَأَمَّا الَّذِي لَهُ أَجْرٌ، فَرَجُلٌ رَبَطَهَا فِي سَبِيلِ اللَّهِ، فَأَطَالَ لَهَا فِي مَرْجٍ أَوْ رَوْضَةٍ، وَمَا أَصَابَتْ فِي طِيَلِهَا مِنَ الْمَرْجِ أَوِ الرَّوْضَةِ كَانَتْ لَهُ حَسَنَاتٍ، وَلَوْ أَنَّهَا قَطَعَتْ طِيَلَهَا، فَاسْتَنَّتْ شَرَفًا أَوْ شَرَفَيْنِ، كَانَتْ أَرْوَاثُهَا حَسَنَاتٍ لَهُ، وَلَوْ أَنَّهَا مَرَّتْ بِنَهْرٍ فَشَرِبَتْ، وَلَمْ يُرِدْ أَنْ يَسْقِيَهَا، كَانَ ذَلِكَ لَهُ حَسَنَاتٍ، وَرَجُلٌ رَبَطَهَا تَغَنِّيًا وَسِتْرًا وَتَعَفُّفًا، لَمْ يَنْسَ حَقَّ اللَّهِ فِي رِقَابِهَا وَظُهُورِهَا، فَهِيَ لَهُ كَذَلِكَ سِتْرٌ. وَرَجُلٌ رَبَطَهَا فَخْرًا وَرِيَاءً، وَنِوَاءً لأَهْلِ الإِسْلاَمِ فَهْىَ وِزْرٌ. وَسُئِلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَنِ الْحُمُرِ فَقَالَ "" مَا أُنْزِلَ عَلَىَّ فِيهَا إِلاَّ هَذِهِ الآيَةُ الْجَامِعَةُ الْفَاذَّةُ {فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ * وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ}
பாடம் : 28
3646. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குதிரை (வைத்திருப்பது) மூன்று பேருக்கு (மூன்று வகையான விளைவு களைத் தருவதாகும்.) ஒரு மனிதருக்கு (இறைவனிடமிருந்து) நற்பலனைப் பெற்றுத்தருவதாகும்; மற்றொரு மனிதருக்கு (பொருளாதார)ப் பாதுகாப்பளிக்கக்கூடிய தாகும்; இன்னொரு மனிதருக்குப் பாவச் சுமையாகும்.

அதை இறைவழியில் பயன்படுத்துவதற் காக, அதனைப் பசுமையான ஒரு வெட்ட வெளியில்- அல்லது ஒரு தோட்டத்தில்- ஒரு நீண்ட கயிற்றால் கட்டிவைத்துப் பராமரிக்கின்ற மனிதருக்கு அது (இறைவனிடமிருந்து) நற்பலனைப் பெற்றுத்தரும். அந்தக் குதிரை, தன்(னைக் கட்டியிருக்கும்) கயிற்றின் நீளத்திற்கு ஏற்ப எந்த அளவு தொலைவுக்குப் பசும்புல் வெளியில் -அல்லது தோட்டத்தில்- மேயுமோ அந்த அளவுக்கு அவருக்கு நன்மைகள் கிடைக்கும்.

அதன் கயிறு அறுந்து, அது ஓரிரண்டு முறை குதித்து (அல்லது ஓரிரண்டு மேடுகளைக் கடந்து) சென்றாலும் அதன் (குளம்பின்) சுவடுகளின் அளவுக்கும் அதன் கெட்டிச் சாணத்தின் அளவுக்கும் அவருக்கு நன்மைகள் எழுதப்படும். அந்தக் குதிரை ஓர் ஆற்றைக் கடந்து செல்லும்போது அதிலிருந்து அது தண்ணீர் குடித்தால் அதற்குத் தண்ணீர் புகட்டும் எண்ணம் அதன் உரிமையாளருக்கு இல்லாமல் இருந்தாலும் அது அவர் செய்த நன்மைகளின் கணக்கில் எழுதப்படும்.

இன்னொருவர் தம் தேவைகளை நிறைவு செய்துகொள்ளவும் பிறரிடம் கையேந்துவதிலிருந்து தம்மைக் காத்துக்கொள்ளவும் அதைக் கட்டி வை(த்துப் பராமரி)க்கின்றவர் ஆவார். மேலும், அதன் பிடரியின் (அதன் விற்பனையின் வருமானத்திற்கான ஸகாத்தைச் செலுத்தும்) விஷயத்திலும் (அதனால் தாங்க முடிந்த பளுவை மட்டுமே) அதன் முதுகின் (மீது வைக்கும்) விஷயத்திலும் அல்லாஹ்வின் கட்டளையை (நிறைவேற்றிட) மறக்காதவர் ஆவார். இப்படிப்பட்டவருக்கு (அவருடைய) இந்தக் குதிரை (வறுமையி óருந்து அவரைக் காக்கும்) திரையாகும்.

மற்றொருவன் பெருமைக்காகவும் பகட்டுக்காகவும் முஸ்லிம்களுடன் பகைமை பாராட்டுவதற்காகவும் அதனைக் கட்டிவை(த்து பராமரி)க்கின்றவன் ஆவான். அதன் காரணத்தால், அது அவனுக்குப் பாவச் சுமையாக ஆகிவிடுகிறது.

நபி (ஸல்) அவர்களிடம் கழுதைகளைக் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “அவற்றைக் குறித்து எந்த இறை கட்டளையும் எனக்கு அருளப்படவில்லை; “யார் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர் அத(ன் நற்பல)னைக் கண்டு கொள்வார். மேலும், யார் அணுவளவு தீமை புரிந்திருந்தாரோ அவரும் அத(ற்கான தண்ட)னை(யை)க் கண்டுகொள்வார்' (99:7,8) என்னும் இந்த ஒருங்கிணைந்த, தனித்தன்மை வாய்ந்த குர்ஆன் வசனத்தைத் தவிர” என்று கூறினார்கள்.159


அத்தியாயம் : 61
3647. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ مُحَمَّدٍ، سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ يَقُولُ صَبَّحَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم خَيْبَرَ بُكْرَةً وَقَدْ خَرَجُوا بِالْمَسَاحِي، فَلَمَّا رَأَوْهُ قَالُوا مُحَمَّدٌ وَالْخَمِيسُ. وَأَحَالُوا إِلَى الْحِصْنِ يَسْعَوْنَ، فَرَفَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَدَيْهِ وَقَالَ "" اللَّهُ أَكْبَرُ، خَرِبَتْ خَيْبَرُ، إِنَّا إِذَا نَزَلْنَا بِسَاحَةِ قَوْمٍ فَسَاءَ صَبَاحُ الْمُنْذَرِينَ "".
பாடம் : 28
3647. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (போருக்காக) அதிகாலை நேரத்தில் கைபருக்கு வந்துசேர்ந்தார்கள். அப்போது (யூதர்களான) கைபர்வாசிகள் (வயல் வெளிகளை நோக்கி) மண்வெட்டிகளை எடுத்து வந்துகொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்களைப் பார்த்ததும் அவர்கள், “முஹம்மதும் ஐந்து (பிரிவுகள் கொண்ட அவரது) படையினரும் வருகின்றனர்” என்று சொன்னார்கள்.160

உடனே கோட்டையை நோக்கி விரைந்தோடிச் சென்றார்கள். அப்போது, நபி (ஸல்) அவர்கள் தம் இரு கைகளையும் உயர்த்தி, “அல்லாஹு அக்பர்' (அல்லாஹ் மிகப் பெரியவன்). கைபர்(வாசிகளின் நிலை) நாசமாகிவிடும். “நாம் ஒரு சமுதாயத் தாரின் முற்றத்தில் இறங்கிவிடுவோ மாயின் எச்சரிக்கை செய்யப்பட்டுவந்த அவர்களுக்கு அது மிகக் கெட்ட காலை நேரமாகிவிடும்' என்று (37:177ஆவது இறைவசனத்தின் கருத்தைச்) சொன் னார்கள்.161


அத்தியாயம் : 61
3648. حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا ابْنُ أَبِي الْفُدَيْكِ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنِ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي سَمِعْتُ مِنْكَ كَثِيرًا فَأَنْسَاهُ. قَالَ "" ابْسُطْ رِدَاءَكَ "". فَبَسَطْتُ فَغَرَفَ بِيَدِهِ فِيهِ، ثُمَّ قَالَ "" ضُمَّهُ "" فَضَمَمْتُهُ، فَمَا نَسِيتُ حَدِيثًا بَعْدُ.
பாடம் : 28
3648. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான், “அல்லாஹ்வின் தூதரே! நான் தங்களிடமிருந்து நிறைய செய்திகளைச் செவியுற்றிருக்கிறேன். ஆனால், அவற்றை நான் மறந்துவிடுகிறேன்” என்று (நபி (ஸல்) அவர்களிடம்) சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “உன் மேல் துண்டை விரி” என்று சொல்ல, நானும் அதை விரித்தேன். பிறகு அவர்கள் தம் இரு கைகளால் (எதையோ அள்ளுவதைப் போன்று சைகை செய்து) அதில் அள்ளி(க் கொட்டி)னார்கள்.

பிறகு “இதைச் சேர்த்து (நெஞ்சோடு) அணைத்துக்கொள்” என்று சொன்னார்கள். நானும் அவ்வாறே அதை (என் நெஞ்சோடு) சேர்த்து அணைத் துக்கொண்டேன். அதன் பிறகு எந்த ஹதீஸையும் நான் மறக்கவில்லை.162

அத்தியாயம் : 61

3649. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ يَقُولُ حَدَّثَنَا أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ فَيَغْزُو فِئَامٌ مِنَ النَّاسِ، فَيَقُولُونَ فِيكُمْ مَنْ صَاحَبَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَيَقُولُونَ نَعَمْ. فَيُفْتَحُ لَهُمْ. ثُمَّ يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ فَيَغْزُو فِئَامٌ مِنَ النَّاسِ، فَيُقَالُ هَلْ فِيكُمْ مَنْ صَاحَبَ أَصْحَابَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَيَقُولُونَ نَعَمْ. فَيُفْتَحُ لَهُمْ، ثُمَّ يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ فَيَغْزُو فِئَامٌ مِنَ النَّاسِ، فَيُقَالُ هَلْ فِيكُمْ مَنْ صَاحَبَ مَنْ صَاحَبَ أَصْحَابَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَيَقُولُونَ نَعَمْ. فَيُفْتَحُ لَهُمْ "".
பாடம் : 1 நபித்தோழர்களின் சிறப்புகளும், “முஸ்லிம்களில் யார் நபி (ஸல்) அவர் களுடன் தோழமை கொண்டாரோ, அல்லது அவர்களைப் பார்த்தாரோ அவர் நபித்தோழர் ஆவார்' என்பதும்
3649. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மக்களிடையே ஒரு காலம் வரும். அப்போது மக்களில் ஒரு குழுவினர் அறப்போருக்குச் செல்வார்கள். அப்போது, (அவர்கள் யார்மீது படை யெடுத்துச் செல்கிறார்களோ) அவர்கள், “உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டவர்கள் இருக்கின்றனரா?” என்று கேட்பார்கள். “ஆம் (இருக்கிறார்கள்)” என்று அவர்கள் பதில் சொல்வார்கள். உடனே, போருக்குச் சென்ற அவர்களுக்கு வெற்றி அளிக்கப்படும்.

பிறகு மக்களிடையே ஒரு காலம் வரும். மக்களில் ஒரு குழுவினர் அறப் போர் புரியச் செல்வார்கள். (அவர்களிடம்), “உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களுடன் தோழமை கொண்டவர்கள் இருக்கின்றார் களா?” என்று கேட்கப்படும். போருக்குச் சென்றவர்கள், “ஆம், இருக்கிறார்கள்” என்று சொல்வார்கள். உடனே அவர்களுக்கு வெற்றியளிக்கப்படும்.

பிறகு மக்களிடையே ஒரு காலம் வரும். மக்களில் ஒரு குழுவினர் போருக்குச் செல்வார்கள். அப்போது அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்களுடன் தோழமை கொண்டிருந்தவர்களுடன், தோழமை கொண்டவர்கள் உங்களிடையே இருக்கின்றனரா?” என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், “ஆம், இருக்கின்றார்கள்” என்று பதிலளிப்பார்கள். உடனே அவர்களுக்கு வெற்றியளிக்கப்படும்.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.2


அத்தியாயம் : 62
3650. حَدَّثَنِي إِسْحَاقُ، حَدَّثَنَا النَّضْرُ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ أَبِي جَمْرَةَ، سَمِعْتُ زَهْدَمَ بْنَ مُضَرِّبٍ، سَمِعْتُ عِمْرَانَ بْنَ حُصَيْنٍ ـ رضى الله عنهما ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" خَيْرُ أُمَّتِي قَرْنِي ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ "". قَالَ عِمْرَانُ فَلاَ أَدْرِي أَذَكَرَ بَعْدَ قَرْنِهِ قَرْنَيْنِ أَوْ ثَلاَثًا "" ثُمَّ إِنَّ بَعْدَكُمْ قَوْمًا يَشْهَدُونَ وَلاَ يُسْتَشْهَدُونَ، وَيَخُونُونَ وَلاَ يُؤْتَمَنُونَ، وَيَنْذُرُونَ وَلاَ يَفُونَ، وَيَظْهَرُ فِيهِمُ السِّمَنُ "".
பாடம் : 1 நபித்தோழர்களின் சிறப்புகளும், “முஸ்லிம்களில் யார் நபி (ஸல்) அவர் களுடன் தோழமை கொண்டாரோ, அல்லது அவர்களைப் பார்த்தாரோ அவர் நபித்தோழர் ஆவார்' என்பதும்
3650. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தாரில் சிறந்தவர்கள் என்னுடைய தலைமுறையினரே. பிறகு, (சிறந்தவர்கள்) அவர்களை அடுத்து வரும் தலைமுறையினர் ஆவர். அதற்கு அடுத்து (சிறந்தவர்கள்) அவர்களையடுத்து வரும் தலைமுறையினர் ஆவர்.3

பிறகு, உங்களுக்குப் பின்னர் ஒரு சமுதாயத்தார் (வர) இருக்கிறார்கள். அவர்கள், தங்களிடம் சாட்சியம் கோரப் படாமலேயே சாட்சியம் சொல்வார்கள். அவர்கள் நம்பிக்கை மோசடி செய்வார்கள்; (மக்களின்) நம்பிக்கைக்குரியவர்களாக இருக்கமாட்டார்கள். அவர்கள் நேர்ச்சை செய்வார்கள்; ஆனால், அதை நிறைவேற்றமாட்டார்கள். அவர்களிடையே பருமனாயிருக்கும் (தொந்தி ஏற்படும்) நிலை தோன்றும்.4

(இதை அறிவிக்கும் நபித்தோழர்) இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் தமது தலைமுறைக்குப் பிறகு இரண்டு தலைமுறைகளைக் கூறினார்களா, அல்லது மூன்று தலைமுறைகளைக் கூறினார்களா என்பது எனக்குத் தெரியாது.5


அத்தியாயம் : 62
3651. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبِيدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" خَيْرُ النَّاسِ قَرْنِي، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ يَجِيءُ قَوْمٌ تَسْبِقُ شَهَادَةُ أَحَدِهِمْ يَمِينَهُ وَيَمِينُهُ شَهَادَتَهُ "". قَالَ إِبْرَاهِيمُ وَكَانُوا يَضْرِبُونَا عَلَى الشَّهَادَةِ وَالْعَهْدِ وَنَحْنُ صِغَارٌ.
பாடம் : 1 நபித்தோழர்களின் சிறப்புகளும், “முஸ்லிம்களில் யார் நபி (ஸல்) அவர் களுடன் தோழமை கொண்டாரோ, அல்லது அவர்களைப் பார்த்தாரோ அவர் நபித்தோழர் ஆவார்' என்பதும்
3651. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மக்களில் சிறந்தவர்கள் என் தலை முறையினர். அவர்களுக்குப் பிறகு (சிறந்தவர்கள்) அவர்களையடுத்து வருபவர்கள். அவர்களுக்குப் பிறகு (சிறந்தவர்கள்) அவர்களையடுத்து வருபவர்கள். பின்னர் ஒரு சமுதாயத்தார் வருவார்கள். அவர்களுடைய சாட்சியம் அவர்களுடைய சத்தியத்தை முந்திக் கொள்ளும். அவர்களுடைய சத்தியம் அவர்களுடைய சாட்சியத்தை முந்திக் கொள்ளும்.6

இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நாங்கள் விவரமில்லாத சிறுவர்களாயிருந்தபோது, “அஷ்ஹது பில்லாஹ்” (அல்லாஹ்வை முன்னிறுத்தி நான் சாட்சியம் கூறுகிறேன்) என்றோ, “அலய்ய அஹ்துல்லாஹ்” (அல்லாஹ்வுடன் நான் செய்துகொண்ட ஒப்பந்தப்படி) என்றோ சொன்னால் பெரியவர்கள் எங்களை(க் கண்டித்து) அடிப்பார்கள்.7

அத்தியாயம் : 62
3652. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ، قَالَ اشْتَرَى أَبُو بَكْرٍ ـ رضى الله عنه ـ مِنْ عَازِبٍ رَحْلاً بِثَلاَثَةَ عَشَرَ دِرْهَمًا فَقَالَ أَبُو بَكْرٍ لِعَازِبٍ مُرِ الْبَرَاءَ فَلْيَحْمِلْ إِلَىَّ رَحْلِي. فَقَالَ عَازِبٌ لاَ حَتَّى تُحَدِّثَنَا كَيْفَ صَنَعْتَ أَنْتَ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ خَرَجْتُمَا مِنْ مَكَّةَ وَالْمُشْرِكُونَ يَطْلُبُونَكُمْ قَالَ ارْتَحَلْنَا مِنْ مَكَّةَ، فَأَحْيَيْنَا أَوْ سَرَيْنَا لَيْلَتَنَا وَيَوْمَنَا حَتَّى أَظْهَرْنَا وَقَامَ قَائِمُ الظَّهِيرَةِ، فَرَمَيْتُ بِبَصَرِي هَلْ أَرَى مِنْ ظِلٍّ فَآوِيَ إِلَيْهِ، فَإِذَا صَخْرَةٌ أَتَيْتُهَا فَنَظَرْتُ بَقِيَّةَ ظِلٍّ لَهَا فَسَوَّيْتُهُ، ثُمَّ فَرَشْتُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فِيهِ، ثُمَّ قُلْتُ لَهُ اضْطَجِعْ يَا نَبِيَّ اللَّهِ. فَاضْطَجَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم ثُمَّ انْطَلَقْتُ أَنْظُرُ مَا حَوْلِي، هَلْ أَرَى مِنَ الطَّلَبِ أَحَدًا فَإِذَا أَنَا بِرَاعِي غَنَمٍ يَسُوقُ غَنَمَهُ إِلَى الصَّخْرَةِ يُرِيدُ مِنْهَا الَّذِي أَرَدْنَا، فَسَأَلْتُهُ فَقُلْتُ لَهُ لِمَنْ أَنْتَ يَا غُلاَمُ قَالَ لِرَجُلٍ مِنْ قُرَيْشٍ سَمَّاهُ فَعَرَفْتُهُ. فَقُلْتُ هَلْ فِي غَنَمِكَ مِنْ لَبَنٍ قَالَ نَعَمْ. قُلْتُ فَهَلْ أَنْتَ حَالِبٌ لَبَنًا قَالَ نَعَمْ. فَأَمَرْتُهُ فَاعْتَقَلَ شَاةً مِنْ غَنَمِهِ، ثُمَّ أَمَرْتُهُ أَنْ يَنْفُضَ ضَرْعَهَا مِنَ الْغُبَارِ، ثُمَّ أَمَرْتُهُ أَنْ يَنْفُضَ كَفَّيْهِ، فَقَالَ هَكَذَا ضَرَبَ إِحْدَى كَفَّيْهِ بِالأُخْرَى فَحَلَبَ لِي كُثْبَةً مِنْ لَبَنٍ، وَقَدْ جَعَلْتُ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِدَاوَةً عَلَى فَمِهَا خِرْقَةٌ، فَصَبَبْتُ عَلَى اللَّبَنِ حَتَّى بَرَدَ أَسْفَلُهُ، فَانْطَلَقْتُ بِهِ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَوَافَقْتُهُ قَدِ اسْتَيْقَظَ، فَقُلْتُ اشْرَبْ يَا رَسُولَ اللَّهِ. فَشَرِبَ حَتَّى رَضِيتُ ثُمَّ قُلْتُ قَدْ آنَ الرَّحِيلُ يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" بَلَى "". فَارْتَحَلْنَا وَالْقَوْمُ يَطْلُبُونَا، فَلَمْ يُدْرِكْنَا أَحَدٌ مِنْهُمْ غَيْرُ سُرَاقَةَ بْنِ مَالِكِ بْنِ جُعْشُمٍ عَلَى فَرَسٍ لَهُ. فَقُلْتُ هَذَا الطَّلَبُ قَدْ لَحِقَنَا يَا رَسُولَ اللَّهِ. فَقَالَ "" لاَ تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا "".
பாடம் : 2 முஹாஜிர்களின் மாண்புகளும் அவர்களின் மேன்மையும்8 அபூபக்ர் அப்துல்லாஹ் பின் அபீ குஹாஃபா அத்தைமீ (ரலி) அவர்களும் முஹாஜிர்களில் ஒருவர்.9 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: மேலும், (ஃபய்உ10 எனும் அந்தச் செல்வம்) தங்களின் இல்லங்களைவிட்டும் - சொத்துக்களைவிட்டும் வெளியேற்றப் பட்ட ஏழை முஹாஜிர்களுக்கு உரியது மாகும். அவர்கள் அல்லாஹ்வின் அருளையும் அவனது அன்பையும் விரும்புகிறார்கள். மேலும், அல்லாஹ்வுக் கும் அவனுடைய தூதருக்கும் உதவி புரிந்திடத் தயாராயிருக்கிறார்கள். இவர்களே வாய்மையாளர்களாவர். (59:8) மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: நீங்கள் இந்த நபிக்கு உதவி செய்யாவிட்டால் (அதனால் என்ன?), இருவரில் ஒருவராக இருந்த அவரை (ஏக இறையை) மறுத்தோர், வெளியேற்றியபோதும், அவ்விருவரும் அந்தக்குகையில் (ஒளிந்து) இருந்தபோதும், அவர் தம் தோழரிடம் “கவலைப்படாதீர்; அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்” என்று கூறியபோதும் அவருக்கு அல்லாஹ் உதவி புரிந்துள் ளான். (9:40) “அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் (“ஸவ்ர்') குகையில் இருந்தார்கள்” என்று ஆயிஷா (ரலி) அவர்களும், அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களும், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் கூறுகின்றனர்.11
3652. பராஉ (ரலி) அவர்கள் கூறிய தாவது:

அபூபக்ர் (ரலி) அவர்கள் (என் தந்தை) ஆஸிப் (ரலி) அவர்களிட மிருந்து பதின்மூன்று திர்ஹங்கள் கொடுத்து ஓர் ஒட்டகச் சேணத்தை வாங்கினார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் (என் தந்தை) ஆஸிபி டம், “(உங்கள் மகன்) “பராஉ'வுக்குக் கட்டளையிடுங்கள். என் சேணத்தை என்னிடம் அவர் சுமந்து வரட்டும்” என்று கூறினார்கள். அதற்கு ஆஸிப் (ரலி) அவர்கள், “இணைவைப்போர் உங்களைத் தேடிக்கொண்டிருக்க, நீங்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் மக்காவைவிட்டு வெளியேறியபோது எப்படி செயல்பட்டீர்கள் என்று எனக்கு நீங்கள் அறிவிக்காத வரை நான் (“பராஉ'வுக்குச் சேணம் கொண்டுவரும்படி) கட்டளையிடமாட்டேன்” என்று கூறினார்கள்.

அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், பின்வருமாறு பதிலளித்தார்கள்: நாங்கள் மக்காவிலிருந்து புறப்பட்டு இரவு பகலாகக் கண்விழித்துப் பயணித்தோம்- அல்லது எங்கள் இரவிலும் பகலிலும் நாங்கள் நடந்தோம்- இறுதியில், நண்பகல் நேரத்தை அடைந்தோம். உச்சிப் பொழுதின் கடும் வெயில் அடிக்கலாயிற்று. ஒதுங்குவதற்கு நிழல் ஏதும் தென்படுகிறதா என்று நான் நோட்டமிட்டேன். அப்போது பாறையொன்று தென்பட்டது. அங்கு நான் சென்றேன். அப்போது அங்கிருந்த நிழலைக் கண்டு அந்த இடத்தைச் சமப்படுத்தினேன்.

பிறகு நபி (ஸல்) அவர்களுக்காக அந்த நிழலில் (ஒரு தோலை) விரித்தேன். பிறகு அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! படுத்துக்கொள்ளுங்கள்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள் படுத்துக்கொண்டார்கள். பிறகு நான் யாரேனும் எங்களைத் தேடி வந்திருக்கிறார் களா என்று என்னைச் சுற்றிலும் நோட்டமிட்டபடி நடந்தேன். அப்போது ஆடு மேய்ப்பவன் ஒருவன் தன் ஆட்டை (நாங்கள் தங்கியிருந்த) பாறையை நோக்கி ஓட்டிவருவதைக் கண்டேன். நாங்கள் (ஓய்வெடுக்க) விரும்பியதைப் போன்று அவனும் (ஓய்வெடுக்க) நாடி வந்துகொண்டிருந்தான். நான் அவனிடம், “நீ யாருடைய பணியாள்? இளைஞனே!” என்று கேட்டேன். அவன், “குறைஷியரில் ஒருவரின் பணியாள்” என்று கூறி அவரது பெயரைக் குறிப்பிட்டான். நான் அவர் இன்னாரெனப் புரிந்துகொண்டேன்.

ஆகவே, “உன் ஆடுகளில் சிறிது பால் இருக்குமா?” என்று கேட்டேன். அவன், “ஆம் (இருக்கிறது)” என்று பதிலளித்தான். நான், “நீ எங்களுக்காகப் பால் கறந்து தருவாயா?” என்று கேட்டேன். அவன், “ஆம் (கறந்து தருகிறேன்)” என்று பதிலளித்தான். நான் அவனது ஆட்டு மந்தையிலிருந்து ஓர் ஆட்டைப் பிடிக்கும் படி உத்தரவிட அவ்வாறே அவன் பிடித்தான். பிறகு நான் அதன் மடியைப் புழுதி போக உதறும்படி அவனுக்கு உத்தரவிட்டேன். பிறகு அவனது இரு கைகளையும் உதறும்படி அவனுக்கு உத்தரவிட்டேன். - “இப்படி' என்று பராஉ (ரலி) அவர்கள் தம் இரு கைகளில் ஒன்றை மற்றொன்றின் மீது தட்டினார்கள் - என அறிவிப்பாளர் அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

அவன் எனக்குச் சிறிது பாலைக் கறந்துதந்தான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக தோல் குவளை ஒன்றை நான் வைத்திருந்தேன். அதன் வாய் ஒரு துண்டுத் துணியால் மூடப்பட்டி ருந்தது. நான் (அதிலிருந்த) நீரை அந்தப் பால் (குவளை)மீது, அதன் அடிப்பகுதி குளிர்ந்துவிடும்வரை ஊற்றினேன்.

பிறகு அதை எடுத்துக்கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் செல்ல, அப்போது அவர்களும் விழித்தெழுந்து விட்டிருந்தார் கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! அருந்துங்கள்” என்று சொன்னேன். நான் திருப்தியடையும்வரை அருந்தினார்கள். பிறகு “புறப்படும் நேரம் வந்துவிட்டது, அல்லாஹ்வின் தூதரே!” என்று நான் சொல்ல அவர்கள், “ஆம்” என்று பதிலளித்தார்கள். மக்கள் எங்களை (வலைவீசித்) தேடிக்கொண்டிருக்க, நாங்கள் புறப்பட்டோம். (அதுவரை இஸ்லாத்தை ஏற்றிராத) சுராக்கா பின் மாலிக் பின் ஜுஃஷும் என்பவர் தமது குதிரை மீதமர்ந்தபடி எங்களைக் கண்டுவிட்டதைத் தவிர எதிரிகளில் வேறுயாரும் எங்களைக் காணவில்லை.

(எதிரிகள் எங்களைத் தேடி வந்தபோது) நான், “இதோ நம்மைத் தேடி வந்தவர்கள் நம்மை வந்தடைந்துவிட்டார்கள், அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், “கவலைப்படாதீர்கள், அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்” என்று சொன்னார்கள்.12

(16:6 ஆவது வசனத்தில் இடம்பெறும்) “துரீஹƒன' எனும் சொல்லுக்கு “மாலையில் ஓட்டிச்செல்வது' என்பது பொருள். “தஸ்ரஹƒன' என்பதற்கு “காலையில் ஓட்டிச்செல்வது' என்பது பொருள்.

(ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹிஜ்ரத் தொடர்பான ஹதீஸில் இச்சொற்கள் இடம்பெறுகின்றன.)


அத்தியாயம் : 62
3653. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، عَنْ أَبِي بَكْرٍ ـ رضى الله عنه ـ قَالَ قُلْتُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم وَأَنَا فِي الْغَارِ لَوْ أَنَّ أَحَدَهُمْ نَظَرَ تَحْتَ قَدَمَيْهِ لأَبْصَرَنَا. فَقَالَ "" مَا ظَنُّكَ يَا أَبَا بَكْرٍ بِاثْنَيْنِ اللَّهُ ثَالِثُهُمَا "".
பாடம் : 2 முஹாஜிர்களின் மாண்புகளும் அவர்களின் மேன்மையும்8 அபூபக்ர் அப்துல்லாஹ் பின் அபீ குஹாஃபா அத்தைமீ (ரலி) அவர்களும் முஹாஜிர்களில் ஒருவர்.9 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: மேலும், (ஃபய்உ10 எனும் அந்தச் செல்வம்) தங்களின் இல்லங்களைவிட்டும் - சொத்துக்களைவிட்டும் வெளியேற்றப் பட்ட ஏழை முஹாஜிர்களுக்கு உரியது மாகும். அவர்கள் அல்லாஹ்வின் அருளையும் அவனது அன்பையும் விரும்புகிறார்கள். மேலும், அல்லாஹ்வுக் கும் அவனுடைய தூதருக்கும் உதவி புரிந்திடத் தயாராயிருக்கிறார்கள். இவர்களே வாய்மையாளர்களாவர். (59:8) மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: நீங்கள் இந்த நபிக்கு உதவி செய்யாவிட்டால் (அதனால் என்ன?), இருவரில் ஒருவராக இருந்த அவரை (ஏக இறையை) மறுத்தோர், வெளியேற்றியபோதும், அவ்விருவரும் அந்தக்குகையில் (ஒளிந்து) இருந்தபோதும், அவர் தம் தோழரிடம் “கவலைப்படாதீர்; அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்” என்று கூறியபோதும் அவருக்கு அல்லாஹ் உதவி புரிந்துள் ளான். (9:40) “அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் (“ஸவ்ர்') குகையில் இருந்தார்கள்” என்று ஆயிஷா (ரலி) அவர்களும், அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களும், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் கூறுகின்றனர்.11
3653. அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறிய தாவது:

நபி (ஸல்) அவர்களுடன் நான் (ஸவ்ர்) குகையில் இருந்தபோது அவர்களிடம், “(குகைக்கு மேலிருந்து நம்மைத் தேடிக்கொண்டிருக்கும்) இவர்களில் எவராவது தம் கால்களுக்குக் கீழே (குனிந்து) பார்த்தால் நம்மைக் கண்டு கொள்வார்” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், “தம்முடன் மூன்றாமவனாக அல்லாஹ்வே இருக்கும் (நம்) இருவரைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள், அபூபக்ரே!” என்று கேட்டார்கள்.13

அத்தியாயம் : 62
3654. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ، حَدَّثَنَا فُلَيْحٌ، قَالَ حَدَّثَنِي سَالِمٌ أَبُو النَّضْرِ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ قَالَ خَطَبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم النَّاسَ وَقَالَ "" إِنَّ اللَّهَ خَيَّرَ عَبْدًا بَيْنَ الدُّنْيَا وَبَيْنَ مَا عِنْدَهُ فَاخْتَارَ ذَلِكَ الْعَبْدُ مَا عِنْدَ اللَّهِ "". قَالَ فَبَكَى أَبُو بَكْرٍ، فَعَجِبْنَا لِبُكَائِهِ أَنْ يُخْبِرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ عَبْدٍ خُيِّرَ. فَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم هُوَ الْمُخَيَّرُ وَكَانَ أَبُو بَكْرٍ أَعْلَمَنَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِنَّ مِنْ أَمَنِّ النَّاسِ عَلَىَّ فِي صُحْبَتِهِ وَمَالِهِ أَبَا بَكْرٍ، وَلَوْ كُنْتُ مُتَّخِذًا خَلِيلاً غَيْرَ رَبِّي لاَتَّخَذْتُ أَبَا بَكْرٍ، وَلَكِنْ أُخُوَّةُ الإِسْلاَمِ وَمَوَدَّتُهُ، لاَ يَبْقَيَنَّ فِي الْمَسْجِد ِباب إِلاَّ سُدَّ، إِلاَّ باب أَبِي بَكْرٍ "".
பாடம் : 3 “அபூபக்ரின் வாயிலைத் தவிர (மஸ்ஜிதுந் நபவிக்கு வரும்) அனைத்து வாயில்களையும் அடைத்துவிடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.14
3654. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இறப்பதற்குமுன் நோய்வாய்ப் பட்டிருந்தபோது) மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அதில், “அல்லாஹ் ஓர் அடியாருக்கு இந்த உலகம் அல்லது தன்னிடமிருப்பது -இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி கூறினான். அந்த அடியார் அல்லாஹ்விடம் இருப்பதையே தேர்ந்தெடுத்துக்கொண்டார்” என்று சொன்னார்கள்.

உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களின் இறப்பு நெருங்கி விட்டதை உணர்ந்து) அழுதார்கள். “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள விருப்ப உரிமை அளிக்கப்பட்ட அடியாரைப் பற்றிக் குறிப்பிட்டதற்கு இவர் ஏன் அழுகிறார்?' என்று நாங்கள் வியப்படைந்தோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தான் விருப்ப உரிமை அளிக்கப்பட்ட அந்த அடியார். (நபி (ஸல்) அவர்களின் இறப்பையே இது குறிக்கிறது என்பதை அபூபக்ர் (ரலி) அவர்கள் விளங்கிக் கொண்டார்கள். ஏனெனில்,) அபூபக்ர் (ரலி) அவர்கள் எங்களில் மிகவும் அறிந்தவராக இருந்தார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “தமது நட்பிலும் தமது செல்வத்திலும் எனக்கு மக்களிலேயே பேருதவியாளராக இருப்பவர் அபூபக்ரேயாவார். என் இறைவனல்லாத வேறெவரையாவது நான் உற்ற நண்பராக ஆக்கிக்கொள்ள விரும்பியிருந்தால் அபூபக்ர் அவர்களையே ஆக்கிக்கொண்டிருப்பேன். ஆயினும், இஸ்லாத்தின் சகோதரத்துவமும் அதனால் ஏற்படும் பாச உணர்வும் (எனக்கும் அவருக்குமிடையே ஏற்கெனவே) இருக்கத்தான் செய்கின்றன. (எனது இந்தப்) பள்ளிவாசலில் அபூபக்ர் அவர்களின் வாயிலைத் தவிர வேறெந்த வாயிலும் அடைக்கப்படாமல் இருக்க வேண்டாம்” என்று சொன்னார்கள்.15

அத்தியாயம் : 62
3655. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُلَيْمَانُ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ كُنَّا نُخَيِّرُ بَيْنَ النَّاسِ فِي زَمَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَنُخَيِّرُ أَبَا بَكْرٍ، ثُمَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، ثُمَّ عُثْمَانَ بْنَ عَفَّانَ رضى الله عنهم.
பாடம் : 4 நபி (ஸல்) அவர்களுக்கு அடுத்து அபூபக்ர் (ரலி) அவர்களே மேன்மை யானவர்.
3655. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் மக்களிடையே சிறந்தவர்கள் இன்னார், இன்னார் என்று மதிப்பிட்டு வந்தோம். (முதலில்) அபூபக்ர் (ரலி) அவர்களைச் சிறந்தவராக மதிப்பிட்டோம். பிறகு உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களையும், பிறகு உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களையும் சிறந்தவர் களாக மதிப்பிட்டுவந்தோம்.

அத்தியாயம் : 62
3656. حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" وَلَوْ كُنْتُ مُتَّخِذًا مِنْ أُمَّتِي خَلِيلاً لاَتَّخَذْتُ، أَبَا بَكْرٍ وَلَكِنْ أَخِي وَصَاحِبِي "".
பாடம் : 5 நான் (அல்லாஹ் அல்லாத ஒருவரை) உற்ற நண்பராக ஆக்கிக் கொள்ள விரும்பியிருந்தால்... என்று தொடங்கும் நபிமொழி இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.16
3656. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இறைவனைத் தவிர வேறு) ஒருவரை நான் உற்ற நண்பராக ஆக்கிக் கொள்ள விரும்பியிருந்தால், அபூபக்ர் அவர்களையே ஆக்கிக்கொண்டிருப்பேன். ஆயினும், அவர் (மார்க்கத்தில்) என் சகோதரரும், (இன்பத்திலும் துன்பத்திலும்) என் தோழரும் ஆவார்.

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 62
3657. حَدَّثَنَا مُعَلَّى، وَمُوسَى، قَالاَ حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ أَيُّوبَ، وَقَالَ، "" لَوْ كُنْتُ مُتَّخِذًا خَلِيلاً لاَتَّخَذْتُهُ خَلِيلاً، وَلَكِنْ أُخُوَّةُ الإِسْلاَمِ أَفْضَلُ "". حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، عَنْ أَيُّوبَ، مِثْلَهُ.
பாடம் : 5 நான் (அல்லாஹ் அல்லாத ஒருவரை) உற்ற நண்பராக ஆக்கிக் கொள்ள விரும்பியிருந்தால்... என்று தொடங்கும் நபிமொழி இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.16
3657. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் உற்ற நண்பராக எவரையேனும் ஆக்கிக்கொள்ள விரும்பியிருந்தால் அவரையே (அபூபக்ர் அவர்களையே) ஆக்கிக்கொண்டிருப்பேன். ஆயினும், இஸ்லாத்தின் சகோதரத்துவமே சிறந்ததாகும்.

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 62
3658. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، أَخْبَرَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي مُلَيْكَةَ، قَالَ كَتَبَ أَهْلُ الْكُوفَةِ إِلَى ابْنِ الزُّبَيْرِ فِي الْجَدِّ. فَقَالَ أَمَّا الَّذِي قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لَوْ كُنْتُ مُتَّخِذًا مِنْ هَذِهِ الأُمَّةِ خَلِيلاً لاَتَّخَذْتُهُ "". أَنْزَلَهُ أَبًا يَعْنِي أَبَا بَكْرٍ.
பாடம் : 5 நான் (அல்லாஹ் அல்லாத ஒருவரை) உற்ற நண்பராக ஆக்கிக் கொள்ள விரும்பியிருந்தால்... என்று தொடங்கும் நபிமொழி இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.16
3658. அப்துல்லாஹ் பின் அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

கூஃபாவாசிகள்17 இப்னு ஸுபைர் (ரலி) அவர்களிடம் பாட்டனாரின் வாரிசுப் பங்கு குறித்து எழுதிக் கேட்டார்கள். அதற்கு இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள், “நான் இந்தச் சமுதாயத்தாரிலிருந்து யாரையேனும் உற்ற தோழராக ஆக்கிக்கொள்ள விரும்பியிருந்தால் அவரையே ஆக்கிக்கொண்டிருப் பேன்' என்று யாரைக் குறித்துச் சொன்னார்களோ அவர்கள், பாட்டனாரைத் தந்தையின் இடத்தில் வைத்தார்கள்” என்று அபூபக்ர் (ரலி) அவர்களைக் கருத்தில் கொண்டு பதில் சொன்னார்கள்.18


அத்தியாயம் : 62
3659. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالاَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ أَتَتِ امْرَأَةٌ النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَمَرَهَا أَنْ تَرْجِعَ إِلَيْهِ. قَالَتْ أَرَأَيْتَ إِنْ جِئْتُ وَلَمْ أَجِدْكَ كَأَنَّهَا تَقُولُ الْمَوْتَ. قَالَ عَلَيْهِ السَّلاَمُ "" إِنْ لَمْ تَجِدِينِي فَأْتِي أَبَا بَكْرٍ "".
பாடம் : 5 நான் (அல்லாஹ் அல்லாத ஒருவரை) உற்ற நண்பராக ஆக்கிக் கொள்ள விரும்பியிருந்தால்... என்று தொடங்கும் நபிமொழி இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.16
3659. ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி (தேவை ஒன்றை முறையிடு வதற்காக) வந்தார். நபி (ஸல்) அவர்கள் அந்தப் பெண்மணியைத் திரும்பவும் வரும்படிக் கட்டளையிட்டார்கள். அந்தப் பெண்மணி, “நான் வந்து தங்களைக் காண (முடிய)வில்லையென்றால்...?” என்று -நபி (ஸல்) அவர்கள் இறந்து விட்டால் (என்ன செய்வது?) என்பதுபோல்- கேட்டாள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ என்னைக் காண வில்லையென்றால் அபூபக்ரிடம் செல்” என்று பதில் சொன்னார்கள்.19

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 62
3660. حَدَّثَنِي أَحْمَدُ بْنُ أَبِي الطَّيِّبِ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُجَالِدٍ، حَدَّثَنَا بَيَانُ بْنُ بِشْرٍ، عَنْ وَبَرَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ هَمَّامٍ، قَالَ سَمِعْتُ عَمَّارًا، يَقُولُ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَمَا مَعَهُ إِلاَّ خَمْسَةُ أَعْبُدٍ وَامْرَأَتَانِ وَأَبُو بَكْرٍ.
பாடம் : 5 நான் (அல்லாஹ் அல்லாத ஒருவரை) உற்ற நண்பராக ஆக்கிக் கொள்ள விரும்பியிருந்தால்... என்று தொடங்கும் நபிமொழி இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.16
3660. ஹம்மாம் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“(இஸ்லாத்தின் ஆரம்பக் காலத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களு டன் ஐந்து அடிமைகளும் இரண்டு பெண்களும் (அடிமையல்லாத ஆண் களில்) அபூபக்ர் (ரலி) அவர்களும் மட்டுமே இருக்கக் கண்டேன்” என அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டேன்.20


அத்தியாயம் : 62
3661. حَدَّثَنِي هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا صَدَقَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا زَيْدُ بْنُ وَاقِدٍ، عَنْ بُسْرِ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ عَائِذِ اللَّهِ أَبِي إِدْرِيسَ، عَنْ أَبِي الدَّرْدَاءِ ـ رضى الله عنه ـ قَالَ كُنْتُ جَالِسًا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم إِذْ أَقْبَلَ أَبُو بَكْرٍ آخِذًا بِطَرَفِ ثَوْبِهِ حَتَّى أَبْدَى عَنْ رُكْبَتِهِ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَمَّا صَاحِبُكُمْ فَقَدْ غَامَرَ "". فَسَلَّمَ، وَقَالَ إِنِّي كَانَ بَيْنِي وَبَيْنَ ابْنِ الْخَطَّابِ شَىْءٌ فَأَسْرَعْتُ إِلَيْهِ ثُمَّ نَدِمْتُ، فَسَأَلْتُهُ أَنْ يَغْفِرَ لِي فَأَبَى عَلَىَّ، فَأَقْبَلْتُ إِلَيْكَ فَقَالَ "" يَغْفِرُ اللَّهُ لَكَ يَا أَبَا بَكْرٍ "". ثَلاَثًا، ثُمَّ إِنَّ عُمَرَ نَدِمَ فَأَتَى مَنْزِلَ أَبِي بَكْرٍ فَسَأَلَ أَثَمَّ أَبُو بَكْرٍ فَقَالُوا لاَ. فَأَتَى إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم، فَسَلَّمَ فَجَعَلَ وَجْهُ النَّبِيِّ صلى الله عليه وسلم يَتَمَعَّرُ حَتَّى أَشْفَقَ أَبُو بَكْرٍ، فَجَثَا عَلَى رُكْبَتَيْهِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، وَاللَّهِ أَنَا كُنْتُ أَظْلَمَ مَرَّتَيْنِ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنَّ اللَّهَ بَعَثَنِي إِلَيْكُمْ فَقُلْتُمْ كَذَبْتَ. وَقَالَ أَبُو بَكْرٍ صَدَقَ. وَوَاسَانِي بِنَفْسِهِ وَمَالِهِ، فَهَلْ أَنْتُمْ تَارِكُو لِي صَاحِبِي "". مَرَّتَيْنِ فَمَا أُوذِيَ بَعْدَهَا.
பாடம் : 5 நான் (அல்லாஹ் அல்லாத ஒருவரை) உற்ற நண்பராக ஆக்கிக் கொள்ள விரும்பியிருந்தால்... என்று தொடங்கும் நபிமொழி இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.16
3661. அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தேன். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் தமது முழங்கால் வெளியே தெரியுமளவுக்கு ஆடையின் ஒரு பக்கத்தை (தூக்கிப்) பிடித்தபடி (எங்களை நோக்கி) வந்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், “உங்கள் தோழர் வழக்காடிவிட்டு வந்திருக்கிறார்” என்று சொன்னார்கள்.

அபூபக்ர் (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களுக்கு) சலாம் கூறிவிட்டு, “அல்லாஹ்வின் தூதரே! எனக்கும் கத்தாபின் மகனா(ர் உம)ருக்கும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது. நான் (கோபமாக) அவரை நோக்கி விரைந்தேன். பிறகு (என் செய்கைக்காக) நான் வருந்தி அவரிடம் என்னை மன்னிக்கும்படி கேட்டேன். அவர் என்னை மன்னிக்க மறுத்துவிட்டார். ஆகவே உங்களிடம் வந்தேன்” என்று சொன்னார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “அபூபக்ரே! அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!” என்று மும்முறை கூறினார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள் (அபூபக்ர் (ரலி) அவர்களை மன்னிக்க மறுத்துவிட்டதற்காக) மனம் வருந்தி அபூபக்ர் (ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்று, “அங்கே அபூபக்ர் (ரலி) அவர்கள் இருக்கிறார்களா?” என்று கேட்க வீட்டார், “இல்லை” என்று பதிலளித்தார்கள். ஆகவே, அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்றார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்களுடைய முகம், (கோபத்தால்) நிறம் மாறலாயிற்று. எனவே, அபூபக்ர் (ரலி) அவர்கள் பயந்துபோய் தம் முழங்கால்களின் மீது மண்டியிட்டு அமர்ந்து, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான்தான் (வாக்குவாதத்தை தொடங்கியதால் உமரைவிட) அதிகம் அநீதியிழைத்த வனாகிவிட்டேன்” என்று இருமுறை கூறினார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “(மக்களே!) அல்லாஹ் என்னை உங்களிடம் அனுப்பினான். “பொய் சொல்கிறீர்' என்று நீங்கள் கூறினீர்கள். அபூபக்ர் அவர்களோ, “நீங்கள் உண்மையே சொன்னீர்கள்' என்று கூறினார்; மேலும் (இறைமார்க்கத்தை நிலைநிறுத்தும் பணியில்) தம்மையும் தமது செல்வத்தை யும் அர்ப்பணித்து என்னிடம் பரிவுடன் நடந்துகொண்டார். அத்தகைய என் தோழரை எனக்காக நீங்கள் (மன்னித்து) விட்டுவிடுவீர்களா?” என்று இருமுறை சொன்னார்கள். அதன் பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் மன வேதனைக்கு உள்ளாக்கப்படவில்லை.


அத்தியாயம் : 62
3662. حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ الْمُخْتَارِ، قَالَ خَالِدٌ الْحَذَّاءُ حَدَّثَنَا عَنْ أَبِي عُثْمَانَ، قَالَ حَدَّثَنِي عَمْرُو بْنُ الْعَاصِ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم بَعَثَهُ عَلَى جَيْشِ ذَاتِ السَّلاَسِلِ، فَأَتَيْتُهُ فَقُلْتُ أَىُّ النَّاسِ أَحَبُّ إِلَيْكَ قَالَ "" عَائِشَةُ "". فَقُلْتُ مِنَ الرِّجَالِ فَقَالَ "" أَبُوهَا "". قُلْتُ ثُمَّ مَنْ قَالَ "" ثُمَّ عُمَرُ بْنُ الْخَطَّابِ "". فَعَدَّ رِجَالاً.
பாடம் : 5 நான் (அல்லாஹ் அல்லாத ஒருவரை) உற்ற நண்பராக ஆக்கிக் கொள்ள விரும்பியிருந்தால்... என்று தொடங்கும் நபிமொழி இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.16
3662. அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் “தாத்துஸ் ஸலாஸில்' எனும் போருக்கான21 படைக்கு (தளபதியாக்கி) என்னை அனுப்பி வைத்தார்கள். அப்போது நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, “மக்களிலேயே உங்களுக்கு மிகப் பிரியமானவர்கள் யார்?” என்று கேட்டேன். அவர்கள், “ஆயிஷா” என்று பதிலளித்தார்கள். நான், “ஆண்களில் மிகப் பிரியமானவர்கள் யார்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆயிஷாவின் தந்தை (அபூபக்ர்)” என்று பதிலளித்தார்கள்.

“பிறகு யார் (பிரியமானவர்)?” என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், “பிறகு உமர் பின் அல்கத்தாப்தான் (எனக்கு மிகவும் பிரியமானவர்)” என்று கூறிவிட்டு, மேலும் பல ஆண்க(ளின் பெயர்க)ளைக் குறிப்பிட்டார்கள்.


அத்தியாயம் : 62
3663. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" بَيْنَمَا رَاعٍ فِي غَنَمِهِ عَدَا عَلَيْهِ الذِّئْبُ، فَأَخَذَ مِنْهَا شَاةً، فَطَلَبَهُ الرَّاعِي، فَالْتَفَتَ إِلَيْهِ الذِّئْبُ فَقَالَ مَنْ لَهَا يَوْمَ السَّبُعِ، يَوْمَ لَيْسَ لَهَا رَاعٍ غَيْرِي، وَبَيْنَا رَجُلٌ يَسُوقُ بَقَرَةً قَدْ حَمَلَ عَلَيْهَا، فَالْتَفَتَتْ إِلَيْهِ فَكَلَّمَتْهُ فَقَالَتْ إِنِّي لَمْ أُخْلَقْ لِهَذَا، وَلَكِنِّي خُلِقْتُ لِلْحَرْثِ "". قَالَ النَّاسُ سُبْحَانَ اللَّهِ. قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" فَإِنِّي أُومِنُ بِذَلِكَ وَأَبُو بَكْرٍ وَعُمَرُ بْنُ الْخَطَّابِ رضى الله عنهما "".
பாடம் : 5 நான் (அல்லாஹ் அல்லாத ஒருவரை) உற்ற நண்பராக ஆக்கிக் கொள்ள விரும்பியிருந்தால்... என்று தொடங்கும் நபிமொழி இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.16
3663. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

“(இஸ்ரவேலர்களில்) ஓர் ஆட்டிடையர் தம் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது ஓநாய் ஒன்று அவற்றின்மீது பாய்ந்து ஓர் ஆட்டைக் கவ்விக்கொண்டு சென்றது. ஆடு மேய்ப்பவர் அதைத் துரத்திச் சென்றார். ஓநாய் அவரைத் திரும்பிப் பார்த்து, “கொடிய விலங்குகள் ஆதிக்கம் செலுத்தும் (உலக இறுதி) நாளில் இதற்கு (பாதுகாவலர்) யார்? அந்த நாளில் என்னைத் தவிர இதற்குப் பொறுப்பாளன் எவனுமில்லையே” என்று கூறியது.

(இவ்வாறே) ஒரு மனிதர் ஒரு மாட்டின் மீது சுமைகளை ஏற்றிவிட்டு அதை ஓட்டிக்கொண்டு சென்றுகொண்டி ருந்தபோது, அது அவரைத் திரும்பிப் பார்த்துப் பேசியது. “நான் இதற்காக (சுமை சுமப்பதற்காக)ப் படைக்கப்பட வில்லை. மாறாக, நான் (நிலத்தை) உழுவதற்காகத்தான் படைக்கப்பட்டுள் ளேன்” என்று அது கூறிற்று என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

உடனே மக்கள், “அல்லாஹ் தூயவன்” என்று (வியந்து) கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “நானும் அபூபக்ரும் உமர் பின் அல்கத்தாபும் இதை (இந்த நிகழ்ச்சிகளை) நம்புகிறோம்” என்று சொன்னார்கள்.22

“அபூபக்ர், உமர் இருவரைக் குறித்தும் அல்லாஹ் திருப்தியடைவானாக!” (என்று அறிவிப்பாளர் பிரார்த்திக்கிறார்.)


அத்தியாயம் : 62
3664. حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، عَنْ يُونُسَ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي ابْنُ الْمُسَيَّبِ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" بَيْنَا أَنَا نَائِمٌ رَأَيْتُنِي عَلَى قَلِيبٍ عَلَيْهَا دَلْوٌ، فَنَزَعْتُ مِنْهَا مَا شَاءَ اللَّهُ، ثُمَّ أَخَذَهَا ابْنُ أَبِي قُحَافَةَ، فَنَزَعَ بِهَا ذَنُوبًا أَوْ ذَنُوبَيْنِ، وَفِي نَزْعِهِ ضَعْفٌ، وَاللَّهُ يَغْفِرُ لَهُ ضَعْفَهُ، ثُمَّ اسْتَحَالَتْ غَرْبًا، فَأَخَذَهَا ابْنُ الْخَطَّابِ، فَلَمْ أَرَ عَبْقَرِيًّا مِنَ النَّاسِ يَنْزِعُ نَزْعَ عُمَرَ، حَتَّى ضَرَبَ النَّاسُ بِعَطَنٍ "".
பாடம் : 5 நான் (அல்லாஹ் அல்லாத ஒருவரை) உற்ற நண்பராக ஆக்கிக் கொள்ள விரும்பியிருந்தால்... என்று தொடங்கும் நபிமொழி இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.16
3664. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் உறங்கிக்கொண்டிருந்தபோது (கனவில்) என்னை, வாளி தொங்கிக் கொண்டிருந்த ஒரு கிணற்றின் அருகே கண்டேன். அதிலிருந்து அல்லாஹ் நாடிய அளவுக்கு(த் தண்ணீர்) இறைத்தேன். பிறகு அபூகுஹாஃபாவின் மைந்தர் (அபூபக்ர் அவர்கள்) அதை எடுத்துக் கொண்டு அதிலிருந்து ஒரு வாளி நீரை- அல்லது இரண்டு வாளிகள் நீரை- இறைத்தார். அவர் (சிறிது நேரம்) இறைத்தபோது சோர்வு தெரிந்தது. அவருடைய சோர்வை அல்லாஹ் மன்னிப்பானாக!

பிறகு, அது மிகப் பெரிய வாளியாக மாறிவிட்டது. அப்போது அதை கத்தாபின் மகன் உமர் எடுத்துக் கொண் டார். உமர் இறைத்ததைப் போன்று இறைக்கின்ற (வலிமை மிக்க) ஒரு புத்திசாலியான (அபூர்வத்) தலைவர் ஒருவரை மக்களில் நான் பார்த்ததில்லை. மக்கள் (தங்கள் ஒட்டகங்களுக்கு நீர் புகட்டி, நீர் நிலையருகே அவற்றின்) ஓய்விடத்தில் கட்டிவைக்கும் அளவுக்கு (அவர் நீர் இறைத்தார்.)23

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 62
3665. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَنْ جَرَّ ثَوْبَهُ خُيَلاَءَ لَمْ يَنْظُرِ اللَّهُ إِلَيْهِ يَوْمَ الْقِيَامَةِ "". فَقَالَ أَبُو بَكْرٍ إِنَّ أَحَدَ شِقَّىْ ثَوْبِي يَسْتَرْخِي إِلاَّ أَنْ أَتَعَاهَدَ ذَلِكَ مِنْهُ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِنَّكَ لَسْتَ تَصْنَعُ ذَلِكَ خُيَلاَءَ "" قَالَ مُوسَى فَقُلْتُ لِسَالِمٍ أَذَكَرَ عَبْدُ اللَّهِ مَنْ جَرَّ إِزَارَهُ قَالَ لَمْ أَسْمَعْهُ ذَكَرَ إِلاَّ ثَوْبَهُ.
பாடம் : 5 நான் (அல்லாஹ் அல்லாத ஒருவரை) உற்ற நண்பராக ஆக்கிக் கொள்ள விரும்பியிருந்தால்... என்று தொடங்கும் நபிமொழி இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.16
3665. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“எவன் தன் ஆடையைத் தற்பெருமையின் காரணத்தால் (பூமியில் படும்படி கீழே தொங்கவிட்டு) இழுத்துக்கொண்டு செல்கிறானோ அவனை அல்லாஹ் மறுமை நாளில் ஏறிட்டும் பார்க்கமாட்டான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

உடனே, அபூபக்ர் (ரலி) அவர்கள், “நான் கவனமாக இல்லாவிட்டால் எனது ஆடையின் ஒரு பக்கம் கீழே தொங்கிவிடுகின்றது” என்று சொன்னார்கள். அதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள் அதைத் தற்பெருமை பாராட்டுவதற்காகச் செய்வதில்லையே” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் மூசா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் சாலிம் (ரஹ்) அவர்களிடம், “அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “எவன் தன் கீழங்கியை (இஸார்) இழுத்துக் கொண்டு செல்கிறானோ' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகவா சொன்னார்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் “(எவன்) தன் ஆடையை' (ஸவ்ப்) என்று அறிவித்ததைத்தான் நான் கேட்டேன்” எனப் பதிலளித்தார்கள்.


அத்தியாயம் : 62