3418. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ، أَخْبَرَهُ وَأَبَا، سَلَمَةَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو ـ رضى الله عنهما ـ قَالَ أُخْبِرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنِّي أَقُولُ وَاللَّهِ لأَصُومَنَّ النَّهَارَ وَلأَقُومَنَّ اللَّيْلَ مَا عِشْتُ. فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَنْتَ الَّذِي تَقُولُ وَاللَّهِ لأَصُومَنَّ النَّهَارَ وَلأَقُومَنَّ اللَّيْلَ مَا عِشْتُ "" قُلْتُ قَدْ قُلْتُهُ. قَالَ "" إِنَّكَ لاَ تَسْتَطِيعُ ذَلِكَ، فَصُمْ وَأَفْطِرْ، وَقُمْ وَنَمْ، وَصُمْ مِنَ الشَّهْرِ ثَلاَثَةَ أَيَّامٍ، فَإِنَّ الْحَسَنَةَ بِعَشْرِ أَمْثَالِهَا، وَذَلِكَ مِثْلُ صِيَامِ الدَّهْرِ "". فَقُلْتُ إِنِّي أُطِيقُ أَفْضَلَ مِنْ ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" فَصُمْ يَوْمًا وَأَفْطِرْ يَوْمَيْنِ "". قَالَ قُلْتُ إِنِّي أُطِيقُ أَفْضَلَ مِنْ ذَلِكَ. قَالَ "" فَصُمْ يَوْمًا وَأَفْطِرْ يَوْمًا، وَذَلِكَ صِيَامُ دَاوُدَ، وَهْوَ عَدْلُ الصِّيَامِ "". قُلْتُ إِنِّي أُطِيقُ أَفْضَلَ مِنْهُ يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" لاَ أَفْضَلَ مِنْ ذَلِكَ "".
பாடம் : 36 (அல்லாஹ் கூறுகின்றான்:) (நபியே!) அவர்களிடம் கடலோரத்தில் இருந்த அந்த ஊர்(வாசிகளைப்) பற்றி நீர் கேட்பீராக. அவர்கள் சனிக்கிழமையில் எல்லை மீறினர். அந்தச் சனிக்கிழமை யில்தான் அவர்களிடம் மீன்கள் (கூட்டம் கூட்டமாய்) நீரின் மேல்மட்டத்திற்கு வந்தன. சனிக்கிழமை அல்லாத (வேறு) நாளில் அவை அவர்களிடம் வருவ தில்லை. அவர்கள் குற்றம் புரிந்து வந்த தால் அவர்களை நாம் இவ்வாறு சோதித் தோம். அவர்களில் ஒரு குழுவினர், ‘‘அல்லாஹ் அழிக்க இருக்கிற, அல்லது கடுமை யான முறையில் வேதனை செய்ய இருக்கிற ஒரு சமுதாயத்தாருக்கு நீங்கள் ஏன் அறிவுரை கூறுகிறீர்கள்?” என்று கேட்டனர். அதற்கு, ‘‘(விசாரணையின்போது) உங்கள் இறைவனிடம் பதில் சொல்வதற்காகவும், அவர்கள் இறையச்சம் உடை யோராக ஆகக்கூடும் என்பதற்காகவுமே (அவ்வாறு நாங்கள் அறிவுரை கூறுகி றோம்)” என்று அவர்கள் கூறினர். தமக்கு நினைவூட்டப்பட்டதை அவர்கள் மறந்தபோது, தீமையைத் தடுத்தவர் களை நாம் காப்பாற்றினோம். அநீதி இழைத்தோரை, அவர்கள் குற்றம் புரிந்துவந்த காரணத்தால் கடுமையான வேதனையால் தண்டித்தோம். தமக்குத் தடை விதிக்கப்பட்டதை அவர்கள் (தீவிரமாக) மீறியபோது, ‘‘நீங்கள் இழிவடைந்த குரங்குகளாக மாறிவிடுங்கள்” என்று அவர்களிடம் நாம் கூறினோம். (7:163லி166)94 பாடம் : 37 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: தாவூதுக்கு நாம் ‘ஸபூரை’ வழங்கினோம் (4:13).95 ‘ஸபூர்’ என்பதன் பன்மை ஸுபுர். ‘ஏடுகள்’ என்பது இதன் பொருள். ஸபர்த்த லிநீ எழுதியது. (இங்கு ‘ஸபூர்’ என்பது தாவூத் (அலை) அவர்களுக்கு வழங்கப் பட்ட வேதத்தைக் குறிக்கும்.) தாவூதுக்கு நாம் நம்மிடமிருந்து அருளை வழங்கியிருந்தோம். மலைகளே! பறவைகளே! அவருடன் சேர்ந்து (இறைத்) துதி பாடுங்கள் (என்று கூறியிருந்தோம்.) அவருக்காக நாம் இரும்பை மென்மையாக் கிக் கொடுத்தோம். ‘‘போர்க் கவசங்கள் (சாபிஃகாத்) செய்வீராக! அவற்றின் வளை யங்களை சரியான அளவில் அமைப்பீராக! நல்லதே செய்யுங்கள். நீங்கள் செய்ப வற்றை நான் உற்றுநோக்குபவன் ஆவேன்” (என்று கூறினோம்.) (34:10,11) அதாவது அவருடன் சேர்ந்து ‘தஸ்பீஹ்’ செய்யுங்கள் (என்றோம்). வளையங்கள் (சர்த்) லி ஆணிகள் மற்றும் வளையங்கள். அவற்றை மிகவும் மிருதுவாக்கிவிடக் கூடாது; அப்படிச் செய்தால், பிடிப்பு இல்லாமல் நெளிந்துவிடும். மிகவும் பருமனாகவும் ஆக்கிவிடக் கூடாது; உடைந்துவிடும். சரியான அளவில் உருக்க வேண்டும்.
3418. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! ஆயுள் முழுவதும் பகலில் நோன்பு நோற்று இரவில் நின்று வழிபடுவேன்” என்று நான் கூறுவதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘நீங்கள்தான் ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஆயுள் முழுவதும் பகலில் நோன்பு நோற்று இரவில் நின்று வழிபடுவேன்’ என்று கூறுகிறீர்களா?” என்று கேட்டார்கள். ‘‘நான் அப்படிச் சொல்லத்தான் செய்தேன்” என்று பதிலளித்தேன்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்களால் அது முடியாது. ஆகவே, (சிலசமயம்) நோன்பு வையுங்கள். (சிலசமயம்) நோன்பை விடுங்கள். (இரவில்) நின்று வழிபடுங்கள்; தூங்கவும் செய்யுங்கள். மாதத்தில் மூன்று நாட்கள் நோன்புவையுங்கள். ஏனெனில், ஒரு நற்செயலுக்கு அதைப் போன்று பத்து மடங்கு பிரதிபலன் அளிக்கப்படும். அதுவே காலம் முழுவதும் நோன்பு வைத்ததாகும்” என்று கூறினார்கள்.

நான், ‘‘இதைவிட அதிக நாள் நோன்பு நோற்பதற்கு எனக்குச் சக்தி உண்டு அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினேன். அதற்கு அவர்கள், ‘‘அப்படியென்றால் ஒருநாள் நோன்பு நோற்று இரண்டு நாட்கள் நோன்பை விட்டுவிடுங்கள்” என்று சொன்னார்கள். நான், ‘‘அதைவிட அதிகத்திற்கு எனக்குச் சக்தியுண்டு, அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன் னேன். அதற்கு அவர்கள், ‘‘அப்படி யென்றால், ஒருநாள் நோன்பு நோற்று ஒரு நாள் நோன்பை விட்டுவிடுங்கள். அது தான் (நபி) தாவூதின் நோன்பாகும்; அதுதான் நடுநிலையானதாகும்” என்று கூறினார்கள்.

நான், ‘‘அதைவிடச் சிறந்ததற்கு எனக்குச் சக்தி உண்டு, அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘‘அதைவிடச் சிறந்ததே இல்லை” என்று கூறினார்கள்.96

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 60
3419. حَدَّثَنَا خَلاَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا مِسْعَرٌ، حَدَّثَنَا حَبِيبُ بْنُ أَبِي ثَابِتٍ، عَنْ أَبِي الْعَبَّاسِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَلَمْ أُنَبَّأْ أَنَّكَ تَقُومُ اللَّيْلَ وَتَصُومُ "". فَقُلْتُ نَعَمْ. فَقَالَ "" فَإِنَّكَ إِذَا فَعَلْتَ ذَلِكَ هَجَمَتِ الْعَيْنُ وَنَفِهَتِ النَّفْسُ، صُمْ مِنْ كُلِّ شَهْرٍ ثَلاَثَةَ أَيَّامٍ، فَذَلِكَ صَوْمُ الدَّهْرِ ـ أَوْ كَصَوْمِ الدَّهْرِ "". قُلْتُ إِنِّي أَجِدُ بِي ـ قَالَ مِسْعَرٌ يَعْنِي ـ قُوَّةً. قَالَ "" فَصُمْ صَوْمَ دَاوُدَ ـ عَلَيْهِ السَّلاَمُ ـ وَكَانَ يَصُومُ يَوْمًا، وَيُفْطِرُ يَوْمًا، وَلاَ يَفِرُّ إِذَا لاَقَى "".
பாடம் : 36 (அல்லாஹ் கூறுகின்றான்:) (நபியே!) அவர்களிடம் கடலோரத்தில் இருந்த அந்த ஊர்(வாசிகளைப்) பற்றி நீர் கேட்பீராக. அவர்கள் சனிக்கிழமையில் எல்லை மீறினர். அந்தச் சனிக்கிழமை யில்தான் அவர்களிடம் மீன்கள் (கூட்டம் கூட்டமாய்) நீரின் மேல்மட்டத்திற்கு வந்தன. சனிக்கிழமை அல்லாத (வேறு) நாளில் அவை அவர்களிடம் வருவ தில்லை. அவர்கள் குற்றம் புரிந்து வந்த தால் அவர்களை நாம் இவ்வாறு சோதித் தோம். அவர்களில் ஒரு குழுவினர், ‘‘அல்லாஹ் அழிக்க இருக்கிற, அல்லது கடுமை யான முறையில் வேதனை செய்ய இருக்கிற ஒரு சமுதாயத்தாருக்கு நீங்கள் ஏன் அறிவுரை கூறுகிறீர்கள்?” என்று கேட்டனர். அதற்கு, ‘‘(விசாரணையின்போது) உங்கள் இறைவனிடம் பதில் சொல்வதற்காகவும், அவர்கள் இறையச்சம் உடை யோராக ஆகக்கூடும் என்பதற்காகவுமே (அவ்வாறு நாங்கள் அறிவுரை கூறுகி றோம்)” என்று அவர்கள் கூறினர். தமக்கு நினைவூட்டப்பட்டதை அவர்கள் மறந்தபோது, தீமையைத் தடுத்தவர் களை நாம் காப்பாற்றினோம். அநீதி இழைத்தோரை, அவர்கள் குற்றம் புரிந்துவந்த காரணத்தால் கடுமையான வேதனையால் தண்டித்தோம். தமக்குத் தடை விதிக்கப்பட்டதை அவர்கள் (தீவிரமாக) மீறியபோது, ‘‘நீங்கள் இழிவடைந்த குரங்குகளாக மாறிவிடுங்கள்” என்று அவர்களிடம் நாம் கூறினோம். (7:163லி166)94 பாடம் : 37 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: தாவூதுக்கு நாம் ‘ஸபூரை’ வழங்கினோம் (4:13).95 ‘ஸபூர்’ என்பதன் பன்மை ஸுபுர். ‘ஏடுகள்’ என்பது இதன் பொருள். ஸபர்த்த லிநீ எழுதியது. (இங்கு ‘ஸபூர்’ என்பது தாவூத் (அலை) அவர்களுக்கு வழங்கப் பட்ட வேதத்தைக் குறிக்கும்.) தாவூதுக்கு நாம் நம்மிடமிருந்து அருளை வழங்கியிருந்தோம். மலைகளே! பறவைகளே! அவருடன் சேர்ந்து (இறைத்) துதி பாடுங்கள் (என்று கூறியிருந்தோம்.) அவருக்காக நாம் இரும்பை மென்மையாக் கிக் கொடுத்தோம். ‘‘போர்க் கவசங்கள் (சாபிஃகாத்) செய்வீராக! அவற்றின் வளை யங்களை சரியான அளவில் அமைப்பீராக! நல்லதே செய்யுங்கள். நீங்கள் செய்ப வற்றை நான் உற்றுநோக்குபவன் ஆவேன்” (என்று கூறினோம்.) (34:10,11) அதாவது அவருடன் சேர்ந்து ‘தஸ்பீஹ்’ செய்யுங்கள் (என்றோம்). வளையங்கள் (சர்த்) லி ஆணிகள் மற்றும் வளையங்கள். அவற்றை மிகவும் மிருதுவாக்கிவிடக் கூடாது; அப்படிச் செய்தால், பிடிப்பு இல்லாமல் நெளிந்துவிடும். மிகவும் பருமனாகவும் ஆக்கிவிடக் கூடாது; உடைந்துவிடும். சரியான அளவில் உருக்க வேண்டும்.
3419. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘நீங்கள் இரவில் நின்று வழிபடுவதாகவும் பகலில் நோன்பு நோற்பதாகவும் எனக்குச் செய்தி கிடைத்ததே” என்று கேட்டார்கள். நான், ‘‘ஆம் (உண்மைதான்!)” என்றேன். அவர்கள், ‘‘நீங்கள் அப்படிச் செய்தால் உங்கள் கண்கள் பஞ்சடைந்துவிடும்; மனம் களைப்படைந்து விடும். ஆகவே, ஒவ்வொரு மாதத்திலிருந் தும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக! அது காலமெல்லாம் நோன்பு நோற்றதாகும்; அல்லது காலமெல்லாம் நோன்பு நோற்ற தைப் போன்றதாகும்” என்று சொன்னார் கள்.

நான், ‘‘எனக்கு (இதைவிட அதிகமாக நோற்பதற்குச்) சக்தியிருப்பதாக நான் உணர்கிறேன்” என்று சொன்னேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படி யென்றால், தாவூத் (அலை) அவர்களின் நோன்பை நீர் நோற்பீராக! அவர்கள் ஒருநாள் நோன்பு நோற்று ஒருநாள் விட்டுவிடுவார்கள். (போர்க் காலத்தில் பகைவர்களைச்) சந்திக்கும்போது பின் வாங்கி ஓடமாட்டார்கள்” என்று கூறி னார்கள்.97

அத்தியாயம் : 60
3420. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عَمْرِو بْنِ أَوْسٍ الثَّقَفِيِّ، سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو، قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَحَبُّ الصِّيَامِ إِلَى اللَّهِ صِيَامُ دَاوُدَ، كَانَ يَصُومُ يَوْمًا وَيُفْطِرُ يَوْمًا، وَأَحَبُّ الصَّلاَةِ إِلَى اللَّهِ صَلاَةُ دَاوُدَ، كَانَ يَنَامُ نِصْفَ اللَّيْلِ وَيَقُومُ ثُلُثَهُ وَيَنَامُ سُدُسَهُ "".
பாடம் : 38 அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான தொழுகை (இறைத்தூதர்) தாவூத் (அலை) அவர்களின் தொழுகையாகும். அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான நோன்பு தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும். தாவூத் (அலை) அவர்கள் பாதி இரவு(வரை) உறங்குவார்கள். அதில் மூன்றில் ஒரு பகுதி நேரம் நின்று வழிபடுவார்கள். (பிறகு, மீண்டும்) அதில் ஆறில் ஒரு பகுதி நேரம் உறங்குவார்கள். ஒருநாள் நோன்பு நோற்று ஒருநாள் நோன்பை விட்டுவிடுவார்கள்.98 அலீ பின் அப்தில்லாஹ் அல்மதீனீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘(இரவில்) ஆறில் ஒரு பகுதி நேரம் மீண்டும் உறங்குவார்கள்’ என்பதையே ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள் என்னிடம் தூங்கிக்கொண்டி ருக்கும் நிலையில்தான் ஸஹ்ர் நேரம் வரும்” என்று சொன்னது குறிக்கின் றது.99
3420. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான நோன்பு தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும். அவர்கள் ஒருநாள் நோன்பு நோற்று, ஒருநாள் விட்டுவிடுவார்கள். அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான தொழுகை தாவூத் (அலை) அவர்களின் தொழுகையாகும். அவர்கள் இரவில் பாதி நேரம் உறங்கு வார்கள். அதில் மூன்றில் ஒரு பகுதி நேரம் நின்று வழிபடுவார்கள். அதில் ஆறில் ஒரு பகுதி நேரம் (மீண்டும்) உறங்குவார்கள்” என்று கூறினார்கள்.100

அத்தியாயம் : 60
3421. حَدَّثَنَا مُحَمَّدٌ، حَدَّثَنَا سَهْلُ بْنُ يُوسُفَ، قَالَ سَمِعْتُ الْعَوَّامَ، عَنْ مُجَاهِدٍ، قَالَ قُلْتُ لاِبْنِ عَبَّاسٍ أَسْجُدُ فِي {ص} فَقَرَأَ {وَمِنْ ذُرِّيَّتِهِ دَاوُدَ وَسُلَيْمَانَ} حَتَّى أَتَى {فَبِهُدَاهُمُ اقْتَدِهْ} فَقَالَ نَبِيُّكُمْ صلى الله عليه وسلم مِمَّنْ أُمِرَ أَنْ يَقْتَدِيَ بِهِمْ.
பாடம் : 39 (அல்லாஹ் கூறுகின்றான்:) (நபியே!) அவர்கள் கூறுவதைச் சகித்துக்கொள்வீராக! பெரும் ஆற்றல்களைக் கொண்டிருந்த நம்முடைய அடியார் தாவூதைப் பற்றி நினைவூட்டுவீராக! அவர் (ஒவ்வொரு விவகாரத்திலும் அல்லாஹ்விடமே) திரும்பக்கூடியவராக இருந்தார். நாம் மலைகளை அவருக்கு வசப்படுத்திக்கொடுத்திருந்தோம். அவை காலையிலும் மாலையிலும் அவருடன் சேர்ந்து (இறைவனைத்) துதித்த வண்ணம் இருந்தன. பறவைகளும் ஒன்றுதிரண்டு வந்தன. அவை அனைத்தும் அல்லாஹ்விடம் திரும்பக்கூடியவையாய் இருந்தன. நாம் அவருடைய அரசாட்சியை வலுப்படுத்தி யிருந்தோம். நுண்ணறிவையும் மிக நுட்பமாகத் தீர்ப்பளிக்கும் ஆற்றலையும் நல்கியிருந்தோம். (38:17லி20) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறி னார்கள்: அதாவது தீர்ப்பளிப்பதில் சிறந்த விளக்கத்தைக் கொடுத்திருந்தோம். ‘‘எங்களிடையே நியாயமாகத் தீர்ப்பு வழங்குவீராக! எல்லை மீறிவிடாதீர் (லா துஷ்தித்). நேரான வழியில் எங்களைச் செலுத்துவீராக! (இதோ!) இவர் என் சகோதரர். இவரிடம் தொண்ணூற்று ஒன்பது ஆடுகள் (நஅஜத்) உள்ளன; என்னிடம் ஒரே ஓர் ஆடுதான் உண்டு. அதையும் என் பொறுப்பில் விடு என்று இவர் கூறுகிறார்; வாதத்தில் என்னை மிகைத்துவிட்டார்.” (38:22,23) யிநஅஜத்’ என்பது பெட்டை ஆட்டைக் குறிக்கும். அதற்கு ‘ஷாத்’ என்றும் சொல்லப்படும். யிஎன் பொறுப்பில் விடு’ (அக்ஃபில்னீஹா) என்பது, ‘‘ஸகரிய்யாவைப் பொறுப்பாக்கினான்” (கஃப்பலஹா) (3:37) என்பதைப் போல, பொறுப்பில் சேர்த்துக் கொள்வதைக் குறிக்கும். வாதத்தில் (கித்தாப்) லிஉரையாடலில்லி என்னைவிட வலுவானவராக உள்ளார் (அஸ்ஸனீ). உமது ஆட்டைத் தம் ஆடுகளுடன் சேர்க்க அவர் கேட்டதன் மூலம் உமக்கு அவர் அநீதியிழைத்துவிட்டார். கலந்திருப் போரில் அதிகமானோர் சிலர்மீது சிலர் எல்லைமீறி நடந்துகொள்கின்றனர்... (என்று தாவூத் கூறினார்). (38:24) அவரை நாம் சோதித்தோம். (ஃபதன்னாஹு) லிஅதாவது பரிசோதித்தோம்லி என்பதை தாவூத் விளங்கிக்கொண்டார். (38:24) இதில் யிஃபதன்னாஹு’ என்பதை யிஃபத்தன்னாஹு’ என உமர் (ரலி) அவர்கள் அழுத்தல் குறியுடன்) ஓதியுள்ளார்கள். எனவே, அவர் தம் இறைவனிடம் பாவமன்னிப்புக்கோரி பணிந்து விழுந்தார்; (அல்லாஹ்விடம்) மீண்டார். (38:24)
3421. முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான், ‘ஸாத்’ (எனும் 38ஆவது) அத்தி யாயத்தில் (ஓதலுக்குரிய) சஜ்தா செய்வீர் களா? என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அப்போது அவர்கள், ‘‘மேலும், இப்ராஹீமுடைய வழித்தோன்றல்களான தாவூத், சுலைமான், அய்யூப், மூசா, ஹாரூன் ஆகியோருக்கும் நல்வழி காட்டினோம். இவ்வாறு... (நபியே!) அவர்கள்தான் அல்லாஹ்வால் நல்வழி காட்டப்பட்டவர்கள். அவர்களின் வழியை (நீரும்) பின்பற்றுவீராக!” எனும் (6:84லி90) குர்ஆன் வசனங்களை ஓதினார்கள்.

பிறகு, ‘‘உங்கள் நபி (ஸல்) அவர்களும் கூட முந்தைய நபிமார்களைப் பின்பற்றும் படி கட்டளையிடப்பட்டுள்ளவர்களில் ஒருவர்தான்” என்று சொன்னார்கள்.101


அத்தியாயம் : 60
3422. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ لَيْسَ {ص} مِنْ عَزَائِمِ السُّجُودِ، وَرَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَسْجُدُ فِيهَا.
பாடம் : 39 (அல்லாஹ் கூறுகின்றான்:) (நபியே!) அவர்கள் கூறுவதைச் சகித்துக்கொள்வீராக! பெரும் ஆற்றல்களைக் கொண்டிருந்த நம்முடைய அடியார் தாவூதைப் பற்றி நினைவூட்டுவீராக! அவர் (ஒவ்வொரு விவகாரத்திலும் அல்லாஹ்விடமே) திரும்பக்கூடியவராக இருந்தார். நாம் மலைகளை அவருக்கு வசப்படுத்திக்கொடுத்திருந்தோம். அவை காலையிலும் மாலையிலும் அவருடன் சேர்ந்து (இறைவனைத்) துதித்த வண்ணம் இருந்தன. பறவைகளும் ஒன்றுதிரண்டு வந்தன. அவை அனைத்தும் அல்லாஹ்விடம் திரும்பக்கூடியவையாய் இருந்தன. நாம் அவருடைய அரசாட்சியை வலுப்படுத்தி யிருந்தோம். நுண்ணறிவையும் மிக நுட்பமாகத் தீர்ப்பளிக்கும் ஆற்றலையும் நல்கியிருந்தோம். (38:17லி20) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறி னார்கள்: அதாவது தீர்ப்பளிப்பதில் சிறந்த விளக்கத்தைக் கொடுத்திருந்தோம். ‘‘எங்களிடையே நியாயமாகத் தீர்ப்பு வழங்குவீராக! எல்லை மீறிவிடாதீர் (லா துஷ்தித்). நேரான வழியில் எங்களைச் செலுத்துவீராக! (இதோ!) இவர் என் சகோதரர். இவரிடம் தொண்ணூற்று ஒன்பது ஆடுகள் (நஅஜத்) உள்ளன; என்னிடம் ஒரே ஓர் ஆடுதான் உண்டு. அதையும் என் பொறுப்பில் விடு என்று இவர் கூறுகிறார்; வாதத்தில் என்னை மிகைத்துவிட்டார்.” (38:22,23) யிநஅஜத்’ என்பது பெட்டை ஆட்டைக் குறிக்கும். அதற்கு ‘ஷாத்’ என்றும் சொல்லப்படும். யிஎன் பொறுப்பில் விடு’ (அக்ஃபில்னீஹா) என்பது, ‘‘ஸகரிய்யாவைப் பொறுப்பாக்கினான்” (கஃப்பலஹா) (3:37) என்பதைப் போல, பொறுப்பில் சேர்த்துக் கொள்வதைக் குறிக்கும். வாதத்தில் (கித்தாப்) லிஉரையாடலில்லி என்னைவிட வலுவானவராக உள்ளார் (அஸ்ஸனீ). உமது ஆட்டைத் தம் ஆடுகளுடன் சேர்க்க அவர் கேட்டதன் மூலம் உமக்கு அவர் அநீதியிழைத்துவிட்டார். கலந்திருப் போரில் அதிகமானோர் சிலர்மீது சிலர் எல்லைமீறி நடந்துகொள்கின்றனர்... (என்று தாவூத் கூறினார்). (38:24) அவரை நாம் சோதித்தோம். (ஃபதன்னாஹு) லிஅதாவது பரிசோதித்தோம்லி என்பதை தாவூத் விளங்கிக்கொண்டார். (38:24) இதில் யிஃபதன்னாஹு’ என்பதை யிஃபத்தன்னாஹு’ என உமர் (ரலி) அவர்கள் அழுத்தல் குறியுடன்) ஓதியுள்ளார்கள். எனவே, அவர் தம் இறைவனிடம் பாவமன்னிப்புக்கோரி பணிந்து விழுந்தார்; (அல்லாஹ்விடம்) மீண்டார். (38:24)
3422. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘ஸாத்’ (எனும் 38ஆவது) அத்தியாயத்தில் உள்ள இறைவசனத்திற்கு சஜ்தா (சிரவணக்கம்) செய்வது, கட்டாயம் செய்யப்பட வேண்டிய(வை என்று கட்டளை யிடப்பட்டுள்ள) சஜ்தாக்களில் ஒன்றல்ல. ஆயினும், நபி (ஸல்) அவர்கள் அந்த இடத்தில் (38:24) சஜ்தா செய்வதை நான் பார்த்திருக்கிறேன்.

அத்தியாயம் : 60
3423. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم "" إِنَّ عِفْرِيتًا مِنَ الْجِنِّ تَفَلَّتَ الْبَارِحَةَ لِيَقْطَعَ عَلَىَّ صَلاَتِي، فَأَمْكَنَنِي اللَّهُ مِنْهُ، فَأَخَذْتُهُ، فَأَرَدْتُ أَنْ أَرْبُطَهُ عَلَى سَارِيَةٍ مِنْ سَوَارِي الْمَسْجِدِ حَتَّى تَنْظُرُوا إِلَيْهِ كُلُّكُمْ فَذَكَرْتُ دَعْوَةَ أَخِي سُلَيْمَانَ رَبِّ هَبْ لِي مُلْكًا لاَ يَنْبَغِي لأَحَدٍ مِنْ بَعْدِي. فَرَدَدْتُهُ خَاسِئًا "". عِفْرِيتٌ مُتَمَرِّدٌ مِنْ إِنْسٍ أَوْ جَانٍّ، مِثْلُ زِبْنِيَةٍ جَمَاعَتُهَا الزَّبَانِيَةُ.
பாடம் : 40 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: தாவூதுக்கு சுலைமானைப் பரிசளித்தோம். அவர் மிகச் சிறந்த அடியாராகவும் தம்முடைய இறைவனின் பக்கம் அதிகம் திரும்பக்கூடியவராகவும் (அவ்வாப்) திகழ்ந்தார். (38:30)102 ‘அவ்வாப்’ லிதிரும்பக்கூடியவர்; பாவமீட்பு பெறுபவர். ‘‘என் இறைவா! எனக்கு மன்னிப்பு அளிப்பாயாக! எனக்குப்பின் யாருக்கும் கிடைக்காத ஆட்சியை எனக்கு வழங்கு வாயாக!” என்று (சுலைமான்) வேண்டினார். (38:35) சுலைமானின் ஆட்சியில் ஷைத்தான் கள் படித்துக்காட்டியதை அவர்கள் பின்பற் றினார்கள். (2:102) சுலைமானுக்குகக் காற்றை நாம் வசப் படுத்திக்கொடுத்தோம். அதன் புறப்பாடு ஒரு மாதமாகும். அதன் திரும்புதல் ஒரு மாதமாகும். அவருக்காகச் செம்பு ஊற்றை ஓடச்செய்தோம் (அதாவது இரும்பு ஊற்றை உருக்கினோம்). (34:12) தன் இறைவனின் ஆணைப்படி அவரிடம் பணியாற்றும் ஜின்களும் இருந் தனர். அவர்களில் யாரேனும் புறக்கணித் தால், நரகத்தின் வேதனையை அவருக்குச் சுவைக்கச்செய்வோம். அவர் விரும்பும் மாளிகைகளையும் லிகோட்டைகளைவிடச் சிறிய மாளிகைகளையும்லி சிற்பங்களையும் நீர்த் தடாகங்களைப் போன்ற பெரும் கொப்பரைகளையும் நகர்த்த முடியாத பாத்திரங்களையும் அவருக்காக அவை செய்தன. (34:13) ‘நீர்த்தடாகங்கள்’ (அல்ஜவாப்) என்பது ஒட்டகங்களுக்கான தொட்டிகளைக் குறிக்கும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், நிலத்திலுள்ள பெரும் பள்ளத்தை இது குறிக்கும் என்கிறார்கள். அவருக்கு நாம் மரணத்தை ஏற்படுத் தியபோது, பூமியில் ஊர்ந்து செல்லும் உயிரினம் (கரையான்)தான் அவரது மரணத்தை அவர்களுக்கு (ஜின்களுக்கு) காட்டிக்கொடுத்தது. அது அவரது கைத்தடியை (மின்சஅத்) அரித்தது. (34:14) நிச்சயமாக நான் (சூரியன்) திரைக்குள் மறையும்வரை என் இறைவனை நினைவு கூராமல் இந்த(க் குதிரைகள் எனும்) செல்வத்தை நான் நேசித்துவிட்டேன் என்று (சுலைமான்) கூறினார். அவற்றை என்னிடம் மீண்டும் கொண்டுவாருங்கள் (என்று சொல்லி) அவற்றின் கால்களையும் கழுத்துகளையும் தடவிக்கொடுத்தார் லிஅதாவது குதிரைகளின் கழுத்து முடிகளை யும் பின்பக்க நரம்புகளையும் தடவிக் கொடுத்தார். (38:33) ஷைத்தான்களில் கட்டடம் கட்டு வோரையும் முத்துக்குளிப்போரையும் விலங்கிடப்பட்ட (அஸ்ஃபாத்) வேறுசிலரையும் (சுலைமானுக்கு) வசப்படுத்திக்கொடுத்தோம். (38:37,38) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பயிற்சி பெற்ற உயர்ந்த ரகக் குதிரைகள் அவர் முன்னே (ஒருநாள்) மாலையில் நிறுத்தப்பட்டன. (38:31) யிபயிற்சி பெற்றவை’ என்பதைக் குறிக்க மூலத்தில் ‘ஸாஃபினாத்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. குதிரை தன் கால்களில் ஒன்றைத் தூக்கிக்கொண்டு குளம்பின் ஓரத்தை மட்டும் பூமியில் வைப்பதற்கே ‘ஸஃப” என்பர். (இது குதிரைகளின் உயர்ந்த தரத்தைக் காட்டும் அம்சமாகும்.) யிஉயர் ரகக் குதிரைகள்’ (ஜியாத்) என்றால், யிவிரைந்து செல்பவை’ என்று பொருள். அவரது சிம்மாசனத்தில் (அவரை) ஒரு சடலமாகப் போட்டோம் (38:34). சடலம் (ஜசத்) என்பது ஷைத்தானைக் குறிக்கும். அவருக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம். அவரது கட்டளைப்படி அவர் நினைத்தவாறு அது பணிந்து சென்றது (ருகாஅன்). (38:36) இங்கு மூலத்தில் உள்ள யிருகாஅன்’ என்பதற்கு தூய்மையான, நல்ல காற்று என்பது பொருள். ‘அஸாப’ என்பதற்கு யிஎண்ணியவாறு’ என்பது பொருள். இது நமது அருட்கொடை. கணக்கின்றி லிஅதாவது சிரமமின்றிலி மற்றவருக்குக் கொடுக்கலாம் (ஃபம்நுன்). அல்லது நீரே வைத்துக்கொள்ளலாம் (என்று கூறினோம்). (38:39)
3423. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

நேற்றிரவு முரட்டு ஜின் ஒன்று என் தொழுகையைக் கெடுக்க திடீரென்று வந்து நின்றது. அல்லாஹ் எனக்கு அதை வசப்படுத்தித்தந்தான். நான் அதைப் பிடித்துக்கொண்டேன். நீங்கள் ஒவ்வொரு வரும் அதைப் பார்ப்பதற்காக அதைப் பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் கட்டி வைக்க விரும்பினேன். அப்போது, என் சகோதரர் சுலைமான் (அலை) அவர்கள் செய்த, ‘‘என் இறைவா! எனக்குப்பின் வேறெவருக்கும் கிடைக்காத ஓர் ஆளுமையை எனக்கு வழங்குவாயாக!” (38:35) எனும் பிரார்த்தனையை நினைவு கூர்ந்தேன். உடனே, அதைச் சபித்து எறியப்பட்டதாகத் திருப்பியனுப்பி விட்டேன்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.103

இங்கு யிமுரட்டு ஜின்’ என்பதைக் குறிக்க யிஇஃப்ரீத்’ எனும் சொல் ஆளப் பட்டுள்ளது. இது மனிதர்களில் அல்லது ஜின்களில் முரடர்களைக் குறிக்கும். வானவர்களில் நரகத்தின் பொறுப்பாளர் களுக்கு ‘ஸபானியா’ என்று சொல்லப் படும்.


அத்தியாயம் : 60
3424. حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا مُغِيرَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" قَالَ سُلَيْمَانُ بْنُ دَاوُدَ لأَطُوفَنَّ اللَّيْلَةَ عَلَى سَبْعِينَ امْرَأَةً تَحْمِلُ كُلُّ امْرَأَةٍ فَارِسًا يُجَاهِدُ فِي سَبِيلِ اللَّهِ، فَقَالَ لَهُ صَاحِبُهُ إِنْ شَاءَ اللَّهُ. فَلَمْ يَقُلْ، وَلَمْ تَحْمِلْ شَيْئًا إِلاَّ وَاحِدًا سَاقِطًا إِحْدَى شِقَّيْهِ "". فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لَوْ قَالَهَا لَجَاهَدُوا فِي سَبِيلِ اللَّهِ "". قَالَ شُعَيْبٌ وَابْنُ أَبِي الزِّنَادِ "" تِسْعِينَ "". وَهْوَ أَصَحُّ.
பாடம் : 40 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: தாவூதுக்கு சுலைமானைப் பரிசளித்தோம். அவர் மிகச் சிறந்த அடியாராகவும் தம்முடைய இறைவனின் பக்கம் அதிகம் திரும்பக்கூடியவராகவும் (அவ்வாப்) திகழ்ந்தார். (38:30)102 ‘அவ்வாப்’ லிதிரும்பக்கூடியவர்; பாவமீட்பு பெறுபவர். ‘‘என் இறைவா! எனக்கு மன்னிப்பு அளிப்பாயாக! எனக்குப்பின் யாருக்கும் கிடைக்காத ஆட்சியை எனக்கு வழங்கு வாயாக!” என்று (சுலைமான்) வேண்டினார். (38:35) சுலைமானின் ஆட்சியில் ஷைத்தான் கள் படித்துக்காட்டியதை அவர்கள் பின்பற் றினார்கள். (2:102) சுலைமானுக்குகக் காற்றை நாம் வசப் படுத்திக்கொடுத்தோம். அதன் புறப்பாடு ஒரு மாதமாகும். அதன் திரும்புதல் ஒரு மாதமாகும். அவருக்காகச் செம்பு ஊற்றை ஓடச்செய்தோம் (அதாவது இரும்பு ஊற்றை உருக்கினோம்). (34:12) தன் இறைவனின் ஆணைப்படி அவரிடம் பணியாற்றும் ஜின்களும் இருந் தனர். அவர்களில் யாரேனும் புறக்கணித் தால், நரகத்தின் வேதனையை அவருக்குச் சுவைக்கச்செய்வோம். அவர் விரும்பும் மாளிகைகளையும் லிகோட்டைகளைவிடச் சிறிய மாளிகைகளையும்லி சிற்பங்களையும் நீர்த் தடாகங்களைப் போன்ற பெரும் கொப்பரைகளையும் நகர்த்த முடியாத பாத்திரங்களையும் அவருக்காக அவை செய்தன. (34:13) ‘நீர்த்தடாகங்கள்’ (அல்ஜவாப்) என்பது ஒட்டகங்களுக்கான தொட்டிகளைக் குறிக்கும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், நிலத்திலுள்ள பெரும் பள்ளத்தை இது குறிக்கும் என்கிறார்கள். அவருக்கு நாம் மரணத்தை ஏற்படுத் தியபோது, பூமியில் ஊர்ந்து செல்லும் உயிரினம் (கரையான்)தான் அவரது மரணத்தை அவர்களுக்கு (ஜின்களுக்கு) காட்டிக்கொடுத்தது. அது அவரது கைத்தடியை (மின்சஅத்) அரித்தது. (34:14) நிச்சயமாக நான் (சூரியன்) திரைக்குள் மறையும்வரை என் இறைவனை நினைவு கூராமல் இந்த(க் குதிரைகள் எனும்) செல்வத்தை நான் நேசித்துவிட்டேன் என்று (சுலைமான்) கூறினார். அவற்றை என்னிடம் மீண்டும் கொண்டுவாருங்கள் (என்று சொல்லி) அவற்றின் கால்களையும் கழுத்துகளையும் தடவிக்கொடுத்தார் லிஅதாவது குதிரைகளின் கழுத்து முடிகளை யும் பின்பக்க நரம்புகளையும் தடவிக் கொடுத்தார். (38:33) ஷைத்தான்களில் கட்டடம் கட்டு வோரையும் முத்துக்குளிப்போரையும் விலங்கிடப்பட்ட (அஸ்ஃபாத்) வேறுசிலரையும் (சுலைமானுக்கு) வசப்படுத்திக்கொடுத்தோம். (38:37,38) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பயிற்சி பெற்ற உயர்ந்த ரகக் குதிரைகள் அவர் முன்னே (ஒருநாள்) மாலையில் நிறுத்தப்பட்டன. (38:31) யிபயிற்சி பெற்றவை’ என்பதைக் குறிக்க மூலத்தில் ‘ஸாஃபினாத்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. குதிரை தன் கால்களில் ஒன்றைத் தூக்கிக்கொண்டு குளம்பின் ஓரத்தை மட்டும் பூமியில் வைப்பதற்கே ‘ஸஃப” என்பர். (இது குதிரைகளின் உயர்ந்த தரத்தைக் காட்டும் அம்சமாகும்.) யிஉயர் ரகக் குதிரைகள்’ (ஜியாத்) என்றால், யிவிரைந்து செல்பவை’ என்று பொருள். அவரது சிம்மாசனத்தில் (அவரை) ஒரு சடலமாகப் போட்டோம் (38:34). சடலம் (ஜசத்) என்பது ஷைத்தானைக் குறிக்கும். அவருக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம். அவரது கட்டளைப்படி அவர் நினைத்தவாறு அது பணிந்து சென்றது (ருகாஅன்). (38:36) இங்கு மூலத்தில் உள்ள யிருகாஅன்’ என்பதற்கு தூய்மையான, நல்ல காற்று என்பது பொருள். ‘அஸாப’ என்பதற்கு யிஎண்ணியவாறு’ என்பது பொருள். இது நமது அருட்கொடை. கணக்கின்றி லிஅதாவது சிரமமின்றிலி மற்றவருக்குக் கொடுக்கலாம் (ஃபம்நுன்). அல்லது நீரே வைத்துக்கொள்ளலாம் (என்று கூறினோம்). (38:39)
3424. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

தாவூத் (அலை) அவர்களுடைய மகன் சுலைமான் (அலை) அவர்கள், ‘‘இன்றிரவு நான் எழுபது மனைவிமார்களிடம் செல்வேன். (அவர்களில்) ஒவ்வொருவரும் அல்லாஹ்வின் பாதையில் போராடும் குதிரை வீரரைக் கருத்தரிப்பார்கள்” என்று கூறினார்கள். அதற்கு அவருடைய தோழர் ஒருவர், ‘‘அல்லாஹ் நாடினால்... என்று சொல்லுங்கள்” என்று கூறினார்.

சுலைமான் (அலை) அவர்கள், ‘‘அல்லாஹ் நாடினால்...” என்று (மறந்து போய்) சொல்லாமலிருந்துவிட்டார்கள். (அவர்கள் அவ்வாறே சென்றும்கூட) தன் இரு புஜங்களில் ஒன்று கீழே விழுந்த ஒரேயொரு குழந்தையைத் தவிர வேறெதையும் அவர்கள் கருத்தரிக்க வில்லை. யிஇன்ஷா அல்லாஹ்... (இறைவன் நாடினால்)› என்று சுலைமான் (அலை) அவர்கள் கூறியிருந்தால் அவர்கள் (எழுபது பேரும் பிறந்து) அல்லாஹ்வின் பாதையில் போராடியிருப்பார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஷுஐப் (ரஹ்) அவர்களும் இப்னு அபிஸ்ஸினாத் (ரஹ்) அவர்களும் தங்கள் அறிவிப்பில் ‘‘தொண்ணூறு மனைவிமார்களிடம் செல்வேன்” என்று சுலைமான் (அலை) அவர்கள் கூறியதாகக் குறிப்பிட்டுள்ளனர். இவர்களின் அறிவிப்புதான் சரியானது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.104


அத்தியாயம் : 60
3425. حَدَّثَنِي عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ التَّيْمِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي ذَرٍّ ـ رضى الله عنه ـ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ. أَىُّ مَسْجِدٍ وُضِعَ أَوَّلُ قَالَ "" الْمَسْجِدُ الْحَرَامُ "". قُلْتُ ثُمَّ أَىٌّ قَالَ "" ثُمَّ الْمَسْجِدُ الأَقْصَى "". قُلْتُ كَمْ كَانَ بَيْنَهُمَا قَالَ "" أَرْبَعُونَ "". ثُمَّ قَالَ "" حَيْثُمَا أَدْرَكَتْكَ الصَّلاَةُ فَصَلِّ، وَالأَرْضُ لَكَ مَسْجِدٌ "".
பாடம் : 40 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: தாவூதுக்கு சுலைமானைப் பரிசளித்தோம். அவர் மிகச் சிறந்த அடியாராகவும் தம்முடைய இறைவனின் பக்கம் அதிகம் திரும்பக்கூடியவராகவும் (அவ்வாப்) திகழ்ந்தார். (38:30)102 ‘அவ்வாப்’ லிதிரும்பக்கூடியவர்; பாவமீட்பு பெறுபவர். ‘‘என் இறைவா! எனக்கு மன்னிப்பு அளிப்பாயாக! எனக்குப்பின் யாருக்கும் கிடைக்காத ஆட்சியை எனக்கு வழங்கு வாயாக!” என்று (சுலைமான்) வேண்டினார். (38:35) சுலைமானின் ஆட்சியில் ஷைத்தான் கள் படித்துக்காட்டியதை அவர்கள் பின்பற் றினார்கள். (2:102) சுலைமானுக்குகக் காற்றை நாம் வசப் படுத்திக்கொடுத்தோம். அதன் புறப்பாடு ஒரு மாதமாகும். அதன் திரும்புதல் ஒரு மாதமாகும். அவருக்காகச் செம்பு ஊற்றை ஓடச்செய்தோம் (அதாவது இரும்பு ஊற்றை உருக்கினோம்). (34:12) தன் இறைவனின் ஆணைப்படி அவரிடம் பணியாற்றும் ஜின்களும் இருந் தனர். அவர்களில் யாரேனும் புறக்கணித் தால், நரகத்தின் வேதனையை அவருக்குச் சுவைக்கச்செய்வோம். அவர் விரும்பும் மாளிகைகளையும் லிகோட்டைகளைவிடச் சிறிய மாளிகைகளையும்லி சிற்பங்களையும் நீர்த் தடாகங்களைப் போன்ற பெரும் கொப்பரைகளையும் நகர்த்த முடியாத பாத்திரங்களையும் அவருக்காக அவை செய்தன. (34:13) ‘நீர்த்தடாகங்கள்’ (அல்ஜவாப்) என்பது ஒட்டகங்களுக்கான தொட்டிகளைக் குறிக்கும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், நிலத்திலுள்ள பெரும் பள்ளத்தை இது குறிக்கும் என்கிறார்கள். அவருக்கு நாம் மரணத்தை ஏற்படுத் தியபோது, பூமியில் ஊர்ந்து செல்லும் உயிரினம் (கரையான்)தான் அவரது மரணத்தை அவர்களுக்கு (ஜின்களுக்கு) காட்டிக்கொடுத்தது. அது அவரது கைத்தடியை (மின்சஅத்) அரித்தது. (34:14) நிச்சயமாக நான் (சூரியன்) திரைக்குள் மறையும்வரை என் இறைவனை நினைவு கூராமல் இந்த(க் குதிரைகள் எனும்) செல்வத்தை நான் நேசித்துவிட்டேன் என்று (சுலைமான்) கூறினார். அவற்றை என்னிடம் மீண்டும் கொண்டுவாருங்கள் (என்று சொல்லி) அவற்றின் கால்களையும் கழுத்துகளையும் தடவிக்கொடுத்தார் லிஅதாவது குதிரைகளின் கழுத்து முடிகளை யும் பின்பக்க நரம்புகளையும் தடவிக் கொடுத்தார். (38:33) ஷைத்தான்களில் கட்டடம் கட்டு வோரையும் முத்துக்குளிப்போரையும் விலங்கிடப்பட்ட (அஸ்ஃபாத்) வேறுசிலரையும் (சுலைமானுக்கு) வசப்படுத்திக்கொடுத்தோம். (38:37,38) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பயிற்சி பெற்ற உயர்ந்த ரகக் குதிரைகள் அவர் முன்னே (ஒருநாள்) மாலையில் நிறுத்தப்பட்டன. (38:31) யிபயிற்சி பெற்றவை’ என்பதைக் குறிக்க மூலத்தில் ‘ஸாஃபினாத்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. குதிரை தன் கால்களில் ஒன்றைத் தூக்கிக்கொண்டு குளம்பின் ஓரத்தை மட்டும் பூமியில் வைப்பதற்கே ‘ஸஃப” என்பர். (இது குதிரைகளின் உயர்ந்த தரத்தைக் காட்டும் அம்சமாகும்.) யிஉயர் ரகக் குதிரைகள்’ (ஜியாத்) என்றால், யிவிரைந்து செல்பவை’ என்று பொருள். அவரது சிம்மாசனத்தில் (அவரை) ஒரு சடலமாகப் போட்டோம் (38:34). சடலம் (ஜசத்) என்பது ஷைத்தானைக் குறிக்கும். அவருக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம். அவரது கட்டளைப்படி அவர் நினைத்தவாறு அது பணிந்து சென்றது (ருகாஅன்). (38:36) இங்கு மூலத்தில் உள்ள யிருகாஅன்’ என்பதற்கு தூய்மையான, நல்ல காற்று என்பது பொருள். ‘அஸாப’ என்பதற்கு யிஎண்ணியவாறு’ என்பது பொருள். இது நமது அருட்கொடை. கணக்கின்றி லிஅதாவது சிரமமின்றிலி மற்றவருக்குக் கொடுக்கலாம் (ஃபம்நுன்). அல்லது நீரே வைத்துக்கொள்ளலாம் (என்று கூறினோம்). (38:39)
3425. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (நபி (ஸல்) அவர்களிடம்), ‘‘அல்லாஹ்வின் தூதரே! முதலாவதாக அமைக்கப்பட்ட பள்ளிவாசல் எது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘அல்மஸ்ஜிதுல் ஹராம் (மக்காவிலுள்ள புனித இறையில்லம்)” என்று பதிலளித்தார் கள். நான், ‘‘பிறகு எது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘பிறகு ‘அல்மஸ்ஜிதுல் அக்ஸா’ (ஜெரூசலம் நகரிலுள்ள ‘அல் அக்ஸா’ பள்ளிவாசல்)” என்று பதிலளித்தார் கள். நான், ‘‘அவ்விரண்டிற்குமிடையே எவ்வளவு காலம் (இடைவெளி) இருந்தது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘நாற்பதாண்டு காலம் (இடைவெளி) இருந்தது” என்று கூறினார்கள்.

பிறகு, ‘‘உன்னைத் தொழுகை (நேரம்) எங்கே வந்தடைந்தாலும் நீ தொழுதுகொள். ஏனெனில், பூமி முழுவதுமே உனக்கு சிரவணக்கம் செய்யுமிடம் (இறைவனை வழிபடும் தலம்) ஆகும்” என்று சொன் னார்கள்.105


அத்தியாயம் : 60
3426. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَثَلِي وَمَثَلُ النَّاسِ كَمَثَلِ رَجُلٍ اسْتَوْقَدَ نَارًا، فَجَعَلَ الْفَرَاشُ وَهَذِهِ الدَّوَابُّ تَقَعُ فِي النَّارِ ". وَقَالَ "
பாடம் : 40 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: தாவூதுக்கு சுலைமானைப் பரிசளித்தோம். அவர் மிகச் சிறந்த அடியாராகவும் தம்முடைய இறைவனின் பக்கம் அதிகம் திரும்பக்கூடியவராகவும் (அவ்வாப்) திகழ்ந்தார். (38:30)102 ‘அவ்வாப்’ லிதிரும்பக்கூடியவர்; பாவமீட்பு பெறுபவர். ‘‘என் இறைவா! எனக்கு மன்னிப்பு அளிப்பாயாக! எனக்குப்பின் யாருக்கும் கிடைக்காத ஆட்சியை எனக்கு வழங்கு வாயாக!” என்று (சுலைமான்) வேண்டினார். (38:35) சுலைமானின் ஆட்சியில் ஷைத்தான் கள் படித்துக்காட்டியதை அவர்கள் பின்பற் றினார்கள். (2:102) சுலைமானுக்குகக் காற்றை நாம் வசப் படுத்திக்கொடுத்தோம். அதன் புறப்பாடு ஒரு மாதமாகும். அதன் திரும்புதல் ஒரு மாதமாகும். அவருக்காகச் செம்பு ஊற்றை ஓடச்செய்தோம் (அதாவது இரும்பு ஊற்றை உருக்கினோம்). (34:12) தன் இறைவனின் ஆணைப்படி அவரிடம் பணியாற்றும் ஜின்களும் இருந் தனர். அவர்களில் யாரேனும் புறக்கணித் தால், நரகத்தின் வேதனையை அவருக்குச் சுவைக்கச்செய்வோம். அவர் விரும்பும் மாளிகைகளையும் லிகோட்டைகளைவிடச் சிறிய மாளிகைகளையும்லி சிற்பங்களையும் நீர்த் தடாகங்களைப் போன்ற பெரும் கொப்பரைகளையும் நகர்த்த முடியாத பாத்திரங்களையும் அவருக்காக அவை செய்தன. (34:13) ‘நீர்த்தடாகங்கள்’ (அல்ஜவாப்) என்பது ஒட்டகங்களுக்கான தொட்டிகளைக் குறிக்கும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், நிலத்திலுள்ள பெரும் பள்ளத்தை இது குறிக்கும் என்கிறார்கள். அவருக்கு நாம் மரணத்தை ஏற்படுத் தியபோது, பூமியில் ஊர்ந்து செல்லும் உயிரினம் (கரையான்)தான் அவரது மரணத்தை அவர்களுக்கு (ஜின்களுக்கு) காட்டிக்கொடுத்தது. அது அவரது கைத்தடியை (மின்சஅத்) அரித்தது. (34:14) நிச்சயமாக நான் (சூரியன்) திரைக்குள் மறையும்வரை என் இறைவனை நினைவு கூராமல் இந்த(க் குதிரைகள் எனும்) செல்வத்தை நான் நேசித்துவிட்டேன் என்று (சுலைமான்) கூறினார். அவற்றை என்னிடம் மீண்டும் கொண்டுவாருங்கள் (என்று சொல்லி) அவற்றின் கால்களையும் கழுத்துகளையும் தடவிக்கொடுத்தார் லிஅதாவது குதிரைகளின் கழுத்து முடிகளை யும் பின்பக்க நரம்புகளையும் தடவிக் கொடுத்தார். (38:33) ஷைத்தான்களில் கட்டடம் கட்டு வோரையும் முத்துக்குளிப்போரையும் விலங்கிடப்பட்ட (அஸ்ஃபாத்) வேறுசிலரையும் (சுலைமானுக்கு) வசப்படுத்திக்கொடுத்தோம். (38:37,38) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பயிற்சி பெற்ற உயர்ந்த ரகக் குதிரைகள் அவர் முன்னே (ஒருநாள்) மாலையில் நிறுத்தப்பட்டன. (38:31) யிபயிற்சி பெற்றவை’ என்பதைக் குறிக்க மூலத்தில் ‘ஸாஃபினாத்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. குதிரை தன் கால்களில் ஒன்றைத் தூக்கிக்கொண்டு குளம்பின் ஓரத்தை மட்டும் பூமியில் வைப்பதற்கே ‘ஸஃப” என்பர். (இது குதிரைகளின் உயர்ந்த தரத்தைக் காட்டும் அம்சமாகும்.) யிஉயர் ரகக் குதிரைகள்’ (ஜியாத்) என்றால், யிவிரைந்து செல்பவை’ என்று பொருள். அவரது சிம்மாசனத்தில் (அவரை) ஒரு சடலமாகப் போட்டோம் (38:34). சடலம் (ஜசத்) என்பது ஷைத்தானைக் குறிக்கும். அவருக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம். அவரது கட்டளைப்படி அவர் நினைத்தவாறு அது பணிந்து சென்றது (ருகாஅன்). (38:36) இங்கு மூலத்தில் உள்ள யிருகாஅன்’ என்பதற்கு தூய்மையான, நல்ல காற்று என்பது பொருள். ‘அஸாப’ என்பதற்கு யிஎண்ணியவாறு’ என்பது பொருள். இது நமது அருட்கொடை. கணக்கின்றி லிஅதாவது சிரமமின்றிலி மற்றவருக்குக் கொடுக்கலாம் (ஃபம்நுன்). அல்லது நீரே வைத்துக்கொள்ளலாம் (என்று கூறினோம்). (38:39)
3426. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனது நிலையும் மக்களின் நிலையும் ஒரு மனிதரின் நிலையை ஒத்திருக்கிறது. அவர் தீயை மூட்டிவிட, விட்டில் பூச்சிகளும் இதரப் பூச்சிகளும் அந்த நெருப்பில் விழுகின்றன.106

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 60
3427. كَانَتِ امْرَأَتَانِ مَعَهُمَا ابْنَاهُمَا جَاءَ الذِّئْبُ فَذَهَبَ بِابْنِ إِحْدَاهُمَا، فَقَالَتْ صَاحِبَتُهَا إِنَّمَا ذَهَبَ بِابْنِكِ. وَقَالَتِ الأُخْرَى إِنَّمَا ذَهَبَ بِابْنِكِ. فَتَحَاكَمَتَا إِلَى دَاوُدَ، فَقَضَى بِهِ لِلْكُبْرَى فَخَرَجَتَا عَلَى سُلَيْمَانَ بْنِ دَاوُدَ فَأَخْبَرَتَاهُ. فَقَالَ ائْتُونِي بِالسِّكِّينِ أَشُقُّهُ بَيْنَهُمَا. فَقَالَتِ الصُّغْرَى لاَ تَفْعَلْ يَرْحَمُكَ اللَّهُ، هُوَ ابْنُهَا. فَقَضَى بِهِ لِلصُّغْرَى ". قَالَ أَبُو هُرَيْرَةَ وَاللَّهِ إِنْ سَمِعْتُ بِالسِّكِّينِ إِلاَّ يَوْمَئِذٍ، وَمَا كُنَّا نَقُولُ إِلاَّ الْمُدْيَةُ.
பாடம் : 40 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: தாவூதுக்கு சுலைமானைப் பரிசளித்தோம். அவர் மிகச் சிறந்த அடியாராகவும் தம்முடைய இறைவனின் பக்கம் அதிகம் திரும்பக்கூடியவராகவும் (அவ்வாப்) திகழ்ந்தார். (38:30)102 ‘அவ்வாப்’ லிதிரும்பக்கூடியவர்; பாவமீட்பு பெறுபவர். ‘‘என் இறைவா! எனக்கு மன்னிப்பு அளிப்பாயாக! எனக்குப்பின் யாருக்கும் கிடைக்காத ஆட்சியை எனக்கு வழங்கு வாயாக!” என்று (சுலைமான்) வேண்டினார். (38:35) சுலைமானின் ஆட்சியில் ஷைத்தான் கள் படித்துக்காட்டியதை அவர்கள் பின்பற் றினார்கள். (2:102) சுலைமானுக்குகக் காற்றை நாம் வசப் படுத்திக்கொடுத்தோம். அதன் புறப்பாடு ஒரு மாதமாகும். அதன் திரும்புதல் ஒரு மாதமாகும். அவருக்காகச் செம்பு ஊற்றை ஓடச்செய்தோம் (அதாவது இரும்பு ஊற்றை உருக்கினோம்). (34:12) தன் இறைவனின் ஆணைப்படி அவரிடம் பணியாற்றும் ஜின்களும் இருந் தனர். அவர்களில் யாரேனும் புறக்கணித் தால், நரகத்தின் வேதனையை அவருக்குச் சுவைக்கச்செய்வோம். அவர் விரும்பும் மாளிகைகளையும் லிகோட்டைகளைவிடச் சிறிய மாளிகைகளையும்லி சிற்பங்களையும் நீர்த் தடாகங்களைப் போன்ற பெரும் கொப்பரைகளையும் நகர்த்த முடியாத பாத்திரங்களையும் அவருக்காக அவை செய்தன. (34:13) ‘நீர்த்தடாகங்கள்’ (அல்ஜவாப்) என்பது ஒட்டகங்களுக்கான தொட்டிகளைக் குறிக்கும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், நிலத்திலுள்ள பெரும் பள்ளத்தை இது குறிக்கும் என்கிறார்கள். அவருக்கு நாம் மரணத்தை ஏற்படுத் தியபோது, பூமியில் ஊர்ந்து செல்லும் உயிரினம் (கரையான்)தான் அவரது மரணத்தை அவர்களுக்கு (ஜின்களுக்கு) காட்டிக்கொடுத்தது. அது அவரது கைத்தடியை (மின்சஅத்) அரித்தது. (34:14) நிச்சயமாக நான் (சூரியன்) திரைக்குள் மறையும்வரை என் இறைவனை நினைவு கூராமல் இந்த(க் குதிரைகள் எனும்) செல்வத்தை நான் நேசித்துவிட்டேன் என்று (சுலைமான்) கூறினார். அவற்றை என்னிடம் மீண்டும் கொண்டுவாருங்கள் (என்று சொல்லி) அவற்றின் கால்களையும் கழுத்துகளையும் தடவிக்கொடுத்தார் லிஅதாவது குதிரைகளின் கழுத்து முடிகளை யும் பின்பக்க நரம்புகளையும் தடவிக் கொடுத்தார். (38:33) ஷைத்தான்களில் கட்டடம் கட்டு வோரையும் முத்துக்குளிப்போரையும் விலங்கிடப்பட்ட (அஸ்ஃபாத்) வேறுசிலரையும் (சுலைமானுக்கு) வசப்படுத்திக்கொடுத்தோம். (38:37,38) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பயிற்சி பெற்ற உயர்ந்த ரகக் குதிரைகள் அவர் முன்னே (ஒருநாள்) மாலையில் நிறுத்தப்பட்டன. (38:31) யிபயிற்சி பெற்றவை’ என்பதைக் குறிக்க மூலத்தில் ‘ஸாஃபினாத்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. குதிரை தன் கால்களில் ஒன்றைத் தூக்கிக்கொண்டு குளம்பின் ஓரத்தை மட்டும் பூமியில் வைப்பதற்கே ‘ஸஃப” என்பர். (இது குதிரைகளின் உயர்ந்த தரத்தைக் காட்டும் அம்சமாகும்.) யிஉயர் ரகக் குதிரைகள்’ (ஜியாத்) என்றால், யிவிரைந்து செல்பவை’ என்று பொருள். அவரது சிம்மாசனத்தில் (அவரை) ஒரு சடலமாகப் போட்டோம் (38:34). சடலம் (ஜசத்) என்பது ஷைத்தானைக் குறிக்கும். அவருக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம். அவரது கட்டளைப்படி அவர் நினைத்தவாறு அது பணிந்து சென்றது (ருகாஅன்). (38:36) இங்கு மூலத்தில் உள்ள யிருகாஅன்’ என்பதற்கு தூய்மையான, நல்ல காற்று என்பது பொருள். ‘அஸாப’ என்பதற்கு யிஎண்ணியவாறு’ என்பது பொருள். இது நமது அருட்கொடை. கணக்கின்றி லிஅதாவது சிரமமின்றிலி மற்றவருக்குக் கொடுக்கலாம் (ஃபம்நுன்). அல்லது நீரே வைத்துக்கொள்ளலாம் (என்று கூறினோம்). (38:39)
3427. மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(தாவூத் (அலை) அவர்களுடைய காலத்தில்) இரண்டு பெண்கள் இருந்தனர். அவர்களுடன் அவர்களுடைய மகன் களும் இருந்தனர். ஓநாய் (ஒன்று) அவ்விருவரில் ஒருவனைக் கொண்டு சென்றுவிட்டது. உடனே அவர்களில் ஒருத்தி, தன் தோழியிடம், ‘‘உன் மகனைத் தான் ஓநாய் கொண்டுசென்றுவிட்டது” என்று கூற, மற்றொருத்தி அவளிடம், ‘‘உன் மகனைத்தான் ஓநாய் கொண்டுசென்று விட்டது” என்று கூறினாள்.

ஆகவே, இருவரும் (தங்கள் தகராறைத் தீர்த்துக்கொள்ள) தாவூத் (அலை) அவர்களிடம் தீர்ப்புக்கேட்டு சென்றனர். அவர்கள் (அவ்விரு பெண்களில்) மூத்தவளுக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தார்கள்.107 (அவர்களுடைய தீர்ப்பில் கருத்து வேறுபாடுகொண்டு) அப்பெண்கள் இருவரும் சுலைமான் (அலை) அவர்களிடம் (தீர்ப்புக் கேட்டுச்) சென்றனர். அவர்களிடம் விஷயத்தைத் தெரிவித்தனர்.

அதற்கு அவர்கள், ‘‘என்னிடம் ஒரு கத்தியைக் கொண்டுவாருங்கள். நான் உங்களிருவருக்குமிடையே (மீதமுள்ள ஒரு மகனை ஆளுக்குப் பாதியாகப்) பிளந்து  (பங்கிட்டு)விடுகிறேன்” என்று கூறினார்கள். அப்போது இளையவள், ‘‘அவ்வாறு செய்யாதீர்கள். அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும். இவன் அவள் மகன்தான்” என்று (பதறிப்போய்) கூறினாள். உடனே சுலைமான் (அலை) அவர்கள், ‘அந்தக் குழந்தை அ(ந்த இளைய)வளுக்கே உரியது’ என்று தீர்ப்பளித் தார்கள்.108

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அன்றுதான் (கத்திக்கு) யிசிக்கீன்’ என்னும் சொல்லைச் செவியுற்றேன். (கத்தியைக் குறிக்க) யிமுத்யா’ என்னும் சொல்லையே நாங்கள் பயன்படுத்திவந்தோம்” என்று கூறுகிறார்கள்.

அத்தியாயம் : 60
3428. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ لَمَّا نَزَلَتِ {الَّذِينَ آمَنُوا وَلَمْ يَلْبِسُوا إِيمَانَهُمْ بِظُلْمٍ} قَالَ أَصْحَابُ النَّبِيِّ صلى الله عليه وسلم أَيُّنَا لَمْ يَلْبِسْ إِيمَانَهُ بِظُلْمٍ فَنَزَلَتْ {لاَ تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ }
பாடம் : 41 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: நாம் லுக்மானுக்கு ஞானத்தை வழங்கியிருந்தோம்.109 ‘‘நீர் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவீராக! யாரேனும் நன்றி செலுத்தினால் அவர் செலுத்தும் நன்றி அவருக்கே பயனளிக்கும். யாரேனும் நன்றி கொன்றால் உண்மையில் அல்லாஹ் தேவைகள் அற்றவனாகவும் தனக்குத்தானே புகழுக்குரியவனாகவும் இருக்கின்றான்” (என்று கூறினோம்.) மேலும், லுக்மான் தம் மகனுக்கு அறிவுரை நல்கியபோது கூறியதை நினைவு கூருங்கள்: ‘‘என் அன்பு மகனே! நீ அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்கிவிடாதே! உண்மையில் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது மாபெரும் அக்கிரமமாகும்!” மேலும், பெற்றோர் நலன் பேணவேண்டுமென்று நாம் மனிதனுக்கு அறிவுறுத்தி யுள்ளோம். அவனுடைய தாய் நலிவுக்குமேல் நலிவை ஏற்று அவனைத் தன் வயிற்றில் சுமந்தாள். அவன் பால்குடி மறக்க இரண்டு ஆண்டுகள் பிடித்தன. (இதனால்தான் நாம் அவனுக்கு அறிவுரை கூறினோம்:) எனக்கு நன்றி செலுத்து. உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்து. என் பக்கமே நீ திரும்பி வர வேண்டி யுள்ளது. ஆனால், எதனை நீ அறியமாட்டாயோ, அதனை எனக்கு நீ இணை கற்பிக்க வேண்டுமென்று அவர்கள் இருவரும் உன்னை நிர்ப்பந்தித்தால் அவர்களின் பேச்சை நீ ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாதே! இவ்வுலகில் அவர்களுடன் நல்ல முறை யில் நீ நடந்துகொள்! யார் என் பக்கம் மீண்டுள்ளாரோ அவரது வழியை நீ பின்பற்று! பிறகு நீங்கள் அனைவரும் என் பக்கமே திரும்ப வேண்டியுள்ளது. அப்போது நீங்கள் என்ன செய்துகொண்டி ருந்தீர்கள் என்பதை நான் உங்களுக்கு அறிவித்து விடுவேன். (மேலும், லுக்மான் கூறினார்:) ‘‘என் அருமை மகனே! ஏதேனும் ஒரு பொருள் கடுகளவு இருந்தாலும் சரி, மேலும் அது ஏதேனும் ஒரு பாறையில் அல்லது வானங்களில் அல்லது பூமியில் எங்கு மறைந்திருப்பினும் சரி, அல்லாஹ் அதனை வெளிப்படுத்துவான். அவன் நுண்மையானவனும் எல்லாம் தெரிந்தவனுமாவான். என் அருமை மகனே! தொழுகையை நிலைநாட்டு. மேலும், நன்மை புரியும்படி ஏவு; தீமையைத் தடு! எந்தத் துன்பம் உனக்கு நேர்ந்தாலும் அதனைப் பொறுத்துக் கொள்! நிச்சயம் இவையெல்லாம் தீர்க்கமான விஷயங்களாகும். மேலும், மக்களை விட்டு உன் முகத்தைத் திருப்பிக்கொள்ளாதே! (லா துஸஇர்). பூமியில் செருக்காய் நடக்காதே! அகந்தையும் ஆணவமும் கொண்ட யாரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. (31:12லி18)
3428. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

யிஎவர் இறைநம்பிக்கை கொண்டு, தம் இறைநம்பிக்கையில் அநீதியைக் கலந்திட வில்லையோ’ எனும் (6:82) இறைவசனம் அருளப்பட்டபோது நபித்தோழர்கள், ‘‘நம்மில் எவர்தான் தமது இறைநம்பிக்கையுடன் அநீதியைக் கலந்திடவில்லை?” என்று கேட்டார்கள்.

அப்போது ‘‘(என் அருமை மகனே!) அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்காதே. இணைகற்பிப்பது மாபெரும் அநீதியாகும்” (என்று லுக்மான் கூறினார்) (31:13) எனும் வசனம் அருளப்பட்டது.


அத்தியாயம் : 60
3429. حَدَّثَنِي إِسْحَاقُ، أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا نَزَلَتِ {الَّذِينَ آمَنُوا وَلَمْ يَلْبِسُوا إِيمَانَهُمْ بِظُلْمٍ} شَقَّ ذَلِكَ عَلَى الْمُسْلِمِينَ، فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ، أَيُّنَا لاَ يَظْلِمُ نَفْسَهُ قَالَ "" لَيْسَ ذَلِكَ، إِنَّمَا هُوَ الشِّرْكُ، أَلَمْ تَسْمَعُوا مَا قَالَ لُقْمَانُ لاِبْنِهِ وَهْوَ يَعِظُهُ {يَا بُنَىَّ لاَ تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ }"".
பாடம் : 41 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: நாம் லுக்மானுக்கு ஞானத்தை வழங்கியிருந்தோம்.109 ‘‘நீர் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவீராக! யாரேனும் நன்றி செலுத்தினால் அவர் செலுத்தும் நன்றி அவருக்கே பயனளிக்கும். யாரேனும் நன்றி கொன்றால் உண்மையில் அல்லாஹ் தேவைகள் அற்றவனாகவும் தனக்குத்தானே புகழுக்குரியவனாகவும் இருக்கின்றான்” (என்று கூறினோம்.) மேலும், லுக்மான் தம் மகனுக்கு அறிவுரை நல்கியபோது கூறியதை நினைவு கூருங்கள்: ‘‘என் அன்பு மகனே! நீ அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்கிவிடாதே! உண்மையில் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது மாபெரும் அக்கிரமமாகும்!” மேலும், பெற்றோர் நலன் பேணவேண்டுமென்று நாம் மனிதனுக்கு அறிவுறுத்தி யுள்ளோம். அவனுடைய தாய் நலிவுக்குமேல் நலிவை ஏற்று அவனைத் தன் வயிற்றில் சுமந்தாள். அவன் பால்குடி மறக்க இரண்டு ஆண்டுகள் பிடித்தன. (இதனால்தான் நாம் அவனுக்கு அறிவுரை கூறினோம்:) எனக்கு நன்றி செலுத்து. உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்து. என் பக்கமே நீ திரும்பி வர வேண்டி யுள்ளது. ஆனால், எதனை நீ அறியமாட்டாயோ, அதனை எனக்கு நீ இணை கற்பிக்க வேண்டுமென்று அவர்கள் இருவரும் உன்னை நிர்ப்பந்தித்தால் அவர்களின் பேச்சை நீ ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாதே! இவ்வுலகில் அவர்களுடன் நல்ல முறை யில் நீ நடந்துகொள்! யார் என் பக்கம் மீண்டுள்ளாரோ அவரது வழியை நீ பின்பற்று! பிறகு நீங்கள் அனைவரும் என் பக்கமே திரும்ப வேண்டியுள்ளது. அப்போது நீங்கள் என்ன செய்துகொண்டி ருந்தீர்கள் என்பதை நான் உங்களுக்கு அறிவித்து விடுவேன். (மேலும், லுக்மான் கூறினார்:) ‘‘என் அருமை மகனே! ஏதேனும் ஒரு பொருள் கடுகளவு இருந்தாலும் சரி, மேலும் அது ஏதேனும் ஒரு பாறையில் அல்லது வானங்களில் அல்லது பூமியில் எங்கு மறைந்திருப்பினும் சரி, அல்லாஹ் அதனை வெளிப்படுத்துவான். அவன் நுண்மையானவனும் எல்லாம் தெரிந்தவனுமாவான். என் அருமை மகனே! தொழுகையை நிலைநாட்டு. மேலும், நன்மை புரியும்படி ஏவு; தீமையைத் தடு! எந்தத் துன்பம் உனக்கு நேர்ந்தாலும் அதனைப் பொறுத்துக் கொள்! நிச்சயம் இவையெல்லாம் தீர்க்கமான விஷயங்களாகும். மேலும், மக்களை விட்டு உன் முகத்தைத் திருப்பிக்கொள்ளாதே! (லா துஸஇர்). பூமியில் செருக்காய் நடக்காதே! அகந்தையும் ஆணவமும் கொண்ட யாரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. (31:12லி18)
3429. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

யிஎவர் இறைநம்பிக்கை கொண்டு (பின்னர்) தமது இறைநம்பிக்கையுடன் அநீதியைக் கலந்திடவில்லையோ’ என்னும் (6:82) வசனம் அருளப்பட்டபோது, அது முஸ்லிம்களுக்கு மிகவும் கடினமான தாகத் தென்பட்டது. ஆகவே, அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! எங்களில் தமக் குத்தாமே அநீதியிழைத்துக்கொள்ளாதவர் யார்?” என்று கேட்டனர்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘(இந்த வசனம் குறிப்பிடுவது) அதுவல்ல. அது இணைவைப்பையே குறிக்கிறது. யிஎன் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே. நிச்சயமாக, இணைகற்பிப்பது மாபெரும் அநீதியாகும்’ என்று (அறிஞர்) லுக்மான், தம் மகனுக்கு அறிவுரை கூறுவதை (குர்ஆன் எடுத்துரைக்கின்றதே, (31:13) அதை) நீங்கள் கேட்கவில்லையா?”  என்று சொன்னார்கள்.110

அத்தியாயம் : 60
3430. حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا هَمَّامُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ مَالِكِ بْنِ صَعْصَعَةَ، أَنَّ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم حَدَّثَهُمْ عَنْ لَيْلَةَ أُسْرِيَ "" ثُمَّ صَعِدَ حَتَّى أَتَى السَّمَاءَ الثَّانِيَةَ فَاسْتَفْتَحَ، قِيلَ مَنْ هَذَا قَالَ جِبْرِيلُ. قِيلَ وَمَنْ مَعَكَ قَالَ مُحَمَّدٌ. قِيلَ وَقَدْ أُرْسِلَ إِلَيْهِ قَالَ نَعَمْ. فَلَمَّا خَلَصْتُ، فَإِذَا يَحْيَى وَعِيسَى وَهُمَا ابْنَا خَالَةٍ. قَالَ هَذَا يَحْيَى وَعِيسَى فَسَلِّمْ عَلَيْهِمَا. فَسَلَّمْتُ فَرَدَّا ثُمَّ قَالاَ مَرْحَبًا بِالأَخِ الصَّالِحِ وَالنَّبِيِّ الصَّالِحِ "".
பாடம் : 42 அல்லாஹ் கூறுகின்றான்: ஒரு கிராமவாசிகளிடம் (நம்) தூதர்கள் வந்தபோது நடந்த சம்பவத்தை உதாரணமாக இவர்களுக்குக் கூறுவீராக! நாம் அவர்களிடம் இரு தூதர்களை அனுப்பியபோது, அவர்கள் அவ்விருவரையும் பொய்யர்கள் எனத் தூற்றினார்கள். பிறகு நாம் மூன்றாமவரை அனுப்பி (அவ்விரு தூதர்களைப்) பலப்படுத்தினோம் (அஸ்ஸஸ்னா). அத்தூதர்கள் அனைவரும் (அம்மக்களை நோக்கி) ‘‘உண்மையில் நாங்கள் உங்களிடம் இறைத்தூதர்களாய் அனுப்பப்பட்டுள்ளோம்” எனக் கூறினார்கள். ‘‘நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்களேயன்றி வேறிலர். மேலும் கருணைமிக்க இறைவன் எதையும் இறக்கிவைக்கவில்லை. நீங்கள் வெறும் பொய்யே கூறுகின்றீர்கள்” என்று அந்தக் கிராம வாசிகள் கூறினார்கள். தூதர்கள் கூறினார்கள்: நிச்சயமாக, நாங்கள் உங்களிடம் தூதர்களாக அனுப்பப் பட்டுள்ளோம் என்பதை எங்கள் அதிபதி நன்கறிகின்றான். மேலும் எங்கள்மீதுள்ள கடமை, தூதைத் தெளிவாய் (உங்களிடம்) சேர்த்துவிடுவதைத் தவிர வேறில்லை” அதற்கு அக்கிராமவாசிகள், ‘‘நாங்களோ, உங்களை எங்களுக்கு ஏற்பட்ட அபசகுன மாகக் கருதுகின்றோம். நீங்கள் (இந்த அழைப்பிலிருந்து) விலகிக்கொள்ளாவிட்டால், நிச்சயமாக நாங்கள் உங்களைக் கல்லால் அடிப்போம். நீங்கள் எங்களிடமிருந்து நிச்சயமாகத் துன்பமிகு தண்டனை பெறுவீர்கள்” எனக் கூறலானார்கள். (அதற்கு) அத்தூதர்கள், ‘‘உங்களுடைய அபசகுனம் அதாவது சோதனைகள்லி உங்களோடுதான் இருக்கிறது. உங்களுக்கு நல்லுரை கூறப்பட்டதற்காகவா (நீங்கள் இவ்வாறெல்லாம் பேசுகிறீர்கள்!) உண்மை யாதெனில், நீங்கள் எல்லை மீறிய மக்களாவீர்” எனப் பதிலளித்தார்கள். (36:13லி19)111 பாடம் : 43 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: உங்கள் இறைவன் தன் அடியார் ஸகரிய்யாமீது பொழிந்த அருளைப் பற்றிய செய்தியாகும் இது.112 அவர் தம் இறைவனை மெதுவாக அழைத்தபோது, அவர் பணிவுடன் வேண்டினார்: ‘‘என் அதிபதியே! என் எலும்புகள் நலிவடைந்துவிட்டன. நரை யால் என் தலை மினுமினுப்பாகிவிட்டது. என் அதிபதியே! நான் உன்னிடம் பிரார்த்தனை புரிந்து ஒருபோதும் ஏமாற்றம் அடைந்ததில்லை. எனக்குப்பின் என் உறவினர்கள் (மேற்கொள்ளக்கூடிய தீயவழி) பற்றி நான் அஞ்சுகின்றேன். என் மனைவி மலடியாக இருக்கின்றாள். எனவே, உனது தனிப்பட்ட அருளால் எனக்கு வாரிசை வழங்குவாயாக! அவர் எனக்கும் யஅகூபுடைய குடும்பத்தாருக் கும் வாரிசாகத் திகழட்டும். என் இறைவா! அவரை விரும்பத்தக்க மனிதராய் ஆக்குவாயாக!” (அவருக்குப் பதிலளிக்கப்பட்டது:) ஸகரிய்யாவே! உமக்கு ஓர் ஆண் குழந்தை பிறக்கும் என்று நாம் நற்செய்தி அறிவிக்கிறோம். அதன் பெயர் யியஹ்யா’ ஆகும். இந்தப் பெயருடைய எவரையும் இதற்குமுன் நாம் படைக்கவில்லை. (19:3லி7) யிஇந்தப் பெயருடையவர்’ என்பதைக் குறிக்க மூலத்தில் யிசமீ’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு யிபோன்றவர்’ என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பொருள் கூறியுள்ளார்கள். யிவிரும்பத்தக்க மனிதர்’ (ரளீ) லிவிரும்பப்படும் மனிதர் (மர்ளீ). ‘‘என் இறைவா! எனக்கு எப்படி பையன் பிறப்பான்? என் மனைவி மகப்பேறு அற்றவள்; நானோ முதுமையின் இறுதியை (இத்திய்யு) அடைந்துவிட்டேன்” என்று (ஸகரிய்யா) கூறினார். (19:8) யிஇத்திய்யு’ என்பது யிஇஸிய்யு’ என்றும் ஓதப்பட்டுள்ளது. யிஎல்லை மீறல்’ என்பது இதன் பொருளாகும். யிசவிய்யு’ (குறைபாடற்றவர்) லி ஆரோக்கியமானவர். (19:10) தொழுமிடத்திலிருந்து அவர் தம் சமுதாயத்தாரிடம் வந்து, காலையிலும் மாலையிலும் (இறையைத்) துதியுங்கள் என்று (சைகையால்) அறிவித்தார் (19:11). அறிவித்தார் (அவ்ஹா) லி அதாவது சுட்டிக்காட்டினார். யஹ்யாவே! இவ்வேதத்தைப் பலமாகப் பற்றிக்கொள்வீராக! (19:12லி15) யிஹஃபிய்யு’ 19:47) லி அன்பு மிக்கவன்; பரிவு மிக்கவன்; யிஆகிர்’ (19:8) லி பிள்ளைப் பேறு அற்றவன்; பிள்ளைப்பேறு அற்ற வள். ஆண்பால், பெண்பால் இரண்டுக்கும் பொருந்தும்.
3430. மாலிக் பின் ஸஅஸஆ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் அவர்கள் (விண் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தபோது சொன்னார்கள்:

...பிறகு (வானவர்) ஜிப்ரீல் அவர்கள் ஏறிச் சென்று இரண்டாம் வானத்தை அடைந்தார். அதன் வாயிலைத் திறக்கச் சொன்னார். ‘‘யார் அது?” என்ற கேட்கப்பட்டது. ஜிப்ரீல் (அலை) அவர்கள், ‘‘ஜிப்ரீல்” என்று பதிலளித்தார். ‘‘உங்களுடன் இருப்பவர் யார்” என்று கேட்கப் பட்டது. அதற்கு அவர், ‘‘முஹம்மத்” என்று பதிலளித்தார். ‘‘அவரை அழைத்து வர ஆள் அனுப்பப்பட்டிருந்ததா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘‘ஆம்” என்று பதில் சொன்னார்.

நான் அங்கு சென்று சேர்ந்தபோது அங்கு யஹ்யா (அலை) மற்றும் ஈசா (அலை) ஆகியோர் இருந்தனர். அவர்கள் இருவரும் ஒன்றுவிட்ட சகோதரர்கள். (ஒருவருக்கொருவர் சின்னம்மா பெரியம்மா மகன்கள்.) ஜிப்ரீல் (அலை) அவர்கள், ‘‘இது யஹ்யாவும் ஈசாவும் ஆவர். இருவருக்கும் சலாம் சொல்லுங்கள்’ என்று கூறினார். அவ்வாறே நான் சலாம் சொன்னேன். அவர்கள் இருவரும் சலாமுக்குப் பதிலுரைத்தார்கள். பிறகு, ‘‘நல்ல சகோதரரே! நல்ல நபியே! வருக!” என்று கூறி (வாழ்த்தி)னார்கள்.113

அத்தியாயம் : 60
3431. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، قَالَ قَالَ أَبُو هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" مَا مِنْ بَنِي آدَمَ مَوْلُودٌ إِلاَّ يَمَسُّهُ الشَّيْطَانُ حِينَ يُولَدُ، فَيَسْتَهِلُّ صَارِخًا مِنْ مَسِّ الشَّيْطَانِ، غَيْرَ مَرْيَمَ وَابْنِهَا "". ثُمَّ يَقُولُ أَبُو هُرَيْرَةَ {وَإِنِّي أُعِيذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ }.
பாடம் : 44 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: மேலும், (நபியே!) மர்யமைப் பற்றி இந்த வேதத்தில் (உள்ளதை) நீர் எடுத் துரைப்பீராக! அவர் தம்முடைய குடும்பத் தாரைவிட்டு விலகி கிழக்குப் பக்கமாக ஒதுங்கியிருந்த நேரத்தில் அவர் ஒரு திரையிட்டு அவர்களிலிருந்து மறைந் திருந்தார். (19:16)114 வானவர்கள் இவ்வாறு கூறியதை நினைவுகூருங்கள்: ‘‘மர்யமே! அல்லாஹ் தனது வார்த்தை(யால் பிறக்கப்போகும் குழந்தை)யைக் கொண்டு உமக்கு நற் செய்தி கூறுகின்றான். அதன் பெயர் மர்யமின் குமாரர் ஈசா ‘அல்மசீஹ்’ என்ப தாகும். அவர் இம்மையிலும் மறுமையிலும் மாண்பு மிக்கவராகவும், அல்லாஹ் விடம் நெருங்கிய நல்லடியார்களில் ஒருவராகவும் திகழ்வார். (3:45) நிச்சயமாக அல்லாஹ், அகிலத்தார்களைக் காட்டிலும் (முன்னுரிமை வழங்கி தனது தூதுப் பணிக்காக) ஆதத்தையும், நூஹையும், இப்ராஹீமின் குடும்பத்தாரையும், இம்ரானின் குடும்பத்தாரையும் தேர்ந்தெடுத்துக்கொண்டான். (3:33) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ் அகிலத்தார்களைக் காட்டிலும் (முன்னுரிமை வழங்கி தனது தூதுப் பணிக்காக) ஆதமையும், நூஹையும், இப்ராஹீமின் குடும்பத்தாரையும், இம்ரா னின் குடும்பத்தாரையும் தேர்ந்தெடுத்துக் கொண்டான்” எனும் (3:33) இறைவசனத் திற்கு விளக்கம் அளிக்கும்போது, ‘‘இது அவர்களிடையேயுள்ள இறைநம்பிக்கை யாளர்களைக் குறிக்கும். ஏனெனில் அல்லாஹ், ‘‘இப்ராஹீமுக்கு மனிதர்களில் நெருக்கமானவர்கள் (யாரெனில்) அவரைப் பின்பற்றியோரும் (இப்போது) இந்த நபியும், இறைநம்பிக்கை கொண்டவர் களுமே ஆவர்’ (3:68) என்று கூறுகின்றான்” என்று சொன்னார்கள். யிகுடும்பத்தார்’ என்பதைக் குறிக்க மூலத்தில் யிஆல்’ எனும் சொல் ஆளப்பட் டுள்ளது. இது ‘அஹ்ல்’ (குடும்பம்) என்பதிலிருந்து வந்தது. இதனால்தான் யிஆல்’ என்பது யிஃபுஐல்’ வாய்பாட்டில் வரும்போது யிஉஹைல்’ என அசல் எழுத்தான யிஹா’ உடனேயே குறிப்பிடுவர்.
3431. சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

‘‘ஆதமின் மக்களில் (புதிதாகப்) பிறக்கும் குழந்தை எதுவாயினும் அது பிறக்கும்போதே ஷைத்தான் அதைத் தீண்டுகிறான். ஷைத்தானின் தீண்டலால் அக்குழந்தை கூக்குரலெழுப்பும். மர்யமை யும் அவருடைய மகனையும் தவிர என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்” என அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.

பிறகு, ‘‘நான் இக்குழந்தையையும் அதன் வழித்தோன்றலையும் சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து பாதுகாக்குமாறு உன்னிடம் கோருகிறேன்” (என்று மர்யம் வேண்டினார்) எனும் இறைவசனத்தை (3:36) ஓதுவார்கள்.115

அத்தியாயம் : 60
3432. حَدَّثَنِي أَحْمَدُ بْنُ أَبِي رَجَاءٍ، حَدَّثَنَا النَّضْرُ، عَنْ هِشَامٍ، قَالَ أَخْبَرَنِي أَبِي قَالَ، سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ جَعْفَرٍ، قَالَ سَمِعْتُ عَلِيًّا ـ رضى الله عنه ـ يَقُولُ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" خَيْرُ نِسَائِهَا مَرْيَمُ ابْنَةُ عِمْرَانَ، وَخَيْرُ نِسَائِهَا خَدِيجَةُ "".
பாடம் : 45 (அல்லாஹ் கூறுகின்றான்:) ‘‘மர்யமே! அல்லாஹ் உம்மைத் தேர்ந் தெடுத்தான்; உம்மைத் தூய்மைப்படுத்தி னான்; அகிலத்துப் பெண்கள் அனைவரை விடவும் உம்மை மேன்மையாக்கினான்” என வானவர்கள் கூறியதை எண்ணிப் பாருங்கள். ‘‘மர்யமே! உம்முடைய இறைவனுக்குக் கீழ்ப்படிவீராக; சிரம்பணிவீராக; குனி(ந்து தொழு)வோருடன் நீரும் குனி(ந்து தொழு)வீராக” (என்றும் வானவர்கள் கூறினர்). (நபியே!) இது மறைவான செய்திகளில் ஒன்றாகும். இதை நாமே உமக்கு அறிவிக் கிறோம். தங்களில் யார் மர்யமுக்குப் பொறுப்பேற்பது என்ப(தை முடிவு செய்வ)தற்காகத் தம் எழுதுகோல்களை அவர்கள் போட்டபோது, அவர்கள் அருகில் நீர் இருக்கவில்லை. (இது குறித்து) அவர்கள் வாக்குவாதம் செய்தபோதும் அவர்கள் அருகில் நீர் இருக்கவில்லை. (3:42லி44) யிபொறுப்பேற்பது’ என்பதைக் குறிக்க யியக்ஃபுலு’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு யிஇணைத்துக்கொள்ளல்’ (தமது பொறுப்பில் சேர்த்துப் பராமரித்தல்) என்பது பொருள். இது கடன் போன்றவற் றுக்குப் பொறுப்பேற்கும் இனத்தில் சேராது.
3432. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இம்ரானின் மகள் மர்யம்தான் (அப்போது) உலகப் பெண்களிலேயே சிறந்தவர் ஆவார். (தற்போது) உலகப் பெண்களிலேயே சிறந்தவர் கதீஜா ஆவார்.

இதை அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 60
3433. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، قَالَ سَمِعْتُ مُرَّةَ الْهَمْدَانِيَّ، يُحَدِّثُ عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" فَضْلُ عَائِشَةَ عَلَى النِّسَاءِ كَفَضْلِ الثَّرِيدِ عَلَى سَائِرِ الطَّعَامِ، كَمَلَ مِنَ الرِّجَالِ كَثِيرٌ، وَلَمْ يَكْمُلْ مِنَ النِّسَاءِ إِلاَّ مَرْيَمُ بِنْتُ عِمْرَانَ وَآسِيَةُ امْرَأَةُ فِرْعَوْنَ "".
பாடம் : 46 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: ‘‘மர்யமே! அல்லாஹ் தனது வார்த்தை (யால் பிறக்கப் போகும் குழந்தை)யைக் கொண்டு உமக்கு நற்செய்தி கூறுகின்றான். அவரது பெயர் மர்யமின் மைந்தர் ஈசா மசீஹ் என்பதாகும். அவர் இம்மையிலும் மறுமையிலும் மாண்பு மிக்கவராகவும் (இறைவனுக்கு) நெருக்கமானவர்களில் ஒருவராகவும் விளங்குவார்” என்று வானவர்கள் கூறியதை எண்ணிப் பாருங்கள். அவர் தொட்டில் பருவத்திலும் பேரிள மைப் பருவத்திலும் மக்களிடம் உரையாடு வார். நல்லோர்களில் ஒருவராகவும் திகழ்வார் (என்றும் கூறினர்). (அதற்கு) மர்யம், ‘‘என் இறைவா! எந்த ஆணும் என்னைத் தொடாத நிலையில் எனக்கு எங்ஙனம் குழந்தை பிறக்கும்?” என்று கேட்டார். அதற்கு, ‘‘அப்படித்தான்; தான் நாடுவதை அல்லாஹ் படைப்பான். ஒன்றை அவன் தீர்மானித்துவிட்டால் அ(தைச் செயல்படுத்துவ)தற்கு அவன் சொல்வதெல்லாம் யிஆகு’ என்பதையே. உடனே அது ஆகிவிடும்” என்று (இறைவன்) கூறினான். அவருக்கு எழுத்தையும் ஞானத்தையும் தவ்ராத் மற்றும் இன்ஜீலையும் (அல்லாஹ்) கற்றுக்கொடுப்பான். (3:45லி48) யிநற்செய்தி கூறுகின்றான்’ (3:45) என்பதைக் குறிக்க மூலத்தில் யியுபஷ்ஷிருக்கி’ எனும் சொற்றொடர் ஆளப்பட்டுள்ளது. யியுப்ஷிருக்கி’ (அழுத்தல் குறியின்றி) என்பதற்கும் இதுவே பொருளாகும். இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘அல்மசீஹ்’ என்பதற்கு யிவாய்மையாளர்’ என்பது பொருள். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ‘அல்கஹ்ல்’ (பேரிளம் பருவம்) (3:46) என்பதற்கு, யிபொறுமைசாலி’ என்பது பொருள். ‘அல்அக்மஹ்’ (பிறவியிலேயே கண் பார்வை அற்றவர்) (3:49) என்பதற்கு, பகலில் பார்வை தெரியும்; இரவில் தெரியாது (மாலைக்கண்). மற்றவர்கள் கூறுகிறார்கள்: பிறவிக் குருடர்.
3433. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

மற்றப் பெண்களைவிட ஆயிஷாவுக் கான சிறப்பு, மற்ற எல்லா உணவுகளையும் விட ‘ஸரீதுஞீக்குள்ள சிறப்பைப் போன்ற தாகும். ஆண்களில் நிறையப் பேர் முழுமை பெற்றிருக்கின்றனர். ஆனால், பெண்களில் இம்ரானின் மகள் மர்யமையும் ஃபிர்அவ்னின் துணைவியார் ஆஸியாவையும் தவிர வேறெவரும் முழுமை பெறவில்லை.

இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.116


அத்தியாயம் : 60
3434. وَقَالَ ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ حَدَّثَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" نِسَاءُ قُرَيْشٍ خَيْرُ نِسَاءٍ رَكِبْنَ الإِبِلَ، أَحْنَاهُ عَلَى طِفْلٍ، وَأَرْعَاهُ عَلَى زَوْجٍ فِي ذَاتِ يَدِهِ "". يَقُولُ أَبُو هُرَيْرَةَ عَلَى إِثْرِ ذَلِكَ وَلَمْ تَرْكَبْ مَرْيَمُ بِنْتُ عِمْرَانَ بَعِيرًا قَطُّ. تَابَعَهُ ابْنُ أَخِي الزُّهْرِيِّ وَإِسْحَاقُ الْكَلْبِيُّ عَنِ الزُّهْرِيِّ.
பாடம் : 46 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: ‘‘மர்யமே! அல்லாஹ் தனது வார்த்தை (யால் பிறக்கப் போகும் குழந்தை)யைக் கொண்டு உமக்கு நற்செய்தி கூறுகின்றான். அவரது பெயர் மர்யமின் மைந்தர் ஈசா மசீஹ் என்பதாகும். அவர் இம்மையிலும் மறுமையிலும் மாண்பு மிக்கவராகவும் (இறைவனுக்கு) நெருக்கமானவர்களில் ஒருவராகவும் விளங்குவார்” என்று வானவர்கள் கூறியதை எண்ணிப் பாருங்கள். அவர் தொட்டில் பருவத்திலும் பேரிள மைப் பருவத்திலும் மக்களிடம் உரையாடு வார். நல்லோர்களில் ஒருவராகவும் திகழ்வார் (என்றும் கூறினர்). (அதற்கு) மர்யம், ‘‘என் இறைவா! எந்த ஆணும் என்னைத் தொடாத நிலையில் எனக்கு எங்ஙனம் குழந்தை பிறக்கும்?” என்று கேட்டார். அதற்கு, ‘‘அப்படித்தான்; தான் நாடுவதை அல்லாஹ் படைப்பான். ஒன்றை அவன் தீர்மானித்துவிட்டால் அ(தைச் செயல்படுத்துவ)தற்கு அவன் சொல்வதெல்லாம் யிஆகு’ என்பதையே. உடனே அது ஆகிவிடும்” என்று (இறைவன்) கூறினான். அவருக்கு எழுத்தையும் ஞானத்தையும் தவ்ராத் மற்றும் இன்ஜீலையும் (அல்லாஹ்) கற்றுக்கொடுப்பான். (3:45லி48) யிநற்செய்தி கூறுகின்றான்’ (3:45) என்பதைக் குறிக்க மூலத்தில் யியுபஷ்ஷிருக்கி’ எனும் சொற்றொடர் ஆளப்பட்டுள்ளது. யியுப்ஷிருக்கி’ (அழுத்தல் குறியின்றி) என்பதற்கும் இதுவே பொருளாகும். இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘அல்மசீஹ்’ என்பதற்கு யிவாய்மையாளர்’ என்பது பொருள். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ‘அல்கஹ்ல்’ (பேரிளம் பருவம்) (3:46) என்பதற்கு, யிபொறுமைசாலி’ என்பது பொருள். ‘அல்அக்மஹ்’ (பிறவியிலேயே கண் பார்வை அற்றவர்) (3:49) என்பதற்கு, பகலில் பார்வை தெரியும்; இரவில் தெரியாது (மாலைக்கண்). மற்றவர்கள் கூறுகிறார்கள்: பிறவிக் குருடர்.
3434. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒட்டகத்தில் பயணிக்கும் பெண்களி லேயே (அரபுப் பெண்களிலேயே) சிறந்த வர்கள் குறைஷிப் பெண்கள்தான். (தம்) குழந்தைகள்மீது அதிகப் பரிவுடையவர்கள்; தம் கணவனின் செல்வத்தை அதிகமாகப் பேணிப் பாதுகாக்கக்கூடியவர்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துவிட்டு, ‘‘இம்ரானின் மகள் மர்யம், ஒட்டகம் எதிலும் பயணம் செய்த தேயில்லை” என்று கூறினார்கள்.117

ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் வழியாக இதே போன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாயம் : 60
3435. حَدَّثَنَا صَدَقَةُ بْنُ الْفَضْلِ، حَدَّثَنَا الْوَلِيدُ، عَنِ الأَوْزَاعِيِّ، قَالَ حَدَّثَنِي عُمَيْرُ بْنُ هَانِئٍ، قَالَ حَدَّثَنِي جُنَادَةُ بْنُ أَبِي أُمَيَّةَ، عَنْ عُبَادَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ شَهِدَ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، وَأَنَّ عِيسَى عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ وَكَلِمَتُهُ، أَلْقَاهَا إِلَى مَرْيَمَ، وَرُوحٌ مِنْهُ، وَالْجَنَّةُ حَقٌّ وَالنَّارُ حَقٌّ، أَدْخَلَهُ اللَّهُ الْجَنَّةَ عَلَى مَا كَانَ مِنَ الْعَمَلِ "". قَالَ الْوَلِيدُ حَدَّثَنِي ابْنُ جَابِرٍ عَنْ عُمَيْرٍ عَنْ جُنَادَةَ وَزَادَ "" مِنْ أَبْوَابِ الْجَنَّةِ الثَّمَانِيَةِ، أَيَّهَا شَاءَ "".
பாடம் : 47 வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்:118 வேதக்காரர்களே! உங்கள் மார்க்க (விஷய)த்தில் நீங்கள் எல்லை மீறாதீர்கள்; அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) சொல்லாதீர்கள். நிச்சயமாக மர்யமின் மைந்தர் மசீஹ் (எனப்படும்) ஈசா, அல்லாஹ்வின் தூதரும் அவனது வார்த்தையும் ஆவார். அதை அவன் மர்யமிடம் போட்டான். (அவர்) அவனிடமிருந்து உருவான உயிரும் ஆவார். எனவே, அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நம்புங்கள். (கடவுள்) மூவர் எனக் கூறாதீர்கள். (அதிலிருந்து) விலகிக்கொள்ளுங்கள். (அதுவே) உங்களுக்கு நல்லது. நிச்சயமாக அல்லாஹ் மட்டுமே ஒரே இறைவன் ஆவான். தனக்குக் குழந்தை இருப்பதைவிட்டு அவன் மிகவும் தூயவன். வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. பொறுப்பாளர்களில் அல்லாஹ் போதுமானவன் ஆவான். (4:171) அபூஉபைத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘அவனது வார்த்தை’ (கலிமத்துஹு) என்பது, யிஆகு’ (குன்) என்ற சொல்லைக் குறிக்கும். உடனே உண்டாகிவிட்டது. மற்றவர்கள் கூறுகிறார்கள்: ‘அவனிடமிருந்து உருவான உயிர்’ (ரூஹும் மின்ஹு) என்றால், அவன் அவருக்கு உயிர் கொடுத்தான்; உயிருள்ள மனிதராக ஆக்கினான் என்று பொருள். (கடவுள்) மூவர் எனக் கூறாதீர்கள். (4:171)
3435. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

‘அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை; அவன் தனித்தவன் அவனுக்கு இணை கிடையாது’ என்றும் யிமுஹம்மத் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்’ என்றும் யிஈசா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்’ என்றும், ‘அல்லாஹ் மர்யமை நோக்கிச் சொன்ன (யிஆகுக!› என்னும்) ஒரு வார்த்தை(யால் பிறந்தவர்)› என்றும், ‘அவனிடமிருந்து உருவான ஓர் உயிர்’ என்றும், யிசொர்க்கம் (இருப்பது) உண்மை தான்’ என்றும், யிநரகம் (இருப்பது) உண்மை தான்’ என்றும், எவர் (சொல்லால் உரைத்து, உள்ளத்தால் நம்பி) உறுதிமொழி கூறுகின்றாரோ அவரை அல்லாஹ் அவருடைய செயல்களுக்கேற்ப சொர்க்கத்தில் புகுத்துவான்.

இதை உபாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இப்னு ஜாபிர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘‘அவரை அல்லாஹ், சொர்க்கத்தின் எட்டு வாசல்களில் தான் விரும்பிய வாசல் வழியாக அனுமதிப்பான்” எனறு கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம் : 60
3436. حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لَمْ يَتَكَلَّمْ فِي الْمَهْدِ إِلاَّ ثَلاَثَةٌ عِيسَى، وَكَانَ فِي بَنِي إِسْرَائِيلَ رَجُلٌ يُقَالُ لَهُ جُرَيْجٌ، كَانَ يُصَلِّي، فَجَاءَتْهُ أُمُّهُ فَدَعَتْهُ، فَقَالَ أُجِيبُهَا أَوْ أُصَلِّي. فَقَالَتِ اللَّهُمَّ لاَ تُمِتْهُ حَتَّى تُرِيَهُ وُجُوهَ الْمُومِسَاتِ. وَكَانَ جُرَيْجٌ فِي صَوْمَعَتِهِ، فَتَعَرَّضَتْ لَهُ امْرَأَةٌ وَكَلَّمَتْهُ فَأَبَى، فَأَتَتْ رَاعِيًا، فَأَمْكَنَتْهُ مِنْ نَفْسِهَا فَوَلَدَتْ غُلاَمًا، فَقَالَتْ مِنْ جُرَيْجٍ. فَأَتَوْهُ فَكَسَرُوا صَوْمَعَتَهُ، وَأَنْزَلُوهُ وَسَبُّوهُ، فَتَوَضَّأَ وَصَلَّى ثُمَّ أَتَى الْغُلاَمَ فَقَالَ مَنْ أَبُوكَ يَا غُلاَمُ قَالَ الرَّاعِي. قَالُوا نَبْنِي صَوْمَعَتَكَ مِنْ ذَهَبٍ. قَالَ لاَ إِلاَّ مِنْ طِينٍ. وَكَانَتِ امْرَأَةٌ تُرْضِعُ ابْنًا لَهَا مِنْ بَنِي إِسْرَائِيلَ، فَمَرَّ بِهَا رَجُلٌ رَاكِبٌ ذُو شَارَةٍ، فَقَالَتِ اللَّهُمَّ اجْعَلِ ابْنِي مِثْلَهُ. فَتَرَكَ ثَدْيَهَا، وَأَقْبَلَ عَلَى الرَّاكِبِ فَقَالَ اللَّهُمَّ لاَ تَجْعَلْنِي مِثْلَهُ. ثُمَّ أَقْبَلَ عَلَى ثَدْيِهَا يَمَصُّهُ ـ قَالَ أَبُو هُرَيْرَةَ كَأَنِّي أَنْظُرُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم يَمَصُّ إِصْبَعَهُ ـ ثُمَّ مُرَّ بِأَمَةٍ فَقَالَتِ اللَّهُمَّ لاَ تَجْعَلِ ابْنِي مِثْلَ هَذِهِ. فَتَرَكَ ثَدْيَهَا فَقَالَ اللَّهُمَّ اجْعَلْنِي مِثْلَهَا. فَقَالَتْ لِمَ ذَاكَ فَقَالَ الرَّاكِبُ جَبَّارٌ مِنَ الْجَبَابِرَةِ، وَهَذِهِ الأَمَةُ يَقُولُونَ سَرَقْتِ زَنَيْتِ. وَلَمْ تَفْعَلْ "".
பாடம் : 48 (அல்லாஹ் கூறுகின்றான்:) மேலும், (நபியே!) மர்யமைப் பற்றி இந்த வேதத்தில் (உள்ளதை) நீர் எடுத்துரைப்பீராக! அவர் தம்முடைய குடும்பத்தாரைவிட்டு விலகி கிழக்குப் பக்கமாக ஒதுங்கியிருந்த நேரத்தில் அவர் ஒரு திரையிட்டு அவர்களிலிருந்து மறைந்திருந்தார். (அப்போது) நாம் அவரிடம் நம்முடைய ரூஹை (வானவரை) அனுப்பினோம். அவர் மர்யமின் முன் னிலையில் முழு மனித உருவில் தோன்றி னார். உடனே மர்யம் கூறினார்: ‘‘உம்மை விட்டுக் கருணைமிக்க இறைவனிடம் நான் பாதுகாப்புக் கோருகின்றேன், நீர் இறையச்சம் உள்ளவராயின்” அதற்கு அவர் கூறினார்: ‘‘நான் உம் இறைவனின் தூதராவேன்: தூய்மையான ஓர் ஆண் குழந்தையை உமக்கு வழங்குவதற்காக நான் அனுப்பப்பட்டுள்ளேன்.” மர்யம் கூறினார்: ‘‘எனக்கு எவ்வாறு ஆண் குழந்தை பிறக்கும்? என்னை எந்த மனிதனும் தீண்டவில்லையே; நான் தீய நடத்தையுடையவளும் அல்லவே!” அதற்கு வானவர் கூறினார்: ‘‘அவ்வாறே நிகழும்.” உம் இறைவன் கூறுகின்றான்: அவ்வாறு செய்வது எனக்கு மிகவும் எளிதானது; மேலும், நாம் அக்குழந்தையை மக்களுக்கு ஒரு சான்றாகவும் நம்மிடமிருந்து ஒரு கருணையாகவும் ஆக்குவதற் காகவே இவ்வாறு செய்கின்றோம். மேலும் அது நடந்தே தீரும்” (19:16லி21) யிவிலகியிருந்தோர்’ (இஅதஸலத்) லிஒதுங்கி தனிமையில் இருந்தார்; கிழக்குப் பக்கம் (ஷர்கீ)லி கிழக்கை ஒட்டிய ஓரிடத்தில். (19:16) ‘அவரைக் கொண்டுசென்றது’ (அஜாஅஹா) லி அவரை வலுக்கட்டாயமாகக் கொண்டுசென்றது (19:23). இது யிஜாஅ’ என்பதன் ‘அஃப்அல’ வாய்பாட்டில் வந்தது. துசாகித் (அல்லது தஸ்ஸாகத்) விழும்; சொரியும். யிகஸிய்யு லி தொலைவான (காஸியன்) இடத்தில் (19:22). யிஃபரிய்யு’ (பயங்கரமான) லி மிகப்பெரிய காரியம். 19:27) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: யிநஸ்யன்’ (மறக்கப்பட்ட) லி எப்பொரு ளாகவும் இல்லாமல் (19:23). மற்றவர்கள், ‘அற்பமான பொருளாக’ என்று இதற்கு அர்த்தம் கூறுகிறார்கள். அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்: ‘நீர் இறையச்சமுடையவராக இருந்தால்’ (19:18) என்று மர்யம் (அலை) அவர்கள் சொல்லக் காரணம், இறையச்சம் உள்ளவர் சுயக்கட்டுப்பாடு உள்ளவராக இருப்பார் என அவர் அறிந்திருந்ததுதான். பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறினார்கள்: யிசரிய்யு’ (ஊற்று) என்பது யிசிரியாக்’ மொழியில் சிற்றாற்றைக் குறிக்கும்.
3436. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

மூன்று பேரைத் தவிர வேறெவரும் தொட்டிலில் (குழந்தையாக இருக்கும்போது) பேசியதில்லை. (ஒருவர்) ஈசா (அலை) அவர்கள். (மற்றொருவர்) இஸ்ரவேலர்களால் யிஜுரைஜ்’ என்றழைக்கப்பட்டுவந்த (நல்ல) மனிதர் ஒருவர். (ஒருமுறை) அவர் தொழுதுகொண்டிருந்தார். அப்போது அவருடைய தாயார் வந்து அவரை அழைத்தார். ஜுரைஜ் (தம் மனத்திற்குள்) ‘‘அவருக்கு நான் பதிலளிப்பதா? தொழுவதா?” என்று கூறிக்கொண்டார். (பதிலளிக்கவில்லை.) அதனால் கோபமடைந்த அவரின் தாய், ‘‘இறைவா! இவனை விபசாரிகளின் முகங்களில் விழிக்கச்செய்யாமல் மரணிக்கச்செய்யாதே!” என்று கூறிவிட்டார்.

(ஒருமுறை) ஜுரைஜ் தமது ஆசிரமத்தில் இருந்தபோது அவரிடம் ஒரு பெண் வந்து (தன்னுடன் தகாத உறவு கொள்ளும்படி அழைத்துப்) பேசினாள். அதற்கு அவர் மறுத்துவிட்டார். ஆகவே, (அவள் அவரைப் பழிவாங்குவதற்காக) ஓர் ஆட்டு இடையனிடம் சென்று அவனைத் தன் வசப்படுத்தி (அவனுடன் விபசாரம் புரிந்து) ஒரு குழந்தையைப் பெற்றெடுத் தாள். பிறகு யிஇது ஜுரைஜுக்குப் பிறந்தது’ என்று (மக்களிடம்) சொன்னாள்.

உடனே மக்கள் ஜுரைஜிடம் சென்று அவரது ஆசிரமத்தை இடித்து அவரைக் கீழே இறங்கிவரச்செய்து அவரை ஏசினார்கள். உடனே ஜுரைஜ் அங்கத் தூய்மை செய்து தொழுதுவிட்டு, பின்னர் அந்தக் குழந்தையிடம் சென்று, ‘‘குழந்தையே! உன் தந்தை யார்?” என்று கேட்டார். அக்குழந்தை, ‘‘(இன்ன) இடையன்” என்று பேசியது.

அதைக் கண்டு (உண்மையை உணர்ந்துகொண்ட) அந்த மக்கள், ‘‘தங்கள் ஆசிரமத்தை நாங்கள் தங்கத்தால் கட்டித் தருகிறோம்” என்று கூறினார்கள். அதற்கு அவர், ‘‘இல்லை, களிமண்ணால் கட்டித் தந்தாலே போதும்” என்று கூறிவிட்டார்.

(மூன்றாமவர்) இஸ்ரவேலர்களில் ஒரு பெண் தன் மகன் ஒருவனுக்குப் பால் கொடுத்துக்கொண்டிருந்தாள். அப்போது அழகும் பொலிவும் மிக்க ஒரு மனிதன் வாகனத்தில் ஏறிச் சென்றுகொண்டிருந்தான். உடனே அவள், ‘‘இறைவா! என் மகனை இவனைப் போல் ஆக்குவாயாக!” என்று துஆ செய்தாள். உடனே அந்தக் குழந்தை அவளது மார்பை விட்டுவிட்டு சவாரி செய்பவனை நோக்கி, ‘‘இறைவா! இவனைப் போல் என்னை ஆக்கிவிடாதே” என்று கூறியது.

பிறகு அவளது மார்பை நோக்கிப் பால் குடிக்கச் சென்றது. லிஇந்த இடத்தில் நபி (ஸல்) அவர்கள் தம் விரலை உறிஞ்சுவது போல் தெரிந்ததுலி பிறகு அக் குழந்தை ஓர் அடிமைப் பெண்ணுக்கு அருகில் கொண்டு செல்லப்பட்டது. அப்போது அந்தப் பெண், ‘‘இறைவா! என் மகனை இவளைப்போல் ஆக்கிவிடாதே” என்று கூறினாள். உடனே அக்குழந்தை அவளது மார்பை விட்டுவிட்டு, ‘‘இறைவா! என்னை இவளைப் போல் ஆக்குவாயாக!” என்று கூறியது. அந்தப் பெண் (வியப்படைந்து), ‘‘ஏன் இப்படிச் சொல்கிறாய்?” என்று கேட்டதற்கு அக்குழந்தை, ‘‘வாகனத்தில் ஏறிச் சென்றவன் கொடுங் கோலர்களில் ஒருவன்; இந்த அடிமைப் பெண்ணைக் குறித்து மக்கள் (அவதூறாக) ‘நீ திருடிவிட்டாய்; விபசாரம் செய்து விட்டாய்’ என்று கூறுகிறார்கள். ஆனால், இவள் அப்படி எதுவும் செய்யவில்லை” என்று பதிலளித்தது.119


அத்தியாயம் : 60
3437. حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامٌ، عَنْ مَعْمَرٍ،. حَدَّثَنِي مَحْمُودٌ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لَيْلَةَ أُسْرِيَ بِهِ لَقِيتُ مُوسَى ـ قَالَ فَنَعَتَهُ ـ فَإِذَا رَجُلٌ ـ حَسِبْتُهُ قَالَ ـ مُضْطَرِبٌ رَجِلُ الرَّأْسِ، كَأَنَّهُ مِنْ رِجَالِ شَنُوءَةَ ـ قَالَ ـ وَلَقِيتُ عِيسَى ـ فَنَعَتَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ ـ رَبْعَةٌ أَحْمَرُ كَأَنَّمَا خَرَجَ مِنْ دِيمَاسٍ ـ يَعْنِي الْحَمَّامَ ـ وَرَأَيْتُ إِبْرَاهِيمَ، وَأَنَا أَشْبَهُ وَلَدِهِ بِهِ ـ قَالَ ـ وَأُتِيتُ بِإِنَاءَيْنِ أَحَدُهُمَا لَبَنٌ وَالآخَرُ فِيهِ خَمْرٌ، فَقِيلَ لِي خُذْ أَيَّهُمَا شِئْتَ. فَأَخَذْتُ اللَّبَنَ فَشَرِبْتُهُ، فَقِيلَ لِي هُدِيتَ الْفِطْرَةَ، أَوْ أَصَبْتَ الْفِطْرَةَ، أَمَا إِنَّكَ لَوْ أَخَذْتَ الْخَمْرَ غَوَتْ أُمَّتُكَ "".
பாடம் : 48 (அல்லாஹ் கூறுகின்றான்:) மேலும், (நபியே!) மர்யமைப் பற்றி இந்த வேதத்தில் (உள்ளதை) நீர் எடுத்துரைப்பீராக! அவர் தம்முடைய குடும்பத்தாரைவிட்டு விலகி கிழக்குப் பக்கமாக ஒதுங்கியிருந்த நேரத்தில் அவர் ஒரு திரையிட்டு அவர்களிலிருந்து மறைந்திருந்தார். (அப்போது) நாம் அவரிடம் நம்முடைய ரூஹை (வானவரை) அனுப்பினோம். அவர் மர்யமின் முன் னிலையில் முழு மனித உருவில் தோன்றி னார். உடனே மர்யம் கூறினார்: ‘‘உம்மை விட்டுக் கருணைமிக்க இறைவனிடம் நான் பாதுகாப்புக் கோருகின்றேன், நீர் இறையச்சம் உள்ளவராயின்” அதற்கு அவர் கூறினார்: ‘‘நான் உம் இறைவனின் தூதராவேன்: தூய்மையான ஓர் ஆண் குழந்தையை உமக்கு வழங்குவதற்காக நான் அனுப்பப்பட்டுள்ளேன்.” மர்யம் கூறினார்: ‘‘எனக்கு எவ்வாறு ஆண் குழந்தை பிறக்கும்? என்னை எந்த மனிதனும் தீண்டவில்லையே; நான் தீய நடத்தையுடையவளும் அல்லவே!” அதற்கு வானவர் கூறினார்: ‘‘அவ்வாறே நிகழும்.” உம் இறைவன் கூறுகின்றான்: அவ்வாறு செய்வது எனக்கு மிகவும் எளிதானது; மேலும், நாம் அக்குழந்தையை மக்களுக்கு ஒரு சான்றாகவும் நம்மிடமிருந்து ஒரு கருணையாகவும் ஆக்குவதற் காகவே இவ்வாறு செய்கின்றோம். மேலும் அது நடந்தே தீரும்” (19:16லி21) யிவிலகியிருந்தோர்’ (இஅதஸலத்) லிஒதுங்கி தனிமையில் இருந்தார்; கிழக்குப் பக்கம் (ஷர்கீ)லி கிழக்கை ஒட்டிய ஓரிடத்தில். (19:16) ‘அவரைக் கொண்டுசென்றது’ (அஜாஅஹா) லி அவரை வலுக்கட்டாயமாகக் கொண்டுசென்றது (19:23). இது யிஜாஅ’ என்பதன் ‘அஃப்அல’ வாய்பாட்டில் வந்தது. துசாகித் (அல்லது தஸ்ஸாகத்) விழும்; சொரியும். யிகஸிய்யு லி தொலைவான (காஸியன்) இடத்தில் (19:22). யிஃபரிய்யு’ (பயங்கரமான) லி மிகப்பெரிய காரியம். 19:27) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: யிநஸ்யன்’ (மறக்கப்பட்ட) லி எப்பொரு ளாகவும் இல்லாமல் (19:23). மற்றவர்கள், ‘அற்பமான பொருளாக’ என்று இதற்கு அர்த்தம் கூறுகிறார்கள். அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்: ‘நீர் இறையச்சமுடையவராக இருந்தால்’ (19:18) என்று மர்யம் (அலை) அவர்கள் சொல்லக் காரணம், இறையச்சம் உள்ளவர் சுயக்கட்டுப்பாடு உள்ளவராக இருப்பார் என அவர் அறிந்திருந்ததுதான். பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறினார்கள்: யிசரிய்யு’ (ஊற்று) என்பது யிசிரியாக்’ மொழியில் சிற்றாற்றைக் குறிக்கும்.
3437. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், (விண்) பயணத் திற்காகத் தாம் கொண்டுசெல்லப்பட்ட இரவில் நடந்தவற்றை விவரித்துக் கூறிய படி, ‘‘நான் மூசா (அலை) அவர்களைச் சந்தித்தேன்” என்று கூறிவிட்டு, அவர் (களின் அங்க அடையாளங்)களை வர்ணித்தார்கள். (அப்போது சொன்னார் கள்:)

மூசா (அலை) அவர்கள் (யமன் நாட்டைச் சேர்ந்த) ‘ஷனூஆ’ குலத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவரைப் போல ஒல்லியான (சதை குறைந்த)வராக, தலைமுடி தொங்கலாக (வாரி)விட்டிருப்பவராக இருந்தார்கள்.

(தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள்) ‘‘நான் ஈசா (அலை) அவர்களைச் சந்தித் தேன்” என்று கூறிவிட்டு, அவர்(களின் அங்க அடையாளங்)களை வர்ணித்தார்கள்: சிவப்பு நிறமுடையவர்களாக, நடுத்தர உயரம் உடையவர்களாக, (அப்போதுதான்) குளியலறை’லிருந்து வெளியே வந்தவர்களைப்போல் அவர்கள் இருந்தார்கள்.

மேலும், நான் இப்ராஹீம் (அலை) அவர்களையும் பார்த்தேன். நான்தான் அவர்களுடைய வழித் தோன்றல்களிலேயே (தோற்றத்தில்) அவர்களுக்கு மிகவும் ஒப்பானவனாக இருக்கிறேன்.

என்னிடம் இரு பாத்திரங்கள் கொண்டுவரப்பட்டன. அவற்றில் ஒன்றில் பாலும் மற்றொன்றில் மதுவும் இருந்தது. ‘‘நீங்கள் விரும்பியதை எடுத்துக்கொள்ளுங்கள்” என்று என்னிடம் சொல்லப்பட்டது. நான் பாலை எடுத்து அதைப் பருகினேன். அப்போது, ‘‘நீங்கள் இயற்கையான வழியில் செலுத்தப்பட்டுவிட்டீர்கள். அல்லது நீங்கள் இயற்கையைப் பெற்றுக் கொண்டீர்கள்” என்று என்னிடம் சொல்லப் பட்டது. ‘‘நீங்கள் மதுவை எடுத்துக் கொண்டிருந்தால் உங்கள் சமுதாயம் வழி தவறிப்போயிருக்கும்” என்றும் சொல்லப் பட்டது.120

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 60