3182. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ، عَنْ أَبِيهِ، حَدَّثَنَا حَبِيبُ بْنُ أَبِي ثَابِتٍ، قَالَ حَدَّثَنِي أَبُو وَائِلٍ، قَالَ كُنَّا بِصِفِّينَ فَقَامَ سَهْلُ بْنُ حُنَيْفٍ فَقَالَ أَيُّهَا النَّاسُ اتَّهِمُوا أَنْفُسَكُمْ فَإِنَّا كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ الْحُدَيْبِيَةِ، وَلَوْ نَرَى قِتَالاً لَقَاتَلْنَا، فَجَاءَ عُمَرُ بْنُ الْخَطَّابِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، أَلَسْنَا عَلَى الْحَقِّ وَهُمْ عَلَى الْبَاطِلِ فَقَالَ "" بَلَى "". فَقَالَ أَلَيْسَ قَتْلاَنَا فِي الْجَنَّةِ وَقَتْلاَهُمْ فِي النَّارِ قَالَ "" بَلَى "". قَالَ فَعَلَى مَا نُعْطِي الدَّنِيَّةَ فِي دِينِنَا أَنَرْجِعُ وَلَمَّا يَحْكُمِ اللَّهُ بَيْنَنَا وَبَيْنَهُمْ فَقَالَ "" ابْنَ الْخَطَّابِ، إِنِّي رَسُولُ اللَّهِ، وَلَنْ يُضَيِّعَنِي اللَّهُ أَبَدًا "". فَانْطَلَقَ عُمَرُ إِلَى أَبِي بَكْرٍ فَقَالَ لَهُ مِثْلَ مَا قَالَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ إِنَّهُ رَسُولُ اللَّهِ، وَلَنْ يُضَيِّعَهُ اللَّهُ أَبَدًا. فَنَزَلَتْ سُورَةُ الْفَتْحِ، فَقَرَأَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى عُمَرَ إِلَى آخِرِهَا. فَقَالَ عُمَرُ يَا رَسُولَ اللَّهِ، أَوَفَتْحٌ هُوَ قَالَ "" نَعَمْ "".
பாடம் : 18
3182. அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ஸிஃப்பீன் (போரில்) இருந் தோம். அப்போது சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் எழுந்து நின்று சொன்னார் கள்: மக்களே! (யாரையும் போரில் கலந்து கொள்ளாததற்காகக் குற்றம்சாட்டாதீர்கள்.) உங்களை நீங்களே குற்றம் சாட்டிக் கொள்ளுங்கள். ஏனெனில், நாங்கள் ஹுதைபியா உடன்படிக்கையின்போது நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். போர் புரிவது உசிதமானதென்று நாங்கள் கருதியிருந்தால் போர் புரிந்திருப்போம். (ஆனால், போர் புரியாமல் அவர்கள் விதித்த நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டோம்.)

அப்போது உமர் (ரலி) அவர்கள் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! நாம் சத்தியத்திலும் அவர்கள் அசத்தியத்திலும் இல்லையா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம் (நாம் சத்தியத்தில் இருக்கின்றோம்; அவர்கள் அசத்தியத்தில் இருக்கின்றனர்)” என்று பதிலளித்தார்கள். உமர் (ரலி) அவர்கள், ‘‘போரில் கொலை யுண்டுவிடும்போது நம் வீரர்கள் சொர்க்கத் திலும் அவர்களுடைய வீரர்கள் நரகத்தி லும் இருப்பார்கள் இல்லையா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம்” என்று பதிலளித்தார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், ‘‘அப்படியிருக்க, நாம் ஏன் நமது மார்க்க விஷயத்தில் பணிந்து போக வேண்டும்? அல்லாஹ் நமக்கும் அவர்களுக்குமிடையே தீர்ப்பளிக்காமலிருக்கும் நிலையில் நாம் திரும்பிவிடுவதா?” என்று கேட்டார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘கத்தாபின் மகனே! நான் அல்லாஹ்வுடைய தூதராவேன். என்னை அல்லாஹ் ஒரு போதும் வீணாக்கமாட்டான்” என்று பதிலளித்தார்கள். உமர் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று நபி (ஸல்) அவர்களிடம் தாம் சொன்னதைப் போன்றே சொன்னார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘அவர்கள் அல்லாஹ்வின் தூதர். அவர்களை அல்லாஹ் ஒருபோதும் வீணாக்கமாட்டான்” என்று கூறினார்கள்.

அப்போது (யிஉமக்கு நாம் பகிரங்கமான வெற்றியை அளித்துவிட்டோம்’ என்று தொடங்கும்) ‘அல்ஃபத்ஹ்’ எனும் (48ஆவது) அத்தியாயம் அருளப்பட்டது. அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உமருக்கு இறுதிவரை ஓதிக்காட்டினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! வெற்றியா அது?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம் (வெற்றிதான்)” என்று பதிலளித் தார்கள்.37


அத்தியாயம் : 58
3183. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا حَاتِمٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَسْمَاءَ ابْنَةِ أَبِي بَكْرٍ ـ رضى الله عنهما ـ قَالَتْ قَدِمَتْ عَلَىَّ أُمِّي وَهْىَ مُشْرِكَةٌ فِي عَهْدِ قُرَيْشٍ، إِذْ عَاهَدُوا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَمُدَّتِهِمْ، مَعَ أَبِيهَا، فَاسْتَفْتَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أُمِّي قَدِمَتْ عَلَىَّ، وَهْىَ رَاغِبَةٌ، أَفَأَصِلُهَا قَالَ "" نَعَمْ، صِلِيهَا "".
பாடம் : 18
3183. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

குறைஷியர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒப்பந்தம் செய்தி ருந்த (ஹுதைபியா உடன்படிக்கையின்) காலகட்டத்தில் என் தாயார் இணைவைப்ப வராக தன் தந்தையுடன் (என் பாட்ட னாருடன்) என்னிடம் வந்திருந்தார்கள். ஆகவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தீர்ப்புக் கோரியவளாக, ‘‘அல்லாஹ்வின் தூதரே! என் தாயார் என்னிடம் ஆசையோடு வந்திருக்கிறார். நான் அவரது உறவைப் பேணி நடந்து கொள்ளலாமா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அவரது உறவைப் பேணி நடந்துகொள்” என்று கூறினார்கள்.38

அத்தியாயம் : 58
3184. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُثْمَانَ بْنِ حَكِيمٍ، حَدَّثَنَا شُرَيْحُ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يُوسُفَ بْنِ أَبِي إِسْحَاقَ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ حَدَّثَنِي الْبَرَاءُ ـ رضى الله عنه أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَمَّا أَرَادَ أَنْ يَعْتَمِرَ أَرْسَلَ إِلَى أَهْلِ مَكَّةَ يَسْتَأْذِنُهُمْ لِيَدْخُلَ مَكَّةَ، فَاشْتَرَطُوا عَلَيْهِ أَنْ لاَ يُقِيمَ بِهَا إِلاَّ ثَلاَثَ لَيَالٍ، وَلاَ يَدْخُلَهَا إِلاَّ بِجُلُبَّانِ السِّلاَحِ، وَلاَ يَدْعُوَ مِنْهُمْ أَحَدًا، قَالَ فَأَخَذَ يَكْتُبُ الشَّرْطَ بَيْنَهُمْ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ، فَكَتَبَ هَذَا مَا قَاضَى عَلَيْهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ. فَقَالُوا لَوْ عَلِمْنَا أَنَّكَ رَسُولُ اللَّهِ لَمْ نَمْنَعْكَ وَلَبَايَعْنَاكَ، وَلَكِنِ اكْتُبْ هَذَا مَا قَاضَى عَلَيْهِ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ. فَقَالَ "" أَنَا وَاللَّهِ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ وَأَنَا وَاللَّهِ رَسُولُ اللَّهِ "". قَالَ وَكَانَ لاَ يَكْتُبُ قَالَ فَقَالَ لِعَلِيٍّ "" امْحُ رَسُولَ اللَّهِ "". فَقَالَ عَلِيٌّ وَاللَّهِ لاَ أَمْحَاهُ أَبَدًا. قَالَ "" فَأَرِنِيهِ "". قَالَ فَأَرَاهُ إِيَّاهُ، فَمَحَاهُ النَّبِيُّ صلى الله عليه وسلم بِيَدِهِ، فَلَمَّا دَخَلَ وَمَضَى الأَيَّامُ أَتَوْا عَلِيًّا فَقَالُوا مُرْ صَاحِبَكَ فَلْيَرْتَحِلْ. فَذَكَرَ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ "" نَعَمْ "" ثُمَّ ارْتَحَلَ.
பாடம் : 19 மூன்று நாட்களுக்காகவோ அல்லது குறிப்பிட்ட ஒரு காலத்திற்காகவோ (இணைவைப்பாளர்களுடன்) சமாதான ஒப்பந்தம் செய்து கொள்வது
3184. பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஹுதைபியா ஆண்டில்) நபி (ஸல்) அவர்கள் உம்ரா செய்ய நாடியபோது மக்காவாசிகளிடம் ஆளனுப்பி மக்கா வினுள் நுழைய அனுமதி கேட்டார்கள். அவர்கள் (அடுத்த ஆண்டு உம்ரா செய்ய வரலாம் என்றும்) மூன்று நாட்களுக்கு மேல் அங்கு தங்கக் கூடாது என்றும் ஆயுதங்களை உறைகளில் இட்டபடிதான் நுழைய வேண்டும் என்றும் அவர்களில் எவரையும் (தமது மார்க்கத்தை ஏற்கும்படி) அழைக்கக் கூடாது என்றும் நிபந்தனையிட்டனர்.

அவர்கள் இருவருக்குமிடையிலான (ஒப்பந்த) விதிகளை அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் எழுதலானார்கள். அப்போது அவர்கள், ‘‘இது அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் செய்துகொண்ட சமாதான ஒப்பந்தமாகும்” என்று எழுதினார்கள். மக்காவாசிகள், ‘‘நீங்கள் அல்லாஹ்வின் தூதர்தான் என்று நாங்கள் நம்பியிருந்தால் உங்களை (மக்கா வினுள் நுழைய விடாமல்) தடை செய்திருக்கமாட்டோம். மேலும், உங்களை நாங்கள் (ஏற்றுக்கொண்டு) பின்பற்றவும் செய்திருப்போம். மாறாக, யிஇது அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத் செய்துகொண்ட சமாதான ஒப்பந்தம்’ என எழுதுங்கள்” என்று கூறினர்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதுதான். மேலும், அல்லாஹ் வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதரும் ஆவேன்” என்று கூறினார்கள். ஆனால், நபி (ஸல்) அவர்கள் எழுதத் தெரியாதவர்களாக இருந்தார்கள். ஆகவே, அலீ (ரலி) அவர்களிடம், ‘அல்லாஹ் வின் தூதர் எனும் சொல்லை அழித்துவிடுங்கள்’ என்று உத்தரவிட்டார்கள். அலீ (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதை ஒருபோதும் அழிக்கமாட்டேன்” என்று மறுத்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியானால் அ(ந்தச் சொல் இருக்கும் இடத்)தை எனக்குக் காட்டுங்கள்” என்று கேட்டார்கள். அலீ (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு அதைக் காட்டினார்கள். நபி (ஸல்) அவர்கள் அதைத் தம் கரத்தால் அழித்தார்கள்.

பின்பு (அடுத்த ஆண்டு), நபி (ஸல்) அவர்கள் (உம்ராவிற்காக) மக்காவிற்குள் நுழைந்து மூன்று நாட்கள் கழிந்தவுடன் மக்காவாசிகள் அலீ (ரலி) அவர்களிடம் வந்து, ‘‘உங்கள் தோழரை (மக்காவைவிட்டுப்) புறப்படும்படி கூறுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்கள். உடனே, அலீ (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அதைத் தெரிவித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம் (புறப்பட வேண்டியதுதான்)” என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்கள்.39

அத்தியாயம் : 58
3185. حَدَّثَنَا عَبْدَانُ بْنُ عُثْمَانَ، قَالَ أَخْبَرَنِي أَبِي، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ بَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم سَاجِدٌ وَحَوْلَهُ نَاسٌ مِنْ قُرَيْشٍ مِنَ الْمُشْرِكِينَ إِذْ جَاءَ عُقْبَةُ بْنُ أَبِي مُعَيْطٍ بِسَلَى جَزُورٍ، فَقَذَفَهُ عَلَى ظَهْرِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمْ يَرْفَعْ رَأْسَهُ حَتَّى جَاءَتْ فَاطِمَةُ ـ عَلَيْهَا السَّلاَمُ ـ فَأَخَذَتْ مِنْ ظَهْرِهِ، وَدَعَتْ عَلَى مَنْ صَنَعَ ذَلِكَ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" اللَّهُمَّ عَلَيْكَ الْمَلأَ مِنْ قُرَيْشٍ، اللَّهُمَّ عَلَيْكَ أَبَا جَهْلِ بْنَ هِشَامٍ، وَعُتْبَةَ بْنَ رَبِيعَةَ، وَشَيْبَةَ بْنَ رَبِيعَةَ، وَعُقْبَةَ بْنَ أَبِي مُعَيْطٍ، وَأُمَيَّةَ بْنَ خَلَفٍ ـ أَوْ أُبَىَّ بْنَ خَلَفٍ "". فَلَقَدْ رَأَيْتُهُمْ قُتِلُوا يَوْمَ بَدْرٍ، فَأُلْقُوا فِي بِئْرٍ، غَيْرَ أُمَيَّةَ أَوْ أُبَىٍّ، فَإِنَّهُ كَانَ رَجُلاً ضَخْمًا، فَلَمَّا جَرُّوهُ تَقَطَّعَتْ أَوْصَالُهُ قَبْلَ أَنْ يُلْقَى فِي الْبِئْرِ.
பாடம் : 20 காலம் குறிக்காமல் (போர் நிறுத்த) ஒப்பந்தம் செய்துகொள்வது நபி (ஸல்) அவர்கள் (கைபர் யூதர்களி டம்) கூறினார்கள்: அல்லாஹ் உங்களை எதுவரை இங்கு தங்க அனுமதிக்கிறானோ அதுவரை நானும் அனுமதிப்பேன்.40 பாடம் : 21 இணைவைப்பாளர்களின் சடலங் களைக் கிணற்றில் வீசுவதும், (அவர்களுடைய குடும்பத்தார் அவர்களை எடுத்துச்செல்ல விரும்பினால்) அவர்களுக்காகக் கட்டணம் எது வும் வசூலிக்கப்படமாட்டாது என்பதும்
3185. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருமுறை (கஅபா அருகே) நபி (ஸல்) அவர்கள் (தொழுது) சிரவணக்கம் (ஸஜ்தா) செய்துகொண்டிருக்க, அவர்களைச் சுற்றிலும் குறைஷி இணைவைப்பாளர்கள் இருந்தனர். அப்போது (குறைஷித் தலைவன்) உக்பா பின் அபீமுஐத், நபி (ஸல்) அவர்களை நோக்கி ஒட்டகத்தின் (கர்ப்பத்திலுள்ள) குட்டியை மூடியிருக்கும் சவ்வைக் கொண்டுவந்து, அதை நபி (ஸல்) அவர்களுடைய முதுகின் மீது எறிந்துவிட்டான்.

நபி (ஸல்) அவர்கள், ஃபாத்திமா (ரலி) அவர்கள் வரும்வரை (ஸஜ்தாவிலிருந்து) தமது தலையை உயர்த்தவில்லை. ஃபாத்திமா (ரலி) அவர்கள் வந்தவுடன் (அந்தக் கழிவை) நபி (ஸல்) அவர்களின் முதுகி லிருந்து அகற்றிவிட்டார்கள். மேலும், அதைச் செய்தவனுக்கெதிராகப் பிரார்த் தனை செய்தார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘இறைவா! குறைஷியரில் முக்கியப் பிரமுகர்களை நீ கவனித்துக்கொள்வாயாக!. இறைவா! அபூஜஹ்ல் பின் ஹிஷாம், உத்பா பின் ரபீஆ, ஷைபா பின் ரபீஆ, உக்பா பின் அபீமுஐத், உமய்யா பின் கலஃப் லிஅல்லது உபை பின் கலஃப்லி ஆகியோரை நீ கவனித்துக்கொள்வாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

நான் இவர்களையெல்லாம் பத்ர் போரில் கொல்லப்பட்டுக் கிணற்றில் போடப்பட்டிருக்கக் கண்டேன்; உமய்யா வைத் தவிர லிஅல்லது உபையைத் தவிர. ஏனெனில், அவர் பருமனான மனிதனாக இருந்தார்லி அவரை அவர்கள் (முஸ்லிம் வீரர்கள்) இழுத்துச் சென்றபோது அவர் கிணற்றில் போடப்படுவதற்கு முன்பே அவருடைய மூட்டுகள் துண்டாகி (தனித் தனியாகக் கழன்று)விட்டன.41

அத்தியாயம் : 58
3186. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ.وَعَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لِكُلِّ غَادِرٍ لِوَاءٌ يَوْمَ الْقِيَامَةِ ـ قَالَ أَحَدُهُمَا يُنْصَبُ وَقَالَ الآخَرُ ـ يُرَى يَوْمَ الْقِيَامَةِ يُعْرَفُ بِهِ "".
பாடம் : 22 நல்லோர், கெட்டோர் யாருக்கும் மோசடி செய்வதன் பாவம்
3186. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மோசடி செய்பவன் ஒவ்வொருவனுக்கும் மறுமை நாளில் (அடையாளக்) கொடி ஒன்று உண்டு.

இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), அனஸ் (ரலி) ஆகியோர் அறிவிக் கின்றனர்.

அறிவிப்பாளர்களில் ஒருவர், ‘‘நடப்படு கின்ற கொடி ஒன்று உண்டு” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார். மற்றொருவர், ‘‘அது மறுமை நாளில் காட்டப்படும். அதைக் கொண்டு அந்த மோசடிக்காரன் அடையாளம் காணப்படு வான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்.




அத்தியாயம் : 58
3188. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" لِكُلِّ غَادِرٍ لِوَاءٌ يُنْصَبُ لِغَدْرَتِهِ "".
பாடம் : 22 நல்லோர், கெட்டோர் யாருக்கும் மோசடி செய்வதன் பாவம்
3188. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

மோசடி செய்பவன் ஒவ்வொரு வனுக்கும் ஒரு கொடி உண்டு. (உலகில்) அவன் செய்த மோசடி(யை வெளிச்ச மிட்டு)க்(காட்டுவதற்)காக மறுமை நாளில் அது நடப்படும்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறர்கள்.


அத்தியாயம் : 58
3189. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ فَتْحِ مَكَّةَ "" لاَ هِجْرَةَ وَلَكِنْ جِهَادٌ وَنِيَّةٌ، وَإِذَا اسْتُنْفِرْتُمْ فَانْفِرُوا "". وَقَالَ يَوْمَ فَتْحِ مَكَّةَ "" إِنَّ هَذَا الْبَلَدَ حَرَّمَهُ اللَّهُ يَوْمَ خَلَقَ السَّمَوَاتِ وَالأَرْضَ، فَهْوَ حَرَامٌ بِحُرْمَةِ اللَّهِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ، وَإِنَّهُ لَمْ يَحِلَّ الْقِتَالُ فِيهِ لأَحَدٍ قَبْلِي، وَلَمْ يَحِلَّ لِي إِلاَّ سَاعَةً مِنْ نَهَارٍ، فَهْوَ حَرَامٌ بِحُرْمَةِ اللَّهِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ، لاَ يُعْضَدُ شَوْكُهُ، وَلاَ يُنَفَّرُ صَيْدُهُ، وَلاَ يَلْتَقِطُ لُقَطَتَهُ إِلاَّ مَنْ عَرَّفَهَا، وَلاَ يُخْتَلَى خَلاَهُ "". فَقَالَ الْعَبَّاسُ يَا رَسُولَ اللَّهِ إِلاَّ الإِذْخِرَ، فَإِنَّهُ لِقَيْنِهِمْ وَلِبُيُوتِهِمْ. قَالَ "" إِلاَّ الإِذْخِرَ "".
பாடம் : 22 நல்லோர், கெட்டோர் யாருக்கும் மோசடி செய்வதன் பாவம்
3189. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது, ‘‘இனி (மக்கா விலிருந்து) புலம்பெயர்தல் (ஹிஜ்ரத்) என்பது கிடையாது. ஆயினும், அறப்போர் புரிவதும் (அதற்காகவும் பிற நற்செயல்கள் புரியவும்) நாட்டம் கொள்வதும்தான் உள்ளது. நீங்கள் போருக்குப் புறப்படும்படி அழைக்கப்பட்டால் போருக்குச் செல்லுங்கள்” என்று கூறினார்கள்.

மேலும், மக்கா வெற்றியின்போது, ‘‘(மக்களே!) வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதலாய் இந்த நகரத்தை அல்லாஹ் புனிதமாக்கியுள்ளான். அல்லாஹ் புனிதமாக்கிய காரணத்தால் இது மறுமை நாள்வரை புனிதமான தாகவே இருக்கும். எனக்கு முன்னர் வாழ்ந்த யாருக்கும் இங்கு போர் புரிய அனுமதி தரப்படவில்லை. எனக்கும்கூட (மக்கா வெற்றியின்போது) பகலின் சிறிது நேரத்தில் மட்டுமே (இங்கு போர் புரிய) அனுமதி வழங்கப்பட்டது. அல்லாஹ் இந்த நகரத்தைப் புனிதப் படுத்தியுள்ள காரணத்தால் இது மறுமை நாள்வரை புனிதமானதாகவே திகழும்.

அதன் முட்கள் பிடுங்கப்படக் கூடாது. அதன் வேட்டைப் பிராணியை விரட்டக் கூடாது. அங்கு கீழே விழுந்து கிடக்கும் பொருளை, அதை அறிவிப்புச் செய்பவர் தவிர வேறெவரும் எடுக்கக் கூடாது. அங்குள்ள புற்பூண்டுகளைக் கிள்ளக் கூடாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! ‘இத்கிர்’ புல்லைத் தவிரவா? ஏனெனில், அது மக்களின் வீடுகளுக்கும் அவர்களின் உலோகத் தொழிலாளர்களுக்கும் பயன்படுகிறதே!” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘(ஆம்) இத்கிரைத் தவிர” என்று பதிலளித்தார்கள்.42

அத்தியாயம் : 58

3190. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ جَامِعِ بْنِ شَدَّادٍ، عَنْ صَفْوَانَ بْنِ مُحْرِزٍ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ ـ رضى الله عنهما ـ قَالَ جَاءَ نَفَرٌ مِنْ بَنِي تَمِيمٍ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ "" يَا بَنِي تَمِيمٍ، أَبْشِرُوا "". قَالُوا بَشَّرْتَنَا فَأَعْطِنَا. فَتَغَيَّرَ وَجْهُهُ، فَجَاءَهُ أَهْلُ الْيَمَنِ، فَقَالَ "" يَا أَهْلَ الْيَمَنِ، اقْبَلُوا الْبُشْرَى إِذْ لَمْ يَقْبَلْهَا بَنُو تَمِيمٍ "". قَالُوا قَبِلْنَا. فَأَخَذَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُحَدِّثُ بَدْءَ الْخَلْقِ وَالْعَرْشِ، فَجَاءَ رَجُلٌ فَقَالَ يَا عِمْرَانُ، رَاحِلَتُكَ تَفَلَّتَتْ، لَيْتَنِي لَمْ أَقُمْ.
பாடம் : 1 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: அவனே ஆரம்பத்தில் படைக்கின்றான். பிறகு அவனே அதை மீண்டும் படைக் கின்றான். இது அவனுக்கு மிகவும் எளிதானதாகும். (30:27) ரபீஉ பின் குஸைம் (ரஹ்), ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) ஆகியோர்கூறினார்கள்: எல்லாம் அவனுக்கு எளிதே. யிஎளிது’ என்பதை (அரபியில்) யிஹய்யின்’ என்றும் யிஹய்ன்’ என்றும் குறிப்பிடலாம். இது (வாய்ப்பாட்டில்) லய்ன், லய்யின் (மிருது வானது) என்பதையும், மய்த், மய்யித் (இறந்தவர்) என்பதையும், ளய்க், ளய்யிக் (நெருக்கடியானது) என்பதையும் போன்றது தான். அல்லாஹ் கூறுகின்றான்: முதலில் படைப்பதற்கு நாம் இயலாதவர்களாக இருந்தோமா? (50:15) உங்களைப் பூமியிலிருந்து படைத்த போது லிஅதாவது உங்கள் படைப்பைத் தொடங்கியபோதுலி அவன் உங்களை நன்கறிவான். (53:32) நிச்சயமாக நாமே வானங்களையும் பூமியையும் அவற்றுக்கிடையே உள்ள வற்றையும் படைத்தோம். நமக்கு எந்தச் சிரமும் (லுஃகூப்) ஏற்படவில்லை. (50:38) அவன்தான் உங்களைப் பல கட்டங்களாக (அத்வார்) படைத்தான் (71:14). ‘அத்வார்’ என்பது யிதவ்ர்’ என்பதன் பன்மையாகும். இதற்கு (நிலை, படி, கட்டம் ஆகிய பொருள்கள் உண்டு.) நிர்ணயிக்கப்பட்ட அளவு என்ற பொருளும் உண்டு.
3190. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பனூ தமீம் குலத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். நபி (ஸல்) அவர்கள், ‘‘பனூ தமீம் கூட்டத்தாரே! நற்செய்தி பெறுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், ‘‘எங்களுக்கு நற்செய்தி கூறினீர்கள் (அது மட்டும் போதாது). அவ்வாறே எங்களுக்கு (தர்மமும்) கொடுங்கள்” என்று கேட்டார்கள். உடனே நபி (ஸல்) அவர்களின் முகம் மாறிவிட்டது.2

அப்போது யமன் நாட்டினர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர்.3 நபி (ஸல்) அவர்கள், ‘‘யமன்வாசிகளே! (நான் வழங்கும்) நற்செய்தியை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில், பனூ தமீம் குலத்தார் அதை ஏற்கவில்லை” என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், ‘‘நாங்கள் அதை ஏற்றுக்கொண்டோம்” என்று பதிலளித்தார்கள்.

பிறகு, நபி (ஸல்) அவர்கள் படைப் பின் ஆரம்பத்தைக் குறித்தும் இறை அரியணை (அர்ஷ்) குறித்தும் பேசலானார் கள். அப்போது ஒரு மனிதர் வந்து (என்னிடம்), ‘‘இம்ரானே! உமது ஊர்தி ஒட்டகம் ஓடிவிட்டது” என்று கூறினார். (நான் ஒட்டகத்தைத் தேடச் சென்று விட்டேன்.) நான் எழுந்து செல்லாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.4


அத்தியாயம் : 59
3191. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا جَامِعُ بْنُ شَدَّادٍ، عَنْ صَفْوَانَ بْنِ مُحْرِزٍ، أَنَّهُ حَدَّثَهُ عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ ـ رضى الله عنهما ـ قَالَ دَخَلْتُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَعَقَلْتُ نَاقَتِي بِالْبَابِ، فَأَتَاهُ نَاسٌ مِنْ بَنِي تَمِيمٍ فَقَالَ "" اقْبَلُوا الْبُشْرَى يَا بَنِي تَمِيمٍ "". قَالُوا قَدْ بَشَّرْتَنَا فَأَعْطِنَا. مَرَّتَيْنِ، ثُمَّ دَخَلَ عَلَيْهِ نَاسٌ مِنْ أَهْلِ الْيَمَنِ فَقَالَ "" اقْبَلُوا الْبُشْرَى يَا أَهْلَ الْيَمَنِ، إِذْ لَمْ يَقْبَلْهَا بَنُو تَمِيمٍ "". قَالُوا قَدْ قَبِلْنَا يَا رَسُولَ اللَّهِ، قَالُوا جِئْنَاكَ نَسْأَلُكَ عَنْ هَذَا الأَمْرِ قَالَ "" كَانَ اللَّهُ وَلَمْ يَكُنْ شَىْءٌ غَيْرُهُ، وَكَانَ عَرْشُهُ عَلَى الْمَاءِ، وَكَتَبَ فِي الذِّكْرِ كُلَّ شَىْءٍ، وَخَلَقَ السَّمَوَاتِ وَالأَرْضَ "". فَنَادَى مُنَادٍ ذَهَبَتْ نَاقَتُكَ يَا ابْنَ الْحُصَيْنِ. فَانْطَلَقْتُ فَإِذَا هِيَ يَقْطَعُ دُونَهَا السَّرَابُ، فَوَاللَّهِ لَوَدِدْتُ أَنِّي كُنْتُ تَرَكْتُهَا.
பாடம் : 1 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: அவனே ஆரம்பத்தில் படைக்கின்றான். பிறகு அவனே அதை மீண்டும் படைக் கின்றான். இது அவனுக்கு மிகவும் எளிதானதாகும். (30:27) ரபீஉ பின் குஸைம் (ரஹ்), ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) ஆகியோர்கூறினார்கள்: எல்லாம் அவனுக்கு எளிதே. யிஎளிது’ என்பதை (அரபியில்) யிஹய்யின்’ என்றும் யிஹய்ன்’ என்றும் குறிப்பிடலாம். இது (வாய்ப்பாட்டில்) லய்ன், லய்யின் (மிருது வானது) என்பதையும், மய்த், மய்யித் (இறந்தவர்) என்பதையும், ளய்க், ளய்யிக் (நெருக்கடியானது) என்பதையும் போன்றது தான். அல்லாஹ் கூறுகின்றான்: முதலில் படைப்பதற்கு நாம் இயலாதவர்களாக இருந்தோமா? (50:15) உங்களைப் பூமியிலிருந்து படைத்த போது லிஅதாவது உங்கள் படைப்பைத் தொடங்கியபோதுலி அவன் உங்களை நன்கறிவான். (53:32) நிச்சயமாக நாமே வானங்களையும் பூமியையும் அவற்றுக்கிடையே உள்ள வற்றையும் படைத்தோம். நமக்கு எந்தச் சிரமும் (லுஃகூப்) ஏற்படவில்லை. (50:38) அவன்தான் உங்களைப் பல கட்டங்களாக (அத்வார்) படைத்தான் (71:14). ‘அத்வார்’ என்பது யிதவ்ர்’ என்பதன் பன்மையாகும். இதற்கு (நிலை, படி, கட்டம் ஆகிய பொருள்கள் உண்டு.) நிர்ணயிக்கப்பட்ட அளவு என்ற பொருளும் உண்டு.
3191. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். என் ஒட்டகத்தை வாயில் அருகே கட்டிப்போட்டேன். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த சிலர் வந்தனர். (அவர்களிடம்) நபி (ஸல்) அவர்கள், ‘‘(நான் அளிக்கும்) நற்செய்தியை ஏற்றுக்கொள்ளுங்கள், பனூ தமீம் குலத்தாரே!” என்று கூறினார்கள். அவர்கள், ‘‘எங்களுக்கு நற்செய்தி அளித் தீர்கள். அவ்வாறே எங்களுக்கு (தர்மம்) கொடுங்கள்” என்று (இருமுறை) கூறி னார்கள்.

பிறகு, யமன் நாட்டவர் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். (அவர் களிடமும்) நபி (ஸல்) அவர்கள், ‘‘யமன் வாசிகளே! (எனது) நற்செய்தியை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், பனூ தமீம் குலத்தார் அதை ஏற்றுக்கொள்ள வில்லை” என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் ஏற்றுக்கொண்டோம்” என்று பதில் கூறினர்.

பிறகு ‘‘நாங்கள் தங்களிடம் இந்த (உலகம் எவ்வாறு படைக்கப்பட்டது எனும்) விஷயம் குறித்துக் கேட்பதற்காக வந்தோம்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘(ஆதியில்) அல்லாஹ் (மட்டுமே) இருந்தான். அவனைத் தவிர வேறெந்தப் பொருளும் இருக்கவில்லை. (பிறகு படைக்கப்பட்ட) அவனது அரியணை தண்ணீரின் மீதிருந்தது. பிறகு (லவ்ஹுல் மஹ்ஃபூழ் எனும்) பாதுகாக்கப்பட்ட பலகையில் அவன் எல்லா விஷயங்களையும் எழுதினான். பின்னர் வானங்கள் மற்றும் பூமியைப் படைத்தான்” என்று கூறினார்கள்.5

அப்போது ஒருவர் (என்னை) அழைத்து, ‘‘ஹுஸைனின் மகனே! உங்கள் ஒட்டகம் ஓடிப்போய்விட்டது” என்று கூற, நான் (அதைத் தேடிப்பார்க்க எழுந்து) சென்றுவிட்டேன். சென்று பார்த்தால் ஒட்டகத்தைக் காணமுடியாதவாறு கானல் நீர் தடுத்துவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! யிநான் அதை அப்படியே விட்டுவிட்டிருந்தால் நன்றாயிருந்திருக்குமே! (படைப்பின் ஆரம்பம் குறித்து நபி (ஸல்) அவர்கள் இன்னும் என்னவெல்லாம் சொன்னார்கள் எனத் தெரிந்து கொண்டிருக்கலாமே)› என்று நான் ஆசைப்பட்டேன்.


அத்தியாயம் : 59
3192. وَرَوَى عِيسَى، عَنْ رَقَبَةَ، عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، قَالَ سَمِعْتُ عُمَرَ ـ رضى الله عنه ـ يَقُولُ قَامَ فِينَا النَّبِيُّ صلى الله عليه وسلم مَقَامًا، فَأَخْبَرَنَا عَنْ بَدْءِ الْخَلْقِ حَتَّى دَخَلَ أَهْلُ الْجَنَّةِ مَنَازِلَهُمْ، وَأَهْلُ النَّارِ مَنَازِلَهُمْ، حَفِظَ ذَلِكَ مَنْ حَفِظَهُ، وَنَسِيَهُ مَنْ نَسِيَهُ.
பாடம் : 1 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: அவனே ஆரம்பத்தில் படைக்கின்றான். பிறகு அவனே அதை மீண்டும் படைக் கின்றான். இது அவனுக்கு மிகவும் எளிதானதாகும். (30:27) ரபீஉ பின் குஸைம் (ரஹ்), ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) ஆகியோர்கூறினார்கள்: எல்லாம் அவனுக்கு எளிதே. யிஎளிது’ என்பதை (அரபியில்) யிஹய்யின்’ என்றும் யிஹய்ன்’ என்றும் குறிப்பிடலாம். இது (வாய்ப்பாட்டில்) லய்ன், லய்யின் (மிருது வானது) என்பதையும், மய்த், மய்யித் (இறந்தவர்) என்பதையும், ளய்க், ளய்யிக் (நெருக்கடியானது) என்பதையும் போன்றது தான். அல்லாஹ் கூறுகின்றான்: முதலில் படைப்பதற்கு நாம் இயலாதவர்களாக இருந்தோமா? (50:15) உங்களைப் பூமியிலிருந்து படைத்த போது லிஅதாவது உங்கள் படைப்பைத் தொடங்கியபோதுலி அவன் உங்களை நன்கறிவான். (53:32) நிச்சயமாக நாமே வானங்களையும் பூமியையும் அவற்றுக்கிடையே உள்ள வற்றையும் படைத்தோம். நமக்கு எந்தச் சிரமும் (லுஃகூப்) ஏற்படவில்லை. (50:38) அவன்தான் உங்களைப் பல கட்டங்களாக (அத்வார்) படைத்தான் (71:14). ‘அத்வார்’ என்பது யிதவ்ர்’ என்பதன் பன்மையாகும். இதற்கு (நிலை, படி, கட்டம் ஆகிய பொருள்கள் உண்டு.) நிர்ணயிக்கப்பட்ட அளவு என்ற பொருளும் உண்டு.
3192. உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (ஒருமுறை) எங்களிடையே ஓரிடத்தில் (சொற்பொழிவு மேடைமீது) எழுந்து நின்று, படைப்பின் ஆரம்பத்தைக் குறித்து எங்களுக்குத் தெரிவித்தார்கள். (எதுவரை என்றால் படைப்பின் தொடக்கம் முதல் மறுமை வாழ்வு ஈறாக) சொர்க்கவாசிகள் (சொர்க்கத் தில்) தாம் தங்குமிடங்களில் நுழையும் வரையும் நரகவாசிகள் (நரகத்தில்) தாம் தங்குமிடங்களில் நுழையும்வரையும் அறிவித்தார்கள்.

அதை நினைவில் வைத்தவர் நினை வில் வைத்துக்கொண்டார்; அதை மறந்த வர் மறந்துவிட்டார்.


அத்தியாயம் : 59
3193. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي شَيْبَةَ، عَنْ أَبِي أَحْمَدَ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم أُرَاهُ "" يَقُولُ اللَّهُ شَتَمَنِي ابْنُ آدَمَ وَمَا يَنْبَغِي لَهُ أَنْ يَشْتِمَنِي، وَتَكَذَّبَنِي وَمَا يَنْبَغِي لَهُ، أَمَّا شَتْمُهُ فَقَوْلُهُ إِنَّ لِي وَلَدًا. وَأَمَّا تَكْذِيبُهُ فَقَوْلُهُ لَيْسَ يُعِيدُنِي كَمَا بَدَأَنِي "".
பாடம் : 1 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: அவனே ஆரம்பத்தில் படைக்கின்றான். பிறகு அவனே அதை மீண்டும் படைக் கின்றான். இது அவனுக்கு மிகவும் எளிதானதாகும். (30:27) ரபீஉ பின் குஸைம் (ரஹ்), ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) ஆகியோர்கூறினார்கள்: எல்லாம் அவனுக்கு எளிதே. யிஎளிது’ என்பதை (அரபியில்) யிஹய்யின்’ என்றும் யிஹய்ன்’ என்றும் குறிப்பிடலாம். இது (வாய்ப்பாட்டில்) லய்ன், லய்யின் (மிருது வானது) என்பதையும், மய்த், மய்யித் (இறந்தவர்) என்பதையும், ளய்க், ளய்யிக் (நெருக்கடியானது) என்பதையும் போன்றது தான். அல்லாஹ் கூறுகின்றான்: முதலில் படைப்பதற்கு நாம் இயலாதவர்களாக இருந்தோமா? (50:15) உங்களைப் பூமியிலிருந்து படைத்த போது லிஅதாவது உங்கள் படைப்பைத் தொடங்கியபோதுலி அவன் உங்களை நன்கறிவான். (53:32) நிச்சயமாக நாமே வானங்களையும் பூமியையும் அவற்றுக்கிடையே உள்ள வற்றையும் படைத்தோம். நமக்கு எந்தச் சிரமும் (லுஃகூப்) ஏற்படவில்லை. (50:38) அவன்தான் உங்களைப் பல கட்டங்களாக (அத்வார்) படைத்தான் (71:14). ‘அத்வார்’ என்பது யிதவ்ர்’ என்பதன் பன்மையாகும். இதற்கு (நிலை, படி, கட்டம் ஆகிய பொருள்கள் உண்டு.) நிர்ணயிக்கப்பட்ட அளவு என்ற பொருளும் உண்டு.
3193. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:

ஆதமின் மகன் (மனிதன்) என்னை ஏசுகிறான். அது அவனுக்குத் தகாத செய லாகும். அவன் என்னை நம்ப மறுக்கிறான். அது அவனுக்குத் தகாத செயலாகும். எனக்குக் குழந்தை இருப்பதாக அவன் கூறுவதுதான் அவன் என்னை ஏசுவதாகும். யிநான் அவனை ஆரம்பமாகப் படைத்த தைப் போன்றே மீண்டும் அவனை என்னால் (உயிராக்கிக்) கொண்டுவர முடியாது’ என்று அவன் கூறுவதுதான் அவன் என்னை நம்ப மறுப்பதாகும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 59
3194. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا مُغِيرَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْقُرَشِيُّ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لَمَّا قَضَى اللَّهُ الْخَلْقَ كَتَبَ فِي كِتَابِهِ، فَهْوَ عِنْدَهُ فَوْقَ الْعَرْشِ إِنَّ رَحْمَتِي غَلَبَتْ غَضَبِي "".
பாடம் : 1 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: அவனே ஆரம்பத்தில் படைக்கின்றான். பிறகு அவனே அதை மீண்டும் படைக் கின்றான். இது அவனுக்கு மிகவும் எளிதானதாகும். (30:27) ரபீஉ பின் குஸைம் (ரஹ்), ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) ஆகியோர்கூறினார்கள்: எல்லாம் அவனுக்கு எளிதே. யிஎளிது’ என்பதை (அரபியில்) யிஹய்யின்’ என்றும் யிஹய்ன்’ என்றும் குறிப்பிடலாம். இது (வாய்ப்பாட்டில்) லய்ன், லய்யின் (மிருது வானது) என்பதையும், மய்த், மய்யித் (இறந்தவர்) என்பதையும், ளய்க், ளய்யிக் (நெருக்கடியானது) என்பதையும் போன்றது தான். அல்லாஹ் கூறுகின்றான்: முதலில் படைப்பதற்கு நாம் இயலாதவர்களாக இருந்தோமா? (50:15) உங்களைப் பூமியிலிருந்து படைத்த போது லிஅதாவது உங்கள் படைப்பைத் தொடங்கியபோதுலி அவன் உங்களை நன்கறிவான். (53:32) நிச்சயமாக நாமே வானங்களையும் பூமியையும் அவற்றுக்கிடையே உள்ள வற்றையும் படைத்தோம். நமக்கு எந்தச் சிரமும் (லுஃகூப்) ஏற்படவில்லை. (50:38) அவன்தான் உங்களைப் பல கட்டங்களாக (அத்வார்) படைத்தான் (71:14). ‘அத்வார்’ என்பது யிதவ்ர்’ என்பதன் பன்மையாகும். இதற்கு (நிலை, படி, கட்டம் ஆகிய பொருள்கள் உண்டு.) நிர்ணயிக்கப்பட்ட அளவு என்ற பொருளும் உண்டு.
3194. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் படைப்புகளைப் படைத்தபோது தனது (யிலவ்ஹுல் மஹ்ஃபூழ்’ எனும்) பதிவேட்டில் லிஅது அரியணைக்கு மேலே அவனிடம் உள்ளதுலி ‘‘என் கருணை என் கோபத்தை மிகைத்து விட்டது” என்று எழுதினான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 59
3195. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، أَخْبَرَنَا ابْنُ عُلَيَّةَ، عَنْ عَلِيِّ بْنِ الْمُبَارَكِ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ الْحَارِثِ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، كَانَتْ بَيْنَهُ وَبَيْنَ أُنَاسٍ خُصُومَةٌ فِي أَرْضٍ، فَدَخَلَ عَلَى عَائِشَةَ فَذَكَرَ لَهَا ذَلِكَ، فَقَالَتْ يَا أَبَا سَلَمَةَ اجْتَنِبِ الأَرْضَ، فَإِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ ظَلَمَ قِيدَ شِبْرٍ طُوِّقَهُ مِنْ سَبْعِ أَرَضِينَ "".
பாடம் : 2 ஏழு பூமிகள் தொடர்பாக வந்துள் ளவை உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: அல்லாஹ்தான் ஏழு வானங்களைப் படைத்தான். பூமியிலும் அவற்றைப் போன்றே படைத்தான். அவற்றுக்கிடையே கட்டளை இறங்கிய வண்ணமிருக்கிறது, அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றல் பெற்றிருக்கின்றான் என்பதையும் அல்லாஹ்வின் அறிவு ஒவ்வொரு பொருளையும் சூழ்ந்திருக்கின்றது என்பதையும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் (இந்த விஷயங்கள் உங்களுக்கு எடுத்துரைக்கப்படுகின்றன). (65:12)6 மேலும் அல்லாஹ் கூறுகின்றான்: உயர்த்தப்பட்ட கூரையின் மீதாணையாக! (அதாவது வானத்தின் மீதாணையாக!) (52:5) அதன் முகட்டை (அதாவது கட்ட டத்தை) உயர்த்தினான். (79:28) பாதைகளை உடைய (அதாவது சீரும் சிறப்புமிக்க) வானத்தின் மீதாணையாக! (51:7) அந்த வானம் தன் இறைவனுக்கு செவிசாய்த்தது (அதாவது இணங்கியது). (84:2) பூமி தன்னில் உள்ளதை (வெளியே) போட்டது (அதாவது தனக்குள் புதைக்கப் பட்ட பிணங்களை வெளியேற்றியது). பின்னர் (பிணங்களில்லாமல்) காலியானது. (84:4) பூமியின் மீதும் அதை விரித்தவன்மீதும் ஆணையாக! (91:6) உடனே அவர்கள் வெட்ட வெளியில் நிற்பார்கள் (79:14). அதாவது பூமிக்கு மேலே நிற்பார்கள். அதில்தான் உயிரினங்களின் உறக்கமும் விழிப்பும் இருந்தன.
3195. அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

எனக்கும் சிலருக்குமிடையே ஒரு நிலம் தொடர்பாகத் தகராறு இருந்து வந்தது. நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று அதைப் பற்றிக் கூறினேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘அபூசலமாவே! நிலத்தை (எப்படியாவது அடைந்துகொள்ள வேண்டும் என்னும் ஆசையைத்) தவிர்த்துக்கொள்வீராக! ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், யியார் அநியாயமாக ஒரு சாண் அளவு (நிலத்தை) அபகரித்துக்கொள்கி றாரோ அவரது கழுத்தில் அந்த நிலத்தி(ன் மேற்பகுதியி)லிருந்து ஏழு பூமிகள்வரை (செல்லும் பகுதி மறுமை நாளில்) மாலையாக மாட்டப்படும்’ எனக் கூறியுள் ளார்கள்” என்று சொன்னார்கள்.7


அத்தியாயம் : 59
3196. حَدَّثَنَا بِشْرُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَنْ أَخَذَ شَيْئًا مِنَ الأَرْضِ بِغَيْرِ حَقِّهِ خُسِفَ بِهِ يَوْمَ الْقِيَامَةِ إِلَى سَبْعِ أَرَضِينَ "".
பாடம் : 2 ஏழு பூமிகள் தொடர்பாக வந்துள் ளவை உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: அல்லாஹ்தான் ஏழு வானங்களைப் படைத்தான். பூமியிலும் அவற்றைப் போன்றே படைத்தான். அவற்றுக்கிடையே கட்டளை இறங்கிய வண்ணமிருக்கிறது, அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றல் பெற்றிருக்கின்றான் என்பதையும் அல்லாஹ்வின் அறிவு ஒவ்வொரு பொருளையும் சூழ்ந்திருக்கின்றது என்பதையும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் (இந்த விஷயங்கள் உங்களுக்கு எடுத்துரைக்கப்படுகின்றன). (65:12)6 மேலும் அல்லாஹ் கூறுகின்றான்: உயர்த்தப்பட்ட கூரையின் மீதாணையாக! (அதாவது வானத்தின் மீதாணையாக!) (52:5) அதன் முகட்டை (அதாவது கட்ட டத்தை) உயர்த்தினான். (79:28) பாதைகளை உடைய (அதாவது சீரும் சிறப்புமிக்க) வானத்தின் மீதாணையாக! (51:7) அந்த வானம் தன் இறைவனுக்கு செவிசாய்த்தது (அதாவது இணங்கியது). (84:2) பூமி தன்னில் உள்ளதை (வெளியே) போட்டது (அதாவது தனக்குள் புதைக்கப் பட்ட பிணங்களை வெளியேற்றியது). பின்னர் (பிணங்களில்லாமல்) காலியானது. (84:4) பூமியின் மீதும் அதை விரித்தவன்மீதும் ஆணையாக! (91:6) உடனே அவர்கள் வெட்ட வெளியில் நிற்பார்கள் (79:14). அதாவது பூமிக்கு மேலே நிற்பார்கள். அதில்தான் உயிரினங்களின் உறக்கமும் விழிப்பும் இருந்தன.
3196. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

யார் ஒரு நிலத்திலிருந்து அதற்கான உரிமையில்லாமல் சிறிதளவை (பலாத் காரமாக) எடுத்துக்கொள்கிறாரோ அவர் மறுமை நாளில் ஏழு பூமிகள்வரை புதைந்து போகும்படிச் செய்யப்படுவார்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.8


அத்தியாயம் : 59
3197. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنِ ابْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِي بَكْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" الزَّمَانُ قَدِ اسْتَدَارَ كَهَيْئَتِهِ يَوْمَ خَلَقَ السَّمَوَاتِ وَالأَرْضَ، السَّنَةُ اثْنَا عَشَرَ شَهْرًا، مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ، ثَلاَثَةٌ مُتَوَالِيَاتٌ ذُو الْقَعْدَةِ وَذُو الْحِجَّةِ وَالْمُحَرَّمُ، وَرَجَبُ مُضَرَ الَّذِي بَيْنَ جُمَادَى وَشَعْبَانَ "".
பாடம் : 2 ஏழு பூமிகள் தொடர்பாக வந்துள் ளவை உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: அல்லாஹ்தான் ஏழு வானங்களைப் படைத்தான். பூமியிலும் அவற்றைப் போன்றே படைத்தான். அவற்றுக்கிடையே கட்டளை இறங்கிய வண்ணமிருக்கிறது, அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றல் பெற்றிருக்கின்றான் என்பதையும் அல்லாஹ்வின் அறிவு ஒவ்வொரு பொருளையும் சூழ்ந்திருக்கின்றது என்பதையும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் (இந்த விஷயங்கள் உங்களுக்கு எடுத்துரைக்கப்படுகின்றன). (65:12)6 மேலும் அல்லாஹ் கூறுகின்றான்: உயர்த்தப்பட்ட கூரையின் மீதாணையாக! (அதாவது வானத்தின் மீதாணையாக!) (52:5) அதன் முகட்டை (அதாவது கட்ட டத்தை) உயர்த்தினான். (79:28) பாதைகளை உடைய (அதாவது சீரும் சிறப்புமிக்க) வானத்தின் மீதாணையாக! (51:7) அந்த வானம் தன் இறைவனுக்கு செவிசாய்த்தது (அதாவது இணங்கியது). (84:2) பூமி தன்னில் உள்ளதை (வெளியே) போட்டது (அதாவது தனக்குள் புதைக்கப் பட்ட பிணங்களை வெளியேற்றியது). பின்னர் (பிணங்களில்லாமல்) காலியானது. (84:4) பூமியின் மீதும் அதை விரித்தவன்மீதும் ஆணையாக! (91:6) உடனே அவர்கள் வெட்ட வெளியில் நிற்பார்கள் (79:14). அதாவது பூமிக்கு மேலே நிற்பார்கள். அதில்தான் உயிரினங்களின் உறக்கமும் விழிப்பும் இருந்தன.
3197. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பிவிட்டது. யிஆண்டு’ என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக்கூடியவை. அவை துல்கஅதா, துல்ஹிஜ்ஜா மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜுமாதல் ஆகிராவுக்கும் ஷஅபான் மாதத்திற்கும் இடையிலுள்ள ரஜப் மாதமாகும்.9

இதை அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 59
3198. حَدَّثَنِي عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ سَعِيدِ بْنِ زَيْدِ بْنِ عَمْرِو بْنِ نُفَيْلٍ، أَنَّهُ خَاصَمَتْهُ أَرْوَى فِي حَقٍّ زَعَمَتْ أَنَّهُ انْتَقَصَهُ لَهَا إِلَى مَرْوَانَ، فَقَالَ سَعِيدٌ أَنَا أَنْتَقِصُ مِنْ حَقِّهَا شَيْئًا، أَشْهَدُ لَسَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" مَنْ أَخَذَ شِبْرًا مِنَ الأَرْضِ ظُلْمًا، فَإِنَّهُ يُطَوَّقُهُ يَوْمَ الْقِيَامَةِ مِنْ سَبْعِ أَرَضِينَ "". قَالَ ابْنُ أَبِي الزِّنَادِ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ قَالَ قَالَ لِي سَعِيدُ بْنُ زَيْدٍ دَخَلْتُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 2 ஏழு பூமிகள் தொடர்பாக வந்துள் ளவை உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: அல்லாஹ்தான் ஏழு வானங்களைப் படைத்தான். பூமியிலும் அவற்றைப் போன்றே படைத்தான். அவற்றுக்கிடையே கட்டளை இறங்கிய வண்ணமிருக்கிறது, அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றல் பெற்றிருக்கின்றான் என்பதையும் அல்லாஹ்வின் அறிவு ஒவ்வொரு பொருளையும் சூழ்ந்திருக்கின்றது என்பதையும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் (இந்த விஷயங்கள் உங்களுக்கு எடுத்துரைக்கப்படுகின்றன). (65:12)6 மேலும் அல்லாஹ் கூறுகின்றான்: உயர்த்தப்பட்ட கூரையின் மீதாணையாக! (அதாவது வானத்தின் மீதாணையாக!) (52:5) அதன் முகட்டை (அதாவது கட்ட டத்தை) உயர்த்தினான். (79:28) பாதைகளை உடைய (அதாவது சீரும் சிறப்புமிக்க) வானத்தின் மீதாணையாக! (51:7) அந்த வானம் தன் இறைவனுக்கு செவிசாய்த்தது (அதாவது இணங்கியது). (84:2) பூமி தன்னில் உள்ளதை (வெளியே) போட்டது (அதாவது தனக்குள் புதைக்கப் பட்ட பிணங்களை வெளியேற்றியது). பின்னர் (பிணங்களில்லாமல்) காலியானது. (84:4) பூமியின் மீதும் அதை விரித்தவன்மீதும் ஆணையாக! (91:6) உடனே அவர்கள் வெட்ட வெளியில் நிற்பார்கள் (79:14). அதாவது பூமிக்கு மேலே நிற்பார்கள். அதில்தான் உயிரினங்களின் உறக்கமும் விழிப்பும் இருந்தன.
3198. சயீத் பின் ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘அர்வா’ என்னும் பெண்மணி, நான் அவருக்கு ஒரு (நிலத்தின்) உரிமையில் குறைவைத்துவிட்டதாகக் கருதி (மதீனா வின் ஆளுநர்) மர்வான் அவர்களிடம் எனக்கெதிராக வழக்குத் தொடுத்தார். (விசாரணையின்போது) நான், ‘‘அவரது உரிமையில் எதையும் நான் குறை வைப்பேனா? யிஎவர் ஒரு சாண் அளவு நிலத்தை அநியாயமாக அபகரித்துக் கொள்கிறாரோ அவரது கழுத்தில் அந்த நிலத்தின் மேற்பகுதியிலிருந்து ஏழு பூமிகள்வரை (செல்லும் பகுதி) மறுமை நாளில் மாலையாக மாட்டப்படும்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டிருப்பதாக சாட்சியமளிக்கிறேன்” என்று சொன்னேன்.10

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அப்துர் ரஹ்மான் பின் அபிஸ்ஸினாத் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், ‘‘நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன்” என ஹதீஸ் ஆரம்பமாகிறது.

அத்தியாயம் : 59
3199. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي ذَرٍّ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لأَبِي ذَرٍّ حِينَ غَرَبَتِ الشَّمْسُ "" تَدْرِي أَيْنَ تَذْهَبُ "". قُلْتُ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ "" فَإِنَّهَا تَذْهَبُ حَتَّى تَسْجُدَ تَحْتَ الْعَرْشِ، فَتَسْتَأْذِنَ فَيُؤْذَنَ لَهَا، وَيُوشِكُ أَنْ تَسْجُدَ فَلاَ يُقْبَلَ مِنْهَا، وَتَسْتَأْذِنَ فَلاَ يُؤْذَنَ لَهَا، يُقَالُ لَهَا ارْجِعِي مِنْ حَيْثُ جِئْتِ. فَتَطْلُعُ مِنْ مَغْرِبِهَا، فَذَلِكَ قَوْلُهُ تَعَالَى {وَالشَّمْسُ تَجْرِي لِمُسْتَقَرٍّ لَهَا ذَلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ }"".
பாடம் : 3 விண்மீன்கள்11 கத்தாதா (ரஹ்) அவர்கள்கூறினார்கள்: ‘‘நாம் (உங்களுக்கு) அருகிலிருக்கும் (முதல்) வானத்தை விளக்குகளால் அலங் கரித்திருக்கிறோம். அவற்றை ஷைத்தான் களை எறிந்து விரட்டும் கருவிகளாக ஆக்கியுள்ளோம். இந்த ஷைத்தான்களுக்காகக் கொழுந்து விட்டெரியும் நெருப்பை நாம் தயார் செய்துவைத்திருக்கிறோம்” (67:5) எனும் வசனங்களிலிருந்து தெரிவ தாவது: அல்லாஹ் இந்த நட்சத்திரங்களை மூன்று விஷயங்களுக்காகப் படைத்திருக்கி றான்: 1. அவற்றை வானத்திற்கு அலங்காரமாக ஆக்கியுள்ளான். 2. ஷைத்தான்களை எறிந்து விரட்டுவதற்கான கருவியாக ஆக்கியுள்ளான். 3. அவற்றின் வாயிலாக (கடல் மார்க்கத்தில்) வழியறிந்து கொள்வதற்கான அடையாளங்களாக அவற்றை ஆக்கியுள்ளான். எவர் இதுவல்லாத பிற பொருள்களை இந்த வசனத்திற்குக் கற்பிக்கிறாரோ அவர் தவறிழைத்துவிட்டார்; தமது முயற்சியை வீணாக்கிவிட்டார்; தாம் அறியாத விஷயத்தில் ஈடுபட்டுத் தம்மைத்தாமே சிரமத்திற்கு ஆளாக்கிக்கொண்டார்.12 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறி னார்கள்: ‘‘அது சருகாக (ஹஷீம்) மாறியது” (18:45) எனும் வசனத்தில் யிஹஷீம்’ என்ப தற்கு யிமாறிப்போனது’ என்பது பொருள். (80:31 ஆவது வசனத்தில் உள்ள) ‘அப்பு’ என்பது கால்நடைகள் உண்ணும் (வைக்கோல் போன்ற) தீவனத்தைக் குறிக்கும். (55:10 ஆவது வசனத்திலுள்ள) ‘அனாம்’ என்பதற்கு யிபடைப்புகள்’ என்றும், (25:53 ஆவது வசனத்திலுள்ள) யிபர்ஸக்’ என்பதற்கு யிதடுப்பு’ (தடை) என்றும் பொருளாகும். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: (78:16 ஆவது வசனத்திலுள்ள) ‘அல்ஃபாஃப்’ என்பதற்கு, ‘அடர்த்தியானவை’ என்பது பொருள். (80:30ல் உள்ள) யிஃகுல்ப்’ என்பதற்கும் ‘அடர்த்தியானவை’ என்பதே பொருள். (2:22ல் உள்ள) யிஃபிராஷ்’ என்பதற்கு யிவிரிப்பு’ (தொட்டில்) என்பது பொருள். ‘‘உங்களுக்குப் பூமியில் வசிப்பிடம் உண்டு’ (2:36) என்கிறான் அல்லாஹ். (7:58ல் உள்ள) யிநகித்’ என்பதற்கு யிகுறைவானது’ என்பது பொருள். பாடம் : 4 சூரியன் மற்றும் சந்திரனின் நிலை13 அல்லாஹ் கூறுகின்றான்: சூரியனும் சந்திரனும் (அதனதன்) கணக்குப்படி இயங்குகின்றன. (55:5) யிகணக்குப்படி’ (பி ஹுஸ்பான்) என்பதற்கு முஜாஹித் (ரஹ்) அவர்கள், திருகை சுற்றுவதைப் போன்று ஒரு கணக்கின்படி சுற்றுகின்றன என்று விளக்கமளித்தார்கள். மற்றவர்கள் கூறுகிறார்கள்: ஒரு கணக்கின்படி தத்தமது நிலைகளை மீறாமல் அவை சுழல்கின்றன. யிஹுஸ்பான்’ என்பதற்கு யிகணக்குக் குழு’ என்ற பொருளும் உண்டு. இது வாய்ப்பாட்டில் ஷிஹாப், ஷுஹ்பான் என்பதைப் போல உள்ளது. சூரியன்மீதும் அதன் ஒளியின் மீதும் ஆணையாக! (91:1). இங்கு யிஒளி’ என்பதைக் குறிக்க யிளுஹா’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. சூரியனால் சந்திரனை அடைய முடியாது; இரவு பகலை முந்தாது. (36:40). அதாவது அவ்விரண்டில் ஒன்றின் ஒளி மற்றொன்றை மறைக்காது; அது அவற் றுக்குச் சாத்தியமும் அல்ல. (சூரியனின் ஒளியைப் பிரதிபலிப்பதே சந்திரனாகும்.) இரவும் பகலும் ஒன்றையொன்று துரத்தாது. (அதனதன் நேரத்தில் வரும்.) இரவிலிருந்து பகலை உரித்தெடுக் கிறோம் (36:37). அதாவது அவை இரண்டில் ஒன்றை மற்றதிலிருந்து வெளியேற்றுகிறோம்; ஒவ்வொன்றையும் தனித்தனியாக இயங்கச் செய்கிறோம். (அன்று) வானம் பிளந்துவிடும். அது உறுதியற்றதாகிவிடும்; வானவர்கள் அதன் ஓரங்களில் இருப்பார்கள். (69:16,17). அதாவது அதன் பிளவுதான் அதன் உறுதியற்ற நிலையாகும். அது பிளக்காமல் இருக்கும்வரை அதன் இரு புறங்களில் வானவர்கள் இருப்பார்கள். கிணற்றின் ஓரங்கள் (கரைகள்) என்பதைப் போல. அதன் இரவை மூடி பகலை வெளிப் படுத்தினான் (79:29). யிமூடுதல்’ என்பதைக் குறிக்க ‘அஃக்த்த” எனும் சொல் ஆளப் பட்டுள்ளது. அவரை இரவு சூழ்ந்தபோது... (6:76). அதாவது இருட்டியபோது... சூரியன் சுருட்டப்படும்போது... (81:1). அதாவது அதன் ஒளி மங்கும்போது... என்று ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் விளக்கம் அளித்தார்கள். இரவின் மீதும் அது உள்ளடக்கிய வற்றின் மீதும் லி அதாவது அது ஒன்று சேர்த்துள்ள உயிரினங்கள்மீதும் லி முழுமை பெற்ற நிலவின் மீதும் லி அதாவது சீரான நிலவின் மீதும் லி சத்தியமாக! (84:17,18) வானத்தில் புரூஜ்களை லி அதாவது சூரியன், சந்திரன் ஆகியவற்றுக்குப் பல நிலைகளை லி ஏற்படுத்தியவன் வளமிக்கவன். (25:61). நிழலும் வெப்பமும் (ஹரூர்) லி அதாவது சூரியனுடன் பகலில் வரும் வெப்பமும் லி சமமாகாது. (35:21) இப்னு அப்பாஸ் (ரலி), ரூபா பின் அல்அஜ்ஜாஜ் (ரஹ்) ஆகியோர், இரவு வெப் பத்தை யிஹரூர்’ என்றும், பகல் வெப்பத்தை யிசமூம்’ என்றும் குறிப்பிடுகின்றனர். ‘அந்தரங்க நண்பர்கள்’ (வலீஜா) (9:16). அதாவது ஒன்றுக்குள் ஒன்றை வைத்து மறைக்கப்பட்ட அனைத்தும் யிவலீஜா ஆகும்.
3199. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் சூரியன் மறைந்த நேரத்தில் என்னிடம், ‘‘அது (சூரியன்) எங்கு செல்கிறது என்பது உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். நான், ‘‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அறிவார்கள்” என்று கூறினேன்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘அது இறை அரியணைக்குக் கீழே சிரவணக்கம் செய்வதற்காகச் செல்கின்றது. அங்கு அது (கிழக்கிலிருந்து உதயமாகுவதற்கு இறை வனிடம்) அனுமதி கேட்கிறது. உடனே அதற்கு அனுமதியளிக்கப்படுகிறது. (இறுதியாக ஒருநாள்) அது சிரவணக்கம் செய்ய, அந்த சிரவணக்கம் ஏற்கப்படாமல் போகவிருக்கிறது.

அப்போது அது (வழக்கம்போலக்) கிழக்கிலிருந்து உதயமாவதற்கு அனுமதி கேட்கும்; அதற்கு அனுமதியளிக்கப்படாது. மாறாக, ‘‘வந்த வழியே திரும்பிவிடு” என்று அதற்கு உத்தரவிடப்படும். அதன்படி அது மேற்கிலிருந்து உதயமாகும்” என்று சொன்னார்கள்.14

‘‘இதைத்தான், யிசூரியன், தான் நிலை கொள்ளும் ஓர் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அது பேரறிவாளனான வல்லமை மிக்க (இறை)வனின் நிர்ணயமாகும்’ (36:38) எனும் இறைவசனம் குறிக்கின்றது” என்று சொன்னார்கள்.


அத்தியாயம் : 59
3200. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ الْمُخْتَارِ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ الدَّانَاجُ، قَالَ حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" الشَّمْسُ وَالْقَمَرُ مُكَوَّرَانِ يَوْمَ الْقِيَامَةِ "".
பாடம் : 3 விண்மீன்கள்11 கத்தாதா (ரஹ்) அவர்கள்கூறினார்கள்: ‘‘நாம் (உங்களுக்கு) அருகிலிருக்கும் (முதல்) வானத்தை விளக்குகளால் அலங் கரித்திருக்கிறோம். அவற்றை ஷைத்தான் களை எறிந்து விரட்டும் கருவிகளாக ஆக்கியுள்ளோம். இந்த ஷைத்தான்களுக்காகக் கொழுந்து விட்டெரியும் நெருப்பை நாம் தயார் செய்துவைத்திருக்கிறோம்” (67:5) எனும் வசனங்களிலிருந்து தெரிவ தாவது: அல்லாஹ் இந்த நட்சத்திரங்களை மூன்று விஷயங்களுக்காகப் படைத்திருக்கி றான்: 1. அவற்றை வானத்திற்கு அலங்காரமாக ஆக்கியுள்ளான். 2. ஷைத்தான்களை எறிந்து விரட்டுவதற்கான கருவியாக ஆக்கியுள்ளான். 3. அவற்றின் வாயிலாக (கடல் மார்க்கத்தில்) வழியறிந்து கொள்வதற்கான அடையாளங்களாக அவற்றை ஆக்கியுள்ளான். எவர் இதுவல்லாத பிற பொருள்களை இந்த வசனத்திற்குக் கற்பிக்கிறாரோ அவர் தவறிழைத்துவிட்டார்; தமது முயற்சியை வீணாக்கிவிட்டார்; தாம் அறியாத விஷயத்தில் ஈடுபட்டுத் தம்மைத்தாமே சிரமத்திற்கு ஆளாக்கிக்கொண்டார்.12 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறி னார்கள்: ‘‘அது சருகாக (ஹஷீம்) மாறியது” (18:45) எனும் வசனத்தில் யிஹஷீம்’ என்ப தற்கு யிமாறிப்போனது’ என்பது பொருள். (80:31 ஆவது வசனத்தில் உள்ள) ‘அப்பு’ என்பது கால்நடைகள் உண்ணும் (வைக்கோல் போன்ற) தீவனத்தைக் குறிக்கும். (55:10 ஆவது வசனத்திலுள்ள) ‘அனாம்’ என்பதற்கு யிபடைப்புகள்’ என்றும், (25:53 ஆவது வசனத்திலுள்ள) யிபர்ஸக்’ என்பதற்கு யிதடுப்பு’ (தடை) என்றும் பொருளாகும். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: (78:16 ஆவது வசனத்திலுள்ள) ‘அல்ஃபாஃப்’ என்பதற்கு, ‘அடர்த்தியானவை’ என்பது பொருள். (80:30ல் உள்ள) யிஃகுல்ப்’ என்பதற்கும் ‘அடர்த்தியானவை’ என்பதே பொருள். (2:22ல் உள்ள) யிஃபிராஷ்’ என்பதற்கு யிவிரிப்பு’ (தொட்டில்) என்பது பொருள். ‘‘உங்களுக்குப் பூமியில் வசிப்பிடம் உண்டு’ (2:36) என்கிறான் அல்லாஹ். (7:58ல் உள்ள) யிநகித்’ என்பதற்கு யிகுறைவானது’ என்பது பொருள். பாடம் : 4 சூரியன் மற்றும் சந்திரனின் நிலை13 அல்லாஹ் கூறுகின்றான்: சூரியனும் சந்திரனும் (அதனதன்) கணக்குப்படி இயங்குகின்றன. (55:5) யிகணக்குப்படி’ (பி ஹுஸ்பான்) என்பதற்கு முஜாஹித் (ரஹ்) அவர்கள், திருகை சுற்றுவதைப் போன்று ஒரு கணக்கின்படி சுற்றுகின்றன என்று விளக்கமளித்தார்கள். மற்றவர்கள் கூறுகிறார்கள்: ஒரு கணக்கின்படி தத்தமது நிலைகளை மீறாமல் அவை சுழல்கின்றன. யிஹுஸ்பான்’ என்பதற்கு யிகணக்குக் குழு’ என்ற பொருளும் உண்டு. இது வாய்ப்பாட்டில் ஷிஹாப், ஷுஹ்பான் என்பதைப் போல உள்ளது. சூரியன்மீதும் அதன் ஒளியின் மீதும் ஆணையாக! (91:1). இங்கு யிஒளி’ என்பதைக் குறிக்க யிளுஹா’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. சூரியனால் சந்திரனை அடைய முடியாது; இரவு பகலை முந்தாது. (36:40). அதாவது அவ்விரண்டில் ஒன்றின் ஒளி மற்றொன்றை மறைக்காது; அது அவற் றுக்குச் சாத்தியமும் அல்ல. (சூரியனின் ஒளியைப் பிரதிபலிப்பதே சந்திரனாகும்.) இரவும் பகலும் ஒன்றையொன்று துரத்தாது. (அதனதன் நேரத்தில் வரும்.) இரவிலிருந்து பகலை உரித்தெடுக் கிறோம் (36:37). அதாவது அவை இரண்டில் ஒன்றை மற்றதிலிருந்து வெளியேற்றுகிறோம்; ஒவ்வொன்றையும் தனித்தனியாக இயங்கச் செய்கிறோம். (அன்று) வானம் பிளந்துவிடும். அது உறுதியற்றதாகிவிடும்; வானவர்கள் அதன் ஓரங்களில் இருப்பார்கள். (69:16,17). அதாவது அதன் பிளவுதான் அதன் உறுதியற்ற நிலையாகும். அது பிளக்காமல் இருக்கும்வரை அதன் இரு புறங்களில் வானவர்கள் இருப்பார்கள். கிணற்றின் ஓரங்கள் (கரைகள்) என்பதைப் போல. அதன் இரவை மூடி பகலை வெளிப் படுத்தினான் (79:29). யிமூடுதல்’ என்பதைக் குறிக்க ‘அஃக்த்த” எனும் சொல் ஆளப் பட்டுள்ளது. அவரை இரவு சூழ்ந்தபோது... (6:76). அதாவது இருட்டியபோது... சூரியன் சுருட்டப்படும்போது... (81:1). அதாவது அதன் ஒளி மங்கும்போது... என்று ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் விளக்கம் அளித்தார்கள். இரவின் மீதும் அது உள்ளடக்கிய வற்றின் மீதும் லி அதாவது அது ஒன்று சேர்த்துள்ள உயிரினங்கள்மீதும் லி முழுமை பெற்ற நிலவின் மீதும் லி அதாவது சீரான நிலவின் மீதும் லி சத்தியமாக! (84:17,18) வானத்தில் புரூஜ்களை லி அதாவது சூரியன், சந்திரன் ஆகியவற்றுக்குப் பல நிலைகளை லி ஏற்படுத்தியவன் வளமிக்கவன். (25:61). நிழலும் வெப்பமும் (ஹரூர்) லி அதாவது சூரியனுடன் பகலில் வரும் வெப்பமும் லி சமமாகாது. (35:21) இப்னு அப்பாஸ் (ரலி), ரூபா பின் அல்அஜ்ஜாஜ் (ரஹ்) ஆகியோர், இரவு வெப் பத்தை யிஹரூர்’ என்றும், பகல் வெப்பத்தை யிசமூம்’ என்றும் குறிப்பிடுகின்றனர். ‘அந்தரங்க நண்பர்கள்’ (வலீஜா) (9:16). அதாவது ஒன்றுக்குள் ஒன்றை வைத்து மறைக்கப்பட்ட அனைத்தும் யிவலீஜா ஆகும்.
3200. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

மறுமை நாளில் சூரியனும் சந்திரனும் சுருட்டப்பட்டு (ஒளியிழந்து)விடும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 59
3201. حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرٌو، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الْقَاسِمِ، حَدَّثَهُ عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّهُ كَانَ يُخْبِرُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ لاَ يَخْسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلاَ لِحَيَاتِهِ، وَلَكِنَّهُمَا آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ، فَإِذَا رَأَيْتُمُوهُمَا فَصَلُّوا "".
பாடம் : 3 விண்மீன்கள்11 கத்தாதா (ரஹ்) அவர்கள்கூறினார்கள்: ‘‘நாம் (உங்களுக்கு) அருகிலிருக்கும் (முதல்) வானத்தை விளக்குகளால் அலங் கரித்திருக்கிறோம். அவற்றை ஷைத்தான் களை எறிந்து விரட்டும் கருவிகளாக ஆக்கியுள்ளோம். இந்த ஷைத்தான்களுக்காகக் கொழுந்து விட்டெரியும் நெருப்பை நாம் தயார் செய்துவைத்திருக்கிறோம்” (67:5) எனும் வசனங்களிலிருந்து தெரிவ தாவது: அல்லாஹ் இந்த நட்சத்திரங்களை மூன்று விஷயங்களுக்காகப் படைத்திருக்கி றான்: 1. அவற்றை வானத்திற்கு அலங்காரமாக ஆக்கியுள்ளான். 2. ஷைத்தான்களை எறிந்து விரட்டுவதற்கான கருவியாக ஆக்கியுள்ளான். 3. அவற்றின் வாயிலாக (கடல் மார்க்கத்தில்) வழியறிந்து கொள்வதற்கான அடையாளங்களாக அவற்றை ஆக்கியுள்ளான். எவர் இதுவல்லாத பிற பொருள்களை இந்த வசனத்திற்குக் கற்பிக்கிறாரோ அவர் தவறிழைத்துவிட்டார்; தமது முயற்சியை வீணாக்கிவிட்டார்; தாம் அறியாத விஷயத்தில் ஈடுபட்டுத் தம்மைத்தாமே சிரமத்திற்கு ஆளாக்கிக்கொண்டார்.12 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறி னார்கள்: ‘‘அது சருகாக (ஹஷீம்) மாறியது” (18:45) எனும் வசனத்தில் யிஹஷீம்’ என்ப தற்கு யிமாறிப்போனது’ என்பது பொருள். (80:31 ஆவது வசனத்தில் உள்ள) ‘அப்பு’ என்பது கால்நடைகள் உண்ணும் (வைக்கோல் போன்ற) தீவனத்தைக் குறிக்கும். (55:10 ஆவது வசனத்திலுள்ள) ‘அனாம்’ என்பதற்கு யிபடைப்புகள்’ என்றும், (25:53 ஆவது வசனத்திலுள்ள) யிபர்ஸக்’ என்பதற்கு யிதடுப்பு’ (தடை) என்றும் பொருளாகும். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: (78:16 ஆவது வசனத்திலுள்ள) ‘அல்ஃபாஃப்’ என்பதற்கு, ‘அடர்த்தியானவை’ என்பது பொருள். (80:30ல் உள்ள) யிஃகுல்ப்’ என்பதற்கும் ‘அடர்த்தியானவை’ என்பதே பொருள். (2:22ல் உள்ள) யிஃபிராஷ்’ என்பதற்கு யிவிரிப்பு’ (தொட்டில்) என்பது பொருள். ‘‘உங்களுக்குப் பூமியில் வசிப்பிடம் உண்டு’ (2:36) என்கிறான் அல்லாஹ். (7:58ல் உள்ள) யிநகித்’ என்பதற்கு யிகுறைவானது’ என்பது பொருள். பாடம் : 4 சூரியன் மற்றும் சந்திரனின் நிலை13 அல்லாஹ் கூறுகின்றான்: சூரியனும் சந்திரனும் (அதனதன்) கணக்குப்படி இயங்குகின்றன. (55:5) யிகணக்குப்படி’ (பி ஹுஸ்பான்) என்பதற்கு முஜாஹித் (ரஹ்) அவர்கள், திருகை சுற்றுவதைப் போன்று ஒரு கணக்கின்படி சுற்றுகின்றன என்று விளக்கமளித்தார்கள். மற்றவர்கள் கூறுகிறார்கள்: ஒரு கணக்கின்படி தத்தமது நிலைகளை மீறாமல் அவை சுழல்கின்றன. யிஹுஸ்பான்’ என்பதற்கு யிகணக்குக் குழு’ என்ற பொருளும் உண்டு. இது வாய்ப்பாட்டில் ஷிஹாப், ஷுஹ்பான் என்பதைப் போல உள்ளது. சூரியன்மீதும் அதன் ஒளியின் மீதும் ஆணையாக! (91:1). இங்கு யிஒளி’ என்பதைக் குறிக்க யிளுஹா’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. சூரியனால் சந்திரனை அடைய முடியாது; இரவு பகலை முந்தாது. (36:40). அதாவது அவ்விரண்டில் ஒன்றின் ஒளி மற்றொன்றை மறைக்காது; அது அவற் றுக்குச் சாத்தியமும் அல்ல. (சூரியனின் ஒளியைப் பிரதிபலிப்பதே சந்திரனாகும்.) இரவும் பகலும் ஒன்றையொன்று துரத்தாது. (அதனதன் நேரத்தில் வரும்.) இரவிலிருந்து பகலை உரித்தெடுக் கிறோம் (36:37). அதாவது அவை இரண்டில் ஒன்றை மற்றதிலிருந்து வெளியேற்றுகிறோம்; ஒவ்வொன்றையும் தனித்தனியாக இயங்கச் செய்கிறோம். (அன்று) வானம் பிளந்துவிடும். அது உறுதியற்றதாகிவிடும்; வானவர்கள் அதன் ஓரங்களில் இருப்பார்கள். (69:16,17). அதாவது அதன் பிளவுதான் அதன் உறுதியற்ற நிலையாகும். அது பிளக்காமல் இருக்கும்வரை அதன் இரு புறங்களில் வானவர்கள் இருப்பார்கள். கிணற்றின் ஓரங்கள் (கரைகள்) என்பதைப் போல. அதன் இரவை மூடி பகலை வெளிப் படுத்தினான் (79:29). யிமூடுதல்’ என்பதைக் குறிக்க ‘அஃக்த்த” எனும் சொல் ஆளப் பட்டுள்ளது. அவரை இரவு சூழ்ந்தபோது... (6:76). அதாவது இருட்டியபோது... சூரியன் சுருட்டப்படும்போது... (81:1). அதாவது அதன் ஒளி மங்கும்போது... என்று ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் விளக்கம் அளித்தார்கள். இரவின் மீதும் அது உள்ளடக்கிய வற்றின் மீதும் லி அதாவது அது ஒன்று சேர்த்துள்ள உயிரினங்கள்மீதும் லி முழுமை பெற்ற நிலவின் மீதும் லி அதாவது சீரான நிலவின் மீதும் லி சத்தியமாக! (84:17,18) வானத்தில் புரூஜ்களை லி அதாவது சூரியன், சந்திரன் ஆகியவற்றுக்குப் பல நிலைகளை லி ஏற்படுத்தியவன் வளமிக்கவன். (25:61). நிழலும் வெப்பமும் (ஹரூர்) லி அதாவது சூரியனுடன் பகலில் வரும் வெப்பமும் லி சமமாகாது. (35:21) இப்னு அப்பாஸ் (ரலி), ரூபா பின் அல்அஜ்ஜாஜ் (ரஹ்) ஆகியோர், இரவு வெப் பத்தை யிஹரூர்’ என்றும், பகல் வெப்பத்தை யிசமூம்’ என்றும் குறிப்பிடுகின்றனர். ‘அந்தரங்க நண்பர்கள்’ (வலீஜா) (9:16). அதாவது ஒன்றுக்குள் ஒன்றை வைத்து மறைக்கப்பட்ட அனைத்தும் யிவலீஜா ஆகும்.
3201. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

எவரது இறப்புக்காகவும் பிறப்புக்காகவும் சூரிய கிரகணமும் சந்திர கிரகணமும் ஏற்படுவதில்லை. ஆயினும், அவ்விரண்டும் அல்லாஹ்வின் சான்றுகளில் ஒரு சான் றாகும். அவ்விரண்டையும் நீங்கள் காண நேர்ந்தால் (இறைவனைத்) தொழுங்கள்.15

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 59