3038. حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ شُعْبَةَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم بَعَثَ مُعَاذًا وَأَبَا مُوسَى إِلَى الْيَمَنِ قَالَ "" يَسِّرَا وَلاَ تُعَسِّرَا، وَبَشِّرَا وَلاَ تُنَفِّرَا، وَتَطَاوَعَا وَلاَ تَخْتَلِفَا "".
பாடம் : 164
போரில் கருத்து வேறுபாடு கொண்டு சச்சரவு செய்வது வெறுக்கத் தக்கது என்பதும், தலைவருக்கு மாறு செய்பவருக்குக் கிடைக்கும் தண் டனையும்
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்:
நீங்கள் ஒருவருக்கொருவர் சச்சரவு செய்யாதீர்கள். (அவ்வாறு செய்தால்) நீங்கள் தைரியமிழந்துவிடுவீர்கள்; உங்களது வலிமை போய்விடும். (8:46)
இங்கே யிவலிமை’ என்பது போர் வலிமையைக் குறிக்கிறது என்று கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
3038. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களையும் என்னையும் யமன் நாட்டிற்கு அனுப்பிவைத்தபோது (எங்கள்) இருவரிடமும், ‘‘நீங்கள் (மக்களிடம்) எளிதாக நடந்துகொள்ளுங்கள்; (அவர்களைச்) சிரமப்படுத்திவிடாதீர்கள். (மக்களுக்கு) நற்செய்தி கூறுங்கள்; வெறுப்பூட்டிவிடாதீர்கள். ஒருவருடன் ஒருவர் இணைந்து செயல்படுங்கள்; (கருத்து வேறுபாடு கொண்டு) பிணங்கிக்கொள்ளாதீர்கள்” என்று (அறிவுரை) கூறினார்கள்.
அத்தியாயம் : 56
3038. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களையும் என்னையும் யமன் நாட்டிற்கு அனுப்பிவைத்தபோது (எங்கள்) இருவரிடமும், ‘‘நீங்கள் (மக்களிடம்) எளிதாக நடந்துகொள்ளுங்கள்; (அவர்களைச்) சிரமப்படுத்திவிடாதீர்கள். (மக்களுக்கு) நற்செய்தி கூறுங்கள்; வெறுப்பூட்டிவிடாதீர்கள். ஒருவருடன் ஒருவர் இணைந்து செயல்படுங்கள்; (கருத்து வேறுபாடு கொண்டு) பிணங்கிக்கொள்ளாதீர்கள்” என்று (அறிவுரை) கூறினார்கள்.
அத்தியாயம் : 56
3039. حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ الْبَرَاءَ بْنَ عَازِبٍ ـ رضى الله عنهما ـ يُحَدِّثُ قَالَ جَعَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى الرَّجَّالَةِ يَوْمَ أُحُدٍ ـ وَكَانُوا خَمْسِينَ رَجُلاً ـ عَبْدَ اللَّهِ بْنَ جُبَيْرٍ فَقَالَ "" إِنْ رَأَيْتُمُونَا تَخْطَفُنَا الطَّيْرُ، فَلاَ تَبْرَحُوا مَكَانَكُمْ هَذَا حَتَّى أُرْسِلَ إِلَيْكُمْ، وَإِنْ رَأَيْتُمُونَا هَزَمْنَا الْقَوْمَ وَأَوْطَأْنَاهُمْ فَلاَ تَبْرَحُوا حَتَّى أُرْسِلَ إِلَيْكُمْ "" فَهَزَمُوهُمْ. قَالَ فَأَنَا وَاللَّهِ رَأَيْتُ النِّسَاءَ يَشْتَدِدْنَ قَدْ بَدَتْ خَلاَخِلُهُنَّ وَأَسْوُقُهُنَّ رَافِعَاتٍ ثِيَابَهُنَّ، فَقَالَ أَصْحَابُ عَبْدِ اللَّهِ بْنِ جُبَيْرٍ الْغَنِيمَةَ ـ أَىْ قَوْمِ ـ الْغَنِيمَةَ، ظَهَرَ أَصْحَابُكُمْ فَمَا تَنْتَظِرُونَ فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ جُبَيْرٍ أَنَسِيتُمْ مَا قَالَ لَكُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالُوا وَاللَّهِ لَنَأْتِيَنَّ النَّاسَ فَلَنُصِيبَنَّ مِنَ الْغَنِيمَةِ. فَلَمَّا أَتَوْهُمْ صُرِفَتْ وُجُوهُهُمْ فَأَقْبَلُوا مُنْهَزِمِينَ، فَذَاكَ إِذْ يَدْعُوهُمُ الرَّسُولُ فِي أُخْرَاهُمْ، فَلَمْ يَبْقَ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم غَيْرُ اثْنَىْ عَشَرَ رَجُلاً، فَأَصَابُوا مِنَّا سَبْعِينَ، وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَأَصْحَابُهُ أَصَابَ مِنَ الْمُشْرِكِينَ يَوْمَ بَدْرٍ أَرْبَعِينَ وَمِائَةً سَبْعِينَ أَسِيرًا وَسَبْعِينَ قَتِيلاً، فَقَالَ أَبُو سُفْيَانَ أَفِي الْقَوْمِ مُحَمَّدٌ ثَلاَثَ مَرَّاتٍ، فَنَهَاهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يُجِيبُوهُ ثُمَّ قَالَ أَفِي الْقَوْمِ ابْنُ أَبِي قُحَافَةَ ثَلاَثَ مَرَّاتٍ، ثُمَّ قَالَ أَفِي الْقَوْمِ ابْنُ الْخَطَّابِ ثَلاَثَ مَرَّاتٍ، ثُمَّ رَجَعَ إِلَى أَصْحَابِهِ فَقَالَ أَمَّا هَؤُلاَءِ فَقَدْ قُتِلُوا. فَمَا مَلَكَ عُمَرُ نَفْسَهُ فَقَالَ كَذَبْتَ وَاللَّهِ يَا عَدُوَّ اللَّهِ، إِنَّ الَّذِينَ عَدَدْتَ لأَحْيَاءٌ كُلُّهُمْ، وَقَدْ بَقِيَ لَكَ مَا يَسُوؤُكَ. قَالَ يَوْمٌ بِيَوْمِ بَدْرٍ، وَالْحَرْبُ سِجَالٌ، إِنَّكُمْ سَتَجِدُونَ فِي الْقَوْمِ مُثْلَةً لَمْ آمُرْ بِهَا وَلَمْ تَسُؤْنِي، ثُمَّ أَخَذَ يَرْتَجِزُ أُعْلُ هُبَلْ، أُعْلُ هُبَلْ. قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَلاَ تُجِيبُوا لَهُ "". قَالُوا يَا رَسُولَ اللَّهِ، مَا نَقُولُ قَالَ "" قُولُوا اللَّهُ أَعْلَى وَأَجَلُّ "". قَالَ إِنَّ لَنَا الْعُزَّى وَلاَ عُزَّى لَكُمْ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَلاَ تُجِيبُوا لَهُ "". قَالَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ، مَا نَقُولُ قَالَ "" قُولُوا اللَّهُ مَوْلاَنَا وَلاَ مَوْلَى لَكُمْ "".
பாடம் : 164
போரில் கருத்து வேறுபாடு கொண்டு சச்சரவு செய்வது வெறுக்கத் தக்கது என்பதும், தலைவருக்கு மாறு செய்பவருக்குக் கிடைக்கும் தண் டனையும்
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்:
நீங்கள் ஒருவருக்கொருவர் சச்சரவு செய்யாதீர்கள். (அவ்வாறு செய்தால்) நீங்கள் தைரியமிழந்துவிடுவீர்கள்; உங்களது வலிமை போய்விடும். (8:46)
இங்கே யிவலிமை’ என்பது போர் வலிமையைக் குறிக்கிறது என்று கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
3039. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உஹுத் போரின்போது அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் காலாட் படையினருக்குத் தலைவராக நியமித்தார்கள். அவர்கள் (மொத்தம்) ஐம்பது பேர் இருந்தனர். அவர்களிடம், ‘‘(நாங்கள் போரில் கொல்லப் பட்டு) எங்க(ள் சடலங்க)ளைப் பறவைகள் கொத்திச் செல்வதை நீங்கள் பார்த்தால்கூட நான் உங்களுக்குச் சொல்லியனுப்பும்வரை உங்களின் இந்த இடத்தைவிட்டு நகராதீர் கள். நாங்கள் எதிரிகளைத் தோற்கடித்து (போர்க்களத்தில் செத்து வீழ்ந்து கிடக்கும் அவர்களை) மிதித்துக்கொண்டு செல்வதை நீங்கள் பார்த்தாலும்கூட நான் உங்களுக்குச் சொல்லியனுப்பும்வரை உங்களின் இடத்தைவிட்டு நகராதீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
முஸ்லிம்கள் எதிரிகளைத் தோற்கடித்து விட்டனர். அல்லாஹ்வின் மீதாணையாக! பெண்கள் தங்கள் ஆடையை உயர்த்திய வர்களாக, தம் கால் தண்டைகளும் கால்களும் வெளியில் தெரிய (மலையில்) ஓடிக்கொண்டிருப்பதை நான் பார்த்தேன். அப்போது அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அவர்களின் சகாக்கள், ‘‘போர்ச் செல்வங்கள்! மக்களே! போர்ச் செல்வங்கள்! உங்கள் தோழர்கள் வெற்றி பெற்றுவிட்டார்கள். இன்னும் எதை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?” என்று (உரக்கக்) கூறலாயினர்.
(இதைக் கேட்ட) அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களிடம் என்ன சொன்னார்கள் என்பதை நீங்கள் மறந்து விட்டீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் மக்களிடம் சென்று போர்க்களத்திலுள்ள பொருட்களை எடுத்துக்கொள்வோம்” என்று கூறினார்கள். அவர்கள் மக்களிடம் சென்றபோது அவர்களின் முகங்கள் திருப்பப்பட்டு (எங்கிருந்து வந்தார்களோ அந்த இடத் திற்கே திருப்பியனுப்பப்பட்டு) தோற்றுப் போய் சென்றுவிட்டனர். அவர்களுக்குப் பின்னால் இருந்த அணியிலிருந்து அவர் களைப் போர்க் களத்திற்குத் திரும்பி வரும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்துக்கொண்டிருந்தபோது இது நடந்தது.
அப்போது, நபி (ஸல்) அவர்களுடன் பன்னிரண்டு பேரைத் தவிர வேறெவரும் எஞ்சியிருக்கவில்லை. எதிரிகள் எங்களில் எழுபது பேரைக் கொன்றுவிட்டார்கள். நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் பத்ர் போரின்போது இணை வைப்பாளர்களில் (மொத்தம்) நூற்று நாற்பது பேரை பாதிப்புக்குள்ளாக்கிவிட்டி ருந்தார்கள். எழுபது பேரைக் கைதிகளாகப் பிடித்திருந்தார்கள்; எழுபது பேரைக் கொன்றுவிட்டிருந்தார்கள்.
ஆகவே, (அப்போது எதிரிகளின் அணியிலிருந்த) அபூசுஃப்யான் (களத்தில் இறங்கி), ‘‘(உங்கள்) கூட்டத்தில் முஹம்மத் இருக்கிறாரா?” என்று மூன்று முறை கேட்டார். அவருக்குப் பதிலளிக்க வேண்டாமென்று நபி (ஸல்) அவர்கள் மக்களைத் தடுத்துவிட்டார்கள். மீண்டும், ‘‘(உங்கள்) கூட்டத்தில் அபூகுஹாஃபாவின் மகன் (அபூபக்ர்) இருக்கிறாரா?” என்று மூன்று முறை கேட்டார். பிறகு, ‘‘கூட்டத்தில் கத்தாபின் மகன் (உமர்) இருக்கிறாரா?” என்று மூன்று முறை கேட்டார்.
பிறகு தம் தோழர்களின் பக்கம் திரும்பி, ‘‘இவர்களெல்லாரும் கொல்லப்பட்டு விட்டனர்” என்று சொன்னார். (இதைக் கேட்டு) உமர் (ரலி) அவர்கள் தம்மைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல், ‘‘பொய் சொன்னாய், அல்லாஹ்வின் பகைவனே! நீ எண்ணியவர்கள் எல்லாருமே உயிரோடுதான் இருக்கிறார்கள். உனக்குத் துன்பமளிக்கும் ஒரு விஷயம் (மக்கா வெற்றி)தான் இப்போது எஞ்சியுள்ளது” என்று சொன்னார்கள்.
(உடனே) அபூசுஃப்யான், ‘‘இந்நாள், பத்ர் போர் (நடந்த) நாளுக்குப் பதிலாகும். (நமக்கிடையிலான) போர் (வெற்றியும் தோல்வியும் மாறி மாறிவரும்) கிணற்று வாளியாகும். (உங்கள்) கூட்டத்தாரில் அங்கங்கள் சிதைக்கப்பட்டவர்களைக் காண்பீர்கள். அப்படிச் செய்யும்படி நான் கட்டளையிடவுமில்லை. அது எனக்கு வருத்தமளிக்கவும் இல்லை” என்று சொல்லிவிட்டுப் பிறகு, ‘‘ஹுபலே! உன் கட்சி மேலோங்கிவிட்டது, ஹுபலே! உன் கட்சி மேலோங்கிவிட்டது” என்று கவிதை பாடலானார்.146
நபி (ஸல்) அவர்கள் (தோழர்களை நோக்கி), ‘‘ இவருக்கு நீங்கள் பதிலளிக்க மாட்டீர்களா?” என்று கேட்டார்கள். தோழர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் என்ன (பதில்) சொல்வது?” என்று வினவ, நபி (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ்வே மிக உயர்ந்தவன்; மிக மேலானவன் என்று சொல்லுங்கள்” என்றார்கள்.
அபூசுஃப்யான், ‘‘எங்களுக்கு யிஉஸ்ஸா’ (எனும் தெய்வம்) இருக்கின்றது; உங்களிடம் உஸ்ஸா இல்லையே” என்று சொன்னார். உடனே நபி (ஸல்) அவர்கள், ‘‘இவருக்கு நீங்கள் பதிலளிக்கமாட்டீர்களா?” என்று கேட்டார்கள். தோழர்கள், ‘‘நாங்கள் என்ன (பதில்) சொல்வது? அல்லாஹ்வின் தூதரே!” என்று வினவ, நபி (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ்வே எங்கள் உதவியாளன்; உங்களுக்கு (அப்படியோர்) உதவியாளன் இல்லையே! என்று சொல்லுங்கள்” என்று பதிலளித்தார்கள்.147
அத்தியாயம் : 56
3039. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உஹுத் போரின்போது அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் காலாட் படையினருக்குத் தலைவராக நியமித்தார்கள். அவர்கள் (மொத்தம்) ஐம்பது பேர் இருந்தனர். அவர்களிடம், ‘‘(நாங்கள் போரில் கொல்லப் பட்டு) எங்க(ள் சடலங்க)ளைப் பறவைகள் கொத்திச் செல்வதை நீங்கள் பார்த்தால்கூட நான் உங்களுக்குச் சொல்லியனுப்பும்வரை உங்களின் இந்த இடத்தைவிட்டு நகராதீர் கள். நாங்கள் எதிரிகளைத் தோற்கடித்து (போர்க்களத்தில் செத்து வீழ்ந்து கிடக்கும் அவர்களை) மிதித்துக்கொண்டு செல்வதை நீங்கள் பார்த்தாலும்கூட நான் உங்களுக்குச் சொல்லியனுப்பும்வரை உங்களின் இடத்தைவிட்டு நகராதீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
முஸ்லிம்கள் எதிரிகளைத் தோற்கடித்து விட்டனர். அல்லாஹ்வின் மீதாணையாக! பெண்கள் தங்கள் ஆடையை உயர்த்திய வர்களாக, தம் கால் தண்டைகளும் கால்களும் வெளியில் தெரிய (மலையில்) ஓடிக்கொண்டிருப்பதை நான் பார்த்தேன். அப்போது அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அவர்களின் சகாக்கள், ‘‘போர்ச் செல்வங்கள்! மக்களே! போர்ச் செல்வங்கள்! உங்கள் தோழர்கள் வெற்றி பெற்றுவிட்டார்கள். இன்னும் எதை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?” என்று (உரக்கக்) கூறலாயினர்.
(இதைக் கேட்ட) அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களிடம் என்ன சொன்னார்கள் என்பதை நீங்கள் மறந்து விட்டீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் மக்களிடம் சென்று போர்க்களத்திலுள்ள பொருட்களை எடுத்துக்கொள்வோம்” என்று கூறினார்கள். அவர்கள் மக்களிடம் சென்றபோது அவர்களின் முகங்கள் திருப்பப்பட்டு (எங்கிருந்து வந்தார்களோ அந்த இடத் திற்கே திருப்பியனுப்பப்பட்டு) தோற்றுப் போய் சென்றுவிட்டனர். அவர்களுக்குப் பின்னால் இருந்த அணியிலிருந்து அவர் களைப் போர்க் களத்திற்குத் திரும்பி வரும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்துக்கொண்டிருந்தபோது இது நடந்தது.
அப்போது, நபி (ஸல்) அவர்களுடன் பன்னிரண்டு பேரைத் தவிர வேறெவரும் எஞ்சியிருக்கவில்லை. எதிரிகள் எங்களில் எழுபது பேரைக் கொன்றுவிட்டார்கள். நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் பத்ர் போரின்போது இணை வைப்பாளர்களில் (மொத்தம்) நூற்று நாற்பது பேரை பாதிப்புக்குள்ளாக்கிவிட்டி ருந்தார்கள். எழுபது பேரைக் கைதிகளாகப் பிடித்திருந்தார்கள்; எழுபது பேரைக் கொன்றுவிட்டிருந்தார்கள்.
ஆகவே, (அப்போது எதிரிகளின் அணியிலிருந்த) அபூசுஃப்யான் (களத்தில் இறங்கி), ‘‘(உங்கள்) கூட்டத்தில் முஹம்மத் இருக்கிறாரா?” என்று மூன்று முறை கேட்டார். அவருக்குப் பதிலளிக்க வேண்டாமென்று நபி (ஸல்) அவர்கள் மக்களைத் தடுத்துவிட்டார்கள். மீண்டும், ‘‘(உங்கள்) கூட்டத்தில் அபூகுஹாஃபாவின் மகன் (அபூபக்ர்) இருக்கிறாரா?” என்று மூன்று முறை கேட்டார். பிறகு, ‘‘கூட்டத்தில் கத்தாபின் மகன் (உமர்) இருக்கிறாரா?” என்று மூன்று முறை கேட்டார்.
பிறகு தம் தோழர்களின் பக்கம் திரும்பி, ‘‘இவர்களெல்லாரும் கொல்லப்பட்டு விட்டனர்” என்று சொன்னார். (இதைக் கேட்டு) உமர் (ரலி) அவர்கள் தம்மைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல், ‘‘பொய் சொன்னாய், அல்லாஹ்வின் பகைவனே! நீ எண்ணியவர்கள் எல்லாருமே உயிரோடுதான் இருக்கிறார்கள். உனக்குத் துன்பமளிக்கும் ஒரு விஷயம் (மக்கா வெற்றி)தான் இப்போது எஞ்சியுள்ளது” என்று சொன்னார்கள்.
(உடனே) அபூசுஃப்யான், ‘‘இந்நாள், பத்ர் போர் (நடந்த) நாளுக்குப் பதிலாகும். (நமக்கிடையிலான) போர் (வெற்றியும் தோல்வியும் மாறி மாறிவரும்) கிணற்று வாளியாகும். (உங்கள்) கூட்டத்தாரில் அங்கங்கள் சிதைக்கப்பட்டவர்களைக் காண்பீர்கள். அப்படிச் செய்யும்படி நான் கட்டளையிடவுமில்லை. அது எனக்கு வருத்தமளிக்கவும் இல்லை” என்று சொல்லிவிட்டுப் பிறகு, ‘‘ஹுபலே! உன் கட்சி மேலோங்கிவிட்டது, ஹுபலே! உன் கட்சி மேலோங்கிவிட்டது” என்று கவிதை பாடலானார்.146
நபி (ஸல்) அவர்கள் (தோழர்களை நோக்கி), ‘‘ இவருக்கு நீங்கள் பதிலளிக்க மாட்டீர்களா?” என்று கேட்டார்கள். தோழர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் என்ன (பதில்) சொல்வது?” என்று வினவ, நபி (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ்வே மிக உயர்ந்தவன்; மிக மேலானவன் என்று சொல்லுங்கள்” என்றார்கள்.
அபூசுஃப்யான், ‘‘எங்களுக்கு யிஉஸ்ஸா’ (எனும் தெய்வம்) இருக்கின்றது; உங்களிடம் உஸ்ஸா இல்லையே” என்று சொன்னார். உடனே நபி (ஸல்) அவர்கள், ‘‘இவருக்கு நீங்கள் பதிலளிக்கமாட்டீர்களா?” என்று கேட்டார்கள். தோழர்கள், ‘‘நாங்கள் என்ன (பதில்) சொல்வது? அல்லாஹ்வின் தூதரே!” என்று வினவ, நபி (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ்வே எங்கள் உதவியாளன்; உங்களுக்கு (அப்படியோர்) உதவியாளன் இல்லையே! என்று சொல்லுங்கள்” என்று பதிலளித்தார்கள்.147
அத்தியாயம் : 56
3040. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَحْسَنَ النَّاسِ، وَأَجْوَدَ النَّاسِ، وَأَشْجَعَ النَّاسِ، قَالَ وَقَدْ فَزِعَ أَهْلُ الْمَدِينَةِ لَيْلَةً سَمِعُوا صَوْتًا، قَالَ فَتَلَقَّاهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى فَرَسٍ لأَبِي طَلْحَةَ عُرْىٍ، وَهُوَ مُتَقَلِّدٌ سَيْفَهُ فَقَالَ "" لَمْ تُرَاعُوا، لَمْ تُرَاعُوا "". ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" وَجَدْتُهُ بَحْرًا "". يَعْنِي الْفَرَسَ.
பாடம் : 165
இரவில் மக்கள் பீதியடைந்தால்...
3040. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடையே சிறந்த (நற்)குணமுடையவர் களாகவும் மக்களிலேயே அதிக கொடைக் குணம் உடையவர்களாகவும் மக்களிலேயே அதிக வீரமுடையவர்களாகவும் இருந் தார்கள்.
(ஒருமுறை) மதீனாவாசிகள் இரவு நேரத்தில் (எதிரிகள் படையெடுத்து வருவ தாகக் கேள்விப்பட்டுப்) பீதியடைந்தார்கள்; ஏதோ சப்தத்தையும் கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது வாளைத் தொங்கவிட்டவர்களாக, அபூதல்ஹா (ரலி) அவர்களின் சேணம் பூட்டாத குதிரையின் மீது அமர்ந்த வண்ணம் மக்களை எதிர் கொண்டார்கள்.
அப்போது, ‘யிபயப்படாதீர்கள். பீதியடையாதீர்கள்” என்று (மக்களைப் பார்த்து) நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். பிறகு, ‘‘தங்குதடையின்றி வேகமாக ஓடக் கூடியதாக இந்தக் குதிரையை நாம் கண்டோம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
அத்தியாயம் : 56
3040. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடையே சிறந்த (நற்)குணமுடையவர் களாகவும் மக்களிலேயே அதிக கொடைக் குணம் உடையவர்களாகவும் மக்களிலேயே அதிக வீரமுடையவர்களாகவும் இருந் தார்கள்.
(ஒருமுறை) மதீனாவாசிகள் இரவு நேரத்தில் (எதிரிகள் படையெடுத்து வருவ தாகக் கேள்விப்பட்டுப்) பீதியடைந்தார்கள்; ஏதோ சப்தத்தையும் கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது வாளைத் தொங்கவிட்டவர்களாக, அபூதல்ஹா (ரலி) அவர்களின் சேணம் பூட்டாத குதிரையின் மீது அமர்ந்த வண்ணம் மக்களை எதிர் கொண்டார்கள்.
அப்போது, ‘யிபயப்படாதீர்கள். பீதியடையாதீர்கள்” என்று (மக்களைப் பார்த்து) நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். பிறகு, ‘‘தங்குதடையின்றி வேகமாக ஓடக் கூடியதாக இந்தக் குதிரையை நாம் கண்டோம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
அத்தியாயம் : 56
3041. حَدَّثَنَا الْمَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا يَزِيدُ بْنُ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ، أَنَّهُ أَخْبَرَهُ قَالَ خَرَجْتُ مِنَ الْمَدِينَةِ ذَاهِبًا نَحْوَ الْغَابَةِ، حَتَّى إِذَا كُنْتُ بِثَنِيَّةِ الْغَابَةِ لَقِيَنِي غُلاَمٌ لِعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ قُلْتُ وَيْحَكَ، مَا بِكَ قَالَ أُخِذَتْ لِقَاحُ النَّبِيِّ صلى الله عليه وسلم. قُلْتُ مَنْ أَخَذَهَا قَالَ غَطَفَانُ وَفَزَارَةُ. فَصَرَخْتُ ثَلاَثَ صَرَخَاتٍ أَسْمَعْتُ مَا بَيْنَ لاَبَتَيْهَا يَا صَبَاحَاهْ، يَا صَبَاحَاهْ. ثُمَّ انْدَفَعْتُ حَتَّى أَلْقَاهُمْ وَقَدْ أَخَذُوهَا، فَجَعَلْتُ أَرْمِيهِمْ وَأَقُولُ أَنَا ابْنُ الأَكْوَعِ، وَالْيَوْمُ يَوْمُ الرُّضَّعِ، فَاسْتَنْقَذْتُهَا مِنْهُمْ قَبْلَ أَنْ يَشْرَبُوا، فَأَقْبَلْتُ بِهَا أَسُوقُهَا، فَلَقِيَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ، إِنَّ الْقَوْمَ عِطَاشٌ، وَإِنِّي أَعْجَلْتُهُمْ أَنْ يَشْرَبُوا سِقْيَهُمْ، فَابْعَثْ فِي إِثْرِهِمْ، فَقَالَ "" يَا ابْنَ الأَكْوَعِ، مَلَكْتَ فَأَسْجِحْ. إِنَّ الْقَوْمَ يُقْرَوْنَ فِي قَوْمِهِمْ "".
பாடம் : 166
எதிரியைக் கண்டவர், யியா ஸபாஹா!' (உதவி! உதவி! இதோ, அதிகாலை ஆபத்து!) என்று மக்களின் காதில் விழுமாறு உரக்கக் குரலெழுப்பி அழைப்பது
3041. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் மதீனாவிலிருந்து ‘அல்ஃகாபா’வை நோக்கிச் செல்வதற்காகப் புறப்பட்டேன்.148 நான் அல்ஃகாபாவின் மலைப் பகுதியை அடைந்தபோது, அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களுடைய அடிமையொருவர் என்னைச் சந்தித்தார். நான், ‘‘உனக்குக் கேடுதான்! உமக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்டேன். அவர், ‘‘நபி (ஸல்) அவர்களின் பால் ஒட்டகங்கள் பிடித்துச் செல்லப்பட்டுவிட்ட”’ என்று கூறினார். நான், ‘‘அவற்றை யார் பிடித்துச் சென்றது?” என்று கேட்டேன். அதற்கு அவர், ‘‘கத்ஃபான் மற்றும் ஃபஸாரா குலத்தார்” என்று பதிலளித்தார்.
உடனே நான் மதீனாவின் இரு மலைகளுக்கிடையேயிருந்த அனைவருக் கும் கேட்கும்படி உரக்க சப்தமிட்டு, யிஉதவி! உதவி! அதிகாலை ஆபத்து! (யா ஸபாஹா!)› என்று மும்முறை கத்தினேன். பிறகு, விரைந்து சென்று அவர்களை அடைந்தேன். அவர்கள் (கொள்ளையடித்துச் சென்ற) ஒட்டகங்களைக் கையில் பிடித்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தனர். அவர்கள்மீது அம்பெய்யத் தொடங்கினேன்.
‘‘அக்வஇன் மகன் நான்இன்று அற்பர்கள் (அழியும்) நாள்”
என்று (பாடியபடி) கூறினேன்.
பிறகு அவர்கள் (தங்கள் கையிலிருந்த தண்ணீரை) அருந்துவதற்கு முன்னால் அவர்களிடமிருந்து அந்த ஒட்டகங்களை விடுவித்துவிட்டேன். பிறகு திரும்பிச் சென்றபோது நபி (ஸல்) அவர்கள் என் னைச் சந்தித்தார்கள். நான், ‘‘அல்லாஹ் வின் தூதரே! அந்தக் குலத்தார் தாகமாக இருந்தார்கள். அவர்கள் தண்ணீர்கூட அருந்தவிடாமல் அவர்களை நான் (அம் பெய்து) அவசரமாக ஓடவைத்துவிட்டேன். உடனே அவர்களைத் துரத்திச் சென்று பிடித்துவரப் படையனுப்புங்கள்” என்று கூறினேன்.
நபி (ஸல்) அவர்கள், ‘‘அக்வஇன் மகனே! நீ அவர்களைத் தோற்கடித்துவிட்டாய். ஆகவே, மென்மையாக நடந்து கொள்! அந்தக் குழுவினர் (தம் சகாக்களைச் சென்றடைந்துவிட்டனர்; அங்கு) தம் குலத்தாரிடம் உபசரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்” என்று கூறினார்கள்.149
அத்தியாயம் : 56
3041. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் மதீனாவிலிருந்து ‘அல்ஃகாபா’வை நோக்கிச் செல்வதற்காகப் புறப்பட்டேன்.148 நான் அல்ஃகாபாவின் மலைப் பகுதியை அடைந்தபோது, அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களுடைய அடிமையொருவர் என்னைச் சந்தித்தார். நான், ‘‘உனக்குக் கேடுதான்! உமக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்டேன். அவர், ‘‘நபி (ஸல்) அவர்களின் பால் ஒட்டகங்கள் பிடித்துச் செல்லப்பட்டுவிட்ட”’ என்று கூறினார். நான், ‘‘அவற்றை யார் பிடித்துச் சென்றது?” என்று கேட்டேன். அதற்கு அவர், ‘‘கத்ஃபான் மற்றும் ஃபஸாரா குலத்தார்” என்று பதிலளித்தார்.
உடனே நான் மதீனாவின் இரு மலைகளுக்கிடையேயிருந்த அனைவருக் கும் கேட்கும்படி உரக்க சப்தமிட்டு, யிஉதவி! உதவி! அதிகாலை ஆபத்து! (யா ஸபாஹா!)› என்று மும்முறை கத்தினேன். பிறகு, விரைந்து சென்று அவர்களை அடைந்தேன். அவர்கள் (கொள்ளையடித்துச் சென்ற) ஒட்டகங்களைக் கையில் பிடித்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தனர். அவர்கள்மீது அம்பெய்யத் தொடங்கினேன்.
‘‘அக்வஇன் மகன் நான்இன்று அற்பர்கள் (அழியும்) நாள்”
என்று (பாடியபடி) கூறினேன்.
பிறகு அவர்கள் (தங்கள் கையிலிருந்த தண்ணீரை) அருந்துவதற்கு முன்னால் அவர்களிடமிருந்து அந்த ஒட்டகங்களை விடுவித்துவிட்டேன். பிறகு திரும்பிச் சென்றபோது நபி (ஸல்) அவர்கள் என் னைச் சந்தித்தார்கள். நான், ‘‘அல்லாஹ் வின் தூதரே! அந்தக் குலத்தார் தாகமாக இருந்தார்கள். அவர்கள் தண்ணீர்கூட அருந்தவிடாமல் அவர்களை நான் (அம் பெய்து) அவசரமாக ஓடவைத்துவிட்டேன். உடனே அவர்களைத் துரத்திச் சென்று பிடித்துவரப் படையனுப்புங்கள்” என்று கூறினேன்.
நபி (ஸல்) அவர்கள், ‘‘அக்வஇன் மகனே! நீ அவர்களைத் தோற்கடித்துவிட்டாய். ஆகவே, மென்மையாக நடந்து கொள்! அந்தக் குழுவினர் (தம் சகாக்களைச் சென்றடைந்துவிட்டனர்; அங்கு) தம் குலத்தாரிடம் உபசரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்” என்று கூறினார்கள்.149
அத்தியாயம் : 56
3042. حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ سَأَلَ رَجُلٌ الْبَرَاءَ ـ رضى الله عنه ـ فَقَالَ يَا أَبَا عُمَارَةَ، أَوَلَّيْتُمْ يَوْمَ حُنَيْنٍ قَالَ الْبَرَاءُ وَأَنَا أَسْمَعُ أَمَّا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَمْ يُوَلِّ يَوْمَئِذٍ، كَانَ أَبُو سُفْيَانَ بْنُ الْحَارِثِ آخِذًا بِعِنَانِ بَغْلَتِهِ، فَلَمَّا غَشِيَهُ الْمُشْرِكُونَ نَزَلَ، فَجَعَلَ يَقُولُ أَنَا النَّبِيُّ لاَ كَذِبْ، أَنَا ابْنُ عَبْدِ الْمُطَّلِبْ قَالَ فَمَا رُئِيَ مِنَ النَّاسِ يَوْمَئِذٍ أَشَدُّ مِنْهُ.
பாடம் : 167
(எதிரியின் மீது அம்பெய்தபடி) ‘‘இதை வாங்கிக்கொள். நான் இன் னாரின் மகன்” என்று கூறுவது
சலமா பின் அல்அக்வஉ (ரலி) கூறி னார்கள்:
இதை வாங்கிக்கொள்க! நான் அக்வஉ உடைய மகன்.150
3042. அபூஇஸ்ஹாக் அம்ர் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர், ‘‘அபூஉமாராவே! ஹுனைன் போரின்போது நீங்கள் புறமுதுகிட்டு ஓடினீர்களா?” என்று கேட்டார். நான் கேட்டுக்கொண்டிருக்க, பராஉ (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களைப் பொறுத்த வரை அவர்கள் அன்று பின்வாங்கிச் செல்லவில்லை. அபூ சுஃப்யான் பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்த கோவேறுக் கழுதையின் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டிருந்தார்கள்.
இணைவைப்பாளர்கள் நபி (ஸல்) அவர்களைச் சூழ்ந்துகொண்டபோது, அவர்கள் (தம் வாகனத்திலிருந்து) இறங்கி, யிநான் இறைத்தூதர்தான். (இதில்) பொய் யில்லை. நான் அப்துல் முத்தலிபின் மகன்’ என்று (பாடியபடி) கூறினார்கள். அன்று நபி (ஸல்) அவர்களைவிடத் துணிச்சல் மிகுந்த எவரும் மக்களிடையே காணப்படவில்லை” என்று கூறினார்கள்.151
அத்தியாயம் : 56
3042. அபூஇஸ்ஹாக் அம்ர் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர், ‘‘அபூஉமாராவே! ஹுனைன் போரின்போது நீங்கள் புறமுதுகிட்டு ஓடினீர்களா?” என்று கேட்டார். நான் கேட்டுக்கொண்டிருக்க, பராஉ (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களைப் பொறுத்த வரை அவர்கள் அன்று பின்வாங்கிச் செல்லவில்லை. அபூ சுஃப்யான் பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்த கோவேறுக் கழுதையின் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டிருந்தார்கள்.
இணைவைப்பாளர்கள் நபி (ஸல்) அவர்களைச் சூழ்ந்துகொண்டபோது, அவர்கள் (தம் வாகனத்திலிருந்து) இறங்கி, யிநான் இறைத்தூதர்தான். (இதில்) பொய் யில்லை. நான் அப்துல் முத்தலிபின் மகன்’ என்று (பாடியபடி) கூறினார்கள். அன்று நபி (ஸல்) அவர்களைவிடத் துணிச்சல் மிகுந்த எவரும் மக்களிடையே காணப்படவில்லை” என்று கூறினார்கள்.151
அத்தியாயம் : 56
3043. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي أُمَامَةَ ـ هُوَ ابْنُ سَهْلِ بْنِ حُنَيْفٍ ـ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا نَزَلَتْ بَنُو قُرَيْظَةَ عَلَى حُكْمِ سَعْدٍ ـ هُوَ ابْنُ مُعَاذٍ ـ بَعَثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم، وَكَانَ قَرِيبًا مِنْهُ، فَجَاءَ عَلَى حِمَارٍ، فَلَمَّا دَنَا قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" قُومُوا إِلَى سَيِّدِكُمْ "". فَجَاءَ فَجَلَسَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ لَهُ "" إِنَّ هَؤُلاَءِ نَزَلُوا عَلَى حُكْمِكَ "". قَالَ فَإِنِّي أَحْكُمُ أَنْ تُقْتَلَ الْمُقَاتِلَةُ، وَأَنْ تُسْبَى الذُّرِّيَّةُ. قَالَ "" لَقَدْ حَكَمْتَ فِيهِمْ بِحُكْمِ الْمَلِكِ "".
பாடம் : 168
எதிரிகள் (முஸ்லிம்) ஒருவரது தீர்ப்பை ஏற்கச் சம்மதித்தால்...
3043. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(யூதர்களான) பனூ குறைழா குலத்தார் (கோட்டையிலிருந்து இறங்கி வந்து) சஅத் பின் முஆத் (ரலி) அவர்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளச் சம்மதித்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சஅத் (ரலி) அவர்களை அழைத்து வரும் படி ஆளனுப்பினார்கள். லிசஅத் (ரலி) அவர்கள் அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு அருகில்தான் (அகழ்ப் போரில் காயமடைந்து) இருந்தார்கள்லி அவர்கள் ஒரு கழுதையின் மீதமர்ந்து வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உங்கள் தலைவரை நோக்கி எழுந்து செல்லுங்கள்” என்று (அன்சாரிகளிடம்) கூறினார்கள்.
சஅத் (ரலி) அவர்கள் வந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகே அமர்ந்துகொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இவர்கள் உங்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளச் சம்மதித்து (இறங்கி) வந்திருக்கிறார்கள்” என்று கூறினார்கள். சஅத் (ரலி) அவர்கள், ‘‘அப்படியென்றால் நான் அவர்களில் உள்ள போர் வீரர்களைக் கொன்றுவிட வேண்டுமென்றும் பெண்களையும் குழந்தை களையும் போர்க் கைதிகளாக ஆக்கிக்கொள்ள வேண்டுமென்றும் தீர்ப்பளிக் கின்றேன்” என்று சொன்னார்கள்.
நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் அரசனின் (அல்லாஹ்வின்) தீர்ப்பையே இவர்கள் விஷயத்தில் அளித்திருக்கிறீர்கள்” என்றார்கள்.152
அத்தியாயம் : 56
3043. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(யூதர்களான) பனூ குறைழா குலத்தார் (கோட்டையிலிருந்து இறங்கி வந்து) சஅத் பின் முஆத் (ரலி) அவர்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளச் சம்மதித்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சஅத் (ரலி) அவர்களை அழைத்து வரும் படி ஆளனுப்பினார்கள். லிசஅத் (ரலி) அவர்கள் அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு அருகில்தான் (அகழ்ப் போரில் காயமடைந்து) இருந்தார்கள்லி அவர்கள் ஒரு கழுதையின் மீதமர்ந்து வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உங்கள் தலைவரை நோக்கி எழுந்து செல்லுங்கள்” என்று (அன்சாரிகளிடம்) கூறினார்கள்.
சஅத் (ரலி) அவர்கள் வந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகே அமர்ந்துகொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இவர்கள் உங்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளச் சம்மதித்து (இறங்கி) வந்திருக்கிறார்கள்” என்று கூறினார்கள். சஅத் (ரலி) அவர்கள், ‘‘அப்படியென்றால் நான் அவர்களில் உள்ள போர் வீரர்களைக் கொன்றுவிட வேண்டுமென்றும் பெண்களையும் குழந்தை களையும் போர்க் கைதிகளாக ஆக்கிக்கொள்ள வேண்டுமென்றும் தீர்ப்பளிக் கின்றேன்” என்று சொன்னார்கள்.
நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் அரசனின் (அல்லாஹ்வின்) தீர்ப்பையே இவர்கள் விஷயத்தில் அளித்திருக்கிறீர்கள்” என்றார்கள்.152
அத்தியாயம் : 56
3044. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم دَخَلَ عَامَ الْفَتْحِ وَعَلَى رَأْسِهِ الْمِغْفَرُ، فَلَمَّا نَزَعَهُ جَاءَ رَجُلٌ فَقَالَ إِنَّ ابْنَ خَطَلٍ مُتَعَلِّقٌ بِأَسْتَارِ الْكَعْبَةِ، فَقَالَ "" اقْتُلُوهُ "".
பாடம் : 169
சிறைக் கைதியைக் கட்டிப்போட் டுக் கொலை செய்வது
3044. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்கா நகரம்) வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில், தலையில் இரும்புத் தொப்பி அணிந்துகொண்டு (மக்கா நகரினுள்) நுழைந்தார்கள். அதை அவர்கள் கழற்றிய போது ஒரு மனிதர் வந்து, ‘‘இப்னு கத்தல் என்பவன் (அபயம் தேடியவனாக) கஅபாவின் திரைகளைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கின்றான்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவனைக் கொன்றுவிடுங்கள்” என்று உத்தரவிட் டார்கள்.153
அத்தியாயம் : 56
3044. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்கா நகரம்) வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில், தலையில் இரும்புத் தொப்பி அணிந்துகொண்டு (மக்கா நகரினுள்) நுழைந்தார்கள். அதை அவர்கள் கழற்றிய போது ஒரு மனிதர் வந்து, ‘‘இப்னு கத்தல் என்பவன் (அபயம் தேடியவனாக) கஅபாவின் திரைகளைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கின்றான்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவனைக் கொன்றுவிடுங்கள்” என்று உத்தரவிட் டார்கள்.153
அத்தியாயம் : 56
3045. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عَمْرُو بْنُ أَبِي سُفْيَانَ بْنِ أَسِيدِ بْنِ جَارِيَةَ الثَّقَفِيُّ ـ وَهْوَ حَلِيفٌ لِبَنِي زُهْرَةَ وَكَانَ مِنْ أَصْحَابِ أَبِي هُرَيْرَةَ ـ أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ بَعَثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَشَرَةَ رَهْطٍ سَرِيَّةً عَيْنًا، وَأَمَّرَ عَلَيْهِمْ عَاصِمَ بْنَ ثَابِتٍ الأَنْصَارِيَّ جَدَّ عَاصِمِ بْنِ عُمَرَ، فَانْطَلَقُوا حَتَّى إِذَا كَانُوا بِالْهَدَأَةِ وَهْوَ بَيْنَ عُسْفَانَ وَمَكَّةَ ذُكِرُوا لِحَىٍّ مِنْ هُذَيْلٍ يُقَالُ لَهُمْ بَنُو لِحْيَانَ، فَنَفَرُوا لَهُمْ قَرِيبًا مِنْ مِائَتَىْ رَجُلٍ، كُلُّهُمْ رَامٍ، فَاقْتَصُّوا آثَارَهُمْ حَتَّى وَجَدُوا مَأْكَلَهُمْ تَمْرًا تَزَوَّدُوهُ مِنَ الْمَدِينَةِ فَقَالُوا هَذَا تَمْرُ يَثْرِبَ. فَاقْتَصُّوا آثَارَهُمْ، فَلَمَّا رَآهُمْ عَاصِمٌ وَأَصْحَابُهُ لَجَئُوا إِلَى فَدْفَدٍ، وَأَحَاطَ بِهِمُ الْقَوْمُ فَقَالُوا لَهُمُ انْزِلُوا وَأَعْطُونَا بِأَيْدِيكُمْ، وَلَكُمُ الْعَهْدُ وَالْمِيثَاقُ، وَلاَ نَقْتُلُ مِنْكُمْ أَحَدًا. قَالَ عَاصِمُ بْنُ ثَابِتٍ أَمِيرُ السَّرِيَّةِ أَمَّا أَنَا فَوَاللَّهِ لاَ أَنْزِلُ الْيَوْمَ فِي ذِمَّةِ كَافِرٍ، اللَّهُمَّ أَخْبِرْ عَنَّا نَبِيَّكَ. فَرَمَوْهُمْ بِالنَّبْلِ، فَقَتَلُوا عَاصِمًا فِي سَبْعَةٍ، فَنَزَلَ إِلَيْهِمْ ثَلاَثَةُ رَهْطٍ بِالْعَهْدِ وَالْمِيثَاقِ، مِنْهُمْ خُبَيْبٌ الأَنْصَارِيُّ وَابْنُ دَثِنَةَ وَرَجُلٌ آخَرُ، فَلَمَّا اسْتَمْكَنُوا مِنْهُمْ أَطْلَقُوا أَوْتَارَ قِسِيِّهِمْ فَأَوْثَقُوهُمْ فَقَالَ الرَّجُلُ الثَّالِثُ هَذَا أَوَّلُ الْغَدْرِ، وَاللَّهِ لاَ أَصْحَبُكُمْ، إِنَّ فِي هَؤُلاَءِ لأُسْوَةً. يُرِيدُ الْقَتْلَى، فَجَرَّرُوهُ وَعَالَجُوهُ عَلَى أَنْ يَصْحَبَهُمْ فَأَبَى فَقَتَلُوهُ، فَانْطَلَقُوا بِخُبَيْبٍ وَابْنِ دَثِنَةَ حَتَّى بَاعُوهُمَا بِمَكَّةَ بَعْدَ وَقْعَةِ بَدْرٍ، فَابْتَاعَ خُبَيْبًا بَنُو الْحَارِثِ بْنِ عَامِرِ بْنِ نَوْفَلِ بْنِ عَبْدِ مَنَافٍ، وَكَانَ خُبَيْبٌ هُوَ قَتَلَ الْحَارِثَ بْنَ عَامِرٍ يَوْمَ بَدْرٍ، فَلَبِثَ خُبَيْبٌ عِنْدَهُمْ أَسِيرًا، فَأَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عِيَاضٍ أَنَّ بِنْتَ الْحَارِثِ أَخْبَرَتْهُ أَنَّهُمْ حِينَ اجْتَمَعُوا اسْتَعَارَ مِنْهَا مُوسَى يَسْتَحِدُّ بِهَا فَأَعَارَتْهُ، فَأَخَذَ ابْنًا لِي وَأَنَا غَافِلَةٌ حِينَ أَتَاهُ قَالَتْ فَوَجَدْتُهُ مُجْلِسَهُ عَلَى فَخِذِهِ وَالْمُوسَى بِيَدِهِ، فَفَزِعْتُ فَزْعَةً عَرَفَهَا خُبَيْبٌ فِي وَجْهِي فَقَالَ تَخْشَيْنَ أَنْ أَقْتُلَهُ مَا كُنْتُ لأَفْعَلَ ذَلِكَ. وَاللَّهِ مَا رَأَيْتُ أَسِيرًا قَطُّ خَيْرًا مِنْ خُبَيْبٍ، وَاللَّهِ لَقَدْ وَجَدْتُهُ يَوْمًا يَأْكُلُ مِنْ قِطْفِ عِنَبٍ فِي يَدِهِ، وَإِنَّهُ لَمُوثَقٌ فِي الْحَدِيدِ، وَمَا بِمَكَّةَ مِنْ ثَمَرٍ وَكَانَتْ تَقُولُ إِنَّهُ لَرِزْقٌ مِنَ اللَّهِ رَزَقَهُ خُبَيْبًا، فَلَمَّا خَرَجُوا مِنَ الْحَرَمِ لِيَقْتُلُوهُ فِي الْحِلِّ، قَالَ لَهُمْ خُبَيْبٌ ذَرُونِي أَرْكَعْ رَكْعَتَيْنِ. فَتَرَكُوهُ، فَرَكَعَ رَكْعَتَيْنِ ثُمَّ قَالَ لَوْلاَ أَنْ تَظُنُّوا أَنَّ مَا بِي جَزَعٌ لَطَوَّلْتُهَا اللَّهُمَّ أَحْصِهِمْ عَدَدًا. وَلَسْتُ أُبَالِي حِينَ أُقْتَلُ مُسْلِمًا عَلَى أَىِّ شِقٍّ كَانَ لِلَّهِ مَصْرَعِي وَذَلِكَ فِي ذَاتِ الإِلَهِ وَإِنْ يَشَأْ يُبَارِكْ عَلَى أَوْصَالِ شِلْوٍ مُمَزَّعِ فَقَتَلَهُ ابْنُ الْحَارِثِ، فَكَانَ خُبَيْبٌ هُوَ سَنَّ الرَّكْعَتَيْنِ لِكُلِّ امْرِئٍ مُسْلِمٍ قُتِلَ صَبْرًا، فَاسْتَجَابَ اللَّهُ لِعَاصِمِ بْنِ ثَابِتٍ يَوْمَ أُصِيبَ، فَأَخْبَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَصْحَابَهُ خَبَرَهُمْ وَمَا أُصِيبُوا، وَبَعَثَ نَاسٌ مِنْ كُفَّارِ قُرَيْشٍ إِلَى عَاصِمٍ حِينَ حُدِّثُوا أَنَّهُ قُتِلَ لِيُؤْتَوْا بِشَىْءٍ مِنْهُ يُعْرَفُ، وَكَانَ قَدْ قَتَلَ رَجُلاً مِنْ عُظَمَائِهِمْ يَوْمَ بَدْرٍ، فَبُعِثَ عَلَى عَاصِمٍ مِثْلُ الظُّلَّةِ مِنَ الدَّبْرِ، فَحَمَتْهُ مِنْ رَسُولِهِمْ، فَلَمْ يَقْدِرُوا عَلَى أَنْ يَقْطَعَ مِنْ لَحْمِهِ شَيْئًا.
பாடம் : 170
ஒருவர் தம்மைக் கைது செய்யும்படி எதிரியிடம் சரணடையலாமா?
அவ்வாறு சரணடைய விரும்பாத வரும், எதிரிகளால் படுகொலை செய்யப்படுவதற்கு முன்பு இரண்டு யிரக்அத்கள்’ தொழுதவரும்
3045. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பத்துப் பேர் கொண்ட ஒரு குழுவினரை உளவுப் படையாக (ஓரிடத்திற்கு) அனுப்பிவைத்தார்கள். இப்படைக்கு உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களுடைய மகன் ஆஸிமின் (தாய்வழிப்) பாட்டனார் ஆஸிம் பின் ஸாபித் அல் அன்சாரி (ரலி) அவர்களைத் தலைவராக்கி னார்கள்.154
அவர்கள் புறப்பட்டு, உஸ்ஃபானுக்கும் மக்காவுக்கும் இடையிலுள்ள யிஹத்ஆ’ எனுமிடத்திற்கு வந்தபோது ஹுதைல் குலத்தைச் சேர்ந்த பனூ லிஹ்யான் எனப்படும் ஒரு கிளை’னருக்கு இந்த உளவுப் படையினர் வரும் விவரம் தெரிவிக்கப்பட்டது. உடனே அக்கிளை ‘னர் (அவர்களைப் பிடிப்பதற்காக) அம்பெய்யும் வீரர்கள் சுமார் இருநூறு வீரர்களைத் தங்களுக்காகத் திரட்டிக் கொண்டு இந்த உளவுப் படையினரின் பாதச் சுவடுகளைப் பின்தொடர்ந்தனர். (வழியில்) உளவுப் படையினர் மதீனாவிலிருந்து பயண உணவாகக் கொண்டு வந்திருந்த பேரீச்சம் பழங்களை உண்ட இடத்தில் அவற்றைக் கண்டனர்.
அப்போது ‘‘இது யஸ்ரிபுடைய (மதீனாவுடைய) பேரீச்சம்பழம்” என்று கூறினர். எனவே, அவர்கள் கால் சுவடுகளைப் பின்பற்றிச் சென்றனர். அவர்களை ஆஸிம் (ரலி) அவர்களும் அவர்களுடைய சகாக்களும் கண்டபோது, உயரமான (குன்று போன்ற) ஓரிடத்தில் (புகலிடம் தேடி) ஒதுங்கி நின்றுகொண்டனர்.
அவர்களை பனூ லிஹ்யான் குலத்தார் சூழ்ந்துகொண்டனர். அவர்கள் அந்த உளவுப் படையினரிடம், ‘‘நீங்கள் இறங்கி வந்து எங்களிடம் சரணடைந்துவிடுங்கள். உங்களுக்கு நாங்கள் உறுதிமொழியும் வாக்கும் அளிக்கிறோம். உங்களில் எவரையும் நாங்கள் கொல்லமாட்டோம்” என்று கூறினார்கள்.
உளவுப் படையின் தலைவரான ஆஸிம் பின் ஸாபித் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! இன்று நான் ஓர் இறைமறுப்பாளனின் (வாக்குறு தியை நம்பி அவனது) பொறுப்பில் இறங்கிச் செல்லமாட்டேன்” என்று கூறி விட்டு, ‘‘இறைவா! எங்கள் நிலை குறித்து உன் தூதருக்குத் தெரிவித்துவிடு” என்று பிரார்த்தித்தார்கள்.
அவர்கள்மீது எதிரிகள் அம்பெய்து ஆஸிம் உட்பட ஏழு பேரைக் கொன்று விட்டனர். உளவுப் படையினரில் (எஞ்சியிருந்த) மூன்று பேர் எதிரிகளின் உறுதிமொழி மற்றும் வாக்குறுதியின் பேரில் இறங்கினார்கள். அவர்கள் அன்சாரியான குபைப் (ரலி) அவர்களும், இப்னு தஸினா (ரலி) அவர்களும் மற்றுமொருவரும் ஆவர்.155
இவர்கள் தங்கள் கையில் கிடைத்தவுடன் இறைமறுப்பாளர்கள் தம் விற்களின் நாண்களை அவிழ்த்து அவர்களைக் கட்டினார்கள். (உளவுப் படையில் எஞ்சிய மூவரில்) மூன்றாவது மனிதர், ‘‘இது முதலாவது நம்பிக்கை துரோகம். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களுடன் வரமாட்டேன். (கொல்லப்பட்ட) இவர்கள் எனக்கு (நல்ல) ஒரு பாடமாக அமைந்துள்ளனர்” என்று (எதிரிகளிடம்) கூறினார். உடனே அவர்கள் அவரை இழுத்துச் சென்று தம்மோடு வரும்படி கட்டாயப்படுத்தினர். அதற்கு அவர் மறுத்துவிடவே அவரைக் கொலை செய்துவிட்டார்கள். பிறகு குபைப் (ரலி) அவர்களையும் இப்னு தஸினா (ரலி) அவர்களையும் பிடித்துச் சென்று மக்காவில் விற்றுவிட்டனர்.
இது பத்ர் போருக்குப் பிறகு நடந்த சம்பவமாகும். குபைப் அவர்களை பனூ ஹாரிஸ் என்னும் குலத்தார் விலைக்கு வாங்கினர். (அந்தக் குலத்தின் தலைவர்) ஹாரிஸ் பின் ஆமிர் என்பவரை குபைப் (ரலி) அவர்கள் பத்ர் போரில் கொன்று விட்டிருந்தார்கள். ஆகவே, (அதற்குப் பழிவாங்குவதற்காக குபைப் அவர்களை பனூ ஹாரிஸ் குலத்தார் வாங்கிக் கைது செய்து வைத்திருந்தனர்.) அவர்களிடம் குபைப் (ரலி) அவர்கள் (புனித மாதம் கழியும்வரை) கைதியாக இருந்தார்கள்.
உபைதுல்லாஹ் பின் இயாள் (ரஹ்) அவர்கள் கூறியதாக அறிவிப்பாளர் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
ஹாரிஸ் பின் ஆமிரின் மகள் என்னி டம் கூறினார்:156
குபைப் அவர்களைக் கொல்வதற்காக (எங்கள் குடும்பத்தார்) ஒன்றுகூடியபோது, குபைப் (மறைவான உறுப்புகளிலிருந்த) முடிகளைக் களைவதற்காக ஒரு சவரக்கத்தியை என்னிடமிருந்து இரவல் வாங்கினார். அப்போது என் குழந்தை ஒருவனை அவர் கையிலெடுத்துக்கொண்டார். அவன் அவரிடம் சென்றபோது நான் (பார்க்காமல்) கவனக் குறைவாக இருந்து விட்டேன். அவர் கையில் சவரக்கத்தி இருக்க, தமது மடியின் மீது அவனை உட்காரவைத்திருப்பதை நான் கண்டேன். அதைக் கண்டு நான் கடும் பீதியடைந் தேன். என் முகத்தில் தெரிந்த பீதியை குபைப் புரிந்துகொண்டார். உடனே, ‘‘நான் இவனைக் கொன்றுவிடுவேன் என்று நீ பயப்படுகிறாயா? நான் அப்படிச் செய்யமாட்டேன்” என்று கூறினார்.
அல்லாஹ்வின் மீதாணையாக! குபைப் அவர்களைவிடச் சிறந்த ஒரு கைதியை நான் ஒருபோதும் பார்த்ததில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் ஒருநாள் தமது கையிலிருந்த திராட்சைக் குலை ஒன்றிலிருந்து (பழங்களை எடுத்து) உண்டுகொண்டிருக்கக் கண்டேன். அப்போது அவர் இரும்புச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருந்தார். மேலும், அப்போது மக்கா நகரில் பழம் (விளையும் பருவம்) எதுவும் இருக்கவில்லை.
லிமேலும், ஹாரிஸின் மகள், ‘‘அது அல்லாஹ்விடமிருந்து கிடைத்த உண வாகும். அல்லாஹ் அதை குபைப் அவர்களுக்கு அளித்திருந்தான்” என்று கூறி வந்தார்லி (என அறிவிப்பாளர் இடையில் கூறுகிறார்.)
(தொடர்ந்து அறிவிப்பாளர் கூறு கிறார்:)
அவர்கள் குபைப் (ரலி) அவர்களைக் கொல்வதற்காக புனித ஹரம் எல்லைக்கு வெளியே உள்ள இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றபோது அவர்களிடம் குபைப் அவர்கள், ‘‘என்னை இரண்டு ரக்அத்கள் தொழ விடுங்கள்” என்று கேட்டார்கள். (தொழுது முடித்த)பிறகு, ‘‘நான் (மரணத்தைக் கண்டு) அஞ்சுகிறேன் என்று நீங்கள் எண்ணுவீர்கள் என்ற அச்சம் எனக்கில்லாமல் இருந்திருந்தால் நான் நீண்ட நேரம் தொழுதிருப்பேன்” என்று கூறிவிட்டு, ‘‘இறைவா! இவர்களை எண்ணி வைத்துக்கொண்டு (ஒருவர் விடாமல்) பழிவாங்குவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.
நான்முஸ்லிமாகக் கொல்லப்படுகையில்எதைப் பற்றியும்பொருட்படுத்தப்போவதில்லைஎந்த இடத்தில்நான் இறந்தாலும்இறைவனுக்காககொல்லப்படுகிறேன் (என்பதில் மகிழ்ச்சியே!)
நான் கொல்லப்படுவதுஇறையன்புக்காக எனும்போது,அவன் நாடினால்துண்டிக்கப்பட்டஎன் உறுப்புகளின்இணைப்புகள்மீதுகூடவளம் வழங்குவான்.
என்று கவி பாடினார்கள்.
பின்னர், குபைப் (ரலி) அவர்களை ஹாரிஸின் மகன் (உக்பா) கொன்றுவிட்டார். அன்றிலிருந்து கட்டிவைத்துக் கொல்லப் படும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும், கொல்லப்படுவதற்குமுன் இரண்டு ரக்அத் கள் தொழுவதை முன்மாதிரியாக்கியவர் குபைப் அவர்களே என்றாயிற்று. ஆஸிம் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கொல்லப்பட்ட போது, அவர்கள் செய்த பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொண்டு (அவர்களின் நிலை குறித்து தன் தூதருக்குத் தெரிவித்து) விட்டான். நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்கு உளவுப் படையினரின் செய்தியையும், அவர்களுக்கு நேர்ந்த கதியையும் தெரிவித்தார்கள்.
குறைஷி இறைமறுப்பாளர்களில் சிலருக்கு ஆஸிம் அவர்கள் கொல்லப் பட்டது குறித்துத் தெரிவிக்கப்பட்டவுடன் (கொல்லப்பட்டது அவர்தான் என்று) அவரை அடையாளம் தெரிந்துகொள்ள அவரது அங்கம் எதையாவது தமக்குக் கொடுத்தனுப்பும்படி கேட்டு அவர்கள் ஆளனுப்பினார்கள். ஏனெனில், ஆஸிம் (ரலி) அவர்கள் பத்ர் போரின்போது குறைஷி தலைவர்களில் ஒருவரைக் கொன்றிருந்தார்கள்.
(ஆஸிம் அவர்களின் உடலில் ஓர் உறுப்பைத் துண்டிக்க எதிரிகள் முற்பட்ட போது) ஆஸிம் (ரலி) அவர்களுக்கு (பாதுகாப்பாக) ஆண் தேனீக்களின் கூட்டம் ஒன்று நிழல் தரும் மேகத்தைப் போன்று (அவரைச் சுற்றிலும் அரணாகப் படர்ந்திருக்கும்படி) அனுப்பப்பட்டது. அது அவர்களை குறைஷித் தூதுவரிடமிருந்து காப்பாற்றியது. ஆகவே, அவர்களின் சதையிலிருந்து அவர்களால் எதையும் துண்டித்து எடுத்துச் செல்ல முடியவில்லை.157
அத்தியாயம் : 56
3045. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பத்துப் பேர் கொண்ட ஒரு குழுவினரை உளவுப் படையாக (ஓரிடத்திற்கு) அனுப்பிவைத்தார்கள். இப்படைக்கு உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களுடைய மகன் ஆஸிமின் (தாய்வழிப்) பாட்டனார் ஆஸிம் பின் ஸாபித் அல் அன்சாரி (ரலி) அவர்களைத் தலைவராக்கி னார்கள்.154
அவர்கள் புறப்பட்டு, உஸ்ஃபானுக்கும் மக்காவுக்கும் இடையிலுள்ள யிஹத்ஆ’ எனுமிடத்திற்கு வந்தபோது ஹுதைல் குலத்தைச் சேர்ந்த பனூ லிஹ்யான் எனப்படும் ஒரு கிளை’னருக்கு இந்த உளவுப் படையினர் வரும் விவரம் தெரிவிக்கப்பட்டது. உடனே அக்கிளை ‘னர் (அவர்களைப் பிடிப்பதற்காக) அம்பெய்யும் வீரர்கள் சுமார் இருநூறு வீரர்களைத் தங்களுக்காகத் திரட்டிக் கொண்டு இந்த உளவுப் படையினரின் பாதச் சுவடுகளைப் பின்தொடர்ந்தனர். (வழியில்) உளவுப் படையினர் மதீனாவிலிருந்து பயண உணவாகக் கொண்டு வந்திருந்த பேரீச்சம் பழங்களை உண்ட இடத்தில் அவற்றைக் கண்டனர்.
அப்போது ‘‘இது யஸ்ரிபுடைய (மதீனாவுடைய) பேரீச்சம்பழம்” என்று கூறினர். எனவே, அவர்கள் கால் சுவடுகளைப் பின்பற்றிச் சென்றனர். அவர்களை ஆஸிம் (ரலி) அவர்களும் அவர்களுடைய சகாக்களும் கண்டபோது, உயரமான (குன்று போன்ற) ஓரிடத்தில் (புகலிடம் தேடி) ஒதுங்கி நின்றுகொண்டனர்.
அவர்களை பனூ லிஹ்யான் குலத்தார் சூழ்ந்துகொண்டனர். அவர்கள் அந்த உளவுப் படையினரிடம், ‘‘நீங்கள் இறங்கி வந்து எங்களிடம் சரணடைந்துவிடுங்கள். உங்களுக்கு நாங்கள் உறுதிமொழியும் வாக்கும் அளிக்கிறோம். உங்களில் எவரையும் நாங்கள் கொல்லமாட்டோம்” என்று கூறினார்கள்.
உளவுப் படையின் தலைவரான ஆஸிம் பின் ஸாபித் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! இன்று நான் ஓர் இறைமறுப்பாளனின் (வாக்குறு தியை நம்பி அவனது) பொறுப்பில் இறங்கிச் செல்லமாட்டேன்” என்று கூறி விட்டு, ‘‘இறைவா! எங்கள் நிலை குறித்து உன் தூதருக்குத் தெரிவித்துவிடு” என்று பிரார்த்தித்தார்கள்.
அவர்கள்மீது எதிரிகள் அம்பெய்து ஆஸிம் உட்பட ஏழு பேரைக் கொன்று விட்டனர். உளவுப் படையினரில் (எஞ்சியிருந்த) மூன்று பேர் எதிரிகளின் உறுதிமொழி மற்றும் வாக்குறுதியின் பேரில் இறங்கினார்கள். அவர்கள் அன்சாரியான குபைப் (ரலி) அவர்களும், இப்னு தஸினா (ரலி) அவர்களும் மற்றுமொருவரும் ஆவர்.155
இவர்கள் தங்கள் கையில் கிடைத்தவுடன் இறைமறுப்பாளர்கள் தம் விற்களின் நாண்களை அவிழ்த்து அவர்களைக் கட்டினார்கள். (உளவுப் படையில் எஞ்சிய மூவரில்) மூன்றாவது மனிதர், ‘‘இது முதலாவது நம்பிக்கை துரோகம். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களுடன் வரமாட்டேன். (கொல்லப்பட்ட) இவர்கள் எனக்கு (நல்ல) ஒரு பாடமாக அமைந்துள்ளனர்” என்று (எதிரிகளிடம்) கூறினார். உடனே அவர்கள் அவரை இழுத்துச் சென்று தம்மோடு வரும்படி கட்டாயப்படுத்தினர். அதற்கு அவர் மறுத்துவிடவே அவரைக் கொலை செய்துவிட்டார்கள். பிறகு குபைப் (ரலி) அவர்களையும் இப்னு தஸினா (ரலி) அவர்களையும் பிடித்துச் சென்று மக்காவில் விற்றுவிட்டனர்.
இது பத்ர் போருக்குப் பிறகு நடந்த சம்பவமாகும். குபைப் அவர்களை பனூ ஹாரிஸ் என்னும் குலத்தார் விலைக்கு வாங்கினர். (அந்தக் குலத்தின் தலைவர்) ஹாரிஸ் பின் ஆமிர் என்பவரை குபைப் (ரலி) அவர்கள் பத்ர் போரில் கொன்று விட்டிருந்தார்கள். ஆகவே, (அதற்குப் பழிவாங்குவதற்காக குபைப் அவர்களை பனூ ஹாரிஸ் குலத்தார் வாங்கிக் கைது செய்து வைத்திருந்தனர்.) அவர்களிடம் குபைப் (ரலி) அவர்கள் (புனித மாதம் கழியும்வரை) கைதியாக இருந்தார்கள்.
உபைதுல்லாஹ் பின் இயாள் (ரஹ்) அவர்கள் கூறியதாக அறிவிப்பாளர் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
ஹாரிஸ் பின் ஆமிரின் மகள் என்னி டம் கூறினார்:156
குபைப் அவர்களைக் கொல்வதற்காக (எங்கள் குடும்பத்தார்) ஒன்றுகூடியபோது, குபைப் (மறைவான உறுப்புகளிலிருந்த) முடிகளைக் களைவதற்காக ஒரு சவரக்கத்தியை என்னிடமிருந்து இரவல் வாங்கினார். அப்போது என் குழந்தை ஒருவனை அவர் கையிலெடுத்துக்கொண்டார். அவன் அவரிடம் சென்றபோது நான் (பார்க்காமல்) கவனக் குறைவாக இருந்து விட்டேன். அவர் கையில் சவரக்கத்தி இருக்க, தமது மடியின் மீது அவனை உட்காரவைத்திருப்பதை நான் கண்டேன். அதைக் கண்டு நான் கடும் பீதியடைந் தேன். என் முகத்தில் தெரிந்த பீதியை குபைப் புரிந்துகொண்டார். உடனே, ‘‘நான் இவனைக் கொன்றுவிடுவேன் என்று நீ பயப்படுகிறாயா? நான் அப்படிச் செய்யமாட்டேன்” என்று கூறினார்.
அல்லாஹ்வின் மீதாணையாக! குபைப் அவர்களைவிடச் சிறந்த ஒரு கைதியை நான் ஒருபோதும் பார்த்ததில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் ஒருநாள் தமது கையிலிருந்த திராட்சைக் குலை ஒன்றிலிருந்து (பழங்களை எடுத்து) உண்டுகொண்டிருக்கக் கண்டேன். அப்போது அவர் இரும்புச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருந்தார். மேலும், அப்போது மக்கா நகரில் பழம் (விளையும் பருவம்) எதுவும் இருக்கவில்லை.
லிமேலும், ஹாரிஸின் மகள், ‘‘அது அல்லாஹ்விடமிருந்து கிடைத்த உண வாகும். அல்லாஹ் அதை குபைப் அவர்களுக்கு அளித்திருந்தான்” என்று கூறி வந்தார்லி (என அறிவிப்பாளர் இடையில் கூறுகிறார்.)
(தொடர்ந்து அறிவிப்பாளர் கூறு கிறார்:)
அவர்கள் குபைப் (ரலி) அவர்களைக் கொல்வதற்காக புனித ஹரம் எல்லைக்கு வெளியே உள்ள இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றபோது அவர்களிடம் குபைப் அவர்கள், ‘‘என்னை இரண்டு ரக்அத்கள் தொழ விடுங்கள்” என்று கேட்டார்கள். (தொழுது முடித்த)பிறகு, ‘‘நான் (மரணத்தைக் கண்டு) அஞ்சுகிறேன் என்று நீங்கள் எண்ணுவீர்கள் என்ற அச்சம் எனக்கில்லாமல் இருந்திருந்தால் நான் நீண்ட நேரம் தொழுதிருப்பேன்” என்று கூறிவிட்டு, ‘‘இறைவா! இவர்களை எண்ணி வைத்துக்கொண்டு (ஒருவர் விடாமல்) பழிவாங்குவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.
நான்முஸ்லிமாகக் கொல்லப்படுகையில்எதைப் பற்றியும்பொருட்படுத்தப்போவதில்லைஎந்த இடத்தில்நான் இறந்தாலும்இறைவனுக்காககொல்லப்படுகிறேன் (என்பதில் மகிழ்ச்சியே!)
நான் கொல்லப்படுவதுஇறையன்புக்காக எனும்போது,அவன் நாடினால்துண்டிக்கப்பட்டஎன் உறுப்புகளின்இணைப்புகள்மீதுகூடவளம் வழங்குவான்.
என்று கவி பாடினார்கள்.
பின்னர், குபைப் (ரலி) அவர்களை ஹாரிஸின் மகன் (உக்பா) கொன்றுவிட்டார். அன்றிலிருந்து கட்டிவைத்துக் கொல்லப் படும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும், கொல்லப்படுவதற்குமுன் இரண்டு ரக்அத் கள் தொழுவதை முன்மாதிரியாக்கியவர் குபைப் அவர்களே என்றாயிற்று. ஆஸிம் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கொல்லப்பட்ட போது, அவர்கள் செய்த பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொண்டு (அவர்களின் நிலை குறித்து தன் தூதருக்குத் தெரிவித்து) விட்டான். நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்கு உளவுப் படையினரின் செய்தியையும், அவர்களுக்கு நேர்ந்த கதியையும் தெரிவித்தார்கள்.
குறைஷி இறைமறுப்பாளர்களில் சிலருக்கு ஆஸிம் அவர்கள் கொல்லப் பட்டது குறித்துத் தெரிவிக்கப்பட்டவுடன் (கொல்லப்பட்டது அவர்தான் என்று) அவரை அடையாளம் தெரிந்துகொள்ள அவரது அங்கம் எதையாவது தமக்குக் கொடுத்தனுப்பும்படி கேட்டு அவர்கள் ஆளனுப்பினார்கள். ஏனெனில், ஆஸிம் (ரலி) அவர்கள் பத்ர் போரின்போது குறைஷி தலைவர்களில் ஒருவரைக் கொன்றிருந்தார்கள்.
(ஆஸிம் அவர்களின் உடலில் ஓர் உறுப்பைத் துண்டிக்க எதிரிகள் முற்பட்ட போது) ஆஸிம் (ரலி) அவர்களுக்கு (பாதுகாப்பாக) ஆண் தேனீக்களின் கூட்டம் ஒன்று நிழல் தரும் மேகத்தைப் போன்று (அவரைச் சுற்றிலும் அரணாகப் படர்ந்திருக்கும்படி) அனுப்பப்பட்டது. அது அவர்களை குறைஷித் தூதுவரிடமிருந்து காப்பாற்றியது. ஆகவே, அவர்களின் சதையிலிருந்து அவர்களால் எதையும் துண்டித்து எடுத்துச் செல்ல முடியவில்லை.157
அத்தியாயம் : 56
3046. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" فُكُّوا الْعَانِيَ ـ يَعْنِي الأَسِيرَ ـ وَأَطْعِمُوا الْجَائِعَ وَعُودُوا الْمَرِيضَ "".
பாடம் : 171
(எதிரிகளிடமிருந்து) போர்க் கைதியை விடுவித்தல்
இது பற்றி அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிட மிருந்து அறிவித்துள்ளார்கள்.158
3046. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(போர்க்) கைதியை (எதிரியிடமிருந்து) விடுவியுங்கள்; பசித்தவருக்கு உணவளி யுங்கள்; நோயாளியை நலம் விசாரியுங்கள்” என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 56
3046. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(போர்க்) கைதியை (எதிரியிடமிருந்து) விடுவியுங்கள்; பசித்தவருக்கு உணவளி யுங்கள்; நோயாளியை நலம் விசாரியுங்கள்” என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 56
3047. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا مُطَرِّفٌ، أَنَّ عَامِرًا، حَدَّثَهُمْ عَنْ أَبِي جُحَيْفَةَ ـ رضى الله عنه ـ قَالَ قُلْتُ لِعَلِيٍّ ـ رضى الله عنه هَلْ عِنْدَكُمْ شَىْءٌ مِنَ الْوَحْىِ إِلاَّ مَا فِي كِتَابِ اللَّهِ قَالَ وَالَّذِي فَلَقَ الْحَبَّةَ وَبَرَأَ النَّسَمَةَ مَا أَعْلَمُهُ إِلاَّ فَهْمًا يُعْطِيهِ اللَّهُ رَجُلاً فِي الْقُرْآنِ، وَمَا فِي هَذِهِ الصَّحِيفَةِ. قُلْتُ وَمَا فِي الصَّحِيفَةِ قَالَ الْعَقْلُ وَفَكَاكُ الأَسِيرِ، وَأَنْ لاَ يُقْتَلَ مُسْلِمٌ بِكَافِرٍ.
பாடம் : 171
(எதிரிகளிடமிருந்து) போர்க் கைதியை விடுவித்தல்
இது பற்றி அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிட மிருந்து அறிவித்துள்ளார்கள்.158
3047. அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அலீ (ரலி) அவர்களிடம், ‘‘உங்க ளிடம் அல்லாஹ்வின் வேதத்திலிருப்ப தைத் தவிர இறையறிவிப்புகளிலிருந்து (வேறு) ஏதும் இருக்கிறதா?” என்று கேட் டேன். அவர்கள், ‘‘இல்லை; விதையைப் பிளப்பவனும், உயிரைப் படைப்பவனுமான அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவ்வாறு எதையும் நான் அறிந்திருக்கவில்லை; ஒரு மனிதருக்கு அல்லாஹ் குர்ஆனில் அளிக் கின்ற விளக்கத்தையும் இந்த ஏட்டில் இருப்பதையும் தவிர” என்று பதிலளித்தார்கள்.
நான், ‘‘இந்த ஏட்டில் என்ன இருக்கிறது?”என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘உயிரீட்டுத் தொகை (பற்றிய சட்டம்), போர்க் கைதியை (எதிரிகளிடமிருந்து) விடுவிப்பது, மற்றும் எந்த முஸ்லிமையும் இறைமறுப்பாளனுக்குப் பதிலாகக் கொல்லக் கூடாது ஆகியவை” என்று பதிலளித்தார்கள்.159
அத்தியாயம் : 56
3047. அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அலீ (ரலி) அவர்களிடம், ‘‘உங்க ளிடம் அல்லாஹ்வின் வேதத்திலிருப்ப தைத் தவிர இறையறிவிப்புகளிலிருந்து (வேறு) ஏதும் இருக்கிறதா?” என்று கேட் டேன். அவர்கள், ‘‘இல்லை; விதையைப் பிளப்பவனும், உயிரைப் படைப்பவனுமான அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவ்வாறு எதையும் நான் அறிந்திருக்கவில்லை; ஒரு மனிதருக்கு அல்லாஹ் குர்ஆனில் அளிக் கின்ற விளக்கத்தையும் இந்த ஏட்டில் இருப்பதையும் தவிர” என்று பதிலளித்தார்கள்.
நான், ‘‘இந்த ஏட்டில் என்ன இருக்கிறது?”என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘உயிரீட்டுத் தொகை (பற்றிய சட்டம்), போர்க் கைதியை (எதிரிகளிடமிருந்து) விடுவிப்பது, மற்றும் எந்த முஸ்லிமையும் இறைமறுப்பாளனுக்குப் பதிலாகக் கொல்லக் கூடாது ஆகியவை” என்று பதிலளித்தார்கள்.159
அத்தியாயம் : 56
3048. حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ عُقْبَةَ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّ رِجَالاً، مِنَ الأَنْصَارِ اسْتَأْذَنُوا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ ائْذَنْ فَلْنَتْرُكْ لاِبْنِ أُخْتِنَا عَبَّاسٍ فِدَاءَهُ. فَقَالَ "" لاَ تَدَعُونَ مِنْهَا دِرْهَمًا "".
பாடம் : 172
இணைவைப்பாளர்களிடம் பிணைத் தொகை பெறுவது
3048. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அன்சாரிகளில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘‘அல்லாஹ் வின் தூதரே! எங்கள் சகோதரி மகன் அப்பாஸ் அவர்களின் பிணைத் தொகையை நாங்கள் (வாங்காமல்) விட்டு விட அனுமதியுங்கள்” என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், ‘‘பிணைத் தொகை ‘லிருந்து ஒரேயொரு திர்ஹத்தைக்கூட (வாங்காமல்) விட்டுவிடாதீர்கள்” என்று (தம் தோழர்களிடம்) சொன்னார்கள்.160
அத்தியாயம் : 56
3048. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அன்சாரிகளில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘‘அல்லாஹ் வின் தூதரே! எங்கள் சகோதரி மகன் அப்பாஸ் அவர்களின் பிணைத் தொகையை நாங்கள் (வாங்காமல்) விட்டு விட அனுமதியுங்கள்” என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், ‘‘பிணைத் தொகை ‘லிருந்து ஒரேயொரு திர்ஹத்தைக்கூட (வாங்காமல்) விட்டுவிடாதீர்கள்” என்று (தம் தோழர்களிடம்) சொன்னார்கள்.160
அத்தியாயம் : 56
3049. وَقَالَ إِبْرَاهِيمُ عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، عَنْ أَنَسٍ، قَالَ أُتِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِمَالٍ مِنَ الْبَحْرَيْنِ، فَجَاءَهُ الْعَبَّاسُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، أَعْطِنِي فَإِنِّي فَادَيْتُ نَفْسِي، وَفَادَيْتُ عَقِيلاً. فَقَالَ "" خُذْ "". فَأَعْطَاهُ فِي ثَوْبِهِ.
பாடம் : 172
இணைவைப்பாளர்களிடம் பிணைத் தொகை பெறுவது
3049. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் பஹ்ரைனிலிருந்து (பொது) நிதி கொண்டுவரப்பட்டது. அப்போது அப்பாஸ் (ரலி) அவர்கள் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! எனக்குக் கொடுங்கள். ஏனெனில், நான் (இஸ்லாத்தைத் தழுவும் முன்பு பத்ர் போரில் கைதியாகப் பிடிபட்டபோது) எனக்காகவும் பிணைத் தொகை செலுத்தி யிருக்கிறேன்; (என் சகோதரர்) அகீலுக்காக வும் பிணைத் தொகை செலுத்தியிருக்கி றேன்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘எடுத்துக்கொள்வீராக!” என்று கூறி, (நிதியை) அவரது ஆடையில் (கொட்டி) அவருக்குக் கொடுத்தார்கள்.161
அத்தியாயம் : 56
3049. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் பஹ்ரைனிலிருந்து (பொது) நிதி கொண்டுவரப்பட்டது. அப்போது அப்பாஸ் (ரலி) அவர்கள் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! எனக்குக் கொடுங்கள். ஏனெனில், நான் (இஸ்லாத்தைத் தழுவும் முன்பு பத்ர் போரில் கைதியாகப் பிடிபட்டபோது) எனக்காகவும் பிணைத் தொகை செலுத்தி யிருக்கிறேன்; (என் சகோதரர்) அகீலுக்காக வும் பிணைத் தொகை செலுத்தியிருக்கி றேன்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘எடுத்துக்கொள்வீராக!” என்று கூறி, (நிதியை) அவரது ஆடையில் (கொட்டி) அவருக்குக் கொடுத்தார்கள்.161
அத்தியாயம் : 56
3050. حَدَّثَنِي مَحْمُودٌ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِيهِ ـ وَكَانَ جَاءَ فِي أُسَارَى بَدْرٍ ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقْرَأُ فِي الْمَغْرِبِ بِالطُّورِ.
பாடம் : 172
இணைவைப்பாளர்களிடம் பிணைத் தொகை பெறுவது
3050. முஹம்மத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என் தந்தை ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் பத்ர் போர்க் கைதிகளின் (பிணைத்தொகை மற்றும் விடுதலை) விஷயமாக நபி (ஸல்) அவர்களிடம் சென்றிருந்தார்கள். அப்போது, ‘‘நபி (ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகையில் ‘அத்தூர்’ எனும் (52ஆவது) அத்தியாயத்தை ஓதக் கேட்டேன்” என்று (என் தந்தை) கூறினார்கள்.162
அத்தியாயம் : 56
3050. முஹம்மத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என் தந்தை ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் பத்ர் போர்க் கைதிகளின் (பிணைத்தொகை மற்றும் விடுதலை) விஷயமாக நபி (ஸல்) அவர்களிடம் சென்றிருந்தார்கள். அப்போது, ‘‘நபி (ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகையில் ‘அத்தூர்’ எனும் (52ஆவது) அத்தியாயத்தை ஓதக் கேட்டேன்” என்று (என் தந்தை) கூறினார்கள்.162
அத்தியாயம் : 56
3051. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا أَبُو الْعُمَيْسِ، عَنْ إِيَاسِ بْنِ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ، عَنْ أَبِيهِ، قَالَ أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم عَيْنٌ مِنَ الْمُشْرِكِينَ وَهْوَ فِي سَفَرٍ، فَجَلَسَ عِنْدَ أَصْحَابِهِ يَتَحَدَّثُ ثُمَّ انْفَتَلَ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" اطْلُبُوهُ وَاقْتُلُوهُ "". فَقَتَلَهُ فَنَفَّلَهُ سَلَبَهُ.
பாடம் : 173
எதிரி நாட்டைச் சேர்ந்த ஒருவர் இஸ்லாமிய நாட்டில் எவருடைய அடைக்கலமும் பெறாமல் நுழைந்து விட்டால்...
3051. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (ஹுனைன் போருக்கான) பயணத்தில் இருந்தபோது அவர்களிடம் இணைவைப்பாளர்களில் உளவாளி ஒருவன் வந்தான்; நபி (ஸல்) அவர்களின் தோழர்களிடம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தான். பிறகு திரும்பிச் சென்றுவிட்டான். நபி (ஸல்) அவர்கள் (விஷயம் தெரிந்தவுடன்), ‘‘அவனைத் தேடிப்பிடித்துக் கொன்றுவிடுங்கள்” என்று உத்தரவிட்டார்கள்.163
நான் அவனை (தேடிப்பிடித்துக்) கொன்றுவிட்டேன். அவனிடமிருந்து கைப்பற்றப்பட்ட அவனுடைய உடைமை களை (போர்ச் செல்வத்தில் என் பங்கிற்கு மேல்) கூடுதலாக நபி (ஸல்) அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள்.
அத்தியாயம் : 56
3051. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (ஹுனைன் போருக்கான) பயணத்தில் இருந்தபோது அவர்களிடம் இணைவைப்பாளர்களில் உளவாளி ஒருவன் வந்தான்; நபி (ஸல்) அவர்களின் தோழர்களிடம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தான். பிறகு திரும்பிச் சென்றுவிட்டான். நபி (ஸல்) அவர்கள் (விஷயம் தெரிந்தவுடன்), ‘‘அவனைத் தேடிப்பிடித்துக் கொன்றுவிடுங்கள்” என்று உத்தரவிட்டார்கள்.163
நான் அவனை (தேடிப்பிடித்துக்) கொன்றுவிட்டேன். அவனிடமிருந்து கைப்பற்றப்பட்ட அவனுடைய உடைமை களை (போர்ச் செல்வத்தில் என் பங்கிற்கு மேல்) கூடுதலாக நபி (ஸல்) அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள்.
அத்தியாயம் : 56
3052. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ حُصَيْنٍ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، عَنْ عُمَرَ ـ رضى الله عنه ـ قَالَ وَأُوصِيهِ بِذِمَّةِ اللَّهِ وَذِمَّةِ رَسُولِهِ صلى الله عليه وسلم أَنْ يُوفَى لَهُمْ بِعَهْدِهِمْ، وَأَنْ يُقَاتَلَ مِنْ وَرَائِهِمْ، وَلاَ يُكَلَّفُوا إِلاَّ طَاقَتَهُمْ.
பாடம் : 174
இஸ்லாமிய நாட்டில் வாழும் பிற மதத்தா(ரான சிறுபான்மையின)ரின் பாதுகாப்பிற்காகப் போரிட வேண்டும்; அவர்களை அடிமை களாக நடத்தக் கூடாது.
3052. உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(எனக்குப்பின் வருகின்ற புதிய) கலீஃபாவுக்கு நான் உபதேசிக்கிறேன்: அல்லாஹ்வின் பொறுப்பிலும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களின் பொறுப்பிலும் உள்ள (முஸ்லிமல்லாத)வர்களின் ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றிட வேண்டும். (அதன்படி) அவர்களைப் பாதுகாப்பதற்காகப் போரிட வேண்டும்; அவர்களின் சக்திக்குமேல் அவர்களுக்குச் சிரமம் தரக் கூடாது.164
அத்தியாயம் : 56
3052. உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(எனக்குப்பின் வருகின்ற புதிய) கலீஃபாவுக்கு நான் உபதேசிக்கிறேன்: அல்லாஹ்வின் பொறுப்பிலும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களின் பொறுப்பிலும் உள்ள (முஸ்லிமல்லாத)வர்களின் ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றிட வேண்டும். (அதன்படி) அவர்களைப் பாதுகாப்பதற்காகப் போரிட வேண்டும்; அவர்களின் சக்திக்குமேல் அவர்களுக்குச் சிரமம் தரக் கூடாது.164
அத்தியாயம் : 56
3053. حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ سُلَيْمَانَ الأَحْوَلِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّهُ قَالَ يَوْمُ الْخَمِيسِ، وَمَا يَوْمُ الْخَمِيسِ ثُمَّ بَكَى حَتَّى خَضَبَ دَمْعُهُ الْحَصْبَاءَ فَقَالَ اشْتَدَّ بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَجَعُهُ يَوْمَ الْخَمِيسِ فَقَالَ "" ائْتُونِي بِكِتَابٍ أَكْتُبْ لَكُمْ كِتَابًا لَنْ تَضِلُّوا بَعْدَهُ أَبَدًا "". فَتَنَازَعُوا وَلاَ يَنْبَغِي عِنْدَ نَبِيٍّ تَنَازُعٌ فَقَالُوا هَجَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم. قَالَ "" دَعُونِي فَالَّذِي أَنَا فِيهِ خَيْرٌ مِمَّا تَدْعُونِي إِلَيْهِ "". وَأَوْصَى عِنْدَ مَوْتِهِ بِثَلاَثٍ "" أَخْرِجُوا الْمُشْرِكِينَ مِنْ جَزِيرَةِ الْعَرَبِ، وَأَجِيزُوا الْوَفْدَ بِنَحْوِ مَا كُنْتُ أُجِيزُهُمْ "". وَنَسِيتُ الثَّالِثَةَ. وَقَالَ يَعْقُوبُ بْنُ مُحَمَّدٍ سَأَلْتُ الْمُغِيرَةَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ عَنْ جَزِيرَةِ الْعَرَبِ. فَقَالَ مَكَّةُ وَالْمَدِينَةُ وَالْيَمَامَةُ وَالْيَمَنُ. وَقَالَ يَعْقُوبُ وَالْعَرْجُ أَوَّلُ تِهَامَةَ.
பாடம் : 175
தூதுக்குழுவினருக்குப் பரிசுகள் வழங்குதல்165
பாடம் : 176
இஸ்லாமிய நாட்டில் வாழும் பிற மதத்தா(ரான சிறுபான்மையின)ருக் காகப் பரிந்துரை செய்யலாமா? என்ப தும், அவர்களுடன் கொடுக்கல் வாங்கல் செய்வதும்
3053. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘(அன்று) வியாழக்கிழமை! எந்த வியாழக்கிழமை (தெரியுமா)?” என்று கேட்டுவிட்டு, சரளைக்கல் பூமியை நனைத்துவிடும் அளவுக்குக் கண்ணீர் விட்டு அழுதார்கள். பிறகு கூறினார்கள்:
அந்த வியாழக்கிழமையன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது (நோயின்) வேதனை கடுமையாயிற்று. அப்போது அவர்கள், ‘‘ஓர் ஏட்டை என்னி டம் கொண்டுவாருங்கள். உங்களுக்கு ஒரு மடலை நான் எழுதித்தருகிறேன். அதன் பிறகு நீங்கள் ஒருபோதும் வழி தவறமாட்டீர்கள்” என்று கூறினார்கள். அப்போது மக்கள் (கருத்து வேறுபாடு கொண்டு) சச்சரவிட்டுக்கொண்டார்கள். ஆனால், ஓர் இறைத்தூதரின் முன்னால் சச்சரவு செய்வது முறையல்ல.
மக்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பலவீனத்தில் பேசுகிறார்கள்” என்று கூறினார்கள். ஆகவே நபி (ஸல்) அவர்கள், ‘‘என்னை விட்டுவிடுங்கள். நீங்கள் என்னை அழைக்கின்ற (மரண சாசனம் எழுதும்) பணியைவிட நான் இப்போதுள்ள (இறை நினைவில் இருக்கும்) நிலையே சிறந்தது” என்று சொல்லிவிட்டார்கள்.166
மேலும், அவர்கள் தமது மரணத் தருவாயில் மூன்று விஷயங்களை வலியுறுத்தினார்கள். அவை: அரபு தீபகற்பத்திலிருந்து இணைவைப்பாளர் களை வெளியேற்றுங்கள். (அயல் நாடுகள் மற்றும் குலங்களின்) தூதுக்குழுவினருக்கு நான் வழங்கிவந்ததைப் போன்று நீங்களும் பரிசுப் பொருள்களை வழங்குங்கள்.
லிமூன்றாவது கட்டளையை நான் மறந்துவிட்டேன்லி
யஅகூப் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் முஃகீரா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களிடம் அரபு தீபகற்பம் பற்றிக் கேட்டேன். அவர்கள், யிமக்கா, மதீனா, யமாமா, யமன் ஆகியவை’ என்று பதிலளித்தார்கள்.
மேலும் யஅகூப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (மக்காலிமதீனா இடையே உள்ள) ‘அல்அர்ஜ்’ எனும் இடம்தான் திஹாமாவின் முதற் கட்டமாகும்.
அத்தியாயம் : 56
3053. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘(அன்று) வியாழக்கிழமை! எந்த வியாழக்கிழமை (தெரியுமா)?” என்று கேட்டுவிட்டு, சரளைக்கல் பூமியை நனைத்துவிடும் அளவுக்குக் கண்ணீர் விட்டு அழுதார்கள். பிறகு கூறினார்கள்:
அந்த வியாழக்கிழமையன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது (நோயின்) வேதனை கடுமையாயிற்று. அப்போது அவர்கள், ‘‘ஓர் ஏட்டை என்னி டம் கொண்டுவாருங்கள். உங்களுக்கு ஒரு மடலை நான் எழுதித்தருகிறேன். அதன் பிறகு நீங்கள் ஒருபோதும் வழி தவறமாட்டீர்கள்” என்று கூறினார்கள். அப்போது மக்கள் (கருத்து வேறுபாடு கொண்டு) சச்சரவிட்டுக்கொண்டார்கள். ஆனால், ஓர் இறைத்தூதரின் முன்னால் சச்சரவு செய்வது முறையல்ல.
மக்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பலவீனத்தில் பேசுகிறார்கள்” என்று கூறினார்கள். ஆகவே நபி (ஸல்) அவர்கள், ‘‘என்னை விட்டுவிடுங்கள். நீங்கள் என்னை அழைக்கின்ற (மரண சாசனம் எழுதும்) பணியைவிட நான் இப்போதுள்ள (இறை நினைவில் இருக்கும்) நிலையே சிறந்தது” என்று சொல்லிவிட்டார்கள்.166
மேலும், அவர்கள் தமது மரணத் தருவாயில் மூன்று விஷயங்களை வலியுறுத்தினார்கள். அவை: அரபு தீபகற்பத்திலிருந்து இணைவைப்பாளர் களை வெளியேற்றுங்கள். (அயல் நாடுகள் மற்றும் குலங்களின்) தூதுக்குழுவினருக்கு நான் வழங்கிவந்ததைப் போன்று நீங்களும் பரிசுப் பொருள்களை வழங்குங்கள்.
லிமூன்றாவது கட்டளையை நான் மறந்துவிட்டேன்லி
யஅகூப் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் முஃகீரா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களிடம் அரபு தீபகற்பம் பற்றிக் கேட்டேன். அவர்கள், யிமக்கா, மதீனா, யமாமா, யமன் ஆகியவை’ என்று பதிலளித்தார்கள்.
மேலும் யஅகூப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (மக்காலிமதீனா இடையே உள்ள) ‘அல்அர்ஜ்’ எனும் இடம்தான் திஹாமாவின் முதற் கட்டமாகும்.
அத்தியாயம் : 56
3054. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ وَجَدَ عُمَرُ حُلَّةَ إِسْتَبْرَقٍ تُبَاعُ فِي السُّوقِ فَأَتَى بِهَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، ابْتَعْ هَذِهِ الْحُلَّةَ فَتَجَمَّلْ بِهَا لِلْعِيدِ وَلِلْوُفُودِ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِنَّمَا هَذِهِ لِبَاسُ مَنْ لاَ خَلاَقَ لَهُ، أَوْ إِنَّمَا يَلْبَسُ هَذِهِ مَنْ لاَ خَلاَقَ لَهُ "". فَلَبِثَ مَا شَاءَ اللَّهُ ثُمَّ أَرْسَلَ إِلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم بِجُبَّةِ دِيبَاجٍ، فَأَقْبَلَ بِهَا عُمَرُ حَتَّى أَتَى بِهَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، قُلْتَ "" إِنَّمَا هَذِهِ لِبَاسُ مَنْ لاَ خَلاَقَ لَهُ أَوْ إِنَّمَا يَلْبَسُ هَذِهِ مَنْ لا خَلاَقَ لَهُ "". ثُمَّ أَرْسَلْتَ إِلَىَّ بِهَذِهِ فَقَالَ "" تَبِيعُهَا، أَوْ تُصِيبُ بِهَا بَعْضَ حَاجَتِكَ "".
பாடம் : 177
தூதுக்குழுவினரை வரவேற் பதற்காக (ஆடையணிகளால்) அலங்கரித்துக்கொள்வது
3054. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உமர் (ரலி) அவர்கள் கெட்டியான பட்டு அங்கி ஒன்று சந்தையில் விற்கப் படுவதைக் கண்டார்கள் அதை (வாங்கி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! இந்த அங்கியை விலைக்கு வாங்கி, பெருநாளின்போதும் தூதுக்குழுக்கள் வருகை தரும்போதும் இதனால் (உங்களை) அலங்கரித்துக்கொள்ளுங்கள்” என்றார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இது (மறுமையில்) எந்த நற்பேறும் இல்லாதவர்களின் ஆடையாகும்” லிஅல்லது ‘‘(மறுமையில்) எந்த நற்பேறும் இல்லாதவர்கள்தான் இதை அணிவார்கள்”லி என்று சொன்னார்கள். அல்லாஹ் நாடிய (சிறிது) காலம் கழிந் தது.
நபி (ஸல்) அவர்கள் அலங்காரப் பட்டு அங்கி ஒன்றை உமர் (ரலி) அவர்களுக்கு அனுப்பிவைத்தார்கள். உமர் (ரலி) அவர்கள் அதை எடுத்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். ‘‘அல்லாஹ்வின் தூதரே! இது (மறுமையில்) எந்த நற்பேறும் இல்லாத வருடைய ஆடையாகும்; லிஅல்லது (மறுமையில்) எந்த நற்பேறும் இல்லாதவர் தான் இதை அணிவார்’லி என்று கூறினீர் கள். பிறகு, இதையே எனக்கு அனுப்பி வைத்திருக்கிறீர்களே!” என்று கேட் டார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘இதை நீங்கள் விற்றுவிடுவீர்கள்; அல்லது உங்கள் தேவை எதையேனும் இதைக் கொண்டு நிறைவேற்றிக்கொள்வீர்கள் (என்பதற்காகவே இதை நான் உங்களுக்கு அனுப்பிவைத்தேன்)” என்று கூறினார்கள்.167
அத்தியாயம் : 56
3054. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உமர் (ரலி) அவர்கள் கெட்டியான பட்டு அங்கி ஒன்று சந்தையில் விற்கப் படுவதைக் கண்டார்கள் அதை (வாங்கி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! இந்த அங்கியை விலைக்கு வாங்கி, பெருநாளின்போதும் தூதுக்குழுக்கள் வருகை தரும்போதும் இதனால் (உங்களை) அலங்கரித்துக்கொள்ளுங்கள்” என்றார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இது (மறுமையில்) எந்த நற்பேறும் இல்லாதவர்களின் ஆடையாகும்” லிஅல்லது ‘‘(மறுமையில்) எந்த நற்பேறும் இல்லாதவர்கள்தான் இதை அணிவார்கள்”லி என்று சொன்னார்கள். அல்லாஹ் நாடிய (சிறிது) காலம் கழிந் தது.
நபி (ஸல்) அவர்கள் அலங்காரப் பட்டு அங்கி ஒன்றை உமர் (ரலி) அவர்களுக்கு அனுப்பிவைத்தார்கள். உமர் (ரலி) அவர்கள் அதை எடுத்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். ‘‘அல்லாஹ்வின் தூதரே! இது (மறுமையில்) எந்த நற்பேறும் இல்லாத வருடைய ஆடையாகும்; லிஅல்லது (மறுமையில்) எந்த நற்பேறும் இல்லாதவர் தான் இதை அணிவார்’லி என்று கூறினீர் கள். பிறகு, இதையே எனக்கு அனுப்பி வைத்திருக்கிறீர்களே!” என்று கேட் டார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘இதை நீங்கள் விற்றுவிடுவீர்கள்; அல்லது உங்கள் தேவை எதையேனும் இதைக் கொண்டு நிறைவேற்றிக்கொள்வீர்கள் (என்பதற்காகவே இதை நான் உங்களுக்கு அனுப்பிவைத்தேன்)” என்று கூறினார்கள்.167
அத்தியாயம் : 56
3055. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا هِشَامٌ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّهُ أَخْبَرَهُ أَنَّ عُمَرَ انْطَلَقَ فِي رَهْطٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم قِبَلَ ابْنِ صَيَّادٍ حَتَّى وَجَدُوهُ يَلْعَبُ مَعَ الْغِلْمَانِ عِنْدَ أُطُمِ بَنِي مَغَالَةَ، وَقَدْ قَارَبَ يَوْمَئِذٍ ابْنُ صَيَّادٍ يَحْتَلِمُ، فَلَمْ يَشْعُرْ حَتَّى ضَرَبَ النَّبِيُّ صلى الله عليه وسلم ظَهْرَهُ بِيَدِهِ ثُمَّ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَتَشْهَدُ أَنِّي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "". فَنَظَرَ إِلَيْهِ ابْنُ صَيَّادٍ فَقَالَ أَشْهَدُ أَنَّكَ رَسُولُ الأُمِّيِّينَ. فَقَالَ ابْنُ صَيَّادٍ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم أَتَشْهَدُ أَنِّي رَسُولُ اللَّهِ. قَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم "" آمَنْتُ بِاللَّهِ وَرُسُلِهِ "" قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَاذَا تَرَى "". قَالَ ابْنُ صَيَّادٍ يَأْتِينِي صَادِقٌ وَكَاذِبٌ. قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" خُلِطَ عَلَيْكَ الأَمْرُ "". قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنِّي قَدْ خَبَأْتُ لَكَ خَبِيئًا "". قَالَ ابْنُ صَيَّادٍ هُوَ الدُّخُّ. قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" اخْسَأْ فَلَنْ تَعْدُوَ قَدْرَكَ "". قَالَ عُمَرُ يَا رَسُولَ اللَّهِ، ائْذَنْ لِي فِيهِ أَضْرِبْ عُنُقَهُ. قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنْ يَكُنْهُ فَلَنْ تُسَلَّطَ عَلَيْهِ، وَإِنْ لَمْ يَكُنْهُ فَلاَ خَيْرَ لَكَ فِي قَتْلِهِ "".
பாடம் : 178
சிறுவருக்கு இஸ்லாத்தை எடுத்துரைப்பது எப்படி?
3055. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் நபித்தோழர்களின் ஒரு குழுவினருடன் நபி (ஸல்) அவர்களோடு (யூதச் சிறுவன்) இப்னு ஸய்யாதை நோக்கிச் சென்றார்கள்.168 யிபனூ மஃகாலா’ குலத் தாரின் மாளிகைக்கருகே சிறுவர்களுடன் (சிறுவனாக) அவன் விளையாடிக்கொண்டி ருக்கக் கண்டார்கள். அப்போது இப்னு ஸய்யாத் பருவ வயதை நெருங்கிவிட்டி ருந்தான். நபி (ஸல்) அவர்கள் தமது கரத் தால் அவனது முதுகில் அடிக்கும் வரையில் அவன் எதையுமே உணர வில்லை.
பிறகு நபி (ஸல்) அவர்கள், ‘‘நான் அல்லாஹ்வின் தூதர்தான் என்று நீ சாட்சி கூறுகிறாயா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்களை இப்னு ஸய்யாத் (கூர்ந்து) பார்த்துவிட்டு,”நீங்கள் (எழுதப் படிக்கத் தெரியாத மக்களான) யிஉம்மீ’களின் தூதர் என்று நான் சாட்சியம் கூறுகிறேன்” என்று பதிலளித்தான். அப்போது இப்னு ஸய்யாத் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘நான் இறைத்தூதர் என்று நீங்கள் சாட்சியம் அளிக்கின்றீர்களா?” என்று கேட்டான்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் இப்னு ஸய்யாதை நோக்கி, ‘‘அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்கள்மீதும் நான் நம்பிக்கை கொண்டேன்” என்று கூறினார்கள். (பின்னர்) நபி (ஸல்) அவர்கள், ‘‘(உன் நிலை பற்றி) நீ என்ன கருதுகிறாய்?” என்று கேட்டார்கள். அதற்கு இப்னு ஸய்யாத், ‘‘எனக்கு மெய்யான செய்திகளும் பொய்யான செய்திகளும் உதிக்கின்ற”’ என்றான்.
நபி (ஸல்) அவர்கள், ‘‘உனக்கு இப்பிரச்சினையில் (உண்மையும் பொய்யும் கலந்து) குழப்பம் ஏற்பட்டுள்ளது” என்று கூறிவிட்டு, ‘‘நான் ஒன்றை மனத்தில் உனக்காக (உன்னைச் சோதிப்பதற்காக) மறைத்துவைத்துள்ளேன் (அது என்ன என்று சொல்)” எனக் கேட்டார்கள். இப்னு ஸய்யாத், அது யிதுக்’ என்று கூறினான். (அதாவது யிதுகான்’ என்பதை யிதுக்’ என அரைகுறையாகச் சொன்னான்.)169 உடனே நபி (ஸல்) அவர்கள், ‘‘தூர விலகிப்போ! நீ உன் எல்லையைத் தாண்டிவிட முடியாது” என்று கூறினார்கள்.
உமர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இவனது கழுத்தை நான் வெட்டிவிடுகிறேன்; அனுமதி தாருங்கள்” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘இவன் அவனாக (தஜ்ஜாலாக) இருந்தால் இவனைக் கொல்லும் பொறுப்பு உங்களுக் குக் கொடுக்கப்படவில்லை; இவன் அவ னில்லையென்றால் இவனைக் கொல்வதால் உங்களுக்கு நன்மையேதும் இல்லை” என்று சொன்னார்கள்.170
அத்தியாயம் : 56
3055. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் நபித்தோழர்களின் ஒரு குழுவினருடன் நபி (ஸல்) அவர்களோடு (யூதச் சிறுவன்) இப்னு ஸய்யாதை நோக்கிச் சென்றார்கள்.168 யிபனூ மஃகாலா’ குலத் தாரின் மாளிகைக்கருகே சிறுவர்களுடன் (சிறுவனாக) அவன் விளையாடிக்கொண்டி ருக்கக் கண்டார்கள். அப்போது இப்னு ஸய்யாத் பருவ வயதை நெருங்கிவிட்டி ருந்தான். நபி (ஸல்) அவர்கள் தமது கரத் தால் அவனது முதுகில் அடிக்கும் வரையில் அவன் எதையுமே உணர வில்லை.
பிறகு நபி (ஸல்) அவர்கள், ‘‘நான் அல்லாஹ்வின் தூதர்தான் என்று நீ சாட்சி கூறுகிறாயா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்களை இப்னு ஸய்யாத் (கூர்ந்து) பார்த்துவிட்டு,”நீங்கள் (எழுதப் படிக்கத் தெரியாத மக்களான) யிஉம்மீ’களின் தூதர் என்று நான் சாட்சியம் கூறுகிறேன்” என்று பதிலளித்தான். அப்போது இப்னு ஸய்யாத் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘நான் இறைத்தூதர் என்று நீங்கள் சாட்சியம் அளிக்கின்றீர்களா?” என்று கேட்டான்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் இப்னு ஸய்யாதை நோக்கி, ‘‘அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்கள்மீதும் நான் நம்பிக்கை கொண்டேன்” என்று கூறினார்கள். (பின்னர்) நபி (ஸல்) அவர்கள், ‘‘(உன் நிலை பற்றி) நீ என்ன கருதுகிறாய்?” என்று கேட்டார்கள். அதற்கு இப்னு ஸய்யாத், ‘‘எனக்கு மெய்யான செய்திகளும் பொய்யான செய்திகளும் உதிக்கின்ற”’ என்றான்.
நபி (ஸல்) அவர்கள், ‘‘உனக்கு இப்பிரச்சினையில் (உண்மையும் பொய்யும் கலந்து) குழப்பம் ஏற்பட்டுள்ளது” என்று கூறிவிட்டு, ‘‘நான் ஒன்றை மனத்தில் உனக்காக (உன்னைச் சோதிப்பதற்காக) மறைத்துவைத்துள்ளேன் (அது என்ன என்று சொல்)” எனக் கேட்டார்கள். இப்னு ஸய்யாத், அது யிதுக்’ என்று கூறினான். (அதாவது யிதுகான்’ என்பதை யிதுக்’ என அரைகுறையாகச் சொன்னான்.)169 உடனே நபி (ஸல்) அவர்கள், ‘‘தூர விலகிப்போ! நீ உன் எல்லையைத் தாண்டிவிட முடியாது” என்று கூறினார்கள்.
உமர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இவனது கழுத்தை நான் வெட்டிவிடுகிறேன்; அனுமதி தாருங்கள்” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘இவன் அவனாக (தஜ்ஜாலாக) இருந்தால் இவனைக் கொல்லும் பொறுப்பு உங்களுக் குக் கொடுக்கப்படவில்லை; இவன் அவ னில்லையென்றால் இவனைக் கொல்வதால் உங்களுக்கு நன்மையேதும் இல்லை” என்று சொன்னார்கள்.170
அத்தியாயம் : 56
3056. قَالَ ابْنُ عُمَرَ انْطَلَقَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَأُبَىُّ بْنُ كَعْبٍ يَأْتِيَانِ النَّخْلَ الَّذِي فِيهِ ابْنُ صَيَّادٍ، حَتَّى إِذَا دَخَلَ النَّخْلَ طَفِقَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَتَّقِي بِجُذُوعِ النَّخْلِ وَهْوَ يَخْتِلُ ابْنَ صَيَّادٍ أَنْ يَسْمَعَ مِنِ ابْنِ صَيَّادٍ شَيْئًا قَبْلَ أَنْ يَرَاهُ، وَابْنُ صَيَّادٍ مُضْطَجِعٌ عَلَى فِرَاشِهِ فِي قَطِيفَةٍ لَهُ فِيهَا رَمْزَةٌ، فَرَأَتْ أُمُّ ابْنِ صَيَّادٍ النَّبِيَّ صلى الله عليه وسلم وَهْوَ يَتَّقِي بِجُذُوعِ النَّخْلِ، فَقَالَتْ لاِبْنِ صَيَّادٍ أَىْ صَافِ ـ وَهْوَ اسْمُهُ ـ فَثَارَ ابْنُ صَيَّادٍ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " لَوْ تَرَكَتْهُ بَيَّنَ ".
பாடம் : 178
சிறுவருக்கு இஸ்லாத்தை எடுத்துரைப்பது எப்படி?
3056. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களும் உபை பின் கஅப் (ரலி) அவர்களும் இப்னு ஸய்யாத் தங்கியிருந்த பேரீச்சந் தோட்டத்திற்குச் செல்வதற்காக நடக்கலாயினர். பேரீச்சந் தோட்டத்திற்குள் நுழைந்தவுடன் நபி (ஸல்) அவர்கள், இப்னு ஸய்யாத் தம்மைப் பார்த்துவிடும் முன்பே அவனிடமிருந்து அவனது பேச்சு எதையாவது கேட்டுவிட வேண்டுமென்று திட்டமிட்டபடி பேரீச்ச மரங்களின் அடிப்பகுதிகளுக்கிடையே தம்மை மறைத்துக்கொண்டு நடந்தார்கள்.
அப்போது இப்னு ஸய்யாத் தனது படுக்கையில் ஒரு பூம்பட்டுப் போர்வையில் எதையோ முணுமுணுத்தபடி படுத்திருந்தான். இப்னு ஸய்யாதின் தாய் நபி (ஸல்) அவர்கள் பேரீச்ச மரங்களின் அடிப்பாகங்களுக்கிடையே தம்மை மறைத்துக் கொண்டு வருவதைக் கண்டு இப்னு ஸய்யாதை, ஸாஃபியே! லிஇது இப்னு ஸய்யாதின் பெயராகும்லி என்றழைத்தாள். உடனே இப்னு ஸய்யாத் குதித்தெழுந்து உட்கார்ந்தான். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவள் அவனை அப்படியே விட்டு விட்டிருந்தால் அவன் (உண்மை நிலையைத்) தெளிவுபடுத்தியிருப்பான்” என்று சொன்னார்கள்.171
அத்தியாயம் : 56
3056. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களும் உபை பின் கஅப் (ரலி) அவர்களும் இப்னு ஸய்யாத் தங்கியிருந்த பேரீச்சந் தோட்டத்திற்குச் செல்வதற்காக நடக்கலாயினர். பேரீச்சந் தோட்டத்திற்குள் நுழைந்தவுடன் நபி (ஸல்) அவர்கள், இப்னு ஸய்யாத் தம்மைப் பார்த்துவிடும் முன்பே அவனிடமிருந்து அவனது பேச்சு எதையாவது கேட்டுவிட வேண்டுமென்று திட்டமிட்டபடி பேரீச்ச மரங்களின் அடிப்பகுதிகளுக்கிடையே தம்மை மறைத்துக்கொண்டு நடந்தார்கள்.
அப்போது இப்னு ஸய்யாத் தனது படுக்கையில் ஒரு பூம்பட்டுப் போர்வையில் எதையோ முணுமுணுத்தபடி படுத்திருந்தான். இப்னு ஸய்யாதின் தாய் நபி (ஸல்) அவர்கள் பேரீச்ச மரங்களின் அடிப்பாகங்களுக்கிடையே தம்மை மறைத்துக் கொண்டு வருவதைக் கண்டு இப்னு ஸய்யாதை, ஸாஃபியே! லிஇது இப்னு ஸய்யாதின் பெயராகும்லி என்றழைத்தாள். உடனே இப்னு ஸய்யாத் குதித்தெழுந்து உட்கார்ந்தான். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவள் அவனை அப்படியே விட்டு விட்டிருந்தால் அவன் (உண்மை நிலையைத்) தெளிவுபடுத்தியிருப்பான்” என்று சொன்னார்கள்.171
அத்தியாயம் : 56
3057. وَقَالَ سَالِمٌ قَالَ ابْنُ عُمَرَ ثُمَّ قَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي النَّاسِ فَأَثْنَى عَلَى اللَّهِ بِمَا هُوَ أَهْلُهُ، ثُمَّ ذَكَرَ الدَّجَّالَ فَقَالَ " إِنِّي أُنْذِرُكُمُوهُ، وَمَا مِنْ نَبِيٍّ إِلاَّ قَدْ أَنْذَرَهُ قَوْمَهُ، لَقَدْ أَنْذَرَهُ نُوحٌ قَوْمَهُ، وَلَكِنْ سَأَقُولُ لَكُمْ فِيهِ قَوْلاً لَمْ يَقُلْهُ نَبِيٌّ لِقَوْمِهِ، تَعْلَمُونَ أَنَّهُ أَعْوَرُ وَأَنَّ اللَّهَ لَيْسَ بِأَعْوَرَ ".
பாடம் : 178
சிறுவருக்கு இஸ்லாத்தை எடுத்துரைப்பது எப்படி?
3057. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
...பிறகு நபி (ஸல்) அவர்கள் மக்களி டையே எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்பப் புகழ்ந்தார்கள். பிறகு தஜ்ஜாலை நினைவுகூர்ந்து சொன்னார்கள்:
நான் அவனைக் குறித்து உங்களை எச்சரிக்கிறேன். எந்த இறைத்தூதரும் அவனைக் குறித்து தம் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. நூஹ் (அலை) அவர்கள் தம் சமுதாயத்தாரை அவனைக் குறித்து எச்சரித்துள்ளார்கள். ஆயினும், நான் அவனைப் பற்றி வேறெந்த இறைத்தூதரும் தம் சமுதாயத்தாருக்குச் சொல்லாத ஒரு தகவலை உங்களுக்குச் சொல்கிறேன். அவன் ஒற்றைக் கண்ணன் என்பதையும் அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்.172
அத்தியாயம் : 56
3057. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
...பிறகு நபி (ஸல்) அவர்கள் மக்களி டையே எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்பப் புகழ்ந்தார்கள். பிறகு தஜ்ஜாலை நினைவுகூர்ந்து சொன்னார்கள்:
நான் அவனைக் குறித்து உங்களை எச்சரிக்கிறேன். எந்த இறைத்தூதரும் அவனைக் குறித்து தம் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. நூஹ் (அலை) அவர்கள் தம் சமுதாயத்தாரை அவனைக் குறித்து எச்சரித்துள்ளார்கள். ஆயினும், நான் அவனைப் பற்றி வேறெந்த இறைத்தூதரும் தம் சமுதாயத்தாருக்குச் சொல்லாத ஒரு தகவலை உங்களுக்குச் சொல்கிறேன். அவன் ஒற்றைக் கண்ணன் என்பதையும் அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்.172
அத்தியாயம் : 56