2738. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" مَا حَقُّ امْرِئٍ مُسْلِمٍ لَهُ شَىْءٌ، يُوصِي فِيهِ يَبِيتُ لَيْلَتَيْنِ، إِلاَّ وَوَصِيَّتُهُ مَكْتُوبَةٌ عِنْدَهُ "". تَابَعَهُ مُحَمَّدُ بْنُ مُسْلِمٍ عَنْ عَمْرٍو عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 1 இறுதி விருப்பங்களும், ‘‘மனிதனின் இறுதி விருப்பம் எழுதப்பட்டு அவனிடம் (ஆவண வடிவில்) இருக்க வேண்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: உங்களில் ஒருவருக்கு இறப்பு நெருங்கும்போது அவர் செல்வத்தை விட்டுச்சென்றால், பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் (சொத்துரிமை தொடர் பாக) அழகிய முறையில் இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவிப்பது உங்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது. இறையச்சம் உடையோருக்கு இது கடமையாகும். அ(ந்த இறுதி விருப்பத்)தைச் செவி யுற்ற பிறகு யாரேனும் அதை மாற்றினால், அந்தக் குற்றம் அதை மாற்றியவரையே சேரும். அல்லாஹ் நன்கு செவியுறு வோனும் நன்கறிந்தோனும் ஆவான். ஆனால், இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவித்தவரிடம் ஏதேனும் தவறையோ பாவத்தையோ ஒருவர் அஞ்சி, அவ(ரு டைய உறவின)ர்களிடையே சமரசம் செய்(து அதை மாற்றி ஒழுங்குபடுத்து)வாராயின் அவர்மீது எந்தக் குற்றமுமில்லை. அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனும் மிகுந்த கருணையாளனும் ஆவான். (2:180லி182) (2:182ஆவது வசனத்தில் யிதவறு’ என்பதைக் குறிக்க) யிஜனஃப்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு ‘(நேரிய வழியிலிருந்து) பிறழ்தல்’ என்பது பொருளாகும். யிபிறழ்கின்றவû” யிமுத்தஜானிஃப்’ என்பர்.
2738. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இறுதி விருப்பம் தெரிவிக்க) ஏதேனும் ஒரு பொருளைப் பெற்றிருக்கும் எந்த ஒரு முஸ்லிமுக்கும் அவர் தமது இறுதி விருப்பத்தை எழுதித் தன்னிடம் வைத்திருக்காமல் இரண்டு இரவுகள்கூட கழிப்பதற்கு அனுமதியில்லை.2

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 55
2739. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَارِثِ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي بُكَيْرٍ، حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ الْجُعْفِيُّ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، خَتَنِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَخِي جُوَيْرِيَةَ بِنْتِ الْحَارِثِ قَالَ مَا تَرَكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عِنْدَ مَوْتِهِ دِرْهَمًا وَلاَ دِينَارًا وَلاَ عَبْدًا وَلاَ أَمَةً وَلاَ شَيْئًا، إِلاَّ بَغْلَتَهُ الْبَيْضَاءَ وَسِلاَحَهُ وَأَرْضًا جَعَلَهَا صَدَقَةً.
பாடம் : 1 இறுதி விருப்பங்களும், ‘‘மனிதனின் இறுதி விருப்பம் எழுதப்பட்டு அவனிடம் (ஆவண வடிவில்) இருக்க வேண்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: உங்களில் ஒருவருக்கு இறப்பு நெருங்கும்போது அவர் செல்வத்தை விட்டுச்சென்றால், பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் (சொத்துரிமை தொடர் பாக) அழகிய முறையில் இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவிப்பது உங்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது. இறையச்சம் உடையோருக்கு இது கடமையாகும். அ(ந்த இறுதி விருப்பத்)தைச் செவி யுற்ற பிறகு யாரேனும் அதை மாற்றினால், அந்தக் குற்றம் அதை மாற்றியவரையே சேரும். அல்லாஹ் நன்கு செவியுறு வோனும் நன்கறிந்தோனும் ஆவான். ஆனால், இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவித்தவரிடம் ஏதேனும் தவறையோ பாவத்தையோ ஒருவர் அஞ்சி, அவ(ரு டைய உறவின)ர்களிடையே சமரசம் செய்(து அதை மாற்றி ஒழுங்குபடுத்து)வாராயின் அவர்மீது எந்தக் குற்றமுமில்லை. அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனும் மிகுந்த கருணையாளனும் ஆவான். (2:180லி182) (2:182ஆவது வசனத்தில் யிதவறு’ என்பதைக் குறிக்க) யிஜனஃப்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு ‘(நேரிய வழியிலிருந்து) பிறழ்தல்’ என்பது பொருளாகும். யிபிறழ்கின்றவû” யிமுத்தஜானிஃப்’ என்பர்.
2739. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியார் ஜுவைரியா பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது மரணத்தின்போது திர்ஹமையோ, தீனாரையோ (வெள்ளி நாணயத்தையோ, பொற்காசையோ), அடிமையையோ, அடிமைப் பெண்ணையோ, வேறு எதையுமோ விட்டுச்செல்லவில்லை; தமது வெள்ளைக் கோவேறுக் கழுதையையும், தம்முடைய ஆயுதங்களையும், தர்மமாக ஆக்கிவிட்டிருந்த ஒரு நிலத்தையும் தவிர.


அத்தியாயம் : 55
2740. حَدَّثَنَا خَلاَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا مَالِكٌ، حَدَّثَنَا طَلْحَةُ بْنُ مُصَرِّفٍ، قَالَ سَأَلْتُ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي أَوْفَى ـ رضى الله عنهما ـ هَلْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَوْصَى فَقَالَ لاَ. فَقُلْتُ كَيْفَ كُتِبَ عَلَى النَّاسِ الْوَصِيَّةُ أَوْ أُمِرُوا بِالْوَصِيَّةِ قَالَ أَوْصَى بِكِتَابِ اللَّهِ.
பாடம் : 1 இறுதி விருப்பங்களும், ‘‘மனிதனின் இறுதி விருப்பம் எழுதப்பட்டு அவனிடம் (ஆவண வடிவில்) இருக்க வேண்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: உங்களில் ஒருவருக்கு இறப்பு நெருங்கும்போது அவர் செல்வத்தை விட்டுச்சென்றால், பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் (சொத்துரிமை தொடர் பாக) அழகிய முறையில் இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவிப்பது உங்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது. இறையச்சம் உடையோருக்கு இது கடமையாகும். அ(ந்த இறுதி விருப்பத்)தைச் செவி யுற்ற பிறகு யாரேனும் அதை மாற்றினால், அந்தக் குற்றம் அதை மாற்றியவரையே சேரும். அல்லாஹ் நன்கு செவியுறு வோனும் நன்கறிந்தோனும் ஆவான். ஆனால், இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவித்தவரிடம் ஏதேனும் தவறையோ பாவத்தையோ ஒருவர் அஞ்சி, அவ(ரு டைய உறவின)ர்களிடையே சமரசம் செய்(து அதை மாற்றி ஒழுங்குபடுத்து)வாராயின் அவர்மீது எந்தக் குற்றமுமில்லை. அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனும் மிகுந்த கருணையாளனும் ஆவான். (2:180லி182) (2:182ஆவது வசனத்தில் யிதவறு’ என்பதைக் குறிக்க) யிஜனஃப்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு ‘(நேரிய வழியிலிருந்து) பிறழ்தல்’ என்பது பொருளாகும். யிபிறழ்கின்றவû” யிமுத்தஜானிஃப்’ என்பர்.
2740. தல்ஹா பின் முஸர்ரிஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்களிடம், ‘‘நபி (ஸல்) அவர்கள் இறுதி விருப்பம் தெரிவித்தார்களா?” என்று கேட்டேன். அவர்கள், ‘‘இல்லை” என்று பதிலளித்தார்கள். நான், ‘‘அப்படி யென்றால் மக்கள்மீது இறுதி விருப்பம் தெரிவிப்பது எப்படிக் கடமையாக்கப்பட்டது? அல்லது இறுதி விருப்பம் தெரிவிக்க வேண்டுமென்று மக்களுக்கு எப்படிக் கட்டளையிடப்பட்டது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘அல்லாஹ்வுடைய வேதத்தின்படி செயல்படுமாறு நபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்தினார்கள் ‘‘ என்று பதிலளித்தார்கள்.3


அத்தியாயம் : 55
2741. حَدَّثَنَا عَمْرُو بْنُ زُرَارَةَ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ، عَنِ ابْنِ عَوْنٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، قَالَ ذَكَرُوا عِنْدَ عَائِشَةَ أَنَّ عَلِيًّا ـ رضى الله عنهما ـ كَانَ وَصِيًّا. فَقَالَتْ مَتَى أَوْصَى إِلَيْهِ وَقَدْ كُنْتُ مُسْنِدَتَهُ إِلَى صَدْرِي ـ أَوْ قَالَتْ حَجْرِي ـ فَدَعَا بِالطَّسْتِ، فَلَقَدِ انْخَنَثَ فِي حَجْرِي، فَمَا شَعَرْتُ أَنَّهُ قَدْ مَاتَ، فَمَتَى أَوْصَى إِلَيْهِ
பாடம் : 1 இறுதி விருப்பங்களும், ‘‘மனிதனின் இறுதி விருப்பம் எழுதப்பட்டு அவனிடம் (ஆவண வடிவில்) இருக்க வேண்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: உங்களில் ஒருவருக்கு இறப்பு நெருங்கும்போது அவர் செல்வத்தை விட்டுச்சென்றால், பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் (சொத்துரிமை தொடர் பாக) அழகிய முறையில் இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவிப்பது உங்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது. இறையச்சம் உடையோருக்கு இது கடமையாகும். அ(ந்த இறுதி விருப்பத்)தைச் செவி யுற்ற பிறகு யாரேனும் அதை மாற்றினால், அந்தக் குற்றம் அதை மாற்றியவரையே சேரும். அல்லாஹ் நன்கு செவியுறு வோனும் நன்கறிந்தோனும் ஆவான். ஆனால், இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவித்தவரிடம் ஏதேனும் தவறையோ பாவத்தையோ ஒருவர் அஞ்சி, அவ(ரு டைய உறவின)ர்களிடையே சமரசம் செய்(து அதை மாற்றி ஒழுங்குபடுத்து)வாராயின் அவர்மீது எந்தக் குற்றமுமில்லை. அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனும் மிகுந்த கருணையாளனும் ஆவான். (2:180லி182) (2:182ஆவது வசனத்தில் யிதவறு’ என்பதைக் குறிக்க) யிஜனஃப்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு ‘(நேரிய வழியிலிருந்து) பிறழ்தல்’ என்பது பொருளாகும். யிபிறழ்கின்றவû” யிமுத்தஜானிஃப்’ என்பர்.
2741. அஸ்வத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்களிடம் மக்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள் (தமக்குப்பின் ஆட்சித் தலைமை ஏற்கும்படி) அலீ (ரலி) அவர்களிடம் இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவித்துவிட்டுச் சென்றார்கள் (என்று கேள்விப்படுகிறோமே)” என்று சொன் னார்கள்.

அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள் எப்போது அவருக்கு யிவஸிய்யத்’ செய்தார்கள்? (நபி (ஸல்) அவர்கள் மரணப் படுக்கையில் இருந்தபோது) நான்தானே அவர்களை என் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்டிருந்தேன். அவர்கள் கையலம்பும் கிண்ணம் கொண்டுவரும்படி கேட்டார்கள்.

பிறகு என் மடியில் மூர்ச்சையுற்று சரிந்தார்கள். நான் அவர்கள் இறந்து விட்டார்கள் என்பதைக்கூட உணரவில்லை. அவ்வாறிருக்க, அவர்கள் எப்போது அவரிடம் (ஆட்சிப் பொறுப்பேற்கும்படி) வஸிய்யத் செய்திருக்க முடியும்?” என்று கேட்டார்கள்.

அத்தியாயம் : 55
2742. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ، عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ ـ رضى الله عنه ـ قَالَ جَاءَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَعُودُنِي وَأَنَا بِمَكَّةَ، وَهْوَ يَكْرَهُ أَنْ يَمُوتَ بِالأَرْضِ الَّتِي هَاجَرَ مِنْهَا قَالَ "" يَرْحَمُ اللَّهُ ابْنَ عَفْرَاءَ "". قُلْتُ يَا رَسُولَ اللَّهِ، أُوصِي بِمَالِي كُلِّهِ قَالَ "" لاَ "". قُلْتُ فَالشَّطْرُ قَالَ "" لاَ "". قُلْتُ الثُّلُثُ. قَالَ "" فَالثُّلُثُ، وَالثُّلُثُ كَثِيرٌ، إِنَّكَ أَنْ تَدَعَ وَرَثَتَكَ أَغْنِيَاءَ خَيْرٌ مِنْ أَنْ تَدَعَهُمْ عَالَةً يَتَكَفَّفُونَ النَّاسَ فِي أَيْدِيهِمْ، وَإِنَّكَ مَهْمَا أَنْفَقْتَ مِنْ نَفَقَةٍ فَإِنَّهَا صَدَقَةٌ، حَتَّى اللُّقْمَةُ الَّتِي تَرْفَعُهَا إِلَى فِي امْرَأَتِكَ، وَعَسَى اللَّهُ أَنْ يَرْفَعَكَ فَيَنْتَفِعَ بِكَ نَاسٌ وَيُضَرَّ بِكَ آخَرُونَ "". وَلَمْ يَكُنْ لَهُ يَوْمَئِذٍ إِلاَّ ابْنَةٌ.
பாடம் : 2 ஒருவர் தம் வாரிசுகளைத் தன்னிறைவு பெற்றவர்களாக விட்டுச் செல்வது, மக்களிடம் கையேந்தும் நிலையில் விட்டுச்செல்வதைவிட நல்லதாகும்.
2742. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்காவில் (நோயுற்று) இருந்த என்னை நபி (ஸல்) அவர்கள் (தமது ஹஜ்ஜின் போது) நலம் விசாரிக்க வந்தார்கள். நான் எந்தப் பூமியிலிருந்து புலம்பெயர்ந்து சென்றுவிட்டேனோ அந்தப் பூமியில் (மக்காவில்) மரணிப்பதை விரும்பவில்லை. (மக்காவிலேயே மரணித்துவிட்ட மற்றொருவரான) ‘‘அஃப்ராவின் புதல்(வர் சஅத் பின் கவ்லா என்ப)வருக்கு அல்லாஹ் கருணை புரிவானாக!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! என் செல்வம் முழுவதையும் நான் (அறக் காரியங்களுக்காக) இறுதி விருப்பம் தெரிவித்துவிடட்டுமா?” என்று கேட்டேன். அவர்கள், ‘‘வேண்டாம்” என்று கூறினார்கள். நான், ‘‘அப்படியென்றால் (என் செல்வத்தில்) பாதியை அவ்வாறு செய்துவிடட்டுமா?” என்று கேட்டேன். அதற்கும், ‘‘வேண்டாம்” என்றே பதிலளித்தார்கள். நான், ‘‘மூன்றிலொரு பங்கை(யாவது அவ்வாறு செய்துவிடட்டுமா?)” என்று கேட்டேன்.

அவர்கள், ‘‘மூன்றிலொரு பங்கா? மூன்றிலொரு பங்கே அதிகம்தான். நீங்கள் உங்கள் வாரிசுகளைத் தன்னிறைவுடையவர்களாக விட்டுச்செல்வது, அவர்களை மக்களிடம் கையேந்தும்படி ஏழைகளாக விட்டுச்செல்வதைவிட நல்லதாகும். நீங்கள் செய்த (நல்ல) செலவு எதுவாயினும் தர்மமேயாகும். நீங்கள் உங்கள் மனைவியின் வாயில் இடுகின்ற ஒரு கவளம் (உணவு)கூட (தர்மம்தான்). மேலும், உங்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளைத் தருவான்.4 உங்கள் வாயிலாக மக்கள் சிலர் பயனடைவார்கள். மற்ற (தீயவர்) சிலர் உங்களால் இழப்புக்குள்ளாவார்கள்” என்று கூறினார்கள்.5

அன்று அவருக்கு ஒரு மகளைத் தவிர வேறு (நேரடி வாரிசுகள்) யாரும் இருக்கவில்லை.

அத்தியாயம் : 55
2743. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ لَوْ غَضَّ النَّاسُ إِلَى الرُّبْعِ، لأَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" الثُّلُثُ، وَالثُّلُثُ كَثِيرٌ أَوْ كَبِيرٌ "".
பாடம் : 3 மூன்றில் ஒரு பங்கில் இறுதி விருப்பம் தெரிவித்தல் ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள், ‘‘இஸ்லாமிய அரசின் கீழுள்ள முஸ்லிமல் லாதாரும் மூன்றிலொரு பங்குக்குமேல் இறுதி விருப்பம் தெரிவிக்கக் கூடாது” என்று கூறினார்கள். ஏனெனில், ‘‘(நபியே!) அவர்களிடையே நீங்கள் அல்லாஹ் அரு ளிய (சட்டத்)தைக் கொண்டே தீர்ப்பளி யுங்கள்” என்று உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான். (அல்குர்ஆன் 5:49)
2743. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கள் (தமது மரண சாசனங்களை) நான்கிலொரு பாகமாகக் குறைத்துக் கொண்டால் நன்றாயிருக்கும். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘மூன்றிலொரு பங்கா? மூன்றிலொரு பங்கும் அதிகம்தான்” என்று கூறி னார்கள்.


அத்தியாயம் : 55
2744. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ بْنُ عَدِيٍّ، حَدَّثَنَا مَرْوَانُ، عَنْ هَاشِمِ بْنِ هَاشِمٍ، عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ قَالَ مَرِضْتُ فَعَادَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ أَنْ لاَ يَرُدَّنِي عَلَى عَقِبِي. قَالَ "" لَعَلَّ اللَّهَ يَرْفَعُكَ وَيَنْفَعُ بِكَ نَاسًا "". قُلْتُ أُرِيدُ أَنْ أُوصِيَ، وَإِنَّمَا لِي ابْنَةٌ ـ قُلْتُ ـ أُوصِي بِالنِّصْفِ قَالَ "" النِّصْفُ كَثِيرٌ "". قُلْتُ فَالثُّلُثِ. قَالَ "" الثُّلُثُ، وَالثُّلُثُ كَثِيرٌ أَوْ كَبِيرٌ "". قَالَ فَأَوْصَى النَّاسُ بِالثُّلُثِ، وَجَازَ ذَلِكَ لَهُمْ.
பாடம் : 3 மூன்றில் ஒரு பங்கில் இறுதி விருப்பம் தெரிவித்தல் ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள், ‘‘இஸ்லாமிய அரசின் கீழுள்ள முஸ்லிமல் லாதாரும் மூன்றிலொரு பங்குக்குமேல் இறுதி விருப்பம் தெரிவிக்கக் கூடாது” என்று கூறினார்கள். ஏனெனில், ‘‘(நபியே!) அவர்களிடையே நீங்கள் அல்லாஹ் அரு ளிய (சட்டத்)தைக் கொண்டே தீர்ப்பளி யுங்கள்” என்று உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான். (அல்குர்ஆன் 5:49)
2744. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(இறுதி ஹஜ்ஜின்போது மக்காவில்) நான் நோயுற்றுவிட்டேன். நபி (ஸல்) அவர்கள் என்னை நலம் விசாரிக்க வருகை தந்தார்கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! என் கால்சுவடுகளின் வழியே என்னைத் திருப்பியனுப்பிவிடாமல் (புலம்பெயர்ந்த மண்ணிலேயே இறப்பு ஏற்படாமல்) இருக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளைத் தந்து, உங்களால் மக்கள் சிலருக்குப் பயன் தருவான்” என்று கூறினார்கள்.

‘‘நான் இறுதி விருப்பம் தெரிவிக்க விரும்புகிறேன். எனக்கிருப்பதெல்லாம் ஒரு மகள்தான். (என் சொத்தில்) பாதி பாகத்தை (நற்காரியங்களுக்காக) இறுதி விருப்பம் தெரிவித்துவிடட்டுமா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘பாதி அதிகம்தான்” என்று கூறினார்கள். நான் ‘‘அப்படியென்றால் மூன்றிலொரு பங்கு?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘மூன்றிலொரு பங்கா? மூன்றிலொரு பங்கும் அதிகம்தான். அல்லது பெரியது தான்” என்று கூறினார்கள்.

ஆகவே, மக்கள் மூன்றிலொரு பங்கில் இறுதி விருப்பம் தெரிவிக்கலானார்கள். அது அவர்களுக்குச் செல்லும்.

அத்தியாயம் : 55
2745. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهَا قَالَتْ كَانَ عُتْبَةُ بْنُ أَبِي وَقَّاصٍ عَهِدَ إِلَى أَخِيهِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ أَنَّ ابْنَ وَلِيدَةِ زَمْعَةَ مِنِّي، فَاقْبِضْهُ إِلَيْكَ. فَلَمَّا كَانَ عَامُ الْفَتْحِ أَخَذَهُ سَعْدٌ فَقَالَ ابْنُ أَخِي، قَدْ كَانَ عَهِدَ إِلَىَّ فِيهِ. فَقَامَ عَبْدُ بْنُ زَمْعَةَ فَقَالَ أَخِي، وَابْنُ أَمَةِ أَبِي، وُلِدَ عَلَى فِرَاشِهِ. فَتَسَاوَقَا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. فَقَالَ سَعْدٌ يَا رَسُولَ اللَّهِ، ابْنُ أَخِي، كَانَ عَهِدَ إِلَىَّ فِيهِ. فَقَالَ عَبْدُ بْنُ زَمْعَةَ أَخِي وَابْنُ وَلِيدَةِ أَبِي. وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" هُوَ لَكَ يَا عَبْدُ ابْنَ زَمْعَةَ، الْوَلَدُ لِلْفِرَاشِ، وَلِلْعَاهِرِ الْحَجَرُ "". ثُمَّ قَالَ لِسَوْدَةَ بِنْتِ زَمْعَةَ "" احْتَجِبِي مِنْهُ "". لِمَا رَأَى مِنْ شَبَهِهِ بِعُتْبَةَ، فَمَا رَآهَا حَتَّى لَقِيَ اللَّهَ.
பாடம் : 4 இறுதி விருப்பம் தெரிவிப்பவர் தம் பொறுப்பாளரிடம், ‘‘என் மகனைக் கவனித்துக்கொள்” என்று சொல்வதும், (அவ்வாறு) இறுதி விருப்பம் தெரிவிக்கப்பட்டவர் (தமது உரிமைக்காக) வாதாட அனுமதிக்கப்பட் டிருப்பதும்
2745. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

உத்பா பின் அபீவக்காஸ் தம் சகோதரர் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடம், ‘‘ஸம்ஆவின் அடிமைப் பெண்ணுடைய மகன் எனக்குப் பிறந்தவன். அவனை நீ பிடித்து வைத்துக்கொள்” என்று உறுதிமொழி வாங்கியிருந்தார். மக்கா வெற்றி ஆண்டில் சஅத் (ரலி) அவர்கள் அவனைப் பிடித்துக்கொண் டார்கள். அப்போது அவர்கள், ‘‘(இவன் என்) சகோதரரின் மகன். என் சகோதரர் இவனை அழைத்துக் கொண்டுவரும்படி என்னிடம் உறுதிமொழி வாங்கியுள்ளார்” என்று கூறினார்.

ஸம்ஆவின் மகன் அப்து (ரலி) எழுந்து, ‘‘இவன் என் சகோதரன். என் தந்தையின் அடிமைப் பெண்ணுக்குப் பிறந்தவன். அவரது படுக்கையில் (அவரது அதிகாரத்தில் இவனுடைய தாய் இருந்தபோது) பிறந்தவன்” என்று கூறினார். இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (தீர்ப்புக் கேட்டு) சென் றனர்.

சஅத் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இவன் என் சகோதரன் மகன். அவர் இவனை அழைத்துக் கொண்டுவரும்படி என்னிடம் உறுதிமொழி வாங்கியிருந்தார்” என்று கூற, அப்து பின் ஸம்ஆ (ரலி), ‘‘இவன் என் சகோதரன். என் தந்தையின் அடிமைப் பெண்ணுக்குப் பிறந்தவன்” என்று கூறினார். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அப்து பின் ஸம்ஆவே! அவன் உனக்கேயுரியவன். ஏனெனில், (சட்டப்படி) தாய் யாருடைய அதிகாரத்தில் இருக்கிறாளோ அவருக்கே குழந்தை உரியதாகும். விபசாரம் செய்தவனுக்கு இழப்புதான்” என்று கூறினார்கள்.

பிறகு (தம் மனைவியும்) ஸம்ஆவின் மகளுமான சவ்தா (ரலி) அவர்களிடம், ‘‘இவனிடமிருந்து நீ உன்னைத் திரையிட்டு (மறைத்து)க்கொள்” என்று கூறினார்கள். அவன், தோற்றத்தில் உத்பாவைப் போலவே இருந்ததைக் கண்டதால்தான் நபி (ஸல்) அவர்கள் இப்படிக் கூறினார்கள். (அதன் பிறகு) அந்த மனிதர் மரணிக்கும்வரை) அன்னை சவ்தா (ரலி) அவர்களைப் பார்க்கவில்லை.6

அத்தியாயம் : 55
2746. حَدَّثَنَا حَسَّانُ بْنُ أَبِي عَبَّادٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّ يَهُوِدِيًّا، رَضَّ رَأْسَ جَارِيَةٍ بَيْنَ حَجَرَيْنِ، فَقِيلَ لَهَا مَنْ فَعَلَ بِكِ، أَفُلاَنٌ أَوْ فُلاَنٌ حَتَّى سُمِّيَ الْيَهُودِيُّ، فَأَوْمَأَتْ بِرَأْسِهَا، فَجِيءَ بِهِ، فَلَمْ يَزَلْ حَتَّى اعْتَرَفَ، فَأَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَرُضَّ رَأْسُهُ بِالْحِجَارَةِ.
பாடம் : 5 நோயாளி தமது தலையால் தெளி வான சைகை செய்தால் அது செல்லும்.
2746. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

யூதர் ஒருவர் ஒரு சிறுமியின் தலையை இரு கற்களுக்கிடையே வைத்து நசுக்கி விட்டார். அச்சிறுமியிடம், ‘‘உன்னை இப்படிச் செய்தது யார்? இன்னாரா? இன்னாரா?” என்று ஒவ்வொரு பெயராகச் சொல்லிக் கேட்கப்பட்டது. இறுதியில், அந்த யூதருடைய பெயர் சொல்லப்பட்ட வுடன் (‘அவர்தான் இப்படிச் செய்தார்’ என்று) அச்சிறுமி தன் தலையால் சைகை செய்தாள்.

உடனே அந்த யூதர் கொண்டுவரப் பட்டார். அவர் தமது குற்றத்தை ஒப்புக் கொள்ளும்வரை தொடர்ந்து விசாரிக்கப் பட்டார். அவர் ஒப்புக்கொண்டவுடன் நபி (ஸல்) அவர்கள் அவரது தலையைக் கல்லால் நசுக்கும்படி உத்தரவிட, அவ்வாறே அவரது தலை நசுக்கப் பட்டது.

அத்தியாயம் : 55
2747. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، عَنْ وَرْقَاءَ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ الْمَالُ لِلْوَلَدِ، وَكَانَتِ الْوَصِيَّةُ لِلْوَالِدَيْنِ، فَنَسَخَ اللَّهُ مِنْ ذَلِكَ مَا أَحَبَّ، فَجَعَلَ لِلذَّكَرِ مِثْلَ حَظِّ الأُنْثَيَيْنِ، وَجَعَلَ لِلأَبَوَيْنِ لِكُلِّ وَاحِدٍ مِنْهُمَا السُّدُسَ، وَجَعَلَ لِلْمَرْأَةِ الثُّمُنَ وَالرُّبْعَ، وَلِلزَّوْجِ الشَّطْرَ وَالرُّبُعَ.
பாடம் : 6 வாரிசுக்கு இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவிக்கக் கூடாது.
2747. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(தொடக்க காலத்தில்) சொத்து பிள்ளைக்குரியதாகவும் இறுதி விருப்பம் தெரிவித்தல் தாய்தந்தைக்குரியதாகவும் இருந்தது. அதில், தான் விரும்பியதை அல்லாஹ், மாற்றிவிட்டான்; இரு பெண்களின் பங்குக்குச் சமமானதை ஆணுக்கு (அவனது பங்காக) நிர்ணயித்தான். தாய் தந்தையரில் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பங்கை நிர்ணயித்தான். (குழந்தை இருந்தால்) மனைவிக்கு எட்டில் ஒரு பங்கையும், (குழந்தை இல்லாவிட்டால்) நான்கில் ஒரு பங்கையும் (அவ்வாறே) கணவனுக்குப் பாதியையும் நான்கில் ஒரு பங்கையும் நிர்ணயித்தான்.7

அத்தியாயம் : 55
2748. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ سُفْيَانَ، عَنْ عُمَارَةَ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَجُلٌ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم يَا رَسُولَ اللَّهِ، أَىُّ الصَّدَقَةِ أَفْضَلُ قَالَ "" أَنْ تَصَدَّقَ وَأَنْتَ صَحِيحٌ حَرِيصٌ. تَأْمُلُ الْغِنَى، وَتَخْشَى الْفَقْرَ، وَلاَ تُمْهِلْ حَتَّى إِذَا بَلَغَتِ الْحُلْقُومَ قُلْتَ لِفُلاَنٍ كَذَا وَلِفُلاَنٍ كَذَا، وَقَدْ كَانَ لِفُلاَنٍ "".
பாடம் : 7 மரணத் தறுவாயில் தர்மம் செய்வது
2748. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! தர்மத்தில் சிறந்தது எது?” என்று கேட்டார்.

‘‘நீங்கள் ஆரோக்கியமுள்ளவராகவும், பொருளாசை கொண்டவராகவும், செல்வந் தராக விரும்பிய நிலையில் வறுமையை அஞ்சியவராகவும் இருக்கும்போது தர்மம் செய்வதே சிறந்த தர்மம் ஆகும். உமது உயிர் தொண்டைக் குழியை அடைந்து விட்டிருக்க, யிஇன்னாருக்கு இவ்வளவு கொடுங்கள்; இன்னாருக்கு இவ்வளவு கொடுங்கள்’ என்று சொல்லும் (நேரம் வரும்)வரை தர்மம் செய்வதைத் தள்ளிப் போடாதீர். (உமது மரணம் நெருங்கிவிடும்) அந்த நேரத்திலோ அது இன்னாருக்கு (உம்முடைய வாரிசுகளுக்கு) உரியதாய் ஆகிவிட்டிருக்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அத்தியாயம் : 55
2749. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ أَبُو الرَّبِيعِ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا نَافِعُ بْنُ مَالِكِ بْنِ أَبِي عَامِرٍ أَبُو سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" آيَةُ الْمُنَافِقِ ثَلاَثٌ، إِذَا حَدَّثَ كَذَبَ، وَإِذَا اؤْتُمِنَ خَانَ، وَإِذَا وَعَدَ أَخْلَفَ "".
பாடம் : 8 வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: (இந்தச் சொத்துப் பங்கீடெல்லாம்) அவர் தெரிவித்திருந்த இறுதி விருப்பம் மற்றும் (அவரது) கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பிறகுதான். (4:12) நீதிபதி ஷுரைஹ், உமர் பின் அப்தில் அஸீஸ், தாவூஸ், அதாஉ, இப்னு உதைனா (ரஹ்) ஆகியோர், ‘‘நோயாளி, தான் பட்ட கடனை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளிப்பது செல்லும்” என்று தெரிவித்துள் ளார்கள் எனக் கூறப்படுகிறது. ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள், ‘‘ஒரு மனிதன் செய்யும் தர்மங்களில் தகுதி மிக்கது, அவன் உலக வாழ்வின் கடைசி நாளிலும் மறுமை வாழ்வின் முதல் நாளி லும் செய்யும் (இறுதி விருப்ப) தர்மமே யாகும்” என்று கூறினார்கள். இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்), ஹகம் பின் உ(த்)தைபா (ரஹ்) ஆகியோர்கூறினார்கள்: (மரணப் படுக்கையில் உள்ள நோயாளி) ஒருவர், தம் வாரிசைக் கடனிலிருந்து விடுவித்துவிட்டால் அவர் கடன் சுமையிலிருந்து விடுபட்டுவிடுவார். ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள், ஃபஸாரிய்யா குலத்தைச் சேர்ந்த தம் மனைவி, தமது வீட்டில் பூட்டிவைத்திருக்கும் செல்வத்தைத் திறந்துகாட்(டி பிறருக் குப் பங்கு கொடுத்தி)ட வேண்டியதில்லை என்று இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவித்தார்கள்.8 ‘‘ஒருவர் தமது மரண வேளையில் தம் அடிமையைப் பார்த்து ‘உன்னை நான் விடுதலை செய்துவிட்டிருந்தேன்’ என்று கூறினால், அது செல்லும்” என்று ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள். ‘‘ஒரு பெண் தனது மரண வேளையில் ‘என் கணவர் எனக்குத் தர வேண்டியதைத் தந்து (கடனை) அடைத்துவிட்டார். நான் அதை அவரிடமிருந்து பெற்றுக்கொண்டு விட்டேன்’ என்று கூறினால், அது செல்லும்” என ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ‘‘மரணப் படுக்கையில் உள்ள ஒருவர் தம் வாரிசுகளில் சிலருக்கு (தாம் இவ்வளவு தொகை கொடுக்க வேண்டியுள்ளது என்று) வாக்குமூலம் அளித்தால், அது செல்லாது. (அச்சிலருக்கு மட்டும் சலுகை செய்வதற் காக அவ்வாறு அவர் சொல்லியிருக்கக்கூடும் என்ற) சந்தேகமே (கெட்ட எண்ணமே) இதற்குக் காரணம்” என்று சிலர் கூறுகின்றனர். (இவ்வாறு கூறும்) இவர்களே பிறகு இறங்கிவந்து, ‘‘(வாரிசுகளில் ஒருவரது) அடைக்கலப் பொருள், அல்லது ஏதேனும் ஒரு பொருள், அல்லது கூட்டு வியாபாரத்தின் பங்கு தம்மிடம் இருப்பதாக (நோயாளி) வாக்குமூலம் அளித்தால், அது செல்லும்” என்கின்றனர். ஆனால், (இவ்வாறு கெட்ட எண்ணம் கொள்வது சரியன்று. ஏனெனில்,) நபி (ஸல்) அவர்கள், ‘‘(ஆதாரமின்றி) சந்தேகம் கொள்வது குறித்து உங்களை எச்சரிக்கிறேன்; சந்தேகம்தான் பேச்சுகளிலேயே மிகவும் பொய்யானது” என்று கூறியுள்ளார்கள். மேலும், முஸ்லிம்களின் செல்வத்தை (அநியாயமாக) உண்பது கூடாது.9 ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், ‘‘நயவஞ் சகனின் அடையாளம் யாதெனில், அவனி டம் அடைக்கலப் பொருள் (அல்லது பொறுப்பு) ஏதும் நம்பி ஒப்படைக்கப்பட் டால் அதில் அவன் மோசடி செய்வான்” என்று கூறியுள்ளார்கள். உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: உங்களை நம்பி ஒப்படைக்கப்பட்ட (அமானிதப்) பொருட்களை அவற்றுக்கு உரியவர்களிடம் ஒப்படைத்துவிடுங்கள். (4:58) இங்கு யிஉரியவர்கள்’ என்பது வாரிசுகள், வாரிசு அல்லாதோர் என்ற பாகுபாடின்றி அனைவரையும் குறிக்கும். நயவஞ்சகனின் அடையாளம் குறித்த இந்த ஹதீஸை நபி (ஸல்) அவர்களிட மிருந்து அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
2749. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். (அவையாவன:) அவன் பேசும்போது பொய் பேசுவான்; அவனிடம் நம்பி எதையும் ஒப்படைக்கப்பட்டால் (அதில்) மோசடி செய்வான்; வாக்களித்தால் அதற்கு மாறுசெய்வான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 55
2750. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، وَعُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، أَنَّ حَكِيمَ بْنَ حِزَامٍ ـ رضى الله عنه ـ قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَأَعْطَانِي، ثُمَّ سَأَلْتُهُ فَأَعْطَانِي ثُمَّ قَالَ لِي "" يَا حَكِيمُ، إِنَّ هَذَا الْمَالَ خَضِرٌ حُلْوٌ، فَمَنْ أَخَذَهُ بِسَخَاوَةِ نَفْسٍ بُورِكَ لَهُ فِيهِ، وَمَنْ أَخَذَهُ بِإِشْرَافِ نَفْسٍ لَمْ يُبَارَكْ لَهُ فِيهِ، وَكَانَ كَالَّذِي يَأْكُلُ وَلاَ يَشْبَعُ، وَالْيَدُ الْعُلْيَا خَيْرٌ مِنَ الْيَدِ السُّفْلَى "". قَالَ حَكِيمٌ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ، وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ لاَ أَرْزَأُ أَحَدًا بَعْدَكَ شَيْئًا حَتَّى أُفَارِقَ الدُّنْيَا. فَكَانَ أَبُو بَكْرٍ يَدْعُو حَكِيمًا لِيُعْطِيَهُ الْعَطَاءَ فَيَأْبَى أَنْ يَقْبَلَ مِنْهُ شَيْئًا، ثُمَّ إِنَّ عُمَرَ دَعَاهُ لِيُعْطِيَهُ فَيَأْبَى أَنْ يَقْبَلَهُ فَقَالَ يَا مَعْشَرَ الْمُسْلِمِينَ، إِنِّي أَعْرِضُ عَلَيْهِ حَقَّهُ الَّذِي قَسَمَ اللَّهُ لَهُ مِنْ هَذَا الْفَىْءِ فَيَأْبَى أَنْ يَأْخُذَهُ. فَلَمْ يَرْزَأْ حَكِيمٌ أَحَدًا مِنَ النَّاسِ بَعْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم حَتَّى تُوُفِّيَ رَحِمَهُ اللَّهُ.
பாடம் : 9 ‘‘அவர் தெரிவித்திருந்த இறுதி விருப்பம் மற்றும் (அவரது) கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பிறகுதான்” (4:12) எனும் வசனத் தொடரின் விளக்கம் நபி (ஸல்) அவர்கள், ‘‘இறுதி விருப்பத்தை (வஸிய்யத்) நிறைவேற்றுவதற்கு முன்பே கடனை அடைக்க வேண்டும்” என்று தீர்ப்பளித்ததாகக் கூறப்படுகிறது. வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: உங்களை நம்பி ஒப்படைக்கப்பட்ட (அமானிதப்) பொருட்களை அவற்றுக்கு உரியவர்களிடம் ஒப்படைத்துவிடுங்கள். (4:58) ஆகவே, அடைக்கலப் பொருளை ஒப்படைப்பது, (கட்டாயக் கடமையாக இருப்பதால் அது) கூடுதல் நற்செயலான யிவஸிய்யத்’தை நிறைவேற்றுவதைவிட முன்னுரிமை வாய்ந்தது என்பது இதிலிருந்து தெரிகிறது. மேலும், நபி (ஸல்) அவர்கள், ‘‘தேவைக்கு மிஞ்சியதைக் கொடுப்பதே தர்மமாகும்” என்று கூறினார்கள்.10 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘அடிமை, தன் காப்பாளரின் அனுமதியின்றி இறுதி விருப்பம் தெரிவிக்கக் கூடாது” என்று கூறியுள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘அடிமை தன் உரிமையாளரின் செல்வத்தைப் பாதுகாப்ப வன் ஆவான்” என்று கூறினார்கள்.11
2750. ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (தர்மம்) கேட்டேன். அவர்கள் கொடுத்தார்கள். பிறகும் நபி அவர்களிடம் கேட்டேன். அவர்கள் கொடுத்தார்கள். பிறகு என்னிடம், ‘‘ஹகீமே! இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். எவர் இதை தாராள மனத்துடன் (பேராசையின்றி) எடுத்துக்கொள்கிறாரோ அவருக்கு இதில் அருள் வளம் (பரக்கத்) வழங்கப்படுகிறது. எவர் இதைப் பேராசை யுடன் எடுத்துக்கொள்கிறாரோ அவருக்கு இதில் அருள் வளம் வழங்கப்படுவதில்லை. அவர் உண்ட பின்பும் வயிறு நிரம்பாத வரைப் போன்றவர் ஆவார். மேல் கை தான், கீழ்க் கையை விடச் சிறந்ததாகும்” என்று கூறினார்கள்.12

நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! சத்திய (மார்க்க)த்துடன் தங்களை அனுப்பியவன் மீதாணையாக! தங்களுக்குப்பின் எவரிட மும் எதையும் நான் (இந்த) உலகை விட்டுப் பிரியும்வரை கேட்கமாட்டேன்” என்று கூறினேன்.

அறிவிப்பாளர் உர்வா பின் அஸ் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்களை அபூபக்ர் (ரலி) அவர்கள் அன்பளிப்புத் தருவதற்காக அழைத்தார்கள். அவர்களிட மிருந்து எதையும் ஏற்றுக்கொள்ள அவர் மறுத்துவிட்டார். பிறகு உமர் (ரலி) அவர்கள் அவருக்கு (அன்பளிப்புகள் சிலவற்றை)க் கொடுப்பதற்காக அழைத்தார்கள். அதையும் ஏற்க அவர் மறுத்துவிட்டார்.

ஆகவே, உமர் (ரலி) அவர்கள் (மக்களிடையே), ‘‘முஸ்லிம்களே! இந்த (ஃபய்உ எனும்) வெற்றிச் செல்வங்களிலிருந்து அல்லாஹ் ஒதுக்கிய அவரது உரிமையை அவருக்குப் பங்கிட்டுக் கொடுத்தேன். ஆனால், அதைப் பெற்றுக்கொள்ள அவர் மறுத்துவிட்டார்” என்று அறிவித்துவிட்டார்கள். நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு எந்த மனிதரிடமும், ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள், தாம் மரணிக்கும்வரை (எதுவும்) கேட்கவில்லை. அவர்மீது அல்லாஹ் கருணை புரிவானாக!13

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 55
2751. حَدَّثَنَا بِشْرُ بْنُ مُحَمَّدٍ السَّخْتِيَانِيُّ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي سَالِمٌ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" كُلُّكُمْ رَاعٍ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالإِمَامُ رَاعٍ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالرَّجُلُ رَاعٍ فِي أَهْلِهِ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالْمَرْأَةُ فِي بَيْتِ زَوْجِهَا رَاعِيَةٌ وَمَسْئُولَةٌ عَنْ رَعِيَّتِهَا، وَالْخَادِمُ فِي مَالِ سَيِّدِهِ رَاعٍ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ "". قَالَ وَحَسِبْتُ أَنْ قَدْ قَالَ "" وَالرَّجُلُ رَاعٍ فِي مَالِ أَبِيهِ "".
பாடம் : 9 ‘‘அவர் தெரிவித்திருந்த இறுதி விருப்பம் மற்றும் (அவரது) கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பிறகுதான்” (4:12) எனும் வசனத் தொடரின் விளக்கம் நபி (ஸல்) அவர்கள், ‘‘இறுதி விருப்பத்தை (வஸிய்யத்) நிறைவேற்றுவதற்கு முன்பே கடனை அடைக்க வேண்டும்” என்று தீர்ப்பளித்ததாகக் கூறப்படுகிறது. வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: உங்களை நம்பி ஒப்படைக்கப்பட்ட (அமானிதப்) பொருட்களை அவற்றுக்கு உரியவர்களிடம் ஒப்படைத்துவிடுங்கள். (4:58) ஆகவே, அடைக்கலப் பொருளை ஒப்படைப்பது, (கட்டாயக் கடமையாக இருப்பதால் அது) கூடுதல் நற்செயலான யிவஸிய்யத்’தை நிறைவேற்றுவதைவிட முன்னுரிமை வாய்ந்தது என்பது இதிலிருந்து தெரிகிறது. மேலும், நபி (ஸல்) அவர்கள், ‘‘தேவைக்கு மிஞ்சியதைக் கொடுப்பதே தர்மமாகும்” என்று கூறினார்கள்.10 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘அடிமை, தன் காப்பாளரின் அனுமதியின்றி இறுதி விருப்பம் தெரிவிக்கக் கூடாது” என்று கூறியுள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘அடிமை தன் உரிமையாளரின் செல்வத்தைப் பாதுகாப்ப வன் ஆவான்” என்று கூறினார்கள்.11
2751. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒவ்வொருவரும் பொறுப் பாளரே. அவரவர் தத்தமது பொறுப் பிலுள்ளவை பற்றி விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளியாவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக் கப்படுவார். ஆண், தன் வீட்டார் விஷயத் தில் பொறுப்பாளியாவான். அவன் தன் பொறுப்பிலுள்ள வீட்டாரைக் குறித்து விசாரிக்கப்படுவான். ஒரு பெண், தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளி யாவாள். அவள் தன் பொறுப்பிலுள்ள (வீட்டு) விவகாரங்கள் குறித்து விசாரிக் கப்படுவாள். பணியாள் தன் உரிமை யாளரின் செல்வத்திற்குப் பொறுப்பாளன் ஆவான். அவன் தன் பொறுப்பிலுள்ள செல்வம் குறித்து விசாரிக்கப்படுவான்.

மேலும், ‘‘ஓர் ஆண் மகன் தன் தந்தையின் செல்வத்திற்குப் பொறுப்பாளி யாவான்” என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியதாகவே நான் எண்ணுகிறேன்.

இதை உமர் (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.14

அத்தியாயம் : 55
2752. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، أَنَّهُ سَمِعَ أَنَسًا ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لأَبِي طَلْحَةَ "" أَرَى أَنْ تَجْعَلَهَا فِي الأَقْرَبِينَ "". قَالَ أَبُو طَلْحَةَ أَفْعَلُ يَا رَسُولَ اللَّهِ. فَقَسَمَهَا أَبُو طَلْحَةَ فِي أَقَارِبِهِ وَبَنِي عَمِّهِ. وَقَالَ ابْنُ عَبَّاسٍ لَمَّا نَزَلَتْ {وَأَنْذِرْ عَشِيرَتَكَ الأَقْرَبِينَ} جَعَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُنَادِي "" يَا بَنِي فِهْرٍ، يَا بَنِي عَدِيٍّ "". لِبُطُونِ قُرَيْشٍ. وَقَالَ أَبُو هُرَيْرَةَ لَمَّا نَزَلَتْ {وَأَنْذِرْ عَشِيرَتَكَ الأَقْرَبِينَ} قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" يَا مَعْشَرَ قُرَيْشٍ "".
பாடம் : 10 ஒருவர் தம் உறவினர்களுக்கு அறக்கொடை (வக்ஃப்) வழங்குவது, அல்லது இறுதி விருப்பம் தெரிவிப்பது, உறவினர் என்போர் யார், யார்? என்பது நபி (ஸல்) அவர்கள் அபூதல்ஹா (ரலி) அவர்களிடம், ‘‘அதை (உன் தோட்டத்தை) உம்முடைய ஏழை உறவினர்களுக்குக் கொடுத்துவிடுவீராக” என்று கூறினார்கள். ஆகவே, அபூதல்ஹா (ரலி) அவர்கள் அதை ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்களுக்கும் உபை பின் கஅப் (ரலி) அவர்களுக்கும் கொடுத்துவிட்டார்கள் என்று அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து ஸாபித் பின் அஸ்லம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். மற்றோர் அறிவிப்பில் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து ஸுமாமா பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியிருப் பதாவது: ‘‘உம்முடைய ஏழை உறவினர்களுக்கு அதைக் கொடுத்துவிடுவீராக” என்று நபி (ஸல்) அவர்கள் (அபூதல்ஹா (ரலி) அவர்களிடம்) கூறினார்கள். ஆகவே, அவர் அதை ஹஸ்ஸான் (ரலி) அவர்களுக்கும், உபை பின் கஅப் (ரலி) அவர்களுக்கும் கொடுத்துவிட்டார். அவர்களிருவரும் அபூதல்ஹாவுக்கு என்னைவிட நெருக்க மான உறவினர்களாக இருந்தனர். அபூதல்ஹா (ரலி) அவர்களுக்கும் ஹஸ்ஸான் (ரலி) மற்றும் உபை பின் கஅப் (ரலி) ஆகியோருக்கும் இடையிலான உறவுமுறை வருமாறு: அபூதல்ஹா (ரலி) அவர்களின் இயற்பெயர் ஸைத் என்பதாகும். ஸைத், சஹ்லின் மகனாவார். சஹ்ல், அஸ்வத் என்பவரின் மகனும் அஸ்வத், ஹராம் என்பவரின் மகனும் ஹராம், அம்ர் என்பவரின் மகனும் அம்ர், ஸைத் மனாத் என்பவரின் மகனும் ஸைத் மனாத், அதீ என்பவரின் மகனும் அதீ, அம்ர் என்பவரின் மகனும் அம்ர், மாலிக் என்பவரின் மகனும் மாலிக், நஜ்ஜார் என்பவரின் மகனும் ஆவார்கள். ஹஸ்ஸான் (ரலி) அவர்கள் ஸாபித் என்பவரின் மகனும் ஸாபித், முன்திர் என்பவரின் மகனும் முன்திர், ஹராம் என்பவரின் மகனும் ஆவார்கள். ஆக, (முப்பாட்டனாரான) மூன்றாவது தந்தை ஹராம் என்பவருடன் இருவரின் குடும்ப உறவும் ஒன்றுசேர்கிறது. அந்த (முப்பாட்டனாரான) ஹராம், அம்ருடைய மகனும் அம்ர், ஸைத் மனாத்துடைய மகனும், ஸைத் மனாத், அதீயின் மகனும் அதீ, அம்ருடைய மகனும் அம்ர், மாலிக் உடைய மகனும் மாலிக், நஜ்ஜாருடைய மகனும் ஆவார்கள். இந்த அம்ர்தான் லி நஜ்ஜாரின் மகனான மாலிக்கின் மகன் அம்ர்தான் லிஹஸ்ஸான் (ரலி), அபூதல்ஹா (ரலி), உபை பின் கஅப் (ரலி) ஆகிய மூவரையும் ஒன்று சேர்க்கும் தந்தையாவார். இவர் உபை பின் கஅப் (ரலி) அவர்களின் (தந்தை, பாட்டனார் ஆகிய மேல் நோக்கிய உறவு முறை வரிசையில்) ஆறாவது தந்தையாக (முப்பாட்டனுக்கு முப்பாட்டனாக) வருகிறார். உபை (ரலி) அவர்கள், கஅப் அவர் களின் மகனும் கஅப், கைஸ் உடைய மகனும் கைஸ், உபைத் உடைய மகனும் உபைத், ஸைத் உடைய மகனும் ஸைத், முஆவியாவின் மகனும் முஆவியா, அம்ருடைய மகனும் அம்ர், மாலிக்கின் மகனும் மாலிக், நஜ்ஜார் உடைய மகனும் ஆவார்கள். ஆக, அம்ர் பின் மாலிக் அவர்கள்தான் ஹஸ்ஸான் (ரலி), அபூதல்ஹா (ரலி), உபை பின் கஅப் (ரலி) ஆகிய மூவரையும் (உறவுமுறையில்) ஒன்றிணைப்பவர் ஆவார். ‘‘ஒருவர், தம் உறவினர்களுக்கு மரண சாசனம் செய்ய வேண்டுமென்றால் (அவரையும் அவர்களையும் இணைக்கின்ற) முஸ்லிமான முன்னோர் இருக்க வேண்டும்” என்று சிலர் கூறுகின்றனர்.
2752. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் அபூதல்ஹா (ரலி) அவர்களிடம், ‘‘நீர் அதை (உமது தோட்டத்தை) உம்முடைய உறவினர்களிடையே பங்கிட்டுக் கொடுத்துவிடுவதை நான் உசிதமானதாகக் கருதுகிறேன்” என்று கூறினார்கள். அதற்கு அபூதல்ஹா(ரலி) அவர்கள், ‘‘அவ்வாறே செய்கிறேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறிவிட்டு, தம் (நெருங்கிய) உறவினர்களிடையேயும் தம் தந்தையின் சகோதரருடைய மக்களிடையேயும் பங்கிட்டுவிட்டார்கள்.

‘‘ ‘(நபியே!) நீர் உம்முடைய நெருங்கிய உறவினர்களை எச்சரிப்பீராக!› (26:214) எனும் இறைவசனம் அருளப்பட்டபோது நபி (ஸல்) அவர்கள், யிபனூ ஃபிஹ்ர் குடும்பத்தாரே! பனூ அதீ குடும்பத்தாரே!› என்று குறைஷிக் குலத்தாரின் பெரும் பெரும் கிளைக் குடும்பத்தாரை அழைக்க லானார்கள்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

‘‘இந்த இறைவசனம் (26:214) அருளப் பட்டபோது நபி (ஸல்) அவர்கள், யிகுறைஷிக் குலத்தாரே!› என்று அழைத்து, (இஸ்லாமியச் செய்தியை எடுத்துரைத்து) எச்சரித்தார்கள்” என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அத்தியாயம் : 55
2753. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، وَأَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ أَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ {وَأَنْذِرْ عَشِيرَتَكَ الأَقْرَبِينَ } قَالَ "" يَا مَعْشَرَ قُرَيْشٍ ـ أَوْ كَلِمَةً نَحْوَهَا ـ اشْتَرُوا أَنْفُسَكُمْ، لاَ أُغْنِي عَنْكُمْ مِنَ اللَّهِ شَيْئًا، يَا بَنِي عَبْدِ مَنَافٍ لاَ أُغْنِي عَنْكُمْ مِنَ اللَّهِ شَيْئًا، يَا عَبَّاسُ بْنَ عَبْدِ الْمُطَّلِبِ لاَ أُغْنِي عَنْكَ مِنَ اللَّهِ شَيْئًا، وَيَا صَفِيَّةُ عَمَّةَ رَسُولِ اللَّهِ لاَ أُغْنِي عَنْكِ مِنَ اللَّهِ شَيْئًا، وَيَا فَاطِمَةُ بِنْتَ مُحَمَّدٍ سَلِينِي مَا شِئْتِ مِنْ مَالِي لاَ أُغْنِي عَنْكِ مِنَ اللَّهِ شَيْئًا "". تَابَعَهُ أَصْبَغُ عَنِ ابْنِ وَهْبٍ عَنْ يُونُسَ عَنِ ابْنِ شِهَابٍ.
பாடம் : 11 யிஉறவினர்கள்' என்பதில் பெண் களும் குழந்தைகளும் அடங்கு வார்களா?
2753. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘(நபியே!) உங்கள் நெருங்கிய உற வினர்களை எச்சரிப்பீராக!” (26:214) எனும் இறைவசனத்தை அல்லாஹ் அருளிய பொழுது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து, யிகுறைஷிக் குலத்தாரே!› என்றோ அது போன்ற ஒரு சொல்லையோ கூறி (அழைத்து), ‘‘(ஓரிறையை ஏற்று) உங்களை (நரக நெருப்பிலிருந்து) விலைக்கு வாங்கிக்கொள்ளுங்கள். அல்லாஹ்வி(ன் தண்டனை’)லிருந்து உங்களை நான் சிறிதளவும் காப்பாற்ற முடியாது.

அப்து மனாஃபின் மக்களே! உங்களை அல்லாஹ்(வின் தண்டனை’)லிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. அப்துல் முத்தலிபின் மகன் அப்பாஸே! உங்களை அல்லாஹ்வி(ன் தண்டனை’)லிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. அல்லாஹ்வின் தூதருடைய அத்தை (மாமி) ஸஃபிய்யாவே! உங்களை அல்லாஹ்வி(ன் தண்டனை’)லிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. முஹம்மதின் மகள் ஃபாத்திமாவே! என் செல்வத்திலிருந்து நீ விரும்பியதைக் கேள் (தருகிறேன்). (ஆனால்,) உன்னை அல்லாஹ்வி(ன் தண்டனை’)லிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது” என்று கூறினார்கள்.15

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 55
2754. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَأَى رَجُلاً يَسُوقُ بَدَنَةً، فَقَالَ لَهُ "" ارْكَبْهَا "". فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّهَا بَدَنَةٌ. قَالَ فِي الثَّالِثَةِ أَوِ الرَّابِعَةِ "" ارْكَبْهَا، وَيْلَكَ، أَوْ وَيْحَكَ "".
பாடம் : 12 அறக்கொடை (வக்ஃப்) அளித்தவர் தமது அறக்கொடையால் பயனடை யலாமா? உமர் (ரலி) அவர்கள் (கைபரில் தமக் குக் கிடைத்த நிலத்தை வக்ஃப் செய்த போது), ‘‘அதை நிர்வகிப்பவர் அதிலிருந்து உண்பதில் தவறில்லை” என்று நிபந்தனை யிட்டார்கள்.16 மேலும், வக்ஃப் செய்தவரேகூட அதன் நிர்வாகப் பொறுப்பை ஏற்கலாம்; அவரல்லாத பிறரும் நிர்வாகப் பொறுப்பை ஏற்கலாம். இவ்வாறே யாரெல்லாம் ஓர் ஒட்டகத்தையோ வேறெந்தப் பொருளையோ அல்லாஹ்வுக்காக வழங்கிவிடுகிறாரோ அதிலிருந்து மற்றவர்கள் பயனடைவதைப் போன்றே, அவரும் பயனடையலாம்; அவ்விதம் (தாம் பயனடைவேன் என்று) அவர் நிபந்தனையிடாவிட்டாலும் சரியே.
2754. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் குர்பானி ஒட்ட கத்தை ஓட்டிக்கொண்டு வந்த ஒரு மனிதரைக் கண்டு, ‘‘அதில் நீர் ஏறிக் கொள்வீராக” என்று கூறினார்கள். அதற்கு அவர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இது குர்பானி ஒட்டகம்” என்று கூறினார். (இவ்விதம் திரும்பத் திரும்பக் கூறியும் அவர் அதில் ஏறவில்லை.) மூன்றாவது, அல்லது நான்காவது முறையில், ‘‘உனக்குக் கேடுதான் லிஅல்லது உனக்கு நாசம்தான்லி அதில் நீர் ஏறிக்கொள்வீராக” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 55
2755. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَأَى رَجُلاً يَسُوقُ بَدَنَةً، فَقَالَ "" ارْكَبْهَا "". قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّهَا بَدَنَةٌ. قَالَ "" ارْكَبْهَا، وَيْلَكَ "". فِي الثَّانِيَةِ أَوْ فِي الثَّالِثَةِ.
பாடம் : 12 அறக்கொடை (வக்ஃப்) அளித்தவர் தமது அறக்கொடையால் பயனடை யலாமா? உமர் (ரலி) அவர்கள் (கைபரில் தமக் குக் கிடைத்த நிலத்தை வக்ஃப் செய்த போது), ‘‘அதை நிர்வகிப்பவர் அதிலிருந்து உண்பதில் தவறில்லை” என்று நிபந்தனை யிட்டார்கள்.16 மேலும், வக்ஃப் செய்தவரேகூட அதன் நிர்வாகப் பொறுப்பை ஏற்கலாம்; அவரல்லாத பிறரும் நிர்வாகப் பொறுப்பை ஏற்கலாம். இவ்வாறே யாரெல்லாம் ஓர் ஒட்டகத்தையோ வேறெந்தப் பொருளையோ அல்லாஹ்வுக்காக வழங்கிவிடுகிறாரோ அதிலிருந்து மற்றவர்கள் பயனடைவதைப் போன்றே, அவரும் பயனடையலாம்; அவ்விதம் (தாம் பயனடைவேன் என்று) அவர் நிபந்தனையிடாவிட்டாலும் சரியே.
2755. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரு மனிதர் குர்பானி ஒட்டகம் ஒன்றை ஓட்டிக்கொண்டு வருவதைக் கண்டார்கள். அப்போது அவரிடம், ‘‘அதில் நீர் ஏறிக் கொள்வீராக” என்று கூறினார்கள். அவர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இது குர்பானி ஒட்டகம்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் இரண்டாவது முறையிலோ மூன்றாவது முறையிலோ (கூறும்போது), ‘‘உமக்குக் கேடுதான்; அதில் ஏறிக்கொள்வீராக!” என்று கூறினார்கள்.17

அத்தியாயம் : 55
2756. حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا مَخْلَدُ بْنُ يَزِيدَ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي يَعْلَى، أَنَّهُ سَمِعَ عِكْرِمَةَ، يَقُولُ أَنْبَأَنَا ابْنُ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ سَعْدَ بْنَ عُبَادَةَ ـ رضى الله عنه ـ تُوُفِّيَتْ أُمُّهُ وَهْوَ غَائِبٌ عَنْهَا، فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمِّي تُوُفِّيَتْ وَأَنَا غَائِبٌ عَنْهَا، أَيَنْفَعُهَا شَىْءٌ إِنْ تَصَدَّقْتُ بِهِ عَنْهَا قَالَ "" نَعَمْ "". قَالَ فَإِنِّي أُشْهِدُكَ أَنَّ حَائِطِي الْمِخْرَافَ صَدَقَةٌ عَلَيْهَا.
பாடம் : 13 ஒருவர் ஒன்றை அறக்கொடை (வக்ஃப்) வழங்கினால், அடுத்தவரிடம் அதை ஒப்படைக்கும் முன்பே செல்லும். உமர் (ரலி) அவர்கள் வக்ஃப் செய்தபோது, ‘‘அதற்கு (நிர்வாகப்) பொறுப்பேற்பவர் அதிலிருந்து சிறிது உண்பதால் அவர்மீது குற்றமில்லை” என்று கூறினார்கள். ‘அதற்கு நான் பொறுப்பேற்றால்’ என்றோ யிபிறர் பொறுப்பேற்றால்’ என்றோ அப்போது அவர்கள் குறிப்பிட்டுக் கூற வில்லை. நபி (ஸல்) அவர்கள் அபூதல்ஹா (ரலி) அவர்களிடம், ‘‘நீர் அதை (உமது தோட்டத்தை) உம்முடைய நெருங்கிய உறவினர்களிடையே பங்கிட்டுவிடுவதை நான் உசிதமாகக் கருதுகிறேன்” என்று கூறினார்கள். உடனே அபூதல்ஹா (ரலி) அவர்கள், ‘‘அவ்வாறே செய்கிறேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறிவிட்டு, அதைத் தம் உறவினர்களிடையேயும் தம் தந்தையின் சகோதரருடைய மக்களிடை யேயும் பங்கிட்டுவிட்டார்கள். பாடம் : 14 ஒருவர், ‘‘என் வீடு அல்லாஹ்வுக் காகத் தர்மமாகும்” என்று கூறி, அது ஏழைகளுக்குச் சேர வேண்டிய தர்மமா; அல்லது மற்றவர்களுக்குச் சேர வேண்டிய தர்மமா என்று விளக்காமல் விட்டுவிட்டாலும் அது செல்லும். அதை அவர் உறவினர்களுக்கோ அல்லது தாம் விரும்பிய இனத்திற்கோ வழங்கலாம். அபூதல்ஹா (ரலி) அவர்கள், ‘‘என் செல்வங்களிலேயே எனக்கு மிகவும் விருப்பமானது யிபைருஹா’ (என்னும் தோட்டம்)தான்; அதை நான் அல்லாஹ்வுக்காகத் தர்மம் செய்துவிடுகின்றேன்” என்று கூறியபோது, (யிஇன்னாருக்குத் தர்மம் செய்கிறேன்’ என்று அவர் விளக்கிக் கூறாத நிலையிலும்) நபி (ஸல்) அவர்கள் அதை அனுமதித்தார்கள். ‘‘அந்தத் தர்மம் யாருக்குச் சேர வேண்டும் என்று விளக்காத வரை அது செல்லாது” என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், முந்திய கருத்தே மிகச் சரியான தாகும். பாடம் : 15 ‘‘என் நிலம் அல்லது தோட்டம் அல்லாஹ்வுக்காக என் தாயார் சார்பாகத் தர்மமாகும் என்று ஒருவர் சொன்னால் அது செல்லும்; அந்தத் தர்மம் யாருக்குச் சேர வேண்டும் என்று அவர் தெளிவுபடுத்தா விட்டாலும் சரி.
2756. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் ஊரில் இல்லாதபோது அவருடைய தாயார் இறந்துவிட்டார். அப்போது அவர் (நபி (ஸல்) அவர்களிடம்), ‘‘அல்லாஹ்வின் தூதரே! என் தாயார் நான் ஊரில் இல்லாத போது இறந்துவிட்டார். நான் அவர் சார்பாகத் தர்மம் ஏதும் செய்தால் அது அவருக்குப் பயனளிக்குமா?” என்று கேட்டார்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம் (பயனளிக் கும்)” என்று பதிலளித்தார்கள். இதைக் கேட்ட சஅத் (ரலி) அவர்கள், ‘‘நான் எனது மிக்ராஃப் எனும் தோட்டத்தை என் தாயார் சார்பாகத் தர்மம் செய்துவிட்டேன். அதற்குத் தங்களை சாட்சியாக்குகிறேன்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 55
2757. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ كَعْبٍ، قَالَ سَمِعْتُ كَعْبَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه. قُلْتُ يَا رَسُولَ اللَّهِ، إِنَّ مِنْ تَوْبَتِي أَنْ أَنْخَلِعَ مِنْ مَالِي صَدَقَةً إِلَى اللَّهِ وَإِلَى رَسُولِهِ صلى الله عليه وسلم. قَالَ "" أَمْسِكْ عَلَيْكَ بَعْضَ مَالِكَ فَهُوَ خَيْرٌ لَكَ "". قُلْتُ فَإِنِّي أُمْسِكُ سَهْمِي الَّذِي بِخَيْبَرَ.
பாடம் : 16 ஒருவர் தமது செல்வத்தில் ஒரு பகுதியை, அல்லது தம் அடிமைகள் சிலரை, அல்லது கால்நடைகள் சிலவற்றைத் தர்மம் செய்தாலோ அறக்கொடையாக வழங்கினாலோ அது செல்லும்.
2757. கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! (நான் தபூக் போரில் கலந்துகொள்ளாமல் பின் வாங்கியதற்குப்) பாவமீட்பு பெறும் ஓர் அம்சமாக, என் செல்வத்தி(ன் உரிமையி)லிருந்து நான் விலகிக்கொண்டு அதை அல்லாஹ்வுக்காகவும் அல்லாஹ்வின் தூதருக்காகவும் தர்மமாக வழங்க விரும்பு கிறேன்” என்று கூறினேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘உமது செல்வத்தில் ஒரு பகுதியை உமக்காக வைத்துக்கொள்வீராக! அது உமக்கு நல்லது” என்று கூறினார்கள். நான், ‘‘கைபரில் கிடைத்த எனது பங்கை (எனக் காக) வைத்துக்கொள்கிறேன்” என்று கூறினேன்.

அத்தியாயம் : 55