2731. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، قَالَ أَخْبَرَنِي الزُّهْرِيُّ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، عَنِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ، وَمَرْوَانَ، يُصَدِّقُ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا حَدِيثَ صَاحِبِهِ قَالَ خَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم زَمَنَ الْحُدَيْبِيَةِ، حَتَّى كَانُوا بِبَعْضِ الطَّرِيقِ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِنَّ خَالِدَ بْنَ الْوَلِيدِ بِالْغَمِيمِ فِي خَيْلٍ لِقُرَيْشٍ طَلِيعَةً فَخُذُوا ذَاتَ الْيَمِينِ ". فَوَاللَّهِ مَا شَعَرَ بِهِمْ خَالِدٌ حَتَّى إِذَا هُمْ بِقَتَرَةِ الْجَيْشِ، فَانْطَلَقَ يَرْكُضُ نَذِيرًا لِقُرَيْشٍ، وَسَارَ النَّبِيُّ صلى الله عليه وسلم حَتَّى إِذَا كَانَ بِالثَّنِيَّةِ الَّتِي يُهْبَطُ عَلَيْهِمْ مِنْهَا، بَرَكَتْ بِهِ رَاحِلَتُهُ. فَقَالَ النَّاسُ حَلْ حَلْ. فَأَلَحَّتْ، فَقَالُوا خَلأَتِ الْقَصْوَاءُ، خَلأَتِ الْقَصْوَاءُ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " مَا خَلأَتِ الْقَصْوَاءُ، وَمَا ذَاكَ لَهَا بِخُلُقٍ، وَلَكِنْ حَبَسَهَا حَابِسُ الْفِيلِ، ثُمَّ قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لاَ يَسْأَلُونِي خُطَّةً يُعَظِّمُونَ فِيهَا حُرُمَاتِ اللَّهِ إِلاَّ أَعْطَيْتُهُمْ إِيَّاهَا ". ثُمَّ زَجَرَهَا فَوَثَبَتْ، قَالَ فَعَدَلَ عَنْهُمْ حَتَّى نَزَلَ بِأَقْصَى الْحُدَيْبِيَةِ، عَلَى ثَمَدٍ قَلِيلِ الْمَاءِ يَتَبَرَّضُهُ النَّاسُ تَبَرُّضًا، فَلَمْ يُلَبِّثْهُ النَّاسُ حَتَّى نَزَحُوهُ، وَشُكِيَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم الْعَطَشُ، فَانْتَزَعَ سَهْمًا مِنْ كِنَانَتِهِ، ثُمَّ أَمَرَهُمْ أَنْ يَجْعَلُوهُ فِيهِ، فَوَاللَّهِ مَا زَالَ يَجِيشُ لَهُمْ بِالرِّيِّ حَتَّى صَدَرُوا عَنْهُ، فَبَيْنَمَا هُمْ كَذَلِكَ، إِذْ جَاءَ بُدَيْلُ بْنُ وَرْقَاءَ الْخُزَاعِيُّ فِي نَفَرٍ مِنْ قَوْمِهِ مِنْ خُزَاعَةَ، وَكَانُوا عَيْبَةَ نُصْحِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ أَهْلِ تِهَامَةَ، فَقَالَ إِنِّي تَرَكْتُ كَعْبَ بْنَ لُؤَىٍّ وَعَامِرَ بْنَ لُؤَىٍّ نَزَلُوا أَعْدَادَ مِيَاهِ الْحُدَيْبِيَةِ، وَمَعَهُمُ الْعُوذُ الْمَطَافِيلُ، وَهُمْ مُقَاتِلُوكَ وَصَادُّوكَ عَنِ الْبَيْتِ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّا لَمْ نَجِئْ لِقِتَالِ أَحَدٍ، وَلَكِنَّا جِئْنَا مُعْتَمِرِينَ، وَإِنَّ قُرَيْشًا قَدْ نَهِكَتْهُمُ الْحَرْبُ، وَأَضَرَّتْ بِهِمْ، فَإِنْ شَاءُوا مَادَدْتُهُمْ مُدَّةً، وَيُخَلُّوا بَيْنِي وَبَيْنَ النَّاسِ، فَإِنْ أَظْهَرْ فَإِنْ شَاءُوا أَنْ يَدْخُلُوا فِيمَا دَخَلَ فِيهِ النَّاسُ فَعَلُوا، وَإِلاَّ فَقَدْ جَمُّوا، وَإِنْ هُمْ أَبَوْا فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لأُقَاتِلَنَّهُمْ عَلَى أَمْرِي هَذَا حَتَّى تَنْفَرِدَ سَالِفَتِي، وَلَيُنْفِذَنَّ اللَّهُ أَمْرَهُ ". فَقَالَ بُدَيْلٌ سَأُبَلِّغُهُمْ مَا تَقُولُ. قَالَ فَانْطَلَقَ حَتَّى أَتَى قُرَيْشًا قَالَ إِنَّا قَدْ جِئْنَاكُمْ مِنْ هَذَا الرَّجُلِ، وَسَمِعْنَاهُ يَقُولُ قَوْلاً، فَإِنْ شِئْتُمْ أَنْ نَعْرِضَهُ عَلَيْكُمْ فَعَلْنَا، فَقَالَ سُفَهَاؤُهُمْ لاَ حَاجَةَ لَنَا أَنْ تُخْبِرَنَا عَنْهُ بِشَىْءٍ. وَقَالَ ذَوُو الرَّأْىِ مِنْهُمْ هَاتِ مَا سَمِعْتَهُ يَقُولُ. قَالَ سَمِعْتُهُ يَقُولُ كَذَا وَكَذَا، فَحَدَّثَهُمْ بِمَا قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم. فَقَامَ عُرْوَةُ بْنُ مَسْعُودٍ فَقَالَ أَىْ قَوْمِ أَلَسْتُمْ بِالْوَالِدِ قَالُوا بَلَى. قَالَ أَوَلَسْتُ بِالْوَلَدِ قَالُوا بَلَى. قَالَ فَهَلْ تَتَّهِمُونِي. قَالُوا لاَ. قَالَ أَلَسْتُمْ تَعْلَمُونَ أَنِّي اسْتَنْفَرْتُ أَهْلَ عُكَاظٍ، فَلَمَّا بَلَّحُوا عَلَىَّ جِئْتُكُمْ بِأَهْلِي وَوَلَدِي وَمَنْ أَطَاعَنِي قَالُوا بَلَى. قَالَ فَإِنَّ هَذَا قَدْ عَرَضَ لَكُمْ خُطَّةَ رُشْدٍ، اقْبَلُوهَا وَدَعُونِي آتِهِ. قَالُوا ائْتِهِ. فَأَتَاهُ فَجَعَلَ يُكَلِّمُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم نَحْوًا مِنْ قَوْلِهِ لِبُدَيْلٍ، فَقَالَ عُرْوَةُ عِنْدَ ذَلِكَ أَىْ مُحَمَّدُ، أَرَأَيْتَ إِنِ اسْتَأْصَلْتَ أَمْرَ قَوْمِكَ هَلْ سَمِعْتَ بِأَحَدٍ مِنَ الْعَرَبِ اجْتَاحَ أَهْلَهُ قَبْلَكَ وَإِنْ تَكُنِ الأُخْرَى، فَإِنِّي وَاللَّهِ لأَرَى وُجُوهًا، وَإِنِّي لأَرَى أَوْشَابًا مِنَ النَّاسِ خَلِيقًا أَنْ يَفِرُّوا وَيَدَعُوكَ. فَقَالَ لَهُ أَبُو بَكْرٍ امْصُصْ بَظْرَ اللاَّتِ، أَنَحْنُ نَفِرُّ عَنْهُ وَنَدَعُهُ فَقَالَ مَنْ ذَا قَالُوا أَبُو بَكْرٍ. قَالَ أَمَا وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْلاَ يَدٌ كَانَتْ لَكَ عِنْدِي لَمْ أَجْزِكَ بِهَا لأَجَبْتُكَ. قَالَ وَجَعَلَ يُكَلِّمُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَكُلَّمَا تَكَلَّمَ أَخَذَ بِلِحْيَتِهِ، وَالْمُغِيرَةُ بْنُ شُعْبَةَ قَائِمٌ عَلَى رَأْسِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَمَعَهُ السَّيْفُ وَعَلَيْهِ الْمِغْفَرُ، فَكُلَّمَا أَهْوَى عُرْوَةُ بِيَدِهِ إِلَى لِحْيَةِ النَّبِيِّ صلى الله عليه وسلم ضَرَبَ يَدَهُ بِنَعْلِ السَّيْفِ، وَقَالَ لَهُ أَخِّرْ يَدَكَ عَنْ لِحْيَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. فَرَفَعَ عُرْوَةُ رَأْسَهُ فَقَالَ مَنْ هَذَا قَالُوا الْمُغِيرَةُ بْنُ شُعْبَةَ. فَقَالَ أَىْ غُدَرُ، أَلَسْتُ أَسْعَى فِي غَدْرَتِكَ وَكَانَ الْمُغِيرَةُ صَحِبَ قَوْمًا فِي الْجَاهِلِيَّةِ، فَقَتَلَهُمْ، وَأَخَذَ أَمْوَالَهُمْ، ثُمَّ جَاءَ فَأَسْلَمَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " أَمَّا الإِسْلاَمَ فَأَقْبَلُ، وَأَمَّا الْمَالَ فَلَسْتُ مِنْهُ فِي شَىْءٍ ". ثُمَّ إِنَّ عُرْوَةَ جَعَلَ يَرْمُقُ أَصْحَابَ النَّبِيِّ صلى الله عليه وسلم بِعَيْنَيْهِ. قَالَ فَوَاللَّهِ مَا تَنَخَّمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم نُخَامَةً إِلاَّ وَقَعَتْ فِي كَفِّ رَجُلٍ مِنْهُمْ فَدَلَكَ بِهَا وَجْهَهُ وَجِلْدَهُ، وَإِذَا أَمَرَهُمُ ابْتَدَرُوا أَمْرَهُ، وَإِذَا تَوَضَّأَ كَادُوا يَقْتَتِلُونَ عَلَى وَضُوئِهِ، وَإِذَا تَكَلَّمَ خَفَضُوا أَصْوَاتَهُمْ عِنْدَهُ، وَمَا يُحِدُّونَ إِلَيْهِ النَّظَرَ تَعْظِيمًا لَهُ، فَرَجَعَ عُرْوَةُ إِلَى أَصْحَابِهِ، فَقَالَ أَىْ قَوْمِ، وَاللَّهِ لَقَدْ وَفَدْتُ عَلَى الْمُلُوكِ، وَوَفَدْتُ عَلَى قَيْصَرَ وَكِسْرَى وَالنَّجَاشِيِّ وَاللَّهِ إِنْ رَأَيْتُ مَلِكًا قَطُّ، يُعَظِّمُهُ أَصْحَابُهُ مَا يُعَظِّمُ أَصْحَابُ مُحَمَّدٍ صلى الله عليه وسلم مُحَمَّدًا، وَاللَّهِ إِنْ تَنَخَّمَ نُخَامَةً إِلاَّ وَقَعَتْ فِي كَفِّ رَجُلٍ مِنْهُمْ، فَدَلَكَ بِهَا وَجْهَهُ وَجِلْدَهُ، وَإِذَا أَمَرَهُمُ ابْتَدَرُوا أَمْرَهُ وَإِذَا تَوَضَّأَ كَادُوا يَقْتَتِلُونَ عَلَى وَضُوئِهِ، وَإِذَا تَكَلَّمَ خَفَضُوا أَصْوَاتَهُمْ عِنْدَهُ، وَمَا يُحِدُّونَ إِلَيْهِ النَّظَرَ تَعْظِيمًا لَهُ، وَإِنَّهُ قَدْ عَرَضَ عَلَيْكُمْ خُطَّةَ رُشْدٍ، فَاقْبَلُوهَا. فَقَالَ رَجُلٌ مِنْ بَنِي كِنَانَةَ دَعُونِي آتِهِ. فَقَالُوا ائْتِهِ. فَلَمَّا أَشْرَفَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَأَصْحَابِهِ، قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " هَذَا فُلاَنٌ، وَهْوَ مِنْ قَوْمٍ يُعَظِّمُونَ الْبُدْنَ فَابْعَثُوهَا لَهُ ". فَبُعِثَتْ لَهُ وَاسْتَقْبَلَهُ النَّاسُ يُلَبُّونَ، فَلَمَّا رَأَى ذَلِكَ قَالَ سُبْحَانَ اللَّهِ مَا يَنْبَغِي لِهَؤُلاَءِ أَنْ يُصَدُّوا عَنِ الْبَيْتِ، فَلَمَّا رَجَعَ إِلَى أَصْحَابِهِ قَالَ رَأَيْتُ الْبُدْنَ قَدْ قُلِّدَتْ وَأُشْعِرَتْ، فَمَا أَرَى أَنْ يُصَدُّوا عَنِ الْبَيْتِ. فَقَامَ رَجُلٌ مِنْهُمْ يُقَالُ لَهُ مِكْرَزُ بْنُ حَفْصٍ. فَقَالَ دَعُونِي آتِهِ. فَقَالُوا ائْتِهِ. فَلَمَّا أَشْرَفَ عَلَيْهِمْ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " هَذَا مِكْرَزٌ وَهْوَ رَجُلٌ فَاجِرٌ ". فَجَعَلَ يُكَلِّمُ النَّبِيَّ صلى الله عليه وسلم، فَبَيْنَمَا هُوَ يُكَلِّمُهُ إِذْ جَاءَ سُهَيْلُ بْنُ عَمْرٍو. قَالَ مَعْمَرٌ فَأَخْبَرَنِي أَيُّوبُ عَنْ عِكْرِمَةَ، أَنَّهُ لَمَّا جَاءَ سُهَيْلُ بْنُ عَمْرٍو قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " لَقَدْ سَهُلَ لَكُمْ مِنْ أَمْرِكُمْ ". قَالَ مَعْمَرٌ قَالَ الزُّهْرِيُّ فِي حَدِيثِهِ فَجَاءَ سُهَيْلُ بْنُ عَمْرٍو فَقَالَ هَاتِ، اكْتُبْ بَيْنَنَا وَبَيْنَكُمْ كِتَابًا، فَدَعَا النَّبِيُّ صلى الله عليه وسلم الْكَاتِبَ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ". قَالَ سُهَيْلٌ أَمَّا الرَّحْمَنُ فَوَاللَّهِ مَا أَدْرِي مَا هُوَ وَلَكِنِ اكْتُبْ بِاسْمِكَ اللَّهُمَّ. كَمَا كُنْتَ تَكْتُبُ. فَقَالَ الْمُسْلِمُونَ وَاللَّهِ لاَ نَكْتُبُهَا إِلاَّ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " اكْتُبْ بِاسْمِكَ اللَّهُمَّ ". ثُمَّ قَالَ " هَذَا مَا قَاضَى عَلَيْهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ ". فَقَالَ سُهَيْلٌ وَاللَّهِ لَوْ كُنَّا نَعْلَمُ أَنَّكَ رَسُولُ اللَّهِ مَا صَدَدْنَاكَ عَنِ الْبَيْتِ وَلاَ قَاتَلْنَاكَ، وَلَكِنِ اكْتُبْ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " وَاللَّهِ إِنِّي لَرَسُولُ اللَّهِ وَإِنْ كَذَّبْتُمُونِي. اكْتُبْ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ ". قَالَ الزُّهْرِيُّ وَذَلِكَ لِقَوْلِهِ " لاَ يَسْأَلُونِي خُطَّةً يُعَظِّمُونَ فِيهَا حُرُمَاتِ اللَّهِ إِلاَّ أَعْطَيْتُهُمْ إِيَّاهَا ". فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم " عَلَى أَنْ تُخَلُّوا بَيْنَنَا وَبَيْنَ الْبَيْتِ فَنَطُوفَ بِهِ ". فَقَالَ سُهَيْلٌ وَاللَّهِ لاَ تَتَحَدَّثُ الْعَرَبُ أَنَّا أُخِذْنَا ضُغْطَةً وَلَكِنْ ذَلِكَ مِنَ الْعَامِ الْمُقْبِلِ فَكَتَبَ. فَقَالَ سُهَيْلٌ وَعَلَى أَنَّهُ لاَ يَأْتِيكَ مِنَّا رَجُلٌ، وَإِنْ كَانَ عَلَى دِينِكَ، إِلاَّ رَدَدْتَهُ إِلَيْنَا. قَالَ الْمُسْلِمُونَ سُبْحَانَ اللَّهِ كَيْفَ يُرَدُّ إِلَى الْمُشْرِكِينَ وَقَدْ جَاءَ مُسْلِمًا فَبَيْنَمَا هُمْ كَذَلِكَ إِذْ دَخَلَ أَبُو جَنْدَلِ بْنُ سُهَيْلِ بْنِ عَمْرٍو يَرْسُفُ فِي قُيُودِهِ، وَقَدْ خَرَجَ مِنْ أَسْفَلِ مَكَّةَ، حَتَّى رَمَى بِنَفْسِهِ بَيْنَ أَظْهُرِ الْمُسْلِمِينَ. فَقَالَ سُهَيْلٌ هَذَا يَا مُحَمَّدُ أَوَّلُ مَا أُقَاضِيكَ عَلَيْهِ أَنْ تَرُدَّهُ إِلَىَّ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِنَّا لَمْ نَقْضِ الْكِتَابَ بَعْدُ ". قَالَ فَوَاللَّهِ إِذًا لَمْ أُصَالِحْكَ عَلَى شَىْءٍ أَبَدًا. قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " فَأَجِزْهُ لِي ". قَالَ مَا أَنَا بِمُجِيزِهِ لَكَ. قَالَ " بَلَى، فَافْعَلْ ". قَالَ مَا أَنَا بِفَاعِلٍ. قَالَ مِكْرَزٌ بَلْ قَدْ أَجَزْنَاهُ لَكَ. قَالَ أَبُو جَنْدَلٍ أَىْ مَعْشَرَ الْمُسْلِمِينَ، أُرَدُّ إِلَى الْمُشْرِكِينَ وَقَدْ جِئْتُ مُسْلِمًا أَلاَ تَرَوْنَ مَا قَدْ لَقِيتُ وَكَانَ قَدْ عُذِّبَ عَذَابًا شَدِيدًا فِي اللَّهِ. قَالَ فَقَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ فَأَتَيْتُ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم فَقُلْتُ أَلَسْتَ نَبِيَّ اللَّهِ حَقًّا قَالَ " بَلَى ". قُلْتُ أَلَسْنَا عَلَى الْحَقِّ وَعَدُوُّنَا عَلَى الْبَاطِلِ قَالَ " بَلَى ". قُلْتُ فَلِمَ نُعْطِي الدَّنِيَّةَ فِي دِينِنَا إِذًا قَالَ " إِنِّي رَسُولُ اللَّهِ، وَلَسْتُ أَعْصِيهِ وَهْوَ نَاصِرِي ". قُلْتُ أَوَلَيْسَ كُنْتَ تُحَدِّثُنَا أَنَّا سَنَأْتِي الْبَيْتَ فَنَطُوفُ بِهِ قَالَ " بَلَى، فَأَخْبَرْتُكَ أَنَّا نَأْتِيهِ الْعَامَ ". قَالَ قُلْتُ لاَ. قَالَ " فَإِنَّكَ آتِيهِ وَمُطَّوِّفٌ بِهِ ". قَالَ فَأَتَيْتُ أَبَا بَكْرٍ فَقُلْتُ يَا أَبَا بَكْرٍ، أَلَيْسَ هَذَا نَبِيَّ اللَّهِ حَقًّا قَالَ بَلَى. قُلْتُ أَلَسْنَا عَلَى الْحَقِّ وَعَدُوُّنَا عَلَى الْبَاطِلِ قَالَ بَلَى. قُلْتُ فَلِمَ نُعْطِي الدَّنِيَّةَ فِي دِينِنَا إِذًا قَالَ أَيُّهَا الرَّجُلُ، إِنَّهُ لَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَلَيْسَ يَعْصِي رَبَّهُ وَهْوَ نَاصِرُهُ، فَاسْتَمْسِكْ بِغَرْزِهِ، فَوَاللَّهِ إِنَّهُ عَلَى الْحَقِّ. قُلْتُ أَلَيْسَ كَانَ يُحَدِّثُنَا أَنَّا سَنَأْتِي الْبَيْتَ وَنَطُوفُ بِهِ قَالَ بَلَى، أَفَأَخْبَرَكَ أَنَّكَ تَأْتِيهِ الْعَامَ قُلْتُ لاَ. قَالَ فَإِنَّكَ آتِيهِ وَمُطَّوِّفٌ بِهِ. قَالَ الزُّهْرِيِّ قَالَ عُمَرُ فَعَمِلْتُ لِذَلِكَ أَعْمَالاً. قَالَ فَلَمَّا فَرَغَ مِنْ قَضِيَّةِ الْكِتَابِ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لأَصْحَابِهِ " قُومُوا فَانْحَرُوا، ثُمَّ احْلِقُوا ". قَالَ فَوَاللَّهِ مَا قَامَ مِنْهُمْ رَجُلٌ حَتَّى قَالَ ذَلِكَ ثَلاَثَ مَرَّاتٍ، فَلَمَّا لَمْ يَقُمْ مِنْهُمْ أَحَدٌ دَخَلَ عَلَى أُمِّ سَلَمَةَ، فَذَكَرَ لَهَا مَا لَقِيَ مِنَ النَّاسِ. فَقَالَتْ أُمُّ سَلَمَةَ يَا نَبِيَّ اللَّهِ، أَتُحِبُّ ذَلِكَ اخْرُجْ ثُمَّ لاَ تُكَلِّمْ أَحَدًا مِنْهُمْ كَلِمَةً حَتَّى تَنْحَرَ بُدْنَكَ، وَتَدْعُوَ حَالِقَكَ فَيَحْلِقَكَ. فَخَرَجَ فَلَمْ يُكَلِّمْ أَحَدًا مِنْهُمْ، حَتَّى فَعَلَ ذَلِكَ نَحَرَ بُدْنَهُ، وَدَعَا حَالِقَهُ فَحَلَقَهُ. فَلَمَّا رَأَوْا ذَلِكَ، قَامُوا فَنَحَرُوا، وَجَعَلَ بَعْضُهُمْ يَحْلِقُ بَعْضًا، حَتَّى كَادَ بَعْضُهُمْ يَقْتُلُ بَعْضًا غَمًّا، ثُمَّ جَاءَهُ نِسْوَةٌ مُؤْمِنَاتٌ فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا جَاءَكُمُ الْمُؤْمِنَاتُ مُهَاجِرَاتٍ فَامْتَحِنُوهُنَّ} حَتَّى بَلَغَ {بِعِصَمِ الْكَوَافِرِ} فَطَلَّقَ عُمَرُ يَوْمَئِذٍ امْرَأَتَيْنِ كَانَتَا لَهُ فِي الشِّرْكِ، فَتَزَوَّجَ إِحْدَاهُمَا مُعَاوِيَةُ بْنُ أَبِي سُفْيَانَ، وَالأُخْرَى صَفْوَانُ بْنُ أُمَيَّةَ، ثُمَّ رَجَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَى الْمَدِينَةِ، فَجَاءَهُ أَبُو بَصِيرٍ ـ رَجُلٌ مِنْ قُرَيْشٍ ـ وَهْوَ مُسْلِمٌ فَأَرْسَلُوا فِي طَلَبِهِ رَجُلَيْنِ، فَقَالُوا الْعَهْدَ الَّذِي جَعَلْتَ لَنَا. فَدَفَعَهُ إِلَى الرَّجُلَيْنِ، فَخَرَجَا بِهِ حَتَّى بَلَغَا ذَا الْحُلَيْفَةِ، فَنَزَلُوا يَأْكُلُونَ مِنْ تَمْرٍ لَهُمْ، فَقَالَ أَبُو بَصِيرٍ لأَحَدِ الرَّجُلَيْنِ وَاللَّهِ إِنِّي لأَرَى سَيْفَكَ هَذَا يَا فُلاَنُ جَيِّدًا. فَاسْتَلَّهُ الآخَرُ فَقَالَ أَجَلْ، وَاللَّهِ إِنَّهُ لَجَيِّدٌ، لَقَدْ جَرَّبْتُ بِهِ ثُمَّ جَرَّبْتُ. فَقَالَ أَبُو بَصِيرٍ أَرِنِي أَنْظُرْ إِلَيْهِ، فَأَمْكَنَهُ مِنْهُ، فَضَرَبَهُ حَتَّى بَرَدَ، وَفَرَّ الآخَرُ، حَتَّى أَتَى الْمَدِينَةَ، فَدَخَلَ الْمَسْجِدَ يَعْدُو. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ رَآهُ " لَقَدْ رَأَى هَذَا ذُعْرًا ". فَلَمَّا انْتَهَى إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ قُتِلَ وَاللَّهِ صَاحِبِي وَإِنِّي لَمَقْتُولٌ، فَجَاءَ أَبُو بَصِيرٍ فَقَالَ يَا نَبِيَّ اللَّهِ، قَدْ وَاللَّهِ أَوْفَى اللَّهُ ذِمَّتَكَ، قَدْ رَدَدْتَنِي إِلَيْهِمْ ثُمَّ أَنْجَانِي اللَّهُ مِنْهُمْ. قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " وَيْلُ أُمِّهِ مِسْعَرَ حَرْبٍ، لَوْ كَانَ لَهُ أَحَدٌ ". فَلَمَّا سَمِعَ ذَلِكَ عَرَفَ أَنَّهُ سَيَرُدُّهُ إِلَيْهِمْ، فَخَرَجَ حَتَّى أَتَى سِيفَ الْبَحْرِ. قَالَ وَيَنْفَلِتُ مِنْهُمْ أَبُو جَنْدَلِ بْنُ سُهَيْلٍ، فَلَحِقَ بِأَبِي بَصِيرٍ، فَجَعَلَ لاَ يَخْرُجُ مِنْ قُرَيْشٍ رَجُلٌ قَدْ أَسْلَمَ إِلاَّ لَحِقَ بِأَبِي بَصِيرٍ، حَتَّى اجْتَمَعَتْ مِنْهُمْ عِصَابَةٌ، فَوَاللَّهِ مَا يَسْمَعُونَ بِعِيرٍ خَرَجَتْ لِقُرَيْشٍ إِلَى الشَّأْمِ إِلاَّ اعْتَرَضُوا لَهَا، فَقَتَلُوهُمْ، وَأَخَذُوا أَمْوَالَهُمْ، فَأَرْسَلَتْ قُرَيْشٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم تُنَاشِدُهُ بِاللَّهِ وَالرَّحِمِ لَمَّا أَرْسَلَ، فَمَنْ أَتَاهُ فَهْوَ آمِنٌ، فَأَرْسَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَيْهِمْ، فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى {وَهُوَ الَّذِي كَفَّ أَيْدِيَهُمْ عَنْكُمْ وَأَيْدِيَكُمْ عَنْهُمْ بِبَطْنِ مَكَّةَ مِنْ بَعْدِ أَنْ أَظْفَرَكُمْ عَلَيْهِمْ} حَتَّى بَلَغَ {الْحَمِيَّةَ حَمِيَّةَ الْجَاهِلِيَّةِ} وَكَانَتْ حَمِيَّتُهُمْ أَنَّهُمْ لَمْ يُقِرُّوا أَنَّهُ نَبِيُّ اللَّهِ، وَلَمْ يُقِرُّوا بِبِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ، وَحَالُوا بَيْنَهُمْ وَبَيْنَ الْبَيْتِ.
பாடம் : 15 அறப்போரின்போது விதிக்கப்படும் நிபந்தனைகளும் பகைநாட்டினருடன் சமாதானம் செய்துகொள்வதும் (ஒப்பந்த) விதி களை எழுதுவதும்
2731. மிஸ்வர் பின் மக்ரமா (ரலி), மர்வான் பின் அல்ஹகம் ஆகிய இருவரும் லி ஒருவர் சொன்னதை மற்றவர் உண்மைப்படுத்தியவாறு லி கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுதைபியா உடன்படிக்கை நடைபெற்ற காலகட்டத்தில் (மக்காவை நோக்கி) புறப்பட்டார்கள்.15 பாதையில் சென்று கொண்டிருந்தபோது நபி (ஸல்) அவர்கள், ‘‘காலித் பின் அல்வலீத், குறைஷியரின் குதிரைப் படையுடன் ‘அல்ஃகமீம்’ என்னுமிடத்தில் (போர் வியூகத்துடன்) முதல் அணியாக (நம்மை எதிர்கொள்ளக்) காத்திருக்கின்றார். ஆகவே, வலப் பக்கப் பாதையில் செல்லுங்கள் (காலித் பின் அல்வலீதுக்குத் தெரியாமல் மக்காவின் அருகே சென்றுவிடலாம்)” என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! முஸ்லிம்கள் வருவதை காலித் அறியவில்லை. (குறைஷி குதிரைப் படையினர் முஸ்லிம்களின்) உம்ரா பயணக் குழுப் படை எழுப்பிய கரும் புழுதியைக் கண்டவுடன் (அதன் தளபதியான) காலித் பின் அல்வலீத், குறைஷியரை எச்சரிப்பதற்காக, குதிரையைக் காலால் உதைத்து விரட்டியவராக (விரைந்து) சென்றார். நபி (ஸல்) அவர்கள் பயணித்துச் சென்று கொண்டிருந்தார்கள்.

இறுதியில், (‘அல்மிரார்’ எனும்) மலைப் பாதைக்கு வந்தார்கள். அங்கிருந்துதான் குறைஷியரைப் போய்ச் சேர முடியும். அங்கு நபியவர்களின் ஊர்தி ஒட்டகம் மண்டியிட்டு அமர்ந்துகொண்டது. மக்கள் (அதை எழுப்பி நடக்க வைப்பதற்காக) யிஹல்ஹல்’ என்று அதட்டினார்கள். அது எழும்ப மறுத்து முரண்டு பிடித்தது. உடனே, மக்கள், யிகஸ்வா’ பிடிவாதம் பிடிக்கிறது, யிகஸ்வா’ பிடிவாதம் பிடிக்கிறது என்று கூறினார்கள்.16 நபி (ஸல்) அவர்கள், ‘‘கஸ்வா பிடிவாதம் பிடிக்கவுமில்லை; பிடிவாதம் பிடிப்பது அதன் குணமுமில்லை. மாறாக, (யமன் நாட்டு மன்னன் அப்ரஹா தலைமையில் யானைப் படை கஅபாவை இடிக்க வந்தபோது) யானையைத் தடுத்த (இறை)வனே அதையும் தடுத்துவைத்திருக் கின்றான்” என்று கூறினார்கள்.

பிறகு, ‘‘என் உயிர் யாரது கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! (போரைக் கைவிட்டு) அல்லாஹ்வின் புனித(த் தல)ங்களைக் கண்ணியப்படுத்தும் ஒரு திட்டத்தை அவர்கள் என்னிடம் கேட்டால் அதை நிச்சயம் அவர்களுக்கு நான் வழங்குவேன்” என்று கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்தைத் தட்டி எழுப்பினார்கள். உடனே அது குதித்தெழுந்தது.

பிறகு, நபியவர்கள் மக்களைவிட்டுத் திரும்பி ஹுதைபியாவின் கோடியில் சிறிதளவே தண்ணீர் இருந்த ஒரு பள்ளத்தின் அருகே முகாமிட்டார்கள். மக்கள் அதிலிருந்து சிறிது சிறிதாகத் தண்ணீர் எடுக்கலானார்கள். இறுதியில், அவர்கள் மீதி வைக்காமல் தண்ணீர் முழுவதையும் இறைத்து (அதைக் காலிசெய்து) விட்டார்கள். பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தாகம் எடுப்பதாக முறையிடப்பட்டது. உடனே நபி (ஸல்) அவர்கள் தமது அம்புக் கூட்டிலிருந்து ஓர் அம்பை உருவி, அதைப் பள்ளத்தில் போடும்படி மக்களுக்கு உத்தரவிட் டார்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! (பள்ளத்தில் அம்பைப் போட்டதும்) அதிலிருந்து அவர்களுக்காகத் தண்ணீர் பீறிட்டு வந்துகொண்டிருந்தது. அவர்கள் அங்கிருந்து புறப்படும்வரை (தண்ணீர் தாராளமாகக் கிடைத்துக்கொண்டிருந்தது). இந்த நிலையில் புதைல் பின் வரகா அல்குஸாயீ அவர்கள், தம் குஸாஆ குலத்தார் சிலருடன் அங்கு வந்தார். அவர்கள் யிதிஹாமா’வாசிகளிடையே (மக்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்களிடையே) நபி (ஸல்) அவர்களின் நலம் நாடும் நம்பிக் கைக்குரியவர்களாக இருந்தனர்.

புதைல் அவர்கள், ‘‘(முஹம்மத் அவர்களே!) கஅப் பின் லுஅய், ஆமிர் பின் லுஅய் ஆகியோர் ஹுதைபியாவின் வற்றாத சுனைகளின் அருகே முகாமிட்டி ருக்க, அங்கே அவர்களை விட்டுவிட்டு (தங்களிடம் செய்தி சொல்ல) வந்துள்ளேன். அவர்களுடன் பால் தரும் தாய் ஒட்டகங்கள் தம் குட்டிகளுடன் வந்துள்ளன. அவர்கள் உங்களுடன் போரிட்டு உங்களை இறையில்லம் கஅபாவை (சந்திக்க விடாமல்) தடுக்கப்போகிறார்கள்” என்று கூறினார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நாம் யாருடனும் போரிடுவதற்காக வரவில்லை. மாறாக உம்ரா செய்வதற்காகத்தான் வந்திருக்கிறோம். குறைஷியர் அடிக்கடி போரிட்டுக் களைத்துப்போயிருக்கிறார்கள். போரின் காரணத்தால் அவர்களுக்கு நிறையவே இழப்பும் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் விரும்பினால் அவர்களுடன் குறிப்பிட்ட காலத்திற்குச் சமாதான ஒப்பந்தம் செய்துகொள்கிறேன். அவர்கள் எனக்கும் மக்களுக்குமிடையே குறுக்கே நிற்க வேண்டாம். நான் வெற்றி பெறும்போது, அவர்கள் விரும்பினால் மக்களெல்லாரும் (விரும்பி) ஏற்றுக்கொள்ளும் இந்த மார்க்கத்திலேயே அவர்களும் இணைந்து கொள்ளட்டும். இல்லையென்றால் (சில நாட்கள்) அவர்களுக்கு (போரிலிருந்து) ஓய்வாவது கிடைக்கும். அவர்கள் இதற்கு மறுத்தால், என் உயிர் யார் கையில் உள்ளதோ அவன் மீதாணையாக! நான் எனது இந்த விவகாரத்திற்காக என் தலை துண்டாகும்வரை அவர்களுடன் உறுதியாகப் போரிடுவேன். அல்லாஹ், தன் திட்டத்தை நிறைவேற்றியே தீருவான்” என்று கூறினார்கள்.

அப்போது புதைல், ‘‘நீங்கள் சொல் வதை அவர்களுக்கு நான் எடுத்துரைப் பேன்” என்று கூறிவிட்டு குறைஷியரிடம் சென்று, ‘‘நாங்கள் இந்த மனிதரிடமிருந்து உங்களிடம் வந்திருக்கிறோம். அவர் ஒரு விஷயத்தைக் கூறியதை நாங்கள் கேட் டோம். அதை உங்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் நாங்கள் அவ்வாறே செய்கிறோம்” என்று சொன்னார்.

அப்போது அவர்களிடையே இருந்த அறிவிலிகள், ‘‘அவரைக் குறித்து எங்க ளுக்கு நீங்கள் எதையும் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை” என்று கூறினர். அவர்களில் கருத்து உடையோர், ‘‘அவரிடமிருந்து நீங்கள் கேட்டதை எடுத்துச் சொல்லுங்கள்” என்று கூறினர். புதைல், ‘‘அவர் இப்படியெல்லாம் சொல்லக் கேட்டேன்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதை அவர்களுக்கு எடுத்துரைத்தார்.

உடனே (அப்போது இறைமறுப்பாளராயிருந்த) உர்வா பின் மஸ்ஊத் அஸ்ஸகஃபீ எழுந்து நின்று, ‘‘என் சமுதாயத்தாரே! நீங்கள் (என்) தந்தையைப் போன்றவர்கள் (என்மீது இரக்கமுடையவர்கள்) அல்லவா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், ‘‘ஆம்” என்று பதிலளித்தனர். உர்வா, ‘‘நான் உங்கள் மகனைப் போன்றவன் (உங்கள் நலம் நாடுபவன்) இல்லையா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், ‘‘ஆம் (நீங்கள் எங்கள் நலம் நாடுபவர்தான்)” என்று பதிலளித்தனர். மேலும் அவர், ‘‘நீங்கள் என்னைச் சந்தேகிக்கிறீர்களா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், ‘‘இல்லை” என்று பதிலளித்தனர்.

அப்போது உர்வா, ‘‘உக்காழ் (சந்தை)வாசிகளிடம் (போரில்) உங்களுக்கு உதவும்படி கேட்டதும் அவர்களால் உதவ முடியாத (நிலை ஏற்பட்ட)போது நான் என் வீட்டாரையும் என் குழந்தையையும் எனக்குக் கட்டுப்பட்டவர்களையும் உங்களி டம் கொண்டுவந்து நிறுத்தியதும் உங்களுக் குத் தெரியாதா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், ‘‘ஆம் (தெரியும்)” என்று பதிலளித்தனர். அப்போது அவர், ‘‘முஹம்மத், உங்கள்முன் நல்லதொரு திட்டத்தைச் சமர்ப்பித்துள்ளார். அதை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள். அவரிடம் என்னைச் செல்லவிடுங்கள்” என்று கூறினார். அதற்கு அவர்கள், ‘‘அவரிடம் (எங்கள் சார்பாகப் பேசச்) செல்லுங்கள்” என்று கூறினர்.

அவரும் நபி (ஸல்) அவர்களிடம் சென்று பேசத் தொடங்கினார். நபி (ஸல்) அவர்கள் புதைலிடம் சொன்னதைப் போலவே சொன்னார்கள். அப்போது உர்வா, ‘‘முஹம்மதே! உங்கள் சமுதாயத்தாரின் கதையை அடியோடு முடித்துவிட எண்ணுகிறீர்களா? உங்களுக்கு முன்னால் அரபியர் எவரேனும் தம் சமுதாயத்தாரை பூண்டோடு அழித்தார் என்று நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? வேறு விதமான முடிவு ஏற்பட்டாலும் (குறைஷியர் வென்றுவிட்டாலும் அதனால் உங்கள் தோழர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விடுவார்கள் அல்லவா?) நானோ, அல்லாஹ்வின் மீதாணையாக!17 பல முகங்களை (உங்கள் தோழர்களிடையே) பார்க்கிறேன்; மக்களில் பலதரப்பட்டவர்களைப் பார்க்கிறேன்; உங்களை விட்டுவிட்டு வெருண்டோடக்கூடிய (கோழைத்தனமுடைய)வர்களாகவே (இவர்களை) நான் பார்க்கின்றேன்” என்று கூறினார்.18

(இதைக் கேட்ட) அபூபக்ர் (ரலி) அவர்கள் அவரை அக்கால வழக்கப்படி ஏசிவிட்டு, ‘‘நாங்கள் இறைத்தூதரை விட்டு விட்டு ஓடிவிடுவோமா?” என்று (கோபத்து டன்) கேட்டார்கள். அதற்கு உர்வா, ‘‘இவர் யார்?” என்று கேட்டார். மக்கள் ‘அபூபக்ர்’ என்று பதிலளித்தார்கள். அதற்கு உர்வா, ‘‘நீங்கள் முன்பு எனக்கு உதவி செய்திருக் கிறீர்கள். அதற்கான நன்றிக் கடனை நான் உங்களுக்கு இன்னும் தீர்க்கவில்லை.19 அந்த நன்றிக் கடன் மட்டுமில்லாவிட்டால் நான் உங்களுக்கு (தகுந்த) பதில் கொடுத்திருப்பேன்” என்று கூறிவிட்டு, நபி (ஸல்) அவர்களிடம் (தொடர்ந்து) பேசத்தொடங்கினார்.

நபி (ஸல்) அவர்களுடன் அவர் பேசும்போதெல்லாம் அவர்களின் தாடியை (அன்போடு) பிடித்தபடி இருந்தார். அப்போது முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் (கையில்) வாளுடனும் தலையில் இரும்புத் தொப்பியுடனும் நபி (ஸல்) அவர்களின் தலைப் பக்கமாக நின்றுகொண்டிருந்தார்கள். ஆகவே உர்வா, நபி (ஸல்) அவர்களின் தாடியைப் பிடிக்க முனைந்தபோதெல்லாம் முஃகீரா (ரலி) அவர்கள், அவரது கையை வாளுறையின் (இரும்பாலான) அடிமுனையால் அடித்து, ‘‘உன் கையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தாடியிலிருந்து எடு” என்று கூறியவண்ணமிருந்தார்கள்.

அப்போது உர்வா தமது தலையை உயர்த்தி, ‘‘இவர் யார்?” என்று கேட்க மக்கள், ‘‘இவர் முஃகீரா பின் ஷுஅபா” என்று கூறினார்கள். உடனே உர்வா, ‘‘மோசடிக்காரரே! நீர் மோசடி செய்தபோது (உம்மைத் தண்டனையிலிருந்து பாதுகாத்திட) நான் உழைக்கவில்லையா?” என்று கேட்டார். முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் அறியாமைக் காலத்தில் (இஸ்லாத்தைத் தழுவும் முன்பு) ஒரு குலத்தாருடன் சேர்ந்து (எகிப்து மன்னனைக் காண) பயணம் சென்றார்கள். (மன்னன் அனைவருக்கும் உதவித் தொகை அளித்தார். முஃகீராவை மட்டும் விட்டு விட்டார்.) அப்போது (அக்குலத்தார் வழியில் குடித்துவிட்டு மயங்கிக் கிடக்க,) அவர்களைக் கொன்றுவிட்டு அவர் களுடைய பொருட்களை எடுத்துக் கொண்டார்கள். (அதற்காக பனூ மாலிக் குலத்தார் முஃகீரா (ரலி) அவர்களைப் பழிவாங்க முனைந்தபோது அவருடைய தந்தையின் சகோதரரான உர்வாதான், அவர்களை பிணைத்தொகை கொடுத்து தண்டனையிலிருந்து காப்பாற்றினார்.)

பிறகு முஃகீரா (அங்கிருந்து) வந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘நீர் இஸ்லாத்தைத் தழுவியதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், (நீர் அபகரித்துக் கொண்டுவந்த) பொருட்களோடு எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை” என்று கூறியிருந்தார்கள். பிறகு உர்வா, நபி (ஸல்) அவர்களின் தோழர்களைத் தம் கண்களால் கூர்ந்து பார்க்கத் தொடங்கினார். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் எப்போது (தொண்டையைச் செருமி) சளி துப்பினாலும், உடனே அதை அவர்களின் தோழர்களில் ஒருவர், தமது கையில் பிடித்துத் தன் முகத்திலும் மேனியிலும் தேய்த்துக்கொள்ளாமல் இருக்கவில்லை.

நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்குக் கட்டளையிட்டால் அவர்கள் உடனே அதை நிறைவேற்றிட போட்டி போட்டுக்கொண்டு ஒருவரையொருவர் முந்திக் கொண்டனர்; நபியவர்கள் அங்கத் தூய்மை செய்யும்போது, அவர்கள் மிச்சம்வைத்த தண்ணீரைப் பிடித்து(தங்கள் மேனியில் தேய்த்து)க் கொள்வதற்காக ஒருவரோ டொருவர் சண்டை போட்டுக்கொண்டனர்; நபியவர்களுடன் அவர்கள் பேசும்போது தம் குரல்களைத் தாழ்த்திக்கொண்டனர். மேலும், நபியவர்களுக்குக் கண்ணியமளிக் கும் விதத்தில் அவர்களைக் கூர்ந்து (நேருக்கு நேர்) பார்ப்பதைத் தவிர்த்தனர்.

(இவற்றையெல்லாம் உற்றுக் கவனித்து நேரடியாக அறிந்தபின்) உர்வா தம் தோழர்களிடம் சென்று, ‘‘என் சமுதாயத் தாரே! நான் பல அரசர்களிடம் தூதுக் குழுவில் ஒருவனாகச் சென்றுள்ளேன். (கிழக்கு ரோமானிய மன்னர்) சீசரிடமும், (பாரசீக மன்னர்) கிஸ்ராவிடமும், (அபிசீனிய மன்னர்) நஜாஷியிடமும் தூதுக் குழுவில் சென்றுள்ளேன். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மதின் தோழர்கள் முஹம்மதுக்கு அளிக்கின்ற கண்ணியத்தைப் போன்று எந்த அரசருக்கும் அவருடைய தோழர்கள் கண்ணியம் அளிப்பதை நான் பார்த்ததே இல்லை.

அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் சளியைத் துப்பினால், அது அவருடைய தோழர்களில் ஒருவரது கையில்தான் விழும். அதை அவர் தமது முகத்திலும் மேனியிலும் தேய்த்துக்கொள்கிறார். அவர் அவர்களுக்குக் கட்டளையிட்டால் அவரது கட்டளையை நிறைவேற்ற அவர்கள் ஒருவரோடொருவர் போட்டி போட்டுக் கொண்டு முன்வருகிறார்கள். அவர் அங்கத் தூய்மை செய்தால் அவர் மிச்சம்வைக்கும் தண்ணீரைப் பெறுவதற்காக, ஒருவரோடொருவர் சண்டையிடும் அளவுக்குச் சென்றுவிடுகிறார்கள். அவர் பேசினால், அவரிடம் அவர்கள் தம் குரல்களைத் தாழ்த்திக்கொள்கிறார்கள். அவரைக் கண்ணியப்படுத்தும் விதத்தில் அவரைக் கூர்ந்து (நேருக்கு நேர்) பார்ப்பதில்லை. மேலும், அவர் உங்கள்முன் நல்லதொரு திட்டத்தைச் சமர்ப்பித்துள்ளார். ஆகவே, அதை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறினார்.

உடனே யிபனூ கினானா’ குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர், ‘‘என்னை அவரிடம் செல்லவிடுங்கள்” என்று சொன்னார். அதற்கு அவர்கள், ‘‘சரி, செல்லுங்கள்” என்று கூறினர். அவர் நபி (ஸல்) அவர்களிடமும் அவர்களின் தோழர்களிடமும் வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இது இன்ன மனிதர். இவர் இறைவனுக்காக ஹஜ்ஜில் அறுக்கப்படும் பலி ஒட்டகங்களைக் கண்ணியப்படுத்து கின்ற ஒரு குலத்தைச் சேர்ந்தவர். ஆகவே, இவரிடம் பலி ஒட்டகத்தை அனுப்பி வையுங்கள்” என்று சொன்னார்கள்.

அவ்வாறே அவரிடம் ஒரு பலி ஒட்டகம் அனுப்பிவைக்கப்பட்டது. மக்கள் யிதல்பியா’ கூறியபடி அவரை வரவேற்றார் கள். இதை அவர் கண்டவுடன், ‘‘சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூயவன்!) இவர்களை இறையில்லத்திற்கு வர விடாமல் தடுப்பது சரியில்லையே” என்று (தமக்குள்) கூறிக்கொண்டார். தம் தோழர் களிடம் அவர் திரும்பிச் சென்றபோது, ‘‘பலி ஒட்டகங்கங்களுக்கு (அடையாள) மாலை கட்டித் தொங்கவிடப்பட்டு, அவற் றைக் கீறி அடையாளமிடப்பட்டிருப்பதை நான் கண்டேன். ஆகவே, இறையில்லத் திற்கு வர விடாமல் அவர்களைத் தடுப் பதை நான் சரியானதாகக் கருதவில்லை” என்று கூறினார்.

உடனே அவர்களில் மிக்ரஸ் பின் ஹஃப்ஸ் எனப்படும் ஒரு மனிதர் எழுந்து, ‘‘என்னை அவரிடம் போக விடுங்கள்” என்று கூறினார். மக்காவாசிகள், ‘‘சரி, நீங்கள் அவரிடம் செல்லுங்கள்” என்று கூறினர். முஸ்லிம்களிடம் அவர் சென்றபோது நபி (ஸல்) அவர்கள், ‘‘இவர் மிக்ரஸ்; இவர் ஒரு கெட்ட மனிதர்” என்று கூறினார்கள். அவர் (வந்தவுடன்) நபி (ஸல்) அவர்களிடம் பேச ஆரம்பித்தார். அவர் பேசிக் கொண்டிருக்கையில், சுஹைல் பின் அம்ர் என்பவர் (குறைஷியரின் தரப்பிலிருந்து) வந்தார்.

அறிவிப்பாளர் இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: சுஹைல் பின் அம்ர் வந்தபோது நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்கள் விவகாரம் சுலபமாகிவிட்டது” என்று (யிசஹ்ல்’ என்னும் பொருள் (சுலபம்) கொண்ட பெயருடைய ஒருவர் வந்ததை நற்குறியாகக் கருதும் வகையில்) கூறினார்கள். சுஹைல் பின் அம்ர் வந்து, ‘‘(ஏட்டைக்) கொண்டுவாருங்கள். உங்க ளுக்கும் எங்களுக்குமிடையிலான (சமாதான ஒப்பந்தத்திற்கான) ஆவணம் ஒன்றை எழுதுவோம்” என்று கூறினார்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் எழுத்தரை அழைத்தார்கள். பின்னர், ‘அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...› என்று (சமாதான ஒப்பந் தத்திற்கான வாசகத்தை) நபியவர்கள் சொன்னார்கள். உடனே சுஹைல், ‘‘அளவற்ற அருளாளன் (அர்ரஹ்மான்)› என்பது என்ன என்று எனக்குத் தெரியாது. ஆயினும், யிஇறைவா! உன் திருப்பெயரால்...› (பிஸ்மிகல்லாஹும்ம) என்று நீங்கள் முன்பு எழுதிவந்ததைப் போன்றே எழுதுக!” என்றார். முஸ்லிம்கள், ‘‘அல்லாஹ் வின் மீதாணையாக! அளவற்ற அருளாள னும் நிகரற்ற அன்புடையோனுமான அல்லாஹ்வின் திருப்பெயரால்’ என்றுதான் இதை எழுதுவோம்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், யிஇறைவா! உன் திருப்பெயரால்’ (பிஸ்மிகல்லாஹும்ம) என்றே எழுதுங்கள் என்று சொன் னார்கள்.

பிறகு நபி (ஸல்) அவர்கள், யிஇது அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் அவர்கள் செய்துகொண்ட சமாதான ஒப்பந்தம்’ என்று (எழுதும்படி) சொன்னார்கள். உடனே சுஹைல், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் அல்லாஹ்வின் தூதர்தான் என்று நாங்கள் நம்பியிருந்தால் இறையில்லத்திற்கு வர விடாமல் உங்களைத் தடுத்திருக்க வும்மாட்டோம்; உங்களுடன் போரிட்டிருக்கவும்மாட்டோம். மாறாக, யிமுஹம்மத் பின் அப்தில்லாஹ்’ (அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத்) என்றே எழுதுக!” என்று கூறினார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் என்னைப் பொய்யாளியாகக் கருதினாலும் நிச்சயம் நான் அல்லாஹ்வின் தூதர்தான். (இருந்தாலும் உங்கள் விருப்பப்படி) முஹம்மத் பின் அப்தில்லாஹ் (அப்துல்லாஹ் வின் மகன் முஹம்மது) என்றே எழுதுங் கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் இமாம் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

அவர்களுடன் நபி (ஸல்) அவர்கள் தகராறு செய்யாமல் விட்டுக்கொடுத்ததற்குக் காரணம் அவர்கள், ‘‘அல்லாஹ்வால் புனிதமாக்கப்பட்ட (மக்கா நகரத்)தைக் கண்ணியப்படுத்துகின்ற எந்த ஒரு திட்டத்தை அவர்கள் என்னிடம் கேட்டா லும் அதை அவர்களுக்கு நான் வழங் காமல் இருக்கமாட்டேன்” என்று முன்பே சொல்லியிருந்ததுதான்.

பிறகு சுஹைலிடம் நபி (ஸல்) அவர்கள், ‘‘எங்களை (இந்த ஆண்டு) இறையில் லத்திற்குச் செல்ல விடாமலும் அதை நாங்கள் தவாஃப் செய்ய விடாமலும் தடுக்கக் கூடாது” என்று சொன்னார்கள்.

உடனே சுஹைல், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! (இதை ஏற்க) முடியாது. (இந்த ஆண்டே உம்ரா செய்ய நாங்கள் உங்களை அனுமதித்தால்) யிநாங்கள் உங்கள் நிர்பந்தத்திற்கு அடிபணிந்துவிட்டோம்’ என்று அரபியர் பேசிக் கொள்வார்கள். ஆயினும், வருகிற ஆண்டில் நீங்கள் உம்ரா செய்துகொள்ளலாம்” என்று கூறினார். அவ்வாறே (எழுத்தர்) எழுதினார். மேலும் சுஹைல், ‘‘எங்களிட மிருந்து ஒருவர் உங்களிடம் வந்தால், அவர் உங்கள் மார்க்கத்தில் இருந்தாலும் சரி, அவரை எங்களிடம் நீங்கள் திருப்பியனுப்பிவிட வேண்டும்” என்று நிபந்தனையிட்டார்.

முஸ்லிம்கள், ‘‘சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூயவன்!) ஒருவர் முஸ்லிமாக (எங்களிடம்) வந்திருக்க, அவரை எப்படி இணைவைப்பாளர்களிடம் திருப்பி அனுப்புவது?” என்று (வியப்புடன்) கேட்டார்கள்.

அவர்கள் இவ்வாறு ஒப்பந்தம் பேசிக்கொண்டிருக்கும்போதே (குறைஷியரின் தரப்பிலிருந்து ஒப்பந்தம் பேச வந்த) சுஹைல் பின் அம்ருடைய மகன் அபூஜந்தல் (தம் கால்கள் பிணைக்கப்பட்டிருக்க) விலங்குகளுடன் தத்தித் தத்தி நடந்துவந்தார்கள். அவர் மக்காவின் கீழ்ப் பகுதியிலிருந்து தப்பி வந்து முஸ்லிம்களிடையே தஞ்சம் புகுந்தார். உடனே (அவருடைய தந்தை யான) சுஹைல், ‘‘முஹம்மதே! (ஒப்பந்தப் படி) முதலாவதாக, இதோ இவரை எங்களிடம் ஒப்படைக்கும்படி உங்களிடம் கோருகிறேன்” என்றார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நாம் இன்னும் இந்த நிபந்தனையை எழுதி முடிக்கவில்லையே” என்று பதிலளித்தார்கள். அதற்கு சுஹைல், ‘‘அப்படியென்றால், அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுடன் ஒருபோதும் எந்தச் சமாதான ஒப்பந்தமும் செய்துகொள்ளமாட்டேன்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியென்றால் இவரை மட்டுமாவது நான் திருப்பியனுப் பாமலிருக்க எனக்கு அனுமதி தாருங்கள்” என்று கூறினார்கள்.

அதற்கு சுஹைல், ‘‘நான் உங்களுக்கு அனுமதி தரமாட்டேன்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘இல்லை, இவரை மட்டுமாவது திருப்பியனுப்பாமல் நிறுத்திக்கொள்ள எனக்கு அனுமதி யளியுங்கள்” என்று (மறுபடியும்) கூறினார்கள். அதற்கு சுஹைல், ‘‘நான் அனுமதியளிக்கப்போவதில்லை” என்று கூறினார். மிக்ரஸ் என்பவர், ‘‘நாம் உங்களுக்கு அதற்காக அனுமதியளித்துவிட்டோம்” என்று கூறினார். அபூஜந்தல் (ரலி) அவர்கள், ‘‘முஸ்லிம் சமுதாயமே! நான் முஸ்லிமாக (உங்களிடம்) வந்திருக்க, என்னை இணைவைப்பாளர்களிடம் திருப்பியனுப்புகிறீர்களா? நான் சந்தித்த துன்பங்களை நீங்கள் (சிந்தித்துப்) பார்க்கமாட்டீர்களா?” என்று கேட்டார். அவர் இறைவழியில் கடுமையாக வேதனை செய்யப்பட்டிருந்தார்.

அப்போது (நடந்ததை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

உடனே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, ‘‘நீங்கள் உண்மையாகவே அல்லாஹ்வின் தூதர் இல்லையா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘ஆம், அல்லாஹ்வின் தூதர்தான்” என்று பதிலளித்தார்கள். நான், ‘‘நாம் சத்தியத்திலும் நம் பகைவர்கள் அசத்தியத்திலும் இல்லையா?” என்று கேட்டேன். அதற்கும் நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம்” என்று பதிலளித்தார்கள். நான், ‘‘அப்படி யானால் (இந்த நிபந்தனைகளை ஏற்று) நம் மார்க்கத்திற்கு நாம் ஏன் இழிவைச் சேர்க்க வேண்டும்?” என்று கேட்டேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நிச்சய மாக நான் அல்லாஹ்வின் தூதராவேன். நான் அவனுக்கு மாறு செய்வதில்லை. அவனே எனக்கு உதவக்கூடியவன்” என்று பதிலளித்தார்கள். நான், ‘‘விரைவில் நாம் இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்வோம் என்று தாங்கள் எங்களுக்குச் சொல்லிவந்திருக்கவில்லையா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘ஆம். ஆனால், நாம் இந்த ஆண்டே கஅபாவுக் குச் செல்வோம் என்று நான் உங்களுக்குச் சொன்ú”ô?” எனக் கேட்டார்கள். நான், ‘‘இல்லை” என்று பதிலளித்தேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் நிச்சயம் கஅபாவுக்குச் சென்று அங்கு தவாஃப் செய்வீர்கள்” என்று கூறினார்கள்.

பிறகு நான் அபூபக்ர் (ரலி) அவர்களி டம் சென்று, ‘‘அபூபக்ரே, இவர்கள் உண்மையிலேயே அல்லாஹ்வின் தூதரல்லவா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘ஆம்; அல்லாஹ்வின் தூதர்தான்” என்று கூறினார்கள். நான், ‘‘நாம் சத்தியத்திலும் நம் பகைவர்கள் அசத்தியத்திலும் இல்லையா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘ஆம்” என்றார்கள். நான், ‘‘அப்படியென்றால், (இந்த நிபந்தனையை ஒப்புக்கொண்டு) நம் மார்க்கத்திற்கு நாம் ஏன் இழிவைச் சேர்க்க வேண்டும்?” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், ‘யிமனிதரே! நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வின் தூதர்தான். அவர்கள் தம் இறைவனுக்கு மாறு செய்யமாட்டார்கள். அவனே அவர்களுக்கு உதவக்கூடியவன். அவர்களின் வழிகாட்டலை நீங்கள் கடைப்பிடியுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் சத்திய வழியில்தான் இருக்கிறார்கள்” என்று கூறினார்கள். நான், ‘‘அவர்கள் நம்மிடம், யிநாம் இறையில்லத்திற்குச் சென்று அங்கு தவாஃப் செய்வோம்’ என்று சொல்லவில்லையா?” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், ‘‘ஆம்; (சொன்னார் கள்.) ஆனால், ‘நீங்கள் இந்த ஆண்டே அங்கு செல்வீர்கள்’ என்று உங்களிடம் சொன்னார்களா?” என்று கேட்டார்கள். நான், ‘‘இல்லை (அவர்கள் அவ்வாறு சொல்லவில்லை)” என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், ‘‘நீங்கள் நிச்சயம் அங்கு சென்று இறையில்லத்தை தவாஃப் செய்யத்தான் போகிறீர்கள்” என்று கூறினார்கள்.

ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் உமர் (ரலி) அவர்கள் தொடர்ந்து சொன்னதாகக் கூறுகிறார்கள்:

நான் இப்படி (அதிருப்தியுடன் நபி (ஸல்) அவர்களிடம்) பேசியதற்குப் பரிகாரமாக பல நற்செயல்களைப் புரிந் தேன்.

பிறகு நபி (ஸல்) அவர்கள் ஒப்பந்தப் பத்திரத்தை எழுதி முடித்த பின்பு தம் தோழர்களை நோக்கி, ‘‘எழுந்து சென்று குர்பானி கொடுத்துவிட்டு தலைமுடி களைந்துகொள்ளுங்கள்” என்று கூறினார்கள். ஆனால், அல்லாஹ்வின் மீதாணை யாக! அவர்களில் ஒருவர்கூட எழுந்திருக்கவில்லை. எனவே, நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை இவ்வாறு கூறினார்கள். இருந்தும், அவர்களில் எவரும் எழுந்திருக் காத காரணத்தால் (தம் துணைவியார்) உம்மு சலமா (ரலி) அவர்களிடம் சென்று மக்களிடமிருந்து தாம் சந்தித்த அனுபவத்தைச் சொன்னார்கள்.

அப்போது உம்மு சலமா (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அவ்வாறு (உங்கள் உத்தரவுப்படி) மக்கள் நடக்க வேண்டும் என விரும்புகிறீர்களா? புறப்படுங்கள்; அவர்களில் யாரிடமும் ஒரு வார்த்தைகூடப் பேசாதீர்கள். (முதலில்) நீங்கள் உங்கள் குர்பானி ஒட்டகங்களை அறுங்கள்; பிறகு உங்கள் நாவிதரை அழைத்து, உங்கள் தலைமுடியைக் களையுங்கள்” என்று (ஆலோசனை) கூறினார்கள்.

அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு ஒட்டகங்களை குர்பானி கொடுத்து விட்டு, தம் நாவிதரை அழைத்துத் தலைமுடியைக் களைந்துகொண்டார்கள். அதுவரை அவர்களில் யாரிடமும் நபியவர்கள் பேசவில்லை. இதைக் கண்ட தோழர்களும் எழுந்து சென்று குர்பானி பிராணிகளை அறுத்து, ஒருவர் மற்றவரின் தலைமுடியைக் களையத் தொடங்கினார்கள். ஒருவர் மற்றவரை நெரிசலால் சாகடித்து விடுவார்களோ எனும் அளவுக்குப் போட்டி போட்டுக்கொண்டு (பிராணிகளை அறுக்கவும் முடி களையவும்) சென் றனர்.

பிறகு (சமாதான ஒப்பந்தம் அமலில் இருந்த காலகட்டத்தில்) இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது ‘‘இறை நம்பிக்கை கொண்டவர்களே! இறை நம்பிக்கை கொண்ட பெண்கள் புலம் பெயர்ந்து உங்களிடம் வந்தால், (அவர்கள் இறைநம்பிக்கையாளர்களா என்பதைச்) சோதித்துப்பாருங்கள். அவர்களின் நம்பிக்கை பற்றி அல்லாஹ்தான் நன்கறிவான். அவர்கள் இறைநம்பிக்கையாளர்கள்தான் என்பது உங்களுக்குத் தெரிந்துவிட்டால் இறைமறுப்பாளர்களிடம் அவர்களைத் திருப்பி அனுப்பாதீர்கள். அவர்கள் இறைமறுப்பாளர்களுக்கு (மனைவியராக இருக்க) அனுமதிக்கப்பட்டவர்கள் அல்லர். இறைமறுப்பாளர்களும் அவர்களுக்கு (கணவர்களாக இருக்க) அனுமதிக்கப்பட்டவர்கள் அல்லர்.

அவர்கள் (இப்பெண்களுக்காகச்) செலவிட்டதை அவர்களிடமே திருப்பிக் கொடுத்துவிடுங்கள். அப்பெண்களைத் திருமணம் செய்துகொள்வதில் உங்கள்மீது எந்தக் குற்றமும் இல்லை; நீங்கள் அவர்களுக்குரிய மணக்கொடையை அவர்களுக்குக் கொடுத்துவிட்டால். அப்போது இறைவனை மறுக்கும் பெண்களை நீங்களும் திருமண உறவில் வைத்துக்கொள்ளாதீர்கள்” (60:10) எனும் வசனத்தை அல்லாஹ் அருளினான்.

அப்போது உமர் (ரலி) அவர்கள், தம்முடைய இரு மனைவியரை மணவிலக்குச் செய்தார்கள். அவ்விருவரும் இணைவைப்பாளர்களாக இருந்தனர். அவ்விருவரில் ஒருவரை முஆவியா பின் அபீசுஃப்யான் அவர்களும் மற்றொருவரை ஸஃப்வான் பின் உமய்யா அவர்களும் மணமுடித்துக்கொண்டார்கள்.

பிறகு நபி (ஸல்) அவர்கள் மதீனா வுக்குத் திரும்பி வந்தார்கள். அப்போது குறைஷியரில் ஒருவரான அபூபஸீர் என்பவர் முஸ்லிமான நிலையில் (மதீனாவுக்கு) வந்தார். எனவே, அவரைத் தேடி(ப் பிடிக்க) குறைஷியர் இரண்டு பேரை அனுப்பிவைத்தனர். அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம் வந்து), ‘‘நீங்கள் எங்களுக்குக் கொடுத்த உறுதிமொழியை காப்பாற்றுங்கள்” என்று கேட்டனர். உடனே அவரை அந்த இருவரிடமும் நபி (ஸல்) அவர்கள் ஒப்படைத்தார்கள்.

அவர்கள் இருவரும் அபூபஸீர் அவர் களை அழைத்துக்கொண்டு யிதுல் ஹுலைஃபா’ எனும் இடத்தை அடைந்த னர். அவர்கள் தம் பேரீச்சம்பழங்களை சாப்பிட்டுக்கொண்டே (ஒரு மரத்தடியில்) தங்கினார்கள். அப்போது அபூபஸீர் (ரலி) அவர்கள் அவ்விருவரில் ஒருவரிடம், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! இன்ன மனிதரே! உம்முடைய இந்த வாளை நான் மிக நல்லதாகக் காண்கிறேன்” என்றார். உடனே மற்றொருவர் வாளை உருவி, ‘‘ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக! இது மிக நல்ல வாள்தான். நான் இதைப் பயன்படுத்திப்பார்த்திருக்கிறேன். மீண்டும் பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன்” என்று சொன்னார். அபூபஸீர் அவர்கள், ‘‘எனக்கு (அதை)க் காட்டுவீராக!. அதை நான் பார்க்கிறேன்” என்று கேட்டு அவரைத் தம் வசத்தில் கொண்டுவந்து (அந்த வாளால்) குத்திக் கொன்றுவிட்டார்.

மற்றொருவர் வெருண்டோடி மதீனாவரை சென்றுவிட்டார்; ஓடிக்கொண்டே பள்ளிவாசலுக்குள் புகுந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரைக் கண்டபோது, ‘‘இவர் ஏதோ பீதியேற்படுத்தும் விஷயத்தைக் கண்டுவிட்டிருக்கிறார்” என்று கூறினார்கள். அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று நின்றபோது, ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! என் நண்பர் கொல்லப்பட்டுவிட்டார். (நீங்கள் அபூ பஸீரைத் தடுக்காவிட்டால்) நானும் கொல்லப்பட்டுவிடுவேன்” என்று கூறினார்.

அப்போது அபூபஸீர் (ரலி) அவர்கள் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் வின் மீதாணையாக! உங்களது பொறுப்பை அல்லாஹ் நிறைவேற்றிவிட்டான். நீங்கள் என்னை அவர்களிடம் திருப்பியனுப்பி விட்டீர்கள். பிறகு அல்லாஹ், என்னை அவர்களிடமிருந்து காப்பாற்றிவிட்டான்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘இவருடைய தாய்க்குக் கேடுதான்! (உதவு பவர்) எவராவது இவருக்குக் கிடைத்தால் இவர் போர்த் தீயை மறுபடியும் மூட்டி விடுவார்” என்று கூறினார்கள். இதைச் செவியுற்றவுடன் அபூபஸீர் (ரலி) அவர்கள், தம்மை (மீண்டும்) குறைஷியரிடம் நபியவர்கள் திருப்பியனுப்பிவிடுவார்கள் என்பதைப் புரிந்துகொண்டு அங்கிருந்து தப்பியோடி கடலோரத்திற்குச் சென் றார்கள்.

சுஹைலின் மகன் அபூஜந்தல் (ரலி) அவர்களும் குறைஷியரிடமிருந்து தப்பியோடி அபூபஸீர் அவர்களுடன் சேர்ந்துகொண்டார். பிறகு குறைஷியரில் யார் இஸ்லாத்தைத் தழுவினாலும் அவர் (தப்பிச் சென்று) அபூபஸீர் அவர்களுடன் சேர்ந்துகொள்ளத் தொடங்கினார். இறுதியில், (சிறிது சிறிதாக இப்படி இஸ்லாத்தை ஏற்றவர்கள் மக்காவிலிருந்து தப்பியோடி வந்து) ஒரு குழுவினராக ஒன்றுதிரண்டு விட்டனர். அல்லாஹ்வின் மீதாணையாக! ஷாம் (சிரியா) நாட்டை நோக்கி குறைஷியரின் ஒரு (வியாபாரப்) பயணக் குழு புறப்பட்டிருப்பதாகக் கேள்விப்படும் போதெல்லாம் அதை அவர்கள் இடைமறித்து அவர்களைக் கொன்று அவர்களு டைய செல்வங்களை (வியாபாரப் பொருட்களை)ப் பறித்துக்கொண்டிருந்தார்கள்.

ஆகவே, குறைஷியர், நபி (ஸல்) அவர்களுக்கு ஆளனுப்பி, (அபூபஸீரும் அவருடைய சகாக்களும் தங்களுக்குத் தொல்லை தராமல் இருக்க வேண்டுமென்று) அவர்களுக்கு ஆணை அனுப்பும்படி அல்லாஹ்வின் பெயராலும் உறவு முறையின் பெயராலும் கேட்டுக்கொண்டனர். மேலும், ‘‘குறைஷியரில் யார் முஸ்லிமாக நபி (ஸல்) அவர்களிடம் வந்தாலும் அவர் அச்சமின்றி இருக்கலாம் (அவரை எங்களிடம் திருப்பியனுப்ப வேண்டாம்)” என்றும் கூறிவிட்டனர்.

அப்போதுதான் உயர்ந்தோன் அல்லாஹ், ‘‘அவர்கள்மீது உங்களுக்கு அவன் வெற்றி அளித்தபின், அவனே மக்காவின் பள்ளத்தாக்கில் அவர்களின் கைகள் உங்களுக்கெதிராக உயர்வதையும் உங்கள் கைகள் அவர்களுக்கெதிராக உயர்வதையும் தடுத்துவிட்டான்...” என்று தொடங்கி, ‘‘(ஏக இறையை) மறுத்துவிட்ட வர்கள் தம் உள்ளங்களில் வைராக்கியத்தை அறியாமைக் கால வைராக்கியத்தை, ஏற்படுத்திக்கொண்டனர்” (48:24லி26) என்பது வரையிலான வசனங்களை அருளினான்.

அந்த இறைமறுப்பாளர்களின் வைராக்கியம் என்னவென்றால், முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைத்தூதர் என்பதை அவர்கள் (பிடிவாதமாக) ஏற்கவில்லை; அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடை யோன் அல்லாஹ்வின் திருப்பெயரால் (பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்) என்பதையும் அவர்கள் ஏற்கவில்லை; முஸ்லிம்களை இறையில்லம் கஅபாவுக் குள் நுழைய விடாமல் தடுத்தார்கள்.

அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்:

(48:25ஆவது வசனத்தில் யிதுன்பம்’ என்பதைக் குறிக்க) யிமஅர்ரத்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இது ‘அல்உர்ரு’ என்பதிலிருந்து வந்தது. இதற்கு யிசொறிசிரங்கு’ என்பது சொற்பொருளாகும். (அதே வசனத்தில, ‘அவர்கள் பிரிந்திருந்தால்’ என்பதைக் குறிக்க) யிதஸய்யலூ’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு யிதனியாக விலகியிருந்தால்’ என்பது பொருளாகும்.

(48:26 ஆவது வசனத்தில், வைராக்கியம் அல்லது வரட்டுப் பிடிவாதம் என்பதைக் குறிக்க) யிஹமிய்யத்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு தடுத்தல், நுழைய விடாமல் வேலி அமைத்தல் என்பன பொருள்களாகும். ஒருவர்மீது கோபப்படுவதற்கும் இச்சொல் ஆளப்படுவதுண்டு.


அத்தியாயம் : 54
2733. وَقَالَ عُقَيْلٌ عَنِ الزُّهْرِيِّ، قَالَ عُرْوَةُ فَأَخْبَرَتْنِي عَائِشَةُ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَمْتَحِنُهُنَّ، وَبَلَغَنَا أَنَّهُ لَمَّا أَنْزَلَ اللَّهُ تَعَالَى أَنْ يَرُدُّوا إِلَى الْمُشْرِكِينَ مَا أَنْفَقُوا عَلَى مَنْ هَاجَرَ مِنْ أَزْوَاجِهِمْ، وَحَكَمَ عَلَى الْمُسْلِمِينَ، أَنْ لاَ يُمَسِّكُوا بِعِصَمِ الْكَوَافِرِ، أَنَّ عُمَرَ طَلَّقَ امْرَأَتَيْنِ قَرِيبَةَ بِنْتَ أَبِي أُمَيَّةَ، وَابْنَةَ جَرْوَلٍ الْخُزَاعِيِّ، فَتَزَوَّجَ قَرِيبَةَ مُعَاوِيَةُ، وَتَزَوَّجَ الأُخْرَى أَبُو جَهْمٍ، فَلَمَّا أَبَى الْكُفَّارُ أَنْ يُقِرُّوا بِأَدَاءِ مَا أَنْفَقَ الْمُسْلِمُونَ عَلَى أَزْوَاجِهِمْ، أَنْزَلَ اللَّهُ تَعَالَى {وَإِنْ فَاتَكُمْ شَىْءٌ مِنْ أَزْوَاجِكُمْ إِلَى الْكُفَّارِ فَعَاقَبْتُمْ} وَالْعَقِبُ مَا يُؤَدِّي الْمُسْلِمُونَ إِلَى مَنْ هَاجَرَتِ امْرَأَتُهُ مِنَ الْكُفَّارِ، فَأَمَرَ أَنْ يُعْطَى مَنْ ذَهَبَ لَهُ زَوْجٌ مِنَ الْمُسْلِمِينَ مَا أَنْفَقَ مِنْ صَدَاقِ نِسَاءِ الْكُفَّارِ اللاَّئِي هَاجَرْنَ، وَمَا نَعْلَمُ أَحَدًا مِنَ الْمُهَاجِرَاتِ ارْتَدَّتْ بَعْدَ إِيمَانِهَا. وَبَلَغَنَا أَنَّ أَبَا بَصِيرِ بْنَ أَسِيدٍ الثَّقَفِيَّ قَدِمَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم مُؤْمِنًا مُهَاجِرًا فِي الْمُدَّةِ، فَكَتَبَ الأَخْنَسُ بْنُ شَرِيقٍ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم يَسْأَلُهُ أَبَا بَصِيرٍ، فَذَكَرَ الْحَدِيثَ.
பாடம் : 15 அறப்போரின்போது விதிக்கப்படும் நிபந்தனைகளும் பகைநாட்டினருடன் சமாதானம் செய்துகொள்வதும் (ஒப்பந்த) விதி களை எழுதுவதும்
2733. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்காவிலிருந்து புலம்பெயர்ந்து வரும் பெண்களை (அவர்கள் இறை நம்பிக்கை யுடையவர்கள்தானா) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சோதித்துவந்தார்கள். இணைவைப்பாளர்களின் மனைவிமார் களில் யாரெல்லாம் புலம்பெயர்ந்து வந்தார் களோ அவர்களுக்காக, அவர்களுடைய கணவன்மார்கள் செலவிட்ட (மஹ்ர்) தொகைளை அவர்களிடமே திருப்பிக் கொடுத்துவிடும்படியும், இறைமறுப்பாளர் களான பெண்களுடன் முஸ்லிம்கள் திருமண பந்தம் வைத்திருக்கக் கூடாது என்றும் அல்லாஹ் கட்டளையிட்டபோது, உமர் (ரலி) அவர்கள், அபூஉமய்யாவின் மகள் கரீபாவையும், ஜர்வல் அல்குஸாயீ யின் மகளையும் (அவர்கள் இறைமறுப் பாளர்களாக இருந்த காரணத்தால்) மணவிலக்குச் செய்துவிட்டார்கள்.

ஆகவே, கரீபாவை முஆவியா பின் அபீசுஃப்யானும் மற்றொருவரை அபூ ஜஹ்மும் மணமுடித்துக்கொண்டார்கள்.

முஸ்லிம்கள் தம் மனைவியருக்குச் செலவிட்டதை, (மனைவியர் இறை மறுப்பாளர்களிடம் சென்றபின்) திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பதை இறைமறுப்பாளர்கள் ஏற்க மறுத்தனர். அப்போது, ‘‘உங்கள் மனைவியரில் ஒருவர் இறைமறுப்பாளர்களிடம் போய்ச் சேர்ந்துகொண்டபின், நீங்கள் போர்ச் செல்வங்களைப் பெற்றால் (இறைமறுப்பாளர்களிடம் சென்றுவிட்ட) மனைவியரின் கணவன்களுக்கு, அவர்கள் செலவிட்டதைப் போன்று கொடுத்துவிடுங்கள்” (60:11) எனும் வசனத்தை உயர்ந்தோன் அல்லாஹ் அருளினான்.

இங்கு யிபோர்ச்செல்வங்கள்’ என்பதைக் குறிக்க ‘அக்ப்’ (ஆகப்த்தும்) எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இது, இறைமறுப்பாளர்களிடமிருந்து புலம்பெயர்ந்து (முஸ்லிம்களிடம்) வரும் (முஸ்லிம்) மனைவிக்கு முஸ்லிம் கணவன் வழங்கும் மணக்கொடையைக் குறிக்கும்.

அதாவது முஸ்லிம்களில் ஒருவருடைய மனைவி (மதம் மாறி இறைமறுப்பாளர்களிடம்) சென்றுவிட்டால், (அவளுக்காக) அவர் செலவிட்ட (மணக் கொடையான)து அவருக்கு வழங்கப்பட வேண்டும் என அல்லாஹ் ஆணையிட் டான். அது, இறைமறுப்பாளர்களின் மனைவியரில் யார் (முஸ்லிம்களிடம்) புலம்பெயர்ந்து வருகிறாரோ (அவரை முஸ்லிம் மணமுடிக்கும்போது) அவருக்குத் தரும் மணக்கொடைக்கு ஈடானதாகும்.

ஆனால், புலம்பெயர்ந்துவந்த (முஸ்லிம்) பெண்களில் எவருமே இறைநம்பிக்கை கொண்ட பின்னால் இஸ்லாத்தை நிராகரித்துவிட்டு (மதம் மாறிச்) சென்றதாக நாம் அறியவில்லை. சமாதான உடன்படிக்கை நடைமுறையில் இருந்த காலத்தில் அபூபஸீர் பின் உசைத் அஸ்ஸகஃபீ அவர்கள் இறைநம்பிக்கை கொண்டு, புலம்பெயர்ந்து நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்; அப்போது (குறைஷித் தலைவர்) அக்னஸ் பின் ஷரீக் என்பவர் அபூபஸீரை (மக்காவுக்குத்) திருப்பியனுப்பும்படி கேட்டு, நபி (ஸல்) அவர்களுக்கு (கடிதம்) எழுதினார் என நமக்குச் செய்தி எட்டியது...” என்று ஹதீஸ் முழுவதையும் சொன்னார்கள்.20

அத்தியாயம் : 54
2734. وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي جَعْفَرُ بْنُ رَبِيعَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ هُرْمُزَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رضى الله عنه عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ ذَكَرَ رَجُلاً سَأَلَ بَعْضَ بَنِي إِسْرَائِيلَ أَنْ يُسْلِفَهُ أَلْفَ دِينَارِ، فَدَفَعَهَا إِلَيْهِ إِلَى أَجَلٍ مُسَمًّى. وَقَالَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ وَعَطَاءٌ إِذَا أَجَّلَهُ فِي الْقَرْضِ جَازَ.
பாடம் : 16 கடனில் விதிக்கப்படும் நிபந் தனைகள்
2734. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் இஸ்ரவேலர்களில் ஒருவரிடம் தமக்கு ஆயிரம் பொற்காசுகள் (தீனார்கள்) கடன் தரும்படி கேட்டதாகவும் அந்த இஸ்ரவேலரும் காலக்கெடுவைக் குறிப்பிட்டு (அதற்குள் திருப்பிச் செலுத்தி விட வேண்டுமென்று நிபந்தனையிட்டு) அதை அவருக்குக் கொடுத்ததாகவும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.21

இப்னு உமர் (ரலி), அதாஉ (ரஹ்) ஆகிய இருவரும், ‘‘கடன் கொடுப்பவர் கடனைத் திருப்பிச் செலுத்த காலக்கெடு நிர்ணயித்தால் அது செல்லும்” என்று கூறுகிறார்கள்.

அத்தியாயம் : 54
2735. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ يَحْيَى، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ أَتَتْهَا بَرِيرَةُ تَسْأَلُهَا فِي كِتَابَتِهَا، فَقَالَتْ إِنْ شِئْتِ أَعْطَيْتُ أَهْلَكِ وَيَكُونُ الْوَلاَءُ لِي. فَلَمَّا جَاءَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ذَكَّرْتُهُ ذَلِكَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" ابْتَاعِيهَا فَأَعْتِقِيهَا، فَإِنَّمَا الْوَلاَءُ لِمَنْ أَعْتَقَ "". ثُمَّ قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى الْمِنْبَرِ فَقَالَ "" مَا بَالُ أَقْوَامٍ يَشْتَرِطُونَ شُرُوطًا لَيْسَتْ فِي كِتَابِ اللَّهِ مَنِ اشْتَرَطَ شَرْطًا لَيْسَ فِي كِتَابِ اللَّهِ فَلَيْسَ لَهُ، وَإِنِ اشْتَرَطَ مِائَةَ شَرْطٍ "".
பாடம் : 17 விடுதலை ஆவணம் அளிக்கப்பட்ட அடிமையும் (முகாத்தப்) இறைச் சட்டத்திற்கு முரண்படும் அனுமதிக்கப்படாத நிபந்தனைகளும் ஜாபிர் (ரலி) அவர்கள், ‘‘விடுதலை ஆவணம் அளிக்கப்பட்ட அடிமை (முகாத்தப்) தொடர்பாக, அந்த அடிமையும் அவனுடைய உரிமையாளர்களும் விதிக்கும் நிபந்தனைகள் கவனத்தில் கொள்ளப்படும்” என்று கூறினார்கள். ‘‘இறைச் சட்டத்திற்கு மாற்றமான நிபந்தனைகள் அனைத்தும் செல்லாதவை யாகும்; நூறுமுறை நிபந்தனைகள் விதித் தாலும் சரியே” என்று இப்னு உமர் (ரலி) அவர்கள், அல்லது உமர் (ரலி) அவர்கள் (இருவரில் ஒருவர்) கூறினார்கள். இவ்வாறு அவ்விருவரும் கூறியதாக வும் சொல்லப்படுகிறது.
2735. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அடிமைப்பெண்) பரீரா, தனது விடு தலைப் பத்திரத்தின் தொகையைச் செலுத்த (உதவி கோரி) என்னிடம் வந்தார். நான், ‘‘நீ விரும்பினால் உன் உரிமையாளர் களுக்கு (முழுத் தொகையையும்) நான் செலுத்திவிடுகிறேன். ஆனால், உன் வாரிசுரிமை எனக்கே இருக்க வேண்டும்” என்று கூறினேன்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தபோது நான் இதை அவர்களிடம் கூறினேன். அவர்கள், ‘‘அவரை வாங்கி விடுதலை செய்துவிடு. ஏனெனில், வாரிசுரிமை விடுதலை செய்த வருக்கே உரியது” என்று கூறினார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையின் மீது நின்று (உரை நிகழ்த்தலானார்கள். அவர்கள்), ‘‘மக்கள் சிலருக்கு என்ன நேர்ந்துவிட்டது? அவர்கள் இறைச் சட்டத்தில் இல்லாத நிபந்தனைகளை விதிக்கிறார்களே! யார் இறைச் சட்டத்தில் இல்லாத நிபந்தனைகளை விதிக்கிறாரோ அவருக்கு அதற்கான (அதை நிறைவேற்றக் கோரும்) உரிமை இல்லை; அவர் நூறுமுறை நிபந்தனை விதித்தாலும் சரியே” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 54
2736. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ لِلَّهِ تِسْعَةً وَتِسْعِينَ اسْمَا مِائَةً إِلاَّ وَاحِدًا مَنْ أَحْصَاهَا دَخَلَ الْجَنَّةَ "".
பாடம் : 18 அனுமதிக்கப்பட்ட நிபந்தனை, வாக்குமூலத்தில் விதிவிலக்கு, மக்களிடையே வழக்கில் உள்ள நிபந்தனைகள் மற்றும் யிஒன்று அல்லது இரண்டு தவிர நூறு' என்று சொன்னால்...? இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவர் வாகனத்தை வாடகைக்கு விடுபவரிடம், ‘‘உமது ஊர்தி ஒட்டகத்தை (தொழுவத்தில்) கட்டிவைப்பீராக! நான் உம்முடன் இன்ன நாளில் பயணம் செய்யவில்லையென்றால், உமக்கு நூறு திர்ஹங்கள் தந்துவிடுகிறேன்” என்று சொல்லியிருந்தார். பிறகு (குறித்த நாளில்) அவர் (பயணம்) புறப்படவில்லை (என்றால், வாக்களித்தபடி நூறு திர்ஹங் களை அவர் கொடுத்துவிட வேண்டும். ஏனெனில்,) இது குறித்து நீதிபதி ஷுரைஹ் (ரஹ்) அவர்கள், ‘‘யார் தாமாக முன்வந்து எவரது நிர்ப்பந்தமுமின்றி ஒன்றைத் தம்மீது நிபந்தனையிட்டுக்கொண்டாரோ அதை அவர் நிறைவேற்றியாக வேண்டும்” என்று கூறினார்கள். மேலும், இப்னு சீரின் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவர் ஓர் உணவுப் பொருளை விற்றார். அப்போது அதை வாங்குபவர், ‘‘நான் புதன்கிழமையன்று உம்மிடம் வரவில்லையென்றால் உமக்கும் எனக்கு மிடையே (நடக்கும் இந்த) வியாபாரம் ரத்தாகிவிடும்” என்று சொல்லியிருந்தார். பிறகு புதன்கிழமையன்று அவர் வரவில்லை. (இதனால் தகராறு ஏற்பட்டு, வழக்கு) நீதிபதி ஷுரைஹ் (ரஹ்) (அவர்களிடம் வந்தபோது அவர்) அதை வாங்குபவரிடம், ‘‘நீர் (குறித்த நாளில் வராமல்) உமது வாக்குறுதிக்கு மாறுசெய்துவிட்டாய்” என்று சொல்லி அவருக்கு எதிராகத் தீர்ப்பளித்தார்கள்.
2736. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வுக்குத் தொண்ணூற் றொன்பது லிநூறுக்கு ஒன்று குறைவானலி திருப்பெயர்கள் உள்ளன. அவற்றை (நம்பிக்கை கொண்டு) ம”மிட்டவர் சொர்க்கத்தில் நுழைவார்.22

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 54
2737. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيُّ، حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، قَالَ أَنْبَأَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، أَصَابَ أَرْضًا بِخَيْبَرَ، فَأَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم يَسْتَأْمِرُهُ فِيهَا، فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، إِنِّي أَصَبْتُ أَرْضًا بِخَيْبَرَ، لَمْ أُصِبْ مَالاً قَطُّ أَنْفَسَ عِنْدِي مِنْهُ، فَمَا تَأْمُرُ بِهِ قَالَ "" إِنْ شِئْتَ حَبَسْتَ أَصْلَهَا، وَتَصَدَّقْتَ بِهَا "". قَالَ فَتَصَدَّقَ بِهَا عُمَرُ أَنَّهُ لاَ يُبَاعُ وَلاَ يُوهَبُ وَلاَ يُورَثُ، وَتَصَدَّقَ بِهَا فِي الْفُقَرَاءِ وَفِي الْقُرْبَى، وَفِي الرِّقَابِ، وَفِي سَبِيلِ اللَّهِ، وَابْنِ السَّبِيلِ، وَالضَّيْفِ، لاَ جُنَاحَ عَلَى مَنْ وَلِيَهَا أَنْ يَأْكُلَ مِنْهَا بِالْمَعْرُوفِ، وَيُطْعِمَ غَيْرَ مُتَمَوِّلٍ. قَالَ فَحَدَّثْتُ بِهِ ابْنَ سِيرِينَ فَقَالَ غَيْرَ مُتَأَثِّلٍ مَالاً.
பாடம் : 19 அறக்கொடை (வக்ஃப்) வழங்கும் போது நிபந்தனைகள்
2737. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கைபரில் (‘ஸம்ஃக்’ என்னும்) ஒரு நிலத்தைப் பெற்றிருந்தார்கள். அதன் தொடர்பாக ஆலோசனை பெறுவதற்காக நபி (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் கைபரில் ஒரு நிலத்தைப் பெற்றுள்ளேன். அதைவிடச் சிறந்த ஒரு செல்வத்தை (இதுவரை) நான் அடைந்ததே இல்லை. ஆகவே, அதை நான் என்ன செய்ய வேண்டும் என்று தாங்கள் கட்டளையிடுகிறீர்கள்?” என்று கேட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் விரும்பினால் அந்த நிலத்தை நீங்களே வைத்துக்கொண்டு அதன் விளைச்சலைத் தர்மம் செய்துவிடுங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே உமர் (ரலி) அவர்களும், ‘‘அதை (எவருக்கும்) விற்கக் கூடாது; அன்பளிப்பாக வழங்கக் கூடாது; வாரிசுச் சொத்தாகவும் எவருக்கும் அதை வழங்கக் கூடாது” என்ற நிபந்தனைகளை விதித்து அறக்கொடையாக (வக்ஃபாக) வழங்கினார்கள்.

அ(தன் வருமானத்)தை ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்கும், அல்லாஹ்வின் பாதையிலும், வழிப் போக்கர்களுக்கும், விருந்தினர்களுக்கும் தர்மம் செய்தார்கள். அதைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்பவர் அதிலிருந்து நியாயமான அளவில் தாமும் உண்டு, சேகரித்து வைக்காமல், (படாடோபமாகச் செலவிடாமல்) பிறருக்கும் உணவளிப்பது குற்றமாகாது (என்றும் எழுதிவைத்தார்கள்.)

அத்தியாயம் : 54

2738. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" مَا حَقُّ امْرِئٍ مُسْلِمٍ لَهُ شَىْءٌ، يُوصِي فِيهِ يَبِيتُ لَيْلَتَيْنِ، إِلاَّ وَوَصِيَّتُهُ مَكْتُوبَةٌ عِنْدَهُ "". تَابَعَهُ مُحَمَّدُ بْنُ مُسْلِمٍ عَنْ عَمْرٍو عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 1 இறுதி விருப்பங்களும், ‘‘மனிதனின் இறுதி விருப்பம் எழுதப்பட்டு அவனிடம் (ஆவண வடிவில்) இருக்க வேண்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: உங்களில் ஒருவருக்கு இறப்பு நெருங்கும்போது அவர் செல்வத்தை விட்டுச்சென்றால், பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் (சொத்துரிமை தொடர் பாக) அழகிய முறையில் இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவிப்பது உங்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது. இறையச்சம் உடையோருக்கு இது கடமையாகும். அ(ந்த இறுதி விருப்பத்)தைச் செவி யுற்ற பிறகு யாரேனும் அதை மாற்றினால், அந்தக் குற்றம் அதை மாற்றியவரையே சேரும். அல்லாஹ் நன்கு செவியுறு வோனும் நன்கறிந்தோனும் ஆவான். ஆனால், இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவித்தவரிடம் ஏதேனும் தவறையோ பாவத்தையோ ஒருவர் அஞ்சி, அவ(ரு டைய உறவின)ர்களிடையே சமரசம் செய்(து அதை மாற்றி ஒழுங்குபடுத்து)வாராயின் அவர்மீது எந்தக் குற்றமுமில்லை. அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனும் மிகுந்த கருணையாளனும் ஆவான். (2:180லி182) (2:182ஆவது வசனத்தில் யிதவறு’ என்பதைக் குறிக்க) யிஜனஃப்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு ‘(நேரிய வழியிலிருந்து) பிறழ்தல்’ என்பது பொருளாகும். யிபிறழ்கின்றவû” யிமுத்தஜானிஃப்’ என்பர்.
2738. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இறுதி விருப்பம் தெரிவிக்க) ஏதேனும் ஒரு பொருளைப் பெற்றிருக்கும் எந்த ஒரு முஸ்லிமுக்கும் அவர் தமது இறுதி விருப்பத்தை எழுதித் தன்னிடம் வைத்திருக்காமல் இரண்டு இரவுகள்கூட கழிப்பதற்கு அனுமதியில்லை.2

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 55
2739. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَارِثِ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي بُكَيْرٍ، حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ الْجُعْفِيُّ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، خَتَنِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَخِي جُوَيْرِيَةَ بِنْتِ الْحَارِثِ قَالَ مَا تَرَكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عِنْدَ مَوْتِهِ دِرْهَمًا وَلاَ دِينَارًا وَلاَ عَبْدًا وَلاَ أَمَةً وَلاَ شَيْئًا، إِلاَّ بَغْلَتَهُ الْبَيْضَاءَ وَسِلاَحَهُ وَأَرْضًا جَعَلَهَا صَدَقَةً.
பாடம் : 1 இறுதி விருப்பங்களும், ‘‘மனிதனின் இறுதி விருப்பம் எழுதப்பட்டு அவனிடம் (ஆவண வடிவில்) இருக்க வேண்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: உங்களில் ஒருவருக்கு இறப்பு நெருங்கும்போது அவர் செல்வத்தை விட்டுச்சென்றால், பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் (சொத்துரிமை தொடர் பாக) அழகிய முறையில் இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவிப்பது உங்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது. இறையச்சம் உடையோருக்கு இது கடமையாகும். அ(ந்த இறுதி விருப்பத்)தைச் செவி யுற்ற பிறகு யாரேனும் அதை மாற்றினால், அந்தக் குற்றம் அதை மாற்றியவரையே சேரும். அல்லாஹ் நன்கு செவியுறு வோனும் நன்கறிந்தோனும் ஆவான். ஆனால், இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவித்தவரிடம் ஏதேனும் தவறையோ பாவத்தையோ ஒருவர் அஞ்சி, அவ(ரு டைய உறவின)ர்களிடையே சமரசம் செய்(து அதை மாற்றி ஒழுங்குபடுத்து)வாராயின் அவர்மீது எந்தக் குற்றமுமில்லை. அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனும் மிகுந்த கருணையாளனும் ஆவான். (2:180லி182) (2:182ஆவது வசனத்தில் யிதவறு’ என்பதைக் குறிக்க) யிஜனஃப்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு ‘(நேரிய வழியிலிருந்து) பிறழ்தல்’ என்பது பொருளாகும். யிபிறழ்கின்றவû” யிமுத்தஜானிஃப்’ என்பர்.
2739. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியார் ஜுவைரியா பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது மரணத்தின்போது திர்ஹமையோ, தீனாரையோ (வெள்ளி நாணயத்தையோ, பொற்காசையோ), அடிமையையோ, அடிமைப் பெண்ணையோ, வேறு எதையுமோ விட்டுச்செல்லவில்லை; தமது வெள்ளைக் கோவேறுக் கழுதையையும், தம்முடைய ஆயுதங்களையும், தர்மமாக ஆக்கிவிட்டிருந்த ஒரு நிலத்தையும் தவிர.


அத்தியாயம் : 55
2740. حَدَّثَنَا خَلاَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا مَالِكٌ، حَدَّثَنَا طَلْحَةُ بْنُ مُصَرِّفٍ، قَالَ سَأَلْتُ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي أَوْفَى ـ رضى الله عنهما ـ هَلْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَوْصَى فَقَالَ لاَ. فَقُلْتُ كَيْفَ كُتِبَ عَلَى النَّاسِ الْوَصِيَّةُ أَوْ أُمِرُوا بِالْوَصِيَّةِ قَالَ أَوْصَى بِكِتَابِ اللَّهِ.
பாடம் : 1 இறுதி விருப்பங்களும், ‘‘மனிதனின் இறுதி விருப்பம் எழுதப்பட்டு அவனிடம் (ஆவண வடிவில்) இருக்க வேண்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: உங்களில் ஒருவருக்கு இறப்பு நெருங்கும்போது அவர் செல்வத்தை விட்டுச்சென்றால், பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் (சொத்துரிமை தொடர் பாக) அழகிய முறையில் இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவிப்பது உங்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது. இறையச்சம் உடையோருக்கு இது கடமையாகும். அ(ந்த இறுதி விருப்பத்)தைச் செவி யுற்ற பிறகு யாரேனும் அதை மாற்றினால், அந்தக் குற்றம் அதை மாற்றியவரையே சேரும். அல்லாஹ் நன்கு செவியுறு வோனும் நன்கறிந்தோனும் ஆவான். ஆனால், இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவித்தவரிடம் ஏதேனும் தவறையோ பாவத்தையோ ஒருவர் அஞ்சி, அவ(ரு டைய உறவின)ர்களிடையே சமரசம் செய்(து அதை மாற்றி ஒழுங்குபடுத்து)வாராயின் அவர்மீது எந்தக் குற்றமுமில்லை. அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனும் மிகுந்த கருணையாளனும் ஆவான். (2:180லி182) (2:182ஆவது வசனத்தில் யிதவறு’ என்பதைக் குறிக்க) யிஜனஃப்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு ‘(நேரிய வழியிலிருந்து) பிறழ்தல்’ என்பது பொருளாகும். யிபிறழ்கின்றவû” யிமுத்தஜானிஃப்’ என்பர்.
2740. தல்ஹா பின் முஸர்ரிஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்களிடம், ‘‘நபி (ஸல்) அவர்கள் இறுதி விருப்பம் தெரிவித்தார்களா?” என்று கேட்டேன். அவர்கள், ‘‘இல்லை” என்று பதிலளித்தார்கள். நான், ‘‘அப்படி யென்றால் மக்கள்மீது இறுதி விருப்பம் தெரிவிப்பது எப்படிக் கடமையாக்கப்பட்டது? அல்லது இறுதி விருப்பம் தெரிவிக்க வேண்டுமென்று மக்களுக்கு எப்படிக் கட்டளையிடப்பட்டது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘அல்லாஹ்வுடைய வேதத்தின்படி செயல்படுமாறு நபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்தினார்கள் ‘‘ என்று பதிலளித்தார்கள்.3


அத்தியாயம் : 55
2741. حَدَّثَنَا عَمْرُو بْنُ زُرَارَةَ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ، عَنِ ابْنِ عَوْنٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، قَالَ ذَكَرُوا عِنْدَ عَائِشَةَ أَنَّ عَلِيًّا ـ رضى الله عنهما ـ كَانَ وَصِيًّا. فَقَالَتْ مَتَى أَوْصَى إِلَيْهِ وَقَدْ كُنْتُ مُسْنِدَتَهُ إِلَى صَدْرِي ـ أَوْ قَالَتْ حَجْرِي ـ فَدَعَا بِالطَّسْتِ، فَلَقَدِ انْخَنَثَ فِي حَجْرِي، فَمَا شَعَرْتُ أَنَّهُ قَدْ مَاتَ، فَمَتَى أَوْصَى إِلَيْهِ
பாடம் : 1 இறுதி விருப்பங்களும், ‘‘மனிதனின் இறுதி விருப்பம் எழுதப்பட்டு அவனிடம் (ஆவண வடிவில்) இருக்க வேண்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: உங்களில் ஒருவருக்கு இறப்பு நெருங்கும்போது அவர் செல்வத்தை விட்டுச்சென்றால், பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் (சொத்துரிமை தொடர் பாக) அழகிய முறையில் இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவிப்பது உங்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது. இறையச்சம் உடையோருக்கு இது கடமையாகும். அ(ந்த இறுதி விருப்பத்)தைச் செவி யுற்ற பிறகு யாரேனும் அதை மாற்றினால், அந்தக் குற்றம் அதை மாற்றியவரையே சேரும். அல்லாஹ் நன்கு செவியுறு வோனும் நன்கறிந்தோனும் ஆவான். ஆனால், இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவித்தவரிடம் ஏதேனும் தவறையோ பாவத்தையோ ஒருவர் அஞ்சி, அவ(ரு டைய உறவின)ர்களிடையே சமரசம் செய்(து அதை மாற்றி ஒழுங்குபடுத்து)வாராயின் அவர்மீது எந்தக் குற்றமுமில்லை. அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனும் மிகுந்த கருணையாளனும் ஆவான். (2:180லி182) (2:182ஆவது வசனத்தில் யிதவறு’ என்பதைக் குறிக்க) யிஜனஃப்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு ‘(நேரிய வழியிலிருந்து) பிறழ்தல்’ என்பது பொருளாகும். யிபிறழ்கின்றவû” யிமுத்தஜானிஃப்’ என்பர்.
2741. அஸ்வத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்களிடம் மக்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள் (தமக்குப்பின் ஆட்சித் தலைமை ஏற்கும்படி) அலீ (ரலி) அவர்களிடம் இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவித்துவிட்டுச் சென்றார்கள் (என்று கேள்விப்படுகிறோமே)” என்று சொன் னார்கள்.

அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள் எப்போது அவருக்கு யிவஸிய்யத்’ செய்தார்கள்? (நபி (ஸல்) அவர்கள் மரணப் படுக்கையில் இருந்தபோது) நான்தானே அவர்களை என் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்டிருந்தேன். அவர்கள் கையலம்பும் கிண்ணம் கொண்டுவரும்படி கேட்டார்கள்.

பிறகு என் மடியில் மூர்ச்சையுற்று சரிந்தார்கள். நான் அவர்கள் இறந்து விட்டார்கள் என்பதைக்கூட உணரவில்லை. அவ்வாறிருக்க, அவர்கள் எப்போது அவரிடம் (ஆட்சிப் பொறுப்பேற்கும்படி) வஸிய்யத் செய்திருக்க முடியும்?” என்று கேட்டார்கள்.

அத்தியாயம் : 55
2742. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ، عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ ـ رضى الله عنه ـ قَالَ جَاءَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَعُودُنِي وَأَنَا بِمَكَّةَ، وَهْوَ يَكْرَهُ أَنْ يَمُوتَ بِالأَرْضِ الَّتِي هَاجَرَ مِنْهَا قَالَ "" يَرْحَمُ اللَّهُ ابْنَ عَفْرَاءَ "". قُلْتُ يَا رَسُولَ اللَّهِ، أُوصِي بِمَالِي كُلِّهِ قَالَ "" لاَ "". قُلْتُ فَالشَّطْرُ قَالَ "" لاَ "". قُلْتُ الثُّلُثُ. قَالَ "" فَالثُّلُثُ، وَالثُّلُثُ كَثِيرٌ، إِنَّكَ أَنْ تَدَعَ وَرَثَتَكَ أَغْنِيَاءَ خَيْرٌ مِنْ أَنْ تَدَعَهُمْ عَالَةً يَتَكَفَّفُونَ النَّاسَ فِي أَيْدِيهِمْ، وَإِنَّكَ مَهْمَا أَنْفَقْتَ مِنْ نَفَقَةٍ فَإِنَّهَا صَدَقَةٌ، حَتَّى اللُّقْمَةُ الَّتِي تَرْفَعُهَا إِلَى فِي امْرَأَتِكَ، وَعَسَى اللَّهُ أَنْ يَرْفَعَكَ فَيَنْتَفِعَ بِكَ نَاسٌ وَيُضَرَّ بِكَ آخَرُونَ "". وَلَمْ يَكُنْ لَهُ يَوْمَئِذٍ إِلاَّ ابْنَةٌ.
பாடம் : 2 ஒருவர் தம் வாரிசுகளைத் தன்னிறைவு பெற்றவர்களாக விட்டுச் செல்வது, மக்களிடம் கையேந்தும் நிலையில் விட்டுச்செல்வதைவிட நல்லதாகும்.
2742. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்காவில் (நோயுற்று) இருந்த என்னை நபி (ஸல்) அவர்கள் (தமது ஹஜ்ஜின் போது) நலம் விசாரிக்க வந்தார்கள். நான் எந்தப் பூமியிலிருந்து புலம்பெயர்ந்து சென்றுவிட்டேனோ அந்தப் பூமியில் (மக்காவில்) மரணிப்பதை விரும்பவில்லை. (மக்காவிலேயே மரணித்துவிட்ட மற்றொருவரான) ‘‘அஃப்ராவின் புதல்(வர் சஅத் பின் கவ்லா என்ப)வருக்கு அல்லாஹ் கருணை புரிவானாக!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! என் செல்வம் முழுவதையும் நான் (அறக் காரியங்களுக்காக) இறுதி விருப்பம் தெரிவித்துவிடட்டுமா?” என்று கேட்டேன். அவர்கள், ‘‘வேண்டாம்” என்று கூறினார்கள். நான், ‘‘அப்படியென்றால் (என் செல்வத்தில்) பாதியை அவ்வாறு செய்துவிடட்டுமா?” என்று கேட்டேன். அதற்கும், ‘‘வேண்டாம்” என்றே பதிலளித்தார்கள். நான், ‘‘மூன்றிலொரு பங்கை(யாவது அவ்வாறு செய்துவிடட்டுமா?)” என்று கேட்டேன்.

அவர்கள், ‘‘மூன்றிலொரு பங்கா? மூன்றிலொரு பங்கே அதிகம்தான். நீங்கள் உங்கள் வாரிசுகளைத் தன்னிறைவுடையவர்களாக விட்டுச்செல்வது, அவர்களை மக்களிடம் கையேந்தும்படி ஏழைகளாக விட்டுச்செல்வதைவிட நல்லதாகும். நீங்கள் செய்த (நல்ல) செலவு எதுவாயினும் தர்மமேயாகும். நீங்கள் உங்கள் மனைவியின் வாயில் இடுகின்ற ஒரு கவளம் (உணவு)கூட (தர்மம்தான்). மேலும், உங்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளைத் தருவான்.4 உங்கள் வாயிலாக மக்கள் சிலர் பயனடைவார்கள். மற்ற (தீயவர்) சிலர் உங்களால் இழப்புக்குள்ளாவார்கள்” என்று கூறினார்கள்.5

அன்று அவருக்கு ஒரு மகளைத் தவிர வேறு (நேரடி வாரிசுகள்) யாரும் இருக்கவில்லை.

அத்தியாயம் : 55
2743. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ لَوْ غَضَّ النَّاسُ إِلَى الرُّبْعِ، لأَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" الثُّلُثُ، وَالثُّلُثُ كَثِيرٌ أَوْ كَبِيرٌ "".
பாடம் : 3 மூன்றில் ஒரு பங்கில் இறுதி விருப்பம் தெரிவித்தல் ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள், ‘‘இஸ்லாமிய அரசின் கீழுள்ள முஸ்லிமல் லாதாரும் மூன்றிலொரு பங்குக்குமேல் இறுதி விருப்பம் தெரிவிக்கக் கூடாது” என்று கூறினார்கள். ஏனெனில், ‘‘(நபியே!) அவர்களிடையே நீங்கள் அல்லாஹ் அரு ளிய (சட்டத்)தைக் கொண்டே தீர்ப்பளி யுங்கள்” என்று உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான். (அல்குர்ஆன் 5:49)
2743. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கள் (தமது மரண சாசனங்களை) நான்கிலொரு பாகமாகக் குறைத்துக் கொண்டால் நன்றாயிருக்கும். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘மூன்றிலொரு பங்கா? மூன்றிலொரு பங்கும் அதிகம்தான்” என்று கூறி னார்கள்.


அத்தியாயம் : 55
2744. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ بْنُ عَدِيٍّ، حَدَّثَنَا مَرْوَانُ، عَنْ هَاشِمِ بْنِ هَاشِمٍ، عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ قَالَ مَرِضْتُ فَعَادَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ أَنْ لاَ يَرُدَّنِي عَلَى عَقِبِي. قَالَ "" لَعَلَّ اللَّهَ يَرْفَعُكَ وَيَنْفَعُ بِكَ نَاسًا "". قُلْتُ أُرِيدُ أَنْ أُوصِيَ، وَإِنَّمَا لِي ابْنَةٌ ـ قُلْتُ ـ أُوصِي بِالنِّصْفِ قَالَ "" النِّصْفُ كَثِيرٌ "". قُلْتُ فَالثُّلُثِ. قَالَ "" الثُّلُثُ، وَالثُّلُثُ كَثِيرٌ أَوْ كَبِيرٌ "". قَالَ فَأَوْصَى النَّاسُ بِالثُّلُثِ، وَجَازَ ذَلِكَ لَهُمْ.
பாடம் : 3 மூன்றில் ஒரு பங்கில் இறுதி விருப்பம் தெரிவித்தல் ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள், ‘‘இஸ்லாமிய அரசின் கீழுள்ள முஸ்லிமல் லாதாரும் மூன்றிலொரு பங்குக்குமேல் இறுதி விருப்பம் தெரிவிக்கக் கூடாது” என்று கூறினார்கள். ஏனெனில், ‘‘(நபியே!) அவர்களிடையே நீங்கள் அல்லாஹ் அரு ளிய (சட்டத்)தைக் கொண்டே தீர்ப்பளி யுங்கள்” என்று உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான். (அல்குர்ஆன் 5:49)
2744. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(இறுதி ஹஜ்ஜின்போது மக்காவில்) நான் நோயுற்றுவிட்டேன். நபி (ஸல்) அவர்கள் என்னை நலம் விசாரிக்க வருகை தந்தார்கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! என் கால்சுவடுகளின் வழியே என்னைத் திருப்பியனுப்பிவிடாமல் (புலம்பெயர்ந்த மண்ணிலேயே இறப்பு ஏற்படாமல்) இருக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளைத் தந்து, உங்களால் மக்கள் சிலருக்குப் பயன் தருவான்” என்று கூறினார்கள்.

‘‘நான் இறுதி விருப்பம் தெரிவிக்க விரும்புகிறேன். எனக்கிருப்பதெல்லாம் ஒரு மகள்தான். (என் சொத்தில்) பாதி பாகத்தை (நற்காரியங்களுக்காக) இறுதி விருப்பம் தெரிவித்துவிடட்டுமா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘பாதி அதிகம்தான்” என்று கூறினார்கள். நான் ‘‘அப்படியென்றால் மூன்றிலொரு பங்கு?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘மூன்றிலொரு பங்கா? மூன்றிலொரு பங்கும் அதிகம்தான். அல்லது பெரியது தான்” என்று கூறினார்கள்.

ஆகவே, மக்கள் மூன்றிலொரு பங்கில் இறுதி விருப்பம் தெரிவிக்கலானார்கள். அது அவர்களுக்குச் செல்லும்.

அத்தியாயம் : 55
2745. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهَا قَالَتْ كَانَ عُتْبَةُ بْنُ أَبِي وَقَّاصٍ عَهِدَ إِلَى أَخِيهِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ أَنَّ ابْنَ وَلِيدَةِ زَمْعَةَ مِنِّي، فَاقْبِضْهُ إِلَيْكَ. فَلَمَّا كَانَ عَامُ الْفَتْحِ أَخَذَهُ سَعْدٌ فَقَالَ ابْنُ أَخِي، قَدْ كَانَ عَهِدَ إِلَىَّ فِيهِ. فَقَامَ عَبْدُ بْنُ زَمْعَةَ فَقَالَ أَخِي، وَابْنُ أَمَةِ أَبِي، وُلِدَ عَلَى فِرَاشِهِ. فَتَسَاوَقَا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. فَقَالَ سَعْدٌ يَا رَسُولَ اللَّهِ، ابْنُ أَخِي، كَانَ عَهِدَ إِلَىَّ فِيهِ. فَقَالَ عَبْدُ بْنُ زَمْعَةَ أَخِي وَابْنُ وَلِيدَةِ أَبِي. وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" هُوَ لَكَ يَا عَبْدُ ابْنَ زَمْعَةَ، الْوَلَدُ لِلْفِرَاشِ، وَلِلْعَاهِرِ الْحَجَرُ "". ثُمَّ قَالَ لِسَوْدَةَ بِنْتِ زَمْعَةَ "" احْتَجِبِي مِنْهُ "". لِمَا رَأَى مِنْ شَبَهِهِ بِعُتْبَةَ، فَمَا رَآهَا حَتَّى لَقِيَ اللَّهَ.
பாடம் : 4 இறுதி விருப்பம் தெரிவிப்பவர் தம் பொறுப்பாளரிடம், ‘‘என் மகனைக் கவனித்துக்கொள்” என்று சொல்வதும், (அவ்வாறு) இறுதி விருப்பம் தெரிவிக்கப்பட்டவர் (தமது உரிமைக்காக) வாதாட அனுமதிக்கப்பட் டிருப்பதும்
2745. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

உத்பா பின் அபீவக்காஸ் தம் சகோதரர் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடம், ‘‘ஸம்ஆவின் அடிமைப் பெண்ணுடைய மகன் எனக்குப் பிறந்தவன். அவனை நீ பிடித்து வைத்துக்கொள்” என்று உறுதிமொழி வாங்கியிருந்தார். மக்கா வெற்றி ஆண்டில் சஅத் (ரலி) அவர்கள் அவனைப் பிடித்துக்கொண் டார்கள். அப்போது அவர்கள், ‘‘(இவன் என்) சகோதரரின் மகன். என் சகோதரர் இவனை அழைத்துக் கொண்டுவரும்படி என்னிடம் உறுதிமொழி வாங்கியுள்ளார்” என்று கூறினார்.

ஸம்ஆவின் மகன் அப்து (ரலி) எழுந்து, ‘‘இவன் என் சகோதரன். என் தந்தையின் அடிமைப் பெண்ணுக்குப் பிறந்தவன். அவரது படுக்கையில் (அவரது அதிகாரத்தில் இவனுடைய தாய் இருந்தபோது) பிறந்தவன்” என்று கூறினார். இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (தீர்ப்புக் கேட்டு) சென் றனர்.

சஅத் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இவன் என் சகோதரன் மகன். அவர் இவனை அழைத்துக் கொண்டுவரும்படி என்னிடம் உறுதிமொழி வாங்கியிருந்தார்” என்று கூற, அப்து பின் ஸம்ஆ (ரலி), ‘‘இவன் என் சகோதரன். என் தந்தையின் அடிமைப் பெண்ணுக்குப் பிறந்தவன்” என்று கூறினார். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அப்து பின் ஸம்ஆவே! அவன் உனக்கேயுரியவன். ஏனெனில், (சட்டப்படி) தாய் யாருடைய அதிகாரத்தில் இருக்கிறாளோ அவருக்கே குழந்தை உரியதாகும். விபசாரம் செய்தவனுக்கு இழப்புதான்” என்று கூறினார்கள்.

பிறகு (தம் மனைவியும்) ஸம்ஆவின் மகளுமான சவ்தா (ரலி) அவர்களிடம், ‘‘இவனிடமிருந்து நீ உன்னைத் திரையிட்டு (மறைத்து)க்கொள்” என்று கூறினார்கள். அவன், தோற்றத்தில் உத்பாவைப் போலவே இருந்ததைக் கண்டதால்தான் நபி (ஸல்) அவர்கள் இப்படிக் கூறினார்கள். (அதன் பிறகு) அந்த மனிதர் மரணிக்கும்வரை) அன்னை சவ்தா (ரலி) அவர்களைப் பார்க்கவில்லை.6

அத்தியாயம் : 55
2746. حَدَّثَنَا حَسَّانُ بْنُ أَبِي عَبَّادٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّ يَهُوِدِيًّا، رَضَّ رَأْسَ جَارِيَةٍ بَيْنَ حَجَرَيْنِ، فَقِيلَ لَهَا مَنْ فَعَلَ بِكِ، أَفُلاَنٌ أَوْ فُلاَنٌ حَتَّى سُمِّيَ الْيَهُودِيُّ، فَأَوْمَأَتْ بِرَأْسِهَا، فَجِيءَ بِهِ، فَلَمْ يَزَلْ حَتَّى اعْتَرَفَ، فَأَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَرُضَّ رَأْسُهُ بِالْحِجَارَةِ.
பாடம் : 5 நோயாளி தமது தலையால் தெளி வான சைகை செய்தால் அது செல்லும்.
2746. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

யூதர் ஒருவர் ஒரு சிறுமியின் தலையை இரு கற்களுக்கிடையே வைத்து நசுக்கி விட்டார். அச்சிறுமியிடம், ‘‘உன்னை இப்படிச் செய்தது யார்? இன்னாரா? இன்னாரா?” என்று ஒவ்வொரு பெயராகச் சொல்லிக் கேட்கப்பட்டது. இறுதியில், அந்த யூதருடைய பெயர் சொல்லப்பட்ட வுடன் (‘அவர்தான் இப்படிச் செய்தார்’ என்று) அச்சிறுமி தன் தலையால் சைகை செய்தாள்.

உடனே அந்த யூதர் கொண்டுவரப் பட்டார். அவர் தமது குற்றத்தை ஒப்புக் கொள்ளும்வரை தொடர்ந்து விசாரிக்கப் பட்டார். அவர் ஒப்புக்கொண்டவுடன் நபி (ஸல்) அவர்கள் அவரது தலையைக் கல்லால் நசுக்கும்படி உத்தரவிட, அவ்வாறே அவரது தலை நசுக்கப் பட்டது.

அத்தியாயம் : 55
2747. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، عَنْ وَرْقَاءَ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ الْمَالُ لِلْوَلَدِ، وَكَانَتِ الْوَصِيَّةُ لِلْوَالِدَيْنِ، فَنَسَخَ اللَّهُ مِنْ ذَلِكَ مَا أَحَبَّ، فَجَعَلَ لِلذَّكَرِ مِثْلَ حَظِّ الأُنْثَيَيْنِ، وَجَعَلَ لِلأَبَوَيْنِ لِكُلِّ وَاحِدٍ مِنْهُمَا السُّدُسَ، وَجَعَلَ لِلْمَرْأَةِ الثُّمُنَ وَالرُّبْعَ، وَلِلزَّوْجِ الشَّطْرَ وَالرُّبُعَ.
பாடம் : 6 வாரிசுக்கு இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவிக்கக் கூடாது.
2747. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(தொடக்க காலத்தில்) சொத்து பிள்ளைக்குரியதாகவும் இறுதி விருப்பம் தெரிவித்தல் தாய்தந்தைக்குரியதாகவும் இருந்தது. அதில், தான் விரும்பியதை அல்லாஹ், மாற்றிவிட்டான்; இரு பெண்களின் பங்குக்குச் சமமானதை ஆணுக்கு (அவனது பங்காக) நிர்ணயித்தான். தாய் தந்தையரில் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பங்கை நிர்ணயித்தான். (குழந்தை இருந்தால்) மனைவிக்கு எட்டில் ஒரு பங்கையும், (குழந்தை இல்லாவிட்டால்) நான்கில் ஒரு பங்கையும் (அவ்வாறே) கணவனுக்குப் பாதியையும் நான்கில் ஒரு பங்கையும் நிர்ணயித்தான்.7

அத்தியாயம் : 55
2748. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ سُفْيَانَ، عَنْ عُمَارَةَ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَجُلٌ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم يَا رَسُولَ اللَّهِ، أَىُّ الصَّدَقَةِ أَفْضَلُ قَالَ "" أَنْ تَصَدَّقَ وَأَنْتَ صَحِيحٌ حَرِيصٌ. تَأْمُلُ الْغِنَى، وَتَخْشَى الْفَقْرَ، وَلاَ تُمْهِلْ حَتَّى إِذَا بَلَغَتِ الْحُلْقُومَ قُلْتَ لِفُلاَنٍ كَذَا وَلِفُلاَنٍ كَذَا، وَقَدْ كَانَ لِفُلاَنٍ "".
பாடம் : 7 மரணத் தறுவாயில் தர்மம் செய்வது
2748. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! தர்மத்தில் சிறந்தது எது?” என்று கேட்டார்.

‘‘நீங்கள் ஆரோக்கியமுள்ளவராகவும், பொருளாசை கொண்டவராகவும், செல்வந் தராக விரும்பிய நிலையில் வறுமையை அஞ்சியவராகவும் இருக்கும்போது தர்மம் செய்வதே சிறந்த தர்மம் ஆகும். உமது உயிர் தொண்டைக் குழியை அடைந்து விட்டிருக்க, யிஇன்னாருக்கு இவ்வளவு கொடுங்கள்; இன்னாருக்கு இவ்வளவு கொடுங்கள்’ என்று சொல்லும் (நேரம் வரும்)வரை தர்மம் செய்வதைத் தள்ளிப் போடாதீர். (உமது மரணம் நெருங்கிவிடும்) அந்த நேரத்திலோ அது இன்னாருக்கு (உம்முடைய வாரிசுகளுக்கு) உரியதாய் ஆகிவிட்டிருக்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அத்தியாயம் : 55
2749. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ أَبُو الرَّبِيعِ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا نَافِعُ بْنُ مَالِكِ بْنِ أَبِي عَامِرٍ أَبُو سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" آيَةُ الْمُنَافِقِ ثَلاَثٌ، إِذَا حَدَّثَ كَذَبَ، وَإِذَا اؤْتُمِنَ خَانَ، وَإِذَا وَعَدَ أَخْلَفَ "".
பாடம் : 8 வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: (இந்தச் சொத்துப் பங்கீடெல்லாம்) அவர் தெரிவித்திருந்த இறுதி விருப்பம் மற்றும் (அவரது) கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பிறகுதான். (4:12) நீதிபதி ஷுரைஹ், உமர் பின் அப்தில் அஸீஸ், தாவூஸ், அதாஉ, இப்னு உதைனா (ரஹ்) ஆகியோர், ‘‘நோயாளி, தான் பட்ட கடனை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளிப்பது செல்லும்” என்று தெரிவித்துள் ளார்கள் எனக் கூறப்படுகிறது. ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள், ‘‘ஒரு மனிதன் செய்யும் தர்மங்களில் தகுதி மிக்கது, அவன் உலக வாழ்வின் கடைசி நாளிலும் மறுமை வாழ்வின் முதல் நாளி லும் செய்யும் (இறுதி விருப்ப) தர்மமே யாகும்” என்று கூறினார்கள். இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்), ஹகம் பின் உ(த்)தைபா (ரஹ்) ஆகியோர்கூறினார்கள்: (மரணப் படுக்கையில் உள்ள நோயாளி) ஒருவர், தம் வாரிசைக் கடனிலிருந்து விடுவித்துவிட்டால் அவர் கடன் சுமையிலிருந்து விடுபட்டுவிடுவார். ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள், ஃபஸாரிய்யா குலத்தைச் சேர்ந்த தம் மனைவி, தமது வீட்டில் பூட்டிவைத்திருக்கும் செல்வத்தைத் திறந்துகாட்(டி பிறருக் குப் பங்கு கொடுத்தி)ட வேண்டியதில்லை என்று இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவித்தார்கள்.8 ‘‘ஒருவர் தமது மரண வேளையில் தம் அடிமையைப் பார்த்து ‘உன்னை நான் விடுதலை செய்துவிட்டிருந்தேன்’ என்று கூறினால், அது செல்லும்” என்று ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள். ‘‘ஒரு பெண் தனது மரண வேளையில் ‘என் கணவர் எனக்குத் தர வேண்டியதைத் தந்து (கடனை) அடைத்துவிட்டார். நான் அதை அவரிடமிருந்து பெற்றுக்கொண்டு விட்டேன்’ என்று கூறினால், அது செல்லும்” என ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ‘‘மரணப் படுக்கையில் உள்ள ஒருவர் தம் வாரிசுகளில் சிலருக்கு (தாம் இவ்வளவு தொகை கொடுக்க வேண்டியுள்ளது என்று) வாக்குமூலம் அளித்தால், அது செல்லாது. (அச்சிலருக்கு மட்டும் சலுகை செய்வதற் காக அவ்வாறு அவர் சொல்லியிருக்கக்கூடும் என்ற) சந்தேகமே (கெட்ட எண்ணமே) இதற்குக் காரணம்” என்று சிலர் கூறுகின்றனர். (இவ்வாறு கூறும்) இவர்களே பிறகு இறங்கிவந்து, ‘‘(வாரிசுகளில் ஒருவரது) அடைக்கலப் பொருள், அல்லது ஏதேனும் ஒரு பொருள், அல்லது கூட்டு வியாபாரத்தின் பங்கு தம்மிடம் இருப்பதாக (நோயாளி) வாக்குமூலம் அளித்தால், அது செல்லும்” என்கின்றனர். ஆனால், (இவ்வாறு கெட்ட எண்ணம் கொள்வது சரியன்று. ஏனெனில்,) நபி (ஸல்) அவர்கள், ‘‘(ஆதாரமின்றி) சந்தேகம் கொள்வது குறித்து உங்களை எச்சரிக்கிறேன்; சந்தேகம்தான் பேச்சுகளிலேயே மிகவும் பொய்யானது” என்று கூறியுள்ளார்கள். மேலும், முஸ்லிம்களின் செல்வத்தை (அநியாயமாக) உண்பது கூடாது.9 ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், ‘‘நயவஞ் சகனின் அடையாளம் யாதெனில், அவனி டம் அடைக்கலப் பொருள் (அல்லது பொறுப்பு) ஏதும் நம்பி ஒப்படைக்கப்பட் டால் அதில் அவன் மோசடி செய்வான்” என்று கூறியுள்ளார்கள். உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: உங்களை நம்பி ஒப்படைக்கப்பட்ட (அமானிதப்) பொருட்களை அவற்றுக்கு உரியவர்களிடம் ஒப்படைத்துவிடுங்கள். (4:58) இங்கு யிஉரியவர்கள்’ என்பது வாரிசுகள், வாரிசு அல்லாதோர் என்ற பாகுபாடின்றி அனைவரையும் குறிக்கும். நயவஞ்சகனின் அடையாளம் குறித்த இந்த ஹதீஸை நபி (ஸல்) அவர்களிட மிருந்து அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
2749. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். (அவையாவன:) அவன் பேசும்போது பொய் பேசுவான்; அவனிடம் நம்பி எதையும் ஒப்படைக்கப்பட்டால் (அதில்) மோசடி செய்வான்; வாக்களித்தால் அதற்கு மாறுசெய்வான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 55
2750. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، وَعُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، أَنَّ حَكِيمَ بْنَ حِزَامٍ ـ رضى الله عنه ـ قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَأَعْطَانِي، ثُمَّ سَأَلْتُهُ فَأَعْطَانِي ثُمَّ قَالَ لِي "" يَا حَكِيمُ، إِنَّ هَذَا الْمَالَ خَضِرٌ حُلْوٌ، فَمَنْ أَخَذَهُ بِسَخَاوَةِ نَفْسٍ بُورِكَ لَهُ فِيهِ، وَمَنْ أَخَذَهُ بِإِشْرَافِ نَفْسٍ لَمْ يُبَارَكْ لَهُ فِيهِ، وَكَانَ كَالَّذِي يَأْكُلُ وَلاَ يَشْبَعُ، وَالْيَدُ الْعُلْيَا خَيْرٌ مِنَ الْيَدِ السُّفْلَى "". قَالَ حَكِيمٌ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ، وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ لاَ أَرْزَأُ أَحَدًا بَعْدَكَ شَيْئًا حَتَّى أُفَارِقَ الدُّنْيَا. فَكَانَ أَبُو بَكْرٍ يَدْعُو حَكِيمًا لِيُعْطِيَهُ الْعَطَاءَ فَيَأْبَى أَنْ يَقْبَلَ مِنْهُ شَيْئًا، ثُمَّ إِنَّ عُمَرَ دَعَاهُ لِيُعْطِيَهُ فَيَأْبَى أَنْ يَقْبَلَهُ فَقَالَ يَا مَعْشَرَ الْمُسْلِمِينَ، إِنِّي أَعْرِضُ عَلَيْهِ حَقَّهُ الَّذِي قَسَمَ اللَّهُ لَهُ مِنْ هَذَا الْفَىْءِ فَيَأْبَى أَنْ يَأْخُذَهُ. فَلَمْ يَرْزَأْ حَكِيمٌ أَحَدًا مِنَ النَّاسِ بَعْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم حَتَّى تُوُفِّيَ رَحِمَهُ اللَّهُ.
பாடம் : 9 ‘‘அவர் தெரிவித்திருந்த இறுதி விருப்பம் மற்றும் (அவரது) கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பிறகுதான்” (4:12) எனும் வசனத் தொடரின் விளக்கம் நபி (ஸல்) அவர்கள், ‘‘இறுதி விருப்பத்தை (வஸிய்யத்) நிறைவேற்றுவதற்கு முன்பே கடனை அடைக்க வேண்டும்” என்று தீர்ப்பளித்ததாகக் கூறப்படுகிறது. வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: உங்களை நம்பி ஒப்படைக்கப்பட்ட (அமானிதப்) பொருட்களை அவற்றுக்கு உரியவர்களிடம் ஒப்படைத்துவிடுங்கள். (4:58) ஆகவே, அடைக்கலப் பொருளை ஒப்படைப்பது, (கட்டாயக் கடமையாக இருப்பதால் அது) கூடுதல் நற்செயலான யிவஸிய்யத்’தை நிறைவேற்றுவதைவிட முன்னுரிமை வாய்ந்தது என்பது இதிலிருந்து தெரிகிறது. மேலும், நபி (ஸல்) அவர்கள், ‘‘தேவைக்கு மிஞ்சியதைக் கொடுப்பதே தர்மமாகும்” என்று கூறினார்கள்.10 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘அடிமை, தன் காப்பாளரின் அனுமதியின்றி இறுதி விருப்பம் தெரிவிக்கக் கூடாது” என்று கூறியுள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘அடிமை தன் உரிமையாளரின் செல்வத்தைப் பாதுகாப்ப வன் ஆவான்” என்று கூறினார்கள்.11
2750. ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (தர்மம்) கேட்டேன். அவர்கள் கொடுத்தார்கள். பிறகும் நபி அவர்களிடம் கேட்டேன். அவர்கள் கொடுத்தார்கள். பிறகு என்னிடம், ‘‘ஹகீமே! இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். எவர் இதை தாராள மனத்துடன் (பேராசையின்றி) எடுத்துக்கொள்கிறாரோ அவருக்கு இதில் அருள் வளம் (பரக்கத்) வழங்கப்படுகிறது. எவர் இதைப் பேராசை யுடன் எடுத்துக்கொள்கிறாரோ அவருக்கு இதில் அருள் வளம் வழங்கப்படுவதில்லை. அவர் உண்ட பின்பும் வயிறு நிரம்பாத வரைப் போன்றவர் ஆவார். மேல் கை தான், கீழ்க் கையை விடச் சிறந்ததாகும்” என்று கூறினார்கள்.12

நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! சத்திய (மார்க்க)த்துடன் தங்களை அனுப்பியவன் மீதாணையாக! தங்களுக்குப்பின் எவரிட மும் எதையும் நான் (இந்த) உலகை விட்டுப் பிரியும்வரை கேட்கமாட்டேன்” என்று கூறினேன்.

அறிவிப்பாளர் உர்வா பின் அஸ் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்களை அபூபக்ர் (ரலி) அவர்கள் அன்பளிப்புத் தருவதற்காக அழைத்தார்கள். அவர்களிட மிருந்து எதையும் ஏற்றுக்கொள்ள அவர் மறுத்துவிட்டார். பிறகு உமர் (ரலி) அவர்கள் அவருக்கு (அன்பளிப்புகள் சிலவற்றை)க் கொடுப்பதற்காக அழைத்தார்கள். அதையும் ஏற்க அவர் மறுத்துவிட்டார்.

ஆகவே, உமர் (ரலி) அவர்கள் (மக்களிடையே), ‘‘முஸ்லிம்களே! இந்த (ஃபய்உ எனும்) வெற்றிச் செல்வங்களிலிருந்து அல்லாஹ் ஒதுக்கிய அவரது உரிமையை அவருக்குப் பங்கிட்டுக் கொடுத்தேன். ஆனால், அதைப் பெற்றுக்கொள்ள அவர் மறுத்துவிட்டார்” என்று அறிவித்துவிட்டார்கள். நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு எந்த மனிதரிடமும், ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள், தாம் மரணிக்கும்வரை (எதுவும்) கேட்கவில்லை. அவர்மீது அல்லாஹ் கருணை புரிவானாக!13

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 55