234. حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنَا أَبُو التَّيَّاحِ، يَزِيدُ بْنُ حُمَيْدٍ عَنْ أَنَسٍ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي قَبْلَ أَنْ يُبْنَى الْمَسْجِدُ فِي مَرَابِضِ الْغَنَمِ.
பாடம் : 66 ஒட்டகம், ஆடு மற்றும் பிற கால்நடைகளின் சிறுநீரும் ஆட்டுத் தொழுவமும் அபூமூசா (ரலி) அவர்கள் (கூஃபாவில் உள்ள) ‘தாருல் பரீத்’ எனும் இடத்தில் தொழுதார்கள். சாணமும் காலியான இடமும் அவர்களுக்குப் பக்கத்தில் இருந்தன. தொழுது முடித்த பிறகு (சாணமிருந்த இடத்தையும் காலியான இடத்தையும் சுட்டிக்காட்டி) இந்த இடமும் அந்த இடமும் சமம்தான் (இரண்டும் சுத்தமான இடங்களே)” என்றார்கள்.
234. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மதீனாவில்) பள்ளிவாசல் கட்டப்படு வதற்கு முன்னால் நபி (ஸல்) அவர்கள் ஆட்டுத் தொழுவங்களில் தொழு வார்கள்.33

அத்தியாயம் : 4
235. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ مَيْمُونَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم سُئِلَ عَنْ فَأْرَةٍ سَقَطَتْ فِي سَمْنٍ فَقَالَ "" أَلْقُوهَا وَمَا حَوْلَهَا فَاطْرَحُوهُ. وَكُلُوا سَمْنَكُمْ "".
பாடம் : 67 நெய்யிலோ தண்ணீரிலோ அசுத்தமான பொருட்கள் விழுந்துவிட்டால்... (என்ன சட்டம்?) முஹம்மத் பின் முஸ்-ம் அஸ் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள், “(ஒரு அசுத்த மான பொருளின்) சுவையோ வாடையோ நிறமோ தண்ணீரை மாற்றிவிடாம-ருக்கும்வரை தண்ணீரில் குறையில்லை” என்று கூறியுள்ளார்கள். ஹம்மாத் பின் அபீசுலைமான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இறந்துபோன பறவைகளின் இறகுகள் (தண்ணீரில் விழுவதால்) குறையில்லை; (அதனால் தண்ணீர் அசுத்தமாகிவிடாது.) இறந்துவிட்ட யானை போன்ற மிருகங்களின் எலும்புகள் விஷயத்தில் அஸ் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள், “நான் மூத்த அறிஞர்கள் பலரைச் சந்தித்திருக்கின்றேன். அவர்கள் அவற்றின் எலும்பு களால் தலைவாரிக்கொள்வார்கள்; எண்ணெய் வைத்துக்கொள்வார்கள். அதைப் பயன்படுத்துவதைக் குற்றமென அவர்கள் கருதவில்லை” என்று தெரிவிக்கிறார்கள். முஹம்மத் பின் சீரீன், இப்ராஹீம் அந்நநகஈ (ரஹ்) ஆகியோர், “யானைத் தந்தத்தை வியாபாரம் செய்வது குற்ற மாகாது” எனக் கூறியுள்ளனர்.
235. மைமூனா (பின்த் ஹாரிஸ்-ர-) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நெய்யில் விழுந்துவிட்ட எ- குறித்து வினவப்பட்டது. அதற்கு “அந்த எ-யையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் (உடனே) எடுத்து எறிந்து விடுங்கள்; உங்கள் நெய்யைச் சாப்பிடுங் கள்” என்று அவர்கள் பதிலளித்தார்கள்.


அத்தியாயம் : 4
236. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا مَعْنٌ، قَالَ حَدَّثَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ مَيْمُونَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم سُئِلَ عَنْ فَأْرَةٍ سَقَطَتْ فِي سَمْنٍ فَقَالَ "" خُذُوهَا وَمَا حَوْلَهَا فَاطْرَحُوهُ "". قَالَ مَعْنٌ حَدَّثَنَا مَالِكٌ مَا لاَ أُحْصِيهِ يَقُولُ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنْ مَيْمُونَةَ.
பாடம் : 67 நெய்யிலோ தண்ணீரிலோ அசுத்தமான பொருட்கள் விழுந்துவிட்டால்... (என்ன சட்டம்?) முஹம்மத் பின் முஸ்-ம் அஸ் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள், “(ஒரு அசுத்த மான பொருளின்) சுவையோ வாடையோ நிறமோ தண்ணீரை மாற்றிவிடாம-ருக்கும்வரை தண்ணீரில் குறையில்லை” என்று கூறியுள்ளார்கள். ஹம்மாத் பின் அபீசுலைமான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இறந்துபோன பறவைகளின் இறகுகள் (தண்ணீரில் விழுவதால்) குறையில்லை; (அதனால் தண்ணீர் அசுத்தமாகிவிடாது.) இறந்துவிட்ட யானை போன்ற மிருகங்களின் எலும்புகள் விஷயத்தில் அஸ் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள், “நான் மூத்த அறிஞர்கள் பலரைச் சந்தித்திருக்கின்றேன். அவர்கள் அவற்றின் எலும்பு களால் தலைவாரிக்கொள்வார்கள்; எண்ணெய் வைத்துக்கொள்வார்கள். அதைப் பயன்படுத்துவதைக் குற்றமென அவர்கள் கருதவில்லை” என்று தெரிவிக்கிறார்கள். முஹம்மத் பின் சீரீன், இப்ராஹீம் அந்நநகஈ (ரஹ்) ஆகியோர், “யானைத் தந்தத்தை வியாபாரம் செய்வது குற்ற மாகாது” எனக் கூறியுள்ளனர்.
236. மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நெய்யில் விழுந்துவிட்ட எலியைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் வினவப் பட்டது. அதற்கு அவர்கள், “அந்த எ-யையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் எடுத்து (உடனே) எறிந்துவிடுங்கள் (மீதி நெய்யைச் சாப்பிடுங்கள்)” என்று பதிலளித் தார்கள்.

மஅன் (பின் ஈசா-ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இந்த ஹதீஸை மா-க் (ரஹ்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வழியாக மைமூனா (ரலி) அவர்களிடமிருந்து எண்ணற்ற முறை எமக்கு அறிவித்துள்ளார்கள்.


அத்தியாயம் : 4
237. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" كُلُّ كَلْمٍ يُكْلَمُهُ الْمُسْلِمُ فِي سَبِيلِ اللَّهِ يَكُونُ يَوْمَ الْقِيَامَةِ كَهَيْئَتِهَا إِذْ طُعِنَتْ، تَفَجَّرُ دَمًا، اللَّوْنُ لَوْنُ الدَّمِ، وَالْعَرْفُ عَرْفُ الْمِسْكِ "".
பாடம் : 67 நெய்யிலோ தண்ணீரிலோ அசுத்தமான பொருட்கள் விழுந்துவிட்டால்... (என்ன சட்டம்?) முஹம்மத் பின் முஸ்-ம் அஸ் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள், “(ஒரு அசுத்த மான பொருளின்) சுவையோ வாடையோ நிறமோ தண்ணீரை மாற்றிவிடாம-ருக்கும்வரை தண்ணீரில் குறையில்லை” என்று கூறியுள்ளார்கள். ஹம்மாத் பின் அபீசுலைமான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இறந்துபோன பறவைகளின் இறகுகள் (தண்ணீரில் விழுவதால்) குறையில்லை; (அதனால் தண்ணீர் அசுத்தமாகிவிடாது.) இறந்துவிட்ட யானை போன்ற மிருகங்களின் எலும்புகள் விஷயத்தில் அஸ் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள், “நான் மூத்த அறிஞர்கள் பலரைச் சந்தித்திருக்கின்றேன். அவர்கள் அவற்றின் எலும்பு களால் தலைவாரிக்கொள்வார்கள்; எண்ணெய் வைத்துக்கொள்வார்கள். அதைப் பயன்படுத்துவதைக் குற்றமென அவர்கள் கருதவில்லை” என்று தெரிவிக்கிறார்கள். முஹம்மத் பின் சீரீன், இப்ராஹீம் அந்நநகஈ (ரஹ்) ஆகியோர், “யானைத் தந்தத்தை வியாபாரம் செய்வது குற்ற மாகாது” எனக் கூறியுள்ளனர்.
237. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் பாதையில் ஒரு முஸ்-முக்கு ஏற்படுத்தப்பட்ட ஒவ்வொரு காயமும், தாக்கப்பட்டபோது இருந்த அதே கோலத்தைப் போன்றே மறுமை நாளில் இரத்தம் பீறிட்ட நிலையில் இருக்கும். அந்த நிறம் இரத்தத்தின் நிறத்தில் இருக்கும்; அதன் வாடையோ கஸ்தூரி வாடையாக இருக்கும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 4
238. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، قَالَ أَخْبَرَنَا أَبُو الزِّنَادِ، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ هُرْمُزَ الأَعْرَجَ، حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" نَحْنُ الآخِرُونَ السَّابِقُونَ "".
பாடம் : 68 தேங்கியிருக்கும் தண்ணீரில் சிறுநீர் கழித்தல்
238. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நாம் (காலத்தால்) பிந்தியவர்களாகவும் (மறுமையில் தகுதியால்) முந்தியவர் களாகவும் உள்ளோம்.


அத்தியாயம் : 4
239. وَبِإِسْنَادِهِ قَالَ "" لاَ يَبُولَنَّ أَحَدُكُمْ فِي الْمَاءِ الدَّائِمِ الَّذِي لاَ يَجْرِي، ثُمَّ يَغْتَسِلُ فِيهِ "".
பாடம் : 68 தேங்கியிருக்கும் தண்ணீரில் சிறுநீர் கழித்தல்
239. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓடாமல் தேங்கி நிற்கும் தண்ணீரில் உங்களில் யாரும் சிறுநீர் கழிக்கவும் வேண்டாம்; பின்னர் அதில் குளிக்கவும் வேண்டாம்.

மேற்கண்ட இரு ஹதீஸ்களையும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.

அத்தியாயம் : 4
240. حَدَّثَنَا عَبْدَانُ، قَالَ أَخْبَرَنِي أَبِي، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ بَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم سَاجِدٌ ح قَالَ وَحَدَّثَنِي أَحْمَدُ بْنُ عُثْمَانَ قَالَ حَدَّثَنَا شُرَيْحُ بْنُ مَسْلَمَةَ قَالَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يُوسُفَ عَنْ أَبِيهِ عَنْ أَبِي إِسْحَاقَ قَالَ حَدَّثَنِي عَمْرُو بْنُ مَيْمُونٍ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ حَدَّثَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي عِنْدَ الْبَيْتِ، وَأَبُو جَهْلٍ وَأَصْحَابٌ لَهُ جُلُوسٌ، إِذْ قَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ أَيُّكُمْ يَجِيءُ بِسَلَى جَزُورِ بَنِي فُلاَنٍ فَيَضَعُهُ عَلَى ظَهْرِ مُحَمَّدٍ إِذَا سَجَدَ فَانْبَعَثَ أَشْقَى الْقَوْمِ فَجَاءَ بِهِ، فَنَظَرَ حَتَّى إِذَا سَجَدَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَضَعَهُ عَلَى ظَهْرِهِ بَيْنَ كَتِفَيْهِ وَأَنَا أَنْظُرُ، لاَ أُغَيِّرُ شَيْئًا، لَوْ كَانَ لِي مَنْعَةٌ. قَالَ فَجَعَلُوا يَضْحَكُونَ وَيُحِيلُ بَعْضُهُمْ عَلَى بَعْضٍ، وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم سَاجِدٌ لاَ يَرْفَعُ رَأْسَهُ، حَتَّى جَاءَتْهُ فَاطِمَةُ، فَطَرَحَتْ عَنْ ظَهْرِهِ، فَرَفَعَ رَأْسَهُ ثُمَّ قَالَ "" اللَّهُمَّ عَلَيْكَ بِقُرَيْشٍ "". ثَلاَثَ مَرَّاتٍ، فَشَقَّ عَلَيْهِمْ إِذْ دَعَا عَلَيْهِمْ ـ قَالَ وَكَانُوا يُرَوْنَ أَنَّ الدَّعْوَةَ فِي ذَلِكَ الْبَلَدِ مُسْتَجَابَةٌ ـ ثُمَّ سَمَّى "" اللَّهُمَّ عَلَيْكَ بِأَبِي جَهْلٍ، وَعَلَيْكَ بِعُتْبَةَ بْنِ رَبِيعَةَ، وَشَيْبَةَ بْنِ رَبِيعَةَ، وَالْوَلِيدِ بْنِ عُتْبَةَ، وَأُمَيَّةَ بْنِ خَلَفٍ، وَعُقْبَةَ بْنِ أَبِي مُعَيْطٍ "". وَعَدَّ السَّابِعَ فَلَمْ يَحْفَظْهُ قَالَ فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَقَدْ رَأَيْتُ الَّذِينَ عَدَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم صَرْعَى فِي الْقَلِيبِ قَلِيبِ بَدْرٍ.
பாடம் : 69 தொழுதுகொண்டிருப்பவரின் முதுகில் அசுத்தமான பொருளோ செத்த பிராணிகளோ போடப்படுமானால் அதனால் அவரது தொழுகை வீணாகிவிடாது. இப்னு உமர் (ரலி) அவர்கள் தொழுது கொண்டிருக்கும்போது தமது ஆடையில் இரத்தம் இருப்பதைக் கண்டுவிட்டால், (தொழுகையில் இருந்தவாறே) அதைக் கழற்றி வைத்துவிட்டுத் தமது தொழுகை யைத் தொடர்வார்கள். “தமது ஆடையில் இரத்தமோ இந்திரியமோ இருக்க (அது தெரியாமல்) ஒருவர் தொழுதார். அல்லது ‘கிப்லா’ திசை அல்லாத வேறு திசையில் தொழுதார் (என்று பிறகு தெரியவந்தது). அல்லது ‘தயம்மும்’ செய்து தொழுது முடித்தார். பிறகு அதே நேரத்திற்குள் அவருக்குத் தண்ணீர் கிடைத்துவிட்டது. இந்நிலை களில் அவர் தொழுகையைத் திரும்பத் தொழ வேண்டியதில்லை” என சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்), ஷஅபீ (ரஹ்) ஆகியோர் கூறியுள்ளனர்.
240. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்

(ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் இறையில்லம் (கஅபா) அருகில் தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது அபூ ஜஹ்லும் அவனுடைய சகாக்களும் (அங்கே) அமர்ந்திருந்தனர். அவர்களில் சிலர் சிலரிடம், “இறைச்சிக்காக அறுக்கப் பட்ட இன்ன குடும்பத்தாரின் ஒட்டகக் கருவைச் சுற்றியுள்ள சவ்வைக் கொண்டு வந்து முஹம்மத் சிரவணக்கம் (சஜ்தா) செய்யும்போது அவரது முதுகின் மீது வைப்பவர் யார்?” என்று கேட்டனர்.

அக்கூட்டத்திலேயே படுபாதகனாயிருந்த ஒருவன் புறப்பட்டுச் சென்று, அதைக் கொண்டு வந்து, நபி (ஸல்) அவர்கள் சிரவணக்கம் (சஜ்தா) செய்யும் நேரம் பார்த்து அவர்களின் இரு தோள்களுக்கிடையில் முதுகின் மீது போட்டான். இதையெல்லாம் நான் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அப்போது எனக்கு (மட்டும்) உதவக் கூடியவர்கள் இருந்திருந்தால் (அதை நான் தடுத்திருப்பேன்.)

இந்நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டி ருந்த (அபூஜஹ்லும் சகாக்களும்) ஒருவர்மீது ஒருவர் விழுந்து சிரிக்கத் தொடங்கினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தலையை உயர்த்தாமல் சஜ்தாவிலேயே இருந்தார்கள். (நபி (ஸல்) அவர்களின் புதல்வி, சிறுமி) ஃபாத்திமா (ரலி) அவர்கள் வந்து, அவர்களின் முதுகி-ருந்து அவற்றைத் தூக்கி வீசும் வரையில் (அப்படியே இருந்தார்கள்).

பிறகு தமது தலையை உயர்த்தி, “இறைவா! குறைஷியரை நீ கவனித்துக் கொள்” என்று மூன்று முறை பிராத்தித் தார்கள். தங்களுக்கெதிராக நபி (ஸல்) அவர்கள் பிராத்தனை புரிந்தது குறைஷி யருக்கு மனவேதனை அளித்தது. (காரணம்,) அந்த (மக்கா) நகரில் செய்யப் படும் பிராத்தனை ஏற்கப்படும் என்று அவர்களும் நம்பிக்கை வைத்திருந்தனர்.

பிறகு நபி (ஸல்) அவர்கள் (அங்கிருந் தோரின்) பெயர்களைக் குறிப்பிட்டு, “இறைவா! அபூஜஹ்லை நீ கவனித்துக் கொள்வாயாக! உத்பா பின் ரபீஆ, ஷைபா பின் ரபீஆ, வலீத் பின் உத்பா, உமய்யா பின் கலஃப், உக்பா பின் அபீமுஐத் ஆகியோரைக் கவனித்துக்கொள்வாயாக!” என்று (அறுவரின் பெயர் குறிப்பிட்டு) பிரார்த்தனை செய்தார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவர் குறிப்பிடுகிறார்:

ஏழாவது நபரின் பெயரையும் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். ஆனால், அதை நாங்கள் மறந்துவிட்டோம்.

தொடர்ந்து அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட நபர்கள் (பத்ர் போரில்) கொல்லப்பட்டு ‘கலீபு பத்ர்’ எனும் அந்தப் பாழும் கிணற்றில் கிடந்ததை நான் பார்த்தேன்.

அத்தியாயம் : 4
241. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، قَالَ بَزَقَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي ثَوْبِهِ. طَوَّلَهُ ابْنُ أَبِي مَرْيَمَ قَالَ أَخْبَرَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ حَدَّثَنِي حُمَيْدٌ قَالَ سَمِعْتُ أَنَسًا عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 70 ஆடையில் எச்சில், மூக்குச் சளி போன்றவை படுதல் உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “ஹுதைபியா உடன்படிக்கை நடை பெற்ற காலகட்டத்தில் நபி (ஸல்) அவர்கள் (மக்காவை நோக்கிப்) புறப்பட்டார்கள்” என்று கூறிவிட்டு, பின்வரும் செய்தியை மிஸ்வர் (ரலி), மர்வான் பின் ஹகம் ஆகியோர் கூறினர்: நபி (ஸல்) அவர்கள் உமிழ்ந்தால் அதை (கீழே விழ விடாமல்) அவருடைய தோழர்களில் ஒருவர் தமது கையில் ஏந்திக்கொண்டார். அதை அவர் தம் முகத்திலும் மேனியிலும் தேய்த்துக் கொண்டார்.34
241. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தமது ஆடையில் உமிழ்ந்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் சயீத் பின் அபீமர்யம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் இந்த ஹதீஸ் நீளமாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம் : 4
242. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" كُلُّ شَرَابٍ أَسْكَرَ فَهُوَ حَرَامٌ "".
பாடம் : 71 பழச்சாறு, போதையூட்டும் பானம் ஆகியவற்றால் அங்கத் தூய்மை செய்வது கூடாது. இவற்றால் அங்கத் தூய்மை செய்வதை ஹசன் அல்பஸ்ரீ, அபுல்ஆ-யா (ரஹ்) ஆகியோர் வெறுக்கத் தக்க செயலாகக் கருதினர். அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள், “(தண்ணீர் கிடைக்காதபோது) பழச்சாறு, பால் ஆகியவற்றால் அங்கத் தூய்மை செய்வதைவிட, ‘தயம்மும்’ செய்வதே எனக்கு மிகவும் விருப்ப மானதாகும்” என்று கூறினார்கள்.
242. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

போதை தரும் (தன்மை உள்ள) எல்லாப் பானங்களும் தடை செய்யப் பட்டவை ஆகும்.

இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 4
243. حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ أَخْبَرَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَبِي حَازِمٍ، سَمِعَ سَهْلَ بْنَ سَعْدٍ السَّاعِدِيَّ،، وَسَأَلَهُ النَّاسُ، وَمَا بَيْنِي وَبَيْنَهُ أَحَدٌ بِأَىِّ شَىْءٍ دُووِيَ جُرْحُ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ مَا بَقِيَ أَحَدٌ أَعْلَمُ بِهِ مِنِّي، كَانَ عَلِيٌّ يَجِيءُ بِتُرْسِهِ فِيهِ مَاءٌ، وَفَاطِمَةُ تَغْسِلُ عَنْ وَجْهِهِ الدَّمَ، فَأُخِذَ حَصِيرٌ فَأُحْرِقَ فَحُشِيَ بِهِ جُرْحُهُ.
பாடம் : 72 ஒரு பெண் தன் தந்தையின் முகத்திருந்து இரத்தத்தைக் கழுவுதல் அபுல்ஆ-யா (அர்ரியாஹீ-ரஹ்) அவர்கள், “எனது (ஒரு) கால்மீது (ஈரக் கையால்) தொட்டுத் தடவி (மஸ்ஹு செய்து)விடுங்கள். ஏனெனில், அதில் சுகவீனம் ஏற்பட்டுள்ளது” என்று கூறினார்கள்.
243. அபூஹாஸிம் (சலமா பின் தீனார்-ரஹ்) அவர்கள் கூறியதாவது:

சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்களிடம், “(உஹுதுப் போரில்) நபி (ஸல்) அவர்களின் காயத்திற்கு எது மருந்தாக இடப்பட்டது?” என்று மக்கள் கேட்டார்கள்.

அப்போது எனக்கும் (அறிவிப்பாளர் அபுல்ஆலியா) சஹ்ல் (ரலி) அவர்களுக்கும் இடையில் வேறு யாரும் இருக்கவில்லை (அந்த அளவுக்கு நெருக்கமாக நாங்கள் இருவரும் இருந்தோம்.)- அதற்கு சஹ்ல் (ரலி) அவர்கள், “இதைப் பற்றி என்னைவிட அறிந்தவர்கள் தற்போது யாரும் இல்லை. அலீ (ரலி) அவர்கள் தமது கேடயத்தில் தண்ணீர் கொண்டுவர, ஃபாத்திமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் முகத்தி-ருந்து இரத்தத்தைக் கழுவிக்கெண்டிருந்தார்கள். (கட்டுக் கடங்காமல் இரத்தம் வழியவே ஒரு ஈச்சம்) பாய் எடுத்துக் கரிக்கப்பட்டது. (பிறகு கரிக்கப்பட்ட) பாயி(ன் சாம்ப-)னை நபியவர்களின் காயத்தில் வைத்து அழுத்தப்பட்டது” என்று பதிலளித்தார்கள்.

அத்தியாயம் : 4
244. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ غَيْلاَنَ بْنِ جَرِيرٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَوَجَدْتُهُ يَسْتَنُّ بِسِوَاكٍ بِيَدِهِ يَقُولُ "" أُعْ أُعْ ""، وَالسِّوَاكُ فِي فِيهِ، كَأَنَّهُ يَتَهَوَّعُ.
பாடம் : 73 பல் துலக்கல்35 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நான் (என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களின் இல்லத்தில்) நபி (ஸல்) அவர்களுடன் ஓர் இரவு தங்கினேன். (அந்த இரவில்) நபி (ஸல்) அவர்கள் பல் துலக்கினார்கள்.
244. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றபோது, அவர்கள் தமது கையி-ருந்த ஒரு குச்சியால் பல் துலக்கிக்கொண்டிருப்பதைக் கண்டேன்.

அப்போது அவர்கள் தமது வாயில் குச்சியை வைத்து வாந்தி எடுப்பதைப் போன்று ‘ஊவ் ஊவ்’ என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.


அத்தியாயம் : 4
245. حَدَّثَنَا عُثْمَانُ، قَالَ حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا قَامَ مِنَ اللَّيْلِ يَشُوصُ فَاهُ بِالسِّوَاكِ.
பாடம் : 73 பல் துலக்கல்35 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நான் (என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களின் இல்லத்தில்) நபி (ஸல்) அவர்களுடன் ஓர் இரவு தங்கினேன். (அந்த இரவில்) நபி (ஸல்) அவர்கள் பல் துலக்கினார்கள்.
245. ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் இரவில் (உறங்கி) எழுந்ததும் பல் துலக்கு(ம் குச்சியால் தமது வாயைக் கழுவி சுத்தம் செய்)வார்கள்.

அத்தியாயம் : 4
246. وَقَالَ عَفَّانُ حَدَّثَنَا صَخْرُ بْنُ جُوَيْرِيَةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" أَرَانِي أَتَسَوَّكُ بِسِوَاكٍ، فَجَاءَنِي رَجُلاَنِ أَحَدُهُمَا أَكْبَرُ مِنَ الآخَرِ، فَنَاوَلْتُ السِّوَاكَ الأَصْغَرَ مِنْهُمَا، فَقِيلَ لِي كَبِّرْ. فَدَفَعْتُهُ إِلَى الأَكْبَرِ مِنْهُمَا "". قَالَ أَبُو عَبْدِ اللَّهِ اخْتَصَرَهُ نُعَيْمٌ عَنِ ابْنِ الْمُبَارَكِ عَنْ أُسَامَةَ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ.
பாடம் : 74 வயதில் மூத்தவரிடம் பல் துலக் கும் குச்சியைக் கொடுப்பது
246. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் ஒரு குச்சியால் பல் துலக்கிக் கொண்டிருப்பதைப் போன்று (கனவு) கண்டேன். அப்போது என்னிடம் இரு மனிதர்கள் வந்தனர். அவ்விருவரில் ஒருவர் மற்றவரைவிட (வயதில்) பெரிய வராயிருந்தார். நான் அவ்விருவரில் வயதில் சிறியவரிடம் அந்தப் பல் துலக்கும் குச்சியைக் கொடுத்தேன். அப்போது “வயதில் மூத்தவரிடம் முதலில் கொடுப்பீ ராக” என்று எனக்குச் சொல்லப்பட்டது. உடனே அவ்விருவரில் வயதில் பெரிய வரிடம் அதைக் கொடுத்து விட்டேன்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அபூஅப்தில்லாஹ் (புகாரீயாகிய நான்) கூறுகிறேன்:

மற்றோர் அறிவிப்பில், நுஐம் (பின் ஹம்மாத்-ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸின் மூல உரையை இப்னு உமர் (ரலி) அவர்கள் வாயிலாகச் சுருக்கமாக அறிவித்துள்ளார்கள்.

அத்தியாயம் : 4
247. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِذَا أَتَيْتَ مَضْجَعَكَ فَتَوَضَّأْ وُضُوءَكَ لِلصَّلاَةِ، ثُمَّ اضْطَجِعْ عَلَى شِقِّكَ الأَيْمَنِ، ثُمَّ قُلِ اللَّهُمَّ أَسْلَمْتُ وَجْهِي إِلَيْكَ، وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ، وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ، رَغْبَةً وَرَهْبَةً إِلَيْكَ، لاَ مَلْجَأَ وَلاَ مَنْجَا مِنْكَ إِلاَّ إِلَيْكَ، اللَّهُمَّ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ، وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ. فَإِنْ مُتَّ مِنْ لَيْلَتِكَ فَأَنْتَ عَلَى الْفِطْرَةِ، وَاجْعَلْهُنَّ آخِرَ مَا تَتَكَلَّمُ بِهِ "". قَالَ فَرَدَّدْتُهَا عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمَّا بَلَغْتُ "" اللَّهُمَّ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ "". قُلْتُ وَرَسُولِكَ. قَالَ "" لاَ، وَنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ "".
பாடம் : 75 அங்கத் தூய்மையுடன் நித்திரை செய்பவர் அடையும் சிறப்பு
247. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என்னிடம்) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீர் உமது படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்காக அங்கத் தூய்மை செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்துகொள்வீராக. பிறகு உமது வலப்பக்கமாக சாய்ந்து படுத்துக் கொள்வீராக.

பிறகு பின்வருமாறு கூறுவீராக: அல்லாஹும்ம! அஸ்லம்(த்)து வஜ்ஹீ இலை(க்)க; வ ஃபவ்வள்(த்)து அம்ரீ இலை(க்)க; வ அல்ஜஃ(த்)து ழஹ்ரீ இலை(க்)க ரஃக்ப(த்)தன் வ ரஹ்ப(த்)தன் இலை(க்)க; லா மல்ஜஅ வலா மன்ஜா மின்(க்)க இல்லா இலை(க்)க. அல்லா ஹும்ம ஆமன்(த்)து பி கிதாபி(க்)கல்லதீ அன்ஸல்(த்)த; வ பி நபிய்ய(க்)கல்லதீ அர்சல்(த்)த.

இறைவா! உன்னிடம் நான் என்னை ஒப்படைத்தேன். எனது காரியத்தை உன்னிடமே ஒப்படைத்தேன். என் விவகாரங்கள் அனைத்திலும் உன்னையே சார்ந்திருக்கிறேன். உன்மீதுள்ள ஆவ-லும் அச்சத்திலும்தான் (இவற்றை நான் செய்தேன்). உன்னிடமிருந்து தப்பிக்கவும் ஒதுங்கிடவும் உன்னைத் தவிர வேறு போக்கிடமில்லை. நீ அருளிய உனது வேதத்தையும் நீ அனுப்பிவைத்த உன் தூதரையும் நான் நம்பினேன்”.

(இவ்வாறு பிரார்த்தனை செய்துவிட்டு உறங்கி) அந்த இரவில் நீர் இறந்துவிட்டால் நீர் (இஸ்லாம் எனும்) இயற்கை மரபில் இறந்தவராவீர். இந்தப் பிராத்தனையை உமது (இரவின்) இறுதிப் பேச்சாக ஆக்கிக்கொள்வீராக!

இந்த நபிமொழியின் அறிவிப்பாளரான பராஉ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் நபி (ஸல்) அவர்களிடம் இந்தப் பிரார்த்தனையைத் திரும்பச் சொல்லிக் காட்டினேன். “இறைவா! நீ அருளிய உனது வேதத்தையும் நீ அனுப்பிவைத்த தூதரையும் நான் நம்பினேன்” என்று கூறியபோது, (தூதர் என்பதைக் குறிக்க) ‘வ ரசூலிக்க’ என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “இல்லை ‘வ நபிய்யிக்க’ என்றே குறிப்பிடுவீராக” என்றார்கள்.

அத்தியாயம் : 4

248. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا اغْتَسَلَ مِنَ الْجَنَابَةِ بَدَأَ فَغَسَلَ يَدَيْهِ، ثُمَّ يَتَوَضَّأُ كَمَا يَتَوَضَّأُ لِلصَّلاَةِ، ثُمَّ يُدْخِلُ أَصَابِعَهُ فِي الْمَاءِ، فَيُخَلِّلُ بِهَا أُصُولَ شَعَرِهِ ثُمَّ يَصُبُّ عَلَى رَأْسِهِ ثَلاَثَ غُرَفٍ بِيَدَيْهِ، ثُمَّ يُفِيضُ الْمَاءَ عَلَى جِلْدِهِ كُلِّهِ.
பாடம் : 1 குளிப்பதற்குமுன் அங்கத் தூய்மை (உளூ) செய்தல்2
248. நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற் காக குளிக்க முற்பட்டால், முத-ல் தம் (முன்) கைகள் இரண்டையும் கழுவுவார் கள். பிறகு தொழுகைக்காக அங்கத் தூய்மை (உளூ) செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்வார்கள். பிறகு தம் விரல்களைத் தண்ணீருக்குள் நுழைத்து, அவற்றால், தமது (தலையின்) ரோமக்கால் (பகுதி)களைக் கோதிவிடுவார்கள்.

பிறகு தமது தலையின் மீது மூன்று முறை கைகளால் தண்ணீரை அள்ளி ஊற்றுவார்கள். பிறகு தமது மேனி முழுவதிலும் தண்ணீரை ஊற்றுவார்கள்.


அத்தியாயம் : 5
249. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ مَيْمُونَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ تَوَضَّأَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وُضُوءَهُ لِلصَّلاَةِ غَيْرَ رِجْلَيْهِ، وَغَسَلَ فَرْجَهُ، وَمَا أَصَابَهُ مِنَ الأَذَى، ثُمَّ أَفَاضَ عَلَيْهِ الْمَاءَ، ثُمَّ نَحَّى رِجْلَيْهِ فَغَسَلَهُمَا، هَذِهِ غُسْلُهُ مِنَ الْجَنَابَةِ.
பாடம் : 1 குளிப்பதற்குமுன் அங்கத் தூய்மை (உளூ) செய்தல்2
249. நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (பெருந்துடக்கிற் காகக் குளிக்கும்போது) தம்மிரு கால்களை விட்டுவிட்டு (ஏனைய உறுப்புகளுக்கு) தொழுகைக்காக அங்கத் தூய்மை செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்வார்கள். மேலும், தமது மர்ம உறுப்பையும் உட-ல் பட்ட அசிங்கத்தையும் கழுவுவார்கள்.

பிறகு தம் (உடல்)மீது தண்ணீர் ஊற்றுவார்கள். பிறகு சற்று நகர்ந்து நின்று, தம் கால்களைக் கழுவுவார்கள். இதுவே பெருந்துடக்கிற்காக நபி (ஸல்) அவர்கள் குளிக்கும் முறையாகும்.

அத்தியாயம் : 5
250. حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَالنَّبِيُّ، صلى الله عليه وسلم مِنْ إِنَاءٍ وَاحِدٍ مِنْ قَدَحٍ يُقَالُ لَهُ الْفَرَقُ.
பாடம் : 2 ஒருவர் தம் மனைவியுடன் குளிப்பது
250. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நானும் நபி (ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்தி-ருந்து குளித்தோம். அந்தப் பாத்திரத்திற்கு ‘ஃபரக்‘ என்று கூறப்படும்.3

அத்தியாயம் : 5
251. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنِي عَبْدُ الصَّمَدِ، قَالَ حَدَّثَنِي شُعْبَةُ، قَالَ حَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ حَفْصٍ، قَالَ سَمِعْتُ أَبَا سَلَمَةَ، يَقُولُ دَخَلْتُ أَنَا وَأَخُو، عَائِشَةَ عَلَى عَائِشَةَ فَسَأَلَهَا أَخُوهَا عَنْ غُسْلِ النَّبِيِّ، صلى الله عليه وسلم فَدَعَتْ بِإِنَاءٍ نَحْوًا مِنْ صَاعٍ، فَاغْتَسَلَتْ وَأَفَاضَتْ عَلَى رَأْسِهَا، وَبَيْنَنَا وَبَيْنَهَا حِجَابٌ. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ قَالَ يَزِيدُ بْنُ هَارُونَ وَبَهْزٌ وَالْجُدِّيُّ عَنْ شُعْبَةَ قَدْرِ صَاعٍ.
பாடம் : 3 ஒரு ‘ஸாஉ’ அல்லது அதைப் போன்ற அளவுள்ள தண்ணீ ரில் குளிப்பது4
251. அபூசலமா (பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப்-ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நானும் ஆயிஷா (ரலி) அவர்களின் ஒரு சகோதரரும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் (அவர்களின் இல்லத்திற் குச்) சென்றோம், அப்போது அவர்களுடைய சகோதரர் நபி (ஸல்) அவர்களின் குளியல் பற்றி (‘அவர்கள் எப்படிக் குளிப்பார்கள்?’ என்று) கேட்டார்.

உடனே ஆயிஷா (ரலி) அவர்கள் ‘ஸாஉ’ போன்ற ஒரு பாத்திரம் (தண்ணீர்) கொண்டுவரச் சொல்-க் குளித்துக்காட்டினார்கள். தமது தலைமீது தண்ணீரை ஊற்றினார்கள். (அது மட்டும் தெரிந்தது) அப்போது அவர்களுக்கும் எங்களுக்கும் இடையில் ஒரு திரை இருந்தது.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்:

ஷுஅபா (பின் ஹஜ்ஜாஜ்-ரஹ்) அவர் களின் ஓர் அறிவிப்பில் (‘ஸாஉ போன்ற’ என்பதற்குப் பதிலாக) ‘ஸாஉ அளவு’ என இடம்பெற்றுள்ளது


அத்தியாயம் : 5
252. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، قَالَ حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ، أَنَّهُ كَانَ عِنْدَ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ هُوَ وَأَبُوهُ، وَعِنْدَهُ قَوْمٌ فَسَأَلُوهُ عَنِ الْغُسْلِ،. فَقَالَ يَكْفِيكَ صَاعٌ. فَقَالَ رَجُلٌ مَا يَكْفِينِي. فَقَالَ جَابِرٌ كَانَ يَكْفِي مَنْ هُوَ أَوْفَى مِنْكَ شَعَرًا، وَخَيْرٌ مِنْكَ، ثُمَّ أَمَّنَا فِي ثَوْبٍ.
பாடம் : 3 ஒரு ‘ஸாஉ’ அல்லது அதைப் போன்ற அளவுள்ள தண்ணீ ரில் குளிப்பது4
252. அபூஜஅஃபர் (முஹம்மத் பின் அலீ அல்பாக்கிர்-ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அருகில் நானும் என் தந்தை (அலீ பின் ஹுசைன்) அவர்களும் வேறுசிலரும் இருந்தோம். அப்போது ஜாபிர் (ரலி) அவர்களிடம் குளியல் பற்றிக் கேட்டோம். “ஒரு ‘ஸாஉ’ தண்ணீர் போதும்” என்று ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அப்போது ஒருவர், “அந்தத் தண்ணீர் எனக்குப் போதாது” என்றார். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், “உன்னைவிட அதிக முடியுள்ளவரும் உன்னைவிடச் சிறந்தவரு (மான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களு)க்கு அந்த அளவுத் தண்ணீர் போதுமானதாக இருந்தது” எனக் கூறினார்கள். பிறகு ஒரே ஆடை அணிந்தவர்களாக எங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவித்தார்கள்.


அத்தியாயம் : 5
253. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرٍو، عَنْ جَابِرِ بْنِ زَيْدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم وَمَيْمُونَةَ كَانَا يَغْتَسِلاَنِ مِنْ إِنَاءٍ وَاحِدٍ. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ كَانَ ابْنُ عُيَيْنَةَ يَقُولُ أَخِيرًا عَنِ ابْنِ عَبَّاسٍ عَنْ مَيْمُونَةَ، وَالصَّحِيحُ مَا رَوَى أَبُو نُعَيْمٍ.
பாடம் : 3 ஒரு ‘ஸாஉ’ அல்லது அதைப் போன்ற அளவுள்ள தண்ணீ ரில் குளிப்பது4
253. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களும் (அவர்களின் துணைவியாரும் என் சிறிய தாயாருமாôன) மைமூனா (ரலி) அவர்களும் சேர்ந்து ஒரே பாத்திரத்தி-ருந்து குளிப்பது வழக்கம்.

ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘ஸாஉ அளவு(ள்ள பாத்திரத்தி-ருந்து)’ என இடம்பெற்றுள்ளது.

அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்:

சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் தமது இறுதிக் காலத்தில், மைமூனா (ரலி) அவர்களிடமிருந்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கேட்டு அறிவித்ததாகக் கூறுவது வழக்கம். (அவர்கள் குளிக்கும்போது அவர்களைத் தாம் பார்த்ததாக அறிவிக்கவில்லை.) ஆயினும், (என் ஆசிரியர்) அபூநுஐம் (ரஹ்) அவர்களின் (மேற்கண்ட) அறிவிப்பே சரியானதாகும்.

அத்தியாயம் : 5