2219. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدٍ، عَنْ أَبِيهِ، قَالَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ ـ رضى الله عنه ـ لِصُهَيْبٍ اتَّقِ اللَّهَ وَلاَ تَدَّعِ إِلَى غَيْرِ أَبِيكَ. فَقَالَ صُهَيْبٌ مَا يَسُرُّنِي أَنَّ لِي كَذَا وَكَذَا، وَأَنِّي قُلْتُ ذَلِكَ، وَلَكِنِّي سُرِقْتُ وَأَنَا صَبِيٌّ.
பாடம்: 100 பகைவர் கூட்டத்தைச் சேர்ந்த வரிடம் அடிமையை விலைக்கு வாங்குவதும் அன்பளிப்புச் செய்வ தும் அந்த அடிமையை விடுதலை செய்வதும் நபி (ஸல்) அவர்கள் சல்மான் அல்ஃபார்ஸீ (ரலி) அவர்களிடம், ‘‘உம்முடைய உரிமையாளரிடம், (பணம் கொடுத்து விடுதலை பெற்றுக்கொள்வதாக) விடுதலை பத்திரம் எழுதிக்கொடுப்பீராக!” எனக் கூறினார்கள். சல்மான் (ரலி) அவர்கள் முன்னர் சுதந்திரமானவராக இருந்தார்கள். அவர்களை அநியாயமாகப் பிடித்து விற்றுவிட்டனர். அம்மார் (ரலி), ஸுஹைப் (ரலி), பிலால் (ரலி) ஆகியோரும் சிறைபிடிக்கப்பட்டு அடிமையானவர்களே. உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: ‘‘அல்லாஹ் உங்களில் சிலரை, வேறுசிலரைவிடச் செல்வத்தில் மேம்படுத்தி இருக்கிறான்; இவ்வாறு மேம்படுத்தப்பட்ட வர்கள், தங்களின் செல்வத்தை, தமது அதிகாரத்தில் இருப்பவர்க(ளான அடிமை க)ளிடம் கொடுத்து, அவர்களையும் அ(ச்செல்வத்)தில் தங்களுக்குச்) சமமான வர்களாக ஆக்கிவிடுவதில்லை. (அவ்வாறி ருக்க) அல்லாஹ்வின் அருட்கொடை யையா இவர்கள் மறுக்கின்றனர்? (16:71)
2219. இப்ராஹீம் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் ஸுஹைப் (ரலி) அவர்களிடம், ‘‘நீர் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்வீராக! உம் தந்தையல்லாத ஒருவரைத் தந்தை எனச் சொல்லாதீர்” எனக் கூறினார்கள். அதற்கு ஸுஹைப் (ரலி) அவர்கள், ‘‘என் தந்தையல்லாத ஒருவரைத் தந்தை என்று நான் சொல்வதற் காக எவ்வளவு பொருட்களைக் கொடுத் தாலும் அதை நான் ஒப்பமாட்டேன்; என்றாலும், நான் சிறுவனாக இருந்தபோது திருடப்பட்டுவிட்டேன்” என்றார்கள்.82


அத்தியாயம் : 34
2220. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ حَكِيمَ بْنَ حِزَامٍ، أَخْبَرَهُ أَنَّهُ، قَالَ يَا رَسُولَ اللَّهِ، أَرَأَيْتَ أُمُورًا كُنْتُ أَتَحَنَّثُ ـ أَوْ أَتَحَنَّتُ بِهَا ـ فِي الْجَاهِلِيَّةِ مِنْ صِلَةٍ وَعَتَاقَةٍ وَصَدَقَةٍ، هَلْ لِي فِيهَا أَجْرٌ قَالَ حَكِيمٌ ـ رضى الله عنه ـ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَسْلَمْتَ عَلَى مَا سَلَفَ لَكَ مِنْ خَيْرٍ "".
பாடம்: 100 பகைவர் கூட்டத்தைச் சேர்ந்த வரிடம் அடிமையை விலைக்கு வாங்குவதும் அன்பளிப்புச் செய்வ தும் அந்த அடிமையை விடுதலை செய்வதும் நபி (ஸல்) அவர்கள் சல்மான் அல்ஃபார்ஸீ (ரலி) அவர்களிடம், ‘‘உம்முடைய உரிமையாளரிடம், (பணம் கொடுத்து விடுதலை பெற்றுக்கொள்வதாக) விடுதலை பத்திரம் எழுதிக்கொடுப்பீராக!” எனக் கூறினார்கள். சல்மான் (ரலி) அவர்கள் முன்னர் சுதந்திரமானவராக இருந்தார்கள். அவர்களை அநியாயமாகப் பிடித்து விற்றுவிட்டனர். அம்மார் (ரலி), ஸுஹைப் (ரலி), பிலால் (ரலி) ஆகியோரும் சிறைபிடிக்கப்பட்டு அடிமையானவர்களே. உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: ‘‘அல்லாஹ் உங்களில் சிலரை, வேறுசிலரைவிடச் செல்வத்தில் மேம்படுத்தி இருக்கிறான்; இவ்வாறு மேம்படுத்தப்பட்ட வர்கள், தங்களின் செல்வத்தை, தமது அதிகாரத்தில் இருப்பவர்க(ளான அடிமை க)ளிடம் கொடுத்து, அவர்களையும் அ(ச்செல்வத்)தில் தங்களுக்குச்) சமமான வர்களாக ஆக்கிவிடுவதில்லை. (அவ்வாறி ருக்க) அல்லாஹ்வின் அருட்கொடை யையா இவர்கள் மறுக்கின்றனர்? (16:71)
2220. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் அறியாமைக் காலத்தில் உறவைப் பேணுதல், அடிமைகளை விடுதலை செய்தல், தானதர்மம் செய்தல் ஆகிய நல்லறங்களைச் செய்துவந்தேன்; இவற்றுக்கு (மறுமையில்) எனக்கு நற்பலன் உண்டா?” எனக் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நீர் முன்னர் செய்த நற்செயல்(களுக்கான பலன்)களுடன்தான் இஸ்லாத்தை ஏற்றுள்ளீர்” என்றார்கள்.83

அத்தியாயம் : 34
2221. حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، قَالَ حَدَّثَنِي ابْنُ شِهَابٍ، أَنَّ عُبَيْدَ اللَّهِ بْنَ عَبْدِ اللَّهِ، أَخْبَرَهُ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مَرَّ بِشَاةٍ مَيِّتَةٍ فَقَالَ "" هَلاَّ اسْتَمْتَعْتُمْ بِإِهَابِهَا "". قَالُوا إِنَّهَا مَيِّتَةٌ. قَالَ "" إِنَّمَا حَرُمَ أَكْلُهَا "".
பாடம் : 101 செத்த பிராணியின் பதனிடப்படாத தோல்கள்
2221. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரு செத்த ஆட்டைக் கடந்து சென்ற போது, ‘‘இதன் தோலை நீங்கள் பயன்படுத் தக் கூடாதா?” என்று கேட்டார்கள். மக்கள், ‘‘இது செத்த ஆடாயிற்றே!” என்ற னர். அதற்கு ‘‘அதை உண்பதுதான் தடை செய்யப்பட்டுள்ளது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.84

அத்தியாயம் : 34
2222. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنِ ابْنِ الْمُسَيَّبِ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَيُوشِكَنَّ أَنْ يَنْزِلَ فِيكُمُ ابْنُ مَرْيَمَ حَكَمًا مُقْسِطًا فَيَكْسِرَ الصَّلِيبَ، وَيَقْتُلَ الْخِنْزِيرَ، وَيَضَعَ الْجِزْيَةَ، وَيَفِيضَ الْمَالُ حَتَّى لاَ يَقْبَلَهُ أَحَدٌ "".
பாடம் : 102 பன்றிகளைக் கொல்வது நபி (ஸல்) அவர்கள் பன்றி வியாபாரத் தைத் தடை செய்தார்கள்.
2222. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன்மீது சத்தியமாக! (உலக அழிவுக்குமுன்) மர்யமின் மைந்தர் (ஈசாலிஅலை) உங்களிடையே நேர்மையாகத் தீர்ப்பளிக்கும் நீதிபதியாக இறங்கவிருக்கி றார். அவர் சிலுவையை உடைப்பார். பன்றியைக் கொல்வார். காப்பு (ஜிஸ்யா) வரியை வாங்க மறுப்பார். (இஸ்லாம் ஒன்றையே ஏற்பார். அந்நாளில்) வாங்கு வதற்கு ஆளில்லாத அளவுக்குச் செல்வம் கொழிக்கும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 34
2223. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، قَالَ أَخْبَرَنِي طَاوُسٌ، أَنَّهُ سَمِعَ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ يَقُولُ بَلَغَ عُمَرَ أَنَّ فُلاَنًا بَاعَ خَمْرًا فَقَالَ قَاتَلَ اللَّهُ فُلاَنًا، أَلَمْ يَعْلَمْ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" قَاتَلَ اللَّهُ الْيَهُودَ، حُرِّمَتْ عَلَيْهِمُ الشُّحُومُ فَجَمَلُوهَا فَبَاعُوهَا "".
பாடம் : 103 செத்த பிராணியின் கொழுப்பை உருக்கி அதன் திரவத்தை விற்க லாகாது. இது பற்றி நபி (ஸல்) அவர்களிட மிருந்து ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவித் துள்ளார்கள்.
2223. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் மதுவை விற்றதாக உமர் (ரலி) அவர்களுக்குத் தகவல் கிடைத்தது. அப்போது, ‘‘அவரை அல்லாஹ் தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக (சபிப்பானாக)! யூதர்களுக்குக் கொழுப்பு தடை செய்யப்பட்டிருந்தது. (ஆனால்,) அவர்கள் அதை உருக்கி விற்றனர். எனவே, அவர்களை அல்லாஹ் சபிப்பானாக என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை அவர் அறியவில்லையா?” எனக் கேட்டார்கள்.


அத்தியாயம் : 34
2224. حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، سَمِعْتُ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" قَاتَلَ اللَّهُ يَهُودًا حُرِّمَتْ عَلَيْهِمُ الشُّحُومُ فَبَاعُوهَا، وَأَكَلُوا أَثْمَانَهَا "". قَالَ أَبُو عَبْد اللَّهِ قَاتَلَهُمْ اللَّهُ لَعَنَهُمْ قُتِلَ لُعِنَ الْخَرَّاصُونَ الْكَذَّابُونَ
பாடம் : 103 செத்த பிராணியின் கொழுப்பை உருக்கி அதன் திரவத்தை விற்க லாகாது. இது பற்றி நபி (ஸல்) அவர்களிட மிருந்து ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவித் துள்ளார்கள்.
2224. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யூதர்களை அல்லாஹ் தனது கருணை ‘லிருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்களுக்குக் கொழுப்பு தடை செய்யப் பட்டிருந்தது. (ஆனால்,) அவர்கள் அதை விற்று அதன் கிரயத்தை உண்டனர்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்:

(கருணையிலிருந்து அப்புறப்படுத்து வானாக! அல்லது சபிப்பானாக என்பதைக் குறிக்க மூலத்தில்) யிகா(த்)தல’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. (இதற்கு யிகொல்வானாக!› என்பதே சொற்பொருளாகும்.) இங்கு அதற்கு யிசபிப்பானாக!› என்பதே பொரு ளாகும். குர்ஆனில், ‘‘பொய்யர்கள் சபிக்கப் படுவார்கள்” (51:10) என்பதைக் குறிக்க யிகு(த்)தில’ எனும் சொல்லே மூலத்தில் ஆளப்பட்டுள்ளது.

அத்தியாயம் : 34
2225. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، أَخْبَرَنَا عَوْفٌ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي الْحَسَنِ، قَالَ كُنْتُ عِنْدَ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ إِذْ أَتَاهُ رَجُلٌ فَقَالَ يَا أَبَا عَبَّاسٍ إِنِّي إِنْسَانٌ، إِنَّمَا مَعِيشَتِي مِنْ صَنْعَةِ يَدِي، وَإِنِّي أَصْنَعُ هَذِهِ التَّصَاوِيرَ. فَقَالَ ابْنُ عَبَّاسٍ لاَ أُحَدِّثُكَ إِلاَّ مَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ سَمِعْتُهُ يَقُولُ "" مَنْ صَوَّرَ صُورَةً فَإِنَّ اللَّهَ مُعَذِّبُهُ، حَتَّى يَنْفُخَ فِيهَا الرُّوحَ، وَلَيْسَ بِنَافِخٍ فِيهَا أَبَدًا "". فَرَبَا الرَّجُلُ رَبْوَةً شَدِيدَةً وَاصْفَرَّ وَجْهُهُ. فَقَالَ وَيْحَكَ إِنْ أَبَيْتَ إِلاَّ أَنْ تَصْنَعَ، فَعَلَيْكَ بِهَذَا الشَّجَرِ، كُلِّ شَىْءٍ لَيْسَ فِيهِ رُوحٌ. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ سَمِعَ سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ مِنَ النَّضْرِ بْنِ أَنَسٍ هَذَا الْوَاحِدَ.
பாடம் : 104 உயிரில்லாதவற்றின் உருவங்களை விற்பதும் அதில் வெறுக்கத் தக்கதும்85
2225. சயீத் பின் அபில்ஹசன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடன் இருந்தபோது ஒரு மனிதர் வந்து, ‘‘இப்னு அப்பாஸ் அவர்களே! நான் கைத்தொழில் செய்து வாழ்க்கை நடத்தும் ஒரு மனிதன். நான் இந்த உருவங்களை (வரைந்து) தயாரிக்கிறேன்” எனக் கூறினார்.

அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் செவியுற்றதையே உமக்கு அறிவிக்கிறேன். ‘‘யார் ஓர் உருவத்தை வரைகிறாரோ அவர் அந்த உருவத்தினுள் உயிரை ஊதும்வரை, அல்லாஹ் அவரை வேதனை செய்வான்; அவரால் ஒருகாலும் அதில் உயிரை ஊத முடியாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றுள்ளேன்” என் றார்கள்.

கேட்டவர் அதிர்ச்சியுடன் பெருமூச்சு விட்டார். அவரது முகம் (பயத்தால்) மஞ்சள் நிறமாக மாறியது. அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘உமக் குக் கேடுதான்! நீர் வரைந்துதான் தீர வேண்டும் என்றால், மரம் போன்ற உயிரற் றவைகளை வரைவீராக!” என்றார்கள்.

அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்:

இந்த ஒரு ஹதீஸை, நள்ர் பின் அனஸ் (ரஹ்) அவர்களிடமிருந்து சயீத் பின் அபீஅரூபா (ரஹ்) அவர்கள் செவியுற்றுள்ளார்கள்.

அத்தியாயம் : 34
2226. حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ لَمَّا نَزَلَتْ آيَاتُ سُورَةِ الْبَقَرَةِ عَنْ آخِرِهَا خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ "" حُرِّمَتِ التِّجَارَةُ فِي الْخَمْرِ "".
பாடம் : 105 மதுபான வியாபாரம் தடை செய்யப் பட்டதாகும் மதுபான வியாபாரத்தை (மது விற்பதையும் வாங்குவதையும்) நபி (ஸல்) அவர்கள் தடை செய்ததாக ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
2226. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘அல்பகரா’ அத்தியாயத்தின் (வட்டியைத் தடை செய்யும் வசனத்திலிருந்து) இறுதி வசனம்வரையிலான வசனங்கள் (2:275லி281) இறங்கியபோது நபி (ஸல்) அவர்கள் (மக்களிடம்) வந்து, ‘‘மதுபான வணிகம் தடை செய்யப்பட்டுவிட்டது” என்றார்கள்.86

அத்தியாயம் : 34
2227. حَدَّثَنِي بِشْرُ بْنُ مَرْحُومٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أُمَيَّةَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" قَالَ اللَّهُ ثَلاَثَةٌ أَنَا خَصْمُهُمْ يَوْمَ الْقِيَامَةِ، رَجُلٌ أَعْطَى بِي ثُمَّ غَدَرَ، وَرَجُلٌ بَاعَ حُرًّا فَأَكَلَ ثَمَنَهُ، وَرَجُلٌ اسْتَأْجَرَ أَجِيرًا فَاسْتَوْفَى مِنْهُ، وَلَمْ يُعْطِ أَجْرَهُ "".
பாடம் : 106 சுதந்திரமானவரைப் பிடித்து விற்பது குற்றமாகும்.
2227. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘‘மறுமை நாளில் மூவருக்கெதிராக நான் வழக்குரைப்பேன்” என்று அல்லாஹ் கூறுகின்றான். ஒருவன், என் பெயரால் சத்தியம் செய்துவிட்டு, மோசடி செய்தவன்; இன்னொருவன், சுதந்திரமான ஒருவரை விற்று அந்தக் கிரயத்தை உண்டவன்; மூன்றாமவன், ஒரு கூலியாளிடம் நன்றாக வேலை வாங்கிக்கொண்டு அவனது கூலியைக் கொடுக்காமல் இருந்தவன்.87

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 34
2228. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ فِي السَّبْىِ صَفِيَّةُ، فَصَارَتْ إِلَى دَحْيَةَ الْكَلْبِيِّ، ثُمَّ صَارَتْ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 107 யூதர்களை (மதீனாவிலிருந்து) வெளியேற்றியபோது அவர்களின் நிலங்களை விற்றுவிடுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டது இது பற்றி அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ள ஹதீஸ் ஒன்று வந்துள்ளது.88 பாடம் : 108 அடிமைக்குப் பதிலாக அடிமை யையும் பிராணிக்குப் பதிலாக பிராணியையும் தவணைமுறையில் விற்பது89 இப்னு உமர் (ரலி) அவர்கள், நான்கு (சாதாரண) ஒட்டகங்களுக்குப் பதிலாக ஓர் ஊர்தி ஒட்டகத்தை வாங்கினார்கள். விற்பவர் தமது பொறுப்பில், அந்த ஊர்தி ஒட்டகத்தை (மக்காலிமதீனா இடையே உள்ள) ‘அர்ரபதா’ எனும் இடத்தில் கொண்டுவந்து (தம்மிடம்) ஒப்படைக்க வேண்டும் என நிபந்தனை விதித் தார்கள். ‘‘சில நேரங்களில் ஓர் ஓட்டகம் இரண்டு ஒட்டகங்களைவிடச் சிறந்ததாக இருக்கலாம்” என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் இரண்டு ஒட்டகங்களுக்குப் பகரமாக ஓர் ஒட்டகத்தை வாங்கினார்கள். அப்போது, ஓர் ஒட்டகத்தை மட்டும் கொடுத்துவிட்டு, ‘‘மற்றொன்றை அல்லாஹ் நாடினால் தாமதமின்றி நாளை உம்மிடம் தருகிறேன்” என்று கூறினார்கள். ‘‘இரண்டு ஒட்டகத்திற்கு ஓர் ஒட்டகம், இரண்டு ஆட்டிற்கு ஓர் ஆடு என்று தவணையில் வாங்கினாலும் உயிரினத்தில் வட்டி என்பதில்லை” என்று சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள். ‘‘இரண்டு ஒட்டகத்திற்கு ஓர் ஒட்டகத் தைக் கடனாக வாங்குவதும் ஒரு திர்ஹத்துக்கு ஒரு திர்ஹத்தைக் கடனாக வாங்குவதும் தவறில்லை” என்று இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
2228. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(கைபர் போரில் பிடிக்கப்பட்ட) கைதிகளில் ஸஃபிய்யா (ரலி) அவர்களும் ஒருவராவார். அவர்கள் (முதலில்) திஹ்யா அல்கல்பீ (ரலி) அவர்களுக்கு (போர்ச் செல்வத்தில் ஒரு பங்காகக்) கிடைத்தார்கள். பின்பு (வேறு அடிமைப் பெண்ணைக் கொடுத்துவிட்டு நபி (ஸல்) அவர்கள் எடுத்துக்கொள்ளவே) ஸஃபிய்யா நபி (ஸல்) அவர்களுக்கு வந்துசேர்ந்தார்கள்.

அத்தியாயம் : 34
2229. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي ابْنُ مُحَيْرِيزٍ، أَنَّ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ـ رضى الله عنه ـ أَخْبَرَهُ أَنَّهُ، بَيْنَمَا هُوَ جَالِسٌ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّا نُصِيبُ سَبْيًا، فَنُحِبُّ الأَثْمَانَ، فَكَيْفَ تَرَى فِي الْعَزْلِ فَقَالَ "" أَوَإِنَّكُمْ تَفْعَلُونَ ذَلِكَ لاَ عَلَيْكُمْ أَنْ لاَ تَفْعَلُوا ذَلِكُمْ، فَإِنَّهَا لَيْسَتْ نَسَمَةٌ كَتَبَ اللَّهُ أَنْ تَخْرُجَ إِلاَّ هِيَ خَارِجَةٌ "".
பாடம் : 109 அடிமைகளை விற்பது
2229. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தேன். (அப்போது அன்சாரிகளில் ஒருவர் வந்து) ‘‘அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர்; அவர்களை நல்ல விலைக்கு விற்க நாங்கள் விரும்புவதால், (அவர்களுடன் உடலுறவு கொள்ளும்போது) நாங்கள் புணர்ச்சி இடைமுறிப்பு (அஸ்ல்) செய்துகொள்வது பற்றி என்ன கருதுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். ‘‘அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? அவ்வாறு நீங்கள் (அஸ்ல்) செய்யாமலிப்பதால் உங்கள்மீது (குற்றம்) இல்லை. ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் எழுதிவிட்ட எந்த உயிரும் உருவாகாமல் இருப்பதில்லை” என்று கூறினார்கள்.90

அத்தியாயம் : 34
2230. حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرٍ ـ رضى الله عنه ـ قَالَ بَاعَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْمُدَبَّرَ.
பாடம் : 110 பின்தேதியிட்டு விடுதலை அளிக் கப்பட்ட அடிமையை (முதப்பர்) விற்பது91
2230. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பின்தேதியிட்டு விடுதலை அளிக் கப்பட்ட (முதப்பரான) அடிமையை (அவருடைய உரிமையாளரின் கடனை அடைப்பதற்காக) நபி (ஸல்) அவர்கள் விற்பனை செய்(துகொடுத்)தார்கள்.


அத்தியாயம் : 34
2231. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ يَقُولُ بَاعَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம் : 110 பின்தேதியிட்டு விடுதலை அளிக் கப்பட்ட அடிமையை (முதப்பர்) விற்பது91
2231. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(பின்தேதியிட்டு விடுதலை அளிக்கப்பட்ட அடிமையான) முதப்பரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விற்றார்கள்.


அத்தியாயம் : 34
2232. حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا يَعْقُوبُ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، قَالَ حَدَّثَ ابْنُ شِهَابٍ، أَنَّ عُبَيْدَ اللَّهِ، أَخْبَرَهُ أَنَّ زَيْدَ بْنَ خَالِدٍ وَأَبَا هُرَيْرَةَ رضى الله عنهما أَخْبَرَاهُ أَنَّهُمَا، سَمِعَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يُسْأَلُ عَنِ الأَمَةِ تَزْنِي وَلَمْ تُحْصَنْ قَالَ " اجْلِدُوهَا، ثُمَّ إِنْ زَنَتْ فَاجْلِدُوهَا، ثُمَّ بِيعُوهَا بَعْدَ الثَّالِثَةِ أَوِ الرَّابِعَةِ ".
பாடம் : 110 பின்தேதியிட்டு விடுதலை அளிக் கப்பட்ட அடிமையை (முதப்பர்) விற்பது91
2232. 2233 ஸைத் பின் காலித் (ரலி), அபூஹுரைரா (ரலி) ஆகியோர் கூறியதாவது:

விபசாரம் செய்கின்ற, திருமணமாகாத அடிமைப் பெண்ணைப் பற்றி அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப் பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அவளுக்குச் சாட்டையடி கொடுங்கள்! மீண்டும் அவள் விபசாரம் செய்தால் மீண்டும் அவளுக்குச் சாட்டை யடி கொடுங்கள்! மூன்றாவது தடவை, அல்லது நான்காவது தடவையும் அவள் விபசாரம் செய்தால் அதன் பிறகு அவளை விற்றுவிடுங்கள்” என்று பதிலளித்தார்கள்.92


அத்தியாயம் : 34
2234. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ أَخْبَرَنِي اللَّيْثُ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" إِذَا زَنَتْ أَمَةُ أَحَدِكُمْ، فَتَبَيَّنَ زِنَاهَا فَلْيَجْلِدْهَا الْحَدَّ، وَلاَ يُثَرِّبْ عَلَيْهَا، ثُمَّ إِنْ زَنَتْ فَلْيَجْلِدْهَا الْحَدَّ وَلاَ يُثَرِّبْ، ثُمَّ إِنْ زَنَتِ الثَّالِثَةَ فَتَبَيَّنَ زِنَاهَا فَلْيَبِعْهَا وَلَوْ بِحَبْلٍ مِنْ شَعَرٍ "".
பாடம் : 110 பின்தேதியிட்டு விடுதலை அளிக் கப்பட்ட அடிமையை (முதப்பர்) விற்பது91
2234. நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்:

‘‘உங்களில் ஒருவரின் அடிமைப் பெண் விபசாரம் செய்து, அது வெளிப் பட்டுவிட்டால், அவளுக்கு (ஐம்பது) சாட்டையடியைத் தண்டனையாக அவர் வழங்கட்டும்! (அதற்குமேல்) அவளிடம் கண்டிப்புக் காட்ட வேண்டாம். மீண்டும் அவள் விபசாரம் செய்தால் தண்டனையாக அவளுக்கு அவர் சாட்டையடி வழங்கட்டும்! (அதற்குமேல்) அவளிடம் கண்டிப்புக் காட்ட வேண்டாம். பிறகு மூன்றாம் முறை அவள் விபசாரம் செய்து, அது வெளிப்பட்டுவிட்டால், முடியாலான ஒரு கயிற்றுக்காவது அவளை அவர் விற்றுவிடட்டும்!”

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 34
2235. حَدَّثَنَا عَبْدُ الْغَفَّارِ بْنُ دَاوُدَ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم خَيْبَرَ، فَلَمَّا فَتَحَ اللَّهُ عَلَيْهِ الْحِصْنَ ذُكِرَ لَهُ جَمَالُ صَفِيَّةَ بِنْتِ حُيَىِّ بْنِ أَخْطَبَ، وَقَدْ قُتِلَ زَوْجُهَا، وَكَانَتْ عَرُوسًا، فَاصْطَفَاهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِنَفْسِهِ فَخَرَجَ بِهَا، حَتَّى بَلَغْنَا سَدَّ الرَّوْحَاءِ حَلَّتْ، فَبَنَى بِهَا، ثُمَّ صَنَعَ حَيْسًا فِي نِطَعٍ صَغِيرٍ، ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" آذِنْ مَنْ حَوْلَكَ "". فَكَانَتْ تِلْكَ وَلِيمَةَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى صَفِيَّةَ، ثُمَّ خَرَجْنَا إِلَى الْمَدِينَةِ، قَالَ فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يُحَوِّي لَهَا وَرَاءَهُ بِعَبَاءَةٍ، ثُمَّ يَجْلِسُ عِنْدَ بَعِيرِهِ فَيَضَعُ رُكْبَتَهُ، فَتَضَعُ صَفِيَّةُ رِجْلَهَا عَلَى رُكْبَتِهِ، حَتَّى تَرْكَبَ.
பாடம் : 111 ஓர் அடிமைப் பெண்ணின் கருப்பை யைச் சோதிப்பதற்குமுன் அவளு டன் பயணம் செய்யலாமா?93 ‘‘அவளைக் கட்டியணைப்பதும் முத்த மிடுவதும் தவறில்லை” என ஹசன் அல் பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ‘‘பிறரால் உடலுறவு கொள்ளப்பட்ட அடிமைப் பெண் அன்பளிப்பாகக் கிடைத் தாலோ, அல்லது விற்கப்பட்டாலோ, அல்லது விடுதலை செய்யப்பட்டாலோ (புதிய உரிமையாளர் அல்லது மணமுடிப் பவர்) அவளது கருப்பை(யில் கரு இல்லையென்ப)தனை ஒரு மாதவிடாய் மூலம் பரிசோதித்துக்கொள்ளட்டும்! கன்னிப் பெண் இவ்வாறு சோதிக்கப்பட மாட்டாள்” என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஒருவர் (பிறரால்) கர்ப்பமான தமது அடிமைப் பெண்ணை, உடலுறவைத் தவிர மற்ற முறையில் பயன்படுத்திக்கொள்ளலாம். உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: அவர்கள் (இறைநம்பிக்கையாளர்கள் எத்தகையவர்கள் எனில்), தங்கள் மனைவி யரிடமோ தங்களுக்குச் சொந்தமான அடிமைப் பெண்களிடமோ தவிர (வேறு வழிகளில் செல்வதிலிருந்து) தமது கற்பைக் காத்துக்கொள்வர். (23:56)
2235. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கைபருக்கு(ப் படையெடுத்து) வந்தார்கள். (கமூஸ்) கோட்டையை அவர்களுக்கு அல்லாஹ் வெற்றியாக்கிக்கொடுத்தான். அப்போது (சிறைக் கைதியாகப் பிடிக்கப்பட்ட) ஸஃபிய்யா பின்த் ஹுயை என்பவரின் அழகு பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கூறப்பட்டது. அவரோ புது மணப் பெண்ணாக இருந்தார். அவருடைய கணவரோ கொல்லப்பட்டுவிட்டார். அவரை நபி (ஸல்) அவர்கள் (போர்ச் செல்வத்தில்) தமது பங்காகப் பெற்று (மணந்து)கொண்டார்கள். அவரை நபி (ஸல்) அவர்கள் தம்முடன் அழைத்துக் கொண்டு புறப்பட்டார்கள். யிசத்துர் ரவ்ஹா’ எனுமிடத்தை நாங்கள் அடைந்தபோது அவர் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்தார்.

நபி (ஸல்) அவர்கள் அவருடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். பிறகு (பேரீச்சம் பழம், நெய், பாலாடைக் கட்டி ஆகியவற்றைக் கலந்து) யிஹைஸ்’ எனப்படும் ஓர் உணவைத் தயாரித்து சிறிய தோல்விரிப்பில் வைத்தார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), ‘‘உம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு அறிவிப்புச் செய்வீராக!” என்றார்கள். ஸஃபிய்யா (ரலி) அவர்களை மணந்ததற்காக நபி (ஸல்) அவர்கள் வழங்கிய மணவிருந்தாக அது அமைந்தது.

பிறகு நாங்கள் மதீனாவை நோக்கிப் புறப்பட்டோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின்மேல் தமக்குப் பின்னால் ஒரு போர்வை (போன்ற அங்கி)யால் ஸஃபிய்யா (ரலி) அவர்களுக்காகத் திரை அமைத்ததைப் பார்த்தேன். பிறகு ஒட்டகத்தின் அருகில் அமர்ந்து, தமது முழங்காலை (கீழே) வைத்தார்கள். ஸஃபிய்யா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் முழங்கால்மீது தமது காலை வைத்து ஒட்டகத்தில் ஏறினார்கள்.

அத்தியாயம் : 34
2236. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ عَامَ الْفَتْحِ، وَهُوَ بِمَكَّةَ "" إِنَّ اللَّهَ وَرَسُولَهُ حَرَّمَ بَيْعَ الْخَمْرِ وَالْمَيْتَةِ وَالْخِنْزِيرِ وَالأَصْنَامِ "". فَقِيلَ يَا رَسُولَ اللَّهِ، أَرَأَيْتَ شُحُومَ الْمَيْتَةِ فَإِنَّهَا يُطْلَى بِهَا السُّفُنُ، وَيُدْهَنُ بِهَا الْجُلُودُ، وَيَسْتَصْبِحُ بِهَا النَّاسُ. فَقَالَ "" لاَ، هُوَ حَرَامٌ "". ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عِنْدَ ذَلِكَ "" قَاتَلَ اللَّهُ الْيَهُودَ، إِنَّ اللَّهَ لَمَّا حَرَّمَ شُحُومَهَا جَمَلُوهُ ثُمَّ بَاعُوهُ فَأَكَلُوا ثَمَنَهُ "". قَالَ أَبُو عَاصِمٍ حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ، حَدَّثَنَا يَزِيدُ، كَتَبَ إِلَىَّ عَطَاءٌ سَمِعْتُ جَابِرًا ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 112 செத்தவற்றையும் உருவச் சிலை களையும் விற்பது
2236. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி ஆண்டில், ‘‘நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளனர்” என்று கூறினார்கள்.

அப்போது அவர்களிடம், ‘‘அல்லாஹ் வின் தூதரே! செத்தவற்றின் கொழுப்புகள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன; தோல் களுக்கு அவற்றின் மூலம் மெருகேற்றப் படுகிறது; மக்கள் விளக்கெரிக்க அவற் றைப் பயன்படுத்துகின்றனர்; ஆகவே, அதைப் பற்றிக் கூறுங்கள்” எனக் கேட்கப் பட்டது.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘கூடாது; அது தடை செய்யப் பட்டதுதான்” எனக் கூறினார்கள். அப்போது தொடர்ந்து, ‘‘யூதர்களை அல்லாஹ் தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அல்லாஹ் யூதர்களுக்குக் கொழுப்பைத் தடை செய்தபோது, அவர்கள் அதை உருக்கி விற்று, அதன் கிரயத்தை உண்டனர்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 34
2237. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي مَسْعُودٍ الأَنْصَارِيِّ ـ رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ ثَمَنِ الْكَلْبِ وَمَهْرِ الْبَغِيِّ وَحُلْوَانِ الْكَاهِنِ.
பாடம் : 113 நாய் விற்ற காசு
2237. அபூமஸ்ஊத் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாய் விற்ற காசையும் விபசாரியின் வருமானத்தையும் சோதிடரின் தட்சணை யையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.


அத்தியாயம் : 34
2238. حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي عَوْنُ بْنُ أَبِي جُحَيْفَةَ، قَالَ رَأَيْتُ أَبِي اشْتَرَى حَجَّامًا، فَسَأَلْتُهُ عَنْ ذَلِكَ،. قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ ثَمَنِ الدَّمِ، وَثَمَنِ الْكَلْبِ، وَكَسْبِ الأَمَةِ، وَلَعَنَ الْوَاشِمَةَ وَالْمُسْتَوْشِمَةَ، وَآكِلَ الرِّبَا، وَمُوكِلَهُ، وَلَعَنَ الْمُصَوِّرَ.
பாடம் : 113 நாய் விற்ற காசு
2238. அவன் பின் அபீஜுஹைஃபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என் தந்தை (அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள்) குருதி உறிஞ்சி எடுப்பதைத் தொழிலாகக் கொண்ட ஓர் அடிமையை விலைக்கு வாங்கினார்கள். அப்போது அவரது தொழிற் கருவிகளை உடைக்கும் படி உத்தரவிட்டார்கள்; அவ்வாறே அவை உடைக்கப்பட்டன.

அதுபற்றி நான் அவர்களிடம் கேட்ட போது, ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இரத்தத்தின் கிரயம் (குருதி உறிஞ்சி எடுப்பதற்காகப் பெறுகின்ற கூலி), நாய் விற்ற கிரயம், அடிமைப் பெண்ணின் (தவறான) சம்பாத்தியம் ஆகியவற்றைத் தடை செய்தார்கள்; பச்சை குத்திக் கொள்பவளையும், பச்சை குத்திவிடுபவளையும், வட்டி வாங்குபவனையும், வட்டி கொடுப்பவனையும், (உயிரினங்களின்) உருவம் வரைபவனையும் அவர்கள் சபித்தார்கள்!’ என்று பதிலளித்தார்கள்.94

அத்தியாயம் : 34