217. حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنِي رَوْحُ بْنُ الْقَاسِمِ، قَالَ حَدَّثَنِي عَطَاءُ بْنُ أَبِي مَيْمُونَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا تَبَرَّزَ لِحَاجَتِهِ أَتَيْتُهُ بِمَاءٍ فَيَغْسِلُ بِهِ.
பாடம் : 56 சிறுநீர் கழித்தபின் கழுவுவது தொடர்பாக வந்துள்ளவை அந்த மண்ணறையிலிருந்தவர் குறித்து நபி (ஸல்) அவர்கள், “தமது சிறுநீரிலிருந்து அவர் (தம் உடலையும் உடையையும்) மறை(த்துக் கா)க்காமலிருந்தார்” என்றே கூறினார்கள். மனிதர்களின் சிறுநீரைத் தவிர வேறெந்த (உயிரினங்களின்) சிறுநீர் குறித்தும் அவர்கள் குறிப்பிடவில்லை.
217. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தமது இயற்கைக் கடனை நிறைவேற்றிக்கொள்ள (புறநகரி லிருக்கும்) திறந்தவெளிகளுக்குச் செல்வார் களானால், அவர்களுக்கு நான் தண்ணீர் கொண்டுசெல்வேன். அதன் மூலம் அவர்கள் கழுவுவார்கள்.

அத்தியாயம் : 4
218. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَازِمٍ، قَالَ حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ مُجَاهِدٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ مَرَّ النَّبِيُّ صلى الله عليه وسلم بِقَبْرَيْنِ فَقَالَ "" إِنَّهُمَا لَيُعَذَّبَانِ، وَمَا يُعَذَّبَانِ فِي كَبِيرٍ أَمَّا أَحَدُهُمَا فَكَانَ لاَ يَسْتَتِرُ مِنَ الْبَوْلِ، وَأَمَّا الآخَرُ فَكَانَ يَمْشِي بِالنَّمِيمَةِ "". ثُمَّ أَخَذَ جَرِيدَةً رَطْبَةً، فَشَقَّهَا نِصْفَيْنِ، فَغَرَزَ فِي كُلِّ قَبْرٍ وَاحِدَةً. قَالُوا يَا رَسُولَ اللَّهِ، لِمَ فَعَلْتَ هَذَا قَالَ "" لَعَلَّهُ يُخَفَّفُ عَنْهُمَا مَا لَمْ يَيْبَسَا "". قَالَ ابْنُ الْمُثَنَّى وَحَدَّثَنَا وَكِيعٌ قَالَ حَدَّثَنَا الأَعْمَشُ قَالَ سَمِعْتُ مُجَاهِدًا مِثْلَهُ "" يَسْتَتِرُ مِنْ بَوْلِهِ "".
பாடம்:
218. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் இரு மண்ணறை களைக் கடந்து சென்றார்கள். அப்போது “இவர்கள் இருவரும் வேதனை செய்யப் படுகிறார்கள். ஒரு பெரும் (பாவச்) செயலுக்காக இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை; இவ்விரு வரில் ஒருவரோ, சிறுநீரிலிருந்து (தம் உடலையும் உடையையும்) மறை(த்துக் கா)க்காமலிருந்தார்; மற்றவரோ, கோள் சொல்லித் திரிந்துகொண்டிருந்தார்” என்று கூறினார்கள்.

பிறகு ஒரு பச்சை பேரீச்ச மட்டையை எடுத்து, அதை இரண்டாகப் பிளந்து, ஒவ்வொரு மண்ணறையின் மீதும் ஒன்றை ஊன்றினார்கள். (அது பற்றி) மக்கள், “ஏன் இவ்வாறு செய்தீர்கள், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். “இவ்விரு மட்டைகளும் காயாத வரை இவ்விருவரின் வேதனை குறைக்கப்படலாம்” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், அஃமஷ் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை முஜாஹித் (ரஹ்) அவர்களிட மிருந்து நேரடியாகச் செவியுற்றதாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம் : 4
219. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا هَمَّامٌ، أَخْبَرَنَا إِسْحَاقُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَأَى أَعْرَابِيًّا يَبُولُ فِي الْمَسْجِدِ فَقَالَ "" دَعُوهُ "". حَتَّى إِذَا فَرَغَ دَعَا بِمَاءٍ فَصَبَّهُ عَلَيْهِ.
பாடம் : 57 பள்ளிவாசலுக்குள் சிறுநீர் கழித்த கிராமவாசியை, அவர் சிறுநீர் கழித்து முடிக்கும்வரை நபி (ஸல்) அவர்களும் மக்களும் விட்டுவிட்டது
219. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு கிராமவாசி (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்குள் சிறுநீர் கழிப்பதை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். (அவரை மக்கள் கண்டித்தபோது) நபி (ஸல்) அவர்கள், “அவரை விட்டுவிடுங்கள்” என்று சொல்லிவிட்டு, அவர் (சிறுநீர் கழித்து) முடித்தபின் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி அதன் மீது ஊற்றினார்கள்.30

அத்தியாயம் : 4
220. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ قَامَ أَعْرَابِيٌّ فَبَالَ فِي الْمَسْجِدِ فَتَنَاوَلَهُ النَّاسُ، فَقَالَ لَهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم "" دَعُوهُ وَهَرِيقُوا عَلَى بَوْلِهِ سَجْلاً مِنْ مَاءٍ، أَوْ ذَنُوبًا مِنْ مَاءٍ، فَإِنَّمَا بُعِثْتُمْ مُيَسِّرِينَ، وَلَمْ تُبْعَثُوا مُعَسِّرِينَ "".
பாடம் : 58 பள்ளிவாசலுக்குள் (கழிக்கப்பட்ட) சிறுநீர்மீது தண்ணீர் ஊற்றுதல்
220. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு கிராமவாசி எழுந்து பள்ளிவாச லுக்குள் சிறுநீர் கழித்துவிட்டார். உடனே மக்கள் அவரைக் கண்டித்தனர்.

நபி (ஸல்) அவர்கள். “அவரை விட்டு விடுங்கள்; அவர் கழித்த சிறுநீர்மீது ஒரு வாளித் தண்ணீரை ஊற்றிவிடுங்கள். நளினமாக நடந்துகொள்ளவே நீங்கள் அனுப்பப்பட்டுள்ளீர்கள்; கடினமாக நடந்துகொள்ள நீங்கள் அனுப்பப்பட வில்லை” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 4
221. حَدَّثَنَا خَالِدٌ، قَالَ حَدَّثَنَا سُلَيْمَانُ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، قَالَ جَاءَ أَعْرَابِيٌّ فَبَالَ فِي طَائِفَةِ الْمَسْجِدِ، فَزَجَرَهُ النَّاسُ، فَنَهَاهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم، فَلَمَّا قَضَى بَوْلَهُ أَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِذَنُوبٍ مِنْ مَاءٍ، فَأُهْرِيقَ عَلَيْهِ.
பாடம் : 58 பள்ளிவாசலுக்குள் (கழிக்கப்பட்ட) சிறுநீர்மீது தண்ணீர் ஊற்றுதல்
221. மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்தள்ளது.

அத்தியாயம் : 4
222. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ، أَنَّهَا قَالَتْ أُتِيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِصَبِيٍّ، فَبَالَ عَلَى ثَوْبِهِ، فَدَعَا بِمَاءٍ فَأَتْبَعَهُ إِيَّاهُ.
பாடம் சிறுநீர் (பட்ட இடத்தின்) மீது தண்ணீரை ஊற்றுவது - அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு கிராமவாசி வந்து பள்ளிவாசலின் ஓர் ஓரத்தில் சிறுநீர் கழித்துவிட்டார். அப்போது அவரை மக்கள் கண்டித்தனர். (இதைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள், மக்களைத் தடுத்துவிட்டார்கள். அவர் சிறுநீர் கழித்து முடித்த பின்னர், ஒரு வாளியில் தண்ணீர் கொண்டுவரச் சொல்லிக் கட்டளையிட்டார்கள். அது சிறுநீர்மீது ஊற்றப்பட்டது. பாடம் : 59 சிறுவர்களின் சிறுநீர்31
222. இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு ஆண் குழந்தை கொண்டு வரப்பட்டது. அக்குழந்தை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையில் சிறுநீர் கழித்துவிட்டது. அப்போது (சிறிது) தண்ணீர் கொண்டுவரச் சொல்லி. அதை சிறுநீர் பட்ட இடத்தில் ஊற்றினார்கள்.


அத்தியாயம் : 4
223. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ أُمِّ قَيْسٍ بِنْتِ مِحْصَنٍ، أَنَّهَا أَتَتْ بِابْنٍ لَهَا صَغِيرٍ، لَمْ يَأْكُلِ الطَّعَامَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، فَأَجْلَسَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي حِجْرِهِ، فَبَالَ عَلَى ثَوْبِهِ، فَدَعَا بِمَاءٍ فَنَضَحَهُ وَلَمْ يَغْسِلْهُ.
பாடம் சிறுநீர் (பட்ட இடத்தின்) மீது தண்ணீரை ஊற்றுவது - அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு கிராமவாசி வந்து பள்ளிவாசலின் ஓர் ஓரத்தில் சிறுநீர் கழித்துவிட்டார். அப்போது அவரை மக்கள் கண்டித்தனர். (இதைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள், மக்களைத் தடுத்துவிட்டார்கள். அவர் சிறுநீர் கழித்து முடித்த பின்னர், ஒரு வாளியில் தண்ணீர் கொண்டுவரச் சொல்லிக் கட்டளையிட்டார்கள். அது சிறுநீர்மீது ஊற்றப்பட்டது. பாடம் : 59 சிறுவர்களின் சிறுநீர்31
223. உம்மு கைஸ் பின்த் மிஹ்ஸன் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (பாலைத் தவிர வேறு) உணவு உண்ணாத என் சிறிய ஆண் குழந் தையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அக்குழந்தையைத் தமது மடியில் உட்கார வைத்தார்கள்.

அப்போது அக்குழந்தை அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையில் சிறுநீர் கழித்துவிட்டது. அப்போது தண்ணீர் கொண்டு வரச்சொல்லி (சிறுநீர் பட்ட இடத்தில்) அதைத் தெளித்தார்கள். (அதிகமாகத் தண்ணீர் ஊற்றி) அதைக் கழுவவில்லை.

அத்தியாயம் : 4
224. حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ، قَالَ أَتَى النَّبِيُّ صلى الله عليه وسلم سُبَاطَةَ قَوْمٍ فَبَالَ قَائِمًا، ثُمَّ دَعَا بِمَاءٍ، فَجِئْتُهُ بِمَاءٍ فَتَوَضَّأَ.
பாடம் : 60 நின்றுகொண்டும் அமர்ந்துகொண்டும் சிறுநீர் கழித்தல்32
224. ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரு சமூகத்தாரின் குப்பைக் குழிக்கு வந்து (அங்கு) நின்றுகொண்டு சிறுநீர் கழித்தார்கள். பிறகு தண்ணீர் கொண்டுவரச் சொன்னார்கள். நான் அவர்களுக்குத் தண்ணீர் கொண்டு வந்தேன். அதில் நபி (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை செய்தார்கள்.

அத்தியாயம் : 4
225. حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ، قَالَ رَأَيْتُنِي أَنَا وَالنَّبِيُّ، صلى الله عليه وسلم نَتَمَاشَى، فَأَتَى سُبَاطَةَ قَوْمٍ خَلْفَ حَائِطٍ، فَقَامَ كَمَا يَقُومُ أَحَدُكُمْ فَبَالَ، فَانْتَبَذْتُ مِنْهُ، فَأَشَارَ إِلَىَّ فَجِئْتُهُ، فَقُمْتُ عِنْدَ عَقِبِهِ حَتَّى فَرَغَ.
பாடம் : 61 மற்றவர் அருகில் சிறுநீர் கழிப்ப தும் சுவரால் மறைத்துக்கொள் வதும்
225. ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நானும் நபி (ஸல்) அவர்களும் நடந்து சென்றுகொண்டிருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஒரு சுவருக்குப் பின்னா லிருந்த ஒரு கூட்டத்தாரின் குப்பைக் குழிக்கு வந்து. (சாதாரணமாக) உங்களில் ஒருவர் நிற்பதைப் போன்று நின்று சிறுநீர் கழித்தார்கள். உடனே நான் அவர்களை விட்டு சற்று ஒதுங்கிச் சென்றேன்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னை(த் தம்மிடம் வருமாறு) சைகை செய்தார்கள். நான் அவர்களிடம் வந்து அவர்கள் தமது தேவையை நிறைவேற்றும் வரை அவர்களுக்குப் பின்பக்கம் (ஒரு மறைப்பாக) நின்றுகொண்டிருந்தேன்.

அத்தியாயம் : 4
226. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَرْعَرَةَ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، قَالَ كَانَ أَبُو مُوسَى الأَشْعَرِيُّ يُشَدِّدُ فِي الْبَوْلِ وَيَقُولُ إِنَّ بَنِي إِسْرَائِيلَ كَانَ إِذَا أَصَابَ ثَوْبَ أَحَدِهِمْ قَرَضَهُ. فَقَالَ حُذَيْفَةُ لَيْتَهُ أَمْسَكَ، أَتَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم سُبَاطَةَ قَوْمٍ فَبَالَ قَائِمًا.
பாடம் : 62 ஒரு சமூகத்தாரின் குப்பைக் குழியில் சிறுநீர் கழித்தல்
226. அபூவாயில் (ஷகீக் பின் சலமா-ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் சிறுநீர் (துளிகள் தெறிக்கும்) விஷயத்தில் மிகவும் கண்டிப்பவர்களாய் இருந்தார்கள். “பனூ இஸ்ராயீல் மக்களில் ஒருவரது ஆடையில் சிறுநீர் பட்டுவிட்டால், அவர் அந்தப் பாகத்தைக் கத்தரித்துவிடுவார்” எனக் கூறுவார்கள்.

இதைக் கேள்விப்பட்ட ஹுதைஃபா (ரலி) அவர்கள், “அவர் இந்தப் போக்கை நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று கூறிவிட்டு, “நபி (ஸல்) அவர்கள் ஒரு சமூகத்தாரின் குப்பைக் குழிக்கு வந்து நின்றுகொண்டு சிறுநீர் கழித்தார்கள்” என்றார்கள்.

அத்தியாயம் : 4
227. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامٍ، قَالَ حَدَّثَتْنِي فَاطِمَةُ، عَنْ أَسْمَاءَ، قَالَتْ جَاءَتِ امْرَأَةٌ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَتْ أَرَأَيْتَ إِحْدَانَا تَحِيضُ فِي الثَّوْبِ كَيْفَ تَصْنَعُ قَالَ "" تَحُتُّهُ، ثُمَّ تَقْرُصُهُ بِالْمَاءِ، وَتَنْضَحُهُ وَتُصَلِّي فِيهِ "".
பாடம் : 63 இரத்த(ம் பட்ட இட)த்தைக் கழுவுதல்
227. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “எங்களில் ஒரு பெண்ணின் ஆடையில் மாதவிடாய் இரத்தம் பட்டுவிட்டால், அவள் என்ன செய்ய வேண்டும் என்கிறீர்கள்?” என்று கேட்டார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் “(இரத்தம் பட்டுக் காய்ந்துவிட்ட) அந்த இடத்தை அவள் சுரண்ட வேண்டும்; பின்னர் அதைத் தண்ணீர் விட்டுக் கசக்கிக் கழுவ வேண்டும்; பின்னர் அந்தத் துணியுடன் அவள் தொழுதுகொள்ளலாம்” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 4
228. حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ جَاءَتْ فَاطِمَةُ ابْنَةُ أَبِي حُبَيْشٍ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي امْرَأَةٌ أُسْتَحَاضُ فَلاَ أَطْهُرُ، أَفَأَدَعُ الصَّلاَةَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لاَ، إِنَّمَا ذَلِكِ عِرْقٌ، وَلَيْسَ بِحَيْضٍ، فَإِذَا أَقْبَلَتْ حَيْضَتُكِ فَدَعِي الصَّلاَةَ، وَإِذَا أَدْبَرَتْ فَاغْسِلِي عَنْكِ الدَّمَ ثُمَّ صَلِّي "". قَالَ وَقَالَ أَبِي "" ثُمَّ تَوَضَّئِي لِكُلِّ صَلاَةٍ، حَتَّى يَجِيءَ ذَلِكَ الْوَقْتُ "".
பாடம் : 63 இரத்த(ம் பட்ட இட)த்தைக் கழுவுதல்
228. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

பாத்திமா பின்த் அபீஹுபைஷ் என்ற பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் உயர் இரத்தப்போக்கு (இஸ்திஹாளா) ஏற்படும் ஒரு பெண் ஆவேன்; (தொடர்ந்து உதிரம் கசிவதால்) நான் சுத்தமாவதில்லை. நான் தொழுகையை விட்டுவிடலாமா?” என்று கேட்டார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இல்லை; (தொழுகையை விட்டுவிடாதே!) இது இரத்தக் குழா(யிலிருந்து வருவதே)யாகும்; (கர்ப்பப் பையிலிருந்து வரும்) மாதவிடாய் இரத்தமன்று. எனவே, உனக்கு மாதவிடாய் வரும்போது தொழுகையை விட்டுவிடு; அது நின்றுவிட்டால் இரத்தத்தைக் கழுவி (குளித்து)விட்டுத் தொழுதுகொள்” என்று கூறினார்கள்.

மேலும், நபி (ஸல்) அவர்கள் (அப் பெண்மணியிடம்), “பின்னர் அடுத்த மாதவிடாய் காலம் வரும்வரை ஒவ்வொரு தொழுகைக்கும் நீ அங்கத் தூய்மை (உளூ) செய்துகொள்” என்றும் சொன்னார்கள்.

அத்தியாயம் : 4
229. حَدَّثَنَا عَبْدَانُ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ أَخْبَرَنَا عَمْرُو بْنُ مَيْمُونٍ الْجَزَرِيُّ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كُنْتُ أَغْسِلُ الْجَنَابَةَ مِنْ ثَوْبِ النَّبِيِّ صلى الله عليه وسلم، فَيَخْرُجُ إِلَى الصَّلاَةِ، وَإِنَّ بُقَعَ الْمَاءِ فِي ثَوْبِهِ.
பாடம் : 64 இந்திரிய(ம் பட்ட இட)த்தைக் கழுவுவதும், அதைச் சுரண்டி விடுவதும், பெண்ணிடமிருந்து படுவதைக் கழுவுவதும்
229. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களின் ஆடை யில் இந்திரியம் பட்ட இடத்தைக் கழுவு வேன். (அந்த ஆடையோடு) நபி (ஸல்) அவர்கள் தொழச் செல்வார்கள். அவர் களின் ஆடையில் ஈரம் அப்படியே இருக்கும்.


அத்தியாயம் : 4
230. حَدَّثَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا يَزِيدُ، قَالَ حَدَّثَنَا عَمْرٌو، عَنْ سُلَيْمَانَ، قَالَ سَمِعْتُ عَائِشَةَ، ح وَحَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، قَالَ حَدَّثَنَا عَمْرُو بْنُ مَيْمُونٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، قَالَ سَأَلْتُ عَائِشَةَ عَنِ الْمَنِيِّ، يُصِيبُ الثَّوْبَ فَقَالَتْ كُنْتُ أَغْسِلُهُ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، فَيَخْرُجُ إِلَى الصَّلاَةِ وَأَثَرُ الْغَسْلِ فِي ثَوْبِهِ بُقَعُ الْمَاءِ.
பாடம் : 64 இந்திரிய(ம் பட்ட இட)த்தைக் கழுவுவதும், அதைச் சுரண்டி விடுவதும், பெண்ணிடமிருந்து படுவதைக் கழுவுவதும்
230. சுலைமான் பின் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், ஆடையில் படும் இந்திரியத்தைப் பற்றிக் கேட்டேன். அப்போது அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையில் பட்ட இந்திரியத்தை நான் கழுவுவேன். (அந்த ஆடையோடு) அவர்கள் தொழுகைக்காகச் செல்வார்கள். கழுவிய அடையாளம் -ஈரம்- அவர்களின் ஆடையில் காணப்படும் என்று கூறினார்கள்

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 4
231. حَدَّثَنَا مُوسَى، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، قَالَ حَدَّثَنَا عَمْرُو بْنُ مَيْمُونٍ، قَالَ سَأَلْتُ سُلَيْمَانَ بْنَ يَسَارٍ فِي الثَّوْبِ تُصِيبُهُ الْجَنَابَةُ قَالَ قَالَتْ عَائِشَةُ كُنْتُ أَغْسِلُهُ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، ثُمَّ يَخْرُجُ إِلَى الصَّلاَةِ وَأَثَرُ الْغَسْلِ فِيهِ بُقَعُ الْمَاءِ.
பாடம் : 65 இந்திரியம் முத-யவை பட்ட இடத்தைக் கழுவிய பின்னரும் அதன் அடையாளம் அழிய வில்லையென்றால் (என்ன செய்ய வேண்டும்)?
231. அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் சுலைமான் பின் யசார் (ரஹ்) அவர்களிடம் இந்திரியம் பட்டுவிட்ட ஆடையைப் பற்றி (அதைச் சுத்தம் செய்வது குறித்து)க் கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆயிஷா (ரலி) அவர்கள், ‘நான் நபி (ஸல்) அவர்களின் ஆடையில் பட்ட இந்திரியத்தைக் கழுவுவேன். பின்னர் (அந்த ஆடையோடு) அவர்கள் தொழுகைக்காகச் செல்வார்கள். கழுவிய அடையாளம் -ஈரம்- அவர்களது ஆடையில் அப்படியே இருக்கும்’ என்று கூறினார்கள்” என்றார்கள்.


அத்தியாயம் : 4
232. حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ، قَالَ حَدَّثَنَا زُهَيْرٌ، قَالَ حَدَّثَنَا عَمْرُو بْنُ مَيْمُونِ بْنِ مِهْرَانَ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا كَانَتْ تَغْسِلُ الْمَنِيَّ مِنْ ثَوْبِ النَّبِيِّ صلى الله عليه وسلم، ثُمَّ أَرَاهُ فِيهِ بُقْعَةً أَوْ بُقَعًا.
பாடம் : 65 இந்திரியம் முத-யவை பட்ட இடத்தைக் கழுவிய பின்னரும் அதன் அடையாளம் அழிய வில்லையென்றால் (என்ன செய்ய வேண்டும்)?
232. சுலைமான் பின் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்கள், தாம் நபி (ஸல்) அவர்களின் ஆடையில் பட்ட இந்திரியத்தைக் கழுவியதாகவும் பிறகு அதே ஆடையில் ஓரிரு இடங்களில் அதன் ஈரத்(தின் அடையாளத்)தைப் பார்த்ததாகவும் கூறினார்கள்.

அத்தியாயம் : 4
233. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ، قَالَ قَدِمَ أُنَاسٌ مِنْ عُكْلٍ أَوْ عُرَيْنَةَ، فَاجْتَوَوُا الْمَدِينَةَ، فَأَمَرَهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم بِلِقَاحٍ، وَأَنْ يَشْرَبُوا مِنْ أَبْوَالِهَا وَأَلْبَانِهَا، فَانْطَلَقُوا، فَلَمَّا صَحُّوا قَتَلُوا رَاعِيَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَاسْتَاقُوا النَّعَمَ، فَجَاءَ الْخَبَرُ فِي أَوَّلِ النَّهَارِ، فَبَعَثَ فِي آثَارِهِمْ، فَلَمَّا ارْتَفَعَ النَّهَارُ جِيءَ بِهِمْ، فَأَمَرَ فَقَطَعَ أَيْدِيَهُمْ وَأَرْجُلَهُمْ، وَسُمِرَتْ أَعْيُنُهُمْ، وَأُلْقُوا فِي الْحَرَّةِ يَسْتَسْقُونَ فَلاَ يُسْقَوْنَ. قَالَ أَبُو قِلاَبَةَ فَهَؤُلاَءِ سَرَقُوا وَقَتَلُوا وَكَفَرُوا بَعْدَ إِيمَانِهِمْ، وَحَارَبُوا اللَّهَ وَرَسُولَهُ.
பாடம் : 66 ஒட்டகம், ஆடு மற்றும் பிற கால்நடைகளின் சிறுநீரும் ஆட்டுத் தொழுவமும் அபூமூசா (ரலி) அவர்கள் (கூஃபாவில் உள்ள) ‘தாருல் பரீத்’ எனும் இடத்தில் தொழுதார்கள். சாணமும் காலியான இடமும் அவர்களுக்குப் பக்கத்தில் இருந்தன. தொழுது முடித்த பிறகு (சாணமிருந்த இடத்தையும் காலியான இடத்தையும் சுட்டிக்காட்டி) இந்த இடமும் அந்த இடமும் சமம்தான் (இரண்டும் சுத்தமான இடங்களே)” என்றார்கள்.
233. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘உக்ல்’ அல்லது ‘உரைனா’ குலத் தாரில் சிலர் (மதீனாவுக்கு) வந்தனர். அவர்களுக்கு மதீனாவின் தட்பவெப்ப நிலை ஒத்துக்கொள்ளவில்லை. எனவே, (அவர் களின் வேண்டுகோளுக்கிணங்க) பால் ஒட்டகங்களைச் சென்றடைந்து, அவற்றின் சிறுநீரையும் பாலையும் பருகிக்கொள்ளு மாறு அவர்களை நபியவர்கள் பணித்தார்கள். அவ்வாறே அவர்களும் (ஒட்டகங்களை நோக்கி) நடந்தனர். (அவற்றின் சிறுநீரையும் பாலையும் பருகி) அவர்கள் உடல் நலம் தேறியதும் நபி (ஸல்) அவர்களின் ஒட்டக மேய்ப்பரைக் கொன்றுவிட்டனர்; ஒட்டகங்களை ஓட்டிச் சென்றுவிட்டனர்.

முற்பகல் வேளையில் இந்தச் செய்தி (நபி (ஸல்) அவர்களிடம்) வரவே, அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பிடித்துவர ஒரு) படைப் பிரிவை அனுப்பிவைத்தார்கள். நண்பகல் நேரத்தில் அவர்கள் (பிடித்துக்) கொண்டுவரப் பட்டார்கள். அவர்களுடைய கைகளையும் கால்களையும் துண்டிக்கச் செய்தார்கள். அவர்களின் கண்களில் சூடிடப்பட்டது. பிறகு (மதீனா புறநகரான பாறைகள் மிகுந்த) ‘அல்ஹர்ரா’ பகுதியில் அவர்கள் போடப்பட்டனர். அவர்கள் (நா வறண்டு) தண்ணீர் கேட்டும் அவர்களுக்குத் தண்ணீர் புகட்டப்படவில்லை.

அறிவிப்பாளர் அபூகிலாபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இவர்கள் (பொதுமக்களுக்குரிய ஒட்டகங்களைத்) திருடினார்கள்; (ஒட்டக மேய்ப்பரைக்) கொலை செய்தார்கள்; இறைநம்பிக்கை கொண்ட பின்னர் இறை மறுப்பாளர்களாய் மாறினார்கள்; அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்த்துப் போரிட்டார்கள். (இத்தகைய கொடுஞ்செயல் புரிந்ததால்தான் அவர்களுக்கு இவ்வளவு பெரிய தண்டனை அளிக்க நேர்ந்தது.)


அத்தியாயம் : 4
234. حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنَا أَبُو التَّيَّاحِ، يَزِيدُ بْنُ حُمَيْدٍ عَنْ أَنَسٍ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي قَبْلَ أَنْ يُبْنَى الْمَسْجِدُ فِي مَرَابِضِ الْغَنَمِ.
பாடம் : 66 ஒட்டகம், ஆடு மற்றும் பிற கால்நடைகளின் சிறுநீரும் ஆட்டுத் தொழுவமும் அபூமூசா (ரலி) அவர்கள் (கூஃபாவில் உள்ள) ‘தாருல் பரீத்’ எனும் இடத்தில் தொழுதார்கள். சாணமும் காலியான இடமும் அவர்களுக்குப் பக்கத்தில் இருந்தன. தொழுது முடித்த பிறகு (சாணமிருந்த இடத்தையும் காலியான இடத்தையும் சுட்டிக்காட்டி) இந்த இடமும் அந்த இடமும் சமம்தான் (இரண்டும் சுத்தமான இடங்களே)” என்றார்கள்.
234. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மதீனாவில்) பள்ளிவாசல் கட்டப்படு வதற்கு முன்னால் நபி (ஸல்) அவர்கள் ஆட்டுத் தொழுவங்களில் தொழு வார்கள்.33

அத்தியாயம் : 4
235. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ مَيْمُونَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم سُئِلَ عَنْ فَأْرَةٍ سَقَطَتْ فِي سَمْنٍ فَقَالَ "" أَلْقُوهَا وَمَا حَوْلَهَا فَاطْرَحُوهُ. وَكُلُوا سَمْنَكُمْ "".
பாடம் : 67 நெய்யிலோ தண்ணீரிலோ அசுத்தமான பொருட்கள் விழுந்துவிட்டால்... (என்ன சட்டம்?) முஹம்மத் பின் முஸ்-ம் அஸ் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள், “(ஒரு அசுத்த மான பொருளின்) சுவையோ வாடையோ நிறமோ தண்ணீரை மாற்றிவிடாம-ருக்கும்வரை தண்ணீரில் குறையில்லை” என்று கூறியுள்ளார்கள். ஹம்மாத் பின் அபீசுலைமான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இறந்துபோன பறவைகளின் இறகுகள் (தண்ணீரில் விழுவதால்) குறையில்லை; (அதனால் தண்ணீர் அசுத்தமாகிவிடாது.) இறந்துவிட்ட யானை போன்ற மிருகங்களின் எலும்புகள் விஷயத்தில் அஸ் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள், “நான் மூத்த அறிஞர்கள் பலரைச் சந்தித்திருக்கின்றேன். அவர்கள் அவற்றின் எலும்பு களால் தலைவாரிக்கொள்வார்கள்; எண்ணெய் வைத்துக்கொள்வார்கள். அதைப் பயன்படுத்துவதைக் குற்றமென அவர்கள் கருதவில்லை” என்று தெரிவிக்கிறார்கள். முஹம்மத் பின் சீரீன், இப்ராஹீம் அந்நநகஈ (ரஹ்) ஆகியோர், “யானைத் தந்தத்தை வியாபாரம் செய்வது குற்ற மாகாது” எனக் கூறியுள்ளனர்.
235. மைமூனா (பின்த் ஹாரிஸ்-ர-) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நெய்யில் விழுந்துவிட்ட எ- குறித்து வினவப்பட்டது. அதற்கு “அந்த எ-யையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் (உடனே) எடுத்து எறிந்து விடுங்கள்; உங்கள் நெய்யைச் சாப்பிடுங் கள்” என்று அவர்கள் பதிலளித்தார்கள்.


அத்தியாயம் : 4
236. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا مَعْنٌ، قَالَ حَدَّثَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ مَيْمُونَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم سُئِلَ عَنْ فَأْرَةٍ سَقَطَتْ فِي سَمْنٍ فَقَالَ "" خُذُوهَا وَمَا حَوْلَهَا فَاطْرَحُوهُ "". قَالَ مَعْنٌ حَدَّثَنَا مَالِكٌ مَا لاَ أُحْصِيهِ يَقُولُ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنْ مَيْمُونَةَ.
பாடம் : 67 நெய்யிலோ தண்ணீரிலோ அசுத்தமான பொருட்கள் விழுந்துவிட்டால்... (என்ன சட்டம்?) முஹம்மத் பின் முஸ்-ம் அஸ் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள், “(ஒரு அசுத்த மான பொருளின்) சுவையோ வாடையோ நிறமோ தண்ணீரை மாற்றிவிடாம-ருக்கும்வரை தண்ணீரில் குறையில்லை” என்று கூறியுள்ளார்கள். ஹம்மாத் பின் அபீசுலைமான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இறந்துபோன பறவைகளின் இறகுகள் (தண்ணீரில் விழுவதால்) குறையில்லை; (அதனால் தண்ணீர் அசுத்தமாகிவிடாது.) இறந்துவிட்ட யானை போன்ற மிருகங்களின் எலும்புகள் விஷயத்தில் அஸ் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள், “நான் மூத்த அறிஞர்கள் பலரைச் சந்தித்திருக்கின்றேன். அவர்கள் அவற்றின் எலும்பு களால் தலைவாரிக்கொள்வார்கள்; எண்ணெய் வைத்துக்கொள்வார்கள். அதைப் பயன்படுத்துவதைக் குற்றமென அவர்கள் கருதவில்லை” என்று தெரிவிக்கிறார்கள். முஹம்மத் பின் சீரீன், இப்ராஹீம் அந்நநகஈ (ரஹ்) ஆகியோர், “யானைத் தந்தத்தை வியாபாரம் செய்வது குற்ற மாகாது” எனக் கூறியுள்ளனர்.
236. மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நெய்யில் விழுந்துவிட்ட எலியைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் வினவப் பட்டது. அதற்கு அவர்கள், “அந்த எ-யையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் எடுத்து (உடனே) எறிந்துவிடுங்கள் (மீதி நெய்யைச் சாப்பிடுங்கள்)” என்று பதிலளித் தார்கள்.

மஅன் (பின் ஈசா-ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இந்த ஹதீஸை மா-க் (ரஹ்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வழியாக மைமூனா (ரலி) அவர்களிடமிருந்து எண்ணற்ற முறை எமக்கு அறிவித்துள்ளார்கள்.


அத்தியாயம் : 4