2155. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ قَالَتْ عَائِشَةُ ـ رضى الله عنها دَخَلَ عَلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرْتُ لَهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" اشْتَرِي وَأَعْتِقِي، فَإِنَّ الْوَلاَءَ لِمَنْ أَعْتَقَ "". ثُمَّ قَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنَ الْعَشِيِّ، فَأَثْنَى عَلَى اللَّهِ بِمَا هُوَ أَهْلُهُ، ثُمَّ قَالَ "" مَا بَالُ أُنَاسٍ يَشْتَرِطُونَ شُرُوطًا لَيْسَ فِي كِتَابِ اللَّهِ، مَنِ اشْتَرَطَ شَرْطًا لَيْسَ فِي كِتَابِ اللَّهِ فَهْوَ بَاطِلٌ، وَإِنِ اشْتَرَطَ مِائَةَ شَرْطٍ، شَرْطُ اللَّهِ أَحَقُّ وَأَوْثَقُ "".
பாடம் : 67 பெண்களிடம் (ஆண்கள்) விற்பதும் வாங்குவதும்
2155. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (பரீரா என்ற அடிமைப் பெண்ணை விலைக்கு வாங்கி விடுதலை செய்வது தொடர்பான) விஷயத்தை அவர்களிடம் நான் சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நீ விலைக்கு வாங்கி விடுதலை செய்! (அந்த அடிமை மரணித்தபின்) அவருக்கு வாரிசாகும் உரிமை, விடுதலை செய்தவருக்குத்தான்” என்று கூறினார்கள்.

பிறகு, மாலை நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் எழுந்து அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்பப் புகழ்ந்து, ‘‘அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனைகளை விதிப்பவர்களுக்கு என்ன நேர்ந்தது? யார் அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனையை விதிக்கிறார்களோ அவர்களின் அந்த நிபந்தனை செல்லாதது ஆகும்; அவர்கள் நூறு நிபந்தனைகளை விதித்தாலும் சரியே! அல்லாஹ்வின் நிபந்தனைதான் நிறைவேற்றத் தக்கதும் உறுதியானதும் ஆகும்” எனக் கூறி னார்கள்.


அத்தியாயம் : 34
2156. حَدَّثَنَا حَسَّانُ بْنُ أَبِي عَبَّادٍ، حَدَّثَنَا هَمَّامٌ، قَالَ سَمِعْتُ نَافِعًا، يُحَدِّثُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ سَاوَمَتْ بَرِيرَةَ فَخَرَجَ إِلَى الصَّلاَةِ، فَلَمَّا جَاءَ قَالَتْ إِنَّهُمْ أَبَوْا أَنْ يَبِيعُوهَا، إِلاَّ أَنْ يَشْتَرِطُوا الْوَلاَءَ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنَّمَا الْوَلاَءُ لِمَنْ أَعْتَقَ "". قُلْتُ لِنَافِعٍ حُرًّا كَانَ زَوْجُهَا أَوْ عَبْدًا فَقَالَ مَا يُدْرِينِي
பாடம் : 67 பெண்களிடம் (ஆண்கள்) விற்பதும் வாங்குவதும்
2156. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்கள், (அடிமை யாயிருந்த) பரீராவை விலை பேசினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தொழு கைக்குச் சென்றுவிட்டார்கள். அவர்கள் வந்ததும் ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘பரீராவின் உரிமையாளர்கள், யிபரீராவுக்கு வாரிசாகும் உரிமையைத் தங்களுக்கு வழங்கினால் தவிர, அவரை விற்க மாட்டோம்’ எனக் கூறுகின்றனர்” என்று சொன்னார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அடிமையின் (மரணத்திற்குப்பின் அவருக்கு) வாரிசாகும் உரிமை (அவரை) விடுதலை செய்தவருக்குத்தான் உரியது” எனக் கூறினார்கள்.55

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹம்மாம் பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான், அப்பெண்ணின் கணவர் அடிமையாக இருந்தாரா? அல்லது சுதந்திரமானவராக இருந்தாரா? என்று நாஃபிஉ (ரஹ்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், யிஎனக்குத் தெரியாது’ என்று பதிலளித்தார்கள்.

அத்தியாயம் : 34
2157. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ، سَمِعْتُ جَرِيرًا ـ رضى الله عنه ـ بَايَعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى شَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَإِقَامِ الصَّلاَةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَالسَّمْعِ وَالطَّاعَةِ، وَالنُّصْحِ لِكُلِّ مُسْلِمٍ.
பாடம் : 68 கிராமத்திலிருந்து (சரக்கு கொண்டு) வருபவருக்காக உள்ளூர்வாசி கூலியேதும் பெறாமல் விற்றுக் கொடுக்கலாமா? அவருக்குத் துணை செய்யலாமா? அவருக்கு நல்ல ஆலோசனை வழங்க லாமா?56 ‘‘உங்களில் ஒருவர் தம் சகோதரரிடம் ஆலோசனை கேட்டால் அவருக்கு அச்சகோதரர் நல்ல ஆலோசனை வழங்கட்டும்!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘‘இதற்கு அனுமதி உள்ளது” என்று அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
2157. ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்று உறுதி கூறல், தொழுகையை நிலை நாட்டுதல், ஸகாத் வழங்குதல், (நபியவர்களின் கட்டளைகளைச் செவியேற்றுக் கட்டுப் படுதல், எல்லா முஸ்லிம்களுக்கும் நன்மை நாடுதல் ஆகிய விஷயங்களை ஏற்றுச் செயல்படுவதாக அல்லாஹ்வின் துதர் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தேன்.


அத்தியாயம் : 34
2158. حَدَّثَنَا الصَّلْتُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لاَ تَلَقَّوُا الرُّكْبَانَ وَلاَ يَبِيعُ حَاضِرٌ لِبَادٍ "". قَالَ فَقُلْتُ لاِبْنِ عَبَّاسٍ مَا قَوْلُهُ لاَ يَبِيعُ حَاضِرٌ لِبَادٍ قَالَ لاَ يَكُونُ لَهُ سِمْسَارًا.
பாடம் : 68 கிராமத்திலிருந்து (சரக்கு கொண்டு) வருபவருக்காக உள்ளூர்வாசி கூலியேதும் பெறாமல் விற்றுக் கொடுக்கலாமா? அவருக்குத் துணை செய்யலாமா? அவருக்கு நல்ல ஆலோசனை வழங்க லாமா?56 ‘‘உங்களில் ஒருவர் தம் சகோதரரிடம் ஆலோசனை கேட்டால் அவருக்கு அச்சகோதரர் நல்ல ஆலோசனை வழங்கட்டும்!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘‘இதற்கு அனுமதி உள்ளது” என்று அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
2158. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘‘(சந்தைக்கு வரும்) வணிகர்களை இடைமறித்து வாங்காதீர்கள்! கிராமத்தி லிருந்து (சரக்கு கொண்டு) வருபவர்களுக் காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம்!”

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இதன் அறிவிப்பாளர் தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

‘‘கிராமத்திலிருந்து வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம் என்பதன் பொருள் என்ன?” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘இடைத்தரகராக இருக்கக் கூடாது (என்பது தான் அதன் பொருள்)” என்று பதிலளித்தார்கள்.

அத்தியாயம் : 34
2159. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ صَبَّاحٍ، حَدَّثَنَا أَبُو عَلِيٍّ الْحَنَفِيُّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يَبِيعَ حَاضِرٌ لِبَادٍ. وَبِهِ قَالَ ابْنُ عَبَّاسٍ.
பாடம் : 69 கிராமத்திலிருந்து (சரக்கு கொண்டு)வருபவருக்காக உள்ளூர்வாசி கூலி வாங்கிக்கொண்டு விற்றுக்கொடுக்கக் கூடாது.
2159. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கிராமத்திலிருந்து (சரக்கு கொண்டு)வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்கக் கூடாதென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

இவ்வாறே (இடைத்தரகராக இருப்பது கூடாதென) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 34
2160. حَدَّثَنَا الْمَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ أَخْبَرَنِي ابْنُ جُرَيْجٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لاَ يَبْتَاعُ الْمَرْءُ عَلَى بَيْعِ أَخِيهِ، وَلاَ تَنَاجَشُوا، وَلاَ يَبِعْ حَاضِرٌ لِبَادٍ ""
பாடம் : 70 கிராமத்திலிருந்து வருபவருக்காக உள்ளூர்வாசி தரகராக இருந்து வாங்கிக் கொடுக்கக் கூடாது. விற்பவர், வாங்குபவர் இருவருக்குமே இடைத்தரகராக இருக்கக் கூடாது என்று இப்னு சீரீன், இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) ஆகியோர் கூறுகின்றனர். (இதில் விற்றல், வாங்கல் இரண்டும் ஒன்றுதான். ஏனெனில்,) அரபியர், ‘‘எனக்கு நீ ஓர் ஆடையை வாங்கிக்கொடு” என்பதைக் குறிக்க யிபிஃ’ எனும் சொல்லைப் பயன்படுத்துவர். (இச்சொல் விற்பதற்குப் பயன்படுவதாகும்.) இவ்வாறு இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
2160. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் வணிகம் செய்துகொண்டி ருக்கும்போது மற்றவர் குறுக்கிட்டு வணிகம் செய்ய வேண்டாம். (வாங்கும் நோக்க மின்றி) விலையை உயர்த்த வேண்டும் என்பதற்காகவே விலை கேட்காதீர்கள்! கிராமவாசிக்காக நகரவாசி விற்றுக் கொடுக்க வேண்டாம்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 34
2161. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُعَاذٌ، حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنْ مُحَمَّدٍ، قَالَ أَنَسُ بْنُ مَالِكٍ ـ رضى الله عنه ـ نُهِينَا أَنْ يَبِيعَ حَاضِرٌ لِبَادٍ.
பாடம் : 70 கிராமத்திலிருந்து வருபவருக்காக உள்ளூர்வாசி தரகராக இருந்து வாங்கிக் கொடுக்கக் கூடாது. விற்பவர், வாங்குபவர் இருவருக்குமே இடைத்தரகராக இருக்கக் கூடாது என்று இப்னு சீரீன், இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) ஆகியோர் கூறுகின்றனர். (இதில் விற்றல், வாங்கல் இரண்டும் ஒன்றுதான். ஏனெனில்,) அரபியர், ‘‘எனக்கு நீ ஓர் ஆடையை வாங்கிக்கொடு” என்பதைக் குறிக்க யிபிஃ’ எனும் சொல்லைப் பயன்படுத்துவர். (இச்சொல் விற்பதற்குப் பயன்படுவதாகும்.) இவ்வாறு இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
2161. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கிராமத்திலிருந்து (சரக்கு கொண்டு)வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்கக் கூடாது என்று எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

அத்தியாயம் : 34
2162. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنِ التَّلَقِّي، وَأَنْ يَبِيعَ حَاضِرٌ لِبَادٍ.
பாடம் : 71 வெளியூரிலிருந்து சரக்குகளைக் கொண்டுவரும் வியாபாரிகளை இடைமறித்து வாங்குவதற்கு வந்துள்ள தடை57 இந்த வணிகம் ரத்துச் செய்யப்படும். ஏனெனில், தெரிந்துகொண்டே இதைச் செய்பவர் குற்றவாளி ஆவார்; பாவி ஆவார். இது வணிகத்தில் செய்யப்படும் ஒரு மோசடி ஆகும். மோசடி செய்வது கூடாது.58
2162. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(வெளியிலிருந்து வரும்) வணிகர்களை எதிர்கொண்டு (வழியிலேயே சரக்குகளை) வாங்குவதையும் கிராமத்திலிருந்து (சரக்கு கொண்டு)வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுப்பதையும் நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.


அத்தியாயம் : 34
2163. حَدَّثَنِي عَيَّاشُ بْنُ الْوَلِيدِ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ ابْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، قَالَ سَأَلْتُ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ مَا مَعْنَى قَوْلِهِ "" لاَ يَبِيعَنَّ حَاضِرٌ لِبَادٍ "". فَقَالَ لاَ يَكُنْ لَهُ سِمْسَارًا.
பாடம் : 71 வெளியூரிலிருந்து சரக்குகளைக் கொண்டுவரும் வியாபாரிகளை இடைமறித்து வாங்குவதற்கு வந்துள்ள தடை57 இந்த வணிகம் ரத்துச் செய்யப்படும். ஏனெனில், தெரிந்துகொண்டே இதைச் செய்பவர் குற்றவாளி ஆவார்; பாவி ஆவார். இது வணிகத்தில் செய்யப்படும் ஒரு மோசடி ஆகும். மோசடி செய்வது கூடாது.58
2163. தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், ‘‘கிராமத்திலிருந்து வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுத் தரக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதன் பொருள் என்ன?” என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ‘‘இவர் அவருக்கு இடைத்தரகராக இருக்கக் கூடாது” என்றார்கள்.


அத்தியாயம் : 34
2164. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ حَدَّثَنِي التَّيْمِيُّ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ مَنِ اشْتَرَى مُحَفَّلَةً فَلْيَرُدَّ مَعَهَا صَاعًا. قَالَ وَنَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ تَلَقِّي الْبُيُوعِ.
பாடம் : 71 வெளியூரிலிருந்து சரக்குகளைக் கொண்டுவரும் வியாபாரிகளை இடைமறித்து வாங்குவதற்கு வந்துள்ள தடை57 இந்த வணிகம் ரத்துச் செய்யப்படும். ஏனெனில், தெரிந்துகொண்டே இதைச் செய்பவர் குற்றவாளி ஆவார்; பாவி ஆவார். இது வணிகத்தில் செய்யப்படும் ஒரு மோசடி ஆகும். மோசடி செய்வது கூடாது.58
2164. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மடி கனக்கச் செய்யப்பட்ட பிராணியை விலைக்கு வாங்கியவர் (அதைத் திருப்பிக் கொடுப்பதாக இருந்தால்), அத்துடன் ஒரு ஸாஉ (பேரீச்சம்பழம் அல்லது உணவுப் பொருள்) சேர்த்துக் கொடுக்கட்டும். வியாபாரிகளை எதிர்கொண்டு வாங்குவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.


அத்தியாயம் : 34
2165. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" لاَ يَبِيعُ بَعْضُكُمْ عَلَى بَيْعِ بَعْضٍ، وَلاَ تَلَقَّوُا السِّلَعَ حَتَّى يُهْبَطَ بِهَا إِلَى السُّوقِ "".
பாடம் : 71 வெளியூரிலிருந்து சரக்குகளைக் கொண்டுவரும் வியாபாரிகளை இடைமறித்து வாங்குவதற்கு வந்துள்ள தடை57 இந்த வணிகம் ரத்துச் செய்யப்படும். ஏனெனில், தெரிந்துகொண்டே இதைச் செய்பவர் குற்றவாளி ஆவார்; பாவி ஆவார். இது வணிகத்தில் செய்யப்படும் ஒரு மோசடி ஆகும். மோசடி செய்வது கூடாது.58
2165. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் வணிகம் செய்து கொண்டிருக்கும்போது, மற்றவர் குறுக்கிட்டு வணிகம் செய்யலாகாது; மேலும், விற்பனைப் பொருட்கள் சந்தைக்கு கொண்டுவந்து இறக்கப்படுவதற்குமுன் (இடையிலேயே) வாங்காதீர்கள்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 34
2166. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا جُوَيْرِيَةُ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا نَتَلَقَّى الرُّكْبَانَ فَنَشْتَرِي مِنْهُمُ الطَّعَامَ، فَنَهَانَا النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ نَبِيعَهُ حَتَّى يُبْلَغَ بِهِ سُوقُ الطَّعَامِ. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ هَذَا فِي أَعْلَى السُّوقِ، يُبَيِّنُهُ حَدِيثُ عُبَيْدِ اللَّهِ.
பாடம் : 72 (வெளியூரிலிருந்து வரும்) வியாபாரிகளை எதிர்கொள்வதற்குரிய எல்லை59
2166. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (வெளியூரிலிருந்து சரக்கு கொண்டுவரும்) வணிகர்களை (ஊருக்குள்) எதிர்கொண்டு அவர்களிடம் உணவுப் பொருட்களை வாங்கிவந்தோம். (அவ்வாறு நாங்கள் வாங்கும்) உணவுப் பொருள் உணவுச் சந்தைக்குக் கொண்டுசெல்லப் படுவதற்குமுன் அதை நாங்கள் விற்கக் கூடாதென நபி (ஸல்) அவர்கள் தடுத் தார்கள்.

அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்:

வணிகர்களை எதிர்கொண்டது சந்தை (கடைவீதி) துவங்கும் இடத்தில்தான். இதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவு படுத்துகிறது.


அத்தியாயம் : 34
2167. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ كَانُوا يَبْتَاعُونَ الطَّعَامَ فِي أَعْلَى السُّوقِ فَيَبِيعُونَهُ فِي مَكَانِهِمْ، فَنَهَاهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يَبِيعُوهُ فِي مَكَانِهِ حَتَّى يَنْقُلُوهُ.
பாடம் : 72 (வெளியூரிலிருந்து வரும்) வியாபாரிகளை எதிர்கொள்வதற்குரிய எல்லை59
2167. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபித்தோழர்கள் உணவுப் பொருட் களைக் கடைவீதி துவங்கும் இடத்தில் வாங்கி அதே இடத்தில் விற்றுவந்தனர்; ஆகவே, கடைத்தெருவுக்குள் கொண்டு சொல்லாமல் வாங்கிய இடத்திலேயே அவர்கள் விற்கக் கூடாதென அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அத்தியாயம் : 34
2168. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ جَاءَتْنِي بَرِيرَةُ فَقَالَتْ كَاتَبْتُ أَهْلِي عَلَى تِسْعِ أَوَاقٍ فِي كُلِّ عَامٍ وَقِيَّةٌ، فَأَعِينِينِي. فَقُلْتُ إِنْ أَحَبَّ أَهْلُكِ أَنْ أَعُدَّهَا لَهُمْ وَيَكُونَ وَلاَؤُكِ لِي فَعَلْتُ. فَذَهَبَتْ بَرِيرَةُ إِلَى أَهْلِهَا، فَقَالَتْ لَهُمْ فَأَبَوْا عَلَيْهَا، فَجَاءَتْ مِنْ عِنْدِهِمْ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم جَالِسٌ، فَقَالَتْ إِنِّي قَدْ عَرَضْتُ ذَلِكَ عَلَيْهِمْ فَأَبَوْا، إِلاَّ أَنْ يَكُونَ الْوَلاَءُ لَهُمْ. فَسَمِعَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَأَخْبَرَتْ عَائِشَةُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ "" خُذِيهَا وَاشْتَرِطِي لَهُمُ الْوَلاَءَ، فَإِنَّمَا الْوَلاَءُ لِمَنْ أَعْتَقَ "". فَفَعَلَتْ عَائِشَةُ ثُمَّ قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي النَّاسِ، فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ، ثُمَّ قَالَ "" أَمَّا بَعْدُ مَا بَالُ رِجَالٍ يَشْتَرِطُونَ شُرُوطًا لَيْسَتْ فِي كِتَابِ اللَّهِ، مَا كَانَ مِنْ شَرْطٍ لَيْسَ فِي كِتَابِ اللَّهِ فَهُوَ بَاطِلٌ وَإِنْ كَانَ مِائَةَ شَرْطٍ، قَضَاءُ اللَّهِ أَحَقُّ، وَشَرْطُ اللَّهِ أَوْثَقُ، وَإِنَّمَا الْوَلاَءُ لِمَنْ أَعْتَقَ "".
பாடம் : 73 வியாபாரத்தின்போது அனுமதிக்கப்படாத நிபந்தனைகளை விதித்தால்...?
2168. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அடிமைப் பெண்ணாயிருந்த) பரீரா (ரலி) என்னிடம் வந்து, ‘‘நான் என் உரிமை யாளர்களிடம், ஆண்டுக்கு ஓர் யிஊ(க்)கியா’ வீதம் (ஒன்பது ஆண்டுகளில்) ஒன்பது யிஊ(க்)கியா’க்கள் செலுத்தி (விடுதலை ஆகி)விடுவதென எழுதிக்கொடுத்துள் ளேன்; எனக்கு நீங்கள் உதவுங்கள்” என்றார். அதற்கு நான், ‘‘உன் வாரிசுரிமை (அல்வலாஉ) எனக்கே இருக்க வேண்டும் என்பதை உன் உரிமையாளர்கள் ஒப்புக் கொண்டால் அவர்களுக்காக அந்தத் தொகையை நான் ஏற்பாடு செய்கிறேன்” எனக் கூறினேன். உடனே, பரீரா தம் உரிமையாளர்களிடம் சென்றார். அவர்களி டம் அவர் இதைக் கூறியபோது, அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருக்கும்போது பரீரா, தம் உரிமை யாளர்களிடமிருந்து திரும்பி வந்து, ‘‘விஷயத்தை உரிமையாளர்களிடம் கூறினேன்; அவர்கள் யிவாரிசுரிமை தமக்கே இருக்க வேண்டும்’ எனக் கூறி, மறுத்து விட்டனர்” என்று கூறினார். இதை நபி (ஸல்) அவர்கள் செவியுற்றார்கள். நானும் நபி (ஸல்) அவர்களிடம் விவரத்தைக் கூறினேன்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘பரீராவை நீ வாங்கிக்கொள்! யிவாரிசுரிமை அவர்களுக்கே உரியது என்று அறிவித்துவிடு (பின்னர் பார்த்துக்கொள்ளலாம்). ஏனெனில், (அடிமை இறந்தபின் அவனுக்கு) வாரிசாகும் உரிமை (அவனை) விடுதலை செய்தவருக்கே உரியது” எனக் கூறினார்கள். நானும் அவ்வாறே செய்தேன்.

பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து, அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டுக் கூறினார்கள்: இறை வாழ்த்துக்குப்பின்! சிலருக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனைகளை விதிக்கிறார்களே! அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத எந்த நிபந்தனையும் செல்லாதது ஆகும். அவை நூறு நிபந்தனைகளாயினும் சரியே! அல்லாஹ்வின் தீர்ப்பே நிறைவேற்றத் தக்கது! அல்லாஹ்வின் நிபந்தனையே உறுதியானது. நிச்சயமாக, அடிமைகளுக்கு வாரிசாகும் உரிமை, விடுதலை செய்த வருக்கே உரியது.


அத்தியாயம் : 34
2169. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ عَائِشَةَ، أُمَّ الْمُؤْمِنِينَ أَرَادَتْ أَنْ تَشْتَرِيَ جَارِيَةً فَتُعْتِقَهَا، فَقَالَ أَهْلُهَا نَبِيعُكِهَا عَلَى أَنَّ وَلاَءَهَا لَنَا. فَذَكَرَتْ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ "" لاَ يَمْنَعُكِ ذَلِكَ، فَإِنَّمَا الْوَلاَءُ لِمَنْ أَعْتَقَ "".
பாடம் : 73 வியாபாரத்தின்போது அனுமதிக்கப்படாத நிபந்தனைகளை விதித்தால்...?
2169. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், ஓர் அடிமைப் பெண்ணை விலைக்கு வாங்கி விடுதலை செய்ய விரும்பினார்கள். அடிமைப் பெண்ணின் உரிமையாளர்கள், யிஇவளுக்கு வாரிசாகும் உரிமை எங்களுக்கே இருக்க வேண்டும்’ என்ற நிபந்தனையின் அடிப் படையில் உமக்கு விற்கிறோம் எனக் கூறினார்கள்.

இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறியபோது, ‘‘அவர்களின் நிபந்தனை உனக்குத் தடையாக இராது; ஏனெனில், அடிமைகளுக்கு வாரிசாகும் உரிமை (அவர்களை) விடுதலை செய்தவருக்கே உரியது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அத்தியாயம் : 34
2170. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ مَالِكِ بْنِ أَوْسٍ، سَمِعَ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" الْبُرُّ بِالْبُرِّ رِبًا إِلاَّ هَاءَ وَهَاءَ، وَالشَّعِيرُ بِالشَّعِيرِ رِبًا إِلاَّ هَاءَ وَهَاءَ، وَالتَّمْرُ بِالتَّمْرِ رِبًا إِلاَّ هَاءَ وَهَاءَ "".
பாடம் : 74 பேரீச்சம்பழத்திற்குப் பேரீச்சம்பழத்தை விற்பது60
2170. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

உடனுக்குடன் அல்லாமல் (தவணை முறையில்) தொலி நீக்கப்பட்ட கோதுமைக் குத் தொலி நீக்கப்பட்ட கோதுமையை மாற்றிக்கொள்வது வட்டியாகும். உடனுக்கு டன் அல்லாமல் (தவணை முறையில்) தொலி நீக்கப்படாத கோதுமைக்குத் தொலி நீக்கப்படாத கோதுமையை மாற்றிக் கொள்வது வட்டியாகும். உடனுக்குடன் அல்லாமல் (தவணை முறையில்) பேரீச்சம் பழத்திற்குப் பேரீச்சம்பழத்தை மாற்றிக்கொள்வதும் வட்டியாகும்.

இதை உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 34
2171. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنِ الْمُزَابَنَةِ، وَالْمُزَابَنَةُ بَيْعُ الثَّمَرِ بِالتَّمْرِ كَيْلاً، وَبَيْعُ الزَّبِيبِ بِالْكَرْمِ كَيْلاً.
பாடம் : 75 உலர்ந்த திராட்சைக்கு உலர்ந்த திராட்சையை விற்பதும் உணவுப் பொருளுக்கு உணவுப் பொருளை விற்பதும்
2171. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யிமுஸாபனா’ எனும் வியாபாரத்தைத் தடை செய்தார்கள். யிமுஸாபனா’ என்பது, (பேரீச்ச மரத்திலுள்ள உலராத) கனிகளை, (கொய்யப்பட்டு) அளக்கப்பட்ட உலர்ந்த பேரீச்சம் கனிகளுக்குப் பதிலாக (பண்ட மாற்று முறையில்) விற்பதும் (கொடியி லுள்ள) திராட்சைப் பழத்தை, (பறித்து) அளக்கப்பட்ட உலர்ந்த திராட்சைக்குப் பதிலாக (பண்டமாற்று முறையில்) விற்பதும் ஆகும்.61


அத்தியாயம் : 34
2172. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنِ الْمُزَابَنَةِ قَالَ وَالْمُزَابَنَةُ أَنْ يَبِيعَ الثَّمَرَ بِكَيْلٍ، إِنْ زَادَ فَلِي وَإِنْ نَقَصَ فَعَلَىَّ. قَالَ وَحَدَّثَنِي زَيْدُ بْنُ ثَابِتٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَخَّصَ فِي الْعَرَايَا بِخَرْصِهَا.
பாடம் : 75 உலர்ந்த திராட்சைக்கு உலர்ந்த திராட்சையை விற்பதும் உணவுப் பொருளுக்கு உணவுப் பொருளை விற்பதும்
2172. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் யிமுஸாபனா’ எனும் வியாபாரத்தைத் தடை செய்தார்கள். யிமுஸாபனா’ என்பது, மரத்திலுள்ள பேரீச்சம் பழத்தை முகத்தலளவையில் (அளக்கப்பட்ட உலர்ந்த பேரீச்சம் பழத்திற்கு) விற்கும்போது, ‘அது அதிகமாக இருந்தால் அது என்னைச் சேர்ந்தது; அது குறைந்தாலும் என்னைச் சேர்ந்தது’ என்று கூறி விற்பதாகும்.


அத்தியாயம் : 34
2173.
பாடம் : 75 உலர்ந்த திராட்சைக்கு உலர்ந்த திராட்சையை விற்பதும் உணவுப் பொருளுக்கு உணவுப் பொருளை விற்பதும்
2173. ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மரத்திலுள்ள கனிகளைத் தோராயமாக மதிப்பிட்டு விற்பதற்கு ‘அராயா’வில் (ஏழைகளுக்காக ஒதுக்கப்பட்ட மரங்களில் மட்டும்) அனுமதி அளித்தார்கள்.62

அத்தியாயம் :