157. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ تَوَضَّأَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَرَّةً مَرَّةً.
பாடம் : 22 அங்கத் தூய்மையின்போது (ஒவ்வோர் உறுப்பையும்) ஒரு முறை கழுவுதல்
157. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (ஒவ்வோர் உறுப்பையும்) தலா ஒரு முறை கழுவி அங்கத் தூய்மை செய்தார்கள்.14

அத்தியாயம் : 4
158. حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عِيسَى، قَالَ حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم تَوَضَّأَ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ.
பாடம் : 23 அங்கத் தூய்மையின்போது (ஒவ்வோர் உறுப்பையும்) இரு முறை கழுவுதல்
158. அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (ஒவ்வோர் உறுப்பையும்) தலா இரண்டு முறை கழுவி அங்கத் தூய்மை செய்தார்கள்.

அத்தியாயம் : 4
159. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ الأُوَيْسِيُّ، قَالَ حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ عَطَاءَ بْنَ يَزِيدَ، أَخْبَرَهُ أَنَّ حُمْرَانَ مَوْلَى عُثْمَانَ أَخْبَرَهُ أَنَّهُ، رَأَى عُثْمَانَ بْنَ عَفَّانَ دَعَا بِإِنَاءٍ، فَأَفْرَغَ عَلَى كَفَّيْهِ ثَلاَثَ مِرَارٍ فَغَسَلَهُمَا، ثُمَّ أَدْخَلَ يَمِينَهُ فِي الإِنَاءِ فَمَضْمَضَ، وَاسْتَنْشَقَ، ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلاَثًا، وَيَدَيْهِ إِلَى الْمِرْفَقَيْنِ ثَلاَثَ مِرَارٍ، ثُمَّ مَسَحَ بِرَأْسِهِ، ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ ثَلاَثَ مِرَارٍ إِلَى الْكَعْبَيْنِ، ثُمَّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَنْ تَوَضَّأَ نَحْوَ وُضُوئِي هَذَا، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ، لاَ يُحَدِّثُ فِيهِمَا نَفْسَهُ، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ "".
பாடம் : 24 அங்கத் தூய்மையின்போது (ஒவ்வோர் உறுப்பையும்) மும் முறை கழுவுதல்
159. உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் முன்னாள் அடிமையான ஹும்ரான் பின் அபான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் ஒரு பாத்திரம் (தண்ணீர்) கொண்டுவரச் சொல்லி (அங்கத் தூய்மை செய்தார்கள். ஆரம்பமாக) தம் இரு முன் கைகளில் மூன்று முறை (தண்ணீர்) ஊற்றிக் கழுவினார்கள். பிறகு தமது வலக் கரத்தைப் பாத்திரத்திற்குள் நுழைத்து, (தண்ணீர் அள்ளி) வாய்க் கொப்புளித்து, (மூக்கிற்கு நீர் செலுத்தி) மூக்குச் சிந்தி னார்கள்.

பிறகு தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள். (பிறகு) தம் இரு கைகளையும் முழங்கைவரை மூன்று முறை கழுவினார்கள். பிறகு தலையை ஈரக் கையால் தடவி (மஸ்ஹு செய்திடலா)னார்கள். பின்னர் தம் இரு கால்களையும் கணுக்கால்வரை மூன்று முறை கழுவினார்கள்.

பின்னர் “யார் எனது (இந்த) அங்கத் தூய்மையைப் போன்று அங்கத் தூய்மை செய்து, வேறு எந்த எண்ணங்களுக்கும் உள்ளத்தில் இடம் தராமல் இரண்டு ரக்அத்கள் தொழுகின்றாரோ அவருக்கு அவருடைய முன்பாவங்கள் மன்னிக்கப் படும்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என உஸ்மான் (ரலி) அவர்கள் சொன்னார்கள்.


அத்தியாயம் : 4
160. وَعَنْ إِبْرَاهِيمَ، قَالَ قَالَ صَالِحُ بْنُ كَيْسَانَ قَالَ ابْنُ شِهَابٍ وَلَكِنْ عُرْوَةُ يُحَدِّثُ عَنْ حُمْرَانَ،، فَلَمَّا تَوَضَّأَ عُثْمَانُ قَالَ أَلاَ أُحَدِّثُكُمْ حَدِيثًا لَوْلاَ آيَةٌ مَا حَدَّثْتُكُمُوهُ، سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" لاَ يَتَوَضَّأُ رَجُلٌ فَيُحْسِنُ وُضُوءَهُ، وَيُصَلِّي الصَّلاَةَ إِلاَّ غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الصَّلاَةِ حَتَّى يُصَلِّيَهَا "". قَالَ عُرْوَةُ الآيَةُ {إِنَّ الَّذِينَ يَكْتُمُونَ مَا أَنْزَلْنَا مِنَ الْبَيِّنَاتِ}.
பாடம் : 24 அங்கத் தூய்மையின்போது (ஒவ்வோர் உறுப்பையும்) மும் முறை கழுவுதல்
160. ஹும்ரான் பின் அபான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உஸ்மான் (ரலி) அவர்கள், அங்கத் தூய்மை செய்தபோது (எங்களைப் பார்த்து), “நான் ஒரு நபிமொழியை உங்களுக்குச் சொல்லட்டுமா? (குர்ஆனின்) ஒரு வசனம் மட்டும் இல்லையானால், அதை நான் உங்களுக்குச் சொல்லியிருக்கமாட்டேன்” என்று சொல்லிவிட்டு, “ஒரு மனிதர் அழகிய முறையில் அங்கத் தூய்மை செய்து, (கடமையான ஒரு) தொழுகையை நிறைவேற்றுவாராயின், அவர் (அடுத்த வேளைத் தொழுகையை) தொழுது முடிக்கும்வரை அவருக்கும் அந்த (இரண்டாம் வேளைத்) தொழுகைக்கும் இடையில் ஏற்பட்ட (சிறு) பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன் என்றார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

“நாம் அருளிய சான்றுகளையும் நல்வழியையும் வேதத்தில் நாம் மக்களுக்குத் தெளிவுபடுத்திய பிறகும் அவற்றை மறைப்பவர்களை அல்லாஹ் சபிக்கின்றான்; சபிப்போரும் அவர்களைச் சபிக்கின்றனர்” (2:159) எனும் வசனமே (உஸ்மான் (ரலி) அவர்கள் குறிப்பிட்ட) அந்த வசனமாகும்.

அத்தியாயம் : 4
161. حَدَّثَنَا عَبْدَانُ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي أَبُو إِدْرِيسَ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ "" مَنْ تَوَضَّأَ فَلْيَسْتَنْثِرْ، وَمَنِ اسْتَجْمَرَ فَلْيُوتِرْ "".
பாடம் : 25 அங்கத் தூய்மையின்போது மூக்கிற்கு நீர் செலுத்திச் சிந்துதல் இது குறித்து (நபித்தோழர்கள்) உஸ்மான் (ரலி), அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித் துள்ளார்கள்.
161. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் அங்கத் தூய்மை செய்கிறாரோ அவர் மூக்கிற்கு நீர் செலுத்திச் சிந்தட்டும்; மலஜலம் கழித்துவிட்டுக் கற்களால் சுத்தம் செய்பவர் ஒற்றைப்படையாகச் செய்யட்டும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 4
162. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا تَوَضَّأَ أَحَدُكُمْ فَلْيَجْعَلْ فِي أَنْفِهِ ثُمَّ لِيَنْثُرْ، وَمَنِ اسْتَجْمَرَ فَلْيُوتِرْ، وَإِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ نَوْمِهِ فَلْيَغْسِلْ يَدَهُ قَبْلَ أَنْ يُدْخِلَهَا فِي وَضُوئِهِ، فَإِنَّ أَحَدَكُمْ لاَ يَدْرِي أَيْنَ بَاتَتْ يَدُهُ "".
பாடம் : 26 கற்களால் சுத்தம் செய்யும் போது ஒற்றைப்படையாகச் செய்தல்
162. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் அங்கத் தூய்மை செய்தால் தமது மூக்கிற்கு நீர் செலுத்தி (மூக்கை)ச் சிந்தட்டும். மலஜலம் கழித்து விட்டுக் கற்களால் சுத்தம் செய்பவர் ஒற்றைப்படையாகச் செய்யட்டும்.

உங்களில் ஒருவர் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தால், அவர் தாம் அங்கத் தூய்மை செய்யப்போகும் தண்ணீருக்குள் கையை நுழைப்பதற்கு முன்னால் கையைக் கழுவிக்கொள்ளட்டும். ஏனெனில், உங்களில் ஒருவர் இரவில் (உறங்கும் போது) தமது கை எங்கே இருந்தது என்பதை அறியமாட்டார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 4
163. حَدَّثَنَا مُوسَى، قَالَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ يُوسُفَ بْنِ مَاهَكَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ تَخَلَّفَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَنَّا فِي سَفْرَةٍ سَافَرْنَاهَا، فَأَدْرَكَنَا وَقَدْ أَرْهَقْنَا الْعَصْرَ، فَجَعَلْنَا نَتَوَضَّأُ وَنَمْسَحُ عَلَى أَرْجُلِنَا، فَنَادَى بِأَعْلَى صَوْتِهِ "" وَيْلٌ لِلأَعْقَابِ مِنَ النَّارِ "". مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا.
பாடம் : 27 அங்கத் தூய்மை செய்யும்போது கால்களைக் கழுவ வேண்டும்; தண்ணீர் தொட்டுத் தடவக் கூடாது.15
163. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் செய்த) ஒரு பயணத்தில் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தார்கள். நாங்கள் அஸ்ர் (தொழுகையின்) நேரத்தை அடைந்து விட்ட நிலையில் எங்களிடம் அவர்கள் வந்துசேர்ந்தார்கள். அப்போது நாங்கள் அங்கத் தூய்மை செய்துகொண்டிருந் தோம். (கால்களைக் கழுவாமல்) கால்களை ஈரக்கையால் தடவிக்கொண்டிருந்தோம்.

இதைக் கண்ணுற்ற நபி (ஸல்) அவர்கள் “(அங்கத் தூய்மையில் கழுவப்படாத) இத்தகைய குதிகால்களுக்கு நரகம்தான்” என்று இரண்டு அல்லது மூன்று தடவைகள் உரத்த குரலில் கூறினார்கள்.

அத்தியாயம் : 4
164. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عَطَاءُ بْنُ يَزِيدَ، عَنْ حُمْرَانَ، مَوْلَى عُثْمَانَ بْنِ عَفَّانَ أَنَّهُ رَأَى عُثْمَانَ دَعَا بِوَضُوءٍ، فَأَفْرَغَ عَلَى يَدَيْهِ مِنْ إِنَائِهِ، فَغَسَلَهُمَا ثَلاَثَ مَرَّاتٍ، ثُمَّ أَدْخَلَ يَمِينَهُ فِي الْوَضُوءِ، ثُمَّ تَمَضْمَضَ، وَاسْتَنْشَقَ، وَاسْتَنْثَرَ، ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلاَثًا وَيَدَيْهِ إِلَى الْمِرْفَقَيْنِ ثَلاَثًا، ثُمَّ مَسَحَ بِرَأْسِهِ، ثُمَّ غَسَلَ كُلَّ رِجْلٍ ثَلاَثًا، ثُمَّ قَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَتَوَضَّأُ نَحْوَ وُضُوئِي هَذَا وَقَالَ "" مَنْ تَوَضَّأَ نَحْوَ وُضُوئِي هَذَا ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ، لاَ يُحَدِّثُ فِيهِمَا نَفْسَهُ، غَفَرَ اللَّهُ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ "".
பாடம் : 28 அங்கத் தூய்மை செய்யும்போது வாய் கொப்புளித்தல் இது தொடர்பாக (நபித்தோழர்கள்) இப்னு அப்பாஸ் (ரலி), அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) ஆகியோர் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார்கள்.
164. உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் முன்னாள் அடிமையான ஹும்ரான் பின் அபான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உஸ்மான் (ரலி) அவர்கள் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி, (தண்ணீர் வந்ததும்) தம் (முன்) கைகளில் மூன்று முறை ஊற்றிக் கழுவினார்கள். பிறகு தமது வலக் கரத்தைப் பாத்திரத்திற் குள் நுழைத்து (தண்ணீர் அள்ளி) வாய்க் கொப்புளித்து, மூக்கிற்கு நீர் செலுத்தி மூக்கைச் சிந்தினார்கள். பிறகு தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள். தம் இரு கைகளையும் முழங்கைவரை மூன்று முறை கழுவினார்கள். பிறகு தலையை ஈரக் கையால் தடவி (மஸ்ஹு செய்திடலா)னார்கள். பிறகு ஒவ்வொரு காலையும் மூன்று முறை கழுவினார்கள்.

பிறகு “(இதோ!) நான் செய்த இந்த அங்கத் தூய்மையைப் போன்றே நபி (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை செய்யக் கண்டேன்” என்று கூறிவிட்டு, “நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்), ‘யார் என்னுடைய இந்த அங்கத் தூய்மையைப் போன்று அங்கத் தூய்மை செய்து, பின்னர் வேறு எந்த எண்ணங்களுக்கும் தமது உள்ளத் தில் இடம் தராமல், இரண்டு ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்கு அவருடைய முன்பாவங்களை அல்லாஹ் மன்னிக்கி றான்’ என்று கூறினார்கள்” என்றார்கள்.

அத்தியாயம் : 4
165. حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ زِيَادٍ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ ـ وَكَانَ يَمُرُّ بِنَا وَالنَّاسُ يَتَوَضَّئُونَ مِنَ الْمِطْهَرَةِ ـ قَالَ أَسْبِغُوا الْوُضُوءَ فَإِنَّ أَبَا الْقَاسِمِ صلى الله عليه وسلم قَالَ "" وَيْلٌ لِلأَعْقَابِ مِنَ النَّارِ "".
பாடம் : 29 குதிகால்களைக் கழுவுதல் இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் அங்கத் தூய்மை செய்யும்போது, (விரலில்) மோதிரம் அணிந்த பகுதியையும் கழுவக்கூடியவராக இருந்தார்கள்.
165. முஹம்மத் பின் ஸியாத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நீர் குவளையில் (தண்ணீர் அள்ளி) மக்கள் அங்கத் தூய்மை செய்துகொண்டி ருந்தபோது (அவ்வழியே) எங்களைக் கடந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் சென்றார் கள். அவர்கள் (எங்களைப் பார்த்து), “அங்கத் தூய்மையை முழுமையாகச் செய்யுங்கள். ஏனெனில், அபுல்காசிம் (முஹம்மத்-ஸல்) அவர்கள் ‘(அங்கத் தூய்மையில்) சரியாகக் கழுவப்படாத குதிகால்களுக்கு நரகம்தான்’ என்று கூறினார்கள்” என்றார்கள்.

அத்தியாயம் : 4
166. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ عُبَيْدِ بْنِ جُرَيْجٍ، أَنَّهُ قَالَ لِعَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ، رَأَيْتُكَ تَصْنَعُ أَرْبَعًا لَمْ أَرَ أَحَدًا مِنْ أَصْحَابِكَ يَصْنَعُهَا. قَالَ وَمَا هِيَ يَا ابْنَ جُرَيْجٍ قَالَ رَأَيْتُكَ لاَ تَمَسُّ مِنَ الأَرْكَانِ إِلاَّ الْيَمَانِيَيْنِ، وَرَأَيْتُكَ تَلْبَسُ النِّعَالَ السِّبْتِيَّةَ، وَرَأَيْتُكَ تَصْبُغُ بِالصُّفْرَةِ، وَرَأَيْتُكَ إِذَا كُنْتَ بِمَكَّةَ أَهَلَّ النَّاسُ إِذَا رَأَوُا الْهِلاَلَ وَلَمْ تُهِلَّ أَنْتَ حَتَّى كَانَ يَوْمُ التَّرْوِيَةِ. قَالَ عَبْدُ اللَّهِ أَمَّا الأَرْكَانُ فَإِنِّي لَمْ أَرَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَمَسُّ إِلاَّ الْيَمَانِيَيْنِ، وَأَمَّا النِّعَالُ السِّبْتِيَّةُ فَإِنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَلْبَسُ النَّعْلَ الَّتِي لَيْسَ فِيهَا شَعَرٌ وَيَتَوَضَّأُ فِيهَا، فَأَنَا أُحِبُّ أَنْ أَلْبَسَهَا، وَأَمَّا الصُّفْرَةُ فَإِنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَصْبُغُ بِهَا، فَأَنَا أُحِبُّ أَنْ أَصْبُغَ بِهَا، وَأَمَّا الإِهْلاَلُ فَإِنِّي لَمْ أَرَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يُهِلُّ حَتَّى تَنْبَعِثَ بِهِ رَاحِلَتُهُ.
பாடம் : 30 காலணி அணிந்திருந்தாலும் இரு கால்களையும் கழுவவே வேண்டும்; காலணிகள்மீது தண்ணீர் தொட்டுத் தடவக் கூடாது.
166. உபைத் பின் ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், “அபூஅப்திர் ரஹ்மான் அவர்களே! நீங்கள் நான்கு காரியங் களைச் செய்வதை நான் பார்க்கிறேன். உங்கள் நண்பர்க(ளான நபித்தோழர்க)ளில் வேறெவரும் அவற்றைச் செய்வதை நான் பார்க்கவில்லை” என்றேன். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “இப்னு ஜுரைஜ்! அவை யாவை?” என்று கேட்டார்கள்.

நான் சொன்னேன்: (கஅபாவைச் சுற்றிவரும்போது அதன் மூலைகளில்) ருக்னுல் யமானீ மற்றும் ஹஜருல் அஸ்வத் ஆகிய இரு மூலைகளை மட்டுமே நீங்கள் தொடுவதைக் கண்டேன். (மற்ற மூலைகளை நீங்கள் தொடுவதில்லை.)

மேலும், முடி அகற்றப்பட்ட தோல் காலணிகளையே நீங்கள் அணிவதை நான் பார்க்கிறேன். நீங்கள் உங்கள் ஆடைக்கு மஞ்சள் நிறச் சாயமிடுவதையே நான் பார்க்கிறேன். மேலும், நீங்கள் மக்காவில் இருக்கும்போது மக்கள் (துல்ஹஜ்) பிறை கண்டவுடன் ‘இஹ்ராம்’ கட்டினாலும், நீங்கள் ‘இஹ்ராம்’ கட்டாமல் துல்ஹஜ் எட்டாம் நாள் (யவ்முத் தர்வியா)வரை இருப்பதைக் கண்டேன் (இவைதான் அந்த நான்கு விஷயங்கள்)”.

அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்:

கஅபாவின் மூலைகளைப் பொறுத்தவரை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருக்னுல் யமானீ, ஹஜருல் அஸ்வத் ஆகிய இரு மூலைகளைத் தவிர வேறெதையும் தொடுவதை நான் கண்டதில்லை (ஆகவே, நானும் அப்படிச் செய்கிறேன்). முடி அகற்றப்பட்ட காலணிகளைப் பொறுத்த வரை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முடியில்லாத காலணிகளை அணிவதையும் அதனுடன் (காலைக் கழுவி) அங்கத் தூய்மை செய்வதையும் நான் பார்த்திருக்கிறேன். ஆகவே, நானும் அதை அணிவதை விரும்புகிறேன்.

மஞ்சள் நிறத்தைப் பொறுத்தவரை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது ஆடைக்கு) அதன் மூலம் சாய மிடுவதை நான் பார்த்திருக்கிறேன். எனவே, அதைக் கொண்டு சாயமிடுவதை நான் விரும்புகிறேன்.

‘இஹ்ராம்’ கட்டுவதைப் பொறுத்த வரையில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனம் பயணத்திற்குத் தயாராகி நிற்கும் (துல்ஹஜ் எட்டாம் நாள்)வரை இஹ்ராம் கட்டுவதை நான் பார்த்ததில்லை (எனவேதான், நானும் எட்டாம் நாள் ‘இஹ்ராம்’ கட்டுகிறேன்).

அத்தியாயம் : 4
167. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنَا خَالِدٌ، عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ، عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لَهُنَّ فِي غُسْلِ ابْنَتِهِ "" ابْدَأْنَ بِمَيَامِنِهَا وَمَوَاضِعِ الْوُضُوءِ مِنْهَا "".
பாடம் : 31 அங்கத் தூய்மையிலும் குளியலி லும் வலப் பக்கத்திலிருந்து ஆரம்பித்தல்
167. உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தம் மக(ள் ஸைனப் (ரலி) இறந்தபோது அவர்க)ளை நீராட்டுவது குறித்துப் பெண்களிடம் கூறுகையில், “அவருடைய வலப் பக்கத்தி லிருந்தும், அங்கத் தூய்மை செய்ய வேண்டிய உறுப்புக்களிலிருந்தும் (கழுவ) ஆரம்பியுங்கள்” என்று சொன்னார்கள்.


அத்தியாயம் : 4
168. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي أَشْعَثُ بْنُ سُلَيْمٍ، قَالَ سَمِعْتُ أَبِي، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُعْجِبُهُ التَّيَمُّنُ فِي تَنَعُّلِهِ وَتَرَجُّلِهِ وَطُهُورِهِ وَفِي شَأْنِهِ كُلِّهِ.
பாடம் : 31 அங்கத் தூய்மையிலும் குளியலி லும் வலப் பக்கத்திலிருந்து ஆரம்பித்தல்
168. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், தாம் காலணி அணிந்துகொள்ளும்போதும் தலைவாரிக் கொள்ளும்போதும் சுத்தம் செய்யும் போதும் தம் அனைத்து வேலைகளிலும் வலப் பக்கத்திலிருந்து தொடங்குவதையே விரும்பிவந்தார்கள்.16

அத்தியாயம் : 4
169. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّهُ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَحَانَتْ صَلاَةُ الْعَصْرِ، فَالْتَمَسَ النَّاسُ الْوَضُوءَ فَلَمْ يَجِدُوهُ، فَأُتِيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِوَضُوءٍ، فَوَضَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي ذَلِكَ الإِنَاءِ يَدَهُ، وَأَمَرَ النَّاسَ أَنْ يَتَوَضَّئُوا مِنْهُ. قَالَ فَرَأَيْتُ الْمَاءَ يَنْبُعُ مِنْ تَحْتِ أَصَابِعِهِ حَتَّى تَوَضَّئُوا مِنْ عِنْدِ آخِرِهِمْ.
பாடம் : 32 தொழுகையின் நேரம் வந்ததும் அங்கத் தூய்மை செய்வதற் காகத் தண்ணீரைத் தேடுதல் (ஒரு பயணத்தின்போது) சுப்ஹு தொழுகையின் நேரம் வந்ததும் (அங்கத் தூய்மை செய்வதற்காகத்) தண்ணீர் தேடப்பட்டது. ஆனால், தண்ணீர் கிடைக்க வில்லை. அப்போதுதான் ‘தயம்மும்’ (தொடர்பான இறைவசனம்) அருளப் பெற்றது என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
169. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) அஸ்ர் தொழுகையின் நேரம் நெருங்கியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நான் பார்த்தேன். மக்கள் அங்கத் தூய்மை செய்வதற்குத் தண்ணீரைத் தேடினார்கள். தண்ணீர் கிடைக்கவில்லை. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு பாத்திரத்தில் (சிறிது) தண்ணீர் கொண்டுவரப்பட்டது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் பாத்திரத்தினுள் தமது கரத்தை வைத்து, அப்பாத்திரத்திலிருந்து அங்கத் தூய்மை செய்யுமாறு மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் விரல்களுக்குக் கீழேயிருந்து தண்ணீர் சுரப்பதை நான் கண்டேன். மக்களில் இறுதி ஆள்வரை அனைவரும் அங்கத் தூய்மை செய்து முடித்தார்கள்.

அத்தியாயம் : 4
170. حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ عَاصِمٍ، عَنِ ابْنِ سِيرِينَ، قَالَ قُلْتُ لِعَبِيدَةَ عِنْدَنَا مِنْ شَعَرِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَصَبْنَاهُ مِنْ قِبَلِ أَنَسٍ، أَوْ مِنْ قِبَلِ أَهْلِ أَنَسٍ فَقَالَ لأَنْ تَكُونَ عِنْدِي شَعَرَةٌ مِنْهُ أَحَبُّ إِلَىَّ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا.
பாடம் : 33 மனித முடியைக் கழுவிய தண்ணீர், நாய் வாய்வைத்த தண்ணீர், பள்ளிவாசலில் நாய் கடந்துசென்ற இடம் (ஆகிய வற்றின் சட்டம்).17 மனித முடியிலிருந்து கயிறுகளும் நூல்களும் திரித்தெடுப்பதை அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் குற்றமாகக் கருதவில்லை. தண்ணீர் உள்ள ஒரு பாத்திரத்தில் நாய் வாய்வைத்துவிட, அந்தத் தண்ணீரைத் தவிர வேறு தண்ணீர் இல்லையென்றால், அந்தத் தண்ணீரால் அங்கத் தூய்மை செய்யலாம் என முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறிய) இந்தச் சட்டம், “உங்களுக்குத் தண்ணீர் கிடைக்க வில்லையானால், சுத்தமான மண்ணால் ‘தயம்மும்’ செய்துகொள்ளுங்கள்” (4:43) எனும் இறைவசனத்திலிருந்தே பெறப்படுகிறது. (ஏனெனில், ‘தண்ணீர்’ என்று பொதுவாக அல்லாஹ் கூறுவதால் நாய் வாய்வைத்த) இந்தத் தண்ணீரும் தண்ணீர்தான். என்றாலும், அங்கத் தூய்மை செய்பவரின் மனத்தில் உறுத்தல் ஏற்படுகிறது. ஆகவே, அந்தத் தண்ணீரில் அங்கத் தூய்மை செய்பவர் ‘தயம்மும்’ செய்து கொள்ளவும் வேண்டும்.
170. முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அபீதா (பின் அம்ர் அஸ்ஸல் மானீ-ரஹ்) அவர்களிடம், ‘அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து’ அல்லது ‘அனஸின் குடும்பத்தாரிடமிருந்து’ நாங்கள் பெற்ற நபி (ஸல்) அவர்களின் சில முடிகள் எங்களி டம் இருக்கின்றன என்று சொன்னேன்.

அதற்கு அபீதா (ரஹ்) அவர்கள், “நபி (ஸல்) அவர்களின் ஒரு முடி என்னிடம் இருப்பது உலகமும் அதில் உள்ளவற்றை யும்விட எனக்கு மிகவும் உவப்பான தாகும்” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 4
171. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، قَالَ أَخْبَرَنَا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنَا عَبَّادٌ، عَنِ ابْنِ عَوْنٍ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمَّا حَلَقَ رَأْسَهُ كَانَ أَبُو طَلْحَةَ أَوَّلَ مَنْ أَخَذَ مِنْ شَعَرِهِ.
பாடம் : 33 மனித முடியைக் கழுவிய தண்ணீர், நாய் வாய்வைத்த தண்ணீர், பள்ளிவாசலில் நாய் கடந்துசென்ற இடம் (ஆகிய வற்றின் சட்டம்).17 மனித முடியிலிருந்து கயிறுகளும் நூல்களும் திரித்தெடுப்பதை அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் குற்றமாகக் கருதவில்லை. தண்ணீர் உள்ள ஒரு பாத்திரத்தில் நாய் வாய்வைத்துவிட, அந்தத் தண்ணீரைத் தவிர வேறு தண்ணீர் இல்லையென்றால், அந்தத் தண்ணீரால் அங்கத் தூய்மை செய்யலாம் என முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறிய) இந்தச் சட்டம், “உங்களுக்குத் தண்ணீர் கிடைக்க வில்லையானால், சுத்தமான மண்ணால் ‘தயம்மும்’ செய்துகொள்ளுங்கள்” (4:43) எனும் இறைவசனத்திலிருந்தே பெறப்படுகிறது. (ஏனெனில், ‘தண்ணீர்’ என்று பொதுவாக அல்லாஹ் கூறுவதால் நாய் வாய்வைத்த) இந்தத் தண்ணீரும் தண்ணீர்தான். என்றாலும், அங்கத் தூய்மை செய்பவரின் மனத்தில் உறுத்தல் ஏற்படுகிறது. ஆகவே, அந்தத் தண்ணீரில் அங்கத் தூய்மை செய்பவர் ‘தயம்மும்’ செய்து கொள்ளவும் வேண்டும்.
171. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜில்) தமது தலைமுடியை மழித்த போது, அபூதல்ஹா (ரலி) அவர்களே முதன் முதலில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முடிகளில் சிலவற்றை எடுத்து (பத்திரப்படுத்தி)க்கொண்டார்கள்.


அத்தியாயம் : 4
172. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا شَرِبَ الْكَلْبُ فِي إِنَاءِ أَحَدِكُمْ فَلْيَغْسِلْهُ سَبْعًا "".
பாடம் : 33 மனித முடியைக் கழுவிய தண்ணீர், நாய் வாய்வைத்த தண்ணீர், பள்ளிவாசலில் நாய் கடந்துசென்ற இடம் (ஆகிய வற்றின் சட்டம்).17 மனித முடியிலிருந்து கயிறுகளும் நூல்களும் திரித்தெடுப்பதை அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் குற்றமாகக் கருதவில்லை. தண்ணீர் உள்ள ஒரு பாத்திரத்தில் நாய் வாய்வைத்துவிட, அந்தத் தண்ணீரைத் தவிர வேறு தண்ணீர் இல்லையென்றால், அந்தத் தண்ணீரால் அங்கத் தூய்மை செய்யலாம் என முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறிய) இந்தச் சட்டம், “உங்களுக்குத் தண்ணீர் கிடைக்க வில்லையானால், சுத்தமான மண்ணால் ‘தயம்மும்’ செய்துகொள்ளுங்கள்” (4:43) எனும் இறைவசனத்திலிருந்தே பெறப்படுகிறது. (ஏனெனில், ‘தண்ணீர்’ என்று பொதுவாக அல்லாஹ் கூறுவதால் நாய் வாய்வைத்த) இந்தத் தண்ணீரும் தண்ணீர்தான். என்றாலும், அங்கத் தூய்மை செய்பவரின் மனத்தில் உறுத்தல் ஏற்படுகிறது. ஆகவே, அந்தத் தண்ணீரில் அங்கத் தூய்மை செய்பவர் ‘தயம்மும்’ செய்து கொள்ளவும் வேண்டும்.
172. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவருடைய பாத்திரத் தில் நாய் (வாய்வைத்துக்) குடித்துவிடு மானால், அவர் அந்தப் பாத்திரத்தை ஏழு முறை கழுவட்டும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 4
173. حَدَّثَنَا إِسْحَاقُ، أَخْبَرَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، سَمِعْتُ أَبِي، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم "" أَنَّ رَجُلاً رَأَى كَلْبًا يَأْكُلُ الثَّرَى مِنَ الْعَطَشِ، فَأَخَذَ الرَّجُلُ خُفَّهُ فَجَعَلَ يَغْرِفُ لَهُ بِهِ حَتَّى أَرْوَاهُ، فَشَكَرَ اللَّهُ لَهُ فَأَدْخَلَهُ الْجَنَّةَ "".
பாடம் : 33 மனித முடியைக் கழுவிய தண்ணீர், நாய் வாய்வைத்த தண்ணீர், பள்ளிவாசலில் நாய் கடந்துசென்ற இடம் (ஆகிய வற்றின் சட்டம்).17 மனித முடியிலிருந்து கயிறுகளும் நூல்களும் திரித்தெடுப்பதை அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் குற்றமாகக் கருதவில்லை. தண்ணீர் உள்ள ஒரு பாத்திரத்தில் நாய் வாய்வைத்துவிட, அந்தத் தண்ணீரைத் தவிர வேறு தண்ணீர் இல்லையென்றால், அந்தத் தண்ணீரால் அங்கத் தூய்மை செய்யலாம் என முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறிய) இந்தச் சட்டம், “உங்களுக்குத் தண்ணீர் கிடைக்க வில்லையானால், சுத்தமான மண்ணால் ‘தயம்மும்’ செய்துகொள்ளுங்கள்” (4:43) எனும் இறைவசனத்திலிருந்தே பெறப்படுகிறது. (ஏனெனில், ‘தண்ணீர்’ என்று பொதுவாக அல்லாஹ் கூறுவதால் நாய் வாய்வைத்த) இந்தத் தண்ணீரும் தண்ணீர்தான். என்றாலும், அங்கத் தூய்மை செய்பவரின் மனத்தில் உறுத்தல் ஏற்படுகிறது. ஆகவே, அந்தத் தண்ணீரில் அங்கத் தூய்மை செய்பவர் ‘தயம்மும்’ செய்து கொள்ளவும் வேண்டும்.
173. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(முற்காலத்தில்) ஒரு நாய் தாகத்தால் (தவித்து) ஈர மண்ணை (நக்கி) உண்டு கொண்டிருப்பதை ஒரு மனிதர் பார்த்தார். உடனே அவர் (தாம் அணிந்திருந்த தோல்) காலுறையை எடுத்து அதில் தண்ணீர் அள்ளிவந்து, அந்நாய் தாகம் தீரும்வரை கொடுத்தார். எனவே அல்லாஹ், அவரது நற்செயலைப் பாராட்டி (ஏற்று) அவரைச் சொர்க்கத்தில் அனுமதித்தான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 4
174. وَقَالَ أَحْمَدُ بْنُ شَبِيبٍ حَدَّثَنَا أَبِي، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ حَدَّثَنِي حَمْزَةُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، قَالَ كَانَتِ الْكِلاَبُ تَبُولُ وَتُقْبِلُ وَتُدْبِرُ فِي الْمَسْجِدِ فِي زَمَانِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَلَمْ يَكُونُوا يَرُشُّونَ شَيْئًا مِنْ ذَلِكَ.
பாடம் : 33 மனித முடியைக் கழுவிய தண்ணீர், நாய் வாய்வைத்த தண்ணீர், பள்ளிவாசலில் நாய் கடந்துசென்ற இடம் (ஆகிய வற்றின் சட்டம்).17 மனித முடியிலிருந்து கயிறுகளும் நூல்களும் திரித்தெடுப்பதை அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் குற்றமாகக் கருதவில்லை. தண்ணீர் உள்ள ஒரு பாத்திரத்தில் நாய் வாய்வைத்துவிட, அந்தத் தண்ணீரைத் தவிர வேறு தண்ணீர் இல்லையென்றால், அந்தத் தண்ணீரால் அங்கத் தூய்மை செய்யலாம் என முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறிய) இந்தச் சட்டம், “உங்களுக்குத் தண்ணீர் கிடைக்க வில்லையானால், சுத்தமான மண்ணால் ‘தயம்மும்’ செய்துகொள்ளுங்கள்” (4:43) எனும் இறைவசனத்திலிருந்தே பெறப்படுகிறது. (ஏனெனில், ‘தண்ணீர்’ என்று பொதுவாக அல்லாஹ் கூறுவதால் நாய் வாய்வைத்த) இந்தத் தண்ணீரும் தண்ணீர்தான். என்றாலும், அங்கத் தூய்மை செய்பவரின் மனத்தில் உறுத்தல் ஏற்படுகிறது. ஆகவே, அந்தத் தண்ணீரில் அங்கத் தூய்மை செய்பவர் ‘தயம்மும்’ செய்து கொள்ளவும் வேண்டும்.
174. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களது காலத்தில், (வெளியே) சிறுநீர் கழித்துவிட்டு, (மண்தரையாக இருந்த) பள்ளிவாசலுக்குள் நாய்கள் வந்து கொண்டும் போய்க்கொண்டும் இருந்தன. இதற்காக மக்கள் (பள்ளிவாசலில் தண்ணீர்) எதையும் தெளிப்பவர்களாக இருக்க வில்லை.


அத்தியாயம் : 4
175. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ ابْنِ أَبِي السَّفَرِ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ سَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ "" إِذَا أَرْسَلْتَ كَلْبَكَ الْمُعَلَّمَ فَقَتَلَ فَكُلْ، وَإِذَا أَكَلَ فَلاَ تَأْكُلْ، فَإِنَّمَا أَمْسَكَهُ عَلَى نَفْسِهِ "". قُلْتُ أُرْسِلُ كَلْبِي فَأَجِدُ مَعَهُ كَلْبًا آخَرَ قَالَ "" فَلاَ تَأْكُلْ، فَإِنَّمَا سَمَّيْتَ عَلَى كَلْبِكَ، وَلَمْ تُسَمِّ عَلَى كَلْبٍ آخَرَ "".
பாடம் : 33 மனித முடியைக் கழுவிய தண்ணீர், நாய் வாய்வைத்த தண்ணீர், பள்ளிவாசலில் நாய் கடந்துசென்ற இடம் (ஆகிய வற்றின் சட்டம்).17 மனித முடியிலிருந்து கயிறுகளும் நூல்களும் திரித்தெடுப்பதை அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் குற்றமாகக் கருதவில்லை. தண்ணீர் உள்ள ஒரு பாத்திரத்தில் நாய் வாய்வைத்துவிட, அந்தத் தண்ணீரைத் தவிர வேறு தண்ணீர் இல்லையென்றால், அந்தத் தண்ணீரால் அங்கத் தூய்மை செய்யலாம் என முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறிய) இந்தச் சட்டம், “உங்களுக்குத் தண்ணீர் கிடைக்க வில்லையானால், சுத்தமான மண்ணால் ‘தயம்மும்’ செய்துகொள்ளுங்கள்” (4:43) எனும் இறைவசனத்திலிருந்தே பெறப்படுகிறது. (ஏனெனில், ‘தண்ணீர்’ என்று பொதுவாக அல்லாஹ் கூறுவதால் நாய் வாய்வைத்த) இந்தத் தண்ணீரும் தண்ணீர்தான். என்றாலும், அங்கத் தூய்மை செய்பவரின் மனத்தில் உறுத்தல் ஏற்படுகிறது. ஆகவே, அந்தத் தண்ணீரில் அங்கத் தூய்மை செய்பவர் ‘தயம்மும்’ செய்து கொள்ளவும் வேண்டும்.
175. அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியாவது:

(நாய் மூலம் வேட்டையாடுவதைப் பற்றி) நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் “வேட்டைக்காகப் பயிற்சி அளிக்கப்பட்ட நாயை நீங்கள் அனுப்பிவைத்து, அது (பிராணிகளைக் கவ்விக்) கொன்றுவிட்டாலும் அதை நீங்கள் உண்ணலாம். (அந்தப் பிராணியை) நாய் தின்றிருக்குமானால் அதை நீங்கள் உண்ணாதீர்கள். ஏனெனில், அது (அப்பிராணியை) தனக்காகவே (கவ்வி) வைத்துக் கொண்டுள்ளது” என்று கூறினார்கள்.

நான், “எனது நாயை வேட்டையாட அனுப்புகிறேன்; அதனுடன் மற்றொரு நாயையும் காண்கிறேன் (இவ்விரண்டில் பிராணியைப் பிடித்தது எது என்று எனக்குத் தெரியாது. இந்நிலையில் என்ன செய்வது)?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் உங்கள் நாயைத்தான் அல்லாஹ்வின் பெயர் (பிஸ்மில்லாஹ்) கூறி அனுப்பினீர்களே தவிர, மற்றொரு நாயை அல்லாஹ்வின் பெயர் கூறி அனுப்பவில்லை; எனவே, (அதை) உண்ணாதீர்கள்” என்று சொன்னார்கள்.18

அத்தியாயம் : 4
176. حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لاَ يَزَالُ الْعَبْدُ فِي صَلاَةٍ مَا كَانَ فِي الْمَسْجِدِ يَنْتَظِرُ الصَّلاَةَ، مَا لَمْ يُحْدِثْ "". فَقَالَ رَجُلٌ أَعْجَمِيٌّ مَا الْحَدَثُ يَا أَبَا هُرَيْرَةَ قَالَ الصَّوْتُ. يَعْنِي الضَّرْطَةَ.
பாடம் : 34 முன், பின் இரு துவாரங்களி லிருந்து ஏதேனும் வெளியேறி னால் மட்டுமே அங்கத் தூய்மை முறியும் என்று கூறுவோர்19 ஏனெனில் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: அல்லது உங்களில் ஒருவர் கழிப்பிடத்திலிருந்து (இயற்கைக் கடனை முடித்துவிட்டு) வந்தால்... (தொழுகைக்காக அங்கத் தூய்மை செய்துகொள்ள வேண்டும்.) (4:43)20 அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவரது பின் துவாரத்தி லிருந்து புழுவோ, அல்லது முன் துவாரத் திலிருந்து பேன் போன்ற சிறு பூச்சியோ வெளியேறினால் (அவரது அங்கத் தூய்மை நீங்கிவிடுகிறது.) அவர் மீண்டும் அங்கத் தூய்மை செய்ய வேண்டும். ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருவர் தொழுகையில் (சப்தமிட்டுச்) சிரித்தால் அவர் அந்தத் தொழுகையைத்தான் திரும்பத் தொழ வேண்டுமே தவிர, திரும்பவும் அங்கத் தூய்மை செய்ய வேண்டியதில்லை. ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவர் (தமது உடலிலுள்ள) முடியையோ நகங்களையோ களைவதால், அல்லது தமது காலுறையைக் கழற்றி விடுவதால் அவர் மீண்டும் அங்கத் தூய்மை செய்ய வேண்டியதில்லை. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: சிறு துடக்கு (தூய்மைக் கேடு) ஏற்பட்டால்தான் அங்கத் தூய்மையைத் திரும்பச் செய்ய வேண்டும். ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘தாத்துர் ரிகாஉ’ போரில் நபி (ஸல்) அவர்களும் இருந்தார்கள். அப்போரில் (முஸ்லிம்களில்) ஒருவர்மீது அம்பு பாய்ந்தது. அவருக்குக் கடுமையான இரத்தக் கசிவு ஏற்பட்டது. ஆயினும், அவர் ருகூஉ, சஜ்தா செய்து தொழுகையைத் தொடர்ந்தார். ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: தங்களின் உடலில் காயங்கள் இருக்கவே (நபித்தோழர்களான) முஸ்லிம்கள் தொழுதுகொண்டேயிருந்தார்கள். இரத்தம் வெளியேறுவதன் காரணமாக அங்கத் தூய்மையைத் திரும்பச் செய்ய வேண்டியதில்லை என்று தாவூஸ் பின் கைசான் (ரஹ்), முஹம்மத் பின் அலீ (ரஹ்), அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) உள்ளிட்ட ஹிஜாஸ்வாசிகள் கூறியுள்ளனர். இப்னு உமர் (ரலி) அவர்கள் (தமது உடலிலிருந்த) சிறு கொப்புளத்தை நசுக்கி னார்கள். அதிலிருந்து இரத்தம் வெளி யானது. ஆனால், அவர்கள் திரும்பவும் அங்கத் தூய்மை செய்யவில்லை. அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்களின் உமிழ் நீரில் இரத்தம் வந்தது. (அதற்காக அங்கத் தூய்மையைத் திரும்பச் செய்யாமலேயே) அவர்கள் தொழுகை யைத் தொடர்ந்துகொண்டிருந்தார்கள். இப்னு உமர் (ரலி), ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) ஆகியோர் கூறினர்: ஒருவர் (நோய்க்காக) குருதி உறிஞ்சி எடுப்பாரானால், அவர் அந்த இடத்தை மட்டும் கழுவினால் போதும் (மீண்டும் அங்கத் தூய்மை செய்ய வேண்டிய தில்லை).
176. சயீத் அல்மக்புரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், “ஓர் அடியார் (அங்கத் தூய்மை செய்து கூட்டுத்) தொழுகையை எதிர்பார்த்தபடி பள்ளிவாசலில் இருக்கும் நேரமெல்லாம் அவர் தொழுகையில் இருப்பவராகவே கருதப்படுகிறாôர்; அவருக்கு சிறு துடக்கு (ஹதஸ்) ஏற்படாத வரை” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அப்போது அரபி மொழி (நன்கு) தெரியாத ஒருவர், “ஹதஸ் என்றால் என்ன, அபூஹுரைரா அவர்களே!?” என்று கேட்டார். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள், “பின்துவாரத்திலிருந்து வெளியாகும் காற்று (சப்தம்)” என்று பதிலளித் தார்கள்.


அத்தியாயம் : 4