1244. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ مُحَمَّدَ بْنَ الْمُنْكَدِرِ، قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ لَمَّا قُتِلَ أَبِي جَعَلْتُ أَكْشِفُ الثَّوْبَ عَنْ وَجْهِهِ أَبْكِي، وَيَنْهَوْنِي عَنْهُ وَالنَّبِيُّ صلى الله عليه وسلم لاَ يَنْهَانِي، فَجَعَلَتْ عَمَّتِي فَاطِمَةُ تَبْكِي، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" تَبْكِينَ أَوْ لاَ تَبْكِينَ، مَا زَالَتِ الْمَلاَئِكَةُ تُظِلُّهُ بِأَجْنِحَتِهَا حَتَّى رَفَعْتُمُوهُ "". تَابَعَهُ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي ابْنُ الْمُنْكَدِرِ سَمِعَ جَابِرًا ـ رضى الله عنه ـ.
பாடம் : 3 பிரேதத்திற்கு ‘கஃபன்’ (சவக் கோடி) அணிவிக்கப்பட்டபின் அங்கு செல்வது
1244. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் தந்தை (உஹுத் போரில்) கொல்லப்பட்டுக் கிடந்தபோது, நான் அழுது கொண்டே அவரது முகத்தின் மீதிருந்த துணியை அகற்றலானேன். அப்போது (அங்கிருந்தவர்கள்) என்னைத் தடுத்தார் கள். ஆனால், நபி (ஸல்) அவர்கள் என்னைத் தடுக்கவில்லை. பிறகு எனது மாமி ஃபாத்திமா (ரலி) அவர்களும் அழ ஆரம்பித்துவிட்டார்கள்.

அப்போது, “நீங்கள் அழுதாலும் அழாவிட்டாலும் நீங்கள் அவரைத் தூக்கும்வரை வானவர்கள் அவருக்குத் தங்களின் இறக்கைகளால் தொடர்ந்து நிழல் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 23
1245. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَعَى النَّجَاشِيَّ فِي الْيَوْمِ الَّذِي مَاتَ فِيهِ، خَرَجَ إِلَى الْمُصَلَّى، فَصَفَّ بِهِمْ وَكَبَّرَ أَرْبَعًا.
பாடம் : 4 இறப்புச் செய்தியை ஒருவர் (ஆளனுப்பாமல்) தாமே உரியவர்களுக்கு அறிவித்தல்
1245. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், (அபிசீனிய மன்னர் நஜாஷீ (நீகஸ்) இறந்த அன்றே அவரது மரணச் செய்தியை (மக்க ளுக்கு) அறிவித்தார்கள். பிறகு தொழும் திடலுக்குப் புறப்பட்டுச் சென்று மக்களை வரிசைப்படுத்தி நிற்கவைத்து, நான்கு தக்பீர்கள் கூறி (ஜனாஸா தொழுகை நடத்தி)னார்கள்.


அத்தியாயம் : 23
1246. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَخَذَ الرَّايَةَ زَيْدٌ فَأُصِيبَ، ثُمَّ أَخَذَهَا جَعْفَرٌ فَأُصِيبَ، ثُمَّ أَخَذَهَا عَبْدُ اللَّهِ بْنُ رَوَاحَةَ فَأُصِيبَ ـ وَإِنَّ عَيْنَىْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لَتَذْرِفَانِ ـ ثُمَّ أَخَذَهَا خَالِدُ بْنُ الْوَلِيدِ مِنْ غَيْرِ إِمْرَةٍ فَفُتِحَ لَهُ ""
பாடம் : 4 இறப்புச் செய்தியை ஒருவர் (ஆளனுப்பாமல்) தாமே உரியவர்களுக்கு அறிவித்தல்
1246. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“(மூத்தா போரில்) ஸைத் (ரலி) கொடியைப் பற்றியிருந்தார். அவர் கொல்லப் பட்டார். பிறகு அதை ஜஅஃபர் (ரலி) பற்றினார். அவரும் கொல்லப்பட்டார். பிறகு அதை அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) பற்றினார். பிறகு அவரும் கொல் லப்பட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

“பிறகு, (ஏற்கெனவே) நியமிக்கப்படா திருந்த காலித் பின் வலீத் (ரலி) அக் கொடியைப் பற்றினார். அவருக்கே வெற்றி கிடைத்தது” என்றும் நபியவர்கள் கூறினார்கள்.6

அத்தியாயம் : 23
1247. حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ الشَّيْبَانِيِّ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ مَاتَ إِنْسَانٌ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَعُودُهُ فَمَاتَ بِاللَّيْلِ فَدَفَنُوهُ لَيْلاً، فَلَمَّا أَصْبَحَ أَخْبَرُوهُ فَقَالَ "" مَا مَنَعَكُمْ أَنْ تُعْلِمُونِي "". قَالُوا كَانَ اللَّيْلُ فَكَرِهْنَا ـ وَكَانَتْ ظُلْمَةٌ ـ أَنْ نَشُقَّ عَلَيْكَ. فَأَتَى قَبْرَهُ فَصَلَّى عَلَيْهِ.
பாடம் : 5 இறுதி (ஜனாஸா) தொழுகையை(த் தலைவருக்கு) அறிவித்தல் “நீங்கள் (ஜனாஸா தொழுதபோது) எனக்குத் தகவல் அளித்திருக்கக் கூடாதா” என நபி (ஸல்) அவர்கள் (ஒரு முறை) கேட்டார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.7
1247. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நோயுற்றிருந்த) ஒருவரை நபி (ஸல்) அவர்கள் வழக்கமாக நலம் விசாரிப்ப வர்களாக இருந்தார்கள். ஒரு நாள் இரவு அவர் இறந்துவிட்டார். அவரை மக்கள் இரவிலேயே அடக்கம் செய்து விட்டனர். மறுநாள் காலையில் நபி (ஸல்) அவர்களுக்கு இச்செய்தியை மக்கள் தெரிவித்ததும், “இதை அப் போதே எனக்கு நீங்கள் அறிவிக்காத தன் காரணமென்ன?” என்று கேட் டார்கள்.

அதற்கு மக்கள், “கடுமையான இருள் சூழ்ந்த இரவு நேரமாக இருந்ததால் உங்களுக்குச் சிரமம் கொடுக்க நாங்கள் விரும்பவில்லை” என்றனர். உடனே நபி (ஸல்) அவர்கள், அவரது அடக்கத் தலத்திற்கு (கப்று) வந்து இறுதித் தொழுகை தொழுவித்தார்கள்.8

அத்தியாயம் : 23
1248. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَا مِنَ النَّاسِ مِنْ مُسْلِمٍ يُتَوَفَّى لَهُ ثَلاَثٌ لَمْ يَبْلُغُوا الْحِنْثَ، إِلاَّ أَدْخَلَهُ اللَّهُ الْجَنَّةَ بِفَضْلِ رَحْمَتِهِ إِيَّاهُمْ "".
பாடம் : 6 தம் குழந்தை இறந்தும் பொறுமையுடன் இறைவெகுமதியை எதிர்பார்ப்பவரின் சிறப்பு அல்லாஹ் கூறுகின்றான்: பொறுமை யாளர்களுக்கு (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக! (2:155)
1248. நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்:

மனிதர்களில் ஒரு முஸ்லிமுக்கு, பருவமடையாத மூன்று (குழந்தைகள்) இறந்துவிட்டால், அக்குழந்தைகளின் மீது அல்லாஹ் கொண்டுள்ள கருணை யின் புண்ணியத்தால், அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் நுழையச் செய்யாமல் இருப்பதில்லை.9

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 23
1249. حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الأَصْبَهَانِيِّ، عَنْ ذَكْوَانَ، عَنْ أَبِي سَعِيدٍ، رضى الله عنه أَنَّ النِّسَاءَ، قُلْنَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم اجْعَلْ لَنَا يَوْمًا. فَوَعَظَهُنَّ، وَقَالَ " أَيُّمَا امْرَأَةٍ مَاتَ لَهَا ثَلاَثَةٌ مِنَ الْوَلَدِ كَانُوا حِجَابًا مِنَ النَّارِ ". قَالَتِ امْرَأَةٌ وَاثْنَانِ. قَالَ " وَاثْنَانِ ".
பாடம் : 6 தம் குழந்தை இறந்தும் பொறுமையுடன் இறைவெகுமதியை எதிர்பார்ப்பவரின் சிறப்பு அல்லாஹ் கூறுகின்றான்: பொறுமை யாளர்களுக்கு (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக! (2:155)
1249. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

பெண்கள் நபி (ஸல்) அவர்களிடம் (வந்து), “எங்களுக்கும் ஒரு நாள் (உபதேசத்திற்காக) ஒதுக்குங்களேன்” எனக் கேட்டுக்கொண்டார்கள். அவ் வாறே நபி (ஸல்) அவர்கள், பெண் களுக்கு ஒரு நாள் (ஒதுக்கி) உபதேசம் செய்தார்கள்.

அதில் “ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் இறந்துவிட்டால், அவர்கள் அப்பெண்ணை நரகத்திலிருந்து காக்கும் திரையாக இருப்பார்கள்” என்று கூறினார்கள். ஒரு பெண், “இரு குழந்தைகள் இறந்தால்...?” எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “இரு குழந்தைகள் இறந்தாலும்தான்” என்றார்கள்.


அத்தியாயம் : 23
1250. وَقَالَ شَرِيكٌ عَنِ ابْنِ الأَصْبَهَانِيِّ، حَدَّثَنِي أَبُو صَالِحٍ، عَنْ أَبِي سَعِيدٍ، وَأَبِي، هُرَيْرَةَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ أَبُو هُرَيْرَةَ " لَمْ يَبْلُغُوا الْحِنْثَ ".
பாடம் : 6 தம் குழந்தை இறந்தும் பொறுமையுடன் இறைவெகுமதியை எதிர்பார்ப்பவரின் சிறப்பு அல்லாஹ் கூறுகின்றான்: பொறுமை யாளர்களுக்கு (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக! (2:155)
1250. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடரில் அபூசயீத் (ரலி), அபூஹுரைரா (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளது. அதில் அபூஹுரைரா (ரலி) அவர்கள், ‘பருவமடையாத (குழந்தைகள்)’ என்று கூறியதாக இடம் பெற்றுள்ளது.


அத்தியாயம் : 23
1251. حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ سَمِعْتُ الزُّهْرِيَّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ يَمُوتُ لِمُسْلِمٍ ثَلاَثَةٌ مِنَ الْوَلَدِ، فَيَلِجَ النَّارَ إِلاَّ تَحِلَّةَ الْقَسَمِ "". قَالَ أَبُو عَبْدِ اللَّهِ {وَإِنْ مِنْكُمْ إِلاَّ وَارِدُهَا}.
பாடம் : 6 தம் குழந்தை இறந்தும் பொறுமையுடன் இறைவெகுமதியை எதிர்பார்ப்பவரின் சிறப்பு அல்லாஹ் கூறுகின்றான்: பொறுமை யாளர்களுக்கு (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக! (2:155)
1251. நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்:

ஒரு முஸ்லிமுடைய மூன்று குழந் தைகள் இறந்துவிட்டால், (எல்லாருமே நரகத்தைக் கடந்து சென்றாக வேண்டும் என்ற) சத்தியத்தை நிறைவேற்றும் வகையில், அந்த நேரம் மட்டுமே தவிர (வேறு சமயத்தில்) அவர் நரகத்தின் பக்கம் செல்லவேமாட்டார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: (சத்தியத்தை நிறைவேற்றல் என்பது,) “உங்களில் யாரும் அ(ந்த நரகத்)தைக் கடக்காமல் இருக்க இயலாது” (19:71) எனும் வசனத்தைக் குறிக்கிறது.

அத்தியாயம் : 23
1252. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا ثَابِتٌ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ مَرَّ النَّبِيُّ صلى الله عليه وسلم بِامْرَأَةٍ عِنْدَ قَبْرٍ وَهِيَ تَبْكِي فَقَالَ "" اتَّقِي اللَّهَ وَاصْبِرِي "".
பாடம் : 7 அடக்கத் தலத்தின் அருகில் இருக்கும் பெண்ணிடம், “நீ பொறுமையாயிரு” என ஒருவர் கூறுவது
1252. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அடக்கத் தலத்தின் (கப்று) அருகில் அழுதுகொண்டிருந்த ஒரு பெண்ணைக் கடந்து சென்ற நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம், “அல்லாஹ்வைப் பயந்துகொள்; பொறுமையாயிரு” எனக் கூறினார்கள்.

அத்தியாயம் : 23
1253. حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَيُّوبَ السَّخْتِيَانِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أُمِّ عَطِيَّةَ الأَنْصَارِيَّةِ ـ رضى الله عنها ـ قَالَتْ دَخَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ تُوُفِّيَتِ ابْنَتُهُ فَقَالَ "" اغْسِلْنَهَا ثَلاَثًا أَوْ خَمْسًا أَوْ أَكْثَرَ مَنْ ذَلِكَ إِنْ رَأَيْتُنَّ ذَلِكَ بِمَاءٍ وَسِدْرٍ، وَاجْعَلْنَ فِي الآخِرَةِ كَافُورًا أَوْ شَيْئًا مِنْ كَافُورٍ، فَإِذَا فَرَغْتُنَّ فَآذِنَّنِي "". فَلَمَّا فَرَغْنَا آذَنَّاهُ فَأَعْطَانَا حِقْوَهُ فَقَالَ "" أَشْعِرْنَهَا إِيَّاهُ "". تَعْنِي إِزَارَهُ.
பாடம் : 8 இலந்தை இலை கலந்த நீரால் சடலத்தை நீராட்டி அங்கத் தூய்மை (உளூ) செய்வித்தல் சயீத் பின் ஸைத் (ரலி) அவர்களு டைய மகன் இறந்ததும் சடலத்துக்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் நறுமணம் பூசி அவரைச் சுமந்து சென்றார்கள். (இதன் காரணமாக உளூ முறிந்துவிடாத தால் புதிதாக) அங்கத் தூய்மை செய்யாம லேயே இறுதித் தொழுகை நடத்தி னார்கள்.10 முஸ்லிம் உயிருடனிருக்கும்போதும் இறந்துவிட்ட பிறகும் அசுத்தமாவ தில்லை என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். (இறந்துவிட்ட முஸ்லிம்) அசுத்தம் என்றிருந்தால் நான் அந்தச் சடலத்தைத் தொட்டிருக்கமாட்டேன் என சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறி னார்கள். மேலும், “இறைநம்பிக்கை யாளர் அசுத்தமாவதில்லை” என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
1253. உம்மு அ(த்)திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் புதல்வி இறந்தபோது எங்களிடம் வந்து, “அவரை இலந்தை இலை கலந்த நீரால் மூன்று அல்லது ஐந்து முறை, தேவையெனக் கருதினால் அதற்கு அதிகமான தடவைகள் நீராட்டுங்கள்; இறுதியில் ‘கற்பூரத்தை’ அல்லது ‘கற்பூரத்தில் சிறிதளவை’ச் சேர்த்துக்கொள்ளுங் கள்; நீராட்டி முடித்ததும் எனக்கு அறிவியுங்கள்” எனக் கூறினார்கள்.

நாங்கள் நீராட்டி முடித்ததும் நபியவர்களுக்கு அறிவித்தோம். அவர்கள் வந்து தமது கீழாடையைத் தந்து, “இதை அவரது உடலில் சுற்றுங்கள்” எனக் கூறினார்கள்.11

அத்தியாயம் : 23
1254. حَدَّثَنَا مُحَمَّدٌ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أُمِّ عَطِيَّةَ ـ رضى الله عنها ـ قَالَتْ دَخَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَنَحْنُ نَغْسِلُ ابْنَتَهُ فَقَالَ "" اغْسِلْنَهَا ثَلاَثًا أَوْ خَمْسًا أَوْ أَكْثَرَ مِنْ ذَلِكَ بِمَاءٍ وَسِدْرٍ، وَاجْعَلْنَ فِي الآخِرَةِ كَافُورًا، فَإِذَا فَرَغْتُنَّ فَآذِنَّنِي "". فَلَمَّا فَرَغْنَا آذَنَّاهُ، فَأَلْقَى إِلَيْنَا حِقْوَهُ فَقَالَ "" أَشْعِرْنَهَا إِيَّاهُ "". فَقَالَ أَيُّوبُ وَحَدَّثَتْنِي حَفْصَةُ بِمِثْلِ حَدِيثِ مُحَمَّدٍ وَكَانَ فِي حَدِيثِ حَفْصَةَ "" اغْسِلْنَهَا وِتْرًا "". وَكَانَ فِيهِ : "" ثَلاَثًا أَوْ خَمْسًا أَوْ سَبْعًا "". وَكَانَ فِيهِ أَنَّهُ قَالَ "" ابْدَأْنَ بِمَيَامِنِهَا وَمَوَاضِعِ الْوُضُوءِ مِنْهَا "". وَكَانَ فِيهِ أَنَّ أُمَّ عَطِيَّةَ قَالَتْ وَمَشَطْنَاهَا ثَلاَثَةَ قُرُونٍ.
பாடம் : 9 ஒற்றைப் படையாக(த் தண்ணீர் ஊற்றி) நீராட்டுவது விரும்பத் தக்கது.
1254. உம்மு அ(த்)திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் மகளை நாங்கள் நீராட்டிக் கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த அவர்கள், “அவரை இலந்தை இலை கலந்த நீரால் மூன்று அல்லது ஐந்து அல்லது அதற்கும் அதிகமான தடவைகள் நீராட்டுங்கள்; கடைசியில் கற்பூரத்தைச் சேர்த்துக்கொள்ளுங்கள். நீராட்டி முடித்ததும் எனக்கு அறிவியுங் கள்” எனக் கூறினார்கள்.

முடிந்ததும் நாங்கள் அவர்களுக்கு அறிவித்தோம். அப்போது அவர்கள் தமது கீழாடையைத் தந்து, “இதை அவரது உடலில் சுற்றுங்கள்” எனக் கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஹஃப்ஸா பின்த் சீரீன் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், “ஒற்றைப் படையாக(த் தண்ணீர் ஊற்றி) நீராட்டுங்கள்; -மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு தடவைகள் (தண்ணீர் ஊற்றுங்கள்)- அவரது வலப் புறத்திலிருந்தும் அங்கத் தூய்மை செய்ய வேண்டிய பகுதிகளிலிருந்தும் துவங்குங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.

மேலும், “நாங்கள் அவருக்கு தலைவாரி மூன்று சடைகள் பின்னி னோம்” என உம்மு அ(த்)திய்யா (ரலி) அவர்கள் கூறியதாகவும் காணப்படுகிறது.

அத்தியாயம் : 23
1255. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ، عَنْ أُمِّ عَطِيَّةَ ـ رضى الله عنها ـ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي غَسْلِ ابْنَتِهِ "" ابْدَأْنَ بِمَيَامِنِهَا وَمَوَاضِعِ الْوُضُوءِ مِنْهَا "".
பாடம் : 10 (நீராட்டுதலை) சடலத்தின் வலப் புறத்திலிருந்து ஆரம் பித்தல்
1255. உம்மு அ(த்)திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களது மகளை நீராட்டும்போது, “அவரது வலப் புறத் திலிருந்தும் அங்கத் தூய்மை செய்ய வேண்டிய பகுதியிலிருந்தும் ஆரம்பி யுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அத்தியாயம் : 23
1256. حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ، عَنْ أُمِّ عَطِيَّةَ ـ رضى الله عنها ـ قَالَتْ لَمَّا غَسَّلْنَا بِنْتَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ لَنَا وَنَحْنُ نَغْسِلُهَا "" ابْدَأْنَ بِمَيَامِنِهَا وَمَوَاضِعِ الْوُضُوءِ "".
பாடம் : 11 சடலத்தை நீராட்டும்போது அங்கத் தூய்மை செய்ய வேண்டிய பகுதிகளிலிருந்து ஆரம்பித்தல்
1256. உம்மு அ(த்)திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் மகளை நாங்கள் நீராட்டிக்கொண்டிருந்தபோது, “சடலத்தின் வலப் புறத்திலிருந்தும் அதன் அங்கத் தூய்மை செய்ய வேண்டிய பகுதிகளிலிருந்தும் ஆரம்பியுங்கள்” என நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள்.

அத்தியாயம் : 23
1257. حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ حَمَّادٍ، أَخْبَرَنَا ابْنُ عَوْنٍ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ تُوُفِّيَتْ بِنْتُ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ لَنَا "" اغْسِلْنَهَا ثَلاَثًا أَوْ خَمْسًا أَوْ أَكْثَرَ مِنْ ذَلِكَ إِنْ رَأَيْتُنَّ، فَإِذَا فَرَغْتُنَّ فَآذِنَّنِي "". فَلَمَّا فَرَغْنَا آذَنَّاهُ فَنَزَعَ مِنْ حِقْوِهِ إِزَارَهُ وَقَالَ "" أَشْعِرْنَهَا إِيَّاهُ "".
பாடம் : 12 ஆணின் கீழாடையால் பெண்ணுக்கு ‘கஃபன்’ இடலாமா?
1257. உம்மு அ(த்)திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் மகள் இறந்த தும் அவர்கள், “அவரை மூன்று, அல்லது ஐந்து, அல்லது நீங்கள் தேவை யெனக் கருதினால் அதற்கும் அதிக மான தடவைகள் நீராட்டுங்கள்; நீராட்டி முடித்ததும் எனக்குத் தெரிவியுங்கள்” என்று எங்களிடம் கூறினார்கள்.

நீராட்டி முடித்து அவர்களுக்குத் தெரிவித்ததும் தமது இடுப்பிலிருந்து கீழாடையைக் களைந்து, “இதை அவரது உடம்பில் சுற்றுங்கள்” என்று கூறி னார்கள்.

அத்தியாயம் : 23
1258. حَدَّثَنَا حَامِدُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ تُوُفِّيَتْ إِحْدَى بَنَاتِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَخَرَجَ، فَقَالَ " اغْسِلْنَهَا ثَلاَثًا أَوْ خَمْسًا أَوْ أَكْثَرَ مِنْ ذَلِكَ إِنْ رَأَيْتُنَّ بِمَاءٍ وَسِدْرٍ، وَاجْعَلْنَ فِي الآخِرَةِ كَافُورًا أَوْ شَيْئًا مِنْ كَافُورٍ، فَإِذَا فَرَغْتُنَّ فَآذِنَّنِي ". قَالَتْ فَلَمَّا فَرَغْنَا آذَنَّاهُ، فَأَلْقَى إِلَيْنَا حِقْوَهُ فَقَالَ " أَشْعِرْنَهَا إِيَّاهُ ". وَعَنْ أَيُّوبَ، عَنْ حَفْصَةَ، عَنْ أُمِّ عَطِيَّةَ ـ رضى الله عنهما ـ بِنَحْوِهِ
பாடம் : 13 (சடலத்தை நீராட்டும்போது) கடைசியில் கற்பூரத்தைப் பயன் படுத்துதல்
1258. உம்மு அ(த்)திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் புதல்வியரில் ஒருவர் இறந்துபோனதும் நபி (ஸல்) அவர்கள் (எங்களிடம்) வந்து, “அவரை மூன்று அல்லது ஐந்து அல்லது தேவை யென நீங்கள் கருதினால் அதற்கும் அதிகமான தடவைகள் இலந்தை இலை கலந்த தண்ணீரால் நீராட்டுங்கள்; கடைசியில் ‘கற்பூரத்தை’ அல்லது ‘கற்பூரத்தில் சிறிதளவை’ சேர்த்துக்கொள்ளுங்கள்; நீராட்டி முடித்ததும் எனக்குத் தெரிவியுங்கள்” எனக் கூறினார்கள்.

நீராட்டியபின் நாங்கள் அவர்களுக்குத் தெரிவித்ததும், தமது கீழாடையை எங்களிடம் கொடுத்து, “இதை அவரது உடம்பில் சுற்றுங்கள்” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 23
1259. وَقَالَتْ إِنَّهُ قَالَ " اغْسِلْنَهَا ثَلاَثًا أَوْ خَمْسًا أَوْ سَبْعًا أَوْ أَكْثَرَ مِنْ ذَلِكَ إِنْ رَأَيْتُنَّ ". قَالَتْ حَفْصَةُ قَالَتْ أُمُّ عَطِيَّةَ ـ رضى الله عنها ـ وَجَعَلْنَا رَأْسَهَا ثَلاَثَةَ قُرُونٍ.
பாடம் : 13 (சடலத்தை நீராட்டும்போது) கடைசியில் கற்பூரத்தைப் பயன் படுத்துதல்
1259. உம்மு அ(த்)திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

“அவரை மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு அல்லது நீஙகள் தேவை யெனக் கருதினால் அதற்கும் அதிக மான தடவைகள் நீராட்டுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நாங்கள் அந்தச் சடலத்தின் தலை (முடி)யில் மூன்று பின்னல்களை முடிந்தோம் என உம்மு அ(த்)திய்யா (ரலி) அவர்கள் கூறியதாக ஹஃப்ஸா பின்த் சீரீன் (ரஹ்) அவர்கள் தெரி வித்தார்கள்.

அத்தியாயம் : 23
1260. حَدَّثَنَا أَحْمَدُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَيُّوبُ وَسَمِعْتُ حَفْصَةَ بِنْتَ سِيرِينَ، قَالَتْ حَدَّثَتْنَا أُمُّ عَطِيَّةَ ـ رضى الله عنها ـ أَنَّهُنَّ جَعَلْنَ رَأْسَ بِنْتِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ثَلاَثَةَ قُرُونٍ نَقَضْنَهُ ثُمَّ غَسَلْنَهُ ثُمَّ جَعَلْنَهُ ثَلاَثَةَ قُرُونٍ.
பாடம் : 14 பெண்ணின் (சடலம் நீராட்டப் படும்போது) பின்னல்களை அவிழ்த்துவிடல் நீராட்டப்படும்போது சடலத்தின் முடியை அவிழ்ப்பது தவறாகாது என இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் குறிப்பிட் டார்கள்.
1260. உம்மு அ(த்)திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய மகளின் சடலத்திற்குத் தலை (முடி)யில் பெண்கள் மூன்று சடைகளைப் பின்னியிருந்தார்கள். பிறகு அவற் றைப் பிரித்துக் கழுவிவிட்டுப் பிறகு மீண்டும் மூன்று சடைகள் பின்னினார்கள்.

அத்தியாயம் : 23
1261. حَدَّثَنَا أَحْمَدُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَنَّ أَيُّوبَ، أَخْبَرَهُ قَالَ سَمِعْتُ ابْنَ سِيرِينَ، يَقُولُ جَاءَتْ أُمُّ عَطِيَّةَ ـ رضى الله عنها ـ امْرَأَةٌ مِنَ الأَنْصَارِ مِنَ اللاَّتِي بَايَعْنَ، قَدِمَتِ الْبِصْرَةَ، تُبَادِرُ ابْنًا لَهَا فَلَمْ تُدْرِكْهُ ـ فَحَدَّثَتْنَا قَالَتْ دَخَلَ عَلَيْنَا النَّبِيُّ صلى الله عليه وسلم وَنَحْنُ نَغْسِلُ ابْنَتَهُ فَقَالَ "" اغْسِلْنَهَا ثَلاَثًا أَوْ خَمْسًا أَوْ أَكْثَرَ مِنْ ذَلِكَ إِنْ رَأَيْتُنَّ ذَلِكَ بِمَاءٍ وَسِدْرٍ، وَاجْعَلْنَ فِي الآخِرَةِ كَافُورًا، فَإِذَا فَرَغْتُنَّ فَآذِنَّنِي "". قَالَتْ فَلَمَّا فَرَغْنَا أَلْقَى إِلَيْنَا حَقْوَهُ فَقَالَ "" أَشْعِرْنَهَا إِيَّاهُ "". وَلَمْ يَزِدْ عَلَى ذَلِكَ، وَلاَ أَدْرِي أَىُّ بَنَاتِهِ. وَزَعَمَ أَنَّ الإِشْعَارَ الْفُفْنَهَا فِيهِ، وَكَذَلِكَ كَانَ ابْنُ سِيرِينَ يَأْمُرُ بِالْمَرْأَةِ أَنْ تُشْعَرَ وَلاَ تُؤْزَرَ.
பாடம் : 15 (பெண்) சடலத்தின் உடம்பில் துணியைச் சுற்றுவது எப்படி? (சவக்கோடியின்) ஐந்து துணிகளில் ஒன்றால் மேலாடைக்கு உள்ளே தொடைகளையும் இடுப்பையும் கட்ட வேண்டும் என ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
1261. இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(நபி (ஸல்) அவர்களிடம்) உறுதி மொழிப் பிரமாணம் அளித்திருந்த அன் சாரிப் பெண்மணி உம்மு அ(த்)திய்யா (ரலி) அவர்கள் தம் மகனைக் காண்பதற் காக பஸ்ராவுக்கு வந்தார். மகனைச் சந்திக்க முடியவில்லை.

அப்போது அவர் எங்களிடம் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் மகளை நாங்கள் நீராட்டிக்கொண்டி ருந்தபோது அங்கு வந்த நபி (ஸல்) அவர்கள், “சடலத்தை மூன்று அல்லது ஐந்து அல்லது நீங்கள் தேவையெனக் கருதினால் அதற்கும் அதிகமான தடவைகள் இலந்தை இலை கலந்த தண்ணீரால் நீராட்டுங்கள்; கடைசியில் கற்பூரத்தைச் சேர்த்துக்கொள்ளுங்கள்; நீராட்டி முடித்ததும் எனக்குத் தெரிவி யுங்கள்” எனக் கூறினார்கள்.

நீராட்டி முடித்ததும் எங்களிடம் தமது கீழாடையைத் தந்து, “இதை அவரது உடலில் சுற்றுங்கள்” என்று கூறி னார்கள்.

இதற்கு அதிகமாக இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் எதையும் அறிவிக்கவில்லை. (அவருடைய சகோதரி ஹஃப்ஸா, இதைவிடக் கூடுதல் தகவல் அறிவித்துள்ளார்.)

“நபி (ஸல்) அவர்களின் புதல்வியரில் இவர் யார் என்பது எனக்குத் தெரிய வில்லை” என்று அறிவிப்பாளர் அய்யூப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். மேலும், ‘உடலில் சுற்றுதல்’ என்பதே (மூலத்தில் இடம்பெற்றுள்ள) ‘இஷ்ஆர்’ என்பதன் பொருளாகும் என்று அய்யூப் (ரஹ்) அவர்கள் கருதுகிறார்கள்.

பெண் சடலத்துக்கு இடுப்பில் துணியைக் கட்டத் தேவையில்லை; ஆயினும், (உடம்பில்) சுற்ற வேண்டும் என்றே இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் கட்டளையிட்டு வந்தார்கள்.

அத்தியாயம் : 23
1262. حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ هِشَامٍ، عَنْ أُمِّ الْهُذَيْلِ، عَنْ أُمِّ عَطِيَّةَ ـ رضى الله عنها ـ قَالَتْ ضَفَرْنَا شَعَرَ بِنْتِ النَّبِيِّ صلى الله عليه وسلم. تَعْنِي ثَلاَثَةَ قُرُونٍ. وَقَالَ وَكِيعٌ قَالَ سُفْيَانُ نَاصِيَتَهَا وَقَرْنَيْهَا.
பாடம் : 16 பெண் சடலத்தின் முடி மூன்று சடைகளாகப் பின்னப்படும்.
1262. உம்மு அ(த்)திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களின் மகளின் முடியை மூன்று சடைகளாகப் பின்னினோம்.

“மூன்று சடைகள் என்பது முன் நெற்றிப்பகுதியில் ஒன்றும் தலையின் இரு ஓரங்களில் இரண்டும் ஆகும்” என சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

அத்தியாயம் : 23
1263. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ، قَالَ حَدَّثَتْنَا حَفْصَةُ، عَنْ أُمِّ عَطِيَّةَ ـ رضى الله عنها ـ قَالَتْ تُوُفِّيَتْ إِحْدَى بَنَاتِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَتَانَا النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ "" اغْسِلْنَهَا بِالسِّدْرِ وِتْرًا ثَلاَثًا أَوْ خَمْسًا أَوْ أَكْثَرَ مِنْ ذَلِكَ إِنْ رَأَيْتُنَّ ذَلِكَ، وَاجْعَلْنَ فِي الآخِرَةِ كَافُورًا أَوْ شَيْئًا مِنْ كَافُورٍ، فَإِذَا فَرَغْتُنَّ فَآذِنَّنِي "". فَلَمَّا فَرَغْنَا آذَنَّاهُ، فَأَلْقَى إِلَيْنَا حِقْوَهُ، فَضَفَرْنَا شَعَرَهَا ثَلاَثَةَ قُرُونٍ وَأَلْقَيْنَاهَا خَلْفَهَا.
பாடம் : 17 பெண் சடலத்தின் முடி பின் புறம் தொங்கவிடப்படும்.
1263. உம்மு அ(த்)திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் புதல்வியரில் ஒருவர் இறந்துவிட்டதும் நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, “சடலத்தை இலந்தை இலை கலந்த நீரால் மூன்று அல்லது ஐந்து அல்லது நீங்கள் தேவை யெனக் கருதினால் அதற்கும் அதிகமாக ஒற்றைப்படையாக நீராட்டுங்கள். கடைசி யில் ‘கற்பூரத்தை’ அல்லது ‘கற்பூரத்தில் சிறிதளவை’ச் சேர்த்துக்கொள்ளுங்கள். நீராட்டி முடித்ததும் எனக்குத் தெரிவியுங்கள்” எனக் கூறினார்கள்.

நீராட்டி முடித்து தெரிவித்ததும் தமது கீழாடையை (சடலத்தில் சுற்றுவதற்காக) எங்களிடம் தந்தார்கள். மேலும், நாங்கள் சடலத்தின் முடியை மூன்று சடைகளாகப் பின்னி அதைச் சடலத்தின் முதுகுப் புறமாகப் போட்டு வைத்தோம்.

அத்தியாயம் : 23