1237. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا مَهْدِيُّ بْنُ مَيْمُونٍ، حَدَّثَنَا وَاصِلٌ الأَحْدَبُ، عَنِ الْمَعْرُورِ بْنِ سُوَيْدٍ، عَنْ أَبِي ذَرٍّ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَتَانِي آتٍ مِنْ رَبِّي فَأَخْبَرَنِي ـ أَوْ قَالَ بَشَّرَنِي ـ أَنَّهُ مَنْ مَاتَ مِنْ أُمَّتِي لاَ يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا دَخَلَ الْجَنَّةَ "". قُلْتُ وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ قَالَ "" وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ "".
பாடம் : 1 இறுதிக் கடன்களும் இறுதிக் கட்டத்தில் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ கூறுபவரின் நிலையும் “சொர்க்கத்தின் திறவுகோல் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (அல்லாஹ் வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று கூறுவது)தானே!” என வஹ்ப் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள், “ஆம், ஆயினும் பற்கள் இல்லாத திறவுகோல் உண்டா? எனவே, உன்னிடம் பற்களுள்ள திறவு கோல் இருந்தால்தான் அதன் மூலம் உனக்காக அ(ந்தச் சொர்க்கமான)து திறக்கப்படும்; இல்லையேல் அது உனக்குத் திறக்கப்படாது” எனக் கூறினார்கள்.2
1237. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எனது இரட்சகனிடமிருந்து ஒரு (வான)வர் என்னிடம் வந்து ‘ஒரு செய்தியை’ அல்லது ‘ஒரு நற்செய்தியை’ எனக்கு அறிவித்தார். அதாவது ‘என் சமுதாயத்தாரில் யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காமல் இறக்கின் றாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார் என்று கூறினார் என்றார்கள்.

உடனே நான், “அவர் விபசாரத்திலோ திருட்டிலோ ஈடுபட்டிருந்தாலுமா?” எனக் கேட்டேன். “அவர் விபசாரத்திலோ திருட்டிலோ ஈடுபட்டிருந்தாலும்தான்” என்று நபியவர்கள் பதிலளித்தார்கள்.3


அத்தியாயம் : 23
1238. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا شَقِيقٌ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَنْ مَاتَ يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا دَخَلَ النَّارَ "". وَقُلْتُ أَنَا مَنْ مَاتَ لاَ يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا دَخَلَ الْجَنَّةَ.
பாடம் : 1 இறுதிக் கடன்களும் இறுதிக் கட்டத்தில் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ கூறுபவரின் நிலையும் “சொர்க்கத்தின் திறவுகோல் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (அல்லாஹ் வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று கூறுவது)தானே!” என வஹ்ப் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள், “ஆம், ஆயினும் பற்கள் இல்லாத திறவுகோல் உண்டா? எனவே, உன்னிடம் பற்களுள்ள திறவு கோல் இருந்தால்தான் அதன் மூலம் உனக்காக அ(ந்தச் சொர்க்கமான)து திறக்கப்படும்; இல்லையேல் அது உனக்குத் திறக்கப்படாது” எனக் கூறினார்கள்.2
1238. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) கூறியதாவது:

“யார் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவராக இறக்கிறாரோ அவர் நிச்சயமாக நரகத்தில் நுழைவார்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அப்படியாயின்) “யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காமல் மரணிக்கிறாரோ அவர் நிச்சயமாகச் சொர்க்கத்தில் நுழைவார்” என நான் கூறுகிறேன்.

அத்தியாயம் : 23
1239. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَشْعَثِ، قَالَ سَمِعْتُ مُعَاوِيَةَ بْنَ سُوَيْدِ بْنِ مُقَرِّنٍ، عَنِ الْبَرَاءِ ـ رضى الله عنه ـ قَالَ أَمَرَنَا النَّبِيُّ صلى الله عليه وسلم بِسَبْعٍ، وَنَهَانَا عَنْ سَبْعٍ أَمَرَنَا بِاتِّبَاعِ الْجَنَائِزِ، وَعِيَادَةِ الْمَرِيضِ، وَإِجَابَةِ الدَّاعِي، وَنَصْرِ الْمَظْلُومِ، وَإِبْرَارِ الْقَسَمِ، وَرَدِّ السَّلاَمِ، وَتَشْمِيتِ الْعَاطِسِ. وَنَهَانَا عَنْ آنِيَةِ الْفِضَّةِ، وَخَاتَمِ الذَّهَبِ، وَالْحَرِيرِ، وَالدِّيبَاجِ، وَالْقَسِّيِّ، وَالإِسْتَبْرَقِ.
பாடம் : 2 ஜனாஸாவைப் பின்தொடரு மாறு வந்துள்ள கட்டளை
1239. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஏழு விஷயங்களை(ச் செய்யும்படி) கட்டளையிட்டு, ஏழு விஷயங்களைத் தடை செய்தார்கள்.

ஜனாஸாவைப் பின்தொடரும்படியும், நோயாளியை நலம் விசாரிக்கும் படியும். விருந்துக்கு அழைப்பவரின் அழைப்பை ஏற்றுக்கொள்ளும்படியும், அநீதி இழைக்கப்பட்டவருக்கு உதவும்படியும், சத்தியம் செய்தவர் அதை நிறைவேற்ற உதவும்படியும், சலாமுக்குப் பதில் கூறும்படியும், தும்மியவ(ர் ‘அல்ஹம்து லில்லாஹ்’ எனக் கூறுகையில் அவ)ருக்கு (யர்ஹமுகல்லாஹ்- இறைவன் உங்களுக்குக் கருணை புரிவானாக! என) மறுமொழி கூறும்படியும் கட்டளையிட்டார்கள்.

வெள்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதிலிருந்தும், (ஆண்கள்) தங்க மோதிரம் அணிவதிலிருந்தும் (கலப்படமில்லாத) பட்டு, அலங்காரப் பட்டு, ‘கஸ்’ எனும் பட்டு கலந்த (எகிப்திய) பஞ்சாடை, தடித்த பட்டு ஆகியவற்றை அணிவதிலிருந்தும் எங்களைத் தடை செய்தார்கள்.4


அத்தியாயம் : 23
1240. حَدَّثَنَا مُحَمَّدٌ، حَدَّثَنَا عَمْرُو بْنُ أَبِي سَلَمَةَ، عَنِ الأَوْزَاعِيِّ، قَالَ أَخْبَرَنِي ابْنُ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" حَقُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ خَمْسٌ رَدُّ السَّلاَمِ، وَعِيَادَةُ الْمَرِيضِ، وَاتِّبَاعُ الْجَنَائِزِ، وَإِجَابَةُ الدَّعْوَةِ، وَتَشْمِيتُ الْعَاطِسِ "". تَابَعَهُ عَبْدُ الرَّزَّاقِ قَالَ أَخْبَرَنَا مَعْمَرٌ. وَرَوَاهُ سَلاَمَةُ عَنْ عُقَيْلٍ.
பாடம் : 2 ஜனாஸாவைப் பின்தொடரு மாறு வந்துள்ள கட்டளை
1240. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக் குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை: சலாமுக்குப் பதிலுரைப் பது, நோயாளியை நலம் விசாரிப்பது, ஜனாஸாவைப் பின்தொடர்வது, விருந்தழைப்பை ஏற்றுக்கொள்வது, தும்முபவருக்கு மறுமொழி கூறுவது ஆகியவையாகும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 23
1241. حَدَّثَنَا بِشْرُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ أَخْبَرَنِي مَعْمَرٌ، وَيُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَخْبَرَتْهُ قَالَتْ أَقْبَلَ أَبُو بَكْرٍ ـ رضى الله عنه ـ عَلَى فَرَسِهِ مِنْ مَسْكَنِهِ بِالسُّنْحِ حَتَّى نَزَلَ، فَدَخَلَ الْمَسْجِدَ، فَلَمْ يُكَلِّمِ النَّاسَ، حَتَّى نَزَلَ فَدَخَلَ عَلَى عَائِشَةَ ـ رضى الله عنها ـ فَتَيَمَّمَ النَّبِيَّ صلى الله عليه وسلم وَهُوَ مُسَجًّى بِبُرْدِ حِبَرَةٍ، فَكَشَفَ عَنْ وَجْهِهِ، ثُمَّ أَكَبَّ عَلَيْهِ فَقَبَّلَهُ ثُمَّ بَكَى فَقَالَ بِأَبِي أَنْتَ يَا نَبِيَّ اللَّهِ، لاَ يَجْمَعُ اللَّهُ عَلَيْكَ مَوْتَتَيْنِ، أَمَّا الْمَوْتَةُ الَّتِي كُتِبَتْ عَلَيْكَ فَقَدْ مُتَّهَا.
பாடம் : 3 பிரேதத்திற்கு ‘கஃபன்’ (சவக் கோடி) அணிவிக்கப்பட்டபின் அங்கு செல்வது
1241. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நபி (ஸல்) அவர்களின் இறப்புச் செய்தியைக் கேள்விப்பட்ட என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘அஸ்ஸுன்ஹ்’ எனுமிடத்திலுள்ள தமது வீட்டிலிருந்து குதிரையில் வந்து இறங்கி, (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்குள் நுழைந்தார்கள். அவர்கள் யாரிடமும் பேசாமல் நேரடியாக என் அறைக்கு வந்தார்கள்.

அங்கு நபி (ஸல்) அவர்களை நாடிச் சென்றார்கள் - கரை வேலைப்பாடுகள் செய்யப்பட்ட போர்வையால் நபியவர் களின் உடல் போர்த்தப்பட்டிருந்தது- உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களது முகத்திலுள்ள துணியை அகற்றிவிட்டு, அவர்களின் மேல் விழுந்து முத்தமிட்டுவிட்டு அழு தார்கள்.

பிறகு “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப் பணம்! அல்லாஹ் உங்களுக்கு இரண்டு இறப்புகளை ஏற்படுத்தவில்லை. உங்கள் மீது விதிக்கப்பட்ட அந்த இறப்பை நீங்கள் அடைந்துவிட்டீர்கள்” என்று கூறினார்கள்.5

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 23
1242. قَالَ أَبُو سَلَمَةَ فَأَخْبَرَنِي ابْنُ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ أَبَا بَكْرٍ ـ رضى الله عنه ـ خَرَجَ وَعُمَرُ ـ رضى الله عنه ـ يُكَلِّمُ النَّاسَ. فَقَالَ اجْلِسْ. فَأَبَى. فَقَالَ اجْلِسْ. فَأَبَى، فَتَشَهَّدَ أَبُو بَكْرٍ ـ رضى الله عنه ـ فَمَالَ إِلَيْهِ النَّاسُ، وَتَرَكُوا عُمَرَ فَقَالَ أَمَّا بَعْدُ، فَمَنْ كَانَ مِنْكُمْ يَعْبُدُ مُحَمَّدًا صلى الله عليه وسلم فَإِنَّ مُحَمَّدًا صلى الله عليه وسلم قَدْ مَاتَ، وَمَنْ كَانَ يَعْبُدُ اللَّهَ فَإِنَّ اللَّهَ حَىٌّ لاَ يَمُوتُ، قَالَ اللَّهُ تَعَالَى {وَمَا مُحَمَّدٌ إِلاَّ رَسُولٌ} إِلَى {الشَّاكِرِينَ} وَاللَّهِ لَكَأَنَّ النَّاسَ لَمْ يَكُونُوا يَعْلَمُونَ أَنَّ اللَّهَ أَنْزَلَ الآيَةَ حَتَّى تَلاَهَا أَبُو بَكْرٍ ـ رضى الله عنه ـ فَتَلَقَّاهَا مِنْهُ النَّاسُ، فَمَا يُسْمَعُ بَشَرٌ إِلاَّ يَتْلُوهَا.
பாடம் : 3 பிரேதத்திற்கு ‘கஃபன்’ (சவக் கோடி) அணிவிக்கப்பட்டபின் அங்கு செல்வது
1242. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நபி (ஸல்) அவர்களின் உடலைப் பார்த்துவிட்டு) அபூபக்ர் (ரலி) அவர்கள் வெளியில் வந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் மக்களிடம் (கோபமாகப்) பேசிக்கொண்டிருந்ததைக் கண்டதும் உமரை உட்காருமாறு கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் உட்கார மறுத்ததும், மீண்டும் உட்காருமாறு கூறினார்கள். உமர் (ரலி) மீண்டும் மறுக்கவே அபூபக்ர் (ரலி) அவர்கள் ஏக இறை உறுதிமொழி கூறி (உரை நிகழ்த்தலா)னார்கள். உடனே மக்கள் உமர் (ரலி) அவர்களிடமிருந்து அபூபக்ர் (ரலி) அவர்களின் பக்கம் திரும்பிவிட்டனர்.

அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், “இறைவாழ்த்துக்குப்பின்! உங்களில் யார் முஹம்மத் (ஸல்) அவர்களை வழிபட்டுக்கொண்டிருந்தார்களோ அவர்கள் அறிந்துகொள்ளட்டும்! நிச்சயமாக முஹம்மத் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள். யார் அல்லாஹ்வை வழிபட்டுக்கொண்டி ருக்கிறார்களோ அவர்கள் அறிந்து கொள்ளட்டும்! நிச்சயமாக அல்லாஹ் என்றென்றும் உயிரோடிருப்பவன்; மரணிக்கவேமாட்டான்.

மேலும், உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: முஹம்மத் (ஓர் இறைத்) தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன்னரும் (இறைத்)தூதர்கள் பலர் (வாழ்ந்து) சென்றுவிட்டார்கள்; அவர் இறந்துவிட்டால், அல்லது கொல்லப்பட் டால் நீங்கள் உங்கள் கால் சுவடுகளின் வழியே (புறங்காட்டி பழைய பாதைக்குத்) திரும்பிவிடுவீர்களா? அப்படி யாரே னும் கால் சுவடுகளின் வழியே (புறங் காட்டித்) திரும்பிவிடுவாரானால், அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது; அன்றியும், அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதி விரைவில் நற்கூலியை வழங்குவான்” (3:144) என்று குறிப்பிட்டார்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! அபூபக்ர் (ரலி) அவர்கள் இவ்வச னத்தை அங்கு ஓதிக்காட்டும்வரை, அல்லாஹ் இவ்வசனத்தை அருளியிருந்ததையே மக்கள் அறிந்திருக்கவில்லை என்பதைப் போலவும் அபூபக்ர் (ரலி) அவர்கள் மூலமாகத்தான் இதை அவர்கள் அறிந்துகொண்டதைப் போலவும் அங்கிருந்த ஒவ்வொருவரும் இதை ஓதிக்கொண்டிருந்தனர்.


அத்தியாயம் : 23
1243. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي خَارِجَةُ بْنُ زَيْدِ بْنِ ثَابِتٍ، أَنَّ أُمَّ الْعَلاَءِ ـ امْرَأَةً مِنَ الأَنْصَارِ ـ بَايَعَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم أَخْبَرَتْهُ أَنَّهُ اقْتُسِمَ الْمُهَاجِرُونَ قُرْعَةً فَطَارَ لَنَا عُثْمَانُ بْنُ مَظْعُونٍ، فَأَنْزَلْنَاهُ فِي أَبْيَاتِنَا، فَوَجِعَ وَجَعَهُ الَّذِي تُوُفِّيَ فِيهِ، فَلَمَّا تُوُفِّيَ وَغُسِّلَ وَكُفِّنَ فِي أَثْوَابِهِ، دَخَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقُلْتُ رَحْمَةُ اللَّهِ عَلَيْكَ أَبَا السَّائِبِ، فَشَهَادَتِي عَلَيْكَ لَقَدْ أَكْرَمَكَ اللَّهُ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" وَمَا يُدْرِيكِ أَنَّ اللَّهَ قَدْ أَكْرَمَهُ "". فَقُلْتُ بِأَبِي أَنْتَ يَا رَسُولَ اللَّهِ فَمَنْ يُكْرِمُهُ اللَّهُ فَقَالَ "" أَمَّا هُوَ فَقَدْ جَاءَهُ الْيَقِينُ، وَاللَّهِ إِنِّي لأَرْجُو لَهُ الْخَيْرَ، وَاللَّهِ مَا أَدْرِي ـ وَأَنَا رَسُولُ اللَّهِ ـ مَا يُفْعَلُ بِي "". قَالَتْ فَوَاللَّهِ لاَ أُزَكِّي أَحَدًا بَعْدَهُ أَبَدًا. حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، مِثْلَهُ. وَقَالَ نَافِعُ بْنُ يَزِيدَ عَنْ عُقَيْلٍ، مَا يُفْعَلُ بِهِ وَتَابَعَهُ شُعَيْبٌ وَعَمْرُو بْنُ دِينَارٍ وَمَعْمَرٌ.
பாடம் : 3 பிரேதத்திற்கு ‘கஃபன்’ (சவக் கோடி) அணிவிக்கப்பட்டபின் அங்கு செல்வது
1243. நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழிப் பிரமாணம் (பைஅத்) செய்தி ருந்த அன்சாரிப் பெண்மணியான உம்முல் அலா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மதீனாவுக்கு வந்த) முஹாஜிர்களில் யார் எவர் வீட்டில் தங்குவது என்பதை அறிய சீட்டுக் குலுக்கிப் போட்டுக்கொண்டிருந்தபோது, உஸ்மான் பின் மழ்ஊன் (ரலி) அவர்கள் எங்கள் பொறுப்பில் வந்தார்கள். அதன்படி அவரை நாங்கள் எங்கள் வீட்டில் தங்கவைத்தோம். பிறகு அவர் நோயுற்று அந்த நோயிலேயே இறந்தும்போனார்.

அவரது உடல் நீராட்டப்பட்டு அவரது ஆடையிலேயே கஃபனிடப் பட்டதும் நபி (ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். நான் (உஸ்மானை நோக்கி), “ஸாயிபின் தந்தையே! உம்மீது இறை யருள் பொழியட்டும்! அல்லாஹ் உம்மைக் கண்ணியப்படுத்திவிட்டான் என்பதற்கு நான் சாட்சியம் அளிக்கி றேன்” எனக் கூறினேன்.

உடனே நபி (ஸல்) அவர்கள், “அவரை அல்லாஹ் கண்ணியப்படுத்தி யுள்ளான் என்பது உனக்கெப்படித் தெரியும்?” என்று கேட்டார்கள். “அல்லாஹ் வின் தூதரே! என் தந்தை உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். பின் யாரைத்தான் அல்லாஹ் கண்ணியப்படுத்துவான்?” என நான் கேட்டேன்.

அதற்கு, நபி (ஸல்) அவர்கள், “இவர் இறந்துவிட்டார். எனவே அல்லாஹ்வின் மீதாணையாக! இவருக்கு நன்மையையே நான் எதிர்பார்க்கின்றேன். ஆயினும், நான் அல்லாஹ்வின் தூதராக இருந்தும், என்னிடம் (மறுமையில்) எவ்வாறு நடந்து கொள்ளப்படும் என்பது எனக்குத் தெரியாது” என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! அதற் குப் பிறகு நான் யாரையும் தூய்மையான வர் என்று ஒருபோதும் கூறுவதேயில்லை.

இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் நாஃபிஉ பின் யஸீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “நான் இறைத்தூராக இருந்தும், அவரிடம் (மறுமையில்) எவ்வாறு நடந்துகொள்ளப்படும் என்பது எனக்குத் தெரியாது” என இடம்பெற்றுள்ளது.


அத்தியாயம் : 23
1244. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ مُحَمَّدَ بْنَ الْمُنْكَدِرِ، قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ لَمَّا قُتِلَ أَبِي جَعَلْتُ أَكْشِفُ الثَّوْبَ عَنْ وَجْهِهِ أَبْكِي، وَيَنْهَوْنِي عَنْهُ وَالنَّبِيُّ صلى الله عليه وسلم لاَ يَنْهَانِي، فَجَعَلَتْ عَمَّتِي فَاطِمَةُ تَبْكِي، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" تَبْكِينَ أَوْ لاَ تَبْكِينَ، مَا زَالَتِ الْمَلاَئِكَةُ تُظِلُّهُ بِأَجْنِحَتِهَا حَتَّى رَفَعْتُمُوهُ "". تَابَعَهُ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي ابْنُ الْمُنْكَدِرِ سَمِعَ جَابِرًا ـ رضى الله عنه ـ.
பாடம் : 3 பிரேதத்திற்கு ‘கஃபன்’ (சவக் கோடி) அணிவிக்கப்பட்டபின் அங்கு செல்வது
1244. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் தந்தை (உஹுத் போரில்) கொல்லப்பட்டுக் கிடந்தபோது, நான் அழுது கொண்டே அவரது முகத்தின் மீதிருந்த துணியை அகற்றலானேன். அப்போது (அங்கிருந்தவர்கள்) என்னைத் தடுத்தார் கள். ஆனால், நபி (ஸல்) அவர்கள் என்னைத் தடுக்கவில்லை. பிறகு எனது மாமி ஃபாத்திமா (ரலி) அவர்களும் அழ ஆரம்பித்துவிட்டார்கள்.

அப்போது, “நீங்கள் அழுதாலும் அழாவிட்டாலும் நீங்கள் அவரைத் தூக்கும்வரை வானவர்கள் அவருக்குத் தங்களின் இறக்கைகளால் தொடர்ந்து நிழல் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 23
1245. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَعَى النَّجَاشِيَّ فِي الْيَوْمِ الَّذِي مَاتَ فِيهِ، خَرَجَ إِلَى الْمُصَلَّى، فَصَفَّ بِهِمْ وَكَبَّرَ أَرْبَعًا.
பாடம் : 4 இறப்புச் செய்தியை ஒருவர் (ஆளனுப்பாமல்) தாமே உரியவர்களுக்கு அறிவித்தல்
1245. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், (அபிசீனிய மன்னர் நஜாஷீ (நீகஸ்) இறந்த அன்றே அவரது மரணச் செய்தியை (மக்க ளுக்கு) அறிவித்தார்கள். பிறகு தொழும் திடலுக்குப் புறப்பட்டுச் சென்று மக்களை வரிசைப்படுத்தி நிற்கவைத்து, நான்கு தக்பீர்கள் கூறி (ஜனாஸா தொழுகை நடத்தி)னார்கள்.


அத்தியாயம் : 23
1246. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَخَذَ الرَّايَةَ زَيْدٌ فَأُصِيبَ، ثُمَّ أَخَذَهَا جَعْفَرٌ فَأُصِيبَ، ثُمَّ أَخَذَهَا عَبْدُ اللَّهِ بْنُ رَوَاحَةَ فَأُصِيبَ ـ وَإِنَّ عَيْنَىْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لَتَذْرِفَانِ ـ ثُمَّ أَخَذَهَا خَالِدُ بْنُ الْوَلِيدِ مِنْ غَيْرِ إِمْرَةٍ فَفُتِحَ لَهُ ""
பாடம் : 4 இறப்புச் செய்தியை ஒருவர் (ஆளனுப்பாமல்) தாமே உரியவர்களுக்கு அறிவித்தல்
1246. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“(மூத்தா போரில்) ஸைத் (ரலி) கொடியைப் பற்றியிருந்தார். அவர் கொல்லப் பட்டார். பிறகு அதை ஜஅஃபர் (ரலி) பற்றினார். அவரும் கொல்லப்பட்டார். பிறகு அதை அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) பற்றினார். பிறகு அவரும் கொல் லப்பட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

“பிறகு, (ஏற்கெனவே) நியமிக்கப்படா திருந்த காலித் பின் வலீத் (ரலி) அக் கொடியைப் பற்றினார். அவருக்கே வெற்றி கிடைத்தது” என்றும் நபியவர்கள் கூறினார்கள்.6

அத்தியாயம் : 23
1247. حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ الشَّيْبَانِيِّ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ مَاتَ إِنْسَانٌ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَعُودُهُ فَمَاتَ بِاللَّيْلِ فَدَفَنُوهُ لَيْلاً، فَلَمَّا أَصْبَحَ أَخْبَرُوهُ فَقَالَ "" مَا مَنَعَكُمْ أَنْ تُعْلِمُونِي "". قَالُوا كَانَ اللَّيْلُ فَكَرِهْنَا ـ وَكَانَتْ ظُلْمَةٌ ـ أَنْ نَشُقَّ عَلَيْكَ. فَأَتَى قَبْرَهُ فَصَلَّى عَلَيْهِ.
பாடம் : 5 இறுதி (ஜனாஸா) தொழுகையை(த் தலைவருக்கு) அறிவித்தல் “நீங்கள் (ஜனாஸா தொழுதபோது) எனக்குத் தகவல் அளித்திருக்கக் கூடாதா” என நபி (ஸல்) அவர்கள் (ஒரு முறை) கேட்டார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.7
1247. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நோயுற்றிருந்த) ஒருவரை நபி (ஸல்) அவர்கள் வழக்கமாக நலம் விசாரிப்ப வர்களாக இருந்தார்கள். ஒரு நாள் இரவு அவர் இறந்துவிட்டார். அவரை மக்கள் இரவிலேயே அடக்கம் செய்து விட்டனர். மறுநாள் காலையில் நபி (ஸல்) அவர்களுக்கு இச்செய்தியை மக்கள் தெரிவித்ததும், “இதை அப் போதே எனக்கு நீங்கள் அறிவிக்காத தன் காரணமென்ன?” என்று கேட் டார்கள்.

அதற்கு மக்கள், “கடுமையான இருள் சூழ்ந்த இரவு நேரமாக இருந்ததால் உங்களுக்குச் சிரமம் கொடுக்க நாங்கள் விரும்பவில்லை” என்றனர். உடனே நபி (ஸல்) அவர்கள், அவரது அடக்கத் தலத்திற்கு (கப்று) வந்து இறுதித் தொழுகை தொழுவித்தார்கள்.8

அத்தியாயம் : 23
1248. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَا مِنَ النَّاسِ مِنْ مُسْلِمٍ يُتَوَفَّى لَهُ ثَلاَثٌ لَمْ يَبْلُغُوا الْحِنْثَ، إِلاَّ أَدْخَلَهُ اللَّهُ الْجَنَّةَ بِفَضْلِ رَحْمَتِهِ إِيَّاهُمْ "".
பாடம் : 6 தம் குழந்தை இறந்தும் பொறுமையுடன் இறைவெகுமதியை எதிர்பார்ப்பவரின் சிறப்பு அல்லாஹ் கூறுகின்றான்: பொறுமை யாளர்களுக்கு (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக! (2:155)
1248. நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்:

மனிதர்களில் ஒரு முஸ்லிமுக்கு, பருவமடையாத மூன்று (குழந்தைகள்) இறந்துவிட்டால், அக்குழந்தைகளின் மீது அல்லாஹ் கொண்டுள்ள கருணை யின் புண்ணியத்தால், அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் நுழையச் செய்யாமல் இருப்பதில்லை.9

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 23
1249. حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الأَصْبَهَانِيِّ، عَنْ ذَكْوَانَ، عَنْ أَبِي سَعِيدٍ، رضى الله عنه أَنَّ النِّسَاءَ، قُلْنَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم اجْعَلْ لَنَا يَوْمًا. فَوَعَظَهُنَّ، وَقَالَ " أَيُّمَا امْرَأَةٍ مَاتَ لَهَا ثَلاَثَةٌ مِنَ الْوَلَدِ كَانُوا حِجَابًا مِنَ النَّارِ ". قَالَتِ امْرَأَةٌ وَاثْنَانِ. قَالَ " وَاثْنَانِ ".
பாடம் : 6 தம் குழந்தை இறந்தும் பொறுமையுடன் இறைவெகுமதியை எதிர்பார்ப்பவரின் சிறப்பு அல்லாஹ் கூறுகின்றான்: பொறுமை யாளர்களுக்கு (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக! (2:155)
1249. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

பெண்கள் நபி (ஸல்) அவர்களிடம் (வந்து), “எங்களுக்கும் ஒரு நாள் (உபதேசத்திற்காக) ஒதுக்குங்களேன்” எனக் கேட்டுக்கொண்டார்கள். அவ் வாறே நபி (ஸல்) அவர்கள், பெண் களுக்கு ஒரு நாள் (ஒதுக்கி) உபதேசம் செய்தார்கள்.

அதில் “ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் இறந்துவிட்டால், அவர்கள் அப்பெண்ணை நரகத்திலிருந்து காக்கும் திரையாக இருப்பார்கள்” என்று கூறினார்கள். ஒரு பெண், “இரு குழந்தைகள் இறந்தால்...?” எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “இரு குழந்தைகள் இறந்தாலும்தான்” என்றார்கள்.


அத்தியாயம் : 23
1250. وَقَالَ شَرِيكٌ عَنِ ابْنِ الأَصْبَهَانِيِّ، حَدَّثَنِي أَبُو صَالِحٍ، عَنْ أَبِي سَعِيدٍ، وَأَبِي، هُرَيْرَةَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ أَبُو هُرَيْرَةَ " لَمْ يَبْلُغُوا الْحِنْثَ ".
பாடம் : 6 தம் குழந்தை இறந்தும் பொறுமையுடன் இறைவெகுமதியை எதிர்பார்ப்பவரின் சிறப்பு அல்லாஹ் கூறுகின்றான்: பொறுமை யாளர்களுக்கு (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக! (2:155)
1250. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடரில் அபூசயீத் (ரலி), அபூஹுரைரா (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளது. அதில் அபூஹுரைரா (ரலி) அவர்கள், ‘பருவமடையாத (குழந்தைகள்)’ என்று கூறியதாக இடம் பெற்றுள்ளது.


அத்தியாயம் : 23
1251. حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ سَمِعْتُ الزُّهْرِيَّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ يَمُوتُ لِمُسْلِمٍ ثَلاَثَةٌ مِنَ الْوَلَدِ، فَيَلِجَ النَّارَ إِلاَّ تَحِلَّةَ الْقَسَمِ "". قَالَ أَبُو عَبْدِ اللَّهِ {وَإِنْ مِنْكُمْ إِلاَّ وَارِدُهَا}.
பாடம் : 6 தம் குழந்தை இறந்தும் பொறுமையுடன் இறைவெகுமதியை எதிர்பார்ப்பவரின் சிறப்பு அல்லாஹ் கூறுகின்றான்: பொறுமை யாளர்களுக்கு (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக! (2:155)
1251. நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்:

ஒரு முஸ்லிமுடைய மூன்று குழந் தைகள் இறந்துவிட்டால், (எல்லாருமே நரகத்தைக் கடந்து சென்றாக வேண்டும் என்ற) சத்தியத்தை நிறைவேற்றும் வகையில், அந்த நேரம் மட்டுமே தவிர (வேறு சமயத்தில்) அவர் நரகத்தின் பக்கம் செல்லவேமாட்டார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: (சத்தியத்தை நிறைவேற்றல் என்பது,) “உங்களில் யாரும் அ(ந்த நரகத்)தைக் கடக்காமல் இருக்க இயலாது” (19:71) எனும் வசனத்தைக் குறிக்கிறது.

அத்தியாயம் : 23
1252. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا ثَابِتٌ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ مَرَّ النَّبِيُّ صلى الله عليه وسلم بِامْرَأَةٍ عِنْدَ قَبْرٍ وَهِيَ تَبْكِي فَقَالَ "" اتَّقِي اللَّهَ وَاصْبِرِي "".
பாடம் : 7 அடக்கத் தலத்தின் அருகில் இருக்கும் பெண்ணிடம், “நீ பொறுமையாயிரு” என ஒருவர் கூறுவது
1252. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அடக்கத் தலத்தின் (கப்று) அருகில் அழுதுகொண்டிருந்த ஒரு பெண்ணைக் கடந்து சென்ற நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம், “அல்லாஹ்வைப் பயந்துகொள்; பொறுமையாயிரு” எனக் கூறினார்கள்.

அத்தியாயம் : 23
1253. حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَيُّوبَ السَّخْتِيَانِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أُمِّ عَطِيَّةَ الأَنْصَارِيَّةِ ـ رضى الله عنها ـ قَالَتْ دَخَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ تُوُفِّيَتِ ابْنَتُهُ فَقَالَ "" اغْسِلْنَهَا ثَلاَثًا أَوْ خَمْسًا أَوْ أَكْثَرَ مَنْ ذَلِكَ إِنْ رَأَيْتُنَّ ذَلِكَ بِمَاءٍ وَسِدْرٍ، وَاجْعَلْنَ فِي الآخِرَةِ كَافُورًا أَوْ شَيْئًا مِنْ كَافُورٍ، فَإِذَا فَرَغْتُنَّ فَآذِنَّنِي "". فَلَمَّا فَرَغْنَا آذَنَّاهُ فَأَعْطَانَا حِقْوَهُ فَقَالَ "" أَشْعِرْنَهَا إِيَّاهُ "". تَعْنِي إِزَارَهُ.
பாடம் : 8 இலந்தை இலை கலந்த நீரால் சடலத்தை நீராட்டி அங்கத் தூய்மை (உளூ) செய்வித்தல் சயீத் பின் ஸைத் (ரலி) அவர்களு டைய மகன் இறந்ததும் சடலத்துக்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் நறுமணம் பூசி அவரைச் சுமந்து சென்றார்கள். (இதன் காரணமாக உளூ முறிந்துவிடாத தால் புதிதாக) அங்கத் தூய்மை செய்யாம லேயே இறுதித் தொழுகை நடத்தி னார்கள்.10 முஸ்லிம் உயிருடனிருக்கும்போதும் இறந்துவிட்ட பிறகும் அசுத்தமாவ தில்லை என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். (இறந்துவிட்ட முஸ்லிம்) அசுத்தம் என்றிருந்தால் நான் அந்தச் சடலத்தைத் தொட்டிருக்கமாட்டேன் என சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறி னார்கள். மேலும், “இறைநம்பிக்கை யாளர் அசுத்தமாவதில்லை” என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
1253. உம்மு அ(த்)திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் புதல்வி இறந்தபோது எங்களிடம் வந்து, “அவரை இலந்தை இலை கலந்த நீரால் மூன்று அல்லது ஐந்து முறை, தேவையெனக் கருதினால் அதற்கு அதிகமான தடவைகள் நீராட்டுங்கள்; இறுதியில் ‘கற்பூரத்தை’ அல்லது ‘கற்பூரத்தில் சிறிதளவை’ச் சேர்த்துக்கொள்ளுங் கள்; நீராட்டி முடித்ததும் எனக்கு அறிவியுங்கள்” எனக் கூறினார்கள்.

நாங்கள் நீராட்டி முடித்ததும் நபியவர்களுக்கு அறிவித்தோம். அவர்கள் வந்து தமது கீழாடையைத் தந்து, “இதை அவரது உடலில் சுற்றுங்கள்” எனக் கூறினார்கள்.11

அத்தியாயம் : 23
1254. حَدَّثَنَا مُحَمَّدٌ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أُمِّ عَطِيَّةَ ـ رضى الله عنها ـ قَالَتْ دَخَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَنَحْنُ نَغْسِلُ ابْنَتَهُ فَقَالَ "" اغْسِلْنَهَا ثَلاَثًا أَوْ خَمْسًا أَوْ أَكْثَرَ مِنْ ذَلِكَ بِمَاءٍ وَسِدْرٍ، وَاجْعَلْنَ فِي الآخِرَةِ كَافُورًا، فَإِذَا فَرَغْتُنَّ فَآذِنَّنِي "". فَلَمَّا فَرَغْنَا آذَنَّاهُ، فَأَلْقَى إِلَيْنَا حِقْوَهُ فَقَالَ "" أَشْعِرْنَهَا إِيَّاهُ "". فَقَالَ أَيُّوبُ وَحَدَّثَتْنِي حَفْصَةُ بِمِثْلِ حَدِيثِ مُحَمَّدٍ وَكَانَ فِي حَدِيثِ حَفْصَةَ "" اغْسِلْنَهَا وِتْرًا "". وَكَانَ فِيهِ : "" ثَلاَثًا أَوْ خَمْسًا أَوْ سَبْعًا "". وَكَانَ فِيهِ أَنَّهُ قَالَ "" ابْدَأْنَ بِمَيَامِنِهَا وَمَوَاضِعِ الْوُضُوءِ مِنْهَا "". وَكَانَ فِيهِ أَنَّ أُمَّ عَطِيَّةَ قَالَتْ وَمَشَطْنَاهَا ثَلاَثَةَ قُرُونٍ.
பாடம் : 9 ஒற்றைப் படையாக(த் தண்ணீர் ஊற்றி) நீராட்டுவது விரும்பத் தக்கது.
1254. உம்மு அ(த்)திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் மகளை நாங்கள் நீராட்டிக் கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த அவர்கள், “அவரை இலந்தை இலை கலந்த நீரால் மூன்று அல்லது ஐந்து அல்லது அதற்கும் அதிகமான தடவைகள் நீராட்டுங்கள்; கடைசியில் கற்பூரத்தைச் சேர்த்துக்கொள்ளுங்கள். நீராட்டி முடித்ததும் எனக்கு அறிவியுங் கள்” எனக் கூறினார்கள்.

முடிந்ததும் நாங்கள் அவர்களுக்கு அறிவித்தோம். அப்போது அவர்கள் தமது கீழாடையைத் தந்து, “இதை அவரது உடலில் சுற்றுங்கள்” எனக் கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஹஃப்ஸா பின்த் சீரீன் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், “ஒற்றைப் படையாக(த் தண்ணீர் ஊற்றி) நீராட்டுங்கள்; -மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு தடவைகள் (தண்ணீர் ஊற்றுங்கள்)- அவரது வலப் புறத்திலிருந்தும் அங்கத் தூய்மை செய்ய வேண்டிய பகுதிகளிலிருந்தும் துவங்குங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.

மேலும், “நாங்கள் அவருக்கு தலைவாரி மூன்று சடைகள் பின்னி னோம்” என உம்மு அ(த்)திய்யா (ரலி) அவர்கள் கூறியதாகவும் காணப்படுகிறது.

அத்தியாயம் : 23
1255. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ، عَنْ أُمِّ عَطِيَّةَ ـ رضى الله عنها ـ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي غَسْلِ ابْنَتِهِ "" ابْدَأْنَ بِمَيَامِنِهَا وَمَوَاضِعِ الْوُضُوءِ مِنْهَا "".
பாடம் : 10 (நீராட்டுதலை) சடலத்தின் வலப் புறத்திலிருந்து ஆரம் பித்தல்
1255. உம்மு அ(த்)திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களது மகளை நீராட்டும்போது, “அவரது வலப் புறத் திலிருந்தும் அங்கத் தூய்மை செய்ய வேண்டிய பகுதியிலிருந்தும் ஆரம்பி யுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அத்தியாயம் : 23
1256. حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ، عَنْ أُمِّ عَطِيَّةَ ـ رضى الله عنها ـ قَالَتْ لَمَّا غَسَّلْنَا بِنْتَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ لَنَا وَنَحْنُ نَغْسِلُهَا "" ابْدَأْنَ بِمَيَامِنِهَا وَمَوَاضِعِ الْوُضُوءِ "".
பாடம் : 11 சடலத்தை நீராட்டும்போது அங்கத் தூய்மை செய்ய வேண்டிய பகுதிகளிலிருந்து ஆரம்பித்தல்
1256. உம்மு அ(த்)திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் மகளை நாங்கள் நீராட்டிக்கொண்டிருந்தபோது, “சடலத்தின் வலப் புறத்திலிருந்தும் அதன் அங்கத் தூய்மை செய்ய வேண்டிய பகுதிகளிலிருந்தும் ஆரம்பியுங்கள்” என நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள்.

அத்தியாயம் : 23